privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திசச்சின் டென்டுல்கரின் 35லட்ச ரூபாய் இரத்தப் புத்தகம்! காறித்துப்புவோம் !!

சச்சின் டென்டுல்கரின் 35லட்ச ரூபாய் இரத்தப் புத்தகம்! காறித்துப்புவோம் !!

-

கிராகன் மீடியா (kraken media) என்ற பிரபலமான ஐரோப்பிய புத்தக வெளியீட்டு  நிறுவனம் சச்சின் டெண்டுல்கரது சுயசரிதையை புத்தகமாக வெளியிடப் போகிறது. இது ஏதோ பத்தோடு ஒன்றாக நினைத்து விடாதீர்கள்.

அரை மீட்டர் குறுக்களவும், 37 கிலோ எடையும் கொண்ட இந்தப் புத்தகத்தில் இதுவரை வெளிவராத சச்சினது குடும்பப் படங்ளும், சுயசரிதை அனுபவங்களும் இடம் பெறுகின்றன. முக்கியமாக சச்சினது இரத்தத்தை கலந்து தயாரிக்கப்பட்ட காகிதக் கூழினால் செய்யப்பட்ட இளஞ்சிவப்பு காகிதம் இந்த நூலில் இடம் பெற்றிருக்கும்.

ரத்தம் கலந்திருக்கும் இந்த விலை மதிக்க முடியாத புத்தகத்தின் விலை ரூ. 35 இலட்சம். மேலும் சச்சினது எச்சிலை பயன்படுத்தி அவரது டி என் ஏ விவரங்கள் சேகரிக்கப்பட்டு அதுவும் இணைப்பாக இந்த புத்தகத்தில் இருக்கும். இந்த சிறப்புகளுக்கு பொருத்தமாக அட்டை தங்கத்தில் ஜொலிக்குமாம்.

இவ்வளவு மதிப்புகளைக் கொண்டிருக்கும் இந்த புத்தகம் மொத்தமாக பத்து பிரதிகளே தயாரிக்கப்படும். அதற்கான ஆர்டரும் முன்பதிவும் முடிந்து விட்டனவாம்.

இந்த வரலாற்று சிறப்பு மிக்க நூலைப்பற்றி கிராகன் மீடியாவின் தலைமை நிர்வாகி கார்ல் ஃபவ்லர் கூறும் போது, “ கிரிக்கெட் இரசிகர்களின் கடவுளாக போற்றப்படும் சச்சினை யாராவது எளிதில் நெருங்க முடியுமா? அதனால்தான் இவ்வளவு அதிக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது ” என்று காரணத்தை பக்தியுடன் விவரிக்கிறார்.

மேலும் “ இந்த புத்தகத்தின் மூலம் கிடைக்கம் பணம் மும்பையில் உள்ள டெண்டுல்கரது அறக்கட்டளை கட்டி வரும் பள்ளிக்கூடத்திற்கு நன்கொடையாக அளிக்கப்படும் ” என்றும் கூறுகிறார். அதனால் இது கொள்ளை என்று யாரும் நினைத்துவிடக்கூடாது. அதாவது சச்சின் தனது இரத்தத்தை விற்று பள்ளிக்கூடம் கட்டுகிறாராம்.

அடுத்து கிடைத்தற்கரிய புத்தகத்தை 35 இலட்சம் கொடுத்து வாங்க முடியாதவர்களுக்காக ஒன்றரை இலட்ச ரூபாயில் இதே புத்தகம் தயாராகிறது. ஆனால் ரத்தம் கலந்த காகிதம் இதில் இருக்காது.

பதிப்புலகில் இத்தகைய மைல்கற்களைக் கொண்டிருக்கும் இந்த புத்தகம் அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெற இருக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது வெளியிடப்படுமாம். அதுதானே டெண்டுல்கரது கடைசி உலகக் கோப்பை போட்டி!

மேற்கு வங்கத்தில் நேற்று நடந்த இரயில் விபத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட காயமடைந்த மக்களுக்கு தேவையான இரத்தம் கிடைக்க வில்லை என்பதாக பத்திரிகைகள் எழுதியிருந்தன. இது கேள்விப்பட்டு மற்ற பயணிகளும், அருகாமை ஊர் மக்களும் உடன் ரத்தம் கொடுக்கத்  திரண்டனர்.

ரத்த தானத்தின் அருமையை நாம் இப்படித்தான் கேள்விப்படுகிறோம். அதிக ரத்தப்போக்கினால் பெண்கள் படும் அவலங்களையும் அறிந்திருப்போம். கணிசமான பெண்கள் ரத்த சோகையினால் பாதிக்கப்பட்டிருப்பதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

இப்படி சக மனிதனது இடர் கண்டு கொடுக்கப்படும் இரத்தத்தை சச்சினது புத்தகம் மகா இழிவாக, சுயவிளம்பர வெறிக்காக கேவலப்படுத்துகிறது. ஏன் இரத்தம், எச்சிலோடு முடித்து விட்டார்கள் என்பது தெரியவில்லை. சச்சினது சளி, வியர்வை, விந்து என எல்லாவற்றையும் சேர்த்திருக்கலாமே?

பத்து புத்தகங்களது தொகையான மூன்றரை கோடி ரூபாய் சச்சின் கட்டும் பள்ளிக்குத்தானே போகிறது என்று சிலர் ஆறுதல்படுத்தலாம். ஆனால் டெண்டுல்கரது மூன்று வருடங்களுக்கான விளம்பர ஊதியம் மட்டும் 185 கோடி. இது போக அவரது பந்தய வருமானங்கள், பழைய விளம்பர வருமானங்கள், ஓட்டல் முதலான தொழில் வருமானங்கள் தனி. இப்படி பெரும் முதலாளியாக வாழும் அவருக்கு பள்ளி கட்டுவதற்குகூட தனது இரத்தத்தை காட்டி 3.5 கோடியை வசூலிக்கிறார் என்றால் என்ன பொருள்?

1.5 இலட்ச ரூபாய் புத்தகம் எவ்வவளவு விற்கப் போகிறது என்பது தெரியவில்லை. குறைந்தது 5000 பிரதிகள் என்றால் 75 கோடி ரூபாய் வருகிறது. இதில் பத்து சதவீத ராயல்டி என்றால் சச்சினுக்கு 7.5 கோடி கிடைக்கும். இது போக சுயசரிதை ஒப்பந்தத்திற்கு தனி தொகை. 75 கோடியில் பாதிக்கும் மேல் இலாபம் கிரேகான் நிறுவனத்திற்கு கிடைக்கும்.

இரத்தத்தை காட்டி விளம்பரம் செய்வதற்கு 3.5 கோடி. இலாபம் 30 கோடி.

பாதிக்கும் மேற்பட்ட மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழே வாழும் இந்தியாவில்தான் இத்தகைய ஆபாசங்களும் நடைபெறுகின்றன. சினிமாவைப் போல புதிய மதமாக தலையெடுத்திருக்கும்கிரிக்கெட்டின் வீச்சு காரணமாகத்தான் இந்த ஆபாசங்கள் தைரியமாக சந்தைக்கு வருகின்றன. சாமர்த்தியமாக மோசடி செய்து இரசிகனை ஏமாற்றுகின்றன.

டெண்டுல்கரது பவுண்டரிக்கும், சிக்சருக்கும் கைதட்டியவர்கள் சுரணையிருந்தால் இந்த ரத்தப் புத்தகத்தின் மீது காறித் துப்புங்கள்!!

  1. சச்சின் டென்டுல்கரின் 35லட்ச ரூபாய் இரத்தப் புத்தகம்! காறித்துப்புவோம் !!…

    ஏன் இரத்தம், எச்சிலோடு முடித்து விட்டார்கள் என்பது தெரியவில்லை. சச்சினது சளி, வியர்வை, விந்து என எல்லாவற்றையும் சேர்த்திருக்கலாமே?…

  2. காரி துப்புவதை தவிர வேறு ஒன்றுமே தெரியாதா கம்முனிஸ்டுகளுக்கு

    • இன்னாங்க இப்படி சொல்லிட்டிங்க.. ஒழுங்கா ஓடிகிட்டிருக்கிற பாக்டரிய ஊத்தி மூட வைக்க தெரியும், அதை நம்பி நிம்மதியா குடும்பம் நடத்தி கொண்டிருந்த தொழிலாளிய குடும்பத்தோட தெருவுக்கு கொண்டு வர தெரியும், அமைதியா போய்க்கிட்டிருந்த ஊரில ஜாதி கலவரத்த உருவாக்க தெரியும், பகல்ல பவிசா உண்டி குலுக்கிட்டு ராத்திரியில் தொழிற்சாலை முதலாளி வீட்டிற்கு சென்று தன் தொந்தியை வளர்த்து கொள்ள தெரியும், அவனுக்கு காஸ் தொந்தரவால் வாயு பிரிந்தால் கூட அதற்க்கும் அமெரிக்க சதி என்று ஊரை ஏமாற்ற தெரியும், etc, etc, etc, etc,,,,,

    • இந்த முதலாலித்துவ கைக்கூலி டெண்டுல்கரை வைத்து முதலில் விளையாடும் போது கிரிக்கெட் போர்டு, பின்னர் விளம்பரம் மூலம் பெரும் முதலாளிகள், இப்போது ஓய்வு எடுக்கும் நேரம் புத்தக வியாபாரிகள் பணம் சம்பாதிக்கின்றனர். ஆனால் எல்லாவற்றிலும் ஏமாறுவது என்னவோ ரசிகன் தான். நல்ல வேலை புத்தகம் விலை லட்சக்கணக்கில் உள்ளது; அல்லது சாதாரண ரசிகனின் பணம் நாசமாகும்.

  3. //டெண்டுல்கரது பவுண்டரிக்கும், சிக்சருக்கும் கைதட்டியவர்கள் சுரணையிருந்தால் இந்த ரத்தப் புத்தகத்தின் மீது காறித் துப்புங்கள் //

    முடியாதுங்க.

    • /////
      //டெண்டுல்கரது பவுண்டரிக்கும், சிக்சருக்கும் கைதட்டியவர்கள் சுரணையிருந்தால் இந்த ரத்தப் புத்தகத்தின் மீது காறித் துப்புங்கள் //

      முடியாதுங்க.
      /////

      கரெக்டு…

    • ஏனுங்க, மணிகண்டன் சாருக்கு சுரணை இல்லீங்களா?

      • அதனாலதான் முடியாதுண்ணு சொல்ராறு.
        சரி உங்களுக்கு இருக்காணு பாருங்க.

    • பரவாயில்ல மணிகன்டன் காறித் துப்பவேணாம், இந்த புத்தகத்தை பத்தின உங்க கருத்தையாவது துப்பிட்டுபோங்க, சீனு நீங்களும்தான்!

  4. […] This post was mentioned on Twitter by சங்கமம், ஏழர. ஏழர said: @manikandanvis @orupakkam சச்சின் ரத்தப்புத்தகம் http://bit.ly/bFjzRv #vinavu […]

  5. ஃபோர் அடிச்சா மில்லியனர்!
    சிக்ஸ் அடிச்சா பில்லியனர்!
    விளம்பரத்துல நடிச்சா மல்டி பில்லியனர்!
    ரத்தப்புத்தகம் போட்டா ……………….

    நம்மதான் நாக்அவுட்!!!!

  6. யாருபா அங்க …
    வினவு கய்யில ஒரு மட்டயக் கொடுங்கப்பா ..

    இன்மே அவரு விளயாடுவாறு … இந்தியா சார்பா ..

    சாரி , ரெண்டு மட்ட வேணும் .. ஒண்ணு சிவராமானுக்கு ..

    வினவு இது போன்ற பதிவு எழுதுவதன் மூலம் வினவின் மேலுள்ள விசுவாசம் குறைகின்றது.
    இருக்கும் வாசகர்களையும் இழக்க வாய்ப்பு இருக்கிறது.

    • //வினவு இது போன்ற பதிவு எழுதுவதன் மூலம் வினவின் மேலுள்ள விசுவாசம் குறைகின்றது.
      இருக்கும் வாசகர்களையும் இழக்க வாய்ப்பு இருக்கிறது.//

      சச்சின் என்ற யாவாரிக்காக வினவை இழக்க விரும்புகிறவர்களை ஒன்றும் செய்ய இயலாது. அவர் தலைவிதி அவரவருக்கு…..

    • ஓரு கேள்விங்க…..கிரிக்கெட் இந்த நாட்டில் எதற்கு விளையாடணும்….

      அந்த விளையாட்டு இல்லைன்னா என்ன குறைச்சல் வந்துடும்

      • இந்தக் கேள்வி எதைப் பற்றி வேண்டுமானாலும் கேட்கலாம் மகிழ்நன். இசை, ஓவியம், சிற்பம், நாடகம், விளையாட்டு எதுவுமே விவசாயம் போல, அறிவியல் போல நேரடியாக மனித இனத்துக்கு உதவாதது போல இருக்கலாம். ஆனால் சமூகக் கட்டமைப்பிற்கும், ஒற்றுமைக்கும், தனிமனித ஒழுங்கிற்கும் இவை எல்லாமே உதவி இருக்கின்றன. மதங்கள் போல இல்லாமல் பிரிவினைகளுக்கு எதிராக இருந்திருக்கின்றன. மிகவும் அடிப்படை அளவில் பேசினால் கூட முஸ்லீம்களும் அனைத்து சாதி இந்துக்களும் வெவ்வேறு தளங்களில் செல்வம் படைத்தவர்களும் சமநிலையில் கூடும் இடங்கள் இவைதான்.

        இர்ஃபான் பதானும் (முஸ்லீம்), ஹர்பஜனும் (சீக்கியர்), சச்சினும் (பிராமணர்), சேவாக் (ஜாட்) பாகு பாடு இல்லாமல் சேர்ந்து பணி செய்யும் ஒரு நோக்கத்தை விளையாட்டு தருகிறது. சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் மராத்திய தலித்துகளுக்கு பலூ என்ற கிரிக்கட் வீரரின் சாதனைகள் ஊக்கமாக இருந்திருக்கின்றன. அதே போல தென்னாப்பிரிக்கக் கருப்பர்களுக்கு மகாய இன்டினி.

        “Hoop dreams” என்ற படம் பாருங்கள். போதைப் பொருட்களுக்கு அடிமையாகியிருக்க வேண்டிய லாஸ் ஏஞ்சல்ஸ் சேரிக் குழந்தைகளுக்கு கூடைப்பந்து விளையாட்டு தந்த ஒழுக்கமும் சுபிட்சமும் புலனாகும். இது உங்கள் கேள்விக்கு மட்டுமே நான் தரும் பதில்.

  7. அவரோட ரத்தத்தை வியாபாரம் ஆக்கிதானே சம்பாதிக்கிறார்.அடுத்தவர் ரத்தத்தை இல்லையே.இதற்க்கு எதற்கு இந்த பதிவு?அவர் செய்துள்ள சாதனைகளால் அவர் ரத்தம் மதிப்பு பெறுகிறது.

    எதிலும் குறை கண்டு பிடிக்கும் மனநிலை மட்டுமே இதில் தெரிகிறது.

    • அப்புடி நெனச்சா உங்க மனதிலதான் குறை இருக்குன்னு அர்த்தம். சசினைத் தெரிந்த உங்களுக்கு 21000க்கும் மெற்பட்டோர் இறந்து போன போபாலும், தினசரி இறந்து கொண்டிருக்கும் விதர்பா விவசாயிகளையும் தெரியுமா? இதெல்லாம் தெரியாமல் போவதற்கு இந்த கிரிக்கெட், சினிமா போன்றவற்றில் மூழ்கிப் போகும் மனநிலையும், தனி மனிதனை த்லையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் வியாதியும் தான் காரணம்.

      • இவர் தனது புத்தகத்தை அதிக விலை வைத்து விற்பதால் நீங்கள் சொல்லும் விவசாயிகளுக்கும்,போபால் மக்களுக்கும் என்ன பிரச்சினை ? ஒரு அரசு இது போன்ற காரியங்களை செய்யுமானால் குற்றம் சொல்லலாம்.அந்த பணத்தை கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவலாமே என்றோ , இத்தனை பேர் கஷ்டப்படும் போது எதற்கு இப்படிப்பட்ட ஒரு ஆடம்பர புத்தகம் என்றோ நிச்சயமாக கேக்கலாம்.

        சச்சின் ஒரு தனி மனிதர்.அரசு , அரசு துறையினருடன் எந்த சம்பந்தமோ ,அரசின் மூலம் வருமானமோ பெறாதவர்.அவர் சட்டதிருக்கு உட்பட்டு எப்படியும் பணம் ஈட்டலாம் ,அதை செலவும் செய்யலாம்.

        • சச்சின் தனியா வூட்டுக்குள்ள ஆடி, தனியா சம்பாதிச்சிருந்தா…இந்த கேள்வியை யாரும் கேக்க போறதில்லை….மக்களின் நேரத்தை வீணடிக்கும் ஒரு ஆட்டத்தை ஆடிவிட்டு ( ரம்பா, சிம்ரன் ஆட்டத்தையும் இதற்கு ஒப்பிட்டு கொள்ளவும் தப்பில்லை)…

          சமூக அக்கறையே இல்லாமல் கேணத்தனமா பணத்தை மட்டும் சேர்த்து கொள்ளும் ஒருவன் இந்த சமூகத்திற்கு என்ன தேவை

      • //அப்புடி நெனச்சா உங்க மனதிலதான் குறை இருக்குன்னு அர்த்தம். //

        இன்னும் ஒன்று திரு.புலிகேசி ,நீங்கள் சிந்திப்பதற்கு மாறாக யாரும் சிந்திக்க கூடாது.சிந்தித்தால் அவன் மனதில் குறை என்று சொல்லி விடுவீர்கள்.அருமை உங்கள் வாதமும் , வாதம் செய்யும் முறையும் .

        சச்சினையோ கிரிக்கேட் விளையாட்டை விரும்புபவர்கள் அனைவரும் அதிலேயே மூழ்கி விடுபவர்கள் , அவர்களுக்கு மற்ற எதன் மீதும் கவனமும் ,சமூக அக்கறையும் இல்லை என்று நீங்கள் நினைத்து கொண்டிருபதுதான் வேடிக்கையாக உள்ளது.

        • நான் அப்படி நினைப்பவனல்ல. ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். சச்சினுக்கு ஏன் இவ்வளவு முக்கியத் துவம் கொடுக்கிறீர்கள். அந்த முக்கியத்துவத்தை போபால் விடயத்தில் கொடுத்திருந்தால் இன்று அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு ஓரளவாவது எதிர்ப்புகள் கிளம்பியிருக்கும். மக்களின் உயிர்களை விட சச்சின் முக்கியமாக சித்தரிக்கப் படுகிறாரா இல்லையா? இது நல்லதா கெட்டதா?

    • கட்டுவார்கள் வால் அதில் என்ன சந்தேகம் தனி மனிதனுக்கு சொம்பு தூக்குவதில் இவர்களை அடித்துக்கொள்ள முடியாது

      • பெரியார், வீரமணி, ரஜினி, குஷ்பு, நமிதா, சே ,செருகூரி – இவர்களைப் போன்றவர்களுக்கு தனி மனித வழிபாடு நடத்தினால் தப்பில்லையா?

      • உண்மை. சச்சின் போன்ற‌ சாதனையாளர்கள் மீது மதிப்பு வைப்பதில் தவறில்லை. ஆனால் இந்தத் தனிமனித வழிபாடு அத்து மீறிப் போவது தான் சினிமா நடிகர்களும், அரசியல் வாதிகளும், கிரிக்கெட் ஆட்டக்காரர்களும் மனசாட்சியில்லாமல் சொத்து குவிக்க ஏதுவாகிறது.
        அந்த‌ ம‌ன‌ப்பான்மையை ஒழிக்க‌ இது போன்ற‌ இடுகைக‌ள் அவ‌சிய‌மாகிற‌து. ஆனாலும் எல்லோரும் ஏற்க‌க் கூடிய‌வ‌கையில் ச‌ற்றே மித‌மான‌ தொனி இருக்க‌லாம்.
        ஆத்திர‌த்தைக் காட்டுவ‌தை (நியாயம் தானென்றாலும்) விட பெரும்பான்மை ம‌க்க‌ளுக்குப் புரிய‌வைப்ப‌து நோக்க‌மாக இருந்தால் ந‌ல்ல‌து என்ப‌து என் தாழ்மையான‌ க‌ருத்து.

  8. உண்மை தோழர் ………..காரி துப்ப வேண்டும் ……….இங்கே நெகடிவ் வாக்கு அளிப்பவர்களுக்கு ………….விதர்பா தெரியாது சச்சின் தெரியும்
    கொடுமை …………ஏற்கனவே கரெக்ட் தோழர் என்று தவாறன இடத்தில் போட்டு விட்டேன் நீக்கி விடவும்

  9. சச்சின் டென்டுல்கரினால் எங்காவது இனம், மொழி, மதம் பாதிப்படைந்துள்ளதா?
    புத்தகத்தின் மீது காறித் துப்புவதால் யார்? எங்கே? எப்படி? நன்மையடைவார்கள்….

    • பெப்சி விளம்பரத்தில் நடிக்கிறாரே சச்சின் . அவருக்கு பக்கத்து ஊரில் விதர்பாவில் விவசாயப்படுகொலை நடைபெறுகிறதே .
      இந்த பெப்சி கோக் தான் ஊரில் உள்ள விவசாயியின் தாலியை அருக்கிறதே , அதை பற்றி என்ன நினைக்கிறீர்கள் . விவசாயம்
      என்பதே இனம் இல்லையா ?????IPL மேட்ச் பார்பர்பவர்கள் மட்டுமே இனம் என்று கணக்கில் எடுத்துக்கொள்ள படுவார்களா ….????

        • //Alcohol is more dangerous than Pepsi and coke.
          Tobacco is more dangerous than alcohol
          what are YOU doing to stop it?//

          குடியும், புகையும் மனிதனது கெட்டப் பழக்கங்களாக அவன் நாகரிகமடைந்த காலத்திலிருந்து இருக்கின்றன. அவை கேடான பழக்கம் என்ற வகையில் எதிர்த்து தடுக்கப்பட வேண்டியவை நிறுத்தப்பட வேண்டியவையே.

          இன்னும் சரியாகச் சொன்னால் குடி புகையை விட மிக அபாயகரமாக இருப்பவை மஞ்சள் காமாலை போன்ற நோய்களும், சாலை அராஜகங்கள் உருவாக்கும் விபத்துக்களும். இவை எல்லாமே தடுத்து நிறுத்தப்பட வேண்டியவையே.

          ஆனால், இவற்றை விட மிக முக்கியமாக அடிப்படையாக சில விசயங்கள் முன்னுக்கு வருகின்றன. அவை நாடு அடிமையாவது, இயற்கையின் கொடையாம் தண்ணீர் தனியார்மயமாவது இவை மனிதனது அடிப்படை வாழ்வுரிமையை பாதிப்பவை. எனவே கோக் பெப்ஸி போன்ற மறுகாலனியாக்கத்தின் பிரதிநிதிகள் முதன்மை எதிர்க்களாகிறார்கள்.

  10. காறித்துப்பிட்டா?, Harley Davidsonனை இந்தியாவில் தடை செய்தால்….இந்தியாவில் ஏழ்மை மறைந்துவிடுமா?

    வேறு எதாவது உருப்படியான யோசனை இருந்தால் சொல்லவும்…. 🙂

    • //காறித்துப்பிட்டா?, Harley Davidsonனை இந்தியாவில் தடை செய்தால்….இந்தியாவில் ஏழ்மை மறைந்துவிடுமா?
      வேறு எதாவது உருப்படியான யோசனை இருந்தால் சொல்லவும்…. //

      நண்பரே இங்கு அது அல்ல நோக்கம். முதலில் மக்களாகிய நாம் ஒரு தனி மனிதனின் புகழ்ந்து அவனுக்குக் கொடிப் பிடிப்பதை நிறுத்த வேண்டும். சச்சினைப் பற்றிக் கவலைப்படும் நீங்கள் எத்துனைப் பேர் போபால், விதர்பா போன்ற விடயங்களுக்காக கவலைப் பட்டிருக்கிறீர்கள். சச்சினின் ஆட்டத்தை ரசிக்கும் மக்கள் பலர் இருக்கிறார்கள். அது வெறும் ரசனை என்ற அளவோடு முடிந்திருந்தால் இது போன்ற பதிவுகள் வந்திருக்கக் கூட வாய்ப்பில்லை. ஆனால் அது ரசனையைத் தாண்டி அவரைக் கடவுளாக்கிப் பார்க்கும் அளவுக்கு செல்லும் போது ஒரு விதமான போதையில் மக்கள் சிக்கிக் கொண்டு தன்னை சுற்றி நடக்கும் அநியாயங்கள், கொடுமைகளை எதிர்க்கத் தவறுகின்றனர். இது போல் சினிமா நடிகர்கள், நடிகைகளின் மாராட்டம் இந்த வரிசையில் இடம் பெற்றிருப்பதுதான் இந்தக் கிரிக்கெட். இதனால் மக்களின் சிந்தனைகள் சிதறடிக்கப் பட்டு மூளைகள் மழுங்கடிக்கப் பட்டு சமுதாயப் பிரச்சினைகள் குறித்த எண்ணமற்றவர்களாய் மாற்றப் படுகிறோம். அது போன்ற எண்ணங்கள் தகர்த்தெரியப் பட வேண்டுமெனில் இத்தகையப் பதிவுகள் தேவைதான்.

  11. சச்சின் டெண்டூல்கர், மொழி, இனம், மதம் தாண்டி கிட்டத்தட்ட எல்லா இந்திய ரசிகர்களாலும் மதிக்கப்படக் கூடியவர். கிரிக்கெட் விளையாட்டில் ஒரு மேதையாக விளங்குகிறார், அவரது வாழ்க்கையே 24/7 கிரிக்கெட்டாகத்தான் இருக்கிறது என்று நினைக்கிறேன் (பள்ளி இறுதி வகுப்பில் தேர்ச்சி பெறவில்லை அவர்).

    இது போன்று தமது துறையில் மேதையாக இருப்பவர்களுக்கு மற்ற அக்கறைகள் இல்லாமல் இருப்பது கஷ்டமாக இருந்தாலும் புரிந்து கொள்ளக் கூடியதுதான்.

    பாகிஸ்தான் மும்பையில் குண்டு வைத்து விட்டது என்று இந்திய கிரிக்கெட் அணியுடனான அந்த நாட்டு அணியின் போட்டியை ரத்து செய்து விட்டு, தனது நாட்டிலேயே தனது குடிமக்களையே கொன்று குவித்துக் கொண்டிருந்த இலங்கையில் அவசர அவசரமாக போட்டி ஏற்பாடு செய்து போய் விளையாடும் போது சச்சின் டெண்டூல்கருக்கு எந்த மனசாட்யும் உறுத்தவில்லை, உறுத்தும் என்று எதிர்பார்க்கவும் முடியாது.

    இதற்கிடையில் கிரிக்கெட்டில் தனக்கு இருக்கும் புகழை பயன்படுத்தி தேவையான அளவு பணம் சம்பாதிப்பதிலும் அவர் அல்லது அவரைச் சேர்ந்தவர்கள் திறமையாக செயல்பட்டிருக்கிறார்கள்.

    இவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதிலிருந்து ஓய்வு பெற்ற பிறகும் ஏதோ ஒரு வகையில் கிரிக்கெட்டில்தான் ஈடுபட்டிருப்பார் என்று நினைக்கிறேன். (அசாருதீன் போல அரசியலில் வருவது எல்லாம் நடக்காது).

    கிரிக்கெட்டில் அவர் மகத்தான ஹீரோ, கிரிக்கெட்டுக்கு வெளியில் அவரிடமிருந்து எதையும் சிறப்பாக எதிர்பார்ப்பது கூடாது. அடிப்படை சமூகப் பொறுப்புகள் சுற்றி இருப்பவர்கள் சொல்லிக் கொடுத்துதான் சாதித்துக் கொள்ள வேண்டும்.

    அவர் மீது காரி துப்புவது என்பது எந்த பலனையும் கொடுக்காது என்பது என் கருத்து.

    மா சிவகுமார்

    • மா.சி, வெப் தமிழன், மஹேன்திரா –

      பதிவில்

      @@@டெண்டுல்கரது பவுண்டரிக்கும், சிக்சருக்கும் கைதட்டியவர்கள் சுரணையிருந்தால் இந்த ரத்தப் புத்தகத்தின் மீது காறித் துப்புங்கள்!!@@@@

      இப்படித்தானே எழுதியிருக்கிறது.. அப்புறம் ஏன் சச்சின் மீது துப்ப வேண்டும் என்று எழுதுகிறீர்கள்?

      • //இப்படித்தானே எழுதியிருக்கிறது.. அப்புறம் ஏன் சச்சின் மீது துப்ப வேண்டும் என்று எழுதுகிறீர்கள்?//

        இந்த பதிவில் வந்து துப்பிவிட்டால் அது அந்த புத்தகத்தின் மீது துப்புவதாகாதா? தெரியாம போச்சே…!!!

        • சீனு, அதான் இப்ப தெரிஞ்சு போச்சே உங்களுக்கு இந்த துப்பு கெட்ட புத்தகத்து மேல துப்ப துப்பு இருக்கா இல்லயா 🙂

    • இப்பதிவு சமூக பொறுப்பில்லாமல் இருக்கும் அவர் ரசிகர்கள் மீது வைக்கப்பட்டுள்ளது . இங்கே
      விமர்சனமே அந்த ரசிகனின் மனநிலை தான் . அந்த கடவுளை போன்ற மனநிலையை உடைக்க
      வேண்டும் என்றால் இந்த விமர்சனம் தேவை தான் .

    • //சச்சின் டெண்டூல்கர், மொழி, இனம், மதம் தாண்டி கிட்டத்தட்ட எல்லா இந்திய ரசிகர்களாலும் மதிக்கப்படக் கூடியவர். கிரிக்கெட் விளையாட்டில் ஒரு மேதையாக விளங்குகிறார், //

      துறையில் மேதை அதனால் மதிக்கப்படுகிறார் என்பது புரியவில்லை.

      பீயள்ளுபவர்கள் அவர்கள் துறையில் மேதையாக இருக்கிறார்கள். ஏன் இவர்களை யாரும் மதிப்பது இல்லை? இத்தனைக்கும் அவர்கள் அள்ளுவது அடுத்தவனுக்காக. அதைப் பற்றிப் பேசுவதே அசிங்கம் என்றுதான் நினைக்கிறோம்.

      இந்த நபர்.பொழுதுபோக்கு ஆட்டத்தில் வேலை பார்க்கிறார் காசு சம்பாதிக்கிறார். கொஞ்சம் காசை மறுபடியும் இப்படி விற்று மேலும் காசாக்குகிறார். அதில் கொஞ்சம் அடுத்தவர்களுக்கு கொடுக்கிறார். சட்டப்படி சாரயம் காச்சுபவன் திருப்பதிக்கு உண்டியல் போடுவது போல.

      காசு கொடுத்து ஆட்டம் பார்த்தவன் அதைத் தாண்டிப் போகாமல், ஆடியவன் ஆய்போனாலும் அதைச் சேமித்து வைத்துக் கொள்ளப் பார்க்கிறான். இது ஒரு இரசிக மனவியாதி. அந்த வியாதி உள்ளவனிடம் போய் நீ துப்பு என்றால் எப்படி? அவன் மேலேயே துப்பிக்கொள்வானா?

      • கல்வெட்டு, சாராயம் குடிப்பவன் திருப்பதியில் காசு போடுவதும், சச்சின் செய்வதர்க்கும் எப்படி முடிச்சு போடமுடியும்?

        நேர்மை வழியில் சச்சின் சம்பாதிக்கிறார். ஒரு சல்லி காசு கூட அவர் தர்மம் செய்யவேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனாலும், தருகிறார். மேன்மக்கள் வரிசையில் இடம் கொடுக்கப்பட வேண்டிய ஆள்.

        ஒவ்வொரு துறையில் மேலிடத்தில் இருப்பது பெரிய விஷயம்தான். துறையின் தன்மைக்கு ஏத்த மாதிரி தூக்கி வச்சு கொண்டாடுவதுதானே ஞாயம்?

        நான் ஐ.டி துறையில் ஆணி பிடுங்கி மேலிடத்தில் இருந்தால், என்னை சுற்றிய பத்து பேரு என்னை தூக்கி வைப்பான். லாரி ஓட்டி மேலிடத்தில் இருந்தால் என் கிளீனரு தூக்கி வைப்பான். பாட்டு பாடி மேலிடத்தில் என் ரசிகர்கள் ஆயிரம் பேரு தூக்கி வெக்கப் போறான். etc.. etc..

        ரசிகன் ஆட்டத்தை தாண்டி, மேலும் ஐட்டங்களை வாங்கி பணக்காரன் ஆக்குவதில் ஒண்ணும் தப்பில்லை. நாம பாப்புலர் ஆகி, நாம எழுதர ப்ளாகை நம் ரசிகர் யாராவது 10000 கொடுத்து வாங்கிக்கறேன்னா கசக்குமா என்ன? 🙂

        • //நேர்மை வழியில் சச்சின் சம்பாதிக்கிறார். ஒரு சல்லி காசு கூட அவர் தர்மம் செய்யவேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனாலும், தருகிறார். மேன்மக்கள் வரிசையில் இடம் கொடுக்கப்பட வேண்டிய ஆள்.//

          நேர்மை வழி என்றால் எனன் சர்வேசன்?

  12. சச்சினுக்கு ஆதராவாக குரல் கொடுப்போரில் எத்தனை பேர் இந்த புத்தகத்தை விலை கொடுத்து வாங்க போகிறார்கள். அவர் வாழ்க்கை என்ன இந்த சமுகத்திற்கு பாடமா அல்ல தன்னையே சமுகத்திற்கு அர்பணித்தாரா. சமுகத்திடமிருந்து சுரண்டியதுதான் அதிகம். அதில் சிறு பங்கு திருப்பி செலுத்தவும் விளம்பரம். என்ன செய்ய அவர்கள் அப்படி வளர்த்தெடுக்க பட்டுள்ளனர். அதில் வீழ்ந்த விட்டில் பூச்சிகள் ஜல்ரா அடிக்கின்றன.

  13. அரசியல்வாதிகள் தங்களை விற்றுப் பணம்தேடும்போது அந்த வியாபாரத்தில் ஏழைகளும் தங்களையே விற்று அவர்களை இலாபமடையச் செய்யவேண்டிய கட்டாய அவலத்தை மாற்றுவது கடினம். ஆனால் சச்சின் டென்டுல்கர் போன்றோர் தங்களை விற்றுப் பணம்தேடும்போது வாங்கவேண்டிய கட்டாயநிலமை யாருக்குமில்லை. பணக்கார ரசிகர்களுக்கே இது சாத்தியப்படும். வினவின் பரப்புரை அவர்களை விழிப்படையச்செய்து எங்கே துப்பவேண்டுமோ அங்கே துப்பவைக்கட்டும்.

  14. Flash News: விரைவில் சச்சினின் மூத்திரம் மற்றும் மலத்தால் செய்யப்பட்ட புத்தகம் வருதாம். புக்கை ஆர்டர் செய்ய ரசிகர்களிடையே கடும்போட்டி.

  15. ஒரு மனிதனின் புகழ் உயர்வது கடினம்

    புத்தகத்தை பற்றியும் அதன் பெருமைகளை பற்றியும் சாடியவர்கள்
    அவரின் அறக்கட்டளை என்ன செய்கிறது என ஒரு பதிவு போடலாம்

    புரளி கூறுவது
    புரட்சி கரமாக பேசுவது எல்லாம் சரிதான்

    ரத்தம் எச்சில் என்று பேசியவர்கள் அதன் அறிவியல் உள்ளார்ந்த எண்ண வெளிப்பாட்டை பற்றி ஒரு வரி கூட எழுதவில்லை என்பது வருத்தம்

    நான் பிரபலமாகி விட்டேன் என்பதற்காக மட்டுமே சமுக அக்கறை காட்ட வேண்டும் என்பதில் எந்த வித அர்த்தமும் இல்லை அது ஒரு மனிதனின் உள்ளார்ந்த செயல்பாடு,

    அவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று கிரிகெட் சார்ந்த துறையில் தான் இருப்பார் என ஜோதிடம் பார்த்து கூறியதற்கு நன்றி

    இப்படியெல்லாம் கூறுவதால் நானும் அந்த சச்சினை தலை மேல் தூக்கி வைத்து கோவில் கட்டி கும்பிடும் ரசிகன் அல்ல
    வினவின் ஒரு சாதாரண வாசகன்

    ஆனால் இந்த பதிவு அந்த புத்தகத்தை பற்றி கூறும் அதே வேளையில் அந்த மனிதனை பற்றி தரக்குறைவாக கூற தேவை இல்லை என்று எண்ணுவதால் இது

    சச்சின் ரசிகர்கள் பொறுப்பு அற்றவர்கள் என கூறும் அதே நேரத்தில் பல ஊர்களில் சச்சின் ரசிகர் மன்றத்தால் வருட வருடம் பள்ளி மாணவர்களுக்கு அளிக்கபடும் நோட்டு புத்தகம் பற்றியும் எழுதவேண்டும்

    பொறுப்பு என்பது குறை கூருவதலோ
    கரி துப்புவதலோ வருவது இல்லை

    அது விழிப்புணர்வு
    நமது அடிமட்ட மக்களின் கல்வி அறிவு வளரும் போது தான்
    அன்றாட தேவைகளை பற்றி என்ன தோன்றும்

    இந்த வளரும் மக்கள் வளர்வதும்
    தேயும் மக்கள் தேய்வதும் முடியும் போது நீங்கள் கூறிய பொறுப்பு பிறக்கலாம்

    • //சச்சின் ரசிகர்கள் பொறுப்பு அற்றவர்கள் என கூறும் அதே நேரத்தில் பல ஊர்களில் சச்சின் ரசிகர் மன்றத்தால் வருட வருடம் பள்ளி மாணவர்களுக்கு அளிக்கபடும் நோட்டு புத்தகம் பற்றியும் எழுதவேண்டும்//

      நண்பரே இது போன்ற என்.ஜி.ஓ வேலைகள் தான் இன்று நாட்டின் தேவையா? இதிஅத் தாண்டி யாரும் சிந்திப்பதில்லையே. அதற்கு இது போன்ற பிரபலமானவர்கள் தான் ப்ராபளமாக இருக்கிறார்கள். நோட்டு புத்தகங்கள் வாங்கிக் கொடுத்து இல்லாதவனுக்கு உணவளிக்கும் இது போன்றவர்கள் அந்த மக்கள் ஏன் அந்த நிலமைக்கு வந்தார்கள் என யோசிப்பதில்லை. மூல காரணம் அறியப் படுவதில்லை. வருடா வருடம் கொடுக்கப் படும் நோட்டு புத்தகங்களால் அந்த ப்ரச்சினைகள் களையப் படும் என நினைத்தால் அது மிகப்பெரிய முட்டாள்த் தனம்.

      • சச்சின் ரசிகர்கள் பொறுப்பற்றவர்கள் என பலி கூறியதால் மட்டுமே இதை இங்கு முன் வைக்கிறேன் குறைகளை மட்டும் தேடும் நீங்கள் அவரின் அறக்கட்டளை பற்றி ஏதும் எழுதவில்லையே
        எனக்கும் அதை பற்றி தெரியாது

        • நண்பரே ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள் இது போன்ற பிரபலமானவர்கள் செய்யும் என்.ஜி.ஓ வேலைகளை வெளியில் சொல்லும் போது, அதை பிரபலப் படுத்தும் போது அது அந்த ரசிகர்களின் மனதில் அவர்களை இன்னும் ஆழப் புதைத்து தனி மனித தாக்கத்தை ஏற்படுத்தி விடும். அது எவ்வளவு பெரிய ஆபத்தில் சென்று முடிந்திருக்கிறது என்பது தான் இப்போது நாம் காண்கின்ற நடுத்தர வர்க்கங்களின் அறியாமை. சச்சினின் அறக்கட்டளைகள் பற்றித் தெரிந்து ஒன்றும் ப்ரயோஜனமில்லை. போபால், விதர்பா அணு ஒப்பந்தம் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும். அதுதான் இன்றைய மக்களுக்குத் தேவை.

  16. //நான் பிரபலமாகி விட்டேன் என்பதற்காக மட்டுமே சமுக அக்கறை காட்ட வேண்டும் என்பதில் எந்த வித அர்த்தமும் இல்லை அது ஒரு மனிதனின் உள்ளார்ந்த செயல்பாடு,//
    அந்த பிரபலத்தின் செயல்கள் சமூகத்தை பாதிக்கும் பொழுது

  17. nanbaa annan tendulkar mumbai baandiraavil 40 kodi veetirku 4 varudangalaa sottu vari baakki ena oru tvil paartha gniyabagam !idukku enna solringa cricket veri ponaaldhan india urupadum!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

  18. //மேற்கு வங்கத்தில் நேற்று நடந்த இரயில் விபத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட காயமடைந்த மக்களுக்கு தேவையான இரத்தம் கிடைக்க வில்லை என்பதாக பத்திரிகைகள் எழுதியிருந்தன. இது கேள்விப்பட்டு மற்ற பயணிகளும், அருகாமை ஊர் மக்களும் உடன் ரத்தம் கொடுக்கத் திரண்டனர்.

    ரத்த தானத்தின் அருமையை நாம் இப்படித்தான் கேள்விப்படுகிறோம். அதிக ரத்தப்போக்கினால் பெண்கள் படும் அவலங்களையும் அறிந்திருப்போம். கணிசமான பெண்கள் ரத்த சோகையினால் பாதிக்கப்பட்டிருப்பதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

    இப்படி சக மனிதனது இடர் கண்டு கொடுக்கப்படும் இரத்தத்தை சச்சினது புத்தகம் மகா இழிவாக, சுயவிளம்பர வெறிக்காக கேவலப்படுத்துகிறது. ஏன் இரத்தம், எச்சிலோடு முடித்து விட்டார்கள் என்பது தெரியவில்லை. சச்சினது சளி, வியர்வை, விந்து என எல்லாவற்றையும் சேர்த்திருக்கலாமே?
    //
    enna ori mokkayana thinking.. ithukkum sachinukkum enna sambandam.. Anga blood supply shortagekku sachin enna pannuvar? summa karuthu solravanga ethukkum punniya pada maataanga… Evalo per pattiniya irukkanga athukkaga neenga ellam ocla buffet lunch kudutha saapidalama iruppenga?

  19. //வினவு இது போன்ற பதிவு எழுதுவதன் மூலம் வினவின் மேலுள்ள விசுவாசம் குறைகின்றது. இருக்கும் வாசகர்களையும் இழக்க வாய்ப்பு இருக்கிறது.//

    வாசகர்களை தக்க வைப்பதற்காக யாரும் எழுதுவார்கள் எனில் அங்கு காத்திரமான கருத்துக்கள் இடம்பெறாது.

    //கிரிக்கெட்டில் அவர் மகத்தான ஹீரோ, கிரிக்கெட்டுக்கு வெளியில் அவரிடமிருந்து எதையும் சிறப்பாக எதிர்பார்ப்பது கூடாது. அடிப்படை சமூகப் பொறுப்புகள் சுற்றி இருப்பவர்கள் சொல்லிக் கொடுத்துதான் சாதித்துக் கொள்ள வேண்டும்.//
    ஏற்றுக்கொள்ள கூடிய கருத்து.

  20. சச்சின் டென்டுல்கரின் 35லட்ச ரூபாய் இரத்தப் புத்தகம்! காறித்துப்புவோம் !!…

    ஏன் இரத்தம், எச்சிலோடு முடித்து விட்டார்கள் என்பது தெரியவில்லை. சச்சினது சளி, வியர்வை, விந்து என எல்லாவற்றையும் சேர்த்திருக்கலாமே

    super…….. nan kari thuppitten.

  21. ///பாதிக்கும் மேற்பட்ட மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழே வாழும் இந்தியாவில்தான் இத்தகைய ஆபாசங்களும் நடைபெறுகின்றன////

    இதை முதலில் நிறுபியுங்களேன். 30 சதத்திற்க்கு குறைவானவர்களே வறுமை கோட்டிர்க்கு கீழ் வாழ்கிறார்கள் என்றே அனைத்து சர்வேக்களும் தெரிவிக்கின்றன. நேற்று நான் உங்களுக்கு அனுப்பிய விரிவான அறிக்கையை படிக்கவில்லை என்றே தெரிகிறது. அதை வெளியிட்ட பத்திரிக்கை முதலாளித்துவத்தை பல காலமாக எதிர்க்கும் இதழ். மிக ஆழமான அலசல் அது.

    சரி, இந்த ரத்தம் கலந்த பக்கங்கள் என்பது மிகை என்று தோன்றுகிறது. எத்தனை லிட்டர் ரத்தமாம் ? சும்மா மார்கெட்டிங்குக்காக சில மில்லிகளை எடுத்து, சாயம் கலந்து, ஸ்பெஸல் பேப்பரில் அச்சடித்து, வெளியிட்டிருப்பார்கள் என்றே தோன்றுகிறது. இதனால் யாருக்கும் இழப்பு இல்லை. இதை செய்யாமல் இருந்தாலும், ஏழைகளின் வாழ்வில் எந்த மாறுதலும் இருக்கப் போவதில்லை. இவை இந்த அமைப்பில் இருக்கத்தான் செய்யும். செம்புரட்சிக்கு பின் உங்கள் கனவுகளை நிறைவேற்றிக்கொள்ளுங்களேன். அதுவரை இது போன்ற தனிநபர் சுதர்ந்திரங்களை பற்றி ஏன் வீண் விவாதம் ? சச்சின் என்ன கொள்ளை அடித்தா சம்பாதித்தார் ? ரசிகர்கள் அவரை விரும்புகிறார்கள். அவர் நடித்த விளம்பரங்களை ஏற்கிறார்கள். அது அவர்களின் உரிமை. அதை கூடாது என்று சொல்ல நீர் யார் ? பிறகு எல்லாரும் பிடல் காஸ்ட்ரோ நடிக்கும் விளம்பரங்களை மட்டும் தான் பார்க்கவேண்டும் என்று ஆணையிடுவீர்களா என்ன ?

    உங்க ‘சரக்க’ நீங்க விற்க பார்க்கிறீக. அதற்காக பல முனைகளில் / இணையத்தில் பிரச்சாரம் செய்ய உங்களுக்கு முழு உரிமைகள் இங்கு உள்ளன. அதே போல் தான் அனைவருக்கும். ஓ.கே.

    • //சச்சின் என்ன கொள்ளை அடித்தா சம்பாதித்தார் ? ரசிகர்கள் அவரை விரும்புகிறார்கள். அவர் நடித்த விளம்பரங்களை ஏற்கிறார்கள்//

      இங்குதானே பிரச்சினை. அவர் நடித்த பெப்ஸி விளம்பரத்தை ரசிகன் ஏற்று கொள்கிறான். அதனால் விளைவு? அப்பறம் அந்தப் புத்தகம் வெளியிட்டு அறக்கட்டளைக்கு கொடுப்பதாய்க் காட்டிக் கொள்வதால் அந்த சச்சினின் ரசிகர்களூக்கு அவர் மீது இன்னும் ஈர்ப்பு ஏற்படும். தனி நபரை உச்சத்தில் தூக்கி வைத்து பார்க்கும் கொள்கை அது.

      • வழிமொழிகிறேன் புலிகேசி! இதையும் சேர்த்துக்கொள்ளுங்கள். நித்தியானந்தா மட்டும் என்ன ரஞ்சிதாவை வன்கொடுமையா செய்தான்? அல்லது நடனமாடும் பகதர்கள் அவர்களாகதானே ஆடுகிறார்கள். அதனால் நித்தியானந்தா செய்வது ஒப்புக்கொள்ளக்கூடியதா? நித்தியின் பக்தர்களுக்கும் மேற்குறிப்பிட்ட ரசிகர்களுக்கும் என்ன வேறுபாடு? இரண்டும் சமூகக்கேடு என்றுதானே எதிர்க்கிறோம்…

    • //இதை முதலில் நிறுபியுங்களேன். 30 சதத்திற்க்கு குறைவானவர்களே வறுமை கோட்டிர்க்கு கீழ் வாழ்கிறார்கள் என்றே அனைத்து சர்வேக்களும் தெரிவிக்கின்றன. //

      இது ஒரு பொய் ஆக்ஸ்போர்டு நிறுவனத்தின் சமீபத்திய ஆய்வு 42 கோடி பேர் இந்தியாவின் 8 மாநிலங்களில் வறுமையில் உள்ளனர் என்று சொல்கிறது. இந்த கணக்கின் படி இந்தியா மொத்ததிலும் 60 கோடி பேருக்கும் மேல் வறுமையில் இருக்கிறார்கள். இது 50%க்கும் மேல் ஆகும்.

      அதியமானின் கருத்துப்படி 1950க்கும் இன்றைக்கும் சதவீதக் கணக்கில் வறுமை அதிகரித்துள்ளாதையே இவை நிரூபிக்கின்றன.

      • ///இது ஒரு பொய் ஆக்ஸ்போர்டு நிறுவனத்தின் சமீபத்திய ஆய்வு 42 கோடி பேர் இந்தியாவின் 8 மாநிலங்களில் வறுமையில் உள்ளனர் என்று சொல்கிறது. இந்த கணக்கின் படி இந்தியா மொத்ததிலும் 60 கோடி பேருக்கும் மேல் வறுமையில் இருக்கிறார்கள். இது 50%க்கும் மேல் ஆகும்.

        அதியமானின் கருத்துப்படி 1950க்கும் இன்றைக்கும் சதவீதக் கணக்கில் வறுமை அதிகரித்துள்ளாதையே இவை நிரூபிக்கின்றன.
        ////

        Trying to be very clever Asuran ? if the parameter (or standards) used by the recent UN-Oxford survey was applied for all the decades in India since 1950, it would show poverty ratio was much much higher in 1950 than in India. First try to be honest in not using different parameter based surveys for comparing. You have no basic honesty in proving your assertation that poverty is increasing with that new website. it just uses a new paramter set for establishing a quantity for today. It does not say that, if the same set of parameters were used for ALL years, then the pvoerty ratio is increasing or decreasing. As i has quoted from that excellent article in rediff, many other parameters inclusing usage of consumer items too are used in surverys.

        • ///அதியமானின் கருத்துப்படி 1950க்கும் இன்றைக்கும் சதவீதக் கணக்கில் வறுமை அதிகரித்துள்ளாதையே இவை நிரூபிக்கின்றன.
          /// based on which report / survery ? prove this if you can. I am tired of arguing with a dishonerst lier who quotes only partially while ignoring full facts and logic. this is my last reply in this context and you may keep yapping..

        • நீங்கள் சொன்ன EPW அறிக்கையே கூட, வறுமைகுறைவுக்கான ‘trend’ உருவாகியிருக்கிறதென இப்போது ஊர்ஜிதப்படுத்த முடியாதென்று தானே கூறுகின்றது . 1990 -க்கு பின் நாட்டின் உற்பத்தியும், இயற்கை வளங்களின் பயன்பாடும் பலமடங்கு உயர்ந்திருக்கும் போது, வறுமை மட்டும் ஏன் குறையவில்லை?

        • //Pothomkin, try to read that complex report fully and with a open mind. I can quote a lot from that as an answer to you. But i am tired of arguing with closed minds.//

          சும்மா சும்மா உங்களோட பழைய டேப்ரிக்கார்டரை கேட்டு கேட்டு எங்க காதும் டையர்டாத்தான் இருக்கு. அதனால நீங்க இந்த முறை கொஞ்சம் வித்தியாசமா ஈ பி டபிள்யூவிலிருந்து எடுத்துதான் போடுங்களேன்..

          பொதெம்கின் படிச்சுப் பார்த்து மறுக்கிறார் இல்லையா..

          என்ன இருந்தாலும் உங்க அளவுக்கு நாங்க அதிகம் படிக்கிறதில்ல இல்லயா? … பூலீஸ்….

      • ஒன்று மட்டும் நிச்சயம் அசுரன். தாராளமய இந்தியா மேற்குலக நாடுகளோடு வளமைக்கு போட்டிபோடுவதாய் நினைப்பவர்களுக்கு ஏழ்மையில் ஆப்பிரிக்க நாடுகளோடு போட்டி போடும் செய்தி செறிக்கவியலாததுதான்.

        • ஆமாமாம். இந்தியா முன்னேறுவது சிலபேருக்கு(அதியமானுக்கு) பிடிக்கவில்லை

  22. சச்சினின் சாதனைகள் மறுப்பதற்குரியவையில்லை..ஆனால் அவர் இவ்வாறு பந்தா காட்டுவது தான் எனக்குப் பிடிக்கவில்லை…!

        • பந்த தான் சார்
          கட்டுரையை திரும்ப படிங்க
          சச்சின் தனது சுய சரிதையை அவர் கைப்பட ரத்தத்தால் எழுதவில்லை
          எவனோ ஒரு கிறுக்கு மடையன் ஐடியா
          இங்க அந்த சச்சின் மண்ட உருளுது

        • கேட்டுகங்கப்பா, சச்சினுக்கே தெரியாம அவர் ரத்தத்த எடுத்திட்டாங்களாம்.. இன்னும் என்னன்ன எடுத்தாங்களோ..

        • பாவம் சார்…..சச்சின்……அவர் சிவனே என்று இருந்தாலும் எவனோ ஒருவனால் இதுக்கெல்லாம் அவர் பதில் சொல்ல வேண்டியிருக்கு….
          ம்..ம்…ம்…ம் எல்லாம் வியாபாரம் தானே..?

        • //கேட்டுகங்கப்பா, சச்சினுக்கே தெரியாம அவர் ரத்தத்த எடுத்திட்டாங்களாம்.. இன்னும் என்னன்ன எடுத்தாங்களோ//
          யார் சொன்னங்கபா அவருக்கு தெரியாம ரத்தம் எடுத்ததுன்னு
          என்னத்த படிக்கிறீங்க

      • உங்க‌ள் வாத‌ம் புலிகேசி தான் என்ன‌ அய்யா
        முத‌லில் அந்த‌ புத்த‌க‌ம்
        பிற‌கு அவ‌ன‌து ர‌சிக‌ன் என்றீர்
        இப்போது ச‌ச்சின்
        நாளை அவ‌ன் பொன்டாட்டி வ‌ய‌தில் பெரிய‌வ‌ள்
        அதனால் காரி துப்புங்கள் எனபீர்

        முத‌லில் உங்க‌ள் எண்ண‌ம் என்ன‌வென்றால்
        எத‌ற்கும் ஒரு எதிர்ம‌றை ப‌தில‌டி த‌ருத‌ல் என்ப‌து தெளிவாக‌ தெரிகிற‌து

        மாற்றார் க‌ருத்துக்கு ம‌றுப்பு

        • //எத‌ற்கும் ஒரு எதிர்ம‌றை ப‌தில‌டி //

          எது எதிர்மறை பதிலடி? நீங்கள் எதையும் எதிர்மறையாக பார்க்க மாட்டீர்கள் எனில் நாங்க சொல்றதை எதிர்மறையாகா எதிர்க்காமல் ஏற்றுக் கொள்ளுங்கள்.

          பதிலடி கொடுக்க உங்களுக்கு மட்டும்தான் உரிமையிருக்கா என்ன?

  23. பாவங்க சச்சின், கக்கா போனா அவருக்கு கால் கூட கழுவ தெரியாது ரேஞ்சில் பேசுபவர்களுக்கு ஒண்ணே ஒண்ணு சொல்றேன்

    “அடங்கப்பா, இது உலகமகா நடிப்புடா சாமி”

  24. ayyo ayyo sachin nukku six four run na thavira vera oru masurum theriyadham athan evano enna enna vo eduthatahthellam theriyalaam.ivenga ippadi than thani manusana ethavadhu sonnam na ean che va sollla nu sandaikku varu vanunga SACHIN ORU PERIYA KULANDA NU SOLLVANGE ELLARUM NAMBUNGA AVARUKKU KASU FIRST APPURAM THAN ELLAME NU IVENGALLUKU THRIYADHU PAVAM AVARU ILLA VINAVUKKUM SAMUGA SINDANI THEVAI ILLA NU SOLVANGA IVENGE.
    APPURAMA YARU YARU ELLAM HELP PU PANNANUM NU IVANGA ELLAM LIST THARUVANGA.
    ATHODA SACHIN ITHA HELP SEIRARU ANTHA HELP SEIRARU APPURAM ENNA?? NU KELVI YUM KEPPANGA

    NALLA KARI KARI KARI KARI THUPITEN

    SPECIALLY FOR U RAMMY CHE IS A GRAET MAN DONT COMPARE HIM WITH ANY OTHER FIRST READ ABOUT CHE THEN COME AND COMMENT

  25. பதிவையும் அதன் பின்னூட்டங்களையும் படிக்கும் போது
    விளையாட்டின் அரசியலை கோபமாகப் பின்னூட்டமிட்டவர்கள் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்றே எனக்குத் தோன்றியது.

    விளையாட்டு என்பது அடிப்படையில் போரைப் பிரதியிடும் ஒரு வடிவம். அடிக்கடி போரிடத் தேவையில்லாத சமூகம் உருவாகிய பின் அந்தப் போர் நேர உணர்வு நிலையை அடைய விளையாட்டு உதவுகிறது. நடந்து முடிந்த உலகக் கோப்பை கால்பந்து ஏற்படுத்திய த்ரில் உணர்வு ஒரு நல்ல உதாரணம். கால்பந்து போட்டிகளில் தவறாக விளையாடியதற்காக ரசிகரால் கொல்லப்பட்ட வீரர்களின் பட்டியல் உண்டு. இந்த இறுதிப் போட்டியில் நெதர்லாண்ட்ஸ் தோற்றபோது அந்நாட்டு ரசிகர்கள் கண்கள் கலங்கி அழுதார்கள். இது தான் அரசியலற்றதாக விளையாட்டை காட்ட விரும்பும் கார்ப்பரேட் அரசியல். விளையாட்டின் அரசியல் மிக நுணுக்கமானது. தற்போது விளையாட்டு கொள்ளை லாபம் தரும் ஒரு தொழிலும் கூட. இத்தொழிலை நடத்துபவர்கள் கார்ப்பரேட்கள் மட்டுமே. சோத்துக்கு வழியில்லாதவன் கூட பாகிஸ்தான் – இந்தியா மேட்சை ஏதோ கொடிய போர் நடப்பதைப் போல தெருவில் டி.வி.க்கள் முன் மணிக்கணக்காக கால்வலிக்க நின்று பார்க்க வைத்தது தான் விளையாட்டின் அரசியல்.

    லலித் மோடி – ஐபிஎல் விவகாரத்தில் பத்தாயிரம் கோடி ரூபாய்கள் வரை ஊழல் எனப் பேசப்படுகிறது. அவர் போர்டுக்கே சவால் விடும் அளவிற்கு ‘அரசியல் பின்புலம்’ கொண்டிருக்கிறார். ஐபிஎல்’ல் ஒரு புதிய அணியை அரசியல்வாதி ஒருவர் தனது மகள் மூலம் ஏலம் எடுக்க முயன்ற செய்தியும் ஊடகங்களில் கசிந்தது. லலித் மோடி வீட்டுக்குப் போய் வந்த சி.பி.ஐ இன்று வரை வாயே திறக்கவில்லை. 2010 உலகக் கோப்பைக்காகவே கட்டப்பட்ட சாக்கர் சிட்டி ஸ்டேடியம் 1 லட்சம் பேர் கொள்ளளவு கொண்டது. இதைக் கட்டுவதற்கான செலவு 19,80,00,00,000 ரூபாய் (19 ஆயிரம் கோடி).

    சச்சினுக்கு வருவோம். சச்சின் சந்தேகமின்றி தலைசிறந்த கிரிக்கெட் வீரர். அதன் மூலம் அவர் அளவுகடந்த புகழும், பணமும், சொத்துக்களும் அடைந்துவிட்டார். இன்றும் பெப்சி போன்ற பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அவர்தான் விளம்பரதாரர். அவர் அரசியலற்றவர் என்றே வைத்துக்கொள்வோம். ஆனால் நாட்டில் பெப்சி கம்பெனிகள் செய்த தண்ணீர்க் கொள்ளையையும், அதில் கலக்கப்படும் கெமிக்கல்கள் கேடுவிளைவிப்பது பற்றியும் கூடப் படிக்காத பாமரனா அவர் ? அல்லது அவர் அது பற்றிக் கவலைப்படுவதில்லையா ? ஒருவேளை வினவில் கட்டுரைகளை தொடர்ந்து படிக்கும் நீங்கள் சச்சினாக இருந்து உங்களுக்கு இந்த நிறுவனங்கள் செய்யும் ப்ராடுத்தனங்களும் தெரிந்தால் என்ன செய்திருப்பீர்கள் ? குறைந்த பட்சம் அந்தக் கம்பெனி விளம்பரத்தில் நடிப்பதை நிறுத்துவீர்கள் தானே ? அதை அவர் இன்றுவரை செய்யவில்லை.

    அவர் அரசியலற்றவர் என்பதும் தவறே. சமீபத்தில் பால்தாக்கரேவுக்கு எதிராக நான் முதலில் இந்தியன் அப்புறம் தான் மராட்டியன் என்று மணிரத்னம் டயலாக் பேசியவர் சச்சின். அதனால் தானே இலங்கையில் ஒரு தமிழ் இனம் அழியும் போதும் கிரிக்கெட் மட்டையை மட்டுமே உற்றுப்பார்த்து தனது செஞ்சுரிகளை கூட்டுவதிலேயே கவனம் செலுத்த முடிந்தது அவரால். ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு இசைக் கலைஞர். ஆஸ்கார் விருது பெற்றபின் மூன்று மாதங்களுக்கு தமிழ்நாட்டில் அழைக்கப்பட்ட எந்த பாராட்டு விழாவுக்கும் மறுப்பு தெரிவித்திருந்திருக்கிறார். கேட்டால் தமிழர்கள் அங்கே மொத்தமாக கொல்லப்பட்ட இந்த வருத்தம் மறைவதற்குள் தமிழ்நாட்டில் சந்தோஷமாக எனது விருது விழாவை நடத்த விரும்பவில்லை என்றார். ஏ.ஆர்.ரஹ்மான் அரசியல்வாதியா என்ன இதைச் சொல்லி ஓட்டு வாங்க? அவர் மனிதாபிமானமுள்ள ஒரு மனிதர். சச்சின் அதுகூட இல்லாத ஒரு சுயநலவாதி. சச்சின் நல்லவராக இருக்கலாம். ஆனால் சுயநலவாதியாக இருக்கிறார். அவர் இந்திய கார்ப்பரேட் கம்பெனிகளின் ‘இந்தியா’ பிராண்டின் விளம்பர மாடல்.

    சச்சினின் இந்தப் புத்தக முயற்சிக்கும், அம்பானி பம்பாயில் தனக்காக மட்டும் கட்டிய சொகுசு 13 மாடி வீட்டுக்கும் பெரிய வித்தியாசமில்லை. விளையாட்டின் அரசியலைப் புரிந்து கொள்ளாமல் இன்றும் சச்சினை சொந்த சகோதரர் போல் பாவிக்கும் நிறைய ரசிகர்களை தூக்கத்தில் இருந்து எழுப்பத்தான் கட்டுரையாளர் அவர் புத்தகத்தின் மேல் துப்பியிருக்கிறார். நானும் இப்படி ஆடம்பரமாக பொறுப்பற்று செய்யப்படும் இந்தச் செயலை கண்டித்து இப்புத்தகத்தின் மேல் துப்புகிறேன்.

    • ஆகத் தெளிவான பதிவிற்கான, தெளிவான பின்னூட்டம்! இதையே இன்னொரு பதிவாகவும் நிச்சயம் போடலாம்!

      விளையாட்டின் அரசியலும், விளையாடுபவர்களும் பார்வையாளர்களும் வணிகத்தின் முன்னே பகடைக் காய்கள். தேசம், தேசப்பற்று இன்ன பிறவெல்லாம் ஊறுகாய்கள்!

      தன் இரத்தத்தை விற்று தனது அறக்கட்டளைக்கு நன்கொடையாக அளித்து பள்ளிக்கூடம் கட்டுவதென்பதை விட கேலிக் கூத்தும் ஒழுக்கக் கேடும் வேறென்ன இருக்க முடியும்? இரசிகர்களைத் திரட்டினால் ஒன்றென்ன ஆயிரம் பள்ளிகளைக் கட்ட முடியாதா சச்சினால்?

      சச்சின் கிரிக்கெட்டுக்குக் கடவுளென்றே இங்கு பலர் நம்புகின்றனர், சச்சினும் கிரிக்கெட்டும் வாழ அது போதும். நவீன கடவுளர்கள் சாமியார்கள் போல சச்சினும் பணக்கோட்டைக்குப் போவது கூட தவறில்லை, அதனால் சமுதாயம் என்ன பலன் பெறுகிறதென்பதே கேள்வி!

  26. இங்கே ஒரு வெண்ணை சொன்னது ரஹ்மான் தமிழர் செத்ததனால் ஒரு பாராட்டு விழாவுக்கும் திகதி கொடுக்கவில்லை என்று… மூன்று மாதம் கழிந்தும் அவன் வந்தானா?
    அவன் செத்த தமிழரை சாட்டி எஸ்கேப் ஆயிட்டான்..
    இது தான் பெரிய கேவலம்..
    சச்சின் பேட்டி கொடுத்திருக்கான் தனது இரத்தமோ மூத்திரமோ ஒன்றும் கலந்து புத்தகம் செய்யபடபோவது இல்லை என்று..
    இப்போ உங்களது மூஞ்சியை எங்கே கொண்டுபோய் புதைப்பீர்கள்? உங்களது ஆத்தாலுகளிடம் போங்கடா கம்னாட்டி கம்யுநிஸ்ட் நாயுங்களா

  27. வதந்தி ஒன்றை அடிப்படையாக வைத்து மூத்திரம், பீ என்றெல்லாம் காறித் துப்பிவிட்டு, இப்போது ‘இரத்தப் புத்தகம்’ வதந்தி என்றதும் மௌனம் காக்கிற வினவுவின் ‘நேர்மையான’ அரசியலுக்கு தலை வணங்குவோம்.

      • அப்படியானால் சம்பந்தப் பட்ட நபர் ஏன் அதை மறுத்திருக்கிறார். ஒருவேளை உங்கள் கட்டுரையைப் படித்து ‘அடடா.. எனக்கு எதிர்ப்பு அலை கிளம்பிவிட்டதே’ என்று பயந்து பல்டி அடித்தாரோ??? இணையத்துச் செய்தி எல்லாமே உண்மை என்றால்.. இதோ
        http://tinyurl.com/39txp79
        http://tinyurl.com/3ynznkq
        http://tinyurl.com/38ruj5m

        போயும் போயும் இணையச் செய்திகளை வைத்த அரசியல் பண்ணுகிறீர்கள் வினவு? உங்கள் மீதான நம்பிக்கைப் பயிர் வாடிப்போய் பலநாளாகிவிட்டது. சமீபத்திய சில கட்டுரைகள் மீண்டும் துளிர்க்க வைத்தபோதும் நீங்கள் ‘ஆதாரம்’ என்று போயும் போயும் ஒரு இணையச் செய்தியைக் காட்டியதும் காலா காலத்துக்கும் கருகிச் செத்துவிட்டது வினவு. மன்னியுங்கள்

        • கிருத்திகன், முதலில் இதை வதந்தி செய்திகளை வைத்து எழுதவில்லை. கார்டியன் தளத்தில் புத்தக வெளியீட்டாளரின் நேரடி பேட்டியோடு வந்த செய்தியை வைத்து மட்டும் எழுதப்பட்டிருக்கிறது. இப்போது நீங்கள் கொடுத்திருக்கும் இணைப்பில் கூட அப்படி ஒரு புத்தகமே வெளிவராது என்று கூறப்படவில்லை. ரத்தம் மட்டும் இருக்காது என்றுதான் வருகிறது. ஆனால் அந்த இரத்தப் புத்தகம் பத்து பேருக்கு மட்டும் 35 இலட்சம் ரூபாயில் ஏற்கனவே முன்பதிவு செய்தவர்களுக்கு விற்கப்பட்டது என்ற செய்தியும் மறுக்கப்படவில்லை. மற்றபடி 1500 படிகள் 1.5 இலட்சம் விலையில் வரப்போவதும் மறுக்கப்படவில்லை. ஆகவே ரத்தம் மட்டும் இல்லை என்று வைத்துக் கொண்டால் கூட 35 இலட்சம், 1.5 இலட்சம் விலையில் புத்தகம் வெளியிட்டு கொள்ளையடிப்பதும், அதை விளம்பரப்படுத்துவதும் இந்திய நிலையில் மிகவும் ஆபாசமான செய்தியாகும். ஆகவே எமது எழுத்தில் எந்த் மாற்றமும் செய்யவில்லை.

          டெண்டுல்கர் நான்கு, ஆறு அடித்த்தும் பேட்டை மேலே தூக்கி காண்பிப்பார். அதில் பிரிட்டானியா தெரியும். உங்களைப் போன்றவர்களுக்கு அதுதான்தேசபக்தி என்று தெரிந்தால் என்ன செய்ய? டெண்டுல்கர் பேட்டை தூக்கி காண்பிப்பது விளம்பரத்திற்காக என்று எழுதினால் நீங்கள் ஆதாரம் கேட்க கூடும். என்ன செய்வது எங்களிடம் ‘ஆதாரம்’ இல்லை

  28. ///டெண்டுல்கர் நான்கு, ஆறு அடித்த்தும் பேட்டை மேலே தூக்கி காண்பிப்பார். அதில் பிரிட்டானியா தெரியும். உங்களைப் போன்றவர்களுக்கு அதுதான்தேசபக்தி என்று தெரிந்தால் என்ன செய்ய?///

    ஹா ஹா…. இப்போ பிரச்சினை தேசபக்தி பற்றி இல்லை. சச்சினுக்கு தேச பக்தி இருந்தாலோ இல்லாமல் போனாலோ எனக்கொன்றும் குறையில்லை. ஏனென்றால் எனக்குத்தான் தேசமேயில்லையே!!!! எனக்கும் கிரிக்கெட் பிடிக்கும், சச்சின் பிடிக்கும். அதைத்தாண்டிய கேள்வி, ரத்தம் சம்பந்தமான மறுப்புப் பற்றி நீங்கள் ஏதுமே சொல்லவில்லையே என்பது பற்றியது.

    • கிருத்திகன் சுற்றி வளைக்காமல் நேரடியாகப் பதில் சொல்லுங்கள். பத்து பேருக்கு 35இலட்சம் ரூபாய் விலையில் ஸ்பெசல் எடிசன் ஒதுக்கப்பட்டது உண்மையா இல்லையா? உண்மை என்றால் அதில் என்ன ஸ்பெஷல்? அது எந்த ஸ்பெசலாக இருந்தாலும் ஆபாசமா இல்லையா?

      • 35 லட்சப் புத்தகம் 10 பேருக்கு என்பது நிச்சயமாக ஆபாசம்தான். என்னுடைய கேள்வி அதில் சச்சினின் ரத்தம் இருக்கிறது என்பது பரபரப்புக்காகக் கிளப்பிவிடப்பட்ட வதந்தி. அந்த வதந்தி அடிப்படையில் நீங்கள் ஒரு கட்டுரை எழுதினீர்கள். எனக்குக்கூடக் காறித்துப்பவேண்டும் போல் இருந்தது. ஆனால், சம்பந்தப்பட்ட நபர் இப்போது அதில் ரத்தமும் இல்லை, பீயும் இல்லை என்கிறபோது, நீங்கள் அது பற்றிப் பின்னூட்டமாகவாவது குறிப்பிட்டிருக்க வேண்டும். ஒரு விஷயம் நான் ஒப்புக்கொள்கிறேன். மைதானத்தில் ஆடும் டெண்டூல்கர் என்கிற கிரிக்கெட்டருக்கு நான் ரசிகன் என்பதற்காக நான் இங்கே உங்களோடு சண்டைபோட்டுக்கொண்டிருக்கவில்லை. 35 லட்சப் புத்தகத்தில் காறித்துப்ப உரிமை இருக்கிற அளவுக்கு, அது தொடர்பில் வந்த செய்தி ஒன்றில் இருக்கிற பொய்மையை, இன்னொரு ‘வியாபாரி’ {கார்டியன்} இட்ட செய்தியின் அடிப்படையில் கட்டுரை யாத்த கயமையை ஒப்புக்கொள்கிற அடிப்படை நேர்மையை எதிர்பார்க்கிறேன் உங்களிடம் வினவு.

        இதோ உங்களுக்காகவே செய்கிறேன், எனக்கு அகமும் புறமும் தெரிந்த விளையாட்டு ஒன்றை மிகுந்த ஆளுமையுடன் விளையாடத்தெரிந்த காரணத்தால் என்னுடைய ஆதர்சமாக இருக்கிற சச்சினின் முகத்தில் என் தொண்டைச் சளியோடு காறித் (காறாப்பி) துப்புகிறேன், இந்த கேவலமான 35 லட்ச வியாபாரத்துக்கு சம்மதித்ததுக்காக. ஆனாலும் Sensationalize பண்ணுகிற நோக்கத்தில் யாரோ எழுதிய இரத்த விஷயத்தை உண்மை போல் காட்டும் உங்கள் கட்டுரை தொடர்பில், ஆகக்குறைந்தது அது தொடர்பான சச்சினின் மறுப்பை நீங்கள்,( ‘வினவு’, கிருத்திகனோ, வெண்ணையோ அல்ல) மேற்கோள் காட்டியிருக்கவேண்டும்.

        • கிருத்திகனுக்கு என்ன ஆச்சு கார்டியன் பத்திரிக்கையில kraken மீடியாவோட பேட்டி வெளியானது உண்மையா பொய்யா? கார்டியன் என்ன வெறும் இணையத்து செய்தியா அது உலகின் முன்ன்னி பத்திரிக்கை ..

          அது மட்டுமல்ல கிருத்திகள் சுட்டி அளித்த செய்தியிலிருந்த

          ”When reports had first emerged of the act, Karl Fowler of Kraken Media – the publishers of the book – was reported to have said that the signature page of the book would be ‘a mix of Tendulkar’s blood and pulp.’

          “The Opus will not carry any blood as mentioned in the several articles/TV reports that have appeared over the past few days,” Fowler was quoted as saying.

          Earlier, the publisher of the book Karken Media had claimed that the “Tendulkar opus” would be a mix of Tendulkar’s blood and pulp in the signature page of the special edition

          இதிலிருந்து தெரிவது என்னவென்றால் அதிகாரபூர்வமாக ரத்தம் இருக்கிறது என்று அறிவித்த பின்னர். அதற்கு தோன்றிய எதிர்பின் காரணமாக விலக்கிக்கொள்ளப்பட்டதுதான்.. இது வினவு உள்ளிட்ட உலகெங்கிலும் இதற்கு கிளம்பிய எதிர்ப்பேதான் காரணம்.. மேலும் இதில் அம்பலமாவது, இந்த கிரேகன் மீடீயவை செய்தியை பற்றி தெரியாத சச்சின் எதிர்ப்பை மட்டும் அறிந்து பதறுகிறாம்…

          மற்றபடி சச்சின் போன்ற கழிசடைக்காகவெல்லாம் கிருத்திகனின் நம்பிக்கை பயிர் வாடினால் அவருக்கத்தான் நட்டம்!
          ………………………………………………

          வினவு, கிருத்திகன் சொல்லியிருப்பதை போல சச்சினின் கருத்துக்களை பதியவும். அப்போதாவது எதிர்ப்பின் விலிமையையும் நாயகர்களின் இரட்டை வேடத்தையும் இவர்கள் புரிந்து கொள்வார்கள்

  29. கேள்விக்குறி…

    நீங்கள் மேற்கோள் காட்டிய என் சுட்டியிலிருந்தான வார்த்தைகளிலேயே பல்லிளிக்கிறது ‘பத்திரிகா தர்மம்’.

    சச்சின் என்கிற கழிசடையோ, கேள்விக்குறி என்கிற புரட்சியாளனோ, எல்லாரும் இன்றைய சமூகத்தின் கழிவுகளே. ’நாயகர்கள்’ மட்டுமல்ல, புரட்சியாளர்களும் இரட்டைவேடம்தான் போடுகிறார்கள். எங்கே எப்படிப் போட்டார்கள் என்பதை நான் சொல்லவா வேண்டும்.

    பொறுப்பாக பதில் சொன்னதுக்கு நன்றி வினவு & கேள்விக்குறி.

    • கிருத்திகன், நீங்கள் மேற்கோள் காட்டியிருப்பது அனைத்தும் இன்று (july 24) வந்த செய்தி.. இந்த பதிவு வெளியானது 4 நாள் முன்னர் வெளிவந்த செய்தியின் அடிப்படையில். பின்னாளில் மறுப்பு வரக்கூடும் என்பதற்காக ஒரு விசயத்தை விமர்சிக்காமல் இருக்க முடியுமா? இன்று வெளிவந்த செய்தியை நம்பிய நீங்கள் 4 நாள் முன்னே வந்தது வதந்தி என்கறீர்கள்? உங்களுக்கு பிடித்தமாக இருந்தால் செய்தி இல்லையெனில் வதந்தியா? இது என்ன கத்திரிக்கா தர்மமோ?

  30. I appreciate Vinavu’s efforts on this article, they have done the right thing.

    Well here is the original content from OPUS publication’s official site, they have posted one of the NDTV report as their official press – it says

    “One of the key differences is that every copy will have small little drop of Sachin’s blood in the signature page, it’s never been done before,” said Karl Fowler, CEO, Opus.

    BTW, glad that Sachin came back and denied that it’s not going to be an auto-biography & not signed with his blood. -> It all just because of the negative attraction due to the wierd commercial plan, which is shaping differently now.

    go ahead and take a look at it.
    http://tendulkaropus.com/press

    Here is the full content of the page:
    //

    Tendulkar Opus, a biography with a difference

    An Opus is a mammoth work and a mammoth work can only come without mammoth content and inspiration. The latest work – the Sachin Tendulkar Opus.

    An international career spanning 20 years, and counting…innumerable memories and images that no cricket fan will forget. Those images have now found their way into a mammoth coffee table book. It’s called the Tendulkar Opus.

    The London’s Opus Store houses opuses, or what the company calls luxurious publications, on the biggest and best-known personalities of the world, from Michael Jackson and Walt Disney to Manchester United and Ferrari, and very soon the Sachin Tendulkar Opus will be a part of it.

    “First picture of mine in a newspaper was out when I was 12 or 13 and I had scored 100 for my school. I saw picture and said it was exciting and I want more of this,” said Sachin Tendulkar.

    Well Sachin has now certainly got plenty more! 30 kg, close to 800 pages and more than 30,000 photographs to be precise. The Tendulkar Opus took almost three years to complete and it’s got a little something else that sets it apart.

    “One of the key differences is that every copy will have small little drop of Sachin’s blood in the signature page, it’s never been done before,” said Karl Fowler, CEO, Opus.

    But this isn’t a bloodthirsty exercise in publicity. Sachin’s DNA profile is actually meant to help trace his genealogy. It’s just on the first ten copies though, each of which is expected to fetch about a crore in a charity auction.

    But the public realese of the book only happens much later, some time after the 2011 World Cup. The publishers hope to have even more content for the Tendulkar Opus by then.

    “One of the things that we’re looking at now is using a very small microphone in his batting helmet that will be operated by our photographer off the pitch, such that when he’s at the crease, we will be able to get images and angles of him in action that even the TV cameras with their pixellisation couldn’t get,” added Fowler.

    Sachin is only the second individual sportsperson after Diego Maradona, to have an Opus on him. So if there is still something Tendulkar fans don’t know about him, they only need this definitive work. It’s Sachin’s story in his own words.

    Source: NDTV.com
    //
    //

  31. இன்று உலகமக்களை அமைதியாக வாழவிடாது அராஜகம் செய்யும் அரசியல்வாதிகளின் சக்திகளே உலகில் மேலோங்கி உள்ளது. இந்தச் சக்திகளின் ஆயுதங்களில் ஒன்றாக நிறுவனங்களும் கையாளப்படுகின்றன. கிராகன் மீடியா (kraken media) என்ற பிரபலமான ஐரோப்பிய புத்தக வெளியீட்டு நிறுவனம், சச்சின் டெண்டுல்கரது சுயசரிதையை புத்தகமாக வெளியிடுவதில் ஈட்டப்போகும் இலாபத்தில், இந்திய அரசியல்வாதிகள் சிலரும் குளிர்காயப்போவதை மறுக்கமுடியாது. தற்போது வெளிவரும் செய்திகளை நோக்குமிடத்து, அவர்களின் முயற்சிக்கு பெரும் தடைகள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தடைகளால் ஏற்படப்போகும் சுனாமி நிச்சயம் தாக்கங்களை ஏற்படுத்தும். எது எப்படியென்றாலும் மக்களை விழிப்படையச் செய்யவேண்டும். நெல்லைத் தடவி அரிசியை பெறமுடியாது. குத்தித்தான் பெறமுடியும். இது உலகநியதி.

  32. புத்தகம் வாங்குறது வாங்காதது அவங்க அவங்க இஷ்டம்

    இதுல உங்களுக்கு என்ன வந்தது ??

    சச்சினாவது தன் ரத்தத்தை புக் செஞ்சு வித்தார்

    இதுவரைக்கும் உங்க வருமானத்துல எத்தன சதவீதம் பொது நலனுக்கு செலவு செஞ்சு இருக்கீங்க

    அவர் அவர் வேலைய பாக்குறாரு

    உங்களுக்கு விவசாயிகளை பத்தி கவலைன்னா அவங்களுக்கு எதாவது உதவி செய்யுங்க

    உங்களுக்கு கிரிக்கெட் புடிக்கலைன பாக்காதீங்க, புத்தகம் புடிகலன்னா படிக்காதீங்க. எனக்கு உங்க பதிவு புடிகலன்னா அது மேல துப்பட்டா

    அவரு விதர்பல நடந்ததுக்கு எவ்ளோ வருத்த பட்டாருன்னு உங்களுக்கு தெரியுமா?

    டெண்டுல்கரு அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு துணை போகுறாருன்னு சொல்ற நீங்க எவ்ளோ அமெரிக்க பொருட்கள பயன்படுத்துறீங்க ?

    அவரு அவருக்கு தெரிஞ்ச வழியில நல்லது செய்யுறாரு, நீங்க உங்களுக்கு தெரிஞ்ச வகையில நல்லது செய்யுங்க

  33. டெண்டுல்கரால நாட்டுக்கு பெருமை…. உன்னால ? உன் மூஞ்சிலத்தான் காரித்துப்பனும்..

  34. நியாயமான கேள்விகள்.

    நமது பிரபலங்களின் கூத்துகளுக்கு அளவே இல்லை. நல்லா சொல்லியிருக்கிங்க.

    என்றும் அன்புடன்
    உங்கள் ரசிகன்

  35. வதந்தி… வதந்தி….. அனைத்துமே வதந்திகள்!! தமிழ்நாட்டுத் தலைவனைக் கேளுங்கள், முள்ளிவாய்க்கால் என்று ஒரு இடமே இலங்கையில் இல்லை. அது வதந்தி என்பார்.

    கண்ணால் காண்பதும் பொய். காதால் கேட்பதும் பொய். தீரவிசாரித்து அறிவதே மெய் என்பது அந்தக்காலம்.

    தீரவிசாரிப்பவனும் பொய்யன் என்பது இந்தக்காலம்.

Leave a Reply to ulagan பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க