privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கஈழத்தின் எதிரி ஜெ - ஆதாரங்கள்!

ஈழத்தின் எதிரி ஜெ – ஆதாரங்கள்!

-

ஈழத்திற்கெதிரான பாசிச ஜெயாவின் குற்றப்பட்டியல்

இந்தியாவின் “வருங்காலப் பிரதமர்” ராகுல் காந்தி, கடந்த செவ்வாய்க்கிழமை பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டிதான் இன்றைய பத்திரிகைகளின் முக்கியச் செய்தி. அந்தப் பேட்டிக்குள் இடம்பெற்ற முக்கியச் செய்தி ஒன்றும் உண்டு. பிகார் முதல்வர் நிதிஷ் குமார், சந்திரபாபு நாயுடு, ஜெயலலிதா ஆகியோரைப் பற்றி போகிறபோக்கில் புகழ்ந்துரைத்தார் ராகுல். திறமையாளர்கள் யாராக இருந்தாலும் போற்றுகின்ற கண்ணியவானின் தோரணையில் இந்தப் பாராட்டு கூறப்பட்டிருந்தாலும், தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணியைக் குறி வைத்தே இது பேசப்பட்டிருக்கிறது என்பதை யாரும் புரிந்து கொள்ள முடியும்.

சில நாட்களுக்கு முன்னர் என்.டி.டி.வி சென்னையில் நடத்திய தேர்தல் விவாதத்தில் ஈழம் முக்கிய விவாதப் பொருளாக இருந்த்து. விவாதத்தின் இறுதியில் “தேர்தலுக்குப் பின் காங்கிரசுடன் கூட்டணி அமைக்க மாட்டோம் என்று உறுதியாகச் சொல்வீர்களா?” என்று அதில் பங்கேற்ற அதிமுக மாநிலங்கள் அவை உறுப்பினர் மைத்ரேயனிடம் கேட்டபோது, “இந்தக் கேள்விக்கு நான் பதிலளிக்க மறுக்கிறேன்” என்று சிரித்துக் கொண்டே கூறினார் மைத்ரேயன். “கூட்டணி அமைக்க மாட்டோம் என்று நீங்கள் சொல்லவில்லை. பதிலளிக்க மாட்டோம் என்றுதான் கூறுகிறீர்கள்” என்று கூறிச் சிரித்தார் தொலைக்காட்சி நிருபர். தனது தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில், ஈழப்பிரச்சினை பற்றிப் பேசும்போது கூட காங்கிரசை ஜெயலலிதா தாக்குவதில்லை. கருணாநிதியைத்தான் குற்றம் சாட்டுகிறார்.

இருப்பினும், ஜெயலலிதாவின் “தமிழீழ ஆதரவு போர்முழக்கத்தை” வைகோ, ராமதாசு, நெடுமாறன் உள்ளிட்ட அனைவரும் வரவேற்றுப் புளகாங்கிதப் பட்டிருக்கிறார்கள். பெரியார் திராவிடர் கழகம் “ஜெயலலிதா மீது தங்களுக்கு எவ்வித பிரமையும் கிடையாது” என்று கூறிக்கொண்டே தீவிரமாக இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்துக் கொண்டிருக்கிறது. “காங்கிரசுக்குப் பாடம் கற்பிப்பது மட்டுமே தங்கள் நோக்கம்” என்றும் அவர்கள் கூறிக்கொள்கிறார்கள். “ம.க.இ.க வின் தேர்தல் புறக்கணிப்பு இயக்கம் மறைமுகமாக காங்கிரசுக்கு உதவுவதாகவே அமையும்” என்றும் இவர்களெல்லாம் கருதுகிறார்கள்.

இவற்றையெல்லாம் பார்க்கும்போது, தமிழகத்தில் பகுத்தறிவுப் பேச்சாளர்கள் பக்தர்களை இடித்துரைப்பதற்காக அடிக்கடி மேற்கோள் காட்டும் ஒரு பாடல் நினைவுக்கு வருகிறது. “கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்” என்பது அந்தப் பாட்டு.  பாட்டைப் பாடிக்காட்டிவிட்டு,  “இவனையெல்லாம் திருத்தமுடியுமா?” என்று பக்தர்களை எள்ளி நகையாடுவார்கள் பேச்சாளர்கள். தற்போது “கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும், இரட்டை இலையை மறந்து விடாதீர்கள்” என்று வீதி தோறும் பிரச்சாரம் நடக்கிறது.

அம்மையாரின் தமிழ் விரோத, ஈழ விரோத நடவடிக்கைகள் பற்றி வைகோவுக்கும் நெடுமாறனுக்கும் தெரிந்த அளவுக்கு எங்களுக்குத் தெரியாது. எங்களுக்குத் தெரிந்தவரை அம்மாவின் வரலாற்றைக் கீழே தொகுத்துத் தந்திருக்கிறோம். வரலாறு தெரியாத தமிழகத்தின் இளம் தலைமுறையினருக்கும், புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்களின் இளைய தலைமுறையினருக்கும், வரலாற்றை மறந்துவிட்ட மூத்தோருக்கும் இது உதவக்கூடும். வரலாற்றை மறைக்க விரும்புவோருக்கும் தங்கள் சொந்த மூளையிலிருந்தே அவற்றை அகற்றிவிட விரும்புவோருக்கும் நிச்சயம் இவை உதவ மாட்டா.

காங்கிரசுக்குப் பாடம் கற்பிப்பது மட்டுமே தங்கள் இலக்கு என்று கூறிக்கொள்வோருக்கு ஒரு கேள்வி. காங்கிரசு எல்லாத் தொகுதிகளிலும் தோற்று, அதிமுக எல்லாத் தொகுதிகளிலும் வென்று, அம்மையார் டில்லியில் காங்கிரசுடன் கூட்டணி சேர்ந்து அரசும் அமைத்து விட்டால்…? அப்படி ஒரு விபரீதம் நடக்கக்கூடாது என்று இஷ்டதெய்வங்களையெல்லாம் வேண்டிக்கொள்ளலாம். மீறி அப்படி நடந்துவிட்டால்? அதை எப்படி விளங்கிக் கொள்வது?

“நம்மைப் பொருத்தவரை காங்கிரசுக்குப் பாடம் கற்பித்து விட்டோம். தன் பங்குக்கு ஜெயலலிதாவும் நமக்குப் பாடம் கற்பித்து விட்டார். இரண்டு பேருடைய நோக்கமும் நிறைவேறியது” என்று விளங்கிக் கொள்ளலாமா? ஜெயலலிதாவை வெற்றி பெறச் செய்வது என்பது காங்கிரசுக்குச் செய்யும் நேரடி உதவியா, மறைமுக உதவியா?

சிந்திக்க வேண்டும். “பாடம் கற்பிப்பதற்கு” முன், வரலாறு கற்பிக்கும் பாடத்தை நாம் கற்றுக் கொண்டிருக்கிறோமா என்பதைப் பரிசீலிக்க வேண்டும். ஏதோ “நேற்று ஜெயலலிதா ஈழத்தை எதிர்த்தார் – இன்று ஆதரிக்கிறார்” என்று மிகவும் எளிதாக இதனைக் கருதிக் கொண்டிருப்பவர்கள் இதனைப் படியுங்கள். உங்கள் கருத்தைப் பரிசீலியுங்கள்.

ராஜீவ் கொலைக்கு முன்:

தி.மு.க ஆட்சியைக் கலைப்பதற்காகவே ‘புலிகளின் ஆயுதக் கலாச்சாரத்தால் தமிழ்நாட்டில் பொது ஒழுஙகிற்கும் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் ஆபத்து ஏற்பட்டு விட்டது’ எனப் பீதியைக் கிளப்பினார்.ராஜீவ் கொலைக்கு முன்பே தன்னைக் கொல்ல சதி நடப்பதாகக் கூறிய ஜெ, எம்.ஜி.ஆர் சமாதிக்கு அஞ்சலி செலுத்தச் சென்ற போது தன்னைப் பார்க்க வந்த தனது ரசிகரையே ‘விடுதலைப்புலி என்னைக் கொல்ல வந்தான்’ எனக் கூறி அவதூறு கிளப்பி ஆர்ப்பாட்டம் செய்தார்

ஜூலை 1991:

ராஜீவ் கொலையானவுடன் ஈழத்தமிழர்கள் அனைவரையும் இந்தியாவிலிருந்து வெளியேற்றிவிட வேண்டுமென பேட்டியளித்தார். ராஜீவ் கொலையான சில நாட்களில் இலங்கை அதிபர் பிரேமதாசா ஈழமக்கள் மீது பொருளாதாரத் தடையை விதித்தார். இதனால் ஈழத்தில் கடும் பஞ்சம் ஏற்பட்டது. அவர்களுக்கு உதவ இங்கிருந்து பொருட்கள் போக முடியாதபடி சிறப்புக் காவல் படை அமைத்து ஈழ மக்களைப் பட்டினியில் வாடவைத்தவர் ஜெ. ஈ.பி.ஆர்.எல்.எப் போன்ற துரோகக் குழுக்களை கருணையுடன் நடத்துவோம் என்று முழங்கினார்.

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தெரிவித்து, ஈழத்தமிழர் நலன்கள் என்ற பெயரில் மாநாடுகள், பொதுக்கூட்டங்களில் பங்கேற்றாலோ, ஏற்பாடு செய்தோலோ, சுவரொட்டி ஒட்டினாலோ அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், தேசியப் பாதுகாப்புச் சட்டம் பாயும் என்று எச்சரிக்கை செய்தவர்தான் ஜெ.

செபடம்பர் 1991:

சிவராசன், சுபா ஆகியோரின் தற்கொலைக்குப் பிறகு வேலூரில் ஈழ அங்கீகரிப்பு மாநாடு நடத்த முயன்ற தமிழ்நாடு இளைஞர் பேரவை, மாணவர் பேரவை ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த 70பேர் கைது செய்யப்பட்டு மாநாடு தடை செய்யப்பட்டது. சென்னை அம்பத்தூரில் ஈழ அகதிகளை வெளியேற்றுவதை எதிர்த்து மாநாடு நடத்த முயன்ற பு.இ.மு மற்றும் அதன் தோழமை அமைப்புகளைச் சேர்ந்த 56 பேர் கைது செய்யப்பட்டு மாநாடு தடை செய்யப்பட்டதுடன், தமிழ்நாடு முழுவதும் இவ்வமைப்பினர் கைது செய்யப்பட்டனர்.

காஞ்சியில் தெருமுனைக் கூட்டம் நடத்திய பெரியாரிய- மார்க்சிய பொதுவுடமைக் கட்சியினர் சிலர் தேசத் துரோகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டனர். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பாடநூலாக இருந்த கவிஞர் அப்துல் ரகுமானின் ‘சுட்டுவிரல்’ கவிதைத் தொகுப்பு ஈழ ஆதரவு, புலி ஆதரவு எனக்கூறி நீக்கப்பட்டது. பாசிச ராஜீவுக்கு எதிரான அரசியல் விமரிசனங்களைக் கூட தேசத்துரோகக் குற்றமாகவும் வன்முறையையும் பிளவுவாதத்தையும் தூண்டுவதாகவும் சித்தரித்தார். ஈழ ஆதரவு இயக்கங்கள் கூட தடை செய்யப்பட்டு ராஜீவ் கொலை வழக்கில் சேர்த்து உள்ளே தள்ளிவிடப்போவதாக மிரட்டினார்.

‘என்னைக் கொல்ல புலிகள் இயக்கத்தின் தறகொலைப்படை தமிழகத்துக்குள் ரகசியமாக ஊடுறுவி உள்ளனர். ராஜீவ் கொலை தொடர்பான விசாரணை நடத்தி வரும் சிறப்புப் புலனாய்வுக் குழு அலுவலகத்தை தகர்க்கவும் ராஜீவ் கொலையில் கைதாகியுள்ள முக்கியப் புள்ளிகளை மீட்கவும் அவர்கள் சதித் திட்டம் தீட்டியுள்ளனர்’ என்று சட்டசபையிலேயே புளுகிப் பீதியூட்டினார். புலிகள் அமைப்பைத் தடை செய்யவேண்டுமென மத்திய அரசைத் தொடர்ந்து நிர்பந்தித்தார். புலிகள் மீது மத்திய அரசு தடை விதித்ததும் ‘புலிகள் மீதான தடை விதிப்பு தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கைப் பராமரிப்பதை எளிதாக்கி இருக்கிறது’ என்றார்.

1991- இல் ஈழத்தமிழ் அகதிகள் தமது குடியிருப்புகளுக்கு அருகில் உள்ள காவல் நிலையங்களில் பதிவு செய்து கொள்ள வேண்டுமென அரசாணையைப் பிறப்பித்தார். ராஜீவ் பிணத்தைக்காட்டி ஒப்பாரி வைத்து மிருக பலத்துடன் ஆட்சியைப் பிடித்த பாசிச ஜெ, புலிப்பூச்சாண்டி காட்டி, ஈழத் தமிழர்களைக் கைது செய்து அகதி முகாம்களைத் திறந்த வெளிச்சிறைச்சாலையாக மாற்றினார். அதுவரை ஈழ அகதிகளின் பிள்ளைகளுக்காக தொழிற்கல்லூரிகளில் இருந்து வந்த இட ஒதுக்கீட்டை ரத்து செய்தார். ஈழ அகதிகளின் குழந்தைகள் கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் சேர்வதைத் தடை செய்தார்.

ஈழத்துரோகி பத்மநாபா கொலைவழக்கைக் காரணம் காட்டி முன்னாள் உள்துறைச் செயலாளர் நாகராஜனைக் கைது செய்து மிரட்டி, துன்புறுத்தி அப்ரூவராக்கினார். அவ்வழக்கில் முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமியையும் அவர் கணவர் ஜெகதீசனையும் தடாவில் உள்ளே தள்ளினார். வைகோவின் தம்பி ரவியைத் தடாவில் கைது செய்தார். பத்மநாபா கொலை வழக்கில் குண்டு சாந்தனை தலைமறைவாகப் போகச் சொல்லி கடிதம் எழுதினார் என்று சொல்லி சாந்தனின் வழக்கறிஞர் வீரசேகரனை (திக) தடாவில் கைது செய்தார்.

ஈழ அகதிகள்-போராளிகள் உரிமைக்கும் ஈழ விடுதலைக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்த ம.க.இ.க, முற்போக்கு இளைஞர் அணித் தோழர்களை தடாவில் கைது செய்தார். ஈழப்போரில் அடிபட்டு சிகிச்சைக்காக தஞ்சம் புகுந்த புலிகள், அவர்களின் ஆதரவாளர்களையும், கோவை ராமகிருஷ்ணன் உள்ளிட்ட தி.கவினரையும் தடாவில் பிடித்து சிறையில் தள்ளினார்.

ஜெயா-வாழப்பாடி கும்பல் கரடியாய்க் கத்தியதால் ராஜீவ் கொலைக்கு பின்னர் ஈழ அகதிகள் வாரம் ஒரு கப்பல் வீதம் கட்டாயாப்படுத்தி ஈழத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். போயஸ் தோட்டத்துக்கு முன்பு நரிக்குறவர்களையும், ‘வயர்லெஸ்’ கருவியுடன் இருந்த ‘கூரியர்’ நிறுவன ஊழியரையும் கைது செய்து புலிகள் பிடிபட்டதாக வதந்தி பரப்பினார் ஜெ.

1992

தமிழர் வாழ்வுரிமை மாநாடு நடத்தி, புலிகளை ஆதரித்துப் பேசியமைக்காக பா.ம.க தலைவர் ராமதாசு, பண்ருட்டி ராமச்சந்திரன், த.தே.கட்சியின் தலைவர் ப.நெடுமாறன் உட்பட 7 பேர் தேச விரோத நடவடிக்கையில் ஈடுபட்டாகக் குற்றம் சாட்டப்பட்டு ஜெ.அரசால் கைது செய்யப்பட்டனர்.

‘தமிழகத்தில் பிரிவினைவாத சக்திகளையும், ஊடுறுவ முயலும் புலிகளையும் துடைத்தொழிப்பதில் தமிழக போலீசார் மகத்தான சாதனை புரிந்துள்ளனர். அவர்களுக்கு நவீன ரக துப்பாக்கிகளும், சாதனங்களும் இன்று அவசியமாக உள்ளது’ என்று ஜெ கூடுதல் நிதி ஒதுக்கியதோடு, மத்திய அரசிடமும் இதற்காக சிறப்பு நிதி ஒதுக்கக் கோரினார்.

1992- செப்டம்பர் 10,11,12 தேதிகளில் பா.ம.க நடத்திய ‘தமிழர் வாழ்வுரிமை மாநாட்டினை’ அடுத்து ‘தேசத் துரோக, பிரிவினை சக்திகளுக்கு தமிழகத்தில் சிறிதும் இடமில்லை’ எனப் பாய்ந்த ஜெ, ராமதாசு, பண்ருட்டி ராமச்சந்திரன், மற்றும் மாநாட்டில் தீவிரமாகப் பேசியதாகக் கூறி சுப.வீரபாண்டியன், பெ.மணியரசன், தியாகு, நெடுமாறன் ஆகியோரைக் கைது செய்தார். ராமதாசுக்கு பிணை கொடுத்த சென்னை கூடுதல் தலைமை பெருநகர நீதிமன்ற பொறுப்பு நீதிபதி டி.வி.சுப்ரமணியத்தை மிரட்டி விடுப்பில் வீட்டுக்கு அனுப்பிவிட்டு நீதிபதி கந்தசாமிபாண்டியனை அமர்த்திப் பிணையை ரத்து செய்ய வைத்து சி.பி.சி.ஐ.டி மூலம் 124-ஏ (தேசத்துரோகம்) சட்டத்தின் கீழ் கைது செய்ய வைத்தார்.

தமிழகத்தின் கேடிகள், ரவுடிகள் செய்த கொலை, கொள்ளை, கடத்தல்களை எல்லாம் புலிகள் செய்தாகக் கூறி பிரச்சாரம் செய்தார். நாகை கீவளூர் அருகே டிரைவரை அடித்துப் போட்டு டாக்சியைக் கடத்தியதாகக் கூறி 4 புலிகளை – அவர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள் போல் இருந்தனர் எனக்கூறி – கைது செய்ததாக ஜெ அரசு சொன்னது. மதுரை கூடல்நகர் அகதி முகாம் அருகே சாராயம் காய்ச்சும் ரவுடிகளால் சமயநல்லூர் சப் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணசாமி சுட்டுக் கொல்லப்பட்டார். ஆனால் இதனைப் புலிகள்தான் செய்தனர் எனப் புளுகி ‘கொலை செய்த புலிகளை சும்மா விடமாட்டேன் ‘ என்றும் சொன்னார்.

1993

புலிகளின் தளபதி கிட்டு கொல்லப்பட்டபோது கிட்டுவின் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்தும், இந்தியாவின் அத்துமீறிய நடவடிக்கையைக் கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றியதற்காக ப.நெடுமாறன், சுப.வீ, புலமைப்பித்தன் ஆகியோரைக் கைது செய்தார். பின்னர் போலி சாட்சியங்கள் – ஆதாரங்களைக் கொண்டு ப.நெடுமாறன் போன்றோரை ‘தடா’வின் கீழ் சிறை வைத்தார்.

1993 மே – ‘நள்ளிரவில் கிளைடர் விமானத்தில் வந்த புலிகள் எனது வீட்டைக் குறிவைத்து வட்டமடித்துள்ளனர். காவலுக்கு நின்ற போலீசர் இதனைப் பார்த்துள்ளனர்’ என்ற ஆகாசப் புளுகை அவிழ்த்து விட்டார் ஜெ.

கோவை ராமகிருஷ்ணன், சிறு பொறியியல் தொழிலை கோவையில் நடத்திக் கொண்டு தனியாக ஒரு தி.க அமைப்பை நடத்தி வந்தார். (தற்போது பெ.தி.கவின் பொதுச்செயலாளர்களில் ஒருவர்) இவரையும் இவர் அமைப்பின் தலைமை நிலையச்செயலாளர் ஆறுச்சாமியையும் இரண்டாண்டுகளுக்கும் மேலாக கொடிய தடா சட்டத்தின் கீழ் ஜெ சிறையில் வைத்தார். விடுதலைப் புலிகளுக்கு வெடிமருந்தும், ஆயுதத் தளவாடங்களும் தயாரித்துக் கொடுத்ததாகப் பொய் வழக்குப் போட்ட ஜெ அரசு இவர்களைப் பிணையில் கூட வெளியில் விட மறுத்தது.

பெருஞ்சித்திரனாரும் அவரது மகன் பொழிலனும் நள்ளிரவில் அவர்களின் வீட்டில் அமர்ந்து தேச விரோதமாக சதி செய்தாகக் கூறிய ஜெ அவர்களை தடாக் கைதிகளாக்கினார். ‘திராவிடம் வீழ்ந்தது’ என்ற நூலை எழுதிய ஒரே குற்றத்திற்காக குணா என்பவரை வீரமணியின் ஆலோசனையின் பேரில் ஜெ தடாவில் உள்ளே தள்ளினார்.

ஜெயாவின் ஆட்சி ஈழத்தமிழர்களை எப்படி எல்லாம் பழிவாங்கியது என்பதற்கு பாலச்சந்திரனின் கதை ஒரு எடுத்துக்காட்டாகும். கனடா நாட்டுக் குடியுரிமை பெற்ற சி.பாலச்சந்திரன் எனும் ஈழத்தமிழர் இந்திய அரசு வழங்கிய விசா அனுமதியுடன் 24.4.90 முதல் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி இருந்தார்.  அவர் மீது எந்தக் குற்றச்சாட்டும் இல்லாத சூழ்நிலையிலும் அவர் ஈழத் தமிழர் என்ற ஒரே காரணத்திற்காக 12.3.91 இல் க்யூ பிரிவு போலீசால் பிடித்துச் செல்லப்பட்டார். தி.மு.கவை வன்முறைக்கட்சி எனச் சித்தரிக்க ஐ.பி தயாரித்திருந்த சதித் திட்டத்திற்கு ஒத்துழைக்க அவரை மிரட்டினர். அவர் அதற்கு மறுக்கவே, சட்ட விரோதக் காவலில் அவரை அடைத்து வைத்தனர். தீலீபன் மன்றத்தில் தியாகு ( இன்றைய தமிழ் தமிழர் இயக்கத்தின் தலைவர்) தொடுத்த ஆட்கொணர்வு மனுவால் 16.3.91 அன்று நிலக்கோட்டை நீதிமன்றத்தில் பாலச்சந்திரன் நிறுத்தப்பட்டார். நீதிமன்ற உத்தரவுப்படி மதுரை சிறையில் அடைக்கப்பட்டார். 1988இல் நடந்த ( அதாவது பாலச்சந்திரன் தமிழ்நாட்டுக்கு வருவதற்கு 2 ஆண்டுகளுக்கு முந்தைய ) கொடைக்கானல் தொலைக்காட்சி கோபுர வெடிகுண்டு வழக்கிலும், சென்னை நேரு சிலை குண்டு வெடிப்பு வழக்கிலும் அவர் சேர்க்கப்பட்டார். 7.5.91 முதல் தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் காவலில் வைக்கப்பட்டார். 15.3.91 அன்று மாலை 5 மணி அளவில் தியாகராய நகர் பேருந்து நிலையத்தில் பொழிலனுடன் அமர்ந்து குண்டு வைக்க சதித் திட்டம் தீட்டியதாக தே.பா.சட்டக்காவலுக்கான ஆணையில் காரணம் சொல்லப்பட்டது.( அதே தேதியில் பாலச்சந்திரன் சிறைச்சாலையில் இருந்தார் ). தே.பா.ச.காவல் முடிந்ததும் வேலூர் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டார். பாலச்சந்திரன் சோர்ந்துவிடாமல் நீதிமன்றம் போனார். உயர்நீதி மன்றம் 21.7.1992இல் நிபந்தனையுடன் கூடிய பிணை தந்தும் தீர்ப்புக்கு எதிராக சிறப்பு முகாமில் ஜெ.அரசு அவரை அடைத்தது. கொடைக்கானல் வழக்கில் அதிகாரிகள் இவரை கொடைக்கானல் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லாததால் பாலச்சந்திரன் மீது பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இது அரசின் பழிவாங்கும் செயல் என அவர் முறையிட்ட பின்னர் 24.8.1993இல் அரசு அவரை துறையூர் முகாமிற்கு மாற்ற உத்தரவிட்டது. மீண்டும் அவர் நீதிமன்றம் போனார். 1.7.94 முதல் மேலூர் சிறப்பு முகாமில் தடுப்புக் காவலில் அடைக்கப்பட்டார். கொடைக்கானல் வழக்கில் குற்றம் சாட்டிய 14 ஏனைய நபர்களுக்கு அப்போது பிணை வழங்க நீதித் துறை உத்தரவிட்டது. ஆனால் ஈழத்தமிழர் எனும் ஒரே காரணத்துக்காக நெடுங்காலமாய் சிறைக்கொட்டடியில் அரசு அவரை வாட்டியது. இன்று ஈழத்துக்கு ஆதரவாக சவுடால் அடிக்கும் ஜெயா எனும் பாசிஸ்ட் எவ்வாறெல்லாம் ஈழத்தமிழர்களை சித்திரவதை செய்தார் என்பதற்கு ஒரு உதாரணம்தான் பாலச்சந்திரனின் கதை.

1995 – இல் தஞ்சையில் ஜெ நடத்திய உலகத்தமிழ் மாநாட்டுக்கு அழைப்பின் பேரில் வருகை தரவிருந்த கா.சிவத்தம்பி உள்ளிட்ட ஈழத் தமிழ் அறிஞர்கள், புலி ஆதரவாளர் என முத்திரை குத்தி வெளியேற்றப்பட்டனர். ஜெயின் கமிசன் விசாரணையில் ‘விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக இருந்த பா.ம.க, தவிர ம.க.இ.க என்ற அமைப்பை எங்கள் ஆட்சியில் ஒடுக்கினோம்’ என்று பெருமை பொங்க சாட்சியம் அளித்தார் ஜெயா.

2002

புலிகளும் சிங்கள அரசுக்கும் இடையிலான சமாதானப் பேச்சுவார்த்தை சமயத்தில் சர்க்கரை நோயினாலும், சிறுநீரகக் கோளாறினாலும் அவதிப்பட்டு வந்த புலிகளின் ஆலோசகர் ஆன்டன் பாலசிங்கம் சிகிச்சை பெறவும், பேச்சுவார்த்தைகளின் போது வன்னிக்காட்டிற்கு சென்று பிரபாகரனுடன் கலந்தாலோசனை செய்யவும் சென்னையில் அவர் தங்குவது வசதியாக இருக்கும் என்ற கருத்து புலிகளால் முன்வைக்கப்பட்டது. மனிதாபிமான அடிப்படையில் இந்தியா இதனை ஏற்றால் பேச்சுவார்த்தைகளில் இந்தியா ‘பார்வையாளர்’ ஆகிவிடக்கூடும் எனப் புலிகள் எதிர்பார்த்தனர். இக்கருத்து பத்திரிகைகளில் வெளியானவுடன் பயங்கரவாதப் பீதியூட்டி, புலிகளை எக்காரணம் கொண்டும் அனுமதிக்கக் கூடாது என ஜெ கொக்கரித்தார். ஜெயாவின் பினாமியான அப்போதைய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மூலம் புலிகளின் பயங்கரவாதப் படுகொலைகளைப் பட்டியல் போட்டு, ஒருக்காலும் புலிகளை அனுமதிக்கக் கூடாது என மைய அரசுக்குக் கடிதம் எழுதினார். அவரின் கோரிக்கையை இந்திய அரசும் ஏற்றுக் கொண்டது.

இதே ஆண்டில் ஜெயா சட்டசபையில் ‘தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதி-தலைவர் பிரபாகரனைப் பிடித்து இங்கே கொண்டு வரவேண்டும்’ என்று தீர்மானமும் நிறைவேற்றினார்.

ஜூலை 2002:

விடுதலைப் புலிகளை ஆதரித்து மதுரை திருமங்கலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியதைக் காரணம் காட்டி வை.கோ மற்றும் 8பேர்கள் மீது ஜெ கொடிய பொடா சட்டத்தை ஏவிச் சிறையில் அடைத்தார். பொடா சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்வது தண்டிக்கப்பட வேண்டிய குற்றம் என நியாயப்படுத்திய ஜெ, ‘ம.தி.மு.க தடை செய்யப்படவேண்டிய இயக்கம்; அதற்கான பரிசீலனையில் உள்ளோம்’ என எச்சரித்தார். ம.தி.மு.க மட்டுமின்றி, புலிகளுக்கு ஆதரவாகப் பேசிவரும் ராமதாசு, பழ.நெடுமாறன், திருமாவளவன் ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுப்பது குறித்துப் பரிசீலித்து வருவதாக எச்சரித்தார். புலிகளின் ஈழத்துடன் தமிழ்நாட்டையும் இணைத்து அகண்ட தமிழகமாக்க மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்ததால் தமிழகத்தை இரு மாநிலங்களாகப் பிரிக்க வேண்டும் என ராமதாசு கோருகிறார் எனக் கூறி ஜெ பிரிவினைவாதப் பீதியூட்டினார்.

செப்டம்பர் 2002:

பயங்கரவாத – பிரிவினைவாத பீதி கிளப்பி அரசியல் ஆதாயம் அடையும் பார்ப்பன சதிகார அரசியலின் ஒரு பகுதியாக வைகோவும் நெடுமாறனும் புலிகளின் ஆதரவாளர்கள் எனக் கைது செய்யப்பட்டனர். இக்கைதுகளைக் கண்டித்து வழக்குப் போடப் போவதாகக் கூறிய சுப.வீயும் அடுத்த சில நாட்களில் கைது செய்யப்பட்டார். ஆள்பலமோ, மக்கள் செல்வாக்கோ இல்லாத நெடுமாறனின் கட்சி தடை செய்யப்பட்டு, அலுவலகங்கள் அதிரடிப்படை போலீசால் சோதனை இடப்பட்டு சீல் வைக்கப்பட்டன.

செப்டம்பர் 2007

தமிழ்ச்செல்வன் கொலை செய்யப்பட்ட பிறகு, அவருக்கு நினைவேந்தல் கூட்டமும், வீரவணக்கக் கூட்டமும் நடத்தியவர்கள் மீது தேசத் துரோகக் குற்றத்தில் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று ஜெ கூறினார். கருணாநிதி எழுதிய இரங்கற்பாவை வைத்து தி.மு.க ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்று கூறினார். பதிலுக்கு கருணாநிதி ‘இலங்கையில் கொல்லப்படுவது ஒரு தமிழன். என் உடம்பில் ஓடுவது தமிழ் ரத்தம். அதனால்தான் இரங்கல் தெரிவித்தேன்’ என்றார். அதற்கு ஜெ ‘நானும் தமிழச்சிதான்’ என்று கூறி விடுதலைப் போராளிகளைக் கொச்சைப்படுத்தினார்.

2008:

அதியமான் கோட்டையில் காவல்நிலையத்தில் இருந்த துப்பாக்கிகள் சில காணாமல் போயின. போலீசுக்காரர்களிடையே இருந்து வந்த முன்விரோதம் காரணமாக அவர்களில் ஒரு தரப்பினரே இச்செயலைச் செய்து துறை ரீதியான நடவடிக்கைக்கு எதிர்தரப்பினரை தள்ளிவிட்டனர். ஆனால் இச்சம்பவத்தைக் கூட ஜெ ‘கருணாநிதி ஆட்சியில் காவல்துறையினர் பரிதாபகரமான நிலைக்குத்தள்ளப்பட்டு விட்டனர். விடுதலைப் புலிகள், நக்சலைட்டுகள் எனப் பல்வேறு தீவிரவாத மற்றும் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளின் ஊடுறுவல் காரணமாக தமிழக மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிட்டது’ என ஊளையிட்டார்.

மற்றபடி ஈழத்தமிழ் மக்கள் செத்து மடிவதைப் பற்றி ‘போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள்’ என திமிராகப் பேசினார். திரைத்துறையினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் சீமான், அமீர் போன்றோர் பயங்கரவாதத்திற்கு ஆதரவாகப் பேசினார்கள் அவர்களை கைது செய்யவேண்டுமென கருணாநிதிக்கு உத்தரவுபோட்டார். அதன்பிறகு திருமாவைக் கைது செய்யவேண்டுமென்றார். கடைசில் கருணாநிதியையும் கைது செய்ய வேண்டுமென மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தார்.

இப்படி பத்தொன்பது ஆண்டுகளாக ஈழத்திற்கு எதிராகவும், தமிழ்நாட்டுத் தமிழருக்கு எதிராகவும் ஆட்டம் போட்ட பாசிசப் பேய் இப்போது நாற்பது சீட்டையும் வெற்றிபெற வைத்தால் தன் முந்தானையில் முடிந்துவைத்திருக்கும் ஈழத்தை தூக்கித் தருவதாக கூக்குரலிடுகிறது. ஈழப்பிரச்சினைக்காக அ.தி.மு.கவை ஆதரிக்கவேண்டுமென முடிவெடுத்துள்ள அப்பாவிகள் இனியாவது திருந்துவார்களா?

  1. உங்களை யாரும் ஏமாற்றவில்லை குமாரசாமி. உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்கிறீர்கள். நீங்கள் விடும் தவறுக்கு கண்டவன் நின்றவன் மேல் எல்லாம் பழி போடுகிறீர்கள்.

  2. சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழீழத்தின் “தலைவனாக” திகழ்ந்த கருணாநிதி , இப்போது காங்கிரஸ் கூட்டணியால் தமிழினத்தின் “துரோகி” ஆகிவிட்டார் .

    ——–இது சாத்தியமாக இருந்த போது , சில ஆண்டுகளுக்கு முன் தமிழீழத்தின் “எதிரியாக” இருந்த ஜெ ஏன் இப்போது தமிழினத்தின் “தலைவி” ஆக கூடாது .

    தற்போதய சூழ்நிலையில் எக்காரணத்தை கொண்டும் காங்கிரஸ் திமுக கூட்டணி ஆட்சிக்கு வரக்கூடாது என்பதே ஈழத்திமிழரின் எதிர்பார்ப்பு………

    எனது மக்களை கொன்று குவித்த சோனியா கருநாநிதி கூட்டணியா என்றால் என் வாக்கு நிச்சயம் ஜெயலலிதாவுக்கு தான்…காரணம் எங்களிடம் வேறு தெரிவு இல்லை…சோனியா ** யின் ரத்த பசிக்கு மேலும் என் மக்களை பலியிட நாம் அனுமதிக்க கூடாது. இதை கருநாய்க்கு வக்காலத்து வாங்கும் தமிழின உணர்வாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

    • arivu ketta mundam…karunanithiyai vida, thi mu ka kaaranai vida eezha thamizhargal mel pattu kondavan yaaraaka irukka mudiyum. ippadi sinthanai illaamal mudivu eduthu eduthe cheththu poneergaladaaa

  3. anpudayeer vanakkam. naan muluvathum padikkavllai aanaalu solvthu ennaventraal kaankirasukku thamilnaadil paadai kaddinaal mattavarkal thamilanukku maruvathai koduppanukal illddy thamilan muthukil thaar roodu poduvanukal intha delli halaivanukal .

  4. நான் முன்னரே சொல்லி இருந்ததை பொருத்தம் கருதி இங்கும் கூறிக்கொள்கிறேன்:

    நீங்கள் குறிப்பிடும் ஒப்பீடு இந்தக் கட்டுரைக்குப் பொருந்தாது.

    புலிகளை பற்றி எதுவுமே குறிப்பிடவில்லை என்றால் நான் எதுவும் சொல்லி இருக்கப் போவதில்லை. புலிகள் பல இடங்களில் குறிப்பிடப் பெற்றுள்ளுனர். தவிர பத்மநாபா போன்றவர்கள் இக்கட்டுரையின் மூலத்துக்கு அதிகம் தொடர்பற்றவர் என்கிற போதும் அவரை “துரோகி” என்றெழுதியுள்ளார். அதே அடிப்படையில் புலிகளின் செயல்பாடுகள் குறித்த சிறு விமர்சனமேனும் வைத்திருக்க வேண்டும். குறைந்தது ஒரு disclaimer’ஆவது போட்டிருக்க வேண்டும். இவற்றில் ரெண்டுமே இக்கட்டுரையில் இல்லை.

  5. நண்பர்களே,

    ஜெயாவின் காட்டாட்சியில் ஈழம் மீதான அத்தியாயம் மட்டுமே இங்கு தொகுத்து தரப்பட்டிருக்கிறது. ஜெயாவைப் பற்றிய பதிவில் கருணாநிதியை ஏன் எழுதவில்லை என்று கேட்பது சரியல்ல. சொல்லப்போனால் தமிழின உணர்வாளர்கள் கருணாநிதியின் துரோகத்தை கண்டுபிடித்தற்கு முன்பேயே அவரது துரோகத்தை விளக்கி வினவில் பல இடுகைகளை எழுதியிருக்கிறோம்.

    அதே போல ஜெயவின் குற்றப்பட்டியிலில் புலிகளைப் பற்றிய விமர்சனம் இல்லையே என்பதும் பாமரத்தனமானது. சொல்லப்போனால் புலிகளும் அவர்களின் ஆதரவாளர்களும் ஜெயாவை தீவிரமாக ஆதரிப்பதன் பின்னணியில் ஜெயா என்ற நபரும் அவரது கட்சியும் தமிழகத்திற்கு மட்டுமல்ல, ஈழத்திற்கும் எதிரானவர்தான் என்று சொல்வது நிச்சயம் புலிகளுக்கு உகந்த கோணமல்ல.

    நட்புடன்
    வினவு

  6. ரமணா, இன்றைய நிலையில் ஈழப் பிரச்சினை என்பது தமிழகத்தை பாதிக்கும் ஒரு சிக்கலாக இன்னொரு வகையில் சொல்வதென்றால் முழுக்க முழுக்க உணர்ச்சியூட்டல் ஆயுதமாக பாவிக்கப்படுகிறது. இந்த நிலையை தமிழகத்தில் உருவாக்குவதில் வி.புலிகள் மிகவும் அக்கறையாக இருக்கிறார்கள் என்பது உலகறிந்த விடயம், அதன் காரணம் அவர்கள் “தமிழர்களுக்கு” இன்று பெற்றுக்கொடுத்த நிலையிலிருந்து தம்மை விடுவித்து “மற்றவர்கள்” மீது பழி போடவாகும் என்பதும் சிறுபிள்ளைக்கும் தெரிந்திருக்கக்கூடிய விடயம்.

    ஆனால் சிலருக்கு மட்டும் அது புரியவே புரியாது, அப்படிப்பட்டவர்கள் தம்மைத் தாமே உணர்ச்சியூட்டிக்கொண்டு இன்று, இதுவரை தமது எதிரியாக சித்தரித்த “ஜெ” வுக்கு நன்றி தெரிவிப்பதும், அவர் உண்மை முகம் இங்கு துகிலுரிக்கப்படும் போதும் தம் நிலையைக் காப்பாற்றிக்கொள்ள “தமிழன்” என்ற பெயரில் ஒப்பாரி வைப்பதுமாகும்.

    நீங்கள் கேட்பது போன்று அவர்கள் பிரச்சினைக்கு அவர்கள் தாம் முடிவெடுக்க வேண்டும் என்ற உண்மையைத்தான் உலகமே சேர்ந்து அங்கே வாழும் தமிழ் மக்களுக்கு எடுத்துரைத்திருக்கிறது, அதனால் தான் எத்தனை ஒப்பாரி வைத்தும் சர்வதேசம் கண்ணை மூடிக்கொண்டு, மக்கள் அனைவரும் வெளியேறும் நாளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.

    ஆனால், நாட்டிலிருந்து வெளியேறி வாழும் (கூடுதலான) கருத்தாளர்கள் இந்த உண்மை நிலைக்குப் புறம்பாக அத்தனை குற்றங்களையும் இந்தியா மீதும், தமிழகத்தின் மீதும், கருணானிதியையும்,ஜெயலலிதாவையும் நம்பித்தான் போரிடச் சென்றது போன்றும், தமிழக மக்கள் தான் தம்மை போரிடச் சொன்னார்கள் என்பது போன்றும், இன ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக இருக்கும் தமிழகம் தான், “தமிழன்” என்ற அடையாளத்திற்குரிய மக்களின் இனப் பிளவுக்கு இலங்கையில் வழி வகுத்தார்கள் என்பது போன்றும் வரலாற்றை திரித்து எழுத முற்படும் போது அவை தவறு என்பதை சமகாலத்தில் எடுத்துரைப்பதும் நமது கடமை.

    எல்லோருக்கும் இல்லையென்றாலும் ஒரு சிலர் அந்த உண்மையை உணர்ந்து கொள்வது சமூகத்தின் சிந்தனை உணர்வுகளை நெறிப்படுத்தவும் வல்லது, எனவே சமூக அக்கறை சார்ந்து நம் கருத்தை வைப்பதும் கடமைதான்.

    ஏற்றுக்கொள்பவர்கள் ஏற்றுக்கொள்ளட்டும்.

    • //அவர்கள் பிரச்சினைக்கு அவர்கள் தாம் முடிவெடுக்க வேண்டும் என்ற உண்மையைத்தான் உலகமே சேர்ந்து அங்கே வாழும் தமிழ் மக்களுக்கு எடுத்துரைத்திருக்கிறது, அதனால் தான் எத்தனை ஒப்பாரி வைத்தும் சர்வதேசம் கண்ணை மூடிக்கொண்டு, //
      வேடிக்கை மட்டுமா பார்த்துக்கொண்டிருக்கிறது? வெந்த புண்ணில் வேலையல்லவா பாய்ச்சுகிறது!
      சர்வதேசம் கண்ணை மூடிக்கொண்டு இருந்தால்தான் பரவாயில்லையே! சமீபத்தில் இந்திய மத்திய அரசு 200 கோடி ரூபாயும் அதற்குபின்னர் 100 கோடி ரூபாயும் இலங்கைத் தமிழருக்கென வழங்கியது. யாரிடம் வழங்கியது? தமிழரிடமா வழங்கியது? தமிழனை அழித்தொழிக்கும் சிங்களவன் கைகளில் வழங்கப்பட்டது. அது தமிழனிடம் சென்று சேர்ந்ததா? இந்த லட்சணத்தில் கருநாய்நிதி வேற 25 கோடி ரூபாய் வாரி வழங்குகிறார். இதெல்லாம் எவன் அப்பன் வீட்டு காசு?
      அதெல்லாம் இருக்கட்டும் இந்திய அரசு கொடுத்த ஆயுதப் பயிற்சி மற்றும் ஆயுதம் கொண்டே இதுவரை 400 க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை சுட்டுக் கொன்றிருக்கின்றது சிங்களவனின் ராணுவம். இதற்கு உங்களிடம் பதில் உண்டா?
      இது உண்மை நிலைக்குப் புறம்பாக எழுதப்பட்ட ஒன்றா?
      எல்லோருக்கும் இல்லையென்றாலும் ஒரு சிலர் அந்த உண்மையை உணர்ந்து கொள்வது சமூகத்தின் சிந்தனை உணர்வுகளை நெறிப்படுத்தவும் வல்லது, எனவே சமூக அக்கறை சார்ந்து நம் கருத்தை வைப்பதும் கடமைதான்.

      ஏற்றுக்கொள்பவர்கள் ஏற்றுக்கொள்ளட்டும் என்று விட்டுவிட முடியாது. அனைவரையும் உணரவைக்க வேண்டும்.
      நன்றி

  7. ramu, regret to say this but you should consult a good doctor to find how you can adjust your self to raise questions within you.

    recent attempt from your France young people organisation to send a Thanks letter to “J ” itself shows what the ltte is up to.

    you guys kept saying she’s your first enemy until recent days and now a sudden you turn to even thank her for what ?

    lets say the whole world knows that she’s a political opportunist, how about the ltte and its followers in the name of tamils now ? you too prove how bad opportunists you are and unfortunately your previous explanation will only look childish for all who can asses the situations fairly.

  8. Rajkiran, if you ask me – I am not an Eazham thamizhan hence I really don’t know why there are kids in LTTE and LTTE is not a great saint organization, it has its flaws – no questions but at the end of the day- who needs to solve their issues, them- not us or the world. So instead of commenting on the moral or legality behind all this – we need to think – it is their struggle and they know the consequences.

  9. I agree that Jaya is a shrewd politician and is willing to change the skin for this election but what I was expecting as I was reading this article is – it was going to give a solution or an alternative to Jaya and MK? There is no point in saying Jaya is against Eazham and not giving the reader a closure. hence after reading the article all I could think was – so ” Ennathaan Solla Vareeenga ?”.

  10. ஜெயலலிதா,கருணானிதியை நம்பித்தானா இத்தனை காலம் இந்த ஈழப்போராட்டம் நடைபெற்றது? இல்லை ஒரு காலத்தில் இவர்கள் காலடியில் வீழ்ந்துதான் இதை சாதிக்க வேண்டும் என்று இருந்திருந்தால் இவர்களைப் ஒரு புறத்தில் எதிரியாகவும்,துரோகியாகவும் உருவாக்கிக்கொண்டு தமிழ் ஈழம் பெற்றுத்தருவோம் என்ற பூச்சாண்டித் திரைக்கதையை ஓட்டிக்கொண்டிருந்த விடுதலைப் புலிகளை ஈழத் தமிழனுக்காக ஒப்பாரி வைக்கும் யாருமே ஏன் என்றாவது இது வரை ஏன் கேட்கவில்லை? ஏன் இன்றாவது நம்மைச் சுற்றி ஒரு நண்பன் கூட இல்லையே என்று ஒரு கேள்விதானும் கேட்க முடிவதில்லை?
    .
    BECAUSE THE TRUTH IS EELAM TAMILS NOTHING EXPECTING FROM JEYA AND KARUNANITHI, THEY ARE EXPECTING ONLY NOT TO DISTRUBE IN THEIR WAR(BECAUSE INDIA IS FIGHTING WITH LTTE).NOTHING ANYMORE!,THEY KNOW HOW TO DELIVER THEIR INDIPENDENCE!!!

  11. முடிந்தளவு ஈழ தெய்வங்களின் எண்ணிக்கையை கூடிக் கொண்டுதான் வருகிறது புதிய தெய்வம் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்.

  12. தமிழினத்தின் ராணுவ தலைவர் பிரபாகரன்… அரசியல் தலைவர் ஜெயலலிதாவா… சூப்பரப்பு… இப்படியே போங்க… ஈழம் வரலாற்று புத்தகத்தில் மட்டுமே இருக்கும்…..

  13. //எமது மக்களை நாளும் பொழுதும் இழந்து கொண்டிருக்கும் நாம் துரோகியை விட்டு எதிரியை ஆதரிப்பது தான் ஒரே தெரிவாக இருக்கிறது.//

    எதிரியும், துரொகியும் சேர்ந்து நம்முன் வைக்கும் தீர்வை தாண்டி நமக்கு நாமே தீர்வை தேர்ந்தெடுத்து அதற்கேற்ற தெரிவை நம் எதிரிகளின் முன்னும் துரோகிகள் முன்னும் வைக்கும் நிலைக்கு என்றைக்கு வரப் போகிறீர்கள்? விடுதலையை வேண்டி பெரும் இந்த அவலம் மிகக் கேடானது. ஈழம் என்றுமே விடுதலையடையாது இப்படி இருந்தால்.

    சிவசேகரம் சொல்வது போல மீட்பர்களின் காலம் போய் மேய்ப்பர்களீன் காலமும் முடிவடையும் நிலையில், ஆண்டைகளுக்காக ஈழம் காத்திருக்கும் அவல நிலையை அடைந்தாகி விட்டது.

    சேருங்கள்… உங்களால் முடிந்தளவு ஈழ தெய்வங்களின் எண்ணிக்கையை கூட்டுங்கள்…. புதிய தெய்வம் ஜெயலலிதா வாழ்க

  14. //காரணம் எங்களிடம் வேறு தெரிவு இல்லை…//

    இருக்கிறது…. பூனை போல கண்ணை மூடிக் கொண்டால் தெரியாது. இலங்கையில் இந்திய முதலாளிகளின் மேலாதிக்கமா அல்லது இந்தியாவுடன் தமிழகம் இணைந்திருப்பதா என்ற தெரிவில் ஒன்றை இந்திய அரசு தேர்ந்தெடுக்க நிர்பந்திக்கும் வகையில் குறைந்த பட்சம் இந்திய போலி ஜனநாயக தேர்தலை ஒட்டு மொத்தமாக புறக்கணிக்கும் செருப்படியை தந்தால் இந்தியா சர்வதேச அளவில் அசிங்கபட்டு அவமானப்பட்டு போய் நிற்கும். இதுதான் ஈழ பிரச்சினையில் தமிழகம் செய்யக் கூடிய சரியான செயல். இது ஒன்றுதான் அரசியல் ரீதியாக செயலூக்குமுள்ளா நடவடிக்கை.

    மற்றவையெல்லாம் சும்மா போகிற போக்கில் விடும் புகை போல மறைந்து விடும்.

  15. //ஜெ வெற்றி பெற்றால் தமிழக மக்களின் ஈழ ஆதரவிற்கான ஒரு முக்கிய சான்றாகவே கொள்ளப் படும்.//

    நிரூபித்து?…. என்ன பிரயோசனம்? ஈழ எதிரிகளை ஒடுக்கும் போராட்டத்திற்கு எது மசிரளவு கூட பங்களிப்பு செய்யாது.

    //ஈழ மக்கள் ஜெயாவை நம்புவது அவவின் ஆளுமையாலோ அல்லது அவவின் இன்றைய ஈழ கோசத்தினை நம்பியதாலோ அல்ல.. காங்கிரஸ் கூட்டணி இந்தியாவில் மீண்டும் வெற்றியடைந்து இலங்கையரசுடன் கைகோர்த்துக் கொண்டு மீண்டும் பேரழிவிற்கான யுத்ததினை முன்னெடுக்க கூடாது என்ற எதிர்பார்ப்பினால் ஆகும்//

    காங்கிரசு வந்தாலும், அதிமுக வந்தாலும் இந்திய அரசு இலங்கைய அரசுடன் கைகோர்க்கும் என்பதுதான் நிதர்சனம். வோட்டு சீட்டுக்கு பீ துடைக்கும் அளவு கூட அருகதை கிடையாது என்பதுதான் உண்மை. இன்னிலையில் உங்களது கோபத்தை வெளிப்படுத்தி சாந்தப்படுத்திக் கொள்வதற்கும், அல்லது ஈழ அரிப்பை சொறிந்து விட்டுக் கொள்வதற்கும் மட்டும்தான் ஜே ஆதரவு நடவடிக்கை பயன்படும், ஏனேனில் மருதையன் சொன்னது போல இன்றைக்கு நம் எதிரே வோட்டு பொறுக்க நிற்பவர்கள் இருவர்தான் ஒன்று ஈழ எதிரி, இன்னொன்று ஈழ துரோகி.

    நீங்கள் இருவரில் ஒருவரை ஆதரிப்பதன் மூலம் மற்றவருக்கு கரி பூசுவேன் என்கிறீர்கள் இதைவிட அடிமுட்டாள்தனமானது எதுவும் இல்லை. கடவுளை நம்புபவன் கூட காரிய சுத்தமான தனது ஆன்மிக தேவைக்காகவே, பயன்பாட்டுக் கண்ணோட்டத்திலேயே செய்கிறான். பெதிக போன்றவர்களோ அதை விட கேவலமான மூட நம்பிக்கையுடன் ஈழ பிரச்சினையில் செயல்படுவது கவலைக்குரியது.

  16. //இந்த விவரத்தையும் சேர்த்துக்கொள்ளுங்கள்… ராஜீவ் கொலையை தொடர்ந்து இன்றைய கருஞ்சட்டை அட்டைக்கத்தி வீரர்களெல்லாம் காலிடுக்கில் வாலை சுருட்டிக்கொண்டு பதுங்கியிருந்த போது , ராஜீவை கொலை சரி என வெளிப்படையாக பிரச்சாரம் செய்த ஒரே அமைப்பு ம.க.இ.கவினர் தான்,

    அப்போது லண்டனிலிருந்து புலிகள் வெளியிட்ட அறிக்கையில் ராஜீவ் கொலையை ம.க.இ.கவினரே செய்திருக்கலாம் என குறிப்பிடப்பட்ட போதும் தயங்காமல் வழக்குகளை எதிர் கொண்டு இன்று வரை சமரசமில்லாமல் போராடி வருகின்றது. ////

    இப்போ ஆழிக்கரை சப்போர்டு பன்னுறரே அந்த பெரியார் திக ராஜீவ் கொலை நடந்த சில காலம் எங்கே பதுங்கியிருந்தது? அன்னைக்கி ம க இகவினர் ராஜிவ் கொலையை சரி என்று கூறி தைரியமாக மாநாடு நடத்துவதற்கு பெரியார் திடலை கேட்ட பொழுது திக தர மறுத்தது.

    அப்படிப்பட்ட திகவில் அன்று வாய் மூடி பதுங்கியிருந்தவர்கள்தான் இன்றைய பெதிகவினர், விடுதலை ராசேந்திரன் முதலானோர். ஏன் அன்றைக்கு திகவை எதிர்த்திருக்கலாமே? திகவில் இருந்தவரை ஈழம் குறித்து வாலை சுருட்டி பின்னால் சொருகிக் கொண்டது ஏன்? இந்த முதுகெலும்பற்றவர்கள்தான் ஈழ பிரச்சினையில் இன்று வரை சரியான நிலைப்பாட்டில் எந்த ஒடுக்குமுறை வந்த போதும் நின்று வரும் ம க் இகவினரை குறை கூறுகிறார்கள்.

    • ம சே, பூசான்டீ,
      ஒரு விசயம் தெரியுமோ நோக்கு? இல்ல எப்பவும் போல மறைக்கறேலா????
      இல்ல, தல மறவு, முன்டம் மறவுனு என்கிட்டும் போய்டியோ??
      ராஜீவ் கொலைல குட்றம் சாட்ட்ப்பட்டவர்கள் யார்னு தெரியுமோலியோ??
      ஊருக்கே தெரியும், உனக்கு தெரியாதமாறி பல வருசம் கழிcசு வேசம் கட்டாதே,,

      சரி, சரி, போ போயி பன்றி காய்ய்சல் பன்றிகிட்ட இருன்ட்துதா தோன்ருசுனு லூசுதனமா
      புஜா வுல கட்டுரை எழுது நாலு மடையன் உன்ன நம்புவான்,

    • ம சே, பூசான்டீ,///இந்த விவரத்தையும் சேர்த்துக்கொள்ளுங்கள்… ராஜீவ் கொலையை தொடர்ந்து இன்றைய கருஞ்சட்டை அட்டைக்கத்தி வீரர்களெல்லாம் காலிடுக்கில் வாலை சுருட்டிக்கொண்டு பதுங்கியிருந்த போது , ராஜீவை கொலை சரி என வெளிப்படையாக பிரச்சாரம் செய்த ஒரே அமைப்பு ம.க.இ.கவினர் தான்,///

      ஒரு விசயம் தெரியுமோ நோக்கு? இல்ல எப்பவும் போல மறைக்கறேலா????
      இல்ல, தல மறவு, முன்டம் மறவுனு என்கிட்டும் போய்டியோ??
      ராஜீவ் கொலைல குட்றம் சாட்ட்ப்பட்டவர்கள் யார்னு தெரியுமோலியோ??
      ஊருக்கே தெரியும், உனக்கு தெரியாதமாறி பல வருசம் கழிcசு வேசம் கட்டாதே,,

      சரி, சரி, போ போயி பன்றி காய்ய்சல் பன்றிகிட்ட இருன்ட்துதா தோன்ருசுனு லூசுதனமா
      புஜா வுல கட்டுரை எழுது நாலு மடையன் உன்ன நம்புவான்,,

  17. இங்கே எழுதப்பட்டிருக்கும் கருத்துகள், இன்று இணையங்களில் ஈழத் தமிழர்கள் ஆதரவாக முன்வைக்கப்படும் ஒப்பாரிகள் என்று எல்லா வற்றையும் சேர்த்துப் பார்க்கும் போது ஒரு பெரிய கேள்வி என் மனதில் எழுகிறது.

    ஜெயலலிதா,கருணானிதியை நம்பித்தானா இத்தனை காலம் இந்த ஈழப்போராட்டம் நடைபெற்றது? இல்லை ஒரு காலத்தில் இவர்கள் காலடியில் வீழ்ந்துதான் இதை சாதிக்க வேண்டும் என்று இருந்திருந்தால் இவர்களைப் ஒரு புறத்தில் எதிரியாகவும்,துரோகியாகவும் உருவாக்கிக்கொண்டு தமிழ் ஈழம் பெற்றுத்தருவோம் என்ற பூச்சாண்டித் திரைக்கதையை ஓட்டிக்கொண்டிருந்த விடுதலைப் புலிகளை ஈழத் தமிழனுக்காக ஒப்பாரி வைக்கும் யாருமே ஏன் என்றாவது இது வரை ஏன் கேட்கவில்லை? ஏன் இன்றாவது நம்மைச் சுற்றி ஒரு நண்பன் கூட இல்லையே என்று ஒரு கேள்விதானும் கேட்க முடிவதில்லை?

    புரட்சியில் இணையும் ஒவ்வொருவரிடமும் உனக்கு எழுதப்படிக்கத் தெரியுமா என்று கேட்டுத்தான் “சே” என்ற அந்த மாபெரும் போராட்ட வீரன் இணைத்துக்கொள்கிறான் என்று அவன் வரலாற்றுக் காவியத்தைப் பார்த்த போது தெரிந்து கொண்டேன்.

    சமகாலத்தில், சமூகத்தில் படித்தவன் எவனையுமே விட்டு வைக்காமல் கொன்றொழித்து, படிக்கும் வயது சிறார்களின் கையிலும் துப்பாக்கியை ஏந்த வைத்து இன்று இந்த நிலையை அடைய வைத்த போராட்ட நியதியை ஏன் இவர்கள் இன்று வரை கேள்வி கேட்கத் துணியவில்லை? மாறாக கண்மூடித்தனமாக தம் தோல்விகளுக்கு அயல் நாட்டிலும் அதற்கப்பாலும் சென்று அவனவனை குறை கூறிக்கொள்கிறார்கள்?

    மக்கள் நிலை சார்ந்த அரசியல் தெளிவின்மைதான் இதன் அடிப்படை எனக் கொள்ளலாமா? இல்லை இப்படி சித்தத் தெளிவில்லாத நிலை தான் ஈழத்தமிழர்களின் பாரம்பரியம் என்று கொள்வதா? இந்த இரண்டில் ஒன்று பிழை என்று வருமிடத்து ஏதோ ஒன்று சரி என்று வரும், அந்த ” சரி ” எது ?

    • சமகாலத்தில், சமூகத்தில் படித்தவன் எவனையுமே விட்டு வைக்காமல் கொன்றொழித்து, படிக்கும் வயது சிறார்களின் கையிலும் துப்பாக்கியை ஏந்த வைத்து இன்று இந்த நிலையை அடைய வைத்த போராட்ட நியதியை ஏன் இவர்கள் இன்று வரை கேள்வி கேட்கத் துணியவில்லை?///

      pulikal illavittalum ithu than nadathirukkum. veena pulikalin meel pali pooda ippadi sollavendam. pulikal urvaaikya kattamaipukal eearalm. athil ondu vanni tech. this is only a expample. pls dont tell lies and cheat ppl. y u say such a bluff. some of the educated ppl bought by SL and indian govt and used agist tamil stuggle. U know that. but u blame them. ethuketuthallum child soldeiers. ungal pillai inthaya kodiyai pidithu kondu aathuvathum engal pillaikal pooraduvathum ondu than.

  18. வாங்க….ஓடி வாங்க எல்லாரும்…. மகஇக சொல்வதைக் கேட்போம்…
    ஒரே காமடியா போச்சு…..சுப்ரமணியசாமிக்கு சரியான போட்டி இந்த மக இக……
    இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் கூவினாலும் தமிழ்நாட்டின் பெரும்பான்மை மக்கள் இந்த மகஇக பக்கம் செல்லமாட்டார்கள்.ஆனால் காமடிக்கு குறை ஒன்றும் இருக்காது…..

  19. செயா அம்மையாரின் , மனமாற்றம் என்பது உண்மையா? பொய்யா? என்பது ஒரு புறம் இருக்கட்டும்… இந்த மன மாற்றத்திற்கு முன்பு செய்த அராஜக செயல்களினால் எத்தனை தோழர்கள், அப்பாவி மனிதர்கள் பிணையில் வெளிவர முடியாத தடா , போடா போன்ற சட்டங்களில் கைதாகி அவதிப்பட்டு உள்ளனர்… இவர்களுக்கு இழைத்த அநீதியை மறந்து.. மனமாற்றத்தை ஏற்பது என்பது எப்படி நியாயம் ஆகும்… தவறு செய்தவன் மக்களின் தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும்… அந்த தவறு எத்தனை ஆண்டுகள் முன்பாக செய்ததாக இருந்தாலும், மக்களின் நீதி மன்றத்தில் அவன் பதில் சொல்லியே ஆக வேண்டும்…
    செயலலிதா, அவரால் பாதிக்கப்பட்ட எமது தோழர்களை, மற்ற அப்பாவிகளை நேருக்கு நேராக சந்திக்க தயாரா.. ?

  20. அது எப்படி முத்துக்குமாரின் தியாகம், பல கல்லூரி மாணவர்களின் போராட்டம், பொது மக்களின் தன் எழுட்சியான போராட்டம் இதனை எல்லாம் பார்த்த பிறகு இந்த அம்மையார் தான் மாறிவிட்டேன் என்கிறார்… அதுவும் தேர்தலுக்கு சில வாரங்கள் முன்பு … இப்படி ஒருவர் மாறிவிட்டேன் எனக்கூறியவுடன் அவரின் பழைய செயல்கள் எவ்வாறு மக்களுக்கு எதிராக இருந்தது எனக் கூறுவதன் மூலம் அவர் தனக்கு உரிய தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும் என மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டாமா..? ஒரு திருடன் திருந்தி விட்டான் என நீதி மன்றத்தில் கூறுவதன் மூலம் அவனுக்கு தண்டனை கிடைக்குமா அல்லது முதல்வர் பதவி கிடைக்குமா?

    சிகரெட் பிடிப்பதை நிறுத்தி விட்டேன் எனக் கூறுபவன் மீண்டும் சிகரெட் பிடிக்க மாட்டான் என நீங்கள் உத்திரவாதம் கொடுக்க முடியுமா? ஒரு தனி மனிதன் சிகரெட் பிடிப்பதை நிறுத்தி விட்டேன் என கூறுவது போல இது தனி மனித விடயம் அல்ல… இது ஒரு சமூகத்தின் போராட்டம்… அத்தகைய ஒரு போராட்டத்தை ஒரே ஒரு வார்த்தையை நம்பி , செயா பின்னால் செல்வது நியாயமானதா.?

  21. பகத்,

    இந்த “மாற்றம்” வெறும் ஏமாற்றும் உத்தி என்பது தெளிவாக வரவில்லை. வெறும் பழைய கணக்காக இருக்கிறது. அவ்வளவுதான்.

  22. நேற்று வரை விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசியதற்காக சீமான், போன்றோரை சிறையில் அடைத்த அம்மையாருக்கு இன்று விடுதலை புலிகள் ஆதரவு…கொச்சமவது தன்மானம், சுயமரியாதை மிச்சம் உள்ளதா? அய்யா இங்கு யார் மக்களை ஏமாற்றுவது… முதலில் விடுதலைப் புலிகள் தம்முடைய மக்களை நம்ப சொல்லுங்கள்.. இப்படி பிச்சை எடுப்பதன் மூலம் , பல ஈழ மக்களின் துயரத்தை தியாகத்தை கொச்சை படுத்த வேண்டாம்…

  23. ராஜீவ் கொல்லப்பட்ட பொது, அந்த அனுதாப அலையில் வெற்றி பெற்ற செயா, புலிகளை பற்றி பீதியூட்டி அரசியல் பிழைப்பு நடந்த வேண்டி இருந்தது.. இதனை அவர் சில மாதங்கள் இல்லை இல்லை சில வாரங்கள் முன்பு வரை செய்து வந்தார்..
    இப்பொழுது தமிழகத்தில் இயற்கையாகவே காணப்படும் ஈழ ஆதரவு நிலைப்பாட்டை அறுவடை செய்யவே இத்தகைய பூச்சாண்டிகளை காட்டி வருகிறார்..
    இதனை உண்மை என நம்பி செல்லும் மக்கள்தான் ஏமாளிகள்..

  24. என்னப்பா,

    கோழிக்கரையான் இப்புடிகூவுற மாமா நெடுமாறன் ஊரெல்லாம் செயாவுக்கு ஒட்டு கேக்குறாப்புல,போனமுற கர்ணாவுக்கு கேட்டாரே,

    இப்பவர இந்திராவ நாந்தான் காப்பாத்துனேன்னு சவடால் உடுறாரே,எவ்வளவு பெரிய அயோக்கியன் . தமிழக மக்கள் இந்திராவுக்கு தர்வேண்டியத உள்ள பூந்து கெடுத்துவுட்டாரே .

    போன மாசம் வர இந்தியாவே காப்பாத்துன்னு கும்மி அடிச்சாரு,அப்புற இந்துக்கள் சாவுறாங்கன்னு தமிழின படுகொலையை திரிக்கப்பாத்தாரு

    இப்ப செயாவூட்டுல போய் கழுவிகிட்டு இருக்காரு,

    அதவுடு,எனக்கொரு சந்தேகம் நெடுமாமாவுக்கு உன்ன ரொம்ப புடிக்குமோ? இப்பு தொங்குற.

    போ போ ஈழத்தம்மா ஏதாவது பழையது ஊத்தும் அள்ளிக்குடி.தாய்லாந்துல போய் ஆத்தா புகழ பாடுல.இங்கன வந்து கூவாத

  25. வெற்றி,

    நான் புதியஜனநாயகத்தை பல ஆண்டுகளாக வாசித்து வருபவன். இப்பதிவில் வினவு தொகுத்துள்ள செய்திகள் பெரும்பாலும் புதியஜனநாயகத்தில் உள்ளது உள்ளபடியே செய்திகளாக 90களில் பதிவானவைதான் என்பதை உறுதியாகத் தெரிகிறது.

    ஈழத்தமிழருக்கும் புலிகளுக்கும் கொடிய எதிரி ஜெ. என்பதை ஒருவர் சொல்வதாலேயே அவர் புலிகளைப் புனிதத் திருவுரு என நினைக்கிறார் என்று அர்த்தமா? அமெரிக்கப்படை ஈராக்கில் நடத்தும் கொடுமையை ஒருவர் எழுதினால் அவர் சதாமின் ரசிகர் என்பீரா?

    கந்தசாமி

  26. ஒருவர் என் கருத்து மாறிவிட்டது என்று கூறுகிறார். “மாறுவதற்கு” முன் நீ அப்படி சொன்னாயே என்று பட்டியல் போடுவதில் என்ன பயன்? அதுதான் “மாறிவிட்டதே”? அவர் மாற்றம் நம்பத் தகுந்ததில்லை – முன்னாலும் இப்படி இந்த இடத்தில் மாறி விட்டேன் என்று சொன்னார், அது பொய்யான சொல் என்று பிறகு அவர் செயல்கள் காட்டின என்று பட்டியல் போட்டால் அர்த்தம் இருக்கிறது. இப்போது ஒருவர் நான் புகை பிடிப்பதை நிறுத்திவிட்டேன் என்று சொன்னால் அவரிடம் நீ 1976-இல ஒரு நாளைக்கு இரண்டு பாக்கெட் சிகரெட் பிடித்தாய், 1992-இல ஓர் நாளைக்கு 4 பாக்கெட் என்று பட்டியல் போடுவது போல இருக்கிறது.

  27. Here in Karunanithi’s matter(we thought Karunanithi is friend) but he cheated to us(killing tamils in srilanka)its shows friend changed to his behaviour!!! there is no doubt!!
    It doesn’t matter change friend as cheater difficult or not,the result of changing as cheater is Dangerious than Enemy for us,that is a matter!!!

  28. MA.Se How old are you man?? Still you don,t know diffrent between துரோகி,and எதிரி!!

    Good live example!! what is going in srilanka!!, that Karuna (துரோகி)he knows all secreat about LTTE and now he is with SL government ,its danger than enemy!! thats why LTTE loosing their battle!
    I think you have intellectual insufficient problem??? stupid question you asked like thisஆனால் துரோகியை விட எதிரி பரவாயில்லை என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை, நண்பன் துரோகியாக ஆவது தான் சிரமம், எதிரி துரோகியாவுது சுலபமல்லவா? இது எப்படி உங்களுக்கு விளங்காமல் போயிற்று.?? funny!! another good example!! your neighbour is enemy for you for a long time, recently your whife slept with your neighbour and told about your family secreat to him.here with whom you will get angry?with your neighbour or with your whife??(don’t tell here whife is diffrent from friend)i just give sample!!!
    ,

  29. இதை விட ஜெயலலிதா அம்மையாரை யாருமே தோலுரிக்க முடியாது.

    இவ்வளவு மோசமாக ஈழத்தமிழர்களை இழிவு படுத்தியவர்களை எப்படி வாய் கூசாமல் ஆதரிக்க எத்தனிக்கிறார்கள் தமிழர்கள்?

  30. அ.இ.அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி, எமது விடுதலைப்போராட்டத்திற்கு ஆதரவான கட்சிகளின் கூட்டணியாகும்
    -விடுதலைப் புலிகள்-

    அ.தி.மு.க கூட்டணிக்கு வாக்களிக்குமாறு விடுதலைப்புலிகள் மறைமுக வேண்டுகோள்

  31. ஜெ எதிரியாயின் கருனாநிதி துரோகி

    எதிரியை விட துரோகி ஆபத்தானவன்

    அரசியலில் யாரும் நிரந்தர நண்பனும் எதிரியும் கிடையாது

    தமிழீழம் பெற்றுத் தருவார் என்று ஈழத்தமிழர்கள் காத்திருக்கவில்லை

    எமக்கு இப்போது துரோகிகள் ஒழிக்கப்படவேண்டும் அதற்கு துரோகி கருனாநிதி ஓரம் கட்டப்படவேண்டும்

    உதவி செய்யாவிட்டாலும் உபத்திரவம் செய்யாமல் இருந்தால் போதும்

  32. நம்பி இருந்தவர்களை நடுத்தெருவில் விட்டு விட்டு சாகடிக்க பார்த்து கொண்டிருப்பவர் கருணாநிதி. ஆனால் யெயலலிதா புலிகள் தங்களை பலம் என்று காட்டிய போது அவர்களது பலம் அறிந்து கடுமையான விமர்சனங்களை வைத்தார் அது எங்களை ஒன்றும் பாதிக்கவில்லை ஆனால் இன்று இந்திய வல்லாதிக்க சதியால் பலவீனம் அடைந்த எங்களை பார்த்து ஆதரவான வார்த்தை களை கூறுவது மனத்திற்கு தெம்பாக இருக்கிறது.

    சிறிலங்கன் கருநாவும் சரி தமிழக கருனாவும் சரி இருவரும் ஒரே காரியத்தை தான் செய்கிறார்கள்.

  33. ஜெயாவின் வரலாறு… நிஜம்!
    ஜெயாவின் மாற்றம்… காலத்தின் கட்டாயம்!
    ஜெயாவின் வெற்றி… வரலாற்றுப் பாடம்!

    ஆனால் தமிழ் ஈழம்….?

    • ஜெயாவின் வரலாறு… நிஜம்! ஜெயாவின் மாற்றம்… காலத்தின் கட்டாயம்!
      ஜெயாவின் வெற்றி… வரலாற்றுப் பாடம்!

      ஆனால் தமிழ் ஈழம்….

      தன்மானத்தை இழந்துவிட்டு ….
      தமிழர்கள்…
      தரணியாண்டடதை……காலிபெருங்காய டப்பாவில் உள்ள வாசணையைப் போல…. உள்ளது தமிழர்களின் வாழ்க்கை…………..

  34. ஈழத்தமிழன் கடந்த கால நினைவுகளை மீட்டி அசைபோடுவற்குரிய காலம் இதுவல்ல.
    அந்தநிலையில் எந்தவொரு உண்மையான தமிழனுக்கும் சிந்திக்க நேரமுமில்லை.
    குற்றுயிரும் குறையுயிருமாக இருக்கும் எம்மவருக்கு பழைய சரித்திரங்கள் தேவையில்லை.
    தற்போதைய நிலையில் யார் குத்தினாலும் அரிசியானால் போதுமென்ற மனப்பான்மையே ஒவ்வொரு ஈழத்தமிழனின் நிலைப்பாடு ஆகும்.
    நாங்கள் ஜெயலலிதாவின் ஈழத்தமிழருக்கான எதிர்நடவடிக்கைகள் எல்லாம் தெரிந்தவர்கள் தான்.
    இருப்பினும் இன்றைய காலகட்டத்திற்கு எமக்கு ஆதரவுக்குரல்தான் அதிக பட்சமாக தேவைப்படுகின்றது . முக்கியமானதும் கூட.
    48 மணித்தியாலத்தில் நல்ல செய்தி வரும் என்பவர்களும்,பொம்மை மன்மோகனுக்கு தந்தி அடிப்போம் என்று சொல்பவர்களும் எமக்கு தேவையில்லை.

    எமக்கு இந்திய உள் அரசியல் தேவையில்லாத விடயம். அது நாகரீகமுமில்லை. ஆனால் அவர்கள் ஈழத்தமிழர்களை வைத்து தேர்தல் விஞ்நாபனம் செய்யும் போது இந்தியராணுவத்தால் பாதிக்கப்பட்ட எம்மவர்கள் என்ன புளகாங்கிதம் கொள்ளமுடியுமா?

    ஜெ சொல்லிவிட்டு செய்பவர்.கருணா சொல்லாமல் செய்பவர். கொள்கை ஒன்று. செய்முறை வேறு. எம்மைப்பொறுத்தவரை அவ்வளவுதான்.
    இம்முறை ஜே சொல்லியிருக்கின்றார். பொறுத்திருந்து பார்ப்போம்.

    வேதனையில் விளிம்பில் இருக்கும் எம்மவரை ஏமாற்றும் காலம் போய்விட்டது என்பதை நினைவில் வைத்திருந்தால்…

  35. வினவின் இந்தப் பதிவை யார் எழுதியது என்று தெரியவில்லை. புலிகளை பல முறை விமர்சித்து எழுதியுள்ள ம.க.இ.க. தோழர்களில் ஒருவர் அல்ல என்பது மட்டும் தெரிகிறது.

    புலிகளை புனிதத் திருவுருவாக நினைப்பவர்கள் ம.க.இ.க விலும் இருக்கிறார்கள் போல.

  36. @alba கருணாநியின் துரோகத்தை அம்பலப்படுத்தி வினவில் பல பதிவுகளும் படங்களும் வெளியிட்டுள்ளனர். அவருடைய துரோக்த்தை சந்தேகிக்கவே முடியாது… ஆனால் துரோகியை விட எதிரி பரவாயில்லை என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை, நண்பன் துரோகியாக ஆவது தான் சிரமம், எதிரி துரோகியாவுது சுலபமல்லவா? இது எப்படி உங்களுக்கு விளங்காமல் போயிற்று.

  37. ஆர்.வி உங்கள் பதிவுகளில் நீங்கள் சொல்லியிருப்பதை போல ஜெ நாடகமாடுகிறார் என்று ஒரு வரியில் சொல்வது சுலபம்தான், ஆனால் அதற்கான ஆதாரம் வேண்டாமா, நீங்களே ஒருவேளை கேட்டீங்கன்னா 🙂 அதுக்குத்தான் இவ்வளவு டீடெய்ல எழுதியிருக்காங்க போல…

    //இப்படி பத்தொன்பது ஆண்டுகளாக ஈழத்திற்கு எதிராகவும், தமிழ்நாட்டுத் தமிழருக்கு எதிராகவும் ஆட்டம் போட்ட பாசிசப் பேய் இப்போது நாற்பது சீட்டையும் வெற்றிபெற வைத்தால் தன் முந்தானையில் முடிந்துவைத்திருக்கும் ஈழத்தை தூக்கித் தருவதாக கூக்குரலிடுகிறது. ஈழப்பிரச்சினைக்காக அ.தி.மு.கவை ஆதரிக்கவேண்டுமென முடிவெடுத்துள்ள அப்பாவிகள் இனியாவது திருந்துவார்களா?//

    இதுதான் பதிவின் சாரமில்லையா ஆர்.வி? இதப்பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க…

  38. அன்புள்ள ஆழி,

    இந்த விவரத்தையும் சேர்த்துக்கொள்ளுங்கள்… ராஜீவ் கொலையை தொடர்ந்து இன்றைய கருஞ்சட்டை அட்டைக்கத்தி வீரர்களெல்லாம் காலிடுக்கில் வாலை சுருட்டிக்கொண்டு பதுங்கியிருந்த போது , ராஜீவை கொலை சரி என வெளிப்படையாக பிரச்சாரம் செய்த ஒரே அமைப்பு ம.க.இ.கவினர் தான்,

    அப்போது லண்டனிலிருந்து புலிகள் வெளியிட்ட அறிக்கையில் ராஜீவ் கொலையை ம.க.இ.கவினரே செய்திருக்கலாம் என குறிப்பிடப்பட்ட போதும் தயங்காமல் வழக்குகளை எதிர் கொண்டு இன்று வரை சமரசமில்லாமல் போராடி வருகின்றது.

    மதிமாறன் தளத்தில் மூக்குடைந்து ஓடிப்போன நீ இப்போது இங்கே வந்து படம் காட்டுவது நகைச்சுவையாக உள்ளது… அது எப்படி ஜெவை விட மகஇகவினர் மோசமா?
    வாங்குன காசுக்கு மேல கூவுராண்டா கொய்யாலே!!! 🙂

    • ,///இந்த விவரத்தையும் சேர்த்துக்கொள்ளுங்கள்… ராஜீவ் கொலையை தொடர்ந்து இன்றைய கருஞ்சட்டை அட்டைக்கத்தி வீரர்களெல்லாம் காலிடுக்கில் வாலை சுருட்டிக்கொண்டு பதுங்கியிருந்த போது , ராஜீவை கொலை சரி என வெளிப்படையாக பிரச்சாரம் செய்த ஒரே அமைப்பு ம.க.இ.கவினர் தான்,///
      ஒரு விசயம் தெரியுமோ நோக்கு? இல்ல எப்பவும் போல மறைக்கறேலா????
      இல்ல, தல மறவு, முன்டம் மறவுனு என்கிட்டும் போய்டியோ??
      ராஜீவ் கொலைல குட்றம் சாட்ட்ப்பட்டவர்கள் யார்னு தெரியுமோலியோ??
      ஊருக்கே தெரியும், உனக்கு தெரியாதமாறி பல வருசம் கழிcசு வேசம் கட்டாதே,,

      சரி, சரி, போ போயி பன்றி காய்ய்சல் பன்றிகிட்ட இருன்ட்துதா தோன்ருசுனு லூசுதனமா
      புஜா வுல கட்டுரை எழுது நாலு மடையன் உன்ன நம்புவான்,,

      ஆமா அப்ப ராஜீவ போடு தல்லுனது நாஙதானுனு இன்னும் 5 வருசம் கழிசு சொன்னாலு சொல்லுவீஙா சாமி நீங்க,,,

  39. மறுபடியும் அம்மா வாழ்க்க…..
    மறுபடியும் அம்மா வாழ்க்க…..
    மறுபடியும் அம்மா வாழ்க்க…..
    மறுபடியும் அம்மா வாழ்க்க…..
    மறுபடியும் அம்மா வாழ்க்க…..
    மறுபடியும் அம்மா வாழ்க்க…..

  40. வினவு நீங்கள் ஜெயா பற்றி கூறியது அனைத்தும் உண்மை. மறு பக்கமாக கருணாநிதி பற்றி ஒரு அலசு அலசிவிட்டு ஒரு தராசில் போடுவோம். ஒரு பக்கம் நம்பிக்கை துரோகி. அடுத்த பக்கம் எதிரி. எமது மக்களை நாளும் பொழுதும் இழந்து கொண்டிருக்கும் நாம் துரோகியை விட்டு எதிரியை ஆதரிப்பது தான் ஒரே தெரிவாக இருக்கிறது.

  41. தற்போதய சூழ்நிலையில் எக்காரணத்தை கொண்டும் காங்கிரஸ் திமுக கூட்டணி ஆட்சிக்கு வரக்கூடாது என்பதே ஈழத்திமிழரின் எதிர்பார்ப்பு………

    20 வருடங்களாக எமக்கு எதிராக பேசிய ஜெயலலிதாவா இல்லை 3 மாதகாலத்தில் 7000 க்கு மேற்பட்ட எனது மக்களை கொன்று குவித்த சோனியா கருநாநிதி கூட்டணியா என்றால் என் வாக்கு நிச்சயம் ஜெயலலிதாவுக்கு தான்…காரணம் எங்களிடம் வேறு தெரிவு இல்லை…சோனியா ** யின் ரத்த பசிக்கு மேலும் என் மக்களை பலியிட நாம் அனுமதிக்க கூடாது. இதை கருநாய்க்கு வக்காலத்து வாங்கும் தமிழின உணர்வாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

  42. ஜெ பதவிக்கு வந்தவுடன் எப்படி நடந்து கொள்வார் என்பதிலும் அவரின் இன்றைய கோசம் வெறும் தேர்தல் கோசமே என்பதிலும் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. ஆனால் இரு கூட்டணிகளிற்கிடையேயான தேர்தல் வாக்குறுதிகளில் இருக்கும் முக்கிய வேறுபாடாக ஈழ ஆதரவே காணப் படுகின்றது. ஜெ வெற்றி பெற்றால் தமிழக மக்களின் ஈழ ஆதரவிற்கான ஒரு முக்கிய சான்றாகவே கொள்ளப் படும். ஏனெனில் கருணாநிதியின் வெற்றி காங்கிரஸின் ஈழ மக்கள் அழிப்புக்கான தமிழக மக்களின் ஆதரவையே புலப் படுத்தி நிற்கும்.

    இலங்கையில் சிங்கள மக்கள் மகிந்தவின் கட்சிக்கு பெரும்பான்மையாக வாக்களித்தமையை தமிழ் மக்களின் அழித்தொழிப்பிற்கு அவர்கள் கொடுக்கும் அங்கீகாரமாக எந்தளவிற்கு பார்க்கப் படுகின்றதோ அதே போன்றுதான் தமிழக மக்கள் தி.மு,க + காங்கிரஸ் கூட்டணியிற்கு வெற்றி வாய்ப்பை வழங்கினால் ஈழ மக்களின் அழிவிற்கு இந்தியாவின் பங்களிப்பை அங்கீகரித்தமையாக பார்க்கப்படும்.

    தமிழகம் நீங்கலாக மற்ற அனேக இடங்களில் காங்கிரஸ் தேர்தலில் வெல்லக்கூடிய நிலை இருக்கும் இன்றைய நிலையில் தமிழக மக்கள் ஜெயலலிதாவிற்கு கொடுக்கும் ஆதரவு அவர்கள் ஈழ மக்களின் மீதான அன்பையும் மத்திய அரசின் இனவழிப்பின் மீதான தம் கோபத்தினையும் வெளிப்படுத்தி நிற்கும்

    ஈழ ஆதரவினை கொண்டிருக்கும் கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரண்டு பா.ஜ.க வினருடனோ அல்லது ஜெயலலிதா அற்ற மூன்றாவது அணியினருடனோ கரம் கோர்த்திருந்தார்களாயின் ஈழ மக்களின் மேலதிக நம்பிக்கையினைப் பெற்றிருப்பார்கள். அல்லது தி.மு.க கட்சியானது காங்கிரசை கைவிட்டு ஈழ ஆதரவு அணியினருடன் ஒன்று சேர்ந்து இருந்திருதார்களாயினும் இன்னும் அதிகளவு நம்பிக்கையினை பெற்றிருப்பார்கள். ஆனால், அப்படி ஒன்றும் நடக்கவில்லையே…ஈழ மக்கள் ஜெயாவை நம்புவது அவவின் ஆளுமையாலோ அல்லது அவவின் இன்றைய ஈழ கோசத்தினை நம்பியதாலோ அல்ல.. காங்கிரஸ் கூட்டணி இந்தியாவில் மீண்டும் வெற்றியடைந்து இலங்கையரசுடன் கைகோர்த்துக் கொண்டு மீண்டும் பேரழிவிற்கான யுத்ததினை முன்னெடுக்க கூடாது என்ற எதிர்பார்ப்பினால் ஆகும்

  43. அது இருக்கட்டும் நீங்கள் விசுவானந்ததேவனை இலங்கை கடற்படையிடம் காட்டிக்கொடுத்த பிரான்ஸ் வாழ் இரயாகரனுடன் இணைந்து கொண்டு தமிழீழ விடுதலைப்போராளிகளை தமிழகத்தில் கொச்சைப்படுத்திக்கொண்டிருக�
    �கும் நீங்கள் எப்படி ஜெயலலிதாவை பற்றி சொல்ல இயலும்.

    1989 இல் பெருஞ்சித்திரனார் , ஆனைமுத்து , பழ.நெடுமாறன் ஆகியோரை கொச்சைப்படுத்தி மேடையில் பேசியும் உங்கள் புதிய(???) ஜனநாயகத்தில் எழுதியும் வந்தது மட்டும் ஈழத்துக்கு ஆதரவாகவா?

    இப்பொழுதும் கூட நீங்கள் தமிழீழ விடுதலைப்போராளிகளை கொச்சைப்படுத்தித்தானே எழுதியும் வருகிறீர்கள். அனைவராலும் அறியப்பட்ட ஆட்களை விமர்சனம் செய்து விளம்பரம் தேடிக்கொள்ள நினைக்கும் ஆட்கள்தானே நீங்கள்.

    ஈழம் என்ற சொல்லையே தீண்டத்தகாத வார்த்தையாகத்தானே நீங்கள் பல ஆண்டாக வைத்திருந்தீர்கள். இந்திய கம்யூனிசுடு , ஜெ.வி.பி ஆகியவற்றைவிட பல படிகள் மேலாக தமிழக மக்களிடம் குழப்பத்தினை விளைவிப்பதும்தானே உங்கள் வேலை.

    ஜெயலலிதாவை விட பல படிகள் மேலாக தமிழீழத்துக்கு எதிராக செயல்பட்டவர்கள்தானே உங்கள் மக இக CPIML SOC கட்சி.

    போய் வேற வேலை இருந்தா பாருங்க.

    குறை சொல்லுவதே தொழிலாக கொண்ட மக இக soc யினரே.

    இப்பொழுது பெரியார் திராவிடர் கழகத்தினரை கொச்சைப்படுத்தும் வேலையில் இறங்கியுள்ளீர்கள்.

    நீங்களும் வேலை செய்ய மாட்டீர்கள் , செய்பவனையும் செய்யவிடமாட்டீர்கள் அதுதானே உங்கள் நோக்கம்.

    பதிலுக்காக காத்திருக்கிறேன்

  44. ஜெ “மன மாற்றம்” அடைந்திருப்பதாக கூறுகிறார். நீங்கள் மன மாற்றம் அடைவதற்கு முன்னால் அவர் என்னென்ன சொன்னார் செய்தார் என்று பட்டியல் இடுகிறீர்கள். அவர் என்ன இப்படி எல்லாம் செய்யவில்லை என்றா சொல்கிறார்? இந்த போஸ்டால் பிறகு என்ன பயன்?

    அவர் இப்போது(ம்) பொய் சொல்கிறார் என்று நினைத்தீர்களானால் அதை தெளிவாக சொல்லுங்கள்!

  45. // வருங்காலப் பிரதமர்” ராகுல் காந்தி //
    இந்தியாவில எவனு்க்குமே பிரதமர் ஆகுற தகுதி இல்லையா??

  46. eelam people are being killed everyday, enemy of eelam is increasing day by day.pdk members figthing for eelam people for around 2 years.but now their activities are going against eelam.

  47. அம்மா சாதா அம்மாஅல்ல
    ஈழத்தம்மா – ஈழத்தை
    பிரசவிக்க ஆஸ்திரேலியாவிலிருந்து ஒரு மடல்
    பிரசவம் பார்க்க மருத்துவர் அய்யா
    மூத்திரம் அள்ளிப்போட
    போட்டியோபோட்டி
    அட எட்டிப்பார்த்தால்
    பாண்டிக்கும் வாண்டிக்கும்
    குடுமிப்புடி சண்டை
    புயலண்ணன் கையை பிசைய
    மருத்துவர் சொன்னார்
    ஆண் குழந்தை பொறந்திருக்கு
    ஆச்சரியமாய் உள்ளே போனால்
    அடேங்கப்பா பொறந்திருப்பது
    ராஜ பக்சேவாம் http://kalagam.wordpress.com/

  48. நெத்தியடி..!!

    என்ன தான் முக்கி முக்கி தேர்தல் வேலை பார்த்தாலும், பெ.தி.க உள்ளிட்ட புதிதாக போயஸ்கார்டனில் தோட்டக்காரர்களாக ‘அப்பரசண்டிகளாக’ சேர்ந்திருக்கும் தமிழினக் குழுக்கள் ஜெயா மாமிக்கு கக்கூஸு துடைக்கும் பேப்பராகத்தான் பயன்படப்போகிறார்கள்..

    அடுத்த பத்து நாளைக்குப் பின் பெ.தி.க மூஞ்சியில் வழிவதைக் காண வேண்டும்!

  49. There is a thin line between supporting Terrorist Organization and Sympathy with Sri Lankan Tamils. None of the readers talk about that. She is the only CM in India always talks against Terrorisam. Now she is defeated by the Tamil Voters. After the election none of the reader come back to this article and mention any reply. It doesn’t mean she is still NOT going to support Sri Lankan Tamils. She will raise her voice more about Sri Lankan Tamils, since there is no LTTE now. I am sure she will still not going to support LTTE. She supported for Tamil State/Country. She never supported LTTE in her speach or press notification. She never wants LTTE’s support. Whether she is defeated or not, Tamil Nadu people are no longer think Sri Lankan problem is the part of their/Indian problem.

  50. நண்பர்களே எனக்கு காந்தி(ஜி???) யின் மறுபக்கம் குறித்த தகவல்கள் தேவைப்படுகின்றன. உங்களிடம் தகவல்கள் இருந்தாலோ அல்லது தகவல்கள் இருக்கும் வலைப்பூக்கள் தெரிந்தாலோ தயவு செய்து jeevendran@yahoo.com அனுப்பும் படி தாழ்மையுடன் வேண்டுகிறேன். நன்றி

  51. ஈழம் ஈழதமிழர்களின் அவலமும் ரத்தமும் தமிழக ஆட்சியாளர்களுக்கு எப்பொழுதும் வாக்கு வங்கியை நிரப்பும் ஒரு சாதனம்

  52. காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்து,ராஜிவ் இறந்த உடன், அந்த அனுதாப அலையில் ஆட்சிக்கு வந்தவர் ஜெயலலிதா.ஆட்சியின் ஒராண்டு முடிவு பொதுக்கூட்டத்தில் யாருடய அனுதாப அலையில் ஆட்சிக்கு வரவில்லை அதிமுக சொந்த செல்வாக்கில் ஆட்சிக்கு வந்தது என்று சொல்லி காங்கிரஸ்க்கு ஆப்பு வைத்தவர் ஜெயலலிதா.காரியம் ஆகும் வரை காலை பிடிப்பதும் காரியம் ஆனவுடன் காலை வாரி விழ வைத்து அதன் மேல் ஏறீ நிர்பதில் ஜெயலலிதா வல்லவர்.

  53. ஈழத்தமிழர்களின் விடுதலைப்போராட்டங்களை, அவலங்களை வைத்து தமிழ்நாட்டின் பல அரசியல் கட்சிகளும், அரசியல் தலைவர்களும், அரசியல் நடத்தியுள்ளனர். அதில் ஜெயலலிதாவை மட்டும், குறை சொல்லி என்ன பயன். அதாவது யாரையாவது எதிர்க்கும் போது முழுமையாக எதிர்ப்பதும், ஆதரிக்கும் போது முழுமையாக ஆதரிப்பதும் ஜெயலலிதாவின் குணம் என்பது தெளிவாகத் தெரிகிறது. நீங்கள் இந்தக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ள, ஜெயலலிதாவின் புலி எதிர்ப்புச் செயல்களுக்கும், கடைசிப் போர் நடைபெற்ற காலத்தில் கருணாநிதி நடந்து கொண்ட முறைக்கும் பெரிய வேறுபாடு கிடையாது. எல்லாம் சுயநலம் தான். இப்பொழுது ஜெயலலிதா ஈழத்தமிழர்களுக்காதரவாக நடந்து கொள்கிறார். எங்களுக்கு ஆதரவளிப்பவர்களை, அவர்களின் பழைய நடவடிக்கைகளைச் சுட்டிக்காட்டி ஒதுக்கித் தள்ளக்கூடிய உயர்ந்த நிலையில் ஈழத்தமிழர்கள் இன்றில்லை.

Leave a Reply to vsdfsad பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க