privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்ஊழல்பாண்டிச்சேரி கவர்னர் இக்பால் சிங் ஒரு பிக்பாக்கெட்டாமே!

பாண்டிச்சேரி கவர்னர் இக்பால் சிங் ஒரு பிக்பாக்கெட்டாமே!

-

புதுவை கவர்னர் இக்பால் சிங் ஒரு பிக்பாக்கெட்டாமே!
'பிக்பாக்கெட்' இக்பால் சிங்

ந்தியாவின் தேசிய கௌரவங்கள் லிஸ்ட்டில் கவர்னர்களுக்கு முக்கிய இடமுண்டு. அரசியல் சட்டத்தின் ஆட்சியை அவர்தான் பாதுகாக்கிறார் என்ற பில்டப்பும், கவர்னர் மாளிகை, குடியரசு தின மரியாதை என்று ஏகப்பட்ட அயிட்டங்களும் அதில் அடக்கம்.

அப்பேற்பட்ட மரியாதை கொண்ட இந்த பதவியை பிக்பாக்கெட் என்று அழைப்பதில் சில அப்பாவி தேசபக்தர்களுக்கு வருத்தம் இருக்கும். போகட்டும், வருத்தத்தை கொஞ்சம் தாங்கிக் கொண்டு மீதியைப் படியுங்கள், நீங்களே கும்முவீர்கள்!

வெளியே குதிரை வளர்ப்பு தொழிலைக் காட்டிவிட்டு உள்ளுக்குள் முதலாளிகள், அதிகாரிகள், அரசியல்வாதிகள் கறுப்புப் பணத்தை வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கியிருக்கும் ஹசன் அலியை அமலாக்கப்பிரிவு கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது. இந்த ஹசன் அலி சிங்கப்பூர் போவதற்கு பாஸ்போர்ட் வாங்கிக் கொடுத்தவர் தான் தற்போது புதுச்சேரியில் கவர்னராக இருக்கும் இக்பால் சிங். அப்போது பீகார் மாநில காங்கிரஸ் எம்.பியாக இருந்தவர்.

இந்த சிங்கப்பூர் விஜயம் மூலமும் கருப்புப் பணம் வெளியேறிக்கிறது என்பதால் ஹசன் அலிக்கும், கவர்னர் சிங்குக்கும் உள்ள தொடர்பை தற்போது விசாரித்து வருகிறார்கள். எனினும் காங்கிரசுக் கட்சியைச் சேர்ந்த கவர்னர் என்பதால் சிங் அப்படி சுலபமாக சிக்கவிடமாட்டார்கள்.

நேற்று அ.தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் புதுச்சேரி பந்த் நடந்திருக்கிறது. நோக்கம் ஊழல் கவர்னரை மாற்றச் சொல்வது. அதிலும் கூட அந்த சிங்கை தண்டிக்க வேண்டும் என்று கூட அவர்கள் கோரவில்லை. சரி, ஊழல் கட்சியான அ.தி.மு.கவே மக்கள் ஆதரவுடன் பந்த் நடத்துமளவுக்கு சிங் என்ன செய்தார்?

இவரது அப்பா லால்சிங், ஜாலியன் வாலாபாக் படுகொலையின் போது அடிபட்டவராம். அந்த தகுதியை வைத்து அரசியலில் ஆளான இக்பால் சிங் மோசடிகளின் மூலம் சொத்து பத்துக்களை பெருக்கி வருகிறார். சரக்குக்கு பேர் போன புதுச்சேரியில் இவர் குடிக்கும் சீமைச்சாராய விஸ்கியின் ஒரு ஃபுல்லின் விலை ஒரு இலட்சமாம். கவர்னரின் உதவியாளரான அதிகாரிகளே இதை புரோக்கர்கள் மூலம் வாங்கி வைப்பார்களாம். என்ன விடயமாக இருந்தாலும் கவர்னரோ அவரது உதவியாளரான எஸ்.கே.சிங்கோ இலஞ்சத்தை வெளிப்படையாக கேட்டு வாங்குவார்களாம்.

வீட்டுவசதித் துறையில் பெரும் ஊழல் நடந்ததாக ஒரு புகார் கவர்னருக்கு வர சிங் என்ன செய்தார் தெரியுமா? உடனே அந்த மந்திரியை தொடர்பு கொண்டு பங்கு கேட்டு மிரட்டினாராம். இவையெல்லாம் சில பத்திரிகைகளில் வந்துள்ளன. ஒருவேளை இதற்கெல்லாம் என்ன ஆதாரம் என்று தேசபக்தர்கள் கேட்கக்கூடும். அதற்காகவே ஒரு 70mm ஸ்பெஷல் கொள்ளை ஒன்று நடந்து ஆதாரப்பூர்வமாக அனைத்து பத்திரிகைகளிலும் வந்திருக்கிறது.

தமிழக முன்னாள் கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலாவின் மகன் சுகன்ஜித்சிங்கும், இந்த இக்பால் சிங்கின் மூத்த மகனும் சேர்ந்து ஒரு அறக்கட்டளையை (கொள்ளையடிக்கிறதெல்லாம் இப்ப இந்த பேரில்தான்) துவங்கி அதன்மூலம் ஒரு மருத்துவ கல்லூரியை தொடங்க திட்டமிட்டனர். டாக்டர் கல்லூரியென்றால்தான் நன்கொடையை வைட்டமின் சி-யில வாங்க முடியும். இதற்கு காரைக்கால் அருகே நெடுங்காட்டில் 50 ஏக்கர் நிலத்தை வளைத்திருக்கின்றனர். அடுத்து புதுவை அரசின் அனுமதி கோரிய போது சுகாதார செயலாளர் விஜயன் மறுத்திருக்கிறார்.

உடனே அவரை விடுமுறையில் அனுப்பிவிட்டு வேறு அதிகாரியைப் போட்டு காரியத்தை சாதித்த போது விசயம் வெளியே வந்து நாறத் துவங்கியிருக்கிறது. இதில் பேரு ரிப்பேரு ஆனதும் நம்ம இக்பால் சிங், அப்போது கூட மனமில்லாமல் கல்லூரிக்கான அனுமதியையும், இடத்தையும் விற்பதற்கு முயற்சி செய்கிறாராம். இது நடந்தால் ஊழல் செய்யாத மாதிரியும் இருக்கும். நிஜத்தில் பல பத்து கோடிகளை சாப்பிட்ட மாதிரியும் இருக்கும்.

கடைசியாக்த்தான் இந்த சர்தார்ஜியோட நட்பு கருப்புப் பணக்குதிரை ஹசன் அலியோட இருக்கிறது என்பது தெரிய வந்தது. இதற்க்காக டெல்லி சென்று விளக்கம் கொடுத்த சர்தார்ஜி இன்னும் பதவி விலகாமல் ஜம்மென்று இருக்கிறார். அப்படியே அவர் பதவி விலகினாலும் அது ஒன்றும் தண்டனை இல்லையே? கொள்ளையடித்த பணம் இருக்கையில் அடுத்து மேகலாயாவிற்கு கூட கவர்னராக செல்லலாம்.

கவர்னர் மாளிகை என்று எல்லா மாநிலங்களிலும் ஒரு பெரும் நிலப்பரப்பை வளைத்து மாளிகைகளை கட்டி, நூற்றுக்கணக்கான வேலையாட்கள், அதிகாரிகளைப் போட்டு, இவர்களுக்கு செய்யப்படும் மரியாதை என்ன, போற்றுதல் என்ன, புடலங்காய் என்ன…

புதுச்சேரி போன்ற சிறு மாநிலங்களிலேயே இவர்கள் இப்படி ஆட்டம் போட்டால் பெரிய மாநிலங்களில் எப்படி ஆட்டம் போடுவார்கள்? ‘ரப்பர் ஸ்டாம்பு’ என்று கேலி செய்யப்படும் இந்த ஜந்துக்களே இப்படி என்றால் அதிகாரம் கொண்ட அமைச்சர்களைப் பற்றி சொல்லவா வேண்டும்?

காங்கிரசு கட்சி தனது பழைய பெருச்சாளிகள் பலருக்கும் இப்படித்தான் வாழ்வும், தொழிலும் அளித்து வருகிறது. ஹைதராபாத்தில் என்.டி.திவாரி போட்ட குத்தாட்டம் உங்களுக்கு நினைவிருக்கலாம். இப்போது அந்த குத்தாட்டம், வழிப்பறிக் கொள்ளையாக புதுச்சேரிக்கு வந்திருக்கிறது. நீங்கள் மிகவும் மதிக்கும் இந்திய அரசியல் சட்டத்தின் பாதுகாவலர்களான கவர்னர்களின் நடைமுறை இப்படித்தான் இருக்கிறது. இவர்களை தண்டிக்க வேண்டுமென்றால் இந்த பெருச்சாளிகளை உருவாக்கும் அரசியல் அமைப்பை தகர்க்க வேண்டும். தேவையில்லை என்பவர்கள் என்ன செய்யலாம் சொல்லுங்கள்!

__________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

  1. அரசியல் அமைப்பை தகர்த்து விட்டு வேறு என்ன செய்ய என்பதை சொல்ல வேண்டும். எதையும் அழிப்பது எளிதான வேலை. குறைகள் எதுவும் இல்லாத சிறந்த அமைப்பை உருவாக்க உங்கள் யோசனையை சொல்லுங்கள். இல்லையெனில் இருக்கின்ற அமைப்பில் நல்லவற்றை எடுத்துக்கொண்டு குறைகளை களைந்து செயல்பட முயற்சிப்போம். கவர்னருக்கு ஆதரவாக பேசுவதா எடுத்து கொள்ளவேண்டாம். இவரை போன்றவர்கள் பதவிக்கு வருவதை தடுக்க யோசிப்போம்.

    • பெருமாள்,
      இது போன்ற கவர்னர்களை எப்படி நிறுத்த முடியும் என்று யோசித்த போது….இந்த ஊழல் கவர்னரை அனுப்பியது காங்கிரசுக் கட்சி. எனவே கவர்னரை தெரிவு செய்வதில் காங்கிரசுக் கட்சி மிகுந்த கவனம் கொண்டிருக்க வேண்டும். அது சாத்தியமா? ஃபோபார்ஸ் முதல் ஸ்பெக்ட்ரம் வரை தலைமையே ஊழல் செய்யும் போது குறுநில ஊழல் பெருச்சாளிகளை கவர்னராக அனுப்புவதும் தொடரும். எனவே காங்கிரசுக் கட்சியை தடை செய்தால்தான் ஊழல் கவர்னர்களை நிறுத்த முடியும். ஆனால் காங்கிரசை தடை செய்ய முடியுமா? அதை நிறைவேற்ற வேண்டுமானால் இந்த அமைப்பை மாற்றினால்தான் சாத்தியம், சரியா?

      • ….மTறினால் தான் சரி…மTறினால் தான் சரி ….என்று கூறுகிறஈகளெ ஒழிய மாTற்று என்ன என்ட்ரு கூறு. செங்கொடி காலி கூட்டமா?? அதன் அமைப்ப்பு என்ன நிர்வாக அமைப்ப்பு என்ன.. புதிய ஜனநாயகத்தில் போப் ஆண்டகை யார்… அதிகார வரம்பு என்ன… குறை தீர்க்கும் ஆயங்களின் முறை…..ஒன்ட்ரும் சொல்ல மாட்டார்கள் ஐய்யா…

  2. அரசியலமைப்பை தகர்ப்பது இதற்கு வழியல்ல! புதியதாக ஒரு அரசை உருவாக்குவதுதான் வழி

  3. இதெல்லாம் அப்பப்ப வந்து போகும் செய்திதானே…

    1991-93 இல் தமிழ் நாடு கவர்னராக இருந்த பீகாரை சேர்ந்த பீஷ்ம நாராயண் சிங் எனும் காங்கிரஸ் பொறுக்கி… பெட்டி பெட்டியாக லஞ்சம் வாங்கி கொண்டு… போலிஸ் பெண்மணி ஒருவருடன் ராஜ்பவனின் கூத்தடித்து கொண்டு… அந்த பெண்மணியில் உறவுகளுக்கு நல்ல நிறுவனங்களில் வேலை வாங்கி கொடுத்து சேவை செய்தது எல்லாம் நடந்துள்ளது…

  4. கவர்னர் மாளிகை என்று எல்லா மாநிலங்களிலும் ஒரு பெரும் நிலப்பரப்பை வளைத்து மாளிகைகளை கட்டி, நூற்றுக்கணக்கான வேலையாட்கள், அதிகாரிகளைப் போட்டு, இவர்களுக்கு செய்யப்படும் மரியாதை என்ன, போற்றுதல் என்ன, புடலங்காய் என்ன…
    ‘ரப்பர் ஸ்டாம்பு’ என்று கேலி செய்யப்படும் இந்த ஜந்துக்களே இப்படி என்றால் அதிகாரம் கொண்ட அமைச்சர்களைப் பற்றி சொல்லவா வேண்டும்?.
    தூ…தூ…மானம் கெட்டவர்கள்.

  5. இது எனது தனிப்பட்ட கருத்து. நமது அணியின் கருத்து அல்ல.

    மக்களுக்கு ஏன் நிகழ்கால அரசியல், நிர்வாகம் மீது கோபம் வருகிறது ? காரணங்கள் இதோ ..

    ஜனாதிபதி தகுதி :
    முன்னாள் பாரத பிரதமருக்கு சமையல் வேலை செய்து பாத்திரம் கழுவியவர்.
    குற்ற பின்னணி உடையவர்.

    பிரதமர் :
    முன்னாள் இந்திய மத்திய வங்கியின் பணியாளர். உலக வங்கி அனுபவம் உண்டு. தற்போது எதை கேட்டாலும்

    தெரியாது என்று சொல்பவர். இதோ சில தெரியதுகள் …

    1) 2G ஊழலா .. தெரியாது

    2) commonwealth games ஊழலா .. தெரியாது

    3) adarsh ஊழலா .. தெரியாது

    4 ) உணவு தானியங்கள் கோடி கணக்கான டன் கணக்கில் கெட்டு போகிறதா ? தெரியாது.

    5) இலங்கையில் நம் மக்கள் கொல்லப்படுகிறார்களா ? தெரியாது.

    6 ) நமது மீனவர்கள் கொல்லப்படுகிறார்களா ? தெரியாது.

    தெரியாது என்று சொல்வதற்கு ஒரு பிரதமர்.

    நிதி அமைச்சர்:

    மேற்படி அண்ணன் எப்ப போவான் திண்ணை எப்போ காலியாகும் என்று காத்து இருப்பவர்.

    உள்துறை அமைச்சர் :
    வெற்றி பெற்றாரா என்ற சந்தேகம் உலகம் முழுதும் உண்டு. கருப்பு பணம் பட்டியலில் இவரது மகன் பெயர் முதலில் உள்ளதாக செய்தி. இவர் குடும்பம் பற்றி தனியாக எழுதலாம்.

    முன்னாள் உள்துறை அமைச்சர் :
    தனது உடை மற்றும் சிகை அலங்காரத்தில் அதிக அக்கறை உள்ளவர். டெல்லி மற்றும் மும்பையில் குண்டு வெடித்தால் கண்டு கொள்ளாதவர்.

    தொலைதொடர்பு துறை :

    முன்னாள் அமைச்சர் திகார் சிறையில்.
    இந்நாள் அமைச்சர் மிக சிறந்த வக்கீல் (திருடர்களுக்கு). 2G “ஜீரோ லாஸ்” என்ற தத்துவத்தை உதிர்த்தவர்.

    மத்திய வேளாண் அமைச்சர்:
    இவர் எதற்கான அமைச்சர் என்பது உலகம் முழுவதும் தெரியும். கிரிக்கெட் அமைச்சர். திருடர்களின் (சாஹிட் பால்வா) கூட்டாளி. உணவு தானியங்கள் கிடங்குகளில் கெட்டு போகின்றன என்று உச்ச நீதி மன்றம் கடுமையான கண்டனம் தெரிவித்தும் அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இவர்களின் தலைவர் :
    என்ன படித்து இருக்கிறார் என்றே இந்த நாட்டுக்கு தெரியாது. தனது சொந்த நாட்டில் pizza விற்றவர். 40 வயது மகனுக்கு இன்னும் அறிவு முதிர்ச்சி இல்லை.

    முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை :
    பல முறை கேடுகளுக்கு சொந்தம். இன்று சொத்து கணக்கை வெளியிட மாட்டேன் என்று சொல்லி விட்டார்.

    முன்னாள் ஊழல் கண்காணிப்பு தலைவர் :
    இவரைப்பற்றி நாடே அறியும். நான் என்ன சொல்ல வேண்டும்.

    கருப்பு பணம் தலைவர் :
    இவருக்கு இந்நாள் உள்துறை மனைவி வக்கீல். நல்ல குடும்பம்.

    பாண்டிசேரி ஆளுனர் :
    மேற்படி ஆளுக்கு பாஸ்போர்ட் வாங்கி கொடுத்தவர்.

    தமிழ் நாட்டை பற்றி நான் ஒன்றும் சொல்லத் தேவை இல்லை.

    எனவே இந்த ஊழல் எதிர்ப்பு போராட்டத்திற்கு யார் தலைவர் என்று மக்கள் பார்க்கவில்லை.

    தாவூத் இப்ராஹீம் அல்லது நாதுராம் கோட்சே உயிருடன் எழுந்து வந்து போராடினாலும் மக்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராகி விட்டார்கள். மக்கள் பகத்சிங், சுபாஷ் அல்லது ஜெயப்ரகாஷ் நாராயணன் வரும் வரை பொருத்து கொள்ளத் தயாராக இல்லை.

Leave a Reply to வினவு பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க