privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தொழிலாளர்கள்வளைகுடா ஷேக்குகளிடம் வதைபடும் தொழிலாளர்கள் ! நேரடி ரிப்போர்ட் !!

வளைகுடா ஷேக்குகளிடம் வதைபடும் தொழிலாளர்கள் ! நேரடி ரிப்போர்ட் !!

-

சௌதி அரேபியா. மன்னராட்சியிலேயே இன்னும் நீடித்திருக்கும் மத்திய தரைக்கடல் நாடுகளில் ஒன்று. பெரும்பகுதி பாலைவனம். இந்தியா அளவுக்கு பரப்பளவைக் கொண்டிருந்தாலும் மக்கள் தொகையோ ஒப்பீட்டளவில் வெகு சொற்பம். எந்தவித வளங்களும் இல்லாதிருந்த இந்நாடு எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு தலை கீழாய் மாற்றமடைந்தது. அமெரிக்காவின் அராம்கோ நிறுவனம் எண்ணெய் துரப்பணத்தை தன்னுடைய பொறுப்பில் எடுத்துக்கொண்டது, சில மாற்றங்களுடன் இன்றும் அது தொடர்கிறது.

அதுவரை ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த நாடாக மட்டுமே அறியப்பட்ட சௌதி, எண்ணெய் பாயத்தொடங்கியவுடன் உள்கட்டுமானம், வளர்ச்சிப் பணிகள் என்று பெருமளவில் வேலை வாய்ப்புகளை கொண்ட நாடாக வளர்ந்தது. அந்த வகையில் எழுபதுகளின் பிற்பகுதியில் உடலுழைப்புக் கூலிகளாய் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை போன்ற நாடுகளிலிருந்து தருவிக்கப்பட்டனர்.

துபாயின் புறநகரில் உள்ள சோனாபூர் கொத்தடிமை கூடாரத்தில் பன்னாட்டு தொழிலாளர்கள்

சௌதியின் மக்கள் தொகைக்கு ஈடாக வெளிநாட்டவர்கள் வேலை செய்தாலும், தொழிலாளர்களின் உரிமை என்று எதையும் எதிர்பார்க்கமுடியாது. சொந்த நாட்டு மக்களுக்கே கூட ஜனநாயக உரிமைகள் என்று எதுவுமில்லை. அரசியல் கட்சிகளுக்கு அனுமதியில்லை. கூட்டம் கூடி பேசும் உரிமையையோ, எழுதி வெளியிடும் உரிமையையோ நினைத்துக்கூட பார்க்கமுடியாது. அச்சிடப்படும் நூல்கள் அனைத்தும் தணிக்கைக்குப் பிறகே வெளியிடப்படும், நாளிதழ்கள் தணிக்கை செய்யப்படுவதில்லை என்றாலும் அரசுக்கு எதிராக எதையும் எழுதிவிட முடியாது. மக்களும் அப்படியே பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். அரசருக்கோ, அரசுக்கோ எதிராக எதையாவது பேசும் நிர்ப்பந்தம் ஏற்பட்டால் கூட சுற்றுமுற்றும் பார்த்து தாழ்ந்த குரலில் பேசுவதே மக்கள் வழக்கம்.

இந்நிலையில் வெளிநாட்டுக் கூலித்தொழிலாளர்கள் என்ன உரிமையை எதிர்பார்த்துவிட முடியும்?
குறைந்தபட்ச ஊதியம் என்று எந்த வரம்பும் இங்கு கிடையாது. நிறுவனத்திற்கேற்றாற்போல், நாட்டிற்கேற்றாற்போல் ஊதிய ஒப்பந்தம் போடப்படும். ஒரே வேலையைச் செய்யும் இருவேறு நிறுவனங்களின் தொழிலாளிகளுக்கு ஒரே விதமான ஊதியமும் வசதிகளும் இருக்குமென எண்ணிவிடமுடியாது. ஒரே வேலையைச் செய்யும் ஒரே நிறுவனத்தின் தொழிலாளிகளுக்கு கூட நாட்டைப் பொருத்து ஊதியம் வேறுபடும்.

துப்புறவுத் தொழிலாளி ஒருவருக்கு எகிப்தைச் சேர்ந்தவராக இருந்தால் 1200 ரியால் வரை ஊதியம் கிடைக்கும், பிலிபைனியாக இருந்தால் 900 ரியால், இந்தியனுக்கு 800 ரியால், பாகிஸ்தானி, இந்தோனேசியனுக்கு 600 ரியால், இலங்கை என்றால் 500 ரியால், பங்காளி (வங்கதேசம்) என்றால் 400 ரியால், தற்போது நேபாளத்திலிருந்து 300, 250 ரியாலுக்கு கூட ஆட்கள் வருகிறார்கள் (ஒரு ரியால் என்பது இந்திய மதிப்பில் தோராயமாக 12 ரூபாய்) இது அந்தந்த நிறுவனங்களைப் பொறுத்து சற்று கூடக் குறைய இருக்கும்.

ஊரில் மிச்சமிருக்கும் கொஞ்ச உடமைகளையும் விற்று, கடன் வாங்கி, தாலியை அடகுவைத்து பெரிய தொகையை தரகனிடம் தந்துவிட்டு அதைவிட பெரிய கனவுடன் வந்திறங்கியதும் முள்ளாய் குத்துவது இந்த ஊதிய வேறுபாடுதான்.

ஊரில் தரப்படும் ஒப்பந்தத்திற்கும் (பெரும்பாலும் தருவதில்லை வற்புறுத்திக் கேட்டால் காண்பிப்பார்கள்) சௌதியில் வந்திறங்கியதும் போடப்படும் ஒப்பந்தத்திற்கும் ஒரு தொடர்பும் இருக்காது. மொத்த ஊதியத்தில் 60 விழுக்காடுதான் அடிப்படை ஊதியமாக இருக்கும். எந்நேரம் அழைத்தாலும் வேலைக்குச் செல்ல தயாராக இருக்கவேண்டும். எந்த ஊரில் என்றாலும் மறுப்புத் தெரிவிக்க முடியாது. வேறு வெளியாளிடமோ, வெளி நிறுவனங்களிலோ வேலை செய்யக் கூடாது, போன்றவை பொதுவான விதிகள். ஊதிய உயர்வை சட்ட்பூர்வமாக கோரமுடியாது. விண்ணப்பிக்கலாம் அவ்வளவுதான். உபரி வேலை செய்தால் அடிப்படை ஊதியத்திலிருந்து நேரக் கணக்குப்படி தருவார்கள். வேலை நாளாக இருந்தால் ஒன்றரை மடங்கு என்றும் விடுமுறை நாளாக இருந்தால் இரண்டு மடங்கு என்றும் சட்டத்தில் உண்டு. ஆனால் வெகு சில நிறுவனங்களைத் தவிர எனையவை இதை கண்டு கொள்வதில்லை.

சௌதியில் பரிதாபத்தை வரவழைக்கும் நிலையில் இருப்பவர்களில் முதன்மையானவர்கள் கட்டுமானத் தொழிலாளர்கள். 12 மணி நேர வேலை கட்டாயம். ஏனைய தொழிலாளர்களோடு ஒப்பிட்டால் குறைந்த ஊதியம். இங்கு அடிக்கும் வெயிலில் பத்து நிமிடம் நின்றாலே தோலில் சூடு தாங்காமல் ஒருவித அரிப்பு வந்துவிடும், அந்த வெயிலில் காலைமுதல் மாலை வரை நின்று வேலை செய்ய வேண்டும். நகரத்தில் எங்காவது ஒதுக்குப்புறத்தில் தங்குமிடம் இருப்பதால் போய்வருவதற்கு இரண்டு மணி நேரம் பிடிக்கும். இந்தக் களைப்புகளோடு அறைக்கு வந்தால் ஒரு அறையில் ஆறு பேர் முதல் பத்துப் பேர் வரை அடைக்கப்பட்டிருப்பர்.

சாலைகளில், வீதிகளில் துப்புறவுத் தொழிலாளர்களோ, பெண்களுக்கு ஏற்படுத்தப்பட்ட பர்தாவை பிசகாமல் பின்பற்றுகிறவர்களாய் இருப்பார்கள். கண்களையும், கைகளையும் தவிர ஏனைய அனைத்தையும் துணிகளால் சுற்றி மூடி மறைத்திருப்பார்கள். வெயிலின் தாக்கம் அப்படி.

யார் எங்கு வேலை செய்தாலும் அந்தந்த சூழலைப்பொருத்து சில சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும். ஆனால் சௌதியில் நேரிடுபவைகளை இந்த ரீதியில் வகைப்படுத்திவிட முடியாது. எந்த உரிமையும் இன்றி வேலையை மட்டும் செய் என்பதுதான் இங்குள்ள நிலை. தொழிற்சங்கம் போன்றவற்றை இங்கு ஏற்படுத்த முடியாது என்பது ஒரு புறமிருந்தாலும் பதிக்கப்படும் ஒரு தொழிலாளிக்காக இங்கு யாரும் பரிந்து பேசவும் முடியாது. வேறு எந்த வளைகுடா நாட்டிலும் இல்லாத பிரச்சனை இது.

துபாயில் தொழிலாளர்கள் போராடி மதியம் 11 மணியிலிருந்து 3 மணிவரை கட்டுமானப் பணிகள் நடைபெறக்கூடாது என்று ஆணை பெற்றிருக்கிறார்கள். மஸ்கட்டில் பாதுகாப்புச் சாதனங்கள் என்ற பெயரில் தரமற்ற எடை கூடிய உபகரணங்களை தொழிலாளர்களிடம் திணிக்காமல் தரமான, எடைகுறைந்த பாதுகாப்பு சாதனங்களை வழங்க வேண்டும் என்று உத்தரவை பெற்றிருக்கிறார்கள். இவை சாதாரணமான சிறிய சலுகைகள் தான் என்றாலும் இவைகளை வெளிநாட்டு தொழிலாளர்கள் போராடி பெற்றிருக்கிறார்கள் என்பது முக்கியமானது. ஆனால் சௌதியைப் பொருத்தவரை இதைப் போன்ற எதையும் எதிர்பார்க்க முடியாது. நிறுவனங்களின் பொறுப்பிலிருக்கும் தொழிலாளர்கள் குறித்து அரசு எந்த விதத்திலும் தலையிடுவதில்லை.

லேபர் நீதிமன்றங்கள் தொழிலாளிக்கும் நிறுவனங்களுக்கும் இடையில் எழும் பிரச்சனைகளை தீர்ப்பதற்க்காக ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. அவைகள் கடைகளிலோ அல்லது தனிப்பட்ட சௌதிகளிடமோ வேலை செய்பவர்களுக்குத்தான் தீர்வு சொல்லும் அளவுக்கு அதிகாரம் பெற்றிருக்கின்றன. பெரிய நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்கள் குறித்த புகார்களை எடுத்துக்கொள்வதில்லை. தொழிலாளிகளிடமே நிர்வாகத்திற்கு பணிந்து செல்லுமாறு அறிவுரை கூறுகின்றன.

அண்மையில் ஹைதராபாத்தை சேர்ந்த ஒரு தொழிலாளி, மருத்துவ விடுப்பில் இருந்த 15 நாளுக்கு ஊதியம் வழங்கப்படவேண்டும் என்று அஃப்ராஸ் எனும் நிறுவனத்திற்கு எதிராக (மருத்துவ விடுப்பிற்கு ஊதியம் வழங்கவேண்டும் என விதி உண்டு) அளித்த புகாரை லேபர் நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட, அதையும் புகாராகச் சேர்த்து அமீர் நீதிமன்றத்தில் (லேபர் நீதிமன்றத்திற்கு மேல் நீதிமன்றம்) அளிக்க அங்கும் ஏற்கப்படவில்லை. ஆனால் அதே நாளின் இரவில் யாருக்கும் தெரியாமல், அவனது சொந்த உடமைகளைக்கூட எடுத்துக்கொள்ள அனுமதிக்காமல், கொடுக்கவேண்டிய ஊதியமோ, எட்டு ஆண்டுகள் வேலை செய்ததற்கான பலன்களோ எதுவுமின்றி ஊருக்கு அனுப்பப்பட்டான்.

தூதரக அலுவலகங்களும், பெயருக்குத்தான் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. இந்திய தூதரக அலுவலகங்களில் தொழிலாளர்களை அலட்சியமும், அவமதிப்பும்தான் வரவேற்கும். கடவச்சீட்டு புதுப்பிப்பதைத் தவிர வேறெதற்கும் அங்கு செல்வதில் ஒரு பயனும் இல்லை. இது இந்திய தூதரகத்திற்கு மட்டுமல்ல இங்கு தொழிலாளர்களாக இருக்கும் எந்த ஆசிய நாட்டு தூதரகமும் இப்படித்தான் நடந்து கொள்கின்றன.

துபாய்-சோனாபூர் கொத்தடிமை கூடாரத்திலிருந்து

ஓவர்டைம் என அழைக்கப்படும் உபரி வேலை என்பது சௌதியைப் பொருத்தவரை ஒவ்வொரு தொழிலாளிக்கும் மிகவும் முக்கியமானது. இந்த மாதம் எத்தனை மணி நேரம் உபரி வேலை செய்திருக்கிறோம் என்பது மாதக் கடைசியில் மகிழ்வையும் நிம்மதியையும் தரக்கூடிய ஒரு விசயமாக இருக்கும். சம்பளம் மட்டும் தேவைகளுக்கு போதுமானதாக இருக்காது. ஊரில் வாங்கிய கடன், அதற்கான வட்டி, குடும்பச்செலவுகள், குழந்தைகளின் கல்வி, மருத்துவம் என அனைத்தையும் சமாளிக்க சம்பளம் மட்டும் போதுமானதாக இருக்காது. இங்கு வேலை செய்யும் அனேகம் பேர் சம்பளத்தில் ஒரு காசு கூட செலவு செய்துவிடாமல் அப்படியே ஊருக்கு அனுப்பவேண்டும் என்று வைராக்கியமாகவே இருப்பார்கள். அவர்களின் தேவைக்கு எல்லாம் உபரி வேலை தான் ஒரே வழி. உபரி வேலைக்கு சட்டப்படியான ஊதியத்தை தராமல் ஏமாற்றுகிறார்கள். அடிமையைப் போல் நடத்துகிறார்கள் என்பன போன்ற எதுவும் அவர்களைப் பாதிக்காது.

ஓய்வு வேண்டும் என உடல் கெஞ்சினாலும் உபரிவேலைக்கு செல்ல ஆயத்தமாய் இருப்பார்கள். இதில் இன்னொரு உளவியல் காரணமும் இருக்கிறது. இங்கு வேலை செய்பவர்களில் பெரும்பாலானோர் தங்கள் உடலியல் தேவைகளை அசட்டை செய்துவிட்டு வந்தவர்கள் தாம். கண்களில் வழியும் கண்ணீரைக் கூட துடைக்கத் தோன்றாமல் இளம் மனைவியிடம், முகம் பார்க்கா குழந்தையிடம் தொலைபேசியில் முத்தம் கொடுத்துக் கொண்டிருப்பவர்கள் தாம். அறையில் இருந்து ஆசைகளின் அசையில் கனன்று கொண்டிருப்பதைவிட வேலைக்குச் சென்று அந்த வியர்வையை தெளித்து வெம்மையை ஆற்றுப்படுத்துவோம் என நினைப்பதும் ஒரு காரணம்.

ஒப்பந்த நிறுவனங்கள் என்று சில இருக்கின்றன. பெரிய நிறுவனங்களிடம் ஒப்பந்த அடிப்படையில் வேலைகளைப் பெற்று தங்களது தொழிலாளர்களை வைத்து செய்து முடிப்பது இந்த ஒப்பந்த நிறுவனங்களின் பணி. இந்த நிறுவனங்கள் தங்கள் தொழிலாளர்களுக்கு தவிர்க்க முடியாத தருணங்களைத்தவிர உபரி வேலை கொடுப்பதில்லை. அதற்குப் பதிலாக இவர்கள் டபுள் டூட்டி எனும் ஆயுதத்தை கையில் வைத்திருக்கிறார்கள்.

அதாவது ஒரு இடத்தில் வேலை செய்யும் ஒரு தொழிலாளியை எட்டு மணி நேரம் முடிந்ததும் வேறொரு இடத்தில் கொண்டு விட்டுவிடுவார்கள், அங்கு இன்னொரு எட்டு மணி நேரம் வேலை பார்க்க வேண்டும். சில நாட்களில் சில மணி நேரம் உபரி வேலை என்பதைவிட மாதத்தில் எல்லா நாளும் வேலை இரட்டைச் சம்பளம் என்று கூறி சம்மதிக்க வைக்கிறார்கள். ஆனால் முதல் வேலைக்கு மட்டுமே ஒப்பந்தப்படி முழுச் சம்பளம். இரண்டாவது வேலைக்கு பாதிச்சம்பளம் மட்டுமே. நிரந்தரமான உபரி வேலைக்கு வழி செய்கிறோம் என்று எட்டு மணி நேரம் வேலை வாங்கி விட்டு நான்கு மணி நேரத்திற்கு ஊதியம் கொடுக்கிறார்கள் (முழு ஊதியமே அவர்களின் வேலைக்கு போதுமானதாக இருப்பதில்லை என்பது வேறு விசயம்)

இதுபோன்ற உபரிவேலை கிடைக்காதவர்கள் அல்லது விருப்பமில்லாதவர்களில் எட்டு மணி நேர வேலை போதும் வேறு வேலை வேண்டாம் எனக் கருதுபவர்கள் வெகு சிலரே. ஏனையவர்கள் செய்யாத வேலை இல்லை எனும் அளவுக்கு எல்லா வேலைகளையும் செய்கின்றனர். இங்கு ஒரு லிட்டர் பெட்ரோல் 50 ஹலாலா தான் (அரை ரியால்) ஆனால் ஒரு லிட்டர் தண்ணீர் இரண்டு ரியால். இதனால் மொத்தமாக தண்ணீர் பாட்டில்களை வாங்கி வைத்துக்கொண்டு சாலைகளில், சந்திப்புகளில், கடைவீதிகளில் இன்னும் செல்லமுடிந்த அத்தனை இடங்களுக்கும் சென்று வண்டிகளில் செல்வோர் நடந்து செல்வோர் என அத்தனை பேரிடமும் தண்ணீர் புட்டிகளை நீட்டி வாங்கிவிட மாட்டார்களா எனும் ஏக்கத்தை விற்றுக்கொண்டிருப்போர் உண்டு.

ஒரு நிறுவனத்தில் எட்டு மணி நேர வேலையை முடித்துவிட்டு அதற்கு மேல் குறைந்தபட்சம் பத்து கிலோமீட்டராவது கையில் தண்ணீர் புட்டிகளைத் தூக்கிக் கொண்டு நடந்து கடக்கும் இவர்களிடம், இந்த தண்ணீர் விற்கும் நிறுவனங்களால் தான் உலகில் தண்ணீர் பஞ்சம் ஏற்படுகிறது எனக் கூறும் போது வார்த்தைகள் வறண்டு விடுகின்றன.

குப்பைத்தொட்டியில் பெப்சி கேன் தேடும் தொழிலாளி

வியர்த்து வழியும் முகம், ஒரு கையில் பை, மறு கையில் போதிய நீளமுள்ள முனையில் வளைந்த ஒரு கம்பி இந்த அடையாளங்களுடன் சாலையில் அநேகரைச் சந்திக்கலாம். குப்பைத்தொட்டிகளைக் கூட வீடு வைக்காமல் கிளறித்தேடி பெப்ஸி டப்பாக்களை சேகரித்து விற்கும் இவர்களும் ஏதோ ஒரு நிறுவனத்தில் எட்டு மணி நேர வேலையை முடித்து விட்டு உபரி வேலையாய் அலைபவர்கள் தாம். யாரும் பெப்ஸி குடித்துக்கொண்டு நிற்பதைப் பார்த்தால் சற்று தூரத்தில் இவர்களும் நின்று விடுவார்கள். ஓரிரு நிமிடங்கள் ஓய்வெடுத்தது போலும் ஆகிவிடும், ஒரு பெப்ஸி டப்பா கிடைத்தது போலும் ஆகிவிடும். ஒரு பெப்ஸியின் அடக்கவிலையில் குடித்துவிட்டுத் தூக்கி எறியும் டப்பாவுக்காக 60 விழுக்காட்டை வசூலிக்கும் பெப்ஸி நிறுவனம், சாதாரணமாக 50 டிகிரியைத் தாண்டும் தகிக்கும் வெயிலில் அலைந்து சேகரிக்கும் பெப்ஸி டப்பாக்களை கிலோ ஒன்றரை ரியாலுக்கு வாங்கிக் கொள்வதை மெய்யாகவே கொல் வதை என்று சொல்லவேண்டும்.

இன்னும், துணி துவைத்துக் கொடுப்பவர்கள், முடி திருத்துவோர், தொலைபேசி அட்டை விற்பவர்கள், ஓட்டுனர்கள், கணிணி வேலை செய்பவர்கள், சமையல் வேலை செய்பவர்கள், கடைகளில் வேலை செய்வோர் என்று என்னென்ன வழிகளில் முடியுமோ அதிலெல்லாம் முனைந்து, முயன்று தங்களின் எட்டுமணி நேர வேலைக்குப் பிறகு கரணம் அடித்துக்கொண்டிருக்கும் யாரையும் சந்தித்து நாளின் பெரும்பாலான நேரத்தில் உழைத்தே தேய்ந்து கொண்டிருக்கிறீர்களே உங்களின் சூழ நிகழ்பவை குறித்து தெரிந்து கொள்ள வேண்டாமா என்றால், ஒரு அசட்டுச் சிரிப்பு “ஊரில் என்னை நம்பி ஒரு குடும்பம் இருக்கிறதே” என்பதுதான் பதிலாக இருக்கும்.

மொழி தெரியா ஒரு அன்னிய நாட்டில் பதினெட்டு மணி நேரம் வரை உழைத்தாலும், அந்த உழைப்பின் பலனில் பெரும் பகுதி உழைப்பவனைச் சேர்வதில்லை என்பதற்கு சொந்த நாடு அன்னிய நாடு என்பதெல்லாம் பேதமில்லை. உழைப்பவன் சுரண்டப்படவேண்டியவன் என்பதே பொது மொழி. சில கோடியே மக்கள் தொகையுள்ள இந்த நாட்டில் எண்ணெய் வளத்தின் மூலம் செல்வம் கொழித்தாலும் வேலையில்லாத் திண்டாட்டம் பெருகிக் கொண்டிருக்கிறது.

சௌதிகள் பெரும்பாலும் வேலை செய்வதில்லை. ஆனால் ஏழைக்கும் பணக்காரனுக்கும் இடையிலான வித்தியாசம் படு வேகமாக அதிகரிப்பதையடுத்து முதலில் எந்த நிறுவனமும் 7 விழுக்காடு அளவில் கட்டாயம் சௌதிகளுக்கு வேலை வழங்கவேண்டும் என்றும் பின்னர் இது 15 விழுக்காடாகவும் இது உயர்த்தப்பட்டது. அதையே வாய்ப்பாகக் கொண்டு இங்குள்ள நிறுவனங்கள் சௌதிகளுக்கு விதிக்கப்பட்ட குறைந்தபட்ச சம்பள வரம்பான 3000 ரியால் என்பதை நீக்கிவிட்டன. சௌதி பெண்கள் இப்போது துப்பறவு பணியாளராக 1800 ரியாலுக்கு பணி புறிகிறார்கள்.

அண்மைக் காலங்களில் இந்தியாவில் அறிமுகமான சிறப்பு பொருளாதார மண்டலங்கள், மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்கள், பெரு நிறுவனக்களின் சில்லறை விற்பனை நிலையங்கள், ஒழுங்கமைக்கப்பட்ட நகரியங்கள் ஆகிய அனைத்தும் நீண்ட காலமாகவே சௌதியில் செயல் பட்டு வருகின்றன. விளைவு வர்க்கக் கோடு தன்னை அழுத்தம் திருத்தமாக வெளிக்காட்டிக் கொண்டு வருகிறது. மக்கள் ஐந்து வேளை தொழுகிறார்களா என கண்காணிப்பதற்கு தனியாக காவல்படை(முத்தவ்வா) அமைத்த அரசு அவர்கள் வளமாக வாழுகிறார்களா என்பதை கண்காணிக்க எதையும் செய்யவில்லை.

முன்பொருமுறை தோன்றிய கம்யூனிஸ்ட் கட்சியை வெகு சுலபமாக நசுக்கிவிட்டது சௌதி அரசு. இனியொருமுறை கம்யூனிச இயக்கம் சௌதி மண்ணில் தன்னை புதுப்பிக்கும் போது அதை ஒடுக்குவது அரசுக்கு அவ்வளவு சுலபமாக இருக்கப் போவதில்லை. இன்று வளைகுடா வெயிலில் சர்வாதிகார ஷேக்குகளிடம் வதைபடும் தொழிலாளிகள், தேசிய இன வேறுபாடு, மதவேறுபாடு இன்றி வர்க்கமாய் ஒன்றிணைந்து ஏகாதிபத்தியக் கொழுப்பில் ஆட்டம் போடும் ஷேக்குகளை வஞ்சம் தீர்ப்பார்கள். தொழிலாளிகளின் வர்க்க ஒன்றிணைப்பில் வளைகுடாவின் விதி மாற்றி எழுதப்படும். அந்த நாளுக்காக நாங்கள் காத்திருப்போம், வேலை செய்வோம்.
______________________________________________________
–    வினவு நிருபர், வளைகுடாவிலிருந்து.
_______________________________________________________

  1. வளைகுடா ஷேக்குகளிடம் வதைபடும் தொழிலாளர்கள் ! நேரடி ரிப்போர்ட் !! | வினவு!…

    இன்று வளைகுடா வெயிலில் சர்வாதிகார ஷேக்குகளிடம் வதைபடும் தொழிலாளிகள், தேசிய இன வேறுபாடு, மதவேறுபாடு இன்றி வர்க்கமாய் ஒன்றிணைந்து ஏகாதிபத்தியக் கொழுப்பில் ஆட்டம் போடும் ஷேக்குகளை வஞ்சம் தீர்ப்பார்கள்….

  2. முன்பொருமுறை தோன்றிய கம்யூனிஸ்ட் கட்சியை வெகு சுலபமாக நசுக்கிவிட்டது சௌதி அரசு. இனியொருமுறை கம்யூனிச இயக்கம் சௌதி மண்ணில் தன்னை புதுப்பிக்கும் போது அதை ஒடுக்குவது அரசுக்கு அவ்வளவு சுலபமாக இருக்கப் போவதில்லை./////

    நீங்கள் நினைப்பது, நடப்பதற்கான வாய்ப்பே இல்லை.

    • மக்களுக்கு தேவை படும்போழுது ,நிறைய மக்கள் சுரண்டப்படும் பொழுது
      அங்கு புரட்சி வெடிக்கும் , புரட்சியை சூழலே தீர்மானிக்கிறது , அதனால் அது சாத்தியம்

      • Islamic fundamentalists are having control in gulf countries and people are also searching their rights and freedom, via Islamic rules and ways.. so far they are not ready to think the class struggle ..hopefully thinks are changing slowly.

  3. சுட்டெரிக்கும் உண்மைகளை வெளிக் கொண்டு வருகிறது இந்த அதிரடி ரிப்போர்ட்.

    இது தொடர்பான இன்னொரு பதிவையும் அவசியம் வாசியுங்கள்.

    கல்ஃப் ரிட்டர்ன்!
    http://www.satyamargam.com/597

  4. பதிவிற்கு நன்றிகள்.

    விட்டு போன விஷயங்கள்- ஒரே அறையில் எட்டு முதல் பத்து நபர்கள் வசிப்பது, எட்டு அல்லது பத்து நபர்களுக்கு ஒரே குளியல் அரை, கழிப்பறை.

    ஒரே அரைக்குl கணவன் மனைவி இரு குழந்தைகள் வசூப்பது, ஒரே சமையல் அறையில் இரண்டு அல்லது மூன்று குடும்பங்கள் சமைப்பது.

    இந்த பதிவையும், புகைப்படங்களையும் , துபாய் சவுதி அராபிய மலேசியா வேலைக்கு ஆள் எடுக்க விளம்பரம் வரும் பொழுது அந்த ஏஜன்சி நிறுவனங்களின் வாசலில் சென்று நாம் ஒட்ட வேண்டும்.

    நானும் என் நண்பனும் ஒரு முறை இப்படிதான் டி நகரில் உள்ள அம்பி இன்டர்நேஷனல் (ambi international, near old Nagesh Thetre) என்ற நிறுவனம் முன்பு சென்று அங்க வந்த மூன்று மனிதர்களின் வாழ்வை காப்பாற்றினோம்.

    ஏனென்றால் கூலி, கொத்தனார், டைலர், முடி திருத்தகம், சமையல் காரர் போன்ற தொழில்களுக்கு செல்லும் மனிதர்கள் பதிவுகள் படிப்பதில்லை .

    வீட்டு வேலைக்கு என்று பெண்களை அளித்து சென்று வதைக்கும் கொடுமை மற்ற்றொரு விதம்

  5. இதை நல்ல பதிவு என்று சொல்வதை விட, உச்சி மயிரை பிடித்து உலுக்கி, செவிளில் அறைந்து, யதார்தத்தை பார்க்க வைத்த எழுத்து என்று சொல்வதே சரியாக இருக்கும்.

  6. i also worked in saudi but i saw a lot persons doing forgery for increasing his timesheet (overtime). I personally affected with my driver name Naushed, he is such a big assshole, during my site visit i personally offered him food, water and even tell to take him rest in my room. But one day he showed his real face at the month starting he submitted his timesheet to me, i found a lot of forgery works in that (for getting overtime) he made a very big discussion with me asking whether am i human being or not and used some foul words. I am feeeling ashame to this i worked with a lot of persons in saudi from diffirent countries but i found most (not most 95%) of the people involving in these activities are Indian (first rank again iam asking sorry mostly malayali),bangladeshi (first rank),pakistani(first two ranks filled so second rank),philiphinos, personally i didnt find any people from nepal….
    //இதனால் மொத்தமாக தண்ணீர் பாட்டில்களை வாங்கி வைத்துக்கொண்டு சாலைகளில், சந்திப்புகளில், கடைவீதிகளில் இன்னும் செல்லமுடிந்த அத்தனை இடங்களுக்கும் சென்று வண்டிகளில் செல்வோர் நடந்து செல்வோர் என அத்தனை பேரிடமும் தண்ணீர் புட்டிகளை நீட்டி வாங்கிவிட மாட்டார்களா எனும் ஏக்கத்தை விற்றுக்கொண்டிருப்போர் உண்டு// i roamed around jubail, dammam, khobar, abquiq, uthmaniya, hofuf etc…i didnt find any of these kind of people.

    //இந்த தண்ணீர் விற்கும் நிறுவனங்களால் தான் உலகில் தண்ணீர் பஞ்சம் ஏற்படுகிறது எனக் கூறும் போது வார்த்தைகள் வறண்டு விடுகின்றன//
    Great comedy from vinavu and one question ..
    Dear vinavu are they sucking water from wells or getting water from reverse osmosis plant?
    Desalination plants provide about half the country’s drinking water. About 40% comes from groundwater. The remainder comes from surface water (9%) and reclaimed wastewater (1%). Desalinated water is prevalent along the coasts, surface water in the southwest region and groundwater elsewhere. The capital Riyadh, however, is supplied to a great extent with desalinated water pumped from the Persian Gulf over 467 km to the city located in the heart of the country—–source “wikipedia”

  7. முழுக்க சவுதி அரேபியாவை பற்றி எழுதிவிட்டு துபாய் சோனாபூர் தொழிலாளர்கள் விடுதியை படமாக போட்டிருப்பது ஏனோ? இதென்ன சன் நியூஸ் ஸ்டைலா? :-))

  8. இஸ்லாமியத்தை நடைமுறைப் படுத்தினாலே போதும். 5முறை தொழுவதை சரிபார்பதற்கு போலீஸ் உண்டு. அதுபோல, வியர்வை உலருமுன் கூலியை கொடுத்து விடவேண்டும் என்ற குரான்(எங்கு உள்ளது என்று தெரியாது; எங்கேயோ படித்தது; அரபியும் எனக்கு தெரியாது) வாசகத்தை நிறைவேற்ற போலீஸ் உண்டா? ஒவ்வொரு உழைப்பிற்கும் எவ்வளவு கூலி நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது ஏதேனும் குரானில் வசனமுண்டா? பின் நீதி மன்றத்தை குறை கூறி என்ன பயன்? சட்டம் வேண்டுமென்றால் குரானில் புதியதாக கூலி நிர்ணயத்தை குறித்து வசனத்தை எழுத வேண்டும். குரானில் ஒரு வசனத்தை கூட்டவோ, குறைக்கவோ கூடாதென்றால் குரானை புறக்கணிக்க வேண்டும். புதியதோர் மார்க்கம் உருவாக வேண்டும்.

    • அசோக், மக்கள் குரானை பின்பற்றவில்லை என்றால் மதத்தை புதிதாக மற்றம் செய்ய வேண்டும் என்பது சிரிப்பு தான் வருது. பகவத் கீதை யில் ஒரு கைக்கு தெரிவது இன்னொரு கைக்கு தெரிய கூடாது அப்படின்னு இருக்கு. அது செய்யாம தான் நம்ம எல்லா அரசியல்வாதிகளும் கீழு விழுகிற ஒரு பேப்பர் எடுத்து கொடுத்துட்டா கூட அதுக்கு ஒரு விளம்பரம் கொடுத்து நான் தான் கீழே விழுந்த அந்த பேப்பர் எடுத்து கொடுத்தேன் அப்படின்னு சொல்ற காலத்துலே.. ஹிந்து மதத்தையா மாத்துவீங்க. எங்கே இல்லை இந்த கொத்தடிமை தனம். சென்னையில் நான்கே ஒரே ரூம்லே அப்படி தூங்கலையா? லண்டன், நோர்வே நண்பர்கள் இதுக்கு நல்லாவே பதில் சொல்வாங்கே அவங்க எப்பிடி அனுபவிகுறாங்கே அப்படின்னு.

      • Thameez…இஸ்லாமியனுக்கும் குரானுக்கும் உள்ள தொடர்பு …பகவத் கீதைக்கும் இந்துக்கும் கிடையாது. எல்லா இந்துக்களும் கீதை பின்பற்றி வாழ்கின்றனர் என்ற முடிவை மாற்றிக்கொள்ளுங்க. இந்துக்கள் வாழ்வு முறை இந்திய அரசியலமைப்பை ஒட்டியே உள்ளது. எடுத்துக்காட்டாக பலதார மணம், உடன்கட்டை, தீண்டாமை, எல்லாமே சரி என்று இருந்த இந்த நாட்டில் இப்ப கிரிமினல் குற்றம். தண்டனை கூட சட்டமன்ற உறுப்பினர்கள் சொல்லும்படிதான் உள்ளதே தவிர பகவத் கீதையை ஒட்டி அல்ல. புலால் உண்ணுவது கீதையில் தவறு என்று உள்ளது…ஆனால புலால உண்ணுவது சட்டப்படி அது தவறு இல்லை. ஆனால் அரேபியாவில் எல்லாமே குரானை ஒட்டியே உள்ளது. எனவே உங்களோட reasnoing தவறு. மேலும்..இந்த என்னுடைய வாதம் இந்து இஸ்லாமிய சண்டை அல்ல…இந்திய சூழ்நிலையையும்..அரேபிய சூழ்நிலையையும் விளக்குவதே என் நோக்கம்.

  9. வளைகுடா நாடுகளில் அப்படி என்ன பெரிய சம்பளம் இருக்கு, சம்பளம் ஒன்னும் அதிகம் கிடையாது ஆனால் நம்ம மக்கள் ஊருக்கு வந்த அவனுக்கு கிராம பகுதில ஒரு வகையான வரைவேற்பு இருக்கு, இதுதான் படிக்காதவன் வெளி நாட்டில வேலைக்கு போக நினைக்க வேண்டி இருக்கு, இதற்கு நம்மளுடிய சமுகம் ஒரு காரணம் நம்ம நாட்டுல உழைகரவனை எவனும் பாராட்டறது இல்ல ஆனால் வெளி நாட்டுல அவன் என்ன வேலை செயய்ரனோ தெரியாது அவனி பார்த்து இவனுங்க ஒரு வகயுள்ள பாராட்டறது அதுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறதும், நம்ம பகுதிலயே நல்ல சம்பளம் கிடைக்கும் இதுபோல உதிரு நேர வேலை பார்த்த இங்கயும் நல்ல சம்பாதிக்கலாம் வெளி நாட்டுல பொய் கஷ்டபடுறது நம்ம மக்களுக்கு சுலபம் ஆனால் நம்ம உருள வேலை பார்க்க கவுரவ குறச்சல் அங்க பார்க்கிற வேலைய இங்க பாற்பற்கள என்றல் அதற்கு இல்லை என்றுதான் பதில் வரும், அதிகபட்சம் 15000 சம்பளம் என்றால் நம்ம ஊர்ல அதவிட அதிகமாக சம்பாரிக்கலாம் குடும்பத்தயும் பார்த்து கொள்ளலாம் எதோ வெளி நாடு போய்தான் சம்பார்ச்சி குடும்பத்தை கரை சேர்க்கணும்னு ஒன்னும் இல்ல இதுலாம் படிகதவ்னுக்கு வெளி நாடு மோகம் பேராசை அதனால வர பிரட்சனை எதிர்கொள்ள தயாராகவும் இருக்க வேண்டியதுதான் வேற என்ன பண்ண என்ன வளம் இல்ல நம்ம நாட்டுல படிச்சவன்தான் போகிறான் அவனல்ல முடியல்ல என்றல் எப்பவும் திரும்பிவிடுவான் எந்த பிரட்சனி இல்லாம ஆனால் படிக்காதவன் கொதடிமிய வேலை பார்த்த நிலைமை அதொகேதிதன், தயவு செய்து படிக்காத நண்பர்கள் கூலி வேலைக்கு வெளிநாடு போகமாம் நம்ம ஊருலயே வேலை பாருங்க அதுதான் உங்களுக்கும் உங்க குடும்பத்துக்கும் நல்லது, இல்லன வடிவேல் ஜோக் கதைதான்

  10. //தொழிலாளிகளின் வர்க்க ஒன்றிணைப்பில் வளைகுடாவின் விதி மாற்றி எழுதப்படும். அந்த நாளுக்காக நாங்கள் காத்திருப்போம், வேலை செய்வோம்.//

    செல்லாது செல்லாது, மிகை படுத்தி எழுதி இருக்காங்க. சவுதி இல சட்ட திட்டங்கள் கெடுபிடி தான் ஆனா இவங்க எழுதி இருக்குறது போல யாரையும் யாரும் துன்ப படுத்தல, இந்தியர்கள் மட்டுமே 1.7 மில்லியன் இருக்குறாங்க, இஸ்லாமிய சட்டம் இவங்களுக்கு புடிக்கல, அதன் இப்படிலாம், வர்ரவங்க வந்துகிட்டு தான் இருக்காங்க.

    தலைகீழ நின்னாலும் கம்முனிசதுக்கு சவுதியில வேல இல்ல.

    • இதோடா … வந்துட்டாரு ஃபைசல் சேக்கு ..

      நீங்க துபாய்ல ஒட்டகத்துக்கு கால் கழுவி விடுற வேலை பார்த்து இருந்திருப்பீங்க ..
      அது தான் மிகைப் படுத்தி எழுதுன மாதிரி இருக்கும். அங்க போய் உண்மையிலயே உழைக்கிற மக்கள்கிட்ட கேட்டுப் பாரு ..

      கம்யூனிசம் வராதா ?.. போயா … போ.. இந்து மதத்தின் உறுதியான நிலமா இருந்த நேபாளத்துலயே இப்பொ கம்யூனிஸம் தான் வ்ந்துட்டு இருக்கு … அதனால கம்யூனிசம் வராதுனு கனவு காணாம போய் தூங்கு .. சிவப்பு சட்டை வந்து உங்கள் தாடியை அறுக்கும் நாள் ரொம்ப தூரத்தில் இல்லை …

  11. “சொந்த நாட்டு மக்களுக்கே கூட ஜனநாயக உரிமைகள் என்று எதுவுமில்லை. அரசியல் கட்சிகளுக்கு அனுமதியில்லை. கூட்டம் கூடி பேசும் உரிமையையோ, எழுதி வெளியிடும் உரிமையையோ நினைத்துக்கூட பார்க்கமுடியாது. அச்சிடப்படும் நூல்கள் அனைத்தும் தணிக்கைக்குப் பிறகே வெளியிடப்படும், நாளிதழ்கள் தணிக்கை செய்யப்படுவதில்லை என்றாலும் அரசுக்கு எதிராக எதையும் எழுதிவிட முடியாது.” அவர்களுக்கு இவைகளை செய்ய வேண்டிய தேவையை அரசு வைக்காது. படிப்பு முடிந்தவுடனே வேலை கிடைக்கும் இளைங்கனுக்கு போராட்டம் நடத்தவோ கட்சி ஆரம்பிக்கவோ தேவை ஏற்படுவதில்லை..
    முதலில் நாம் நம் ஏஜன்சி காரர்களை திருத்தவேண்டும்.. சமீபத்தில் ஒருவரை 2500Dhm என்று காட்டி வந்துள்ளனர், ஆனால் அவரது சம்பளம் வெறும் 750 dhm மட்டுமே …. எவ்வளவு கடன்களுடனும் கனவுகளுடனும் வந்திருப்பார். அவர்களை திருத்தினாலே பாதி பிரச்சனை தீர்ந்துவிடும். நம் மக்கள் இல்லாமல் இங்கு ஒரு வேலையும் நடக்காது. கேள்வியை அதிகரிக்க வைக்குமிடத்து பெரிய சம்பளம் கிடைக்க வைக்க முடியும் . அண்ணல் இதற்கு முகவர்கள் முதலில் தயாராக வேண்டும். அவர்களின் வியாபர போட்டி இதற்கு இடம் கொடுக்காது..

  12. இவர்கல் hightech கொதடிமைகல் (tv, AC)………..

    I think these guys are working in site activities(labourers) . Normally the contractors will give rooms (labourer camp) nearby the site (far away from cities) They will also provide food ,water etc (for labourer class they will provide lunch: boiled rice/kabbsa,dhall/non-veg curry, sidedish-Chicken/beef/mutton/fish, salad and fruits)……………
    During site activities the contractor will always provide water……….These kind of workers have direct contract with the contractors while coming from india..
    but some of them will get work visa(driver,barber..etc) from arabi, the arabi will get some amount from them every month from their salary note:actually the worker will tell less salary (because u know very well) again there will be some broker(normally indian for indian workers) between these arabi and worker. The problem will arise only if arabi came to know the worker’s original salary.

    வினவு ரொம்பவும் மிகைபடுத்தி இக்கட்டுரயய் எலுதி இருகிரார்….

  13. Communist is like RSS, both dont like Islam, so you are writting this comedy story. Im also working here about 19 years and nothing will happened to me also I never feel anything. Gulf is not given job most of Indian on platform.

  14. விரிவான அலசல் பதிவு.
    வாழ்த்துக்கள் வினவு.

    *****

    வளைகுடாவில் எந்த ஒரு அரசாங்கமும், அதன் சட்டங்களும் தொழிலாளிகளை துன்புறுத்துவதில்லை.

    எல்லாவருக்கும் பொதுவான சட்டங்கள் இருக்கின்றது. எந்தக் குறை வந்தாலும் புகார் செய்வதற்கு வசதிகள் இருக்கின்றது.

    சட்டத்தின் முன் அனைவரும் சமம்.

    காவல்காரர்கள் அனைவரும் நண்பர்களைப் போல் இருப்பார்கள்.

    அர்த்த ராத்திரியிலும் ஒரு பெண் தனியாக நடமாட முடியும்.

    ஈவ் டீசிங் என்பது மருந்துக்குக் கூட கிடையாது.

    எல்லாத் தொழிலுக்கும்
    குறைந்த பட்ச ஊதிய நிர்ணயம் உள்ளது.

    *****

    கஷ்டப்படுபவர்கள் பெரும்பாலும் இந்தியர்களால் நடத்தப்படும் நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்கள் தான்.

    இங்கு கஷ்டப்படுவது அடிமட்டத் தொழிலாளர்கள்தான்.

    இந்தக் கதிக்குக் காரணம் தெரிந்து கொண்டே குழியில் குதிப்பது.

    இங்கிருந்து சொந்த ஊருக்குச் செல்பவர் ஒருவர் கூட உண்மை நிலையைச் சொல்வதில்லை.

    இது அப்பாவிகளுக்கும் ஆசையைத் தூண்டி விடுகின்றது.

    விடுமுறைக்கு செல்லும் இவர்கள் காண்பிக்கும் ஆடம்பரம் பிறருக்கு ஏகத்துக்கும் எதிர்பார்ப்புகளை ஏற்றி விடுகின்றது.

    *****

    முக்கிய காரணம் நம் மக்களின் அறியாமை, கல்வியறியின்மை,

    ஆசை வாக்குறுதிகளை அள்ளி வீசி ஏமாற்றி கொள்ளை லாபம் சம்பாதிக்கும் ஏஜெண்டுகள்,

    இவர்களைக் கட்டுக்குள் கொண்டு வராத நம் அரசு,

    என்ன நடந்தாலும், கண்டு கொள்ளாமல் இருக்கும் இந்தியத் தூதரகம்…

    இதுபோல் பல…

    நன்றி.

    இது பற்றிய என் பதிவு
    http://naanummanithan.blogspot.com/2010/06/48.html

  15. உங்கள் சவுதி நிருபர் கைல கேமரா இல்லையோ??? துபாய் வந்து போட்டோ எடுத்தாரோ???

    முழுக்க முழுக்க சவுதி பற்றி சொல்லிவிட்டு துபாய் சோனாபுர் புகைப்படத்தை போடறீங்க…
    துபாய் எங்ககோயுமே கொத்தடிமைத்தனம் கிடையாது அதை புரிந்து கொளளுங்கள். நம்ம ஊரில்தான் இந்த கொத்தடிமைத்தனம் இன்றும் இருக்கிறது.

    சவுதி பற்றி தெரியாது ஆனால் துபாயின் சோனாபுர் புகைப்படம் காட்டுவது உண்மையல்ல.
    வளைகுடா நாடுகளில் ஆமீரகம் போன்ற சிறந்த நாடு எதுவும் இல்லை.

    • Nanjil Pratap, .. கூகிளாண்டவரிடத்தில் கேட்டால் துப்பாயின் கொத்தடிமை கூடாரத்தை பற்றி அள்ளிக்கொடுக்கிறார்.. இதோ http://bit.ly/8Ztk6e

      அதிலிருந்து ஒரே ஒரு சாம்பிள் படிங்க – A morally bankrupt dictatorship built by slave labour http://bit.ly/8SxRyf

    • நாஞ்சில் பிரதாப், சவுதி நிருபர் புகைப்படம் அனுப்பவில்லை, இணையத்திலும் சவுதியின் கொத்தடிமை நிலையை விளக்கும் படங்கள் கிடைக்கவில்லை. அதனால் அமீரகத்திலேயே ஆக சிறந்த இடமாக கருதப்படும் துபாயின் தொழிலாளர்களின் நிலையை விளக்கும் படத்தை வெளியிட்டிருந்தோம். உங்களுக்காக இப்போது சோனாபூரின் இன்னொரு படத்தையும் இணைத்திருக்கிறோம். துபாயின் நிலையே இப்படியெனில் சவுதியை பற்றி வாசகர்கள் ஊகித்துகொள்ளலாமல்லவா?

      நன்றி

      • துபாயில் தங்குவதற்கு அதிகமான கட்டணம். ஒரு சிறிய அறையில் சுமார் 600 திர்ஹம். இது மிக குறைவாக இப்போ உள்ள சூழலுக்கு சொல்லி இருக்கிறேன். அனால் சவுதி யில் இந்த பிரச்னையே இல்லை. அங்கே இலவச தாங்கும் இடம் எல்லோருக்கும் உண்டு.! அப்படியே வசூலித்தாலும் இதே 600 அங்கே ஆறு மாதத்துக்கு. நீங்கள் கூறியது போல துபாயில் இப்படி என்றால் சவுதி யில் எப்படி இருக்கும் என்பது தவறான கருத்து!!

      • இந்த பதில படிக்கும் போது ஒன்னு ஞாபகதுக்கு வருது என்னொட நண்பன தாம்பரதுல இருகிற திரையரங்கு அழத்தேன் அதற்கு அவன் “சத்யம் திரையரங்கு உல்லேயே எச்சில் துப்புறான் தாம்பரம் திரையரங்கு சொல்லவா வேனும் நான்”

  16. இந்தியாவில் வேலை கிடையாது. கிடைத்தாலும் சம்பளம் வாயுக்கும் வயிற்றுக்கும் சரியாக இருக்கும். அதற்காக மாதம் 20000 ஆனாலும் சவூதி சென்று சம்பாதிக்கின்றனர்கள்.

    சில கம்பெனிகளி உள்ளன, ஆனால் மிகச்சொச்சம் நிறுவனங்கள், இந்த 20000 ரூபாயைத் தருகின்றன. மற்றவையெல்லாம் ஏமாற்றுகின்றன. எவ்வளவு திரைப்படங்கள் வந்தாலும் மக்கள் வறுமையின் கொடுமை தாளாமல் ஓடுகின்றனர்.

    ஆனால், மக்கள் வறுமையில் துவள்வது மட்டும் போதாது. அவர்களை ஒரு அணியாக கட்டி போராட வைக்கும் ஒரு அமைப்பு தேவை. அது எப்படி என்பதே வளைகுடா நாடுகளில் ஒரு மிகப்பெரிய கேள்வி.

    • போராடுரது இருகட்டும் மொதல்ல agent கிட்ட ஏமாறாம இருகிறது எப்படின்னு சொல்லிகொடுங்க‌

  17. இரண்டாவது படம் சோனாபூர் இல்லை. ஏதோ கூகிள் ஆண்டவரிடம் கேட்டோம் கொடுத்தோம் என்று வினவு கொடுக்க கூடாது. தரப்படும் படம் நம்பகமானதா? அது உண்மையில் சோனாபூரா என்று தெளிந்த பிறகே வெளியிட வேண்டும். http://www.youtube.com/watch?v=e6OIlPLnXm8
    துபாய் சோனாபூர் தொழிலாளர்கள் விடுதியை இந்த சுட்டியில் பார்க்கலாம்.

    • ஜெசீலா, எந்த இடம் என்று தெரிந்தால் சொல்லவும். இணையத்தில் சோனாபூர் என்று தேடினாலே இந்த படம்தான் கிடைக்கிறது, மூன்று வெவ்வேறு தளங்களிலும் சோனாபூர் என்றே இப்படம் வெளியிடப்பட்டிருக்கிறது

  18. Most of the points given here by Vinavu are facts. As mentioned here, depending on the company the differences may vary. At the same time cooperation between Indians are far less. Athilum Tamilan Kaalai Vaarivida veru oruvarum thevai illai, Tamilanae mun nindru seivan. I did not mean all Tamilians but there are many who do 3rd grade practices to the fellow Tamil/Indians. I had witnessed many incidents in the past. I would say 90% of the details are true to my knowledge. Other readers, do remember that this article explains about the Labour category. So think about them before you deny any of the above points (May not be 100% but accept the fact that majority of them suffer the inequality).

    • saudila எப்படி மத்தவன ஏமாத்தி சம்பாதிக்கனும்மனு தமிழன், மலயாலி கிட்ட இருந்தான் கதுக்கனும்………..மலயாலிங்க officela தண்ணிய கூட விட்டு வைக்க மாட்டான்னுங்க‌. (sorry i am not aganst labours) all these are labour categories only.

  19. துபாயில் தொழிலாளர் நலனுக்கு என்று தனி அமைச்சகம் இருக்கிறது அங்கு சென்று புகார் கொடுத்தால் உடனே நடவடிக்கை எடுப்பார்கள், ஒருவருக்கு விசா கேன்சல் செய்கிறார்கள் என்றால் கேன்சல் செய்யப்படும் நபரிடம் செட்டில்மெண்ட் செய்யப்பட்டுவிட்டதா என்று கேட்பார்கள். கோடைகாலத்தில் தொழிலாளருக்கு மதியம் பிரேக் விடுவார்கள். தொழிலாளர்கள் கேம்பில் கூட்டம் அதிகம் ஆனால் அடிப்படை வசதிகள் இல்லாம இல்லை. சமீபத்தில் துபாய் அரசு தொழிளார்களை ஏற்றி செல்லும் பஸ்ஸிலும் ஏசி வசதி இருக்கனும் என்று சொல்லியிருக்கிறது. சம்பளம் விசயத்தில் ஒன்னும் சொல்ல முடியாது, தெரிந்தே குறைந்த சம்பளத்துக்கு வருவதுக்கு அரபிகள் எப்படி பொறுப்பாக முடியும்? இந்த கட்டுரையில் இருக்கும் அனைத்தும் உண்மையும் இல்லை அனைத்தும் பொய்யும் இல்லை.

    //துபாயில் தொழிலாளர்கள் போராடி மதியம் 11 மணியிலிருந்து 3 மணிவரை கட்டுமானப் பணிகள் நடைபெறக்கூடாது என்று ஆணை பெற்றிருக்கிறார்கள். //

    இதிலும் தாங்கள் துபாய் என்றுதான் சொல்லியிருக்கீங்க.இதுவும் தவறுங்க. மதியம் 12 மணியில் இருந்து 3.30 வரை பிரேக், அதுவும் யாரும் போராடி எல்லாம் இல்லைங்க. வழக்கமாக 2 மாதங்கள் மட்டும் தான் இந்த நடைமுறை அமலில் இருக்கும், இந்த முறை வெயில் கடுமையாக இருப்பதால் கூடுதலாக ஒரு மாதம் 3 மாதங்கள் இந்த பிரேக் சிஸ்டம். எந்த கட்டுமான நிறுவனமாவது இதை மீறினால் அவர்கள் அங்கீகாரத்தை இழப்பார்கள், தொடர்ந்து எந்த கட்டுமான பணியையும் எடுக்க முடியாது

  20. உபரி வேலை விசயத்தில், நம் நாட்டிலும் அரசு பணியில் இருப்பவர்கள் வேறு எங்கும் வேலையோ தொழிலோ தொடங்க கூடாது என்று இருக்கே, அதுபோல் தனியார் நிறுவனங்களிலும் இந்த நடைமுறை இருக்கே. கம்பெணி கொடுக்கும் விசாவை வைத்து உபரி வேலைக்கு செல்கிறார் ஒரு எலக்ட்ரீசன், ஏதோ ஒரு அசம்பாவிதம் நடக்கிறது அதுக்கு யார் பொறுப்பு? விசா கொடுத்த கம்பெணிதானே எல்லா விதத்திலும் பொறுப்பாக முடியும். இதில் என்ன தவறு?

    இரவு முழுவது வேறு ஒரு இடத்தில் வேலை செய்துவிட்டு மறுநாள் அலுவலகத்தில் போய் தூக்க கலக்கத்தில் தவறு செய்கிறேன் என்றால் யாருக்கு நஷ்டம்?

    • இந்த பிரேக் சிஸ்டம் கட்டுமான நிறுவனத்திற்கு மாத்திரமில்லை. வெயிலில் பணி புரியும் அத்தனை தொழிலாளர்களுக்குமானது. இடைவேளை சமயத்தில் பணியாளர் யாரும் வெயிலில் வேலை செய்யும்பொழுது சிக்கினால் கம்பெனிக்கு அபராதம் அதிகம். ஆகவே முதலாளிகளும் இந்த விசயத்தில் அக்கறையோடு இருப்பார்கள். ஷார்ஜாவில் எனது நிறுவனத்தில் இந்த பணி இடைவேளை நடைமுறை உள்ளது.

  21. மிக நல்ல கட்டுரை நண்பரே.

    நான் சவுதியில் கடந்த மூன்று ஆண்டுகளாகப் பணிபுரிந்து வருகிறேன். வெளிநாட்டுக் கூலித் தொழிலாளர்களுக்கென்று இங்கு எந்த உரிமையும் இல்லைதான். நிறுவனங்களில் ஒப்பந்தத் தொழிலாளர்களாகப் பணிக்கு வருபவர்களிடம் அவர்களின் சம்பள விபரங்களை சில நிறுவனங்கள் முதலிலேயே தெளிவாகச் சொல்லிவிடுவார்கள். பங்களாதேஷ், நேபால் போன்ற நாட்டினர்தான் பெரும்பாலும் கட்டுமானத்துறையில் கடுமையான பணியில் உள்ளனர். அவர்களின் சம்பளம் வெறும் 410 ரியால்கள் தான். இதில் 110 ரியாலை உணவிற்காக மெஸ்ஸிற்குக் கொடுக்கவேண்டும். இவ்வாறு கஷ்டப்படும் பெரும்பாலானவர்கள் அவர்களின் ஏஜென்டுகளினால் ஏமாற்றப்பட்டவர்கள். பங்களாதேஷ்தான் இதில் மிக மோசம். வேலைக்காக இரண்டு முதல் மூன்று லட்சங்கள் வரை ஏஜென்டுகளிடம் தந்துவிட்டு இங்கு வந்து சொற்ப சம்பளத்தில் அடைபட்டு கடனை அடைக்க வழியின்றி ஊர் திரும்பாமல் வருடக்கணக்காக துயரத்தோடு உள்ளனர். நான் எனது நிறுவனத்தில் உள்ள நிலையையே சொல்கிறேன்.

    10 முதல் 12 மணிநேர கடுமையான பணி முடித்து வரும் ஊழியர்கள் இரவில் அறைக்குத் திரும்பிய பின் பெப்ஸி டப்பாக்களைச் சேகரிக்கச் செல்வதைக் காணும்போது மிக வேதனையாக இருக்கும். மிஞ்சிப்போனால் இந்தப் பணியின் மூலம் அவர்களுக்கு ஒர் 50 ரியால்கள் வரை கிடைக்கலாம்.

    நான் பார்த்தவரையில் இங்கு தண்ணீர் பாட்டில்களை சாலைகளில் நின்று விற்பது கிடையாது. இந்தியத் தூதரகம் பற்றி நீங்கள் குறிப்பிட்டது முற்றிலும் உண்மை. பாஸ்போர்ட் புதுப்பிப்பதைத் தவிர வேறு எந்த ஒரு விஷயத்திற்காகவும் அவர்களை அணுகவே முடியாது. ஒருமுறை தூதரக அலுவலகத்திற்குச் சென்றிருந்தபோது கசப்பான அனுபவத்தையே பெற்றேன். சவுதிகளாவது கொஞ்சம் மனிதாபிமானத்துடன் நடந்துகொள்வார்கள். ஆனால் இந்த தூதரக ஊழியர்கள் நம்மை மனிதர்களாகவே மதிக்க மாட்டார்கள்.

    நீதிமன்றங்களிலும் நிறுவனத்திற்கு எதிராக எந்த ஒரு புகாரையும் அளித்து வெற்றி பெறுவது அத்தனை எளிதல்ல. உங்கள் கட்டுரை உண்மைக்கு மிக அருகில் இருந்து எழுதியதைப் போன்று உள்ளது. சவுதியில் பணிபுரியச் செல்பவர்களுக்கு இது நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும். சவுதியோடு ஒப்பிடும்போது துபாய், கத்தார் போன்ற இடங்களில் பணிபுரிபவர்களின் நிலை எவ்வளவோ பரவாயில்லை.

    நன்றி.

  22. http://dubaicity.olx.ae/bedspace-or-partition-for-rent-iid-103037507

    ஞ்சில் பிரதாப் உண்மையை சொல்லுங்கள்- துபாயில் (பார் துபாய் Bur dubai,meena bazar, sindhi punjab hotel nearby டேயய்ரா துபாய் யில்) ஆறு முதல் எட்டு நபர்கள் ஒரே அறையை பகிர்ந்து கொளவது இல்லையா. ஆர் முதல் எட்டு நபர்கள் ஒரே குளியல் அரை, ஒரே கழிவு அரை பகிர்வது இல்லையா.

    ஒரே குளியல் அறை உள்ளே எட்டு பற்பசை இருப்பது இல்லையா. நான் ஒன்றும் ராஜ குடும்பப்த்தில் பிறந்தவனோ வசிப்பவநோ இல்லை. ஆனால் ஒரே அறைக்குள் எட்டு நபர்கள் வாழ்வது மிக கொடுமை, அனுதாபம்.

    அதே போல ஒரே வீட்டில், இரண்டு அறை, ஒரு சமையல் அறை உள்ள வீட்டில் இரண்டு குடும்பங்கள் (இரண்டு கணவன், மனைவி, குழந்தைகள்) பகிர்ந்து வாழ்வது இல்லை என்று பொய் சொலாதீர்கள்.

    வரபோ போகும் சந்ததியினராவது இந்த கொடுமையில் இருந்து தப்ப வேண்டும் என்பதே நம் ஆதங்கம், இதில் மதம், கம்முநிசம், முதலாளித்துவம் எல்லாம் அப்புறம்.

    பத்து வருடங்கள் முன்பு இனைய வசதி இல்லை, எனவே உண்மைகள் வெளிய வர முடிய வில்லை, மக்கள் அறியாமையால் அவதி பட்டார்கள். இப்போதாவது உண்மையை வெளி உலகிற்கு சொல்வோமே.

    • 6-8 persons are not there in Chennai Mansions. T nagar, Triplicane, Mylapore. Go and see. Check and inform in this page lately whenever u get gfree do this. Full comments are in biased. If u do not like a person or a community or a country u will spit like this.

    • அது நம் எண்ணம் இல்லை. யாரும் நாய் மாதிரி உழைக்கக் கூடாது. மனுஷன் மாதிரிதன் உழைக்கனும். உழைப்பின் நேரம், ஊதியம் எல்லாம் சரியான அளவில் கணக்கிடப்பட வேண்டும்.

  23. வினவு- உங்கள் நிருபரை பார் துபாய் என்ற இடத்தில் இருக்கும் எந்த தெருவிற்கும் உள்ளே செல்ல சொல்லுங்கள். எல்லா கட்டிடத்தின் உள்ளும் ஒரு அறையில் ஆறு முதல் எட்டு ஆண்கள் குடி இருப்பார்கள். lower birth upper birth, kattikal கண்டிப்பாக இருக்கும்.

  24. //இதனால் மொத்தமாக தண்ணீர் பாட்டில்களை வாங்கி வைத்துக்கொண்டு சாலைகளில், சந்திப்புகளில், கடைவீதிகளில் இன்னும் செல்லமுடிந்த அத்தனை இடங்களுக்கும் சென்று வண்டிகளில் செல்வோர் நடந்து செல்வோர் என அத்தனை பேரிடமும் தண்ணீர் புட்டிகளை நீட்டி வாங்கிவிட மாட்டார்களா எனும் ஏக்கத்தை விற்றுக்கொண்டிருப்போர் உண்டு// 🙂 🙂 🙂

    ஆதாரம் தாருங்கள் வினவு அவர்களே

  25. scholboy

    ஒரே அறையில் ஆறு முதல் எட்டு நபர்கள் குடித்தனம் நடத்துவது இருக்கிறதா, இல்லையா, அந்த உண்மையை சொல்லுங்கள். ஆறு முதல் எட்டு நபர்கள் ஒரே குளியல் அறை, ஒரே கழிவு அறை பயன் படுத்துதல் உள்ளதா, இல்லையா

    ஒரு குளியல் அறைக்குள் எட்டு பற்பசை, எட்டு சோப்பு இருக்குமா, இருக்காதா

    ஒரு கட்டில், ஒரு மர செல்ப் (wooden shelf)இதுதானே ஒரு நபரின் உரிமை. வீடு அங்கே.

    நான் இங்கே பின்னூட்டம் இடுவதன் காரணம், இதை எல்லாம் படித்தாவது அடுத்த மனிதர்கள் இந்த வாதிக்கு உள்ளாக கூடாது என்பதே. மற்றபடி எனக்கு அரேபியர்கள் , சிந்தி தொழில் அதிபர்கள் மீது உள்ள வெறுப்பு எல்லாம் கிடையாது.

    துபாய், அபிதபிக்கு எல்லாம் மக்கள் செல்லாடும், தனி வீடு, car, குடும்ப வசதி, குழந்தைகள் கல்வி வசதி போன்ற வேலை வாய்ப்புக்கள் தேடி செல்லட்டும், அரேபிய அரசாங்கங்கள், எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ், பன்னாட்டு வங்கிகள் (HSBC, STAN CHART, NBAD) போன்றவற்றில் வேலைக்கு செல்லாடும்.

  26. மத்திய கிழக்கு நாடுகளில் நிகழும் அவலங்களை நன்றாக படம் பிடித்து காட்டி இருக்கிறீர்கள். இவை எல்லாம் மாற வேண்டும்.

    நம் நாட்டை விட்டு நம்மை கேவலமாக நடத்தும் வேறொரு நாட்டுக்கு, நாம் செல்லும் நிலையை நாம் கண்டிப்பாக மாற்ற வேண்டும். பெண்கள் சுய உதவி குழுக்குள் போன்று ஆண்கள் சுய உதவி குழுக்கள் அமைத்து கூட்டுறவு முறையில் நாம் தொழில்களை மேற்கொள்வோம்.

    வேலையில்லை என்கின்ற துன்ப நிலையை மாற்றுவோம். பகிர்ந்து உண்போம்! பகிர்ந்து வாழ்வோம். உண்மையான புதிய ஜனநாயகத்தை, புதிய நாகரிகத்தை உண்டாக்குவோம்.

    நன்றி

  27. முக்கியமாக சவுதியில் பெண் தொழிலாளர்களின் பிரச்சினைகளையும் இணைத்திருக்க வேண்டும். தனது சொந்த நாட்டில் வாழ வழியற்றுப் போகும்போது தனது பிள்ளைகளை தனது வயதான தாயிடமோ தந்தையிடமோ விட்டுவிட்டு இது போன்று வெளிநாடுகளுக்குச் செல்லும் பெண்கள் சந்திக்கும் இன்னல்கள் ஏராளம். இலங்கை, இந்தியா, பங்களாதேஷ் போன்ற நாடுகளில் இருந்து வீட்டு வேலைக்கு செல்லும் பெண்களில் பலர் ஷேக்குகளால் பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கப்படுகின்றனர். ஸ்கூல் பாய் உங்களுக்கு இதற்கும் ஆதாரம் வேண்டுமென்றால், மக்கள் ஐந்து வேளை தொழுகிறார்களா என கண்காணிப்பதற்கு தனியாக காவல்படை அமைத்த அரசை, ஷேக்குகள் தொழிலாளர்களை ஒழுங்காக நடத்துகிறார்களா என்பதையும் கண்கானித்து நடவடிக்கை எடுக்க சவுதி அரசிடம் முறையிடுங்களேன்.

    • //ஸ்கூல் பாய் உங்களுக்கு இதற்கும் ஆதாரம் வேண்டுமென்றால், மக்கள் ஐந்து வேளை தொழுகிறார்களா என கண்காணிப்பதற்கு தனியாக காவல்படை அமைத்த அரசை, ஷேக்குகள் தொழிலாளர்களை ஒழுங்காக நடத்துகிறார்களா என்பதையும் கண்கானித்து நடவடிக்கை எடுக்க சவுதி அரசிடம் முறையிடுங்களேன்// நண்பர் கலை அவர்களே எனக்கும் தெரியும் சில மட்ட ரக அரபீகளை, அவர்கள் பெண்க‌ளை என்ன கொடுமைபடுதுவர்கள் என்று. சில குடம்ப பெண்க‌ளயும் தெரியும் அவர்கள் என்ன பண்ணுவார்கள் என்று (prostitution mostly malayali and philiphino nurses) இவர்களெல்லாம் என்ன காவல் படைக்கு தெரிந்தா செய்கிறாகள்………….?
      ஆனால் இதற்கு தாவா இயகத்தில் முத்தவா இருகிறார்கள் (form diffirent countries) அவர்களிடம் தகுந்த சமயம் பார்து முறயிடல் வென்ட்றும். இப்படிதான் ஒரு மலயாலியை சராயம் காய்ச்சியதற்காக பிடிதார்கள்–in Khobar one malayali guy with family did that. They made one miniature factory in their house, khobar is nearby bahrain lot of arabis, wealthy engineers from indian pakistani and other countries used to go there for drinking. But this asshole made miniature factory inside his house(i am staying nearby khobar).

      //இதனால் மொத்தமாக தண்ணீர் பாட்டில்களை வாங்கி வைத்துக்கொண்டு சாலைகளில், சந்திப்புகளில், கடைவீதிகளில் இன்னும் செல்லமுடிந்த அத்தனை இடங்களுக்கும் சென்று வண்டிகளில் செல்வோர் நடந்து செல்வோர் என அத்தனை பேரிடமும் தண்ணீர் புட்டிகளை நீட்டி வாங்கிவிட மாட்டார்களா எனும் ஏக்கத்தை விற்றுக்கொண்டிருப்போர் உண்டு// //இந்த தண்ணீர் விற்கும் நிறுவனங்களால் தான் உலகில் தண்ணீர் பஞ்சம் ஏற்படுகிறது எனக் கூறும் போது வார்த்தைகள் வறண்டு விடுகின்றன// //துபாயில் தொழிலாளர்கள் போராடி மதியம் 11 மணியிலிருந்து 3 மணிவரை கட்டுமானப் பணிகள் நடைபெறக்கூடாது என்று ஆணை பெற்றிருக்கிறார்கள்//
      ‍ ‍‍‍‍ ‍‍‍‍‍‍‍‍இந்த மாதிரி மடத்தனமான பதிவுகளை என்னால் சகித்துக்கொள்ள முடியவில்லை அதனால் தான் ஆதாரம் கேட்டேன் இப்போது கொடுப்பீறா????

      • “அவர்கள் பெண்க‌ளை என்ன கொடுமைபடுதுவர்கள் என்று. சில குடம்ப பெண்க‌ளயும் தெரியும் அவர்கள் என்ன பண்ணுவார்கள் என்று (prostitution mostly malayali and philiphino nurses) இவர்களெல்லாம் என்ன காவல் படைக்கு தெரிந்தா செய்கிறாகள்………….?”
        அதாவது மொள்ளமாரி ஷேக்கை மட்டரக அரபி என ஒப்புக்காக கூறிவிட்டு அங்கு பணிபுரியும் பெண்களை விபச்சாரிகள் என்று குற்றம் சுமத்துகிறார் ஸ்கூல்பாய். இதுபோன்று பணிபுரியும் பெண்களிடம் தவறு செய்யும் சவுதியின் மீது அரசு நடவடிக்கை எடுத்ததாக உங்களால் ஆதாரம் கொடுக்கமுடியுமா! கண்கானிப்பது என்றால் ஒரு மனிதனை பின்தொடர்ந்து கண்கானிப்பதல்ல, அரசிடம் வரும் புகார்களுக்கு பாரபட்சமின்றி நடவடிக்கை எடுப்பதாக இருக்கவேண்டும். ஸ்கூல்பாய் நீங்கள் சவூதியில் பணிபுரிவது தவறில்லை ஆனால் இன்னமும் நீங்கள் ஸ்கூல்பாயாக இருப்பதுதான் தவறு. ஹைதர் அலி என்ற ஒரு நண்பர் ரியாத்தில் பணிபுரிகிறார். அவர் ஓய்வு நேரங்களில் தன்னைப் போன்று வெளிநாடுகளிலிருந்து வந்து பணிபுரியும் தொழிலாளர்களின் கஷ்டங்களை பகிர்ந்துகொள்கிறார். நீங்களும் அதுபோன்று முயற்சி செய்து பாருங்களேன்.

        • //அதாவது மொள்ளமாரி ஷேக்கை மட்டரக அரபி என ஒப்புக்காக கூறிவிட்டு// நான் ஒன்றும் பிறரை மாதிறி மலம் தின்னும் ஈனப்பிரவி கிடையாது உள்ளே ஒன்றை வைதுக்கொண்டு வெளியே ஒன்று சொல்வதற்கு
          //அங்கு பணிபுரியும் பெண்களை விபச்சாரிகள் என்று குற்றம் சுமத்துகிறார் ஸ்கூல்பாய்// தவறாக சொல்லி விட்டேன் மண்ணித்துக்கொள்ளுங்கள் இப்படி சொல்லட்டுமா? விபசார “தொழிலாலர்” (தோழிகள்) ஒருத்தன் ஆசைப்பட்டு தன் மனவியை அராபிக்கு கூட்டிக்கொடுதான் இவர்களை என்ன சொல்ல (if you want the proof go to jubail harbour canteen and ask located nearby rezayat)

          //இதுபோன்று பணிபுரியும் பெண்களிடம் தவறு செய்யும் சவுதியின் மீது அரசு நடவடிக்கை எடுத்ததாக உங்களால் ஆதாரம் கொடுக்கமுடியுமா!// சில பேர் அதாரம் கேட்டால் கூகிள் ஆன்டவரிடத்தில் எப்படியவுது பழைய செய்திகளை தேடிப்பிடித்து !!!(mostly forged news from blogspot) கொடுப்பீர்கள் ஆனால் என்னால் அப்படி கொடுக்க முடியாது sir எப்படியும் நான் சொன்னா நீங்க நம்பபோரது இல்லை அதனால haider alikitta கேளுங்க sir சவுதியில் இருந்து வரும் செய்தித்தாளை விடாமல் படியுங்கள்.

          //கண்கானிப்பது என்றால் ஒரு மனிதனை பின்தொடர்ந்து கண்கானிப்பதல்ல, அரசிடம் வரும் புகார்களுக்கு பாரபட்சமின்றி நடவடிக்கை எடுப்பதாக இருக்கவேண்டும்// எப்படி எடுதோம் கவுதோம்னா???? என்னை பற்றி எனக்கு தெரியும் அதனால்தான் எனக்கு நானே school boy என்று பெயர் வைத்துக்கொண்டேன் ஆனால் சில அர வேக்காடுகளுக்கு அரசு எப்படி இயங்குகிறது என்றே தெரியாது சொன்னாலும் புரியாது!!!!

          //ஸ்கூல்பாய் நீங்கள் சவூதியில் பணிபுரிவது தவறில்லை ஆனால் இன்னமும் நீங்கள் ஸ்கூல்பாயாக இருப்பதுதான் தவறு. ஹைதர் அலி என்ற ஒரு நண்பர் ரியாத்தில் பணிபுரிகிறார். அவர் ஓய்வு நேரங்களில் தன்னைப் போன்று வெளிநாடுகளிலிருந்து வந்து பணிபுரியும் தொழிலாளர்களின் கஷ்டங்களை பகிர்ந்துகொள்கிறார். நீங்களும் அதுபோன்று முயற்சி செய்து பாருங்களேன்// ஏன் இங்கே வந்து கஷ்ட்டப்பட வேண்டும் அவர்கள் நாட்டிலேயே ஒரு நல்ல வேலை பார்களாமே ( ஏமாற வெண்டியது இங்கே வந்து ஒட்டகத்தை மேய்க்க வேண்டியது. இவர்கள் ஊருக்கு போகும்போது பார்க வேண்டுமே ஆயிரம் கண்கள் வேண்டும்). முட்டால்கள் எல்லா இன்னல்களையும் அனுபவித்துதான் ஆக வேண்டும் (என்னயும் சேர்த்துதான்) நானும் சில தொழிலளிகளிடம் அவர்கலுடைய பூர்வீகத்தை பற்றி கேட்பேன் ஆனால் அவர்களிடம் அனுதாபம் வராது மாறாக கோபம்தான் வரும்….என்னுடைய வாகன ஓட்டுனரை பற்றி மேலே கூறினேன் நீங்கள் படிக்க வில்லயா….. அது மட்டும் இல்ல எப்படி வேலயை OP அடிகுறதுன்னு,ஏமாற்றுவது எப்படி என்று இந்தியர்களிடம் (tamils and malayali) இருந்து தான் கற்றுகொள்ள வேண்டும்…..

    • நண்பர் கலை, ஐந்து வேலை தொழுகை மட்டும் இல்ல, கல்ல சாராயம் காச்சுபவர்களைகூட கண்காணிக்கிறார்கள், ஆனால் இன்னும் கல்ல சாராயம் இருக்கத்தான் செய்கிறது, அதை செய்பவன் ஒன்றும் ஷேச்குகளோ முத்தவாக்களோ அல்ல, இந்தியர்களும் பெங்காளிகளும் தான். பலர் தொழுவதும் இல்லை, அதையும் தான் கண்காணிக்க தவறுகிறார்கள்.

      இவைகளெல்லாம் மனித தவறுகளே தவிர, அரசின் தவறு இல்லை. இந்தியாவை ஒப்பிடும் பொது தவறுகள் குறைவு தான். பெண்களை சவுதி வீட்டு வேலைக்கு அனுப்புவதற்கு எகிப்து போன்ற நாடுகள் தடை விதித்து உள்ளன, இந்தியாவிலும் தடை விதிக்க “வினவு” அல்லது “கலை” போன்றோர் முயற்சி செய்யலாமே!!

      உங்களுடைய தவறை வைத்துக்கொண்டு சவுதி காரனிடம் பழியை போடுவது சரியல்லவே.

  28. வினவு…

    இதில் பகுதியளவு உண்மை. பகுதி மிகைப்படுத்தப்பட்டுள்ளது. அமீரகத்தில் 12 – 3 என்ற பிரேக்கிங் சிஸ்டம் விதிமுறையில் இருந்தாலும் நடைமுறையில் பல நிறுவனங்கள் அதை கடை பிடிப்பதில்லை.

    ஆனால் நீங்கள் வெளியிட்ட இரண்டு படங்களில்,

    முதல் படம் பெரும்பான்மையான வீக் என்ட்டில் நண்பர்களோடு கூடும் போது எடுத்ததாக இருக்கிறது. ஓரே அறையை 6-8 பேர் ஷேரிங் செய்வதை நம்ம சென்னை மேன்ஷகளோடு ஓப்பிடலாம். ஆனால் அதே படத்தை காட்டி சென்னையே இப்பிடித்தான் என நீங்கள் சொல்ல வருவது சரியல்ல.

    நிறைய இருக்கிறது. நிறைய ஆதாரங்கள் திரட்டுங்கள். நானும் எனக்கு தெரிந்ததை மெயில் செய்கிறேன்.

    நானும் 4 – 6 பேரோடு சேரிங்கில்தான் நிறைய நாட்கள் இருந்தேன். அது அவ்வளவு வசதிகுறைவுதான் ஆனாலும் நீங்கள் அதையே கொத்தடிமைதனத்தின் உச்சம் என பயங்கரமாக எழுதியதை நினைத்தால் சிரிப்புதான் வருகிறது

  29. எனக்கு நெருங்கிய நண்பர்கள் இப்போது துபாயில் இல்லை, இருந்தால் உடனேயே பர்துபாய், ஷார்ஜா போன்ற இடங்களுக்கு சென்று ஒரே அறையில் ஆறு நபர்கள் தங்கி இருக்கும் புகைப்படம் எடுத்து அனுப்புவார்கள். அங்கே சுவர்களில், பேரங்காடிகளில் (carefour, lamzy plaza, choitram super markets) ஒட்டி இருக்கும் விளம்பரங்களை புகைப் படம், ஸ்கேன் செய்து அனுப்புவார்கள். ஒரே அறையில் ஆறு நபர்கள், இரண்டு அடுக்கு கட்டில்கள், ஒரே சமையல் அறையில் இறந்து அல்லது மூன்று குடும்பங்கள் சமைப்பது . இருந்தும் நான் முயற்சி செய்கிறேன் அவை கிடைக்க.

    இஸ்லாமிய முதலாளிகள் என்று இல்லை, எல்லா மத முதலாளிகளும் தொழிலார்களை சரியாக கவனிப்பது இல்லை.

    நான் சொல்லும் இந்த ஆறு நபர்கள் ஒரே அறை, இரண்டு குடும்பங்கள் ஒரே சமையல் அறை போன்றவை, ஊதியம் குறிந்த தொழிலாளர்களான துப்புரவு தொழிலாளி, சமையல் காரர் அல்ல. பாலிடெக்னிக் படித்த இளநிலை பொறியாளர், கணக்காளர், நெட் வொர்க் பொறியாளர் போன்றோரி வாழ்வு இது, மாத சம்பளம் ஆறாயிரம் முதல் எட்டாயிரம் திர்ஹாம் வாங்குபவர்கள் நிலை.

    என்னுடைய நோக்கம், இன்று முதலாவது புதிய நபர்கள் இந்தியாவில் இருந்து இந்த மாதிரி அவல நிலை வேலை, வாழ்க்கை சூழலுக்கு சென்று தவிக்க கூடாது என்பதே.

    • ராம்ஜி சார், அது துபாய்ல (cost of living very high) நம்ம வினவு வினவி இருப்பது வளைகுடா ஷேக்கு என்று சொல்லி “சௌதி அரேபியாவை” விவரித்து இருகிறார்..இங்கே 2000 ரியால் சம்பள‌ம் வாங்குபவரே (i am speaking about my personal driver from trichy staying in jubail) நல்ல வசதியான வீட்டில் தங்கியிருகிறார். பொறியாளர்களை பற்றி சொல்லவாவேன்றும் (special monthly allowance for house rent 2000 riyals*12 for 18000 per year u will get very good house)

  30. //நான் சொல்லும் இந்த ஆறு நபர்கள் ஒரே அறை, இரண்டு குடும்பங்கள் ஒரே சமையல் அறை போன்றவை, ஊதியம் குறிந்த தொழிலாளர்களான துப்புரவு தொழிலாளி, சமையல் காரர் அல்ல. பாலிடெக்னிக் படித்த இளநிலை பொறியாளர், கணக்காளர், நெட் வொர்க் பொறியாளர் போன்றோரி வாழ்வு இது, மாத சம்பளம் ஆறாயிரம் முதல் எட்டாயிரம் திர்ஹாம் வாங்குபவர்கள் நிலை.//

    @ ramji yahoo

    நானும் இதை ஒத்து கொள்கிறேன். இதற்கு காரணம் பேச்சுலர் ஷேரிங் 750 – 1000 திர்ஹாம்ஸ் ஆக இருப்பதும், பேமிலி ஷேரிங் 2500 – 4000 திர்ஹாம்ஸ் ஆக இருப்பதும் ஆகும். வாடகை அதிகம் உள்ளதால் இது போல ஷேரிங்கில் அட்ஜஸ்ட் செய்கிறோம்.

    //இன்று முதலாவது புதிய நபர்கள் இந்தியாவில் இருந்து இந்த மாதிரி அவல நிலை வேலை, வாழ்க்கை சூழலுக்கு சென்று தவிக்க கூடாது என்பதே.//

    ஆனால் இதை அவல நிலைன்னு சொல்லுறதை ஏற்று கொள்ள முடியவில்லை. இது காய்ச்சலுக்கும் ஹார்ட அட்டாக்கிற்கும் உள்ள வார்த்தை வித்தியாசமாக எனக்கு படுகிறது

    • ராம்ஜி சார், அது துபாய்ல (cost of living very high) நம்ம வினவு வினவி இருப்பது வளைகுடா ஷேக்கு என்று சொல்லி “சௌதி அரேபியாவை” விவரித்து இருகிறார்..இங்கே 2000 ரியால் சம்பள‌ம் வாங்குபவரே (i am speaking about my personal driver from trichy staying in jubail) நல்ல வசதியான வீட்டில் தங்கியிருகிறார். பொறியாளர்களை பற்றி சொல்லவாவேன்றும் (special monthly allowance for house rent 2000 riyals*12 for 18000 per year u will get very good house)

    • //எனக்கு நெருங்கிய நண்பர்கள் இப்போது துபாயில் இல்லை, இருந்தால் உடனேயே பர்துபாய், ஷார்ஜா போன்ற இடங்களுக்கு சென்று ஒரே அறையில் ஆறு நபர்கள் தங்கி இருக்கும் புகைப்படம் எடுத்து அனுப்புவார்கள். அங்கே சுவர்களில், பேரங்காடிகளில் (carefour, lamzy plaza, choitram super markets) ஒட்டி இருக்கும் விளம்பரங்களை புகைப் படம், ஸ்கேன் செய்து அனுப்புவார்கள்//
      மறக்காமல் அனுப்ப சொல்லுங்கள். why they are scanning yaar? tell them to transfer photos to computer through usb and send via mail….

  31. கண்ணா

    நன்றிகள், இந்த உண்மையை சொல்லும் மனப்பாங்கை தான் நாங்கள் எதிர் பார்க்கிறோம். உண்மையை சொல்லுங்கள் உலகிற்கு

    ஒரு இளநிலை பொறியாளர், நெட்வொர்க் பொறியாளர் , விற்பனை பிரதிநிதி போன்றோருக்கு மாத சம்பளம் இந்திய ரூபாய் மதிப்பில் அறுபதாயிரம் முதல் எண்பதாயிரம் வரை கிடைக்கிறது, அதில் எட்டாயிரம் முதல் பத்தாயிரம் செலவு செய்தால் ஆறு நபர்களுடன் வசிக்கும் ஒரு கட்டில் மட்டும்
    கிடைக்கும்.
    திருவல்லிக்கேணி, போரூர் போன்ற பகுதிகளில் இருக்கும் மான்சன் போல ஒரு நபர் ஒரு அறையில் தங்க வேண்டும் என்றால் வாடகை நாற்பதாயிரம் முதல் ஐம்பதாயிரம் கொடுக்க வேண்டும். மாத சாப்பாடு பத்தாயிரம் ஆகும்.

    எனவே மாத சேமிப்பு இருபதாயிரம் முதல் முப்பாதாயிரம் வரை இருக்கும். இந்த சேமிப்பை நம் மக்கள் ராஞ்சி, புனா, கௌஹாதி போன்ற இடங்களுக்கு சென்று சம்பாதிக்கலாமே, அங்கு தனி வீடு, தனி அறை எடுத்து நல்ல சூழலில் வாழலாமே என்பது தான் எனது கருது.

    • ramji sir what you are trying to tell…….
      ராம்ஜி சார், அது துபாய்ல (cost of living very high) நம்ம வினவு வினவி இருப்பது வளைகுடா ஷேக்கு என்று சொல்லி “””””சௌதி அரேபியாவை””””””” விவரித்து இருகிறார்..இங்கே 2000 ரியால் சம்பள‌ம் வாங்குபவரே (i am speaking about my personal driver from trichy staying in jubail) நல்ல வசதியான வீட்டில் தங்கியிருகிறார். பொறியாளர்களை பற்றி சொல்லவாவேன்றும் (special monthly allowance for house rent 2000 riyals*12 for 18000 per year u will get very good house)

      One of the pictures told it is in “INDUSTRIAL AREA” i dont whether u worked in industrial area or not how u are expecting to give rooms for the workers (ellarkum thaniya banglow kodukalaama ramji sir)???? i also told in my previous post what are the facilities they will get for site workers……

    • //ஒரு இளநிலை பொறியாளர், நெட்வொர்க் பொறியாளர் , விற்பனை பிரதிநிதி போன்றோருக்கு மாத சம்பளம் இந்திய ரூபாய் மதிப்பில் அறுபதாயிரம் முதல் எண்பதாயிரம் வரை கிடைக்கிறது, அதில் எட்டாயிரம் முதல் பத்தாயிரம் செலவு செய்தால் ஆறு நபர்களுடன் வசிக்கும் ஒரு கட்டில் மட்டும்
      கிடைக்கும்// u are just going out faaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaar away from the topic ……ur comparison is like in the heart of chennai house rent will come around 20000 but outside chennai rent will come around 2000 tell the government to take neccessary steps………..my dear speak with some logic..for my information where u are working (in which country), how many countries u visited so for?

    • //இந்த சேமிப்பை நம் மக்கள் ராஞ்சி, புனா, கௌஹாதி போன்ற இடங்களுக்கு சென்று சம்பாதிக்கலாமே, அங்கு தனி வீடு, தனி அறை எடுத்து நல்ல சூழலில் வாழலாமே என்பது தான் எனது கருது//
      Ramji sir அந்த இடத்தில ஒரு நல்ல வேலை வாங்கிதாங்க siir…..

  32. முக்கியமான விசயம் என்னவென்றால் 90% சதவீதம் நிறுவனங்கள் மற்ற நாடுகளை சேர்ந்தவர்களல் நடத்தப்படுகிறது.அதிலும் குறைந்த ஊதியம் கொடுக்கும் நிறுவனங்கள் இந்தியர்களால் நடத்தப்படுகிறது என்பது தான் உண்மை.அதனால் இத்தலைப்பு கண்டிக்க தக்கது.அதே நேரத்தில் அரபு முதலாளிகளுக்கு நற்சான்றிதழ் வழங்கவும் முடியாது

  33. //ஒரு இளநிலை பொறியாளர், நெட்வொர்க் பொறியாளர் , விற்பனை பிரதிநிதி போன்றோருக்கு மாத சம்பளம் இந்திய ரூபாய் மதிப்பில் அறுபதாயிரம் முதல் எண்பதாயிரம் வரை கிடைக்கிறது, அதில் எட்டாயிரம் முதல் பத்தாயிரம் செலவு செய்தால் ஆறு நபர்களுடன் வசிக்கும் ஒரு கட்டில் மட்டும்
    கிடைக்கும்// u are just going out faaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaar away from the topic ……ur comparison is like in the heart of chennai house rent will come around 20000 but outside chennai rent will come around 2000 tell the government to take neccessary steps………..my dear speak with some logic..for my information where u are working (in which country), how many countries u visited so for?

  34. Schoolboy

    I have been working in Chennai. I had visited UK, US.Muscat.

    In Dubai I was there for just 2 days as a tourist and stayed in Hotel.

    I have seen Dubai bachelor accommodation (in the heart of the city like Bur dubai, meena bazar where 6 ot 8 bachelors share one single room (10&10 sq fttroom, double bunk beds).

    Ok vinavu could change the title as saudi, dubai, doha affair.

    I cant get job for you in Pune or Gowhathi or Hosur . it is you and the prospective employee has to take a choice/decision, whether to share 1 bathroom with 8 people for 20000 savings or to stay in Ranchi in single room for 10000.

    I would opt for Pune single room rather than Dubai.

    • தலைவரெ நாங்க அங்கெல்லாம் கூட ஆணிய புடிங்கி பார்தோம் ஆனா ஆணி வரல………..i already told u are going out faaaaaaaaaar away from the topic (the topic is not about the rent for the house)
      for ur information i am working in banglore (but staying in hosur)during projects i will roam around countries for years. Do u know i shared one very small room with 5 persons in hosur for 3000 rent? i already told you about my driver with 2000 riyal salary happily in saudi and allowance for engineers. i also have friends in dubai and abudhabi but none are stayed like that (only 4500dirham and 3000dirham salary as u told ramji sir) both are living happily there……..இது அவல நிலை இல்லை it is based on their intensions!!!!!
      While i was staying in korea my company spent around 200dollars(only one room) perday for rent because they gave accomadation in Seoul heart of korea…….this topic is not about the rent or some of the personal intensions got it????

      //Ok vinavu could change the title as saudi, dubai, doha affair// முதல்ல வினவு கிட்ட அத செய்ய சொல்லுங்க…. அவரு தப்ப உணர்ந்துகிறார்னு பார்பொம்!!!!!!! அது மட்டும் இல்ல அவரோட கட்டுரைல நிரய்ய ஓட்ட இருக்கு அதய்யும் திருத்து வாறா இல்லயானு பார்பொம்!!!!(these were told in many of the post)

  35. இதுதான்… இதுவரை வந்த பின்னூட்டங்கள்… வினவு குழுவுக்கு கிடைத்த வெற்றி…

    சிறு பொறி பெரு நெருப்பு…

    முதலில் சென்னையில் ரெங்கநாதன் தெருவில் சுற்றிப் பாருங்கள்… கூவம் சேரிப்பகுதியைப் பாருங்கள்.

    மேலே வெளியிட்ட இரண்டு புகைப்படங்களிலும் இருப்பது, பெங்காளிகளும், பாக்கிஸ்தானிகளும்,

    முதலில் தலைப்பை மாத்தூங்கய்யா?

    நீ உள்ளூர் பிச்சைக்காரணப் பத்தி எழுதவும் மாட்ட….
    பத்து பைசா தருமம் போட மாட்ட.

    இதுல வெளிநாட்டுல போயி பிச்சை எடுக்குறவனப் பத்தி எழுத வந்துட்டாரு?

    இப்படியே மண்டபத்துல யாராவது எழுதிக் கொடுத்தத நெட்டுல போட்டு போட்டு, இந்த நாடக் குட்டிச் சுவாராக்குனாதான் நீங்கெல்லாம் அடங்குவீங்க.. மண்டகப்படி சேவைகள் துடரட்டும்.

  36. shool boy

    கட்டுரையில் உழைப்புச் சுரண்டலைப்பற்றி எழுதப்பட்டுள்ளது. அதற்கு ஏஜண்ட் ஏமாற்றிவிட்டான், ஷேக் முதலாளிகள் மட்டுமல்ல மற்ற முதலாளிகளும் காரணம், குறைந்த சம்பளத்திற்கு தெரிந்தே வருகிறார்கள் என்றெல்லாம் நீங்கள் சொல்வது உண்மையை தனித்தனியாக ஒப்புக் கொள்வது போல இருக்கிறது.

    தெற்கு ஆசிய நாடுகளிலிருந்து வரும் உழைப்பாளிகள் தங்கள் இரத்தத்தையும், வியர்வையையும் சிந்தித்தான் வளைகுடாவின் வானளாவிய நகரங்களை கட்டி எழுப்பியிருக்கிறார்கள். இவர்களையெல்லாம் பல்லாயிரம் சம்பளத்தில் வைத்துக் கொண்டால் ஷேக்குகள் சிங்கி அடிக்க வேண்டியதுதான். பாக்கிஸ்தானிலோ, பங்களாதேஷிலோ வயிற்றுக்கில்லாத கொடுமைக்கு வரும் மக்களை அணு அணுவாக சித்திரவதை செய்துதான் உங்களைப் போன்ற ஓயிட் காலர்களுக்கு நிறைய சம்பளம் கொடுக்கப்படுகிறது.

    இங்கே ஒரு பின்னூட்டத்தில் சவுதியில் வேலைபார்த்த ஒருவர் தொழிலாளிகள் வேலை முடிந்து பெப்சி டின் சேகரிப்பதற்கு செல்வதை எழுதியிருக்கிறார். நீங்கள் கண்ணை மூடிக் கொண்டால் உலகம் இருண்டு விடுமா?

    மற்ற நாடுகளிலாவது தொழிலாளிகள் தங்களது கொடுமைகளை சொல்லி புலம்பி பின்னர்போராடுவதற்காகவது வாய்ப்பு இருக்கிறது. வளைகுடாவில் எதுவும் இல்லை. எல்லாம் ஷேக்குகள் வைத்ததுதான் சட்டம். சவுதியில் ஈவ் டீசிங் பிரச்சனை இல்லை. ஆனால் வீட்டுப் பணிப் பெண்களை பாலியல் வன்முறை செய்யும் ஷேக்குகளை யாரும் தண்டிக்க முடியாது.

    இப்படிப்பட்ட சர்வாதிகார நாட்டில் கொடுமையான வாழ்க்கைச்சூழலில் வாழும் தொழிலாளிகளின் அவலத்தை உங்களைப் போன்று ஏ.சியில் வாழும் மனிதர்கள் புரிந்து கொள்ளவே முடியாது.

    • வினவு அறிவாவலிதனமா பேசுகிரோம் என்று நினைத்து முட்டாள் தனமாஹதான் இன்னும் பேசுஹிரீர்கள். இங்கே பல பேர் சொன்னது தலைபுக்கும் கட்டுரைகும் பொருத்தம் இல்லாதது.this was told many of them in their post. And also they told how workers are living in saudi, their living conditions..etc.. Because they know about that. They had working experiance in saudi. They know how workers are entering in saudi (this was told briefly in my post)….

      //தெற்கு ஆசிய நாடுகளிலிருந்து வரும் உழைப்பாளிகள் தங்கள் இரத்தத்தையும், வியர்வையையும் சிந்தித்தான் வளைகுடாவின் வானளாவிய நகரங்களை கட்டி எழுப்பியிருக்கிறார்கள். இவர்களையெல்லாம் பல்லாயிரம் சம்பளத்தில் வைத்துக் கொண்டால் ஷேக்குகள் சிங்கி அடிக்க வேண்டியதுதான்// Did u work in saudi before?

      வினவு அவர்களே உங்களுக்கு புரியும் படி நிறைய பேர் இங்கு பிண்ணுட்டம் அனுப்பி விட்டார்கள்.are u still not able to understand? suppose for example consider i am going to start one new shop in saudi, first i have to approach one saudi ,the saudi will ask about the estimation and we will make a deal that monthly XX amount of money i have to give. Then i have to tell what kind/how many visa i want the saudi will arrange for that (the official relation between the saudi and me will get end here). Then i have take workers for my shop quoting very small money to the emloyees so and so (from here the problem will get start)..

      //பாக்கிஸ்தானிலோ, பங்களாதேஷிலோ வயிற்றுக்கில்லாத கொடுமைக்கு வரும் மக்களை அணு அணுவாக சித்திரவதை செய்துதான் உங்களைப் போன்ற ஓயிட் காலர்களுக்கு நிறைய சம்பளம் கொடுக்கப்படுகிறது//
      மற்றவன் வயிற்றை அடித்து சாப்பிடும் ஈனப்பிறவி நான் இல்லை (my dear i also clearly told how some workers are earning அவர்களுக்கு நான் “கொடி” பிடிக்கவா) i also heard the previous history of some workers அவர்களுடைய சரித்திரத்தை கேட்கும் போது எனக்கு அனுதாபம் வராது கோபம்தான் வரும்…i know how iam getting salary for my work (how the money is getting divided between the contractors).

      //இங்கே ஒரு பின்னூட்டத்தில் சவுதியில் வேலைபார்த்த ஒருவர் தொழிலாளிகள் வேலை முடிந்து பெப்சி டின் சேகரிப்பதற்கு செல்வதை எழுதியிருக்கிறார். நீங்கள் கண்ணை மூடிக் கொண்டால் உலகம் இருண்டு விடுமா?// இதே பின்னூட்டத்தில் உழைக்கும் வர்கமும் பணக்கார வர்கமும் அடிக்கும் கொட்டத்தை எடுத்துரைத்தேனே அதை படிகக்வில்லயா?ஏமற்றூபவனுக்கு(உழைக்கும் வர்கமும் கிடையாது பணக்கார வர்கமும் கிடையாது எல்லோரும் மலம் தின்னும் பண்றிகள்தான்.

      //மற்ற நாடுகளிலாவது தொழிலாளிகள் தங்களது கொடுமைகளை சொல்லி புலம்பி பின்னர்போராடுவதற்காகவது வாய்ப்பு இருக்கிறது. வளைகுடாவில் எதுவும் இல்லை. எல்லாம் ஷேக்குகள் வைத்ததுதான் சட்டம். சவுதியில் ஈவ் டீசிங் பிரச்சனை இல்லை. ஆனால் வீட்டுப் பணிப் பெண்களை பாலியல் வன்முறை செய்யும் ஷேக்குகளை யாரும் தண்டிக்க முடியாது//
      வலைபதிவு ஆசிரியர் என்றால் மற்றவர் பின்னூட்டத்தை முழுதாக படிக்க வேண்டும். i clearly told in my previous post how dawa center is working who are the members of dawa center and how to approach them. Can i copy paste here also??

      //இப்படிப்பட்ட சர்வாதிகார நாட்டில் கொடுமையான வாழ்க்கைச்சூழலில் வாழும் தொழிலாளிகளின் அவலத்தை உங்களைப் போன்று ஏ.சியில் வாழும் மனிதர்கள் புரிந்து கொள்ளவே முடியாது.// Vinavu sir உங்க கொத்தடிமைகளும் ACல தான் sir வாழுராங்க look at ur first photo(immidiately dont tell AC is there but saudi sheiks wont provide power supply for that)‌

      இந்த பதிவில் நானும் பிர நண்பர்களும் கேட்ட பல கேள்விகளுக்கு இன்னும் விடை சொல்லவில்லயெ vinavu sir 🙁 🙁 :-(??????

      “Googleஆண்டவரிடதில் தண்ணீர் விற்கும் ஆசாமி படம் கிடைக்கவில்லயா?”

  37. நீங்கள் குறிப்பிட்டுள்ளது போல் கட்டிடப்பணி போன்ற வெளி வேலை செய்பவர்களின் நிலமை கஷ்டம்தான். இங்குள்ள வெயிலிலும் , குளிரிலும் தாக்கு பிடிப்பது மிகக் கஷ்டம்.

    ஆனால் தங்குமிடங்கள் சாப்பாட்டு வசதிகள் எல்லாம் நீங்கள் குறிப்பிடுவது போல் இல்லை. நம் நாட்டில் உள்ள தொழிற்சாலைகளை விட சவுதியில் தங்குமிடங்கள் தரமானவை மேலும் அடிக்கடி பரிசோதனைக்கு உட்படுத்தப்படுபவை. இங்கு எல்லா அறைகளுமே ஏசி வசதி செய்யப்பட்டவைதான்.

    நம் நாட்டை விட ஊழல் இங்கு மிகவும் குறைவு. போலீஸ்காரர்களின் தொல்லை எந்த விதத்திலும் இல்லை. கடைகள்கள் உணவு விடுதிகளில் காலாவதியான பொருட்களை விற்றால் சீல் வைத்து விடுவார்கள். இங்குள்ள கடுமையான சட்டங்களால் தவறுகள் நடப்பது மிகக் குறைவு.

    எல்லாவற்றிற்கும் மேலாக. கம்பெனிகளில் வேலை பார்ப்பவர்களை தவிர. கடைகளில் வேலை பார்ப்பவர்கள் நன்றாகவே சம்பாதிக்கிறார்கள். மாதாமாதம் ஓனருக்கு ஒரு தொகை கொடுத்து சொந்தமாக கடையை நடத்துபவர்கள் இங்கு அதிகம். அவர்கள் அனைவருமே இன்று பணக்காரர்களாக இருக்கிறார்கள்.

    ஏமாற்றுபவர்கள் நம்மூர் ஏஜெண்டுகள் மட்டுமே. நல்ல ஏஜெண்ட் மூலமாக வந்தவர்கள். இங்கு வசதியாகவே வாழ்கிறார்கள்.

    உண்மையிலேயே ஊரை விட கஷ்டம் இருந்தது என்றால் ரிட்டன் டிக்கெட்டில் யாரும் ஊருக்கு வரமாட்டார்கள்.

  38. //கட்டுரையில் உழைப்புச் சுரண்டலைப்பற்றி எழுதப்பட்டுள்ளது.//
    மத்திய கிழக்கு நாடுகளில் உழைப்புச் சுரண்டப்படுவது முற்றிலும் உண்மை. ஆனால் உண்மையாகவே இந்த கட்டுரை உழைப்புச் சுரண்டலுக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கிறதா?
    //இப்படிப்பட்ட சர்வாதிகார நாட்டில் கொடுமையான வாழ்க்கைச்சூழலில் வாழும் தொழிலாளிகளின் அவலத்தை உங்களைப் போன்று ஏ.சியில் வாழும் மனிதர்கள் புரிந்து கொள்ளவே முடியாது.//
    புரிந்துக்கொண்டு கட்டுரை எழுதி விவாதித்தால் போதுமா!!!

    ஒருவேளை, இந்த கட்டுரையை Bit Notice – ஆக அடித்து இந்த கருத்துகள் யாருக்கு சென்று சேர வேண்டுமோ அவர்கள் கையில் கிடைத்தால் நலமாக இருக்கும். அல்லாது அதற்கு சற்றும் சம்பந்தமே இல்லாத ஏதோ ஒரு கூட்டம் கணினித்திரை முன்பு அமர்ந்துகொண்டு கட்டுரைகளின் எண்ணிகையை உயர்த்திகொள்வதில் என்ன பலன் என்பதை யாம் அறியோம் பராபரமே!

    • //புரிந்துக்கொண்டு கட்டுரை எழுதி விவாதித்தால் போதுமா!!!//

      சரியாக கூறினீர் தோழரே, வினவு போன்றோர் குறுப்பிட்ட சமுதாயத்தை கண்மூடி தனமாக விமர்சிப்பதை தங்களுடைய தொழிலாக கொண்டுள்ளனர்.

      வட இந்தியாவில் பலரை கொன்று குவிக்கிற நக்சலேட்களை இவர்கள் விமர்சிக்க மறப்பது ஏன்?

  39. saudi sendru nal vazhvu pedravarkalum irukkiraarkal. ippadi kashdappadubarkalum irukkiraarkal. atharku vidivu kaalam varaamal pokaathu. nambuvom-meerapriyan.blogspot.com

    • இது எந்த இடம்னு நான் தெரிஞ்சிகலாமா???? வினவு சார்…..எப்படியும் இத கூகிள்கிட்ட இருந்து எடுத்து இருக்க மaaடீங்க!!!!!!ஜூலை மாதத்திலிருந்து தேடிகிட்டு இருந்தீங்களா?

      • schoolboy,,,

        This article is about the labour rights and their salaries…

        if you say saidi is good country in term of labour laws and expatriates respect… (even you will not get respect there from saudies..) everyone will laugh at you.

        what are you trying to prove here….

    • அந்த நாலு பேரில் எந்த அறிவாளி உங்கலிடம் “இந்த தண்ணீர் விற்கும் நிறுவனங்களால் தான் உலகில் தண்ணீர் பஞ்சம் ஏற்படுகிறது எனக் கூறும் போது வார்த்தைகள் வறண்டு விடுகின்றன” இப்படி சொன்னது!!!

      • பள்ளிக்கூடத் தம்பி, நீங்கள் கட்டுரையை ஒழுங்காவே படிக்கமாட்டீங்களா! இவங்க சொன்னாங்கன்னா எழுதியிருக்கிறாங்க?

        • ஒரு நிறுவனத்தில் எட்டு மணி நேர வேலையை முடித்துவிட்டு அதற்கு மேல் குறைந்தபட்சம் பத்து கிலோமீட்டராவது கையில் தண்ணீர் புட்டிகளைத் தூக்கிக் கொண்டு நடந்து கடக்கும் இவர்களிடம், இந்த தண்ணீர் விற்கும் நிறுவனங்களால் தான் உலகில் தண்ணீர் பஞ்சம் ஏற்படுகிறது எனக் கூறும் போது வார்த்தைகள் வறண்டு விடுகின்றன. ithukku neengalay meaning thaangq mr.kaatarabi….

Leave a Reply to Aasaad பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க