privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஅரசியல்ஊடகம்காஷ்மீர் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் தினமணி!

காஷ்மீர் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் தினமணி!

-

“அமர்நாத் யாத்ரிகளுக்கு பயங்கரவாதிகள் குறி!”– என்ற தலைப்பில் தினமணி நாளிதழ் ஒரு செய்தி வெளியிட்டிருக்கிறது. உண்மையில் இது செய்தி அல்ல. காஷ்மீர் போராட்டத்தை வாசகர்கள் காழ்ப்புணர்வுடன் பார்ப்பதற்காக தயாரிக்கப்பட்டிருக்கும் விசமத்தனம்.

அமர்நாத்தில் உள்ள செட்டப் செய்யப்பட்ட பனிலிங்கத்தை தரிசிப்பதற்காக வரும் பக்தர்களை தாக்குவதற்காக பாக்கிஸ்தான் எல்லையில் உள்ள பயங்கரவாதிகள் திட்டமிட்டிருக்கிறார்களாம். இது குறித்த பல்வேறு தகவல்களை சேகரித்துவிட்டு தாக்குதலுக்கான உத்திரவை பிறப்பித்திருக்கிறார்கள் என்று தினமணி கூறுகிறது. இதற்கு ஆதாரமென்ன? எதுவுமில்லை.

அடுத்து தினமணி கூறுவதை அப்படியே தருகிறோம்

” பாலஸ்தீனத்துப் போராளிகள் இன்டிஃபாதா என்ற முறையில் கற்களை வீசி தாக்கியதைப்போல காஷ்மீரிலும் பாதுகாப்புப் படையினர் மற்றும் போலீசார் மீது கற்களை வீசித் தாக்குமாறு தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருகின்றனர்.”

“போலீசாரை அடித்து காயப்படுத்தும் இளைஞர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தாருக்கும் ரொக்கப்பணம் தந்து ஊக்குவிக்கின்றனர். உள்ளூரில் இருக்கும் அவர்களுடைய ஏஜெண்டுகள் மற்றவர்களுக்குத் தெரியாமல் பெருந்தொகைகளை அவர்களுக்குத் தருகின்றனர். இதனால் பல இளைஞர்கள் மேற்படிப்பு, வேலை என்று எதிலும் அக்கறை காட்டாமல் காஷ்மீரின் முழு விடுதலைக்காகப் போராடுவதாகக் கூறிக்கொண்டு போலீஸ் மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் மீது தாக்குதல் நடத்துகின்றனர்.”

“இந்தத் தாக்குதல் எல்லை மீறி அதிகரித்துக் கொண்டே வருவதால் இப்போது ராணுவம் அழைக்கப்பட்டிருக்கிறது. ராணுவம் தன் பொறுப்பில் காஷ்மீரப் பள்ளத்தாக்கை எடுத்துக்கொண்டுவிட்டால் பிறகு ஊரடங்கு உத்தரவு கண்டிப்பாக அமல்படுத்தப்படுவதுடன், பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு வலுவான பதிலடி தரப்படும் என்பதால் அவர்களுடைய கவனத்தைச் சிதறவைக்கவும் நிலைமையை மேலும் சிக்கலாக்கவும் ஹிந்துக்களான அமர்நாத் யாத்ரிகர்களைத் தாக்கி பெரும் சேதம் விளைவிக்குமாறு பயங்கரவாதிகள் எல்லைக்கு அப்பாலிருந்து தூண்டி வருகின்றனர்.” – தினமணி, 12.07.2010

கடந்த மாதம் முழுவதும் காஷ்மீர் பள்ளத்தாக்கில் துணை இராணுவத்தின் அட்டூழியத்தை எதிர்த்து மக்கள் போர்க்குணமிக்க முறையில் போராடி வருகின்றனர். ஆனால் அந்தப் போராட்டம்
பாக் ஆதரவு பயங்கரவாதிகளால் தூண்டி விடப்படுகிறதாம். கல்லெறிவதற்கு கூட பணம் கொடுக்கப்படுகிறது என்று தினமணி கூசாமல் பொய் சொல்கிறது. இதுவரை 20க்கும் மேற்பட்ட மக்கள் போலீசு துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டிருக்கின்றனர். இவர்களெல்லாம் பணத்துக்காக செத்திருக்கிறார்கள் என்றால் தினமணி எவ்வளவு நயவஞ்சகமாக பேசுகிறது பாருங்கள்!

காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் ” இந்தியாவே வெளியேறு” என்ற முழக்கம் ஓங்கி ஒலிக்கிறது. அது இந்திய இராணவம் மற்றும் துணை இராணுவத்தை எதிர்த்து மக்கள் வீரஞ்செறிந்த முறையில் போராடுவதின் அடையாளம். அதை உண்மைதானா என்று பார்த்தறிய விரும்பினால் தினமணி ஆசிரியர் நேரில் சென்று விசாரிக்க வேண்டும்.

இறுதியாக அமர்நாத் பக்தர்கள் இதுவரை 2.90 இலட்சம் பேர் பதிவு செய்து அதில் 1.35 பக்தர்கள் பயணத்தை முடித்திருப்பதாக தினமணி கூறுகிறது. எனினும் இதுவரை இவர்கள் மீது எந்தத் தாக்குதலும் நிகழவில்லை. அதற்கு பயங்கரவாதிகள் தீவிரமாக முயற்சி எடுத்து வருவதாக தினமணி கூறுகிறது. அதையும் வதந்தி போல அல்லாமல் நேரிடையாக பயங்கரவாதிகளின் பேச்சை ஒட்டுக்கேட்டது போல எழுதுகிறது.

மேசையில் இருந்து கொண்டு காஷ்மீரைப் பற்றிய இத்தகைய செய்திகளை தினமணி மட்டுமல்ல, ஏனைய தேசிய பத்திரிகைகளும் திட்டமிட்டு உருவாக்குகின்றன. ஆனால் இவர்களின் அவதூறைப் புறந்தள்ளி காஷ்மீர் மக்களின் போராட்டம் அன்றாடம் வளர்ந்து வருவது கண்கூடு.

  1. //1.35 பக்தர்கள் பயணத்தை முடித்திருப்பதாக தினமணி கூறுகிறது. எனினும் இதுவரை இவர்கள் மீது எந்தத் தாக்குதலும் நிகழவில்லை.//

    முன் வருடங்களில் தாக்குதல், நடந்துள்ளது! தற்காப்பு நடவடிக்கையை கேலி செய்வது, கேனத்தனமானது!

    //காஷ்மீர் மக்களின் போராட்டம் அன்றாடம் வளர்ந்து வருவது //
    மதவெறிப் பிரச்சாரத்தாலும், தூண்டுதலாலும், கல்லெறிக் கலவரத்தில் ஈடுபட்டு, உயிர்களை பலியிட்டு வருவது, முட்டாள் தனமானது!

    //நேரிடையாக பயங்கரவாதிகளின் பேச்சை ஒட்டுக்கேட்டது போல எழுதுகிறது.//
    உம்மைப் போன்றே, செய்திகளை பகுத்தறியும் சக்தி, தினமணி-க்கும், இருக்கும் போல!

    கஷ்மீர், இந்தியாவின் சொத்து! இனியும் இந்தியா தாமதிக்கக் கூடாது!கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்! தேவையானால். “இலங்கை மாதிரி”, களை எடுப்பு செய்து, கஷ்மீரை, பயங்கரவாதத்தின் பிடியில் இருந்து,மீட்டெடுக்க வேண்டும்!

    • //கஷ்மீர், இந்தியாவின் சொத்து! இனியும் இந்தியா தாமதிக்கக் கூடாது!கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்! தேவையானால். “இலங்கை மாதிரி”, களை எடுப்பு செய்து, கஷ்மீரை, பயங்கரவாதத்தின் பிடியில் இருந்து,மீட்டெடுக்க வேண்டும்!//
      காஷ்மீர் இந்தியாவின் சொத்தா இல்லை இந்திய அதிகாரவர்கத்தின் சொத்தா ……………..????????

      • நீங்கள் கூட இந்தியாவின் சொத்து(தை)தான்!

        அதிகாரத்தைப் பற்றி பேசுவோர்,ஒருவனின் அதிகார மமதையால்,ஒரு இனமே பலியானதை,பேச மறுப்பதேன்! வன்முறையாளன், வாழ்ந்த்தாய் சரித்திரம் உண்டோ?

    • காஷ்மீர் இந்தியோவோட சூத்துல வைச்ச ஆப்பு என்று திருத்தி எழுதுங்கள் ரம்மி… ஆப்பு அதிகமாக அசைய அசைய, இந்தியாவுக்குத்தான் ஆபத்து

      • எந்த தேசத்திற்கு/இனத்திற்கு/தனி நபர்க்கு இல்லை ஆப்பு!

        சரி ஐயா! கஷ்மீரை தாரை வார்க்கச் சொல்லுகிறீர்களா?

        • //சரி ஐயா! கஷ்மீரை தாரை வார்க்கச் சொல்லுகிறீர்களா?//

          நீங்க யாருங்க அதுல முடிவெடுக்க? ஏதோ உங்க சொத்து மாதிரி அநாகரிகமா பேசுறீங்க?

          காஷ்மீர் மக்கள் தனிநாடு கேட்டால் கொடுப்பதைத் தவிர வேறு வழியில்லை. அது அவர்கள் பூமி, அவர்கள் உரிமை. இத்தனை வருசம் காஷ்மீரை பிடித்து வைத்திருந்த இந்தியா அந்த மக்களை தனது நன்னடைத்தைகளால் தன் பக்கம் இழுத்திருக்கலாமே? ஏன் செய்யவில்லை.

          காஷ்மீர் விடுதலைப் போராட்டம் சாத்வீகமாக இருந்த நிலையில் அதன் மீது வன்முறையைப் பிரயோகித்து போராட்டத்தை வன்முறை மயமாக்கியது யாருடைய தவறு? (இந்திரா காந்தி அங்கு செய்த காட்டு தர்பார்)

          இத்தனையும் செஞ்ச்சிட்டு நல்ல பையன் கணக்கா, ஏதோ உங்க அப்பாவோட சொத்து கணக்கா தாரை வார்க்கவான்னு என்னிடம் கேட்கீறீர்கள்?

          குறைந்த பட்சம் பாதிக்கப்படுபவர்களின் மனநிலையில் இருந்து சிந்திக்கும் மனிதப் பண்பை வளர்த்துக் கொள்ளுங்கள்.

      • ஒழுங்கா, தமிழ்லில் எழுதுடா நாதாரி! அப்பால்,திட்டுடா வென்று!

    • Comment 1 @ rammy:

      //கஷ்மீர், இந்தியாவின் சொத்து! இனியும் இந்தியா தாமதிக்கக் கூடாது!கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்! தேவையானால். “இலங்கை மாதிரி”, களை எடுப்பு செய்து, கஷ்மீரை, பயங்கரவாதத்தின் பிடியில் இருந்து,மீட்டெடுக்க வேண்டும்!//

      I’ll [obscured]you. Don’t speak about Tamil Eelam Tamils. Idiot Indian. [obscured]

      • முட்டாள் நானல்ல! மூடன்வழி சென்று, நாசமாகிப் போன,அப்பாவி மக்களே! போராட்டாம் எனும் பெயரில்,பிணத்தை வைத்துக் கொண்டு,வன்முறையில் ஈடுபடும் கும்பலை, விடுதலை வீரர்கள் என்று போற்றி, எம் தாயகத்தையும்,எம் அரசாங்கத்தையும், இழியும் உங்கள் கும்பல் தான் அறிவிலிகளின் கூடாரம்!

        • ஏ ரம்மி, [obscured]உன் அதிக்க வர்க்கத்தின் பாசிச வெறியில் நடத்தப்பட்டதுதான் ஈழப் போர். தமிழ் தெரிந்தவனெல்லாம் தமிழனல்ல [obscured], இனத்தின் உரிமையை நிலைநாட்டுவதும் கூட தமிழனின் குணம், உன்னை போன்ற கருணா, கருணாநிதி போன்ற [obscured] தமிழன் என்று பெயர் இல்லை, வேறு பெயர் உள்ளது, (என்னை தனியே தொடர்புகொள், சொல்கிறேன்) (துரோகி கருணா வை கர்னல் என்று அழைத்த போதே நீ [obscured] என்று நினைத்தேன், சரி தான்) உன்னை போல் [obscured] சீரான வாழ்வை பெறுவதை விட, போராடி பெரும் உரிமையை மதித்த ஈழ சொந்த்தத்தை பற்றி பேச [obscured]போன்ற கொலை கார பரதேசிகளுக்கு அருகதை இல்லை.

    • //கஷ்மீர், இந்தியாவின் சொத்து!//

      இந்தியான்னா? அதில் காஷ்மீரிகளும் அடங்குவார்களா?

      கஷ்மீர் கஷ்மீரிகளின் சொத்தாகத்தானே இருக்க முடியும்!

  2. காசுமீர் போராட்டம் மட்டுமல்ல பார்ப்பனீய / ஆளும் வர்க்கத்திற்கான எந்த ஒரு போராட்டத்தையும் இந்தத்தூண்கள் கேவலப்படுத்தியே வருகின்றன. குறிப்பாக “நக்சலைட்டுகளுக்கு மாதம் 1500 ரூபாய் தருவதால் அவர்கள் சண்டயிடுகிறார்கள்” போன்ற புரளிகள் பொய்கள் ஏராளம். நம்மிடம் ஒரே ஒரு கேள்வி இருக்கிறது “சரி அவர்கள் காசு வாங்கட்டும் இல்லை காசு வாங்காமலே சண்டை போடட்டும், இந்திய மூத்திரத்தின் மறு பதிப்புக்களே நீங்கள் களத்திலிறங்கி தேசத்தை காத்து விடுங்கள், அதிலென்ன தயக்கம்?” வெள்ளைக்காரன் கொள்ளையடிக்கும் போதும் சரி, தற்போதும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு பாய் விரிக்கும் இந்த பரத்தைகளுக்கு எதிராக உழைக்கும் மக்கள் அன்றூ முதல் இன்று வரை போராடி வருகிறார்கள்.

    கலகம்

    • //இந்திய மூத்திரத்தின் மறு பதிப்புக்களே//

      நீர் எந்த நாட்டு மூத்திரம்?

  3. நேற்று சி என் என் ஐபிஎன்ல் நக்சல்பாரிகளின் மாஸ்டர் மைண்டு என்று ஒரு 20 வயது ஜர்னலிஸ்ம் படிக்கும் இளைஞனை சட்டீஸ்கர் போலீசு அறிவித்துள்ளது குறித்து விவாதம் நடந்தது( face the nation). அருந்ததிராய் உள்ளிட்ட பல மனித உரிமையாளர்களை, எழுத்தாளர்களை இந்த மாஸ்டர் மைண்டுடன் நேரடி தொடர்புடைய மாவோயிஸ்டுக்காரர்கள் என்று சட்டீஸ்கர் போலீசு குறிப்பிட்டிருந்ததும் விவாதிக்கப்பட்டது.

    அதில் அந்த ஜர்னலிஸ்ம் மாணவரும், அவரது வக்கீலும் கலந்து கொண்டனர். வக்கீல் சுலபமானதொரு கேள்வி கேட்டார். துரோகமான முறையில் படுகொலை செய்யப்பட்ட தியாகத் தோழர் ஆசாத் அவர்கள் இந்திய அரசியலமைப்பு என்பது பெரும்பான்மை மக்களைப் பொறுத்த வரை ஒரு கழிப்பறை காகிதம் என்று சொல்லியிருந்ததை குறிப்பிட்டு கேள்வி கேட்டார். ஒருவர் அரசியலமைப்புச் சட்டத்தை கழிப்பறை காகிதம் என்று சொன்னாலே அவரை சுட்டுக் கொல்லும் உரிமை அரசுக்கு வந்துவிடுமா என்பதுதான் கேள்வி.

    அதற்கு சிபிஐயைச் சேர்ந்து ஒரு பன்னு மண்டையன் சொன்ன பதில், ‘இந்திய அரசியலைமைப்புச் சட்டத்தை ஏற்றுக் கொண்டு நாங்கள் உள்ளோம். அதை ஏற்றுக் கொள்ளாமல் ஒருவர் இங்கு இருப்பது அனுமதிக்க முடியாது. எப்படி இரு நிலைப்பாடுகள் ஒருங்கே இருக்க முடியும்’ என்றார். சிஎன் என் ஐபிஎன் நிகழ்ச்சியை நடத்திய ஒருங்கிணைப்பாளரே அதிர்ச்சியடைந்துவிட்டார். பல எதிர்க் கருத்துக்களும் ஒருங்கே செயல்படுவதுதான் ஜனநாயகம் என்று அவர் வலியுறுத்திச் சொல்லி சிபிஐ பன்னு மண்டையனுக்கு பல்பு கொடுத்தார். வக்கீல் இந்த இடத்தில் ஒரு விசயத்தைச் சொன்னார், இந்திய போலீசு பாசிச மயமாகி வருகிறது, அரசோ எந்த எதிர்கருத்தினைக் கண்டும் வெறுப்படையும் நிலைக்குச் சென்றுவிட்டதையே இந்த நிகழ்வு காட்டுகிறது என்றார்.

    காஷ்மீர் விசயத்திலும் இதுதான் நடந்து வருகிறது. பத்திரிகைகள் இதற்கு ஒத்து ஊதுவதில் ஆச்சர்யமில்லை. மக்களிடம் இவர்களை அம்பலப்படுத்தி விரிவாக கொண்டு செலல வேண்டிய வேலை ஜனநாயகத்தை விரும்பும் அனைவரின் கடமையாக உள்ளது. காஷ்மீர் பிடிபி கட்சியினர் டைம்ஸ் ஆப் இந்தியாவிற்கு இரு நாட்கள் முன்பு அளித்திருந்த பேட்டியும் வாசிக்கத் தகுந்தது.

    • நீர் சட்டம் இயற்றும் சபைகளிலோ, ஜனநாயக்கத்தை நம்பும் கட்சிகளின் மேடைகளிலோ,எதிர் குரலிடுங்கள்! வன்முறை பாசறைகளில் வெகுஜன விரொத, தேசத் துரோக நச்சைக் கக்கும் போது, நடவடிக்கைக்கு உட்படுவீர்! தடி எடுத்தவன் எல்லாம், புரட்சியாளன் என்றால், உகாண்டா போன்ற ஆப்பிரிக்க நாட்டு நிலைமையைத் தான் விரும்பிகிறீர்களா?

  4. அந்த வக்கீல் குறிப்பிட்ட இன்னொரு கருத்து, சட்டீஸ்கர் போலீசு இது போல அறிக்கை வெளியிட்டவுடன் இந்தப் பிரச்சினையை பெரிதாக்கியதற்கு காரணம் உள்ளது என்று சொன்னார் வக்கீல். அவரது சந்தேகம் என்னவென்றால், இது போல ஒரு அறிக்கையை வெளியிட்டுவிட்டு சில நாட்களுக்குப் பிறகு லிங்கரமை ரகசியமாக கடத்திச் சென்று என்கௌண்டர் செய்து கொன்றுவிட்டு, மாவோயிஸ்டு முக்கியத் தளப்தி கொல்லப்பட்டார் என்று செய்தி வெளியிடும் வாய்ப்புள்ளது என்கிறார் வக்கீல்.

    அசாத் விசயத்தில் அவருடன் ஒரு பக்கம் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டே அது இறுதிக் கட்டத்தை நெருங்கும் நிலையில் அவரை போட்டுத்தள்ளிய துரோகிகள்தானே பாசிதம்பரம் குமப்ல்? (கட்டுரைக்குத் தொடர்பில்லை எனினும் பதிவு செய்ய வேண்டிய அவசியமுள்ளதால் இங்கு பதிகிறேன்)

  5. தினமணியோட தேச பக்தி தெரிஞ்ச விஷயம்தான். ஆனா வைத்தியநாதன் ஆசிரியரானதுக்கு பிறகு அது ரொம்பவே அதிகமாயிட்டு வருது….

  6. அந்த வக்கீல் என அசுரன் குறிப்பிடுவது பிரபல மனித உரிமை ஆர்வலரும், உச்சநீதி மன்ற மூத்த வழக்கறிஞருமான பிரசாந்த் பூஷண் (முன்னாள் மத்திய சட்ட அமைச்சர் சாந்தி பூஷணின் மகன்) என நினைக்கிறேன்.

  7. 1947களில் அங்கு இருந்த கட்சிகள் மதச்சார்பற்ற காஷ்மீர் என்றே பிரச்சாரம் செய்து வந்தன. குறிப்பாக 1984வரை அங்கு இந்திய எதிர்ப்பு போராட்டம் என்பது இன்று இருந்தது போல நடக்கவில்லை. 1984களுக்குப் பிறகு, இந்திரா காந்தி காஷ்மீரில் செய்த அட்டூழியங்களும், ஜனநாயகத்திற்கான இடத்தை சீரழித்ததும் நடந்த பிறகுதான் ஆயுதம் தாங்கிய எழுச்சி அங்கு வேர் கொண்டு வலுப் பெற்றது. முஸ்லீம் அடிப்படைவாதிகள் பண்டிட்கள் மீது தாக்குதல் தொடுத்ததும்(இந்திய அரசும் அத்தகைய தொரு மத அடிப்படை பிளவை ஊக்குவித்ததும்) 1984களுக்குப் பிறகுதான் ஆரம்பித்தது.

    //http://www.kashmir-information.com/Kilam/chapter9.html//
    இங்கு அவுரங்கசிப் காலத்தில் காஷ்மீரில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம்களும், வசதியடைந்த இந்து பண்டிட்களும்

    In Kashmir we have already noticed that the policy of the Moguls was not to encourage the local Muslims. But though the feudal Muslims families were crushed, other families had come into prominence who amassed huge wealth by following trade and commerce as their profession. Along with them there arose another class of commercial magnates who had migrated from the neighbouring provinces of the Punjab and Delhi. These were invariably Khatri Hindus. They conducted a brisk business and had a great hand in the export trade. They had established a colony of theirs in Mohalla Gulshan near Hariparbat close to the royal palaces. The high class Pandits had taken their residence at Rainawari which is a suburb of Srinagar close by the seat of the Government, which existed then inside the fort surrounding the Hariparbat hill.

  8. என்று ஈழத்தமிழர்களுக்கு இந்திய அரசு துரோகம் இழைத்ததோ- அன்று முதல் எவரின் இருப்பு, இறப்பு குறித்த அக்கறையையும் தொலைத்தோம்.

    • உங்களுக்கு ஈழ தமிளன தவிர வேறு மனுச பிறப்புகள தெரியாது போலருக்கு.கொஞ்சம் கண்ணா முழிச்சு வெளிய வாங்க.

  9. காஷ்மீர் மக்களின் உணர்வு போராட்டத்தை அங்கீகரிக்கும் அதே நேரத்தில் வினவு இப்படி ஒரேடியாக பாகிஸ்தான் தூண்டுதலை நிராகரித்து பேசுவது உங்களின் இந்திய துவேஷத்தையே காட்டுகிறது. மக்கள் போராட்டத்தில் எண்ணை விட்டு அதில் எரியும் நெருப்பில் குளிர் காயும் வேலையை நீண்ட நாட்களாக பாகிஸ்தான் செய்துவருகிறது என்பது வெள்ளிடைமலை. தினமணியின் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இதுதான்:

    http://kanchangupta.blogspot.com/2010/07/intercepted-tell-tale-messages.html, http://timesofindia.indiatimes.com/india/Did-separatists-plan-instigate-Kashmir-violence/articleshow/6143623.cms, http://indiatoday.intoday.in/site/Story/104686/separatists-planned-and-instigated-kashmir-violence.html?complete=1 .

    இந்த transcript உள்துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்டிருப்பதால் இட்டுகட்டியது என்று நீங்கள் சொல்லலாம். அதனால் மட்டுமே அதில் உண்மையில்லாமல் போகாது. காஷ்மீரில் தீவிரவாத செயல்களை, சரி உங்கள் கருத்துப்படியே உரிமைப் போராட்டத்தை, நிதியளித்து அதை தீவிரப்படுத்த முடிந்தளவு அதில் வன்முறையை புகுத்த ஆன மட்டும் எல்லாம் ஏற்பாடு செய்யப்படுகின்றன. இதை முற்றும் முழுதாக மறுத்து பேசி எல்லா செயல்களுக்கும் இந்திய அரசு மட்டுமே காரணம் என்று குற்றம் சொல்வது நேர்மையான அணுகுமுறையாக இருக்காது. வினவு இதை பரிசீலிக்க வேண்டும்.

    பரிசீலிக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்ள காரணம் இணையத்தில் மாற்று செயல்பாடுகளுக்கான தளங்களில் வினவு மிக முக்கிய இடத்தை பெற்றுள்ளது என்பதை இப்போது வரை ஏற்றுக் கொண்டிருப்பதால் தான்.

  10. இந்த கட்டுரையை படித்தவுடன் இதை எழுதிய உங்களை உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று தோன்றுகிறது. ஏனென்றால் இந்த எழுத்துக்கள் எல்லாம் இந்திய ராணுவ வீரர்களின் வீராதி இழிவு செய்வதாக உள்ளது
    நீர் கருத்து /எழுத்துரிமையை தவறாக உபயோகிகிரீர்கள். ஒரு சில காஷ்மீர் இளைஞர்கள் பணம் வாங்கிகொண்டு போராட்டத்தில் ஈடுபுத்வாது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    உம்மால் அவர்கள் பணம் வாங்க வில்லை என்று நிருபிக்க முடியுமா ? நிருபீதுதன் இதை எழுதினாய?

    பகுத்தறிவு என்கிற பெயரில் நீ ஒரு மத துவேஷம் செய்கிறாய். நீ பாகிஸ்தான் அனுதாபி என்றால் இங்கே என்ன செய்கிறாய்?

    காஷ்மீர் சென்று போராட வேண்டியது தானே.

    இது போன்ற கட்டுரைகளை இனிமேல் எழுதாதே

    • ///காஷ்மீர் சென்று போராட வேண்டியது தானே.////

      அட வென்னை வெட்டி!

      நீ இந்தியாவுக்காக எங்க போயி போராடுன?

      காஷ்மீர்லயோ, மனிப்பூரிலோ போயி இந்தியாவுக்காக போராடவேண்டியது தானே?

      இந்த போராட்டத்தில் கொல்லப்பட்ட இருபதுக்கும் அதிகமானோர் மற்றும் இதற்கு முன் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கானோர், பாலியல் வன்முறை செய்து கொல்லப்பட்ட பெண்கள் இவர்களைப் பற்றி வாயே திறக்காத நீர், இராணுவதின் வீரத்தை மார் தட்டுவது நல்ல காமெடிதான்!

    • ஈழத்தலைவனின் சகோதரயுத்தம்,எதற்கும்/எவருக்கும் ஒப்புக்கொள்ளா தான் தோன்றித்தனம்,மூடத்தனம்,இவையே ஈழ அவலத்திற்கு காரணமேயன்றி, இந்தியாவையோ,இந்தியத் தலைவர்களையோ,பழி போடமுடியாது! மேலும் கர்னல் கருணா போன்ற, ஈழ(ன)ப்பிறவிகள்,காட்டிக் கொடுத்தது? கருணாவும் தமிழன் தானே!

  11. தினமணி,தினமல(ம்)ர் போன்ற பன்னாடை பத்திரிக்கைகளின் மேல் கல் என்ன குண்டு வீசினால் கூட திருந்த மாட்டார்கள்.

  12. ஐயா,

    தமிழ் நாட்டை தயவு செய்து பங்க்ளாதேஷுக்கோ,ஸ்ரீலங்காவுக்கோ கொடுத்துடங்கய்யா.உங்களுக்கு புண்ணியமாய் போகும்.

  13. வினவு ஒரு முஸ்லிம் தீவிரவாத அமைப்பா ??? ஏன் இந்தியாவில் இருதுகொண்டே இந்தியாவை ஒழித்துகட்ட நேனைகிண்டேர்கள் ??? நீங்கள் உங்கள் அன்பு பாகிஸ்தான் கே சென்று அங்கு உங்கள் திவேர்வாத முகமாய் நடத்துங்கள்

  14. vasu ஒரு இந்து பயங்கரவாத மாமாவா? ஏன் இந்தியாவில் இருந்து கொண்டே இந்தியர்களை, பாரதமாதாவை பன்னாட்டு கம்பேனிகளுக்கு கூட்டிக் கொடுத்தால்தான் வசதியாக வாழ முடியும் என்று சொல்கிறார்?

    • ஒன்றை சொன்னால் அதற்கு சம்பந்தம் இல்லாமல் எதாவது உள்ளர்வது தான் இந்த வந்முரையலர்களுக்கு தெரிந்தது

  15. உங்களுக்கு தைரியம் இருந்தால் தமிழ் நாட்டில் தெருவில் இருந்து இந்த கட்டுரையை படிங்கள் ….. தமிழ் நாட்டில் ஏன் இந்தியாவில் 99 % பேர் நாட்டுப்பற்று கொண்டவர்கள் ….உங்களை போன்ற வந்முரையள்ளர்களுக்கு இந்த நாட்டில் இடம் இல்லை 🙂

    • ஹி..ஹி.. போபால் மக்களுக்கு நீதி கேட்டு ஒருவாரமாக தெருமுனைப் பிரச்சாரங்கள் தமிழ்நாடு முழுதும் நடக்கிறது. மேலும் ஆகஸ்டு 15 அன்று சென்னையில் டௌ வே வெளியேறு என்று முற்றுகை போராட்டமும் நடைபெற இருக்கிறது. வந்து பாரும் வாசு அப்புறம் பேசு தைரியம் இருக்கா இல்லையான்னு.

      • அண்ணே நா காஷ்மீர் பத்தி வினவு எழுதன இந்த கட்டுரையை பத்தி பேசற …………..நீங்க சம்பந்தம் இல்லாம போபால் ல பேசுறேங்க ……முதல நல்ல படிங்க அண்ணே ………

        எதுகேடுதாலும் போபால் போபால் போபால் ஏற ஏதும் உங்களுக்கு தெரியாத ???

        • போபால் ல பத்தி மட்டும் ஏதும் வின்னவு ……அடிகடி ரயில்வே உழியர்களின் தவறால் வருட வருடம் பலர் உயிர் இழப்பதை ஏன் எழுதவில்லை ???? ஏன் ரயில்வே Union ஐ கண்டிப்பது இல்லை ……

        • நீங்க தமிழ்நாட்டுக்கு புதுசா அண்ணே. வினவு காஷ்மீர் பத்தியும் நிறைய பிரச்சாரங்கள் செய்திருக்கிறார்கள். நீங்க தைரியம் இருக்கான்னு கேட்டதால இப்போ நடந்துகொண்டிருக்கிற பிரச்சாரத்தைப் பற்றி சொன்னேன். இப்போ சொல்லுங்க வினவுக்கு தில்லு இருக்கான்னு?

        • Kalai i think some thing wrong with you.

          I know they wrote about kashmir …first read what i wrote above then write comment …plz dont blindly write something it looks kiddish

        • வா..சு,
          இந்த கட்டுரையை தெருவில் படிச்சா மட்டும்தான் தைரியம் இருக்குன்னு ஒத்துக்குவீங்களா? ஏற்கெனவே படிச்சத சொன்னா ஒத்துக்கமாட்டீங்களா. கார்கில் போர் நடந்த சமயதிலேயே அப்போரைக் கண்டித்தும், ”காஷ்மீர் யாருக்குச் சொந்தம்” என்று பிரச்சாரம் செய்தும் வெளியீடும் வெளியிட்டு இருக்கிறார்கள்.

        • அட பாவிகளா இந்தியாவுல இப்படியும் இருகிகளா ?? கஷிமிர் யாருக்கு சொந்தம் ?? பாகிஸ்தானுக ?? ஆமாம் உடனே அங்கு ஒட்டு எடுக்க வேண்டும் அந்த மக்கள் என்ன விரும்புகிரன்களோ அதான்னு சொல்லுவேங்க ???

          பாகிஸ்தான்ல இருக்கிற ஹிந்து வ கேட்ட இந்தியாவோட இருக்கணும்னு சொல்லுவான் அப்பா பாகிஸ்தான பிரிச்சி இந்தியாவுக்கு கொடுபிங்கள ??? இல்ல இந்தியாவுல இருக்கிற பல தர பட்ட மக்களும் அப்படி ஒட்டு வச்சா இதியவ 10000 பகுதி பகுதி யா தனி நாடா கேட்பனுங்க அத செய்ய முடிமா ?? இந்திய மட்டும் இல்ல உள்ளகத்தில் எள்ளநாடும் அப்படிதான் …… ஏன் இந்தியாவில் இருதுகொண்டே இப்படி துரோகம் செய்ய ரீக ??

          தைரியம் இருந்த election நின்னு மக்கள் கிட்ட உங்க கருத சொல்லி வோட்டு வாங்கி பதவிக்கு வந்து உங்கள்ளல் முடித்த மாற்றத்தை செயுங்கள் …….இந்திய ஒரு ஜெனநாயக நாடு யாரும் இங்கு ராஜா தான் ……..வெறும் ஒரு 100 பேர் சேர்த்து இப்படி ஒரு செய்தி போட்டு அதை பாராட்டுவதால் அது சரி ஆகிவிடாது ……

          ஒவொரு மனிதனும் ஒவொரு கறுத்த சொல்லுவான் அது அனைத்தையும் எப்படி செய்யமுடியும் ????

        • ”ஆமாம் உடனே அங்கு ஒட்டு எடுக்க வேண்டும் அந்த மக்கள் என்ன விரும்புகிரன்களோ அதான்னு சொல்லுவேங்க ???”

          ஆமாம். அதத்தான் நானும் சொல்லுறேன். காஷ்மீர் மாநிலம் முழுதும் ஒரு ஓட்டெடுப்பு நடத்துங்கள். அந்த மக்கள் எதற்கு மெஜாரிட்டியாக வாக்களிக்கிறார்களோ அதன்படி அவர்கள் செயல்பட அனுமதி அளிப்பதுதானே நியாயம்.

  16. ”தைரியம் இருந்த election நின்னு மக்கள் கிட்ட உங்க கருத சொல்லி”
    உங்களுக்கு தைரியம் இருந்தா உங்கருத்தை காஷ்மீருல போய் சொல்லுங்க பார்ப்போம்.

  17. So can we have same vote in Madurai, Thrichy, coimbature, AP, KN…etc..etc

    Wow india can be separated as like you wish in to infinite number of pieces …

    BUt sorry kalai people same like your thinking is very very less…. all others are think otherway……you can just talk like this here …lol …. 🙂

    I guess your name is wrong …should be something else … right ?

    • //So can we have same vote in Madurai, Thrichy, coimbature, AP, KN…etc..etc

      Wow india can be separated as like you wish in to infinite number of pieces …//

      வோட்டு எடுப்பதுதான் நியாயம் என்பது ஒருபக்கம் இருக்கட்டும்.

      காஷ்மீரை இந்தியாவுடன் தற்காலிகமாக வைத்திருக்க போடப்பட்ட ஒப்பந்தத்தின் படி காஷ்மீரில் இந்தியா நியாயமாக வோட்டெடுப்பு நடத்தியிருக்க வேண்டும்.

      அதை ஏன் செய்யவில்லை. நியாயவான் எனில் ஏன் பயப்படவேண்டும்?

      • When India sign that pact kashimir was not toxidized in the name of religion, there were lot of muslims and hindus. But after that some group of muslims purposly planned, killed and chased away lot of pandits and hindus (i hope you agree that) …… with the help of pokistan separtists already brain washed huge number of muslims in kashimir against india.

        So they trap the death pit for india, then why india have to get in to the trap hole? you are talking about agreements right ? How many country follow agreement ? Agreements are always made with terms and conditions, if those violated no one follow agreements.

        Hope you know how many agreements pakistan, china violated too. Ok Now just tell me onething …60 years back as per kashimir request india saved that part from pakistan …for that we lost so many number of soliders and to save that kashimir until now so many innocents aslo killed …india invested billions of money in kashmir ….we are not running military rule like pakistan, its a pure democracy and people choose their leader and have their own rules and law…. then suddenly due to religion reason if you want to separate kashimir …you think india is a fool to do what ever you want ???

        Can you show me which country helps minority people as such India ??? See Malaysia, dubai…etc how they hindus… India is the only country giving so much benifits to minority… then i dont know what else havn’t done……..

        Anyway i dont understand you guys….you all talking so wierd …

        1. Why you are so much against india ?? Are you not Indian ?

        2. I am very schocked to see you guys wish so much to see india destroyed ? Why ?

        3. What makes you all so much unhappy about india ?

        • //…you think india is a fool to do what ever you want ???//

          காஷ்மீர் தனியாகப் போக வேண்டும் என்பது எனது விருப்பம் அல்ல. அங்கு மக்களின் விருப்பம் எதுவோ அதை செய் என்பதே எங்களது கோரிக்கை. இதைத்தான் எங்குமே கோர முடியும். அதுவே ஜனநாயகம் என்கிறோம் நாங்கள்.

          இணைந்து வாழ விருப்பப்பாடாத ஒருவருடன் மண உறவை வன்முறை கொண்டாவது நீடிக்க இயலும் என்று நம்பிக் கொண்டு மனநோய் பிடித்து அலைகிறது இந்திய ஆளூம் வர்க்கம். அவ்வாறு மனநோயாளியாய் அலைவதற்கு இந்திய அரசுக்கு சில தேவைகளும் உள்ளன. எனவே செய்கிறது. ஆனால் இது தெரியாமல் நாட்டுப் பற்று என்ற பெயரில் இந்திய ஆளும் வர்க்கம் செய்யும் அனைத்தையும் நியாயப்படுத்தும் மன நோயாளிகளாய் படித்த உயர் நடுத்தர வர்க்கத்தினர் இருக்கின்றனர்.

        • //…India is the only country giving so much benifits to minority…//.yes Vasu.Because of `benefits`Muslim minorities in India are living heavenly life.Evidence;Rajendra sachar committee report.o.k.carry on.Sky is the limit for the people like you.

      • //When India sign that pact kashimir was not toxidized in the name of religion, there were lot of muslims and hindus. But after that some group of muslims purposly planned, killed and chased away lot of pandits and hindus (i hope you agree that) //

        எப்போ நடந்தது? இது நடந்தது 1984க்கு பிறகு, அதாவது இந்திரா அரசு அங்கு ஜனநாயகத்தின் குரலை அழித்து நொறுக்கி அட்டூழியம் செய்த பிறகு.

        அது வரை அங்கு மதப் பிரிவினை பேசும் ஒரு அரசியல் கட்சி கூட கிடையாது.

        காஷ்மீர் இந்திய துணைக் கண்டத்தில் மதச் சார்பின்மைக்கு ஒரு அற்புதமானதொரு இலக்கணாமாக திகழ்ந்த மாகணம். இன்றைக்கு இத்தனை அநியாயங்கள் நிகழ்ந்த பிறகும் அங்கு மதச் சார்பின்மைக்கான எல்லா சாத்தியக் கூறுகளும் தெரிகின்றன( பாஜகவின் இந்துத்துவ அரசியல் குழப்பம் அங்கு விளைவித்துள்ள நாசங்கள் பெரிய தடை). பாஜகவின் அரசியல் அங்கு நுழைவதற்கு முன்பு ஒரேயொரு முறையாவது அமர்நாத் யாத்திரை தடுக்கப்பட்டுள்ளதா? ஒரு முறை? பாஜாக தனது மத வெறி பிரச்சாரத்தை வைத்து மக்களை பிளவுபடுத்தி அமர்நாத் யாத்திரயை பிரச்சினையாக்கிய பிறகுதானே அதற்கு மதச் சாயம் பூசப்பட்டது?

        வரலாற்றை பக்கச்சார்பாக படிக்காமல் அனைத்தையும் படியுங்கள். தீர்வைத் தேடி படியுங்கள், சுய விருப்பு வெறுப்புகளுக்கு தீனி தேடி வரலாற்றை வாசித்தால் அது தவறுகளை திரும்பச் செய்வதில்தான் முடியும்.

  18. //When India sign that pact kashimir was not toxidized in the name of religion, there were lot of muslims and hindus. But after that some group of muslims purposly planned, killed and chased away lot of pandits and hindus//

    முதல்ல காஷ்மீரோட வரலாறு என்னவென்று படிங்க vasu. ஏன் 1984க்குப் பிறகு அங்கு மத பிரிவினை வந்தது. ஏன் இன்னமும் ஜம்முவில் இந்து பண்டிட்டுகள் பாதிக்குப் பாதி உள்ளனர்?

    ஏன் அங்கு நடந்த ஒரு சமீபத்திய சர்வேயில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதி மற்றும் இந்திய ஆக்கிரமிப்பு பகுதி – இரண்டிலுமே விடுதலை நாடு வேண்டும் என்று மக்கள் வோட்டளித்திருந்தனர்?

    இவ்வாறு வோட்டளித்தவர்களில் காஷ்மீர் பண்டிட்டுகளும் உண்டு(ஜம்மு 43% வோட்டளித்துள்ளனர்). இதற்கு முன் காஷ்மீர் பண்டிட்டுகளிடம் பேசியிருக்கிறீர்களா? பேசிப் பாருங்கள். காஷ்மீர் பண்டிட்டுகள் அகதிகள் முகாமில் வைக்கப்பட்ட நிகழ்வில் இந்திய அரசின் பங்கு என்னவென்று விசாரியுங்கள்.

    //1. Why you are so much against india ?? Are you not Indian ?//

    இத நான் கேக்கனும். நீ இந்தியன் இல்லையா? இந்தியாவை ஏன் பன்னாட்டு கம்பனிக்கு காட்டிக் கொடுக்கிறாய். நான் யாருக்கும் காட்டிக் கொடுக்கவில்லை. பெரும்பான்மை மக்களுக்கு எது நலமோ அதைப் பேசுகிறேன்/றோம்.

    //minority people as such India ???//

    ஆமாம் மைனாரிட்டியான மேல் சாதி, பானியா, பார்ப்பனர்களை தூக்கி வைததுக் கொண்டாடும் உங்களது இந்தியாவை எனக்குப் பிடிக்காது. எனது இந்தியா வேறு. அது உங்களுக்குப் பிடிக்காது(உதாரணம்: நோக்கியா கட்டுரை).

    //2. I am very schocked to see you guys wish so much to see india destroyed ? Why ?//
    நான் கூட உங்களது இந்தியாவை தூக்கியெறியும் அனுகுமுறை கண்டு மிக அதிர்ச்சியடைந்துள்ளேன். நாடு என்பது அதன் மக்கள்தான் எனில் இந்தியாவின் பெரும்பகுதியை அறிவிக்கப்படாத அவசரநிலையில் ராணூவத்தின் துப்பாக்கி முனையில் வைத்துள்ள ஒரு அமைப்பை தூக்கியெறிய வேண்டும் என்றே ஒருவன் விரும்புவான். நீங்களோ அவ்வாறு வைத்தாவது நோக்கியா போன்ற பன்னாட்டு கம்பனிகளுக்கு கொடுக்க வேண்டும் என்கிறீர்கள்.

    எனக்கு காஷ்மீர் போதும் என்கிறீர்கள். நாங்களோ இங்கு நாட்டுக்குள்ளேயே SEZக்களின் பெயரில் MOUக்களின் பெயரில் காடு, மலை, விவசாய நிலங்களை வெளிநாட்டு கம்பனிகளுக்கு எழுதி வைப்பதை தடுக்க வேண்டும் என்கிறோம்.

    எங்களுக்கு மக்களின் மீது பற்று அதிகம், அதைப் பெருமையுடன் எங்கும் சொல்வோம். அதுபோல உங்களால் சொலல் இய்லாதத்தை இந்தியா மீது பற்று என்று பூடகமான சொற்களால் பூசி மெழுகுகிறீர்கள்.

  19. //எங்களுக்கு மக்களின் மீது பற்று அதிகம், அதைப் பெருமையுடன் எங்கும் சொல்வோம். அதுபோல உங்களால் சொல்ல இய்லாதததை இந்தியா மீது பற்று என்று பூடகமான சொற்களால் பூசி மெழுகுகிறீர்கள்.//

    மிகவும் சிறப்பான வரிகள். தாராளமய தாசர்களுக்கு அனைத்திற்குமான பதிலாக இது ஒன்று போதும்.

  20. As per the aggreement with the then ruler of Kashmir, it was added as a indian state for a temporary period only. The aggreement says, there has to be an election and the decision should be based on that, whether to keep the state with India or Pakistan or as an Independant country. But other states of India didn’t have such an aggreement. So IT IS mandatory to follow the aggreement, otherwise it will be a betrayal.

Leave a Reply to Vasu பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க