privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திபூசணிக்காய் பெரிசா, பச்சை மிளகாய் பெரிசா - ஜ்யோவ்ராம் சுந்தர் ?

பூசணிக்காய் பெரிசா, பச்சை மிளகாய் பெரிசா – ஜ்யோவ்ராம் சுந்தர் ?

-

ம.க.இ.க பெரிய கட்சியா, சிறிய கட்சியா?

“இணையத்தை மட்டும் படிப்பவர்கள் ம.க.இ.கதான் தமிழகத்தின் மிகப் பெரிய அரசியல் இயக்கம் என நினைத்துக் கொள்வார்கள்.” – என்று கூகிள் பஸ்ஸில் (Google Buzz)  பிரபல இலக்கிய பதிவரும், பதிவுலகின் இலக்கிய குருஜியுமான ஜ்யோவ்ராம் சுந்தர் எழுதியிருந்தார்.  இதனை குசும்பன், சென்ஷி, அதுசரி, பால பாரதி, கோவி கண்ணன் முதலான பிரபல பதிவர்கள் லைக்கி(LIKE)யிருந்தனர்.

பிரபல பதிவர்கள் என்று குறிப்பிட்டிருப்பது இயல்பு நவிற்சியே. வஞ்சப்புகழ்ச்சி அல்ல. எனவே, கேலி கிண்டல் என்று நினைத்துக் கொண்டால் கம்பெனி பொறுப்பல்ல.. வினவு எதை எழுதினாலும் அதில் இன்டு, இடுக்கு, சந்து,பொந்து, லந்து களைக் கண்டுபிடிக்க சிலர் எப்போதும் காத்துக்கொண்டிருப்பதனால் இத்தகைய டிஸ்கியை போட்டு எழுத வேண்டியிருக்கிறது.

இனி சுந்தர்ஜியின் கருத்துக்கு வருவோம். “இணையத்தில் வினவு, மற்றும் ம க.இ.க தோழர்களின் தீவிர செயல்பாட்டை பார்த்துவிட்டு, தமிழ்நாட்டில் ம.க.இ.கதான் மிகப்பெரும் அரசியல் இயக்கம் என்று இன்டர்நெட்டையே நம்பியிருப்பவர்கள் தவறான முடிவுக்கு வருவார்கள். இருப்பினும் தமிழகத்தில் இருப்பவர்களும், இணையத்தை மட்டும் சாராதவர்களும் உண்மை நிலையை அறிவார்கள். மெய்நிகர் உலகத்தினை நம்புகிறவர்கள் நினைப்பது போல ம.க.இ.க என்பது மெய் உலகில் மிகப் பெரிய அரசியல் இயக்கமல்ல. ”பத்தோடு பதினொன்று. அத்தோடு இதுவும் ஒன்று” என்பதே அவரது பாட்டின் பொருள்.

மெய் உலகம், மெய்நிகர் உலகம் – எது உண்மை?

 

மெய் நிகர் உலகின் குடிமக்கள் பலர் மெய் உலகிலிருந்து துண்டிக்கப்பட்டிருப்பது உண்மைதான். எனினும் மெய் உலகில் வாழ்பவர்கள் எல்லாரும் மெய் நிலை உணர்ந்தவர்கள் என்று கூறமுடியுமா? அலுவலகத்துக்குச் செல்லும் தடத்தையும், சன் நியூஸையும், சீரியலையும், பஜ்ஜியின் எண்ணெயை உறிஞ்சுவதற்காக சேட்டன்மார்களால் வாங்கப்படும் தினத்தந்தியின் தலைப்புச் செய்திகளையும், தேநீரோடு சேர்த்து உறிஞ்சி, தம் அறிவை மேம்படுத்திக் கொள்பவர்களாகத்தான் பெரும்பான்மையான மெய் உலக தமிழர்கள் இருக்கிறார்கள். ஒரு வேளை இவர்களெல்லாம் தினசரிகளையும், வாரமிருமுறை இதழ்களையும் அட்டை டூ அட்டை படிப்பதாகவும் வைத்துக் கொள்வோம். அவையெல்லாம் உண்மைத் தமிழகத்தின் உரைகற்களா?

“தமிழ்நாட்டில் பிளஸ் டூ தேர்வு” என்ற செய்தியை – நேற்று, இன்று, நாளை மூன்றிலும் காலத்தை மட்டும் மாற்றிவிட்டு அதே ‘காலத்தை’ செய்தியாக (column) போடும் தினத்தந்தியோ, இழைத்துக் குழைத்து இந்துத்துவத் தமிழனை உருவாக்க முனைந்திருக்கும் தினமணியோ, லெட்டர்ஸ் டு எடிட்டர் அப்பாவுக்கும் WHAT THE F**K புத்திரனுக்கும் பாலம் அமைக்கும் முயற்சியில் எடை  கூடிக்கொண்டே போகும் ஹிந்துவோ, போலீஸ் அறிக்கைகளையும், அதிகார வர்க்க, அறிவாலயக் கிசு கிசுக்களையும், உளவுத்துறை அன்பர்களின் உதவிகளையும் வைத்து வாசகனின் புலனாய்வுத் திறனை வளர்த்து வரும் வாரமிருமுறை இதழ்களோ, சிட்னி உயிரியல் பூங்காவில் யானை குட்டி போட்டது முதல் ஹாலிவுட் நடிகையின் உள்ளாடை ஏலம் போட்டது வரையிலான உலகச் செய்திகளை வழங்கும் சன்.டி.வியோ மெய் உலகைப் பிரதிபலிப்பவையா?

இவற்றால் அறிவூட்டப்படும் மெய் உலகத் தமிழர்கள், தமிழ்நாட்டின் மிகப்பெரிய அரசியல் இயக்கம் என்று எதையெல்லாம் நினைத்துக் கொண்டிருக்கிறார்களோ, அதையெல்லாம் விட்டுவிட்டு, போயும் போயும் ம.க.இ.க வை மிகப்பெரிய அரசியல் இயக்கம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்களே மெய்நிகர் உலகத் தமிழர்கள், அதுதான் சுந்தரின் கவலை.

இணையத்தை அறியாத சாதாரண மக்களிடம் உள்ள சமூக அறிவு, இணையத்தில் மட்டும் உலவும் மக்களிடம் இருப்பதில்லை என்பது உண்மைதான். ஒன்றுமில்லாதவற்றைக் கூட கஷ்டப்பட்டு புரிந்து கொள்ள முயற்சி செய்து இறுதியில் குழப்பமாகவே காட்சியளிக்கிறார்கள் என்பதும் உண்மைதான். இதற்குக் காரணம் இணையம் மட்டுமே அல்ல. நுகர்வு கலாச்சாரத்தில் முனைவர் பட்டம் பெறும் அளவுக்கு முக்குளித்து வாழ்ந்து வரும் நடுத்தர வர்க்கத்தின் ‘அறிவு’ வெளிப்பாடே இது.

இணையத்தில் ம.க.இ.க – திட்டமிடப்பட்டதா?

பிளாக், ஆர்குட், ஃபேஸ் புக், டிவிட்டர், குழுமங்கள் என்று சோசியல் நெட்வொர்க்கிங்கின் கதவுகளை ஒவ்வொன்றாகத் திறந்து மூடிக்கொண்டிருக்கும் நெட்டிசன்கள், வீட்டுக்கு வெளியே கொலையே நடந்தாலும் கதவைத் திறந்து பார்ப்பதில்லையே, அது அல்ல சுந்தரின் கவலை. டிவிட்டரில் trishtrashers திரிஷாவையோ , Beingசல்மான் கானையோ ஃபாலோ செய்பவர்கள் மெய் உலகின் பிரபலங்களைத்தான் மெய்நிகர் உலகிலும் பாலோ செய்கிறார்கள் என்பதால், அவர்கள் ரசிகர் மன்றங்களுக்கும் உண்மைக்கும் நெருக்கமாக இருக்கிறார்கள் என்று சுந்தர் ஆறுதல் அடையக்கூடும். ம.க.இ.க தோழர்கள் தோற்றுவிக்கும் பொய் பிம்பம்தான் அவரது ஆற்றாமை.

வினவும், ம.க.இ.க தோழர்களும் இணையத்தில் செய்யும் வேலையின் பொருள் என்ன? மெய் உலகத்திற்கும் மெய் நிகர் உலகத்துக்கும் இடையில் நிலவும் இடைவெளியை அகற்ற முனைகிறோம். மெய் உலகத்திலும் இதே பணியைத்தான் செய்து வருகிறோம். இந்த முயற்சியின் நோக்கம் சமூக அக்கறை. இதில் குறிப்பிட்ட அளவுக்கு வெற்றியும் கண்டிருக்கிறோம். இவ்வளவுதான் விசயம்.

வினவுக்கு கிடைத்த அங்கீகாரமாகட்டும், பல தோழர்கள் ‘பிளாக்’ முதல் ‘டிவிட்டர்’ வரை பலவற்றிலும் புகுந்து புறப்படுவதாகட்டும், இவையெதுவும் திட்டமிட்டு நடத்தப்படவில்லை என்பதே உண்மை.

ம.க.இ.க விலோ அதன் தோழமை அமைப்புகளிலோ செயல்படும் ஆகப் பெரும்பான்மையான தோழர்களுக்கு இணையம் என்பது அவ்வளவு பரிச்சயமானதல்ல. எனினும் சமூகத்தின் பிற அரங்குகளில் எமது அமைப்புகள் ஊக்கமாகச் செயல்படுவதன் விளைவு இணையத்தில் பிரதிபலிக்கிறது. இதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும்?

வினவைப் பொறுத்தவரை நாங்கள் இணையத்தில் நுழைந்த பிறகுதான் ஏற்கெனவே பல தோழர்கள் இங்கே இருக்கிறார்கள் என்பதையே தெரிந்து கொண்டோம். பெரும்பாலனவர்களை பின்னூட்டங்கள்  வழியாக அறிந்தோம் என்பதே உண்மை. தமிழகத்தின் அரசியல் ஆர்வமுள்ள இளைஞர்களில் குறிப்பிடத்தக்க அளவினர் எமது அமைப்புகளில் உள்ளனர். ம.க.இ.க ஆதரவாளர்கள் பலர் ஐ.டி துறையிலும் பணியாற்றுவதால் இந்த இளமைத் துடிப்பு இணையம் வரை நீண்டிருக்கிறது. இதனை ஜீரணிக்க இயலாமல், ஏதோ ம.க.இ.க பயங்கரமாக திட்டமிட்டு, பதிவர்கள் பலரை இறக்கிவிட்டு இணையத்தில் ஊடுறுவி அதனைக் கைப்பற்ற முனைந்திருப்பதைப் போன்ற கற்பிதங்களை சில அறிவாளிகள் பரப்புகின்றனர். அதெல்லாம் உண்மையாக இருந்தால் மற்றெல்லோரையும் விட நாங்கள்தான் குதூகலிப்போம். செய்யாத சாதனைக்கு மகுடம் சூட்டுகிறார்கள் சில பேர். அதையெல்லாம் சுமக்க முடியுமா?

அரசியல் வலிமை எண்ணிக்கையிலா, ஆளுமையிலா?

அடுத்த கேள்வி, ஒரு அரசியல் இயக்கம் வலிமையானதா இல்லையா என்பதை எதை வைத்து முடிவு செய்வது? முதலில் நமக்கு தெரிகின்றவை புள்ளிவிவரங்கள். எந்தக் கட்சியில் எத்தனை உறுப்பினர்கள் என்ற விவரங்களை வைத்து அதை முடிவு செய்ய முடியுமென்று பலர் எண்ணுகின்றனர்.

சென்ற சட்டமன்ற தேர்தலில் தமிழ் சசி முதலான நண்பர்கள் “மாற்றம்” என்ற பெயரில் ஈழத்திற்காக ஜெயாவை ஆதரித்து இணையத்தில் பிரச்சாரம் செய்தனர். அப்போது ஒரு விவாதத்தில் ம.க.இ.கவின் தேர்தல் புறக்கணிப்பை பற்றிப் பேசும் போது தமிழ் சசி ” ம.க.இ.கவிற்கு எத்தனை உறுப்பினர்கள் இருக்கின்றனர், எத்தனை பேர் தொடர்ச்சியாக பணியாற்றி கொண்டிருக்கிறார்கள் ”  என்று கேட்டதாக ஞாபகம்.

தமிழ் சசி நுனிப்புல் மேய்பவரல்ல. எந்த விசயத்தை எடுத்தாலும் பருண்மையாக விவரங்களைச் சேகரித்தே தனது நிலைப்பாட்டை எழுதுகிறார் என்பது நல்லதுதான். ஆனால் இந்த வழிமுறை எல்லா சந்தரப்பங்களிலும் நம்மை உண்மையை நோக்கி இட்டுச் செல்லுமா?

கடந்த பல பத்தாண்டுகளில் இந்தியாவில் பஞ்சம் என்பதே இல்லை, இந்தியாவில உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்களின் அளவு இந்திய மக்கள் நுகரும் அளவைக் காட்டிலும் அதிகம். பற்றாக்குறை இல்லை. எனவே, இது தன்னிறைவான உற்பத்தி என்று விக்கியில் ஒரு லிங்கை கொடுத்து அதியமான் வாதிடும்போது அது உண்மைதானே என்று தோன்றலாம்.

ஆனால் பஞ்சமா இல்லையா என்பதை எதைக் கொண்டு மதிப்பிடுவது? உற்பத்தியைக் கொண்டா, நுகர்வைக் கொண்டா? ஒரு அமெரிக்கன் ஒரு வருடத்தில் நுகரும் கோதுமை, இறைச்சி, முட்டை, காய்கனியின் அளவை விட இந்தியனின் நுகர்வு பல மடங்கு குறைவு. ஏன் இந்த வேறுபாடு?

இந்தியாவில் ஒரு வேளைச் சாப்பாடே ஏழைகளுக்கு பழக்கம். அதற்கு அடுத்தபடி இருவேளைச் சாப்பாடு உண்பவர்கள் வறுமைக்கோட்டுக்கு மேலே உள்ளதாக கணக்கிடப்படுகின்றனர். உற்பத்தி பற்றி பேசும் புள்ளிவிவரங்கள் பட்டினி கிடக்கும் இந்தியர்களை சாமர்த்தியமாக மறைக்கின்றன. ஒரு அரசாணை மூலம் “பஞ்சம்” என்ற சொல்லையே அரசு ஆவணங்களிலிருந்து மகாராட்டிர அரசு நீக்கிவிட்டது என்ற கேலிக்கூத்தை சமீபத்தில் இந்து நாளேட்டில் எழுதியிருக்கிறார் சாய்நாத்.

1970களில் வியட்நாமில் இருந்த அமெரிக்க படையின் பலத்தையும் வியட்நாம் கம்யூனிசக் கட்சியின் பலத்தையும் புள்ளி விவரங்களை மட்டும் வைத்து ஆய்வு செய்திருந்தால் என்ன முடிவுக்கு வந்திருக்க முடியும்? எந்தக் காலத்திலும் வியட்நாம் மக்கள் அமெரிக்க இராணுவத்தை வெல்ல முடியாது என்றுதான் மதிப்பிட்டிருக்க முடியும்.

புள்ளிவிவரங்கள் தரும் முடிவுக்கு நேர் எதிரான முடிவை வியட்நாம் வழங்கியது எப்படி? பெரிய கட்சியை சின்னக் கட்சி வென்றது எப்படி?  கோலியத்தை டேவிட் வீழ்த்தியது எப்படி?

நேபாள் மாவோயிஸ்ட்டுகள், ஈழத்தின் விடுதலைப் புலிகள் ஆகிய இருவரின் அரசியலையும் ஒதுக்கி விட்டு, அவர்களது படைபலம், ஆயுத பலத்தை வைத்து மட்டும் ஒப்பிட்டு ஆய்வு செய்திருந்தால் என்ன முடிவுக்கு வந்திருப்போம்? ஒரு கட்சியின் அரசியல் பலத்தை வெறும் எண்ணிக்கை சார்ந்த விசயமாக மட்டும் பார்த்து மதிப்பிடுவது பிழையான முடிவுகளுக்கே கொண்டு போய் சேர்க்கும்.

அரசியல் ஈடுபாட்டில் எது பெரிய கட்சி?

தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் அனைத்தும் உறுப்பினர் எண்ணிக்கைகளை கோடிகளிலும், இலட்சங்களிலும் கூறுகின்றனர். தொண்டனே இல்லாமல் முதலாளிகள் மட்டும் உள்ள காங்கிரசுக் கட்சி கூட தனக்கு ஒரு கோடி உறுப்பினர்கள் உள்ளதாகக் கூறுகிறது.

ஆனால் இந்த கட்சிகள் தேர்தலில் வாங்கிய வாக்குகளின் எண்ணிக்கை உறுப்பினர் எண்ணிக்கையில் பாதியைக்கூட எட்ட மறுக்கிறது.

சரி, இவற்றை விடுங்கள். ஒரு எளிய சூத்திரத்தின் மூலம் இதை புரிய முயற்சிப்போம். தமிழகத்தில் ம.க.இ.க உள்ளிட்ட பல அமைப்புகளும் அவ்வப்போது போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்துகின்றன. இவற்றுக்கு சொந்த செலவில் வந்து பங்கேற்போரை வைத்து ஒரு கட்சியின் பலத்தை மதிப்பிடுவதா, அல்லது பிரியாணிப் பொட்டலத்தின் பலத்தில் கூடும் கூட்டத்தை வைத்து மதிப்பிடுவதா? ஒரு வேளை கைதாகின்றவர்கள் ஓரிரு மாதம் சிறையில் இருக்க வேண்டுமென்றால்.. என்ன நடக்கும்?

அடுத்து பொதுக்கூட்டங்கள். எல்லா கட்சிகளும் இன்று தமது பொதுக்கூட்டங்களை ஈவன்ட் மேனேஜ்மெண்ட் கான்டிராக்ட்டர்கள் மூலம்தான் நடத்துகின்றன. இதற்குத் தேவை பணம். ஊழியர்கள் அல்ல. தி.மு.க, அ.தி.மு.க போன்ற கட்சிகளின் சுவரொட்டியைக் கூட அந்தக் கட்சிகளின் தொண்டர்கள் ஒட்டுவதில்லை. கொடி நடுவதில்லை. கூட்டத்திற்கு  மக்களைச் சேர்க்க குத்தாட்டம் நடத்தியும் முடியாமல், கூலிக்கு ஆள் பிடித்து வருகின்றனர். இத்தனைக்கும் பிறகு மேடையில் இருக்கும் ஆட்களை விட கீழே இருப்போரின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், பல சந்தரப்பங்களில் ஓட்டுக்கட்சி பேச்சாளர்கள் பின்பக்கம் திரும்பி பேச நேரிடுகிறது.

ம.க.இ.க வினர் நடத்தும் பொதுக்கூட்டங்களுக்கு மட்டும் எப்படிக் கூட்டம் வருகிறது? மற்ற கட்சிகளின் ஆடம்பர கட்அவுட் முதலான பிரம்மாண்டங்கள் இல்லாமல் எளிமையாக நடக்கும் எமது கூட்டங்களில், அனைத்து வேலைகளையும் தோழர்களே செய்கிறார்கள். எமது கலைக்குழுத் தோழர்கள் தாங்களே சொந்தமாகத் தயாரித்த புரட்சிகர கலைநிகழ்ச்சிகளைத்தான் நடத்துகிறார்கள். குத்தாட்டம் இல்லாமல் கூட்டம் கூடுகிறது. கூட்டத்திற்கு வரும் மக்களிடமே நிதி வசூலும் செய்யப்படுகிறது.

சமீபத்தில் தனக்கு வரலாறு காணாத கூட்டம் கூடியதாக ஜெயலலிதாவே குறிப்பிட்ட திருச்சி கூட்டத்தில் அம்மா என்ன சொன்னார்? “பெருந்திரளாக வந்திருக்கிறீர்கள். மகிழ்ச்சி. ஆனால் 1000 ரூபாய் வாங்கிக் கொண்டு ஓட்டை மாற்றிப் போட்டுவிடாதீர்கள்” என்று அதே கூட்டத்தில் தனது அச்சத்தை வெளியிட்டார் ஜெயல்லிதா. ஏன்? அந்த வரலாறு காணாத கூட்டம் என்பது 200 ரூபாயும், பிரியாணியும் கொடுத்து அழைத்து வரப்பட்ட கூட்டம் என்பது அம்மாவுக்குத் தெரியும். அதனால்தான் கூட்டத்தின் அளவைக்கண்டு மயங்காமல் அதன் தரத்தைக் குறித்து அவர் கவலைப்படுகிறார்.

அடுத்து கட்சி பத்திரிகை என்ற வகையினத்தை பார்க்கலாம். தமிழகத்தில் எல்லாக் கட்சிகளுக்கும் பத்திரிகைகள் உண்டு. தி.மு.கவின் முரசொலி, ம.தி.மு.கவின் சங்கொலி, அ.தி.மு.கவின் நமது எம்ஜிஆர், சி.பி.எம்மின் தீக்கதிர், சி.பி.ஐயின் ஜனசக்தி முதலான பத்திரிகைகள் வம்படியாக சந்தா சேர்க்கப்பட்டு தலையில் கட்டப்படுகின்றன. அவற்றைப் படிப்பவர்கள் எத்தனை பேர்? பழைய பேப்பர்காரருடைய துலாக்கோலின் சந்நிதியில்தான் அப்பத்திரிகைகளின் அஞ்சல் உறை பிரிக்கப்பட்டு தரம் எடைபோடப்படுகிறது.

25 ஆண்டுகளாக, மாதம் தோறும் பேருந்துகள், இரயில்கள், குடியிருப்புகள், ஆலைவாயில்கள் என நேரடியாக மக்களிடம் கொண்டு சென்று விற்கப்படுகிறது புதிய ஜனநாயகம் பத்திரிகை. கட்சி சார்பில்லாத ஆயிரக்கணக்கான மக்களிடம் தனது அரசியலைக் கொண்டு செல்லும் இப்படிப்பட்ட ஒரு பத்திரிகையையோ, இவ்வாறு விடாப்பிடியாக மக்களிடம் அதனைக் கொண்டு செல்லும் கட்சித் தொண்டர்களையோ, வேறு எந்தக் கட்சியிலாவது சுந்தர் காட்டுவாரா?

நாற்பது, ஐம்பது ரூபாய் விலை போட்டு, அதுவும் போதாமல் போத்தீஸ், சாரதாஸ், சென்னை சில்க்ஸ், நல்லி சில்க்ஸ் என்று பட்டுப் புடவைகளின் தயவில் சரசரக்கும் இலக்கியப் பத்திரிகைகள் நிரம்பிய உலகில், விளம்பரமே இல்லாமல் விற்பனைத் தொகையை மட்டும் நம்பி பத்திரிகை நடத்தும் வேறு ஏதாவதொரு பெரிய கட்சியை சுந்தர் நமக்கு அடையாளம் காட்டுவாரா?

பத்திரிகையை தாண்டி அவ்வப்போதான போராட்டங்களுக்கு வெளியிடப்படும் துண்டறிக்கை, சிறு வெளியீடுகள் இவற்றின் ஒட்டு மொத்த எண்ணிக்கை கோடிகளைத் தாண்டும். தற்போது போபால் வெளியீடு மட்டும் ஒரு இலட்சம் படிகள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. ஜெயா ஆட்சியின் போது அவரது பாசிசத்தை அம்பலபடுத்தி அச்சடித்த வெளியீடுகளின் ஒட்டு மொத்த எண்ணிக்கை சில இலட்சங்கள். இந்த இலட்சங்களைக் கண்டு நாங்கள் மயங்குவதில்லை. இலக்கை நோக்கிய பயணத்தில் இவை சிறிய படிகள் மட்டுமே என்பதை எமது தோழர்கள் அறிவார்கள். இருந்தாலும் பூச்சியங்களின் எண்ணிக்கையை வைத்து சிறிது பெரிது பார்க்கும் அறிவாளிகளுக்காக இவற்றை தெரிவிக்க வேண்டியிருக்கிறது.

எமது அரசியலை மக்களிடம் கொண்டு செல்லவும், எமது அமைப்பை மக்கள் அறியச் செய்யவும் எந்தப் பத்திரிகை முதலாளியிடமும் சென்று நாங்கள் தலையைச் சொறிந்ததில்லை. கொள்கையை விட்டுக் கொடுத்து எந்தப் பிரபலத்தையும் வைத்து விளம்பரம் தேடவில்லை. எமது சொந்த உழைப்பில் சொந்தக் காலில் மட்டுமே நிற்கிறோம். அப்படிப்பட்ட வேறொரு பெரிய கட்சியை சுந்தர் நமக்கு காட்டுவாரா?

ம.க.இ.க வும் அதன் தோழமை அமைப்புகளும் தனது பிரச்சாரம், போராட்டங்களுக்கு மக்களை மட்டுமே சார்ந்திருக்கின்றன. முதலாளிகள், பெரும் வணிகர்கள் முதலானோரிடம் நன்கொடை வாங்குவதில்லை. தமிழகத்தின் பேருந்து நிலையங்கள், இரயில் நிலையங்கள், கடைவீதிகளில் தன்னந்தனியாக பிரச்சாரம் செய்து நிதி வசூலிக்கும் தோழர்களை யாரும் எங்கும் பார்க்கலாம்.

ஏதாவதொரு ஓய்வு நாளில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை சென்னையின் மின்சார ரயில்களில் பயணம் செய்து எமது தோழர்கள் செய்யும் அரசியல் பிரச்சாரத்தையும் மக்கள் வழங்கும் நிதியையும் சுந்தர் தனது சொந்தக் கண்ணால் பார்க்கட்டும். வேறு ஏதாவது ஒரு பெரிய்ய்ய கட்சிக்காரரை ஒரே ஒருநாள் அழைத்து வந்து அவரது கொள்கையைப் பேசி மக்களிடம் நிதி கேட்கச் சொல்லட்டும். எமது தோழர்களின் உழைப்போடு எந்தக் கட்சியின் தொண்டனின் உழைப்பை வேண்டுமானாலும் ஒப்பிட்டுப் பார்க்கட்டும்.

அறிஞர் அ.மார்க்சின் ஆதங்கம்!

ஒரே ஆள் பல பெயர்களில் பின்னூட்டம் போடுவதாகவும், பல பெயர்களில் வலைப்பூ நடத்துவதாகவும் முன்னாள் பேராசிரியர் அ.மார்க்ஸ் ஒரு முறை எழுதியிருந்தார். இதனை அவதூறு என்று சொல்வதை விட அவரது ஆதங்கம் என்று சொல்வது பொருத்தம். அவரது கருத்துப்படி ம.க.இ.க வினர் எனப்படுவோர் ஒரு சில நபர்களால் ஆட்டுவிக்கப்படும் சொந்த புத்தி இல்லாத மந்தைகள். மந்தைகள் எப்படி சொந்தமாக வலைப்பூ நடத்தமுடியும், பின்னூட்டம் போட முடியும் என்பது அவரது ஆய்வுக் கண்ணோட்டம் எழுப்பும் கேள்வி. எனவே ஒரு சிலர்தான் பல பெயர்களில் உலவவேண்டும் என்பது அவரது முடிவு. மேலும், கம்யூனிஸ்டு கட்சி-புரட்சி என்பன போன்ற கருத்தாக்கங்களே காலாவதியாகி, ம.க.இ.க உள்ளிட்ட இயக்கங்கள் தேய்ந்து வருகின்றன என்பது கடந்த 20 ஆண்டுகளாக அவர் பேணி வரும் நம்பிக்கையாதலால், ம.க.இ.க வினர் இத்தனை பேர் எழுதக்கூடும் என்பதையும் அவரால் நம்ப முடியவில்லை…வில்லை…வில்லை.

உயிரோடு இருப்பவனிடம் “நீ சாகவில்லை என்று நிரூபி” என்று கேட்கும் அறிவாளிகளுக்கு நாங்கள் எப்படி அய்யா பதில் சொல்ல முடியும்? முடியல 🙁

இரயில்களில் பேசும் தோழர்கள் தம் சொந்தக் குரலில்தான் பேசுகிறார்களா, அல்லது பதிவு செய்யப்பட்ட குரலுக்கு வாயசைக்கிறார்களா என்று பயணிகளிடம் அவர் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். ஒரு ஆள் பல பெயர்களில் ஒரே நேரத்தில் பின்னூட்டம் போடுவதைப் போல, ஒரே ஒரு ம.க.இ.க ஆள் ஒரே நேரத்தில் பல ரயில்களில் பிரச்சாரம் செய்கிறாரா என்று புலனாய்வு செய்து அவரது ஐ.பி நம்பரைக் கண்டுபிடிக்கலாம். வேறென்ன சொல்ல?

அணிகளின் அரசியல் அறிவு, அர்ப்பணிப்பு ஆகியவற்றிலும் மற்றெல்லோரையும் காட்டிலும் நாங்கள் முன்னேறியவர்களாக இருக்க வேண்டும் என்று விழைகிறோம். அவ்வாறு இருப்பதாகவும் கருதுகிறோம். அவ்வாறு இல்லாத தோழர்களை மேம்படுத்த முயல்கிறோம். அரசியல் தரம் குறித்த விசயத்தில் சிறிது எது பெரிது எது? ம.க.இ.க வை விட திமுகவோ, அதிமுகவோ, பாமகவோ, மார்க்சிஸ்டுகளோ தரத்தில் எங்ஙனம் பெரியவர்கள் என்று சுந்தர் எடை போட்டுக் கூறினால் தெரிந்து கொள்கிறோம். அவருடைய எடைக்கல்லை மட்டும் ஒரே ஒரு முறை கண்ணால் பார்த்துக் கொள்கிறோம்.

பெரிய கட்சிகள் செய்ய முடியாதவற்றை ‘சிறிய’ கட்சி செய்தது எங்ஙனம்?

ம.க.இ.க மற்றும் அதன் தோழமை அமைப்புகளுடைய செயல்பாட்டை விரித்துக் கூறுவதற்கு இது இடமல்ல. ஆனால் பெரிய்ய கட்சி சிறிய கட்சி என்ற ஒப்பீடு தோற்றுவிக்கும் பிரமைகளை உடைக்க சமீபத்திய எடுத்துக்காட்டுகள் சிலவற்றையாவது கூறவேண்டியுள்ளது.

சமீபத்திய செம்மொழி மாநாட்டை அம்பலப்படுத்தி அதற்காக தமிழகம் முழுவதும் தொண்டர்கள் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்ட பெரிய்ய கட்சி எது? அதைச் செய்த சிறிய கட்சி ம.க.இ.க. கோவை நகரில் மாநாட்டு வாயிலிலேயே துண்டறிக்கை விநியோகித்து சிறை சென்றோரைக் கொண்ட சிறிய கட்சியும் ம.க.இ.கவே.

பெரிய கட்சியான அ.தி.மு.கவின் தலைவி செம்மொழி மாநாட்டை எதிர்த்து பேசமுடியாமல் பம்மிக் கொண்டிருந்தார். பிறகு சிறிய கட்சியான ம.க.இ.க சார்பு வழக்குரைஞர்கள் தொடங்கிய உண்ணாவிரதப் போராட்டத்தைப் பிடித்துக் கொண்டு கரையேறினார். அதை ஆதரித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தினார். மருத்துவமனையில் இருந்த வழக்குரைஞர்களை அம்மா பார்க்க விரும்புவதாக அவரது அமைச்சர்கள் வந்து கூறியபோது, நாங்கள் பார்க்க விரும்பவில்லை என்று பதிலளித்தனர் வழக்குரைஞர்கள். அழகிரி ஆட்சி செய்யும் மதுரையில் அவரது கட்டைப் பஞ்சாயத்தை மறுத்து எதிர்த்தும் நின்றனர்.

உயர்நீதிமன்ற போலீசு வன்முறைக்கு எதிரான வழக்குரைஞர் போராட்டத்தில் முன் நின்றவர்களும் ம.க.இ.க ஆதரவு மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்குரைஞர்கள்தான். பெரிய்ய கட்சியான திமுகவை சேர்ந்தவரும், சங்கச் செயலருமான பால்.கனகராஜ், அப்பேற்பட்ட பெரிய்ய கட்சியிலிருந்தே தான் விலகுவதாக அப்போது அறிவிக்க வேண்டி வந்தது. உயர்நீதிமன்ற வளாகத்தில் கருணாநிதிக்கு கருப்புக் கொடி காட்டியவர்களும் மேற்படி சிறிய கட்சியினரே. அதற்காக அந்த வழக்குரைஞர்களைத் தாக்கிய திமுக ரவுடிகள் பெரிய்ய கட்சியை சேர்ந்தவர்கள் என்ற உண்மையை நாம் மறுக்க விரும்பவில்லை.

பெரிய்ய கட்சியான திமுக அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்குவதாகச் சொல்லி, பார்ப்பனரல்லாத மாணவர்கள் 250 பேரைப் பயிற்றுவித்து 2 ஆண்டுகளாகத் தெருவில் நிறுத்தியிருக்கிறது. அந்த மாணவர்கள் தங்கள் பிரச்சினையைத் தீர்ப்பதற்குத் தேடிப்பிடித்து அணுகியிருக்கும் கட்சியும் மேற்படி சிறிய கட்சியே. இணையத்தைப் பார்த்து ம.க.இ.கதான் பெரிய கட்சி என்று நம்பி ஏமாந்துதான் எங்களிடம் வந்து விட்டார்களா என்பதை அவர்களிடமே சுந்தர் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

தில்லைக் கோயிலில் தமிழ் பாட முடியாத சிவனடியார் ஆறுமுகசாமி, ஆதீனங்களையும் அனைத்திந்திய ஆன்மீக கட்சியான பாரதிய ஜனதாவையும் விட்டுவிட்டு, எந்த பிரவுசிங் சென்டரில் உட்கார்ந்து ம.க.இ.க வை பெரிய கட்சி என்று கண்டுபிடித்தாரென்பதை அவரிடம் கேட்கலாம்.

ஈழப் போரின் இறுதிக் கட்டத்தில் தமிழகமெங்கும் பல கல்லூரிகளில் மாணவர்களைத் திரட்டி வீதிக்குக் கொண்டுவந்த ஒரே மாணவர் அமைப்பு ம.க.இ.க ஆதரவு புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி. இதற்காக அடி உதை பட்டதும் சிறை சென்றதும் அத்தோழர்களே. சந்தேகமிருப்பின் கமிசனர் ஆபீசில் விசாரித்துக் கொள்ளலாம். அந்த மாணவர்களுக்காக நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் சைதை நீதிமன்றத்தை முற்றுகையிட்டதும் போராடியதும் மெய் உலகில் நிகழந்தவையே.

முத்துக்குமாரின் மரணத்தை ஒரு போராட்டமாக மாற்றியதில் முக்கியப் பாத்திரம் ஆற்றிய பெரிய்ய கட்சி எது என்பதை, அவரது உடலை வணிகர் சங்க கட்டிடத்தில் வைத்திருந்த சங்கத்தலைவர் திரு.வெள்ளையனிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். வாய்ப்பிருந்தால் வைகோவிடமும் இதனைக் கேட்டறியலாம்.

சென்னையில் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் சங்கம் என்ற பெயரில் நடந்து வந்த கட்டாய நன்கொடைக் கொள்ளையைத் தடுத்து நிறுத்தியதுடன், வாங்கிய பணத்தை திரும்பக் கொடுக்க வைத்த்தும், சென்னையில் நடைபெற்ற போராட்டத்தின் விளைவாக தமிழகம் முழுவதற்கும் இது தொடர்பான அரசாணையைப் பிறப்பிக்க வைத்ததும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி நடத்திய கெரோ போராட்டம்தான். இதுகுறித்த விவரங்கள் விக்கிபிடியாவில் கிடைக்காது. குரோம்பேட்டைக்கு ஒரு நடை நேரில் சென்றால் மாணவர்களிடமும் பெற்றோர்களிடமும் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். அவர்களெல்லாம் ஃபேஸ் புக்கில் இருக்கிறார்களா என்று தெரியவில்லை.

தனது தொழிலாளிகளை போடா வாடா என்று பேசிக்கொண்டிருந்த சாராய ரவுடி ஜேப்பியாரை, “வாங்க.. போங்க” என்று அழைக்க வைத்தது புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி. இன்டெர் நெட்டைப் பார்த்து ம.க.இ.கதான் தமிழகத்தின் பெரிய்ய கட்சி என்று நம்பித்தான் ஜேப்பியார் பயந்து விட்டார் போலும்!

ஆகஸ்டு 24 ஆம் தேதி திருச்சியில் 2000 பேருக்கு மேல் கூடிய புரட்சிகர மணவிழா ஒன்றை ம.க.இ.க நடத்தியது. ஒரே மேடையில் 3 சாதி மறுப்பு, மத மறுப்பு திருமணங்கள். இருந்தாலும் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகனுக்கு கலைஞர் நடத்தி வைத்த பெரிய்ய திருமணம்தானே பத்திரிகையில் வந்திருக்கிறது! ம.க.இ.க நடத்திய சின்ன மணவிழாவைப் பற்றி வினவு தளத்தில் செய்தி போட்டு, அதற்கு பத்து பேர் பின்னூட்டம் போட்டுக் கொண்டால் ம.க.இ.க வை பெரிய கட்சி என்று நம்பி ஏமாந்துவிட முடியுமா என்கிறார் சுந்தர்.

தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்ட உமாசங்கருக்கு ஆதரவாகவும், கருணாநிதி அரசின் மீதும் சன் டிவி, அழகிரி, ராஜாத்தி அம்மாள் மற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் மீதும் அவர் முன்வைத்துள்ள பல ஆயிரம் கோடி ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு விசாரணை கோரியும் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் சார்பில் தமிழகத்தின் பத்து நகரங்களில் கடந்த சில நாட்களில் ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது. இவற்றில் பல நூறு வழக்குரைஞர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். “சன் நியூசில் செய்தி வந்திருக்கிறதா அப்போதுதான் நம்புவேன். நீங்கள் வினவு நீயூசில் போட்டுக்கொண்டால் பெரிய்ய கட்சியாகி விடுவீர்களா? மெய்யுலகைப் பற்றித் தெரியாமல் மெய்நிகர் உலகில் திரியும் டிவிட்டன் என்றா நினைத்தீர்கள் என்னை?” என்கிறார் சுந்தர்.

ம.க.இ.க ஒரு பெரிய்ய கட்சி என்று நாங்கள் கூவித்திரியவில்லை. ஆனால் சுந்தர் போன்றோரின் பிரமிப்புக்கும் வழிபாட்டுக்கும் உரிய பெரிய்ய கட்சிகளோடு ஒப்பிட்டு எங்களை சிறிய கட்சி என்று சித்தரிப்பதையும் ஏற்கவில்லை.

குழப்பமாக இருக்கிறதோ? பச்சை மிளகாயை விட பூசணிக்காய் பெரியது என்கிறார் சுந்தர். நாக்கில் சொரணை இருப்பவர்கள் இந்த ஒப்பீட்டை ஆதரித்துப் பேச முடியாது என்று நாங்கள் சொல்கிறோம். இதான் மேட்டர்.

சுந்தர் எழுப்பிய கேள்வியை திருப்பிப் போட்டால் இந்தப் புதிருக்கு ஒருவேளை விடை கிடைக்கக் கூடும்.

பெரிய கட்சிகளின் இணையப் புலிகள் பயப்படுவது ஏன்?

தமிழகத்தின் மிகப்பெரிய கட்சிகள் என்று சுந்தர் கருதும் கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள், தமது மேலாண்மையை இணையத்தில் நிலைநாட்டாதது ஏன்? ம.க.இ.க என்ற சிறிய கட்சியின் ஆட்கள், பெரிய கட்சியைப் போன்ற பொய்த்தோற்றத்தை இணையத்தில் உருவாக்கிக் கொண்டிருக்கும் சூழலில், இளைஞர் அணி, மகளிர் அணி போல அந்த பெரிய கட்சிகள் இணைய அணி ஒன்றை உருவாக்கி, தங்களை விளம்பரப் படுத்திக் கொள்ளாதது ஏன்?

சுந்தர் இன்று கூறியிருக்கும் கருத்தை விடுதலை சிறுத்தைகளின் ரவிக்குமார் அன்றே கூறியிருக்கிறார். தமிழ்நாடு முழுவதும் எழுதப்பட்டிருக்கும் சுவரெழுத்துகளை வைத்துப் பார்த்தால் ம.க.இ.க தான் பெரிய கட்சி என்று பார்ப்பவர்கள் நினைத்துக் கொள்வார்கள் என்றார் ரவிக்குமார். அது அவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் எம்.எல்.ஏ ஆவதற்கு முன் தெரிவித்த கருத்து.

தமிழகத்தில் சுவர் விளம்பரத்தில்லும், டிஜிட்டல் பானர்களிலும் திமுக, அதிமுக வையெல்லாம் விஞ்சி நிற்பது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி என்பதை யாரும் மறுக்க முடியாது. அவற்றில் என்ன “கொள்கைகளை” எழுதியிருக்கிறார்கள் என்பதை ரவிக்குமாரால் இன்று விளக்கவும் முடியாது.

எல்லாக் கட்சிகளின் நிலையும் இதுதான். க-லை-ஞ-ர், அ-ம்-மா, தி-ரு-மா, அ-ய்-யா, சி-ன்-ன-ய்-யா, வை-கோ, கே-ப்-ட-ன்… இதுதான் கட்சி, இதுதான் கொள்கை. சுவரில் எழுதினாலும் பத்திரிகையில் எழுதினாலும், இணையத்தில் எழுதினாலும் மூணெழுத்து, நாலெழுத்து, ஐந்தெழுத்து மந்திரத்துக்கு மேல் யாரிடமும் எதுவும் கிடையாது. அப்புறம் என்னத்த எழுத?

பதிவுலகில் தி.மு.க, அ.தி.மு.க, பா.ம.க, சி.பி.எம், காங்கிரசு முதலான பெரிய்ய கட்சிகளைச் சேர்ந்த பதிவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களின் பதிவுகளில் கட்சி, கொள்கை சார்ந்த இடுகளைகளை தேடிக் கண்டுபிடிப்பது மென்மேலும் கடினமாகி வருகிறது.

இன்று குழலியிடம் பா.ம.கவையோ, லக்கிலுக்கிடம் தி.மு.கவையோ சஞ்செய் காந்தியிடம் காங்கிரசையோ அவர்கள் தற்போது எழுதுவதை வைத்து யாராவது கண்டுபிடிக்க முடியுமா? மாதவராஜ் கூட அரிதாகத்தான் அவரது கட்சி அரசியல் பார்வைகளை எழுதுகிறார். “சும்மா கூச்சப்படாதீங்க சார், அரசியல் பேசுங்க” என்று கூப்பிட்டாலும் முகத்தை மூடிக்கொண்டு ஓடும் நிலைதான் பல பேருக்கு.

கொஞ்சமாவது தனது அரசியல் சார்பை வெளிப்படுத்தும் சில பதிவர்களை விடுங்கள். எதிர்கவுஜைக்கெல்லாம் எதிர்க்கவுஜயும், மொக்கை முதல் மரண மொக்கை வரை எழுதுபவர்களுக்கு அரசியல் சார்பு இல்லையா? அல்லது அந்த நடுநிலை நாயகர்கள் தேர்தலில் ஓட்டு போடுவதில்லையா? தாங்கள் ஆதரிக்கும் கட்சியின் அரசியலை அவர்கள் எழுதக்கூடாது என்று நாங்களா தடுத்தோம்?

ஏன் எழுதுவதில்லை? சாதி மத வெறியை, பணக்கார மேட்டிமைத் தனத்தை, ஆணாதிக்கத்தை, அற்பவாதக் கருத்துகளை, தத்தம் கட்சிகளின் மக்கள் விரோதக் கொள்கைகளை நியாயப்படுத்த முடியாமல் கூச்சப்பட்டு அவர்கள் எழுதுவதில்லை என்றால்… கூச்சப்படத்தக்க அத்தகைய கருத்துகளையும் கட்சிகளையும் விட்டொழித்து வெளியே வாருங்கள் என்று அழைக்கிறோம்.

எழுத விரும்பினாலும் ம.க.இ.க கும்பலின் பதிலடியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்ற அச்சத்தின் காரணமாக எழுதுவதில்ல என்றால், தமிழ்ப் பதிவுலகில் அப்படியொரு தார்மீக அச்சத்தைத் தோற்றுவித்திருக்கும் எமது தோழர்கள் பலரின் பணி குறித்து பெருமைப்படுகிறோம்.

சிறுபான்மை, பெரும்பான்மை – எண்ணிக்கையில் அல்ல, பிரதிநிதிப்படுத்துவதில்!

இந்த ஹைட் பார்க்கில், பேசுவதற்கான சுதந்திரமும் வாய்ப்பும் இருந்தும் பேச மறுக்கின்றவர்கள், பேசுகிறவர்களைக் குற்றம் சாட்ட முடியாது. சுதந்திரத்தைப் பயன்படுத்திக் கொள்ளவும், நிலைநாட்டிக் கொள்ளவும் இயலாதவர்கள், சுதந்திரத்துக்கு தகுதியற்றவர்களாகி விடுகிறார்கள். மெய் உலகிலும், மெய் நிகர் உலகிலும் இதுதான் உண்மை.

வினவு தளமோ மற்ற பல ம.க.இ.க ஆதரவாளர்களோ, அவரவர் பாணியில் அவரவர் புரிதலில் எதை எழுதினாலும் அரசியல் சார்புடன்தான் எழுதுகிறார்கள். ஆனால் பதிவர்களோ வாசகர்களோ எம்மை ஒதுக்கவில்லை. உரையாடுகிறார்கள், வாதாடுகிறார்கள், இணைகிறார்கள்.

உலக முதலாளி வர்க்கத்தின் கொள்ளைக்காக நிதிமூலதனத்தையும், உற்பத்தியையும், உழைப்பையும் இணைப்பதற்குப் பயன்படும் இணையம், தொழிலாளி வர்க்கத்தை இணைப்பதற்குப் பயன்படக்கூடாதா என்ன? ம.க.இ.க சிறுபான்மைதான், ஆனால் நாங்கள் பிரதிநிதித்துவப் படுத்தும் வர்க்கம்தான் சமூகத்தின் பெரும்பான்மை – நாங்கள் தற்போது எண்ணிக்கையில் சிறுபான்மையாக இருந்தாலும், எங்களது எழுத்தில் பெரும்பான்மையின் உணர்வு இருக்கத்தான் செய்யும். நாங்கள் பெரும்பான்மை பெற்றாக வேண்டும். அதுதான் எம் நோக்கம்.

கூலிக்கு மாரடித்து சுய ஆளுமை இழந்து, வாழ்வின் சுவை இழந்து, அடையாளம் இழந்து, சமூக உறவுகளை இழந்து, அந்த இழப்புகளைச் சரிக்கட்டிக் கொள்வதற்காகவோ, ஆறுதல் தேடுவதற்காகவோ, ஆர்குட்டுக்கும் பேஸ்புக்கிற்கும் பிளாக்கிற்கும் நாங்கள் யாரும் வரவில்லை.

இணையம் வருவதற்கு முன் எங்கள் தோழர்கள் தூங்கிக் கொண்டிருக்கவில்லை. இரவெல்லாம் கண்விழித்து சுவரில் எழுதினோம். சினிமா போஸ்டரை எடைக்கு வாங்கி, அதன் பின்புறத்தில் எழுதி ஒட்டினோம். பிறகு பத்திரிகை துவங்கி அதிலும் எழுதினோம். இன்று இணையம்.

நாளை அனைத்தும் மூடப்படுமானால்… எதிரியின் முதுகிலும் எழுதுவோம். எழுதியிருக்கிறார்கள். ரசிய இலக்கியங்களைப் படித்துப் பாருங்கள். சுவர்களுக்கெல்லாம் போலீசு காவல் போட்ட தஞ்சை நகரத்தில், போலீசு வாகனத்தில் சுவரொட்டி ஒட்டியிருக்கிறோம். புதிய கலாச்சாரத்தின் பழைய இதழ்களைப் புரட்டிப் பாருங்கள்.

காழ்ப்புகளையும் மனச்சாய்வுகளையும் அகற்றிவிட்டுப் பார்க்கும்போதுதான் பெரிது சிறிது என்ற அளவுகோலின் அசட்டுத்தனம் புரியும்.

எது “பெரிய” திரைப்படம், டைட்டானிக்கா, பொடம்கின் போர்க்கப்பலா? கலாநிதி மாறனைக் கேட்டால், “சந்தேகமென்ன, டைட்டானிக் தான்” என்று பதிலளிப்பார்.

ஜ்யோவ்ராம் சுந்தரைக் கேட்டால் என்ன பதில் சொல்வார்?………..சந்தேகமாக இருக்கிறது.

 

  1. பூசணிக்காய் பெரிசா, பச்சை மிளகாய் பெரிசா – ஜ்யோவ்ராம் சுந்தர் ?…

    பிரமையில் சிக்குபவர்கள் நெட்டிசன்கள் மட்டும்மா, சிட்டிசன்கள் இல்லையா? சுந்தர்ஜியின் தத்துவஞான கேள்விக்கு ஒரு பதில்!…

  2. //பச்சை மிளகாயை விட பூசணிக்காய் பெரியது என்கிறார் சுந்தர். நாக்கில் சொரணை இருப்பவர்கள் இந்த ஒப்பீட்டை ஆதரித்துப் பேச முடியாது என்று நாங்கள் சொல்கிறோம். இதான் மேட்டர்//

    அப்ப, இந்த ஒப்பீட்டை ஆதரிப்பவர்கள் நாக்கில் சுரனையற்றவர்கள், இல்லையா? இதான் மேட்டர்…

    • // நாக்கில் சொரணை இருப்பவர்கள் இந்த ஒப்பீட்டை ஆதரித்துப் பேச முடியாது என்று நாங்கள் சொல்கிறோம். //

      இணைய நாட்டைமைக்கு சரியான சாட்டையடி….

  3. சரி, இவ்வளவு தூரம் புலம்பலுடன் நீங்கள் கிழித்ததை எல்லாம் பட்டியல் போடுறீங்களே,
    இதன் மூலம் என்ன சாதித்து கிழித்தீர்கள் அதை சொல்லுங்கப்பு..

  4. கம்யூனிசம் மட்டும் தான் மக்களுடன் நின்று போராடும். இதுதான் உலகின் மெய் நிகர் உண்மை. அறிவோ, எண்ணிக்கையோ அல்ல. சின்னதா பெரிதா என்பதல்ல.

    மக்களோ தங்கள் வாழ்வுக்காக போராடுகின்றனர். அவர்களுடன் யார் இணைந்து நிற்க தயாரில்லையோ, அவர்கள் இதைக் கண்டு புலம்புகின்றனர்.

    • Communism is another route to usurp power.

      Marx is the god and party is the math and it’s leaders are the senior poojaris.

      It is no different from a institutions like Hinduism, Islam, Christianity, DK brand Atheism or any other groups for that matter.

      Sole objective of it’s torchbearers is to garner power. Past history has just proved that.

      Claiming that past experiment is no proof to future promise; that true communism blossom only when the whole planet switch to communism is nothing but a hoax like Vijayakanth claiming that he’ll reveal his principles/policies only after people elect him.

      Instead, why not this concept be tried and tested in a small area as POC for everyone to get convinced?

      • மிஸ்டர் ரீடர் அவர்களே,
        அதிகாரம் பற்றிப் பேசாத இசம் உண்டா? ஒன்று கடவுள் அல்லது தனிமனிதனிடம் கட்டற்ற அதிகாரத்தை வழங்கும், துதிபாடும் இசங்களின் மத்தியில் அதிகாரம் பங்கிடப்படுதலையும், சமூக மயமாக்கப் படுதலையும் பேசியது கம்யூனிசம் போன்ற சமூக நோக்குள்ள இசங்கள். கம்யூனிசம் அதை நடைமுறையில் செயல்படுத்தவும் முனைந்தது.

        அதில் ஏற்பட்ட தவறுகள், பின்னடைவுகள், தவறான மனிதர்கள் என்கிற எல்லா விஷயங்களையும் தாண்டி கம்யூனிசத் தத்துவம் விஞ்ஞான பூர்வமாக வளர்ந்து வருகிறது.
        மற்றைய தத்துவங்கள் இத்தகைய அறிவியல் அனுகுமுறை இல்லாமல் மொன்னையாக நின்று விடுகின்றன. உலகளாவியத்தின் தவிர்க்கமுடியாத தோற்றத்தையும், அதன் போக்கையும் முன் கணித்தது மார்க்சியம் சார்ந்த அறிவியல் பார்வையே அன்றி மற்றவை அல்ல.

        விஜயகாந்த் போல யாரும் இத்தனாம் தேதி இத்தனை மணிக்கு உலக முதலாளிகளெல்லாம் அழிந்து தொழிலாளிகள் மட்டும் இருப்பார்கள் என்று சொல்லவி்ல்லை.

      • reader!
        what you claim has been answered adiquately by the next reply. you are just an epitom of that pathetically ediotic catagory, which knows what is the truth, but tries desperately to keep away from the truth. reason is simple. this catagory is not ready to leave the present[out of fear only! what else] for the fact it demands the daring task of oposing the existing system through collexctive sacrifices, which may not be immediately and personally rewarding. what is politics then, if not heading towards power? the distinction lies in its utilization and distribution. காய் அடிச்சா சங்கம்!! எழுதறதும் மாத்தி எழுதறதும் உங்களுக்கு சம்மந்தமே இல்லாத ஏரியா. நீங்க போய் tamilsex.comல எதாவுது உங்க விலைக்கு தகுந்த மாறி பாருங்க முடிஞ்சா பங்கேடுங்க. இது அடிக்கற இடமில்ல, படிக்கற இடம். நாளைக்கு உன்ன பாத்தேன், நாய் புடிக்கற vanல புடிச்சு கொடுத்துருவீன். அங்க என்ன பண்ணுவாங்கன்னு தெரியுமில்ல?????

  5. இணைய வாசிப்பாளர்களிடயே வினவின் வீச்சை நான் நன்கு உணர்ந்திருக்கிறேன், எனது தளத்தில் நான் எழுதியதை விட இங்கிட்ட பின்னூட்டத்திற்கு எனக்கு அதிக எதிர்வினையும், ஆதரவும் வந்திருக்கிறது!, ஆரோக்கியமான விவாதத்தை நடத்தி சொல்வதில் கூட வினவு சரியாக தான் செய்து கொண்டிருக்கிறது!

    சுந்தருக்கும், வினவுக்கும் எந்த வாய்க்கா தகராறும் கிடையாது, ஆனால் சில நாட்களாக டுவிட்டரில், பஸ்ஸிலும் புரச்சி புரச்சி என்று பலர் கிண்டலடித்து கொண்டிருப்பதை பார்த்து கொண்டு தான் இருக்கிறேன்!

    கருணாநிதியை கேள்வி கேட்டால் எப்படி அவரது தாங்கிகளுக்கு பொத்து கொண்டு வருதோ அதே போல் அவரவர் ஆதார்ஷநாயகர்களை கேள்விகுள்ளாக்கும் போது வருவது இயல்பு தான், ஆனால் அதை மன முதிர்ச்சியடைந்தவர்களும் செய்வது தான் அயர்ச்சி அளிக்கிறது!

    ஓரிரு விமர்சன கட்டுரைகளில் நானும் தான் வினவுடன் முரண்பட்டிருக்கிறேன், அதற்காக வனவின் முழுபணியையும் நிராகரிப்பது சிறுபிள்ளைத்தனம்!, தற்பொழுதுதெல்லாம் ஒட்டுமொத்தமாக வினவை நிராகரிப்போம் ரேஞ்சுக்கு தான் டுவிட்டுகள் வருது!, வினவின் தாக்கம் எதுவரை என்பதை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்!

    பார்பனீய எதிர்ப்பில் வினவின் ஈடுபாடு அனைவரும் அறிந்ததே! டோண்டுவும், அவரது சகாக்களும் ஆரம்பத்திலிருந்தே வினவுக்கு எதிரான போக்கை கடைபிடித்து வருகிறார்கள், ஆனால் பார்பனீய புத்தி தெரிந்த மக்கள் அதை சட்டை செய்வதில்லை என்பதும் அனைவருக்கும் தெரியும்!

    இதுவரை வெட்டியாக ப்ளாக்கில் தானும் பார்பனீயஎதிர்ப்பை காட்டி வந்த கழக தோழர்கள் மற்றும் அபிமானிகள் வினவின் முழுவீச்சுக்கும் பின் தோலுறிக்கப்பட்டு உண்மை தோற்றத்தை காட்ட நேர்ந்து விட்டது!, அடடே, ”இவன் காட்டியும் கொடுக்குறான், கூட்டியும் கொடுக்குறான்” என காது பட இணைய வாசகர்கள் பேசுவதை பொறுக்காத கழக அபிமானிகள் தம்மை நல்லவர்கள் போல் காட்ட தற்பொழுது ஆரம்பித்திருப்பது தான் வினவு எதிர்ப்பு!

    அவர்களை யாரும் புரட்சி பண்ண வாங்க, கொடி பிடிக்க வாங்கன்னு கூப்பிடல, இவர்கள் களத்தில் இறங்கி எதுவும் செய்வதுமில்லை, ஆனால் வாய் மட்டும் காது வரைக்கும் கிழியுது!, என்னைய கேட்டா பெர்மனண்டா கிழிச்சு விட்டா சரியாயிரும்னு சொல்லுவேன்!

  6. ஆஹா தெரிஞ்சிருந்தா நானும் லைக்கி இருந்துருப்பேனே

    வட போச்சே 🙂

  7. பிரியத்துக்குரிய சுந்தரை முன் வைத்து தோழர்களின் – அமைப்பின் – அர்ப்பணிப்பை வலையுலகை சேர்ந்தவர்களுக்கு புரிய, உணர வைத்த வினவுக்கு நன்றி.

    ‘2 வரி பஸ்ஸுக்கு இவ்வளவு பெரிய விளக்கமா?’ என பலர் கேள்வி கேட்கக் கூடும். அவர்களே சிந்தித்தால், இந்த இடுகை வெறும் 2 வரி பஸ்ஸுக்கு மட்டுமே அல்ல என்பதை உணர்வார்கள்.

    தோழமையுடன்
    பைத்தியக்காரன்

  8. ///லெட்டர்ஸ் டு எடிட்டர் அப்பாவுக்கும் WHAT THE F**K புத்திரனுக்கும் பாலம் அமைக்கும் முயற்சியில் எடை கூடிக்கொண்டே போகும் ஹிந்துவோ, …… மெய் உலகைப் பிரதிபலிப்பவையா?/////

    sheer hypocrisy from Vinavu. You have no qualms or shame in publishing various translated reports from The Hindu (for e.g by P.Sainath) here in this site. and yet you club the Hindu here with all the others and write sweeping statements.

    • //பால பாரதி, //

      இவரப் பத்தி சொல்ல வேண்டுமோ? செம்மொழி மாநாடு கண்ட புலவராயிற்றே?

    • அதியமான்
      கட்டுரையில உங்க ஃபேமசானா விக்கி லிங்க பத்தி எழுதியிருக்காங்க, அத விட்டுட்டு குண்டு இந்து பத்திரிகை பத்தி கவலப்படறீங்க?

      • விக்கி லிங்க்குளை விட பல இதர லிங்க்குகள் தான் அளித்திருக்கிறேன். ஒரு கருத்தை/ வாதத்தை வைத்தால், அதற்க்கு தகுந்த ஆதாரங்களை அளிப்பதே விஞ்ஞானபூர்வமான வாத முறை. அவற்றை முழுசா உள்வாங்கி மறுப்பு சொல்ல துப்பில்லாமல், வறட்டுதனமாக, புள்ளிவிவரம் அளிக்கிறார் என்று தொடர்ந்து one liner sweeping comments அளிக்கும் உம்மிடம் பேசுவது வேஸ்ட். (நான் என்ன விஜயகாந் பாணி புள்ளிவிவரமா அளிக்கிறேன்)

        சரி, வினவு மட்டும் புள்ளி விவரங்கள் அளிக்கலாம் ? அப்படிதானே ?

        சரி அப்பனே. நீங்க என்ன வேண்டுமான எழுதுங்க, நம்புங்க. 1991க்கு பின் இந்தியா சீரழிந்து, வறுமை மிக அதிகரித்துவிட்டது என்றும் எழுதுங்க. இப்ப என்ன ஆயிடப்போவுது. எனக்கு உருப்படியான வேலை நிறையா இருக்கு.

        • அய்யா அதியமான் நாலு பொருளாதார கட்டுரைகள் உங்கள் வரவுக்காக வெயிட்டிங்.. வாங்க சார் வாங்க சார்

    • மரபணு மாற்றம் செய்யப்படாத நெல்லிக்கனியை எனக்கு கொடுத்துவிட்டு மாண்டேசோவின் மரபணு மாற்றம் செய்யப்பட்ட நெல்லிக்கனியை தான் சாப்பிட்டு தியாகம் செய்த
      மாமன்னர் கொடைவள்ளல் அதியமான் அவர்களுக்கு ..

      //////////////////////////////////////////////////////////
      sheer hypocrisy from Vinavu. You have no qualms or shame in publishing various translated reports from The Hindu (for e.g by P.Sainath) here in this site. and yet you club the Hindu here with all the others and write sweeping statements.

      கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது , மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது என்றெல்லாம் பழமொழி தெரிந்த உங்களுக்கு எப்படி “சேற்றில் பூத்த செந்தாமரை “ பற்றித் தெரியாமல் போனது ?.
      அதி போல தான் சாய்னாத் சித்தார்த் வரதராஜன் போன்றவர்கள் ஹிந்து என்னும் சேற்றுக்குட்டையில் தப்பித்தவறி வந்த செந்தாமரைகள் ..
      ஆனால் தினமலர் என்ற மலக்குட்டையில் தினமும் காலையில் முங்கி எழுந்திருக்கும் சிலருக்கு இந்த வித்தியாசம் தெரிவது கஸ்ட்டம் தான் மன்னா .. நீங்க தினமலர் படிக்க மாட்டிங்க தானே ?.
      //////////////////////////////////////////////////////
      //////////////////////////////////////////////////////

  9. மிகப்பெரிய கட்சியாகவும், ஆளும் கட்சியாகவும் உள்ள முதல்வர் கலைஞரின் தலையை கொண்டு வந்தால் பரிசளிப்பேன் என்று ஒரு கிரிமினல் பேட்டி கொடுத்தப் போது என்ன செய்து கொண்டு இருந்தார்கள் திமுக தொண்டர்கள். சரி, தொண்டர்களை விடுங்கள், தலைவரின் பாசத்தால் கொஞ்சம் சொத்துகளையும், பதவியையும் கொண்டுள்ள இரண்டாம் கட்ட தலைவர்கள் என்ன செய்தார்கள்? இவ்வளவு பெரிய கட்சி இருந்தென்ன பயன்?

    • //மிகப்பெரிய கட்சியாகவும், ஆளும் கட்சியாகவும் உள்ள முதல்வர் கலைஞரின் தலையை கொண்டு வந்தால் பரிசளிப்பேன் என்று ஒரு கிரிமினல் பேட்டி கொடுத்தப் போது என்ன செய்து கொண்டு இருந்தார்கள் திமுக தொண்டர்கள். சரி, தொண்டர்களை விடுங்கள், தலைவரின் பாசத்தால் கொஞ்சம் சொத்துகளையும், பதவியையும் கொண்டுள்ள இரண்டாம் கட்ட தலைவர்கள் என்ன செய்தார்கள்? இவ்வளவு பெரிய கட்சி இருந்தென்ன பயன்?//

      வினவு இந்த போராட்டத்தையும், பெரியார் சிலை உடைப்பு போராட்டத்தையும் குறிக்காமல் தவறவிட்டுள்ளது. கலைஞர் கருணாநிதியின் தலைக்கு விலை வைத்த ஆர் எஸ் எஸ் காவிகளின் பார்ப்பனத் திமிரை அம்பலப்படுத்தி தமிழகம் முழுவதும் 80க்கும் மேற்பட்ட பொதுக்கூட்டங்களையும், பல பிரச்சார இயக்கங்களையும் நடத்தியது ம க இ க.

      பெரியார் சிலை உடைப்பில் பெரியாரின் அதிகாரப் பூர்வ கட்சிகளின் தலைமைகள்(அணிகள் அல்ல) பதுங்கிக் கிடந்த பொழுது, ம க இ க மட்டுமே(மற்றும் பெரியார் திக அணிகள் ) களத்தில் ஆர் எஸ் எஸ்டன் மோதியது.

  10. நாங்கள் இதை எல்லாம் சாதித்திருக்கிறோம்?! , எங்களை எப்படி ஏளனம் செய்யலாம் என்று நெஞ்சை நிமிர்த்துக் கேட்பதற்கு பதில், நாங்கள் எப்படி எல்லாம் கஷ்டப் பட்டு கட்சி வளர்க்கிறோம் பாருங்க.. எங்களைப் போய் இப்படி சொல்லிட்டிங்களே பாஸ் என்று அனுதாபம் தேடும் கழிவிரக்கமே அதிகமாக இருக்குங்க.

    • சஞ்செய் அண்ணே, நீங்க காங்கிரசுக் கட்சின்னும் உங்க கொள்கய பத்தி எழுத மாட்டேங்குறீங்கன்னு வினவு கவலபட்டு எழுதியிருக்காரு, அதுக்கு பதிலு சொல்லுங்க சார்

      • //சஞ்செய் அண்ணே, நீங்க காங்கிரசுக் கட்சின்னும் உங்க கொள்கய பத்தி எழுத மாட்டேங்குறீங்கன்னு வினவு கவலபட்டு எழுதியிருக்காரு, அதுக்கு பதிலு சொல்லுங்க சார்//

        அதான் அவருக்கு கழிவிரக்கம்னு பக்கத்துக்கு இலைக்கு பாயாசம் கேக்குற மாதிரி சூசகமா சொல்லிட்டாருல்லா, அப்புறமும் பிடிச்சி நோண்டுறீங்க… அவருக்கு வலிக்கப் போகுது…

      • என்னது காங்கிரசுக்கு கொளுகையா? விளயாடுறியா?

        யோவ் ரியல் என்கவுண்டர் கேக்கிறவன் காங்கிரசு காரனா இருந்தா கே.ஆர்.விஜயாவுக்கு ***************** ந்னு சொல்லுவ போல இருக்கே…

  11. என் பேரை சஞ்செய் (பதிவுல ), சன்ஜய்( டேக்ல ) என்றேல்லாம் சிதைக்காதிங்க பாஸ். சஞ்சய் காந்தி என்றே எழுதுங்க. 🙂

    • //SanjaiGandhi//

      பொதுமக்களுக்கு கட்டாய குடும்பக் கட்டுப்பாடு (குஞ்சான் கட்) ஆபேரேசன் செய்த பாசிச சஞ்சய் காந்தியின் பெயரில் உலாவும் இவருக்கு இந்த பதிவு கழிவிரக்கம் போல தெரிவதில் ஆச்சர்யமில்லை.

      உண்மையில் சுந்தரினுடைய டிவிட்டர் புலம்பலும் அதற்கு லைக் போட்ட கோவி, பாலபாரதி உள்ளிட்ட அல்லக்கைகளின் நடவடிக்கையும்தான் கழிவிரக்கமாக தெரிகிறது.

      • சுயமரியாதையுள்ளவன்,

        இந்தக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள பதிவர்களை நண்பர்கள் என்று அணுகியே விவாதிக்கலாமே? அல்லக்கை என்றோ பெயரின் பொருள் விளக்கமென்று எழுதுவதோ விவாதிப்பதற்கு பயனளிக்காது. மாற்றுக் கருத்துள்ளவர்களை சிந்திக்க வைப்பதே நம்முடைய வெற்றியாக இருக்குமே அன்றி அவர்களை விவாதித்திலிருந்தே அப்புறப்படுத்துவது போல பேசுவது பயனளிக்காது.

        • //அல்லக்கை என்றோ பெயரின் பொருள் விளக்கமென்று எழுதுவதோ விவாதிப்பதற்கு பயனளிக்காது. //

          விவாதிபக்கும் நோக்கம் எனக்கு இல்லை. புரோவோக் செய்வதே நோக்கமாகக் கொண்டு அவை எழுதப்பட்டுள்ளன. வினவிற்கு ஒப்புதல் இல்லையெனில் அவ்வகைச் சொற்றோடரை இங்கு பயன்படுத்தமாட்டேன் என்று உறுதியளிக்கிறேன். வேறு இடங்களில் செமத்தியாக வெளுத்துக்கட்டுவதற்கும் உறுதியளிக்கிறேன்.

          • தோழர் விவாதத்தின் உள்ளடக்கம்தான் முக்கியமே அன்றி வடிவம் அல்ல. உங்கள் விமரிசனம் எத்தகைய கூர்மையாகவும் இருக்கலாம். இருக்க வேண்டும். ஆனால் வடிவம் இணக்கமானதாக இருந்தால் நல்லது. மற்றவர்கள் நம்மை புரவோக் செய்தால் பதிலுக்கு நாம் விசயத்தை வைத்து மட்டும் பதிலளிக்கலாமே? பதிலுக்கு நாமும் உணர்ச்சிவசப்படுவதில் பலனில்லையே? இந்த விசயங்கள் உங்களுக்கும் தெரிந்திருக்குமென்று நம்புகிறோம்.

        • //கோவி, பாலபாரதி //

          இவர்களைப் பற்றி வினவு முன்வைத்துள்ள கீழ்கண்ட கருத்தான:
          //சிந்திக்க வைப்பதே நம்முடைய வெற்றியாக இருக்குமே//

          இது கொஞ்சம் தவறாக எடை போடப்பட்டது என்பதை மட்டும் பதிவு செய்து கொள்கிறேன். இவர்கள் கடைந்தெடுத்த பிழைப்புவாதிகள். சூழ்நிலையின் தேவைக்கேற்ப எந்த கலருக்கும் தமது தோலை மாற்றிக் கொள்ளத் தயங்காதவர்கள் என்பதே இத்தனை வருடங்கள் அமைதியாக ஒரு வாசகனாக பதிவுலகை கவனித்ததில் எனக்கு புரிய வந்துள்ளது.

          • நல்லது, நீங்கள் குறிப்பிட்டிருக்கும் சந்தர்ப்பவாதத்தை விசயம் என்ற வகையில் விளக்குவது சரியா, இல்லை அவர்களெல்லாம் கலரை மாற்றுபவர்கள் என்று மட்டும் மூடுவது சரியா?

        • //நல்லது, நீங்கள் குறிப்பிட்டிருக்கும் சந்தர்ப்பவாதத்தை விசயம் என்ற வகையில் விளக்குவது சரியா, இல்லை அவர்களெல்லாம் கலரை மாற்றுபவர்கள் என்று மட்டும் மூடுவது சரியா?///

          விளக்கலாம், அவற்றை அதன கோடுரமான(crude) தன்மையில் அம்பலப்படுத்தி வெட்கப்பட வைக்கலாம்(சொரனையிருந்தால்) அல்லது கோபப்பட வைக்கலாம்(பிழைப்புவாதமிருந்தால்).

          இவையணைத்துமே சாத்தியம்தான். இதன் வடிவம் என்பது தரவு, தர்க்க ரீதியான விளக்கமாக இருக்கலாம், அல்லது அந்தக் குறிப்பிட்ட விமர்சனத்துக்களாகும் பண்பு பற்றிய நேரடி நையாண்டி-வசவாகவும் இருக்கலாம். இதில் இரண்டாவதே தற்போது இவர்களுக்குச் சிறப்பாக இருக்கும் என்று பார்க்கிறேன். மேற்படி ‘மதிப்பு’வாய்ந்தவர்களுக்கு அவர்களின் ‘மதிப்பு’ என்னவென்பதை இப்படியும் புரிந்து கொள்ள வழியுண்டு அல்லவா?

          இதையும் அவர்கள் கொஞ்சம் சுவைக்கட்டும்.

          மற்றபடி விளக்கமாகவும் அவர்களை கேள்வி கேட்க்க வேண்டும் என்ற வினவின் கருத்தில் எனக்கு முழு ஒப்புதல் உண்டு.

    • ஆமாம் பாஸ் பெயரை சிதச்சு உட்கட்சி பூசல் பண்ணிடாதிங்க.
      ஏன்னா சஞ்செய் அப்படீங்கற பெயர்ல ஆத்தூர்ல ஒரு காங்கிரசு கோஷ்டி இருக்கு. சன்ஜய் அப்படீங்கற பெயர்ல மல்லிகை கரைல ஒரு கோஷ்டி இரூகு. சோ பெயர சரியா சொல்லுங்க பாஸு

  12. புள்ளிவிவரங்கள் தரும் முடிவுக்கு நேர் எதிரான முடிவை வியட்நாம் வழங்கியது எப்படி? பெரிய கட்சியை சின்னக் கட்சி வென்றது எப்படி? கோலியத்தை டேவிட் வீழ்த்தியது எப்படி?

    காழ்ப்புகளையும் மனச்சாய்வுகளையும் அகற்றிவிட்டுப் பார்க்கும்போதுதான் பெரிது சிறிது என்ற அளவுகோலின் அசட்டுத்தனம் புரியும்.

  13. ஹா ஹா ஹா ….வினவில் வரும் மிக தமாஷான பதிவுகளில் மிக மிக மிக தமாஷான பதிவு இதுதான்!

    இருபது வருடம் முன்னால ஊசிப்போன உப்புமா இதுன்னு எல்லோரும் கண்டுபிடிச்சு தூக்கிபோட்ட தரமற்றதை, தூசி தட்டி, உடலுக்கும் உள்ளத்திற்கும் நல்லது என்று பரிமாற துடிக்கும் ஒரு கும்பல். அதையும் பார்த்து தாக்கம் என்று சொல்லும் பகுத்தறிவு பரமார்த்த குருக்கள் சிலர்.

    கௌண்டமணி – எலேய் கேட்டுக்கோ ….ரஜினி, கமல் விஜய் அசித்து அப்புறம் நாந்தான்…
    செந்தில் – அண்ணே எப்படின்னே? நீங்க யாருன்னு யாருக்குமே தெரியாதுண்ணே?
    கௌண்டமணி -எலேய், நீ யாரு
    செந்தில் – உங்க சிஷ்யன்
    கௌ – உன் கூட சுத்துவானுன்களே, சொட்ட தலை, அரை டவசர், பல்லி முட்டை, அருவா பல்லன், அவுங்கெல்லாம் யாரு?
    செந் – என் சிஷய பயலுங்க ……….
    கௌ – அப்புறம் இந்த ஓட்ட வாயன், ஊசிபட்டாசு, தயிர் வட…இவங்க..
    செந் – என் சிஷ்யர்களோட சிஷ்யர்கள்……
    கௌ – ஆகமொத்தம்…
    செந் – உங்க சிஷ்யர்கள்…
    கௌ – என்ன அவனுங்களுக்கு தெரியுமில்ல
    செந் – அண்ணே என்ன எப்படி கேட்டுட்டீக? நீங்கதாங்க எங்க வழிகாட்டி…எவ்வளவு பேசுவீக… நாய்க்கு நாக்கு தேவையான்னு அறிவுரை எல்லாம் எங்களாண்ட செய்திகளே…..மறப்போமா?? நீங்கன்னா எங்களுக்கு ஒரே தாக்கமுங்க….உங்கள கண்டாலே ஒரு இதுங்க….
    கௌ – எதுங்க??
    செந் – அதாங்க ஒரு மதிப்புங்க, அதான் நம்ம பல்லி முட்டையனோட தம்பி அரணாக்கயிறு அண்ணாசாமி இருக்கானுல்ல, அவன் உங்கள பார்த்துதான் சாப்பிடவே கத்துகினான்….அவ்வளவு மதிப்பு..தாக்கம் உங்க மேல….ரெண்டு வயசிலையே சிக்கன் பிரியாணி துன்னுரான்னா அதுக்கு நீங்கதாண்ணே காரணம்….
    கௌ – இப்போ புரியுதா ஐயா எவ்வளவு வெய்டுன்னு? உங்கள மாதிரி பயலுகளுக்கு ரஜினி கமலுக்கு அப்புறம் நான்தானே??
    செந் – சந்தேகமே இல்லேண்ணே….

    கௌண்டமணி – அப்போ சொல்லு யானை லத்தி பெரிசா பூனை புழுக்கை பெரிசா?

    • அதானே பாத்தேன் 20 வருசமுன்னால தூக்கிகடாசின கம்மூனிசத்தை எதுத்து முக்கி முக்கி கிழிய கிழிய ரத்தம் வழிய வழிய எதிர்வினையாற்றும் நோ இன்னும் வரிலயேன்னு! ஒரு தர்க்கத்துக்காவாவது இதிலிருக்கும் விசயத்தை எடுத்து பேசியிருக்கலாம் ஆனா அது கூட முடியாம ஒரு புலம்பல்.. இரும்புதிறை அரவிந்துக்கு அடுத்த மாபெரும் சிறிப்பு போலிஸ் நோ.. நீதான்யா..

        • நான் நல்லாயிருஃக்கேண்ணே.. நீங்க சவுக்கியம்தானே ! உங்க விவாதத்தையெல்லாம் படிச்சிகிட்டுத்தான் இருக்கேன்…

  14. தேவையான பதிவு.

    தமிழ் இணையச்சூழலில் வினவின் வரவு ஒரு முக்கியமான நிகழ்வு.

    இதைச் செரித்துக்கொள்ள முடியாமலிருப்பது தான் பலருக்குப் பிரச்சினை.

    இணையம் என்பது பெரிய பொய் பரப்பும் ஊடகமாக மாறிவருகிறது என்று இணையத்தின் தந்தை என்று கருதப்படும் Tim Berners-Lee குறிப்பிட்டிருந்தார்.

    இணையத்தை அதிகாரம் செயும் “பிரபல” தளங்கள் தம் எண்ணிக்கையை அவித்தும் SEO எனும் மாய்மாலத்தை வைத்தும் தம் வர்க்கம் சார்ந்த பொய்களையே இணையமாக்கி வருகின்றனர்.

    ஆனால் தமிழ்ச்சூழலில் இவ்வாறான பெரும் முதலீட்டுடன் கூடிய பொய்பரப்பு தளங்கள் இல்லாமலே, மிகுந்த தாக்கம் தரக்கூடிய வினவு போன்ற தளங்கள் மாற்றுக்கருத்துக்களை, ஒடுக்கப்படுவோர் சார்பான கருத்துக்களை பிரபலமடையச் செய்தவண்ணமிருக்கின்றன.

    வினவு அதில் ஒரு முக்கிய குறியீடு.

    தமிழ் இணையச்சூழலில் இது ஒரு சிறப்பான நிலமை.

    இதனைச்சாத்தியப்படுத்திய தளங்களில் வினவுக்கு ஒரு முக்கிய இடம் உண்டு.

    (கூடவே தமிழரங்கம், தமிழ்மணம் தளத்தின் முற்போக்கான சார்புநிலை போன்றவற்றையும் பட்டியலிடலாம்)

  15. வினவை புறக்கணிக்க வேண்டும் என்பன போன்ற கருத்துக்கள் நெடு நாளாகவே வலம் வந்து கொண்டிருக்கின்றன. இதை பிரபலமாகி விட்டதனால் ஏற்பட்ட காழ்ப்பு என பலர் புரிந்துகொண்டிருக்கிறார்கள். அவ்வாறில்லாமல் இவை வினவின் உள்ளீட்டின் காரணமாகவே செய்யப்படுகின்றன.

    இது இன்னும் அதிகமாகவே வரும் காலங்களில் தொடரும். அதை எதிர்கொள்ள நாம் ஆயத்தமாக வேண்டும்.

    செங்கொடி

  16. வினவின் வீச்சை கண்கூட பார்த்திருக்கிறேன். சினிமா, மொக்கைகள், கவர்ச்சி என்று போய் கொண்டிருந்த்வர்கள், வெளிப்படையான அரசியல் பேச முன் வரதாவர்கள் கூட ‘கம்யுனிஸம் தேராது’ என்று வெளிப்படையாக‌ ‘கம்யுனிஸ எதிர்ப்பு என்கிற’ நிலையை வெளிப்படச் செய்ததே கூட வினவின் சாதனை தான்.திட்டுவதன் மூலம் அவர்கள் கருத்து சுதந்திரத்தை அவர்களுக்கு உணர செய்திருப்பது.

    விவாத்ங்கள் தொடரலாம், ஆனால் உண்மையாகவும், வெளிப்படையாகவும் இல்லாமல் உள்நோக்கத்துடன் எதிர்ப்பவர்கள் தான் கத்தி சுத்துகிறார்கள்.. அவர்களை புறந்தள்ளிவிடுவது நலம்..

    வினவின் பயணம் தொடரட்டும்..

    • தோழர்கள் செங்கொடி மற்றும் அக்னிபார்வையின் கருத்துக்கள் மிகச் சரியானவை. வினவின் தொடர் செயல்பாடுகள் பதிவுலகின் செயல்பாடுகளை கான்சியசானதாக மாற்றியுள்ளது. அப்பாவிகள் என்று யாரும் வேடமிட்டுக் கொள்ள இயலாது என்ற நிலையை வினவின் செயல்பாடுகள் உருவாக்கியுள்ளன. ஏதுமறியா அப்பாவி நல்லவர்களாக இதுவரை இருந்தவர்களும் தமது நிலைப்பாடுகளில் நின்று பேச வேண்டிய நிர்பந்தம் உருவாகியுள்ளதே வினவின் மீது இது போல அற்பவாத கண்டனங்களை பதிவு செய்வதும், புறம் பேசுவதும், கிசு கிசு புரளி பேசும் இழிசெயலுக்கும் சிலரை, சில குழுக்களை உந்திச் செலுத்தியுள்ளது.

      நிலைப்பாடு ஏதுமின்றி கலை உலக புனித பூமியில் ஊஞ்சலாட பிரியப்படும் அமைதி விரும்பிகளுக்கு மெய் உலக அக்கப்போர்கள் கடுப்படிக்கவே செய்யும்.

      மெய்நிகர் உலகின் அப்பாவித்தனத்தை கலைக்க வேண்டும் என்பதாக வினவு தனது இணையப் பிரவேசம் குறித்த அறிமுகப் பதிவில் சொல்லியிருந்ததாக ஞாபகம். அதை சாதித்துள்ளதற்கு இது போன்ற எதிர்வினைகள் ஒரு அறிகுறி.

  17. வினவின் பல்வேறு விவாதங்களில் ம க இ க வின் தனித்தனியான இயக்கங்கள் குறித்து செய்திகள் வாசகர்களால் படிக்கப்பட்டிருக்கின்றன ஆனால் இயக்கம் எந்த சூழலில் எவ்வாறெல்லாம் செயபடுகிறதென்று சுருக்கமாக இக்கட்டுரை விளக்கியுள்ளது. மேலும் விமர்சனங்களின் போது வரும் எதிர் விமர்சனங்கள் எவ்வாறு மேன்மேலும் விவாதத்தை வளப்படுத்தும் வகையில் அமைய வேண்டும் என்று வினவு தலையிட்டு நெறிமுறைப் படுத்துவது அதன் கருத்து முதிர்ச்சியை வெளிப்படுத்துகிறது. வினவுக்கு தோழமை வாழ்த்துகள். பு ஜ வின் செயல்பாடு குறித்த பதிவுகளுடன் எனது வாழ்த்துக் கவிதை ஒன்றை வினவுக்கு மின்னஞ்சல் மூலம் விரைவில் அனுப்ப முயல்கிறேன். நன்றி.
    பாவல்

  18. நல்ல பதிவு.

    நான் வினவுவின் பதிவுகளை காண்பதற்கு முன் வேறு பதிவர்களின் கமெண்ட்ஸ் பகுதில் வினவுவை பற்றி கேவலமான பதிவுகளால்தான்… வினவு பற்றி தெரிந்தது. இவர்கள் முலமாக இன்னும் பலர் வினவுவை பற்றி தெரிந்து கொள்வார்கள்.

  19. வினவு,

    நான் அவர்களில் சிலரைக் குறிப்பிட்டு கடுமையான வார்த்தைப் பிரயோகம் செய்ததை கண்டித்தீர்கள். அது உங்களது ஜனநாயக உணர்வை வெளிப்படுத்தியது. ஆனால், அந்த அவர்கள் இதோ இப்போது வரை தாம் சொன்ன கருத்து குறித்தோ அல்லது வினவு கட்டுரை குறித்தோ எதுவுமே பதிவு செய்யவில்லை.

    அதுவும் பாலபாரதி போன்றோர் எப்போதுமே மலைமுழுங்கி கள்ளன்களைப் போலவே கருத்துத் தெரிவிப்பவர்கள் இந்த விசயத்திலோ எங்கிருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. இவையெல்லாம்தான் அவர்கள் மீது மிக மிக மோசமான அவநம்பிக்கையையும், மரியாதைக் குறைவையும் ஏற்படுத்துகின்றன. தமது கருத்தைக் கூட தைரியமாக வைத்து வெளிப்படையாக விவாதிக்கும் ஜனநாயகப் பண்பு இன்றி ஒரு திருடனைப் போல கருத்துத்தளத்தில் செயல்படும் இவர்களைப் போன்றவர்கள்தான் பதிவுலக முன்னுதாரணங்களாக, நாட்டாமைகளாக, ‘தல’களாக வலம் வருகின்றனர் என்பது என்னைப் பொறுத்தவரை அவமானகரமானது என்று கருதுகிறேன். (இதில் எதுவும் அவர்கள் மீது தனிப்பட்ட வசவுகள் இல்லை என்றே கருதுகிறேன். அப்படி இருப்பதாக வினவு கருதினால் பின்னூட்டத்தை வாபஸ் வாங்கிக் கொள்கிறேன்).

    வினவு பற்றி சுந்தர் டிவிட் செய்துள்ள கருத்து சரி என்று கருதினால் அதை வெளிப்படையாக பேச வேண்டியதுதானே? ஏன் கள்ளத்தனமாக அங்கு லைக் போட்டுவிட்டு இங்கு பொதுவெளியில் தலைமறைவாகத் திரிய வேண்டும்? அப்படியானால் அவர்களின் அந்த ‘லைக்’கில் எந்த உண்மையும் இல்லையென்பதும், அது காழ்ப்புணர்ச்சி அல்லது ஏதோவொரு கடுப்பிலிருந்து வந்தது என்பதும் அவர்களுக்கே தெரியும் என்பதுதானே உண்மையாக இருக்க முடியும்? இப்படி சிந்தனையும், செயலும் முரன்பட்டு இரட்டைகளாக இருப்பவர்களை என்னவென்று சொல்வது?

    தோழமையுடன்,
    சுயமரியாதையுள்ளவன்.

    • சுயமரியாதைக்காரன் பின்னூட்டத்தை கன்னாபின்னாவென ஆதரிக்கின்றேன்.. அப்படியே குழலி மற்றும இன்னபிற ‘மூத்த’ பதிவர்களை பற்றியும் எனைப்போன்ற இளையவர்களுக்கு சொல்லி வழிகாட்டவும்..

    • //ஏன் கள்ளத்தனமாக அங்கு லைக் போட்டுவிட்டு இங்கு பொதுவெளியில் தலைமறைவாகத் திரிய வேண்டும்? //

      இங்க வினவுல வந்து கமெண்ட் போடலைன்னா அது தலைமறைவா சுயமரியாதைக்காரன்….???

      அப்ப வினவை விமர்சித்து மற்றவர்கள் எழுதும் பதிவில் நான் உங்கள் கமெண்டை பார்க்கவில்லையே….. நீங்கள் ஏன் தலைமறைவாகவே இருந்தீர்கள்??

      • //இங்க வினவுல வந்து கமெண்ட் போடலைன்னா அது தலைமறைவா சுயமரியாதைக்காரன்….???//

        அவுங்க இங்க கமெண்டு போடுவதைக் குறிப்பிட்டா சொல்லியிருந்தேன்?

        வினவின் பதிவுக்கோ அல்லது லைக் போட்டது பற்றியோ அவர்களது தளத்தில் பதில் சொல்லவில்லை, எதிர்வினை இல்லை என்பதைத்தானே குறிப்பிட்டிருந்தேன்?

        அதைச் செய்வதற்கு தடுத்தது யார் அல்லது எது?

  20. இங்கே வினவுக்கு எதிராக பின்ணூட்டம் இடும் எவரும் பச்சை மிளகாய் பெரிதா பூச்ணிக்காய் பெரிதா என்பதற்கு மட்டும் பதில் சொல்ல மறுக்கிறார்கள். மைய்ய கருத்துக்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ தன்னுடைய பதிலை தெரிவிக்காமல் நழுவிச் செல்கிறார்கள். காரண்ம் ஒன்றும் அல்ல தம்முடைய அரசியலை வெளிப்படையாக விவாதத்தில் வைப்பதில் உள்ள அச்சம் தான உள் நோக்கம் “கீழே விழுந்தாலும் மீசையில் ம்ண் ஒட்டி வெளியே தெரிந்து தம் சுய கவுரவத்துக்கு இழுக்கு வந்து விடக் கூடாது” என்பதில் கவனமாக இருக்கிரார்கள் என்பது வெளிச்சமாக தெரிகிறது.

    • கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது. மூர்த்தி சிறிதானாலும், கீர்த்தி பெரியது. இவை ம.க.இ.க விற்க்கு பொருந்தும். இக்கட்டுரையில் மையக்கருத்து சரிதான்.

      ஏதோ ஒரு off the cuff commentக்கு இத்தனை பெரிய எதிர்வினை தேவையா ?

      எல்லாம் சரிதான். ஆனால் ம.க.இ.க தோழர்கள் பல சமயங்கள் தப்பான, தேவையில்லாத போராட்டங்களில் தங்கள் சக்தியை வீணடிக்கிறார்கள்.
      (ரூம் போட்டு யோயிப்பாங்களோ !!). லீனா மணிமேகலை விவகாரம், குமுதம், பிறகு Dow Chemicalsக்கு எதிரான ஆர்பாட்டங்கள். Dow Chemicalsஅய் தமிழ்நாட்டை விட்டு வெளியேறு என்பது விவேகமா ? ஆந்திராவிற்க்கு அவர்கள் சென்றுவிட்டால் ஓகேயா ? நஸ்ட ஈடு மேலும் அளி என்று போராடினால் அர்த்தமுண்டு. ஆனால் தமிழ்நாட்டைவிட்டு விரட்டி விட்டால் நியாயம் கிடைத்துவிடுமா ? same with Reliance Fresh, which now continues without much protests or ripples. same with Monsato cotton which now successfully used all over India with good results. (otherwise farmers would be up in arms by now).

      அதே போல் தான் குமுததிற்கு எதிரான் ஆர்பாட்டம். நித்யானந்தா குமுதத்தில் எழுதிய தொடர் கட்டுரையில் ஆட்செபத்திற்க்கு உரிய பகுதிகள் எதையும் இதுவரை எடுத்துக்காட்ட முடியவில்லை.

      உங்களின் உண்மையான எதிரிகள் இவர்கள் அல்ல. போலிகளும், ஊழல் வாதிகளும் தான். SRMU சங்க தலைவர் கண்ணையா சுமார் 500 கோடிகள் சேர்த்திருப்பதாக சொல்கிறார்கள். அவர் ஒரு தொழிலாளர் தலைவர். ரயில்வேயை ஆட்டுவிப்பவர். அவரை போன்றவர்கள் தான் உண்மையில் ‘எதிரிகள்’.

      • மரபணு மாற்றம் செய்யப்படாத நெல்லிக்கனியை எனக்கு கொடுத்து விட்டு மரபணு மாற்றம் செய்யப்பட்ட மாண்டெசோவின் நெல்லிக்கனியை தான் சாப்பிட்ட மாமன்னர், கொடைவள்ளல் K.R.Athiyamanனுக்கு ..

        ////////////////////////////////////////////////
        கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது. மூர்த்தி சிறிதானாலும், கீர்த்தி பெரியது. இவை ம.க.இ.க விற்க்கு பொருந்தும். இக்கட்டுரையில் மையக்கருத்து சரிதான்.

        ///////////////////////////////////////////////////////
        ஹலோ நீங்க ஒரிஜினல் அதியமான் தானே ..
        வினவு கொஞ்சம் ஐ.பி. செக் பண்ணுங்க …
        அப்படி உண்மையாக இருந்தால் …
        விரைவில் அதியமானை தோழர்.அதியமான் என்று அழைக்கலாம் என்று நினைக்கிறேன். 🙂

        //////////////////////////////////////////////////////
        ஏதோ ஒரு off the cuff commentக்கு இத்தனை பெரிய எதிர்வினை தேவையா ?
        ////////////////////////////////////////////////////

        சின்ன குழந்தை தானே ஆய் போயிருக்குன்னு அப்படியே விட்டுட முடியுமா மன்னா ?.. பினாயில் போட்டு கழுவ வேண்டுமா இல்லையா ?..

        /////////////////////////////////////////////////

        எல்லாம் சரிதான். ஆனால் ம.க.இ.க தோழர்கள் பல சமயங்கள் தப்பான, தேவையில்லாத போராட்டங்களில் தங்கள் சக்தியை வீணடிக்கிறார்கள்.
        (ரூம் போட்டு யோயிப்பாங்களோ !!). லீனா மணிமேகலை விவகாரம், குமுதம், பிறகு Dow Chemicalsக்கு எதிரான ஆர்பாட்டங்கள். Dow Chemicalsஅய் தமிழ்நாட்டை விட்டு வெளியேறு என்பது விவேகமா ? ஆந்திராவிற்க்கு அவர்கள் சென்றுவிட்டால் ஓகேயா ? நஸ்ட ஈடு மேலும் அளி என்று போராடினால் அர்த்தமுண்டு. ஆனால் தமிழ்நாட்டைவிட்டு விரட்டி விட்டால் நியாயம் கிடைத்துவிடுமா ?

        ///////////////////////////////////////////////////////

        முதலில் லீனா மணிமேகலை விவகாரம் ..

        மாமன்னர் கொடைவள்ளல் அதியமான் அவர்களே ..
        உங்கள் மானசீகத் தலைவர்கள் , உங்கள் முதலாளித்துவ சீமான்களான திரு.பில்கேட்ஸ், திரு. அம்பானி குடும்பத்தார்கள் , டாட்டா பரிவாரங்கள்
        போன்றவர்களை நாங்கள் திட்டினால் கூட உங்களுக்கு கோபம் வராது . ஏன்னா உங்களுக்கே தெரியும் இவனுங்களாம் எப்படி ஊரை அடிச்சி உலையில் போட்டானுங்கன்னு ..
        ஆனால் உலகத்தின் அனைத்து பாட்டாளி வர்க்க சமூகத்திற்காகவும் தனது வாழ்நாளை அர்ப்பணித்த மாமேதைகளான மார்க்ஸ், ஏங்கெல்ஸ்,லெனின் போன்றோரையும் அவரது கண்டுபிடிப்பான உபரி மதிப்பையும் பற்றி கேவலமாக பேசினாலோ , கவுஜை எழுதினாலோ ம.க.இ.க விற்கு கோபம் வரும் .. ஏனெனில் உண்மையான மனிதனுக்கு தெரியும் மனித குலத்திற்கு அந்த தலைவர்களின் பங்களிப்பு எவ்வளவு பெரிது என்று ?..

        அடுத்து டௌ கெமிக்கல்ஸ் விவகாரம்..

        நாங்கள் டௌ கெமிக்கல்ஸை தமிழகத்தை விட்டு வெளியேறு என்று கூறவில்லையே…
        அமெரிக்க டௌவே வெளியேறுனு சொன்னதை உங்கள் இஸ்டத்துக்கு மாற்றக் கூடாது. அவன் நிறுவனத்துக்கு எதிரான போராட்டம் தான் அது. அந்தக் கொலைகாரன் இந்திய மக்களை கொன்று விட்டு இந்தியாவில் மீண்டும் கோலோச்சுகிறான் என்பதை எதிர்த்து தான் வாசகங்கள் எழுத்தப்பட்டிருந்தன .. நீங்கள் கவனிக்கவில்லை என்று நினைக்கிறேன் ..
        என்ன மன்னா .. உங்களுக்கு பிளேட் மாற்றக் கூட தெரியவில்லை .. இப்படி அம்பலமாகிவிட்டீரே … இன்னும் நிறைய பயிற்சி தேவை .. நெல்லிக்கனியை எனக்கு கொடுத்து விட்டீர் .. ஹார்லிக்ஸ் சாப்பிடுங்கள் .. இன்னும் வளரனும் தம்பி ..

        ///////////////////////////////////////////////////////

        same with Reliance Fresh, which now continues without much protests or ripples. same with Monsato cotton which now successfully used all over India with good results. (otherwise farmers would be up in arms by now).
        ///////////////////////////////////////////////////////

        என்ன செய்வது மன்னா ?.. ரிலையனிஸ் ஃப்ரெஸ்ஸிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தோம்.. பரப்புரைகள் பல செய்தோம்.. இன்னும் பல மானங்கெட்டவர்கள் அங்கு போய் வாங்கிக் கொண்டு தான் இருக்கிறார்கள்.. என்று உங்களைப் போன்று முதலாளிகளை இந்தியாவைக் காக்க வந்த தெய்வமாக இந்த மக்கள் பார்க்க மறுக்கிறார்களோ அன்று தான் எங்கள் போராட்டங்களுக்கு பலன் கிடைக்கும் நாள். ஆனால் போராட்டங்கள் என்றும் ஓயாது. உள்நாட்டு ஏக போகிகளுக்கும் தரகு முதலாளிக் கும்பலுக்கும் எதிரான எமது எதிர்ப்பை நாங்கள் குறைக்கப் போவதும் இல்லை.

        மான்சண்டோ பருத்தி.. மன்னா நீங்கள் அடிக்கடி மங்குனி மன்னர் என்று நிரூபித்து விடுகிறீர் போங்கள் .. கடந்த பத்து ஆண்டுகளில் விதர்பாவில் மட்டும் 2 லட்சம் விவசாயிகள் அந்த பருத்தியைப் போட்டதனால் கடன் வந்து தற்கொலை செய்து கொண்ட கதை தெரியாதா ?.. இல்லை உங்களுக்கு சஞ்செய் ராமசாமி போல சார்ட் டெர்ம் மெமரி லாஸ் இருக்குதா ?.. அந்த மான்சன்டோ நிறுவனமே .. இரண்டாவது மற்றும் அதற்கு பிந்தைய வெர்சனில் செய்த சில மாற்றங்கள் காரணமாக அந்த விதைகளின் செடிக்கு அதிக தண்ணீர் தேவைப் படுவது உண்மை என்று ஒப்புக் கொண்டிருக்கிறான்.
        கையில் ஆயுதம் தூக்கக் கூட திராணியில்லாத விவசாயிகள் தற்கொலை தான் செய்தனர்.
        சரி மன்னா .. காட்டிற்கு செல்லும் போது பார்த்து செல்லுங்கள் மான்சாண்டோவின் மரபனு மாற்றம் செய்யப்பட்ட நெல்லிக் கனி ஏதாவது இருந்தால் எடுத்து வந்து தொலையப் போகிறீர்கள் …

        /////////////////////////////////////////////////////////

        அதே போல் தான் குமுததிற்கு எதிரான் ஆர்பாட்டம். நித்யானந்தா குமுதத்தில் எழுதிய தொடர் கட்டுரையில் ஆட்செபத்திற்க்கு உரிய பகுதிகள் எதையும் இதுவரை எடுத்துக்காட்ட முடியவில்லை.

        //////////////////////////////////////////////////////

        குமுதம் ஒரு கேவலமான பத்திரிக்கை என்பது ஒரு புறம் இருக்கட்டும் . இந்த நித்யானந்தா மாதிரி சொறி நாய்கள் மற்றும் சக்கிதேவ், கல்கி இன்னும் பல பொறுக்கிகள் போன்றொரை மக்களிடம் அதிகமாக கொண்டு போய் சேர்ப்பது எவன் ?.. இந்த குமுதம் போன்ற பத்திரிக்கைக் காரன் தான் .. பின்னர் அந்த நாய்கள் அம்பலமான பிறகு அவர்களை வைத்து எழுதி காசி சம்பாதிப்பதும் இந்த பொறுக்கிகள் தான் ..

        ஆக இவர்கள் ஒரு படத்தில் நகைச்சுவையில் வரும் விவேக்கைப் போல் காட்டியும் கொடுக்கிறார்கள் .. கூட்டியும் கொடுக்கிறார்கள் ..

        நம்ம சாரு நிவேதிதா , விசு போன்றோர்கள் கூட அந்த வேலையை செய்தார்கள் ..

        இடைத்தரகர்களுக்கு எதிராக அவர்களை அம்பலப்படுத்தி போராட்டம் நடத்துவது தவறில்லை மன்னா .. பேப்பரில் கூட பார்த்திருப்பீர்களே .. செல்போன் அழகிகள் கைது .. கூடவே நம்ம குமுதம் போன்ற மாமாக்களும் அந்த போட்டோவில் இருந்திருப்பார்கள் .. நன்றாக ஞாபகப் படுத்திப் பாருங்கள்.

        //////////////////////////////////////////////////////

        உங்களின் உண்மையான எதிரிகள் இவர்கள் அல்ல. போலிகளும், ஊழல் வாதிகளும் தான். SRMU சங்க தலைவர் கண்ணையா சுமார் 500 கோடிகள் சேர்த்திருப்பதாக சொல்கிறார்கள். அவர் ஒரு தொழிலாளர் தலைவர். ரயில்வேயை ஆட்டுவிப்பவர். அவரை போன்றவர்கள் தான் உண்மையில் ‘எதிரிகள்’.

        //////////////////////////////////////////////////////

        அப்படியா ?.. சரி … மன்னா அவனை நாம் கவனித்துக் கொள்ளலாம் .. அதற்கு முன்னால் மக்களை கொன்று கொண்டிருக்கும் முதலாளிகளை என்ன செய்யலாம் என்று உத்தரவிட்டீர்கள் எனில் எங்களுக்கு இன்னும் வசதியாக இருக்கும் மன்னா …

        மன்னா சாக்கிரதையாக போங்கள் .. மான்சாண்டோவின் நெல்லிக் கனியை வாங்கி விடாதீர்கள் ..

        இப்படிக்கு,
        – தங்களிடம் மரபணு மாற்றம் செய்யப்படாத நெல்லிக்கனியை வாங்கி சாப்பிட்ட அவ்வை .

        • //கடந்த பத்து ஆண்டுகளில் விதர்பாவில் மட்டும் 2 லட்சம் விவசாயிகள் அந்த பருத்தியைப் போட்டதனால் கடன் வந்து தற்கொலை செய்து கொண்ட கதை தெரியாதா ?.///

          false. the sucides were not due to GM cotton. various other factors and many non-GM cotton farmers too committed sucides due to debts, failure of rains, etc.

          Monsota cotton is successfully now cultivated in our own TN continiously. there were some issues of failure at one period, but so far no one has abandoned monstato. try to look beyond your short sighted nose.

          and i read about the slogan “Dow Chemicalse thamizagathai vittu veziyeru” from Vinavu post about the protest. ok.

        • //என்ன செய்வது மன்னா ?.. ரிலையனிஸ் ஃப்ரெஸ்ஸிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தோம்.. பரப்புரைகள் பல செய்தோம்.. இன்னும் பல மானங்கெட்டவர்கள் அங்கு போய் வாங்கிக் கொண்டு தான் இருக்கிறார்கள்.. ///

          many readers of the post too must be customers of Reliance Fresh. they can answer this better. but my point was about the stupid and paranoid agitation some years ago against Rel fresh, that it would kill the local grocery stores of nadars. so far the small stores continue as usual. hence this proves that you most of your assumptions and fears about MNCs and Indian giants are wrong and irrational. ok.

        • false. the sucides were not due to GM cotton. various other factors and many non-GM cotton farmers too committed sucides due to debts, failure of rains, etc.
          Monsota cotton is successfully now cultivated in our own TN continiously. there were some issues of failure at one period, but so far no one has abandoned monstato. try to look beyond your short sighted nose.
          /////////////////////////////////////////////////////

          மன்னா .. என்ன மன்னா .. விவரம் தெரியாம பேசிட்டு இருக்கீங்க .

          உங்களிடம் இருந்து நெல்லிக்கனி பெற்ற நான் உங்கள் பாணியிலேயே பதில் சொல்வதில் தவறில்லை என்று நினைக்கிறேன்.

          மான்சாண்டோவின் பருத்தியின் விளைவை பற்றி அறிவியல் பூர்வமான ஒரு அறிக்கைக்கு லின்க் கொடுத்துள்ளேன் . பார்த்து படித்து தெரிந்து கொள்ளவும் ..
          னீங்களும் உங்களோட சார்ட் சைட்டட் நோஸுக்கு தாண்டி லுக்க பழகிக்கோங்க .

          விதர்பா கொடூரத்தை பற்றிய தனி வலைப்பூ:
          http://vidarbhacrisis.blogspot.com/2008/06/mealy-bug-deadly-gift-from-monsanto-to.html

          http://www.i-sis.org.uk/Deadly_Gift_from_Monsanto.php

          http://www.i-sis.org.uk/OCBBCI.php

          நீங்கள் கொடுத்த ஒன்னாரூபாய் நெல்லிக்கனிக்கு பதிலாக அறிவியல் பூர்வமாகவும் உங்களுக்கு லின்க் கொடுத்து இருக்கிறேன். அந்த விதர்பா பிரச்சனைக்கு அந்த பகுதியைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் அல்லாத மற்றொரு அமைப்பின் ப்லாக் அட்ரஸ்ஸையும் கொடுத்துள்ளேன். படியுங்கள். மீண்டும் அயோக்கியத்தனமாக பொய் சொல்ல வேண்டாம். மனசாட்சி என்று ஒன்று இருக்கும் யாராக இருந்தாலும் 2 லட்சம் விவசாயிகளைக் கொன்ற அந்த கொடூரமான பி.டி. பருத்தி கம்பெனியை எதிர்க்கத்தான் செய்வார்கள் .

          என்ன செய்வது மன்னா ?..பெரிய பெரிய வியாபாரிகளுக்கும் உங்களைப் போன்று அந்த வியாபாரிகளின் (துதிபாடி) கால் பிடித்தாவது பணக்காரன் ஆகி விட எத்தனிப்பவர்களுக்கும் 2 லட்சம் என்பது உயிர்களாகப் படாமல் வெறும் எண்ணிக்கையாக மட்டுமே தெரிவதில் ஆச்சரியம் இல்லை.

          //////////////////////////////////////////////////////

          and i read about the slogan “Dow Chemicalse thamizagathai vittu veziyeru” from Vinavu post about the protest. ok.

          தயவு செய்து சிரமம் பார்க்காமல் வினவு தளத்தில் இருந்து எனக்கு அந்த லின்க்கை கொடுக்கவும் ..

          இப்படிக்கு,
          உங்களிடம் இருந்து மரபணு மாற்றம் செய்யப்படாத நெல்லிக்கனியை பெற்ற
          அவ்வையார்.

        • ///////////////////////////////////////////////////////
          many readers of the post too must be customers of Reliance Fresh. they can answer this better. but my point was about the stupid and paranoid agitation some years ago against Rel fresh, that it would kill the local grocery stores of nadars. so far the small stores continue as usual. hence this proves that you most of your assumptions and fears about MNCs and Indian giants are wrong and irrational. ok.
          ////////////////////////////////////////////////////////
          மன்னா .. பின்னிவிட்டீர்கள் போங்கள் .. உங்களைப் போய் மங்குனி மன்னர் என்று தப்புக் கணக்கு போட்டு விட்டேனே ..
          என்ன ஒரு ராசதந்திரம் ?.. இங்கு பதிவைப் பார்க்க வரும் மற்ற மிடில் கிளாஸ் மக்களை இந்த அவ்வைக்கு எதிராக திருப்புமாறு பதில் அளித்திருக்கிறீர்கள்.

          ஒரு கம்யூனிஸ்ட்டாக மேலும் குறிப்பாக ஒரு மனிதனாக எனது கருத்தில் நான் உறுதியாக இருக்கிறேன். அவ்வளவு நாட்கள் ஏதோ சொந்தக்காரர்கள் போல நெருங்கியவர்களாக பழகி வந்த சிறிய பெட்டிக்கடை, காய்கறிக் கடை, மளிகைக்கடைக் காரர்களை எல்லாம் மறந்து விட்டு, அவர்களிடம் வெட்கமில்லாமல் சொல்லிய கடனையும் மறந்து விட்டு , அவர்கள் கடையில் காய்கறி பொறுக்குகையில் ’கேசுவலாக’ திண்ண கேரட்டுகளையும், தேங்காய் உடைக்கும் போது குடித்த தேங்காய்த்தண்ணீரையும் மறந்து விட்டு மினுமினுக்கும் லைட்டைப் போட்டு வந்த ஏகபோக பொறுக்கித்திண்ணி நிறுவனமான ரிலையன்ஸ் ஃப்ரெஸ் போன்ற சூப்பர் மார்க்கெட்டுகளை அண்டிப் போகிறவர்கள் கண்டிப்பாக இதனை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

          அதாவது ரிலையன்ஸ் ஃப்ரெஸ்ஸினால் விதர்பாவில் நடந்த அளவுக்கு இங்கு வியாபாரிகள் ஒட்டுமொத்தமாக தற்கொலை செய்யாததால் அதற்கு எதிரான ம.க.இ.கவின் போராட்டம் வீண் என்று உங்களுக்கு தெரிகிறதா?..

          அந்த ரிலையன்ஸ் ஃப்ரெஸ் கடைகள் அமைக்கப்பட்டிருக்கும் ஏரியாவில் உள்ள சிறு வியாபாரிகளைக் கேட்டுப் பார்க்கவும், அவர்களுக்கு வியாபாரம் எந்த அளவுக்கு பாதிக்கப் பட்டிருக்கிறது என்று.
          அது சரி . 2 லட்சம் பேர் செத்ததே உங்களுக்கு உறைக்கவில்லை. கடனால் தலைமறைவாகத் திரியும் வியாபாரிகளின் கஸ்ட்டம் உங்களுக்கு என்ன தெரியப் போகிறது. கவலைப்படாதீர்கள் அதியமான். வெகு விரைவில் தமிழகத்திலும் இன்று முக்கிற்கு ஒன்றாக இருக்கும் ரிலையன்ஸ்ஃப்ரெஸ், வால்மார்ட் போன்ற கடைகள் நாளை பல்கிப் பெருகி நிற்கும் போது நீங்கள் எதிர்பார்க்கும் அந்த பெரிய பாதிப்பு (கொத்து கொத்தான தற்கொலைகள் , தலை மறைவுகள்) இங்கு இருக்கும் சிறு குறு வியாபாரிகளுக்கும் வரும்.

          கொக்கொ கோலா வந்த பிறகு எத்தனை சிறு குளிர்பான வியாபாரிகள் குடும்பம் பிழைப்பதற்கு வக்கில்லாமல் சென்றது தெரியுமா ?..
          உங்கள் ஏகபோக முதலாளிகளின் ஒட்டுமொத்த இலாபத்திற்கு சாதாரண மக்களை அழிப்பது சரி என்று நினைக்கிறீர்களா ?.. இதற்கு கண்டிப்பாக பதில் கூறவும்.

          இந்தக் கடையை திறக்காமல் இருந்தால் அம்பானி என்ன சோற்றுக்கு வழியில்லாமல் பிச்சை எடுக்கவா போகிறான் ?.. ஒரு வேளை அவன் 1500 கோடி செலவில் கட்டிய வீடு 2 நாள் கழித்து கட்டி முடிக்கப் பட்டிருக்கும். அவ்வளவு தான். ஆனால் இங்கு வியாபாரம் செய்யும் சிறு குறு வியாபாரிகளுக்கு அந்தக் கடை இல்லை என்றால் வாழ்க்கையே அவ்வளவு தான். பொது மக்களில் ஒருவரான அந்த சிறு வியாபாரியின் வாழ்க்கையை விட உங்களுக்கு அம்பானி சொத்து மதிப்பு உயர்வதே முக்கியமா ?.. சிந்திகவும் . கேட்ட கேள்விகள் அனைத்திற்கும் பதில் கூறவும்.

          பின் குறிப்பு: நாடார்கள் மட்டும் கடை வைத்திருப்பதில்லை. மன்னர் அதியமான் அவர்கள் நாடார் தவிர மற்றவர்களின் ஆதரவைப் பெற இவ்வாறு எழுதியிருக்கிறார் என்று நான் சொல்ல மாட்டேன்.

        • அல்வா அவ்வை,////அவ்வளவு நாட்கள் ஏதோ சொந்தக்காரர்கள் போல நெருங்கியவர்களாக பழகி வந்த சிறிய பெட்டிக்கடை, காய்கறிக் கடை, மளிகைக்கடைக் காரர்களை எல்லாம் மறந்து விட்டு, அவர்களிடம் வெட்கமில்லாமல் சொல்லிய கடனையும் மறந்து விட்டு , அவர்கள் கடையில் காய்கறி பொறுக்குகையில் ’கேசுவலாக’ திண்ண கேரட்டுகளையும், தேங்காய் உடைக்கும் போது குடித்த தேங்காய்த்தண்ணீரையும் மறந்து விட்டு/// தன் கையாலையே கண்ண குத்துறது ரோம்ப அசிங்கமுன்னு சரியாக சொன்னீர்கள்

        • இந்த நாம் சொந்தக்கார வியாபரிகளை அவ்வை சொன்னவுடனே எனக்கு ஒரு சம்பவத்தை ஞபாகப்படுத்திவிட்டார் சிவகங்கையில் முருகேசன் என்ற நேருங்கிய நன்பர் திருமணத்திற்கு காலையிலே 7 மணிக்கேல்லாம் சென்றுவிட்டேன் நெருங்கிய நன்பர் என்பாதல் அவர் கடைகளுக்கு சைக்கிளில் முட்டை விற்கக்கூடிய வியாபாரி கல்யாணத்தன்றும் முட்டைகளை சைக்கிள் கேரியரில் ஒரு ஆளு ஒயரத்திற்கு அடுக்கி கொண்டிருந்தார் அந்த சைக்கிள் கேரியாரில் அவ்வளவு முட்டைகளை ஏத்த முடுயுமா என்று அசந்து பார்த்து கொண்டிருக்கும் போதே. டேய் வாடா இங்கேயுள்ள கடைகளுக்கேல்லாம் சரக்கு கொடுத்துட்டு வந்துருவோமுன்னு சொன்னான் எனக்கு ஆச்சாரியம் அடெய் வீனாப்போனவனே 9ரை மணிக்கி முகூர்த்தமுட இப்ப போயி அதுலாம் பார்க்க முடியுமா ஹைதரு ஒரு நாளு வுட்டாலும் வாடிக்கை போயி விடுமுன்னு சொல்லிகிட்டே சைக்கிள் ஸ்டாண்ட எடுத்து விட்டான், இவிய்ங்க வயித்துல மண்ண அடிச்சுட்டு எவனும் நல்லயிருக்க முடியாது பெரு முதலாளிகளை ஆதாரிக்கவாய்ங்க கொஞ்சம் இந்த நன்பர்களையும் நினைவில் வையுங்க

        • ///உள்ள சிறு வியாபாரிகளைக் கேட்டுப் பார்க்கவும், அவர்களுக்கு வியாபாரம் எந்த அளவுக்கு பாதிக்கப் பட்டிருக்கிறது என்று.///

          so far no such reports or protests by Vellayan & Co. the customers of the small stores are different from those who shop at R.Fresh. You don’t know what you are talking about. the exagarations about R.Fresh destroying small vendors are just exaggerations. and changes and innovations are part of modern industrial economy. the same way when tractors replaced manual plough in farming, when power looms replaced handlooms, etc.

          and P.Sainath has written extensively about the suicides in Vidharba. very authenticative. So far he has not accused the Monstato Cotton as a cause for this suicide. but you guys say that without any proof. and liberalisation is not the cause for these sucides as you try to over simplyfy. Liberalisation is for whole of India and if that is the basic reason ,then all cotton farmers in ALL areas of India should have been committing suicides on the scale of Vidharba farmers. but that is not the case ? then the reasons are more local in nature.

        • மன்னர் அதியமான் அவர்களே .. வேலைப் பளு காரணமாக உடனடியாக பதிலளிக்க முடியவில்லை ..

          பி.டி. பருத்தியின் விளைவை குறித்து கீழே ..

          http://www.scidev.net/en/features/gm-in-india-the-battle-over-bt-cotton.html

          சாய் நாத் அவர்களின் கருத்துப்படியே

          http://www.counterpunch.org/sainath02122009.html

          http://www.indiatogether.org/2007/apr/psa-meanwhile.htm

          நான் கேள்விப்பட்ட சாய்நாத் மேற்கூறியவாறு எழுதியுள்ளார் ..

          மன்னர்மன்னா ,, தாங்கள் எந்த சாய்நாத்தை குறிப்பிடுகிறீர்கள் ?..

          அந்த புது சாய்நாத்தையும் என்னிடம் அறிமுகம் செய்து வையுங்கள்.

          ரிலையன்ஸ் ஃப்ரெஷ் பொறுத்தவரையில்
          வியாபாரிகளின் புலம்பல் என்பது கண்கூடு.
          மிகப்பெரிய பிசினஸ் மேன் நீங்கள் .. உங்களுக்கு தெரியாதா பாதிப்பு எவ்வாறு இருக்கும் என்று ?.. தெரிந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்கிறீர்களே மன்னா ?..
          இது தர்மமா ?. நியாயமா ?..

          ரிலையன்ஸ் ஃப்ரெஷ் வந்துள்ள இடங்களின் அருகில் உள்ள வியாபாரிகளிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்,,

          மன்னா … மாதம் மும்மாரி பொழிகிறதா என்று கேட்டால் மட்டும் ஒரு மன்னனுக்கு போதாது .. சக மனிதர்கள் படும் துன்பத்தை உணர முடிந்தவராக இருப்பவரே ஒரு மன்னராக அல்ல ஒரு மனிதராகக் கூட இருக்க முடியும் ..

          கடைசியாக ஒரு கேள்வி மன்னா ?. அம்பானிக்கும் அவன் குடும்பத்திற்கும் சாதாரண சிறு வியாபாரிகளின் வியாபாரத்தை தட்டிப் பறித்தால் தான் வயிறு நிறையுமா ?..

          – ” ”ரிலையன்ஸ் ஃப்ரெஷ்” வரவால் ஏற்கனவே பழைய மளிகைக் கடை வியாபாரிகளிடம் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்த வாடிக்கையாளர்கள் ரிலை. ஃப்ரெஷிற்கு செல்லவில்லை, மாறாக ரிலையன்ஸ் ஃப்ரெஷ் வரும் போதே வாடிக்கையாளர்களை கூட்டிக் கொண்டு வந்தார்கள்” என்று பதில் சொல்ல மாட்டீர்கள் என்ற நம்பிக்கையுடன் .. உங்களிடம் இருந்து விடை பெற்றுக் கொள்கிறேன் மன்னா ..

  21. http://www.google.com/buzz/115511813610845200164/bHuJAeb5mQf/%E0%AE%B5-%E0%AE%A9%E0%AE%B5-%E0%AE%AE-%E0%AE%AE-%E0%AE%95-%E0%AE%87-%E0%AE%95-%E0%AE%A4-%E0%AE%B4%E0%AE%B0 வினவின் பதிவுக்கு வந்து விவாதிக்க பயப்படும் கோழை குழலி இந்த பஸ் லிங்கில் மொக்கையை போடுகிறார் என்பதை தோழர் அசுரனுக்கும் மற்றவர்களுக்கு தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்

  22. you have carefully avoided personal attacks in this ethir vinai.. welcome that. ethir vinai should be against one’s views/comments rather than against that person.. good one.. liked the picture..

  23. இந்த இலட்சங்களைக் கண்டு நாங்கள் மயங்குவதில்லை. இலக்கை நோக்கிய பயணத்தில் இவை சிறிய படிகள் மட்டுமே என்பதை எமது தோழர்கள் அறிவார்கள்.

    இதுதான் கடைசி வரைக்கும் வேணும்.

  24. என்னையும் தாண்டி அடுத்தவங்கள் பத்தியும் கொஞ்சம் சிந்திக்க ஆரம்பிச்சது வினவு தளத்தை படிக்க ஆரம்பிச்சதுக்கு அப்புறம்தான். தோழர்களே தொடரட்டும் உங்கள் பணி….

  25. அதியமான் அவர்களே ! வினவு உங்களை மாதிரி ‘கடும் உழைப்பு தேவைப்படும் சுட்டிகளை’ அளித்து எஸ்கேப்பிசமாகி விடுவதில்லை. வினவு எப்போதும் அந்த சுட்டிகளை அளிக்கும் போதே புள்ளி விவரங்களையும் பதிவிலேயே அளித்து விவாதிக்கும், விவாதிக்க அழைக்கும்.

    அதை செய்யுங்கள் என்றுதான் சொல்கிறோம், ஆனால் நீங்கள் தான் பொதியமான் ஆயிற்றே, லிங்குக்கு லிங்கு தாவி தாவி எஸ்கேப்பிசமாகி இருப்பீர்களே ?

    அவ்வளவு அதிக பக்கங்கள் உள்ள இந்துவில் வேறு வழியின்றி அப்பட்டமான சில பொது உண்மைகளைப் பற்றி கட்டுரைவருவது உண்மைதான். அப்போதுதான் முற்போக்கு வேடம் போட முடியும். இந்த விமர்சனத்தை வைத்து விட்டுதான் இந்த கட்டுரைகளை வினவு எடுத்தாள்கிறது. சொல்லிவிட்டுதான் செய்கின்றோம். உங்கள் இந்த கேள்விக்கும் பலமுறை பதில் சொல்லி இருக்கின்றார்கள். ஆனால் நீங்கள்தான் தூங்குபவன் போல நடிப்பவர் ஆயிற்றே ?

    சுந்தர், லக்கி, ஜாக்கி, கோவி முதலானவர்கள் இணையத்தில் அண்ணாவின் வாரிசுகள் – அதாவது மெய்நிகர் உலகின் பிழைப்புவாததின் பிதாமகர்கள்.

    • //அவ்வளவு அதிக பக்கங்கள் உள்ள இந்துவில் வேறு வழியின்றி அப்பட்டமான சில பொது உண்மைகளைப் பற்றி கட்டுரைவருவது உண்மைதான். அப்போதுதான் முற்போக்கு வேடம் போட முடியும்///

      வேசமா ? It is very easy to label you like this too. you are crazy and shameless in writing this here.

      //அதை செய்யுங்கள் என்றுதான் சொல்கிறோம், ஆனால் நீங்கள் தான் பொதியமான் ஆயிற்றே, லிங்குக்கு லிங்கு தாவி தாவி எஸ்கேப்பிசமாகி இருப்பீர்களே //

      யார் esacapist, யார் மாயையில், நிஜத்தை உணராமல் வாழ்கிறவர்கள் என்று எமக்கும் தெரியும். and the readers know better. so don’t sit on high pedastal and pass one liner judgements. If possible try to refute all my posts and links with counter arguments or data.

      • வேசமா ? It is very easy to label you like this too. you are crazy and shameless in writing this here.

        ///////////////////////////////////////////////////////

        விடுங்க அதியமான் … நீங்க கூடத் தான் முதலாளித்துவம் வாழ வைக்கும்னு சொல்லுறீங்க .. ஆனால் அது நிசத்துல கொல்லுது… நாங்கள் என்ன உங்களை வேசம் போடுறீங்கனு சொன்னோமா ?..

        ஆனால் ஹிந்து ராம் உங்களை மாதிரி நல்லவர் இல்லை அதியமான். நடுப்பக்கத்துல சாய்னாத் கட்டுரை வெளியிட்டுட்டு அதுக்கு எதிர்லயே அமெரிக்கா சூப்பரா டெவலப் ஆகிட்டிருக்குன்னும், அணுசக்தி ஒப்பந்ததின் நன்மைகள் குறித்து இலை மறை காய் போல நல்ல விதமா கதை விட்டிருப்பான் ..
        அதனால நீங்க இன்னும் வெகுளித்தனமா அவனை நம்பாதிங்க அதியமான்.

        அது எப்படி அதியமான் நீங்க வினவை அவ்வாறு வேசம் போடுவதா சொல்ல முடியும் ?.. முன் பின் முரணான கட்டுரைகளை எதாவது வெளியிட்டிருக்காங்களா ?.. அல்லது இங்கே முற்போக்கு பேசி விட்டு அதற்கு மாறாக ஏதாவது போராட்டம் பண்ணிருக்காங்களா ?.. சொல்லுங்க அதியமான்..

        இல்லைனா .. மன்னிப்பு கேளுங்க ..

        • ///நடுப்பக்கத்துல சாய்னாத் கட்டுரை வெளியிட்டுட்டு அதுக்கு எதிர்லயே அமெரிக்கா சூப்பரா டெவலப் ஆகிட்டிருக்குன்னும், அணுசக்தி ஒப்பந்ததின் நன்மைகள் குறித்து இலை மறை காய் போல நல்ல விதமா கதை விட்டிருப்பான் ..///

          this shows your level of maturity and ability to judge and analysis any report or issue objectively. Try to argue rationally and with logic and data, if you can.

          Vinavu did not call Hindu as murpokku vesa thari but the gentleman who commented here after me called that. ok. apology ? you are crazy.

        • S.Marudhu,

          If you had been Hindu regularly, you would n’t be blabbering like this. In fact among all newspapers, it has been Hindu which devoted much pages, reports and editorial about the demerits of the Nuclear liability deal and contributed to the final modifications in parliament. It was continuously fighting for a fair deal. read fully before uttering nonsense.

          this is a letter to The hindu from a reader last week :

          The Hindu deserves praise for its responsible journalism, which has made all the difference in understanding the nuances and jargon of the civil nuclear liability bill. The stealthy handling of this important bill by the government is not fair to the people. It should not forget that its prime task is to protect the interests of the nation, not curry favours with foreign companies.

          D.V.G. Sankararao,

          Vizianagaram

        • அதியமான் அதியமான் ..

          நீங்க ‘you’ னு சொன்னதை நான் பொதுவா சொன்னீங்களோனு நினைச்சிட்டேன் ..
          அதான் மன்னிப்பு கேக்க சொன்னேன் .. மன்னிச்சிகோங்க .. நீங்க ஆதவனை தான் சொன்னீங்களா ?.. அப்பொ அவர் மன்னிப்பு கேக்க சொல்லுவார் ..

          அப்புறம் ஜீ .. ஒரு முக்கியமான விசயம் ..
          ஹிந்து பத்திரிக்கை முற்போக்கு வேசம் தான் போடுறான்னு உங்களுக்கு நிரூபிக்கனும்னா .. நீங்க ஒழுங்கா ஹிந்துவை படிங்க .. ரெண்டு விசயம் முற்போக்கா எழுதுனா அவன் முற்போக்கு பத்திரிக்கையா ?.. முற்போக்கு பத்திரிக்கைனா எழுதுர எல்லாமே அப்படித்தான் இருக்கனும். ஹிந்து ஒரு சி.பி.எம் சந்தர்ப்பவாதி. நீங்க எத்தனை வருசமா படிக்கிறீங்கனு எனக்கு தெரியாது நான் கடந்த 6 வருசமா படிசிட்டு வரேன் பேப்பர்லயும் ஆன்லைன்லயும் … நான் சொன்ன இலைமறை காய் போல அப்படிங்கிறதுக்கு ஒரு உதாரணம் இதோ ..உங்கள் பாணியில் ஒரு லின்க்

          http://www.hinduonnet.com/2006/02/28/stories/2006022803921000.htm

          இதுக்கு பேரு தான் இலைமறை காயாக ஜன நாயகம் என்ற பெயரில் புகுத்தப்படும் விசயம்.

          ————————————-

        • S.Marudhu,

          The Hindu allows opinions from all shades and contrarians, (unlike many of your group publications, incl Vinavu or P.Jananayaham).

          this was at the end of that link that you has given :

          (The author is President of the Indian Nuclear Society and a former Director of the Indira Gandhi Centre for Atomic Research, Kalpakkam. The views expressed are personal.)

          Hindu has place for a healthy and informed debate unlike the shallow, crude and emotional and subjective articles by your people. You may disgree with hindu on many issues (i do) but there is always a place for all these disagreements.

          You and your people are not the FINAL authority to label anyone as Murpokku or Pirpokku. Get the first. ok. that is dictatorship and plain stupidity too.

  26. பஸ்ஸில் மா. சி யின் கருத்து
    //சிவகுமார் மா –
    குழலி,
    இந்த விவாதங்களில் விவாதப் பொருளை விட தனிப்பட்ட காயங்கள்தான் முன்நிற்கின்றன என்று தோன்றுகிறது.

    வினவு குழுவினரால் பல்வேறு சமயங்களில் காயப்பட்டவர்கள் என்ன சொன்னாலும் எதிர்ப்பது என்று முழுமூச்சாக நிற்காமல், கொஞ்சம் சைடு வாங்கி யோசிக்கலாம்.Aug 31//

  27. குழலி தான் ஒரு கடைந்தெடுத்த பொய்யர், காழ்ப்புணர்ச்சிபடைத்த சிறுமதியோன் என்பதை கூகிள் பஸ்ஸில் மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறார்.

    முதலில் இதுவரை யாருமே பதிலளித்திராத கேள்வி என்பது போல இடஓதுக்கீடு என்ற சொத்தை கேள்வியை வைத்தார், மகஇகவின் இடஓதுக்கீடு கொள்கை குறித்து அவரது அவதூறுகளுக்கு பதிலளித்ததுடன் அல்லாமல் அவரையும் அவரது அர்சியலையும் அம்பலப்படுத்தி கேள்விக்குள்ளாக்கி ஏற்கனவே அசுரன் கட்டுரை வந்துள்ளது. அப்போது வாய் மூடி போனவர்தான் குழலி, அந்த சமயத்தில் பெரியார் தி க அதி அசுரன் அவர்கள்தான் சண்டையிடாதீர்கள் என்று சமாதானக் கொடி வீசினார். அந்தக் கட்டுரை விவாதங்களை தோழர் ஏழரை பஸ்ஸில் இட்டவுடன் குழலி வாயை மூடிக் கொண்டார். அடுத்த பொய்யாக ஒன்றை அவிழ்த்துவிட்டார். அதாவது தோழர் மருதையன் சிறை சென்றதில்லை என்று. இதற்கும் தோழர் ஏழரை அவர்கள் புள்ளிவிவரம் கொடுத்தவுடன் வாயை எங்கே கொண்டு வைப்பது என்று தெரியாமல் முழித்த பொய்யர் குழலி, அந்த புள்ளிவிவரத்திற்கு ஆதாரம் கொடு என்று உலகமாக வாதம் ஒன்றை வைத்தார்.

    இந்த இடத்தில் மா. சி அவர்கள் குழலியின் காழ்ப்புணர்ச்சியை சரியாக விமர்சனம் செய்தவுடன், அவருக்கு குழலி ரிக்வொஸ்ட் வைக்கிறார், மா. சி பிளீஸ் சைடு வாங்குங்க, நான் தோழர்களை மட்டும் எச்சி துப்பி என்னோட ஆத்திரத்தை குறைச்சிக்கிறேன் என்று. மாசி ஒதுங்க மறுத்துவிட்டார் என்பது குழலிக்கு ஏமாற்றமாகிப் போனது.

    உடனே அடுத்த பொய் ஒன்றை சொன்னார்,

    // மாசி வினவு குழு என்பது இணையத்தில் நான் வந்து சில ஆண்டுகள் கழித்து வந்தது… நான் ம க இ க அரசியலை எதிர்ப்பது அதற்க்கும் பல ஆண்டுகள்முன்பிருந்து இந்த இணையம் எல்லாம் எனக்கு தெரியும் முன்பிருந்தே எதிர்க்கிறேன்… அதனால் தான் சொல்கிறேன்//

    இது ஒரு பொய். பார்ப்பனிய எதிர்ப்பு, ஏகாதிபத்திய எதிர்ப்பு என்று மட்டும் இருந்த வரை அசுரனுடன் சேர்ந்து இணையத்தில் ஆட்டம் போட்டவர்தான் இந்த குழலி. ம க இ க எதிர்ப்பை(ம க இ க அரசியலின் மீது விமர்சனம் வைப்பது வேறு) அவர் எங்கும் இந்த காலகட்டத்தில் வெளிப்படுத்தியது இல்லை. ராமதாசை விமர்சனம் செய்யத் துவங்கியவுடன் தான் இவர் மகஇக எதிர்ப்பு அரசியல் செய்யவே தொடங்கினார். இதற்கு சாட்சி யார் என்றால் மாட்டுலோன் மேனேஜர் என்று நகைச்சுவையுடன் அடையாளப்படுத்தப்பட்ட பதிவர் முத்து தமிழினி அவர்கள். இந்த காலகட்டத்தில் வன்னிய சாதி குழுமத்தைச் சேர்ந்தவர் அல்லது பொதுவில் பாமக ஆதரவாளர் என்று அறியப்பட்டிருந்த முத்து தமிழினி மட்டும்தான் ராமதாசின் மீதான அசுரன் தள விமர்சனங்களை சரி என்று ஏற்றுக் கொண்டு எழுதினார், தவிர்த்து பல இடங்களில் ஜனநாயகமான தனது நிலைப்பாடுகளை முன் வைத்தார். மற்றவர்களும், இதே காலகட்டத்தில் விமர்சனம் செய்யப்பட்ட திராவிடக் கொழுந்துகளும் கூட்டுச் சேர்ந்து அசுரன் தளம், ம க இ கவை இலக்கு வைத்து அவதூறு செய்யும் வேலையைத் தொடங்கி அதை இன்றுவரை மிகக் கீழ்த்தரமான அளவுகளில் செய்து வருகிறார்கள்.

    குழலி தனது நம்பகத்தன்மையை இந்த செயல்பாடுகள் மூலம் பரந்துபட்ட பதிவுலக வாசகர் மத்தியில் இழந்து வருகிறார் என்பதை உணர்கிறாரா என்று தெரியவில்லை. அது அவருக்குத் தேவையும் இல்லை என்பதுதான் உண்மை. எனவேதான் வெட்கமின்றி மீண்டும் மீண்டும் கூச்சநாச்சமில்லா ஒரே பொய்யை அவிழ்த்துவிடுகிறார்கள். அவரை நினைத்தால் பரிதாபமே மிஞ்சுகிறது.

    அசுரன்

  28. சின்னஞ்சிறு நூலிழையை எடுத்துக்கொண்டு மிக அருமையாக விரிவாய் எழுதப்பட்ட கட்டுரை..

  29. ஐயா, நான் அதிமுக காரனக இருந்தாலும் வினவின் பதிவுகளை மிகவும் விருப்பத்துடன் படித்து வருகிறேன்.
    இப்பொழுதெல்லாம் ஜீனியர் விகடன், ரிப்போர்ட்டார் போன்றவைகளை படிப்பதே இல்லை.
    உங்கள் பணி தொடருட்டும்.

  30. சென்ற சட்டமன்ற தேர்தலில் தமிழ் சசி முதலான நண்பர்கள் “மாற்றம்” என்ற பெயரில் ஈழத்திற்காக ஜெயாவை ஆதரித்து இணையத்தில் பிரச்சாரம் செய்தனர்.//

    மிகத்தவறான கருத்து. மாற்றம் வலைப்பூ ஏற்படுத்தப்பட்டதென்பது ஜெயாவை ஆதரித்து அல்ல. அதில் பதிந்த ஒரு சிலர் ஜெயலலிதாவை ஆதரித்திருக்கலாம். அதற்காக அவ்விணையம் ஆதரித்தது என்று பொதுவாகச் சொல்லிவிட இயலாது. அதன் அங்கத்தவர்களின் ஒருவன் என்ற முறையில் இந்த அளவில் என்னால் உறுதி கூறவியலும்.

    பொதுவான மாற்று வெளி அரசியல் ஒன்றை ஏற்படுத்துவதான முகமாகவே அம்முயற்சி ஒத்த கருத்துள்ள நண்பர்களால் ஏற்படுத்தப்பட்டது.
    இருப்பினும் முள்ளிவாய்க்காலோடு அவ்வலைப்பூ முடங்கியும் போய்விட்டது.

    மற்றபடி , “வினவு” தோழர்கள் இணையத்தை தமது கருத்துக்களைப் பரவலாக்க முயற்சிப்பதை யாரும் குற்றம் சொல்லவியலாது.மற்ற இயக்கங்களை யார் அங்ஙனம் செய்ய வேண்டாம் என்று சொன்னார்கள்?

    என்ன இதுபோன்ற இணையப் பரப்புரைகள் பிரியாணிக்கும் , ரூபாய்க்கும் ஓட்டுப்போடும் மக்களிடம் எடுபடுவதில்லை…

    • //என்ன இதுபோன்ற இணையப் பரப்புரைகள் பிரியாணிக்கும் , ரூபாய்க்கும் ஓட்டுப்போடும் மக்களிடம் எடுபடுவதில்லை…//

      மதிபாலா எப்பயுமே இப்படித்தான் சாதாரண மக்களுக்கும் சேர்த்து சிந்தித்து கருத்துக் கூறுவார். இன்னும் மாறலையா இவரு? இங்கே இணையத்தில் எழுதுவதைத்தான் மக்களிடமும் பேசி அவர்களையும் இந்த அரசியல் நியாயம்தான் என்பதை உணர வைக்கிறார்கள் தோழர்கள். நீங்க அப்படி எதுவும் முயற்சி செய்த அனுபவத்திலிருந்து சொல்றீங்களா மதிபாலா? இல்ல ஏட்டு சுரைக்காய்தானா?

      • மதிபாலா எப்பயுமே இப்படித்தான் சாதாரண மக்களுக்கும் சேர்த்து சிந்தித்து கருத்துக் கூறுவார். இன்னும் மாறலையா இவரு? //

        எதுக்கு மாறணும். உண்மை அதுதானே….அது கடந்த மே-18ல் முடிவாகத் தெரிந்த விடயம் , இங்கே இணையத்தில் உலாவும் கருத்துக்களுக்கும் , தெருக்களில் டீக்கடை பெஞ்சுகளில் , சலூன் கடைகளில் உலாவும் அரசியலுக்கும் பாரிய இடைவெளி இருக்கிறது.

        ***

        இங்கே இணையத்தில் எழுதுவதைத்தான் மக்களிடமும் பேசி அவர்களையும் இந்த அரசியல் நியாயம்தான் என்பதை உணர வைக்கிறார்கள் தோழர்கள். //

        அது பாராட்டத்தக்க விடயம். ஆனால் , எழுதி வைத்துக்கொள்ளுங்கள் , இன்னும் பல பத்தாண்டுகள் ஆனாலும் ஊடக பலமுள்ள அரசியல் வியாபாரிகளைத்தாண்டி ,ஒரு ஐந்து சதம் மக்களையேனும் உங்கள் கருத்துக்களும் , பரப்புரைகளும் போய்ச்சேருமானால் அதுவே மிகப்பெரிய சாதனை. அந்த ஐந்து சதம் மக்களை வைத்துக்கொண்டு என்ன அரசியல் மாற்றத்தைத் தந்துவிட முடியுமென்கிறீர்கள்?

        நீங்க அப்படி எதுவும் முயற்சி செய்த அனுபவத்திலிருந்து சொல்றீங்களா மதிபாலா? இல்ல ஏட்டு சுரைக்காய்தானா? //

        அனுபவம் எதற்கு? அந்த சாமான்ய மக்களில் எனது மாமனும் , மச்சானும் , பக்கத்து வீட்டு பரமசிவனும் அடங்கியிருக்கும் போது ஸ்பெஷல் அனுபவம் எதற்கு?

        • //அனுபவம் எதற்கு? அந்த சாமான்ய மக்களில் எனது மாமனும் , மச்சானும் , பக்கத்து வீட்டு பரமசிவனும் அடங்கியிருக்கும் போது ஸ்பெஷல் அனுபவம் எதற்கு?//

          பா. சிதம்பரம் கூட தனது மாமனையும், மச்சானையும் பார்த்துதான் ஸ்பெஷல் அனுபவம் பெற்றுக் கொண்டு மாவோயிஸ்டுகளை சபித்து வருகிறார்.

          உங்க மாமன் மச்சானிடம் சென்று இந்தியா உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு என்று சொல்லிப் பாருங்கள் பிறகு அங்கு பரப்புரை செய்யப்பட்டுள்ளது என்னவகையான அரசியல் என்பது தெரியவரும். உங்க மாமனும், மச்சானும் பா. சிதம்பரத்தின் சொந்தக்காரர்கள் இல்லை என்ற நம்பிக்கையில் இந்த மருந்த உங்களுக்கு பரிந்துரைக்கிறேன்.

          சமூக மாற்றத்தை மாமனிடமிருந்தும், மச்சானிடமிருந்தும் அனுபவப் பூர்வமாக உணரும் அருமருந்து சரிதான் என்ப்தை பிறகு நான் ஏற்றுக் கொள்கிறேன்.

        • ஒரு சாமியார் ரோட்டோரம் உட்கார்ந்து கொண்டு இப்படித்தான் மதிபாலா மாதிரி வியாக்கியானம் பேசிக் கொண்டிருந்தார் ‘ என்னாத்த சொல்லி என்னாத்த செய்யன்னு’.

          உலகம் மாறிக் கொண்டே இருந்தது, சாமியாரும், சாமியாரின் புலம்பலும் மட்டும் கடைசி வரை மாறவில்லை.

      • முதலில் இந்தக் கருத்துக்கள் மக்களிடம் எடுபடுவதில்லை என்றார், இப்போ கருத்தை மக்களிடம் கொண்டு செல்ல முடியாது என்கிறார் மதிபாலா. முடிவா என்ன சொல்றீங்க மதிபாலா எடுபடாதுன்னு சொல்றீங்களா இல்ல முடியாதுன்னு சொல்றீங்களா? ஏன் இந்த குயப்பம்?

  31. வினவு தளம் தமிழ் நாட்டு அறிவு ஜீவிகளின் சங்கமமாக இருக்கிறது . சமிப காலமாக நம் படித்த மக்களிடையே நீங்கள் ஏற்படுத்தி வரும் அரசியல் விழி புணர்வு அபாரமானது . எனவே வெட்டி பயல்களின் வெட்டி வாதத்திற் எலாம் இவளவு நீண்ட விளக்கம் தர தேவை இல்லை. இந்த நேரத்தில் வேறு நல்ல கட்டுரைகளை எழுதி இருக்கலாம் . மேலும் சமிப காலமாக இலங்கை தமிழர்கள் பிரச்சினை குறித்து நீங்கள் எதுவும் கண்டுகொள்வது இல்லை . இதை சரி படுத்தவும். நன்றி
    கோட்டர் கோவிந்து

  32. பா. சிதம்பரம் கூட தனது மாமனையும், மச்சானையும் பார்த்துதான் ஸ்பெஷல் அனுபவம் பெற்றுக் கொண்டு மாவோயிஸ்டுகளை சபித்து வருகிறார். /

    ப.சிதம்பரம் அல்ல , வேறு யார் அந்தப் பதவியில் இருந்தாலும் , அதைத்தான் செய்வார்கள். அவர்களிருக்கும் கட்சியும் , அந்த ஆட்சியின் திசையுமே அதைச் செலுத்தவல்லது. மற்றபடி சிதம்பரத்தின் மாமன் மச்சானைக் கேட்டு தனியொருவனாய் மாவோயிஸ்டுகளை அழிக்க முயற்சிக்கப் பார்க்கிறார் என்பதெல்லாம் கப்சா…. மாவோயிஸ்டுகள் பத்தியெல்லாம் பேசுவதற்கு எனக்கு அருகதை இல்லை. அந்த அளவு அறிவும் இல்லை.

    ***

    ஒரு சாமியார் ரோட்டோரம் உட்கார்ந்து கொண்டு இப்படித்தான் மதிபாலா மாதிரி வியாக்கியானம் பேசிக் கொண்டிருந்தார் ‘ என்னாத்த சொல்லி என்னாத்த செய்யன்னு’.

    உலகம் மாறிக் கொண்டே இருந்தது, சாமியாரும், சாமியாரின் புலம்பலும் மட்டும் கடைசி வரை மாறவில்லை.//

    அன்பு நண்பருக்கு , உலகம் மாறிக்கொண்டே இருக்கிறது. முழுக்க முழுக்க சுயநலத்தைக் கட்டியெழுப்பியபடி போய்க்கொண்டே இருக்கிறது. ஆனால் , நீங்கள் தான் அதை புரிந்து கொள்ளவில்லை என்பதையே சுட்டுகிறோம். யாருக்கும் , சமூகத்தைப் பற்றி சிந்திக்க நேரமில்லை. குறைந்தப்பட்சம் பக்கத்து வீட்டுக்காரன் நல்லபடியாக இருக்கிறானா என்று கவனிக்கக் கூட நேரமும் , சூழலும் இப்போட்டி உலகத்தில் இருப்பதில்லை. யார் வியாக்கியானம் பேசும் ‘சாமியார்’ என்பதை காலம் உமக்கும் , எமக்கும் சொல்லத்தானே போகிறது.

    ***

    முதலில் இந்தக் கருத்துக்கள் மக்களிடம் எடுபடுவதில்லை என்றார், இப்போ கருத்தை மக்களிடம் கொண்டு செல்ல முடியாது என்கிறார் மதிபாலா. முடிவா என்ன சொல்றீங்க மதிபாலா எடுபடாதுன்னு சொல்றீங்களா இல்ல முடியாதுன்னு சொல்றீங்களா? ஏன் இந்த குயப்பம்?//

    உங்கள் வாதங்களும் , கம்யூனிஸ்டுகளுடைய போக்கும் , சாதாரண – நடுத்தர வர்க்க மக்களிடம் தாக்கத்தை ஏதும் ஏற்படுத்தவில்லை என்ற உண்மையை நான் சொன்னால் உங்களுக்குக் கசக்கத்தான் செய்யும்..

    ஆண்டை மனப்பாங்கில் இன்னமும் , சமூகத்தின் அடித்தட்டு மக்கள் ஊறிப்போயிருக்கிறார்கள்…..குறிப்பாக நான் சமீபத்தில் அனுபவித்த இரு நிகழ்வுகளை உங்கள் முன் வைக்கலாம் என்று நினைக்கிறேன்…கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கொங்கு மாவட்டங்களில் கொ.மு.பே என்ற கட்சி போட்டியிட்டது நினைவிருக்கும் என்று நினைக்கிறேன். எல்லோரும் நினைத்தார்கள் , நினைக்கிறார்கள் அது கவுண்டர்களின் கட்சி என்று. ஆனால் , ஓட்டளித்தவர்களின் அநேகர் ஆதி திராவிடர்களும் , தலித்களும். காரணம் அங்கங்கே உள்ளூரில் இருக்கும் தமக்கு ஜீவனம் அளிக்கும் நிலச்சுவந்தார்கள் தான் அவர்களது திசையினை தீர்மானிக்கிறார்கள்.

    ஊடகங்களின் வீச்சு எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை அடுத்த நிகழ்வின் மூலம் விளக்கலாம்.

    எல்லோருக்கும் ( இந்த எல்லோருக்கும் என்பது இணையம் படிக்கும் ) கருணாநிதியின் அண்ணா சமாதி நாடகம் தெளிவுறத் தெரியும். ஆனால் , எலக்சனுக்கு முன்பு படித்த ஓர் உள்ளூர்வாசியிடம் பேசும் போது ” போரைத்தான் கருணாநிதி உண்ணாவிரதம் இருந்து முடிச்சுட்டாரே , அதனால திமுக தான் வரும் என்றார்…. இப்போது கூட அவரைப் பாத்து அந்தக் கேள்வியைக் கேட்டேன்….அதற்கு அவர் சொன்ன பதில் அட….அரசியல்ல நெளிவு சுளிவு எல்லாம் இருக்கத்தான் வேணும் என்றார்…

    ஊடகங்கள் எதைச் சொல்கிண்றனவோ , அதையே மக்கள் நம்புகிறார்கள். கலைஞர் , சன் , என்று நீண்டு கிடக்கும் ஊடக பலத்தூனூடே சிறுகட்சிகளும் , ஏன் பெரிய கட்சியான பாமக போன்றவைகளே நீந்திக் கடக்க பெரும்பாடு படுகிறார்கள்…

    கொள்கைக்கான அரசியலுக்கு இங்கே மங்களம் பாடி ஆயிற்று. ஒரு நல்ல உதாரணம் சொல்லுங்களேன்… திராவிடம் , நாத்தீகம் , தேசியம் என்று பேசிய எவருமே சந்தர்ப்பவாதிகள் தான் , தங்கள் பிழைப்பிற்காக எதையும் செய்யத் தயங்காதவர்கள்..

    1. சமூகத்தின் ஒருபுறம் ஆண்டை மனப்பாங்கில் ஊறித்திளைத்த ஒடுக்கப்பட்டவர்கள்.

    2. மற்றொரு புறம் , ஊடக ஆதிக்கத்தால் பெரிய அரசியல்கட்சிகளுடன் இணைந்தியங்கும் தரப்பு.

    3. ஆதாயங்களுக்காக பெரும் அரசியல் கட்சிகளுடன் இணைந்தியங்குபவர்கள்.

    4. பரம்பரை பரம்பரையாக தாங்கள் இன்னின்ன அரசியல் கட்சிகளுடன் இணைந்திருந்தோம் என்ற அடிப்படையிலேயே இயங்கும் நடுத்தர வர்க்கத்தினர்.

    5. சினிமா என்ற மாயையினால் சீரழிந்து தன் தலைவன் அரசியலுக்கு வர வேண்டும் என்று தீ மிதக்கும் முட்டாள் ரசிகர்கள்.

    இப்படியாக தொடரும் இப்பட்டியலில் சிந்தாந்தத்திற்கான வழி எங்கிருக்கிறது? இங்கே எல்லா எழுச்சிக்கும் ஒரு பொது எதிரி தேவைப்படுகிறான்….அந்தப் பொது எதிரி தத்தமது அன்றாட வாழ்வினைப் பாதிப்பவனாக இருக்க வேண்டும்……சுதந்திர போராட்ட எழுச்சிக்கு பிரிட்டீஷ்காரன் தேவைப்பட்டான். அதனால் தான் அலங்கோலமாக , அவரசமாக தைத்த இந்தியா பிறந்தது.

    இந்து என்னும் பொது எதிரியால் பாகிஸ்தான் பிறந்தது. மேற்கு பாகிஸ்தானி என்ற பொது எதிரியால் பங்களாதேஷ் பிறந்தது. சிங்களவன் என்ற பொது எதிரிதான் பிரபாகரனைத் தோற்றுவித்தான். இந்தி என்னும் பொது எதிரிதான் திமுகழகத்தை தோற்றுவித்தது. சமூக வேறுபாடுகளைக் களைவதான அதன் சத்தியமும் இருக்கிறது. திமுகவும் இருக்கிறது. சமூக வேறுபாடுகளும் அப்படியே இருக்கிறது.

    அந்த மாணவர் எழுச்சி சர்வாதிகாரத்தை பொசுக்கியதா? சாதிவேறுபாட்டை தீக்கிரையாக்கியதா? புதுப்புது பணக்காரர்களை உருவாக்கியதோடு முற்றுப்பெற்றது.

    உங்களுக்கான பொது எதிரி யார்? ஒட்டுமொத்த சமூகம்.?

    ஒட்டுமொத்த சமூகத்தை எதிர்த்து உங்கள் சித்தாந்தங்களை நீங்கள் மக்களிடம் வெற்றிகரமாக கொண்டு செல்ல முடியாது என்பது முதல் கருத்து. இனி ஏன் எடுபடாது என்பதைப் பார்ப்போம்.

    நீங்கள் போடும் தெருமுனைக் கூட்டங்களை , அதில் கூடும் இளைய சமூகத்தைப் பார்க்கும் போதெல்லாம் , முன்பொருமுறை உங்களது சென்னைக் கூட்டத்திற்கு ( மாவோயிஸ்டுகளுக்கு எதிரான போரைப் பற்றி என்று நினைக்கிறேன்) வந்த கூட்டத்தைப் பற்றிக் கேள்விப்படும் போதெல்லாம் தன்னலமற்ற இளைஞர்கள் இன்னமும் இருக்கிறார்கள் என்று நினைக்கும் பெருமை ஒருபுறம் , விழலுக்கிரைத்த நீராய் இவர்களின் போராட்டம் யாரை எதிர்த்து என்ற கேள்விகளும் எழுந்திருக்கின்றன.
    மக்கள் , ஓரளவு படித்த நடுத்தர மக்கள் “கொள்கை” என்று வரும் எவனையும் சந்தேகக் கண் கொண்டே பார்க்கிறார்கள்….காரணம் , அவர்களது படிப்பினை அப்படி. முதலாளித்துவம் , கம்யூனிசம் என்று நீளும் எந்த இசங்களும் அவர்களது அன்றாட வாழ்க்கையைப் பாதிப்பதில்லை.

    இப்படியிருக்கும் ஒரு சூழலில் “ஓட்டரசியலில்” இல்லாத ( இருந்தாலும் ஒன்றும் செய்யவியலாது என்பது கிளைக்கதை) உங்களால் எந்தவிதமான மாற்றத்தைக் கொண்டு வர இயலும் சொல்லுங்கள்.
    மக்களைச் சேர்த்து இராணுவம் அமைத்து நாடாளுமன்றத்தை முற்றுகையிடுவதா?

    மக்களைச் சேர்த்து இராணுவம் அமைத்து குறிப்பிட்ட பகுதிகளைப் பிடித்து அங்கே உங்கள் சித்தாந்தங்களையொட்டி ஆட்சி செலுத்துவதா?

    இவையிரண்டும் இல்லாவிடில் , மக்களிடம் பரப்புரை செய்து அதன் மூலம் ஆட்சிக்கட்டிலில் ஏறுவதா? அதற்கு ஓட்டரசியலில் ஈடுப்பட்டாகவேண்டும். அது உங்கள் கொள்கைக்கு எதிரானது.

    இல்லாவிட்டால் பரப்புரைகளின் மூலம் மக்களின் மனப்பாங்கையும் , சமூக ஏற்றத்தாழ்வுகளையும் போக்கி சமத்துவ சமுதாயம் அமைப்பதா?
    இன்றுவரை அடிக்கடி உங்களைப்படிக்கும் எங்களுக்கே உங்கள் நோக்கம் தெளிவுபடாத போது , மக்களிடம் புரட்சி செய்வதாக நீங்கள் சொல்வது எப்படி எடுபடப் போகிறது?

    எப்படி புரட்சி செய்து சமூகத்தைப் மாற்றப்போகிறீர்கள் என்ற எமது கேள்வியில்தான் தவறு காணப்போகிறீர்களா?

    மீண்டும் சொல்கிறேன்…சித்தாந்தம் , புரட்சி , உலகத்தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் என்ற முழக்கமெல்லாம் , சொல்லாலங்காரம் மிக்க அழகான வார்த்தைகள்.

    இதுகாறும் , அதை உபயோகித்தவர்கள் எல்லோரும் இறுதியில் சுயநலவாதிகளாக , அடக்குமுறையாளர்களாக மாறிப்போயிருக்கிறார்கள் என்பதே வரலாறு….அதை மக்களும் புரிந்து கொண்டிருக்கிறார்கள். அதனால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் , அது எடுபடாது… இன்றைய சூழலில் நீங்களே வெற்றியடைந்தாலும் காலத்தின் ஓட்டத்திற்கேற்றபடி வளைந்தே கொடுப்பீர்கள் என்கிறேன். இதுவே நிதர்சனம்!

    இதை நான் சொல்லும் போது உங்களுக்குக் கசக்கும்…எந்த அனுபவத்தின் மூலம் சொல்கிறீர்கள் என்பீர்கள்….இதற்கு இந்த அனுபவம் என்று சுட்ட என்னிடம் ரெடிமேடு பதில்கள் இல்லை. எனது சிந்தனையில் சொல்கிறேன். மக்களின் சார்பாக நான் பேசவில்லை. என் பார்வையில் மக்களைப் பற்றி நான் பேசுகிறேன்.

    நன்றி.

    • //நீங்கள் தான் அதை புரிந்து கொள்ளவில்லை என்பதையே சுட்டுகிறோம். யாருக்கும் , சமூகத்தைப் பற்றி சிந்திக்க நேரமில்லை. குறைந்தப்பட்சம் பக்கத்து வீட்டுக்காரன் நல்லபடியாக இருக்கிறானா என்று கவனிக்கக் கூட நேரமும் , //

      இதே புத்திமதிகளை மதிபாலா விடுதலைப் புலிகளுக்கும் சொன்னார் என்று இன்ன வரை நம்புகிறேன்

      • //யாருக்கும் , சமூகத்தைப் பற்றி சிந்திக்க நேரமில்லை. //

        இந்த பக்கத்துக்கு இலைக்கு பாயாசம் கேக்குறத நிறுத்த மாட்டீங்களா மதிபாலா?

        நீங்க அப்படி சிந்திக்கிறேன்னு சொல்லிட்டு போங்க(அதிகபட்சம் நீங்க உரையாடிய உங்க மாமன், மச்சான், பக்கத்துவீட்டு பரமேஸ்வரனையும் சேத்துக்கோங்க). ஏன் எல்லாரையும் சொல்லி உங்களது தன்னலவாதத்தை/சுயநலவாதத்தை நியாயப்படுத்துறீங்க?

        இந்தியாவின் அப்பாவி ஏழை சனங்கள் வரலாற்றில் மிக முக்கியமானதொரு போரில் ஈடுபட்டுள்ளனர் என்று எழுதிய அருந்ததிராய் உங்களைப் போல மாமன் மச்சானிடம் கேட்டு எழுதவில்லை. நேரில் சென்று பேசி, அனுபவித்து எழுதினார்கள். அந்த அப்பாவிகள் தமது சொந்த வாழ்வை எண்ணிக் கொண்டு சோம்பிக் கிடக்கவில்லை. சரியாகச் சொன்னால் களத்தில் போராடுபவர்களுக்கு சொந்த வாழ்வு என்று ஒன்று இல்லாது ஒழிக்கப்பட்டதே போராட்டம் இன்று இந்தியா முழுவதும் பற்றியெரிவதற்கான காரணம். இதெல்லாம் மாமன், மச்சான் அளவில் நமது சமூக அறிவை சுருக்கிக் கொண்டால் புரியாது.

      • இதே புத்திமதிகளை மதிபாலா விடுதலைப் புலிகளுக்கும் சொன்னார் என்று இன்ன வரை நம்புகிறேன்/

        இல்லை. சற்றேறக்குறைய உங்களின் இன்றைய ம.க.இ.க சார்பு நிலையையே நாம் புலிகளின் பால் எடுத்திருந்தோம். அவர்களின் நோக்கம் நேர்மையானதாகவே இருந்தாலும் , அவர்கள் தேர்ந்தெடுத்த வழி இன்றைய சூழலில் மக்களால் , உலகத்தால் , சுற்றத்தால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. மாறிவரும் உலக சூழலில் அத்தகைய வன்முறை வழிகள் மக்களிடமிருந்து இயக்கத்தை மேலும் அந்நியப்படுத்தவே செய்யும்.

        போராட்டத்தின் ஆரம்பத்தில் எல்லா மக்களும் ( வன்னி மக்களைப் போலவே ) ஆர்வத்துடன் பங்களிப்பைச் செய்வர். தொடரும் துன்பங்கள் அவர்களிடம் மனமாற்றத்தை ஏற்படுத்துவது மட்டுமின்றி , போராடும் இயக்கத்தை தனிமைப்படுத்தவே செய்யும். அதுவும் , போர் நிறுத்த காலத்தில் கொஞ்சமேனும் தம்மை ஆசுவாசப்படுத்திக்கொண்ட வன்னி மக்களுக்கு இன்னமும் சிரமமாயிருந்தது.

        அதுதான் வன்னியில் நடந்தது. நாளை “தண்டேவடா”விலும் மாவோயிஸ்டுகளுக்கு நடக்கப்போகிறது. ஊடக பலமிருந்த புலிகளுக்கே அது நிகழ்ந்ததெனில் , இப்போது மாவோயிஸ்டுகளைப் பற்றிய தவறான பார்வையை முதலாளித்துவ ஊடகங்கள் வரிந்து கட்டிக் கொண்டு எழுதித்தள்ளும் போது என்ன செய்ய முடியும்?

    • //தன்னலமற்ற இளைஞர்கள் இன்னமும் இருக்கிறார்கள் //

      மதிபாலா நீங்க இந்த லிஸ்டுல இல்லையா? நீங்க இளைஞரா இருக்கனும்னு அவசியமில்லை. தன்னலமில்லாதவரா இருக்கலாமில்லையா?

      இல்லைனா வெறுமனே மாமன், மச்சான் கிட்ட கருத்து கேட்டுக்கிட்டு அட்வைஸ் மட்டும் பன்னுவோம்க்ற எண்ணமா உங்களுக்கு?

      • மதிபாலா நீங்க இந்த லிஸ்டுல இல்லையா? நீங்க இளைஞரா இருக்கனும்னு அவசியமில்லை. தன்னலமில்லாதவரா இருக்கலாமில்லையா? /

        நான் இளைஞனாகவும் , தன்னலமில்லாதவனுமாகவே இருக்கிறேன். எப்போதும் இருப்பேன். என்னைப்போல வெளிப்படையாகவும் , மிகக்கடுமையான தொனியிலும் “வன்னிப்போரின்” இறுதி நேரத்தில் எழுதித்தள்ளியவர்கள் இருந்திருக்க மாட்டார்கள். என் முந்தைய எழுத்துக்களை படித்திருப்பீர்கள் என்றே நினைக்கிறேன்.

        பகுத்தறிவுத்தளத்திலும் , சுயமரியாதைத்தளத்திலும் வெகுவேகமாக இயங்கினோம். அமைப்பொன்றை அமைத்தோம் , இணையத்தில் செயல்படுவதல்ல. களத்தில் செயல்படுவது.சென்னையில் , பெங்களூரில் , சிங்கப்பூரில் இன்னபல ஊர்களில் “இனவழிப்பை ” நிறுத்து” என்று ஆர்ப்பாட்டங்களை நிகழ்த்தினோம். இன்றைக்கும் அது இயங்குகிறது. ஆனால் என்ன அதன் செயல்பாடுகளிலிருந்து இப்போது நாம் விலகிக்கொண்டோம்.

        அவ்வளவுதான். அதற்கான காரணம் தனிப்பட்ட காரணம் என்று பொய் சொல்ல மாட்டேன். நான் முந்தைய பின்னூட்டங்களில் சொன்ன காரணம்தான் என்பதை ஒத்துக்கொள்ள எனக்கொன்றும் வெட்கமில்லை.

        • வயதளவில் இளைஞனாகவும் , வாயளவில் தன்னலமில்லதவனாகவும் இருப்பது பெரிய விடயமன்று. கடுமையான தொனி என்றால் எப்படி .. தொண்டையை செறுமிக் கொண்டு கீ போர்டை டொப்பு டொப்பு என்று கடுமையாக அடித்து அடித்து டைப் செய்தீர்களோ ?..
          இளைஞனாகவும் தன்னலமில்லாதவனாகவும் இருப்பவர் யாராக இருந்தாலும் நீங்கள் கூறியவாறு பேச மாட்டார்கள். ஒரு இளைஞன் என்றும் சோர்வுற்று போக மாட்டான் . தன்னலமில்லாதவன், தனது நலனைப் பற்றி கவலைப் படாமல் மக்கள் நலனுக்காக தொடர்ந்து வேலைகளை செய்வான். ஆனால் நீங்கள் மேற்கூறிய பதிவில் அதற்கு எதிராகத் தானே பதிவிட்டிருக்கிறீர்கள்?.. மக்கள் அப்படித்தான் இருப்பார்கள்.. யாராலும் ஒன்றும் செய்ய முடியாது என்று நிலை தாழ்த்தி பேசுவது எந்தப் பண்பிலிருந்து வருகிறது ?..
          இளைஞன் என்ற பண்பிலா ?.. தன்னலமில்லாதவன் என்ற பண்பிலா ?.

    • //////////////முழுக்க முழுக்க சுயநலத்தைக் கட்டியெழுப்பியபடி போய்க்கொண்டே இருக்கிறது. ……………………………………………………. கூட நேரமும் , சூழலும் இப்போட்டி உலகத்தில் இருப்பதில்லை ///////////

      அப்படிங்களா மதிபாலா ?.. ஆக இந்த உலகம் சுய நலத்தைக் கட்டியெழுப்பிக் கொண்டு போய்க் கொண்டே இருக்கிறது என்பதை இவ்வளவு ஆண்டுகள் புத்தகத்திலிருந்து கவுஜை வரை ஏட்டில் எழுதி எழுதி .. எழுதி எழுதி .. களைத்து இப்பொழுது கண்டுபிடித்து நீங்கள் குடும்பத்துக்காக ஒதுங்கி விட்டீர்கள். ஆனால் ம.க.இ.க தான் பாவம் இது புரியாமல் மக்(களுக்)காக இருக்கிறது.
      அதாவது மதிபாலா, புற்று நோய்க்கு மருந்து தயாரிக்குற வேலையை கையில எடுத்துட்டு, ”நாம எந்த காம்பினேசன்ல கெமிக்கலைக் கலந்து கொடுத்தாலும் அந்த புத்துக் கட்டி வளர்ந்துட்டே இருக்கு.. இது எல்லாம் நம்ம கையில இல்லைங்க எல்லாம் அவன் செயல்”னு ஒரு அரைகுறை டாக்டர் சொல்லுற மாதிரி இருக்கு நீங்க பேசுறது.

      ம.க.இ.க அந்த புற்று நோயைக் குணப்படுத்தும் செயல் திட்டத்துடன் அதன் தன்மைக்கேற்ப தனது மருந்துகளை தீவிரப்படுத்திச் செல்லும் கொள்கைப் பிடிப்பு உள்ள மருத்துவரே. எடுத்த இலட்சியத்தை இறுதியில் உறுதியாக வெல்லும். அப்போ நீங்கள் கூட வெக்கமில்லாமல் சொல்லலாம். நானும் ஒரு காலத்துல அவங்களுக்கு நல்லா ஊக்கம் கொடுத்தேன்னு.

      பின்குறிப்பு: மதிபாலா, வெக்கமில்லாமல் முற்போக்கு பேச, எழுத உங்களால் மட்டும் எப்படி முடிகிறது ?..

    • /////////////////////////சாதாரண – நடுத்தர வர்க்க மக்களிடம் தாக்கத்தை ஏதும் ஏற்படுத்தவில்லை என்ற உண்மையை நான் சொன்னால் உங்களுக்குக் கசக்கத்தான் செய்யும்..
      ஆண்டை மனப்பாங்………..///\\\\……………….. கலைஞர் , சன் , என்று நீண்டு கிடக்கும் ஊடக பலத்தூனூடே சிறுகட்சிகளும் , ஏன் பெரிய கட்சியான பாமக போன்றவைகளே நீந்திக் கடக்க பெரும்பாடு படுகிறார்கள்…
      //////////////////////////////////////////////////////////////////////

      மிகப்பெரிய கண்டுபிடிப்பு மதி … உங்களுடைய ஆர்ராய்யிச்ச்சிக்கு டாக்டர் பட்டமே கொடுக்கலாம். இந்தக் கண்டுபிடிப்பெல்லாம் , ஊட்டுல கம்பியூட்டருக்கு முன்னாடி உக்காந்துக்கினு கீ போர்டைத் தட்டீ…..தட்டீ …. கண்டுபிடிச்சதா வெளிய போய் சொல்லித்தொலச்சிற போறீங்க .. அப்புறம் கீழ்பாக்கத்துக்கு வழி சொல்லி அனுப்பிட போறாங்க… மக்களிடம் நேரடியாக இரயில்களிலும் பேருந்துகளிலும் மற்றும் வீடு வீடாக சென்றும் விடாமுயற்சியுடன் பிரச்சாரம் செய்யும் எமது தோழர்களைப் போல் பிரசாரம் செய்து மேற்கண்ட பதிவை பதிவு செய்திருப்பீர்களானால் உங்களுடன் இது குறித்து விவாதிக்கலாம். வீட்டிற்குள் மானாட மயிலாட பார்த்துக் கொண்டு, சொந்தக்கார மாமன் மச்சான்களுடன் பெருமைக்கு மட்டும் முற்போக்கு பேசிக் கொண்டு திரிந்தால் இப்படி கிணற்றுத் தவளை போலத்தான் புலம்பிக் கொண்டே திரிய முடியும் மதிபாலா.
      இன்னொரு பின்குறிப்பு: என்னது பா.ம.க பெரீய்ய்ய கட்சியா … ஆச்சர்யக்குறி …
      ***************************************************************************

    • ///////////////////////கொள்கைக்கான அரசியலுக்கு இங்கே மங்களம் பாடி ஆயிற்று. ஒரு நல்ல உதாரணம் சொல்லுங்களேன் ………………………………………………………..சாதிவேறுபாட்டை தீக்கிரையாக்கியதா? புதுப்புது பணக்காரர்களை உருவாக்கியதோடு முற்றுப்பெற்றது.
      /////////////////////////////////////////////////////////////////////////////

      இவ்வளவு விசயம் எல்லாம் உங்களுக்குத் தெரியும் என்று பீற்றிக்கொள்ள இங்கே வந்து பதிவிடுகிறீர்களா ?.. மாணவர் எழுச்சி உங்களைப் போல சும்மா உட்கார்ந்து கொண்டு கீ போர்டால் நடத்தப்படவில்லை என்று நம்புகிறேன்.

      பின்குறிப்பு: இங்கு பின்குறிப்பு ஏதும் கிடையாது .

      • இவ்வளவு விசயம் எல்லாம் உங்களுக்குத் தெரியும் என்று பீற்றிக்கொள்ள இங்கே வந்து பதிவிடுகிறீர்களா/

        ஹாஹஹா…இம்புட்டு அறிவு முதிர்ச்சியான செங்கொடி மருது போன்றவர்கள் மட்டுமே இப்பேர்ப்பட்ட அற்புத கண்டுபிடிப்புக்களை நிகழ்த்தவியலும். உம்போன்ற மிகப்பெரிய கண்டுபிடிப்பாளர்களுக்கு முன் அடியேன் எம்மாத்திரம்?. ப்ளீஸ் கேரி ஆன். தயவு செய்து உங்கள் மகத்தான பணியினைத் தொடருங்கள். இதற்கு மேல் நான் இங்கு தொடர என்ன இருக்கிறது? நன்றி.

        • ஐ … இங்க பாருடா .. மதிபாலா சாரு ரொம்ப டீசண்டா ஜகா வாங்கிகிறாரு …

          பார்த்து மதிபாலா சார் .. முன்னாடி பாத்துக்கிட்டே பின்னாடி ஜகா வாங்காதிங்க .. விழுந்திடப் போறீங்க …

          என்ன பண்றதுங்க மதிபாலா .. ஊட்டுக்குள்ளேயே உக்காந்துக்கினு கம்பியூட்டர் கிட்ட மட்டும் முற்போக்கு பேசிட்டு மக்களிடம் இறங்கி வேலை செய்யுறவங்ககிட்ட பிற்போக்கு பேசினா .. இப்படித்தான் ஆகும்.. பாத்து … பின்னாடி உங்க வீட்டு சுவர் இருக்கும் .. ஓவரா ஜகா வாங்கி செவத்துல முட்டிக்காதிங்க.. அப்புறம் உங்க பிடரி ’கவா’ .. ’கவா’ ங்கும் ..

    • ////////////////////////////////////உங்களுக்கான பொது எதிரி யார்? ஒட்டுமொத்த சமூகம்.?
      ஒட்டுமொத்த சமூகத்தை எதிர்த்து உங்கள் சித்தாந்தங்களை நீங்கள் மக்களிடம் வெற்றிகரமாக கொண்டு செல்ல முடியாது என்பது முதல் கருத்து. இனி ஏன் எடுபடாது என்பதைப் பார்ப்போம்./////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

      இதோ கருத்து கந்தசாமி கருத்து சொல்ல வந்துட்டார். அது எப்படி மதிபாலா உங்களுக்கு உங்கள் பார்வையின் பொதுமக்களாகிய உங்கள் மாமன் மச்சான்கள் சொன்னார்களா “ம.க.இ.க வின் பொது எதிரி ஒட்டு மொத்த சமூகமும்” என்று?.. ம.க.இ.க வின் நோக்கம் மறுகாலனியாதிக்கத்தை ஒழிப்பதும், பார்ப்பன பயங்கரவாதத்தை ஒழிப்பதுமேயாகும். இந்த இரண்டு கொடூரங்களிலிருந்தும் மக்களை தெளிவுபடுத்தி வெளிக்கொண்டு வரவே ம.க.இ.க வினர் போராடுகிறனர்.
      கொஞ்சம் பொது அறிவு இருக்குறவங்க கூட சிந்திப்பாங்க மதிபாலா .. ஒட்டுமொத்த சமூகத்தையும் எதிரியாக பார்த்துட்டு அவங்க யாருக்காக போராடுவாங்கனு ஒரு நிமிசம் கூட உங்களால சிந்திக்க முடியவில்லையே ஏன் ?..

    • \\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\
      நீங்கள் போடும் தெருமுனைக் கூட்டங்களை , அதில் கூடும் இளைய சமூகத்தைப் பார்க்கும் போதெல்லாம் , முன்பொருமுறை உங்களது சென்னைக் கூட்டத்திற்கு ( மாவோயிஸ்டுகளுக்கு எதிரான போரைப் பற்றி என்று நினைக்கிறேன்) வந்த கூட்டத்தைப் பற்றிக் கேள்விப்படும் போதெல்லாம் தன்னலமற்ற இளைஞர்கள் இன்னமும் இருக்கிறார்கள் என்று நினைக்கும் பெருமை…………../////////////////////////\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\……………………….. எனது சிந்தனையில் சொல்கிறேன். மக்களின் சார்பாக நான் பேசவில்லை. என் பார்வையில் மக்களைப் பற்றி நான் பேசுகிறேன்.
      நன்றி.
      //////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

      மதிபாலா .. நீங்கள் டாக்டர். ருத்ரன் அவர்களை சந்தித்து ட்ரீட்மண்ட் எடுத்துக் கொள்வது நல்லது என்று நினைக்கிறேன். ஒரே நேரத்தில் நேர்னிலை எதிர்னிலைக் கருத்துக்கள் உங்கள் மனதில் வந்து வந்து போகின்றன. அதை தாங்கள் மேற்கூறிய பதிவில் காண முடிகிறது. ஒரு அமைப்பின் எதிரியை நீங்களே கற்பனை செய்து கொண்டு விடுகிறீர்கள். வீட்டிற்குள்ளேயே உட்க்கார்ந்து கொண்டு சமூகத்தைப் பற்றியும் மக்களைப் பற்றியும் சிந்தித்தால் இவ்வாறு பலவித சிந்தனைகள் வந்து செல்வது இயல்பு. ஆகையால் கொஞ்சம் வெளியில் வந்து மக்களைப் பார்த்து பின்னர் சிந்தித்தால் நலம். முதலாளித்துவம் மக்களை எந்த வகையிலும் பாதிக்கவில்லை என்று நீங்கள் கூறுவதைப் பார்த்தால் கடந்த சில மாதங்களாக நீங்கள் பேப்பர் படித்தல் , செய்திகள் கேட்டல் போன்றவற்றை நிறுத்தி விட்டீர்கள் என்று நினைக்கிறேன். ஃபாக்ஸ்கான் கம்பெனியில் நடந்த விசவாயுக் கசிவு , சான்மினா கம்பெனியின் தொழிலாளர்களுக்கு மிகக் குறைந்த ஊதிய உயர்வு என்று சென்னையிலேயே இவ்வளவு பிரச்சனை. இதெல்லாம் ஒருவேளை அந்த தொழிலாளர்களின் தலையில் இறைவன் எழுதி வைத்திருந்திருப்பாரோ ?.. இல்லை கம்யூனிஸ்ட்டுகள் செய்த சதியோ ?.. பதில் கூறவும். முதலில் மக்கள் யாரும் வர மாட்டார்கள் அவர்களுக்கு இது குறித்து கவலைப்பட நேரம் இல்லை என்றீர்கள். பிறகு மக்கள் கூட்டம் திரண்டதைக் கண்டு பெருமையடைந்தேன் என்றீர்கள். என்ன இது ?..ம்ம் ?.. ஒரு அமைப்பை விமர்சனம் செய்யும் போது குந்தாங்குறையாக குறை சொல்லக்கூடாது. அந்த அமைப்பின் எதிரி யார் என்பது கூடத் தெரியாமல் விமர்சனம் செய்யும் உங்களை எந்த வாயால் வாழ்த்துவது என்று தெரியவில்லை?. சித்தாந்தத்தையும் புரட்சியையும் உங்களைப் போல் வீட்டிற்குள் அமர்ந்து கொண்டு பேசும்போது அவை அலங்கார வார்த்தைகள் தாம். சமூகத்தில் மக்களோடு இணைந்து வேலை செய்யும் போது அவை வாழ்வு முறையாகின்றன. எமது தோழர்கள் அப்படித்தான் பயிற்றுவிக்கப் படுகின்றனர். மேலும் உலக கம்யூனிஸ்ட் தலைவர்களில் என்ன குற்றம் கண்டீர்கள். யார் சுயநலவாதியாகியது ?.. யார் அடக்குமுறையாளராகியது? முதலாளித்துவ ஓநாய்களின் ஊளைகளை மூளையில் பதிவு செய்து வந்து இங்கே ஒலிபரப்ப வேண்டாம் மதிபாலா .. எந்த தலைவரைப் பற்றி விமர்சனம் உமக்கு..
      ”இந்த சூழ்னிலையில் இந்தப் போராட்டம் வெற்றி பெறாது . ஒரு வேளை வெற்றி பெற்றாலும் நீங்களும் காலத்தின்போக்குக்கு வளைந்து கொடுப்பீர்கள் “ என்று முற்போக்கு பேசிக்கொண்டே மக்களின் மனதில் அவதூறைப் பரப்பும் அறிவிலியாக உங்களை இவ்வளவு சீக்கிரம் நீங்களே தரம் தாழ்த்திக் கொள்வீர்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

      சரி மதிபாலா , மக்கள் வர மாட்டார்கள் என்பதற்காக என்ன செய்யலாம் என்றும் நீங்கள் ம.க.இ.க விற்கு கொஞ்சம் கூறுங்களேன். அப்படியே ஆளும் கட்சிகள் காலை நக்கிக் கொண்டு , சினிமா நடிகர்களுக்கு பாராட்டு விழா எடுத்துக் கொண்டு திரியச் சொல்லுகிறீர்களா ?.. தவிர்க்காமல் பதில் கூறவும்…

  33. “உமாசங்கர் இடைநீங்கம் வாபஸ்”
    போராடிய தோழர்களுக்கு வாழ்த்துக்கள்.
    பச்சை மிளகாயின் காரத்தன்மை பற்றி பூசணிக்கு தெரிந்திருக்கிறது, ய்யேவ்..ராம் சுந்தர்ஜிக்கு தெரியாதா என்ன!

  34. அருமையான பதிவு .. இணையத்தில் முதலாளித்துவத்தை தொடர்ந்து ஆதரித்த மற்றும் எனக்கு நெல்லிக்கனியும் தந்த கொடைவள்ளல் அதியமானே ம.க.இ.க மிளகாய் என்று ஒத்துக் கொண்டார் ..

    அதியமான் .. உங்களை விரைவில் தோழர். அதியமான் என்று கூப்பிடப் போகிறோம் என்று நினைக்கிறேன் ..

  35. ம.க.இ.க வின் நிலைப்பாடு பற்றி மிகத் தெளிவாக இந்தப் பதிவு உள்ளது தோழர்களே ..
    பருத்த பூசனியாய் இருப்பதை விட தீமையை எரிக்கும் மிளகாயாக இருப்பதால் தான் ம.க.இ.க இன்று வரை சீராக வளர்ச்சிப் பாதையில் செல்கிறது. இங்கு எதிர்வாதம் புரிந்த யாருமே அமைப்பைக் குறை சொல்ல முடியாமல் வயிற்றெரிச்சலில் புலம்பியதே இந்த அமைப்பின் வளர்ச்சிக்கு சான்று.

  36. இறுதியாக : ம.க.இ.க உறுப்பினர்கள் பற்றி என்றும் எமக்கு மரியாதை உண்டு. நேர்மை, அர்பணிப்பு, சுயனலமற்ற பொது நோக்கு, கொள்கை பிடிப்பு, தியாகம், தைரியம் போன்ற மிக உயர்ந்த குணங்கள் கொண்ட லட்சியவாதிகள். (அந்த மரியாதை காரணமாக தான் பல கேவலமாக தனிமனித தாக்குதல்கள், வசைகள் தொடர்ந்து என் மீது இங்கு வீசப்பட்டாலும், அவற்றை சகித்துக்கொண்டு தொடர்ந்து இங்கு பின்னூட்டம் இடுகிறேன்.) ஆனால் அவர்களின் கொள்கைகள் மீது கடுமையான முரண்படு உண்டு என்பது் இங்கு அனைவருக்கும் தெரிந்ததுதான். நேர்மை மிக அரிதான இக்காலத்தில், மிகுந்த நேர்மையுடன் தொடர்ந்து போரட்டும் இக்குழுவின் மீது மரியாதை கொள்ளாமல் இருக்க முடியாது.

    ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் இளம் தொண்டர்கள் பற்றியும் இதே மதிபீடு தான் கொண்டுள்ளேன். அவர்களின் கொள்கைகள் மற்றும் சித்தாந்தங்களை ஏற்க்க முடியாது. (ஆனால் பல சமயங்களில் அருமையான பொதுச்சேவைகளும் ஆற்றிவருகின்றனர். உதாரணமாக சுனாமி நிவாரணப் பணிகள் போன்றவை..

    Both the groups are full of misguided idealists who are selfless and dedicated to their objectives. Unfortunately their polices usually are against basic democracy and end in violence and blood shed. And many have closed minds due to continuous brain washing and are self righteous and belive that their path is the one and only path to heaven. But the old saying says : “the road to hell is paved with good intentions” ; more people were killed in the name of idealism than any other act.

    • /////////ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் இளம் தொண்டர்கள் பற்றியும் இதே மதிபீடு தான் கொண்டுள்ளேன். அவர்களின் கொள்கைகள் மற்றும் சித்தாந்தங்களை ஏற்க்க முடியாது. //////////

      ஆர் எஸ் எஸ் சையும் ம.க.இ.கவையும் ஒரே தட்டில் வைத்தா பார்க்கிறீர்கள்???

      காமாலை கண்ணுக்கு எல்லாமே மஞ்சலாக தான் தெரியுமாம்!

      சரி! ஆர்.எஸ்.எஸ் சுடன் உங்களுக்கு கருத்து வேறுபாடு இருக்கிறதா என்ன??

      எதில் நீங்கள் உடன்படவில்லை? கொஞ்சம் சொல்லுங்களேன் தெரிஞ்சுக்குறோம்…. 🙂

      • //காமாலை கண்ணுக்கு எல்லாமே மஞ்சலாக தான் தெரியுமாம்//

        this suits you and Avvai best. First try to understand what had written very clearly.
        I was talking about personal qualities, ethics and morals. not about idealogy or polices.

        • ஆமாமாம். நீங்கள் எய்தருதெல்லாம் எனக்கு தமிழா தெரியுது. தமிழ்ல எய்துங்க ஐயா!

        • “I was talking about personal qualities, ethics and morals.”

          எது நன்னடத்தை. பீபிக்களின் யோனிகள் சுன்னத் செய்யப்படாத …ண்ணிகளை சுவைக்கட்டும்னு சொன்னாங்களே அதுவா!

        • கலை,

          அசுரனுக்கு அளித்த மருந்தை உமக்கு அளித்தால் தான் சரி போல. சொந்த பெயரில், புகைபடத்துடன் எழுத முடியாத கோழை பயலுக, எப்படி மக்களை திரட்டி செம்புரட்சி செய்ய போகிறீர்களாம் ? உண்மை பெயரில் எழுதினால் என்ன சி.அய்.டி போலிஸ் பிடித்து கொள்ளுமா என்ன ? கழிவரையில் யாரும் பார்க்காத போது கிறிக்கும் ஜன்மங்கள் இணையத்தில் நிறைய இருக்கின்றன. இந்த உலகமயமாக்கல் ஓவரா வேலை செஞ்சு, இலவச பிளாகர் மற்றும் மனைகள் அளித்தது தப்பா போச்சு.

          நான் சொன்னது உறுப்பினர்களின் ‘தனி மனித குண நலன்கள்’. சும்மா திரிக்க வேண்டாம்.

          நல்ல விசியங்களை பாராட்டி சொன்னது தப்போ ?
          வினவு : என்ன சொல்றீக ?

        • அதியமான், நான் சொந்த பெயரில் எழுதுகிறவன் எது நன்னடத்தை. பீபிக்களின் யோனிகள் சுன்னத் செய்யப்படாத …ண்ணிகளை சுவைக்கட்டும்னு சொன்னாங்களே அதுவா! பதில் சொல்லவும் வாயே கேளராதீக அதியமான்

        • RSS ன் கொல் கைக்கும் மகஇகவின் கொள்கைக்குமான வேறுபாடு தெரியாதவறா நம்ம அதியமான்! கொள்கை தவறாம். உறுப்பினர் நேர்மையானவராம். இப்படித்தான் 5 வருஷம் முன்னாடி வாஜ்பாயியை,”தவறான கட்சியில் இருக்கும் சரியான மனிதர்” என்று சில பேர் சொன்னார்கள். இவர்களை பிழைப்புவாதிகள் என்கிறோம் நாங்கள். அப்போ நம்ம அதியமான்?

          ’உலகமயமாக்கல் ஓவரா வேலை செஞ்சு, இலவச பிளாகர் மற்றும் மனைகள் அளித்தது தப்பா போச்சு’

          அப்போ இலவசமா கொடுக்குற அளவுக்கு கொ ள்ளையடிச்சு வச்சு இருக்குறாங்கன்னு ஒத்துக்கிறீங்களா அதியமான்?
          உலகமயமாக்கலின் விளைவாக நாங்கள் ஓவரா வேலை செய்யிறதினாலதான் நீங்கள் எல்லாம் உலகம் பூரா ஓவரா பெருத்துப்போய் கிடக்குறீங்க. சும்மா இலவசம் இலவசம்னு ஏன் அந்த தேய்ந்துபோன ரெக்கார்டயே திரும்ப திரும்ப சொல்லுறீக?

        • ”புகைபடத்துடன் எழுத முடியாத கோழை பயலுக,”

          புகைப்படத்துடன் எழுதுனா வீரமான ஆளா! எங்க உங்க வீரத்தை நாங்க பார்க்கனும். உங்களுக்கு பிடிக்காத RSS ன் தவறான கொள்கைகளை கோயம்புத்தூர் உக்கடத்து தெருவுல நின்னு ஒரு ஆர்ப்பாட்டம் நடத்துங்களேன், பார்ப்போம்

        • //RSS ன் கொல் கைக்கும் மகஇகவின் கொள்கைக்குமான வேறுபாடு தெரியாதவறா நம்ம அதியமான்!///

          ஏன் இப்படி திரிக்கிறீர். நான் அப்படியா சொன்னேன். தமிழ்நாட்டில், நான் சந்தித்த, பழகிய ஆர்.எஸ்.எஸ் நண்பர்களை பற்றி பொதுவாக அப்படி சொன்னேன். இடதுசாரி நண்பர்களை பற்றியும் சொன்னேன். மதவெறியில், இஸ்லாமியர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியவர்களை நியாயப்படுத்தவில்லை. பழிக்கு பழி என்ற வெறியில், மிக நல்லவர்களும், மிக கொடூரமாக பொது விசியங்களில் நடந்து கொள்ளும் கொடுமையை என்றும் எதிர்க்கிறேன்.

          கோவையில் பல ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறேன். 80கள் வரை மிக மிக அமைதியான அருமையான ஊராக இருந்தது. இந்து-முஸ்லிம் கலவரங்களே கிடையாது. மோதல்கள் கிடையாது. அயோதியா பிரச்சனையை இந்துத்வாதிகள் கிளப்பிய பின் ஆரம்பித்தது வினை. 80களில் மத்தியில் ஒரு இந்து முன்னனிகாரர் முதலில் கொல்லப்பட்டதில் ஆரம்பித்த கொலைகள் / மறுகொலைகள் 1998 குண்டு வெடிப்பில் முடிந்தது. மிக அருமையான ஊரை நாசம் செய்துவிட்டனர். இரு தரப்பிலும் வெறி பிடித்து அலைந்தனர்.
          ஆனால் இதற்க்கான வித்து இந்துத்வா தரப்பில் இருத்துதான் என்பது உண்மை.

    • மன்னர் அதியமான் அவர்களே ..
      உங்களுடைய இந்த உரை வீச்சில், சிறு சிறு சந்தேகங்கள் எனக்கு வருகின்றன.
      அவை

      1. குஜராத்தில் அப்பாவி இஸ்லாமியர்கள் 3500 பேரை 4 நாட்களில் கொன்ற அந்த மத வெறியர்களும், 23000 பேரைக் கொன்ற டௌ கெமிக்கல்ஸை எதிர்த்து தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்த ம.க.இ.க தோழர்களும் ஒன்றா ?.. அது எங்ஙனம் ?..

      2. நாட்டில் பல இடங்களில் குண்டு வெடிப்புகளை நடத்திவிட்டு , அதற்கு ஆதரவான வீடியோ வெளிவந்த போது அதை யார் வெளியிட்டார்கள் என்று கேள்வி கேட்ட அந்த ஆர்.எஸ்.எஸ்ம் ம.க.இ.க வும் ஒன்றா ?..

      3. அவர்கள் செய்வது அயோக்கியத்தனம் என்று தெரிந்தும் மக்களை கொன்று வரும் ஆர்.எஸ்.எஸ். அல்லக்கைகளும் மக்களுக்காகவும் மக்களின் பிரச்சனைகளுக்காகவும் போராடும் ம.க.இ.க தோழர்களும் எவ்வாறு ஒரே பாதையை நோக்கி பயணிப்பவர்களாக உங்களுக்குத் தெரிகிறார்கள் ?..
      நீங்கள் ஆங்கிலத்தில் பேசியதற்கான கேள்வி பதில்கள் கீழே ..

      Ok .. you find PALA activists being misguided?.. Wow .. what an invention ?..
      Another beauty in your invention is that R.S.S cadres are selfless.

      Fine .. Now tell me , How are you saying that PALA comrades are misguided ?.. Or Tell me how wrong is the way PALA comrades are marching towards..

      If you can define RSS cadres are good and selfless, Then How will you define al-queda ?..

      RSS is starting and ending with the violence only but against the hard working minority muslims and Not PALA.

      How are you going to define the blood war by this state under the name of democracy which is happening @ North East India , Kashmir and Dantewada against the people living there?..

      Regarding Brainwash , The case is completely different in RSS as they are foolished with the name of God which doesn’t exists ..
      But how do you think PALA comrades were being Brain washed ?..

      They are towards a prooved system called socialism which existed in Old Soviet union , Old China.

      இந்த அவ்வைக்கும் கொஞ்சம் ஆங்கிலத்தில் பேச ஆவலாக இருந்ததால் பேசினேன். சொற்பிழை இருப்பின் மன்னிக்கவும்.

      ஆர்.எஸ்.எஸ். என்பது “ஓடுறான் பிடி , ஓடுறான் பிடி”ன்னு யாரைப் பிடிக்கப் போகிறோம்னு தெரியாமலேயே முன்னாடி ஓடுறவன் பின்னாடியே ஓடுற கூட்டம்.

      ம.க.இ.க என்பது முற்றிலும் சாத்தியமான சோசியலிச அரசு அமைய சரியான செயல் திட்டத்துடன் இயங்கும் ஒரு குழு. இங்கு ஒழுக்கம் உண்டு. மக்களுக்கு துன்பங்கள் தருவதில்லை. மக்களுடன் இணைந்து மக்களுக்காக போராடுகிறோம்.

      மாமன்னா …. ஒரு விசயம் தெரிந்து கொள்ளுங்கள். மாற்றம் ஒன்றே மாறாதது.
      உங்கள் (முதலாளித்துவ) ஆட்சியும் அப்படித் தான். ஆகையால் தூங்கும் போது அரியணையைக் கட்டிப் பிடித்துக் கொண்டே ஜாக்கிரதையாக தூங்குங்கள். செம்படை வந்து கொண்டிருக்கிறது. நடுவில் செம்படையைத் தடுக்க உங்களின் காவிப் படை முயலும். சிவப்பின் நியாயமான போராட்டம் காவியின் அடித்தட்டு வர்க்கத்தை சிவப்பிற்கு மாற்றும். ஏனெனில் மாற்றம் ஒன்றே மாற்றமில்லாதது ..

      – மாமன்னர் அதியமானுடன் ஆங்கிலம் பேசிய அவ்வை.

      • rssயை விட இதுபோன்ற சாதுக்கள்தான் ஆபத்தானவர்கள். rss யை வெகுஜன மக்களிடம் கொண்டு செல்பவர்கள்இவர்கள்தான். இவர்கள் தெரிந்தும் தெரியாதது போல் பேசுவார்கள், தெரியாததையும் தெரிந்ததுபோல் பேசுவார்கள். ஏன்னா இவர்கள் எல்லாம் தெரிந்த saffron-oxford ஆசாமிகள்.

        • நான் நெம்பர் ஒன் பிழைப்புவாதி தான் ஒத்துக்குறேன்
          ஆனா அதுக்குன்னு பார்ப்பன பயங்கரவாதிகளான
          ஆர்.எஸ்.எஸ் பொறுக்கி நாய்களையும்,
          மக்களை கொல்வதில் அந்த நாய்களிடமிருக்கும்
          நேர்மையையும் கொள்கை பிடிப்பையும் ரசிக்கும்
          அளவுக்கு நான் கேவலமான பாசிஸ்ட் அல்ல.

  37. ஐ … இங்க பாருடா .. மதிபாலா சாரு ரொம்ப டீசண்டா ஜகா வாங்கிகிறாரு …

    பார்த்து மதிபாலா சார் .. முன்னாடி பாத்துக்கிட்டே பின்னாடி ஜகா வாங்காதிங்க ../

    அதை உங்கள் பாணியில் சொல்வதாக இருந்தால் “ஜகா” என்று சொல்லலாம். இல்லை நான் நினைத்தது அவ்வாறில்லை.

    எல்லாம் தெரிந்த நிறைகுடமான உங்களிடம் நான் என் பெருமையை பீற்றிக்கொள்ள என்னவிருக்கிறது என்றும் கொள்ளலாம்.

    மற்றபடி இதன்பிறகு நான் தும்மினாலும் , எதை எழுதினாலும்கூட எங்கே என் பெருமையை நான் பீற்றிக்கொள்ள இதைச் சொல்கிறேனோ என்ற சந்தேகம் எனக்கு வந்துவிடும். அட்

    அதனால் எனக்கும் சவுகரியமாய் இருக்காது , உங்களுக்கும் நேரவிரையம்.

    அதனால் நீங்கள் தொடருங்கள். நாங்கள் பார்வையாளர்களாகவே இணைந்திருப்போம் இப்போதைக்கு.

  38. In terms of support from different sections and political impact CPI(M) and CPI, put together are miles ahead of groups/front organizations like Ma.Ka.I.Ka. The lack a political identity is a big disadvantage.CITU and its relationship with CPIM are too well known.In your posters etc there is no mention about the political party/organization which is behind these front organizations.The front organizations cannot be a substitute for a political party.The reach of front organizations among middle class employees and govt. employess is less than that of CPI(M). The limited support base and lack of a political face will ensure that the front organizations never attain the stature of a mass organization or a political party that enjoys wide support.

  39. எனது சக உயிரின‌‌மான மதிபாலாவுக்கு,

    நண்பா நம்மால‌ முடியலைன்னா பேசாம
    முன்னாடியும் பின்னாடியும் மூடிட்டு
    உட்காரனும் அதவுட்டுட்டு நீங்க இப்பிடி
    ரெம்ப ரெம்ப யோக்கியன் கணக்கா
    பேசினா எனக்கே கெட்ட கேவம் வந்துரும்.

    இப்ப ம.க.இ.க காரங்ககிட்டயிருந்து இப்பிடி
    ஆப்பு வுழுகுதே இது தேவையா ? அவிங்கள பத்தி
    ஒனக்கு ஒழுங்கா தெரியலைனு நினைக்கிறேன்
    அவிங்க அவ்வளவு சீக்கிறமா விடமாட்டாங்கய்யா ?

    எதுக்கு இப்பிடி எங்களுக்கெல்லாம் கெட்டப்பேரை
    வாங்கித்தற ? எங்கள மாதிரி மூடிட்டு ஜெண்டிலா
    ஜீவிக்காமல் ஏனய்யா இப்பிடி பேரைக் கெடுக்கிறீர் ?

  40. களத்தில் போராடும் மக்களையும் சரி ம.க.இ.க. தோழர்களையும் சரி இழிவுபடுத்தும் எவனாக இருந்தாலும் நான் துணிச்சலாக சொல்கிறேன்
    அவனை நான் [obscured].அவன் எவனாக இருந்தாலும் பரவாயில்லை.

  41. //அசுரனுக்கு அளித்த மருந்தை உமக்கு அளித்தால் தான் சரி போல//

    எனக்கு என்னய்யா மருந்தை அளித்தாய்? சொன்னா நானும் தெரிஞ்சுக்க்வேன்.

    இங்க வினவுல பலமுறை அதியமானுக்குத்தான் தோழர்கள் எல்லாம் சேர்ந்து மருந்து கொடுத்துப் பார்த்தார்கள். (திருந்தவில்லை என்பது வேறு விசயம்)

    • அசுரன்,

      கருத்துகளை, கருதுக்களால் மறுக்காமல், தனிமனித தாக்குதல் தொடர்ந்து நீர் செய்ததால், உம்மை ‘போடா வெண்ண’ என்று திருப்பி அளித்தேனே, அந்த ’மருந்தை’ சொன்னோன். அதை பற்றி வினவு இதுவரை ஒன்றும் சொல்லாதற்க்கு காரணம் உமக்கு புரியாது தம்பி.

      • //அசுரன்,

        கருத்துகளை, கருதுக்களால் மறுக்காமல், தனிமனித தாக்குதல் தொடர்ந்து நீர் செய்ததால், உம்மை ‘போடா வெண்ண’ என்று திருப்பி அளித்தேனே, அந்த ’மருந்தை’ சொன்னோன். அதை பற்றி வினவு இதுவரை ஒன்றும் சொல்லாதற்க்கு காரணம் உமக்கு புரியாது தம்பி.//

        நண்பர்களே, தோழர்களே,

        மன்னர் அதியமான் அளிக்கும் ‘போடா வெண்ண’ என்ற அருமருந்தை அனுதினமும் பருகி அனைவரும் முதலாளித்துவ தாசர்களாக மாறிவிடுங்கள். நம்புங்கள் இந்த மருந்து உண்மையிலேயே பலனளிக்கிறது. ஏனேனில் இதைத் தருபவர் ‘போடா வெண்ண’ புகழ் அதியமான்.

        கடைசியில் அதியமானால் முடிந்தது இதுதான். இதுவரை வைத்துள்ள பல்வேறு கேள்விகளுக்கு பதில் இன்று வரை அளிக்காமல் கடைசியில் எப்போதும் போல திட்டும் வேலையில் இறங்கிவிட்டார் அதியமான். அந்தோ பரிதாபம்….

        • // இதுவரை வைத்துள்ள பல்வேறு கேள்விகளுக்கு பதில் இன்று வரை அளிக்காமல் கடைசியில் எப்போதும் போல திட்டும் வேலையில் இறங்கிவிட்டார் அதியமான்.//

          அசுரன்,

          இது நான் சொல்லவேண்டிய டைலாக். நீர் பேசுவது வேடிக்கை. நேற்று மெட்ரோ வாட்டர் பற்றிய விவாதம் முதல் பல நூறு விசியங்களில் கடைசியாக பதிலளிக்காமல் இருப்பது யார் என்பதை வாசகர்கள் முடிவு செய்து கொள்ளட்டுமே. முத்தமிழ் குழுமத்தை வேண்டுமானல், இந்த ‘திட்டற’ விசியம் பற்றி கேட்க்கலாமே !!

        • அதியமான் அவர்களே அசுரன் ஒரு அசுர குணம் படைத்தவன். பாத்து பின்னூட்டம் போடுங்கள்.

  42. முதலாளித்துவம், பார்ப்பனீயம், மனித குலத்திற்கு எதிரான பாசிசம்… இவற்றின் தீவிர ஆதரவாளர் ஆக பரப்புரைகளை செய்து வரும் அதியமான் அவர்களுக்கு…

    இந்த பதிவு பின் நவீனத்துவ சுந்தர் அவர்களுக்கு வினவு எழுதிய பதில்…

    இந்த பதிவு தொடர்பான பதில்களை இடுவது விட்டு… டவ், ரிலயன்ஸ், தி ஹிந்து என்கிற மலம் போன்றவற்றை இழுத்து… குரங்கு குமார் போல் மரத்திற்கு மரம் தாவுவது சரியா?

    உங்களுக்கு முதலாளித்துவம் பிடித்துள்ளது… ஜெயலலிதா பிடித்துள்ளது… பார்ப்பனீயம் பிடித்துள்ளது என்பதற்காக எல்லோருக்கும் பிடித்திருக்க வேண்டிய அவசியம் இல்லையே?

    உங்களுக்கு கருத்துக்களுக்கு மாற்று கருத்து இருந்தாலும் நாகரீகமாக பதில் அளிக்கும் வகையில் விவாதம் செய்யலாமே?

    குரங்கு குமார் போல் மரத்துக்கு மரம் தாவி… பதில் சொல்பவர்களின் தாவு தீர வைப்பது ஏனோ?

    நீங்கள் எந்த மரத்திற்கு தாவினாலும் முதலாளித்துவம் என தென்னங்கள் மற்றும் பார்ப்பனீயம் என பனங்கள் எனும் போதைகளை குடித்து மகிழ்பவர் என்பது நீங்களே உலகிற்கு அறிவித்த உண்மை…

    தி பொந்து, ரிலயன்ஸ், டவ் என ஆதாரங்களோடு வினவு தோழர்களை தாவித் தாவி அடித்து நொறுக்குவதால்…

    உங்களை அன்போடு குரங்கு குமார் அழைத்து உங்களை பெருமைப்படுத்தாமே?

  43. //உங்களுக்கு முதலாளித்துவம் பிடித்துள்ளது… ஜெயலலிதா பிடித்துள்ளது… பார்ப்பனீயம் பிடித்துள்ளது என்பதற்காக எல்லோருக்கும் பிடித்திருக்க வேண்டிய அவசியம் இல்லையே//

    தமிழ்குரல் அவர்களே,

    மிக மிக தவறான புரிதல். பார்பானியம் மற்றும் ஜெவை எமக்கு பிடிக்கும் என்று யார் சொன்னது ? நீங்களே அனுமானித்து கொள்ள வேண்டாமே.

    வெறும் முதலாளித்துவத்தை யான் ஆதரிக்கவில்லை. மனித உரிமைகளை மிக ஆதரிக்கிறேன். அதில் முதலாளித்துவத்தின் ஆணிவேறான சொத்துரிமையும் ஒன்று. சர்வாதிகாரத்தை, ஃபாசித்தை மிக வெறுக்கிறேன். எனது நிலைபாடு பற்றி தெளிவாக அறிய :

    http://athiyaman.blogspot.com/2008/10/holiest-of-all-holies.html

  44. //உங்களுக்கு கருத்துக்களுக்கு மாற்று கருத்து இருந்தாலும் நாகரீகமாக பதில் அளிக்கும் வகையில் விவாதம் செய்யலாமே?///

    இதை இங்குள்ள தோழர்களுக்கு சொன்னால் சரியாக இருக்கும்.

    ஒரு கேள்விக்கு பதில் சொல்லும் போது பல இதர விசியங்களையும் பேச வேண்டியிருக்கிறது. நூலிழை போல. அதை குரங்கு என்று கருதுவது உமது கோணம். விவாதம் விரிவடைகிறது என்றும் கருதலாமே. புதிய விசியங்களை அனைவரும் தெரிந்து கொள்ள வாய்ப்பு என்று கருதலாமே.

  45. A logically Brilliant and Structurally Beautiful Essay for Knowledge-Blind full People!

    While searching some thing in vinavu I got this!

    The method of vinavu’s discussion with opponent ideas is very effective!

    keep it up vinavu!

    my hats off !

Leave a Reply to கேள்விக்குறி பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க