privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபார்ப்பனிய பாசிசம்சிறுபான்மையினர்மதம் மாறினால் தேசிய உணர்வு மாறுமா?

மதம் மாறினால் தேசிய உணர்வு மாறுமா?

-

கண்ணை மறைக்கும் காவிப் புழுதி

சிறுபான்மையினர்க்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்இன் பொய்யும் புரட்டும் – 1

இந்து மதம்தான் தேசபக்தியென்றும், மற்ற மதங்களெல்லாம் தேச விரோதமென்றும், சிறுபான்மை மத மக்களெல்லாம் வெளிநாடுகளின் பால் பற்று கொண்டவர்கள் என்றெல்லாம் ஆர்.எஸ்.எஸ் கும்பல் அப்பட்டமாக பிரச்சாரம் செய்கிறது. மக்களது வாழ்க்கையில் அன்றாடம் நடக்கும் எளிய நிகழ்வுகளைக்கூட இவர்கள் தங்களது பாசிச பிரச்சாரத்திற்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள். பொதுப்புத்தியில் இவர்கள் விதைக்கும் விஷம் ஆழமானது. அவற்றை வேரறுத்து புதிய கலாச்சரம் வெளியிட்டிருக்கும் இந்த நூல் தமிழகத்தில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற ஒன்று. அந்த கட்டுரைகளை இங்கே வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

மதம் மாறினால் தேசிய உணர்வு மாறுமா?

மத மாற்றம் என்பது வெறும் கடவுளை மட்டும் மாற்றிக் கொள்ளும் விசயமல்ல. அது ஒரு தேசிய மாற்றம். இந்து மதத்திலிருக்கும் போது வணக்கம்சொன்னவர், முசுலீமாக மாறும்போது அஸ்ஸலாமு அலைக்கும்என்கிறார்.

கிறித்தவர் தோத்திரம்அல்லது குட்மார்னிங்என்கிறார். வேட்டி மாறி பேண்ட்டோ, லுங்கியோ நிரந்தர உடையாக மாறுகிறது. பெண்கள் பூச்செடி, பொட்டு வைத்து, கோலமிட்டு, குத்துவிளக்கு ஏற்றுவது நின்று போகிறது. தேங்காய் உடைத்து, குத்துவிளக்கு கற்பூரம் ஏற்றி பாரதப் பண்பாட்டின்படி ஆரம்பிக்கப்படும் காரியங்கள் ரிப்பன் வெட்டி ஆரம்பிக்கப்படுகிறது. பிறந்த நாட்களுக்குக் கோவிலுக்குப் போகும் பழக்கம் மாறி கேக் வெட்டும் பழக்கம் வருகிறது.

ஒருவனுக்கு ஒருத்திஎன்ற பண்பாடு மாறி பலதாரமணம், விவாகரத்து செய்வதுமான கலாச்சாரச் சீர்கேடு ஏற்படுகிறது. பாரதத்தில் உள்ள புனித ஸ்தலங்கள் மறந்து விதேசங்களிலுள்ள மெக்கா, மெதினா, வாடிகன், கான்ஸ்டாண்டிநோபிள், ஜெருசலேம்புனித நகரங்களாகக் கருதப்படுகின்றன. முன்னோர்கள், தாத்தா, பாட்டிகளை முட்டாள்கள், அறிவிலிகள் என்று கருதும் எண்ணம் வளர்கிறது. சித்திரை முதல் தேதியைப் புத்தாண்டாகக் கொண்டாடியது போய் ஜனவரி 1 கொண்டாடப்படுகிறது.

மொத்தத்தில் ஆன்மீக நாட்டம் நொடிந்து லோகாயதவாதம் பெருகி கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற எண்ணற்ற குற்றங்கள் பெருகி வளர்கின்றன. மதமாற்றத்தில் ஏற்படும் தேசிய மாற்றங்களுக்கு இவை ஒரு சில உதாரணங்களே.

இந்து முன்னணி வெளியிட்டிருக்கும் மதமாற்றத் தடைச் சட்டம் ஏன்?’ என்ற வெளியீட்டில் இருந்து.

____________________________________________________________________________

) நமஸ்காரம் போய் குட்மார்னிங், தோத்திரம், அஸ்ஸலாமு அலைக்கும்.

ணக்கம் என்ற வார்த்தை பார்ப்பன இந்துப் பண்பாடல்ல என்பது முதல் விசயம். ‘நமஸ்காரத்தை’ ஒழித்து தமிழகத்தில் ‘வணக்கத்தை’க் கொண்டு வந்தது திராவிட இயக்கத்தின் முயற்சியாகும். அது மட்டுமல்ல, க்ஷேமம் நலமாகவும், அபேட்சகர் வேட்பாளராகவும், பொதுக்கழிப்பிட ஸ்திரீ – புருஷன், ஆண் – பெண்ணாகவும், இன்னும் ஏராளமான சொற்கள் மாற்றப்பட்டு மக்களுக்கு உதவி புரிந்தன. ஆனால், இன்றும் ஆர்.எஸ்.எஸ்.- இல் இருக்கும் இளித்தவாய்த் தமிழர்கள் கூட ‘நமஸ்தே ஜீ’ எனக் கூற வேண்டும் என்பதுதான் அவர்கள் மரபு.

அடுத்து, ‘குட் மார்னிங்’ சொல்பவர்களெல்லாம் கிறித்தவரா? வெள்ளையர்கள் கொண்டு வந்த மரியாதை குறித்த சொற்களும் பழக்கங்களும்தான் இந்தியாவில் பரப்பப்பட்டன; அநேக நாடுகளிலும் வழக்கத்திலிருக்கிறது. அரசு அதிகார வர்க்கத்தில் தொடங்கிய இந்த ஆங்கில மரியாதையை அனைவருக்கும் பரப்பி விட்டதே ‘அவாள்’தான். இன்று ‘குட்மார்னிங்’ பழைய சம்பிரதாயமாகி, ”ஹாய், ஹல்லோ” தான் நகரங்களில் கொடிகட்டிப் பறக்கின்றது. இதைப் பரப்பிவிட்டவர்கள் பாதிரியார்களா என்ன?

தோத்திரம் என்ற சொல் ஸ்தோத்திரம் என்ற சமஸ்கிருதச் சொல்தான். பார்ப்பனர்கள் கிறித்துவ மதத்திற்கு மாறியோது சடங்குகளையும் சமஸ்கிருதத்தையும் கொண்டு சென்றதன் விளைவே இது. அதிலும் ‘ஸ்’-ஐ உருவிவிட்டு வெறும் தோத்திரமாக்கியது தாழ்த்தப்பட்ட கிறித்தவ மக்களே.

கிறித்தவர்களின் கை குலுக்கவும், இசுலாமியர்களின் ஆரத் தழுவும் முறையும், பார்ப்பனியத்தைவிட நாகரீகமான பழக்கங்களாகும். நமஸ்காரம் என்பது கை கூப்பி, தலை தாழ்த்தி முழு உடலையும் கிடத்தி வணங்கும் முறையாகும். அதுவும் கடவுள், பார்ப்பனர்கள், மன்னர்கள், மடாதிபதிகள், மேல்சாதியினர், தற்போது தலைவர்கள் – அதிகாரவர்க்கம் – மந்திரிகள் போன்றோருக்குச் செலுத்தப்படும் அடிமைத்தனமாகும்.

மக்களுக்குள் மனிதர்களுக்குள் ஒருவருக்கொருவர் மரியாதை செலுத்தி விசாரித்தல் என்பது இந்து மரபிலேயே இல்லை. பார்ப்பனியத்தின் கறைபட்ட தமிழின் ‘வணக்கமும்’ இதற்கு விதி விலக்கல்ல. முக்கியமாக நமஸ்காரம் யாரையும் தொட வேண்டிய அவசியமில்லாமல், தீண்டாமையை க்ஷேமமாகப் பாதுகாக்கிறது.

ஆக கிறித்தவ, இசுலாமிய மேலை நாட்டுப் பண்பாட்டின்படி சகமனிதனைக் கைகுலுக்கி, ஆரத்தழுவும் முறையையே நாம் மேற்கொள்ள வேண்டும். இதற்கேற்ற புதிய தமிழ்ச் சொல்லும் கண்டுபிடிக்க வேண்டும். இம்முறையில் தீண்டாமை ஒழிப்பும் உள்ளது. எனவே அவமரியாதையின் பிறப்பிடமான பார்ப்பனப் பண்பாட்டின் சொந்தக்காரர்களுக்கு மரியாதை குறித்துப் பேசும் அருகதையில்லை.

) வேட்டி போய் பேண்ட், லுங்கி

ந்துப் பண்பாட்டின்படி வெளி ஆடைகள் மட்டுமல்ல, உள் ஆடைகளும் மாறியிருக்கிறதா என்று ஏன் ஆராயவில்லை? கோவணம், லங்கோடு அணியாதவர்கள் எப்படி ‘இந்து’க்களாக இருக்க முடியும்? ஏதோ குர்ஆனிலும், பைபிளிலிலும் சொல்லப்பட்டிருப்பதுபோல லுங்கி இசுலாத்திற்கும், பேண்ட் கிறித்தவத்திற்கும் சொந்தமானது என்பது முழு முட்டாள்தனமாகும். அரேபியாவில் எந்த முசுலீம் லுங்கி உடுத்துகின்றான்? உடைகள் என்பது வர்க்கம், தொழில், தட்பவெப்ப நிலை சம்பந்தப்பட்டதுதான். பேண்ட் உலகத்திற்கும், லுங்கி ஆசியாவுக்கும் பொதுவான உடைகள்தான்.

உழைக்கும் மக்களுக்கு லுங்கி உடுத்தினால் வேலை செய்ய வசதியாக இருக்கிறது. லுங்கி உடுத்துபவர்கள் எல்லாம் முசுலீம்கள் என்றால் இந்துக்கள் எண்ணிக்கை சிறுபான்மையாகிவிடும். சேலையைவிட முகலாயர்கள் அறிமுகப்படுத்திய சுரிதார், சல்வார் கமீஸ் வசதியாக இருக்கிறது என்பதால்தான் பெண்கள் விரும்பி அணிகிறார்கள். வேண்டுமானால் அதை ஆர்.எஸ்.எஸ் தடுக்கட்டுமே? அவ்வளவு ஏன்? ஷாகாவில் பயிற்சி பெரும் ஸ்வயம் சேவக குண்டர்கள் அணியும் அரைக்கால் சட்டை, பெல்ட் ஷூ எல்லாம் இந்துப் பண்பாடா? இன்னும் இராணுவம், போலீசு, கமாண்டோ எல்லாருக்கும் வேட்டி, மரச்செருப்பை மட்டும் போட வைத்து பாரதப் பண்பாட்டைக் காப்பாற்றுங்கள்.  டெண்டுல்கருக்கு பஞ்சக்கச்சம் உடுத்துங்கள். பி.டி.உஷாவிற்கு மடிசார் கட்டி ஓடச் சொல்லுங்கள்.

இவற்றைவிட சட்டை, பேண்ட் துணி தயாரிக்கும் விமல், அர்விந்த், ஜே.சி.டி, குவாலியர், ரேமண்ட்ஸ், மதுரா கோட்ஸ், லட்சுமி மில் போன்ற இந்து பனியா முதலாளிகளிடம் அதை நிறுத்திவிட்டு, வேட்டி, கோவணம் லங்கோடு மட்டும் தயாரிக்க ஆணையிடுங்களேன்.

) பெண்கள் பூச்சூடி, பொட்டு வைத்து கோலமிட்டு, குத்து விளக்கு ஏற்றுவது நின்று போகிறது

வீடு வாசல் தெளித்து கோலமிட வேண்டுமென்றால் முதலில் வீடும் வாசலும் வேண்டும். அப்படியே இருந்தாலும் ‘அழகு படுத்துவது’ என்பது வர்க்கம், வசதிக்கேற்பவே மாறுகிறது. மீனவப் பெண் வீட்டின் முன் கருவாடும், விவசாயப் பெண்ணின் வீட்டில் தானியமும், குயவர் பெண் வீட்டில் களிமண் சேறும், கால்நடை வளர்க்கும் பெண்வீட்டில் புழுக்கைகளும் நிறைந்திருக்கும்.

ஆனால், பார்ப்பன – மேல்சாதி  – மேல்தட்டுப் பிரிவினரின் வீடுகள் முன் பெரிய வாசல், துளசி மாடம், சிறு கோவில், தோட்டம் எல்லாம் இருக்கும். ஏதோ உலகிலேயே இந்து வீடுதான் சுத்தமாக இருப்பது போலவும் ஏனைய வீடுகள் பன்றித் தொழுவமாக இருப்பதாகவும் இவர்கள் கூறுவது பிதற்றல். குத்து விளக்கு வகையறாவெல்லாம் என்றைக்குமே ஒடுக்கப்பட்ட சாதிப் பெண்கள் பயன்படுத்தியது கிடையாது; முடியாது. முதலில் அகல் விளக்கு, காடா விளக்கு, சிம்னி, அரிக்கன் என்றுதான் மாறியது. தற்போதுதான் குத்துவிளக்கு அறிமுகமாகியது என்றாலும் அது இல்லாத வீடு  இந்து வீடில்லை என்றால் இந்துக்கள் சிறுபான்மையினராகி விடுவார்கள்.

அதேபோல பட்டுச் சேலை உடுத்தி, தலை நிறைய பூச்சூடி, உடல் முழுவதும் ஆபரணங்கள் அணிவது மேல்சாதி மேட்டுக்குடியினர் மட்டும்தான். உழைக்கும் பெண்களைப் பொறுத்தவரை இப்பேர்ப்பட்ட அலங்காரங்களெல்லாம் வெகு அரிது. மேலும் இந்த அழகுக் கலைகளெல்லாம் பெண்களைப் போகப் பொருளாக்கி நுகர்வதற்காக ஆணாதிக்கமும், மதமும், முதலாளித்துவமும் உருவாக்கிய அடிமைத்தனம்தான். எனவே அனைத்து மதங்களும் பெண்ணைப் போக பொருளாக வைப்பதற்கு விதித்திருக்கும் பூ, பொட்டு, பர்தா போன்றவைகளை ஒழிக்க வேண்டும் என்கிறோம். தற்போது சுஷ்மிதா சென், ஐஸ்வர்யா ராய் தொடங்கி ஏகப்பட்ட இந்து அப்சரஸ்கள் உலக அழகி பட்டங்களை வென்று பாரத மாதாவின் புகழை எட்டுத் திக்கும் பரப்பி வந்தாலும், அவர்கள் அழகை வளர்த்த விதமே ‘கிறித்தவ’ப் பாணியிலான மேற்கத்திய அலங்கார முறைகளில்தான்.

இது குறித்துக் கவலைப்படும் இந்து மதவெறியர்கள், இந்துப் பண்பாட்டின்படி அழகிகளை உருவாக்கி உலகை வீழ்த்துவதற்கு, காமசூத்திரம், சௌந்தர்யலகரி, கனகதாரா ஸ்தோத்திரம், ஜெயதேவரின் அஷ்டபதி போன்ற பக்தி ரசம் சொட்டும் இலக்கியங்களைத் தமிழில் மொழி பெயர்த்து, ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களை வைத்துக் கல்லூரிப் பெண்களிடம் விநியோகிக்கலாம்.

அவ்வாறு செய்தால், பெண்களே இவர்களை செருப்பாலடித்து ‘ஈவ் டீசிங்’ கேஸில் பிடித்துக் கொடுப்பார்கள்.

) பாரதப் பண்பாட்டின்படி ஆரம்பிக்கப்படும் காரியங்கள் மறைந்து போதல்

விமானத் தாங்கிக் கப்பல்களோ, கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளோ, அணுகுண்டு வெடிப்போ அனைத்தையும் நாள் நட்சத்திரம் பார்த்து, யாகம் வளர்த்து, கற்பூரம் – குத்து விளக்கு ஏற்றி, தேங்காய் உடைத்துத்தான் இன்றும் இயக்கி வைக்கின்றார்கள். அன்னியச் செலாவணித் தட்டுப்பாடோ, பணவீக்கமோ என்றால் ரிசர்வ் வங்கியில் உடனே ஒரு பூசை செய்கிறார்கள். குடமுழுக்கிற்கு மட்டுமல்ல, தேர்தல் நாளையே சங்கராச்சாரிதான் குறிக்கிறார். பெரும் நிறுவனங்கள் வருடந்தோறும் தமது அலுவலகங்களை வாஸ்து சாஸ்திரப்படி கன்னாபின்னாவென்று இடித்து மாற்றுகின்றன. இந்தியா என்பது ‘பாம்பாட்டிகளின் தேசம், பண்டாரங்களின் நாடு’ என்று பெயர் வருவதற்குக் காரணமே இந்தப் பார்ப்பன முட்டாள்தனங்கள்தான்.

அறிவியல், பகுத்தறிவு, மதச்சார்பற்ற நோக்கில் முன்னேறிவரும் வாழ்க்கைக்கு மதச் சடங்குகள் தேவையில்லை. ஏனென்றால் இம்மூன்றும் வளருவதற்குத் தடைவிதித்ததே மதங்கள்தான். எனவே, இலட்சக்கணக்கான ரூபாய்கள் வீணடிக்கப்பட்டு ‘பாரத பண்பாட்டின்படி’ ஆரம்பிக்கப்படும் காரியங்கள் அனைத்தும் தடை செய்யப்பட வேண்டும். இவைகளுக்கு ரிப்பன் வெட்டுவது எவ்வளவோ மேல். அதிருக்கட்டும். துவக்க விழாக்களில் ‘இந்து’ குத்துவிளக்கை ‘கிறித்துவ’ மெழுதுவர்த்தியால்தான் கொளுத்துகிறார் அத்வானி. பாரதப் பண்பாட்டின்படி அவர் கையில் தீவிட்டியைக் கொடுத்து விடலாமே! பொருத்தமாகவும் இருக்கும்.

) ஒருவனுக்கு ஒருத்திஎன்ற பண்பாடு பலதாரமணம், விவாகரத்து போன்ற சீரழிவுகளுக்கு மாறுகிறது.

‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்பது இந்துப் பண்பாடல்ல. ‘ஒருத்திக்கு ஒருவன்தான்’ இந்துப் பண்பாடாகும். அதாவது ஆணுக்கு எத்தனை மனைவிகள் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், பெண்ணுக்கு ஒருவன் மட்டுமே கணவனாக முடியும். மேலும் இந்தப் பண்பாடு உலகெங்கிலும் இருக்கும் ஆணாதிக்கப் பண்பாடுதான்.

பலதாரமணத்தை ஒழித்து ‘ஒருவனுக்கு ஒருத்திதான்’ என்பதை 1950-இல் அம்பேத்கார்தான் சட்டமாகக் கொண்டு வந்தார். அதை மட்டுமல்ல, குழந்தை மணத்தடை, விதவை மறுமணம், விவாகரத்து அனைத்தையும் இந்துமத வெறியர்கள்தான் எதிர்த்தார்கள்; முசுலீம்கள் அல்ல. எனவே சமீபகாலம் வரை ஒருவன் பல பெண்களை வைத்திருப்பதுதான் இந்துப் பண்பாக இருந்தது. 7-ஆம் நூற்றாண்டிலாவது நபி நாயகம் 4 மனைவிக்கு மேல் மணக்கக்கூடாது எனக் கட்டுப்பாடு விதித்தார். ஆனால், இந்து மதத்தில் 20-ம் நூற்றாண்டு வரை அந்தக் கட்டுப்பாடு கூட இல்லை என்பதே முக்கியம்.

விவாகரத்து என்பது மேற்கிலிருந்து வந்த சாபக்கேடு என்கிறார்கள். இல்லை, அது ஒரு ஜனநாயக உரிமையாகும். இந்து தர்மப்படி புல்லாகப் பொறுக்கியாக இருந்தாலும் கணவனே கண்கண்ட தெய்வம் என்று வாழும் அடிமைத்தனத்திலிருந்து விடுவித்து, விவாகரத்து ஒரு பெண்ணுக்குரிய உரிமைகளைக் கொடுக்கின்றது. எனவே, மேற்கோ, கிழக்கோ சரியான பண்பாடு எங்கிருந்து வந்தாலும் முதலில் மரியாதை செய்யக் கற்றுக் கொள்ள வேண்டும்.

இந்து மத இலக்கியங்களில் தெய்வங்களும் பார்ப்பனர்களும் மாறுவேடம் பூண்டு கள்ள உளவு கொள்வது, கற்பழிப்பது என்பது சாதாரண விசயம். இத்தகைய ‘உரிமைகள்’ இன்று பறிபோன நிலையில்தான் இந்து மத வெறியர்கள், குய்யோ முறையோ என்று கத்துகிறார்கள். இந்தக் கொடுமைகள் பெருமளவு இல்லாமல், விவாகரத்து, மறுமணம் போன்றவை நம்நாட்டு உழைக்கும் மக்களிடம் இயல்பாக இருந்தது. இதை எண்ணித்தான் நாம் பெருமைப்பட வேண்டும்.

) பாரத புனித ஸ்தலங்களை மறந்து விதேச புனித நகரங்களை நினைப்பது

தன்படிப் பார்த்தால் இந்துக்களின் புனித இடங்களான பசுபதிநாத் நேபாளத்திலும், கைலாயமும் மானசரோவரும் சீனாவிலும் இருக்கின்றது. இவ்விடங்களுக்குச் செல்லும் இந்துக்கள் இந்தியாவின் தேசவிரோதிகள் என்றே கருத வேண்டும். உலகெங்கும் வாழ்ந்து வரும் புத்த மதத்தினர் தென் கிழக்காசிய நாடுகளில் பெரும்பான்மையினராக வாழ்கின்றனர். இவர்களுக்கு இந்தியாவின் புத்த கயா புனிதமான இடமென்பதால், அவர்கள் அந்தந்த நாடுகளின் தேச விரோதிகளா?

அதேபோல் இந்தியாவில் இருந்து பல தலைமுறைகளுக்கு முன்பே, இலங்கை, பர்மா, சிங்கப்பூர், மலேசியா, பிஜித் தீவுகள், மொரீஷியஸ், மாலத்தீவு, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் இந்தியர்கள் குடியேறி வாழ்கிறார்கள். இன்று அந்நாடுகளின் குடிமக்களாக, ஏன் அமைச்சர்களாகக் கூட இருக்கிறார்கள். இந்தியா மறந்து போனாலும் மதம் என்ற அடிப்படையில் இங்குள்ள புனித இடங்கள்தான் அவர்களுக்கும் புனிதம். இதனால் இவர்களைத் தேசத்துரோகி என்று அந்நாடுகள் அடித்துத் துரத்தலாமா?

வாடிகனும், பெத்லஹேமும், மெக்கா, மெதினாவும் உலக கிறித்தவ, முசுலீம் மக்கள் அனைவருக்கும் புனிதமான இடங்களாகும். ஆர்.எஸ்.எஸ். கணக்குப்படி உலகிலுள்ள மற்ற கிறித்தவ, முசுலீம் நாட்டு மக்களுக்கு தேசபக்தி இல்லை என்றாகிறது. அல்லது உலகில் ஒரு கிறித்தவ நாடும், ஒரு முசுலீம் நாடும் மட்டும்தான் இருக்க வேண்டும். ஏன் அப்படி இல்லை? அப்படி இருக்க முடியாது என்பதைத்தான், ஒரு தேசத்தையோ, தேசபக்தியையோ ஒரு மதத்தால் உருவாக்க முடியாது என்ற உண்மை நமக்கு உணர்த்துகிறது. தேசம் உருவாக அரசியல், சமூகம், பொருளாதாரம், மொழி, பண்பாடு – போன்றவைதான் காரணமாக முடியும். மத நம்பிக்கையும், புனித நகரங்களும் யாருக்கும் தேசபக்தியை உருவாக்க வக்கற்றவையே!

பார்ப்பன, மேல் சாதியினரைத் தவிர்த்து பெரும்பான்மை உழைக்கும் மக்களின் பண்பாட்டில் தீர்த்த யாத்திரைகளெல்லாம் கிடையாது. நாட்டுப்பற்று என்றால் என்ன? ஸ்வயம் சேவகர்கள் பாரத மாதா போட்டோவுக்குப் பூசை செய்வது அல்ல. நாட்டு மக்களைச் சுரண்டல், ஒடுக்கு முறை, பிற்போக்கு அனைத்திலும் இருந்து விடுவிக்க தளராமல் போராடுவதுதான் நாட்டுப்பற்றைக் குறிக்கும். இது காசிக்கோ, மெக்காவுக்கோ யாத்திரை செல்வதால் வருவதல்ல.

) முன்னோர்கள், தாத்தா, பாட்டிகளைமுட்டாள்கள், அறிவிலிகள் என்று கருதும் எண்ணம் வளருகிறது

”கங்கைக் கரையிலும், காவிரிக் கரையிலும் அரிசியை உணவாக உட்கொண்டு வாழும் சில ஜந்துக்கள், வேதத்திலேயே எல்லாம் கண்டுபிடிச்சாச்சாக்கும் என்று மமதையுடன் பிதற்றுவதை” புதுமைப்பித்தன் குறிப்பிடுகிறார். வேதம் மட்டுமல்ல அனைத்துப் பிற்போக்குத் தன்மைகளையும் முதியோருக்குக் கட்டுப்படல் என்ற இன்னொரு பிற்போக்கின் மூலம்தான் பார்ப்பனியம் வாழையடி வாழையாகத் தொடருகின்றது. அதனால்தான் எல்லாப் பிரிவினரிடமும் உள்ள புதுமையும், துடிப்பும் கொண்ட இளைய பிரிவினர்கூட இத்தகைய முட்டாள் முதியவர்களால் விரைவில் முதியவராக்கப்படுகின்றனர்.

எனவே முதுமை, இயலாமை, ஓய்வு என்ற அளவிலே மட்டும்தான் முதியவர்களைக் காப்பாற்றும் பொறுப்பு ஒரு சமூகத்துக்கு இருக்கவேண்டும். அதேநேரத்தில்  அவர்களது முட்டாள் தனங்கள் பிற்போக்குக் குணங்கள் ஆகியவற்றை ஒழிப்பதற்குப் போராடுவதையும் அதே சமூகம் செய்ய வேண்டும் என்கிறோம்.

) சித்திரைபோய் ஜனவரி கொண்டாடுதல், ஆன்மீகம் அருகில் லோகாயதம் சீர்கேடுகள் பெருகுதல்

இந்துப் பஞ்சாங்கத்தின்படியே எல்லா இந்துக்களுக்கும் ஒரே வருடப்பிறப்பு என்பது கிடையாது. தமிழ், தெலுங்கு, பஞ்சாபி, வடகிழக்கு போன்று பல வருடப் பிறப்புக்கள் கொண்டாடப்படுகின்றன. வழக்கம்போல இவையும் பார்ப்பன மேல்சாதி – மேல் தட்டினர் கொண்டாடுபவைதான். வாழ்நாள் முழுதும் ஏழ்மையில் உழலும் அடித்தட்டு மக்களுக்கு பழைய – புதிய என்ற வருடப் பிரிவினைக்கு முக்கியத்துவம் ஏதுமில்லை.

ஜனவரி ஆரம்பத்தை – கிறித்தவ மதத்தினர் மட்டுமல்ல, உலகமே கொண்டாடி வருகின்றது. கோவிலில் போய் அர்ச்சனை செய்து புத்தாண்டு கொண்டாடுவது நடுத்தர வர்க்க மக்களின் பழக்கமாக ஏற்பட்டு விட்டது. பல இசுலாமிய நாடுகளிலும் இத்தினம் விடுமுறையாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. பிறந்த நாளுக்குக் கோவிலுக்குப் போவதோ, கேக் வெட்டுவதோ முக்கியமல்ல. அப்படி ஒரு நாள் இருப்பதே தெரியாமல்தான் சாதாரண மக்கள் வாழுகின்றனர். மேலும் ‘ஜன்ம நட்சத்திரம்’ என்ற கடவுளர்கள், மன்னர்கள், பார்ப்பனர்கள் ஆகியோரது தினங்கள்தான் இந்துக்களுக்கு முக்கியமாகும்.

மற்றபடி பொதுமக்கள் தங்கள் பிறந்தநாள், திருமண நாள் கொண்டாடுவது ஆங்கிலேயர்கள் அறிமுகப்படுத்திய பண்பாடு. இதையும் காசு உள்ள நடுத்தர வர்க்கம்தான் கொண்டாடுகிறது. கேக்கோ, பாயசமோ எல்லாம் நுகர்வுக் கலாசாரத்தின் மூலம் பன்னாட்டு நிறுவனங்களுக்குத்தான் லாபம் தருமே ஒழிய, மக்களுக்கல்ல. சர்வதேச மூலதனச் சுரண்டலுக்கு மத லேபிளெல்லாம் கிடையாது. ‘லோகாயதம் பெருகி அராஜகங்கள் வளருவது’ என்று, சாரத்தில் பார்ப்பனிய எதிர்ப்புப் போராட்டங்களைத்தான் குறிப்பிடுகிறார்கள். அதாவது சாதி, தீண்டாமை எதிர்ப்பு, இந்தி எதிர்ப்பு, பெண்ணடிமைத்தன எதிர்ப்பு, இட ஒதுக்கீடு ஆதரவு, தேசிய இன ஒடுக்குமுறை எதிர்ப்பு ஆகிய போராட்டங்கள்தான் அவர்களுக்குக் கலிகாலத்தை உணர்த்துகின்றது.

மற்றபடி கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்றவைகள் மதமாற்றத்தினால் நடக்கிறது என்றால் எதைச் சொல்லி அழ? பிரேமானந்தா, சந்திராசுவாமி, சாயிபாபா, ஜெயா – சசி கும்பல், அர்ஷத்மேத்தா, ஜெயின் சகோதரர்கள், சம்பல் கொள்ளையர்கள், இன்டர்நெட் விபச்சாரி பிரகாஷ் போன்றோர்களெல்லாம் ரகசியமாக மதம் மாறியவர்களா? இதற்கு இராம.கோபாலனைப் போட்டு ஒரு விசாரணைக் கமிஷன் நியமித்து, வெள்ளை அறிக்கை வெளியிடுங்களேன்!

– தொடரும்

____________________________________________________________________

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

  1. குழப்பம் நிறைந்த முட்டாள் தனமான கட்டுரை…

    மதம் மாறினால் தேசிய உனர்வு மாறத்தாண்டா செய்யும்…

    கேரளாவில் காதல் கண்ணாமூச்சி காட்டி மதம் மாற்றி பின் தீவிரவாதியாக மாற்றுவது ஏன்?

      • எது????
        சீனு நீங்க ஆர்எஸ்எஸ் அரடவுசரோட சிம்பதைசர்னு தெரியும். அதனால அந்த ‘அது’வா இல்லேன்னா கட்டுரையில குழுப்பமா முட்டாள்தனமா அதுவா இருக்கும் விசயங்களை நீங்களே விளக்குங்களேன்..

    • உமக்கு என்ன குழப்பம் ?.. எங்கு குழப்பம்?.. என்று கூறவும் .. நான் விளக்குகிறேன்.
      ஒரு நல்ல எடுத்துக்காட்டு கொடுத்து விளக்கவும். விளக்க துப்பில்லை எனில் கோழை ராமனைப் போல் புறமுதுகிட்டு ஓடு.

      • உன் மதம் உயர்ந்ததுன்னா..எதுக்கு அடுந்தவன மதம் மாத்துர..

        கிரிஸ்டின் பள்ளிக்கூடங்களிள் குறி வைத்து இன்டு மாணவர்கள் கிரித்துவ மத வழிபாடுகளுக்கு உட்படுத்தப்படுவதேன்..

        ஒரு பத்துநிமிசம்நட்பாகப் பேசினாலும் மத மாற்ற முயற்ஷிப்பது ஏன்?

        • அவன் மதம் மாற்ற முயற்சித்தால் மதம் மாறுபவனுக்கும் மாற்ற முயற்சிப்பவனுக்கும் உள்ள பிரச்சனை அது. அது குறித்து தங்களுக்கு என்ன வருத்தம். ஐந்து நிமிடம் பேசினாலும் கூட அந்தக் காலத்திலேயே வேதத்தில் அது சொல்லப் பட்டுள்ளது , இது சொல்லப்பட்டுள்ளது என்று சில பார்ப்பன பண்டாரங்கள் கூடத் தான் சொல்லித் திரிகின்றனர்.அதற்காக கிறுஸ்தவர்கள் வருத்தப் பட்டார்களா ?.

          உங்கள் மதம் சரியாக இருக்குமானால் பிறகு எதற்கு அவர்கள் மதம் மாறப் போகிறார்கள்?..

          மதம் மாறுபவர்களை உங்கள் மததில் இருந்த போது சூத்திரன் என்று ஏன் இழிவாக நடத்தினீர்கள்?..

          இதற்கும் பதில் கூறவும்.

          • பகத்சிங்,

            மதம் மாறிய பின் அவன் தழுவிய மதத்தில் , அவனுக்கு கிடைக்கும் சிறப்புகள் என்ன? மதம் மாறியவுடன் அவன் முற்றிலுமாக குறிப்பிட்ட மதத்தை சார்ந்தவனாகி விடுகிறானா? அந்த மதத்தின் இயல்பான பழக்க வழக்கங்கள் அவனுக்கு வந்து விடுகிறதா? அவன் அங்கு இழிவுபடுத்த படாமல் சிவப்பு கம்பள வரவேற்பு பெறுகிறானா? அவனுக்கு அந்த மதத்தினருடன் திருமண பந்தம் செய்து கொள்ள முடியுமா? யாராவது ஒருவர் மதம் மாறிய பின் குறிப்பிட்ட இனத்தில் பெண் வேண்டும் என்று கேட்டு பாருங்களேன்,உதைதான் கிடைக்கும். அந்த மதத்தின் இயல்பான பழக்க வழக்கங்கள் அவனுக்கு வந்து விடுகிறதா?

  2. மதம் மாறியவர்கள் மட்டுமே தீவிரவாதி மதம் மாறாத இந்துக்களெல்லாம் தேச பக்தர்கள் என்ற அறிய உண்மையை கண்டுபிடித்த திரு மர்ட்கு அவர்களுக்கு நோ பல் பரிசு கொடுக்கலாம்.

    ///மற்றபடி கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்றவைகள் மதமாற்றத்தினால் நடக்கிறது என்றால் எதைச் சொல்லி அழ? பிரேமானந்தா, சந்திராசுவாமி, சாயிபாபா, ஜெயா – சசி கும்பல், அர்ஷத்மேத்தா, ஜெயின் சகோதரர்கள், சம்பல் கொள்ளையர்கள், இன்டர்நெட் விபச்சாரி பிரகாஷ் போன்றோர்களெல்லாம் ரகசியமாக மதம் மாறியவர்களா? இதற்கு இராம.கோபாலனைப் போட்டு ஒரு விசாரணைக் கமிஷன் நியமித்து, வெள்ளை அறிக்கை வெளியிடுங்களேன்!///
    இந்த வரிசையில் காஞ்சிபுரம் பெரியவாள் சங்கராச்சாரி மற்றும் நித்தியானந்தாவை விட்டு விட்டீர்கள்

    • //இந்த வரிசையில் காஞ்சிபுரம் பெரியவாள் சங்கராச்சாரி மற்றும் நித்தியானந்தாவை விட்டு விட்டீர்கள்//

      பழைய பதிப்பு என்பதால் அவர்கள் பெயர்கள் இல்லை. அடுத்தடுத்த பதிப்புகளில் இந்த வரிசையில் எண்ணிக்கை கூடிக்கொண்டுதான் போகும்.

  3. யார் குழப்பவாதியோ.,.,அவன் தான் முட்டால்.,.,.,மதம் மாரி பார்.,.,.,.,மிகுந்த உனர்வு வரும்.,.,கெரலா.,.,மருதுக்கு தெரியல .,.,தம்பிக்கு .,.,முச்லிமை புடிக்கிரான் .இந்துவை விடுரான் .,அவ்வலவுதான் .,.,புன்னாக்கு

  4. பாவம் மார்து

    நீங்கள் தான் குழம்பிப் போயிருக்கிறீர்கள்.

  5. முழுவதும் இந்து மதத்தின் மீதான வெறுப்பின் வெளிப்பாடாக அமைந்த கட்டுரை. ஆமாம்,வினவில் ஏன் இது போல் மாற்று மதங்களை பற்றிய விமர்சனங்கள் பெரிதாக இடம்பெறுவதில்லை? எழுத பயமா? எழுதி பாருங்களேன்? என்ன நடக்கும் என்று தெரியும். இதுதான் இந்து மதத்தின் சிறப்பு. எளிதில் அணுக கூடிய, எவரும் விமர்சிக்க கூடிய அமைப்பை பெற்றது எமது மதம். என் மதத்தில் இது ஒன்று தான், இது மட்டும் தான் கடவுள் என்று குறிப்பிடப்படவில்லை. நாங்கள் வணங்க கடவுளின் நிறைய வடிவங்கள் உள்ளது. மற்ற மதங்களை சாத்தான்கள் என்று குறிப்பிட வில்லை. விருப்பமுள்ளவர்கள் நாகூர் தர்காவிற்கும் செல்கிறோம், அன்னை வேளாங்கன்னியையும் முழு மனதுடன் வணங்குகிறோம், இவை எல்லாம் நம்பிக்கையின் வெளிப்பாடு தான். எனது மூத்த சகோதரி உடல் நலமில்லாமல் இருந்த காலங்களில் முழு நம்பிக்கை உடன் அருகிலுள்ள தர்காவில் தங்கி குணமடைந்தது உண்டு. இப்போதும் ஏதேனும் ஒன்றை வேண்டிக்கொண்டு வேளாங்கண்ணி சென்று பிராத்தனை நிறைவேற்றுவது என்னில் தொடர்கிறது. இதுதான் என் மதம் எனக்கு கொடுத்திருக்கும் சுதந்திரம். இது போல் மற்ற மதங்களில் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. எல்லா மதத்திலும் பிரிவுகள், இனங்கள் , உயர்வு தாழ்வு உண்டு. சரி இந்து மதத்தில் இருந்து மாற்று மதத்தை தழுவுபவர்கள் யார்? தொண்ணூறு சதவீதத்தினர் தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்த சகோததரர்கள் தான். மதம் மாறிய பின்னர் அவர்கள் அதே சமுதாயத்தால் சரி சமமாக நடத்த படுகிறார்களா? அவர்களால் அவர்கள் தழுவிய மதத்தை சார்ந்தவர்களுடன் இயல்பாக பழக முடிகிறதா? திருமண உறவு ஏற்படுத்தி கொள்ள முடிகிறதா? அவர்கள் முதலில் இவர்கள் தாங்கள் சமுதாயத்தை சார்ந்தவன் என்று உள்ளன்போடு பழகுகிறார்களா? நிச்சயமாக இல்லை. இவர்கள் மதம் மாறியதன் நோக்கம் நிறைவேறியதா? நிச்சயமாக இல்லை. இவர்களின் வறுமை ஒழிந்ததா? நிறைவான கல்வி கிடைக்கிறதா? இவர்களை தாழ்த்தப்பட்டோர் என்று அழைப்பதை நிறுத்தி விட்டார்களா? இல்லை இல்லை இல்லை.மதம் மாறும் பொது இவர்களுக்கு அளிக்கப்பட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டனவா? இல்லை. நிச்சயமாக கிடையாது. இதுதான் நிதர்சனமான உண்மை. கூட்டம் கூட்டமாக மதம் மாறியவர்கள் செய்வதறியாது திகைத்து போய் தாய் மதத்திற்கும் திரும்ப இயலாமல் ஏற்று கொண்ட மதத்தினருடனும் கலக்க முடியாமல் மனம் வெதும்பி தங்களுக்குள் குழுக்களை ஏற்படுத்தி தனி பிராத்தனை செய்வதுதான் நடக்கிறது.

    “”சேலையைவிட முகலாயர்கள் அறிமுகப்படுத்திய சுரிதார், சல்வார் கமீஸ் வசதியாக இருக்கிறது என்பதால்தான் பெண்கள் விரும்பி அணிகிறார்கள். வேண்டுமானால் அதை ஆர்.எஸ்.எஸ் தடுக்கட்டுமே? “”

    சரி, அதுபோல் பாலைவன நாடான அரேபியாவில் எண்ணெய் வளம் இருப்பதை கண்டுபிடித்து சொன்னது சாத்தானின் குழந்தைகளாக அரேபிய முஸ்லிம் களால் கருதப்படும் ஐரோப்பியர்கள் மற்றும் அமெரிக்கர்கள். அதனால் அரபியர்கள் எண்ணெய் வளத்தை பயன்படுத்தாமல் விட்டு விட்டார்களா? எண்ணெய் வளம் இல்லாமல் இருந்திருந்தால் அரேபியாவும் சோமாலியா போல் சுடுகாடாகி இருக்கும். எது மக்களுக்கு நன்றாக படுகிறதோ , வசதியாய் இருக்கிறதோ, பயன் தருகிறதோ அதனை அவன் வழக்கமாக்கி கொள்கிறான். இதில் மதம் எங்கிருந்து வந்தது?

    எவ்வளோவோ சொல்லலாம். வேண்டாம்..

    பொதுவாக சொல்வதென்றால் , இது இந்து மதம், இங்கு விமர்சங்கள் வரவேற்க படுகின்றன. விமர்சனத்தை ஏற்காமல் வெறி கொண்டு அலையும் பண்பு இல்லை. யாரையும் பணம் , பொருள் ஆசை வார்த்தைகள் காட்டி வலுக்கட்டயமாக மத மாற்றம் செய்வதும் இல்லை.

    இறைவன் மீது முழு நம்பிக்கை கொண்டு , பண்டைய பாரம்பரிய முறைகளை ஏற்றுக்கொண்டும், நடைமுறை படுத்தியும், சிறப்பாக வாழ்ந்து வரும் எண்பத்து எட்டு கோடி மக்கள் இங்கு உண்டு. எங்களது இல்லத்தில் நிலவும் மகிழ்ச்சி நிச்சயமாக மாற்று மதம் தழுவியவர்களின் இல்லங்களில் நிலவ வில்லை என்று உறுதியாக சொல்ல முடியும்.

    மதத்தின் பெயரால் இங்கே சிலர் செய்யும் தவறுகளை சுட்டி காட்டும் அதே வேளையில் மனதாலும் அடுத்தவர்க்கு தீங்கு நினைக்காத எண்ணற்ற மக்களை கொண்டதுதான் இந்து மதம் என்பதை மறந்து விட வேண்டாம் .

    வினவு இந்த கருத்தை வெளியிடும் என்ற நம்பிக்கையில்

    தேசநேசன் என்று அழைத்துக்கொள்ள விரும்பும் சிவசங்கரன்.

    • இவன் தொடநடுஙிப் பயநேன்…

      இவ்ன் ஒரு கட்டுரையாவது இஷ்லாம் தீவிரவாதம் பட்ரியோ, கிருச்த்துவ மதமாட்ரம் பட்றியோ எழுதியிருக்கிரானா…

      இன்டுவ மட்டமா எழுதி இவனோட முர்ப்பொக்கு வெஙாயத காட்டுரான்..

    • தேசநேசன் திர் சிவசங்கரன் அவர்களே! …

      வனக்கம்.. உங்கள் வருத்தம் புரிகிறது. கமுக்கமா திருடித் திண்ணுட்டு இருந்த என்னோட குட்டையில கல்லை விட்டு குழப்பி விட்டிருக்கிறீர்களே.. மற்ற குட்டையில் ஏன் கல்லை விடவில்லை. கல்லை விட தைரியம் இருக்கிறதா என்று கேட்டிருகிறீர்கள்.

      மற்ற மதங்களை கடுமையாக விமர்சித்து பல கட்டுரைகள் வினவில் வெளியாகியுள்ளன. இடது கைப்பக்க பட்டையில் மதம் என்ற தனிப் பிரிவின் கீழ் உள்ள கட்டுரைகளை படிக்கவும். உங்கள் மதமான இந்து மதம் பல டிசைன் கடவுளை கொண்டுள்ளதாகக் கூறியுள்ளீர்கள். அது அப்படி அல்ல. பலதரப் பட்ட மக்களின் தனித் தனி தெய்வங்களாகிய அய்யனார், கருப்பசாமி, மாரியம்மாள், சுடலை மாட சாமி ஆகியோரை துணை தெய்வங்களாக சித்தரித்துக் காட்டி முக்கிய தெய்வமாக பார்ப்பன கடவுளாகிய உங்கள் பொம்பளைப் பொறுக்கி கிருஸ்ணனை முன் வைத்து அனைவரையும் இந்து என்றழைத்து , உழைக்கும் மக்களை ஜாதியின் பெயரால் சுரண்டித் தின்ற மதம் உங்கள் இந்து மதம். அதனை விமர்சிப்பது எந்த விதத்தில் தவறு?.

      உங்கள் மதத்தின் தீண்டாமைக்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்?.

      பதில் கூறவும்.

      • பகத்சிங்,
        முதலில் நான் பிராமின் வகுப்பை சார்ந்தவன் இல்லை. பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்தவன் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
        வினவின் அனைத்து பதிவுகளையும் படித்திருக்கிறேன்.. வினவு இந்து மதத்தை விமர்சிப்பது போல் மற்ற மதங்களை மிகவும் காட்டமாக விமர்சிப்பதில்லை. இது அனைவருக்கும் தெரிந்ததுதான்.
        பொம்பளை பொறுக்கி, என்று தாங்கள் விளிப்பதால் கண்ணன் அவ்வாறு ஆகி விட மாட்டான்.
        உங்களுக்கு இருக்கும் பொறுமையும் , தகுதியும் அவ்வளவுதான் நினைத்து கொள்கிறேன்.
        தாங்களது கோபத்தில் இருந்து உழைக்கும் வர்கத்தின் வேதனை வெளிப்படுகிறது.. தாங்கள் இந்து மதத்திலிருந்து விலகி, அல்லது கடவுள் மறுப்பு கொள்கையாளராக இருந்து, அல்லது மாற்று மதத்தை தழுவி , அதனால் தாங்கள் நிலை மாறி இருந்தால் , அந்த உழைக்கும் வர்கத்தின் நிலை மாறி இருந்தால் , நிச்சயமாக , நூறு சதவீதம் இந்து மதத்தை விமர்சிப்பதில் தவறே இல்லை. தொடர்ந்து விமர்சியுங்கள்.
        தீண்டாமை , இது பற்றி பல்வேறு உண்மைகள் உங்களுக்கு தெரிந்திருந்தாலும் தாங்கள் ஏற்று கொள்ளப்போவதில்லை.
        இருந்தும் சொல்கிறேன், இவை அனைத்தும் இந்த நாட்டின் செல்வத்தின் மீது பற்று கொண்டு, இந்த நாட்டை போர்கள் பல புரிந்து கைப்பற்றி , எங்கிருந்தோ இருந்து இங்கு வந்து புகுந்த வந்தேறிகளால் இந்நாட்டு மக்களிடையே ஒற்றுமையை குலைத்து வேற்றுமை ஏற்படுத்துவதற்காக திட்டமிட்டு புகுத்தப்பட்டது. அது முகலாயர்,ஐரோப்பியர்கள் மற்றும் பல்வேறு இனத்தவர்களால் புகுத்தப்பட்டது.

        இன்னும் நிறைய சொன்னாலும் உங்களுக்கு புரியாது. ஏன் என்றால் தீண்டாமையின் வலியை தெரிந்தவன் இந்த விஷயத்தை புரிந்து கொண்டதே இல்லை.

        • நண்பர் சங்கரன்,

          நீங்கள் ஒரு சராசரி ‘இந்துவின்’ பார்வையில் இருந்து உங்கள் கருத்துக்களை வைத்துள்ளீர்கள். முதலில் இக்கட்டுரை மக்களை மத ரீதியாக கூறு போடும் இந்து முன்னணி, ஆர்,எஸ்.எஸ் கும்பலின் சிறுபான்மை மக்கள் மீதான அவதூறுகளுக்கு எதிரான கட்டுரை என்பதை புரிந்து கொள்க. ஆர்.எஸ்.எஸின் அவதூறுகளும் கட்டுரையில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. தர்காவுக்கும், வேளாங்கண்ணி திருத்தலத்துக்கும் செல்லும் நீங்கள் ஆர்.எஸ்.எஸ் -இடமிருந்து எடுத்தாளப்பட்டுள்ள மேற்கோள்களுக்கு மவுனம் சாதிப்பது சரியா?
          இந்து மதத்தில் நிலவுவதாக நீங்கள் குறிப்பிடும் ஜனநாயகம் என்பது ஏதோ இந்து அமைப்புக்கள் என்று ‘தினமணி’ குறிப்பிடும் இந்துத்துவ பயங்கரவாதிகள் போராடி பெற்ற ஒன்றல்ல. பல நாட்டார் தெய்வ வழிபாட்டு மரபுகளை உட்செரித்து, மெஜாரிட்டி பலத்திற்காக செய்யப்பட்ட சதி. இந்த நாட்டார் மரபுகளை கொஞ்சம் கொஞ்சமாக இப்போது அழித்து வருகிறது பார்ப்பன மதம். குமரி மாவட்ட கோயில்கள் பெரும்பாலும் தட்டையான roof கொண்டவை. அவற்றை அழித்து இப்போது கோபுரங்கள் அமைத்து குடமுழுக்கு செய்யப்படுகின்றன. இசக்கியும், லெச்சியையும் இடம்பெயர்த்து துர்க்கை கொண்டுவரப்படுகிறாள். ஆடு, கோழி வெட்ட ஜெயலலிதா முன்பு ஆணை வெளியிட்டதும் அதை ஆர்.எஸ்.எஸ் வரவேற்றதும் உங்களுக்கு நினைவிருக்கும் என்று நம்புகிறேன். இந்து மதத்தின் ஜனநாயக உணர்வுக்கு பெருமை படுகிறவராக இருந்தால் பார்ப்பன மதத்தின் இத்தகைய சூழ்ச்சிகளை எதிர்த்து குரல் கொடுங்கள்.

          • நிச்சயமாக சுகதேவ் ,

            ஆர் எஸ் எஸ் ய் ஆதரிப்பவனாக இருந்தால் என்றைக்கோ அதில் இணைத்திருப்பேன், நான் மட்டுமல்ல, கோடிக்கணக்கான இந்துக்கள் இணைந்திருக்க முடியும். இந்தியாவிலேய மிக பலம் வாய்ந்த அமைப்பாக அதை மாற்றி இருக்க முடியும். அப்படி நடந்திருந்தால், என்ன நடக்கும், பாலாறு ஓடும் இங்கே ரத்த ஆறு தான் ஓடும். இந்து மதம் வன்மத்தை வன்முறையை போதிக்க வில்லை.மாறாக அமைதியையும் சமாதானத்தையும் வலியுறுத்துகிறது , உண்மையான இந்து இது போன்ற வன்முறை வெறியாட்டத்தை ஆதிரிப்பவன் அல்ல.

            நமது வேதனை என்ன வென்றால் ஆர் எஸ் எஸ் அமைப்பை விமர்சிக்கும் போக்கில் கடுமையாக இந்து மதத்தையும் அதனை பின்பற்றுபவர்களையும் விமர்சிப்பதுதான்.

            யாரோ ஒரு சில அமைப்புகள், தனி நபர் செய்யும் தவறுகளால் ஒரு மதமே தவறான கண்ணோட்டதால் பார்க்கபடுகிறது..

            வினவின் பணி குறிப்பிட்ட அமைப்பை சீர் செய்ய வேண்டுமே தவிர, அந்த அமைப்பு சார்ந்துள்ள மதத்தை புண்படுத்துவதாக இருக்க கூடாது. வினவின் போராட்டத்தில் யாமும் பங்கேற்க முடியும்.

        • குற்றம் செய்பவர்களை தான் விமர்சிக்க முடியும் … ஒரு இடத்தில் 8 திருடன் இருந்தால் அந்த 8 திருடன் மீதும் சார்ஜ்சீட் போடனும், மீதி 2 திருடன் இருந்தால் 2 சார்ஜ்சீட் போடனும்.. ஏன் எங்களுக்கு 8 அவங்களுக்கு 2-னு கேள்வி கேட்டால் என்ன பாஸ் ???

          • இக்பால் செல்வனா?

            நண்பரே பெயரே குழப்பமாக இருக்கிறது.. தாங்கள் பெயரையும் முழுமையாக மாற்றி இருந்தால் நன்றாக இருந்திருக்கும். அதலென்ன பாதி வேறு மீதி வேறு. இதுதான் நான் குறிப்பிடுவது. எங்கே போனாலும் தாய் மதத்தின் தாக்கம் நிச்சயமாக இருக்கும். நீங்கள் முழுமையாக மாறி விட முடியாது. அது பிறப்பால் வர வேண்டும். போகட்டும்..

            திருடன் போலீஸ் கணக்கு எல்லாம் சொல்லி இருக்கிறீர்கள். நன்றாக இருக்கிறது. எண்பத்து எட்டு கோடிக்கு எட்டு சார்ஜ் சீட், ரெண்டு கோடிக்கு ரெண்டு சார்ஜ் சீட் , உங்க கணக்கு கரெக்ட் தான்..

            • இறைவா இது போன்ட்ர த்ரோகிகளிடம் இருந்து எங்களைக் காப்பாற்று எதிரிகளைநாங்கள் பார்த்துக் கொள்கிறோம்..

            • அன்புத் தோழரே – பெயரில் என்னக் குழப்பம் வேண்டி இருக்கு. ஒருவரின் பெயரை வைத்து அவர் நம்மாளா? இல்லையா ? எனக் கணக்குப் போடும் மனோபாவத்தை மாற்ற வேண்டும் என்பதால் இந்தப் பெயரே !!!

              தவறாக எடுக்க வேண்டாம் … தங்களின் பெயரில் சிவசங்கரனில் வெறும் அன் என்னும் விகுதி மட்டும் தான் தமிழ், பாதி சமஸ்கிருதம் + பாதி தமிழ் இருக்கின்றது அல்லவா?

              அப்படி இருக்க இக்பால் என்ற ஸ்வாகிலி மொழிச் சொல்லும், செல்வன் என்ற தமிழ் மொழிச் சொல்லும் கலந்த எனது பெயரில் குழப்பம் இருப்பதாக எனக்குப் படவில்லை.

              எதுக்கு பிரச்சனை நீங்கள் நினைப்பது போல நான் இந்தியாவின் ஒடுக்கப்பட்ட சமூகங்களான முஸ்லிமோ, தலித்தோ, அடக்கப்பட்ட சாதியில் சேராதவன்.. இன்னமும் எனக்குப் பேச உரிமைத் தரமாட்டீர்கள் என்றால். ஏனையோரின் நிலைமை என்னவென்று நன்கு புரிந்துவிடும் …

              • Hindu, is not our base religion. before that we was Buddhist. Before 1500 BC, Only Arian (Parppaa) came from East Germany with Rig Veda. Historical researchers clearly explain you. Note: Don’t as (parppans).

                We are not Hindu. We people are converted to Hindu 2000 year before. Every one commonly accept “Thirukkural” is Reflect Buddhism thoughts.

                Some Tamil Gods are converted into Hindu. Like Kannan as Kirushnan, Muragan as Kandhan, Murugan’s wife is Valli but, they marriage Theivanai, and make relationship with Vinayagar and Siva.

                Before 1000 years, South Indians unaware of “Vinayagar”. All are Created for Cheat Tamils.

                It makes long history….It will take too time explain…

        • //**பொம்பளை பொறுக்கி, என்று தாங்கள் விளிப்பதால் கண்ணன் அவ்வாறு ஆகி விட மாட்டான்.**//
          யண்டா பெண்கள் குளிகரத மறைஞ்சி பாத்துட்டு அவங்கள டிரஸ் இல்லா ம வெளிய வர சொல்லி அவங்க மார்புல இருந்த கைய எடுக்க சொல்லி ரசிச்சவன் பொம்பள பொறுக்கியா இல்லையா? !!! உட்டா அதுக்கும் எதனா அறிவியல் விளக்கம் தர போறயா …திருந்துங்கட ..

        • Brahmins are the real foreign people. They are Greek and came to India when they had famine in their own country before 4000 years. Muslims and christians are the real original peopleof India.

    • Mr.Sivasankaran, are you Brahmin? If you are nonbrahmin you are our friend eventhough you say you are Hindu. Because nonbrahmin hindus are cheated by brahmins. Brahmins will diplomatically exploit you. 88 crore Hindus? If you are a nonbrahmin hindu, can you marry the daughter of a brahmin hindu. Remember. Even this generation brahmins are doing all kinds of cheating in the working spots. They are heartless people. They will never work hard. They will flatter the people in power and will get benefits in shortcut way. And brahmins are intelligent than others. This statement is the greatest joke of this century. Nonbrahmins started studying just before 70 years and now they are in top positions in government and private organizations. But these so called “intelligent brahmins” are studying for 3500 years. Now they can not compete with nonbrahmins(nonbrahmin hindus, muslims and christians). Nonbrahmin hindus, muslims and christians are very very much related. Brahmins are the only enemies for us. Becaues they are the most selfish people in the world. A brahmin should clean the toilet and repair the ditches. Then only we can believe that equality has become practical. Every one should work hard and overtake brahmins in all sort of social status. Each and every nonbrahmin should stand together to oppose this criminal brahmins.

  6. 1. வணக்கம்,நமஸ்காராம்,அஸ்ஸலாமு அலைக்கும்,தோத்திரம்,குட்மார்னிங்

    -இதற்கேற்ற புதிய தமிழ்ச் சொல்லும் கண்டுபிடிக்க வேண்டும்.

    சீக்கிரமா கண்டுபுடிச்சு சொல்லுங்க! தோழர்கள் சிரமப்படுவாங்கண்ணே !

    2. மேலும் இந்த அழகுக் கலைகளெல்லாம் பெண்களைப் போகப் பொருளாக்கி நுகர்வதற்காக ஆணாதிக்கமும், மதமும், முதலாளித்துவமும் உருவாக்கிய அடிமைத்தனம்தான். எனவே அனைத்து மதங்களும் பெண்ணைப் போகப்பொருள் வைப்பதற்கு விதித்திருக்கும் பூ, பொட்டு, பர்தா போன்றவைகளை ஒழிக்க வேண்டும் என்கிறோம்.

    திறந்துகாட்டினாலும் போகப்பொருள் !

    ஒன் பீஸ் டூ பீஸ் போட்டாலும் போகப்பொருள் !

    சேலை தாவனி உடுத்தினாலும் போகப்பொருள் !

    சல்வார் கமீஸ் போட்டு உடம்ப மூடினாலும் போகப்பொருள் !

    பர்தா அணிந்து முழுசா மறைத்தாலும் போகப்பொருள் !

    போகப்பொருளின் மெய்ப்பொருள் என்னவென்று சொல்லுங்கண்ணே !!!

    தோழி சகீலா கூட கேமராவுக்குமுன்னே காட்டுவதை பப்ளிக்ல காட்டுவதில்லையே !!!

    அவங்க போகப்பொருளா இல்ல போகாதப்பொருளா?

    ஒரு விசாரனைக்கமிஷன் போடுங்கண்ணே !!!

  7. //இறைவன் மீது முழு நம்பிக்கை கொண்டு , பண்டைய பாரம்பரிய முறைகளை ஏற்றுக்கொண்டும், நடைமுறை படுத்தியும், சிறப்பாக வாழ்ந்து வரும் எண்பத்து எட்டு கோடி மக்கள் இங்கு உண்டு. எங்களது இல்லத்தில் நிலவும் மகிழ்ச்சி நிச்சயமாக மாற்று மதம் தழுவியவர்களின் இல்லங்களில் நிலவ வில்லை என்று உறுதியாக சொல்ல முடியும்//

    இந்தியாவில் சாட்சாத் ராமராஜ்யம் தான் நடக்கிறது என்பதற்கு இதைவிட சிறந்த உதாரணம் கூற முடியாது.

    • ஹ்ம்ம்.. சரியாகச் சொன்னீர்கள் ..
      தினமும் பல சம்பூகன்கள் அநியாயமாக பிறந்த ஜாதியின் பலனால் கொல்லப் படுகிறார்கள் என்பதற்கும் இதுவே சாட்சி..

      • ஆமாம் பகத்சிங்,

        ஆனாலும் மற்ற நாடுகளுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது இந்தியாவில் சற்று குறைவுதான்.. இதற்காகவாவது சந்தோஷம் அடையுங்களேன்.

        • /இறைவன் மீது முழு நம்பிக்கை கொண்டு , பண்டைய பாரம்பரிய முறைகளை ஏற்றுக்கொண்டும், நடைமுறை படுத்தியும், சிறப்பாக வாழ்ந்து வரும் எண்பத்து எட்டு கோடி மக்கள் இங்கு உண்டு. எங்களது இல்லத்தில் நிலவும் மகிழ்ச்சி நிச்சயமாக மாற்று மதம் தழுவியவர்களின் இல்லங்களில் நிலவ வில்லை என்று உறுதியாக சொல்ல முடியும்//

          //இந்தியாவில் சாட்சாத் ராமராஜ்யம் தான் நடக்கிறது என்பதற்கு இதைவிட சிறந்த உதாரணம் கூற முடியாது.//

          //ஹ்ம்ம்.. சரியாகச் சொன்னீர்கள் ..
          தினமும் பல சம்பூகன்கள் அநியாயமாக பிறந்த ஜாதியின் பலனால் கொல்லப் படுகிறார்கள் என்பதற்கும் இதுவே சாட்சி././

          //ஆமாம் பகத்சிங்,

          ஆனாலும் மற்ற நாடுகளுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது இந்தியாவில் சற்று குறைவுதான்.. இதற்காகவாவது சந்தோஷம் அடையுங்களேன்.//

          88 %இந்துக்கள் வாழ 12% முஸ்லீம்களை யாகவேள்வியால் கொல்ல விட்டுவைச்சுருக்காங்க போல!!!

  8. ந்தப் பள்ளிக்கூடம் அந்த ஊரிலேயே முக்கியமான பள்ளிக் கூடங்களில் ஒன்று. கிட்டத்தட்ட 1500 பிள்ளைகளுக்கு மேல் வாசிக்கிறார்கள். கிறிஸ்துவப் பள்ளிக்கூடம். பள்ளிக்கூடத்துக்கு உள்ளேயே சர்ச் உண்டு. பத்தாம் வகுப்பு பொதுப் பரீக்ஷைக்கு முன்னால் சர்ச் சென்று, ஸ்தோத்திரித்தால்தான் ஹால் டிக்கெட் தருவார்களாம். புனித நீரும் தெளிப்பார்களாம். எல்லாப் பிள்ளைகளும் இதனைச் செய்கின்றன. ஒரு பையன் தன் வீட்டில் இதைச் சொல்லி, எனக்கு அப்படி கும்பிட மனம் வரவில்லை என்று சொல்லியிருக்கிறான். பையனின் அப்பா பள்ளிக்கூடத்துக்கு வந்து சத்தம் போட்டிருக்கிறார். ஆனால் அந்தப் பையனுக்கு ஹால்டிக்கெட் தரவே இல்லை பள்ளிக்கூடத்தின் ஹெட்மாஸ்டர். பையனின் அப்பாவும் பரீக்ஷைக்கு ஒருவாரம் வரை பார்க்கலாம், இல்லை என்றால் பிரச்சினை பண்ணிவிடலாம், ஆனால் எப்படியும் கொடுத்துவிடுவார்கள் என்று நம்பி தொடர்ந்து பள்ளிக்கூடத்துக்கு வந்த வண்ணம் இருந்திருக்கிறார். கடைசியில் இந்தப் பையன் வந்து கும்பிடமாட்டான் என்று தெரிந்ததும், பரீக்ஷைக்கு இரண்டு நாள் முன்பு அந்தப் பையனுக்கு ஹால் டிக்கெட்டை ஒரு பியூனிடம் கொடுத்து அனுப்பி விட்டார்கள் பள்ளிக்கூடக் காரர்கள். அத்தனை நாள் அந்தப் பையனும் அந்தப் பையனின் குடும்பமும் அனுபவித்த கஷ்டங்கள் தேவைதானா? யாரையும் இப்படி, இவரைக் கும்பிடு என்று கட்டாயப் படுத்துவது தவறு என்று பள்ளிக்கூட நிர்வாகத்துக்குத் தெரியாதா என்ன?

    நிறைய ஹிந்துப் பள்ளிகளிலும் பல்வேறு மதங்களைச் சேர்ந்த மாணவர்கள் படிக்கிறார்கள். அவர்கள் யாரும் ஹிம்சைக்கு ஆளாவதில்லை. எல்லா ஹிந்துப் பள்ளிக்கூடங்களும் மறக்காமல் சர்வ சமயப் பிரார்த்தனைதான் நடத்துகிறார்கள். கோவிலுக்குள்ளே வந்து கும்பிட்டு, திருநீறு வாங்கிக்கொண்டு, பின்னர் ஹால் டிக்கெட்டை வாங்கிக்கொண்டு போ என்று ஒரு கிறிஸ்தவப் பையனைச் சொன்னால், அது வெளியில் தெரிந்தால், இந்த நாட்டில் என்ன நடக்கும் என்று யோசித்துப் பாருங்கள்…ஆனால் ஒவ்வொரு கிறிஸ்தவப் பள்ளிகளிலும்நடப்பது என்ன?

    கட்டாய கிறிஸ்தவ மத வழிபாடு..

    • //////கோவிலுக்குள்ளே வந்து கும்பிட்டு, திருநீறு வாங்கிக்கொண்டு, பின்னர் ஹால் டிக்கெட்டை வாங்கிக்கொண்டு போ என்று ஒரு கிறிஸ்தவப் பையனைச் சொன்னால், அது வெளியில் தெரிந்தால், இந்த நாட்டில் என்ன நடக்கும் என்று யோசித்துப் பாருங்கள்…////

      என்ன நடந்திருக்கும் ?..

      கோவிலுக்குள் தீண்டத்தகாதவர் என்று தாழ்த்தப்பட்ட மக்களை உள்ளே விட மறுக்கும் நிலையில் இந்த நாட்டில் அப்படி என்ன பெரியதாக நடந்து விட்டது?..

      பார்ப்பானைத் தவிர வேறு யாரையும் கோவிலுக்குள் செல்லவிடாமல் இன்று வரை நிறுத்தி வைத்திருக்கும் நிலையில் இந்த நாட்டில் அப்படி என்ன பெரியதாக நடந்து விட்டது?..

      திண்ணியத்திலும் கயர்லாஞ்சியிலும் நடந்த கொடுமையைக் கண்ட பிறகும் நடக்காதது இனி அப்படி என்ன பெரியதாக நடந்து விடப் பொகிறது?.

      கிறுஸ்தவ மதம் ஒரு சாக்கடை என்றால் இந்து மதம் ஒரு அக்மார்க் மலக்குட்டையே ..

    • என்ன நடந்திருக்கும் ஒன்னும் நடக்காது ….. !!! எனது தோழன் கிருத்தவப் பையன் நாங்கள் கோயில் சென்ற காலத்தில் அவனும் வருவான் திருநீறுக் கொடுப்போம் – பூசிக் கொள்வான் … இது அவரின் பெற்றோருக்கும், எமது கிருத்தவப் பள்ளி நிர்வாகத்துக்கும் தெரியும் ..

      ஒன்னியும் நடந்தது இல்ல !! அதிகம் சினிமாப் பார்ப்பீங்களோ சகோ ?

    • மருது,
      நீங்கள் சொல்வது போல் கிறித்துவ பள்ளிகளில் அனைத்து மத மாணவர்களையும் தேவாலயத்திற்கு அழைத்து சென்று பிரார்த்தனையில் கலந்து கொள்ளச் செய்வது தவறுதான்.மறுப்பில்லை.

      அதே சமயம் இது சரிதானா.
      \\நிறைய ஹிந்துப் பள்ளிகளிலும் பல்வேறு மதங்களைச் சேர்ந்த மாணவர்கள் படிக்கிறார்கள். அவர்கள் யாரும் ஹிம்சைக்கு ஆளாவதில்லை. எல்லா ஹிந்துப் பள்ளிக்கூடங்களும் மறக்காமல் சர்வ சமயப் பிரார்த்தனைதான் நடத்துகிறார்கள்.//

      அந்த பள்ளியில் கடவுள் நம்பிக்கை இல்லாத பெற்றோரின் குழந்தைகளும் படிக்கலாம் அல்லவா. உழைப்பை நம்பி தேர்வு எழுத வேண்டும் என அந்த பெற்றோர் சொல்லி அனுப்பிய குழந்தைகளை கடவுள் மதிப்பெண் தருவார் என நம்ப வைத்து பிரார்த்தனையில் ஈடுபடுத்துவது சரிதானா.

      எந்த நியாய உணர்வின் அடிப்படையில் கிருத்துவ பள்ளிகளை கண்டிக்கிறீர்களோ அதே நியாய உணர்வின் அடிப்படையில் இந்து பள்ளிகளின் அனைத்து மத பிரார்த்தனையையும் கண்டிக்க முன் வரவேண்டும். மாறாக அந்த பள்ளிகளை உயர்த்தி கூறுகிறீர்கள்.இதிலிருந்தே உங்களின் இந்து மதவாத சார்பு தெளிவாகிறது.

      அடுத்த பொருள்.தமிழக அரசு பாடநூல் கழகம் வெளியிடும் பாடநூல்களின் முகப்பில் அரசு முத்திரையாக உள்ள கோயில் கோபுரம் அச்சிடப்படுகிறது.அனைத்து மத குழந்தைகளும் படிக்கும் புத்தகத்தில் ஒரு மதத்தின் வழிபாட்டு தல குறியீட்டை அச்சிட்டு தருவது முறையா. மதசார்பற்ற தமிழக அரசு தனது முத்திரையாக இந்து மதக் கோவில் கோபுரத்தை [திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்] வைத்திருப்பது சரிதானா.

      தமிழ் பாட புத்தகங்களில் கடவுள் வாழ்த்து இடம் பெறுவதுதான் மதசார்பின்மையா.அதுவும் கம்பராமாயணத்தில் இருந்து கடவுள் வாழ்த்து பாடலை தேர்வு செய்வதுதான் அனைத்து மதங்களையும் சமமாக பாவிப்பதா.நியாயமாக பார்த்தால் தமிழ் தாய் வாழ்த்து மட்டும் போதுமே.

    • மருது,

      விவேகானந்த கேந்திரம் நடத்தும் பள்ளிகளில் தினமும் காளியும் மாலையும் சம்ஸ்கிருத சுலோகங்களை பாடச் சொல்வது ஏன்?
      பிள்ளையார் சதுர்த்தியின் போது பிள்ளையார் பொம்மை வைத்து பத்து நாட்களுக்கு நாளொரு வகுப்பு வீதம் பூசை செய்வது ஏன்?
      தனது பள்ளியில் உள்ள ‘அவைக்கூடத்தை’ ஆர். எஸ். எஸ் மதவெறியன்களுக்கு கூட்டம் நடத்த கொடுப்பதேன்?
      அடிக்கடி லோக்கல் ஆர். எஸ். எஸ் தறுதலைகளை அழைத்து லெக்சர் கொடுக்கச் சொல்வதேன்?

      அப்படி ஒரு பள்ளியில் தான் நானும் பயின்றேன். இவைகள், கடவுள் வழிபாடுகள் செய்யாத ஒரு குடும்பத்தில் பிறந்த என்னை ஒரு அரைகுறை இந்துதேசிய வெறியனாக பள்ளிப் பருவத்தில் உருவாக்கின என்பதால் அதன் பாதிப்பை உணரமுடிகிறது. அந்தக் காவிபுழுதியைக் கடந்து வருவது அவ்வளவு சுலபம் அல்ல.

    • ஸ்ரீ.மரத்து,

      நீங்கள் இதுபோன்ற நிகழ்வுகளை ஏதாவது அரசு பள்ளிகளில் பார்த்திருக்கிறீர்களா?

      நமது ஊர் அரசு பள்ளிகளெல்லாம் அது இருக்கும் இடத்தின் அமைவிடத்திர்க்கேற்ப குறிப்பிட்ட மத பெரும்பான்மையினரின் பள்ளியாகவே செயல்படுகிறது. எனக்கு தெரிந்து கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அரசு மேல்நிலைப்பள்ளி இந்துமத சாயலிலும், திட்டுவிளை அரசு மேல்நிலைப்பள்ளி இஸ்லாமிய மத சாயலிலும், தாழக்குடி அரசு மேல்நிலைப்பள்ளி இந்துமத சாயலிலும் தான் செயல்படுகின்றன. என்னமோ தனியார் பள்ளியில் நடப்பதை மட்டுமே படம் பிடிக்கிறீர்கள்! வித்யாலயாக்களிலும் இது போன்ற அபத்தங்கள் நடக்கின்றன தான்.

      (கிறிஸ்தவ பள்ளிகளில் மத பிரச்சாரம் செய்கிறார்கள் என்று தெரிந்தும் ஏன் அந்த சாக்கடையில் சென்று சேர்க்க வேண்டும்? சேர்த்த பின்னர் ஏன் குய்யோ முய்யோ என்று உளற வேண்டும்?)

      இப்படி கட்டுரைக்கு சம்பந்தமே இல்லாமல் பேசுவதற்கு…. எங்கயாவது போய் முட்டிகலாம்டா…….. நான் என்னைய சொன்னேன்! ஹி ஹி

    • Y you send your students to that school? They providing quality
      education than others so only know…?

      If you don’t want you no need to send your children to that
      particular school. send to Govt. Schools? ….Why not…?

      He (Christian), providing quality education at low cost or
      some times free of Cost…!

  9. ‘அஸ்ஸலாமு அலைக்கும்!’

    தமிழில் ‘உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்!’ என்று இறைவனிடம் சொன்னவருக்காக பிரார்த்திக்கிறோம்.

    அதற்கு பதிலாக அவரும் ‘உங்கள் மீதும் அமைதியும் சமாதானமும் உண்டாகட்டுமாக!’ என்று பிரார்த்திக்கிறார். இது மனித நேயத்தை வளர்க்கும்.

    ‘வணக்கம்’ என்று கை கூப்பி பணிவதால் அங்கு தன்னை மற்றவர் முன் தாழ்த்திக் கொள்கிறார். தூரத்திலிருந்தே கும்பிடுவதால் வர்ணாசிரமம் புகுத்தப்பட்டு தீண்டாமை வளர்க்கப்படுகிறது.

    ‘குட் மார்னிங்’ என்று நீங்கள் மாலையிலோ அல்லது இரவிலோ சொல்ல முடியாது. நேரத்துக்கு தக்கவாறு நாம் மாற்ற வேண்டிய அவசியம் வரும். அடுத்து எழவு வீட்டில் போய் ‘குட்மார்னிங்’ என்று சொன்னால் வீட்டுக்காரன் நம்மை அடிக்க வந்தாலும் வருவான். ‘ஏண்டா! நான் என் அப்பனை இழந்து துக்கத்தில் இருக்கிறேன். உனக்கு இது சிறந்த காலையா?’ என்று கோபித்துக் கொள்வார்.

    ஆனால் ‘அஸ்ஸலாமு அலைக்கும்’ என்ற பதம் எந்த நேரத்திலும், எவ்வளவு இக்கட்டான சூழ்நிலையிலும் தாராளமாகப் பயன்படுத்தலாம். இந்து, முஸ்லிம், கிறித்தவர் என்று எவரும் எந்த வயதினரும் எந்த பாலினரும் எந்த நாட்டினரும் பயன்படுத்தலாம்.

    ஒவ்வொரு மனிதனும் ஏங்குவது அமைதிக்கும், சமாதானத்துக்கும் தான். எனவே அனைவரும் இந்த வழக்கத்தை அதிகப்படுத்தி சாந்தியையும் சமாதானத்தையும் பெருக்குவோம்.
    ————————————————-
    5175. பராஉ இப்னு ஆஸிப் அறிவித்தார்

    இறைத்தூதர் அவர்கள் ஏழு விஷயங்களை(க் கடைப்பிடிக்கும்படி) எங்களுக்குக் கட்டளையிட்டு, ஏழு விஷயங்களை எங்களுக்குத் தடைசெய்தார்கள்.

    நோயாளியிடம் நலம் விசாரிக்கும்படியும், இறந்த உடலைப் பின்தொடர்ந்து செல்லும்படியும், தும்மியவ(ர் அல்ஹம்துலில்லாஹ் எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே என்று கூறுகையில் அவ)ருக்கு (யர்ஹமுகல்லாஹ் -உங்களுக்கு அல்லாஹ் கருணை காட்டுவானாக என) பதில் சொல்லும்படியும், (உன்னை நம்பிச்) சத்தியம் செய்தவர் (அதை) நிறைவேற்ற உதவும்படியும், அநீதியிழைக்கப்பட்டவருக்கு உதவும்படியும், ‘சலாம்’ எனும் முகமனைப் பரப்புப்படியும், விருந்து அழைப்பை ஏற்கும்படியும் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள்.

    மேலும், (ஆண்கள்) தங்க மோதிரங்களை அணிய வேண்டாமென்றும், வெள்ளிப்பாத்திரங்களைப் பயன்படுத்த வேண்டாமென்றும் ‘மைஸரா’ எனும் பட்டுமெத்தை, பட்டு கலந்த (எகிப்திய) பஞ்சாடை, தடித்தபட்டு, (கலப்படமில்லாத) சுத்தப்பட்டு ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டாமென்றும் எங்களுக்குத் தடை விதித்தார்கள்.

    இன்னும் சில அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது. 112
    Volume :5 Book :67

    • Then why Shias not allowed in Sunnis Masque.Ahmedis not regoconised in Islamic country Pakistan.Why there is a sect called Musalli not allowed to any of Masque in Pak due to caste prejudice.Keep all religion in equal distance while poinfinger for faults

  10. @ சுவனப்பிரியன், இங்க நீங்க சந்துல சிந்து பாட முயற்சி பண்னாதிங்க,நாத்திகர்களுக்கு மட்டும் தான் எந்த ஒரு மதத்தையும் விமர்சிக்கும் அருகதை உள்ளது, உங்களைப் போன்ற மத ——- அல்ல. வினவு, செங்கொடி, தருமி உங்கள் மதத்தை பிரித்து மேய்ந்ததை மறந்து விட்டீர்களா ?

    • இராவணன் நீங்க சொல்றது தவறு, மத நம்பிக்கை உள்ளவங்களுக்கும் மதத்தை விமர்சிக்கும் உரிமை அருகதை எல்லாம் உண்டு. அப்படி விமர்சிக்கும் போதுதான் அவர் ஒரு ஜனநாயகவாதியாக ஆக முடியும் என்பது மட்டுமல்ல, அவர் மதத்தில் ஜனநாயகத்துக்கு இடம் உள்ளதா என்பதையும் புரிந்து கொள்ளமுடியும்.

    • முட்டாள் தனமான பேச்சு !!! யாரும் யாரையும் விமர்சிக்கலாம் .. விமர்சிக்க வேண்டும் … ஒரு இந்துவை விமர்சிக்க அவன் இந்துவாக இருக்கத் தேவை இல்லை.. அதே போல மதவாதியை விமர்சிக்க அவன் நாத்திகவாதியாக இருக்க வேண்டிய அவசியமும் இல்லை …

      பாசிசப் பேச்சுக்களை நாத்திகம் என்றப் பெயரில் சமூகத்தின் மீது திணிக்காதீர்கள் சகோ. ராவணன் அவர்களே

      • எந்த ஒரு மதத்திலும் ஜனநாயகத்துக்கு இடம் இல்லை. அப்படி இருப்பதாக நீங்கள் கருதினால் அது போலி ஜனநாயகம்.

        ஒரு மதத்தவரை மற்றைய மதத்தவர் விமர்சிக்கும் போதே தன்னுடைய மதத்தை உயர்த்திக்கொள்கிறான். இன்னும் சொல்லப்போனால் தன்னுடைய மதத்தை மகிமைப்படுத்துவதற்காகவே மற்றைய மதத்தை தாழ்த்துகிறான். உண்மையான நாத்திகனால் மட்டுமே எந்த ஒரு மதத்தையும் விமர்சிக்க முடியும், அருகதையும் உண்டு.

        வினவு, மதம் ஒரு போதை என்பதன் அர்த்தம் என்ன ?

        • அய்யா, எல்லா மதத்தவரும் அவரவர் மதக்கொளகைகளை பெருமைபடுத்தி மற்ற மதக்கொள்கைகளை சிறுமைபடுத்தி கூற முயற்சி செய்கிறார்கள் என்றால் இறைவனே இல்லை என்று சொல்லும் தங்களுக்கும் ஒரு கொள்கை உள்ளது அதை மெஇபிப்பதர்க்காக மற்றவையை பொய் என்றும் , குறை என்றும் கூறுகிறீர்கள் . மொத்தத்தில் மதவாதிகள் தங்களுடைய மதக்கொள்கைகளுக்காக சையும் அதே வேலையை மதமே இல்லை என்று சொல்லும் தாங்களும் செய்கிறீர்கள் . எல்லாமே அவரவர் கொள்கைகளை வாழவைக்கவே/

  11. மதம் ஒரு போதை என்று பாட்டாளி வர்க்கத்தின் ஆசான் மார்க்ஸ் சொல்லியிருக்காரு
    அதனால தேசிய போதையில் இருப்பவர்களுக்கு இந்த கட்டுரையெல்லாம் உங்க மண்டையிக்கு அவ்வளவு சீக்கிரமா ஏறாதுங்கோ.

  12. அருமையான பதிவு .. இந்திய தேசம் வேறு இந்து தேசம் வேறு .. இந்திய தேசத்தில் இந்து, முஸ்லிம், கிறித்தவர், நாத்திகர், கம்யூனிஸ்ட்கள், மதமற்றோர் என அனைவரும் சமமாக கருதப்படுவர் .. ஆனால் இந்து தேசத்தில் இந்துக்களாக இருக்கும் பலரே இரண்டாம் தரமாகப் போவார்கள் …

    இஸ்லாமியரோ, கிறித்தவரோ இம்மணுக்கு அந்நியர்கள் இல்லை – அவர்களுன் இம்மண்ணின் மைந்தர்களே …

    இந்த மண்ணின் பழங்குடிகள் பலரும் கூட கிறித்தவதுக்கு மாறிவருகின்றார்கள் – அவர்களை அந்நியமாகப் பார்ப்பது எவ்வகை நியாயம்.

    சொல்லப் போனால் பார்ப்பனர்களை விடவும் கிரித்தவ இந்தியர்கள் தமது பண்பாடுகளைப் பேணி வருகின்றார்கள் …. தாலிக் கூட தேவாயலத்தில் கட்டிக் கொள்கின்றார்கள் ..

    ஆக மொத்ததில் இந்து தேசம் – என்பது ஒரு MYTH

    • “இந்திய தேசத்தில் இந்து, முஸ்லிம், கிறித்தவர், நாத்திகர், கம்யூனிஸ்ட்கள், மதமற்றோர் என அனைவரும் சமமாக கருதப்படுவர்” .

      நல்லது இந்த சமத்துவம் எல்லாம் நீங்கள் இந்தியாவில் இருந்து கொண்டுதான் பேச முடியும். அரேபியாவிலோ, பாகிஸ்தானிலோ பேசினால் கதையே வேறு..

      “ஆனால் இந்து தேசத்தில் இந்துக்களாக இருக்கும் பலரே இரண்டாம் தரமாகப் போவார்கள்”

      சிறப்பான கணிப்பு,. ஆனால் இந்தியாவில் இருந்தும், பாகிஸ்தானில் இருந்தும் , பங்களா தேஷில் இருந்தும் பணி காரணமாக அரேபிய பாலைவனத்திற்கு செல்லும்
      இசுலாமிய நண்பர்கள் எவ்வாறு நடத்த படுகின்றனர் என்பது உங்களுக்கு தெரியுமா? அரபியர்களை பொறுத்தவரையில் இவர்கள் உண்மையான இசுலாமியர்கள் கிடையாது. மதம் மாறியவர்கள். இரண்டாம் தரம் கூட கிடையாது அதற்கும் கீழே…

      குற்றம் சுமத்துவது எளிது, அதிலும் மற்று முகாம் சென்ற பின் எல்லாமே தவறாகத்தான் தெரியும்..

      “சொல்லப் போனால் பார்ப்பனர்களை விடவும் கிரித்தவ இந்தியர்கள் தமது பண்பாடுகளைப் பேணி வருகின்றார்கள் …. தாலிக் கூட தேவாயலத்தில் கட்டிக் கொள்கின்றார்கள் ..”

      மதம் மாறியவர்கள் ஏன் இந்து சம்ப்ரதாயங்களை கடை பிடிக்க வேண்டும்.? மோதிரம் அணிவிக்கலாமே? வெள்ளை உடையில் ..

      மாறினால் முழுமையாக மாற வேண்டும்.. அரைகுறையாக நடந்து கொண்டு அந்த மதத்தினரை இழிவு படுத்தாதீர்கள்..

      “ஆக மொத்ததில் இந்து தேசம் – என்பது ஒரு மைத்”

      இது இந்து தேசம் என்று நாங்கள் கூறி கொள்வதில்லை. நீங்கள் தான் .

      அது ஏன் இக்பால் செல்வன் உண்மையான மதத்தினரை விட மிஞ்சும் அளவுக்கு இந்த பாதியில் புது மதம் கண்டவர்கள் தீவிர பற்றாக இருக்கிறார்கள்? ஐயோ ஐயோ..சிரிப்பு தான் வருகிறது…

      • அய்யா சிவசங்கரனாரே !!!

        நமது நாடு இந்தியா .. இங்குள்ளப் பிரச்சனைகளைப் பேசும் போது இங்குள்ளப் பிரச்சனைகளைத் தான் பேச முடியும்.. சௌதி, பாகிஸ்தான் குறித்து தனிப் பதிவுகளில் பேசலாம் .. ஏற்கனவே எழுதி விமர்சித்துவிட்டோம்.. அது நிற்க.. அங்குள்ள நாடுகளில் மாற்றம் வர அங்குள்ளவர்கள் தான் போராட முடியும் ………… !!!

        அப்படி இங்குள்ளோருக்கும், வேறு நாட்டுக்கும் முடிச்சு போடணும் எனில் .. முதலில் அமெரிக்காவில் – கனடாவில் இருக்கும் 4 மில்லியன் இந்துக்கள் அனைவரும் கிறித்தவத்துக்கு மாறும் படி அங்கு கோரினால் சும்மா இருப்பீர்களா என்பது தனிக் கதை ?

        இந்த உலகம் முழுதும் எவரும் மதம் மாறாமல் இல்லை. இந்துக்களாக இருக்கும் நாம். நம் தமிழ் நாட்டில் பௌத்தர்களாகவும், சமணர்களாகவும், அதற்கு முன்னர் ANIMIST-களாகவுமே இருந்தோம் என்பதையும் மறக்க கூடாது சகோ.

        என்னைத் தாங்கள் ஒரு முஸ்லிம் என நினைத்துப் பொங்கித் தள்ளுவது தெரிகின்றது. நீங்கள் நினைப்பது போல வேறு மதத்தில் இருந்துக் கொண்டு பேசவில்லை. நீங்க போற அதே கோயிலுக்குத் தான் நானும் போறேன் பாஸ் !! போதுமா ???

        இந்திய தேசம் என்பது இந்து தேசம் அல்ல .. இங்கு இருக்கும் அனைவருக்குமான ஒரு சமத்துவ தேசம் என்பதை மறக்கக் கூடாது …. !!!

        எவரும் விரும்பிய மதங்களைப் பின்பற்றட்டும் அதில் பிரச்சனை இல்லை ….. ஏன் மதங்களைத் துறந்தோர் கூட இந்நாட்டில் வாழ்கின்றார்கள் …. !!!

      • @ சிவசங்கரன் – // மதம் மாறியவர்கள் ஏன் இந்து சம்ப்ரதாயங்களை கடை பிடிக்க வேண்டும்.? மோதிரம் அணிவிக்கலாமே? வெள்ளை உடையில் .. ///

        அப்படியா ? எது இந்து மத சம்பிரதாயங்கள் .. வேதத்தில் எந்த இடத்தில் தாலிக் கட்டும் படிக் கூறுகின்றது.. சொல்ல முடியுமா ? சகோ.. வேதாந்ததில் எந்த இடத்தில் தாலிக் கட்டும் படிப் போதிக்கின்றது ..

        எது இந்து என இந்துக்களுக்கே தெரியாது ??? என்பது வேடிக்கையானது சகோ… !!!

        இந்தியாவில் சில இனக்குழுக்களுக்கு தத்தமது பண்பாடுகள் இருக்கின்றன, அவர்கள் மதம் மாறினால் அப்படியே அனைத்தையும் மறந்துவிட்டு மோதிரம் அணிய வேண்டும், வெள்ளுடைத் தரிக்க வேண்டும் என்பதில்லை .. மதம் வேறு, கலாச்சாரம் வேறு, மதம் மாறுவோர் கலாச்சாரத்தை மாற்ற வேண்டியதும் இல்லை.. கலாச்சாரம் மாறுவோர் மதங்களை மாற்ற வேண்டியதும் இல்லை..

        அப்படிப் பார்த்தால் இந்தியாவில் உள்ள இந்துக்கள் எல்லோரும் ஏன் பேண்ட் சர்ட் போடுகின்றோம்? பெண்கள் ஏன் ரவிக்கைப் போடுகின்றார்கள் ? அனைவரும் வேட்டிக்கும், சேலைக்கும் மாறலாமே .. சாப்ட்வேர் கம்பெனியில் குடுமிக் கடுக்கன் போட்டுக் கொண்டு போகலாமே !!!

        சிவசங்கரன் எப்படி இருக்கின்றார் முதலில் .. மதம், மொழி, கலாச்சாரம், தேசியம் ஒன்றுக்கு ஒன்று சம்பந்தம் இல்லை …

        தமிழ் பேசுவோர் அனைவரும் இந்துக்களாக இருக்க வேண்டியதில்லை, இந்துக்கள் அனைவரும் இந்திய கலாச்சாரத்தில் இருக்க வேண்டியதில்லை , இந்தியக் கலாச்சாரத்தில் இருப்போர் அனைவரும் இந்தியர்களாக இருக்க வேண்டியதும் இல்லை ….

        அறிவற்றோரே அனைத்தையும் போட்டுக் குழப்பிக் கொள்வார்கள் ….

  13. //இறைவன் மீது முழு நம்பிக்கை கொண்டு , பண்டைய பாரம்பரிய முறைகளை ஏற்றுக்கொண்டும், நடைமுறை படுத்தியும், சிறப்பாக வாழ்ந்து வரும் எண்பத்து எட்டு கோடி மக்கள் இங்கு உண்டு. எங்களது இல்லத்தில் நிலவும் மகிழ்ச்சி நிச்சயமாக மாற்று மதம் தழுவியவர்களின் இல்லங்களில் நிலவ வில்லை என்று உறுதியாக சொல்ல முடியும்//

    திண்ணியத்தில் மலம் திங்க வைத்தது: பாப்பாரப் பட்டி கீரிப்பட்டி யில் தலைவராக ஒரு தலித் வந்தால் உடன் கொல்லப்படுவது: தேர் இழுப்பதில் நடக்கும் சண்டையில் வருடா வருடம் இரண்டு சாதிகளும் வெட்டிக் கொண்டு சாவது:: நான்கு வர்ணமாக மனிதர்களைப் பிரித்து அந்த வேதத்தை சூத்திரர்கள் படித்தால் காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்ற வேண்டும் என்று எழுதி வைத்தது: சைவம் தழைக்க ஆயிரக்கணக்கான சமணர்களை கழுவில் ஏற்றியது: கோவில்களில் தேவரடியார்களாக நமது இளம் பெண்களை நேர்ந்து விட்டு அந்த பெண்களை விபச்சாரிகளாகவே மாற்றியது: ஆசிரியர்களின் தீண்டாமைக் கொடுமையால் தினம் தினம் பல அரிசன மாணவிகள் தற்கொலை செய்து கொள்வது: கோவில்களில் இன்று வரை மற்ற சாதிக்காரர்கள் நுழைய தடை:…..இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

    இது போன்ற நிகழ்வுகளெல்லாம் மதம் மாறிய எங்கள் வீடுகளில் நிலவுவதில்லை. இது போன்ற நிகழ்வுகள் எங்களுக்கு தேவையுமில்லை.

    எனது பூர்விக மதம் என்னையும் எனது மூதாதையர்களையும் ஒழுங்காக நடத்தியிருந்தால் நாங்கள் எதற்கு வேறு மதம் மாறி சென்றிருக்க வேண்டும்? இன்று நான் உலக முஸ்லிம்களில் ஒருவன். என்னைப் பார்த்து எவராவது சூத்திரன் என்று சொல்ல முடியுமா? சொல்ல நாதான் எழுமா? எனவே இந்து மத வேதங்களான ரிக் யசூர் சாம அதரவண வேதங்களை தமிழ்ப்படுத்துங்கள். அதன்படி வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள். மனிதர்களால் எழுதப்பட்ட காவியங்களை காவியங்களாக பாருங்கள். அவர்களை அவதார புருஷர்கள் என்று எண்ணி அவர்களையும் கடவுளாக்காதீர்கள்.

    இந்து மதத்தின் சொச்ச பேரையும் இந்து மதத்துக்கு உள்ளேயே வைத்து காப்பாற்ற இது ஒன்றே வழி. அல்லது பகுத்தறிவு தாத்தா பெரியார் சொன்னது போல் இஸ்லாத்தில் நுழைந்து விட வேண்டியதுதான். வேறு வழி இல்லை. கசப்பாக இருந்தாலும் உடல் நோய் தீர மருந்து குடிப்பது இல்லையா?

    //இவை அனைத்தும் இந்த நாட்டின் செல்வத்தின் மீது பற்று கொண்டு, இந்த நாட்டை போர்கள் பல புரிந்து கைப்பற்றி , எங்கிருந்தோ இருந்து இங்கு வந்து புகுந்த வந்தேறிகளால் இந்நாட்டு மக்களிடையே ஒற்றுமையை குலைத்து வேற்றுமை ஏற்படுத்துவதற்காக திட்டமிட்டு புகுத்தப்பட்டது. அது முகலாயர்,ஐரோப்பியர்கள் மற்றும் பல்வேறு இனத்தவர்களால் புகுத்தப்பட்டது.//

    தீண்டாமை, கழுவில் ஏற்றுதல், உடன் கட்டை ஏறுதல், பலதார மணம், உயிர்ப்பலி, இவை அனைத்தும் மெகலாயர்கள், ஐரோப்பியர்கள் நம் நாட்டை ஆள்வதற்கு முன்பே இங்கு இருந்தது என்பதற்கு ஆதாரங்களைத் தரவா! இன்றும் கல் வெட்டுகள் சொல்லிக் கொண்டிருக்கின்றன. ராஜராஜ சோழனின் வைப்பாட்டிகளின் வாரிசுகளை இன்றும் தஞ்சையில் பார்க்கலாம்.

    ஆதியில் ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்றும் ‘நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள் இருக்கையில்’ என்றும் தான் நம் முன்னோர்கள் சீரிய வாழ்வு வாழ்ந்திருக்கிறார்கள். என்று ஆரியர்கள் இந்தியாவில் நுழைய ஆரம்பித்தார்களோ அன்றே பிடித்தது சனியன் இந்தியாவுக்கு. வந்தேறிகளால் இந்தியாவில் கலாசார மாற்றம் ஏற்பட்டது உண்மைதான். அது ஆரிய வந்தேறிகள் என்று திருத்திக் கொள்ளுங்கள்.

    • “எனது பூர்விக மதம் என்னையும் எனது மூதாதையர்களையும் ஒழுங்காக நடத்தியிருந்தால் நாங்கள் எதற்கு வேறு மதம் மாறி சென்றிருக்க வேண்டும்? இன்று நான் உலக முஸ்லிம்களில் ஒருவன். என்னைப் பார்த்து எவராவது சூத்திரன் என்று சொல்ல முடியுமா? சொல்ல நாதான் எழுமா? எனவே இந்து மத வேதங்களான ரிக் யசூர் சாம அதரவண வேதங்களை தமிழ்ப்படுத்துங்கள். அதன்படி வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள். மனிதர்களால் எழுதப்பட்ட காவியங்களை காவியங்களாக பாருங்கள். அவர்களை அவதார புருஷர்கள் என்று எண்ணி அவர்களையும் கடவுளாக்காதீர்கள்.”

      நல்லது. இப்போது தாங்கள் தழுவி இருக்கும் மதம் தங்களை ஒழுங்காக நடத்த வில்லை என்றால் உடனே அடுத்த மதத்திற்கு மாறி விடுவீர்கள் அப்படிதானே?

      அடுத்த மதம் மாறியபின் தற்போது இருக்கும் மதத்தை பற்றி தவறாக பேசுவீர்கள்? அப்படிதானே? இப்படியே எல்லா மதத்திற்கும் மாறி மாறி கடைசியில் சீ இந்த பழம் புளிக்கும் கதைக்கு வந்து விடுவீர்கள்! அப்படிதானே? சூப்பர் .

      சத்தியமாக உங்களை பார்த்து எவரும் சூத்திரன் என்று கேட்க முடியாது. நாவும் எழாது, கவலையை விடுங்கள்.. இனி நீங்கள் சூத்திரன் இல்லை. எல்லாரையும் விட உயரத்திற்கு சென்று விட்டீர்கள் ஒரே முடிவின் மூலம்..

      வேதங்களை தமிழ்ப்படுத்துங்கள். அதன்படி வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள். மனிதர்களால் எழுதப்பட்ட காவியங்களை காவியங்களாக பாருங்கள். அவர்களை அவதார புருஷர்கள் என்று எண்ணி அவர்களையும் கடவுளாக்காதீர்கள்.”

      இதெல்லாம் கொஞ்சம் உங்களுக்கே அதிகமாக தெரியவில்லை?

      இதை நீங்கள் இந்து மதத்தில் இருந்து சொல்லி இருந்தீர்கள் என்றால் எவராவது ஒருவராவது காது கொடுத்து கேட்டு இருப்பார் . அடுத்த மதத்திற்கு போய்விட்ட உங்களின் அறிவுரை எங்களுக்கு தேவை இல்லை. எங்களுக்கு தெரியும். போன இடத்திலாவது உருப்படியாக இருந்து , வேதத்தை படித்து அதன் படி நடக்க பாருங்கள்..

      இறுதியாக,
      மதம் மாறுகிறேன் என்று மரம் மாறும் மந்தியாக ஆகி விடாதீர்கள் …

  14. அன்பு வினவு தளத்திற்கு என் ஆழமான நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன் ….

    இந்து மதம் சனாதன தர்மம் லொட்டு லொசுக்கு என்று பீற்றி கொள்ளும் இந்த அறிவு ஜீவிகளுக்கு(முட்டா ஜென்மங்களிடம்) ஒன்று கேட்க விரும்புகிறேன்… இலங்கையில் தமிழர்கள் மீது ஒரு மூர்க்கமான போர் கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்றதே. அப்போது வேதியியல் குண்டுகள் கொத்து குண்டுகள் போன்ற தடை செய்ய பட்ட ஆயுதங்களை பயன்படுத்தி வெறி பிடித்த சிங்கள ராணுவம் ஒன்றரை லட்சம் தமிழர்களை கொத்து கொத்தாக கொன்று அழிதார்களே அந்த தமிழர்களில் ஒரு லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் இந்து மதத்தை சேர்ந்தவர்கள் தான். தனியாக விட பட்ட அப்பாவி தமிழ் பெண்களை கதற கதற கற்பழித்து கொன்றார்களே சிங்கள நாய்கள் அவர்கள் அனைவரும் பெரும்பாலும் இந்து பெண்கள் தான் . கேள்வி கேட்பார் இல்லாமல் இந்த இன அழிப்பு நடந்து முடிந்ததே. எந்த இந்து மத அமைப்பு இதை கண்டித்து ஒரு பெரும்போராட்டம் நடத்தியது. கம்யூனிஸ்ட் கட்சி தான் முதன் முதலில் வீதிக்கு இறங்கி வந்து போராடியது. இன்று இந்து தர்மத்தை காத்திட துடிக்கும் இந்த கேடுகெட்ட இந்து மத அமைப்புகள் எல்லாம் என்ன மயிரா புடுங்கி கொண்டு இருந்தது. நாத்திக கட்சிகள், தமிழ் அமைப்புகள்,கம்யூனிஸ்ட் தோழர்கள் தான் வீதிக்கு வந்து போராடினார்கள். இலங்கையில் நாதி இல்லாமல் செத்து மடிந்த தமிழர்களை தமிழர்கள் என்று நினைக்கவேண்டாம் இந்துகள் என்று நினைத்து பா.ஜ.க கட்சி பாராளுமன்றத்தில் வலுவான குரல் கொடுத்து போரை நிறுத்தி இருக்கலாமே . ஏன் செய்யவில்லை. அவர்கள்(தமிழர்கள்) வழிபட்ட தெய்வங்களான முருகன் சிவன் பிள்ளையார் என்று ஒன்னுத்துக்கும் உதவாத கற்சிலைகள் தான் அவர்களை காப்பாற்ற வரவில்லை ஏனய்யா இந்து கலாசார காப்பாளர்கள் என்று கூறி கொள்வோரே ஏன் நீங்கள் தான் இந்தியாவில் இருக்கும் 80 கோடி இந்துக்களையும் ஒன்றிணைத்து காப்பற்றி இருக்க வேண்டியது தானே. இது கூட பரவாயில்லை ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட இந்துக்களை (தமிழர்களை)கொன்று குவித்த ராஜபட்சேவை சிவப்பு கம்பளம் விரித்து பூரண கும்ப மரியாதை கொடுத்து சகல வசதிகளோடு திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தான வாரியம் அனுமதித்த போது எந்த இந்து மத அமைப்பு அதை தடுக்க திருப்பதி சென்று போராடியது. திருப்பதி என்ன ஏழு கடல் தாண்டியா இருக்கிறது . அட போராட தான் வேண்டாம் குறைந்த அளவு ஒரு கண்டன அறிக்கையாவது கொடுத்தார்களா.. இன்னும் மறுவாழ்வு முகாம் என்ற பெயரில் ஆடு மாடு கொட்டடியில் இருக்கும் தமிழர்களை விடுவிக்க நீங்கள் என்ன முயற்சி செய்து கிழித்தீர்கள். அவர்கள் செய்த பெரிய தவறு இந்துவாக இருந்து இன போராட்டத்தை கையில் எடுத்தது தான். இதே அவர்கள் கிறிஸ்துவ மக்களாக இருந்திருந்தால் என்நேரமோ இலங்கை இரண்டு துண்டாக உடைந்து இருக்கும். தனி ஈழம் மலர்ந்து இருக்கும். நிச்சயம் மேற்குலக கிறித்துவ நாடுகள் வேடிக்கை பார்த்து கொண்டு சும்மா இருக்காது. . இப்போது கூட ராஜபக்ஷே என்னும் கொடிய மிருகத்தின் மீது போர் குற்ற நடவடிக்கையை கொண்டு வந்து இருப்பது மேற்குலக கிறித்துவ நாடுகள் தான். அந்த தீர்மானத்தை ஐ.நா அவையில் செயல் படுத்தாமல் தடுத்து ராஜபக்ஷே மிருகத்தை காப்பாற்ற போவது சனாதன தர்மம் பேசும் இந்தியா தான். துணிவு இருந்தால் மத்தியில் ஆளும் சோனியா காங்கிரஸ் கட்சியை அடக்கி ராஜபட்சே மீதான போர்குற்ற நடவடிக்கையை இந்தியாவை ஆதரிக்க வையுங்கள் பிறகு இந்து பண்பாடு காக்கபடுவது பற்றி எல்லாம் பார்க்கலாம்.

    • உங்க காமெடிக்கு அளவே இல்லை போங்கள். எங்களையே எங்களால் காப்பற்றி கொள்ளே முடியவில்லை. இந்த லட்சணத்தில் நாங்கள் எப்படி மற்றவர்களை காப்பாற்றுவது/ இது எப்படி இருக்கு தெரியுமா, பிச்சைகாரனிடம் பிச்சை கேட்பது போன்று உள்ளது.

      எங்கள் கோயில்கள் எல்லாம் அரசாங்கம் எடுத்து கொண்டு அடாவடி செய்து கொண்டு இருக்கிறது, அதை திரும்ப வாங்கவே எங்களுக்கு வக்கு இல்லை. அவ்வளவு ஏன், இந்த பரந்த தமிழ் நாட்டில் எத்தனையோ இடங்களில் இருக்க, ஸ்ரீரங்கம் கோயில் வாசலில் தான் பெரியார் சிலை வைப்பேன் என்று ஒரு மதம் சார்ந்த கோயில் முன்பு அந்த மதத்தை வெறுத்த பெரியார் சிலை வைத்ததற்கே எங்களால் ethuvum செய்ய முடியவில்லை.

      இந்த லட்சணத்தில் நாங்கள் எங்கு போய் இலங்கை தமிழரை காப்பது. இருப்பினும், இந்த விஷயத்தை நாடாளுமன்றத்தில் பிஜேபி பல முறை இது குறித்து வாதிட்டது. பிஜேபி ஆட்சி செய்த பொழுது இந்தியாவின் நிலை என்ன என்பது நான் சொல்லி தெரிய வில்லை.

      \\அவர்கள் செய்த பெரிய தவறு இந்துவாக இருந்து இன போராட்டத்தை கையில் எடுத்தது தான். இதே அவர்கள் கிறிஸ்துவ மக்களாக இருந்திருந்தால் என்நேரமோ இலங்கை இரண்டு துண்டாக உடைந்து இருக்கும். தனி ஈழம் மலர்ந்து இருக்கும். நிச்சயம் மேற்குலக கிறித்துவ நாடுகள் வேடிக்கை பார்த்து கொண்டு சும்மா இருக்காது\\

      அப்படி என்றால் கிறித்துவ மக்களுக்கு மட்டும் தான் கிருத்துவர்கள் போராடுவார்களா? அப்படி என்றால் நீங்கள் என்ன சொல்லே வருகிறீர்கள். இதன் உள்நோக்கம் என்ன என்பது படித்தவர்கள் புரிந்து கொள்ளே வேண்டும். உங்கள் திருவாய் மலர்ந்து இப்படி உண்மையை உரைத்ததற்கு நன்றி.

      \\துணிவு இருந்தால் மத்தியில் ஆளும் சோனியா காங்கிரஸ் கட்சியை அடக்கி ராஜபட்சே மீதான போர்குற்ற நடவடிக்கையை இந்தியாவை ஆதரிக்க வையுங்கள் பிறகு இந்து பண்பாடு காக்கபடுவது பற்றி எல்லாம் பார்க்கலாம்.\\

      சார் இது உங்களுக்கு கொஞ்சம் ஓவரா தெரியல, நாங்களே காங்கிரஸ் கட்சிய எப்படி சமாளிக்கறது என்று தெரியாம முழிச்சுட்டு இருக்கோம். அது மட்டும் இல்லை ஒரே ஒரு ஹிந்து நாடக இருந்த நேபாளம் கூட சீனா கட்டு பாட்டில் சீரழிந்து கொண்டு இருந்த பொழுது கூட நாங்கள் ஹாயாக டிவி பார்த்து கொண்டு இருந்தவர்கள் நாங்கள். ஏன் ஹிந்துக்களிடம் ஒற்றுமை கிடையாது என்பது உண்மை. அப்படி எதாவது ஒற்றுமை கொண்டுவர நினைத்தால் உடனே அவருக்கு பூணுல் போட்டு, காவி நிறம் பூசப்படும்.

      \\அவர்கள்(தமிழர்கள்) வழிபட்ட தெய்வங்களான முருகன் சிவன் பிள்ளையார் என்று ஒன்னுத்துக்கும் உதவாத கற்சிலைகள் தான் அவர்களை காப்பாற்ற வரவில்லை\\

      இது என்ன காமெடி. அப்படி என்றால் போரில் வேறு எந்த மதத்தை சார்ந்தவரும் இறக்க வில்லையா? அப்படி என்றால் இவர்கள் அனைவரும் மதம் மாறினால் அவர்களை சமந்தப்பட்ட மதக்கடவுள் காப்பாற்றுவாரா?

      அப்படி என்றால் கடவுள் எப்பொழுதும் மனிதனை காப்பாற்றி கொண்டும், அவன் கேட்டதை எல்லாம் கொடுத்து கொண்டும் இருக்க வேண்டுமா?

      \\ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட இந்துக்களை (தமிழர்களை)கொன்று குவித்த ராஜபட்சேவை சிவப்பு கம்பளம் விரித்து பூரண கும்ப மரியாதை கொடுத்து சகல வசதிகளோடு திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தான வாரியம் அனுமதித்த போது எந்த இந்து மத அமைப்பு அதை தடுக்க திருப்பதி சென்று போராடியது.\\

      சும்மா எதுவுமே தெரியாத மாதிரி பேசக் கூடாது, கோயில் பொது இடம். அங்கு யார் வேண்டுமானாலும் போகலாம். அவர் புத்த மதத்தை சேர்ந்தவர் என்பதால் மற்ற அப்ரகமிய மதத்தவர்களுக்கு இருக்கும் மன சஞ்சலமும் அவருக்கு இல்லை. என்ன இருந்தாலும் அவர் ஒரு நாட்டின் அதிபர், அவருக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கோயில் அரசு நிர்வாகிகள் கொடுத்து தான் ஆகா வேண்டும். இது குறித்து இந்து மக்கள் கட்சி கடும் கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்தியதை இங்கு நினைவு கொள்கிறேன்.

      சேவா பாரதி மூலம் நான்கு கேம்ப்கள் வட இலங்கையில் உள்ளது.

  15. நண்பர் உண்மை உரைப்போன்,
    உண்மையை உரைத்தே கூறிவிட்டீர்கள்.இலங்கையில் இந்து தமிழர்கள் சிங்கள தேசியத்திற்கு எதிரானவர்களாக காட்டப் பட்டேதே இனப்பிரச்சினைக்கு அடிப்படை.இந்து தமிழர்கள் இந்தியாவிற்கு ஆதரவானவர்கள் என்ற பொய் பிரச்சாரம் சிங்கள இனவாதிகளால் பரப்ப பட்டது.ஆனால் இந்தியாதான் இலங்கை தமிழர்களுக்கு பெரும் தீங்கு செய்த நாடு.

    இப்போது கூட பௌத்த சிங்கள இனவாதிகளுக்கு உதவி இலங்கையை தன் பொருளாதார நலனுக்காகவே கட்டுப் படுத்த முயல்கிறது.ஆகவே மதம் தேசியத்தை ஏற்படுத்தாது என்பதே உண்மை.இப்போது தமிழ் முஸ்லிம்க்ளை ஒரு அளவிற்கு மதிப்புடன் நடத்தி வரும் சிங்கள அரசு தமிழ் இந்துக்களுக்கு ஒரு தீர்வு அளிக்க மறுக்கிறது.

    முஸ்லிம்களுக்காக சவுதி,பாகிஸ்தான் குரல் கொடுப்பதால் இப்படி.தமிழ் இந்துக்களுக்கு ஆதரவு குரல் அர்ஜூன் சம்பத் அவ்வப்பொது குரல் மட்டும் இந்து இயக்கங்களின் சார்பில் கொடுப்பதோடு சரி.தமிழ் உணர்வாளர்களும்,இடது சாரி தோழ்ர்கள் மட்டுமே ஆத்ரவு கொடுக்கின்றார்.

    இந்திய அளவில் இலங்கை இந்துக்களுக்கு ஒரு ஆதரவும் கிடைத்டதே இல்லை.தமிழ் இந்து இணையத்தில் “தமிழ் ஈழம் ஒரு கிறித்தவ சதி” என்று சிங்களனுக்கு ஆதரவாக எழுதுகிறார்கள்.இலங்கை தமிழர்கள் என்றே வட இந்தியர் கூறுவார்களே தவிர இலங்கை இந்துக்கள் அல்ல.

  16. @ உண்மை உரைப்பேன் – நியாயமான கேள்விகள் …

    இந்துத்துவா வாதிகளுக்கு இந்தியே மொழி, இந்திப் பேசும் இந்துவே இந்து, இந்தியாவில் இருக்கும் இந்துவே மனிதன் ..

    இவர்கள் கிணற்றுத் தவளைகள் … இப்படி பேசும் இத்தனை ஜென்மங்களும் அமெரிக்கா சென்றதும் ஏன் அங்கு கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்கின்றார்கள் .. இந்தியாவை இந்து நாடாக்க விரும்பும் அதே சமயம் .. ஏன் வெளிநாட்டில் இருக்கும் தமது மாமன் மச்சானை கிறித்தவத்துக்கு மாற சொல்லலாமே ???

  17. //நல்லது. இப்போது தாங்கள் தழுவி இருக்கும் மதம் தங்களை ஒழுங்காக நடத்த வில்லை என்றால் உடனே அடுத்த மதத்திற்கு மாறி விடுவீர்கள் அப்படிதானே?//

    தவறு நண்பரே! இஸ்லாம் என்னை முழுவதுமாக அரவணைத்துக் கொண்டது. சவூதியின் பல முக்கிய மசூதிகளில் தலைவராக நின்று தொழுகையே நடத்தியிருக்கிறேன். வேதத்தை முறையாக பயிலாத என்னை சவுதிகளும், சூடானியரும், எகிப்தியரும், பாகிஸ்தானியரும் தலைவராக ஏற்று பலமுறை என் பின்னே நின்று தொழுதுள்ளார்கள். என்னை விட வயதில் மூத்தவர்களும் என்னை பலமுறை பின்பற்றி தொழுதுள்ளார்கள். தமிழகத்தில் ஒரு குக்கிராமத்தில் பிறந்த எனக்கு உலக முஸ்லிம்களில் பலரின் இறை வழிபாட்டுக்கு தலைமை ஏற்க எது உதவியது? நான் பழைய மதத்தில் இருந்திருந்தால் பிறபடுத்தப்பட்டவன் என்பதால் கோவிலுக்குள்ளேயே என்னை அனுமதித்திருக்க மாட்டீர்கள்.

    தற்போதுள்ள இஸ்லாத்தில் பூரண மன திருப்தியோடு இருக்கும் எனக்கு வேறு ஒரு மார்க்கத்தை தேட என்ன அவசியம் வந்தது?

    //இதை நீங்கள் இந்து மதத்தில் இருந்து சொல்லி இருந்தீர்கள் என்றால் எவராவது ஒருவராவது காது கொடுத்து கேட்டு இருப்பார் . அடுத்த மதத்திற்கு போய்விட்ட உங்களின் அறிவுரை எங்களுக்கு தேவை இல்லை.//

    பெரியாரை விடவா தெளிவாக நான் சொல்லிவிடப் போகிறேன்? எத்தனை மேடைகளில் ஆவேசமாக பேசியும் இந்து மதத்தின் ஒரு துரும்பைக் கூட பெரியாரால் அசைக்க முடியவில்லையே.

    அதே நேரம் கருத்தம்மா புகழ் பெரியார்தாசன் அப்துல்லாவாக மாறியவுடன் அவரது வாழ்வில் ஏற்பட்ட மறுமலர்ச்சியை புது வசந்தத்தை அவரது வாயாலேயே வாய்ப்பிருந்தால் கேட்டுப் பாருங்கள்.

    //மதம் மாறுகிறேன் என்று மரம் மாறும் மந்தியாக ஆகி விடாதீர்கள் …//
    மந்தியாக இருந்த நான் மாந்த்ரீகத்திலிருந்து விலகி மந்திரியைப் போன்ற சகல சௌபாக்கியங்களும் இறை அருளால் கிடைக்கப் பெற்றுள்ளேன். மறந்தும் மாந்த்ரீகத்தின் பக்கம் சென்று விட மாட்டேன். கவலைப்படாதீர்கள்.

    • மதங்கள் மாறினால் மட்டும் சாதியம் ஒழியாது … மனங்களும் மாற வேண்டும் சகோ … இஸ்லாத்திலும் சாதியம் நிலவுகின்றதை மறுக்க முடியாத உண்மை … சகோ.

      மற்றப்படி பதிவின் சாரம் இஸ்லாமியரோ, கிறித்தவரோ இந்தியாவில் எந்த நாட்டுக்குப் பற் r றாக இருக்கின்றார்கள் என …

      என்னைப் பொறுத்தவரை இஸ்லாமியரும், கிறித்தவரும் 99 சதவீதம் இந்தியப் பற்றுடன் தான் இருக்கின்றார்கள்….. இது தான் உண்மை.. இந்துத்துவாவாதிகளின் பேச்சு நம்பிக்கையாகப் படவில்லை ..

      இருப்பினும் தீவிரவாதத்துக்குத் துணைப் போகும் எவரும் கடுமையாகத் தண்டிக்கப்படல் வேண்டும் அது இந்துவாக, இஸ்லாமியனாக, கிரித்தவனா, தமிழனாக எவனாக இருந்தாலும் பரவா இல்லை ..

  18. இந்த கட்டுரை எழுதியவர் எவ்வளவு குறைந்த அறிவுடையவரோ அதே அளவுதான் இதற்கு மறுப்பு தெரிவிப்பவர்களிடமும் இருக்கிறது. இதற்கெல்லாம் மூலகாரணம் சில தமிழ்நூல்கள் அதிகமானால் ஒரு சில ஆங்கிலநூல்கள் இவற்றைத்தாண்டி இவர்களுக்கு புத்தகங்கள் கிடைப்பட்குமில்லை. இவர்கள் அவற்றைப் படிப்பட்கும் இல்லை.
    நூறு இருநூறு ரூபாய் செலவில் ஒரு இணையத்தளத்தை நடத்திக்கொண்டு இதை அறிவாளிகளும் படிப்பார்கள் என் எண்ணாமல் த்ங்களுக்கு தங்களே பேரறிவாளர்களாய் கற்பனையும் செய்து கொண்டு நீங்கள் பிதற்றுகின்ற பிதற்றல் மிக அதிகம்.

    தளித்தென்று சொல்லி கொள்ளையடித்த ராசா, விலைமாதாய் தொழில் புரியும் சாதாரண மிகப்பிற்படுத்தப்பட்ட சாதி என்று சொல்லி கொள்ளையடித்த கருணாநிதி கும்பலும் சட்ட சபையிலே நான் பாப்பாத்தி என்பதில் பெருமைப்படுகிறேன் என்று சொல்லி கொள்ளையடித்த செயலலிதாவும், அந்த பாப்பாத்திதான் கருணாநிதி கும்பலைவிட உண்மையான தமிழச்சி என்று சத்தியம் செய்து அவரின் பின்புறத்தில் தமிழகத்தையே சூறையாடிய, சூறையாடப்போகின்ற சசி உறவுகளின் பணப்பசியும், சசி கும்பலைப்போலவே கலப்பில்லாத் தமிழனாய்ப் பிறந்து கலப்பில்லா பெருங்கொள்ளை அடிக்கும் சிதம்பரமும், டெகல்கா ஊழல்களின் கதா நாயகர்களான பாரதிய சனதாவும், பிற்படுத்தப்பட்டவர்களின் பிதா எனச் சொல்லி கொள்ளியடித்த யாதவுகளும், தாழ்த்தப்பட்ட சாதியில் பிறந்தும் உயர்ந்த சாதிப்பெண்ணை மணந்தும் ப்ரிட்டனின் அரசியல் அமைப்ப்ய் சட்டத்தை வரிக்கு வரி அந்த எண்ணைக்கூட மாற்றாமல் பதிவெடுத்து மற்றவர்களுடன் சேர்ந்துகொண்டு மடத்தனமான அரசியல் சட்டத்தை உருவாக்கிய அந்த மகாமடையன் அம்பேத்காரும், காசுமீர மக்களுக்கு காங்கிரசில் சேர்ந்து விடுதலை வாங்கித் தரபோவதாய்ச் சொல்லி கொள்ளை அடிக்கும் இசுலாமியப் பிசாசுகளும், கொள்ளையடிப்பதென்றால் பறையன் பல்லன் எனப் பார்க்காமல் ராசாவோடு கூட்டு சேர்ந்து கொள்ளையடித்த பார்ப்பணர்களும், பெண்ணாய் இசை வேளாளார் சாதியில் பிறந்தாலும் வைப்பாட்டியாய்ப் படுப்பது மட்டும் பார்ப்பணணுக்கே என்று கருணவின் சகோதரி வரிந்துகட்டிக்கொண்டு படுத்து பிறந்து இன்று நாட்டை பெரிய அளவில் கொள்ளைஅடித்த அடிக்கின்ற மாறன் கும்பலும் எந்த ஒரு தனிச் சாதியையும் சேர்ந்த்தவர்களா என்ன? இதில் சாதி என்ன வந்தது? சாதியைக்கட்டி காத்து வருவது அதனால் 60 ஆண்டுகளுக்குமேல் பெரும்பயனை உழைப்பின்றியே அனுபவிக்கும் தாழ்த்தப்பட்டவர்களும் பிற்படுத்தப் பட்டவர்களுமே என்ற மகத்தான உண்மையை ஏன் மறைக்கவேண்டும்? பறயன் என்ற சாதியைப் பதிவேட்டிலிருந்து எடுக்கப் போராடிய ஒரு பறயன் உண்டா? கள்ளனை பிற்படுத்தோர் பட்டியலிலிருந்து எடுக்க போராடிய ஒரு கள்ளன் உண்டா? ஏழைப்பாத்திகள் பலரும் படுத்து (பறயனிடம் கூட, அங்கே தாழ்த்தப்பட்டவன் என்பதே அவளுக்கு மறந்து போகும், பசி) பிழைப்பவர்கள் பலரிடம் படுத்த செயலலிதா வென்ற சீரங்கம் போய்ப்பாருங்கள் தெரியும்.

    ஆக மனிதரை சாதி, மத, நாடு எனப்பிரித்துபார்க்கும் அறிவின்மை ஒன்றே போதும் நீங்கள் இந்தப் பிறவியில் அறிவு பெறப்போவதில்லை என்பது. அமேரிக்காவில் நடுங்கும் பெருங்குளிரில் சாதி, மத, நாடு என்ற பிரிவின்றி ஒன்று கூடி கத்தினோம்,”உங்களால் முடியும் ஒபாமா, ஈழத்தில் கொல்லப்படும் மக்களைக் காப்பாற்ற!” என்று.

    ஒருமணிநேர உண்ணாவிரதமும், தீயில் வெந்த தியாகதீபம் முத்துகுமாரின் பிணத்தை அவசரவசரமாக எரிக்க கருணாநிதியின் கைக்கூலியாகக் செயல்பட்ட குருமாவும் வன்னியரசும் என்ன சாதிகள்? இந்த புழுக்களைவிட தமிழகத்திலே வாழ்ந்த உங்களில் இந்த மாபெரும் மனிதக்கொலைகளுக்கு உடந்தையில்லாதவர் யார்? மொத்தத்தில் நீங்கள் அத்தனைபேரும் தலைவர் தொண்டர் என்ற வேறுபாடின்றி குற்றவாளிகளே. சோனியா என்ன பாப்பாத்தியா? சாராயக்கடையில் இரவுவேலை பார்த்த, சாதாரண, உயர்நிலைப்பள்ளி கூட தாண்டாத, ரசியாவுக்கு உளவாளியாக வேலைபார்த்து அந்த ஊதியத்தை ரவூல் என்ற இத்தாலிய மகனின் (ஆமாம் உங்கள் பாசமிகு தேசத் தந்தை ராகுல் காந்ட்கியைத்தான் குறிப்பிடுகிறேன்) பெயரில் சுவிசு வங்கியில் கொட்டி வைத்திருக்கும் சொனியா என்ன பண்டாரமா என்ன? கொள்ளையடிப்பதில் காவி என்ன, கழிசடை தளித் என்ன? கழுதை விட்டையில் முன் என்ன பின் என்ன? ஓட்டு மட்டுமா 60 ஆண்டுகளாய் போட்டீர்கள்? நாட்டையே ஓட்டை போட்டீர்கள், சொம்பேறிப் பிண்டங்களே? 5 மணிக்கு எழுந்து இரவு 1 மணிக்கு படுக்கும் எங்கள் உழைப்பில் ஒருபாதியேனும் உழையுங்கள். டான்சி நிலத்தை கையகப்படுத்திய செயலலிதாவை மனசாட்சியே தண்டிக்கட்டும் என்று சொன்ன உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு செருப்படி மரண தண்டனை கொடுங்கள். 2G யின் கதாநாய் கருணாநிதியை இன்னும் கைது செய்ய ஆணையிடாத உச்ச நீதிமன்ற நீதிபதிகளை ஓடஓட விரட்டுங்கள். இந்ட்கியாவை மொத்தமாய் கொள்ளையடிக்கும் சோனியாவை இந்தியாவில் உளவு பார்த்த குற்றத்துக்கு தேசியப் பாதுகாப்பு சட்டமோ எந்த கழுதையோ மரணதண்டனை பெற்றுக்கொடுக்க போராடுங்கள்.

    இவை எல்லாம் நடக்க வேண்டுமானால் சாதிக்கு கிடைக்கும் கருவாட்டுத் துண்டமாம் வேலைவாய்ப்பு, கல்வி சலுகை தாண்டி சாதியை பதிவேட்டிலிருந்து அகற்றி சாதி என்ற சொல்லை சொன்னாலே மரண தண்டனை என்று கொண்டுவந்து மனிதனை முன்னிறுத்தி மநிதனாய் ஒன்றுகூடி இலவசம், உதவிதொகை, வேலையில் சலுகை என்ற எந்த பிச்சையும் வேண்டாமென ஈழத் தமிழன்போல் சாதி ஒழித்து எழுங்கள். சாதியை ஒழிக்க தளித் முன் வராதவரை சாதி ஒழிப்பு பெரும் நாடகமே. ஆயுதமுனயில் மட்டுமே தாழ்த்தப்பட்டவன் சாதியைப் பதியவும் சாட்கியை சொல்லி பிச்சை எடுக்கவும் செய்வதை நிறுத்துவான்.

    இந்தியாவிலிருந்து ஓடி வந்தோமே இங்கே பிழைப்பதற்கு, எங்களில் யார் தாழ்த்த பட்டவர்கள் பிற்படுத்தப்பட்டவர்கள் என்றா அமேரிக்காவிலே ஒப்பாரி வைக்கிறோம்? இல்லையே. எல்லோரும் எல்லோர் வீட்டுக்கும் போகிறோம். எந்த சாதி என்று கேட்பதில்லை. அமேரிக்காவும் எந்த சாதி என்று பதிவதில்லை. எங்களின் படிப்பு செய்தொழில் அறிவு அவற்றின் அடிப்படையிலேயே வேலை தருகிறது.

    எதற்கு இந்த கற்பனையான சாட்கிய வாதம்? இன்னும் மக்களை பிரித்து கொள்ளை அடிக்கவா?

    சனாதனம், பண்டாரம், பார்ப்பன், பரயன் ஒழியட்டும். கொள்ளைக்காரர், லஞ்சவாதி, குற்றவாளி என மக்களைப்பிரியுங்கள். அறிவு பெறுங்கள். இல்லையேல் ஓராயிரம் முள்ளிவாய்க்கால், முட் கம்பி வேலிகளால் உங்களை திருத்தவே முடியாது. செத்து மடியுங்கள்.

    • @ piriya – என்ன சொல்ல வருகின்றீர்கள் … ஈழத்தமிழர்களிடம் சாதியம் இல்லை என்றா ? அதற்கும் பதிவுக்கும் சம்பந்தம் இல்லை என்றாலும் .. ஈழத்தில் சாதி இல்லை எனப் பரப்பட்டக் கதை ஒருவித பரப்புரை .. ஈழத்தில் நிலைமை என்ன என்று எனக்குத் தெரியாது ? தமிழ்நாட்டில் இருக்கும் ஈழத்தவரிடமும், கனடா போன்ற நாட்டில் இருப்போரிடமும் சாதியம் நன்றாகவே இருக்கின்றது .. இந்து மதத்தில் இருக்கும் வரை சாதியம் ஒழிப்பது எளிதாகப் படாது என்பது எனது அனுபவம் …

      எல்லோரும் எல்லார் வீடுகளுக்குப் போகின்றார்கள் – ஆனால் கை நனைப்பதில்லை. கை நனைத்தால் கூட மணம் புரிந்துக் கொள்ள மாட்டார்கள், புரிந்துக் கொள்ள வருவோரைக் கூட பெரியவர்கள் விட மாட்டார்கள் — கனடாவின் ஈழத்தமிழர் மத்தியில் இது தான் நடக்குதுங்க ….

      • Dear Iqpal,

        Iqbal,

        I cannot write much on this blog as I have so much to do on the nation building and awakening our youths and creation of better future for them. Though I focus on Tamils first, first my goal the whole world, not Tamil/India alone.
        Parthasarathy’s understanding that I am the super intelligent of all the people is correct. In every think, there may be a number one, it will be single person, or more than one. But my whole article is not about me. Important points I brought in this blog are:

        1. Stop claiming Tamil Brahmins as Aryan and create an imaginary enemy. In Elam war Brahmins contributed so much. When Prbhakran removed caste from Elam, there was not single voice against it from any caste including Brahmins. The real culprit for existence of caste in India is not Brahmins, but Dhalits and MBCs/BCs. Though I am one among them and my relatives continue to get benefits from government, I did not stop them as I cannot. If Dhalits oppose registering them as Dhalits, castes will be taken away from the registry. We can bring in the death sentence if any one is identified by their caste. Yes. This is how Prabhakaran did it, by force, not by writing in blogs or stages. This is why E.V.R approach failed, though his thoughts and objectives are noble. He is not much educated though, and hence his level of understanding was limited and that is why he wrongly branded Tamil Brahmins as Aryan. With his limited knowledge he did wonderful things. If he were a scientist like myself, and the info of whole world comes to him by a click of mouse, he would have done it different. Still I admire him.

        2. Condemn the criminals by name, not by religion and caste and thus give continuous life to religion and castes. If you like to address the criminal Ex Telecom minister Raja, address him at the most by his full name Andiappan Raja, Perambalur or something like that. Don’t go beyond that and add dhalit etc. Dhalit is not part of an address to identify an individual. For me when I write about the crimes of Jeyeraman Jeyalalitha, Muthuvel Karunanithi I address them simply by their names, not ayya appa, sami, paappathi, isaivelalar, naaye, peye etc. If you like to criticize Vajbayee, Advani, Modi, criticize them by names, not by using the words Brahmin/ Saffron, pandaram etc. I wrote historical facts about people who committed major crimes that included people of all castes from the lowest to highest, left to right. So crimes do not go by castes, religion, race. Tamils are not good not bad, because it is a race. Some among Tamils will be criminals, some scientists (all scientist except Khorana who got Nobel prizes for India are Tamils) some writers, some business people and the list goes on. Identify individual as individual and not by any other means.

        3. I was accusing 6-7 crores of Tamilnadu people who stood quiet when a mass murder occurred in Elam. That includes you, the vinavu, ma.ka.i.ka,, pu.maa.mu and every political and social organizations. I also wrote what my entire family did in freezing cold at Washington, USA. Nobody said anything about my accusing you, all the Tamils living in Tamilandu. As a single person I was able to create mass movement in the past when I was at school and college on issues like Hindi imposition, Tamil medium of instruction (I supported), MGR expulsion ?(I opposed) and Elam issue (in 19983-84 when Welligada prison incident occurred). With so many members in your ma.ka.i.ka, pu.maa.mu, what you guys including kaliayappan did? Why you failed to raise people and fill the jail? There are not enough jails in the whole India to put even several lakhs of people!

        4. Only Dhalits can remove them from caste list by fighting to remove caste system from government files. All castes instead of forming parties and milk the government in the name of castes, should join together to remove the castes and stop begging in the name of castes. Who is government? Is it not people, you and I? How will we pay for all these free schemes including scholarships and free jobs for caste people? Is this money from the personal hard work of JJ, MK, two super idiots and super robbers of Tamilnadu? Is it not our money that these two amass and give us a few drops when they drink all the milk?

        5. No religion outside India has castes. In India all religions have castes. Why? Because there were/are only castes in India. Arabs tried to bring in Islam and spread it here. Where will they spread? Only among parayar, pallar, kallar, naicker, chettiyar, ayyer, ayyengar? There are no Brahmins, but only ayyer and ayyengar castes are there. Understand the truth. Ayyer will not marry in ayyengar and vice versa. A Tamil aiyyengar will never marry a north ayyengar. Vadakalai and thenkalai naamams are different. Why unite them and call ayyengar? It is like uniting ampalar, servai, thevar, maravar, akallar into mukkulathore just for political gain, though inter-caste marriage within these castes are not allowed. There are over 20 castes within Naidu/Naicker and over 100 castes among Telugu speaking people. I also wrote about intermingling of Chera, Chola, Pandiya people with Salukiyars and others in another article in Vinavu. So who is real Tamil? I have sequence the genome of a few individuals from different parts of Tamilnadu and a few from tribal people living in hills area to see whether they are different form each other. It is expensive and I will not do that now as I am busy in discovering and developing vaccines to save people first. So for one reason we do not even have to use the word Tamil. I am deadly against Rajepakse and Sonia not because they killed 200,000 Tamils, but because they killed 200,000 humans. Even if they had killed 200,000 singalese or kannadians or marathi I would be deadly against those mass murderers. So when Christians and muslims tried to unite Indian castes into their religion, some people tried to unite these castes in a imaginary religion Hindu. There was/is no religion called Hindu. When the word (or religion) Hindu was coined and tried unite all caste people into it, Hindu religion got the castes. So, it is not the Hindu religion alone that has castes into it. Every religion in India (Christian, muslim etc) has castes into it. Every child is born into a caste in India. Now it becomes true that every child is born into a political party as most children follow their parents’ party blindly. If you want to remove castes in Hindu, all that the government should do is to bring a law that every one discarding their castes and join Hindu religion will be given preference in jobs, scholarships, education. Then all will discard their castes and join Hindu religion. So people want free money. They are not ashamed of begging and living on money that they don’t deserve. This is what going on in Parayars, pillars, kallars, … etc etc.

        6. People should not be divided based on any of the following: caste, race, language, religion and nation. The whole world should be one nation, and all people are humans. They all should share and care and help each other. Instead of dividing people based on such fiction like untrue factors, why don’t we divide the people based on height, weight, number hairs in head, etc? That looks stupid is it not? It is equally stupid to divide the people based on caste, race, language, religion and nation.

        7. About one-to-one marriage relationship: One to many relationship was there everywhere in the world, even in remote African forest tribes. No one taught specially about it. Male supremacy is by virtue of birth. Man has less genes. Woman has more. So woman has a special role of carrying a child and nursing it. That is why she has extra genes than man has. Because of this special role, she is evolved soft and loving nature. Do not refer exceptions like JJ, Sonia in this. Man is physically strong. So when he becomes selfish idiot naturally he feels superior and behaves with superiority complex. This behavior goes to every human race since the origin of humans. It goes to all living species, not alone humans.

        8. So you all have very little reading and your thought process is limited because of your limited knowledge. I like ma.ka.il.ka, and pu.maa.mu.mu as their thought process is little better than the rest of the parties in India. This means they started looking at the world from a different perspective. That is great. But your serious limitation in acquiring knowledge almost pulled your organizations into a mouth piece of just imaginary caste Dhalits and a wrong political concept Communism. You should come out of dhalit brahmin, communism/capitalism. Communism is as bad as Capitalism is. I still remember what I delivered in my speech 30 years ago in a marriage pointing out the limitations and cons of these two broad categories of political system. I loved your anti-vote based system. That is a correct approach. Majority of the people are idiots. You can see in a class room itself this fact. So, no point in giving voting rights to people. I propose to give the people the rights to rule. NOT THE RIGHT TO CHOOSE THE RULER. When people are hungry, people should be given food, not the right to choose MK or JJ to eat the food. People will die whether a dhalit Raja eats, or an MBC Karuna eats or an FC jeya eats their food and they starve. So it does not matter what castes these antisocial criminals all belong. They all belong to one group: antisocial. They all deserve death sentence, nothing less. Last year I read in Dinamalar a college girl committed suicide as she able to pay only half of her college tuition fee of Rs. 10,000. I cried for a long time. This is why my husband and I started a college and are giving fee-free education, free hostel and food. Who is responsible for her death or the death of that girl and several who commit suicide for lack of money to pay their debts? These antisocial criminals are. Will the court ever punish? Very rarely. So you do not need extensive investigation to find out some one is criminal or not. My hubby says, if that person has money than the average one’s need/requirement then that person is criminal and deserves death sentence. Truth is as simple as that! Constitutions are created to safeguard the haves. Haves can survive only as long as have-nots exist exist as majority. The leeches/Haves are going to create military, weapons, laws, governments, unions, and you name it, all to protect themselves and suck the blood of the hard working people.

        See the name of the people killing military: !DEFENSE FORCE! My hubby says this is the biggest joke. Every country on the earth creates it. No country created an affense force. If no one is going to affend, then where does thew necessity come to defend? (Sorry the words are “affense and affend are not even there in dictionary. So I created those words.).

        Think people, think. Let us join together and form a new political system with radically different principles and policies, Where no rulers and nobody to be ruled. In tamil: aallpavarum illai, adimaikalum illai. In kannadasan’s words: vallaan poruL kuvikkum dhni udaim neekki varavazaippOm podhu udaimai. It is not communism though!.

        • Priya,

          “ஈழத் தமிழன்போல் சாதி ஒழித்து எழுங்கள்.”
          சாதி ஈழத்தில் ஒழிந்து விட்டதா? Well that sure is news to me. Which parallel universe are you in? Are we all living happily ever after too? would love to visit that place. ஏனெனில் என‌க்குத் தெரிந்த‌ உல‌கில் வ‌சிக்கும் எம்ம‌க்க‌ளிட‌ம் சாதி நிறைய‌வே உண்டு.

          இக்பால் சொன்ன‌து போல் இத‌ற்கும் ப‌திவுக்கும் தொட‌ர்பில்லாவிடினும், please allow me to expand a bit on this subject.

          என‌க்குத் தெரிந்த‌ ஈழ‌த்த‌மிழ‌ர் அநேக‌மானோர் சாதி பார்ப்போரே. இய‌க்க‌த்தின் கொள்கைக‌ள் அநேக‌மான‌ ம‌க்க‌ளில் எந்த‌ மாற்ற‌த்தையும் கொண்டுவ‌ர‌வில்லை. ஒரு கேள்வியும் இன்றி கண்மூடித்தனமாக ஆதரவு அளிக்கும் (அல்லது அளிப்பதாக நடிக்கும், I am not sure) அநேகமானவர்களுமே நாட்டுக்காக மட்டுமே சத்தமிட்டார்களே ஒழிய, இயக்கத்தின் கொள்கைகள் எதனையும் தமது வாழ்வில் கடைப்பிடிப்பதில்லை. எனக்குத் தெரிந்த ஓரிருவரே அவ்வாறு செய்பவர்கள். மிக நானே எத்த‌னையோ த‌ட‌வை யோசித்துள்ளேன், சில‌ச‌ம‌ய‌ம் ஈழ‌ம் கிடைத்திருப்பின் இவர்களெல்லாம் அடுத்து இயக்கத்தை அழிப்பதற்கு முழுமூச்சுடன் இறங்குவார்களென, ஏனெனில் apart from wanting Eelam, rest of the beliefs and morals are almost 100% incompatible. இயக்கத்திலிருக்கும் போது சாதி பார்க்காமல் திருமணம் செய்த்ததால் இப்போ தம‌து சொந்தக் குடும்ப ஆதரவே அற்று எத்தனையோ பேர் இருக்கினமாம். Seriously who would have the heart to do that?

          சனத்தின் பேச்சு வழக்கிலும் காதலர்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைகளும், even பேச்சுத் திருமணங்களில் இந்தச் சாதியால் ஏற்படும் பிரச்சனைகளையும் நிறையவே கண்டுள்ளேன்/ நிகழ்காலத்தில் கண்டு கொண்டிருக்கின்றேன். This itself is bad. But, சாதிப்பிரச்சனை இந்தளவு தானென இப்போ சிறு காலத்திற்கு முன்பு மட்டும் நினைத்திருந்தனான். இந்தியாவில் மாதிரி கோயிலுக்கெல்லாம் போகத் தடையெல்லாம் இப்போ இல்லை என சத்தியமாக நினைத்திருந்தனான். ஆனால் வட இலங்கையில் கூட வெவ்வேறு சாதிகளிற்கு வெவ்வேறு கோயில்கள் உண்டு. அவரவர் அவரவர்களின் கோயில்களுக்கு மட்டும் தான் போகலாமென எனக்கு ஒரிரு மாதங்களிற்கு முன்பே யாருடனோ கதைத்துக் கொண்டிருக்கையில் தெரிந்தது. I couldn’t believe it.

          சனத்தை எப்படி மாற்றுவதென எனக்குத் தெரியாது. இந்த generation க்கும் அடுத்தடுத்த generations க்கும் புகட்டும் கல்வியினூடே ஓரளவிற்கு மாற்றலாம். அதற்குக் கற்பிப்பவர்கள் சரியாக இருக்க வேண்டும்.

          I also wanted to clarify to you that number of qualifications DOES NOT always correlate with intelligence or knowledge. You seem to think it is.

          “No religion outside India has castes. In India all religions have castes. Why?”
          Ummm. Is this supposed to be a tricky question? Majority of Indians practice hinduism. சாதிகளின் அடிப்படை இந்து ம‌த‌ வேத‌ங்க‌ளிலும் புனித‌ நூல்க‌ளிலும் மீண்டும் மீண்டும் கூற‌ப்ப‌ட்டுள்ள‌து. மக்கள் பின்பற்றும் க‌ட‌வுள்க‌ளே சாதிக‌ளையும் ஒருக்குமுறையையும் திரும்ப‌த்திரும்ப‌ வ‌ழிமொழியும் போது என்ன‌ விளைவு வ‌ருமென‌ நினைக்கிறீர்க‌ள்?

          “Male supremacy is by virtue of birth. Man has less genes. Woman has more. So woman has a special role of carrying a child and nursing it. That is why she has extra genes than man has.”

          WOW! I have no idea what to say! How did you figure this out? Please direct me to the studies that have proved this. Man is superior, coz he has less genes – I am speechless.

          • mr. analust, it think priya is a proper geneticist, what she said is scientifically true. though we cannot conclude a race of a person by his name, place or origin, his genes will give us a proper idea abt his origin. if you happen to understand it, then you wil come to know that blaming a particular religion, race, nationality, skin color is a total misunderstanding.

            i agree veda and purana preach wrong things to humans, but i seriously doubt if they are manipulated by some selfish people of brahminical origin. i have seen followers of vinavu are either very much biased or have a superficial idea about things like religion,race etc. why fall in that pit ourselves?

            sarcasm has become a tool to register one’s views. this thread will not end if the argument is going to be in this manner. in short, many of the viewers are having prejudice about the opposite religion/caste/culture.

          • To Analyst,

            My writing keeps continuing and I should stop at some point.
            Under LTTE rule caste did not get prohibited? Why would then
            Elam Tamils lie to me? It looks like I cannot trust those educated Elam people whom I meet? Several people vouched that the caste was a prohibitory word and not only in area that was under LTTE control, but in Jaffna too. I think you are an Elam Tamil. Whom should I believe? I heard the situation changed a lot after the LTTE silenced their guns. But if you say that the caste was there always even during LTTE period in Vanni, Kilinochi, I have no way of refuting your words as I never visited any part of Elam in my life. May be it is pro LTTE propaganda? Or your words are the words of anti-LTTE guys? When I hubby was complaining against Elam Tamils’ superiority complex (Pillai caste, up country people being treated as untouchables etc), Elam Tamil doctors/engineers told us we were informed wrong and the caste was long gone in Elam. You say even among Hindu temples, you have caste specific temples in Elam? We don’t see that many caste specific temples even in India?

            You wrote, “I also wanted to clarify to you that number of qualifications DOES NOT always correlate with intelligence or knowledge. You seem to think it is.” You also agree by saying not always. I say most of the time is. 99.9999999999% of the time. Your understanding about education is memorizing and getting University first. It is not how I learned. I learned because I wanted to understand, not to pass exams. I read 12,000 verses of Kampan and 1330 kuraLs of Valluvan not for exam. I studied Maths, physics, chemistry computer science (I have several flavors of computer OS running at my home) and 30 years various branches of biotechnologies, not for exams. When you learn for understanding and use it for inventing and discovering, then you will know what is learning is. Even animals are honored with PhD in TN. I am not talking about Kani/Karuna kavithai. Rather ask them to meet me on stage and let us write poems with strict “yaappilakkaNam”. Then you know who is kavinjar/ kalainjar.

            Do not challenge me on the genetics. There is no one in India who is competent enough to challenge me, not even in USA. The X chromosome is bigger for a reason. Go to google and type in “number genes in X vs Y chromosome”. It will give you, “The X chromosome contains about 2000 genes compared to the Y chromosome containing 78 genes”.

            Again, when you come to know one day with whom you argued, you will understand how stupid you are. Are you in USA? Then we can debate on your knowledge in genetics.

            • Do not challenge me on the genetics. There is no one in India who is competent enough to challenge me, not even in USA.//////////

              அச்சச்சோ, பயம்மா இருக்கே..

            • Priya,

              🙂 நான் எழுதியதைத் திரும்ப வாசியுங்கோ. நான் எந்த propaganda வும் செய்யவில்லை. I am just stating the reality.

              “Elam Tamil doctors/engineers told us we were informed wrong and the caste was long gone in Elam.’
              Well THEY WERE/ARE WRONG. You seem to indirectly suggest that people have to take a person’s word on the face value as long as the person is ‘highly educated’. Regarding this particular issue, I would give more value to sociel workers’/ humanitarian workers’ opinions rather than doctors/engineers unless they themselves are directly involved in humanitarian/community work too. ம‌க்க‌ளோடு ப‌ழ‌கி, ஈழ‌த்திலும் புலம் பெயர்ந்து வாழும் இடங்களிலும் என்ன‌ ந‌ட‌க்குதென்று விசாரிச்சுப் பாருங்கோ, உண்மை என்ன‌ என்று தெரியும். அதோடு people live in their own reality bubble which doens’t neccesarily resemble the wider reality. நான் முத‌லில் சொன்ன‌து மாதிரி நானுமே இந்த‌ மாதிரி bubble இல் இருந்த‌தால் தான் என‌க்கே நில‌மை எந்த‌ள‌விற்கு bad என்று அண்மைக் கால‌ங்க‌ளிலேயே தெரியும்.

              “I read 12,000 verses of Kampan and 1330 kuraLs of Valluvan not for exam. I studied Maths, physics, chemistry computer science (I have several flavors of computer OS running at my home) and 30 years various branches of biotechnologies, not for exams. When you learn for understanding and use it for inventing and discovering, then you will know what is learning is. I am not talking about Kani/Karuna kavithai. Rather ask them to meet me on stage and let us write poems with strict “yaappilakkaNam”. Then you know who is kavinjar/ kalainjar.”

              Good for you. Unfortunately education is still a privilege and not a right. Majority in the world do not have access to good quality education. But formal education in literature, computing, Maths, Physic, etc still won’t give you better knowledge of all the society’s problems. Knowledge can be gained through experience as well.

              “Do not challenge me on the genetics. There is no one in India who is competent enough to challenge me, not even in USA. The X chromosome is bigger for a reason. Go to google and type in “number genes in X vs Y chromosome”. It will give you, “The X chromosome contains about 2000 genes compared to the Y chromosome containing 78 genes”.
              Again, when you come to know one day with whom you argued, you will understand how stupid you are. Are you in USA? Then we can debate on your knowledge in genetics.”

              I didn’t mean to threaten your intellectual authority in genetics. உங்க‌ளின் greatness ஜ‌ சொல்வ‌த‌ற்கு செல‌விட்ட‌ நேர‌த்தை நான் கேட்ட‌தை விள‌க்க‌ப் ப‌ய‌ன் ப‌டுத்தியிருந்தால் இந்த‌ விவாத‌ம் அத்தோடு நின்றிருக்க‌லாம். நீங்க‌ள் ஒரு expert என்ப‌தால் நீங்க‌ள் சொல்வ‌தை அப்ப‌டியே ஒத்துக் கொள்ள‌வேண்டுமென‌ எதிர்பார்க்க‌வேண்டாம். என‌து க‌ருத்து பிழையெனில் அது ஏன் பிழை என‌ விள‌க்குங்கள்.

              நீங்க‌ள் சொன்ன‌து.

              Male supremacy is by virtue of birth. Man has less genes. Woman has more.

              நான் கேட்ட‌து.

              “How did you figure this out? Please direct me to the studies that have proved this.”

              X chromosome, Y ஜ விட எத்தனையோ மடங்கு பெரியது, Y chromosome இல் இருப்பதை விட மிக‌க் கூடிய‌ள‌வு ம‌ர‌ப‌ணுக்க‌ள் X இல் உள்ள‌தென்பது என் சிற்றறிவிற்குத் தெரியும்.

              அநேகமான ஆண்க‌ளில் ஒரு X உம் ஒரு Y உம், பெண்க‌ளில் இரு X chromosomes உம் உண்டு. இரு X கள் இருப்பதால் மரபணுக்களின் எண்ணிக்கை கூடாது, அவற்றின் expression levels, அதனால் effects வேறுபடலாம்.

              ஆனாலும் generally அதற்காக இயற்கையிலேயே பெண்க‌ளின் உட‌லிலுள்ள‌ எல்லா cells இலும் ஏதாவது ஒரு X chromosome செய‌லிழ‌க்க‌ப்ப‌ட்டுவிடும். (This is mostly the case, but there could be partical activation). அத‌னால் ஒரு X chromosome ஏ செய‌ற்ப‌டும். ம‌ற்றும் Y chromosomes இல் ஆண்க‌ளுட‌லுக்கு ம‌ட்டும் தேவையான‌ சில‌ இய‌ல்புகளுக்குப் பொறுப்பான‌ ம‌ர‌ப‌ணுக்க‌ள் சில‌ உண்டு. இது பெண்க‌ளில் இல்லை. ஆத‌லால் நீங்க‌ள் சொன்ன‌திற்கு எதிர் மாறாக‌ ஆண்க‌ளுக்கே பெண்க‌ளில் இல்லாத‌ சில‌ ம‌ர‌ப‌ணுக்க‌ள் உண்டு.

              ஆனாலும் நான் மேற்சொன்ன‌ ஒன்றும் ஆண் மேலான‌வ‌ன் என்ப‌த‌ற்குச் சான்றுக‌ள் இல்லை. அதைத்தான் உங்க‌ளிட‌ம் கேட்ட‌னான். ம‌ர‌ப‌ணுக்க‌ளின் எண்ணிக்கைக்கும் இத‌ற்கும் என்ன‌ தொட‌ர்பு என்று. இத்தொட‌ர்பை நிரூபித்த‌ ஆய்வுக‌ளை என‌க்குக் கூற‌முடியுமா?

        • @ பிரியா – தங்களின் நீண்ட ஆங்கில விளக்கத்துக்கு நன்றி.

          தமிழர்கள் பிராமணர்களை வெறுக்கவில்லை .. ஆனால் பிராமணியத்தை வெறுக்கின்றார்கள்.. நானும் வெறுக்கின்றேன். எனது உடலில் பிராமண இரத்தம் கலந்துள்ளது … ஆனால் அதற்காக பிராமணத்துக்கு அடிவருட வேண்டியதில்லை என்பேன்.

          உங்கள் ஈழத்தில் ஈழப் போரில் பிராமணர்கள் கலந்துக் கொண்டுள்ளார்கள் எனில் .. அதற்கு அங்கே அவர்களுக்கு மாலை அணிவித்தலே தகும். எம் தமிழ்நாட்டில் பிராமணியம் என்பது மற்றவனை அடக்கு ஆள்வதிலேயே முனைப்பாக இருக்கின்றது. பிச்சை எடுத்து வாழ வேண்டும் என வேதம் பிராமணர்களுக்கு கட்டளை இடுகின்றது – அப்படி இருக்க மணிசங்கர் அய்யர் போன்றோர் எதற்கு இறால் பண்ணை நடத்த வேண்டும், ட்ராவ்லர் படகுகளில் ஈழம் வரை சென்று மீன் பிடிக்க வேண்டும். ஏன் ஆயிரம் ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களை சோழத் தரணியிலே வளைத்துப் போடவேண்டும்.. எல்லாத்தைவும் விடுங்க .. தமிழ்நாட்டில் தமிழ் மன்னன் கட்டியக் கோவிலில் தமிழில் பாட ஏன் இந்த சிதம்பரத்து தீக்ஷிதர்கள் தடைப் போட வேண்டும் …

          எல்லாவற்றுக்கும் மேலாக பெரியார் எங்கேத் தோற்றுப் போனார் – பிரபாகரன் எங்கே வெற்றிப் பெற்றார் .. சும்மா இங்கே உளறுவதை நிறுத்துங்கள். விடுதலைப் போராளிக்கும் – சமூகப் போராளிக்குமே வித்தியாசம் தெரியாத உங்களோடு பேசி என்னப் பயன்.

          இங்கே லொட லொடவென உளறுவதற்குப் பதிலா இலங்கை தூதராலயம் முன் உண்ணாவிரதம் இருந்திருக்கலாம் … என்பேன் …

          தமிழ் நாட்டு பிராமணருக்கு – ஈழத்தில் இருந்து ஒரு உத்வேகக் குரல் …. சிரிப்புத் தான் விஞ்சுகின்றது ..

      • இஃபால், சந்துல சிந்து பாடாத. பிரியா சரியாதான் சொன்னாஙக. ஜாதி யென்பது எல்லா மதங்கலிலும் உன்டு.

  19. கோவிலுக்குள் அனுமதி மறுக்கப்பட்ட தலித்தும் மீனவரும் நாடாரும் ஹிந்துக்கள் இல்லை.அவர்களின் முதல் மதமே கிறிஸ்துவம் தான்.வெள்ளைக்காரன் மக்கள் தொகை கணக்கெடுக்கும் போது அவசர அவசரமாக கூட்ட கூட்டமாய் கோவிலுக்கு அழைத்துப்போய் ஆலயப்ரவேசம் செய்து ஜாதி சான்றிதழில் ஹிந்து என்று போட்டால் பழசெல்லாம் மறந்துடுமா?மாறிடுமா?வரலாறு தெரியாதவர்கள் இங்கு வேடிக்கை மட்டும் பார்க்கவும்.

    • தலித் , கிறித்தவர், பிற சாதிகள் அனைத்தும் ஆரம்பத்தில் ANIMIST ஆகவும், பின்னர் பௌத்த – சமணர்களாகவும் இருந்தார்கள். அதன் பின் எழுந்த சைவ -வைணவம் அவர்களை ஒதுக்கியே வைத்தது .. வைணவத்தில் சொற்பமானோர் சாதிய ஒழிப்பில் ஈடுப்பட்டார்கள், சைவத்தில் அதுவும் இல்லை எனலாம்….

      நாடார், தலித், பழங்குடிகள் கல்வி, பொருளாதாரத்தில் முன்னேற்றம் கண்டதற்கு கிறித்தவ சமயம் பெரும் பங்காற்றியுள்ளன என்பது ஆணித்தரமான உணமை..

      கிரித்தவர்கள் தம்மில் இருக்கும் சாதியங்களை ஒழித்தால் மட்டுமே … அது ஒரு சிறந்த முன்னுதரணமாக முடியும் .. மற்றப்படி அனைத்தும் ஒன்றே போலே

  20. திரு.இக்பால் செல்வன்

    //நாடார், தலித், பழங்குடிகள் கல்வி, பொருளாதாரத்தில் முன்னேற்றம் கண்டதற்கு கிறித்தவ சமயம் பெரும் பங்காற்றியுள்ளன என்பது ஆணித்தரமான உணமை..//

    இதை முழுவதுமாக அப்படியே ஏற்றுக்கொள்ள இயலாது நண்பரே! ஒரு விடயத்தை எழுத்தில் கொண்டுவரும் போது சற்று மிகைப்படுத்துதல் இயல்பானது தான். அந்தவகையில் கிறிஸ்தவம் இங்கு சில உரிமைகளுக்குத் துணையாக இருந்ததால் பொருளாதார முன்னேற்றதிற்கும் அவர்களே காரணமாக இருந்தார்கள் என்று பொதுவாக எல்லோரும் இவ்வாறே சொல்லிவருகிறார்கள்.

    கிறிஸ்தவ சமயம் தமிழகத்தின் கடற்கரையோரம் இருக்கும் மக்களின் கல்வி, பொருளாதாரத்திற்கு பெரும் பங்காற்றியுள்ளன என்பது தான் சரியாக இருக்குமேயன்றி நீங்கள் சொன்ன யாருக்கும் அல்ல.

  21. @ பாசிஸ்ட் – இல்லை கடற்கரை மக்களுக்கு மட்டும் கிருத்தவம் சமூக மாற்றம் கொண்டு வந்தது எனக் கூறுவது அறியாமையைக் காட்டுகின்றது …. நாடார் இனம் இன்று ஒடுக்கப்பட்டவராக இருந்து முன்னேற்றம் கண்டுள்ளது எனில் அதற்கு காரணம் கிருத்தவ மிசனரிகளின் கல்வி, பொருளாதாரப் பணி தான் .. அது மட்டுமின்றி சட்டிஸ்கர், ஜார்கண்ட், ஒடிசாவில் அவர்கள் பழங்குடி மக்களுக்காக பல கல்வி, பொருளாதார, சமூக மாற்றங்களை ஏற்படுத்தி வருவதும் உண்மையே !!! ஏன் எதற்கு என்றெல்லாம் பேசினால் விவாதம் பெருகி விடும்.. ஆனால் கல்வி, பொருளாதார, சமூக மாற்றங்களைக் கொண்டுவருகின்றார்கள் – வந்துள்ளார்கள் என்பது உண்மையே !

    • கிறிஸ்தவ மிசனரிகளின் மூலம் கிறிஸ்தவர்கள் மட்டும் தான் கல்வி கற்கிறார்கள், அதன் மூலம் தான் கிறிஸ்தவர்கள் முன்னேறினார்கள் என்றுச் சொல்வது சரிதானா? அப்படியானால் இன்னும் இந்து நாடார்கள் முன்னேறவில்லை என்று சொல்லுகிறீர்களா?

      இரட்டைக் குவளை, கோயில் நுழைவு மறுப்பு, தீண்டாமை, வேலைக்கு ஊதியம் இல்லாமை, இதுபோன்ற எண்ணற்ற சமூக அவலங்களால் அன்று ஒடுக்கப்பட்ட மக்கள் எல்லாம் கிறிஸ்தவ மிசனரிகளின் கல்வியாலும், அவர்கள் கொடுத்த சமையல் எண்ணையிலும் கோதுமையிலும் தான் பெற்றார்கள் என்று சொல்லுகிறீர்களா?

      இந்துத்துவ வெறியர்கள் சொல்லுவது போல பிஸ்கட்-க்கு அலந்து தான் கிறிஸ்தவர்களாக மதம் மாறினார்கள் என்று நீங்களும் சொல்லுவது வேடிக்கை தான்!

      பொருளாதார உதவி என்று மேம்போக்காக சொல்லாமல் நாடார், தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்கு கிறிஸ்தவ சமயம் என்ன மாதிரியான பொருளாதார உதவி செய்தது, செய்து வருகிறது என்பதை விளக்கினால் நாம் தெரிந்துகொள்ள வசதியாக இருக்கும்.

      (நாம் ஒட்டுமொத்தமாக “இல்லை” என்று மறுக்கவில்லை என்பதை நினைவில் கொள்க. ஆனால் நீங்கள் “பெரும்” என்று சொல்லக்கூடிய அளவிற்க்கெல்லாம் மேற்கூறியமக்களுக்கு அவர்கள் ஒரு மசுரையும் புடுங்கவில்லை என்பது தான் நாம் சொல்லவருவது)

      • @ பாசிஸ்ட் – கிருத்தவ மிசனரிகளிடம் கிருத்தவர்கள் மட்டும் தான் கற்கின்றார்கள் என சொன்னது நானா ? நன்றாகப் படித்துப் பாருங்கள் .. நாடார் சமூகம் முன்னேறி உள்ளது எனில் கிருத்தவ மிசனரிகள் நடத்திய கல்வி சேவையும், சமூக சேவையும் .. சிலர் கிருத்தவர்களாக மாறினாலும் – நாடார்கள் பலர் இந்துக்களாகவே இருக்கின்றார்கள்.. ஆனால் இந்து நாடார்கள் அனைவரும் படித்தது எங்கே – அவர்களின் சமூக மாற்றம் எங்கிருந்துத் தொடங்கியது என்பதை ஆராய்ந்தால் உங்களுக்கு விளக்கங்கள் கிட்டி இருக்கும்.

        என்னைப் பொறுத்தவரை கிரித்தவ மிசனரிகள் மதமாற்றும் வேலையை விடவும், சமூக மாற்றங்களில் அதிகம் ஈடுப்பட்டன ( பால் தினகரனை எல்லாம் கிருத்தவ மிசனரி எனக் கொள்ள வேண்டாம் .. அது ஒரு பித்தலாட்டக் கூட்டம் ).

        சமூக மாற்றங்களுக்கு முதலில் வித்திட்டவர்கள் கிருத்தவ மிசனரிகளே – மார்சீலைப் போராட்டம், இரட்டைக் குவளைத் தடுத்தது, ஆலயப் பிரவேசம் போன்றவற்றை அவர்களிடம் கல்வி கற்று முன்னேறிய சமூகம் தானே செய்தது ….

        இந்தப் போராட்டங்களைப் பெரியார் செய்தார் – அவருக்கான அந்தப் பகுத்தறிவை ஏங்கேப் பெற்றார் .. ஆங்கிலயே கல்வி முறையும், கிறித்தவ சமூக மாற்றங்களும் வித்திட்டதே ஆகும்..

        திடிர் என வானத்தில் இருந்து இந்த எண்ணங்கள் குதித்துவிடவில்லை …

        கிறித்தவர்கள் பிஸ்கட்டுக்கு அலைந்து மதம் மாறி இருந்தார்கள் என நான் சொல்லவே இல்லை. சும்மா திரிக்காதீர்கள் ….

        முதலில் ஒரு நூலகம் சென்று நாடாரின் வரலாறுகளை நன்குப் படியுங்கள் .. ஒரு தலித்களின் முன்னேற்றம் எங்கிருந்து வந்தது என்பதை படியுங்கள் … அதே போல இன்று பழங்குடிகள் பலரும் ஏன் கிறித்தவத்தைத் தழுவுகின்றார்கள் என்பதை உணருங்கள்.

        இந்தியாவின் சமூக மாற்றம் மேற்கில் இருந்தே வந்தது .. அந்த மாற்றங்களுக்கு அடித்தளம் அமைத்தோர் கிருத்தவ மிசனரிகளின் சமூகப் பணியே ஆகும்…

        இந்தியாவில் சோற்றுக்கு மதம் மாற வேண்டும் எனில் .. இன்றும் பல இந்துக்கள் சோற்றுக்கு வழியே இல்லாமல் இருக்கின்றார்கள். அவர்கள் ஏன் மதம் மாறி வயிறாற உண்ணலாமே !!!

        சோற்றுக்கு மதம் மாறுவது என்றப் பிரச்சாரம் போலியானது என்பேன்.. விரும்பியே மக்கள் மதம் மாறுகின்றார்கள் .. ஆனால் அதனை இந்துத்வா வாதிகள் விரும்புவதில்லை .. என்பதே உண்மை ..

        • என்னவொரு சமாளிபிகேசன்!

          பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் கிறிஸ்தவ மிசனரிகளின் பாடசாலையில் கல்வி கற்று அதன் மூலம் அறிவு பெற்று பிறகு போராடினார்கள் என்று சொல்லுவது குழந்தை தனமாக இல்லையா?

          பொதுவாக “இரட்டைக் குவளை” என்று சொல்லுகிறார்களே. உங்களுக்கு ஒன்று தெரியுமா? எங்கள் ஊரில் சிரட்டையில் தான் தேநீர் கொடுப்பார்களாம்.
          ஆலயப் பிரவேசம் செய்தது கிறிஸ்தவர்கள் அல்ல ஹிந்துக்கள்!
          கல்வி கற்று முன்னேறிய சமூகம் ஆண்டைகளுக்கு சொரித்து விடும் வேலை தான் செய்தார்கள்.
          ஆமாம். அம்பேத்கரும், பெரியாரும் கிறிஸ்தவ மிசனரிகளிடம் ஐடியா கேட்டு தான் சமூக மாற்றங்களை ஹிந்தியாவில் கொண்டுவந்தார்கள் 🙂

          மொத்தத்தில் நல்ல காமெடியா பேசுறிங்க பாசு.

          உங்களிடம் இருக்கும் பிரச்சனையே இது தான். கத்தை கத்தையாக புத்தகங்களை படித்து அப்படியே இங்கு பேசுகிறீர்கள் போல. அப்படி என்றால் நீங்கள் வினவில் விவாதிப்பது எந்த அளவிற்கு பொருத்தமாக இருக்கும் என்பது கேள்விகுறி தான். வினவின் பெரும்பான்மை கட்டுரைகள் மக்களின் அன்றாட வாழ்வியலை மிகைபடுத்தாமல் அப்படியே பதிவு செய்வார்கள். அது தான் எதார்த்தம். ஒரு பொருளை விவாதிக்கும் போது நமக்கு ஏற்பட்டுள்ள, நாம் கண்டுணர்ந்த அனுபங்களினூடாக விவாதிக்கும் போதுதான் அது நடைமுறைக்கும் பயனுள்ளதாக இருக்கும். கற்பனையில் மிதந்து கொண்டு எழுதும் போது ரொம்ப அந்நியமாகவே தெரிகிறது.

          அப்புறம் வரலாறு படிக்க சொன்னீர்களே.
          மொகலாயர் “படையெடுப்பு”
          ஆங்கிலேயர் “படையெடுப்பு”
          ஆரியர்கள் “வருகை!”
          இது தான் நான் படிச்சா வரலாறுப்பா……

          • கடைசியில் என்ன சொல்ல வருகின்றீர்கள். உங்களைப் போன்றோரிடம் பேசினால் நேரம் தான் விரயம் என்பேன்.

            இந்தியாவின் சமூக மாற்றத்துக்கு ஆணிவேர் எங்கிருந்து வந்தது. உங்கள் நாகர் கோயில் பக்கத்தில் உள்ள அக்ரஹாரத்தில் இருந்தா ? அரவிந்த நீலகண்டனிடம் கேட்டுச் சொல்லலாமே !!!

            அடியேன் அறிந்துக் கொள்வேன் ….. !!!

    • i am always surprised when i read the so called historic info made by the so called sikular communist.. I really don’t know whether they are the real communist / the abrahamic rleigious people who uses communist as a mask.

      Any how, this is my responsibility to answer for your question.

      On what basis, you mean to say that NADAR community belongs to ‘ODUKKA PATTAVARGAL’.

      Let me know give you the reference taken from the book written by Bishop stephan Neil. He says…The Nadars were a community mostly engaged in the palmyra industry, including the production of toddy, in the early 19th century. A few subsects of the Nadar community were traditionally wealthy landlords and money lenders.[26][27]

      Reference: http://books.google.co.in/books?id=14_D50nU7R8C&pg=PA77&dq=caldwell+nadars&hl=en&ei=GmpqTMD8BozksQPU5r3FDw&sa=X&oi=book_result&ct=result&resnum=2&ved=0CDUQ6AEwAQ#v=onepage&q=caldwell%20nadars&f=false

      Request you to read the history book properly.

  22. இந்த அம்பிகளின் தொல்லை தாங்க முடியலடா சாமி…

    கட்டுரையைப்படித்து வயிறு எரிந்து ரொம்ப அறிவாளித்தனமாக எழுவதாக நினைத்து பின்னூட்டம் போட்டிருக்கும் அம்பிகளே…தயவுசெய்து இந்த கட்டுரையையும் படிக்கவும்…இன்னும் நன்றாக வயிறு எரியட்டும்…

    https://www.vinavu.com/2010/10/01/narayana/
    (ராம கோபாலன் டர்ரு புர்ருன்னு விட்ட குசுவையெல்லாம் சமாளிச்சிச்சோம், ஆனா கம்பீட்டர் முன்னால, சத்தமில்லாம நசுக்கி நசுக்கி விடுற குசு இருக்கே.. நாராயணா, இந்த குசுத்தொல்லை தாங்க முடியலடா)

    • மதிப்பிற்கு உரிய கிறித்துவ சகோதரர் Parthasarathy அவர்களுக்கு நான் இங்கு சொல்லி கொள்ள விருபுவது என்ன வென்றால், பெரும்பான்மை மக்கள் கட்டும் வரி பணத்தில் சிறுபான்மை என்று காரணம் காட்டி அணைத்து அரசு சலுகைகளும் பெற்று அனைத்து அரசு நிலங்களையும் இலவசமாக ஆங்கிலேய ஆட்சி காலத்தில் பெற்று மிகப்பெரிய கட்டிடங்களை கட்டி கல்வி என்ற பெயரில் ஒரு வியாபார நிறுவனத்தை நடத்துகின்றனர். இது போன்று அரசு சலுகை ஹிந்து மதத்தின் பேரில் யாருக்கும் கிடையாது.

      https://www.vinavu.com/2010/10/01/narayana/

      \\அது இந்தியா முழுவதும் புகழ் பெற்ற புனித ஸ்தலமானது 1980 களில்தான். அதுக்கு முன்னால ராமர் எப்படி இருப்பார்னு கேட்டா என்டி ராமராவ் மாதிரி இருப்பார்னு தான்\\

      ஆஹா என்ன ஒரு அறிவு என்ன ஒரு தெளிவு. உங்கள் வரலாற்று அறிவை பார்க்கும் பொழுது உங்களுக்கு கலை மாமணியே கொடுக்கலாம். இதை படித்து விட்டு தான் எனக்கு தெரிந்தது மிகவும் பிற்படுத்தப்பட்ட சத்ரிய குலத்தை சேர்ந்த ராமனை பற்றி ஒச்சன் என்ற தாழ்த்தப்பட்ட குலத்தை சேர்ந்த கம்பர் என்பவரால் இயற்றப்பட்ட கம்ப ராமாயணம் 1980 பிறகு தான் எழுத பட்டது என்று.

      • \\ஆஹா என்ன ஒரு அறிவு என்ன ஒரு தெளிவு. உங்கள் வரலாற்று அறிவை பார்க்கும் பொழுது உங்களுக்கு கலை மாமணியே கொடுக்கலாம். இதை படித்து விட்டு தான் எனக்கு தெரிந்தது மிகவும் பிற்படுத்தப்பட்ட சத்ரிய குலத்தை சேர்ந்த ராமனை பற்றி ஒச்சன் என்ற தாழ்த்தப்பட்ட குலத்தை சேர்ந்த கம்பர் என்பவரால் இயற்றப்பட்ட கம்ப ராமாயணம் 1980 பிறகு தான் எழுத பட்டது என்று.//

        கம்ப ராமாயணம் 1980 பிறகு தான் எழுத பட்டது என்று உங்களுக்கு தெரியுமா
        அட லோசு பயலெ, கம்பனும்,ராமனும், உன்கிட்ட வந்துதான் ”சாதி சான்றிதழ் குடு”
        னு உன்ன கேட்டாங்கலா, இப்படி எல்லாமபெசி யென்ட பொல்லப ஓடுரேன்க, இட்கெல்லம் ஒரு பொலப்பட,

  23. நானும் ஒரு இந்துதான்…என்னுடைய கல்வி எல்லாம் கிருஸ்தவ பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் தான். கிட்டத்தட்ட நான்கைந்து பள்ளிகளிலும், இரண்டு கிறிஸ்தவ கல்லூரிகளிலும் படித்திருக்கிறேன். மேலே அம்பிகள் குறிப்பிட்டிருந்ததைப்போல எந்த ஒரு நிறுவனத்திலும், ஒரு போதும் மதத்தை பற்றிய அடக்கு முறையோ, பாரபட்சமோ இருந்ததே கிடையாது.

    இன்னும் சில நிறுவனங்களில், முழுக்க முழுக்க அம்பிகள் தான் பயிலுகிறார்கள்…ஏனென்றால் அவை தலைசிறந்த கல்வி நிறுவனங்களாக அமைந்திருக்கின்றன என்பதால்தான்…

    இந்தியாவில் பிறந்த பாதிப்பேர் கட்டாயமாக ஒரு கிறிஸ்தவ நிறுவனத்தில் பயிலாமல் படிப்பை முடிக்க முடியாது. அப்படி இருக்கும் பொது, அந்நிறுவனங்கள் கட்டாயப்படுத்தி மத மாற்றம் செய்வதானால் தற்போது இந்திய மக்கள் தொகையில் பாதிப்பேர் கிறிஸ்தவர்களாகத்தான் இருக்க வேண்டும்…

    • இதைத் தான் நானும் வழிமொழிகின்றேன். கிருத்தவ மிசனரிகள் மற்றும் பள்ளிகள் மதம் மாற்றுகின்றார்கள் எனக் கூறுவது பொய்.. அப்படியானால் இன்று இந்தியாவின் பாதிப் பேர் கிரித்தவர்களாகவே இருக்க வேண்டும் என்பேன்.. பல இந்துத்த்வா வாதிகள் போலி பரப்புரை செய்கின்றார்கள்.. அதனையே பலரும் மெய் என நம்புவது சிரிப்பைத் தருகின்றது என்பேன் …

        • கலாச்சாரம் என்பது என்னவென்று விளக்கலாமே ? இந்தியாவுக்கு என தனிக் கலாச்சாரம் உண்டா ? அது என்ன ? மாநிலத்துக்கு மாநிலமும், மாநிலத்துக்குள்ளேயே பிரதேசம் தோறும் இருக்கும் கலாச்சாரங்கள் வேறுபடுவது எதனால் ?

          இந்துப் பள்ளிகளிகள் கற்றவர் எல்லாம் சனாதனா கலாச்சாரத்தோடு தான் வாழ்கின்றார்களா? இல்லை கிறித்தவப் பள்ளியில் படித்தோர் எல்லாம் மேற்கத்திய கலாச்சாரத்துக்கு மாறிவிட்டார்களா? இந்தியக் கிறித்தவர்கள் அனைவரும் மேற்கத்திய கலாச்சாரத்தைத் தான் பின்பற்றுகின்றார்களாள்

          சனாதனக் கலாச்சாரத்தை மொச்சுவோர் ஏன் தெரிந்தே கிறித்தவப் பள்ளிகளில் பிள்ளைகளை சேர்க்கின்றார்கள். அப்புறம் அங்கே வைஞ்சான் இங்கே பெஞ்சானு உஜிலா உஜிலானு பேசுவதேன் !

  24. @ இக்பால் செல்வன்…ப்ரியா சொல்றது என்னன்னா…”இந்த உலகத்திலேயே நான் மட்டும்தான் அறிவாளி, மற்றவர்கள் எல்லாரும் முட்டாள்கள்”

    • ப்ரியா மட்டுமல்ல பல ஈழத்தமிழர்களிடம் இந்த மாதிரி எண்ணங்கள் அதிகம்.. ஈழம் என்பது பாலும் தேனும் ஒடும் நாடு எனவும், இந்தியா சாக்கடை எனவும் சிலர் என் காதுப் படக் கூறி கடுப்பேற்றினார்கள். சிலரோ இலங்கை அரசுக்கு எதிராகப் பேசினார்கள்.. கிரிக்கெட் என வந்ததும் இலங்கைத் தான் ஜெயிக்கும் இந்திய ஜெயிக்காது என்றார்கள் .. ஏன் இப்படியானோர் இருக்கின்றார்கள் என எனக்குத் தெரியவில்லை. விடுங்க பாஸ். போயிட்டு போறாங்க

      • i dont think priya ever spit on india. she just gave a big explanation but her intention is not what u said. mr.iqbal why do want everyone to agree with u.

        Mr,parthasarathy = ur comment is really sarcastic. she only vented out her anger towards society for which she quoted examples and her views. we shud have supported tamils in SL becoz what happened there was genocide and inhumane, not because people who were killed spoke tamil. the same compassion must be expressed to poeple in Af, iraq, too. they have lost lives of their kins so we can accept if they exaggerate things a little bit.

      • Iqpal,

        Did you ever pass even first standard of school? Your writing says, no, you are not. Read what Sathis said about my writing. Some one even challenged my genetics and biotechnology knowledge when many Nobel laureated were scared of debating with me. Another person said rightly, Priya is a genetics expert”. Who said Elam is a holy place? They had so many traitors and selfish bastards as many percentage as Tamilnadu has. Who said Tamils are better than any other race? I even challenge the word Tamil Race as there is none. In India it is all mixed up and a few tribal areas may still remain isolated. Many Elam Tamils married India Tamil. Elam is like every other country in the world. All countries in the world contain people like you. All countries also have people like me and a few others we correctly understand my writings and intentions.

        As “analyst” put it, if there are castes in Elam, the hell with them. They should also be corrected. I, my family, my street, my village, my district, my state, my race, my country this is the way selfish mind expands from the word “I”. Only a handful of people can come out of it and dream about creating a border free world, no country, no weapon, no defense force (truth is all are offense force. My hubby and I are a few of those. So if you write bad about Elam, let me add my words also to yours in condemning them. Your stupidity will not go away as you will always claim something about you, your family, caste, race and country. Come out of that man-made stupidity. No child chose to be born to any parents, caste, race, country. It is not their mistake to be born to poor parents. Why should these children be branded “Tamils”, “Pallar”, “Christian”, “American” , and “poor”? Did they ask for it? Why should they be grown under utter poverty? If GOD was the one who made this stupidest mistake, I will beat him with my shoes until GOD dies. I and my husband are trying to create opportunities for giving as good educations and training to the poor as much as the rich ones can get. Here we do not care for race, religion, caste, country, my family considers our country: world, our race: humans. It ends there.

        I wrote so much about your cowardice act at the time whne 200,000 tamils got killed in Srilanka and in just one week alone 40,000 people. I did not ask you why you did not agitate for the killing of innocent people in various parts of Africa, South America, Arabia, Asia and Europe as I know how selfish idiots you are all. Even when it happned next door you kept quiet.

        Those thousands of children lost their life right in their mothers’ uterus, do they know what caste, religion, race, language or country they are going to be born or for what reasons they are going to be killed even before born?

        All the seven crore of Tamils including AbdulKalam has to be sent to elementary school to learn from first standard, as they all watched this genocide and did nothing to stop. ARE THESE GUYS HUMAN AND WOULD DO ANY GOOD TO HUMANS? Save Sudanese, Bosnians,…? NO way.

        • //All the seven crore of Tamils including AbdulKalam has to be sent to elementary school to learn from first standard, as they all watched this genocide and did nothing to stop. ARE THESE GUYS HUMAN AND WOULD DO ANY GOOD TO HUMANS? Save Sudanese, Bosnians,…? NO way//
          நீங்க அப்போ செத்து இப்போது தான் உயிர்த்தெழுந்தீர்களா

    • மதிப்பிற்குரிய கிறித்துவ அன்பர் பார்த்தசாரதி அவர்களுக்கு,

      பிரியா இங்கு சொல்ல விரும்புவது பகுத்தறிவை குத்தகைக்கு எடுத்த ஒரே காரணத்திற்காக நீங்கள் மட்டுமே அறிவாளிகள் இல்லை. பகுத்தறிவை குத்தகைக்கு எடுக்காததால் நாங்கள் முட்டாளும் இல்லை என்பதே…

      பின் குறிப்பு: ஹிந்து தர்மத்தை / சனாதன தர்மத்தை ஆதரித்து எழுதுவோரை அம்பிகள் என்று சொல்வதை போலே நானும் கிறித்துவ மதத்திற்கு ஆதரவாக எழுதும் உங்களை கிறித்துவர் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும்.

  25. “குழப்பம் நிறைந்த முட்டாள் தனமான கட்டுரை…

    மதம் மாறினால் தேசிய உனர்வு மாறத்தாண்டா செய்யும்…

    கேரளாவில் காதல் கண்ணாமூச்சி காட்டி மதம் மாற்றி பின் தீவிரவாதியாக மாற்றுவது ஏன்?”
    இதுங்களெல்லாம் இன்னும் திருந்தலையே வினவு.

  26. அப்பப்பா… மதத்துக்காகத்தான் எத்தனை எத்தனை கருத்து மோதல்கள். நிழல் உலகிலேயே இப்படி மோதிக் கொண்டால் நிஜ உலகில் வெட்டுக் குத்துதானோ! அதுதானே நடக்கிறது.

    மனிதன் மனிதத் தன்மையை இழக்கும் போது அங்கே மதம் அவனுள் புகுந்து விடுகிறது அல்லது புகுத்தப் படுகிறது. மனிதனாக வாழ மதம் தேவையில்லை. மனிதத் தன்மைதான் தேவை. மனிதத் தன்மையை எந்த மதமும் இதுவரை மீட்டெடுத்ததில்லை என்பதே வரலாறு. உடனே ஆதாரம் கேட்காதீர்கள். தன் மதத்துக்காக மோதிக் கொள்ளாத ஒரு மதம் இருக்குமானால் ஆதாரம் பற்றி பரிசீலிக்கலாம். அப்படி ஏதேனும் ஒரு மதத்தைக் காட்ட முடியுமா? முடியாது.

    மதம் மனிதனைக் கூறுபோடும் ஒரு கொடுவாள். இந்தக் கொடுவாளை எடுத்தவன் எப்படி சாந்த சொரூபியாக இருக்க முடியும்? நண்பர்களே சிந்தியுங்கள்!

    • அப்படி என்றால் மதத்தை எடுக்காத கம்யூனிஸ்ட் கள் என்ன ஒழுங்கா.இவனுங்க பண்ண கொலைகள் கொஞ்ச நஞ்சம் கிடையாது. அப்பாவி கடை நிலை காவல் துறையினர் தான் இவனுங்களுக்கு கிடைச்சனுன்களா? இவனுங்களுக்கு தெய்ரியம் இருந்த எந்த கட்சி அரசியல் வாதி மேலே கை வச்சு பாக்கட்டும். அத விட்டுட்டு போயும் போயும் மாசம் 5000 சம்பளம் வாங்கும் ஒரு சாதாரண காவல் துறை ஊழியரை கொலை செய்யும் இவனுங்கள ஏன்னு சொல்றது.

      www . sapt . org என்கின்ற வலை தலத்தில் இவர்கள் செய்யும் அட்டுழியம் தெளிவாக சொல்ல பட்டுள்ளது. இவர்களுக்கு அதிகாரம் வேண்டும், பணம் வேண்டும், அனைவரும் இவர்களுக்கு அடங்கி நடக்க வேண்டும். இவர்கள் ஜனநாயகம் எப்படி என்பதை சீனா மற்றும் பர்மாவில் தெளிவாக காணலாம். பாவம் புத்த துறவிகள். அவர்கள் இருக்கும் ஒரு மலை மேட்டை கூட விடாமல் அவர்களை அடக்கி ஒடுக்கி ஆட்சி செய்யும் இவர்கள் எல்லாம் ஒரு ஆண்மை உள்ள சுத்த வீரர்களா?

      கேட்டல் இவர்கள் எல்லாம் உண்மையான கம்யூனிஸ்ட் கள் இல்லை என்று சப்ப கட்டை கட்டுவது. ஆனால் நாங்கள் மட்டும் சில ஹிந்துக்கள் செய்யும் தவறுக்கு ஒட்டு மொத்த ஹிந்து சமுதாயமும் அதற்க்கு பொறுப்பு ஏற்க்க வேண்டும். மாமியார் உடைச்சா மண் குடம் மருமக உடைச்ச பொன் குடம்.

      • கேட்ட கேள்விக்கு பதில் ஏதும் இல்லையே. மனிதத் தன்மையை போதிப்பதாகச் சொல்லும் மதங்கள் நடைமுறையில் தோற்றுப் போனதேன்? மதங்களுக்கிடையிலான மோதல்களும் வர்க்கங்களுக்கடையிலான மோதல்களும் ஒன்றல்ல. மதங்களுக்கிடையில் நடப்பது நம்பிக்கை சார்ந்தது. வர்க்கங்களுக்கிடையில் நடப்பது உயிர் வாழ்வதற்க்கானது.

        கொழுப்பேறியதால் நடப்பது மதமோதல். கொழுத்தவனுக்கு எதிராக நடப்பது வர்க்க மோதல். நீங்கள் சொல்கிற சாமான்யன் எந்தப் பக்கம் இருக்கிறான் என்பதைப் பொருத்து அவனது வாழ்வு அமைகிறது. இது ஒரு விரிவான சமாச்சாரம். ஏற்கனவே வினவில் பலமுறை விவாதிக்கப்பட்டுள்ளது.

        நடைமுறையில் மதங்கள் அமைதியைக் கொண்டு வந்துள்ளனவா? அல்லது வன்முறையைக் கொண்டு வந்துள்ளனவா? நேரடியாக பதில் கூறவும்.

        • மதம் என்பது ஒரு அடையாளத்துக்கும் தேவைக்கும் தான். மனிதத் தன்மை என்பதும், பகுத்தறிவும் என்பது தனித் தனி மனிதர்களை சார்ந்தது. மதத்தால் பகுத்தறிவு வளருமா என எனக்குத் தெரியாது ??? மதங்கள் – கொள்கைகள் என்பது தனி ட்ராக் என்பேன் ..

          சுய சிந்தித்தலுக்குத் தடையாக எதுவுமே இல்லாமல் இருக்கும் போது மனித மனம் வளர்ச்சியடைகின்றது. வேதம், விவிலியம், குரான், கம்யூனிசம், மாவோயிசம், பெரியாரிசம் என பலவற்றையும் நமது மூளையில் பிறரால் திணிக்கப்படும் போது சுயசிந்தனை வற்றி – சிந்தனை வறட்சி ஏற்பட்டு – அதுவே வெறித்தனத்தையும், கலக்கமுற்ற மனநிலையையும் ஏற்படுத்துகின்றன…

          மேற்கூறிய மதங்கள், கொள்கைகள் என்பதை நோட்ஸ் எடுக்கப்பயன்படுத்தாலமே ஒழிய – அதுவே ஒரு தீசிஸ் என எழுதிவிட்டோம் – ப்ளாகரிசத்தில் மாட்டிக் கொள்வோம் என்பேன் ….

          சொந்த மூளையை பயன்படுத்துபவனுக்கு இவை அனைத்தும் தேவையற்றவை என்பேன் ..

  27. மதம் மாறினால் தேசியம் மாறும என்ற கேள்விக்கும் நெரடியாக ஆம் இல்லை என்று பதில் கூற முடியாது.தமிழ் நாட்டு நிலைமையை மட்டுமெ கனக்கில் எடுத்துக் கொள்வோம்.இந்துக்கள்(கிறித்தவர்,இஸ்லாமியரல்லாதவர்) பலரும் என்ன தேசிய உணர்வு கொண்டு இருக்கிறார்கள்.பெரும்பாலானவர்களுக்கு எந்த தேசிய உண்ர்வும் கிடையாது,அதே சமயம் இந்திய தேசியத்திற்கு எதிரான உணம்ர்வும் கிடையாது.தலித்,ஏழைகள் போன்றவர்களுக்கு வயிற்று தேசியம் தவிர வேறு எதுவும் தெரியாது.மத்திய தர,அதற்கு மேற்பட்ட சாதி,வசதி படைத்தவர்கள் இந்திய(இந்துத்வ) அல்லது தமிழ் தேசியம் பேசுவது உண்டு.தமிழ் தேசியம் பேசுபவர்க்ளில் கூட தனி தமிழ்நாடு,சுய நிர்ணய உரிமை என்று குழப்பமான் கொள்கையே உண்டு.
    கிறித்தவர்கள் மிக குறைவாக இருப்பதாலும்,அவர்களின் சாதி, பிற விவரங்கள் இந்துக்கள் போலவே இருப்பதால் இவர்களும் அவர்களை போல்தான்.ஒரு வேளை கொஞ்சம் அதிகமாக இருந்தால் என்ன தேசியம் பேசுவார்கள் என்று சொல்ல முடியாது.
    இஸ்லாமியர்களில் ஏழிகள் பிற நாட்டு தொடர்பு அற்றவர்கள் அவர்கள் வயிற்று பாட்டை பார்த்துக் கொண்டு முடிந்தவரை மதக் கடமைகளை நிறைவேற்றி வாழ்கிறார்கள்.

    பிற நாட்டிற்கு சென்று வேலை பார்க்கும் இஸ்லாமியர்கள் உலகளாவிய இஸ்லாமிய சகோதர‌த்துவம் பற்றி பேசுகிறார்கள்.இங்கு கூட ஒருவர் அனைத்து நாட்டவருக்கும் இமாமாக தொழுகை நடத்தியதை பெருமையாக குறிப்பிட்டார்.
    இவர்களுக்கு இஸ்லாமிய தேசியம்,உலகளாவிய இஸ்லாமிய மயப்படுத்தல் பற்றி பிரச்சரம் செய்யப்பட்டு தயார் செய்யப் படுகிறார்கள்.
    பதிவுலகில் கூட இஸ்லாமிய அரசின் மேன்மை ,இஸ்லாமிய சட்டங்கள் அனைத்து பிரச்சினைகளுக்கும் சர்வ ரோஹ நிவாரணி என்ற பாண்யில் எழுதுபவர்கள் இவர்களே.
    இவர்களால எதிர்காலத்தில் எந்த மாதிரி தேசியம் முன்னெடுக்கப் படப் போகிறது என்பதை கனவனிக்க வேண்டும்.நிச்சயமாக இந்திய தேசியமாக இருக்காது என்பது என் கணிப்பு.

  28. விவாதிக்க வேண்டிய பொருளை விட்டு விட்டு வாதங்கள் எங்கோ செல்கின்றன. ஒருவன் மாற்று மதம் தழுவும்போது அவனது தேச பக்தி மாறுமா? இதுதான் அலச வேண்டிய பொருள்.
    நிச்சயமாக மாறுவதற்கு சாத்திய கூறுகள் அதிகம் .
    எடுத்துகாட்டாக ஒன்று.
    உலகெல்லாம் தீவிரவாதியாக அறியப்பட்ட ஒருவன் மரணிக்கும் போது, அவன் பிறந்த நாட்டிலேயே அவனுக்காக சிறப்பு தொழுகைகள் நடத்தப்பட்டதாக செய்திகள் வரவில்லை. ஆனால் இங்கு இருக்கும், சென்னையிலும் மும்பையிலும் அவனுக்காக சிறப்பு பிராத்தனைகள் நடைபெற்றதாக அறியும் போது, மனம் கவலை கொள்கிறது. அங்கே தேசிய உணர்வோ, கொடுஞ்செயல்களில் உயிர் நீத்த நம் சகோதர சகோதரிகளின் வேதனைகளோ நினைவுக்கு வரவில்லை. மாறாக மதம் தான் முன்னணியில் நிற்கிறது ,இதுதான் நமது வேதனை .
    இந்திய பாகிஸ்தான் கிரிக்கெட் ல் பாகிஸ்தான் வெல்லும் போது இங்கே நமது பக்கத்துக்கு தெரு பசங்கள் பட்டாசு வெடித்து கொண்டாடும் வரை இந்த சந்தேகம் இருந்துகொண்டுதான் இருக்கும்.

    • நல்ல பாயிண்டு பாஸு. அதே மாதிரி ஊரெல்லாம் இன அழிப்பு செய்ததாக அறியப்பட்ட மோடி சென்னைக்கு வந்து கைய நனைச்சிட்டு போறதையும், பதவியேற்பு விழாவுல கலந்துட்டு அரசு மரியாதையோட போறதையும் பாத்துட்டு தான இருக்கீங்க. அத மட்டும் எப்படி பாஸு நைசா மறந்து போறீங்க??

    • இந்திய பாகிஸ்தான் கிரிக்கெட் ல் பாகிஸ்தான் வெல்லும் போது இங்கே நமது பக்கத்துக்கு தெரு பசங்கள் பட்டாசு வெடித்து கொண்டாடும் வரை இந்த சந்தேகம் இருந்துகொண்டுதான் இருக்கும்….
      இந்தியாவை பாகிஸ்தான் கிரிக்கெட்டில் வென்று வெகு காலம் ஆகிறது நீங்கள் எந்த இடத்தில் முஸ்லிம்கள் பட்டாசு வெடித்து பார்த்தீர்கள் ஐயா?

    • ஒருவன் அதே மதத்தில் இருந்தால் தேசபற்று கொந்தளிக்குமோ .. தேசப்பற்று மாறுவதற்கும், மாறாததற்கும் அவனவன் மனநிலையைப் பொறுத்தே..ஒரு முஸ்லிம் தேசத் துரோகியாக இருக்க வேண்டியதும் இல்லை. ஒரு இந்து தேசப்பற்றாளானாக இருக்க வேண்டியதும் இல்லை. எதுவும் நடக்கலாம். மதம் ஒரு factor என்பதை ஏற்கமுடியாது. ஒரு முஸ்லிம் தேசத் துரோகியாக இருக்கின்றான் எனில் – இந்த நாடு அவனை கைவிட்டுள்ளது. அதே போல இந்த நாட்டின் தேசப்பற்றூட்டல் பொய்த்துள்ளது அல்லது குறைப்பாடுள்ளதாக உள்ளது என்பேன்.

    • தோழரின் கருத்துக்கும், உணர்வுக்கும் மதிப்பளிக்கும் அதே நேரத்தில் இஸ்லாமியர்களின் நிலைப்பாட்டை தெளிவு படுத்தவும் எண்ணுகிறேன். இறந்த பின் ஒருவருக்கு அளிக்கப்படும் மரண தொழுகையை பற்றி தாங்கள் கூறவருகிறீர்கள் என்று எண்ணுகிறேன். இறந்த பின் அவன் ஒரு சடலம் மேலும் பெயரிட்டு கூட நாம் கூப்பிடுவது கிடையாது. அந்த சவத்திட்க்கு அளிக்கப்படும் மரியாதையாகத்தான் கொள்ள வேண்டுமே தவிர அந்த மனிதருக்கல்ல. மேலும் இறந்தவரின் உண்மை நிலையை அறிந்து படைத்த இறைவன் நிச்சயமாக நல்லதொரு தண்டனையை நரகத்தில் வழங்குவார் என்பதுதான் என்பதுதான் இஸ்லாமியர்களின் நிலைப்பாடு. இறந்தவர் யாராக இருப்பினும் அவருக்கான மரியாதை செய்யப்பட வேண்டும் என்பதுதான் நபிகளாரின் கற்பித்தல். கிரிக்கெட் விளையாட்டு விஷயத்தில் , விளையாட்டை விளையாட்டாக பார்க்காததால் நேர்ந்த தவறாகவே என்னமுடிஉம். யார் நன்றாக விளையாண்டாலும் பாராட்டுவது தான் ஆரோக்கியமான் விஷயம்.

  29. அரசு கட்டு பாடிலோ அல்லது சங்க கட்டுபடிலோ உள்ள எந்த கோயிலிலும் யார் வேண்டுமானாலும் கோயில் சென்று வழி படலாம். வைதிக முறைப்படி எழுப்ப பட்ட கோயில்களில் கருவறையில் அந்தணர்கள் (I didnt mean jathi) மட்டுமே அனுமதிக்க இயலும். வேறு யாரும் அனுமதிப்பது கிடையாது. இது என்ன ஜாதி வெறி? என்று நீங்கள் கேட்கலாம். உங்களை பொறுத்தவரை அது கல். அந்த கல் பக்கத்தில் போவதில் என்ன பெரிய விஷயம்? சரி அந்த கல் தெய்வம் என்று நினைப்பவன் ஏன் செல்ல கூடாது என்று நீங்கள் கேட்டால், அதற்க்கு ஏன் பதில், முறையாக அந்த வைதிக முறை படி படித்து அதன் படி புல்லால் உண்ணாமல், அந்த வைதிக முறைப்படி (உங்கள் மொழியில் ஆரிய கடவுளை ஆரிய முறைப்படி) வாழ்ந்து வந்தால் மட்டுமே கருவறையில் அனுமதிக்க பட முடியும். எல்லா துறையிலும் எல்லா மதத்திலும் இருப்பது போன்று ஹிந்து மதத்திலும் சில அறிவு கேட்ட கபோதிகள் இருக்க தான் செய்கிறார்கள். இதற்காக ஒட்டு மொத்த மக்களையும் குறை சொல்வது. ஒரு கம்யூனிஸ்ட் கட்சி காரன் கொள்ளை அடித்தான் என்பதற்காக எல்லோரையும் கொள்ளையர்கள் என்று கூறுவது போல் இருக்கும்.

  30. இந்து மதம் என்பதில் பல குறைகள் இருந்தன,பலர் போராடி மாற்றினர்.இன்னும் உயர் சாதியினர் ஆதிக்கம் இருப்பதும் உண்மைதான்.அதற்காக எந்த தாழ்த்தப்பட்ட இனத்தினரும் 1) இந்திய 2) தமிழ் 3)தேசிய உணர்வு அற்றவர் இந்த மூன்று கொள்கைகளில் ஒன்றில் மட்டுமே இருப்பார்.தமிழ் தேசியவாதி வெளிப்படையாக இந்திய தேசியத்திற்கு எதிரானவன் என்று சொல்லி விடுவார்.தமிழர்களில்(மத வேறுபாடின்றி) பல்ர் ஐ.பி.எல்,மானாட மயிலாட,திரைப்படம் என்ற தேசிய உணர்வில் இருப்பதும் அனைவரும் அறிந்ததே.

    சவுதியில் இருந்து மத பிரச்சாரம் செய்யும் கொள்கையாளர்களுக்கே இக்கேள்விகள்.அவர்கள் பதிவுகளை படித்துப் பாருங்கள்.இக்கேள்விகள் தவிர்க்க முடியாது.

    1.ஆனால் தீவிர மதக் கொள்கையான உலகளாவிய இஸ்லாமிய அர்சு என்ற கொள்கை சவுதியில் இருந்து பிரச்சாரம் செய்யப் படுகின்றது.இது இந்திய தேசியத்திற்கு எதிரானதா இல்லையா?

    2. மத ச்சட்டமே அனைத்து சட்டங்களைவிட உயர்ந்தது என்பது இந்திய தேசியத்திற்கு எதிரானதா இல்லையா?

    3. ஒருவர் புதிதாக இஸ்லாமியர் சவுதி சென்று மாறுகிறார் என்றால் அவர் உலகளாவிய இஸ்லாமிய அரசு அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டால்
    அது அமைதிவழி என்றால் கூட இந்திய தேசியத்திற்கு எதிராக இருக்கும் வாய்ப்பு அதிகம்.

  31. //இங்கு கூட ஒருவர் அனைத்து நாட்டவருக்கும் இமாமாக தொழுகை நடத்தியதை பெருமையாக குறிப்பிட்டார்.//

    ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’, ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ என்ற பழமொழிகள் வெறும் வாயளவில் இல்லாமல் செயல்படுத்தப் பட்டது ஒரு தமிழன் என்ற வகையில் நமக்கெல்லாம் பெருமையல்லவா!

    //இவர்களால எதிர்காலத்தில் எந்த மாதிரி தேசியம் முன்னெடுக்கப் படப் போகிறது என்பதை கனவனிக்க வேண்டும்.நிச்சயமாக இந்திய தேசியமாக இருக்காது என்பது என் கணிப்பு.//

    நான் மதத்தால் இஸ்லாமியனாக இருந்தாலும் பிறப்பால் நான் ஒரு திராவிடன். இன்னும் எத்தனை தலைமுறை சென்றாலும் நான் தமிழனே! அதற்க்கடுத்து இந்தியனே! என்னை பெற்றெடுத்த பெற்றோரை சுகமாக வாழ வைக்கும் என் நாடு. எனக்கு சிறந்த கல்வியைக் கொடுத்த என்நாடு. என் பிள்ளைகளுக்கும் சிறந்த கல்வி கொடுத்துக் கொண்டிருக்கும் என் நாடு. இவ்வளவு சிறப்புகளை தந்து கொண்டிருக்கும் என் நாட்டின் முன்னேற்றத்தில் என்னை விட யார் சார் சந்தோஷப்பட முடியும்? யாரோ ஆட்சியில் அமர இந்துக்களை ஒன்றாக்குவதற்காக ‘முஸ்லிம்கள் இந்நாட்டுக்கு விசுவாசமாக இருக்கமாட்டார்கள்’ என்று எவனோ கூறுவதை முஸ்லிம்களான நாங்கள் சட்டை செய்வதில்லை. உண்மையை உணர்ந்த இந்து நண்பர்கள் எங்களிடம் அதே சகோதர பாசத்தோடுதான் இன்று வரை பழகி வருகிறார்கள்.

    ஒரு நரேந்திர மோடிக்காகவோ, ஒரு அத்வானிக்காகவோ, ஒரு சோ ராமசாமிக்காகவோ நாங்கள் இந்தியாவை வெறுக்கப் போவதில்லை. இந்த கயவர்களை எப்படி சமாளிப்பது என்பதும் முஸ்லிம்களாகிய எங்களுக்கு தெரியும். எனவே இந்திய தேசியத்தைப் பற்றி கவலை வேண்டாம். அது இருந்த இடத்திலேயேதான் இருக்கும். அதற்கு பங்கம் வராமல்தான் முஸ்லிம்கள் தங்களின் வாழ்க்கையை அமைத்துக் கொள்வார்கள்.

    அடுத்து ‘இந்திய தேசியம்’ என்றால் என்ன? அதன் சட்டதிட்டங்கள் என்ன? என்று கூறினால் பலரும் தெரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும். நானும் அதற்கு பங்கம் வராமல் நடந்து கொள்ள முயற்ச்சிப்பேன்.

  32. நம் முன்னுள்ள கேள்வி ஒருவருக்கு மதம் மாறும் உரிமை பற்றியது.
    சுயமாக மதம் மாறுவது ஒருவரது சனநாயகத் தெரிவு.
    அதை மறுப்பது பாசிசச் சிந்தனை.

    அதற்கப்பால், பிற மத ஆதிக்கம் உள்ள சில நாடுகளில் நடப்பதை வைத்து, இந்தியாவில் எழும் பாசிசப் போக்கை நியாயப்படுத்த முடியுமா?

    எந்த மதமும் மனித விடுதலைக்கு உதவப் போவதில்லை. ஆனால், குறிப்பாகப் பிற்படுத்தப்பட்ட நாடுகளில், மனிதர் மதங்களை நாடுகின்றனர்.
    மக்கள் விடுதலையும் சமூகம் உயர்வும் பெறும் போது மதங்கள் விழுந்து விடும்.

    இந்துக்கள் எனப்படுவோர் ஏன் மதம் மாறுகின்றனர் என்பதை “இந்துப்” பற்றாளர்கள் நேர்மையாகச் சிந்திப்பது நல்லது.

  33. பின்ணூட்டம் இட்டோரெல்லாம் வார்த்தைக்கு 5 ரூபாய் வீதம் நண்கொடை செலுத்திவிட வேண்டும் என்று ரூல் போட்டால் பாதி வெட்டிப் பேச்சு வீணர்கள் திண்ணையை காலி செய்து விடுவார்கள்,,,,

  34. /உங்க காமெடிக்கு அளவே இல்லை போங்கள். எங்களையே எங்களால் காப்பற்றி கொள்ளே முடியவில்லை. இந்த லட்சணத்தில் நாங்கள் எப்படி மற்றவர்களை காப்பாற்றுவது/ இது எப்படி இருக்கு தெரியுமா, பிச்சைகாரனிடம் பிச்சை கேட்பது போன்று உள்ளது.

    எங்கள் கோயில்கள் எல்லாம் அரசாங்கம் எடுத்து கொண்டு அடாவடி செய்து கொண்டு இருக்கிறது, அதை திரும்ப வாங்கவே எங்களுக்கு வக்கு இல்லை. அவ்வளவு ஏன், இந்த பரந்த தமிழ் நாட்டில் எத்தனையோ இடங்களில் இருக்க, ஸ்ரீரங்கம் கோயில் வாசலில் தான் பெரியார் சிலை வைப்பேன் என்று ஒரு மதம் சார்ந்த கோயில் முன்பு அந்த மதத்தை வெறுத்த பெரியார் சிலை வைத்ததற்கே எங்களால் ethuvum செய்ய முடியவில்லை.
    இந்த லட்சணத்தில் நாங்கள் எங்கு போய் இலங்கை தமிழரை காப்பது. இருப்பினும், இந்த விஷயத்தை நாடாளுமன்றத்தில் பிஜேபி பல முறை இது குறித்து வாதிட்டது. பிஜேபி ஆட்சி செய்த பொழுது இந்தியாவின் நிலை என்ன என்பது நான் சொல்லி தெரிய வில்லை.//

    உங்களின் இந்த கையாளாக தனத்தை வெளிபடையாக சொன்னதற்கு நன்றி. இங்கு நீங்கள் சொன்னதை தான் நான் எனது மறுமொழியில் தெளிவாக கூறிவிட்டேன். இலங்கை தமிழர்கள் இந்துகளாக இருக்கும் வரை அவர்களுக்கு நிச்சயம் எந்த விடிவும் கிடைகாது. அவர்களின் நியாயமான போராட்டத்திற்கு எந்த ஆதரவும் கிடைக்காது. நாதி இல்லாத மக்களாக தான் அவர்கள் மடிவார்கள். பா.ஜ.கா எதனை முறை பாராளுமன்றத்தில் இதற்காக பலமான குரல் கொடுத்தது என்று சொல்ல முடியுமா ஏதோ ஒட்டு பொறுக்கி அரசியல் தனத்திற்காக ஒன்று இரண்டு முறை ஒப்புக்கு சப்பாணி என்பது போல கும்பலில் கோவிந்தா கோஷம் போடுவது போல நாங்களும் குரல் கொடுத்தோம் எங்கள் கடமை முடிந்து விட்டது என்பது போல் ஒரு மேம்பூச்சு செய்தது. இதே இந்நேரம் அயோத்தியில் இருக்கும் சர்ச்சைக்குரிய இடம் முஸ்லிம்களுக்கு தான் சொந்தம் என்று ஒரு தீர்மானம் போடட்டுமே இந்த பா.ஜ.க பாராளுமன்றத்தில் செய்யும் அமளி துமளிகள் அதிர்வேட்டுகள் பாராளுமன்றத்தையே நடத்தவிடாமல் முடக்குவது போன்ற அணைத்து நாதாரி தனங்களையும் அரங்கேற்றும். கேவலம் ஒரு நிலத்துக்காக செய்யும் ஆர்பாட்டத்தில் கொஞ்சமாவது இலங்கையில் செத்து கொண்டு இருக்கும் உயிர்களுக்கு ஏன் செய்யவில்லை. ஏன் அவர்களும் நீங்கள் கும்பிடும் அதே கல்லை தானே வழிபடுகிறார்கள் அதற்காகவாவது ஒரு மாபெரும் கண்டன தீர்மானத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றி இருக்கலாமே. இலங்கையில் இருக்கும் தமிழர்களின் மீது நடக்கும் யுத்தம் நிறுத்தப்படும்வரை பாராளுமன்றத்தை நடத்தவிடாமல் முடக்கவேண்டியது தானே. போரை நடத்தியதே இந்தியா தானே. சும்மா இங்கு வந்து என்னிடம் பி.ஜே.பி யை பற்றி ஜல்லி அடிக்க வேண்டாம்.

    //அப்படி என்றால் கிறித்துவ மக்களுக்கு மட்டும் தான் கிருத்துவர்கள் போராடுவார்களா? அப்படி என்றால் நீங்கள் என்ன சொல்லே வருகிறீர்கள். இதன் உள்நோக்கம் என்ன என்பது படித்தவர்கள் புரிந்து கொள்ளே வேண்டும். உங்கள் திருவாய் மலர்ந்து இப்படி உண்மையை உரைத்ததற்கு நன்றி.//

    எப்ப்பா……..எவ்வளவு பெரிய உண்மைய கண்டுபிடிச்சிட்டாரு. தன் மதத்தை சேர்ந்தவன் துன்பப்படும் பொழுது அந்த மதத்தை சேர்ந்தவன் தான் அதற்காக போராடுவான் .அதே போல் தன் இனத்தை சேர்ந்தவன் துன்பப்படும் பொழுது அந்த குறிப்பிட்ட இனத்தை சேர்ந்தவன் தான் அதற்காக போராடுவான். இது தான் இயற்கையும் கூட. //அப்படி என்றால் கிறித்துவ மக்களுக்கு மட்டும் தான் கிருத்துவர்கள் போராடுவார்களா?//இதை சொல்ல உங்களுக்கு எந்த யோக்யதையும் கிடையாது. இவ்வுளவு சொல்லும் நீங்கள் கந்தமால் மாவட்டத்திலும் குஜராத்திலும் கிறித்துவ சிறுபான்மை மக்களுக்கு எதிராக வன்முறையை கட்டவிழ்த்து விட்ட இந்துத்துவா வெறிநாய்களை (ஆதாரத்திற்கு இதோ: https://www.vinavu.com/2008/10/20/btsouth/) கண்டித்து நீங்கள் போராட்டம் நடத்த வேண்டியது தானே. அப்பாவி மக்களையும் கிறித்துவ கண்ணியாஸ்திரிகளையும் கற்பழித்த வெறி பிடித்த இந்துத்துவா மிருகங்களை கண்டித்து நீங்கள் (இந்துகள்) கூடி ” அடே வெறி பிடித்த இந்துத்துவா நாய்களே இந்து மதம் என்பது சாத்வீக மதம்டா இந்த மதத்தின் பெயரை சொல்லி அப்பாவி மக்களை அவர்கள் வேறு மதம் என்பதற்காக தாக்காதே. பெண்களை மான பங்க படுத்தாதே” என்று கோஷம் எழுப்பி அந்த வன்முறையை கடுமையாக கண்டித்து இருக்கலாமே . அவ்வளவு ஏன் பாபர் மசூதி வழக்கில் பெருந்தன்மையாக அந்த பாபர் மசூதி இருந்த இடத்தை நீங்கள் விட்டு கொடுத்திருக்க வேண்டியது தானே. அதான் சனாதன தர்மத்தில் வேத நெறியில் கூறி இருக்கிறதே கடவுள் எங்கும் இருக்கிறான் தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் கல்லிலும் இருப்பான் மண்ணிலும் இருப்பான் சாணியிலும் இருப்பான் சளியிலும் இருப்பான் என்று. அப்புறம் என்ன அந்த இடத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைத்து விட வேண்டியது தானே. எங்கும் இருக்கும் கடவுள் அவர்கள் கட்ட போகும் மசூதியில் மட்டும் இல்லாமலா போய் விட போகிறான். அதில் மட்டும் உங்கள் மத உரிமையை விட்டு குடுக்க கூடாது என்று போராடுகிறீர்கள்.நீங்கள் போராடலாம் அனால் கிருத்துவர்கள் தங்கள் மதத்தை சேர்ந்த மக்களுக்காக போராட வர கூடாதா. நல்ல இருக்கே உங்க நியாயம். இந்துத்துவா நாய்கள் ஒரிசா, குஜராத்,கர்நாடக ஆகிய மாநிலங்களில் செய்த அட்டுழியதிர்க்கு ஆதாரம் இதோ : https://www.vinavu.com/2008/10/20/btsouth/.

    //இது என்ன காமெடி. அப்படி என்றால் போரில் வேறு எந்த மதத்தை சார்ந்தவரும் இறக்க வில்லையா? அப்படி என்றால் இவர்கள் அனைவரும் மதம் மாறினால் அவர்களை சமந்தப்பட்ட மதக்கடவுள் காப்பாற்றுவாரா?

    அப்படி என்றால் கடவுள் எப்பொழுதும் மனிதனை காப்பாற்றி கொண்டும், அவன் கேட்டதை எல்லாம் கொடுத்து கொண்டும் இருக்க வேண்டுமா?//

    நண்பரே இது தான் மொள்ளமாரி தனம்ங்க்றது நான் என்ன சொன்னேன்

    //அவர்கள்(தமிழர்கள்) வழிபட்ட தெய்வங்களான முருகன் சிவன் பிள்ளையார் என்று ஒன்னுத்துக்கும் உதவாத கற்சிலைகள் தான் அவர்களை காப்பாற்ற வரவில்லை ஏனய்யா இந்து கலாசார காப்பாளர்கள் என்று கூறி கொள்வோரே ஏன் நீங்கள் தான் இந்தியாவில் இருக்கும் 80 கோடி இந்துக்களையும் ஒன்றிணைத்து காப்பற்றி இருக்க வேண்டியது தானே//

    அது என்ன தெளிவா முதலில் சொன்ன மூணு வரியா மட்டும் சொல்லிட்டு அப்பரம் பின்னாடி வர மூணு வரிய விட்டுடீங்க. அதான் இந்த இந்துமத கடவுள்னு சொல்ல்ற கற்சிலை தான் ஒன்னும் புடுங்கல நீங்களாவது காப்பாத்தி இருக்கவேண்டியதுதானே சொன்னேன்.இதுல என்ன தப்பு. இதுவே அவங்க கிறித்துவ மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தால் ஏசுநாதர் அவர்களை காக்க வரவில்லை என்றாலும் மேற்குலக கிறித்துவ நாடுகளோ அல்லது வாடிகன் தலைமை பீடமோ தங்கள் மக்களுக்கு நடக்கும் அநிதியை பார்த்து கொண்டு சும்மா இருக்காது. சிங்கள நாய்களை நார் நாராக கிழித்து எரிந்திருக்கும். அதனால் தான் அங்கு இருக்கும் தமிழ் பேசும் முஸ்லிம்கள் மீது மட்டும் போரின் பொது கைவைக்க வில்லை . மீறி கைவைத்தால் இலங்கையின் நிலை என்ன ஆகும் என்பது சிங்கள நாய்களுக்கு தெரியும். அமாம் காப்பாற்றினால் தான் கடவுள் நாங்க என்ன அநியாயம் செஞ்சுட்டு வந்தா காப்பாத்துன்னுநா கேக்குறோம். நியாயமான போராட்டம் எங்கள் உரிமைகளை மீட்டுஎடுக்கும் போராட்டம் இதற்க்கு உதவ வில்லை என்றால் வேறு எதற்கு வந்து உதவுவாரம் .ராஜபட்சே திருப்பதியில் செய்த பிரார்த்தனைக்கு போய் காப்பாற்றுவார கடவுள். இந்த கடவுள் என்னும் கேடுகெட்ட கற்சிலைகளும் காப்பாற்றாது நீங்களும்(இந்துக்களும்) காக்க வர மாட்டீர்கள் அனால் கடைசி வரை எதுக்கும் லாயக்கு இல்லாத இந்து மதத்தை பிடித்து தொங்கி கொண்டு இருக்க வேண்டும். அப்படிதானே.

    //சும்மா எதுவுமே தெரியாத மாதிரி பேசக் கூடாது, கோயில் பொது இடம். அங்கு யார் வேண்டுமானாலும் போகலாம். அவர் புத்த மதத்தை சேர்ந்தவர் என்பதால் மற்ற அப்ரகமிய மதத்தவர்களுக்கு இருக்கும் மன சஞ்சலமும் அவருக்கு இல்லை. என்ன இருந்தாலும் அவர் ஒரு நாட்டின் அதிபர், அவருக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கோயில் அரசு நிர்வாகிகள் கொடுத்து தான் ஆகா வேண்டும். இது குறித்து இந்து மக்கள் கட்சி கடும் கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்தியதை இங்கு நினைவு கொள்கிறேன்.//

    இப்படி வெளிய போய் சொல்லிடாதீங்க சத்யமா கல்லால அடிப்பாங்க உங்கள இல்ல பெருமாள. அவன் என்ன புத்த மதம் அதனால் கோவிலிற்குள் விட கூடாது என்றா சொன்னேன். ஒரு பெண் மாசத்தில் குறிப்பட்ட அந்த மூணு நாள் கோவிலுக்குள் நுழைய கூடாது அந்த மாதவிடாய் ரத்தத்தோடு வந்தால் கோயில் தீட்டு ஆகிவிடும் என்று சொல்லும் நீங்கள் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட உயிர்களை அதுவும் பெருமாளின் பிள்ளைகளான இந்து தமிழர்களை துடிக்க துடிக்க கொன்று விட்டு வந்து அந்த குருதி படிந்த கையோடு வந்து இருக்கிறான் அந்த சண்டாளனை ஆலயத்திற்குள் விடகூடாது என்று சொன்னால் நீங்கள் வேறு எங்கோ போகிறீர்கள். ஒன்னு சொல்லாட இதே ராஜபட்சே அதிபராக இருக்கும் போதுதான் லண்டன் நகரில் இருக்கும் ஒக்ஸ்போர்ட்(oxford) பல்கலைகழகத்தில் சிறப்புரையாற்ற சென்றான் அப்போது அங்கு இருக்கும் தமிழர்களின் திரளான போராட்டத்தை பார்த்து அவர்கள் பக்கம் இருக்கும் நியாயத்தை உணர்ந்து அந்த மிருகத்தின் நிகழ்ச்சியை இரத்து செய்தது. ஒக்ஸ்போர்ட் பல்கலைகழகம் என்ன பொது இடம் தானே. அவனை ஒரு நாட்டின் அதிபர் என்று பார்த்தார்களா.அவர்களை பொறுத்த வரை அவன் ஒரு போர்க்குற்றவாளி. ஒரு போற்குற்றவாளிக்கு இந்த பெருமையான அரங்கில் பேச அனுமதி இல்லை என்று முகத்தில் அடித்தது போல் விரட்டி விட்டர்களே மேலும் இங்கிலாந்த் அரசு அவன் மீது போர்குற்ற நடவடிக்கை எடுத்து கைது செய்யும் தருவாயில் அவன் சொல்லாமல் கொள்ளாமல் ஓடிவந்துவிட்டான். இனி அவன் எந்த காலத்திலும் எந்த ஐரோப்பிய நாடுகளுக்கும் செல்ல முடியாது. அதனால் தான் மீண்டும் அவன் இங்கிலாந்து போக முயற்சிக்கவில்லை. அதற்கு ஆதாரம்:http://www.sify.com/news/rajapaksa-s-london-speech-cancelled-over-protests-news-international-kmbxOcdadhb.html இதில் பார்க்கலாம் . உங்களுக்கு கொஞ்சமாவது சிந்திக்கும் திறன் இருந்தால் நான் சொன்னதில் என்ன நியாயத்திற்கு எதிரான விஷயம் இருக்கிறது என்று சிந்தித்து பாருங்கள்.

  35. // கிறித்துவ மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தால் ஏசுநாதர் அவர்களை காக்க வரவில்லை என்றாலும் மேற்குலக கிறித்துவ நாடுகளோ அல்லது வாடிகன் தலைமை பீடமோ தங்கள் மக்களுக்கு நடக்கும் அநிதியை பார்த்து கொண்டு சும்மா இருக்காது.//

    உண்மை எனப் படுகின்றது .. கிழக்குத் தீமூருக்கும், தென் சூடானுக்கு விடுதலை வாங்கிக் கொடுக்கப்பட்டதும் இவ்வாறே என நினைக்கின்றேன். அவர்கள் முஸ்லிம் நாடுகளாக பொஸ்னியாவுக்கும், கொசோவோக்கு கூட விடுதலை வாங்கி கொடுத்துள்ளார்கள். நம் இந்துக்கள் மட்டும் தான் வாயால் ஈழம் வாங்கிக் கொடுத்துள்ளோம் .. ஈழத் தமிழர்கள் கொல்லப்படும் போது இந்து என்ற ரீதியாவில் நம் இந்துக்கள் ஒன்றும் செய்யவில்லை,. தமிழர்கள் என்ற ரீதியில் நாமும் ஒன்றும் செய்யவில்லை ..

    தங்களின் பதில்கள் நியாயமான பதில் சகோ …

  36. திரு . சோலன்…

    //உங்க காமெடிக்கு அளவே இல்லை போங்கள். எங்களையே எங்களால் காப்பற்றி கொள்ளே முடியவில்லை. இந்த லட்சணத்தில் நாங்கள் எப்படி மற்றவர்களை காப்பாற்றுவது/ இது எப்படி இருக்கு தெரியுமா, பிச்சைகாரனிடம் பிச்சை கேட்பது போன்று உள்ளது.

    எங்கள் கோயில்கள் எல்லாம் அரசாங்கம் எடுத்து கொண்டு அடாவடி செய்து கொண்டு இருக்கிறது, அதை திரும்ப வாங்கவே எங்களுக்கு வக்கு இல்லை. அவ்வளவு ஏன், இந்த பரந்த தமிழ் நாட்டில் எத்தனையோ இடங்களில் இருக்க, ஸ்ரீரங்கம் கோயில் வாசலில் தான் பெரியார் சிலை வைப்பேன் என்று ஒரு மதம் சார்ந்த கோயில் முன்பு அந்த மதத்தை வெறுத்த பெரியார் சிலை வைத்ததற்கே எங்களால் ethuvum செய்ய முடியவில்லை.
    இந்த லட்சணத்தில் நாங்கள் எங்கு போய் இலங்கை தமிழரை காப்பது. இருப்பினும், இந்த விஷயத்தை நாடாளுமன்றத்தில் பிஜேபி பல முறை இது குறித்து வாதிட்டது. பிஜேபி ஆட்சி செய்த பொழுது இந்தியாவின் நிலை என்ன என்பது நான் சொல்லி தெரிய வில்லை.//

    உங்களின் இந்த கையாளாக தனத்தை வெளிபடையாக சொன்னதற்கு நன்றி. இங்கு நீங்கள் சொன்னதை தான் நான் எனது மறுமொழியில் தெளிவாக கூறிவிட்டேன். இலங்கை தமிழர்கள் இந்துகளாக இருக்கும் வரை அவர்களுக்கு நிச்சயம் எந்த விடிவும் கிடைகாது. அவர்களின் நியாயமான போராட்டத்திற்கு எந்த ஆதரவும் கிடைக்காது. நாதி இல்லாத மக்களாக தான் அவர்கள் மடிவார்கள். பா.ஜ.கா எதனை முறை பாராளுமன்றத்தில் இதற்காக பலமான குரல் கொடுத்தது என்று சொல்ல முடியுமா ஏதோ ஒட்டு பொறுக்கி அரசியல் தனத்திற்காக ஒன்று இரண்டு முறை ஒப்புக்கு சப்பாணி என்பது போல கும்பலில் கோவிந்தா கோஷம் போடுவது போல நாங்களும் குரல் கொடுத்தோம் எங்கள் கடமை முடிந்து விட்டது என்பது போல் ஒரு மேம்பூச்சு செய்தது. இதே இந்நேரம் அயோத்தியில் இருக்கும் சர்ச்சைக்குரிய இடம் முஸ்லிம்களுக்கு தான் சொந்தம் என்று ஒரு தீர்மானம் போடட்டுமே இந்த பா.ஜ.க பாராளுமன்றத்தில் செய்யும் அமளி துமளிகள் அதிர்வேட்டுகள் பாராளுமன்றத்தையே நடத்தவிடாமல் முடக்குவது போன்ற அணைத்து நாதாரி தனங்களையும் அரங்கேற்றும். கேவலம் ஒரு நிலத்துக்காக செய்யும் ஆர்பாட்டத்தில் கொஞ்சமாவது இலங்கையில் செத்து கொண்டு இருக்கும் உயிர்களுக்கு ஏன் செய்யவில்லை. ஏன் அவர்களும் நீங்கள் கும்பிடும் அதே கல்லை தானே வழிபடுகிறார்கள் அதற்காகவாவது ஒரு மாபெரும் கண்டன தீர்மானத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றி இருக்கலாமே. இலங்கையில் இருக்கும் தமிழர்களின் மீது நடக்கும் யுத்தம் நிறுத்தப்படும்வரை பாராளுமன்றத்தை நடத்தவிடாமல் முடக்கவேண்டியது தானே. போரை நடத்தியதே இந்தியா தானே. சும்மா இங்கு வந்து என்னிடம் பி.ஜே.பி யை பற்றி ஜல்லி அடிக்க வேண்டாம்.

    //அப்படி என்றால் கிறித்துவ மக்களுக்கு மட்டும் தான் கிருத்துவர்கள் போராடுவார்களா? அப்படி என்றால் நீங்கள் என்ன சொல்லே வருகிறீர்கள். இதன் உள்நோக்கம் என்ன என்பது படித்தவர்கள் புரிந்து கொள்ளே வேண்டும். உங்கள் திருவாய் மலர்ந்து இப்படி உண்மையை உரைத்ததற்கு நன்றி.//

    எப்ப்பா……..எவ்வளவு பெரிய உண்மைய கண்டுபிடிச்சிட்டாரு. தன் மதத்தை சேர்ந்தவன் துன்பப்படும் பொழுது அந்த மதத்தை சேர்ந்தவன் தான் அதற்காக போராடுவான் .அதே போல் தன் இனத்தை சேர்ந்தவன் துன்பப்படும் பொழுது அந்த குறிப்பிட்ட இனத்தை சேர்ந்தவன் தான் அதற்காக போராடுவான். இது தான் இயற்கையும் கூட. //அப்படி என்றால் கிறித்துவ மக்களுக்கு மட்டும் தான் கிருத்துவர்கள் போராடுவார்களா?//இதை சொல்ல உங்களுக்கு எந்த யோக்யதையும் கிடையாது. இவ்வுளவு சொல்லும் நீங்கள் கந்தமால் மாவட்டத்திலும் குஜராத்திலும் கிறித்துவ சிறுபான்மை மக்களுக்கு எதிராக வன்முறையை கட்டவிழ்த்து விட்ட இந்துத்துவா வெறிநாய்களை (ஆதாரத்திற்கு இதோ: https://www.vinavu.com/2008/10/20/btsouth/) கண்டித்து நீங்கள் போராட்டம் நடத்த வேண்டியது தானே. அப்பாவி மக்களையும் கிறித்துவ கண்ணியாஸ்திரிகளையும் கற்பழித்த வெறி பிடித்த இந்துத்துவா மிருகங்களை கண்டித்து நீங்கள் (இந்துகள்) கூடி ” அடே வெறி பிடித்த இந்துத்துவா நாய்களே இந்து மதம் என்பது சாத்வீக மதம்டா இந்த மதத்தின் பெயரை சொல்லி அப்பாவி மக்களை அவர்கள் வேறு மதம் என்பதற்காக தாக்காதே. பெண்களை மான பங்க படுத்தாதே” என்று கோஷம் எழுப்பி அந்த வன்முறையை கடுமையாக கண்டித்து இருக்கலாமே . அவ்வளவு ஏன் பாபர் மசூதி வழக்கில் பெருந்தன்மையாக அந்த பாபர் மசூதி இருந்த இடத்தை நீங்கள் விட்டு கொடுத்திருக்க வேண்டியது தானே. அதான் சனாதன தர்மத்தில் வேத நெறியில் கூறி இருக்கிறதே கடவுள் எங்கும் இருக்கிறான் தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் கல்லிலும் இருப்பான் மண்ணிலும் இருப்பான் சாணியிலும் இருப்பான் சளியிலும் இருப்பான் என்று. அப்புறம் என்ன அந்த இடத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைத்து விட வேண்டியது தானே. எங்கும் இருக்கும் கடவுள் அவர்கள் கட்ட போகும் மசூதியில் மட்டும் இல்லாமலா போய் விட போகிறான். அதில் மட்டும் உங்கள் மத உரிமையை விட்டு குடுக்க கூடாது என்று போராடுகிறீர்கள்.நீங்கள் போராடலாம் அனால் கிருத்துவர்கள் தங்கள் மதத்தை சேர்ந்த மக்களுக்காக போராட வர கூடாதா. நல்ல இருக்கே உங்க நியாயம். இந்துத்துவா நாய்கள் ஒரிசா, குஜராத்,கர்நாடக ஆகிய மாநிலங்களில் செய்த அட்டுழியதிர்க்கு ஆதாரம் இதோ : https://www.vinavu.com/2008/10/20/btsouth/.

    //இது என்ன காமெடி. அப்படி என்றால் போரில் வேறு எந்த மதத்தை சார்ந்தவரும் இறக்க வில்லையா? அப்படி என்றால் இவர்கள் அனைவரும் மதம் மாறினால் அவர்களை சமந்தப்பட்ட மதக்கடவுள் காப்பாற்றுவாரா?

    அப்படி என்றால் கடவுள் எப்பொழுதும் மனிதனை காப்பாற்றி கொண்டும், அவன் கேட்டதை எல்லாம் கொடுத்து கொண்டும் இருக்க வேண்டுமா?//

    நண்பரே இது தான் மொள்ளமாரி தனம்ங்க்றது நான் என்ன சொன்னேன்

    //அவர்கள்(தமிழர்கள்) வழிபட்ட தெய்வங்களான முருகன் சிவன் பிள்ளையார் என்று ஒன்னுத்துக்கும் உதவாத கற்சிலைகள் தான் அவர்களை காப்பாற்ற வரவில்லை ஏனய்யா இந்து கலாசார காப்பாளர்கள் என்று கூறி கொள்வோரே ஏன் நீங்கள் தான் இந்தியாவில் இருக்கும் 80 கோடி இந்துக்களையும் ஒன்றிணைத்து காப்பற்றி இருக்க வேண்டியது தானே//

    அது என்ன தெளிவா முதலில் சொன்ன மூணு வரியா மட்டும் சொல்லிட்டு அப்பரம் பின்னாடி வர மூணு வரிய விட்டுடீங்க. அதான் இந்த இந்துமத கடவுள்னு சொல்ல்ற கற்சிலை தான் ஒன்னும் புடுங்கல நீங்களாவது காப்பாத்தி இருக்கவேண்டியதுதானே சொன்னேன்.இதுல என்ன தப்பு. இதுவே அவங்க கிறித்துவ மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தால் ஏசுநாதர் அவர்களை காக்க வரவில்லை என்றாலும் மேற்குலக கிறித்துவ நாடுகளோ அல்லது வாடிகன் தலைமை பீடமோ தங்கள் மக்களுக்கு நடக்கும் அநிதியை பார்த்து கொண்டு சும்மா இருக்காது. சிங்கள நாய்களை நார் நாராக கிழித்து எரிந்திருக்கும். அதனால் தான் அங்கு இருக்கும் தமிழ் பேசும் முஸ்லிம்கள் மீது மட்டும் போரின் பொது கைவைக்க வில்லை . மீறி கைவைத்தால் இலங்கையின் நிலை என்ன ஆகும் என்பது சிங்கள நாய்களுக்கு தெரியும். அமாம் காப்பாற்றினால் தான் கடவுள் நாங்க என்ன அநியாயம் செஞ்சுட்டு வந்தா காப்பாத்துன்னுநா கேக்குறோம். நியாயமான போராட்டம் எங்கள் உரிமைகளை மீட்டுஎடுக்கும் போராட்டம் இதற்க்கு உதவ வில்லை என்றால் வேறு எதற்கு வந்து உதவுவாரம் .ராஜபட்சே திருப்பதியில் செய்த பிரார்த்தனைக்கு போய் காப்பாற்றுவார கடவுள். இந்த கடவுள் என்னும் கேடுகெட்ட கற்சிலைகளும் காப்பாற்றாது நீங்களும்(இந்துக்களும்) காக்க வர மாட்டீர்கள் அனால் கடைசி வரை எதுக்கும் லாயக்கு இல்லாத இந்து மதத்தை பிடித்து தொங்கி கொண்டு இருக்க வேண்டும். அப்படிதானே.

    //சும்மா எதுவுமே தெரியாத மாதிரி பேசக் கூடாது, கோயில் பொது இடம். அங்கு யார் வேண்டுமானாலும் போகலாம். அவர் புத்த மதத்தை சேர்ந்தவர் என்பதால் மற்ற அப்ரகமிய மதத்தவர்களுக்கு இருக்கும் மன சஞ்சலமும் அவருக்கு இல்லை. என்ன இருந்தாலும் அவர் ஒரு நாட்டின் அதிபர், அவருக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கோயில் அரசு நிர்வாகிகள் கொடுத்து தான் ஆகா வேண்டும். இது குறித்து இந்து மக்கள் கட்சி கடும் கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்தியதை இங்கு நினைவு கொள்கிறேன்.//

    இப்படி வெளிய போய் சொல்லிடாதீங்க சத்யமா கல்லால அடிப்பாங்க உங்கள இல்ல பெருமாள. அவன் என்ன புத்த மதம் அதனால் கோவிலிற்குள் விட கூடாது என்றா சொன்னேன். ஒரு பெண் மாசத்தில் குறிப்பட்ட அந்த மூணு நாள் கோவிலுக்குள் நுழைய கூடாது அந்த மாதவிடாய் ரத்தத்தோடு வந்தால் கோயில் தீட்டு ஆகிவிடும் என்று சொல்லும் நீங்கள் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட உயிர்களை அதுவும் பெருமாளின் பிள்ளைகளான இந்து தமிழர்களை துடிக்க துடிக்க கொன்று விட்டு வந்து அந்த குருதி படிந்த கையோடு வந்து இருக்கிறான் அந்த சண்டாளனை ஆலயத்திற்குள் விடகூடாது என்று சொன்னால் நீங்கள் வேறு எங்கோ போகிறீர்கள். ஒன்னு சொல்லாட இதே ராஜபட்சே அதிபராக இருக்கும் போதுதான் லண்டன் நகரில் இருக்கும் ஒக்ஸ்போர்ட்(oxford) பல்கலைகழகத்தில் சிறப்புரையாற்ற சென்றான் அப்போது அங்கு இருக்கும் தமிழர்களின் திரளான போராட்டத்தை பார்த்து அவர்கள் பக்கம் இருக்கும் நியாயத்தை உணர்ந்து அந்த மிருகத்தின் நிகழ்ச்சியை இரத்து செய்தது. ஒக்ஸ்போர்ட் பல்கலைகழகம் என்ன பொது இடம் தானே. அவனை ஒரு நாட்டின் அதிபர் என்று பார்த்தார்களா.அவர்களை பொறுத்த வரை அவன் ஒரு போர்க்குற்றவாளி. ஒரு போற்குற்றவாளிக்கு இந்த பெருமையான அரங்கில் பேச அனுமதி இல்லை என்று முகத்தில் அடித்தது போல் விரட்டி விட்டர்களே மேலும் இங்கிலாந்த் அரசு அவன் மீது போர்குற்ற நடவடிக்கை எடுத்து கைது செய்யும் தருவாயில் அவன் சொல்லாமல் கொள்ளாமல் ஓடிவந்துவிட்டான். இனி அவன் எந்த காலத்திலும் எந்த ஐரோப்பிய நாடுகளுக்கும் செல்ல முடியாது. அதனால் தான் மீண்டும் அவன் இங்கிலாந்து போக முயற்சிக்கவில்லை. அதற்கு ஆதாரம்:http://www.sify.com/news/rajapaksa-s-london-speech-cancelled-over-protests-news-international-kmbxOcdadhb.html இதில் பார்க்கலாம் . உங்களுக்கு கொஞ்சமாவது சிந்திக்கும் திறன் இருந்தால் நான் சொன்னதில் என்ன நியாயத்திற்கு எதிரான விஷயம் இருக்கிறது என்று சிந்தித்து பாருங்கள்.

    • போராட்டத்திற்கு அனைத்து உதவிகளையும் செய்தது கம்யூனிஸ்ட் நாடான சீனா, கிறித்துவ மற்றும் முஸ்லிம் கூட்டமைப்பு கட்சியான காங்கிரஸ், கால்டு வெல் என்ற கிறித்துவ பாதரியாரால் உருவாக்கப்பட்ட ஆரிய திராவிட கோட்பாட்டை அடிப்படையாக உருவான தமிழ் திராவிட கட்சிகள் மற்றும் இலங்கை பௌத்த மத வெறியர்கள் தானே காரணம்.

      இரண்டு பேருக்கும் சண்டை மூட்டி விட்டு, இரண்டு பேருக்கும் ஆயுதம் வழங்கி சண்டையை ஆரபித்து வைத்ததே இந்த கிறித்துவ கயவர்கள் தான் என்பதை அழகாக மாற்றி விட்டீர்கள். ஒன்று இலங்கைக்கு ஆயுதம் வழங்கி இருக்க வேண்டும். இல்லை LTTE க்கு ஆயுதம் வழங்கி இருக்க வேண்டும். இரண்டு பேருக்கும் ஆயுதம் வழங்கியே நோக்கம் என்ன? BJP ஆட்சியில் இருந்து இருந்தால் இந்த நிலை கண்டிப்பாக நடந்து இருக்காது,

      இவர்களை எல்லாம் விட்டு விட்டு வரிக்கு வரி எதோ ஹிந்துக்கள் kurai solvahtu entha vithathil niyaayam.

      ஹிந்து மதம் அரசியலை ஆதாரமாக கொண்டு உருவாக்கப்பட்ட மதம் அன்று. அப்படி இருப்பின் எப்பொழுதோ முஸ்லிம்களை ஊறுகாய் போட்டு இருக்க முடியும். கிறித்துவ குள்ள நரி கூட்டமும் எப்பொழுதோ ஓடி போயிருக்கும். இந்த போராட்டத்தை தொடங்கி வைத்ததே அமெரிக்க மற்றும் ஐரோப்பிய கிறித்தவ குள்ள நரிகள் தானே.

      வரிக்கு வரி BJP கட்சியை குற்றம் சொல்லும் நீங்கள் இந்த போராட்டத்திற்கு காரணமா இத்தாலி கிறித்துவ கத்தோலிக்க மதத்தை சார்ந்த சோனியா மற்றும் அவருடைய அடி வருடி காங்கிரஸ் கட்சி தான் என்பதை பற்றி தாங்கள் ஒரு வார்த்தையும் பேசாமல் இருப்பது வியப்பாக உள்ளது. மதம் சாராத கம்யூனிஸ்ட் கூட்டங்கள் என்ன செய்து?

      \\பா.ஜ.கா எதனை முறை பாராளுமன்றத்தில் இதற்காக பலமான குரல் கொடுத்தது என்று சொல்ல முடியுமா ஏதோ ஒட்டு பொறுக்கி அரசியல் தனத்திற்காக ஒன்று இரண்டு முறை ஒப்புக்கு சப்பாணி என்பது போல கும்பலில் கோவிந்தா கோஷம் போடுவது போல நாங்களும் குரல் கொடுத்தோம் எங்கள் கடமை முடிந்து விட்டது \\

      இலங்கை இந்திய அரசாங்கத்தின் ஆளுமைக்கு உட்பட்டது கிடையாது. ஒரு அளவிற்கு மேல் மக்கள் வேண்டுமானால் போராடலாம். அரசியல் கட்சிகள் அடுத்த நாட்டிற்காக போராட முடியாது, இந்த நிலை ஸ்ரீலங்கா மட்டும் அல்ல, உலகில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் பொருந்தும். BJP நிலை அதுவே. அது எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் BJP நிலை இதுவே. உங்கள் கண்ணோட்டத்தில் BJP ஒரு ஹிந்து கட்சி, என்னை பொறுத்தவரை BJP ஒரு இந்திய அரசியல் கட்சி.

      \\ஒன்னு சொல்லாட இதே ராஜபட்சே அதிபராக இருக்கும் போதுதான் லண்டன் நகரில் இருக்கும் ஒக்ஸ்போர்ட்(oxford) பல்கலைகழகத்தில் சிறப்புரையாற்ற சென்றான் அப்போது அங்கு இருக்கும் தமிழர்களின் திரளான போராட்டத்தை பார்த்து அவர்கள் பக்கம் இருக்கும் நியாயத்தை உணர்ந்து அந்த மிருகத்தின் நிகழ்ச்சியை இரத்து செய்தது\\

      இந்த போராட்டம் நடத்தியவர்களும் ஹிந்துக்கள் தன்னே. இவர்கள் என்ன முஸ்லிம்களா என்ன?

      அங்குள்ள மக்களை கொன்றதற்கு LTTE மற்றும் இலங்கை அரசு இருவரும் தான் காரணம் என்பதை மறந்துவிட்டு பேசுவது காமெடி யாக உள்ளது.

      நீங்கள் சொல்வது போல் நடக்க வேண்டும் என்றால் அதிக அளவு பணம் வேண்டும். கிறித்துவ மற்றும் முஸ்லிம்கள் போல் anathitu (including tmail hindus) மக்களிடையே ஹிந்து வெறி ஏற்ற வேண்டும். இவ்வாறு செய்தால் தான் இது சாத்தியம். ஹிந்து மத வெறி அனைவருக்கும் இருக்கும் பொழுது நீங்கள் சொல்வது கண்டிப்பாக நடக்கும். யூதர்கள் போல் ஹிந்துக்களும் மாறக்கூடிய காலம்… வரக்கூடாது… அவ்வாறு வரும் பட்சத்தில் நீங்கள் சொல்வதை போல் ஹிந்துக்களுக்கு எந்த நாட்டில் எந்த பிரச்சனை வந்தாலும், முஸ்லிம்களால் கோத்ரா ரயில் எரிப்பு செய்ததன் பின் ஏற்ப்பட்ட நிலை போலவோ அல்லது பழங்குடி மக்களுக்கு வாழ்ந்த லக்ஸ்மன் அவர்களை கிறித்துவ கம்யூனிஸ்ட் கூட்டம் கொன்றதன் விளைவாக ஏற்பட்ட சம்பவம் போல் இலங்கை பெளத்த வெறியர்களுக்கும் ஏற்ப்படும்.

      I always wonder why Srilanka is not united with India during 1940… Andaman & Nicobar island is nearly more than 1000Km from India. But, Srilanka is just few Km from Rameswaram. After all, the genital and cultural wise, we both are same.

      Ship transportation plays a major role in the economy of any country. In this perspective, Indian Ocean plays a major role. Indian Ocean connects the oil rich gulf and China.

      To know more on this i.e., please refer the below link and the importance of Indian Ocean.

      http://www.sangam.org/2007/10/International.php?uid=2566

      The westerns always had an eye on Indian Ocean. Western people always look for long term goal. The western American Buddhist Henry Steel Olcott penetrated into the Buddhism and reformed it during 19th century… for separating the srilanka from the core concept of mother land… Since the concept of mother land is corrupted, it made them to fight with Tamil people…It all started during 1950’s. I request you to read the list of srilanka presidents…

      http://en.wikipedia.org/wiki/Buddhism_in_Sri_Lanka & http://en.wikipedia.org/wiki/List_of_Presidents_of_Sri_Lanka

      After 1857 first freedom fight in India, the westerns decided to change their war and business strategy. Indian is the only country in the world which had a foreign president (Mount petan) even after Independence. It helped the western people to spoil further the integration of srilanka with India during the beginning of India. Thank God, we had persons like Patel and Ambedukar..who created demacratic country for us.

      Now, questions arise, how does it related to current problem?

      Till the 20th century, western business strategy (colonial whitish christian) played a major role in srilanka. After 2004, China started to occupy their position. It always wants to have a strong hold on Indian Ocean.

      The actual problem of fisher man started again by congress party leader Indira… Indira Gandhi gave katcha island to srilanka… As usual, karunanithi (betrayer) was silent because of his personal benefit…. Read the below llink

      http://bsubra.wordpress.com/2007/05/10/katcha-theevu-issue-history-indian-naval-strategy/
      Now Sonia continues the destiny… betraying this country in the name of Gandhi.

      I just remembered the sentence written in the book… India is the only country… which haven’t learnt anything from the history

      Last but not least, the below link exposes the brief information about the ideology of this war

      http://indicvision.sulekha.com/blog/post/2011/04/holocaust-to-suicide-bombing-how-to-blame-it-all.htm

  37. மேற்படி மறுமொழியை நான் மீண்டும் பிரசுரிக்க காரணம் . அதில் நான் யாருக்கு என் செய்தியை சொல்ல விரும்புகிறேன் என்பதை கூறாமல் பொத்தம் பொதுவாக இருப்பதால் மீண்டும் சம்பந்த பட்ட நபரின் பெயரோடு அதே மறுமொழியை வெளியிடுகிறேன். நன்றி.

  38. மதம் மாறினால் தேசியம் மாறுமா?
    தேசிய இனம் என்றால் என்ன?
    1. பொது மொழி
    2. ஒரே தொடர்சியான நிலப்பரப்பு
    3. பொது பொருளாதார வாழ்வு
    4. பொதுவான பண்பாடு
    5. தாங்கள் ஒரு தேசிய இனம் என்ற உளவியல் எண்ணம்

    இந்த அடிப்படையில், ஒருவர் இந்துவோ, கிறிஸ்தவரோ, இஸ்லாமியரோ, கவலை இல்லை, மேற்கண்ட வரையறைக்குட்பட்டால் போதும்.மதம் மாறினால் தேசியம் மாறாது. தமிழ் நாட்டில் வாழ்ந்தாலும், சிலர் இந்த வரையறைக்குள் வர மாட்டார்கள், அவாளுக்கு சமஸ்கிருதமே தேவ பாஷை, அவாள் பண்பாடு வேற, இவர்கள் தமிழ் தேசிய இனத்திற்க்குள் வர மாட்டார்கள்.

    சிவசங்கரன் அவர்களுக்கு: இந்து மதம் கடவுளை விமர்சித்தால் கண்டுகொள்ளாது, ஆனால், சாதி மீறீனால் தன் கோர முகத்தை காட்டும். இந்து மதத்தின் சாரம் கடவுள் வணக்க முறையில் இல்லை. அது சாதியில்தான் உயிர் வாழ்கிறது. தத்துவ ரீதியில் நாங்கள் எல்லா மத்தையும் எதிர்க்க்றோம், ஆனால், சமூக ரீதியில் இந்து மதத்தை குறி வைத்தே தாக்குகிறோம், அதுதான் மீண்டும் மீண்டும் நமக்குள் ஏற்றத்தாழ்வை கற்பிக்கிறது.

    ப்ரியா அவர்களுக்கு; சாதி சான்றுதழுக்கு எப்பொழுதுமே இரட்டை தன்மை உண்டு. எதன் பெயரால் நம் உரிமைகள் மறுக்கப்பட்டனவோ அதன் பேராலேயே உரிமையை மீட்டெடுப்பதுதான் சமூக நீதி. அதற்கு சாதி சான்றிதழ் தேவை, சாதி என்கிற சொல்லை ஒழிப்பதல்ல நம் வேலை, அதன் ஆதிக்கத்தை ஒழிக்க வேண்டும்.

  39. //மதம் மாறினால் தேசியம் மாறுமா?
    தேசிய இனம் என்றால் என்ன?
    1. பொது மொழி
    2. ஒரே தொடர்சியான நிலப்பரப்பு
    3. பொது பொருளாதார வாழ்வு
    4. பொதுவான பண்பாடு
    5. தாங்கள் ஒரு தேசிய இனம் என்ற உளவியல் எண்ணம்
    இந்த அடிப்படையில், ஒருவர் இந்துவோ, கிறிஸ்தவரோ, இஸ்லாமியரோ, கவலை இல்லை, மேற்கண்ட வரையறைக்குட்பட்டால் போதும்.மதம் மாறினால் தேசியம் மாறாது.//

    ‘எந்த ஒரு தூதரையும் அவர் தமது சமுதாயத்திற்கு விளக்கிக் கூறுவதற்க்காக அச்சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பினோம்’
    -குர்ஆன் 14:4

    இதன் மூலம் தேவ மொழி என்ற ஒன்று இல்லை. உலகில் உள்ள அனைத்து மொழிகளுமே ஒரே தரததில் வைத்துப் பார்க்கப்பட வேண்டும் என்பது இஸ்லாமிய கோட்பாடு.

    ‘ஒவ்வொரு சமுதாயத்தக்கும் ஒரு தூதர் உள்ளார்’
    -குர்ஆன் 10:47

    திராவிட இனத்துக்கும் ஒரு தேவ தூதர் வந்துள்ளார். அது வள்ளுவராகக் கூட இருக்கலாம்.

    ‘அவனது தூதர்களுக்கிடையில் எவரிடத்தும் பாரபட்சம் காட்ட மாட்டோம்’
    -குர்ஆன் 2:285

    ஏசுவை தாழ்த்தி முகமது நபியை உயர்த்திப் பேசக் கூடாது. முகமது நபியைத் தாழ்ததி ஆப்ரஹாமை உயர்த்தக் கூடாது என்று கண்டிக்கிறது இந்த வசனம்.

    ‘இது மனிதர்களுக்கு விளக்கமும் நேர் வழியும் இறைவனை அஞ்சுவோருக்கு அறிவுரையுமாகும்’
    -குர்ஆன் 3:138

    இங்கு முஸ்லிம்கள் என்று சொல்லாமல் மனிதர்கள் என்று இறைவன் கூறுகிறான். இது போன்ற ‘மனிதர்களே!’ என்று உலக மக்களைப் பார்த்து கூறும் வசனங்கள் பல இடங்களில் வருகிறது. எனவே இந்த குர்ஆன் முஸ்லிம்களுக்கு மட்டும் சொந்தமானது அல்ல. உலக மக்கள் அனைவருக்கும் உரித்தானது.

    இதை எல்லாம் இங்கு நான் குறிப்பிட காரணம் ஒருவன் இஸ்லாத்தை ஏற்பதால் தனது தாய் மொழியையோ, தனது நாட்டையோ தனது இனத்தையோ வெறுக்க வேண்டியதில்லை. வெறுக்கவும் கூடாது. ஏனெனில் ஒரு தாய் தந்தையிலிருந்து பல்கிப் பெருகியவர்களே நாம் அனைவரும் என்கிறது குர்ஆன். இதன் மூலம் குப்பனும் சுப்பனும் எனது சகோதரனே! இப்படி அனைவரும் நினைக்க ஆரம்பித்து விட்டால் சண்டை ஏது: சச்சரவு ஏது!

    • சரியாக சொன்னீர்கல். ஆனால் ஏன் ஒரு பிரிவினரை மட்டும் சாடுகிரீர்கல் என்ருதான் கேட்கிரேன்.

    • என்னைப் பொருத்தவரை நான் ஒர் உருவமற்ற இறைவனை மட்டும் வணங்குகிறேன். ஆனால் எந்த மத முறையிலும் இல்லை. குறிப்பாக மெக்காவின் திசை பார்ப்பதும் இல்லை, 5 முறை குனிந்து நிமிர்ந்து தொழுவதில்லை. ஆனால், என்னால் இயன்றவரை பிறர்க்கு உதவி, எந்த சிலையையும் தொழுதுகொள்ளாமல் ஜாதி மதம் பாராமல் ஒழுக்கத்துடண் வாழ்கிறேன். சுண்ணத்து செய்யவில்லை. தாடி இல்லை.

      நான் சொர்க்கம் செல்வேனா?

      • சொர்க்கம் என்ற ஒன்று உண்டு என்று நம்பினால் – நீங்கள் நிக்சயம் சொர்க்கத்துக்குப் போவீர்கள் சகோ. மதங்கள் மாறவேண்டியதும் இல்லை …. நம்பிக்கை இருந்தால் இருக்கு .. இல்லை என்றால் இல்லை அவ்வளவே !

        • இஃபால் ஆசயைக் காட்டி மதமாட்ரம் வேலையை செவ்வனெ செய்து வருகிரார். பொது கருடத்தை பேச இவருக்கு என்ன தகுதி இருக்கிரது?

          • முஸ்லீம் மதத்துக்கு மட்டும் மாறலாம் மத மாற்ற பிரசாரம் பண்ணலாம் வினவு எதிர்க்காது.அதுதான் அவுக கொள்கை!!!

        • Ikbal, I understand that you have not supported any religion and you have said there is no need to convert to any religion. But these foolish hindus label you as a converting force. Are they nuts?!!

  40. //என்னைப் பொருத்தவரை நான் ஒர் உருவமற்ற இறைவனை மட்டும் வணங்குகிறேன். ஆனால் எந்த மத முறையிலும் இல்லை. குறிப்பாக மெக்காவின் திசை பார்ப்பதும் இல்லை, 5 முறை குனிந்து நிமிர்ந்து தொழுவதில்லை. ஆனால், என்னால் இயன்றவரை பிறர்க்கு உதவி, எந்த சிலையையும் தொழுதுகொள்ளாமல் ஜாதி மதம் பாராமல் ஒழுக்கத்துடண் வாழ்கிறேன். சுண்ணத்து செய்யவில்லை. தாடி இல்லை.
    நான் சொர்க்கம் செல்வேனா?//

    ‘நம்பிக்கை கொண்டோர், யூதர்கள், கிறித்தவர்கள், மற்றும் ஸாபியீன்களில் இறைவனையும் இறுதி நாளையும் நம்பி நல்லறம் செய்வோருக்கு அவர்களின் கூலி அவர்களின் இறைவனிடம் உண்டு. அவர்களுக்கு எந்த பயமும் இல்லை. கவலைப்படவும் மாட்டார்கள்.’
    -குர்ஆன் 2:62

    நற்கருமங்கள் செய்து வருபவர் முஸ்லிமாக இல்லாவிட்டாலும் அவர்களின் செயலுக்கு ஏற்ற கூலியை தருவதாக இறைவன் இங்கு வாக்களிக்கிறான். இதில் நீங்கள் எந்த தரத்தில் உள்ளீர்கள் என்பது உங்களுக்கும் இறைவனுக்குமே தெரிந்த விஷயம். நான் சொர்க்கம் போவேனா என்பதே நிச்சயமில்லாது இருக்கும் போது மற்றவர்களின் நிலை எனக்கு எப்படி தெரியும? இறைவன் ஒருவனே அறிந்தவன்.

  41. இந்தியன் என்றால் இன்னும் அடிமைகள்தானா?

    ஆங்கிலேயர்கள் நம் நாட்டை விட்டு சென்று ஏறக்குறைய அறுபது வருடங்களை தாண்டிவிட்டோம்..

    ஆனாலும் அவர்களிடம் அடிமைப்பட்டுக்கிடந்த அந்த மனோபாவம் இன்னும் நம்மிடம் இருந்து மாறவில்லை..
    அதனால்தான்..நாம் போராட்டத்தின் மூலம் ஆங்கிலேயனை விரட்டியும்கூட, அவர்களிடம் இருந்து விடுதலை பெற்றுவிட்டோம் என்றுதான் சொல்கிறோமே தவிர நாம் அவனை விரட்டியதாக சொல்வதில்லை..

    தாய்மொழி பேசுவதை விட ஆங்கிலம் பேசுவதுதான் உயர்ந்தது என்று நினைத்துகொண்டு வாழ்கிறோம்.

    வெள்ளைக்காரனைக் கண்டால் அவன் ஏதோ வானத்தில் இருந்து குதித்தவன் போல நம்மவர்கள் அவனுடன் பவ்யமாக பணிந்து பேசும் அவலம் வேறு எங்கும் இல்லை..

    நம்மை நாம தாழ்த்திக்கொள்ளும் நகைச்சுவைகள் இந்தியாவில்தான் அதிலும் தமிழ்நாட்டில்தான் அதிகம் என்று நினைக்கிறேன்..

    என்னதான் இந்தியா உலகின் வல்லரசுகளில் ஒன்றாகி வருகிறது, பொருளாதாரத்தில் வியக்கவைக்கும் அளவில் முன்னேற்றம் பெற்றிருக்கிறது என்றாலும், அமெரிக்காவிலிருந்து ஜார்ஜ் புஷ்ஷோ, பில் கிளிண்டனோ, ஒபாமாவோ வந்தால் அவர்கள் கையிலே இந்த நாட்டை ஒப்படைக்கும் கேவலமாக ஆட்சியாளர்களைதான் நாம் பெற்றுள்ளோம்..

    ஆனால் நமது நாட்டு தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் அங்கு சென்றால் – பாதுகாப்பு சோதனை என்று கருதி அவமானப்படுத்தப்பட்டாலும், கை கட்டி வாய்பொத்தி சின்னதாக கண்டனம் தெரிவித்து அமைதியாகி நாம் எப்போதும் ஆங்கிலேயர்களுக்கு அடிமைதான் என்று பறைசாற்றியே வருகிறோம்.

    அதனால்தான், அமெரிக்காவின் இந்திய துணைததூதரின் மகள் கிருத்திகா பிஸ்வாஸ் என்ற ஒரு சிறுமியை அநியாயமாக – ஆபாச ஈமெயில் அனுப்பினார் என்று அமெரிக்க அரசாங்கத்தால் தண்டிக்கப்பட்டிருகிறார். ஒரு நாள் சிறைவாசம் அனுபவித்ததோடு, அளவுக்கதிகமான சித்திரவதையும் அனுபவித்திரிகிறார்.

    அந்த பதினெட்டு வயது சிறுமிக்கு, குடிப்பதற்கு குடிநீர் கொடுக்காமலும், திறந்த வெளி கழிப்பிடத்தை பயன்படுத்த வைத்தும், எய்ட்ஸ் நோயாளிகள் அருகில் வைத்தும் சித்திரவதை செய்திருக்கிறார்கள் – இவ்வளவும் அவள் செய்திராத தவறுக்கு – ஒரு முறையான விசாரணை இல்லாமல்..

    இறுதியில் தவறு செய்தது ஒரு சீன மாணவன் எனத்தெரிந்ததும் அப்பெண் விடுவிக்கப்பட்டாலும், அந்த மாணவன் தண்டிக்கப்படவில்லை..

    காரணம் அவன் இந்தியன் அல்ல..சீனன்.

    .இந்தியன்தான் அடிமை..இந்தியாவுக்கு அவர்கள் வந்தால் அவர்கள் கையில் நாம் ஆட்சியை ஒப்படைத்துவிடுவோம்.

    அணு ஒப்பந்தத்தில் அமெரிக்கன் சொன்னதை மீறாமல் கையெழுத்திடுவோம்..பாகிஸ்தான் நம்மை தாக்கினால் – திருப்பித்தாக்க வக்கில்லாமல், அமெரிக்காவிடம் முறையிடுவோம்.. ஐ நா சபையில் உறுப்பினராக கூட அமெரிக்காவின் தயவையே எதிர்பார்க்க நேரிடுகிறது..

    கிரிக்கெட் மைதானத்தில் மட்டும் தேசியக்கொடியை ஆட்டிவிட்டு, அணியும் ஆடைகளில் அமெரிக்க கொடி வரைந்த ஆடைகளை அணிவதே பெருமை என்று நினைக்கு அடிமைகளே இந்நாட்டில் அதிகமதிகம் உலா வருகிறார்கள்.

    அமெரிக்கர்கள் சொல்லும் வேலையை இரவெல்லாம் விழித்திருந்து முடித்துவிட்டு, – தாம் கால் சென்டரில் வேலை செய்வதை கவுரமாக கருதும் அடிமைகளே அதிகம்..

    பிறக்கும்போதே அமெரிக்காவில் வேலை செய்வதே லட்சியமாக கொண்டு பிறக்கும் “மேல்தட்டு” அடிமைகளும் அமெரிக்க தூதரக வாசலில் இரவு பகல் பாராமல் வெயில் மழை பாராமல் அவனுக்கு அடிமை சேவகம் செய்ய ஆவலாய் காத்திருக்கும் அடிமைகளும் இங்குதான் இருக்கிறார்கள்..

    இன்னும் நாம் அடிமை மனோபாவத்திலேயே இருப்பதால்தான் இன்னும் குனிய குனிய குட்டிக்கொண்டே இருக்கிறார்கள்..

    எப்போது எழுந்து திருப்பி குட்டப் போகிறோம்?

    • அது நடக்காது.தமிழ் மட்டுமல்ல இந்திய மக்கலுக்கு புத்தி அவ்வலவுதான்.

  42. இங்க முஸ்லிமு மதமாற்ற சொற்பொழிவுதான் நடக்குது.இக்ப்வால் தலைமையில்!!வினாவுக்கு இது ஒரு கடமை போல .சென்கொடிக்கு இருக்கும் தைரியம் உனக்கு உண்டா?அவுரு முஸ்லிமு மதத்த லெப்ட உதடு ரைட்டுல வாங்குறாரு.அவுருதான் உண்மையான கம்யூனிஸ்டு.நீ பெரியாரின் டுபாகூர் நாத்திகம் பேசுறவன்.

  43. ஒருவன் தன் மனதில் ஒரு இறைவனை விரும்பி எந்த ஒரு நிர்பந்தத்தின் கீல் இல்லாமல், யாரும் அவரை மனமாற்றம் அடைய முயற்சிசெய்யாமல் தானாக மதம் மாற சென்றால் ஏற்றுக்கொள்ளலாம். இங்க மாத்துவதர்கு ஒரு கூட்டமே உக்காந்திகிட்டு இருக்கு. பல இடங்களில் இருந்து பணபட்டுவாட வேற வருதாம. இறைவனை விற்று மதத்தை வளர்ப்பது வியாபாரமே.. பாவம் அவர விட்ருங்க.. மதத்தில் உள்ள குறைகளை களைவோம். மதவெறியை அகற்றுவோம். யாரோ சுயலாபத்துக்காக நிறைய தப்ப மதத்தின் பெயரில் செஞ்சுவசிட்டாங்க.நாம் இனம் சார்ந்த பழக்க வழக்கம் சில மதத்தின் அங்கமாகவும் வருகிறது. விட்டுகொடுத்தால் இனத்தின் அடையாளம் அளிஞ்சிடுமோன்னு பயம் வேற.
    மேல் சாதி கீழ் சாதி அப்டின்னு மததில இல்லவே இல்லப்பா.. இந்த ஆர்.எஸ்.எஸ் போன்ற மத தீவிரவாதி ஆசாமிகள் தான் இப்படி கிளப்பிவிற்றுப்பாங்க

  44. மதம் என்பது உணர்வு.பிறப்பால் இருப்பது சாதி.மதமும் பிறப்பால் இருக்கலாம்.மதம் மாறலாம் சாதி மாற்றமுடியாது.
    மதத்தின் பெயரால் நடைபெறும் அக்கிரமங்கள் மேலே விவாதிக்கப்பட்டுள்ளது.எந்த மதத்திற்கு சென்றாலும் நசுக்கப்படும் சாதிகளின் நிலைதான் பரிதாபம்.மூளைச்சளவையின் காரணமாக மதம் மாறுபவர்கள் மிகவும் பரிதாபத்திற்குறியவர்கள்.ஆதிக்க சாதிகளின் வெறியில் இருந்து தப்பிக்க நினைத்து மதம் மாறிய கிறித்தவர்கள் நிலையில் மாற்றம் எதுவும் இல்லை.அரசின் சலுகைளை இழந்தது தான் மிச்சம்.எந்த மதத்திலும் தாழ்த்தப்பட்ட இணம் அப்படியேதான் இருக்கும்.

  45. பிழைப்பு நடத்த,பொழுது போக்க,அருமையா பொய்யை பரப்பி மக்களின் எண்ண ஓட்டத்தை நச்சு ஆக்கி ஹூம் “தேவையா இந்த பொழப்பு”இதற்கு வேறே வேலை ஒன்று இருக்கு அதை செய்து ——– வேண்டாம்,
    உமக்கும் எமக்கும் வித்யாசம் உண்டு.ஒரு பழ மொழி உண்டு துழ்டனை கண்டால் தூர விலகு.
    இந்த வலை பக்கத்தை விட்டு எல்லோரும் தயை கூர்ந்து விலகி விடுங்கள்.இந்த செய்கை உங்கள் மன ஆரோகியத்தை காக்கும்.

  46. நீஙக சிலாகிக்கும் இஸ்லாமிய நாடுகளில் கம்யூனிஸ்டுகாளையும் நாத்திகர்களையும் தூக்கில் போட்டதயும் பேசுங்க

Leave a Reply to பகத் சிங் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க