privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசமூகம்அறிவியல்-தொழில்நுட்பம்பி.டி. கத்திரிக்காய், இது முத்தாது... குத்தும் !!

பி.டி. கத்திரிக்காய், இது முத்தாது… குத்தும் !!

-

பிடி கத்திரிக்காய்இரண்டு நாட்களுக்கு முன்பு திருப்பூரில் பி.டி கத்திரிக்காய்க்கு எதிரான உழவர் உழைப்பாளர் கட்சியின் ஆர்பாட்டமொன்று நடைபெற்றது. அபாயகரமான சாயக்கழிவுகளுடன் அசால்ட்டாக வாழ்க்கை நடத்தும் எங்கள் கவனத்தை கத்திரிக்காயா திருப்பும் ?? கொடி புதுசாயிருக்கே என ஒருசிலர் கவனித்ததுதான் மிச்சம். ஆனால் சந்திராயன் மயில்சாமி அண்ணாதுரையை வாழ்த்துரை வழங்கச்செய்து பி.டி கத்திரிக்காய்க்கு மாபெரும் விளம்பரம் ஒன்றை செய்திருக்கிறது விவசாயப் பல்கலைக்கழகமும் அவர்களின் சமீபத்தைய குலசாமியான மான்சாண்டோவும். இதுவரை அப்துல் கலாமை உதாரணபுருஷனாக கொண்டிருந்து கொஞ்சம் சலித்துப்போயிருந்த மக்களின் புதிய கண்டுபிடிப்புதான் மயில்சாமி அண்ணாதுரை.

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத நான்கு பி.டி கத்திரிக்காய்களை கோவை வேளான் பல்கலைக்கழகம் அறிமுகம்  செய்திருப்பதாக சொல்லியிருக்கிறார் ம.சா.அ.து. இதுவரை உள்ளூரில் விளைந்த கத்திரிக்காயால் சுற்றுப்புறத்திற்கு என்ன கேடு வந்துவிட்டது என்பது சத்தியமாக எனக்குப் புரியவில்லை. அதையும் ஒரு விண்வெளி ஆராய்ச்சியாளரை வைத்து சொல்லச் சொல்வதன் காரணம் என்ன ?? ஏற்கனவே அணுசக்தி ஒப்பந்தத்திற்கு மார்கெட்டிங் செய்ய அப்துல் கலாமை அனுப்பினார்கள், இப்போது அண்ணாதுரையின் முறை.பி.டி கத்திரிக்காயின் நல்லதா கெட்டதா என விவாதிக்கும் முன் அதன் தேவையைப்பற்றி தெரிந்துகொள்வது முக்கியம். பெரிய அளவில் தட்டுப்பாடு வராத, பயிரிடப்படுவதிலும் ஒரு பெரிய முக்கியத்துவம் இல்லாத கத்திரிக்கு ( தங்கள் நிலத்தின் ஒரு பாகத்தில் மட்டுமே பெரும்பாலான விவசாயிகள் கத்திரியை பயிரிடுகிறார்கள் ) மரபணு மாற்றம் செய்வது என்பது ஒரு முன்னோட்டமே. அடுத்து வரப்போகும் மற்ற மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களுக்கான தடைகளை இப்போதே கத்திரியை அனுப்பி ஆழம் பார்க்கிறார்கள். நமது கேனத்தனத்தினைப் பொறுத்து பி.டி நெல் உள்ளிட்ட மற்ற பயிர்கள் இன்னும் சுலபமாக உள்ளே நுழையும்.

இந்தியாவில்  மரபணு மாற்றம் செய்யப்பட்டு முதலில் பயன்பாட்டுக்கு வர இருப்பது கத்திரிக்காய்தான். பி.டி கத்திரிக்காய் உடலுக்கு ஏற்படுத்தும் கேடுகளைப்பற்றி ஆராயாமல் ஏதோ வீடு கட்டும் ஒப்புதலை வழங்குவதுபோல அதன் பயன்பாட்டுக்கு அனுமதி அளித்திருக்கிறது மத்திய மரபணுப் பொறியியல் ஒப்புதல் குழு ( genetic engineering approval committe ). கத்திரி மீதான ஆய்வு முடிவுகள் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்படும் எனவும் அதன் பிறகு மக்களின் கருத்து கேட்கப்பட்ட பிறகே மத்திய அரசு முடிவெடுக்கும் என அமைச்சர் ஜெயராம் ரமேஷ் தெரிவித்திருக்கிறார். மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களின் பல்வேறு விளைவுகள் பற்றி ஆய்வு செய்ய  இந்தியாவில் வசதி இல்லை என்றும் உடனடியாக ஒரு ஆய்வகம் அமைக்கப்படவேண்டும் என மத்திய அரசை கோரியிருக்கிறார் புஷ்பா பார்கவா ( இவர் உச்ச நீதிமன்றத்தால் நியமனம் செய்யப்பட்ட GEAC யின் பார்வையாளர் ). மத்திய அரசும் பரிசீலிப்பதாக சொல்லியிருக்கிறது. அப்படியானால் ஜெயராம் ரமேஷ் மக்களுக்குத் தரப்போவது எந்த ஆய்வறிக்கை என்பது அவருக்கு மட்டுமே வெளிச்சம்.

உண்மையில் GEAC ஆய்வு என சொல்வது பி.டி கத்திரிக்காயை உருவாக்கிய மான்சாண்டோ செய்த ஆய்வைத்தான். அந்த ஆய்வு பத்து எலிகளைக் கொண்டு மூன்று மாதங்கள் மட்டும் நடைபெற்றது. இதில் நீண்டகால பாதிப்புகள் குறித்து எந்த தகவலை பெறமுடியும் ? முதலில் எலிகள் மீதும் பிறகு குரங்குகள் மீதும் ஆய்வுகள் செய்யப்படுவது வழக்கம். இப்போது இந்தியர்கள் கிடைத்துவிட்டதால் குரங்குகள் மீதான ஆய்வு தவிர்க்கப்பட்டு விட்டதுபோலும். விதைகளை மீண்டும் பயன்படுத்த முடியாமை, மகரந்த சேர்க்கை மூலம் மற்ற பயிர்களும் மலடாகும் போன்ற பிரச்சனைகள் பற்றி ஆய்வு செய்யும் சாத்தியம் இந்தியாவில் கண்ணுக்கெட்டியவரை கிடையாது. ரசாயன பூச்சிக்கொல்லிகள் அறிமுகப்படுத்தப்பட்டபோதும் அவற்றின் ஆபத்துக்கள் பற்றி பெரிய தெளிவு மக்களிடம் கிடையாது அல்லது அவர்களுக்கு விளக்கம் தரப்படவில்லை. தாய்ப்பால் முதல் அண்டார்டிகா வரை பூச்சிக்கொல்லிகளின் பாதிப்பு அறியப்பட்டபிறகும் அந்த விவரம் பெரும்பாலான பாமர மக்களுக்கு தெரியவில்லை. இதேகதைதான் பல ஆலைக்கழிவுகளின் விசயத்தில் இப்போதும் நடக்கிறது. இந்த லட்சணத்தில் மக்களிடம் கருத்து கேட்டு பி.டி கத்திரிக்காயை அனுமதிக்கப்போவதாக சொல்வது வேறு பயமுறுத்துகிறது.

இதன் இன்னொரு முகம் பொருளாதாரம் சார்ந்தது. விவசாயிகளை சகல வழிகளிலும் நிறுவனங்களை சார்ந்திருக்கச் செய்வது. ஏற்கனவே உரம் பூச்சி மருந்து என பல இடுபொருட்களுக்கு விவசாயிகள் அடிமையாக்கப்பட்டுவிட்டார்கள். விதைகளும் அந்த பட்டியலில் சேர்ந்துவிட்டால் தீர்ந்தது பிரச்சினை. எல்லா விவசாயியும் ஒப்பந்தப் பணியாளரைப்போல மாண்சான்டோவுக்கு வேலைசெய்ய வேண்டியதுதான். பி.டி பருத்தி விதைகள் அறிமுகம் செய்யப்பட்டபோது அதன் விலை 1750, அப்போது சாதாரண பருத்தி விதை முன்னூறு ரூபாய்கூட கிடையாது. அப்படி வாங்கியவர்களும் பெரிய மகசூல் எடுத்ததாக மான்சாண்டோவாலும்கூட நிரூபிக்க முடியவில்லை அவர்களின் உள்ளூர் எடுபிடிகளான வேளான் பல்கலை(ளை)க்கழகங்களாலும் நிரூபிக்க முடியவில்லை. பி.டி பருத்தியால் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தற்கொலைக்கு தள்ளப்பட்டார்கள். இப்போது கத்திரிக்காய் எத்தனை பேரை காவு வாங்கப்போகிறதோ தெரியாது. இது போதாதென்று இன்னும் ஐம்பத்தாறு பி.டி பயிர்கள் அறிமுகத்திற்காக காத்திருக்கின்றன.

விதை யார் கொடுத்தால் என்ன, கத்திரிக்காய் வழக்கம்போல கிடைக்கும்தானே என கேட்கவும் ஆட்கள் இங்கு இருக்கிறார்கள். அவர்களிடம் கேட்க என்னிடமும் ஒரு கேள்வி உண்டு, உங்கள் பிள்ளை எங்கிருந்து வந்தால் என்ன ? அது உங்களுடையதாக இருக்க வேண்டுமென்று என்ன அவசியம் இருக்கிறது ?

விதைக்கான உரிமை பறிபோகும் வேளையில் விளைபொருளின் மீதான உரிமையையும் பறிக்க ஒரு சட்டத்தை மத்திய அரசு அறிவித்திருக்கிறது. கரும்புக்கான நியாய ஆதரவு விலை அவசரச்சட்டம் என்பதுதான் அது. அதாவது இப்போது அமுலில் உள்ள குறைந்தபட்ச ஆதரவு விலையை விட சுமார் முன்னூறு ரூபாய் குறைவான விலையை ஒரு டன்னுக்கு “அவசரமாக” நிர்ணயம் செய்யும் சட்டம்தான் இப்போது பிரச்சினையாகியிருக்கிறது. ஒரு விளைபொருளின் விலையை குறைப்பதற்கு அவசர சட்டம் கொண்டு வர முயலும் ஒரே சாதனை அரசு இந்தியாவில்தான் இருக்கமுடியும். இத்தனைக்கும் கடந்த ஓராண்டில் மட்டும் சர்க்கரையின் சந்தை விலை கிட்டத்தட்ட மூன்று மடங்கு உயர்ந்திருக்கிறது.ஒப்புக்குக்கூட எந்தவிதமான காரணமும் சொல்லாமல் விவசாயிகளிடம் பிக்பாக்கெட் அடிப்பதற்கு ஒப்பான ஒரு திட்டத்தை சட்டமாக கொண்டு வர முயற்சி செய்திருக்கிறது  காங்கிரஸ்.

ஏற்கனவே எண்ணெய் வித்துக்களின் உற்பத்தி திட்டமிட்டு குறைக்கப்பட்டு இறக்குமதி நிரந்தரமாகிவிட்டது. அடுத்து கரும்பு இறக்குமதி துவங்கியாயிற்று ( கரும்பு உற்பத்திப் பரப்பு 48% குறைந்துவிட்டதாக ( அல்லது குறைக்கப்பட்டுவிட்டதாக) மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. அடுத்து அரிசி இறக்குமதிக்கு சாக்குப்பையை வைத்துக்கொண்டு காத்திருக்கிறார் பிரணாப் முகர்ஜி. மேற்கூறிய எல்லா பொருட்களும் சமீப காலமாக கடுமையான விலையேற்றத்தை சந்தித்திருக்கின்றன. விவசாயிக்கும் விவசாயத்திற்கும் எதிரான எந்த ஒரு நடவடிக்கையும் மறுநாள் பாதிக்கப்போவது சாதாரண நுகர்வோரான இந்தியக் குடிமகனைத்தான். மன்மோகனும், மாண்டெக் சிங்கும் இந்தியாவை பணம் படைத்தோருக்கு மட்டுமான ஒரு தேசமாக மாற்றும் வரை ஓயப்போவதில்லை. அதுவரை நம்மை திசைதிருப்ப இருக்கவே இருக்கிறது பாகிஸ்தான் தீவிரவாதம். அதுசரி செத்தாலும் உள்ளூர்காரனால் சாவதுதானே தேசபக்தி.

கரும்பு விலை சட்டத்தின் மூலம் நமக்கு இன்னொரு முக்கியமான பாடம் கிடைத்திருக்கிறது. டில்லியை ஒருநாள் முற்றுகையிட்டாலே ஒரு அராஜகமான சட்டத்தை நிறுத்த முடியும் என்பதுதான் அது.

-நன்றி வில்லவன்

படிக்க

  1. இது குறித்த விவாதங்களாவது திசைதிருப்பப்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

  2. உங்கள் பிள்ளை எங்கிருந்து வந்தால் என்ன ? அது உங்களுடையதாக இருக்க வேண்டுமென்று என்ன அவசியம் இருக்கிறது ? ஆழமான சிந்தனை.

    • Bt Brinjal – இதில் Bt என்பது ஒரு உயிரி  soil bacterium Bacillus thuringiensis .வழமையான கத்திரிக்காய் போல அல்லாமல் இது பேசில்லஸ் பாக்டீரியாவின் மரபணு (GENE) எடுத்து கத்திரிக்காயின் மரபணுவுடன் சேர்த்து பரிசோதனைக்கூடத்தில் உருவாக்கப்பட்ட ஒரு புதிய வகை உயிரி.

      இது போன்ற முறையில் உருவாக்கப்பட்ட BtCotton தான் இந்திய நிலத்தையும் மலடாக்கி கடனையும் உருவாக்கி ஆந்திர விதர்பா விவசாயிகளின் தற்கொலைக்கு முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. மண்னையே தரிசாக்கும் என்றால் மனித உடல் என்னாவது……

      • இல்லை. பி.டி காட்டன் பற்றி சில ஆண்டுகளுக்கு முன் இதே போன்ற சர்ச்சைகள், எதிர்ப்புகள் இருந்தது. இன்று யாரும் கண்டுகொள்வதில்லை. பி.டி.காட்டன் வெற்றிகரமாக பயிரடப்படுகிறது. அதை பற்றிய சமீபத்திய ஆய்வு :

        http://www.apaari.org/wp-content/uploads/2009/10/bt-cotton-2nd-edition.pdf

        ஆனால் பி.டி. பிர்ஞ்சால் பற்றி இன்னும் முழுமையான ஆய்வுகள், தகவல்கள் இல்லைதான். அவசரப்படாமல், நிதானமாக அணுகவேண்டும். வளர்ந்த நாடுகளில் ஜி.எம். உணவுகள் தனியாக விற்பனையாகின்றன.
        விவாதங்கள் தொடர்கின்றன.

        • ///Author: peace
          Comment:
          //ஜி.எம். உணவுகள் தனியாக விற்பனையாகின்றன.//இது தவறான தகவல்./// ஜி.எம் உணவுகள் என்று பேக்கிங்களில் மிக மிக தெளிவாக குறிப்பிட்டு விற்பனை செய்யப்படுகிறது. அவை அங்காடிகளில் தனியாக வைக்கபடுகின்றன. அதைதான் குறிப்பிடேன்.

        • Only 40% of people in the U.S. know that some of the foods they are buying and eating are genetically modified (GM), according to a new survey conducted by the International Food Information Council (IFIC), an industry group funded by food, beverage and agricultural industries. Additionally nearly 1 out of 4 people incorrectly believes that such foods are not being sold in the United States.

          Currently, the use of genetically modified food is a subject of enormous global controversy. Environmental and consumer groups have demanded that the U.S. Food and Drug Administration (FDA) follow the lead of the European Union, Japan and other nations by requiring labels on GM foods to allow consumers to know what they are buying. The U.S. government claims that such mandatory food labels are not necessary because genetically modified food ‘poses no inherent safety risk’.

          Back in 1992 the U.S. Food and Drug Administration determined that genetically engineered (GE) foods are in most cases ‘the same as or substantially similar to substances commonly found in food’ and thus are not required to undergo specific safety tests prior to entering the market.

          The FDA has refused to require labeling of genetically engineered foods, despite overwhelming American support for mandatory labeling. Since the agency has refused to protect consumers, some food companies are now taking action by labeling certain products or ingredients “non-gmo”, which means “made without genetically modified organisms”.

          The U. S. may soon be the only country in the world which does NOT require labeling of genetically engineered food.//

        • சொந்த அனுபவம். நம் ஊர் மாதிரிதான் காய்கறி வாங்குகிறேன். எந்த எச்சரிக்கையும் கிடையாது.

        • உண்மையில் அறிவியல் ஆய்வுகள் என்ன சொன்னாலும் அதற்கு  மறுப்பாக மற்றொரு ஆய்வின் முடிவு இருக்கும். (இது போன்ற long term consequences கண்டுபிடிப்பதில்). உண்மையில் BT ஆதரவாளர்கள்/கம்பெனிகள் விரும்புவதும் அறிவியல்பூர்வமான விவாதங்களை தான். நிச்சயமாக அவர்களால் சாதகமான ஆய்வறிக்கை கொடுக்கமுடியும்.(உண்மையாகவும் இருக்கலாம்.)
          ஆதலால் இதனை எதிர்ப்பதில் ஐரோப்பாவில் வேறுவிதமான விவாதங்களே நடக்கின்றன.  இன்றைய சமூகத்தில், உலகளவில் எழுபது சதவீத விவசாயிகள் சிறுவிவசாயிகள் தான்.  விதைபொருள் ஒரு சில நிறுவனங்களின் கட்டுப்பாட்டுக்குள் செல்வது எந்தவிதத்தில் நல்லது என்று தெரியவில்லை. இருபது முப்பது வருடங்களில் மூன்று / நான்கு நிறுவனங்கள் உலகத்தில் விவசாயத்தை கட்டுப்படுத்தும்.  கேப்பிட்டலிசத்தை  ஆதரிக்கும் பலரும் கூட இதை முழுவதுமாக ஆதரிக்கவில்லை.

        • மணி, மிகச்சரியான வாதம். //இருபது முப்பது வருடங்களில் மூன்று / நான்கு நிறுவனங்கள் உலகத்தில் விவசாயத்தை கட்டுப்படுத்தும// இதுதான் அபாயகரமான பிரச்சனை. மற்றது அல்ல… மான்சான்டோ, கார்கில் உள்ளிட்ட கம்பெனிகள் திட்டமிடுவது இதற்காகத்தான். இங்கு விவாதிக்கப்படவேண்டிய விசயமும் இதுதான்

  3. தகவல்கள் அதிர்ச்சியூட்டுபவை. எழுத்து நடையில் வில்லவன் தனித்து தெரிகிறார். வாழ்த்துக்கள் வில்லவன். தொடர்ந்து எழுதுங்கள்.

  4. போலி கம்யூனிசம், பார்ப்பனீயம், இஸ்லாம், கிருத்துவம், பாஸிசம் போன்ற வார்த்தைகள் இன்றி வினவில் இப்படி ஒரு பதிவா? வினவின் சுய விளம்பரமோக பித்து தெளிந்துவிட்டதா? எப்படி? என்று அதிசயப்பட்டால்……, வினவு அல்ல…., வில்லவன்…!

    மிகச்சிறந்த பதிவு. நாட்டுக்கும் மக்களுக்கும் மிக மிக அவசியமான பதிவு. தமிழ்மண மகுடமோ, இருபது ஆதரவு ஒட்டுக்களோ, முன்னூறு மறுமொழிகளோ, தொள்ளாயிரம் ஹிட்சோ, ஒன்பதாயிரம் பார்வைகளோ அவசியம் இல்லை. மன நிறைவு. நாட்டு நலனுக்காக, மக்கள் நலனுக்காக ஒரு பதிவு போட்ட மன நிம்மதி, ஆத்ம திருப்தி. அதுபோதும் திரு.வில்லவன். ஒவ்வொரு வார்த்தைகளையும் தேர்ந்தெடுத்து எழுதிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

    பதிவை முழுதும் படித்தவுடன் நிலைமையின் விபரீதம் உரைக்கிறது. இப்படி நடக்குமா? இது உண்மையாக இருக்குமா? என்ன ஆதாரம்? என்ற கேள்விகளுக்கெல்லாம் பதில்கள், பதிவின் உள்ளேயே இருக்கிறது. அப்படிஎன்றால் இதனை எப்படி ஒழிப்பது? கடைசி வரிகள் அதற்கும் பதிலாக நெஞ்சை நிமிர்த்தி நிற்கின்றன.

    ஒருவேளை டில்லி முற்றுகை கைகொடுக்கவில்லை என்றால், அடுத்தவழி – ஒட்டுமொத்த சமூக பகிஷ்கரிப்பு…! யாரும் வாங்காத கத்தரிக்காயை யார் விதைத்து நஷ்டமடையப்போகிறார்? அதற்கு முக்கிய ஆயுதம், சமூக விழிப்புணர்வு. இப்பதிவை உலகம் அறிய பரப்புவதே இப்போது ஒவ்வொரு தனிமனிதன் கையிலும் இருக்கும் முக்கிய முதற்பனி. என்னால் முடிந்தவரை எனக்குத்தெரிந்த அனைத்து மக்களுக்கும் இப்பதிவை, ஈமெயில் அனுப்பி விடுகிறேன். இனியென்ன….இதை படித்த நீங்களும் ஆரம்பித்துவிட வேண்டியதுதானே…? மக்கள் புரட்சி என்றால் இப்படித்தான் அமையும்.

    • //போலி கம்யூனிசம், பார்ப்பனீயம், இஸ்லாம், கிருத்துவம், பாஸிசம் போன்ற வார்த்தைகள் இன்றி வினவில் இப்படி ஒரு பதிவா? வினவின் சுய விளம்பரமோக பித்து தெளிந்துவிட்டதா?//நெத்தியடி பாய், ஏன் இந்த கொலை வெறி, தேவையற்ற வார்த்தைகளை எழுதுவதை தவிர்ப்பது உங்களுக்கு மரியாதை தரும். இங்கீதம் பழகினால் நலம்.

  5. அதியமான்,

    நீங்கள் சொல்வது தவறு. பி.டி பருத்தி விளைவித்த ஆந்திர விவசாயிகள் சொல்லவியலாது துயரத்துக்கு ஆளாகியுள்ளனர்.. அதற்கு நிறைய
    ஆதாரங்களும் ஆய்வு முடிவுகளும் உள்ளன.. இங்கே எத்தனை ஆதாரங்கள் / ஆய்வு முடிவுகளைக் கொடுத்தாலும் நீங்கள் ஏற்றுக் கொள்ளப்
    போவதில்லை End of the day, “உன் வயசு.. என் அனுபவம்” போன்ற சிவாஜி டயலாக்குகள் தான் உங்களிடம் தேறும்.. 🙂 எனவே எனது
    மறுமொழி இங்கே வரும் பொதுவான வாசகர்களின் கவனத்துக்காக.

    a) பி.டி எனப்படும் ஒருவகை பேக்டீரியாவின் மரபணுவின் கூறுகளை பாரம்பரிய ரக பருத்தியின் மரபணுவோடு இனைத்து தான் பி.டி பருத்தி
    உருவாக்கப்பட்டுள்ளது.. இதில் உடல் நலனுக்கு கேடானா க்ரை (Cry) ரக ப்ரோட்டீன் உள்ளது. குறிப்பாக மனிதர்கள் உட்கொள்ள தகாத
    க்ரை1ஏசி மற்றும் க்ரை1ஏபி வகை ப்ரோட்டீன் உள்ளது ( இது பிடி கத்தரிக்கும் பொருந்தும்)

    b) இதில் க்ரை1ஏசி உடலின் இயல்பான நோய் எதிர்ப்புத் திறனை முறியடிக்கும் தன்மை கொண்டது என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை (mucosal immunogen)..

    c) பிலிபைன்ஸ் நாட்டில் பி.டி வகை பயிர்களை விளைவித்த தோட்டங்களில் வேலை செய்த விவசாயிகள் சிலர் மரணம் அடைந்துள்ளனர்
    ( ஆதார சுட்டி = http://www.i-sis.org.uk/GMBanLongOverdue.php)

    d) ஆந்திராவில் பி.டி பருத்தி வயல்களில் வேலை செய்த விவசாயிகளுக்கு இன்னதென்று இனம் காணவியலாத பல மர்ம நோய்கள் தாக்கியுள்ளது.
    அவ்வயல்களில் மேய்ந்த ஆடுகள் நூற்றுக்கணக்கில் செத்துப்போய் உள்ளது (ஆதார சுட்டி = http://www.i-sis.org.uk/GMeggplant.php )

    e) கம்யூனிஸ்டுகள் சொல்வதெல்லாம் பொய்யாகத்தான் இருக்கும் எனும் முன்முடிவுகளோடு இருப்பவர்கள் பி.டி கத்தரியைப் பற்றி க்ரீன்பீஸ்
    இயக்கத்தினர் சுயேச்சையான விஞ்ஞானிகளைக் கொண்டு நடத்திய ஆய்வு முடிவுகளை வாசித்துப் பார்க்கலாம். குறிப்பாக ப்ரென்ச் விஞ்ஞானியான
    செராலினி நடத்திய ஆய்வு முடிவுகள் பி.டி கத்தரி மனிதர்கள் உட்கொள்ளத் தகாதது என்று தெளிவாகச் சொல்கிறது

    f) விஞ்ஞானிகள் பிடி கத்தரிக்காயை சோதனைச் சாலை எலிகளின் மேல் பரிசோதித்த போது பல அதிர்ச்சிகரமான உண்மைகள் புலப்பட்டது.
    சாதாரணமாக எலியின் குணம் என்னவென்றால் கண்ணில் கண்டதையெல்லாம் அது கடித்துக் கொண்டேயிருக்கும் – ஏனெனில் அதன் பல்
    நாளொன்றுக்கு இரண்டு மில்லி மீட்டர் வளரும் தன்மை கொண்டது.. எலி எதையும் கடிக்காமல் இருந்தால் பல் வேகமாக வளர்ந்து எதையும்
    சாப்பிடாமல் இறந்து போய் விடும். எனவே அது எப்போதும் எதையாவது கொறித்துக் கொண்டேயிருக்கும். பரிசோதனைக்காக எலி இருந்த கூண்டுக்குள் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பி.டி கத்தரியை வைத்தபோது விஞ்ஞானிகளே ஆச்சரியப்படும் படிக்கு எலிகள் அந்த கத்தரியில் வாயே
    வைக்கவில்லை. பின்னர் வேறு வகைகளில் அந்தக் கத்தரியை எலி உட்கொள்ளுமாறு செய்யப்பட்டிருக்கிறது. அப்படி பிடி கத்தரிக்காயை
    உட்கொண்ட எலிகள் கடும்வயிற்றுப்போக்குக்கு உள்ளாகியிருக்கிறது; வெறிகொண்டதைப் போல நிறைய தண்ணீரை குடித்துக்
    கொண்டேயிருந்திருக்கிறது. மேலும் அதன் கல்லீரல் சாதாரண எலிகளைவிட மிகவும் சுருங்கிப் போய் இருக்கிறது; அவற்றின் ரத்த உறைவுத்
    தன்மையும் கூட குறைந்திருக்கிறது (prothrombin), மேலும் ரத்தத்தில் ஆல்கலின் பாஸ்பேட்டின் அளவு அச்சமூட்டும் விதமாக உயர்ந்து
    கொண்டேயிருந்திருக்கிறது. இறுதியில் அவை புற்று நோய் கண்டு செத்தே போயிருக்கிறது.

    மேலும் பி.டி ரக பயிர்கள் தாம் வளரும் வயல்களை மட்டுமல்லாது தனது சுற்றுப்புற வயல்களில் வளரும் பாரம்பரிய பயிர்களைக் கூட ஊடுருவி
    தாக்குதல் செய்யும் ஆக்கிரமிப்புத் தன்மை கொண்ட ஒன்றாகும். இதன் மகரந்தங்கள் மிக எளிதில் பட்டாம்பூச்சிகள், தேனீக்களால் கடத்தப்பட்டு
    பக்கத்து வயல்களில் உள்ள நாட்டு ரக பயிர்களையும் ஊடுருவி அதன் இயல்பான தன்மையை மாற்றியமைத்து விடும் ஆற்றல் கொண்டது. பி.டி
    விதைகளுக்கு காப்புரிமை பெறப்பட்டுள்ளதால், அவ்விதைகளை மறுவிதைப்பு செய்யமுடியாதபடிக்கு அதன் மரபணுவில் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது – அதாவது விளைவித்த பி.டி கத்தரிக்காயிலிருந்து மீண்டும் விதையெடுத்து விதைக்க முடியாது – இதனை டெர்மினேட்டர் தொழில்நுட்பம்
    என்கிறார்கள்.

    g) பி.டி பருத்தி விளைவித்த விவசாயிகளுக்கு நாடெங்கிலும் வித விதமான தொல்லைகள் –

    1) பி.டி ரக பயிர்கள் சாதாரண நாட்டு ரகங்களைக் காட்டிலும் தண்ணீரை அதிகம் உறிஞ்சக் கூடியது.. எனவே ஆந்திரத்தில் ஒரே வயலில்
    ஒன்றுக்கு மேல் கிணரு வெட்டியிருக்கிறார்கள் ( கடன் வாங்கி )

    2) பிடி ரக பயிர்கள் சாதாரண நாட்டு ரகங்களைக் காட்டிலும் 30% அதிக பூச்சிக் கொல்லி மருந்துகளை உறிஞ்சிக் கொள்ளும் தன்மை
    கொண்டது ( பி.டி பயிர்களுக்கு பூச்சி மருந்து தேவையில்லை என்பது பொய்) அதுவும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் மருந்து தெளிக்க வேண்டும்..
    அதுவும் சாதாரண பூச்சி கொல்லி மருந்து / உரம் போன்றவை செல்லாது – அதிக விலையும் அதிக வீரியமும் கொண்டு மருந்துகளே தெளிக்க
    வேண்டும்.. இதனால் நிலம் பாழ்பட்டது ஒருபுறம் என்றால் கடனில் விழுந்தது மறுபக்கம்

    3) தர்மபுரி, சேலம் பகுதிகளில் பி.டி பருத்திச் செடிகள் மரம் அளவுக்கு ஓங்கி உயர்ந்து வளர்ந்த பின்னும் பருத்திக் காய்கள் காய்க்கவில்லை!
    தர்மபுரி கலெக்டர் ஏக்கர் ஒன்றுக்கு ரூ5000/- இழப்பீட்டை மான்சாண்டோ விடம் இருந்து விவசாயிகளுக்கு வாங்கிக் கொடுத்திருக்கிறார். ஆந்திர
    அரசாங்கம் மான்சாண்டோ மேல் வழக்குத் தொடர்ந்துள்ளது

    4) விதர்பா பகுதிகளில் பி.டி பருத்தி நாட்டு ரக பருத்தியை விட மிகக் குறைவான சாகுபடியையே தந்திருக்கிறது

    5) மொத்தமாக எல்லாமும் சேர்ந்து விதர்பா, ஆந்திர விவசாயிகளை தற்கொலைக்குத் தள்ளி விட்டுள்ளது. நிலமும் செத்துப் போய் விட்டதால் இப்போது அதில் விவசாயமும் பார்க்க முடியாமல் அக் குடும்பங்கள் தவித்துக் கிடக்கிறார்கள்

    h) பி.டி ரக வயல்களில் சாதாரணமாக பயிர்களைத் தாக்கும் பூச்சிகளை விட மிக அதிக வீரியம் கொண்ட புதிய வகை பூச்சிகள் உருவாகி
    உள்ளது ( ம்யூட்டேஷன்) இப்பூச்சிகள், பி.டி வயல்களைக் கடந்து அக்கம்பக்கம் இருக்கும் நாட்டுப் பயிர்களையும் தாக்கியிருக்கிறது ( இதையும்
    மீறித்தான் நாட்டு ரகங்கள் பி.டி ரகங்களைக் காட்டிலும் அதிக விளைச்சலைக் கொடுத்துள்ளது)

    தோழர் வினவு,

    முன்பு நாம் மான்சாண்டோ பற்றி கொண்டு வந்திருந்த
    ஒரு சிறு வெளியீட்டை இப்போது இணையத்தில்
    வெளியிடுவது பொருத்தமாக இருக்கும் எனக்
    கருதுகிறேன்.. வாய்ப்பிருந்தால் அதனை பதிவு
    செய்யவும்.

    தோழமையுடன்,

    கார்க்கி

    • உங்கள் ஆலோசனைக்கும், விரிவான விளக்கத்திற்கு நன்றி தோழர் கார்க்கி. கூடிய விரைவில் மான்சாண்டோ வெளியீடை வெளியிட முயல்கிறோம்.

    • தோழர் கார்கி,
      ஆந்திராவில் மட்டும் ஏன் அப்படி ? சில நேரங்களில் தர்மபுரியில் ஆனது போல failure ஆகிறதுதான். நீங்க அளித்த விவரங்கள் அனைத்துமே பொய் என்று சொல்லவில்லை. ஆனால் இந்தியாவில பல பல பகுதிகளில் பி.டி காட்டன் இன்று வெற்றிகரமாக பயிரடப்படுகிறது. நான் அளித்த சுட்டி (2009 ஆய்வு) அய் முழுமையாக பார்க்கவும். பி.டி.காட்டன் கடும் எதிர்விளைவுகளை உண்மையில் ஏற்படுத்தியிருந்தால், இன்னேறம் அதை எதிர்த்து நாடு தழுவிய பெரும் போராட்டம் உருவாகியிருக்கும். ஆனால் நாளுக்கு நாள் பி.டி காட்டன் பயிரட்டப்ப்டும் அளவு அதிகமாகிறது. நான் அளித்த சுட்டியின் conclusions படித்து பாருங்க.

      விவசாயிகள் தற்கொலைகளுக்கு பல்வேறு காரணிகள் ; முக்கியமாக local factors and debt trap, kanthu vatti, etc. பி.டி காட்டன் மற்றும் தாரளமயமாக்கள் தான் காரணம் என்றால், இந்தியா முழுவதும், அனைத்து பகுதிகளிலும், அனைத்து வகை விlவசாயிகளும் ஒரே அளவில் பாதிப்படைந்து, தற்கொலை விகிதமும் ஒரே அளவில் இருந்திருக்கும். ஆனால் அப்படி இல்லை.

      6 ஆண்டுகளுக்கு முன் இருந்து கடும் எதிர்ப்பு, இன்று பி.டி காட்டனுக்கு இல்லை. higher yields and lower costs resulting in more profits for BT cotton farmers : இதுதான் நடக்கிறது. அந்த சுட்டி மிக விரிவானது. ஆதாரபூர்வமான் ஆய்வு. உங்க சுட்டிகளையும் பார்க்கிறேன். மேலும்…

      • மேற்படி ‘ம.மா.விதை வகையறாக்கள்’ அமோக மகசூலே கொடுத்துவிட்டு போகட்டுமே. ஆனால், அவை மீண்டும் விதைக்க முடியாத ‘மலட்டு தாவரங்கள்’ என்றால் அது இயற்கைக்கு எதிரானது. அப்பட்டமான விதை விற்பனைக்கான மோனோபோலி சூழ்ச்சியே இது. இந்த ஒரு காரணமே போதும், இதை ஏற்காமல் இருக்க & எதிர்க்க.

        “உங்களுக்கு பிறக்கும் குழந்தை பலசாலியாக இருக்கும் ஆனால் இனப்பெருக்கம் செய்யாது” என்றால், எப்படி இந்த மாதிரியான ‘பி.டி.குழந்தைகளை’ ஏற்றுக்கொள்வது? அப்படியொரு ‘பலசாலி(?) குழந்தை’ அவசியம் இல்லை இந்த சமுதாயத்திற்கு. அப்படியும் ஏற்றால், பிற்காலத்தில் “oh! my dear impotent humans! buy a child for just one million dollars ” என்று ‘ஒரு American monopoly’ ஆன்லைனில் கூவி விற்கும். குழந்தை விலை அதிகமானால், வாங்கும் சக்தி போய், அடுத்த தலைமுறை இல்லை என்றாகி மனிதம் செத்துவிடும் அல்லவா? பின்னாளில் மனித சமுதாயத்திற்கு ஏற்படுவது இருக்கட்டும், தற்போது இப்படி ஒரு அவலநிலை ‘கத்தரிக்காய் சமுதாயத்திற்கு’ வர வேண்டுமா?

        திரு.கார்க்கி -யிடம் //நீங்க அளித்த விவரங்கள் அனைத்துமே பொய் என்று சொல்லவில்லை.// என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தவுடன் இதை எதிர்க்காமல் இருப்பதும் ஆதரிப்பதும் மனித சமுதாயத்துக்கு எதிராக செய்யும் பாவச்செயல். மன்னிப்பில்லாத துரோகம். மேலும், ‘தண்டனைக்குறிய குற்றம்’ என்று அரசு அறிவிக்கும் நன்னாளை எதிர்நோக்கியுள்ளேன்.

    • ///Farmers from the Nimad region in Western Madhya Pradesh began complaining of health hazards after Bt cotton was planted. This prompted a three-member team representing a coalition of non-government organisations to carry out a preliminary survey in six villages in Nimad region between October and December 2005.
      ////
      தோழர் கார்கி, இது உங்க சுட்டியிலிருந்து. இந்தி்யாவில், இதர இடங்களில், பல லச்சம் விவசாய தொழிலாளர்கள் 2005க்கு பின்னும் பி.டி காட்டனை கையாள்கின்றனர். பி.டி காட்டன் தான் மேற்கொண்ட symtomsகளுக்கு காரணம் என்றால், இந்தியாவெங்கிலும் அதே போன்ற symtoms அனைத்து விவசாயத்தொழிலாளர்களுக்கும் ஏற்பட்டுக்கொண்டே இருந்திருக்கனும். ஆனால் இல்லை. ஏன். நம்து சேலம் மாவட்டத்தில், இன்று பி.டி காட்டன் சக்கை போடு போடுகிறது. ஒரு பிரச்சனையும் இல்லை. எப்படி ? 2005இல் நடந்தவைகளுக்கு வேறு இதர local factors கள் காரணிகளாக இருந்திருக்கலாம். மேலும்..

  6. இது முக்கியமான பிரச்சினை, உயிர் பிரச்சினை , வாழ்க்கை பிரச்சினை. பல்லாயிரம் வருடங்களாக இங்கே சிறப்பான முறையிலே வெள்ளாமை செய்து மக்கள் சமுதாயம் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. புதிய விசயங்கள் வந்தால், அதை சோதனை முறையிலே ஒரு ஏக்கர் அல்லது 5 ஏக்கர் அளவிலே தொடர்ந்து ஒரு ஐந்தாண்டுகள் பயிர் செய்து பார்த்து அதிலே உள்ள நல்லது கெட்டது என்ன என்று பாருங்கள். நம்ம விவசாயிகளிடம் பரீட்சார்த்த முறையில் மட்டும் செய்து பார்க்க கொடுங்கள். அவர்களே நல்லது கெட்டது என்ன என்று சொல்வார்கள். மறுபடியும் விளையக் கூடிய விதைகளையோ கன்றுகளையோ தர இயலாத தாவரம் நமக்கு வேண்டாம். மயில்சாமி அண்ணா துறை அவர்கள் சிறந்த அறிவியலாளர் தான். ஆனால் அவரது துறை வேளாண்மை அல்லது உயிரி தொழில் நுட்பம் சம்பந்தப் பட்டதா? இப்படி விளம்பரத்துக்கு ஐசுவரியா அம்மையார் போன்றவர்களை கொண்டு வந்து நிறுத்தி வாழ்வாதாரத்தை சிதைத்து விட்டு செல்லாதீர்கள்.

  7. அதியமான்,

    எனது முந்தைய கமெண்ட்டில் இருக்கும் உடல்நலக் கேடுகள் பற்றி சொல்லியுள்ளதற்கு உங்களிடம் பதில் இல்லை.. பி.டி பருத்தியால் நல்ல
    லாபம் என்கிற ஒரு அம்சம் தான் உங்கள் வாதம். சரி அதையும் பார்ப்போம் –

    முதலில் நீங்கள் ஆதாரமாய் சுட்டிக் காட்டும் APAARI ( Asia Pacific Association of Agricultural Research Institutions) மற்றும் இது போல்
    இன்னும் ஒரு டஜன் “தன்னார்வ” “சுயேச்சை” ஆராய்ச்சி நிறுவனங்கள் பி.டி காட்டனின் “லாபம்” பற்றி நிறைய “ஆய்வு” கட்டுரைகள்
    வெளியிட்டிருக்கிறார்கள்.. அவற்றில் சிலவற்றை நான் படித்துமிருக்கிறேன்.. தங்களது தற்போதைய பி.டி.எஃப் கோப்பையும் படித்தேன்.. ஒன்றைப்
    புரிந்து கொள்ளுங்கள் – இவர்களெல்லாம் ஆசிய வளர்ச்சி வங்கியோடு இணைந்து இப்பிராந்தியத்தில் விவசாயத்தை நவீன பாணியில்
    முன்னேற்றப்போவதாக அறிவித்துக் கொண்டு செயல்பட்டு வருகிறார்கள்.. ஆசிய வளர்ச்சி வங்கி, உலக வங்கி போன்றவற்றின் மறைமுக
    நோக்கம் என்ன, அவை எப்படி வளர்முக நாடுகளின் மேல் பன்னாட்டுக் கம்பெனிகளின் ஆதிக்கத்தையும் அதன் மூலம் அமெரிக்காவின்
    ஆதிக்கத்தையும் செலுத்த வகை செய்கிறது என்பதை Confessions of an economic hitman என்ற புத்தகத்தில் ஜான் பெர்கின்ஸ் விரிவாக விளக்கி
    உள்ளார்..

    அது மிக விரிவாக விளக்கப்பட வேண்டியது – தற்போதைக்கு சுருக்கமாகச் சொல்கிறேன், தற்போது உரக் கம்பெனிகளாகவும், மரபீணி மாற்ற
    விதைகளை சந்தைப்படுத்தும் கம்பெனிகளாகவும் இருக்கும் மான்சாண்டோ , கார்கில் போன்ற பன்னாட்டுக் கம்பெனிகள் இரண்டாம் உலகப் போரின்
    போது ராணுவத்துக்கு வெடி மருந்துகள் சப்ளை செய்யும் கம்பெனிகளாகவும், பின்னர் ராணுவத்துக்கு கெமிக்கல் சப்ளை செய்யும் கம்பெனிகளாகவும்
    தான் இருந்துள்ளன. வியட்நாமில் வீசப்பட்ட ஏஜெண்ட் ஆரென்ச் போன்ற கெமிக்கலை விற்ற கம்பெனியும் கூட ( பேரு மறந்துட்டேன்) இப்போது ஏதோ ஒரு உரக்கம்பெனியுடன் தான் இணைந்துள்ளது. பல்வேறு இணைப்பு & கைய்யகப்படுத்துதல்கள் மூலம் அந்தக் கம்பெனிகள்
    இணைந்தும் / பிரிந்தும் தற்போதைய வடிவத்தில் உரம் / பூச்சிக்கொல்லி / விதைகள் விற்கும் கம்பெனிகளாய் இருக்கின்றன. போர்க்காலத்தில்
    உபரியாகப் போய் விட்ட ரசாயணங்களை பிற்காலத்தில் உரங்களாக சந்தைப்படுத்தி வளரும் நாடுகளின் வயல்களில் கொட்ட போடப்பட்ட
    திட்டம் தான் “பசுமைப் புரட்சி.”

    பசுமைப் புரட்சியின் ரசாயண உரங்களால் தாக்குண்டு நல்ல விளை நிலங்களெல்லாம் களர் நிலங்களாகப் போய் விவசாயம் நொடிந்துள்ள இன்றைய
    நிலையில் இவர்கள் உலகமயமாக்கல் சூழலில் மரபணுப் புரட்சி என்று புதிய வீரிய ரக பூச்சிக் கொல்லிகளோடும், டெர்மினேட்டர் விதைகளோடும்
    வந்திறங்கியுள்ளனர். இவர்கள் நோக்கம் என்னவென்ற கோணத்தில் நமது விவாதம் திரும்பினால் மீண்டும் ஒரு லாவனி அக்கப்போராகிவிடும்
    சாத்தியம் உள்ளதால், அதை இப்போதைக்கு தவிர்த்து விட்டு “பி.டி பருத்தியால் விளைந்த லாபம்” என்ன வென்பதை மட்டும் பார்க்கலாம்.

    முதலில் பி.டி காட்டன் விளைவித்ததால் தான் இந்தியாவின் பருத்தி ஏற்றுமதி தாறுமாறாக எகிறி விட்டது என்று APAARI சொல்லும் பொய்யை
    உடைத்து விடுவோம் 🙂 இந்த சுட்டியில் அந்தப் பொய்யை தவிடு பொடியாக்குகிறார் ஒருவர் முதலில் அதைப் பார்த்து விடுங்கள் – http://www.munlochygmvigil.org.uk/Indian_Cotton_Production.pdf

    1) மத்திய அரசாங்கமே பி.டி பருத்தி ஆந்திரா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் படு தோல்வி கண்டிருக்கிறது என்று ஒப்புக்கொண்டுள்ளது
    இது பற்றிய செய்தி நோ9 நவம்பர் 27 தேதியிட்ட இந்து பேப்பரில் வந்துள்ளது

    2) அதே மாதம் மத்திய பிரதேசத்தில் பி.டி பருத்தியின் தோல்வி குறித்து விசாரிக்குமாறு மத்திய பிரதேச மாநில கவர்னர் அரசைக் கேட்டுக்
    கொண்டிருக்கிறார்.. மேலும் மத்திய பிரதேசத்திலும் பி.டி பருத்தி வயல்களில் மேய்ந்த மாடுகள் மர்மமான முறையில் செத்துப் போயிருக்கிறது..
    இது பற்றிய செய்தி சுட்டிகள் ( http://www.financialexpress.com/fe_full_story.php?content_id=109530

    http://news.webindia123.com/news/showdetails.asp?id=170692&cat=Health

    3) மஹிகோ ஜனவரி 28, 2007ம் ஆண்டு பி.டி பருத்தியை விதைத்து நட்டமடைந்தவர்களுக்கு ஓமலூரில் வைத்து நட்ட ஈடு கொடுத்திருக்கிறது – http://www.bharattextile.com/newsitems/2002867

    4) விழுப்புரம், கூடலூர், சேலம் பகுதியைச் சேர்ந்த 12000 விவசாயிகள் பி.டி காட்டன் விதைத்ததால் கடும் நட்டமடைந்துள்ளனர்.. அவர்கள்
    ஏக்கருக்கு 40,000 நட்டமடைந்துள்ளதாக இந்தாண்டு ஜனவரி மாதம் செய்திகள் வெளியானது. பாரம்பரிய ரகம் ஏக்கருக்கு ஒரு லட்சம் வரை
    லாபம் தந்ததாகவும் பி.டி ரகமோ முப்பதாயிரத்தையே தாண்டவில்லை என்றும் அதே செய்திகளில் விவசாயிகள் தெரிவித்திருந்தனர்.

    5) கருநாடகத்தில் ராய்ச்சூர், தார்வாட், ஹவேரி ஆகிய மூன்று மாவட்டங்களில் க்ரீன்பீஸ் இயக்கத்தினர் மேற்கொண்ட ஆய்வுகளின் படி
    பி.டி பருத்தி விதைத்த விவசாயிகள் கடும் நட்டத்துக்கு உள்ளாகியுள்ளனர்..

    6) மேலும் பி.சாய்நாத் பி.டி காட்டன் விவசாயிகளை எத்தனை கடுமையாக பாதித்துள்ளனது என்பதைப்பற்றி நிறைய எழுதியுள்ளார் அதில் இரண்டு
    சுட்டிகளை இணைத்துள்ளேன் ( http://vidarbhacrisis.blogspot.com/2009/08/vidarbha-risking-another-bt-cotton.html

    http://www.indiatogether.org/2006/nov/psa-bumper.htm )

    மேலுள்ளதெல்லம் சில துளிகள் தான்.. இயற்கை விவசாயக் குழுக்கள் மரபணு மாற்ற பயிர்களின் வெற்றிச் செய்திகளை நேரடியாக சென்று
    ஆராய்ந்த போது மான்சாண்டோ தனது விற்பனையை அதிகரிக்க செய்துள்ள தகிடு தத்தங்கள் ஒவ்வொன்றாய் வெளிப்பட ஆரம்பித்துள்ளது.

    உதாரணங்கள் சில –

    1) ஜபூவா பகுதியில் சாரங்கி எனும் கிராமத்தைச் சேர்ந்த ரவீந்தர் நாராயண் பட்டிதார் எனும் விவசாயினுடைய வயல்களை ஒரு நாள் போட்டோ
    பிடித்துள்ளனர் மான்சாண்டோ கம்பெனியின் பிரதிநிதிகள். சில நாட்கள் கழித்து அம்மாநிலத்தில் அவ்விவசாயியுடைய போட்டோ / அவர் வயலின்
    போட்டோ வுடன் “ஒரு ஏக்கருக்கு 20 குவிண்டால் மகசூல் தரும் பிடி காட்டன்” என்று போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது… விசாரித்ததில் அவருக்கு
    சொந்தமான மொத்தம் ஐந்து ஏக்கருக்கும் சேர்ந்தே 20 குவிண்டால் தான் மகசூல் தந்துள்ளது பி.டி காட்டன். அவருக்கே தெரியாமல் அவர்
    புகைப்படத்தை திருட்டுத்தனமாக பயன்படுத்தியுள்ளார்கள்!

    2) தமிழ்நாட்டில் சேலம் மாவட்டத்தின் வெள்ளையூர் கிராமத்தைச் சேர்ந்த செல்லப்ப கவுண்டரின் மகனான பழனிச்சாமி என்பவர் பி.டி பருத்தி
    விளைவித்ததால் நான் வாங்கிய ட்ராக்டரைப் பாருங்கள் என்று பெருமையாக போஸ் கொடுக்கும் ஒரு போஸ்டர் அப்பகுதியில் பரவலாக
    காணப்பட்டது. விசாரித்ததில், மான்சாண்டோ வின் விற்பனை பிரதிநிதிகள் பழனிச்சாமியை அணுகி, ஏதோ போட்டியென்றும் தேர்ந்தெடுக்கப்படும் அதிர்ஷ்டசாலிகள் மும்பைக்கு சுற்றுலா என்றும் சொல்லி அவர் கடனுக்கு வாங்கிய டிராக்டரின் முன் நிற்கச் சொல்லி புகைப்படம்
    எடுத்திருக்கிறார்கள்.. அதை திருட்டுத்தனமாக போஸ்ட்டரில் பயன்படுத்தியும் இருக்கிறார்கள்.. பழனிச்சாமியோ பி.டி. காட்டனின் ‘லாபத்தால்’
    தன்னால் ஒரு டிராக்டர் டயரைக் கூட வாங்க முடியாது என்று புலம்பியிருக்கிறார்.

    இது போல் கிண்டக் கிண்ட நூற்றுக்கணக்கான மான்சாண்டோ ப்ராடுகள் வெளியாகிறது.. நல்ல சரக்குன்னா ஏன் இத்தனை ஏமாத்து வேலை?

    அடுத்து பி.டி காட்டனை எதிர்த்து போராட்டமே இல்லை என்று அதியமான் சொல்வது சரியல்ல.. நூற்றுக்கணக்கான போராட்டங்கள் நடந்து
    வருகிறது.. கொஞ்சம் கூகிளை தேடித்தான் பார்க்கலாமே அதியமான்?

  8. //எனது முந்தைய கமெண்ட்டில் இருக்கும் உடல்நலக் கேடுகள் பற்றி சொல்லியுள்ளதற்கு உங்களிடம் பதில் இல்லை.. ///

    இல்லை. சொல்லியிருந்தேன். அவை ஏன் அனைத்து (பி.டி.காட்டன் பயிடப்படும்) இடங்களிலும், அனைத்து காலங்களிலும் உருவாகவில்லை ?

    அதைதான் : /////K.R.அதியமான்
    says: December 3, 2009 at 12:36 pm
    ///Farmers from the Nimad region in Western Madhya Pradesh began complaining of health hazards after Bt cotton was planted. This prompted a three-member team representing a coalition of non-government organisations to carry out a preliminary survey in six villages in Nimad region between October and December 2005.
    ////
    தோழர் கார்கி, இது உங்க சுட்டியிலிருந்து. இந்தி்யாவில், இதர இடங்களில், பல லச்சம் விவசாய தொழிலாளர்கள் 2005க்கு பின்னும் பி.டி காட்டனை கையாள்கின்றனர். பி.டி காட்டன் தான் மேற்கொண்ட symtomsகளுக்கு காரணம் என்றால், இந்தியாவெங்கிலும் அதே போன்ற symtoms அனைத்து விவசாயத்தொழிலாளர்களுக்கும் ஏற்பட்டுக்கொண்டே இருந்திருக்கனும். ஆனால் இல்லை. ஏன். நம்து சேலம் மாவட்டத்தில், இன்று பி.டி காட்டன் சக்கை போடு போடுகிறது. ஒரு பிரச்சனையும் இல்லை. எப்படி ? 2005இல் நடந்தவைகளுக்கு வேறு இதர local factors கள் காரணிகளாக இருந்திருக்கலாம். மேலும்..
    ////

    சரி, பி.டி காட்டன் பயிருடும் பெரும்பான்மையான விவசாயிகள் மடையர்கள் அல்ல. லாபத்திற்க்காகதான் அனைத்து விவசாயிகளும், அனைத்து பயிர்களையும் வளர்க்கின்றனர். பிறகு என்ன நஸ்டத்திற்க்காகவா அல்லது தர்மத்திற்க்காகவா ? மிக விரிவால புள்ளிவிவரங்கள் மற்றும் அலசல்கள் கொண்ட சுட்டி அது. மான்ஸட்டோ செய்யும் தந்திரங்கள், ஃப்ராடுகள் மட்டும் சுட்டுகிறீர்கள். இன்று மான்ஸட்டோவிர்க்க்கு போட்டியாக பல இதர நிறுவனங்கள் களத்தில் வெற்றிகரமாக நுழைந்துள்ளன. விவசாயிகள் தொடர்கிறார்கள். அல்லது பி.டி.காட்டன் கூடாது என்றால் நாடு தழுவிய, போராட்டம் நடத்துங்கள். யார் வேண்டாம் என்கிறார்கள் ?

    • //சரி, பி.டி காட்டன் பயிருடும் பெரும்பான்மையான விவசாயிகள் மடையர்கள் அல்ல. லாபத்திற்க்காகதான் அனைத்து விவசாயிகளும், அனைத்து பயிர்களையும் வளர்க்கின்றனர். பிறகு என்ன நஸ்டத்திற்க்காகவா அல்லது தர்மத்திற்க்காகவா ? //

      விவசாயம் நஸ்டமான தொழிலா அல்லது லாபமான தொழிலா?

      விவசாயம இந்தியாவைப் பொறுத்தவரை படு நஸ்டமான ஒரு தொழில். இது இப்படியிருக்க இந்தியாவின் 60% மக்கள் விவசாயத்தில் ஈடுபடுகிறார்கள் எனில், நஸ்டம் ஏற்படும் தொழிலில் ஈடுபடுகிறார்கள் எனில் அது அவர்களின் மடத்தனமா அல்லது வேறு வழியில்லாத வாழ்க்கை அவலமா?

      அதியமான் இதனை மடத்தனம் என்று சுலபமாக சொல்லிவிட்டு சென்று விடுவார். அதற்கு மேல் ஏகாதிபத்திய மறுகாலனிய பொருளாதார தாசருக்கு அதில் ஆய்வு செய்ய எதுவுமில்லை.

    • இவரை என்னவென்று சொல்லுவது, போராட்டம் நடத்துங்கள் என்று ஓதுங்கி கொள்கிறார் இத்தனை விவரம் சொல்லியும்.

  9. //விவசாயிகள் தற்கொலைகளுக்கு பல்வேறு காரணிகள்; முக்கியமாக local factors and debt trap, kanthu vatti etc., //

    என்று சொல்லியிருக்கிறீர்கள் அல்லவா? அதில்
    debt trap & kanthu vatti இது இரண்டிலும் விவசாயிகள் போய் மாட்டிக் கொள்வதற்கு உள்ள பல காரணிகளில் ஒன்று தான் மரபீணி மாற்ற விதைகள்

  10. ////விவசாயிகள் தற்கொலைகளுக்கு பல்வேறு காரணிகள்; முக்கியமாக local factors and debt trap, kanthu vatti etc., //

    என்று சொல்லியிருக்கிறீர்கள் அல்லவா? அதில்
    debt trap & kanthu vatti இது இரண்டிலும் விவசாயிகள் போய் மாட்டிக் கொள்வதற்கு உள்ள பல காரணிகளில் ஒன்று தான் மரபீணி மாற்ற விதைகள்
    //// அப்படியா ? அப்ப, அது ஏன் பி.டி பயிர்கள் நடப்படும் அனைத்து (repeat : அனைத்து) இடங்களிலும் உருவாகவில்லை. ஏன் ஒரு சில இடங்களில் மட்டும் விவசாயிகள் இது போன்ற சிக்கல்களில் மாட்டிக்கொண்டு தற்கொலைக்கு தள்ளப்படுகிறார்கள். நான் அளித்த சுட்டியில் அளிக்கப்ப்ட்டிருக்கும் தகவல்கள் உங்க logic அய் மறுக்கின்றனவே.

  11. அதியமான்,

    //ன். நம்து சேலம் மாவட்டத்தில், இன்று பி.டி காட்டன் சக்கை போடு போடுகிறது. ஒரு பிரச்சனையும் இல்லை. எப்படி ? 2005இல் நடந்தவைகளுக்கு வேறு இதர local factors கள் காரணிகளாக இருந்திருக்கலாம். மேலும்..//

    இல்லை இது தவறான தகவல். சக்கை போடு போட்ட ஒரு பயிருக்கு ஏன் அரசே முன்நின்று மான்சாண்டோ விடம் இருந்து நட்ட ஈடு பெற்றுத்
    தர வேண்டும்? முடிந்தால் நீங்கள் தர்மபுரி பகுதியில் உங்களுக்கு நன்பர்கள் இருந்தால் விசாரித்துப் பாருங்கள். பருத்திச் செடி மரம் போல
    விடுவிடுவென்று வளர்ந்த பின்னும் காய்க்காமல் ஏமாற்றியது. பருத்திச் செடி மரம் அளவுக்கு எங்காவது வளருமா? ஆனால் பி.டி பருத்தி அப்படித்தான்
    வளர்ந்தது!

    இன்னொரு பாதிப்பு ( இது அனேகமாக ஆந்திரா, தமிழ்நாடு, மகாராட்டிரா என்று எல்லா மாநிலத்திலும் நடந்தது) இந்தப் பயிர் தாறுமாறாக
    தண்ணீர் குடிக்கிறது + பூச்சி மருந்து குடிக்கிறது! மான்சாண்டோ சொல்றா மாதிரி பூச்சி மருந்து செலவு கம்மிங்கறது சரியான டுபாக்கூர்.

    நீங்கள் என்ன சொல்வீர்கள்?

    இது ஏன் எல்லா மாநிலத்திலும் நடக்கவில்லை என்று கேட்பீர்கள்.. இந்த மரபணு மாற்றம் ஒரே விதமான பாதிப்புகளை எல்லா இடங்களிலும்
    கொடுக்கவில்லை. வித விதமான பாதிப்புகள் – ஆனால் எல்லாம் ஆபத்தான் பாதிப்புகள்!

    உதாரணமாக பி.டி கத்தரியை எலிகளின் மேல் பரிசோதித்த போது – முதலில் அவை பி.டி கத்தரியை கடிக்க மறுத்துள்ளன. பின்னர் வேறு
    வகைகளில் எலிகளை ஏமாற்றியே அவற்றை உண்ணக் கொடுத்துள்ளனர் – ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான விளைவுகளே ஏற்பட்டுள்ளது.
    ரத்த சோகை, வயிற்றுப்போக்கு, லிவர் சுருங்கிப் போனது, புற்று நோய் என்று வித விதமான பாதிப்புகள்.
    பி.டி சோயாவால் சீனாவில் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர் – அங்கேயும் எல்லோருக்கும் ஒரே விதமான சிம்ப்டம்ஸ் இல்லை – வித விதமான விம்ப்டம்ஸ்
    தான்! ( இப்போ சீனா பி.டி சோயாவை தடை செய்துள்ளது )

  12. அதியமான்,

    //நான் அளித்த சுட்டியில் அளிக்கப்ப்ட்டிருக்கும் தகவல்கள்//

    நீங்கள் குறிப்பிடும் APAARI ஏ ஒரு பிராடு கும்பல் என்கிறேன் நான். நான் கேட்பது, நீங்கள் ADB, WB, மான்சாண்டோ சார்பான ஆராய்ச்சி
    குழுவினர் விட்ட புருடாக்கள்.. அது போன்ற புருடாக்களையும் கவிதா கிருஷ்ணமூர்த்தி உடைத்திருக்கிறார் ( சுட்டி எனது இரண்டாவது
    கமெண்ட்டில் உள்ளது)

  13. ////நீங்கள் குறிப்பிடும் APAARI ஏ ஒரு பிராடு கும்பல் என்கிறேன்////

    அது உங்க கருத்து. எல்லோரும் அதை கேள்விகேட்க்காமால், ஆராய்ந்து சீர்துக்கிபார்க்காமல், அப்படியே ஏற்றுக்கொள வேண்டும் என்ற கட்டாயமில்லை. சரியா.

    தர்மபுரியில், மரம் அளவிற்க்கு வளர்ந்து, யீல்ட் இல்லாமல் நஸ்டம் உருவாக்கிய விசியத்தை பற்றி படித்திருக்கிரேன். சரி, இன்று அவ்விவசாயிகள் என்ன செய்கிறார்கள் ? பி.டி காட்டனை அறவே விட்டுவிட்டு சாதாரண பருத்தியை மட்டும் தான் பயிருடுகிறார்களா ? தகவலுக்காக கேட்கிறேன்.
    APAARi சுட்டி ஆய்வு ரிப்போர்கள் மிக மிக பரவலான, ஆழமான தகவல்களை அளிக்கின்றன. அவற்றை முழுவதுமாக உள்வாங்கி, தக்க ஆதாரங்களோடும், தர்கத்தோடும் அவை பொய்கள் என்று நிருபிப்பதுதான் முறை. சரி, போகட்டும். நமக்குள் ஏன் வாக்குவாதம். இந்திய விவசாயிகள் யாதார்த்தை உணர்ந்த புத்திசாலிகள் தாம் தொடர்ந்து ஏமாற அடிமடையர்கள் அல்ல. You can fool some of the people for some of the time. But you cannot fools ALL the people ALL the time என்ற பழமொழியை மிகவும் நம்புகிறவன். பி.டி காட்டன் கடும் சிக்கல்களை அளித்து, செலவை அதிகரித்து, லாபத்தை குறைப்பது உண்மை என்றால், விவசாயிகள் அதை விட்டுத் தள்ளுவார்கள். பழையபடி சாதாரண பருத்திக்கு திரும்புவார்கள். they know better and hence let them choose.

  14. அசுரன்,

    எல்லா வகை விவசாயமும் நஸ்டமா என்ன ? எல்லா பகுதிகளிலும், எல்லா காலங்களிலும் நஸ்டமா என்ன ? மிக முக்கியமாக நான் சொன்னது, பி.டி காட்டன் பயிர நஸ்டத்தை மட்டும் அளித்தால், விவசாயிகள் அதை தொடர மடையர்கள் அல்ல என்றேன்.
    விவசாயத்தில் லாபம் இன்று பொதுவாக குறைவுதான். ஆனால் அனைத்து வகையான பயிர்கள், பகுதிகளிலும் இல்லை. காரணிகள் சிக்கலானவை.

  15. //எல்லா வகை விவசாயமும் நஸ்டமா என்ன ? எல்லா பகுதிகளிலும், எல்லா காலங்களிலும் நஸ்டமா என்ன ? மிக முக்கியமாக நான் சொன்னது, பி.டி காட்டன் பயிர நஸ்டத்தை மட்டும் அளித்தால், விவசாயிகள் அதை தொடர மடையர்கள் அல்ல என்றேன்.//

    கரும்பு விவசாயம நஸ்டம், பருத்தி விவசாயம நஸ்டம் இப்படி நஸ்டமில்லாத விவசாயமதான் எது?

    எத்தை தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் பரிதாபகரமாக எல்லாவற்றையும் முயற்சி செய்து வீழ்கிறார்கள் விவசாயிகள். அதில் கொழுக்கிறார்கள் பன்னாட்டு தரகு முதலாளிகள். அதில் ஒன்று பிடி விதைகள்.

    விவசாயம பொதுவாக லாபம் எனில் அதன் வளர்ச்சி எவ்வளவு? ஏன் மிக அதள பாதாளத்தில் உள்ளது?

    இது இன்று நேற்றல்ல ௨௦ வருடங்களுக்கும் மேல் இப்படித்தான் உள்ளது. எனும் போது இத்தனை வருடங்களாக இந்த துறையை விட்டு ஏன் 60% மேலான மக்கள் வெளியேறவில்லை? ஏனேனில், இதை விட்டால் வேறு எந்தவொரு வாழ்க்கைத் தேவைக்கான வேலைவாய்ப்பும் இல்லை.

    அப்படியொன்று(வேலைவாய்ப்பு) உருவாக்கியதாக கதையளந்த LPGயின் நயவஞ்சகம் இங்கும் பல்லிளிக்கிறது.

    ஆக, 15-20 வ்ருடங்களாக நஸ்டம் ஒன்றை மட்டுமே தரும் துறையை விவசாயிகள் கட்டி அழுகிறார்கள் எனில், இதனை வைத்துக் கொண்டு பிடி விதைகளின் பெருமையை நாம் பேச முடியாது என்பதுதான் பொருள்.

    எனவே, வேறு ஏதாவது இருந்தால் முன் வையுங்கள் பேசலாம்

  16. அதியமான்,

    //விவசாயிகள் அதை விட்டுத் தள்ளுவார்கள். பழையபடி சாதாரண பருத்திக்கு திரும்புவார்கள். they know better and hence let them choose.//

    இது சாத்தியமில்லை! அது தான் மான்சாண்டோ வின் டெர்மினேட்டர் விதைகளின் ஸ்பெஷாலிட்டியே.

    மான்சாண்டோ விதை ஒரு வயலில் விதைக்கப்படுகிறது என்றால் – அதிக வீரியமான பூச்சிக் கொல்லிகள் அந்நிலத்தில் கொட்டப்படுகிறது +
    நிலத்தடி நீர் அதிகளவில் உறிஞ்சப்படுகிறது + அந்த விவசாயி நட்டத்தில் வீழ்ந்தான் என்று அர்த்தம்!

    So… நிலம் மீண்டும் மரபு ரகங்களுக்கு மாற சாத்தியக்கூறுகள் குறைவு என்பது ஒரு பக்கம் இருக்கட்டும், தொடர்ந்து மான்சாண்டோ இந்திய
    அரசின் பின்புல ஆதரவோடு விதைச் சந்தையைக் கைப்பற்றுகிறது என்றால் பாரம்பரிய விதைச் சந்தை நிர்மூலமாக்கப்படுகிறது என்று அர்த்தம்.
    கோயமுத்தூரில் இருக்கும் தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழகமே மான்சாண்டோ வின் கிளை நிறுவனம் போல் செயல்படுகிறது.
    மான்சாண்டோ வுக்காக இவர்கள் தான் கள ஆய்வுகள் நடத்தி வருகிறார்கள்.. அரசிடம் போய் நாட்டு ரக பருத்தி விதைகேட்டால் அவர்களே
    மான்சாண்டோ விடம் விவசாயிகளைத் திருப்பி விடுகிறார்கள். வேறு வழியே இல்லை, பிழைத்துக் கிடக்க வேண்டுமானால் எதையாவது செய்தாக
    வேண்டும் என்கிற கட்டாயத்தில் தள்ளப்படும் விவசாயிகள் மான்சாண்டோ விதைகளை விதைக்கிறார்கள்.

    மேலும் மான்சாண்டோ ரக பயிர்களின் மகரந்தங்கள் இயற்கையான கடத்திகளின் மூலம் (தேனீக்கள், பட்டாம்பூச்சிகள் etc) வேகமாகப் பரவுகிறது (பதினைந்து மீட்டர்களுக்கு மேல் மகரந்தம் பரவாது – இதன் கணம் கூடுதல் என்று மான்சாண்டோ சொல்வது பொய்! இதுவும் சுயேச்சையான ஆய்வுகளில் நிறுவப்பட்டிருக்கிறது) தாம் விதைக்கப்பட்ட வயல்களைக் கடந்து அக்கம்பக்கம் இருக்கும் வயல்களின் நாட்டு ரக பயிர்களையும்
    ஊடுருவுகிறது. இதன் மூலம் ஜெனிடிக் பொல்லூஷன் ஏற்படுகிறது – அதாவது நாட்டுரகங்கள் அழிந்து போகிறது / அல்லது அதன் தன்மை
    மாறுகிறது.

    இதை சும்மா வாதத்திற்காக சொல்லப்படுவதல்ல – இதன் தீவிரத்தை நீங்கள் உணர வேண்டும். பி.டி காய்கறியை உண்ணும் மனிதர்களிடம்
    மேற்கொண்ட ஆய்வில், அதன் விஷப்புரதமான க்ரை1ஏசி மற்றும் க்ரை1ஏபி வயிற்றில் சுரக்கும் ஹைட்ரோகுளோரிக் அமிலத்தையும் தாண்டி,
    இயற்கையான மெட்டபாலிக் சர்க்கிளையும் தாண்டி, பெருங்குடல் வரை அப்படியே இருக்கிறது – மேலும் வயிற்றில், குடலில் உள்ள ஜீரணத்துக்கு
    உதவும் நல்ல பேக்டீரியாக்களின் மரபணுவுக்குள் ஊடுருவி அதன் தன்மையையும் மாற்றியமைக்கும் அளவுக்கு ஊடுருவல் தன்மை கொண்டிருக்கிறது.

    இது அமெரிக்கா நிறுவ நினைக்கும் ஒற்றைத் துருவ உலக ஒழுங்கமைப்பை சாத்தியமாக்கும் பொருட்டு வளர்முக நாடுகளின் மேல்
    தினிக்கப்படும் மறுகாலனியாக்க பொருளாதாரக் கொள்கையின் ஒரு சிறு அலகு தான் இது போன்ற மரபணு மாற்ற பயிர்களும் அதன் மூலம்
    ஒரு நாட்டின் விவசாயத்தின் தற்சார்பை அழிப்பதும். நீங்கள் மறுகாலனியாதிக்க பொருளாதாரக் கொள்கை விளைவித்துள்ள / விளைவித்துவரும்
    மொத்த மாறுதல்களோடு சேர்ந்து இதை பருண்மையாகக் காண வேண்டும். ஏதோ புதிய தொழில்நுட்பம் / நல்ல லாபம் என்று இந்த நிகழ்ச்சிப்
    போக்கை மற்றவற்றிலிருந்து கத்தரித்துப் பார்த்தால் சரியான சித்திரம் கிடைக்காது.

    அதியமான், விவசாயம் விவசாயிகளைக் காப்பாற்றிய காலம் மலையேறிவிட்டது – இப்போது விவசாயிகள் தான் விவசாயத்தைக் காப்பாற்றுகிறார்கள்!

    திருப்பூர் போன்ற நகரங்களில் வேலை செய்யும் தஞ்சாவூர் பகுதி விவசாய குடும்பத்து இளைஞர்கள் பருவ மழைக்காலங்களில் ஊருக்கு பத்து நாள் லீவில் போய் விதைத்து விட்டு வந்து, பின் அறுவடையின் போது ஒரு பத்து நாள் லீவில் போய் வருவது சர்வசாதாரணம்.. இடைப்பட்ட நாட்களில்
    குடும்பத்தைச் சேர்ந்த வயதானவர்களே வயலைப் பார்த்துக் கொள்கின்றனர்.

    • திரு.கார்க்கி,
      எனக்கு பயமாக இருக்கிறது. ‘ஈ’ படம் வந்ததிலிருந்து, ‘bio-war’ பற்றி அறிந்து, அதுபற்றி படித்து, பின் அதையே நினைத்து, எந்த மாத்திரை மருந்தும் வாங்கும் பொழுதும் பயம். நிறைய தேடிவிட்டு, படித்து, யோசித்து பின்னர் அப்படியே வாங்கியவற்றை விழுங்கும்போதும் பயம்.

      இப்போது, இவற்றை படித்தபின் இதனை, நம்மீது நடத்தப்படும் ‘agri-war’ எனக்கொள்ளலாமா? இனிமேல், உணவு சாப்பிடும் முன்பும் பயத்தால் ரொம்ப யோசிக்க வைத்து விட்டீர்கள்.

      //விவசாயம் விவசாயிகளைக் காப்பாற்றிய காலம் மலையேறிவிட்டது – இப்போது விவசாயிகள் தான் விவசாயத்தைக் காப்பாற்றுகிறார்கள்!// —>ஆனால், எல்லா பக்கத்திலிருந்தும் விவசாயிகளுக்கு ஆப்பு வைக்கிறார்களே, இவர்களை எப்படி காப்பாற்றுவது?

    • ///தற்போது உரக் கம்பெனிகளாகவும், மரபீணி மாற்ற
      விதைகளை சந்தைப்படுத்தும் கம்பெனிகளாகவும் இருக்கும் மான்சாண்டோ , கார்கில் போன்ற பன்னாட்டுக் கம்பெனிகள் இரண்டாம் உலகப் போரின்
      போது ராணுவத்துக்கு வெடி மருந்துகள் சப்ளை செய்யும் கம்பெனிகளாகவும், பின்னர் ராணுவத்துக்கு கெமிக்கல் சப்ளை செய்யும் கம்பெனிகளாகவும்
      தான் இருந்துள்ளன. வியட்நாமில் வீசப்பட்ட ஏஜெண்ட் ஆரென்ச் போன்ற கெமிக்கலை விற்ற கம்பெனியும் கூட ( பேரு மறந்துட்டேன்) இப்போது ஏதோ ஒரு உரக்கம்பெனியுடன் தான் இணைந்துள்ளது. பல்வேறு இணைப்பு & கைய்யகப்படுத்துதல்கள் மூலம் அந்தக் கம்பெனிகள்
      இணைந்தும் / பிரிந்தும் தற்போதைய வடிவத்தில் உரம் / பூச்சிக்கொல்லி / விதைகள் விற்கும் கம்பெனிகளாய் இருக்கின்றன. போர்க்காலத்தில்
      உபரியாகப் போய் விட்ட ரசாயணங்களை பிற்காலத்தில் உரங்களாக சந்தைப்படுத்தி வளரும் நாடுகளின் வயல்களில் கொட்ட போடப்பட்ட
      திட்டம் தான் “பசுமைப் புரட்சி.”/////

      இந்தியாவில் உபயோகப்படுத்தப்படும் ரசாயன் உரங்கள் என்ன ஸ்பெஸலா என்ன ? அல்லது அமெரிக்கா, அய்ரோப்பா, சீனா, சோவியத் ரஸ்ஸியா,
      கூபா, மற்றும் இதர நாடுகளில் இதே போன்ற ரசாயன உரங்களுக்கு பதிலாக
      ‘இய்ற்க்கை உரங்கள்’ மட்டும்தான் உபயோகப்படுத்தப் படுகின்றனவா ? மண் வளம்,
      உலகெங்கும் பாதிப்படைகிறதுதான். ஆனால் 40 வருடங்களுக்கு முன் நம் அவசர
      தேவைகளுக்கு அன்று சமயமில்லை. ஒரு emergency situation when the nation faced
      Famine and starvation due to acute shortage of food grains. We had to live on US wheat donations and we lived from ship to mouth.

      மாற்று வழி என்ன இருந்தது நமக்கு அன்று ? சொல்லுங்கள் கார்கி.

      இது அசுரனுக்கு நான் எழுதிய பதில் : ///சரி, நான் கேட்ட மிக முக்கிய கேள்வியான, பஞ்சத்தை போக்க மாற்று வழிகள் பற்றி ஒரு பதிலும் இல்லை. பசுமை புரட்சி, அணைகட்டுகள், வாய்கால்கள், இதர ஆக்கங்கள் அன்னிய உதவிகளோடு அல்லது கூட்டு முயற்சிகளோடு, ’ஆதிக்கம்’ என்ற பொய்யான
      மாயை சொல்லுக்கு பதிலானவை) உருவாக்காமல், உங்களை போன்ற ‘செம்புரட்சியாளர்களின்’ மேலான ஆலோசனைகள் படி சும்மா இருந்திருந்தால், விளைவுகள் என்ன ஆயிருக்கும் ? கடும் பஞ்சம் ; பல கோடி மக்கள் மடிந்திருப்பர்.
      நீர் பிறந்திருக்கவே மாட்டீர். (அப்பாடி, நிம்பதி !!)
      ///

      • திரு.அதியமான், திரு.கார்ர்க்கி,

        நீங்கள் இருவருமே இரண்டு துருவங்களில் நின்று கொண்டு ‘என்னுடைய இடம்தான் சரியானது’ என்று ஒருவர் மற்றவரை ‘இங்கே வாருங்கள்’ என்று உங்கள் பக்கம் இழுக்கிறீர்கள். இருவரும் ஒன்றாக வந்து மத்தியில் வாழுங்களேன்.

        மேலை நாட்டில் உள்ள நல்லவற்றை எடுத்து கைக்கொண்டுவிட்டு பின்பற்றுவோம். அவர்கள், நம்மை சோதனை ஓட்டத்திற்கு பயன் படுத்துவதையும், நம்மை நசுக்கி, நம் வாழ்வாதாரத்தை உறிஞ்சிக்கொண்டு, நம்மீது பேட்டன்ட் – மோனோபாலி ஆதிக்கத்தை செலுத்துவதிலிருந்தும் தற்காத்துக்கொள்வோமே? நம்மை நாமே அழித்துக்கொள்ள, தெரிந்தே அவர்களின் (அவர்களின் முந்தைய அறிய கண்டுபிடிப்புக்கான விலை?) சூழ்ச்சிகளில் விழுவானேன்?

        ‘கழுகளை’ எப்படி நமக்கு நல்லவற்றிற்கு பயன் படுத்துவோமோ அப்படி பயன் படுத்திக்கொண்டு அவை நம்மை தாக்க வரும்போது தற்காத்துக்கொள்வோமே? என் கதவி திறந்து வரவேற்க வேண்டும்? நாம் தேர்ந்தெடுத்த அரசு நம்மை பாதுகாக்கத்தானே? ‘அமெரிக்க கழுகை’ வேட்டையாடும் அதிகாரம் யாருக்கு? தனிமனிதனுக்கா? அரசுக்கா?

        • முஹ்ஹமத்,

          நீங்கள் சொல்வது போல் தேவையானதை வைத்துக் கொண்டு பாதிப்பானவற்றை தவிர்த்துக் கொள்ளும் அதிகாரமோ தைரியமோ இந்த
          அரசுக்குக் கிடையாது.2000க்குப் பின் உலகெங்கும் மக்கள் அமெரிக்காவால் கொல்லப்பட்டனர்.. அதை சம்பிரதாயமாக எதிர்க்கும் திராணி கூட இந்த அரசுக்கு இல்லை. நேரடியான அமெரிக்க அடிமைகள்!

          முதலில் இது மக்களின் அரசோ மக்களின் ஆட்சியோ அல்ல. இது மக்களுடைய ஜனநாயகமும் இல்லை – ஒரு புதிய ஜனநாயகம்; மக்களின்
          ஜனநாயகம் மலர வேண்டியது இன்றைய அவசர அவசிய தேவை! இப்போதுள்ள ஜனநாயகம் தரகு முதலாளிகளின் ஜனநாயகம் – உள்நாட்டு
          தேசிய முதலாளிகளின் ஜனநாயகம் கூட அல்ல.. Hold on அதியமான் – உடனே ரசியா, சீனா என்று விசா வாங்காமயே
          கிளம்பிடாதீங்க 🙂 – அடுத்து நீங்கள் இடப்போகும் அந்த மாதிரி ‘எல்லை தாண்டிய பயங்கரவாத பின்னூட்டங்களுக்கு’ நான் பதிலளிக்கவும்
          போவதில்லை 😉

          • ஒரு முஹம்மது எழுதினார் என்பதற்காக எல்லைத் தாண்டிய பயங்கரவாதம் என்ற நக்கலை கார்க்கி ஒரு காவிபோல் பதில் சொல்லியிருக்கக்கூடாது.

        • ///முதலில் இது மக்களின் அரசோ மக்களின் ஆட்சியோ அல்ல. இது மக்களுடைய ஜனநாயகமும் இல்லை – ஒரு புதிய ஜனநாயகம்; மக்களின்
          ஜனநாயகம் மலர வேண்டியது இன்றைய அவசர அவசிய தேவை! இப்போதுள்ள ஜனநாயகம் தரகு முதலாளிகளின் ஜனநாயகம் – உள்நாட்டு
          தேசிய முதலாளிகளின் ஜனநாயகம் கூட அல்ல.. Hold on அதியமான் – உடனே ரசியா, சீனா என்று //// அது உங்களுடை பார்வை மற்றும் pet theory which most of us don’t accept as gospel truth or ‘scientific’ outlook.Those who differ with this ‘theroy’ are neither ignorant nor unscientific. anyway, one is free to belive any theory and interpret events and issues as one deem fit. no issues in this comrade. you are welcome.

  17. //மான்சாண்டோ விதை ஒரு வயலில் விதைக்கப்படுகிறது என்றால் – அதிக வீரியமான பூச்சிக் கொல்லிகள் அந்நிலத்தில் கொட்டப்படுகிறது +
    நிலத்தடி நீர் அதிகளவில் உறிஞ்சப்படுகிறது + அந்த விவசாயி நட்டத்தில் வீழ்ந்தான் என்று அர்த்தம்///

    இல்லை. தொடர் நட்டம் ஏற்படுமானால், அவ்விவசாயி இத்தனை ஆண்டுகளாக தொடர மாட்டார். நிலத்தை சும்மா போட்டுவிட்டு, வேறு வேலைக்கு சென்றிருப்பார். ஏன், மேலும், மேலும் நட்டம், கடனை ஏற்க்க வேண்டும்.
    நான் அளித்த சுட்டி இதை தெளிவாக மறுக்கிறது.

    பி.டி.காட்டன் வேறு, பி.டி.உணவு தான்யங்கள் வேறு. உணவாக அவற்றை கொள்வதில் பிரச்சனை இருக்கலாம். (இன்னும் இறுதி தகவல்கள் வெளியாகவில்லை. ஆய்வுகளும், விவாதங்களும் தொடர்கின்றன). ஆனால் பி.டி காட்டன் தொடர்கிறது. விவசாய்கள் பெருமளவில் அதை விட தயாராக இல்லை. மாட்டிகொள்ளவும் இல்லை. விருப்பட்டு, லாபத்துடன் தான் தொடர்கிறார்கள் என்பது எம் புரிதல். மான்ஸ்ட்டோ வை மட்டும் பிடித்துகொண்டு தொங்காதீர்கள். பல இதர போட்டி நிறுவனங்களும் பி.டி.காட்டன் சந்தையில் நுழைந்து விலையை குறைத்துவிட்டன. காலம் பதில் சொல்லும், எது சரி, யார் சரி என்பதை. பார்க்கலாம்.

    • //ஆனால் பி.டி காட்டன் தொடர்கிறது. விவசாய்கள் பெருமளவில் அதை விட தயாராக இல்லை. மாட்டிகொள்ளவும் இல்லை. விருப்பட்டு, லாபத்துடன் தான் தொடர்கிறார்கள் என்பது எம் புரிதல்//

      இதை தான் தவறான புரிதல் என்று இத்தனை நேraமாக புரிய வைக்க எழுதினேன் 🙁
      பல உதாரனங்களும் கொடுத்துள்ளேன் – Seems to be all waste; atleast with you 🙁

  18. கார்கி,

    /////திருப்பூர் போன்ற நகரங்களில் வேலை செய்யும் தஞ்சாவூர் பகுதி விவசாய குடும்பத்து இளைஞர்கள் பருவ மழைக்காலங்களில் ஊருக்கு பத்து நாள் லீவில் போய் விதைத்து விட்டு வந்து, பின் அறுவடையின் போது ஒரு பத்து நாள் லீவில் போய் வருவது சர்வசாதாரணம்.. இடைப்பட்ட நாட்களில்
    குடும்பத்தைச் சேர்ந்த வயதானவர்களே வயலைப் பார்த்துக் கொள்கின்றனர்.
    //// அறிவேன். பல ஆண்டுகளுக்கு முன்பு, நானும் திருப்பூரில் ஒரு ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை பார்தவன் தான். திருப்பூரில் உருவாயிருக்கும் பிரச்சனைகளை பற்றி சிறிது தெரியும். working conditions, working hours, pollution, infrastructure, housing, transport problems, etc ; ஆனால் something is better than nothing ; 40 ஆண்டுகளுக்கு முன், குறைந்த ஜனதொகையிலும் இன்று இருப்பதை விட கடுமையான வறுமை மற்றும் வேலை இன்மை. சுலபமான தீர்வுகள் யாராலும் சொல்ல முடியாது.

    விவசாயிகள் தற்கொலைகள் மற்றும் இந்திய விவசாயம் பற்றிய எமது பழைய, சுருக்கமான பதிவு இது :

    http://nellikkani.blogspot.com/2008/05/blog-post_21.html விவசாயகள் தற்கொலைக்கு பல காரணிகள்

  19. அதியமான்,

    உங்களுடைய 1321 மறுமொழிக்கு பதில் –

    நீங்கள் நன்றாக கவனிக்க வேண்டும். இங்கே பயன்படுத்தப்பட்டு வரும் DDT பல நாடுகளில் தடைசெய்யப்பட்டது.
    அமெரிக்காவில் 1972ம் பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்திலும் அதன் மேல் தடை விதிக்கப்பட்டுள்ளது உள்ளது.

    உலகளவில் தடைசெய்யப்பட்ட 31 பூச்சிக்கொல்லி / களைக்கொல்லி வகைகள் இந்தியாவில் இன்னமும் பயன்பாட்டில் உள்ளது – இது இந்திய
    அரசே ஒப்புக்கொண்டுள்ள உண்மை. நீங்கள் மறுக்க முடியாது!

    ஐரோப்பிய ஒன்றியம் மரபணு மாற்ற விதைகளுக்கு தடை விதித்திருக்கிறது என்பது ஒருபுறம் இருக்கட்டும் – மரபணு மாற்றம் செய்யப்பட்ட
    மக்காச்சோளத்தை தின்று வளரும் அமெரிக்க மட்டுப்பண்ணை மாட்டிறைச்சிக்கும் கூட தடை விதித்திருக்கிறது. இதை எதிர்த்து அமெரிக்கா
    உலக வர்த்தகக் கழகத்தில் தொடர்ந்த தாவாவில் ஐரோப்பாவிற்கு சாதகமான தீர்ப்பும் ஆகியிருக்கிறது.

    பொதுவாக அங்கே கழித்துக் கட்டப்படும் தொழில்கள் / தொழில்நுட்பங்களைத் தான் நம் மேல் ‘கரிசனத்துடன்’ திணிக்கிறார்கள்.

    அன்றைக்கு வேற வழியே இல்லாமல் தான் ‘பசுமைப் புரட்சியை’ செய்ய வேண்டி வந்தது என்கிறீர்கள்.. அதன் அர்த்தம் வேறு வழியில்லையென்றால்
    விஷத்தை விளைநிலங்களில் கொட்டி அவற்றை கொன்று விட வேண்டியது தானா? விவசாயிகளை அமெரிக்காவுக்கு காவு கொடுத்து
    விட்டு உட்கார்ந்து வேடிக்கை பார்க்க வேண்டியது தானா?

    என்ன சார் பேசறீங்க?

    ஒரு அடிமை அரசு – அதிகாரம் அற்ற அமைச்சர்கள்… நசுக்கப்படும் மக்கள் – இது தான் இன்றைய இந்தியா!

    • கார்கி, ஆம், டி.டி.டி உலகெங்கிலும் பல நாடுகளில் தடை செய்யப்பட்டதுதான். நாமும் தடை செய்ய கூடாது என்று யாரும் சதி செய்யவில்லையே. ஏகாதிபத்தியம் இங்கு எங்கு வந்தது ? இதர பூச்சு கொல்லிகளுக்கும் இதே போல மாற்றுக்களை அமலாக்கினால், அமெரிக்கா நம் மீது படை எடுத்துவிடுமா அல்லது பொருளாதார தடை விதிக்குமா அல்லது மிரட்டுமா ? nonsense. நம் தவறுகளுக்கு நாம் தான் பொறுப்பு. ஏன் இவைகளுக்கு இன்றும் தடை இல்லை ? உண்மையில் எமக்கு தெரியவில்லை. மிக மலிவான விலை என்பதால் தானா ?

      சரி, பூச்சிகொல்லிகள் ஒரு பகுதிதான். உரங்கள் மற்றும் புதிய ரக விதைகள் (அய்.ஆர்.20 போன்றவை) ; இவைதான் பசுமை புரட்சிக்கு மூலம். இவறை பற்றி சொல்லுங்களேன்.

      மிக முக்கியமாக, நான் கேட்ட அடிப்படை கேள்விக்கு என்ன பதில் ? பஞ்சத்தை தவர்க்க, உணவு உற்பத்தியை பெருக்க என்ன மாற்று வழி சொல்வீர்கள் ? சொலுங்களேன்.

      • //மிக முக்கியமாக, நான் கேட்ட அடிப்படை கேள்விக்கு என்ன பதில் ? பஞ்சத்தை தவர்க்க, உணவு உற்பத்தியை பெருக்க என்ன மாற்று வழி சொல்வீர்கள் ? சொலுங்களேன்.//

        திரும்ப திரும்ப இது ஒன்னத்தான் கடசி ஆயுதமா அதியமான் பிரயோகம் செய்கிறார்.

        இதிலிருந்து நாம் ஒன்று புரிந்து கொள்ளலாம். அவர் நம்புகிற, அவர் பிரச்சாரம் செய்கிற ஒரு நிலைப்பாட்டை அவரால் நியாயப்படுத்த இயலவில்லை. அதனால்தான் நீ அங்க இருந்தா என்ன செய்திருப்பாய் என்று கேள்வியை நம் மீது திருப்புகிறார்.

        • அதியமான் நமது தீர்வு குறித்து கேட்கும் முன்பு, அவர் ஆதரிக்கும் தீர்வு ஏற்படுத்தியுள்ள கேடுகளுக்கு அவர் பதில் சொல்ல வேண்டும். அந்த நேர்மையும் அவரிடம் இல்லை.

        • முதல் தலைமுறை,

          ////முதல் தலைமுறை
          says: December 4, 2009 at 10:42 am
          அதியமான் நமது தீர்வு குறித்து கேட்கும் முன்பு, அவர் ஆதரிக்கும் தீர்வு ஏற்படுத்தியுள்ள கேடுகளுக்கு் அவர் பதில் சொல்ல வேண்டும். அந்த நேர்மையும் அவரிடம் இல்லை./////// என்ன நேர்மை இல்லை ? உமக்கு தான் அறிவு இல்லை. பட்டினி கிடந்து சாகலாம் என்கிறீர்கள். கேடுகள் இருக்கின்றனதான். ஆனால் கேடே சிறிதும் இல்லாமல் தீர்வு சொல்லுங்களேன் பார்க்கலாம். செம்புரட்சி தீர்வென்றால், அதற்க்காக பல கோடி மக்களை பலி கொல்ல வேண்டியிருக்கும். அது உம்மை போன்ற அரைகுறைகளின் ‘தீர்வு’ ; பெரிசா நேர்மையை பற்றி பேச வந்துவிட்டார். உம்மைவிட எனக்கு நேர்மை மிக அதிகம் தான்.

        • அதியமான்,

          சில சாத்தியங்களை, மாற்றுகளை கீழே சுட்டிக்
          காட்டிஇருக்கிறேன். ஆனால் அவற்றில் ஒன்றைக் கூடஇப்போது இருக்கும் அரசாங்கத்தால் செய்து விட முடியாது!

  20. //சரி, பூச்சிகொல்லிகள் ஒரு பகுதிதான். உரங்கள் மற்றும் புதிய ரக விதைகள் (அய்.ஆர்.20 போன்றவை) ; இவைதான் பசுமை புரட்சிக்கு மூலம். இவறை பற்றி சொல்லுங்களேன்.

    மிக முக்கியமாக, நான் கேட்ட அடிப்படை கேள்விக்கு என்ன பதில் ? பஞ்சத்தை தவர்க்க, உணவு உற்பத்தியை பெருக்க என்ன மாற்று வழி சொல்வீர்கள் ? சொலுங்களேன்.//

    புதிய ரக விதைகள் பலவற்றை அழித்தது தான் பசுமைப் புரட்சியின் சாதனையே தவிற வேறொன்றும் இல்லை. நெல்லில் மட்டுமே
    லட்சக்கணக்கான ரகங்கள் இருந்தன – அதிலும் பிரபலமாக இருந்த குதிரைவாலி, சம்பா, சீரகச்சம்பா போன்ற ரகங்கள் காணாமல்
    போய்விட்டதோடு, கம்பு, கேழ்வரகு, சாமை, திணை போன்ற தானியங்கள் குறைந்துபோய் இன்று அவை நாட்டு மருந்து கடைகளில் விற்கும்
    அளவிற்கு அருகி விட்டது.

    ஒரு குறிப்பிட்ட ரகம் ஒரு இயற்கையில் உருவாகிறது என்றால் அது அப்பிராந்தியத்தின் சுற்றுச்சூழல், நிலத்தின் தன்மை, நீரின் தன்மை, அண்டி
    வாழும் விலங்குகள் என்று எல்லாவற்றின் சேர்ந்தியக்கத்தை சீர்குலைக்காது இருக்கும் ( Bio-diversity) ஆனால் செயற்கையாக உருவாக்கப்படும்
    தானிய ரகங்களோ இவற்றைக் குலைத்துப் போட்டு விடுகிறது. ஒன்று தெரியுமா… ஒரு காலத்தில் ( எங்க பாட்டனார் சொன்னது ) தண்ணீரில்
    முழுக்க முழுக்க மூழ்கிப் போனாலும் அழிந்து போகாத நெற்பயிர்கள் இருந்திருக்கிறது.. எத்தனை வெள்ளம் வந்தாலும் மழை வெள்ளத்தில்
    மூழ்கினாலும் அது அழுகிப்போகாது – இப்போது பசுமைப் புரட்சி தலையில் கட்டிய ரகங்களோ ஒரு வெள்ளதிலோ திடீர் மழைக்கோ அழிந்து
    போய்விடுகிறது.

    தமது உரங்களையும், பூச்சிக் கொல்லிகளையும் சந்தைப்படுத்த இவற்றை முழுக்க முழுக்க சார்ந்திருக்கும் வகையிலான ரகங்களைத் தான்
    பசுமைப்புரட்சி எனும் பெயரில் நமது தலையில் திணித்தார்கள். தலை ஒட்டிப் பிறக்கும் குழந்தைகள், வயிறு ஒட்டிப் பிறக்கும் குழந்தைகள்,
    இரட்டைத் தலை விலங்குகள் என்று நம் பாட்டன் பூட்டன் காலத்தில் அவர்கள் கேள்வியே பட்டதில்லை.. இன்றோ அது போன்ற செய்திகள்
    வாரத்துக்கு ஒன்று வருகிறது. பசுமைப் புரட்சிக்கு பின் இன்று 500 வகை பூச்சிகள், 270 வகை களைச் செடிகள், 150 வகை தாவர நோய்கள்,
    6 எலி வகைகள் பூச்சிக்கொல்லிகளைத் தாங்கும் திறனைப் பெற்றுள்ளன (mutation). தாய்ப்பாலில் கூட DDT பூச்சிக் கொல்லி கலந்து விட்டது
    அதியமான்…!

    நமது பாரம்பரிய விதைகளைக் கடத்திக் கொண்டு போய் ( எம்.எஸ் ஸ்வாமிநாதன் பற்றி வினவில் வந்த கட்டுரையை வாசிக்க) அதற்கும்
    காப்புரிமை பெற்று வைத்திருக்கிறார்கள் – அரசின் ஆதரவோடு தான்.

    இயற்கை விவசாயம் என்று சொல்லும் போது நீங்கள் இன்னும் பழைய காலம் போல் மாடு வைத்து உழ வேண்டும், காளை மாடு வைத்து
    தண்ணீர் இறைக்க வேண்டும் என்று தட்டையாக புரிந்து கொள்ளாதீர்கள். இந்தியாவில் விவசாயம் இன்னும் முதலாளித்துவமாகவில்லை ( இங்கே
    முதலாளித்துவம் என்று நான் சொல்வது நீங்கள் புரிந்து கொள்ளும் அம்சத்தில் இல்லை ). விவசாயத்தில் முழுமையான முதலாளித்துவ உற்பத்தி
    முறையை புகுத்தியிருக்கலாம். அது ஒரு தொழில் துறை போல் நடத்தப்பட படிப்படியாக விவசாயிகளைப் பயிற்று வித்திருக்கலாம்..
    கூட்டுப் பண்ணைகள் மூலம் உற்பத்தியைப் பெருக்கியிருக்கலாம் ( கூட்டுப்பண்ணை என்றால் நிலம்பறிக்கப்பட வேண்டும் என்று அர்த்தமில்லை).
    விஞ்ஞானப்பூர்வமாக நாடெங்கும் உள்ள விளை நிலங்களை பருண்மையாக ஆய்ந்து பிராந்திய அளவிலான சாகுபடியை நிகழ்த்தியிருக்க முடியும்.
    நியாயமான நிலச்சீர்திருத்தம் செய்திருக்கலாம்.. துண்டு துக்காணி நிலங்கள் கொண்ட விவசாயிகளையும் நிலங்களையும் கூட்டாக இணைத்து
    விவசாயம் செய்ய பயிற்றுவித்திருக்கலாம்.

    நிறைய சாத்தியங்கள் இருக்கிறது – ஆனால் இவற்றில் ஒன்றைக்கூட இந்த அரசால் செய்து விட முடியாது. 1947 அதிகார மாற்றத்திற்கு பின்
    அமைந்த எல்லா அரசுகளுமே ( அதன் அடிப்படை தன்மையிலிருந்து ) ஏகாதிபத்திய சேவைக்காக அமைந்தவை தான். ஒன்று கூட
    விவசாயத்தையோ தேசிய தொழில்கள் தேசிய முதலாளிகளையோ வளர்க்கும் முகமான அரசு அல்ல

    • 1. ///////விவசாயத்தில் முழுமையான முதலாளித்துவ உற்பத்தி
      முறையை புகுத்தியிருக்கலாம். அது ஒரு தொழில் துறை போல் நடத்தப்பட படிப்படியாக விவசாயிகளைப் பயிற்று வித்திருக்கலாம்..
      கூட்டுப் பண்ணைகள் மூலம் உற்பத்தியைப் பெருக்கியிருக்கலாம் ( கூட்டுப்பண்ணை என்றால் நிலம்பறிக்கப்பட வேண்டும் என்று அர்த்தமில்லை).
      விஞ்ஞானப்பூர்வமாக நாடெங்கும் உள்ள விளை நிலங்களை பருண்மையாக ஆய்ந்து பிராந்திய அளவிலான சாகுபடியை நிகழ்த்தியிருக்க முடியும்.
      நியாயமான நிலச்சீர்திருத்தம் செய்திருக்கலாம்.. துண்டு துக்காணி நிலங்கள் கொண்ட விவசாயிகளையும் நிலங்களையும் கூட்டாக இணைத்து
      விவசாயம் செய்ய பயிற்றுவித்திருக்கலாம்.
      நிறைய சாத்தியங்கள் இருக்கிறது – ஆனால் இவற்றில் ஒன்றைக்கூட இந்த அரசால் செய்து விட முடியாது
      //////////

      ஆம், அரசால் செய்ய முடியவில்லை. முக்கிய காரணம் : இடதுசாரிகள் மற்றும் சோசியலிஸ்டுகளின் கடும் எதிர்ப்பு. நில உச்ச வரம்பு சட்டம் என்ற பெயரில், நிலங்கள் சிறு துண்டுகளாக சிதறின. முதலாளித்துவ பாணி கார்பரேட் பண்னைகள் உருவாவதை செயற்கையாக தடுத்து வைத்தனர். அன்னிய முதலீடுகள் மற்றும் பெரும் தனியார் முதலீடுகள், டெக்னாலஜி உள்ளே நுழைய செயற்கையான தடை. அன்று ராஜாஜி இதற்க்காக கரடியாக கத்தினார். அவரை reactionary என்று இகழ்ந்தார்கள். இதன் நிகர விளைவை இன்று காண்கிறோம். ஆனால் பழிப்பது முதலாளித்துவ கொள்கைகளை. கொடுமை.

      கூட்டுறவு முறை விவசாயம் நடைமுறையில் சாத்தியம் இல்லை. சில இடங்களில் ஆரம்ப கட்ட முயற்ச்சிகளிலேயே அது சரிப்படாது என்று புலனானது.

      Slow agricultural growth is a concern for policymakers as some two-thirds of India’s people depend on rural employment for a living. Current agricultural practices are neither economically nor environmentally sustainable and India’s yields for many agricultural commodities are low. Poorly maintained irrigation systems and almost universal lack of good extension services are among the factors responsible. Farmers’ access to markets is hampered by poor roads, rudimentary market infrastructure, and excessive regulation.
      —World Bank: “India Country Overview 2008″[9]
      The low productivity in India is a result of the following factors:
      • According to World Bank’s “India: Priorities for Agriculture and Rural Development”, India’s large agricultural subsidies are hampering productivity-enhancing investment. Overregulation of agriculture has increased costs, price risks and uncertainty. Government intervenes in labor, land, and credit markets. India has inadequate infrastructure and services.[10] World Bank also says that the allocation of water is inefficient, unsustainable and inequitable. The irrigation infrastructure is deteriorating.[10]
      • Illiteracy, general socio-economic backwardness, slow progress in implementing land reforms and inadequate or inefficient finance and marketing services for farm produce.
      • The average size of land holdings is very small (less than 20,000 m²) and is subject to fragmentation, due to land ceiling acts and in some cases, family disputes. Such small holdings are often over-manned, resulting in disguised unemployment and low productivity of labour.
      • Adoption of modern agricultural practices and use of technology is inadequate, hampered by ignorance of such practices, high costs and impracticality in the case of small land holdings.
      • Irrigation facilities are inadequate, as revealed by the fact that only 52.6% of the land was irrigated in 2003–04,[11] which result in farmers still being dependent on rainfall, specifically the Monsoon season. A good monsoon results in a robust growth for the economy as a whole, while a poor monsoon leads to a sluggish growth.[12] Farm credit is regulated by NABARD, which is the statutory apex agent for rural development in the subcontinent. At the same time overpumping made possible by subsidized electric power is leading to an alarming drop in aquifer levels.[13][14][15]

    • //முக்கிய காரணம் : இடதுசாரிகள் மற்றும் சோசியலிஸ்டுகளின் கடும் எதிர்ப்பு. நில உச்ச வரம்பு சட்டம் என்ற பெயரில், நிலங்கள் சிறு துண்டுகளாக சிதறின. முதலாளித்துவ பாணி கார்பரேட் பண்னைகள் உருவாவதை செயற்கையாக தடுத்து வைத்தனர்.//

      இதைத்தான் நான் முதலாளித்துவம் என்று நீங்கள் புரிந்துகொள்ளும் அம்சத்தில் சொல்லவில்லை என்று சொன்னேன். முதலாளித்துவமயம் என்றால்,
      மொத்த நிலமும் ஒரு சில முதலாளிகளின் கைகளில் குவிவதல்ல. நான் குறிப்பிடுவது உற்பத்தி முறை முதலாளித்துவமாவது எனும் அர்த்தத்தில்!
      நிலபிரபுத்துவ உற்பத்தி முறை என்றால் என்ன, முதலாளித்துவ உற்பத்தி முறை என்பது என்ன என்றெல்லாம் இப்போது இங்கே உங்களுக்கு
      விளக்கிக் கொண்டிருப்பது இயலாத காரியம்.

      நீங்கள் எதிர்பார்ப்பது அம்பானி போன்ற முதலாளிகள் மொத்தமாக எல்லா நிலங்களையும் சுருட்டி வைத்துக் கொண்டு லாபத்துக்காக
      விவசாயம் செய்ய வேண்டும் என்பது – அதைத் தான் முதலாளித்துவமயம் என்று புரிந்து வைத்திருக்கிறீர்கள் / அல்லது அதன் நேரெதிர் கோட்டில்
      நின்று சில நவீன தொழில்நுட்பங்கள் (டிராக்டர், மரபணு மாற்றம் etc.,) தான் முதலாளித்துவம் என்று புரிந்துகொண்டிருக்கிறீர்கள். நான் சொல்வது
      உற்பத்தி பாணியே முதலாளித்துவமயமாக்கியிருக்கலாம் என்று – நில உச்சவரம்புச் சட்டம் போன்றவை இன்னும் கடுமையாகி நிலம் இன்னும் சிறிய துண்டுகளகி அவற்றிற்கு நிறைய உரிமைதார்கள் வந்தால் – அப்போதும் அது சாத்தியமே.

      கூட்டுப்பண்ணை என்றவுடன் நிலப்பறிப்பு என்று அர்த்தப்படுத்திக் கொள்ளாதீர்கள் என்று சொன்னேன் – நீங்கள் அந்த அடிப்படையில் நின்று தான்
      அது தோல்வியடையும் என்று ஊகிக்கிறீர்கள்

      இவை எதையும் ஒரே இரவில் ஸ்விட்ச்சு போட்டது போல் நடைமுறைப்படுத்திருக்க வேண்டும் என்று சொல்லவில்லை – படிப்படியாக
      பயிற்றுவிக்கப்பட்டிருக்கலாம்..

      விஷயம் என்னவென்றால் அரசுக்கு நிலபிரபுத்துவ உற்பத்தி முறையை அழிப்பதில் அக்கறையில்லை – இருக்க முடியாது.. ஏனெனில் ஆளும்
      வர்க்கமே அவ்வர்க்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒன்றாக இருக்கும் போது தனது வர்க்கம் நீடித்து நிலைக்க தேவையான பொருளாதார
      அடித்தளத்தை அவர்கள் சிதைக்க மாட்டார்கள்/ முடியாது!

      இன்றைக்கு தரகு முதலாளிகளுக்கு குறைந்த கூலியில் வேலையாட்கள் கிடைப்பதை இன்னமும் கிராமப்புறங்களில் நிலவும் நிலபிரபுத்துவ
      பொருளாதார அடித்தளமே உறுதிப்படுத்துகிறது –

      ஒரு உதாரணம் பாருங்கள் –

      கிருஷ்ணகிரியில் உட்கார்ந்து விவசாயத்தைப் பார்த்தாலே போதும்; அதுவே நிம்மதி என்கிற
      நிலை வந்தால், பெங்களூரில் கட்டிட வேலை செய்ய ஆள் தட்டுப்பாடு வரும் – கட்டிட வேலை செய்ய ஒருநாளைக்கு 500/- சித்தாள் கூலி
      கொடுக்க வேண்டியிருக்கும். அந்த நிலையை மல்லையாவும் நாரயணமூர்த்தியும் விரும்ப மாட்டார்கள்!
      திருப்பூர் பட்டரைகளில் நூறுக்கும் நூத்தம்பதுக்கும் 14 மணிநேரம் காய வேண்டியதில்லை – சந்தோஷமாய் ஊரில் உட்கார்ந்து விவசாயத்தை
      பார்த்துக் கொண்டிருந்திருப்பார்கள்.

      • கார்கி,
        அமெரிக்கா, கனடா, பிரட்டன், ஃப்ரான்ஸ், ஜெர்மனி, ஆய்திரேயிலியா, நியுசிலாந்து,
        நாடுகளில் கடந்த 150 ஆண்டுகளில் விவசாயப் பண்ணைகள் படிப்படியாக
        மாறி, வளர்ந்து, இன்றைய கார்பரேட் பெரும் பண்ணைகளாக உருமாறின. இதைதான்
        முதலாளித்துவ பாணி விவசாயம் என்பர். இதுவே எம் புரிதல். இந்தியாவில் அதே போல், இயல்பாக உருமாற அனுமதிக்கப்படவில்லை. இன்றும் தான். மிக எளிமையான
        விசியம் இது. சிவப்பு கண்ணாடி போட்டுக்கொண்டு, வார்த்தை விளையாட்டு விளையாடுகிறீர்கள். எமக்கு புரிய வைக்க முடியாது என்று வேறு சொல்கிறீர்கள். இல்லை. உங்களுக்குதான் யாதார்த்தை புரிய வைக்க முடியாது. ’அம்பானி’ என்று
        இன்று கதைக்கிறீர். 25 ஆண்டுகள் முன்பு வரை டாடா பிர்லா என்று பெரும் கூச்சல்.
        இவை வெற்று கூச்சல்கள் தாம். முதலில் முதலாளித்துவ உற்பத்தி முறை என்றால்
        என்னவென்று இதர பொருளாதார நூல்களை படித்து அறிந்து கொள்ளுங்கள்.

        கார்பரேட் பண்ணைகளை கொண்ட மேற்கத்தைய நாடுகளிலும் விவசாய மான்யம், விவசாய பொருட்களுக்கான போதிய விலை போன்ற பிரச்சனைகள் உள்ளன. ஆனால்
        மிக சிறிய பண்ணைகள் கூட சுமார் 500 ஏக்கர்கள் அல்லது அதற்க்கு மேலே இருக்கும். மிக குறைந்த மக்கள் தொகையே அதில் ஈடுபட்டுள்ளனர். மிக மிக நவீன எந்திரங்கள்,
        மற்றும் டெட்னாலஜி பயன்படுத்தி, மிக மிக அதிக விளைச்சல் எடுக்கின்றனர். தண்ணீர் மிக மிக குறைந்த இஸ்ரேல் பகுதிகளிலும் தான். இந்தியாவில் இப்படி மாறாமல், சீரழ்ந்து, இன்ற யாரை குற்றம் சொலவது என்று தெரியாமல் சகட்டு மேனிக்கு சொல்லாடலகள். கூட்டுறவு என்றால் நிலத்தை பிடுங்குவது அல்ல. ஆனால் அவை எதுவும் வேலை செய்யவில்லை. ஒற்றுமையாக வேலை செய்யாமல், ஓ.பி அடிக்க முயல்வர். Only a sense of ownership will induce a sense of responsibility. That is the basic fact about
        Private ownership and other forms of ownership.

        o ///// விஷயம் என்னவென்றால் அரசுக்கு நிலபிரபுத்துவ உற்பத்தி முறையை அழிப்பதில் அக்கறையில்லை – இருக்க முடியாது.. ஏனெனில் ஆளும்
        வர்க்கமே அவ்வர்க்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒன்றாக இருக்கும் போது தனது வர்க்கம் நீடித்து நிலைக்க தேவையான பொருளாதார
        அடித்தளத்தை அவர்கள் சிதைக்க மாட்டார்கள்/ முடியாது!//////
        அது உமது அனுமானம். ஆனால் வலதுசாரிகள் எனப்படுவோர், மற்றும் முதலாளி ‘வர்கம்’ மற்றும் சொந்த புத்தி உள்ளவர்கள் அனைவரும், நிலபிரவுத்தவ பாணியை ஆதரிக்கவில்லை. ஜமீந்தார் முறைய ஒழிக்க உதவினர். முதலாளித்துவ பாணியில் (மேல் நாடுகள் போல) விவசாய பண்ணைகளை உருவாக்க முயன்றனர். எதிர்தது கம்யூனிஸ்டுகளும், சோசியலிஸ்டுகளும் தான். ராஜாஜியின் சுதந்திரா கட்சியின் கொள்கைகளை படித்து பாரும். எஸ்கார்ட்ஸ் டிராக்டர் நிறுவனம், ஒரு experimental farm and training instirute in UP in 700 acres ஆரம்பித்து வெற்றிகரமாக நடத்தினார்கள். பலரும் அதில் ஆர்வம் காட்டினார்கள். ஆனல் அதை அழித்தது யார் ? முதலாளித்துவ வர்க ‘சதிகார்கள்’ யாரும் கார்பரேட் பண்ணை முறை உருவாததை எதிர்க்கவில்லை. அது உமது கற்பனை, மற்றும் பொய்யான, மேலோட்டமான பார்வை. மாற்றாக, கம்யுனிஸ்டுகள் எனபடுபவர்கள் தாம் அதை கடுமையாக எதிர்த்தனர். இன்றும் தான்.

        /

        விவசாயத்திற்க்கு அடுத்தது ஜவுளி. அதில் படிப்படியாக முதலாளித்துவ முறை உருவாகிறது. கைத்தறி, சர்கா நூலகளில் ஆரம்பித்து இன்று நவீன நூற்பாலைகள், வீவிங் மற்றும் நிட்டிங் நிறுவனங்கள், மில்கள் என்று உறபத்தி நவினமயமாக்கபட்டுள்ளது. அதனால் தான் 50 வருடங்களுக்கு முன் இருந்ததை விட இன்று ஆடை விலை மிக குறைவு. தட்டுபாடும் இல்லை. ஒரு ஏழை தொழிலாளி, தன் ஒரு நாள் கூலியில் ஒரு சட்டை அல்லது புடவை வாங்க இன்று முடியும். கந்தல் ஆடை 35 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த அளவில் இன்று இல்லை. மிக மிக அரிது. என் அனுபத்தில் சொல்கிறேன். இதே போன்ற மாற்றம் விவசாயத்திலும் உருவாக்கியிருக்கலாம். ஆனால்…

    • //ஆம், அரசால் செய்ய முடியவில்லை. முக்கிய காரணம் : இடதுசாரிகள் மற்றும் சோசியலிஸ்டுகளின் கடும் எதிர்ப்பு. நில உச்ச வரம்பு சட்டம் என்ற பெயரில், நிலங்கள் சிறு துண்டுகளாக சிதறின. முதலாளித்துவ பாணி கார்பரேட் பண்னைகள் உருவாவதை செயற்கையாக தடுத்து வைத்தனர். அன்னிய முதலீடுகள் மற்றும் பெரும் தனியார் முதலீடுகள், டெக்னாலஜி உள்ளே நுழைய செயற்கையான தடை. அன்று ராஜாஜி இதற்க்காக கரடியாக கத்தினார். அவரை reactionary என்று இகழ்ந்தார்கள். இதன் நிகர விளைவை இன்று காண்கிறோம். ஆனால் பழிப்பது முதலாளித்துவ கொள்கைகளை. கொடுமை.//

      முன்னுக்குப் பின் முரனாக பேசி தப்பிக்கும் அதியமான் இங்கும் அதே வித்தையைச் செய்கிறார்.

      முன்பொரு விவாத்ததில் அவர் குறிப்பிடுகின்ற காலத்தில் குத்தகை விவசாயம பெரும்பான்மையாக இருந்த்தை அவர் ஒத்துக் கொண்டுள்ளார்(தற்போது அது குறைந்து விட்டது என்று வழக்கம் போல அவரது அனுபவவாதத்தை முன் வைத்தார்).

      குத்தகை விவசாயம் பிரதானமாக இருக்கும் ஒரு நாட்டில், அந்த வகைப்பட்ட விவசாயத்தின் மூலம் கொழுத்துக் கொண்டிருந்த ஒரு வர்க்கத்தின் கையில் மிகப் பெரும்பான்மை நிலங்கள் துண்டு துண்டாக சிதறிக் கிடந்த ஒரு நாட்டில் மேற்கு நாடுகள் போல தொழில்சாலை பாணி விவசாயம் வந்து விடும் என்று இப்போது கதை விடுகிறார்.

      இதில் உள்ள பொய் #1,
      ஏற்கனவே நிலங்கள் மொத்தமாக இருந்தது போலவும், அதை சோசலிஸ்டுகளின் எதிர்ப்பால் அது சிதறியதாகவும் கதை விடுகிறார்.

      சோசலிஸ்டுகளின் எதிர்ப்புக்கு அன்றும், இன்றும், என்றும் அரசு அடி பணிந்ததில்லை என்பது ஒரு பக்கம் இருக்கட்டும்(இந்த அரசின் தோல்விகளுக்கு எல்லாம் சோசலிசம் காரணம் என்று ஜல்லியடிக்கும் அதியமானின் இன்னும் ஒரு ஜல்லிதான் இதுவும்). குத்தகை விவசாயம் என்பதே நிலங்களை பிரித்து சிதறிய முறையில் நிலமற்ற மற்றும் குறைந்த அளவு நிலமுள்ளவர்களுக்கு கொடுப்பதுதான் ஆகும்.

      இப்படி ஏற்கனவே இங்கு நிலவிய குத்தகை விவசாயம் எனும் சுரண்டலை ஒழிக்கவும், பெரும்பான்மை நிலமற்ற விவசாயிகளுக்கு நிலம் கிடைக்கவும் செய்யப்பட்ட சேம நல அரசு நாடக நடவடிக்கைதான் நில உச்ச வரம்புச் சட்டம். இதுவும் படு தோல்விகரமானது.

      ஆனால், அதியமானுக்கோ ஒட்டுமொத்த முதலாளித்துவ வளர்ச்சியை முடக்கியதே இந்தச் சட்டம்தானாம். இவர் நம்மை பொருளாதாரம் படிக்கச் சொல்லி அறிவுரை கூறுவது நகைப்பிற்கிடமானது,.

      முதலில் அவரது சுயமுரன்பாடுகளை அவர் களைந்து கொண்டு வரட்டும்.

      இரண்டாவது விசயம், நில உச்ச வரம்புச் சட்டம் சரியாக அமுலப்படுத்த்ப்பட்டிருந்தால் அது தொழில்முனைவுக்கான ஆக்க சக்தியை உந்தித்தள்ளும் வகையில் பெரும்பான்மை மக்களுக்கு தனிச் சொத்தை கொடுத்திருக்கும். ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் இலவசமாக உழைப்பை கொடுத்து வந்த பெரும்பான்மை விவசாயிகளின் பாரம்பரிய உரிமை நிலைநாட்டப்பட்டிருக்கும். இதுவே ஒரு சமூகத்தை ஜனநாயகப்படுத்தியிருக்கும், முதலாளித்துவ வளர்ச்சியை தூண்டி விட்டிருக்கும். ஆனால் நில உச்சவரம்பு அவ்வாறு நடைபெறவில்லை.

      விசயம் இப்படியிருக்க காதில் டண் கணக்கில் பூ சுற்றுகிறார் அதியமான்

      • யார் பூச்சுற்றுகிறார்கள் என்று வாசகர்கள் முடிவு செய்யட்டும். மொத்த விவசாய நிலங்களில் எத்தனை சதவீதம் குத்தகைக்கு விடப்படிருந்தன ? அவற்றின் சட்ட பூர்வமான நிலை என்ன ? குத்தகை எடுத்தவர்களுக்கும், விட்டவர்களுக்குமான
        உரிமைகள் என்ன ? சட்டம் எப்படி இருந்தது ? அது நடைமுறையில் எத்தனை
        தூரம் அமல்படுத்தமுடிந்தது ? இவற்றை பற்றி விரிவான தகவல்களை முன்
        வைக்காமல் பொதுபடையாக பேசுவது விவாதமல்ல.

        குத்தகை அல்லது சொந்த நிலம். அதை விவசாயிகள், குத்தகைக்கு எடுத்தவர்கள் தாங்களே தங்கள் வழியில் நடத்திக் கொள்ள, இயல்பான போக்கில் அனுமதித்திருந்தாலே போதும். யார் வேண்டுமானாலும் (கார்பரேட் நிறுவனங்களும் தான்) எவ்வளவு ஏக்கர்கள் வேண்டுமானாலும் வாங்கி, நவீன பண்ணைகளாக மாற்ற சட்ட பூர்வ அனுமதி மட்டும் இருந்திருந்தாலே போதும். அரசு மற்றும் இடதுசாரிகள் இந்த அடிப்படை விசியத்தில் தலையிடாமல் இருந்திருந்தாலே போதும். மிக இயல்பாக,
        மேலை நாடுகள் போல மாறுதல்கள் வந்திருக்கும். கோடிக்கணக்கான விவசாய தொழிலாளர்கள் படிப்படியாக உற்பத்தி துறைக்கும் (manufacturing) மற்றும் servicesகும் இயல்பாக மாறியிருப்பர். அதற்க்கு லைசென்ஸ், கண்ட்ரோல் ராஜியம் பெரும் தடையாக இருந்தது.

        இது போன்ற அரசு தலையீடுகள் நில உரிமைகளில் எதுவும் இல்லாமல், அணைகள், கால்வாய்கள், மற்றும் infrastructure, etc போன்ற இதர விசியங்களில் மட்டும் கவனம் காட்டியிருந்தாலே போதும். அந்த பாதையில் தான் மேல்நாடுகள் தங்கள் விவசாயத்தை நவீன மயமாக்கின. உற்பத்தியை மிக மிக அதிகரித்து, விலைவாசியை குறைத்தன.

        அசுரன்,

        நிலம் துண்டானதற்க்கு இதர காரணிகளும் உண்டுதான். ஆனால் துண்டான நிலங்களை ஒரு நிறுவனமோ, அல்லது தனிநபரோ ‘நல்ல’ விலைக்கு வாங்கி, ஒரே சதுரமாக ஒரு
        ஆயிரம் ஏக்கர்களை ஒருங்கினைத்து, நவீன பண்ணணை உருவாக்க சட்டம் தடை செய்கிறது. அதை தான் மீண்டும் மீண்டும் சொன்னேன். உமக்கு புரியவில்லை. இது போன்ற சட்டங்கள் முன்னேறிய நாடுகளில் இல்லை. அய்ரோப்பிய நாடுகளில் விவசாயம், நிலபிரவுத்தவ முறையில் தாம் ஆயிரக்கணக்கான வருடங்களாக இயங்கின. குத்தகைதார்கள் போன்ற விசியங்கள் அங்கும் முன்பு இருந்தது. Serfdom, tenancy, share cropping, etc எல்லாம் இருந்தன. மிக மிக இயல்பாக ஜனனாயக பாணி முதலாளித்துவ விவசாய முறைக்கு மாறின. அங்கு நில உச்ச வரம்பு சட்டங்கள் இல்லை. அது முக்கிய காரணி. புரிகிறதா ?

        • அதியமான்,

          நீங்கள் சொல்வது முற்றிலும் தவறு.. அதை தரவு ரீதியில் நிறுவ எம்மால் முடியும் – முந்தைய பல விவாதங்களில் தோழர் அசுரனும் பிற தோழர்களும்
          அதைச் செய்துள்ளனர்.. ஆயினும் மீண்டும் ஒருமுறை அதையே செய்வது ஒன்றும் கஷ்டமான காரியம் அல்ல.. எனவே திரும்பவும் நாம் அதைச்
          செய்யப்போகிறோம்.. ஒரு இடைவெளிக்குப் பின் திரும்ப விபரங்களோடு வருகிறேன் – அது வரையில் விவாதம் பி.டி கத்தரிக்காய் என்ற
          அளவில் இருக்கட்டும் ஒரிரு நாட்களுக்கு!

  21.  What does BT stand for?  பி.டி, BT- Biotecnology -உயிரியல் தொழில்நுட்பம் என்பதை குறிக்கிறது என்று நினைத்தேன்? வில்லவன், நீங்கள் இதன் பொருள் விளக்கத்தையும் சொன்னால் என் போன்றவர்களுக்கு புரிந்திருக்கும்.  

    • B.T என்பது Bacillus Thuringinesis எனும் ஒரு நுண்ணுயிரியின் பெயர்ச் சுருக்கமே. இந்த நுண்ணுயிருக்கு பயிரைத்தாக்கும் காய்ப்புழுவை கொல்லும் திறன் உண்டு. மரபணு பொறியியல் மூலம் இந்த வகை நுண்ணுயிரியின் மரபணுவை தாவரத்தின் மரபணுவுடன் இணைத்து உருவாக்கப்படுபபவைதான் Bt பயிர்கள். இவ்வகை மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் காய்ப்புழுவை கொல்லும் நஞ்சை தானாகவே உற்பத்தி செய்துகொள்ளும்.எனவே விவசாயிகள் காய்ப்புழுவுக்கென தனியே பூச்சிக்கொல்லி வாங்கத் தேவையில்லை, அதற்கான செலவும் மிச்சமாகும் என்பது இப்பயிரைப் பற்றி சொல்லப்படும் ஒரே சிறப்பியல்பு.

      • வில்லவன், 
        விளக்கத்திற்கு நன்றி. சின்னதாக ஓர் கார்ட்டூன் படம் போட்டு என்னைய வச்சு காமெடி, கீமெடி பண்ணனலையே?

  22. ‘மரபணு மாற்றம் செய்யப்பட்ட
    மக்காச்சோளத்தை தின்று வளரும் அமெரிக்க மட்டுப்பண்ணை மாட்டிறைச்சிக்கும் கூட தடை விதித்திருக்கிறது. இதை எதிர்த்து அமெரிக்கா
    உலக வர்த்தகக் கழகத்தில் தொடர்ந்த தாவாவில் ஐரோப்பாவிற்கு சாதகமான தீர்ப்பும் ஆகியிருக்கிறது.’

    You dont know anything about WTO or Bt.Bt is used as a pesticide by organic farmers for many decades.Bt kills pests.A plant that has the gene to produce Bt does the same with increased efficiency as there is no need to spray it again and again.Bt cotton is widely planted in China and many other countries.The area under Bt cotton is increasing in all these countries. So are all these farmers fools and are all the governments idiots to permit it. UN agencies have not categorised Bt cotton as unsafe or toxic. In India Monsanto-Mahyco is
    just one of the companies supplying Bt cotton.There are many varieties with Bt gene in the market and one company has got the gene developed by a Chinese public sector undertaking.
    Know the fact before writing. The case before WTO is ban by Europe of import of beef from cows treated with hormones and that has nothing to do with GM food/GM corn. USA brought a case against this before WTO. WTO i.e the Panel formed to hear this case found that the ban by Europe violated WTO rules
    and permitted USA to take retaliatory measures. But USA chose not to do so as Europe was too big a market and retaliation would annoy Europeans. I know one thing after reading this blog and issues of Puthiya Janayagam, that you guys write so much with so little knowledge. Ignorant fellows cannot claim be marxists as Marxism demands a thorough understanding of the issues. With ‘marxists’ like Vinavu capitalism need not have any worry because these ‘marxists’ dont understand most of the things they write about. They make noise like empty vessels and think that noise will result in revolution.

  23. வினவு குழுவினருக்கு ,
    அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்௦)….

    தொடர்ந்து தவறான கொள்கை முடிவுகளை எடுத்து இந்தியாவை மீண்டும் அமெரிக்காவின் காலனி நாடாக்க முயலும் அமெரிக்க அடிமை மன்மோகன் சிங் கும்பல்களை மக்களின் எழுச்சியான போராட்டங்கள் மட்டுமே சரியான பாதைக்கு கொண்டு வரும். கட்டுரையாளர் சொன்னது போல கரும்பு விவசாயிகளின் போராட்டத்தின் வெற்றி நம் அனைவருக்கும் ஒரு பாடம். சகோதரர் முஹம்மத் போலவே நானும் ஆச்சர்யப்பட்டேன். வினவில் இப்படி ஒரு கட்டுரையா என்று.

  24. பி.டி பருத்தி மோசமான விளைவுகளை உண்டாக்கக்கூடியதெனில் அது எப்படி விவசாயிகளால் பரவலாக பயிர் செய்யப்படுகிறது என்பது அதியமானின் கேள்வி. விதை வியாபாரம் நிறுவனமயமாக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகிறது. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பே, அக்கம் பக்கத்து ஆட்களிடம் விதை நெல் வாங்காதீர்கள் எனும் வானொலி நிலைய எச்சரிக்கையை கேட்டிருக்கிறேன். விதைச் சான்று, விதை விற்பனைக்கான உரிமம் என பல தடைகள் மூலம் உள்ளூர் விதை உற்பத்தி மற்றும் விற்பனை முடக்கப்பட்டுவிட்டது. விதைச் சட்டப்படி ஒரு விவசாயி விதைகளை விற்பனை செய்வது குற்றம் என்கிறது விதை ஆய்வுத்துறை ( பத்து கிராம் கத்திரி விதை விற்றாலும் குற்றம் குற்றமே).

    இன்றைய சூழ்நிலையில் ஒரு விவசாயி விதை வாங்க அதை உற்பத்தி செய்யும் நிறுவனங்களையும் ,விதைப்பு தொடர்பான ஆலோசனைகளைப் பெற வேளான்மைத் துறை அதிகாரிகளையும் நாடவேண்டிய நிலையில் இருக்கிறார். இவ்விரு தரப்பு ஆட்களையும் இப்போது கட்டுப்படுத்துவது மான்சாண்டோ போன்ற நிறுவனங்கள்தான். வியாபாரிகள் இருப்பு வைத்திருப்பதையும் விவசாய அதிகாரிகள் பரிந்துரைப்பதையும்தானே விவசாயிகளால் வாங்கமுடியும் ?? எனவே பிடி பருத்தியின் பரவலான பயன்பாட்டை வைத்து அது விவசாயிகளால் விரும்பப்படுவதாக சொல்வதை நம்பக்கூடாது

    பரிந்துரைத்தவனின் சட்டையை பிடித்து கேள்வி கேட்காமல் தற்கொலை செய்துகொள்ளும் விவசாயியின் பாமரத்தனத்தை பயன்படுத்தி லாபம் பார்க்கின்றன நிறுவனங்கள். அதே பாமரத்தனத்தைத்தான் ஆதாரம் என்று சொல்கிறார் அதியமான் .

    • /////பரிந்துரைத்தவனின் சட்டையை பிடித்து கேள்வி கேட்காமல் தற்கொலை செய்துகொள்ளும் விவசாயியின் பாமரத்தனத்தை ////

      ‘பரிந்துரை’களால் தான் தற்கொலை செய்ய நேர்ந்ததா ? நல்ல கதை. அப்படி என்றால் தற்கொலைகள் அனைத்து இடங்களிலும் ஏன் இல்லை. சில பகுதிகளில் மட்டும் ஏன் ? பி.டி. காட்டன் வேண்டாம் என்று வெறுத்து, சாதாரண பருத்திக்கு மாறவே முடியாதா என்ன ? unbelivable. if it is true there will be huge outcry and agitation by affected farmers on a national level and the opposition parties will have a field day, along with media which are hugry for ‘stories’.

  25. விவசாயி விதை சேமிக்க, பரிமாறிக் கொள்ள, பயன்படுத்த எநத தடையும் இல்லை. பிடி பருத்தியை வாங்கும் விவசாயிகள் அதன் விளைச்சலில் பிரச்சினை என்றால் அதை மீண்டும் வாங்க மாட்டார்கள். விவசாயிகள் சண்-தையில் விதையையும் வாங்கலாம். பிற விவாசாயிகளிடமிருன்தும் வாங்கலாம். வினவு, வில்லவன் போன்ற புளுகர்கள் எழுதுவதை நம்ப வீண்டாம்.

    • வில்லவன், Vithai அளித்த பதிலுக்கு என்ன ‘விளக்கம்’ சொல்கிறீர்கள். பி.டி.காட்டன் பற்றி விஞ்ஞானபூர்வமான விளக்கங்களுக்கு பதில் வெறும் பூச்சாண்டிதான் காட்டுகிறீர்கள். விவசாயிகளிடம் இது எடுபடாது / எடுபடவில்லை. தேவை என்றால் அவர்கள் மாற்றிக் கொள்ள முடியும். எந்த வித தடையும் இல்லை, legally, technically and commericially. that is the truth.

      • அதியமான்,

        ஏற்கனவே பதில் சொன்னவற்றையே – அதை மறுக்காமல், வேறு வார்த்தைகளில் அதே கேள்வியை
        புதிதாக கேட்பது போல் கேட்கிறீர்கள் – அதில் நாங்கள் பதில் சொல்லாதது போல ஒரு குத்தல் வேறு.

        இது உங்கள் வழக்கமான உத்தி தானே? 😉

        Anyways, நான் முன்பு கொடுத்த அதே பதிலை மீண்டும் காப்பி பேஸ்ட் செய்கிறேன் –

        //அதியமான்,

        //விவசாயிகள் அதை விட்டுத் தள்ளுவார்கள். பழையபடி சாதாரண பருத்திக்கு திரும்புவார்கள். they know better and hence let them choose.//

        இது சாத்தியமில்லை! அது தான் மான்சாண்டோ வின் டெர்மினேட்டர் விதைகளின் ஸ்பெஷாலிட்டியே.

        மான்சாண்டோ விதை ஒரு வயலில் விதைக்கப்படுகிறது என்றால் – அதிக வீரியமான பூச்சிக் கொல்லிகள் அந்நிலத்தில் கொட்டப்படுகிறது +
        நிலத்தடி நீர் அதிகளவில் உறிஞ்சப்படுகிறது + அந்த விவசாயி நட்டத்தில் வீழ்ந்தான் என்று அர்த்தம்!

        So… நிலம் மீண்டும் மரபு ரகங்களுக்கு மாற சாத்தியக்கூறுகள் குறைவு என்பது ஒரு பக்கம் இருக்கட்டும், தொடர்ந்து மான்சாண்டோ இந்திய
        அரசின் பின்புல ஆதரவோடு விதைச் சந்தையைக் கைப்பற்றுகிறது என்றால் பாரம்பரிய விதைச் சந்தை நிர்மூலமாக்கப்படுகிறது என்று அர்த்தம்.
        கோயமுத்தூரில் இருக்கும் தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழகமே மான்சாண்டோ வின் கிளை நிறுவனம் போல் செயல்படுகிறது.
        மான்சாண்டோ வுக்காக இவர்கள் தான் கள ஆய்வுகள் நடத்தி வருகிறார்கள்.. அரசிடம் போய் நாட்டு ரக பருத்தி விதைகேட்டால் அவர்களே
        மான்சாண்டோ விடம் விவசாயிகளைத் திருப்பி விடுகிறார்கள். வேறு வழியே இல்லை, பிழைத்துக் கிடக்க வேண்டுமானால் எதையாவது செய்தாக
        வேண்டும் என்கிற கட்டாயத்தில் தள்ளப்படும் விவசாயிகள் மான்சாண்டோ விதைகளை விதைக்கிறார்கள்.

        மேலும் மான்சாண்டோ ரக பயிர்களின் மகரந்தங்கள் இயற்கையான கடத்திகளின் மூலம் (தேனீக்கள், பட்டாம்பூச்சிகள் etc) வேகமாகப் பரவுகிறது (பதினைந்து மீட்டர்களுக்கு மேல் மகரந்தம் பரவாது – இதன் கணம் கூடுதல் என்று மான்சாண்டோ சொல்வது பொய்! இதுவும் சுயேச்சையான ஆய்வுகளில் நிறுவப்பட்டிருக்கிறது) தாம் விதைக்கப்பட்ட வயல்களைக் கடந்து அக்கம்பக்கம் இருக்கும் வயல்களின் நாட்டு ரக பயிர்களையும்
        ஊடுருவுகிறது. இதன் மூலம் ஜெனிடிக் பொல்லூஷன் ஏற்படுகிறது – அதாவது நாட்டுரகங்கள் அழிந்து போகிறது / அல்லது அதன் தன்மை
        மாறுகிறது.

        இதை சும்மா வாதத்திற்காக சொல்லப்படுவதல்ல – இதன் தீவிரத்தை நீங்கள் உணர வேண்டும். பி.டி காய்கறியை உண்ணும் மனிதர்களிடம்
        மேற்கொண்ட ஆய்வில், அதன் விஷப்புரதமான க்ரை1ஏசி மற்றும் க்ரை1ஏபி வயிற்றில் சுரக்கும் ஹைட்ரோகுளோரிக் அமிலத்தையும் தாண்டி,
        இயற்கையான மெட்டபாலிக் சர்க்கிளையும் தாண்டி, பெருங்குடல் வரை அப்படியே இருக்கிறது – மேலும் வயிற்றில், குடலில் உள்ள ஜீரணத்துக்கு
        உதவும் நல்ல பேக்டீரியாக்களின் மரபணுவுக்குள் ஊடுருவி அதன் தன்மையையும் மாற்றியமைக்கும் அளவுக்கு ஊடுருவல் தன்மை கொண்டிருக்கிறது.//

        ஆதாரம் – http://www.i-sis.org.uk/BTTIGMC.php

        • ////ஏற்கனவே பதில் சொன்னவற்றையே – அதை மறுக்காமல், வேறு வார்த்தைகளில் அதே கேள்வியை
          புதிதாக கேட்பது போல் கேட்கிறீர்கள் – அதில் நாங்கள் பதில் சொல்லாதது போல ஒரு குத்தல் வேறு.

          இது உங்கள் வழக்கமான உத்தி தானே?
          /// இல்லை. நடைமுறையில் இப்படி இல்லையே என்றேன். no farmers seems to be trapped with GM cotton even after 7 years or so while his profits are better. that is the net result.

        • //Athiyaman,

          your claims and APAARI’s claims are proved wrong!! I have noted that before!/// no. that is a sweeping assertation not backed by data and arguments quoting that APAAR’s detailed annual report with many many charts, figures and data. Your source does not do that kind of detailed refutation. anyway, the APAARI report quotes studies by various scientists and field reserachers and data, which proves BT cotton is postively working. only way to disprove that report is to prove all those figures and data are FALSE. no one has done that. ok.

    • விவசாயிகளே தாங்களே தங்களுக்குள் நேரடியாக விதைகளை விற்பதும் வாங்குவதும் விதைச்சட்டப்படி தவறு எனும் எச்சரிக்கை கடிதத்தை பசுமை விகடனுக்கு சென்ற மாதம் அனுப்பியிருக்கிறது தமிழக அரசின் வேலூர் மாவட்ட விதை ஆய்வுத் துறை. இதற்கென்ன சொல்கிறீர்கள், அது போன மாசம்., நான் சொல்றது அதுக்கு முந்தின மாசம் என்றா ??இல்லை அந்த கடிதத்தை அனுப்பியது வினவுதான் என்று சொல்லப்போகிறீர்களா ?

  26. பி.டி மேன்,

    எனது இந்தக் கருத்தில் விபரப்பிழை இருந்தது என்பது உண்மை தான்.

    //மரபணு மாற்றம் செய்யப்பட்ட
    மக்காச்சோளத்தை தின்று வளரும் அமெரிக்க மட்டுப்பண்ணை மாட்டிறைச்சிக்கும் கூட தடை விதித்திருக்கிறது. இதை எதிர்த்து அமெரிக்கா
    உலக வர்த்தகக் கழகத்தில் தொடர்ந்த தாவாவில் ஐரோப்பாவிற்கு சாதகமான தீர்ப்பும் ஆகியிருக்கிறது.//

    பி.டி மக்காச்சோளத்தை உணவாகக் கொண்ட இறைச்சிக்கு தடை என்பதை விட க்ரோத் ஹார்மோனால் தசை வளர்ச்சி தூண்டப்பட்ட
    இறைச்சிக்கு EU தடை விதித்தது. அதன்மேலான தாவாவில் WTO அத்தடை தவறென்றும் அமெரிக்காவுக்கு இதே போல் EU பொருட்களின்
    மேல் தடைவிதிக்க உரிமையையும் வழங்கியது. ஆனால் மைய்யமான பிரச்சினையில் தவறு இல்லை. விஷயம் என்ன? செயற்கையான முறையில்
    லாபம் அதிகரிக்கவென்று ஹார்மோன் ஊசி போட்டு வளர்க்கப்படும் மாட்டிறைச்சிக்கு EU வில் தடை – விபரத்தில் தான் பிழையே அன்றி
    எமது மைய்யமான வாதத்துக்கு அது முரணாக இல்லை என்பதை கவனியுங்கள்!

    ஆனால், அதைச் சுட்டிக் காட்டுவதன் மேல் நீங்கள் வைத்திருக்கும் கருத்தில் உண்மை இல்லை.

    பி.டி எனப்படும் பேஸில்லஸ் துரிஞ்சியென்ஸிஸ் 1911ல் இருந்தே பூச்சிக்கொல்லியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் நாம் கவனிக்க
    வேண்டியது இரண்டு விஷயங்கள் – ஆர்கானிக் ஃபார்மிங்கில் பி.டி பூச்சிக்கொல்லி, பயிர்களுக்கு வெளிப்புறமாக தெளிக்கப்படுகிறது ஆனால்
    ஜி.எம் பயிர்களில் பி.டி விஷம் உள்ளேயே உற்பத்தியாகும் விதத்தில் என்ஜினியரிங் செய்யப்பட்டுள்ளது. இரண்டாவதாக, ஆர்கானிக் பார்மிங்கிலும்
    பி.டி தொடர்ந்து பயன்படுத்தப்படும் போது பூச்சிகள் அவ்விஷத்தை எதிர்த்து வளரும் ஆற்றலைப் பெற்றுவிடுகிறது என்பது ஆய்வு முடிவுகளில்
    தெரியவந்துள்ளது (ஆதார சுட்டி – http://www.scientificamerican.com/article.cfm?id=organic-mystery )

    //The area under Bt cotton is increasing in all these countries. So are all these farmers fools and are all the governments idiots to permit it. UN agencies have not categorised Bt cotton as unsafe or toxic. In India Monsanto-Mahyco is
    just one of the companies supplying Bt cotton.There are many varieties with Bt gene in the market and one company has got the gene developed by a Chinese public sector undertaking.//

    The area under BT cotton is increasing in all these countries – But why? What are those ‘many other countries’ does it includes US & EU?
    Are they increasing the cultivation areas for Cash crops or food crops? Dont use all sweeping statements!

    I say, In western countries, the BT crops may have increased; but as cash crops – not food crops.

    You must understand that, India is the first country to allow BT food crop in the world with the Bt gene inserted into it that is to be directly consumed by human beings. Can you deny this fact???

  27. திரு வில்லவன் அவர்களுடைய கட்டுரை அருமை!

    திரு கார்க்கி பொறுமையாகவும்,தெளிவாகவும், புரியும்படியும் கருத்துக்களை முன்வைக்கின்றீர்கள் நன்றி!

  28. during colonial times britain forced indian farmers to use long staple cotton instead of short staple cotton with disastrous consequences. the changed this because short staple cotton cannot be used in their machinery. within years once prosperous farmers of gujarat became wretched. history is repeating here once again ( bt cotton ) as tragedy only. to understand economics read Marx. rest is all bullshit.

  29. As rightly pointed out by gargi the cotton is a huge cash crop (incl. commodity hedging). In US ( south) when the cotton production increased in the 19th century the slave labour also increased consequently. mass production of cash crops will only lead to abject slavery. Economic history of the world is replete with umpteen incidents. We have to be chary of all these mendacious multinationals who want to control our land thru backdoor.

  30. விவசாயிகளே தாங்களே தங்களுக்குள் நேரடியாக விதைகளை விற்பதும் வாங்குவதும் விதைச்சட்டப்படி தவறு எனும் எச்சரிக்கை கடிதத்தை பசுமை விகடனுக்கு சென்ற மாதம் அனுப்பியிருக்கிறது தமிழக அரசின் வேலூர் மாவட்ட விதை ஆய்வுத் துறை. இதற்கென்ன சொல்கிறீர்கள், அது போன மாசம்., நான் சொல்றது அதுக்கு முந்தின மாசம் என்றா ??இல்லை அந்த கடிதத்தை அனுப்பியது வினவுதான் என்று சொல்லப்போகிறீர்களா ?

    If so please scan that and put it Vinavu site. I will
    explain why they cannot say so.The Seeds bill is not yet passed.The Plant Variety Protection and
    Farmers’ Rights Act which is in force allows seed saving, sowing, exchange of seeds by farmers.But a farmer cannot sell his/her seed in the brand name used by a company.
    I cannot put the seeds from my field in a bag and label and sell them under a brand name e.g.Maha Shakthi.

    I see no point in arguing with Kaarki becaue (s)he does not understand a thing.The hormones case is different from the GMO case.EU has taken a precautionary approach while USA argues that such beef is safe and fit for consumption.Americans eat it anyway.
    Bt soy, Bt corn and Bt cotton are under cultivation in many countries including Argentina.Pakistan has not approved Bt cotton yet but Bt cotton is planted there by many farmers who have bought seeds smuggled from India. Are they fools to go for Bt cotton year after year.I think there is a huge problem here- Vinavu & Co do not read anything beyond what is churned out by anti-GMO groups. They know neither science, nor understand economics and do not bother to read both sides in a controversy. About WTO issues their understanding is pathetic. Before educating others they need education in everything they write about. Shut down your blog and magazines and spend few years in reading, right from the basics.

    The muslims who write here are no better.Pakistan has announced that it will approve Bt cotton soon.In Pakistan Monsanto’s Bt cotton is to be approved soon.Iran is also doing research on GM crops. Countries like Indonesia, Malaysia are for GM crops.Those governments are promoting agricultural biotechnology.

  31. இன்டியனாஹா வாழ் இந்திய பொருளை வாங்கு என்ற வாசஹம் இன்று காணமல் போனது ஏன் ? இன்று இந்திய பொருளை வாங்காமலே ஷைகின்றனர் இது மேலை நாட்டவர்களின் சதி என்பதை மறக்க முடியாது இனி நாம நம்பும் அரசியல் வாதிகள் நம்மை விற்று விடுவார்கள் இனி நாம உறுதி மொழி எடுக்க வேண்டும் எது உடலுக்கு
    தீங்கான பொருள் வந்தாலே நாம பொங்கி எல வேண்டும்

  32. National Academies of Science, FAO, WHO have not recommended against Bt cotton or agricultural biotechnology. There is more to bniotech than Monsanto.In China and India public sector is also involved in this.So it is either all scientists in the world who are for biotechnology in agriculture are on the payroll of Monsanto or Kaarki is a fool. I will go for the second because you dont understand the issues, leave alone, not taking positions on issues.A private sector seed company in India gets Bt gene from China, another from a ICAR lab and both have nothing to do with Monsanto. So dont raise this bogey of Monsanto again and again. You either give figures that show that Bt cotton is a failure or stop writing nonsense.

  33. சிறப்பாக இருக்கிறது

    //அப்படி வாங்கியவர்களும் பெரிய மகசூல் எடுத்ததாக மான்சாண்டோவாலும்கூட நிரூபிக்க முடியவில்லை அவர்களின் உள்ளூர் எடுபிடிகளான வேளான் பல்கலை(ளை)க்கழகங்களாலும் நிரூபிக்க முடியவில்லை. // இதுதான் உண்மை

  34. தோழர் வினவு!
    பசுவை வைத்து கொண்டு ஆர்எஸ்எஸ் காலிகள் ஊர் உராய் சீன் காட்டிக் கொணடிருக்கிறார்களே அதுக்காக மாட்டுக்கறியின் மகாத்மியங்களை எடுத்துக்காட்டும் கட்டுரை(நல்ல காரமாய்) ஒன்றை வெளியிடலாமே

    • மரண அடியின் பின்னூட்டத்தை அப்படியே வழிமொழிகிறேன், 
      கட்டுரைமட்டுமில்லாமல் நல்ல கேலிச்சித்திரங்களும் தேவை

      • தொடர் பயணத்தில் ஊர் ஊராக பேசி திரியும் இராமகோபாலனின் பேச்சு அத்தனையும் விஷம். இதுகுறித்து வினவிடம் கோர வேண்டும் என நினைத்தேன். மரண அடி சொல்லிவிட்டார். அரைடிக்கெட் அவர்களின் கோரிக்கைக்கு வினவின் ஓவியர்கள் தான் முன்வந்து உதவ வேண்டும்.

  35. அதியமான் தயவுசெய்து குறைந்தபத்சம் ஒரு ஏக்கார் நிலம் வாங்கி bt விவசாயம் செய்து நிருபயுங்கள் அல்லது நீங்கள் பரிசோதனை விலங்கு ஆகி மான்சாண்டோ நல்லது என்று நிருபியுங்கள்.

    • maakaan, சேலம் மாவட்டத்தில், எம் உறவினர்கள் பல ஏக்கர்களில், பி.டி காட்டனை வெற்றிகரமாக பல ஆண்டுகளாக பயிரிடுகின்றனர். வாங்க, அங்கு அழைத்துச்செல்கிறேன். உங்க ‘சந்தேகங்களை’ அவர்களிடம் கேளுங்க.

      • பல ஆண்டுகளா, எத்தனை ஆண்டுகள் எந்த கிராமம் என்று மட்டும் சொல்லுங்கள். உங்கள் உறவினர் பெயர் ரகசியமாக நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்,

  36. பன்னாட்டு விதைக் கொள்ளையர்களுக்கு குடை பிடிப்போருக்கு மேலும் ஒரு தகவல்: சில வருடங்களுக்கு முன்புவரை நம் ஊர்களில் சின்ன வெங்காயம் வெங்காயமாகவே நிலத்தில் ஊன்றப்பட்டு பயிரிடப்பட்டது. அதிலும் கலப்பின ரகம் அறிமுகப்படுத்தப்பட்டு விதை மூலம் பயிரிடுவது தோன்றியது. இன்றைய நிலவரப்படி, அந்த விதைக்கு செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்பட்டு விதை கிலோ ரூ. 1500 லிருந்து ரூ. 3000 த்திற்கும் மேல் சென்று விட்டது. அதுவே நாட்டு ரகமாக இருந்தால் விவசாயி செலவு அதிகமின்றி பயிரிடுவார். இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம் கொள்ளையர்களின் திட்டத்தை.

    • தோழர்கள் மார்க்கி, வில்லவன் நீங்கள் ஏற்கனவே இதனைப் பார்த்திருக்கக்கூடும். அமெரிக்காவுக்கே இந்த நிலைமையென்றால்……

  37. இரங்குவோன், இன்னும் விசாரணைகள் நடந்து கொண்டிருக்கிறது. அமெரிக்க anti-trust சட்டங்கள் pwerful ஆனவை. தேவைபட்டால் புதிய சட்டங்கள் கூட கொண்டுவருவார்கள். ஆனால் இதுவரை இறுதி முடிவு எடுக்கபட்டவில்லை. பி.டி கத்திரிக்காய் உடல் நலத்திற்க்கு கேடு என்றால், பி.டி சோயா மற்றும் பி.டி கார்ன் (கோதுமை) மிக வெற்றிகரமாக அமெரிக்காவில் பயிரடப்பட்டு, பெரும் அளவில் உண்ணப்படுகிறது என்பதை இந்த சுட்டி நிறுபிக்கிறது. monopoly பற்றி தான் இப்ப சர்ச்சை. அவற்றின் பக்க விளைவுகள், லாபம், பூச்சிமருந்து செலவை தவிர்த்தல் போன்றவைகள் பற்றி இல்லை. மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தை கட்டுபடுத்தியது போல எதிர்காலத்தில் மான்சோட்டாவையும் கட்டுபடுத்தலாம். பார்க்கலாம். மான்ஸட்டோ வின் gene traitகளை முற்றாக தவிர்து புதிய ரகங்களை கண்டு பிடித்து, பயிரட, விற்பனை செய்ய, பிற நிறுவனங்களுக்கு எந்த தடையும் இல்லையே. அல்லது பி.டி வேண்டாம் என்றால், பழைய நார்மல் விதைகளை பயன்படுத்தவும் முடியும்.

  38. தோழர் இரங்குவோன்,

    தங்கள் சுட்டிக்கு நன்றி. நன்பர் அதியமான் விவாதம் செய்யவில்லை – விதண்டாவாதம் தான் செய்கிறார். என் அவதானிப்பில் அவர்
    முதலாளித்துவத்தை தவறான அர்த்தத்தில் விளங்கி வைத்திருக்கிறார் என்று புரிகிறது. உலகமயமாக்கலின் எல்லா அம்சங்களையும் – பொதுவில்
    இந்திய முதலாளிகளே தமது நலனுக்கு ஏற்றதல்ல என்று கருதும் அம்சங்களையும் கூட – ஆதரிக்கிறார். அதுவும் ஒருவித ஆத்மார்த்தமான
    கமிட்மெண்ட்டோ டு 😉 எனவே அவருக்கு விளக்கி புரிந்துகொள்ள வைப்பதற்கு நீண்ட நாட்களாகலாம்.. ஆனால் நமது தரப்பு வாதங்கள்
    பொது வாசகர்களை சரியான கோணத்தில் சென்றடையும் என்பதில் எனக்கு ஐய்யமில்லை.

    பி.டி சோயா நேரடியாக நுகர்வில் இல்லை – இந்த ஆண்டு ஜனவரி மாத நிலவரப்படியே அது சில வாலண்டியர்களுக்கு
    பரிசோதனை ரீதியில் தான் உட்கொள்ள வைக்கப்பட்டிருக்கிறது. பரிசோதனைக்குப் பின் அந்த ஏழு வாலண்டியர்களில் மூன்று பேருக்கு
    மரபணு தாக்கம் இருப்பது தெரியவந்ததுள்ளது. அடுத்து, சோயாவில் பேஸில்லஸ் துரிஞ்சியென்ஸிஸ் பாக்டீரியாவின் மரபணு பயன்படுத்தப்படவில்லை.

    அமெரிக்க சந்தையில் மரபணுமாற்ற பயிர்கள் இருப்பதை இந்திய சந்தையோடு ஒப்பிடுகிறார் அதியமான்.. அங்கே மரபணு மாற்ற பயிர்களைப்
    பயிரிட இருக்கும் விதிகள் மிக மிகக் கடுமையானவை –
    http://docs.google.com/viewer?a=v&q=cache:PodJDLKEl3wJ:www.rogers.info/pdf/stewardshipagreement.pdf+attribute+sweet+corn&hl=en&gl=in&pid=bl&srcid=ADGEESiqBlVE4p_NBF8SEfYKcLTlyvSnU8EEDXUfN3NO3Lg5-imDZ0KLSTAdFhJWvKpnIAJTZ7FXqduAQhYYH66r4cXfXRBLp8bOAt3MO4JLvnCw0OFyb2oi8MwkVgf3iOq6wZfGnZE-&sig=AHIEtbTE2VQD7xCe67BO3VcCHR8gXQwtCQ

    இது அங்கே விவசாயிகள் மரபணு மாற்றப்பயிர்கள் பயிரிடும் முன் கையெழுத்திட வேண்டிய ஒப்பந்தம்! இது போல இந்தியாவில் எந்த
    நடைமுறையும் இல்லை என்பது ஒருபுறம் இருக்க.. அங்கே தெளிவாக பி.டி பயிர்களையும் / மற்ற மரபணு மாற்றப்பயிர்களையும் / நாட்டு
    ரகங்களையும் பிரித்து வைத்திருக்கிறார்கள். ஆனால், இந்தியாவிலோ அனுமதியளிக்கும் முன்பே கள்ளத்தனமாக சந்தையில் பி.டி ரகங்களை
    நுழைத்து விட்டார்கள். மேலும் அனுமதியளித்தபின்னும் சாதா கத்தரிக்காய் எது பி.டி கத்தரிக்காய் எது என்ற வித்தியாசப்படுத்திக்காட்டும்
    முறைமைகள் இல்லை.

    ஏன் இந்தியாவில் விதிகளை கடுமையாக்கலாமே என்பார் அதியமான். அதைச் செய்வதற்கான அரசு இல்லை இது – மான்சாண்டோ /அவெந்த்திஸ்
    / கார்கில் போன்ற கம்பெனிகளுக்கு காவடி தூக்கும் அரசே இங்கே இருக்கிறது.

    மேலே உள்ள சுட்டியிலிருந்து தெரியவரும் இன்னொரு உண்மை இங்கே விளம்பரப்படுத்துவது போல மரபணு மாற்றப்பயிர்கள் பயிரிட்டால் வேறு பூச்சிக்கொல்லி / களைக்கொல்லி தேவையில்லை என்பதும் – மரபணு மாற்றப்பயிர்கள் பாதுகாப்பானது என்பதும் சுத்தப்பொய் என்பதாகும்.

    • அதியமானுக்கு புரிய வைப்பதற்கு, இவரையோ அல்லாது இவரது குடும்பத்தினரையோ மான்சான்டோ,கார்கில் போன்ற கம்பெனிகள் பரிசோதனை எலியாக பயன்படுத்தி பார்க்கலாம். 

  39. //அடுத்து, சோயாவில் பேஸில்லஸ் துரிஞ்சியென்ஸிஸ் பாக்டீரியாவின் மரபணு பயன்படுத்தப்படவில்லை//

    this is slightly wrong.. As there are many GM soy available in market and some of them are with BT technology too. But the point I wanted to make is – A food crop with BT-toxin is not permitted for direct human consumption in other parts of the world. If BT brinjal comes to indian market, it will be the first ever BT- crop allowed for direct human consumption..

    Sorry for incorrect information.

    Regards

    Kaargi /-

    • நன்றி கார்க்கி! எனக்கு நம் அரசாங்கத்தைப்பற்றி நன்றாகவே புரிந்துதானிருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் வினவினுடைய அளவிற்குகூட இந்த ‘ஜனநாயக’ மற்றும் ‘நீதியமைப்பு’களின் மீது சுத்தமாக நம்பிக்கை கிடையாது.
      நிற்க.
      அதியமானின் “தீய விளைவுகள் ஏன் எல்லா பயிரிட்டவிடங்களிலும் ஏற்படவில்லை” என்ற கேள்விக்கு நானே எளிமையாக பதில் கூறமுயலுகிறேன்.
      அதாவது உயிரியல் அமைப்புகளில் அது விலங்கானாலும் சரி, தாவரமானாலும் சரி ஒன்றில் ஏற்படும் விளைவு மற்றதலும் அதேபோல ஏற்படும் என்ற நிச்சயமில்லை. உதாரண்த்துக்கு, ஒரே மலேரியா கொசுவினால் கடிபட்ட இரு மனிதர்களில் ஒருவருக்கு மட்டுமே நோய் வரலாம். நோயெதிர்ப்பு சக்தி மாறுபாடு ஒரு கணித நிகழ்தகவுக்கு கட்டுப்பட்டது. அதேபோல்தான் டி.என்.ஏ. ரீகாம்பினேஷனும். ஒரு இடத்தில் ஏற்படும் பயிர்விளைவு இன்னொரு இடத்தில் மாறுபடலாம். மேலும் அதனை உட்கொள்ளூம் மனிதர்களிலும் அதன் தாக்கம் வேறுபடும் அபாயமே இத்தகைய பயிர்களை எதிர்க்கப்போதுமானது. காலப்போக்கில் மாற்றப்பட்ட மரபணுவின் பரிணாம மாற்றம் மேலும் ஆபத்தை ஏற்படுக்கக்கூடும். இதனை மனிதர்களில் சோதித்துப்பார்ப்பதில் ethics சிக்கல்களும் உண்டு. மேலை நாடுகளில் விலங்களில் பரிசோதிக்கவே ஆயிரம் கட்டுப்பாடுகள் உண்டு அப்படியிருக்க மனிதர்களில் வாய்ப்பேயில்லை. ஆனால் வளரும் நாடுகளில் வியாபாரமே செய்யமுடியும். அதியமானைப் போன்ற ‘விவரமுள்ளவர்கள்’ வக்காலத்து வாங்குவார்கள், விவரமற்ற அப்பாவிகள் ஏனென்று கேட்கவறியாது கிடப்பார்கள். கேட்பவர்கள் கலகக்கார பட்டம் பெறுவார்கள். பிடிமேன் போன்றவர்கள் கேட்பவர்களைப்பார்த்து அரைவேக்காடுவென கூப்பாடு (அதிலும் அந்நிய மொழியில்தான்) போடுவார்கள்.

      பின்குறிப்பு 1: அறிவியல் ஆராய்ச்சிகளையும் அதன் முடிவுகளையும் கூகுளிலேயே பார்த்துவிடமுடியாது. அதற்கு உண்டான இதழ்களில் சந்தா கட்டவேண்டும் அல்லது உதிரியாக வாங்கித்தான் படித்து அறியவேண்டும். அறிவியலும் முதலாளித்துவ அமைப்பிற்கு கட்டுப்பட்டதே.
      பின்குறிப்பு 2:.நீயென்னடா பெரிய ஆளா…சொன்னால் கேட்டுக்கொள்ள என்று யாரும் வந்தால், இப்போதே சொல்லிவிடுகிறேன். நான் ஒரு Biotechnology/Pharmacology doctrate மற்றும் தற்போது மேலை நாட்டு பல்கலையில் பணிபுரியும் தற்கால விஞ்ஞானியே.

  40. ///A food crop with BT-toxin is not permitted for direct human consumption in other parts of the world. If BT brinjal comes to indian market, it will be the first ever BT- crop allowed for direct human consumption..////

    BT Soya, BT Corn : aren’t they food crops that are ‘directly’ consumed ? if not, then what are they ? crazy..

  41. ///மேலை நாடுகளில் விலங்களில் பரிசோதிக்கவே ஆயிரம் கட்டுப்பாடுகள் உண்டு அப்படியிருக்க மனிதர்களில் வாய்ப்பேயில்லை. ஆனால் வளரும் நாடுகளில் வியாபாரமே செய்யமுடியும். ///

    சரி. ஆனால் அந்த http://www.ajc.com/business/ap-investigation-monsanto-seed-240072.html சுட்டி மான்ஸட்டோ நிறுவனம் அமெரிக்க விவசாயத்தில், BT Soya, BT Corn விளைச்சளில் பெரும் பங்கு வகிப்பதை பற்றி விளாவாரியாக முழங்குகிறது. மோனோபாலியாகிவிடும் என்று தான் பெரிய குற்றச்சாட்டு. ஆனால் அதை பற்றி…

    • சரி. மரபணு மாற்ற கத்திரிக்கு இப்போது நம் நாட்டில் தேவையென்ன வந்தது. குறிப்பிடும்படியான நோய்த்தாக்குதல் ஏதும் ஏற்பட்டதா? அல்லது நம் கத்திரியில் சுவை குறைவா?

      • யாராவது பதில் சொல்லுங்கப்பா….மரபணு மாற்ற கத்திரிக்கு இப்போது நம் நாட்டில் தேவையென்ன வந்தது?

  42. நான் ஒரு Biotechnology/Pharmacology doctrate மற்றும் தற்போது மேலை நாட்டு பல்கலையில் பணிபுரியும் தற்கால விஞ்ஞானியே.
    If so why dont you cite peer-reviewed articles that prove that Bt crops are dangerous for health. There are two different issues 1, Are GM crops safe and how to assess that 2, How to ensure that the monopoly is not abused. The second question can be tackled thro’ antitrust and pro competition measures and by allowing many companies in the market.
    In India Monsanto has no monpoly in Bt cotton and the prices have come down. USA uses substantial equivalence approcah and Europe takes a more precautionary view. But many countries including China, Argentina have permitted GM crops. Which means that most countries have allowed GM crops as safe crops. Is there anything that is 100% safe. Toxins can be present in plants too. If you eat too much of tomato or potato it will affect you. For some pea nuts are allergic, for some brinjal is allergic, for some pencillin is allergic. Someone who claims to be a PhD in biotechnology/pharmacology should be able to articulate the views clearly. I would like to know which university gives Phd in both biotechnology/pharmacology or do you hold two Phds. Anyway why dont you give us solid scientific evidence to conclude that scientists have proved or atleast concluded with some evidence that GM crops actually harm
    human health. Can you do that.

    • ரவி சீனிவாஸ் விஞ்சானியா இல்லியாங்கறது எனக்கு தெரியாது… ஆனா நம்ம கத்திரிக்கா விஞ்சானி ஒரு விசயத்த புரிஞ்சுக்கனும்..அதாவது ஒரு புது சரக்க சந்தையில உடற கம்பேனி அது உடம்புக்கு எதுவும் பண்ணாதுன்னு வெளிப்படையா எல்லா விஞ்ஞானிகளும் ஏத்துக்கற வகையில நிரூபிக்கனும், அது வரைக்கும் விக்க கூடாது… அதனால நஷடம் கம்பேனிக்கு எதுவும் வராது ஏன்னா அத அவன் வித்து சம்பாதிச்சிருவான்… ஒரு வேள சரக்கு நொள்ள சரக்காயிருந்தா மனுச உயிரு போயிடுமே!!!

      • அர டிக்கட்டு கத்திரிக்கா விஞ்ஞானி சொல்றது ரவி சீனிவாஸை அல்ல. என்னை!
        அப்புறம் நீங்க என்ன Ethicsல்லாம் பேசறீங்க…அதுவும் பாரதத்திருனாடல….
        மான்சான்டோ மாதிரி கம்பெனிங்க கிட்ட வச்சிக்காதீங்க ஆமா..சொல்லிட்டேன். மன்மோகன் சிங் மான்டேக்ல்லாம் இந்தியாவ வல்லரச்சா மாத்த இதெல்லாம் செஞ்சித்தானே ஆகணும். ஒழுங்கா ஜெய் ஹோன்னு சொல்லிட்டு தேசபக்தனா மாறிடுங்க. அதவிட்டுட்டு ‘நிரூபிக்கணும்’, ‘மனுச உயிரு’ அதுயிதுன்னுட்டு….
        சரி….இந்தியால மனுச உயிருக்கு இன்னும் மதிப்பு இருக்கா என்ன?

    • ஐயா பிரிஞ்சால்! என் துறை சம்பந்தப்பட்ட பியர்-ரெவியூட் ஜர்னல்கள்தான் எனக்கு கிடைக்கும். தாவர மரபணு சம்பந்தப்பட்ட ஆராய்ச்சிக்கும் என் துறைக்கும் சம்பந்தம் இல்லை. இருந்தாலும் நேரம் கிடைத்தால் தேடிப்பார்க்கிறேன்.
      //Toxins can be present in plants too.//
      இருக்கலாம். ஆனால் பிடி உணவுகளில் ‘இருக்கிறது’தானே?
      //If you eat too much of tomato or potato it will affect you//
      உணவு கட்டுப்பாடின்மைக்கும் இந்த விவாதத்துக்கும் சம்பந்தம் இல்லை.
      //Someone who claims to be a PhD in biotechnology/pharmacology should be able to articulate the views clearly//
      தெளிவாகத்தான் சொல்லியிருக்கிறேன் முக்கியமாக எளிமையாக…வினவைப்படிப்பவர்கள் எல்லோருக்கும் புரியவேண்டும் என்பதற்காக.
      //I would like to know which university gives Phd in both biotechnology/pharmacology or do you hold two Phds//
      பார்மகாலஜி என்பது ஒரு துறை. பயோடெக்னாலஜி என்பது தொழில்நுட்பம். ஒரு தொழில்நுட்பம் பல்வேறு துறைகளிலும் பயன்படலாம் அல்லது அதன் வீச்சினைப்பொறுத்து அதையே துறையாகவும் கருத இடமிருக்கிறது.
      உங்கள் கேள்வியில் இருப்பது நக்கலா அல்லது அறியாமையா?
      //Anyway why dont you give us solid scientific evidence to conclude that scientists have proved or atleast concluded with some evidence that GM crops actually harm
      human health. Can you do that.//
      Yes I can…. If some relevant research and evidences have been published already and in addition If I get access to it.

  43. மலேரியா கொசு உதாரணம் அருமை இரங்குவோன். ஒர் அறையில கல்யாணமாகாத வயசுப் பயலுக அஞ்சுபேர் இருந்தாகளாம். அந்த அஞ்சு பேரையும் மலேரியா கொசு கடிச்சதாம். அதுல இரண்டு பேருக்கு மட்டும் மலேரியா காய்ச்சல் வந்துச்சாம். நாம மலேரியா கொசுவை ஒழிக்கணும்னு சொன்னா அ.அதியமான் அண்ணாச்சி மிச்ச மூணூ பேருக்கும் காய்ச்சல் வரலியே, எதுக்கு கொசுவை ஒழிக்கணுன்னு வாதாடுவாகளாம். நல்ல தமிழ் மன்னனோட பேரை வச்சுகிட்டு இந்த அதியமான் அடிக்கும் லூட்டி தாங்க முடியலையே?

    • இது அதியமான் அவர்களுடைய தனிப்பட்ட குணம் என்றுதான் நினைக்கிறேன். முதலாளித்துவத்தினால் பலரின் தாலி அறுந்தபோதிலும்,தற்கொலைகள் செய்துகொண்ட போதிலும் எல்லோரும் அதுபோல் ஆகவில்லையே என்றுதான் வினா எழுப்புகிறார். இவர் முதலாளித்துவத்தினால் பலனடைந்திருப்பதாலே அதை உச்சி மோருகிறார். ஒரு ஜோசிய ஆராய்ச்சியாளனிடம் வேறு எதை எதிர்ப்பார்க்க முடியும்?  

  44.  மரபணு மாற்றம் செய்யப்படும் கத்தரியில் பக்கவிளைவுகளில் அதியமான் போன்றோர்க்கு மாற்றுக்கருத்து இருந்தாலும் மான்சாண்டோ கம்பெனி ஒரு விஷகம்பெனி என்பதை மறுக்கமுடியாது. உதாரணமாக, இக்கம்பெனிதான் வியட்நாம்போரின் போது விஷ ஆரஞ்சை உற்பத்தி செய்து கொடுத்தது. இதிலிருந்து இக்கம்பெனியின் யோக்கியதையை புரிந்துகொள்ளலாம். நண்பர் இரங்கோவன் சொல்வது போன்று மரபணு மாற்ற கத்திரிக்கு இப்போது நம் நாட்டில் தேவையென்ன வந்தது? இந்த கொலைகார நாய்களுக்கு அப்படியென்ன நம்மீது அக்கரை?

  45. இதை கொஞ்சம் கவனியுங்களேன்…

    http://thatstamil.oneindia.in/news/2010/01/15/ramesh-meets-with-protests-at-first.html
    இதில் மத்திய மந்திரி ஜெயராம் ரமேஷ் பிடி கத்தரிக்காய் வேண்டும் என்று குதிக்கிறார்.

    http://thatstamil.oneindia.in/news/2010/01/22/ministers-bicker-over-bt-brinjal.html
    இதில் அதே மந்திரி ஜெயராம் ரமேஷ் இன்னொரு மந்திரி சரத் பவாருடன் பிடி கத்தரிக்காய் வேண்டவே வேண்டாம் என்று சண்டை போடுகிறார். பவார் வேண்டும் என்கிறார்.

    இவர்கள் எல்லா நிபுணர்களின் கருத்துக்களையும் கேட்டு பிப்ரவரி 20ம் தேதிக்குள் இறுதி முடிவுக்கு வருவார்களாம்.

    விருது பெற அனைத்து தகுதிகளையும் கொண்ட இந்த பதிவை தமிழ்மண விருதில் முதலிடம் பெரும் என்று பெரிதும் எதிபார்த்தேன். ஏதுமில்லாததால், தமிழ்மண விருதுகள் எல்லாமே வெத்துவேட்டு என்ற என் புரிதல் சரி என்றே தெரிகிறது. என்ன செய்வது? பெருவாரியான ஓட்டுப்போட்டவர்களும் தேர்ந்தேடுத்தவர்களும் மொக்கைகள் தானே.

Leave a Reply to K.R.அதியமான் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க