privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

குண்டுகள் ஏன் வெடிக்கின்றன?

-

குண்டு வெடிப்புமாநிலத் தலைநகரங்களில், மாநகரங்களில், மக்கள் கூடுமிடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடிக்கின்றன. குண்டுகள் எங்கு, எப்போது வெடிக்கும் என்பதை முன்னறிவிக்காது என்றாலும் வெடித்த பிறகு என்ன நடக்குமென்பதைத் தெரிவிக்கின்றன. உற்றாரைப் பலிகொடுத்த உறவினரின் சோகம் பத்திரிகைகளில் படிமங்களாக, குண்டுவெடித்த இடங்களை வழக்கமாக பார்வையிடச் செல்லும் அரசியல் தலைவர்களின் பயணமாக, வெடித்த இடத்தில் பதட்டமாக இருக்கும் வாழ்க்கை வெடிக்காத இடங்களில் சகஜமாக, அடுத்த பரபரப்புச் செய்திகள் வரும்வரை குண்டு வெடிப்பை தொலைக்காட்சிப் பெட்டிகளில் மீண்டும் மீண்டும் நிகழ்த்தும் அலைவரிசைகள், விளம்பர இடைவெளிகளில் மகிழ்ச்சியாக, மொத்தத்தில் நாடு வழமையாகவே இயங்குகிறது. முன்புபோல நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கும் வலிமையினை இப்போது அடிக்கடி வெடிக்கும் குண்டுகள் இழந்துவிட்டன. பொழுதுபோக்குகளில் மையம் கொள்ளும் இன்றைய நுகர்வுக் கலாச்சார வாழ்க்கை சமூக நிகழ்வுகளை ஏறெடுத்துப் பார்க்காமல் இருப்பதற்குத் திறமையாக பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறது. குண்டுகள் வெடிப்பதற்குப் பிந்தைய விளைவுகளின்பால் அனுதாபமோ, வெடிப்பதற்கு முந்தைய அரசியலின்பால் கவனமோ அற்றுப்போய்விட்டதனால் இப்போது குண்டுகள் மலிவாக வெடிக்கின்றன. எனினும் குண்டுகள் வெடிப்பதற்குக் காரணம்தான் என்ன?

அரசு மருத்துவமனைகளுக்கு வரும் அனாதைப் பிணங்களை சடங்குக்காக அறுத்து நீதிமன்றத்திற்காகப் பதிவு செய்து யாரும் கோருபவர் இல்லாமல் எரிக்கப்படுவது போல குண்டு வெடிப்பின் அலசல்கள் அரசியல் அரங்கிலும், ஊடகவெளியிலும் உயிரின்றி பேசப்படுகின்றன. அண்ணாசாலையில் தொழிலாளி ஊர்வலம் சென்றால் அதைப் போக்குவரத்திற்கு இடையூறு என்று இந்து பேப்பருக்கு வாசகர் கடிதம் எழுதும் நடுத்தரவர்க்க அறிவாளிகள் போல குண்டுவெடிப்பைத் தடுப்பதற்கு பலரும் ஆலோசனைகளை இலவசமாக வழங்குகின்றனர். போலீசின் அலட்சியம், உளவுத்துறையின் குறைபாடு, பலவீனமான மத்திய அரசு, குண்டு வைப்பவர்கள் மீது இரக்கமின்றி நடவடிக்கை எடுக்காதது, பாக்கிஸ்தான் ஐ.எஸ்.ஐயின் சதிகளை முறியடிக்காதது என்று நீளும் இந்தப்பட்டியல் ஆத்திச்சூடி அறஞ்செய விரும்பு போல மக்களிடம் மனப்பாடமாய் இறக்கப்பட்டிருக்கிறது. பள்ளி செல்லும் குழந்தையை தூக்கத்தில் எழுப்பி தீவிரவாதத்திற்கு எதிராக என்ன செய்யவேண்டும் என்று கேட்டால் கூட அழகாய் ஒப்புவிக்கும். பா.ஜ.க ஆளும் மாநிலங்களில்தான் குண்டு வெடிப்பு நிகழ்கிறுது என்றாலும் இது தேசத்திற்கெதிரான போர் என்று முழங்கும் அத்வானி பொடா போன்ற கடுமையான சட்டங்களை திரும்பக் கொண்டுவர வேண்டும் என்கிறார். புரட்சித் தலைவியும் அதனை வழிமொழிகிறார். ஈழத்தமிழர்களை ஆயுள்தண்டனை கைதிகளாக முகாம்களில் அடைத்து கண்காணிப்பது போல வங்கதேச அகதிகளை கண்காணிக்கவேண்டும் என்று தலையங்கம் எழுதுகிறது தினமணி. நாடாளுமன்றத் தாக்குதலுக்காகத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட அப்பாவி அப்சல்குருவை இன்னும் தூக்கில் போடாதது தீவிரவாதிகளுக்கு குளிர் விடச்செய்திருக்கிறது என்கிறார் ஒரு தலைவர். உதட்டளவிலோ, அரசியல் ஆதாயத்திற்காகவோ, உள்ளத்தில் இருக்கும் சிறுபான்மை மக்கள் மீதான வெறுப்பினாலோ பேசப்படும் இந்த போதனைகளால் குண்டுகள் அழிந்துவிடுமா?

குண்டுகள் இந்த வெற்றுப்பேச்சினை சட்டை செய்வதில்லை. ஓரிடத்தில் குண்டுவெடிப்பது ஏதோ தீபாவளி பட்டாசு வெடிப்பது போல, ஹாலிவுட் படத்தில் நிகழ்வது போல அவ்வளவு சுலபமில்லை. அதிரடிக்காட்சிகளை நொறுக்குத்தீனியாக மனதில் பதியவைத்திருக்கும் திரைப்பட-தொலைக்காட்சி உணர்ச்சி, உண்மைக்கும் கற்பனைக்குமான வேறுபாட்டை, நிஜத்தின் வலியை உணர்த்துவதில்லை. உண்மையில் குண்டு வைப்பதற்கு இரும்பு மனம் கொண்ட நபர்கள், அதுவும் உயிரைப் பணயம் வைக்கும் துணிச்சலுடன், பிடிபட்டால் போலீசின் சித்திரவதைக்கும், நீதிமன்றத்தின் மரணதண்டனைக்கும் பயப்படாத நெஞ்சுரத்துடன் வேண்டும். இந்த மன உறுதியை வைத்து இவர்கள் வாழ்க்கை முழுவதும் கொள்கைக்காக களமிறங்குபவர்கள் என்று பொருளல்ல. இது குறிப்பிட்ட சமூகக் காரணத்தால் கணநேரத்தில் வந்துபோகும் சாகச உணர்வு. குறிப்பிட்ட நடவடிக்கையின் காலம் வரைக்கும் மனதில் இருக்கும் தற்கால உறுதியால் நினைத்ததை முடிக்கும் வல்லமையினை இவர்கள் பெறுகிறார்கள். அதே சமயம் இவற்றை தனிநபராக இருந்து மட்டும் செய்ய முடியாது. இரகசியமாய் பணம் திரட்டுவது, பொருட்களை சேகரிப்பது, தொழில் நுட்பத்தைக் கற்றுக்கொள்வது, ஆயுதங்களை சோதித்தறிவது, இரகசிய இடங்களை உருவாக்குவது, எல்லாவற்றுக்கும் உதவி செய்யும் ஆதரவாளர்களை அணிசேர்ப்பது வரை பல தயாரிப்புகள் வேண்டும். இலட்சியத்தின்பால் இருக்கும் உறுதியுடன் கூடவே அப்பாவி மக்களை கொல்லுவது குறித்த இரக்கமின்மையும் கணிசமாக வேண்டும். ஆனாலும் சங்கபரிவாரங்களால் அடுத்த பிரதமராக முன்னிறுத்தப்படும் அத்வானி இரும்புக் கரம் கொண்டு குண்டுகளை அடக்கமுடியுமென வன்மையாக எடுத்துரைக்கிறார். அதன்படி குண்டுகளை அடக்க முடியுமா?

அத்வானி உள்துறை அமைச்சராக இருந்த காலத்திலேயே பொடா சட்டமும், அதில் அப்பாவி முசுலீம்கள் ஆயிரக்கணக்கில் கைது செய்யப்படுவதும், வங்கதேச ஏழை அகதிகளை பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தி விரட்டப்படுதும், இசுலாமிய அமைப்புகள் பல தடைசெய்யப்பட்டதும் என ஐந்தாண்டு ஆட்சிக்காலத்தில் எத்தனையோ செய்து பார்த்தும் குண்டுகள் மறையவில்லையே! சொல்லப்போனால் இந்த இரும்புக்கர நடவடிக்கைகள் குண்டுகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தின. எனில் இந்த சட்டதிட்டங்களை தகர்த்தெறியும் வலிமையினை குண்டுகள் எங்கிருந்து பெற்றன?

குண்டுகள் அந்த வலிமையினை வரலாற்றின் அநீதியிலிருந்து பெற்றுக்கொண்டன. குண்டுகளினுள் பொதியப்பட்டிருக்கும் வேதிப்பொருட்களின் வீரியத்தினைவிட சமகால வரலாற்றின் வீரியம் அதிகமானது. குண்டுகள் தன்னளவில் இயல்பாக வெடித்துவிடுவதில்லை. கூர்ந்து நோக்கினால் அவை வரலாற்றின் விளைபொருட்கள்! 1992 பம்பாய் கலவரத்திற்கு பிந்தையதுதான் 1993 பம்பாய் குண்டுவெடிப்பு! 2002 குஜராத் கலவரத்திற்கு பிந்தையதுதான் 2008 அகமதாபாத் குண்டுவெடிப்பு! 1996 கோவை கலவரத்திற்கு பிந்தையதுதான் 1999 கோவை குண்டுவெடிப்பு! இந்த சங்கிலித் தொடர் நிகழ்வின் தீர்மானிக்கும் கண்ணியாக கலவரங்கள் இருக்கின்றது. இருதரப்பார் அடித்துக்கொள்வதுதான் கலவரம் என்பதன் இலக்கணமாக இருக்கும்போது அவற்றைக் கலவரங்கள் என அழைப்பது பொருத்தமற்றது. சரியாகச் சொல்வதானால் அவை இந்துமதவெறியர்களால் தொடுக்கப்பட்ட போர்! இசுலாமிய மக்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலை! இவற்றின் பரிமாணங்களைப் புரிந்து கொண்டால் குண்டுகளின் தோற்றுவாயை அறிந்து கொள்ள இயலுமா?

நிச்சயம் முடியும். 91 ஆம் ஆண்டு குஜராத்தின் சோமநாத்தில் ஆரம்பித்த அத்வானியின் இரத யாத்திரை வட இந்தியா முழுவதும் இசுலாமிய மக்களை காவு வாங்கியபடிதான் இரத்த யாத்திரையாக சென்றது. அதன் உச்சம் பம்பாய் கலவரமாக வெடித்தது. சிவசேனாவின் தலைவர் பால் தாக்கரே தனது சாம்னா பத்திரிகையின் மூலம் இசுலாமிய மக்களை அடித்து விரட்டுமாறு கட்சிக் குண்டர்களுக்கு ஆணையிட்டார். போலீசு உதவியுடன் இசுலாமிய குடியிருப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டு வேட்டையாடப்பட்டன. இந்த உண்மைகளை எடுத்துக்கூறி குற்றவாளிகளை அடையாளம் காட்டிய ஸ்ரீகிருஷ்ணா கமிஷனின் அறிக்கை இன்றைக்கு குப்பைத்தொட்டியி்ல் தூங்குகிறது. ஒரு வேளை நூற்றுக்கணக்கான முசுலீம் மக்களைக் கொன்ற சிவசேனா வெறியர்களை தண்டித்திருந்தால் பின்னர் பம்பாயில் குண்டுகள் வெடிக்காமலே போயிருக்கலாம். ஆனால் ஒருவேளை என்ற சொல்லை வரலாற்றை பரீசீலிப்பதற்கு பயன்படுத்தலாமே ஒழிய வரலாற்றை மாற்றிப்போட்டு கற்பனை செய்வதற்கு இடம் கிடையாது. இன்று பம்பாய் குண்டுவெடிப்பின் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுவிட்டார்கள். அவர்களில் பல அப்பாவிகள் நிரபராதியாக பல வருடங்களாக சிறையில் கழித்தார்கள். எனினும் பம்பாய் கலவரக் குற்றவாளிகள் இன்னும் தண்டிக்கப்படவில்லை என்பதோடு வழக்கே நடைபெறவில்லை. கலவரங்களுக்கு சலுகை! குண்டுகளுக்கு தண்டனை! எனில் குண்டுகள் ஏன் வெடிக்காது?

2002 குஜராத்தில் நடந்த இனக்கலவரம் நாடே அறியும். 2000த்திற்கும் மேற்பட்ட இசுலாமிய மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். நரோடா பாட்டியாவின் சவக்கிடங்கு, கர்ப்பிணியின் வயிற்றை அறுத்து தாயும், சேயும் கறுவறுக்கப்பட்ட காட்சி, பெஸ்ட் பேக்கரியின் 17பேரை உயிரோடு எரித்த சம்பவம், இரத்தக் கவிச்சி அடிக்கும் வெறியுடன் இந்து மதவெறியர்கள் சம்பவங்களை குதூகலத்துடன் தெகல்காவின் கேமராவில் வருணித்த ஆதாரம், முடிவில்லா குஜராத்தின் இனப்படுகொலைப் படிமங்கள் உணர்ச்சியுள்ள எவருக்கும் நெஞ்சை விட்டு அகன்றிருக்காது. ஆனால் கோத்ரா இரயில் எரிப்பு சம்பவத்திற்காக, செய்யாத குற்றத்திற்காக பல அப்பாவி முசுலீம்கள் சிறையில் வாடும்போது இனப்படுகொலை செய்த இந்து மதவெறிக் குற்றவாளிகள் வெளியில் சுதந்திரமாக நடமாடுகின்றனர். குண்டுகள் செய்யும் இரகசிய ஏற்பாடுகளெல்லாம் இந்து மதவெறியர்களுக்கு தேவையில்லை. குஜராத்தில் அவர்கள் நடத்திய நரவேட்டைக்கான துப்பாக்கிகள், குண்டுகள், ஆயுதங்கள், எல்லாம் அண்டை மாநிலங்களிலிருந்து வண்டி வண்டியாக இறங்கின. குண்டுகளின் ஏற்பாடுகளை சதிகள் எனப்பார்க்கும் பொதுப்புத்தி இந்துமதவெறியர்களின் ஏற்பாடுகளை கலவரங்களில் நடக்கும் வழக்கமான ஒன்றாகப் பார்க்கின்றது. எனில் குண்டுகள் ஏன் வெடிக்காது?

கோவையில் காவலர் செல்வராசு கொலைசெய்யப்பட்டதை அடுத்து நடந்த கலவரத்தில் 30க்கும் மேற்பட்ட முசுலீம் மக்கள் கொலைசெய்யப்பட்டு பல கோடி மதிப்பிலான இசுலாமியர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன. கோவை சங்கபரிவார ரவுடிகளை கைது செய்து தண்டிக்க முடியாத இந்த சமூக அமைப்பு கோவை குண்டுவெடிப்பின் குற்றவாளிகளை விரைவாக விசாரித்து தண்டித்திருக்கிறது. அதிலும் நூற்றுக்கணக்கான அப்பாவிகள் பல வருடங்களை சிறையில் கழித்து விட்டு நிரபராதி என்று விடுவிக்கப்பட்டிருக்கின்றனர். குற்றமின்றி தண்டனையை மட்டும் அனுபவித்துவிட்டு மனைவியையும், குழந்தைகளையும் நிர்க்கதியில் தவிக்கவிட்டு வாழ்வைத் தொலைத்திருக்கும் இந்த சாதரண மனிதர்களுக்கு இந்த சமூக அமைப்பின் மேல் எத்தனை பெரிய கோபம் இருக்கும்? இவர்கள் எவரும் படித்து வசதியாக வாழும் நடுத்தரவர்க்கத்தினரோ, இசுலாமிய மதத்தின் பால் ஆழ்ந்தபிடிப்போ, வெறியோ, இந்துக்களின் மீது விரோதமோ கொண்டவர்கள் அல்லர். இவர்களின் நெஞ்சில் வஞ்சினத்தை ஏற்றுவதற்கு ஐ.எஸ்.ஐ தேவையில்லை. அது உண்மையுமில்லை. இரக்கமற்று தனிமைப்படுத்தும் சமூகத்தின் காரணத்தால் இந்த இளைஞர்களின் அவலம் குண்டுகளாக பரிமாணம் கொள்கின்றன. எனில் குண்டுகள் ஏன் வெடிக்காது?

இந்து மதவெறியர்கள் இந்தியாவில் நடத்தியிருக்கும் கலவரங்களில் பதிவு செய்திருக்கும் கொலைக்கணக்கும், பொருள் இழப்பும் அளவில் குண்டுகளை விட பலநூறு மடங்கு அதிகம்தான். ஆனால் அவை பொதுவில் தீவிரவாதிகள் செய்த குற்றமென்று மதிப்பிடப்படுவதில்லை. பெரும்பான்மை இந்துக்களின் பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொண்டு சிறு கும்பலான சங்கபரிவாரம் செய்யும் அநீதிக்கான அங்கீகாரம் பெரும்பான்மையின் மவுனத்தில் இருக்கிறது. குஜராத்தில் நடந்த இனப்படுகொலையில் எல்லா இந்துக்களும் பங்கேற்கவில்லை என்றாலும் நேரடி மவுன சாட்சியாக பார்த்துக்கொண்டிருந்தார்கள். அந்த மவுனம் அநீதியை மறுக்கவில்லை. அதுவே அநீதியின் அங்கமாக மாறிவிடுகிறது. இதன் விளைவால் உண்மையான தீவிரவாதிகளான இந்துமதவெறியர்கள் பொது அங்கீகாரத்துடன் எல்லாக் கட்சிகளைப்போல ஒரு கட்சியாக இயங்குகிறார்கள். சமூகநீதி, திராவிடம் பேசும் எல்லா கட்சிகளும் இந்து மதவெறியர்களுடன் தேர்தல் கூட்டணி வைப்பது முதல் அரசில் பங்கேற்பது வரை முரணின்றி செய்கின்றன. இந்தியாவின் பொதுவாழ்வில் இந்து மதவெறியர்கள் அதிகாரத்துடன் ஆணவமாக நடந்து கொள்வதற்கு இத்தனை சலுகைகள் இருக்கும்போது குண்டுகளுக்கான முயற்சிகள் எங்கோ இரகசியமாக நடந்து கொண்டுதானே இருக்கும்?

குண்டுகள் உருவாதற்கான நிலைமைகளை உருவாக்கிவிட்டு குண்டுகள் மட்டும் வேண்டாம் என்று நினைப்பதி்ல் பயனொன்றும் இல்லை. இந்திய அரசியல் அரங்கில் இந்துமதவெறிச் சக்திகள் கறுவருக்கப்படாதவரை குண்டுகளையும் கருவறுக்க முடியாது. மதசார்பாற்ற அரசியல் அதன் உண்மையான பொருளில் அமலுக்கு வராதவரை குண்டுகள் வந்து கொண்டே இருக்கும். சிறுபான்மை மக்களை பாதுகாக்கும் போராட்டத்தில் புரட்சிகர, ஜனநாயக சக்திகள் வெல்லும்வரை குண்டுகள் தோல்வி அடையப்போவதில்லை. ஆகையால் குண்டுகளை நாம் நியாயப்படுத்துகிறோமா?

குண்டுகள் வெடிப்பதில் நியாயம் இருக்கிறதா இல்லையா என்பதைவிட அவை தன் குறிக்கோளில் வெல்லுமா, வெல்லாதா என்பதே முக்கியமான கேள்வி. அதாவது இந்துமதவெறியர்களின் கோரப்பிடியிலிருந்து இசுலாமிய மக்களை பாதுகாப்பதில் குண்டுகள் தோல்வியடைவதோடு உண்மையில் பாதுகாப்பின்மையைத்தான் அதிகப்படுத்தியிருக்கின்றன. குண்டுகளின் முக்கியமான விளைவுகளே இந்துமதவெறியை வலுப்படுத்துவதும், இசுலாமிய மக்களை தனிமைப்படுத்துவதும்தான். தற்போதைய குண்டுவெடிப்புகளில் கூட இந்துமதவெறியர்கள் எவரும் சாகவில்லை என்பதோடு அப்பாவி உழைக்கும் மக்கள்தான் கொல்லப்பட்டிருக்கின்றனர். எதிர்கால குண்டுவெடிப்புகளிலிருந்து தற்காத்துக் கொள்வதற்காக மாநகரங்களில் உள்ள ஐ.டி நிறுவனங்களுக்கும், கோவில்களுக்கும் பாதுகாப்பு அளிக்கும் அரசு உழைக்கும் மக்களுக்கு எந்தப் பாதுகாப்பையும் அளிக்கவில்லை. இப்படி குண்டுகள் வெடித்தால் நிச்சயமாக கொல்லப்பட இருக்கின்ற உழைக்கும் மக்கள்தான் உண்மையில் பார்ப்பன இந்துமதவெறியால் ஏற்கனவே அடிமைகளாக நடத்தப்படுவர்களாகவும், வர்க்க ரீதியில் இந்துமதவெறியர்களை வீழ்த்துவதற்கான சக்தியாகவும் இருக்கின்றனர். குண்டுகள் இந்த மக்களைத்தான் இந்துமதவெறியர்களின் கைகளில் எளிதாக மாற்றித் தருகின்றன. எல்லாவற்றுக்கும் மேல் வாழ்க்கைப் போராட்டத்தால் கவலையில் உழன்று கொண்டிருக்கும் அப்பாவி மக்களை இரக்கமின்றி கொல்லும் குண்டுகளில் பாசிச மனமும் கலந்திருக்கிறது. மறுபுறம் தமது எதிர்வரிசையில் எல்லாப் பிரிவு மக்களையும் ஒன்று சேர்க்கும் வேலையையும் குண்டுகள் அடி முட்டாள்தனமாக செய்து வருகின்றன. இவை ஒருபுறமிருக்க குண்டுகளால் இசுலாமிய மக்களுக்கு என்ன பாதிப்பு?

ஒவ்வொரு குண்டுவெடிப்பின்போதும் எண்ணிறந்த பாதிப்புகளை இசுலாமிய மக்கள்தான் எதிர்கொள்கின்றனர். குண்டுகளின் அரசியலுக்கு கடுகளவும் தொடர்பில்லாத அப்பாவிகள் கைதுசெய்யப்பட்டு ஆண்டுக்கணக்கில் சிறையில் இருப்பதும், இசுலாமிய மக்கள் அனைவரையும் பொதுச்சமூகம் தீவிரவாதிகளாக பார்ப்பதும், இதன் தொடர் விளைவாக இசுலாமிய மக்களுக்கு வீடு வாடகைக்கு இல்லை, கல்வி இல்லை, வேலை இல்லை மொத்தத்தில் மதிப்பு இல்லை என்ற நிலைமை உருவாக்கப்படுகிறது. இதையே இந்துமதவெறியர்கள் பிரச்சாரத்தின் மூலம் செய்வதை குண்டுகள் தமது வெடிப்பின் மூலம் செய்கின்றன. யாரை எதிர்த்து உருவனதோ அவர்களுடன் எதிர்மறையில் ஒன்றுபடுவதுதான் குண்டுகளின் தர்க்கரீதியான முடிவு. வெடிமருந்தின் மேல் அசாத்திய நம்பிக்கை வைத்திருக்கும் குண்டுகள் வெகுஜன அரசியல் நடவடிக்களுக்காக பொறுமையுடன் ஈடுபடுவதில்லை. பொறுமையிழந்து அவசர அவசரமாக வெடிக்கும் குண்டுகள் நீண்டகால நோக்கில் இசுலாமிய மக்களைத்தான் காவு கேட்கின்றன. குண்டுகளுக்கும் இசுலாமிய மதத்திற்கும் என்ன தொடர்பு?

குண்டுகளின் தோற்றுவாயை சமூக நிலைமைகளே தோற்றுவிக்கின்றன என்ற போதிலும் குண்டுவைப்பவர்களின் மன உறுதிக்கு இசுலமிய மதப்பற்றும் ஒரு காரணம் என்பதை மறுப்பதற்கில்லை. குண்டுகள் தாம் இசுலாமிய மதத்தைப் பாதுகாக்கும் புனிதப்போரில் ஈடுபட்டிருப்பதாக நம்புகின்றன. இதை பல இசுலாமிய சமுதாயப் பெரியோர்களும், மக்களும் ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் குண்டுகள் தாம்தான் உண்மையான இசுலாமியர்கள் என்று கற்பித்துக் கொள்கின்றன. ஆனால் உலக வரலாறு நெடுகிலும் இந்தக் கற்பிதம் பொய்யென்றே நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இன்றைய அரசியல் சமூக பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு இசுலாமிய மதம் ஒரு தீர்வாக அமைய முடியாது. கூடவே உலகில் இசுலாமிய மதத்தை உண்மையாக பின்பற்றும் நாடு எதுவும் கிடையாது, அப்படி இருக்கவும் முடியாது என்பதே அறிவியல்பூர்வமான உண்மை. இசுலாமிய நாடாக அறிவித்துக்கொண்ட பாக்கிஸ்தானில் சன்னி, ஷியா பிரிவுகளிடையே மசூதியில் குண்டு வைத்துக் கொல்லும் அளவுக்கு பிளவு இருப்பதும், ஷரியத்தின் சட்டதிட்டங்களை கறாராக பின்பற்றும் வளைகுடா நாடுகள் அமெரிக்காவின் விசுவாசிகளாக இருப்பதும், ஏழை இசுலாமிய மக்களை மதத்தின் பெயரால் அடிமைப்படுத்த பணஉதவி செய்யும் அரபு ஷேக்குகள் தனிப்பட்ட வாழ்வில் களிவெறியாட்ட பொறுக்கிகளாக இருப்பதும் இந்த உண்மைகளை எடுத்தியம்பும். ஆனால் குண்டுகள் இந்த யதார்த்த்த்தை மறுப்பதுடன் கற்பனையான மத உலகை சித்தரித்துக்கொண்டு வாழ முயல்கின்றன. எனில் குண்டுகளின் எதிர்காலம் என்ன?

எதிர்காலம் இந்துமதவெறியர்களின் எதிர்காலத்தைப் பொறுத்தது. சங்க பரிவாரங்கள் இருக்கும் வரையிலும் இந்துத்வா திட்டமும், முசுலீம் மக்களின் மீதான துவேசமும், கலவரங்களும் இந்தியாவின் நிகழ்ச்சிநிரலில் இடம்பிடித்தபடியே இருக்கும். இந்த நிகழ்ச்சிநிரலை மாற்றாதவரை, வரலாறு திருத்த்தப்படாதவரை குண்டுகளையும் இரத்து செய்ய முடியாது.

ஆகவே நம்முன் இரு வழிகள் இருக்கின்றன. ஒன்று அடுத்த குண்டு எங்கு எப்போது வெடிக்கும் என்று திகிலுடன் வாழ்வது. அல்லது குண்டுகளைத் தோற்றுவிக்கும் சங்கபரிவார கும்பலை வீழ்த்துவது. இதைத்தாண்டி குண்டுகளிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வதற்கு மூன்றாவது வழி ஏதும் இல்லை.

__________________________________________________________________________________

அகமதாபாத் குண்டு வெடிப்பை தொடர்ந்து  29/07/2009 அன்று வெளியிடப்பட்ட கட்டுரை
__________________________________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்

மும்பை 26/11

  1. அவசியமான நேரத்தில் அருமையான மீள்பதிவு. இந்த கட்டுரை எழுத்தப்பட்டு 3 ஆண்டு ஆன பின்னரும் இன்னமும் நிலைமைகளின் ஒரு முன்னேறமும் இல்லை என்பதுமட்டுமல்ல, இசுலாமிய பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட குண்டுவெடிப்புகள் என்று பிரச்சாரம் செய்யப்பட்டவைகள் பல இந்து மதவெறி காவி பயங்கரவாதிகளால்தான் வெடிக்கப்பட்ட்டன என்பதும் அம்பலமாகியிருக்கின்றது. அவர்களின் பலர் இன்னமும் கைது கூட செய்யப்படவில்லை.

  2. இந்து மதவெறி மட்டும் காரணமல்ல. அடிப்படை காரணம் : காஸ்மீர் பிரச்சனை. அதை நியாயமாக தீர்க்காவிட்டால், இவை தொடரும். அய்.நாவிற்க்கு இப்பிரச்சனையை எடுத்து சென்று, தேவை பட்டால் ஒரு பொது வாக்கெடுப்பு மற்றும் காஸ்மீரை விட்டுகொடுத்தல் : இதை செய்ய தயங்கும் வரை, தீர்வுகள் இல்லை. தாக்குதல்கள் தொடரும். குண்டு வைத்தவர்கள் காஸ்மீர் தீவிரவாதிகளாகதான் இருக்க முடியும். அவர்கள் நோக்கம் காஸ்மீர் ‘விடுதலை’ அல்லது பாக்கிஸ்தானோடு காஸ்மீரை இணைப்பு. human life is cheap in Indian sub continent and we really do not care for the loss of thousands of innocent lives over the years. and ‘hawks’ from both sides will not let a wise settlement…

  3. //உண்மையில் குண்டு வைப்பதற்கு இரும்பு மனம் கொண்ட நபர்கள், அதுவும் உயிரைப் பணயம் வைக்கும் துணிச்சலுடன், பிடிபட்டால் போலீசின் சித்திரவதைக்கும், நீதிமன்றத்தின் மரணதண்டனைக்கும் பயப்படாத நெஞ்சுரத்துடன் வேண்டும். இந்த மன உறுதியை வைத்து இவர்கள் வாழ்க்கை முழுவதும் கொள்கைக்காக களமிறங்குபவர்கள் என்று பொருளல்ல. இது குறிப்பிட்ட சமூகக் காரணத்தால் கணநேரத்தில் வந்துபோகும் சாகச உணர்வு. குறிப்பிட்ட நடவடிக்கையின் காலம் வரைக்கும் மனதில் இருக்கும் தற்கால உறுதியால் நினைத்ததை முடிக்கும் வல்லமையினை இவர்கள் பெறுகிறார்கள். அதே சமயம் இவற்றை தனிநபராக இருந்து மட்டும் செய்ய முடியாது. இரகசியமாய் பணம் திரட்டுவது, பொருட்களை சேகரிப்பது, தொழில் நுட்பத்தைக் கற்றுக்கொள்வது, ஆயுதங்களை சோதித்தறிவது, இரகசிய இடங்களை உருவாக்குவது, எல்லாவற்றுக்கும் உதவி செய்யும் ஆதரவாளர்களை அணிசேர்ப்பது வரை பல தயாரிப்புகள் வேண்டும்.//

    அனுபவம் தெரியுது…

    • இவர ஆர்.எஸ்எஸ்சுன்னு சொன்னா முத்திரை குத்துவதா புலம்புவாரு… இந்து மதவெறி ஆர்.எஸ்.எஸ் ஐ அம்பலப்படுத்தும் கட்டுரைகளுக்காகத்தான் பீல் பண்ணி பீல் பண்ணி பின்னூட்டம் எழுதுவாரு…

      கொண்டை தெரியுது…..

        • சீனு எனக்கு மட்டுமா தெரியுது அதான் வினவு வாசகர்காள் எல்லாருக்கும் தெரியுதே 🙂

      • ஆமாடா..எந்தத்தீவிரவாதநாய் இத செய்யுதோன்னு தெரிஞும் அவன ஒன்னுமே செய்யாத இந்தநாட்டநெனச்சு பீல் பண்ணி பின்னூட்டம் எழுதுவதா…

        கொண்டை தெரியுது…..எஙகளுக்குக் கூடத்தான் தாடி தெரியுது..

        • பையா, எனக்கும் சீனுவுக்கும் உள்ள மேட்டர்ல நீங்க புரியாம வந்து நுழைஞ்சிட்டீங்க.. பரவால்ல, ஆனான கொண்டை தெரியுதுன்னு சொல்லறதுக்கு என்ன அர்த்தம்னு கூட உங்களுக்கு தெரியலயே…. உங்களுக்கு ஆத்திரம் வளர்ந்த அளவுக்கு அறிவு வளரல… மொதல்ல அதை வளர்த்துகங்க

          • சீனு தீவிரவாதிகளுக்கு ஆதரவாக எழுதப்பட்ட கட்டுரையை விமர்சித்தால்,நீ கோபமாக “கொண்டை தெரியுது”..கொண்டை தெரியுது என்றால் என்ன என்று எஙளுக்குத் தெரியும் சீனுவை பிராமணன் எஙிறாய்…

            ஆனால் உனக்குத்தான் பாவம்நான் தாடி தெரியுது என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை..

            • அடக்கொடுமையே… கொண்டையின்னா பார்பான் இல்ல ஓய்… பாடிசோடா வடிவேலு ஜோக்கு தெரியாதா? இணையத்துல அடையாளம் தெரியுதுன்னு சொல்றதுக்கு அதை பயன்படுத்தறது வழக்கம்.. போகட்டும்..

              இங்க நான் அதை சொன்னதுக்கு காரணம் என்னோட பின்னூட்டத்தின் முதல் வரியான சீனுவின் புலம்பலை பற்றியது…

              இதைத்தான் நீங்க புரியாம பேசுறீங்கன்னு சொன்னேன்.. என்னை முசுலீமாக்கும் முயற்சிக்கு முன்னால வினவில் இசுலாமிய மதவெறிக்கு எதிராக எழுதப்பட்டுள்ள கட்டுரையில் எனது பின்னூட்டங்களை வாசித்துவிட்டு வரவும்…

              • வர வர வினவு கட்டுரைகள் தரம் குறைகிறது.. வாசகர்கள் பின்னூட்டம் வெறும் பெர்சணல் பஞசாயதுகளாக இருக்கிறது….

                • வரவர குறைந்த தரம் என்னான்னு எடுத்து இயம்புங்களேன்

              • இவரு ரொம்ப சின்ன ‘பையா’. பையா நீங்கள் இன்னும் வள‌ரனும் .. கொண்ட தெரியுது அப்படின்னா பார்பனனாம்.. பையா ரொம்ப டிஸ்டர்ப் ஆகியிருக்காரு போல‌

                • Ippadi ellathukkum Oru madhatha suthiye ezhudunna yaaruthaan disturb aaga maata?? Pakistan kaaranukku adutha target chennaina kooda ippadiye thaan ezhuduveenga pola…

  4. I beg this idiotic Vinavu that, at least don’t support terrorists though you are not ready to see the pain of innocents. Every time you support this activity. So, now affected persons can again do the same action to the terrorists. Immediately, you will cry that minorities are affected.

    • சரவ், உங்களுக்கு ஒரு சவால்… உங்களால இந்த கட்டுரையில் பயங்கரவாதிகளுக்கு ஆதரவான பகுதிகளை எடுத்துப் போட முடியுமா? சீனு மாதிரி செலக்டிவா கூட நீங்க படிக்கல போலிருக்கே….

      • what is the meaning of below statements
        குண்டுகளின் தோற்றுவாயை சமூக நிலைமைகளே தோற்றுவிக்கின்றன என்ற போதிலும் குண்டுவைப்பவர்களின் மன உறுதிக்கு இசுலமிய மதப்பற்றும் ஒரு காரணம் என்பதை மறுப்பதற்கில்லை. குண்டுகள் தாம் இசுலாமிய மதத்தைப் பாதுகாக்கும் புனிதப்போரில் ஈடுபட்டிருப்பதாக நம்புகின்றன.

        Vinavu, below are true statements
        ஒவ்வொரு குண்டுவெடிப்பின்போதும் எண்ணிறந்த பாதிப்புகளை appavi இசுலாமிய மக்கள்தான் எதிர்கொள்கின்றனர்.
        பொறுமையிழந்து அவசர அவசரமாக வெடிக்கும் குண்டுகள் நீண்டகால நோக்கில் இசுலாமிய மக்களைத்தான் காவு கேட்கின்றன. Why don’t they wait & tolerate the so called ‘RSS Terrorism’ for some time, why they are reacting for every incident. Every year on Dec 5th, you know how many police forces are deployed for protection. They could not tolerate one single event ‘babri masjid’

        Other very important statement, which every Muslim supporting terrorism should understand : அப்பாவி மக்களை இரக்கமின்றி கொல்லும் குண்டுகளில் பாசிச மனமும் கலந்திருக்கிறது. மறுபுறம் தமது எதிர்வரிசையில் எல்லாப் பிரிவு மக்களையும் ஒன்று சேர்க்கும் வேலையையும் குண்டுகள் அடி முட்டாள்தனமாக செய்து வருகின்றன
        Now they are facing only so called ‘RSS Terrorism’ !!! – may be 20% of Hindu population. But if they continue to do this kind of blast, gradually even a normal hindu is also going against Muslims. Let them go & blast RSS HQ, Military camps, police stattions, Parliment, MP, Ministers – who are not doing anything for anyone. Why they are doing this in ‘common’ places even if they like to take revenge on their past pain?

        Adhiyaman sonna mathiri, we have to give UP kashmir & deploy all those billions of rupees for development activities. Also save thousands of life of soldiers & kashmiris.

        • //Why don’t they wait & tolerate the so called ‘RSS Terrorism’ for some time, why they are reacting for every incident. //

          why can’t u castrate the RSS terrorist which would reduce the waiting time for Muslims? If you won’t then on what basis do u expect Muslims to wait and tolerate for RSS to finish off?

          இப்படிச் சொல்வதற்கு கொஞசமேனும் வெட்க்கப்படனும். ஆர் எஸ் எஸ்க்காரன் அடிப்பான் அதுக்கு முஸ்லீம் சமூகத்துல சிலர் உணர்ச்சிவசப்பட்டு திருப்பி அடிப்பான் அதனால நீண்ட கால பாதிப்பு முஸ்லீம்களுக்குத்தான் எனவே முஸ்லீம்கள் அடி வாங்கிட்டு பொறுமையா இருக்கனுன்னு மட்டும் ஒருத்தன் கோருகிறான் எனில் அவன் அயோக்கியனாகத்தான் இருக்க முடியும்.

          நியாயமானவன் எனில் என்ன செய்ய வேண்டும்? முஸ்லீம் மக்களே பொறூமையா இருங்க நாங்க, நீங்க, அப்புறம் இந்துன்னு நம்புகிற மக்கள்ல இருக்குற நல்லவங்க எல்லாம் சேர்ந்து ஆர் எஸ் எஸ் காயடிச்சி ஒட்ட் நறுக்கிறுவோம்னு சொலலனும். இதச் சொல்லாம முஸ்லீமை பொறுமையா இருன்னு அட்வைஸ் பன்னுறவன் கட்டப்பஞ்சாயத்து தாதா அல்லது போலீசு அல்லது உச்சநீதிமன்ற நீதிபதி இதில் ஏதோவொன்றாகத்தான் இருக்க முடியும்.

        • //Now they are facing only so called ‘RSS Terrorism’ !!! – may be 20% of Hindu population. But if they continue to do this kind of blast, //

          உங்களுக்கு உதிச்ச இந்த உண்மைதான் ஆர் எஸ் எஸ்க்கும் உதிச்சது அதுனாலதான் பேர்வாதி குண்டுகள முஸ்லீம் குல்லா போட்டு ஆர் எஸ் எஸ்க் காரனே வைச்சி மாட்டிக் கொண்டுள்ளான். இப்போ நடந்த மும்பை குண்டு வெடிப்பும் ஆர் எஸ் எஸ் செய்துதான் என்பது எனது வலுவான கருத்து.

        • //Let them go & blast RSS HQ, Military camps, police stattions, Parliment, MP, Ministers// குண்டு வைச்சவன் ஆர் எஸ் எஸ் காரனா இருந்தா?

          • Mr. Maan, you didnot understand my ‘point’;

            First point :

            //Now they are facing only so called ‘RSS Terrorism’ !!! – may be 20% of Hindu population. But if they continue to do this kind of blast, //

            உங்களுக்கு உதிச்ச இந்த உண்மைதான் ஆர் எஸ் எஸ்க்கும் உதிச்சது அதுனாலதான் பேர்வாதி குண்டுகள முஸ்லீம் குல்லா போட்டு ஆர் எஸ் எஸ்க் காரனே வைச்சி மாட்டிக் கொண்டுள்ளான். இப்போ நடந்த மும்பை குண்டு வெடிப்பும் ஆர் எஸ் எஸ் செய்துதான் என்பது எனது வலுவான கருத்து.

            Answer : RSS vachathave erukatum. But what is the message that is reaching Non-RSS hindus – its done by PAK based muslim groups with support of local muslisms. Did any of your party tried to stop this false propaganda? don’t u understand this is adding more people to go against the ‘non-violent’ muslims in India over a period of time? In other end, ‘non-violent’ muslims are getting anger and start helping ‘terrorist’ groups based out of PAK after they suffer from incidents encouraged by Govt —- slowly we are pulling IN the non-violent people from both Hindus and Muslims to the FIGHT – thats my bigger concern.

            Second :
            குண்டுவைப்பவர்களின் மன உறுதிக்கு இசுலமிய மதப்பற்றும் ஒரு காரணம் என்பதை மறுப்பதற்கில்லை.
            I heard that in ‘Kuran’ there is call to all Muslims that – entire world should become ISLAMIC – only then saithan will disapper. is it so?

            Third : இதச் சொல்லாம முஸ்லீமை பொறுமையா இருன்னு அட்வைஸ் பன்னுறவன் கட்டப்பஞ்சாயத்து தாதா அல்லது போலீசு அல்லது உச்சநீதிமன்ற நீதிபதி இதில் ஏதோவொன்றாகத்தான் இருக்க முடியும்

            Why so angry when I say ‘bear’ with India? How many Muslims are killed by RSS so far? and how many INDIANS are killed by PAK based terror groups? do u know that? will be in 1:100 ratio? My point is both group should show ‘patience’ …

    • தம்பி உங்கள் வெருபின் ஆழம் உங்களின் வார்த்தைகளில் தெரிகிறது.நீதம் இங்கில்லை என்றாலும் விரைவில் உலகறியும்.
      the world knew that who is prakyasing thakoor and sunil josi and all other rss terrorist those whoever behind all the bomb squad which ever took place after gujarath riots but in the name of muslim.

  5. சங்க்பரிவர்கள் மற்றும் காவிகள் செய்யும் கலவரகளினால் முஸ்லிம்கள் செய்யும் எதிர்வினை தான் இந்த குண்டு என்று பாசிசத்தை தன் வரிகளால் உடைதறியும் வினவுகுட சொல்கிறது என்றால் மிகவும் மனம் வேதனை அடய்கிறது, நண்பர்களே இந்தியாவில் நடந்த அணைத்து குண்டு வெடிப்புகளுக்கும் காரணம் பாசிசத்தை விசமாக கக்கும் R S S அதன் துணை அமைப்புகளும் என்பது இந்திய மக்கள் அனைவரும் அறிந்த விசயம். மாவீரன் கர்கரே மட்டும் இந்த ஹிந்துத்துவ தீவிரவாத அமைப்புகளை கண்டுபிடிகவில்லை என்றால் நினனைத்து பாருங்கள் நண்பர்களே,ஒ ஹிந்துத்துவ பயகரவதிகளே உங்களுடைய மார்பிடத்தை நோக்கி நாங்கள் நெருக்கி கொண்டு இருக்கிறோம் கண்டிப்பாக இறைவனின் உதவியால் உங்களுடைய பாசிச ஹிந்துத்துவ அஜெண்டவை நாங்கள் உடைத்து எறிவோம், இந்திய மக்களுக்கு தேவையான பாதுகாப்பு நாங்கள் வழங்குவோம், இந்த தேசத்தின் மக்கள் அனைவரும் சகோதர்கள் என்று உரக்க கூறுவோம்.

      • சீனு.,

        இந்து மதவெறி பாசிஸ்டுகள் பல ஊருல குண்டு வச்சு அந்த பழியை முசுலீம் மேல போட்டுக்கு ஒளிஞ்சிருந்ததை காக்ரே முதல் அசீமாநந்தா வரை அனைவரும் வெளியே கொண்டு வந்து காவி பயங்கரவாதிகள் முழு அம்மணமாய் ஊரே சிறிப்பாய் சிறிக்கும் படி ஆகிப்போனதே…. அது நேரக்கொடுமையில்லாம வேற என்னவாம்

      • //இந்திய மக்களுக்கு தேவையான பாதுகாப்பு நாங்கள் வழங்குவோம், இந்த தேசத்தின் மக்கள் அனைவரும் சகோதர்கள் என்று உரக்க கூறுவோம்.//

        ஒரு பேச்சுக் கூட இது மாதிரி சொல்வாரா சீனு, பையா போன்றோர் ம்ஹூம் அதுக்கெல்லாம் பெருந்தன்மை வேனும்.அ

    • //சங்க்பரிவர்கள் மற்றும் காவிகள் செய்யும் கலவரகளினால் முஸ்லிம்கள் செய்யும் எதிர்வினை தான் இந்த குண்டு என்று பாசிசத்தை தன் வரிகளால் உடைதறியும் வினவுகுட சொல்கிறது என்றால் மிகவும் மனம் வேதனை அடய்கிறது//

      இந்தக்கேள்விக்கான விளக்கமான பதிலை வினவிடம் எதிர்பார்க்கிறேன்.

    • அகமது,
      இது மூன்று வருசத்துக்கு முன்னால இதே வினவுல வந்த கட்டுரைதான். அப்போ இந்து மதவெறி பாசிஸ்டுகளின் குண்டு மேட்டர்லாம் வெளிய லீக்க ஆவல, அது வெளிய விந்த பின்னால வினவு எழுதியதை கட்டுரை முடிவுல தொடர்புடைய பதிவுகள்ல கொடுத்திருக்காங்க வாசிங்க. நிற்க

      @@@சங்க்பரிவர்கள் மற்றும் காவிகள் செய்யும் கலவரகளினால் முஸ்லிம்கள் செய்யும் எதிர்வினை தான் இந்த குண்டு என்று பாசிசத்தை தன் வரிகளால் உடைதறியும் வினவுகுட சொல்கிறது என்றால் மிகவும் மனம் வேதனை அடய்கிறது,@@

      இப்படி எழுதிட்டு பின்னாலயே

      @@நண்பர்களே இந்தியாவில் நடந்த அணைத்து குண்டு வெடிப்புகளுக்கும் காரணம் பாசிசத்தை விசமாக கக்கும் R S S அதன் துணை அமைப்புகளும் என்பது இந்திய மக்கள் அனைவரும் அறிந்த விசயம்.@@

      அப்படின்னு எழுதறீங்க…. கட்டுரை கூட அதைத்தானே சொல்லியிருக்கு, நீங்க எங்க முரண்புடுறீங்க… ஒரு வேளை ஆக்சுவலா எல்லா குண்டையும் அங்க கொண்டு போய் வச்சதே சங்க் பரிவார்னு நினைக்கிறீங்களா? அது உண்மையும் இல்லை, காக்ரே அதை நீங்கள் சொல்லவது போல சொல்லவும் இல்லை

      • //நண்பர்களே இந்தியாவில் நடந்த அணைத்து குண்டு வெடிப்புகளுக்கும் காரணம் பாசிசத்தை விசமாக கக்கும் R S S அதன் துணை அமைப்புகளும் என்பது இந்திய மக்கள் அனைவரும் அறிந்த விசயம்.//

        இந்தியாவில் நடந்த ‘அனைத்து’ குண்டு வெடிப்புக்கும் காரணம் ஆர்.எஸ்.ஏஸ்.ஸாம். சும்மா ஒரு பின்னூட்டத்துக்கே வரிந்து கட்டிக் கொண்டு வரும் வினவு & கோ. இதுக்கெல்லாம் வாய மூடிகிட்டு இருப்பாங்க. அதையும் கேள்விக்குறி ஒத்துக்கறார். இது தான் உங்க நிலைன்னா…நான் ஆர்.எஸ்.எஸ்.ஸை கண்டபடி ஆதரிக்கிறேன்.

        • அய் சீனு, கோயபல்சு வேலையை கச்சித செய்யுறீயளே… நான் மேல என்ன சொல்லியிருக்கேன்

          @@@@ஒரு வேளை ஆக்சுவலா எல்லா குண்டையும் அங்க கொண்டு போய் வச்சதே சங்க் பரிவார்னு நினைக்கிறீங்களா? அது உண்மையும் இல்லை, காக்ரே அதை நீங்கள் சொல்லவது போல சொல்லவும் இல்லை
          @@@@

          ஆனா நீங்களோ @@@அதையும் கேள்விக்குறி ஒத்துக்கறார்@@@ அப்படின்னு கூசாம புழுகியிருக்கீங்க….

          மத்தபடி நீங்க ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர்னு புரிஞ்சுக்க நேக்கிதல்லாம் தேவையில்லைணா

    • pakistan karana enda ulla varran??Ajmal kasab enna Hinduva illa Ajmal Kasab andha attacjka seiyaveillanriya?? 11 perum indian muslium thaanriya??edukeduthaalum RSS Sang Parivar???Ellarum onna koodi fight panni pakistan edhirkka vendiya nerathula ippadi inga irundhu konde pakistana pathi oru vaartha kooda manasathiye illama ezhudureengelada???
      RSS ozhikkapadavendum enru naanum othu kolkiren adhe samayam Muslim league ellm ozhikkapadavendum.. Oru religiona sarndhu irukkura parties ellam Theeviravaadhi thaan avngala veithukonmdu democracynu solradhulam nadakkatha kaariyam

    • சீனு, சரவ் உங்களை மாதரி இந்து மதவெறியர் இல்லை, அதனாலதான் அவர்கிட்ட இந்த கேள்வியை கேட்டேன் #டவுட்டு கிளியர்

  6. குண்டுகள் ஏன் வெடிக்கின்றன?

    கட்டுரை மிகத்தெளிவாக குண்டுவெடிப்புக்கு எதிரான வழிமுறைகளை

    வெளிப்படுத்தியுள்ளது.ஆனால்,அதியமான் சீனு மற்றும் சாரவ் ஆகிய மூன்று பேரும்

    கட்டுரையின் முழு பரிமாணத்தையும் புரிந்து கொள்ளவில்லை எனத் தெரிகிறது.மீண்டும்

    படித்து அறிந்து கொள்ளவும்,மற்றவர்களுக்கும் பகிர்ந்துகொள்ளவும்

  7. தமிழில் இன்று வெளிவந்திருக்க வேண்டிய மிக முக்கியமான கட்டுரையை வினவு(தான்) வெளியிட்டுள்ளது.

    சில சம்பவங்கள் தொடர்பான வரிகளை மட்டும் நீக்கிவிட்டுப்பார்த்தால் உலகம் முழுமைக்கும் பொருந்திப்போகும் கட்டுரை.

    கவிதைக்கே உரிய இயல்புகள் இந்தக்கட்டுரையில் இருக்கின்றன. நயப்புக்கும் சுவைப்புக்கும் என்றில்லாமல், மக்களை உண்மையிலேயே சிந்திக்கவைக்கவும் எழுச்சி கொள்ளச்செய்யவும் அந்தக் கவித்துவம் பயன்படுகிறது.

    நன்றி வினவு.

  8. வினவு அவர்களே!

    வெறும் திண்ணை பேச்சு அரட்டை அடிக்கும் சீனு,அதியமான்&சாரவ் போன்றவர்களின்

    மறுமொழிகளைப் போட்டு வினவினை பார்க்கும் மற்றவர்களை எரிச்சல்

    அடையச்செய்யாதீர்கள்.

    • எரிச்சலைப் பொறுத்துக்கொள்ள வேண்டும். எதிர்க்கருத்தே இருக்கக்கூடாது என்ற நிலைப்பாடு நல்லதா?

      உதாரணமாக தில்சன் கொலை குறித்த பதிவில் இங்கே மறுமொழியிட்ட தொப்பி தொப்பி என்ற பதிவர், அதற்கு எதிர்கருத்து வந்தவுடன் கும்பலா வந்து அடிக்குறாங்க என்ற ரேஞ்சில் திட்டி விட்டு போனார். சீனுவும் இதுதான் பாசிசம் என்று விளக்கம் கொடுத்தார். மறுநாள் திருடன் தில்சனை சுட்டது சரிதான் என்ற மாதிரி தொப்பி தொப்பி பதிவு எழுத அதற்கு நான் போட்ட பின்னூட்டங்கள் பலவற்றை வெளியிட வில்லை. இது முதல்முறை அல்ல.

      இப்படி இருக்கிற பதிவுலகில் வினவின் பின்னூட்டக் கொள்கை சரியானதே.

  9. சோனியாவையும், கையாலாகாத பிரதமரையும், காங்கிரஸ்ஐயும் மக்கள் ஒழித்து கட்டினால்தான் இந்தியா உருப்படும். ஏன் ஒவ்வொரு முறையும் பொதுமக்களே பாதிக்கபடுகின்றார்கள்? ஏன் ஒரு அரசியல்வாதியும் அவர்கள் குடும்பமும் பாதிக்கபடுவதில்லை? மத்திய அரசுக்கு தன்னுடைய நண்பர்களை ஊழல் வழக்குகளில் இருந்து காப்பற்றவும், பெட்ரோல் மற்றும் டீஸல் விலை ஏற்றம் செய்யவும், அம்பானி மற்றும் அமெரிக்க கம்பனிகளை காப்பற்றவும், கருப்பு பணத்தை பற்றி தேவை இல்லாத விளக்கம் கொடுக்கவும், ராகுல் புகழ் பாடவும் தான் நேரம் சரியாக உள்ளது. இன்னிலையில் நாட்டின் பாதுகாப்பு, பொது மக்கள் மீதான அக்கறை பற்றியெல்லாம் அவர்களிடிம் இருந்து எப்படி எதிர் பார்க்கமுடியும்?பஜக ஆட்சியில் தீவிர வாதத்தை ஒழிக்க பொடா சட்டம் பயன்படுத்தப்பட்டது.ஆனால் காங். இதை ரத்து செய்தது.ஓட்டுக்காக தீவிரவாதத்தை வளர்க்கிறது காங்,எனவே,காங். முற்றிலும் ஒழிக்கப்பட்டாலே நாட்டை பாதுகாக்க முடியும் வளப்படுத்த முடியும்.இல்லையேல் அப்பாவி மக்களுக்கு இதே கதிதான். காங்.இன் சாதனை தீவிரவாதம் வளர்த்தது ஊழல் சாதனை புரிந்தது…….மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறுகிறார் இது உளவு துறையின் தவறு அல்ல என்று. ஆமாம் இது மக்களின் தவறு தான்; குண்டு வெடிக்கும் நேரத்தில் அங்கு இருந்த மக்களின் தவறு. இந்த UPA அரசாங்கத்திற்கு ஒட்டு அளித்த மக்களின் தவறு.உறவினரை பார்ப்பதற்காக ஜே.ஜே. மருத்துவமனைக்கு வந்திருந்த இளம் பெண் ஆவேசமாகக் கூறுகையில், “எந்த பாவமும் செய்யாத அப்பாவி மக்கள் பலியாவதை பார்க்கும்போது, எனக்கு பயங்கர கோபம் வருகிறது. மக்களை பாதுகாக்கும் பொறுப்பில் உள்ளவர்கள், தங்கள் கடமையைச் செய்யத் தவறி விட்டனர். மத்திய அமைச்சர்கள் ஒருவர் வீட்டில் கூட குண்டு வெடிப்பதில்லை. அது மட்டும் எப்படி என்று தெரியவில்லை. காங்கிரஸ் கட்சிக்கு தீவிரவாதத்தை ஒடுக்க ரொம்பவே பயம். மீறி நடவடிக்கை எடுத்து ஏதாவது அசம்பாவிதம் நடந்துவிட்டால் அடுத்த தேர்தலில் ஒட்டு விழாது என்று பயம். இந்த மாதிரி பயன்தாங்கோள்ளிகளிடம் தான் நாம் ஆட்சி அதிகாரத்தை கொடுத்துள்ளோம். மேலும் காங்கிரஸ் கட்சிக்கு ஊழல் செய்வதற்கும், அடுத்து எப்போ பெட்ரோல், டீஸல் விலையை உயர்த்தலாம், ராஜபட்சேகு என்ன ஆயுதங்கள் குடுக்கலாம் போன்ற முக்கியமான வேலைகள் நிறைய இருக்கிறது. அவர்களுக்கு தெரிந்த ஒரே வசனம் ” மக்கள் குண்டுவெடிப்பில் இருந்து மீண்டுவிட்டனர்” என்பதுதான். இவர்களின் சீட்டுக்கு அடியில் தான் தீவிரவாதிகள் குண்டு வைக்க வேண்டும்.

  10. இங்க யார் குண்டு வைக்குரான்னு உனக்கும் தெரியும் எனக்கும் தெரியும் எல்லா அல்லக்கைகளுக்கும் தெரியும்..ஆனால் மருந்துக்குக்கூட அவனுகள விமர்சிக்காம தேவைஇல்லாம இந்து இந்து மதவெறி இந்து தீவிரவாதம் என்று எழுதி இந்த தீவிரவாதிகளுக்கு ச்ந்தொஸம் கொடுப்பது எல்லாம் ஒரு பொழப்பூ_______________

    ஆனா ஒன்னு தம்பி, உன்நண்பனோ குடும்பமோ பாதிக்கப்பட்டல் இதுபோல் முட்டாள் தனமான பித்தலாட்டக் கருத்துக்கள் அடஙிய கட்டுரையினை எழுதுவாயா…செத்தவன் எவனோ இள்ச்சவாயன் தானே..இன்டியாவிற்க்கு ஒரு இரும்பு மனிதன் தேவை இந்த விசச்செடிகல் அனைதும் வேரோடு பிடுஙி எறியப்படவேண்டும்..

    • //பையா அவர்களே பாத்ரும்லே தண்ணி வரலே பால்கனிலே உள்ள பேண்டே காணோம், இதுக்கும் பாகிஸ்தானின் i s i காரணம்.//

      இல்லைங்கேறீங்களா? அத்வானி நேத்து இதத்தான் பிரஸ் மீட்டுல சொல்லிருக்காரு அதை தமிழ்மண்டு இணையத்தளத்திலும் போட்டிருக்காங்க. அந்த ஆதாரம் போதாதா உங்களுக்கு? என்ன அநியாயம் இது, நாடு கெட்டுவிட்டது, கலி முத்திடுத்து. பாத்ரூம்ல தண்ணி வராததுக்கு ஐ எஸ் ஐ காரணமில்லனு தைரியமா பதிவுல சொல்றா.

      //இங்க யார் குண்டு வைக்குரான்னு உனக்கும் தெரியும் எனக்கும் தெரியும் எல்லா அல்லக்கைகளுக்கும் தெரியும்//

      நீங்க அல்லைக்கை, அல்லாக்கையானு தெரியாது. ஆனா, சோத்துல உப்பு போட்டு திங்கிற மான ரோசமுள்ள இந்து என்றால் சொல்லுங்க கீழ உள்ள குண்டுகள வைச்சிது யாருனு.

      பட்டியல் (விவரமான பட்டியலுக்கு http://www.outlookindia.com/article.aspx?266145)

      1/ அஜ்மீர் குண்டு வெடிப்பில் முதலில் முஸ்லீம் பயங்கரவாதிகள் மீது பலி போட்டனர். பிறகு மாட்டிக் கொண்டவர்கள் ஆர் எஸ் எஸ் காவி பயங்கரவாதிகள்.

      2/ தென்காசி குண்டு வெடிப்பு – இந்து முன்னணி தலைவர் கைது. அவனது வாக்குமூலம்:
      “”இந்துக்கள் மத்தியில் ஆதரவு கிடைக்கவில்லை. எனவே ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் மீது குண்டு வீசினால் ஆதரவு கூடும் என்பதால் செய்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர் என்றார் சஞ்சீவ் குமார்.””

      3/ 2009ல் தீபாவளிக்கு முந்தைய நாள் கோவாவில் இந்துக்கள் கூடும் இடத்தில் ஆர் எஸ் எஸ் பயங்கரவாதிகள் இருவர் குண்டு வைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த போது அது தவறுதலாக வெடித்து கொல்லப்பட்டனர்.

      4/ மலேகான் தொடர் குண்டு வெடிப்புகள்
      Malegaon Blasts-I
      September 8, 2006
      37 dead

      * Initial arrests: Arrested include Salman Farsi, Farooq Iqbal Makhdoomi, Raees Ahmed, Noorul Huda Samsudoha and Shabbir Batterywala.
      * Later revelation: Suspicion now rests on Hindu terrorists because of the 2008 blasts.

      Malegaon Blasts II
      September 29, 2008
      7 dead

      * Initial suspicion: Groups like Indian Mujahideen involved
      * Later revelation: Abhinav Bharat and Rashtriya Jagaran Manch accused of involvement. Arrested include Pragya Singh Thakur, Lt Col Srikant Purohit and Swami Amritanand Dev Tirth, also known as Dayanand Pandey.

      5/ பானிபட் குண்டு வெடிப்பு

      6/ கான்பூர் குண்டு வெடிப்பு

      7/ நாண்டட் குண்டு வெடிப்பு

      8/ நாக்பூர் ஆர் எஸ் எஸ் அலுவலகத்தில் தானே குண்டு வைத்து மாட்டிக் கொண்டது

      9/ தானே சினிமா தியேட்டரில் குண்டு வெடிப்பு (சினிமா பாக்க முஸ்லீம் மட்டுமா வற்றான்)

      10/ ஹைதராபாத் குண்டு வெடிப்பு

      11/ இப்போது நடந்துள்ள குண்டு வெடிப்பு போலவே பெட்ரோல் முதலான எரிபொருள் குண்டுகளைக் கொண்டு துணை ஜனாதிபதியை கொல்ல சதி செய்து அது தோல்வியடைந்தது பற்றி 2008ல் பேசுகிறார்கள் ஆர் எஸ் எஸ் பயங்கரவாதிகள் அதில் ஒருவன் இரு முறை எம்பியான சர்மா.

      12/ 2007ல் ச்ம்ஜுவாதா ரயில் குண்டுவெடிப்பு 68 பேர் படுகொலை.
      Initial suspicion: LeT and JeM were blamed. Those arrested included Pakistani national Azmat Ali.

      13/ மெக்கா மசூதி குண்டு வெடிப்பு
      Mecca Masjid Blast
      May 18, 2007
      14 dead
      * Initial arrests: Around 80 Muslims detained for questioning and 25 arrested. Several have now been acquitted, including Ibrahim Junaid, Shoaib Jagirdar, Imran Khan and Mohammed Adul Kaleem.
      * Later revelation: In June 2010 the CBI announced a cash reward of Rs 10 lakh for information on the two accused, Sandeep Dange and Ramchandra Kalsangra. Lokesh Sharma arrested.

      14/ 2007ல் பெங்களூரில் பஸ்ஸ்டாப்பில் குண்டு வெடிக்கிறது, தொடர்ந்து அடுத்த சிலமணி நேரங்களில் மரத்தின் மீது, ஸ்டேடியம் என பாஜக ஆட்சி செய்யும் மாநிலத் தலைநகர்களில் அடுத்தடுத்த பல பத்து குண்டுகள் போலீசால் ‘கண்டு’பிடிக்கப்படுகீறது. இதெல்லாம் ஆர் எஸ் எஸ் சொல்லி வைச்சி நடத்துற டிராமாவா இல்லையா என்பதை கொஞ்சம், நஞ்ச மூளையும், மனதில் நேர்மையும் உள்ளவர்களின் முடிவுக்கே விட்டுவிடுகிறேன்.

      இந்த பட்டியலும் கூட முழுமையானவை இல்லை. இன்னும் பல்வேறு வெடிகுண்டு ஆய்வு விபத்துக்கள், சிறு சிறு குண்டு வெடிப்புகள் – குஜராத், மஹராட்டிராவில் வியாபாரிகளை மிரட்ட பார்சல் குண்டுகள் அனுப்புவது, கேரளாவில் கண்ணூர் பகுதிகளில் குண்டு தாயாரிக்கும் முயற்சியில் விபத்து நடந்து ஆர் எஸ் எஸ் பயங்கரவாதிகள் செத்தொழிந்த சம்பவங்கள், நாடக கலைஞர்-ஆசிரியர்கள் மீதான வெடி குண்டு தாக்குதல்கள் இவையெல்லாம் சொற்பமாகவே பதிவு செய்யப்பட்டுள்ளன.

      • //14/ 2007ல் பெங்களூரில் பஸ்ஸ்டாப்பில் குண்டு வெடிக்கிறது, தொடர்ந்து அடுத்த சிலமணி நேரங்களில் மரத்தின் மீது, ஸ்டேடியம் என பாஜக ஆட்சி செய்யும் மாநிலத் தலைநகர்களில் அடுத்தடுத்த பல பத்து குண்டுகள் போலீசால் ‘கண்டு’பிடிக்கப்படுகீறது. இதெல்லாம் ஆர் எஸ் எஸ் சொல்லி வைச்சி நடத்துற டிராமாவா இல்லையா என்பதை கொஞ்சம், நஞ்ச மூளையும், மனதில் நேர்மையும் உள்ளவர்களின் முடிவுக்கே விட்டுவிடுகிறேன்.//

        இந்த பஸ் ஸ்டாப் வெடிகுண்டு வெடிப்பில் ஒரு அப்பாவி பெண் கொல்லப்பட்டார் அவர் இந்து என்று பத்திரிகைகள் சொல்லின.

  11. அதான பாத்தேன்.வெள்ளிகிழம ஆனாலே வினாவுக்கு ஹிந்துத்வா காவி வெறி பாஜக ஆர் எஸ் எஸ் இதை பத்தி பேசலைன்னா மண்ட வெடிச்சிடுமே!!

  12. காவி காவி காவி பொது மக்களை விட வினவுதான் ஆர் எஸ் எஸ் சுக்கு நல்ல விளம்பரம்.,

  13. 1947க்கு பின் இந்தியாவில் உள்நாட்டுக் கலவரத்தைத் தூண்டி விடுவது, உள்நாட்டுப் பிரச்சினையைப் பெரிது படுத்துவது, ஜம்மு-காஷ்மீர் மற்றும் இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் இந்து முஸ்லீம் வகுப்புக் கலவரத்தை ஏற்படுத்துவது, பல்வேறு பயங்கரவாதச் செயல்களுக்காகக் குற்றம் சாட்டப்பட்ட தாவுத் இப்ராஹிம் , அபு சலீம், சோட்டா சகீல், அலடாப் அன்சாரி, போன்றவர்களுக்கு முழு ஆதரவும், பாதுகாப்பும் கொடுப்பது, கள்ள நோட்டுகளை அதிக அளவில் இந்தியாவில் புழக்கத்தில் நுழைத்து இந்தியப் பொருளாதாரத்தைச் சீர்குலைப்பது, பயங்கரவாதிகளை உருவாக்கி அவர்களுக்கு பாகிஸ்தானில் முழுப் பயிற்சி அளிப்பது, இம்மாதிரியான காரியங்களுக்கு உதவிகரமாக இருக்க சிலீப்பர் செல்(Sleeper Cell) என்கிற அமைப்பை ஏற்படுத்துவது என்பனவே ஐஎஸ்ஐயின் முக்கிய நோக்கங்களாகும்.
    ஆந்திராவில் செயல்படுபவை Darsgah-e-jehad-o-Shahadat, Tahreek Tahfooz Shaer-e-Islam எனப்படும் மிகவும் மோசமான அமைப்புக்களாகும். 2001ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27ந் தேதி மத்திய அரசு சிமி இயக்கத்திற்குத் தடைவிதித்த பின், பல்வேறு பெயர்களில் பல மாநிலங்களில் சிமி இயக்கத்தினர் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டுள்ளார்கள். தமிழகத்தில் முஸ்லீம் முன்னேற்றக் கழகம் எனும் பெயரிலும், கேரளத்தில் நேஷனல் டெவலப்மென்ட் ஃப்ரண்ட் என்கிற பெயரிலும், வட மாநிலங்களில் இந்தியன் முஜாஹிதீன் என்கிற பெயரிலும் தங்களது பயங்கரவாதச் செயல்பாடுகளை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். சிமி இயக்கம் தடைசெய்யப்பட்ட பின் ஆந்திராவில் இரண்டு முக்கிய இயக்கங்கள் முளைத்தன. ஒன்று தர்ஷா-இ-ஜிகாத்-ஓ-ஷாகிதத் (Darsgah-e-jehad-o-Shahadat) இரண்டாவது தாரிக் தப்ஃஸ் ஷோ-இ-இஸ்லாம் (Tahreek Tahfooz Shaer-e-Islam) என்கிற பெயரில் தங்களது பயங்கரவாத நடவடிக்கைகளைச் செய்தார்கள்.

    • பையா அவர்களே பாத்ரும்லே தண்ணி வரலே பால்கனிலே உள்ள பேண்டே காணோம், இதுக்கும் பாகிஸ்தானின் i s i காரணம்.

      • பையா,
        முதல்ல நீ வளரு இல்லடா போய் பெரியாள கூப்பிடு, தமிழ் நாட்டுல முஸ்லிம் முன்னேற்ற கழகம் என்பது அனைத்து மக்களுக்கும் உதவி செய்ய கூடிய மிக பெரிய இயக்கம், அப்புறம் கேரளாவில் N D F என்பது இப்போது அகில இந்தியளவில் பாப்புலர் பிரான்ட் ஒப் இந்திய என்ற மக்கள் பேரியக்கமாக செயல் பட்டு கொண்டிருகிறது.இந்த நாட்டில் ஒழிக்கப்படவேண்டிய தீவிரவாத இயக்கம் எது தெரியுமா ,
        1 , R S S தீவிரவாத இயக்கங்களுக்கு தாய் ( தேச தந்தை காந்தியை கொன்றது, மூன்று முறை இந்திய அரசாங்கத்தால் தடை செய்ய பட்ட தீவிரவாத இயக்கம்)
        2 , V H P ( தலைவர் பிரவின் தொகாடிய )
        3 , சிவசேன ( பால்தாக்ரே ) சாதனை ( பல ஆய்ரம் முஸ்லிம் மக்களை கொன்றது )
        4 , ராம் சேனா ( முதாலிக்) (பணத்திற்காக மத கலவரத்தை உண்டு பண்ணுவது ஆதாரம் தெகல்ஹா )
        5 , பாரதிய ஜனதா ( தீவிரவாத இயக்கத்தின் அரசியல் முகமூடி ) சாதனை ( ரத்த யாத்திரை செல்வது, பழமையான இறை இல்லம் பாப்ர்மசுதியை தகர்த்து எரிந்தது) பல ஆய்ரம் குஜராத் முஸ்லிம்களை இன படு கொலை செய்தது , ( அத்வானி, உமாபாரதி, ராஜ்நாத் சிங்க் ,வாஜ்பேய், பிணம்தின்னும் மோடி )
        6 , ஹிந்து முன்னணி ( ராமகோபாலன் ) பெரியார் பிறந்த மண்ணில் தமிழகத்தில் ஹிந்துதுவை உயிர் பிக்கும் தீவிரவாதி , இன்னும் பல ஆய்ரம் தீவிரவாதிகள் IRUKIRARGAL .

        நண்பர்களே , இவர்கள் அனைவரும் தேசிய தலைவர்கள் போல் வேடமிட்டு திரியும் தேசிய தீவிரவாதிகள்
        இவர்கள் அனைவரும் நாட்டிற்கு வெளியே இருக்கப்பட வேண்டியவர்கள் அல்ல, நாட்டிற்கு உள்ளே ( கல்லறைக்குள் ) இருக்கபட வேண்டியவர்கள்

        • அகமது சில்லறைப்பயல் முத்தாலிக்கெல்லாம் வரும் இந்த பட்டியலில் ஏன் அண்ணா திமுக தலைவி ஜெயலலிதா இல்லை, மதமாற்ற தடைச்சட்டமும், அயோத்தி இராமனுக்கு கோயில் கட்ட விழைந்த அக்மார்க் சுயம்சேவகியாயிற்றே அவர். மேலும் நரேந்திர மோடியின் தோழி. பதவியில் இல்லாத காலத்திலும் அவர் பதவியேற்பை சிறப்பித்தவர். சோ இராமசாமியை அரசியல் ஆலோசகரைப்போல வைத்திருப்பவர்….. இப்படி ஜெவின் இந்துத்வ சார்பை இன்று முழுவதும் சொல்லிக்கொண்டே இருக்கலாமே

          • தமிழ் நாட்டில் காவி மறு உருவம் அவாள் தான் enru அனைவருக்கும் தெரிந்த விசயன் நண்பா

        • தடை செய்யப்பட்ட சிமி இயக்கம் எந்தெந்தெ ஊருல என்னென்ன பேருல இறுக்குன்னு எங்கள விட உமக்குந்ல்லாவே தெரியும்..பாம்பேல்ல வைக்குற குன்டு கூட நம்ம பாளையங்கோட்டையிலும், திண்டுக்கல் பேகம்பூரிலும் தான் திட்டமிடப்படுகின்றா..னீஙக வருசத்தகுக்கு 10 குண்டு வப்பீங்க உங்க இயக்கஙகளின் பெயர்கள் தான் வேற ஆனாநெட்நொர்க் ஒன்னுதான்….

          உங்களை போன்ற தீவிரவாத இயக்கங்களை ஒழிக்க இப்ப இறுக்குற சோப்புலாங்கி அரசு லாயக்கு இல்லை…ஒருந்ரேந்திர மோடியோ, ஜெயலலிதாவோ தான் இந்தியப் பிரதமர் ஆகவேனும்..

        • தமிழ் நாட்டுல முஸ்லிம் முன்னேற்ற கழகம் என்பது அனைத்து மக்களுக்கும் உதவி செய்ய கூடிய மிக பெரிய இயக்கம், அப்புறம் கேரளாவில் N D F என்பது இப்போது அகில இந்தியளவில் பாப்புலர் பிரான்ட் ஒப் இந்திய என்ற மக்கள் பேரியக்கமாக செயல் பட்டு கொண்டிருகிறது

          nee solvadella unake sirippa illa. makkalukku udhavi seiyuraanam,, evanavadhu emadhavan kitta sollu
          “Those who reject faith and deny Our revelations will inhabit the blazing fire.” (Sura 5, Aya 10) Quranla thaan irukku poi refer panni paaru.
          Indha madatha base panni party nadathuravan ellam nalladhu seiyiraanam.

          Have this
          Those who wage war against God and his Messenger and strive to spread corruption in the land should be punished by death, crucifixion, the amputation of an alternate hand and foot or banishment from the land: a disgrace for them in this world, and then a terrible punishment in the Hereafter, (Sura 5 Aya 33)

          The Messiah, son of Mary, was only a messenger; other messengers had come and gone before him; his mother was a virtuous woman; both ate food [like other mortals]. See how clear We make those signs for them; see how deluded they are. (Sura 5 Aya 75)

          Say, ‘People of the Book, you have no true basis [for your religion] unless you uphold the Torah, the Gospel, and that which has been sent down to you from your Lord,’ but what has been sent down to you [Prophet] from your Lord is sure to increase many of them in their insolence and defiance: do not worry about those who defy [God]. (Sura 5 Aya 68)

          Idhellam quranla illave illanriya???

        • மிழ் நாட்டுல முஸ்லிம் முன்னேற்ற கழகம் என்பது அனைத்து மக்களுக்கும் உதவி செய்ய கூடிய மிக பெரிய இயக்கம்

          idhu thanathin Ucha kattam,.. Ippadioye pesa unakku na koosavillayada??
          Enda puluguna ena vena pulugalamnu nenachiyada, poi Kilpaukathikku 37 pudichu po nee pudikka venam avangalave unna ethippangada.. Anga ponenna unnoda nanbargal neraya per iruppaanugada avanuga koodave join panniru.. vidhysamave irukkadhu da

        • Better luck next time ahamed.. RSSkum Muslim leaguekum oru mayiralum vidhyasamillai Munnamar Hindu terrorist Pinnavar Islam terrorist avalo thaan adhannalle thannila venna edukkura velaya inga edubadathu.. poivera velaya paaruda!!!

    • //1947க்கு பின் இந்தியாவில் உள்நாட்டுக் கலவரத்தைத் தூண்டி விடுவது, உள்நாட்டுப் பிரச்சினையைப் பெரிது படுத்துவது// 1887லிருந்தது இந்த வேலையச் செய்யிறவன் ஆர் எஸ் எஸும் அதனது முன்னோர்களும்தான்.

      சாதிவெறி பேசி மக்களைப் பிரிப்பது, மதவெறி தூண்டிவிட்டு மக்களைப் பிரிப்பது, கலவரங்கள், இனப் படுகொலைகள், குண்டு வெடிப்புகள், கும்பலாக சேர்ந்து கூட்டு வன்முறையில் இறங்கி சமூகத்தை terrorize செய்வது போன்றவற்றை செய்து தேசத்தின் ஸ்திரத்தன்மையை சீர்குலைப்பது, உள்நாட்டுக் கலவரத்தை குமரி மாவட்டம் மண்டைக்காடு, கோவா, ஹைதராபாத், ஒரிஸ்ஸா, கண்ணூர், குஜராத், மஹராட்டிரா, சிக்கிம் என நாடு முழுவதும் தூண்டி நரவேட்டையாடுவது, வானம் படத்தில் வருவது போல தனிமனிதர்களின் அந்தரங்களில் அத்துமீறி தலையிட்டு காவி ரவுடித்தனம் செய்வது, மாட்டுத் தோல் உரித்தத தலித்துக்களை உயிருடன் தோலுரித்துக் கொல்வது, காதலர்களை படுகொலை செய்யும் சாதி வெறி படுகொலையாளர்களை ஆர் எஸ் எஸ்ன் தலைவர்களாக்கி அழகு பார்ப்பது, பெண்கள், குழந்தைகளை கொல்வது, விநாயக்ர் சிலையை உடைத்து பலியை முஸ்லீம் மீது போட்டு கலவரங்களை உண்டாக்குவது மாட்டிக் கொண்ட பிறகும் வெட்க்மின்றி பையா-சீனு என்ற பெயர்களில் உள்றுவது இத்தகைய கேரக்டர்களைக் கொண்ட ஆர் எஸ் எஸ் பயங்கரவாத அமைப்பை சரியென்று சொல்ல ஒருவனுக்கு கொஞ்சமாவது கூச வேண்டுமே?

    • //தமிழகத்தில் முஸ்லீம் முன்னேற்றக் கழகம் எனும் பெயரிலும்,//

      பையா! அப்புடின்னா அம்மா தீவிரவாதிங்க கூடவா தேர்தல் கூட்டணி வச்சிக்கிட்டாங்க! முதல்ல அம்மாவ புடிச்சு உள்ள போடனும்.

  14. பயஙரவாதிகள் மனதில் உரம் படைத்தவர்கள் எனப் பாராட்டு!
    பாபர் மசுதி இடிப்புக்கு முன்னும் கலவரங்கள்நடந்துள்ளன. அப்போது சங்க பரிவார் இந்த அளவு கூட பயங்கர வாதம் பேசியதில்லை. உண்மையில் சங்க பரிவாரின் பயங்கர வாதமே கத்தி குத்துகள், குண்டு வெடிகளின் மறுவினையே.
    எது எப்படியோ, இது நாம் விரும்பியோ விரும்பாமலோ இந்து மெஜாரிடி நாடாக இருப்பதால், மைனாரிடி கொஞம் வளைந்து கொடுக்கக் கற்றுக் கொள்ளவென்டும். வரட்டு செக்யுலரிச்ம் பேசக் கூடாது. வரட்டு செக்யூரலிச்ட்டுகள் அவர்களை உசுப்பி விடாமல் இருக்க வேண்டும்.
    அவர்களின் பொருளாதாரநிலைக்கு அவர்களின் குடும்ப அளவே (குடும்ப கட்டுப்பாடை மறுப்பது) காரணம். கல்வி, வேலை, பொருதாராள உயர்வு எல்லாம் வரும்.
    வெள்ளிக் கிழமைநமாசின் போது காசி குடும்ப கட்டுப்பாடு பற்றி சொல்லட்டும்.
    குண்டு வெடிப்புக்கள்நின்று போகும்.

    • //பாபர் மசுதி இடிப்புக்கு முன்னும் கலவரங்கள்நடந்துள்ளன. அப்போது சங்க பரிவார் இந்த அளவு கூட பயங்கர வாதம் பேசியதில்லை. //

      பாபர் மசுதிக்கு முன்பு குண்டு வெடிப்பே கிடையாது. அதற்குப் பிறகுதான் நடக்கிறது. அதுக்கு முன்பும், பின்பும் மதவெறி பேசி நாட்டைத் துண்டாடுவதில் நூற்றாண்டு பாரம்பரியம் கொண்டது ஆர் எஸ் எஸ்தான்.

      //விரும்பாமலோ இந்து மெஜாரிடி நாடாக இருப்பதால், //

      இந்து இந்துனு சொல்றீங்களே யாருங்க அவரு. பொய் பேசினா சாமி கண்ணக் குத்திடும்னு சொல்லி உங்க வீட்டுல உங்களை டிசிப்ளினா வளர்க்கலையா? ஏன் வாய்க் கூசாம பொய் சொல்றீங்க.

      • ஆமானேன் அடுத்தவன குண்டு வச்சுக்கொன்னவன்ளாம் அமேரிக்க ராணுவத்திடம் அடிபட்டுச்சாவான்னு சொல்லி வளக்கலை..

        • அப்டீனா உங்க RSS காரன்தான் சாகணும். அப்போ அமெரிக்காவின் அடுத்த இலக்கு இந்தியா தானா?

          கொஞ்சம் bettera யோசிங்க ‘பையன்’.

          • அமேரிக்காக்காரஙிட்ட அடிபட்டு செத்தது ஆர்ஸ்ஸ் காரனில்ல…உஙக அண்ணன் பின் லேடன் தான்

    • விஞ்ஞானினு பேரு வச்சிக்கிட்டா ரொம்ப புத்திசாலி தனமா யோசிக்கிறதா நினைப்போ?

      /குடும்ப கட்டுப்பாட்டை மறுக்குறாங்களாம். அதனால பொருளாதார நிலைமை சரி இல்லையாம். அதனால குண்டு வெடிக்கிறானாம்./

      90 சதவீத குண்டுகள் வைத்தது இந்து வெறியர்கள் தான். ஆனால் அந்த பழியை இஸ்லாமியர்கள் மேல் போட்டுவிட்டு அவப்பெயரை உருவாக்கிய கயவர்களும் அவர்கள் தான்.

      அதைதான் நண்பர் ‘podang_maan ‘ மேலே சுட்டிக்காட்டியுள்ளார். அதை படித்த பிறகும் இது போன்ற பைத்தியகாரத்தனமான பின்னூட்டமிடும் உமக்கு விஞ்ஞானி என்ற பெயர் ஒன்று தான் கேடு…

  15. ஏன் டா இப்படி அநியாயம் பண்றீங்க….உங்க தலித்திய பற்றும், இசுலாமிய ஓரவஞ்சகமும் உங்களை முட்டாத்தனமான பதிவுகள் எல்லாம் போட வைய்க்குதா???? நீங்களும் பொட்டை தனமான தீவிரவாதி தான் டா….. தலித்தும், முஸிலிமும் எது செய்தாலும் நியாயம் அப்பிடி தான? சரி டா…….நீங்க உங்க நடுநிலைதன்மைய இழந்துட்டீங்க……..உங்கள முதல்ல பொடா சட்டதுல உள்ள போடணும் டா…….

    • வினவின் அடினாதமே அதுதான..இவஙக தலித்திய பற்றினால் இந்துத்துவாவை தறக்குரைவாக விமர்சித்து எழுதுவது..முஸ்லிம் தீவிரவாதத்தினை மறைமுகமாக ஆதறிப்பது..தலித் அல்லாத மற்ற ஜாதியினரை சீண்டுவது..இதுல எஙடாநடுனிலைமை இறுக்கு…

  16. ஓலப் பாயில நாய் மோண்டது போல என்று எங்க ஊர் பக்கம் ஒரு பழமொழி சொல்வாய்ங்க. அதுதான் ஞாபகத்துக்கு வருது. ஒரு புத்திசுவாதீனம் உள்ளவன் எனில் மனதில் நேர்மை உறுதி உள்ளவன் எனில் எதிர்கருத்து சொல்பவனின் அனைத்து கேள்விகளுக்கும் பதில் சொல்லுவான்.

    அப்படியில்லாதவன் ஒன்று புத்திசுவாதீனம் இல்லாதவன் பரிதாபத்திற்குரியவன் இல்லையேல் நேர்மையற்றவன் கடும் கண்டனத்துக்குரியவன். நம்ம பையா இதில் எந்த கேட்டகிரி என்பது அவருக்குத்தான் தெரியும். கட்டுரையில் இருப்பதையும் சரி, கட்டுரைக்கு கீழே உள்ள இந்து மதவெறியர்களின் குண்டு வெடிப்புகள் பற்றிய கட்டுரைகளையும் சரி மருந்துக் கூட மோந்து பார்க்காமல் புலம்பி திரிகிறார். அது மழைக்காலத்தில் அஸ்பெஸ்டாஸ் கூரையில் விழும் பெருச் சாரலின் சலசலப்பையும், ஓலப் பாயில் நாய் மோழுவதையும், குடிகாரனின் சலம்பலையும் ஒத்ததாக உள்ளது.

    கட்டுரையில் எது தவறாக உள்ளது என்பதைக் கூட சொல்லத் தெரியாமல் சம்பந்தமேயில்லாமல் எதையோ எழுதிக் கொண்டிருக்கிறார்.

    • கரெக்ட்நண்பா. ஆர் எஸ் எஸ் இன் தாய் கழகம் ஆரம்பிக்கப்பட்டதே தாழ்த்தப்பட்டவர்களை ஒடுக்குவதற்கும் பாப்பாரப்பண்ணாடைகளை உண்டு கொழுக்க வைப்பதற்கும்தான். அந்த கழிசடைகள் கண்டுபிடித்த ஒரு பொது எதிரி முசுலிம். அது வரை வெகுஜனப்போராட்டமாக மதப் பாகுபாடில்லாமல் ஒற்றுமையாகநடந்த ஒரு போராட்டம் மத அடிப்படையில் பிளவு பட்டது. பழியை பிரித்தாளும் சூழ்ச்சி என்று ஆங்கிலேயர் மீது போடுவர் இந்த “முதுகில் பெல்ட் போட்டோர்”. உண்மையாக இது வெகுஜனப்போராட்டமாக இருந்திருந்தால் இந்த பிராமண பனியா கும்பலிடம் இருந்து என்றோ அதிகாரம் மக்களிடம் சென்றடைந்திருக்கும். அப்பாவி மக்கள்( இந்துக்கள் மற்றும் முசுலிம்கள்) சூழ்ச்சியில் சிக்கி அதிகாரத்தை பறிகொடுத்தனர். தங்களுக்குள் அடித்துக்கொண்டு மாண்டனர். சதிகாரர்கள் இன்னும் வேறுவேறு வழிகளில்நம்மை ஏமாற்றிக் கொண்டுதான் உள்ளனர். இதோ பையா என்றும் பல்வேறு பெயர்களில் வந்தும். தம்பி. கெட்டிக்காரன் புளுகு எத்தனைநாளுக்கு என்று பார்ப்போம்.

        • அடிப்படைவாதிகள் எல்லா மதத்திலுமே உள்ளனர். இது புத்த மதம் சேர்த்த அனைத்து மதங்களுக்குமே பொருந்தும். மதம் என்பது முற்றி அழுகிப் போனால் அடிப்படைவாதம்தான் அதிலிருந்து பிறக்கும். தனது கோட்பாடுகள் என்றும் அசைக்க இயலாதவை மாற்றம் காணாதவை என்று எவன் கூறுகிறானோ அவன் அன்றிலிருந்து அடிப்படைவாதியாகிறான். இந்துத்துவம், தலிபான், போல்பாட் அரசு ஆகியன உதாரணம். இங்கே கேள்வி ஆரம்பம் யாரிலிருந்து என்பதுதான். இந்து வெறி, இசுலாமிய காழ்ப்புணர்ச்சி என்பவை அதிகாரத்தை பாப்பார, பனியா சாதியினரிடம் தக்க வைத்துக் கொள்ள வேண்டி திட்டமிட்டு தூண்டப்பட்டவை. அதன் இயற்கையான எதிர்வினை முசுலிம்களிடமிருந்து இப்படித்தான் வெளிப்படும்.
          இது அனைத்து முசுலிம்களின் எண்ணமல்ல.
          யோசித்துப் பாருங்கள். வீட்டைக் கொளுத்துவார்களாம். தமது பெண்களை இழிவு படுத்துவார்களாம். பிறந்த பிறக்காத குழந்தைகளைக் கொல்லுவார்களாம். பின்னர் யாரேனும் கோபம் கொண்டு எதிர்த்தால் (நான் குண்டு வைத்தார்கள் என்று கூறவில்லை.) தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தி விடுவார்கள். இந்த இந்து வெறிநாய்கள்(நாய்கள் மன்னிக்கவும்) விரும்புவதும் இதுவேதான். இந்த கட்டுரை விளக்கமாக இதையேதான் கூற வருகிறது. மற்றபடி என்றுமே நாங்கள் அடிப்படைவாதத்தை ஆதரிக்க வில்லை. குண்டு வைத்தல் வன்முறையில் ஈடுபடுதல் ஆகியன இந்து வெறியர்களின் நோக்கம் நிறைவேறவே உதவும். ஏனெனில் அவர்கள் விரும்புவதும் அதுவே. இதற்கு தீர்வு மொழி, இன, மத, தேச உணர்வுகளை தாண்டி மனித உணர்வில் ஒன்றுபட்டு பிரிவினைவாத சக்திகளை ஒழிப்பதே ஆகும்.
          எனக்குப் புரிந்தவாறு நான் கூறி உள்ளேன்.

          நீங்கள் கொடுத்த லிங்கை பார்த்தேன். அதற்கு ஏற்கனவே பதில் கூறி விட்டேன்.

          • @நான்கடவுள்இல்லை
            நீங்கள் கொடுத்த லிங்கை பார்த்தேன். அதற்கு ஏற்கனவே பதில் கூறி விட்டேன்.
            @நான்கடவுள்இல்லை
            Engu reply panniyioreekergal Searchindia websiteliya illa ingaya?..
            Indha replya paarthal thirumbavum Hindu verinai, sorinai nu unga nanbargala pathi kurupittirukireergal..
            Oru velai Searchindia websitela, Vairamuthu rangekku tamilzhla replky kodutheengana avanga publish panna maatanga… En endral avargal annaivarukkum puriya vendum enbatharkaga Englishla mattum than ezhudasolvaanga.. English theriyavillai enral paravaillai ungal badhivnai tamlile sollungal ingu ezhudungal.. naan ungalukkaga translate panni venna searchindiala kekuren..

            • //

              After a gap of about three years, India’s commercial capital Mumbai was rocked by a series of blasts this evening (Indian time).

              Indian media reports say 21 people died in the blasts.

              Another 141 were injured and have been admitted to KEM, JJ and other hospitals in Mumbai.

              Apparently, the explosions were triggered by Improvised Explosive Devices (IED) placed inside cars and on a motorcycle.

              The explosions are said to have occurred between 6:30PM to 6:35PM at the crowded Zaveri Bazar (diamond market), Dadar and Opera House.

              Opera House and Zaveri Bazar are in South Mumbai while Dadar is in Central Mumbai.

              India’s Home Ministry is describing the blasts as a terrorists strike. Of course, what else can it be.

              There were two blasts at Zaveri Bazar.

              Telephone lines are down in parts of Mumbai.
              History Repeats Itself

              In November 2008, Pakistan sent terrorists into Mumbai unleashing a 48-hour long attack that took the lives of several hundred people.

              India is considered an easy target by Islamic terrorists.

              Also, despite repeated terrorist attacks in Mumbai and elsewhere, India’s intelligence agencies, particularly the Intelligence Bureau, have proven to be grossly inadequate in anticipating and thwarting the devastating strikes. India is forever in reactive mode when it comes to terrorism

              //

              இதுதானே நீங்கள் கூறிய லிங்க். இதில் அப்படியென்ன பெரியதாகக் கூறி விட்டார்கள்.
              தங்களுக்கு முதலில் கிடைத்த புள்ளி விவரங்களை குறிப்பிட்டுள்ளார்கள். இது இசுலாமியத் தீவிரவாதிகளின் செயலேயல்லாமல் வேறல்ல என்று முடிவுகட்டி விட்டார்கள். மேலும் இந்தியா (இசுலாமிய) தீவிரவாதிகளை கண்டு பயப்படுகிறது. அவர்களை முடக்க ஒரு கடுமையான சட்டம் கொண்டு வர வேண்டும் என்று அறைகூவல் விடுக்கிறது.

              இவர்களின் எண்ணமெல்லாம் அதுவே. இந்த குண்டுவெடிப்பே முசுலிம்களை ஒடுக்க சட்டம் கொணருவதற்காக இவர்களே குண்டு வைத்திருப்பார்களோ என்று எண்ணத்தோன்றுகிறது.

  17. காங்கிரசு ஆட்சியில் 2008க்குப் பிறகு நடதுள்ள 2வது குண்டு வெடிப்பு இதுதான். பாஜக் ஆட்சியிலோ வாரம் ஒன்று என பல பத்து.

    காரணம் என்னவென்பதை இப்படியும் சொல்லலாம். காங்கிரசு ஆட்சிக்கு வந்த நேரமும், முஸ்லீம் குல்லா போட்டுக் கொண்டு ஆர் எஸ் எஸ் நாடு முழுவதும் குண்டு வைத்து இந்துக்களை கொன்றது தொடர்ச்சியாக அம்பலமாகி ஆர் எஸ் எஸ்ன் தலைமைக் குழுவைச் சேர்ந்த இந்திரேஸ் குமார் கைதாகும் நிலைக்குச் சென்றது. எனவே ஆர் எஸ் எஸ் தனது பயங்கரவாத நடவடிக்கைகளை சுருக்கிக் கொள்ளா வேண்டியதாகியது. எனவேதான் குண்டு வெடிப்புகள் இரண்டே இரண்டு மட்டும் நடந்துள்ளன.

    ஆனால், இப்போதோ முதலுக்கே மோசம் என்பது போல குஜராத், கர்நாடகா முதல் பாஜக் ஆட்சி செய்யும் அனைத்து பகுதிகளிலும் டவுசர் கழண்டு போயி ஊழல் புகாரில் நாறிக் கிடக்கிறது பாஜக. ஆர் எஸ் எஸ்ன் மதவெறி பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு சீனு, பையா போன்ற சில அரைலூசுகளின் ஆதரவைத் தவிர வேறொன்றும் தேறவில்லை. ராம்தேவ்ன் நாடகம் பா.சிதம்பரத்தால் டார் டாராக கிழித்து தொங்க விடப்பட்டுவிட்டது. இது போன்ற சூழலில்தான் குண்டு வெடிக்கிறது அல்லது என்னுடைய கருத்தில் ஆர் எஸ் எஸ் கும்பலால் வெடிக்க வைக்கப்பட்டுள்ளது.

    இந்த நாட்டில் குண்டு வெடிப்புகளை நோக்கினால் அவை மிகச் சரியாக நாட்டைக் கூட்டிக் கொடுக்கும் சட்டங்கள் இயற்றும் நேரமாகத்தான் நடைபெற்றுள்ளன. இதோ இப்போது நிலப்பறிப்பு சட்டத் திருத்தம், கல்விக்கான சட்டத்திருத்தம் ஆகியன வர இருக்கின்றன. குண்டு வெடிக்கிறது.

    இப்போ நடந்துள்ள இந்த குண்டு வெடிப்பின் மோடஸ் ஒபாராண்டியை பார்க்கலாம். முஸ்லீம் பயங்கரவாதிகள் போல ஆர் டி எக்ஸ் ரகக் குண்டுகளை வைக்கவில்லை. மாறாக ஆர் எஸ் எஸ் பயங்கரவாதிகள் இதற்கு முன்பு செய்த 10, 16 குண்டு வெடிப்புகளீல் செய்தது போலவே டிபன் பாக்ஸில் அம்மோனியம் நைட்ரேட், பெட்ரோல், குத்திக் கிழிக்கும் உலோகத் துண்டுகள்/குண்டுகளைப் போட்டு செய்துள்ள நவீன நாட்டு வெடிகுண்டுகளையே வெடிக்கச் செய்துள்ளனர்.

    குறீப்பாக கோவாவில் தீபாவளிக்கு முந்தைய நாள் இந்துக்களை கொல்லும் வகையில் குண்டு வைத்து செத்துப் போனான் ஆர் எஸ் எஸ் ப்யங்கரவாதி ஒருவன். சேம் டெக்னிக் இங்கயும். இதுக்கு சீனுவோ, பையாவோ பதில் சொல்வார்கள் என்று நினைக்கிறீர்கள்?

    ரொம்ப கஸ்டப்பட்டு வேறதாவது பெரிதாக கண்டுபிடித்து உளறிக்கொட்டுவார்கள்.

  18. ஏன்டா இரண்டு நாளைக்கு முன்னாடி தான் குண்டு வெடித்தது, குண்டு வெடித்த உடனே அய்யயோ இஸ்லாமிய பயகரவதிகள் தான் குண்டு வைத்து விட்டார்கள் என்று குரைகிரிகளே முழுமையான விசாரணை முடித்தவுடன் ஹிந்துத்துவ தீவரவாதிகள் தான் வைத்தார்கள் என்று சொன்னால் அப்புறம் என்ன சொல்வீர்கள்,இந்தியர்களே இந்த ஹிந்துத்துவ தீவிரவாத இயக்கம் இந்த நாட்டை இன்னொரு பிரிவினைக்கு கொண்டு செல்கிறது,

  19. குண்டுகள் வெடிப்பதில் நியாயம் இருக்கிறதா இல்லையா என்பதைவிட அவை தன் குறிக்கோளில் வெல்லுமா, வெல்லாதா என்பதே முக்கியமான கேள்வி?

    பதில்:- குண்டுகள் வெடிப்பதில் நியாயம் இல்லை, பேடிதனமே இருக்கின்றது, ஆம் ஒரு ஆண் மகனாக இல்லாமல் பேத்தனமாக பொது மக்களும் குழந்தைகளும் கூடும் பொது இடத்தில் குண்டு வைத்து விட்டு பேடித்தனமாக ஓடி ஒளிபவன் ஒரு பேடியே…
    ////// பயஙரவாதிகள் மனதில் உரம் படைத்தவர்கள் – வினவு ////

    அவை தன் குறிக்கோளில் வெல்லுமா, வெல்லாதா என்பதே முக்கியமான கேள்வி?

    இன்னும் எத்தனை குண்டுகள்நீஙள் வைத்தலும் சரி…உங்கள் என்னம் ஈடேறாது..ஒரு இறும்பு மனிதன் இந்தியாவின் பிரதமராக வருவாருஙளை எல்லாம் வதம் செய்வார்..

    • இரும்பு மனிதர் வந்து புடுங்காத ஆணியையெல்லாம் புடுங்கி விடுவாரப்பா.நீ ஆணிய புடுங்க வேண்டாம்டா

    • அப்போ குஜராத்துல அப்பாவி முஸ்லிம் கர்ப்பிணி பெண்களை வைரே கிழித்து அதன் சிசுவை கொன்னிர்களே பல ஆய்ரம் மக்களை ( சிறுவர்கள் உள்பட ) கொன்று எரிதிர்களே
      அதுதான் உங்களுடைய இன வீரமோ வீரத்தை பற்றி பேச உங்களுக்கு என்ன தகுதி இருகுது, இந்த நாட்டையும் இந்த நாட்டின் ரகசியகளையும் காட்டியும் கூட்டியும் கொடுத்த ஈன பிறவிகளே வாய் மூடு ,

    • அந்த இரும்பு மனிதர் முதல்லே அண்ட்ராயர் போடுகிறார பார் இல்லாடி அத உருவபோரனோவோ பாத்து பையா

  20. மும்பை போலிசு ,
    இன்று இரண்டு காவி ஹிந்து பயங்கரவாதிகள் கைது, அவர்களுக்கு R S S என்ற அதி தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பா,
    புலன் விசாரணை நடை பெற்று கொண்டு இருக்கிறது , இனிமேல் ITHU தான் தலைப்பு செய்தி

  21. இதோ ஆரக்ஷண் என்று ஒரு இந்திப் படம் வெளிவர உள்ளது. இதேபோல இடஒதுக்கீட்டை இழிவுபடுத்தும் இன்னொரு படத்தில் லட்சுமி என்னும் ஒரு ஊரறிந்த நாடறிந்த உலகறிந்த பத்தினி பாப்பாத்தி நடித்து உள்ளாள். படத்தின் பெயர் மறந்து போய்விட்டது. தயவு செய்து ஆரக்ஷண் படத்தை முதல் காட்சியே பார்த்து விட்டு உங்கள் விமரிசனத்தை எழுதவும். அந்த படத்தைப் பார்க்க ஆவலோடு உள்ளேன். பல உயர்சாதி கழிசடைகள் காசுக்கு உடலை விற்கும் பத்தினிகள் நடித்த படமாம் அது.

    • ஆரக்ஷண்ai Patri kurupitireekergal.. Ungalai yaaru Aarakshan paaka solli kattaya paduthinadhu
      Ungalukku thaan Tamizh therinjal podhume..sorriyan chandran,sevvai gragathil kooda ungalukku tamil ubayogapadume ahaye pesunga ahaye padinga and ezhuthunga!!! Neenga tamil mozhiya vaazha veinga, Appadiye padam pakanumna Ungalukkaga thaane Thankar bachhan, Cheran, Bala pondror komanam katti eruma mekaravan thaan unmayana tamizhan enbadhu, Ellam purijavan araloosu madhiri thaan iruppan(nost of bala’s films), eppavum sarakku, kanja, Ponnunga ippadi suthi thirinja oru ilaingnan , ennamo ellam purinja therinja periya thathuvaadhi madhiri city youngstersku padam solli kudupaangale (Ameer, Bala) pola padam edukkurangale adha paarunga,,
      Aarakshan ponra mosamana padam ungalukku edhukku??
      BTW, In Aarakhsan Saif Ali khan a muslim (nawab descendants) plays a Dalit..

      • நண்பர் டேகன். எனக்கு இந்தியும் தெரியும். என் வேலைக்கும் படிப்புக்கும் அவசியப் பட்டதால் அதை படித்துத் தெரிந்து கொண்டேன். இங்கு இந்தியை எதிர்த்தவர்கள் இந்திக் காரர்களை எதிர்க்க வில்லை. வெளியேறவும் சொல்லவில்லை.நான் வட நாட்டில் இருந்த போது நான் இந்தி பேச முயன்றதால் யாரும் என்னை அன்னியனாக பார்க்க வில்லை. அங்கு நான் கற்ற கல்வி கூடத்தில் இதையேதான் எழுதியிருந்தார்கள். நீங்கள் இந்தியிலேயே எழுதி பேசுகிறவர்களானால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைவோம் என்று. அதையேதான் இங்கும் எதிர்பார்க்கிறோம். இந்த பகுதியில் தமிழ் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும் என்று. மற்றபடி எனக்கு மற்ற மொழிகளை கற்பதில் எந்த எதிர்ப்பும் இல்லை.
        ஆனால் எந்த மொழியும் மற்றவர் மேல் திணிக்கப்படக் கூடாது. அது அந்த மொழி இனத்தை அழிக்க எண்ணியதற்கு ஒப்பாகும். எனக்கு நிச்சயம் ஆங்கிலம் பேச எழுத நன்றாகத் தெரியும். ஆங்கிலம் கற்றவர் படித்தோர் என்ற எண்ணம் உங்களுக்கு ஏன் வந்தது.

        ஆரக்ஷன் திரைப்படம் வேற்று மொழித் திரைப்படமானாலும் அது கூற வரும் கருத்து என்ன என்பதை அறிந்து கொள்வது நமக்கு அவசியமான ஒன்றாகும். வினவு மன்னிக்க வேண்டும். தேவையில்லத இடத்தில் இந்த கேள்வியை எழுப்பி விட்டேன்.

          • நான்கடவுள்இல்லை,
            I apologized to you because of my wrong perception of you acting like a fascist on other Languages.
            But then i wanna ask you what made dalits angry when Saif was casted to portray one among them. Please refer the below mentioned website,

            http://www.mid-day.com/entertainment/2011/may/130511-Dalit-group-Prakash-Jha-Saif-Ali-Khan-Aarakshan.htm

            Is he because he was a descendant of Nawab family which is supposedly held in high esteem?? This shows the still inferiority complex prevalent in the minds of dalits. In a country where freedom of speech and press exist( dont say no, if no vinavu and savukku wouldn’t have seen the light of the day as you claim what’s in india is a facist regime), Doesn’t Prakash Jha have the right to cast his choice and pick his subjects??
            These kinds of protests just doesn’t justify the progressive ideology of the left parties and the rightwing nutcases like RSS. This shows that they are equally intolerant and backward in thinking like the rightwing. Could you please explain on what context u vent your spleen on the movie??

            • thanks a lot my friend for understanding my stand . i thank vinavu wholeheartedly for creating this platform to make fine friends like you.

              Prakash Jha is a Bihari brahmin. most if not all of his movies are made to propagate and forward his brahmin ideologies and supremacy. the latest one is rajneeti.

              though the film has not been released yet (scheduled to get released on 12-8-2011), we can fairly ascertain what the film is upto and its intentions are. i bet the storyline may be one of the following:1. the vanity of fighting against the upper castes for equality and to accept what they give you meekly, or 2) advice for the upper castes especially for the brahmins that the ‘others’ suffered a lot while having been untouchables, and so throw them the bones to pacify them the dogs they are. then they will be loyal to you.
              but the real meaning of the movie, whatever the plot of the story may be, will be that reservations are not good for the nation they wish to build, and the sooner it got ridden, the better.

              the nawab family is a relic of the old colonial raj, and an aristocratic society which has no meaning in today’s society. though this part of the world we call india now, has progressed – though not in the way proper- it was not able to get itself rid of the old colonial way.
              History is not that remote to forget the atrocities committed on the untouchables by the upper castes and the aristocrasy to accept one of their poodles to play the role of the suffered.

              i have been humbled by your apologies for i am not that big a person worth your apologies. really glad to have made friends with you.

              • Thanks for responding in a patient way.
                I didn’t mean to talk about the aristocracy and everyone know how it has demoralized the society. It took a modern day light-OF-hope Bodhisattva Mr. AMbedkar to struggle for the upliftment of Untouchables.
                Prakash Jha might be a brahmin but one shouldn’t forget his contributions for Bihar which other politicians could never do . You should probably ask some farmers in Bihar of what Anubhooti did to them which their state governments could never do.
                We live in India, where we should be open to alternate opinions and not a religion based rule like Pakistan or Afghanishtan where their doctrines outshadow humanity and common sense. (Eg: Salman Tasheer killing).
                The Article.15(1) of the Constitution says that the “State shall not discriminate any citizen on grounds only of religion, race, caste, sex, place of birth or any of them”,My point is after nearly more than 60 years of independence now, the general category people have started to feel that they are being subjugated and that the odds have been stacked against them. I understand in a country like india reservations are a political necessity because vast influential sections of voting population see reservations as beneficial to themselves. But then what justice does that bring to a deserving student who with all the credentials missing the bus to enter into a prestigious institution for education or employment just because he happened to from a upper caste.

                The war cry of Dalits in these days of reservation when someone expresses their alternate opinion only allows to see them still living in darkness.
                If caste of a person should be a guiding factor for a person to express his opinions in a film then we could have never seen khans ruling mumbai (Most of their characters essayed as protagonists are hindu)

                • நண்பர் டேகன். இந்த அரசாங்கமே பிராமணர்களுக்காக பிராமணர்களால் நடத்தப்படும் பிராமண அரசாங்கமாகையால் இங்கு அவர்கள் ஒதுக்கப்படுகிறார்கள், தள்ளிவைக்கப்படுகிறார்கள் என்று கூறுவது நகைப்புக்குறியது. இவர்கள் இதற்காக வைத்த பெயர் . இதை சொல்லிக்கொண்டுதான் இவர்கள் இடஒடுக்கீட்டுக்கெதிராக சில வருடங்களுக்கு முன் போராட்டம் நடத்தினார்கள். (2006 பாதியில்). அந்த நேரத்தில் நான் வடநாட்டில்தான் இருந்தேன். போராட்டத்தின் மிக ‘அருகில்’ இருந்தேன். தனியாக கையறு நிலையில் இருந்தோம்.

                  இடஒதுக்கீடு என்பது பலமுறை விவாதிக்கப்பட்ட ஒன்று. ஆனாலும் திரும்ப விவாதிப்போம். அம்பேத்கர் சட்டமியற்றும் இடத்தில் இருந்தார், கொள்கை வகுக்கும் இடத்தில் இல்லை. அரசியல் சாசன சட்டம் இப்படிதான் இயற்றப்பட வேண்டும் என்று அவருக்கு கட்டளையிடப்பட்டது. அவர் அதை இயற்றினாரில்லை. வெறுமனே செயல்படுத்த எழுதிக்கொடுத்தார்.

                  இடஒதுக்கீடு 60 வருடங்களாகியும் இன்னும் ஏன் சமூகத்தில் பின்னிறுத்தப்பட்டவர்களுக்கு ஒன்றும் பெரிதாக செய்யவில்லையென்றால் அது மட்டும்தான் அவர்களுக்கு கொடுக்கப்பட்டது, வேறொன்றும் கொடுக்கப்படவில்லை, அது உண்மையில் அதுமட்டும் பற்றாது என்பதால்.

                  தாழ்த்தப்பட்டவர்கள்தான் அதிகமாக பள்ளிகளிலிருந்து சீக்கிரம் வெளியேற்றப்படுகிறார்கள். தங்கும் இடம் கிடையாது. உண்ண உணவில்லை. தீண்டாமை அவலங்கள் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் உள்ளன. அவர்களை பின்னால் இழுக்க முடமாக்க இவ்வளவு உள்ளபோது இடஒதுக்கீட்டினால் மட்டும் ஒன்றும் மந்திரம் நிகழ்ந்து விடாது. ஆனால் இதை காரணம் காட்டியே இருப்பதையும் பிடுங்கிவிடத்தான் இவ்வளவு சூழ்ச்சியும்.

  22. This is a worst article, simply supporting this type of bomb blasts of killing innocent civilians. This guy will understand the pain only when one of his family member dies in these kind of blasts..till then this type of articles will continue.

  23. யப்பா வெள்ளிகேழம காவி தீவிரவாதம்னு எழுதலையேன்னு பார்த்தேன்.சரிங்க்ணா அப்போ ஆப்கன் இரான் இரான்க் இங்கெல்லாம் எந்த காவி தீவிரவாதம் குண்டு வைக்குது?ஆப்கன் அதிபரின் தம்பியையே போட்டுதல்லிட்டாங்க.அதுக்கு யாருன்க்னா காரணம்?அதையும் சொல்லுங்க.விவாதிப்போம்.சும்மா தலித் முஸ்லீம் ஜால்ரா அடிக்க வேண்டாம்

  24. பல உயர்சாதி கழிசடைகள் காசுக்கு உடலை விற்கும் பத்தினிகள் நடித்த படமாம் அது.///////

    யப்பா பக்கத்துல சேரியில் பொய் பாரு.எந்த பொண்ணுக்கு எத்தன புருசன்னு வழங்கும்.இது சாதி சம்மந்தப்பட்டதல்ல.பெண்களின் மனநிலை சம்பந்தப்பட்டது

  25. எங்களுக்கு ஆதரவ நீங்க ஒருத்தர்தான் பேசுறீங்க.நீங்க வாழ்க இன்ஷா அல்லாஹ்

    • அங்க ஆர்.எஸ்.எஸ் காரன் குல்லாவை மாட்டிகினு குண்டு வச்சிட்டு பழியை முசுலீம் மேல போடறான்.. இங்க இந்த பிரவீன் என்னும் கோழைப்பயல் முஸ்லீம் பேருல வந்து பின்னூட்டம் போடுகிறது. ஆர்.எஸ்.எஸ் மட்டுமல்ல அவர்களின் அல்லக்கை நொல்லக்கைகளுக்கு கூட மயிறளவுக்கு கூட வெக்கம், மானம், ரோசம், சூடு, சுரணை கிடையாது என்பது இதிலிருந்து தெளிவாகிறது.

      கொண்டை தெரிஞ்சிடுச்சேன்னு கவலைப்படாதே… நெக்ஸ்ட் பெட்டரா டிரை பண்ணு

      • இன்ஷா அல்லாஹ்!!! காமாலை கண்ணுக்கு எல்லாம் மஞ்சலாதான் தெரியும்.அது போல உன்க்களுக்கொரு மன வியாதி.பாக்குரவநேல்லாம் காவியா தெரியுது

      • நான் கோழையா?அப்போ நீ வீரனா?நான் வைத்த கேள்விகளுக்கு பதில் சொல்லு.அதை விட்டுட்டு இப்படி கோழை வீரன் போன்ற கருணாநிதி பராசக்தி பிதட்ரல்கள் இங்கு வேண்டாம்

        • சரி மொதல்லே ஏன் முஸ்லீம் பேருல ஆள்மாறாட்டமா பின்னூட்டம் போட்டீங்கன்னு சொல்லுவீகளா பிரவீன்-ரஹீம் ஜி ?

          • காந்தியாரை கொன்ற கோட்சே முசுலிம்கள் மீது கொலைப்பழி விழ வேண்டும் என்ற கெட்ட உள்நோக்கத்தோடு தனது கையில் ”இசுமாயில்”என்று பச்சை குத்திக் கொண்டு காந்தியாரை கொன்றான்.கோட்சேவின் அரசியல் வழித்தோன்றல்கள் அதே பித்தலாட்டத்தை இன்னமும் கையாளுகிறார்கள்.podang_maan பின்னூட்டம் எண் 12 .1 -ல் பட்டியலிட்டுள்ள சங்க பரிவார் நடத்திய குண்டு வெடிப்புகள் அனைத்துக்குமே முசுலிம்கள்தான் காரணம் என பழி போட்டார்கள்.இதோ இப்போது ஒரு பின்னூட்டத்திலும் முசுலிம் பெயரில் பித்தலாட்டம்.எத்தகைய நயவஞ்சக கும்பல் இது.

            இந்த நயவஞ்சக நாடகத்தில் கைதேர்ந்த காரணத்தால்தான் செத்த மாட்டின் தோலை உரித்த மாபாதக குற்றத்தை செய்ததற்காக ஐந்து தலித் இளைஞர்களை அடித்தே கொன்ற இந்த கல்நெஞ்சக்காரர்கள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் தாங்களே பிரதிநிதி என ஊரை ஏய்க்க முடிகிறது. இட ஒதுக்கீடை உள்ளூர எதிர்த்துக் கொண்டே பிற்படுத்தப்பட்ட மக்களையும் தன பின்னே அணி திரட்டிக் கொள்ள முடிகிறது.இவர்களின் நயவஞ்சக நாடகத்தை அம்பலப் படுத்தி முறியடிககாதவரை மக்களுக்கு விடிவில்லை.

            • \\காந்தியாரை கொன்ற கோட்சே முசுலிம்கள் மீது கொலைப்பழி விழ வேண்டும் என்ற கெட்ட உள்நோக்கத்தோடு தனது கையில் ”இசுமாயில்”என்று பச்சை குத்திக் கொண்டு காந்தியாரை கொன்றான்.கோட்சேவின் அரசியல் வழித்தோன்றல்கள் அதே பித்தலாட்டத்தை இன்னமும் கையாளுகிறார்கள்\\

              உங்களுடைய நகை சுவைக்கு ஒரு அளவே இல்லையா? யார் உங்களுக்கு இது போன்ற காமெடி விசயங்களை எல்லாம் சொன்னது. நாது ராம் கோட்சே ஒரு அறிவு கெட்டவன். அவன் உண்மையில் கொன்று இருக்க வேண்டும் என்றால அனைத்து விசயஙளுக்கும் காரணமாக இருந்த நேருவை தான் போட்டு தள்ளி இருக்க வேண்டும்.

              அதுவும் தவிர, நாதுராம் கோட்சே ஒரு ஹிந்து என்பதும் இவர் ஹிந்து மஹா சபாவில் இருந்தவர், அவர் பூனேவில் கம்யூனிஸ்டுகளின் புதிய ஜனநாயகம் போன்று ஒரு பிரபலமான் பத்திரிகையை நடத்தினார் என்பதும் ஊர் அறிந்த விசயம். இந்த லட்சனத்தில் இவர் இஸ்மாயில் என்று பச்சை குத்தி இருந்தார் என்று பொய் சொல்லுவது ஒரு பூசணிகாய் தோட்டத்தையே சோற்றில் மறைக்கும் செயல்,

              ஹ்ம்ம், ஒருவன் ஹிந்து பெயரில் ஹிந்துக்களை திட்டினால் அவன் நல்லவன். ஒரு முஸ்லீம் முஸ்லீகளை திட்டினால், அவன் ஒரு போலி 🙂 இது தானே தாங்கள் சொல்ல விரும்புவது.

              அது சரி, திப்பு என்ற ஜிஹாதி பெயரை வைத்து கொண்டு ஊரை ஏமாற்றும் ஒரு பெந்த போஸ்தே ஆள் என்று நான் கூட உங்களை நினைக்கலாம் அல்லவா?

              \\இந்த நயவஞ்சக நாடகத்தில் கைதேர்ந்த காரணத்தால்தான் செத்த மாட்டின் தோலை உரித்த மாபாதக குற்றத்தை செய்ததற்காக ஐந்து தலித் இளைஞர்களை அடித்தே கொன்ற இந்த கல்நெஞ்சக்காரர்கள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் தாங்களே பிரதிநிதி என ஊரை ஏய்க்க முடிகிறது\\

              உங்களுடைய அறீவை நினைத்தால் எனக்கு வியப்பாக உள்ளது. யார் தாழத்தப்பட்ட மக்கள். இவர்கள எப்படி வகை படித்தபட்டார்கள். அதுவே ஒரு காமெடியான விசயம். அது சரி, முகமதுவை பற்றி கேள்வி கேட்டதற்கே கொலை வெறி தாக்குதல் நடத்தியவர்கள் பற்றியும், மனைவிக்கு விவாகரத்துக்கும் பின் ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் சொன்ன காரணத்திற்காக, நாட்டையே சுடுகாடு ஆக்கிய மூஸ்லீகளை பற்றீயும் தங்கள் கருத்து என்ன?

              • சோழன்,
                ஒழுங்காக சத்தியம் பண்ணத்தெரியாத வடிவேலு ”மாமியார் நாகம்மா மீது சத்தியம்” செய்வதைப்போல உங்களுக்கு எடுத்துக்காட்டு கூட சொல்லத் தெரியவில்லை.கோட்சே பற்றிய ஒரு உண்மையையை இங்கு பதிவு செய்கிறேன்.எந்த உண்மையையும் மறைக்க முயலவில்லை.அதற்கு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் பழமொழி எப்படி பொருந்தும்.இப்படிப்பட்ட நீங்கள் எனது அறிவை ”வியக்கிறீர்கள்”.என்ன கொடுமை இது.
                \\உங்களுடைய நகை சுவைக்கு ஒரு அளவே இல்லையா? யார் உங்களுக்கு இது போன்ற காமெடி விசயங்களை எல்லாம் சொன்னது. நாது ராம் கோட்சே ஒரு அறிவு கெட்டவன். அவன் உண்மையில் கொன்று இருக்க வேண்டும் என்றால அனைத்து விசயஙளுக்கும் காரணமாக இருந்த நேருவை தான் போட்டு தள்ளி இருக்க வேண்டும்.//
                பொய்யான,கற்பனையான தகவல்களை கூறி வாதிடுவது உங்களுக்குத்தான் பழக்கம்.நீங்கள் கையும் பொய்யுமாக சிக்கிய முந்தைய விவாதத்திற்கான சுட்டி.
                https://www.vinavu.com/2011/04/26/hang-modi/#comment-41002
                எனக்கு அப்படி பொய் சொல்லி வாதிட வேண்டிய அவசியம் இல்லை.நான் கோட்சே பற்றி சொன்ன உண்மைக்கு ஆதாரம்.”காந்தி கொலை வழக்கு”. வெளியீடு.திராவிடர் கழகம்.வாங்கி படித்து பாருங்கள்.ஆதாரத்துடன் அம்பலப்படுத்தி இருக்கிறார்கள்.

                \\ஹ்ம்ம், ஒருவன் ஹிந்து பெயரில் ஹிந்துக்களை திட்டினால் அவன் நல்லவன். ஒரு முஸ்லீம் முஸ்லீகளை திட்டினால், அவன் ஒரு போலி இது தானே தாங்கள் சொல்ல விரும்புவது.//
                இங்கு முசுலிம் பெயரில் யாரும் முசுலிம்களை திட்டவில்லை.பிரவீன் என்பவர் முசுலிம் பெயரில் வினவு முசுலிம்களுக்கு ஆதரவாக இருப்பதாக எழுதியுள்ளார்.இந்த ஆள்மாறாட்ட பித்தலாட்டம்தான் கண்டிக்கப்படுகிறது.

                \\ திப்பு என்ற ஜிஹாதி பெயரை வைத்து கொண்டு ஊரை ஏமாற்றும் ஒரு பெந்த போஸ்தே ஆள் என்று நான் கூட உங்களை நினைக்கலாம் அல்லவா?//

                பூனை கண்ணை மூடிக்கொள்வதால் உலகம் இருண்டு விடாது.நீங்கள் நினைப்பதால் மட்டும் அது உண்மையாகிவிடாது.ஆதாரம் வேண்டும்.

                \\யார் தாழத்தப்பட்ட மக்கள். இவர்கள எப்படி வகை படித்தபட்டார்கள். அதுவே ஒரு காமெடியான விசயம்.//

                தாழ்த்தப்பட்ட மக்கள் எப்படி வகைப்படுத்தப் பட்டார்கள் எனபது இருக்கட்டும்.ஐந்து தலித் இளைஞர்களை செத்த மாட்டின் தோலை உரித்ததற்காக அடித்தே கொன்ற கயவாளிகளை பற்றி கள்ள மவுனம் சாதிக்கிறீர்களே.அதுதானே நான் எழுப்பும் வினா.அறிவு நாணயம் இருந்தால் அதற்கு பதில் சொல்லிவிட்டு எப்படி வகைப்படுத்தப் பட்டார்கள் எனபது பற்றி பேசுங்கள்.அது சரி பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எதிரான உங்கள் இட ஒதுக்கீடு எதிர்ப்பு பற்றியும் எழுதியிருந்தேனே.அதற்கும் மவுனம்தான் பதிலா.

                \\அது சரி, முகமதுவை பற்றி கேள்வி கேட்டதற்கே கொலை வெறி தாக்குதல் நடத்தியவர்கள் பற்றியும்,//

                முகமது நபி குறித்து இழிவான முறையில் வினாவொன்றை தேர்வில் இடம்பெற செய்த ஆசிரியரின் கையை வெட்டிய வெறிச்செயலை இசுலாமிய அமைப்புகள் அனைத்தும் கண்டித்தன.முசுலிம்கள் அனைவருமே கண்டித்தனர்.அதே சமயம் அந்த ஆசிரியரின் இசுலாமிய வெறுப்பை, இந்துத்வா வெறியை நடுநிலையாளர்கள் நிச்சயம் கண்டிப்பார்கள்.

                \\மனைவிக்கு விவாகரத்துக்கும் பின் ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் சொன்ன காரணத்திற்காக, நாட்டையே சுடுகாடு ஆக்கிய மூஸ்லீகளை பற்றீயும் தங்கள் கருத்து என்ன?//

                இது அபாண்டமான குற்றச்சாட்டு.சா பானு வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை கண்டித்து முசுலிம்கள் போராட்டங்கள் நடத்தினார்களே தவிர யார் மீதும் தாக்குதல் நடத்தவில்லை.

      • ஆர்.எஸ்.எஸ் மட்டுமல்ல அவர்களின் அல்லக்கை நொல்லக்கைகளுக்கு கூட மயிறளவுக்கு கூட வெக்கம், மானம், ரோசம், சூடு, சுரணை கிடையாது என்பது இதிலிருந்து தெளிவாகிறது.//////////.
        .
        ஆமா தெரு தெருவா உண்டியல் குலுக்குற ஒனக்கு மட்டும் ரோஷம் இருக்கா?பேசுற பேச்சுலையே நீ யாருன்னு தெரியுது.,மயிறு மட்டைன்னு சீ இதெல்லாம் ஒரு பொழப்ப?

        • ஏன் உண்டியல் குலுக்கறதுல என்ன ரோசக்குறைவு, இதே அரசியலை ரோட்டுல தகிரியமா பேசித்தான் உண்டியல் குலுக்குறோம்.. இதுக்கு மக்கள் நல்லா ஆதரவுகொடுப்பாங்க, யாராவது ஆர்.எஸ்எஸ் கோழைப்பயல்கள் கூட்டமா வந்து சிலும்புனாலும் அவங்க முதுகுலயும் கொடுத்து அனுப்புவாங்க

  26. குண்டுகள் வெடிப்பதில் நியாயம் இருக்கிறதா இல்லையா என்பதைவிட அவை தன் குறிக்கோளில் வெல்லுமா, வெல்லாதா என்பதே முக்கியமான கேள்வி.///////////
    .
    அப்போ அதுல எத்தன பேரு செத்தாங்க எத்தன் பேரு ஊனமானாங்க இதெல்லாம் கணக்கே இல்லையா?சரி உடுங்க.ஸ்டாலின் மாவோ கொல்லாத மக்களா?

  27. அங்க ஆர்.எஸ்.எஸ் காரன் குல்லாவை மாட்டிகினு குண்டு வச்சிட்டு பழியை முசுலீம் மேல போடறான்/////////.
    .
    ஐயோ ஐயோ அஜ்மல் கசாப் ஆர் எஸ் எஸ் காரனா?தாவூத் இப்ராஹீம் ஆர் எஸ் எஸ் ஆ?நான் ஆர் எஸ் எஸ் இல்லை.லூசுதனமா பேசாத.பொது மக்களுக்கு ஆர் எஸ் எஸ் பத்தியே தெரியாது.ஒங்கள மாதிரி ஆளுங்கதான் எப்போ பாத்தாலும் ஆர் எஸ் எஸ் நெனைப்பு!!

    • சும்மா வெக்கப்படாதீங்க பிரவீன்ஜி, ஒங்க ஆர்.எஸ்.எஸ் குண்டு வச்சது, அதை முஸ்லீம் பயங்கரவாதினான் செஞ்சான்னு ஊரை ஏமாத்துனது இதெல்லாம் சந்தி சிரிச்சு நாளாச்சு… சும்மா ஒத்துகங்க

      • ஹ்ம்ம், பாக்கிஸ்தானிலும், ஆப்கானிஸ்தானிலும், இராக்கிலும் கூட RSS காரன் தான் குண்டு வைத்தான் என்று சொல்லுங்கள். இன்னும் சொல்லப்போனால், பீகாரிலும், சட்டீஸ்கரிலும் கூட கொளை கொல்லை செய்வது இவர்கள் தான் என்று கூட எழுதலாம்
        பொய் சொல்ல வேண்டும் என்று வந்த பிறகு அதில் எதில் எதற்கு வரை முறை?

        • ஐ சோழன், இந்தியாவுல 16 எடத்துல ஆர்.எஸ்.எஸ் குண்டு வச்சது அம்பலமாயிருக்கா இல்லயா? அதை பத்தி பேசுங்க

          அதுக்கு முன்னால இதபத்தி படிங்க http://www.outlookindia.com/article.aspx?266145

  28. Agreed that bomb blasting is not the answer for the oppressed people. But it can be a strategy provided it is guided by motivation for liberation than a counter racial and religious fanaticism. It helps to internationalize your plight, send the message across to your foes and comrades that actions are possible and helps to rally like minded groups. If the motivation is liberation such blasts will not target the public but only the institutions that are oppressive.

  29. // பம்பாய் கலவரக் குற்றவாளிகள் இன்னும் தண்டிக்கப்படவில்லை என்பதோடு வழக்கே நடைபெறவில்லை. கலவரங்களுக்கு சலுகை! குண்டுகளுக்கு தண்டனை! எனில் குண்டுகள் ஏன் வெடிக்காது?//

    குண்டு வெடிப்பு என்பது ஒரு விளைவுதான், குண்டு வெடிப்புகள் நிகழ்வதற்குண்டான காரணங்களை கண்டறிந்து அதை களைவதுதான் இம்மாதிரியான குண்டுவெடிப்புகளை தடுப்பதற்கான ஒரே வழி. குண்டு வெடிப்பில் ஈடுபட்டவர்கள் கடுமையாக தண்டிக்க படவேண்டியவர்கள் என்பதில் இருவேறு கருத்துகள் இருக்க முடியாது, ஆனால் இம்மாதிரியான கொடிய செயல்களில் ஈடுபடும் மனநிலைக்கு அவர்களை தள்ளிய விடயங்களை கணக்கில் எடுத்து, அவற்றுக்கான உரிய நியாயங்களை வழங்குவதன் மூலமே இம்மாதிரியான கொடும்செயல்களை எதிர்காலத்தில் தடுக்க முடியும்.

  30. Dear Vinavu,
    I am writing this comment because I see some distrubing comments up above my comment. first point : This blasts has to be condemned harshly with our full energy.
    second: why it is happening and how to stop this ? as one commentator told that only if our family persons got struck in to this blast only we know our pain that is 100 % right . Vinavu has to harshly CONDEMN THE TERRORIST WHO HAVE DONE THIS SHAMEFULL ACT . HOW CAN INNOCENT CIVILIANS BE THE TARGET AND VICTIMS ? VINAVU HAS WRITTEN THAT THIS IS THE COUNTER ACT BY THE TERRORIST. BUT THIS IS A SHAMEFUL COWARD ACT. LET THEM TARGET THEIR ENIMIES IF THEY HAVE GUTS AND IF THEY ARE POTENT. NOT THE COMMON PEOPLE. FOR THE FIRST TIME I A DIS AGREE WITH VINAVU. I AM SORRY BUT NO CHOICE.. SOME TIMES VINAVU IS U L T R A L E F T . .that is not good. Regards V.G.

    • வெங்கடேசன், ஏன் இவ்வளவு வருத்தம், வினவு இங்கே எழுதியிருப்பதை மறுபடியும படிச்சு பாருங்க… எரிவதை பிடுங்கினால் கொதிப்பது அடங்கும் என்ற எளிய உண்மையைத்தான் விளக்கியிருக்காங்க. பயங்கரவாதம் கண்டிக்கப்பட வேண்டிய அதை எப்படி ஒழிப்பது என்பதையும் பரிசீலிக்க வேண்டுமா இல்லையா?

      மற்றபடி ஒருத்தனின் குடும்பத்தினர் செத்தால் மட்டும்தான் வலி தெரியும் என்பதெல்லாம் சும்மா…. எவனோ இந்து பயங்கரவாதியோ, முஸ்லீம் பயங்கரவாதியோ வைத்த குண்டுகளின் காரணமாக ஆயிரக்கணக்கில் அப்பாவி முஸ்லீம்களை சிறைவைத்திருக்கும் நாட்டில் இதையெல்லாம் பேசிக்கொண்டிருக்க முடியாது

  31. வினவு ஐயாவின் பதிவு ஆர் எஸ் எஸ் காரர்களின் செயல்கள் தான் இஸ்லாமிய குண்டுகளுக்கு காரணம் என்பது. பின்னூட்டம் இட்ட அன்பர்கள் சொல்வது குண்டுகள் வைப்பதெ ஆர் எஸ் எஸ் காரர்கள் தான் என்று. அதாவது வினவின் பதிவை மறுக்கிரார்கள்.
    எனக்கு புரிதல் குறைவு தான்.

  32. மத அடிப்படையிலான பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு தங்கள் உயிர் மற்றும் உடைமைகளை இழந்த அப்பாவி பொது மக்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

    எத்தனை துன்பங்களிலும் தளராத மன உறுதியினை பாரத தாய் அவர்களுக்கு அளிக்கட்டும்.


    மாக்ஸிமம் .

    • அருள்பாலிக்கும் பாரதத்தாயிடம் கேட்டுப் பாருங்கள். அவளுக்குத்தான் மற்றவரை விட உண்மை நன்றாகத்தெரிந்திருக்கும். குண்டு வைத்த கொடியவர்கள் இந்து வெறியர்கள் என்று. (ஆமாம். பாரதத் தாய்க்கு நான்கு கைகள் உள்ளனவே. அதை வைத்து என்ன மசிரா புடுங்கிக் கொண்டிருந்தாள்?)

      • இன்னும் போலீசோ, அரசாங்கமோ குண்டு வைத்தது யார் என்று முறைப்படி அறிவிக்க வில்லை. வீணாக இந்து வெறியர்கள் என்று பழி போட வேண்டாம். கடந்த கால சம்பவங்களின் அடிப்படயில் பார்த்தால் இந்து இல்லாத மாற்று மத தீவிர வாதிகளின் வேலையாக இருக்கத்தான் அதிகப்படியான சாத்திய கூறுகள் உண்டு.ஆனால் நான் அவ்வாறு யாரையும் குறிப்பிடவும் இல்லை. ரிப்போர்ட் வரட்டும் பார்க்கலாம். (உன்னை போன்ற கழிசடைகளின் எழுத்தை அப்படியே விடும் வினவு எனது எழுத்தை அவ்வாறு வெளியிடுவதில்லை. பாரத மாதா வின் மேல் நம்பிக்கை இல்லாத நீ அவள் மயிர் புடிங்கிகொண்டு இருந்தாளா? இல்லை மட்டை கட்டி கொண்டு இருந்தாளா? என்று ஆராய்வது வீண் வேலை).


        மாக்ஸிமம்

        • மட்டையெல்லாம் கட்ட வேண்டாம். இந்த ஆர் எஸ் எஸ் டவுசர் பாண்டிகளுக்கு உங்க பாரத மாதாவை உட்டு ஒரு கோவணமாவது கட்டி விடச் சொல்லுங்கள். டார் டாரா கிழிஞ்சி தொங்குது.

    • வாங்க மக்சிமம் அண்ணே,
      மத அடிப்படையிலான (R S S ) HINDUTHUVA பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு தங்கள் உயிர் மற்றும் உடைமைகளை இழந்த அப்பாவி பொது மக்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
      எத்தனை துன்பங்களிலும் தளராத மன உறுதியினை பாரத தாய் அவர்களுக்கு அளிக்கட்டும். அப்ப பாரத THAI அப்பா , கணவன், எல்லாரும் எங்கே

      • முதலில் உன் பெயரை மாற்றிகொள்!

        முட்டாள்தனமான கேள்வி

        எல்லாவற்றிலும் மேலான தாயாக இந்த பாரத தேசத்தை உருவக படுத்திக்கொள்வது இந்திய பண்பாடு.இது தெரியாத நீ இங்கே இருக்கவே தகுதி இல்லாதவன்.

        பாரதத்தாயின் கணவன், தந்தை எங்கே? என்பது குதர்க்கத்தின் எல்லை!

        மாக்ஸிமம்

        • // எல்லாவற்றிலும் மேலான தாயாக இந்த பாரத தேசத்தை உருவக படுத்திக்கொள்வது இந்திய பண்பாடு.இது தெரியாத நீ இங்கே இருக்கவே தகுதி இல்லாதவன்// ஏன்டா நான் தெரியமாதான் கேக்குறேன்,இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே, இது ஒரு பாட்டு, இது உன்னுடைய ( அவாள் ) பண்பாடு சொல்லு நான் ஒத்துகிறேன், அத விட்டு இந்திய பண்பாடு சொன்னா விலக்குமாறு பிச்சிபோகும் சொல்லிபுட்டேன், நான் எவ்வளவு தான் பொறுமையை இருக்கிறது, அப்பா நானும் சொல்லுவேன் என் நாடு டிச்கோசாந்தி போல இருக்குது சிலுக்கு போல இருக்குது இந்த மாதிரி நினைக்காதவன் இந்த நாட்டிலே இருக்க தகுதி இல்லை, இப்ப எப்படி இருக்குது , இப்ப எப்படி இருக்குது ,

          • துலுக்க புரட்சி,

            என் நாடு டிச்கோசாந்தி போல இருக்குது சிலுக்கு போல இருக்குது…

            இதில் இருந்தே தெரிகிறது. உங்கள் ஆரம்பம் எப்படி பட்டது என்று

            • Mr சோழன். இப்படி பேசுறதுதான உங்க RSS குசும்பு. அது என்ன துலுக்க புரட்சி.
              அதெப்படி இங்கு rss தீவிர வாதத்தை ஆதரிக்கும் பையன், மக்சிமம், சீனு இன்னும் சிலர்.. ஒரே மாதிரியே பேசுகிறீர்கள்.
              உங்க rss அமைப்புல பெண்ணின் வயிற்றை கிழித்து குழந்தையை கொல்வது எப்படி என்று வகுப்பு எடுத்து விட்டு மற்ற நேரங்களில் இது போன்ற குசும்பு விசயங்களையும் கற்று தருவார்களோ?

              • நீங்கள் மட்டும் எங்களை RSS குசும்பு என்று சொல்லலாம், நான் துலுக்க புரட்சி என்று சொன்னவுடன் உங்களுக்கு ஏன் இப்படி பத்தி கொண்டு வருகிறது. ஏன் உண்மை சுடுகிறதா?

            • ஏன்டா, நீங்க மட்டும் இந்த நாட்டுக்கு பூவு, பொட்டு, புடைவை ,சூலாயுதம், எல்லாம் வைத்து பாரத மாத என்று
              சொல்விகோ, அதை நாங்க கேக்கணும், ஏன்டா இந்த நாட்டுல நீங்க மட்டுதான் இருகிரியல, எத்தனை மதம் இருக்குது, அவகலும் சொல்வாக்க சரோஜாதேவி அப்ப நீயும் அத கேட்டுக்கோ, சரியாய் இப்ப THAN நீ நல்ல பிள்ளை ,

        • மாக்ஸிமம் அண்ணே.இத்தனி பேரு ரவுண்டு கட்டி அடிக்கிறாங்க. சளைக்காம வாங்குறீங்களேண்ணே. நீங்க ரொம்ப நல்லவருண்ணே. போங்கண்ணே.

            • எங்கேண்ணே ஒரே பதிலை காப்பியடிச்சேன். ஒரே ஒரு இடத்தில் என் பின்னுட்டத்திற்கு லிங்கு கொடுத்திருந்தேன். அது மக்ஸிமம் அண்ணனுக்கு ரொம்ப தேவையானது என்பதால். அந்த பஞ்சாயத்து எங்களுக்குள் முடிந்து போச்சு.

      • Vaanga Indian anne.. appo muslim leaguenra pera naatula enna thondu niruvanama nadathurranga??? bartaha thaioda appa kanavana?? avanga pathi unakenda kavala?

        o… avanada neeyi….
        modhalla maximum sonna sonna madhiri pera pmaathura

  33. குண்டுகளை இஸ்லாமியர்கள் வைத்தார்கள் ஆனால் ஏன் வைத்தார்கள் ? அதனால் அவர்களுக்கு லாபமா இல்லை நஷ்டமா ? என்ற கேள்விக்கு விடையாக இந்த கட்டுரை பொருந்துகிறது. இல்லை இதை நாங்கள் மூன்று வருடங்களுக்கு முன்னாடி எழுதினோம் அதையே நாங்கள் மீள்பதிவு செய்திருக்கின்றோம் என்றால் அது இந்த காலத்திற்கு பொருந்துகிறதா என்பதையும் நாம் பார்க்க வேண்டும். இந்த மூன்று வருடத்திற்குள் பல்வேறு உண்மைகள் வெளிவந்து விட்டன. அதையும் கொஞ்சம் பரிசீலனை பண்ணி எழுதியிருந்தால் சிறப்பாக இருக்கும் . எதிலும் கொஞ்சம் முதிர்ச்சியுடன் பதிவு செய்யும் வினவு இதில் கொஞ்சம் தவறு செய்து விட்டதாகவே தோன்றுகிறது. இந்த குண்டுவெடிப்புகளுக்கு பல காரணம் இருக்கலாம். ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை திசை திருப்ப லோக்கல் ரௌடிகளால், அன்ன கசாரே போராட்டத்தை நீர்த்துப்போக செய்ய , காங்கிரெஸ் அரசிற்கு மேலும் குடைச்சல் கொடுக்க பி ஜெ பி குண்டர்களால் , இந்துக்களை ஒன்றிணைக்க ஆர் ஸ் ஸ் ஆல்,…இப்படி பல .குண்டுவெடிப்பினால் முஸ்லிம்களுக்கு எந்த ஒரு லாபமும் இல்லை , மாறாக அவர்களுக்கு அது பாதிப்பே. குண்டுகள் யார் வைத்தாலும் தண்டிக்க பட வேண்டும் அதே சமயம் குண்டு வெடிப்புக்கு இஸ்லாமிய மார்க்கம் தான் காரணம் என்பது பகுத்தறிவுக்கு ஒவ்வாத கற்பனையே. வினாவுக்கு இதை நிரூபிக்க கடமை உள்ளது என்பதை தெரிய படுத்துகிறேன். மனிதனின் செயலை வைத்து மார்க்கத்தை எடை போடுபவன் பகுதறிவாளியா? இல்லை மார்க்கத்தை ஆராய்ந்து அதன் குறைகளை சொல்பவன் பகுதறிவளியா? ஒரு மகனின் தவறான நடத்தைக்கு தாய் காரணமாக இருக்க முடியுமா? அப்படி இருக்கும் என்றால் அதை புட்டு புட்டாக நிரூபிக்க வேண்டாமா?..ஒரு மார்க்சீசம் பேசும் ஒருவன் தவறு செய்கிறான் என்றால் அதற்க்கு மார்சீசம்தான் காரணம் என்றால் ஒப்பு கொள்விர்களா? …”கேள்வி குறி” ஒத்து கொண்டது போல அந்த சமயம் எங்களுக்கு இந்த சங்குபரிவார குண்டுவெடிப்பின் உண்மைகள் தெரிய வில்லை என்பதை போல இஸ்லாத்தின் கொள்கைகளை இன்னும் வினவு சரியாக புரிந்து கொள்ளவில்லை.

    • மைதீன், வினவு சொல்வது இருக்கட்டும்,,, நானும் கூட இது ஆர்.எஸ்.எஸ் சதி என்றுதான் நம்புகிறேன்… ஆனால் வைத்தது யார் என்று ஆராய்ந்து முடிவு வர பல மாதம் அல்லது வருடம் கூட ஆகலாம், அதுவரை யார் பழியை சுமக்கப்போகீறார்கள்? நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் முஸ்லீம்கள்தான். பதிவுலகம் முதல் அலுவலகம் வரை அவர்கள் இரண்டு நாட்களாக தனியாக பார்க்கப்பட்டு கொண்டுதான் இருக்கிறார்கள். அப்படி பார்ப்பவர்கள் பார்வைக்கு இந்த கட்டுரை இன்று போய் சேருவது அவசியம் இல்லையா? மற்றபடி நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பாதிப்பை மிகத்தெளிவாக வினவு விளக்கி எழுதியிருக்கிறது

    • Sir, neengalum Vinavu pola thaan pesureenga
      “இந்துக்களை ஒன்றிணைக்க ஆர் ஸ் ஸ்”
      Adhu en Paksitanla irukkura ISIya pathi pesuna kooda ungalukku kovam varudhu..
      Pakistan namma Nanbanaga irukka oru thaguthiyum illai…
      Mumbai thaakuthalil ellarum when they were pointing towards Pakistan and other terorist organizations. Why u r not in a position to accept??? Neenga tamil nalla pesureenga, Indiavula valarndhurkeenga .. RSS, Hindutva mela irukka kovam puriyudhu aanalum indha madhiriyaana samayangalil en Annaivarum onru pattu pakistana edhirkkaoodathu???Pakistana edhirkaradhukku enna karanam.. idhai thelivu paduthavittal neegalum RSS pondra oru theeviravaadha iyakkam enre annaivarukkum padum..
      Nanri…

    • மூஸ்லீம்கள் ஏன் வைத்தார்கள் அவர்களுக்கு என்ன லாபம் என்று கேட்டிர்கள் அல்லவா? கண்டிப்பாக இந்தியாவில் வாழும் மதம் மாறிய முஸ்லீம்களுக்கு எந்த லாபமும் இல்லை. ஆனால் பாக்கிஸ்தான் நாட்டிற்கு அதிக லாபம் உண்டு. இந்த குண்டு வெடிப்பிற்கும் அமெரிக்கா நிறுத்தி வைத்த 800 மில்லியன் டாலருக்கும் அதிக சமந்தம் உண்டு.

      • மதம் மாறிய முஸ்லிம்கள் முதலில் ஏக இறைவனுக்கு நன்றி பிறகு ,சத்திய இசுலாத்துக்கு மாறிய எங்கள் முன்னோர்களுக்கு நன்றி ,

  34. தயவு செய்து இது போல மத ரீதியான, மத உணர்வுகளை தூண்டும் பதிவுகளை நிறுத்திக் கொள்ளுங்கள். தங்களது வளைத்தலம் பிரபலமாக ஆயிரம் வழிகள் உண்டு. இது போல கீழ்தரமான பதிவுகளை இட்டு அடுத்தவர் உணர்வுகளை புண்படுத்த வேண்டாம். இதுவரை வினாவின் மீது இருந்த மதிப்பு மறைந்து விட்டது. தங்கள் இருப்பது தமிழ் நாட்டில். தங்கள் உண்மையான தமிழர் எனில் இது போன்ற பதிவுகளை தவிருங்கள்.
    இப்படிக்கு
    உண்மைத் தமிழன்.

    • இவர்களை போய் உண்மையான் தமிழரா என்று கேள்வி கேட்பது மிகவும் நகை சுவையான விசயம். இவர்கள் ஒரு போலி கம்யூனிஸ்டுகள்.

      இவர்களின் யோக்கிதையை பற்றி தெளிவாக சொல்ல வேண்டும் என்றால், இலங்கையை எடுத்து கொள்ளலாம். இலங்கையில் இத்தனை பிரச்சனைகளுக்கும் காரணமாக இருந்த கிறித்துவ மிஷி-நரிகளை பற்றி வாயே திறக்க மாட்டார்கள். நடந்த அனைத்து விசயங்களுக்கும் முழுமுதற் காரணமாக இருந்த

      வாடிகன் உளவாலி இத்தாலி சோனியா மானியாவையோ,

      ஏகாதிபத்திய கயவ்ர்களான சீன கம்யூனிஸ்டு கயவர்களை பற்றீயோ

      புத்த மதத்தில் ஊடுருவி இருந்த கிறித்துவ மிஷி-நரிகளை பற்றீயோ அல்லது

      தமிழர்களுக்கும், சிங்களவர்களுக்கும் காரணமாக அமைந்த திராவிட ஆரிய இன வாதத்தை உருவாக்கிய கிறித்திவ மிஷி-நரிகளை பற்றியோ வாயே திறக்க மாட்டார்கள். 1956 வரை அவர்களிடையே இது போன்ற சண்டை நடக்கவே இல்லையே. ஏன் நடந்தது. இதற்கான் காரணம் மிக எளிமையான் ஒன்று.

      http://en.wikipedia.org/wiki/List_of_Presidents_of_Sri_Lanka

      இந்த லிங்கில் உள்ள இலங்கை அதிபர்களின் பெயரை படித்தலே தெரியும். இவர்கள அனைவரும் முன்னாள் ஆந்திர முதல்வர் YS சாமுவேல் ராஜ சேகர ரேட்டி போன்ற கிறித்துவர்கள் என்றும் இவர்கள் அனைவரும் வாடிகனின் கை கூலிகள் என்றும் தெளீவாக தெரியும்.

      போக்குவரத்திலும், பொருளாதாரத்திலும், இராணுவ முக்கியத்துவத்திலும் மிக முக்கிய இடம் பெற்ற இந்திய பெருங்கடலில் தனது அதிகாரத்தை நிலை நிருத்தவே ஆகும். உண்மையில் ஐரோப்பா அமெடிக்க கிறித்துவ நாடுகளின் இந்த நோக்கத்தில் மண்ணை போட்டது சீனா.

      தெற்கு சூடான், தென் கொரியா, தைவான், தைமூர் மற்றும் இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்கள் ஆகியவற்றில் பிரத்தனைகளை உருவாக்கி மத மாற்றம் செய்து ஆசியாவில் மற்றும் எண்ணை வளங்கள் நிறைந்த பகுதிகளின் தனது இராணூவ ஆதிக்கத்தை நிலை நிறுத்தம் கிறித்துவ அல்லது நேச படைகளை பற்றி வாயே திறக்க மாட்டார்கள்.

      ஏன் தெரியுமா? இந்த போலி கம்யூனிஸ்டுகளுக்கும் பெத்தகோஸ்தேக்கும் என்னை பொருத்த வரை எந்த விதியாசமும் இல்லை.

      RSS பற்றிய வினவு வசைபாடும் பொழுது எல்லாம் எனக்கு சிரிப்பு தான் வருகிறது. ஏன் எனில் நீங்கள் சொல்லும் அளவுக்கு RSS worth கிடையாது.

  35. தங்களின் நோக்கம் புரிகிறது இருப்பினும் குண்டு வெடிப்பிற்கு இஸ்லாமிய மார்க்கம் காரணம் என்பதை வினவு நிரூபிக்க கடமை பட்டுள்ளது. இதற்க்கு இஸ்லாமிய மார்க்கத்தின் அறிவின்மை தான் காரணம் என்று நான் சொல்கிறேன் .இது வினவுக்கும் சரி தவறு செய்யும் முஸ்லிம்களுக்கும் சரி. இன்று இந்தியாவில் கம்யூனிஸ்டுகள் (உங்கள் பார்வையில் போலி கம்யூனிஸ்டுகள் ) தவறு செய்வதற்கு கம்யூனிசம்தான் காரணாமா என்பதயும் வினவு விளக்க வேண்டும். லெனின் , ஸ்டாலின் கொள்கைகள் தவறா? இல்லை இவர்கள் அதை கடை பிடிக்கவில்லையா? இல்லை அதை கடைபிடிப்பதில் நிகழ் காலத்தில் சாத்தியம் இல்லையா??? இல்லை அந்த கொள்கைகள் இன்றைய காலத்திற்கு ஒத்து வரவில்லையா???. வினவு விளக்குமா?

    • @@@@@@@
      குண்டுகளின் தோற்றுவாயை சமூக நிலைமைகளே தோற்றுவிக்கின்றன என்ற போதிலும் குண்டுவைப்பவர்களின் மன உறுதிக்கு இசுலமிய மதப்பற்றும் ஒரு காரணம் என்பதை மறுப்பதற்கில்லை. குண்டுகள் தாம் இசுலாமிய மதத்தைப் பாதுகாக்கும் புனிதப்போரில் ஈடுபட்டிருப்பதாக நம்புகின்றன. இதை பல இசுலாமிய சமுதாயப் பெரியோர்களும், மக்களும் ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் குண்டுகள் தாம்தான் உண்மையான இசுலாமியர்கள் என்று கற்பித்துக் கொள்கின்றன. ஆனால் உலக வரலாறு நெடுகிலும் இந்தக் கற்பிதம் பொய்யென்றே நிரூபிக்கப்பட்டிருக்கிறது
      @@@@@

      இதைத்தான் வினவு எழுதியிருக்கிறார்கள்… இதில் உங்கள் பிரச்சனை என்னவோ

      • Adhavadhu Islama pathi ezhudumpodhu Sugar coated Pill madhiri ezhuduveenga?
        Hindu madatha pathi ezhudum podhu mattum Neruppu madhiri pongi ezhuveenga..
        Idhuthaan Pudhiya jananayagamam.. Paarungal.. Sabhash besh besh romba arumuya irukku…

      • இதில் இஸ்லாமிய மத பற்றும் இல்லை ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை. இது நடந்ததன் முழுமையான காரணம். கிறித்துவ மிஷி-நரிகளின் கஜானாவும் பெட்ரோலிய டிராகுலாவுமான அமெரிக்காவின் உள்ளடி வேலை என்பது எனது கருத்து. இவர்கள் மத வெறியே இல்லாமல் இருந்தாலும் அதனை தூண்டிவிட்டு அதில் குளிர்காயும் கபோதிகள். இதை தவிர இந்த விசயத்தில் சொல்வதற்க்கு வேறு ஒன்றும் இல்லை. செமிடிக் மதங்களான இஸ்லாமை அவர்கள் அழகாக உபயோகப்படுத்தி கொள்கிறார்கள்.

      • //இதைத்தான் வினவு எழுதியிருக்கிறார்கள்… இதில் உங்கள் பிரச்சனை என்னவோ//

        அடடா! என்ன ஒரு மருவாதி, குழைவு…:))))))))))))))

        • ஏன் சீனு, இத்தினி மாசமா நான் உங்களாண்டையும் மருவாதியாத்தானே பேசிகினுகீறேன் 🙂 பாயாவது குண்டு வச்சவன நான் முசுலீம் மதத்துலேயே சேக்கமாட்டேன்னு தகிரியமா சொல்றாரு.. அத்தினி எடத்துல காவி அரைடவுசருங்க குண்டு வச்சு பொது மக்களை கொன்னு மாட்டிகினப்புறமும், நீங்க அவங்களை விமரிசனம் பண்ணி எதுனா எய்தியிருந்தா சொல்லுங்களேன்.

  36. Idhu ponra padhivugalal 2 nalladhu nadakkum
    1.Summa Matra padathai Thaakudhal nadathum Hindu Websitesum RSS ponrorin Mugamudiyum Tavusarum kizhiyum
    2. Thani madha thaakudhalai ookuvithu kalagam panra Vinavin Tavusarum kizhiyum…

  37. இஸ்லாமிய மதப்பற்று இல்லாதவர்களே இது போன்று குண்டு வைப்பவர்கள் என்பதுதான் உண்மை. உங்களின் பதிலை ஏற்று கொள்கிறேன் அதே நேரத்தில் நான் கேட்ட விளக்கத்திற்கு “இன்று இந்தியாவில் கம்யூனிஸ்டுகள் (உங்கள் பார்வையில் போலி கம்யூனிஸ்டுகள் ) தவறு செய்வதற்கு கம்யூனிசம்தான் காரணாமா என்பதயும் வினவு விளக்க வேண்டும். லெனின் , ஸ்டாலின் கொள்கைகள் தவறா? இல்லை இவர்கள் அதை கடை பிடிக்கவில்லையா? இல்லை அதை கடைபிடிப்பதில் நிகழ் காலத்தில் சாத்தியம் இல்லையா??? இல்லை அந்த கொள்கைகள் இன்றைய காலத்திற்கு ஒத்து வரவில்லையா???. வினவு விளக்குமா?” தங்களின் கருது என்ன என்பதை பதிவு செய்யுங்கள். அதுவே ஏன் வேண்டுகோள் !.

    • மைதீன், லெனின்-ஸ்டாலின்-மாவோ இவர்கள் எல்லாம் அமல் படுத்தியது மார்க்சியம் எனும் தத்துவம். அந்த தத்துதவத்தின் சிறப்பே என்னவென்றால் அது உலகை புரிந்து கொள்ளும் வழிமுறையை, அதை மாற்றியமைக்கும் வழியை கண்டுபிடிக்கும் ஒரு கண்ணோட்டத்தை வழங்குகிறது… மற்ற தத்துவநூல்களை போல அதில் வரிக்கு வரி மனப்பாடம் செய்து பின்பற்ற வேண்டியது என்று ஒன்றும் இல்லை.

      மற்றபடி லெனினுடைய கொள்கைகளையோ, மாவோவினுடைய கொள்கைகளையோ அப்படியே நகலெடுத்து இங்கே அமல்படுத்துவதும் இல்லை அமல்படுத்தவும் முடியாது.
      நாம் வாழும் காலம்,சூழல், அரசியல் பொருளாதார நிலைமளுக்கு தகுந்தபடி நாம்தான் நமது கொள்களைகளை வகுத்துக்கொள்ள வேண்டும். அப்படித்தான் ரசியாவிலும் சீனாவிலும் வெவ்வேறு அரசியல்-பொருளாதார சூழல்களுக்கு தகுந்தபடி வெவ்வேறு முறையிலான தீர்வை லெனினும் மாவோவும் கண்டனர்.

      நமது காலங்கள் இங்கே மாறும் போது அதற்கு தகுத்த மாற்றங்கள் நமது கொள்கைகளிலும் இருக்கவேண்டும். ஆனால் நாம் வகுக்கும் கொள்கைகள் மார்க்சிய கண்ணோடத்தின் படி சரியானதாக நிருபிக்கப்பட வேண்டும் அதுதான் முதன்மையானது

      அப்படி நிருபிக்க முடியாத கொள்கைகளை மார்க்சியத்தின் பெயரால் நடைமுறைபடுத்துபவர்களை போலிகள் என்கிறோம்.

      • “லெனினுடைய கொள்கைகளையோ, மாவோவினுடைய கொள்கைகளையோ அப்படியே நகலெடுத்து இங்கே அமல்படுத்துவதும் இல்லை அமல்படுத்தவும் முடியாது”.—ஒத்து கொண்டமைக்கு நன்றி.
        “நாம் வாழும் காலம்,சூழல், அரசியல் பொருளாதார நிலைமளுக்கு தகுந்தபடி நாம்தான் நமது கொள்களைகளை வகுத்துக்கொள்ள வேண்டும்”.—ஆயிரம் வருடத்திற்கு முன்னாடி நடந்தவைகளில் எது இன்றைக்கு நடக்கவில்லை? எது மாறியிருக்கிறது?..எல்லாவகை காலத்திற்கும் பொருந்தும் வண்ணம் தீர்வை இஸ்லாம் வழங்கியிருக்கிறது என்பதை உங்களுக்கு எடுத்து சொல்ல விரும்புகிறேன். சில முஸ்லிம்களின் தவறான நடத்தையை வைத்து இதுதான் இஸ்லாம் போதிக்கின்றது என்றோ , இல்லை இதுதான் இஸ்லாம் என்றோ தாங்கள் தயவு செய்து நினைக்க வேண்டாம். இஸ்லாத்தின் கொள்கையை பற்றி தெரிந்து கொள்ள இஸ்லாத்தை படியுங்கள் , அப்புறம் அதை இஸ்லாமியர்களுடன் ஒத்து பாருங்கள் , தைரியமாக உரக்க தவறை சுட்டி காட்டுங்கள் உங்களை நாங்கள் வரவேற்ப்போம். “தொழிலாளியின் கைகளை கழுவும் முன்பே அவர்களுக்கு உண்டான சரியான , நீதம் இல்லாமல் அவர்களின் கூலியை கொடுத்து விடுங்கள் “..இதைத்தானே இஸ்லாம் போதிக்கின்றது …நன்றி உங்களின் பதில்களுக்கு.

        • yya periyavare adhai mattuma islam podhikkiradhu
          Kola pannu, rathathai rusi, appavi makkalai kollu, edhirpaavan thalai thundi idhellamum unga madham podhukkidhu
          Enga vinavu sounde kaanom? payya ponru yaaravadhu hindu madam pathi ezhudhinal udane pala pergalodu vandhu kootu thakkuthal nadathum vinavu..அப்புறம் அதை இஸ்லாமியர்களுடன் ஒத்து பாருங்கள் , தைரியமாக உரக்க தவறை சுட்டி காட்டுங்கள் உங்களை நாங்கள் வரவேற்ப்போம். “தொழிலாளியின் கைகளை கழுவும் முன்பே அவர்களுக்கு உண்டான சரியான , நீதம் இல்லாமல் அவர்களின் கூலியை கொடுத்து விடுங்கள் “..இதைத்தானே இஸ்லாம் போதிக்கின்றது
          Idhai kandu enna seiyapodhu??? Indha moodanin Bodhanaii ethu kollapogiradho???\

      • Yapa venamppa stalinum Maoum thaan inga innum korachal. Erkanave Irukkura MOdi pathaathu idhulla innum Mass murderers, Gruesome evils Mao zedung , Stalin ponra rathi veri pidicha mirugangalin kolkaigala indiavikku Venum?

      • அப்படி இடம், பொருள் ஏவல் எல்லாம் தெரிந்திருந்தால் ஏன் அங்கெல்லாம் தோல்வி ???????? எல்லாமே மாறும் என்றால் கம்யுனிசக் கொள்கைகள் மட்டும் மாறாமல் அப்படியே இருக்க முடியுமா?

        மார்க்சிய கண்ணோடத்தின் படி சரியானதாக நிருபிக்கப்பட வேண்டும் அதுதான் முதன்மையானது// இதை கொஞ்சம் தெளிவாக விளக்க முடியுமா?

  38. Madham endra oonru Indiavil ozhiya vendum(Romba Kastam) Qatarla panra modela follow pannlam…
    BJP, Muslim league ponra madha saarndha katchigalai udanadiyaaga Ban seyyanum
    Pakistan ennum Theevira vadha thev…, naadu ulaga mapliye irukka koodathu…

  39. தன் நாட்டை ஒரு குடிமகன் நேசிக்க வேண்டும் என்றால் அவனுக்கு மூன்று விஷயங்கள் கிடைக்க வேண்டும்

    1 ,நீதி ( இஸ்லாமியர்களுக்கு இந்த நாட்டில் நீதி மறுக்க படுகின்றன அப்படியே கிடைத்தாலும் ( தாமதமாக கிடைக்கும் நீதி அநீதிக்கு சமம் ) இன்று வரை குஜராத்தில் முஸ்லிம்களுக்கு நீதி கிடைக்கவில்லை (ஒன்பது வருடம் )
    ஆனால் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தில் (அப்பாவி முஸ்லிம்களுக்கு ) மரண தண்டனை
    2 , சுதத்திரம், இந்த் நாட்டில் முஸ்லிம் பெயர் வைத்தாலே பயங்கரவாதிகள் ENRU ( அப்படி ஒரு மனநிலையை ஹிந்துத்துவ சக்திகள் ORUVAKI
    3 , பசி இந்த நாட்டில் தலித்துகளை விட முஸ்லிம்கள் வறுமை கோட்டுக்கு keele உள்ளார்கள் ( liparan kamisan )

    • புரட்சி,

      கட்டுரைக்கு சம்பந்தமில்லாத புது பிரட்சினையை கிளப்புறீங்க! ரொம்ப ஓவர் ஆக போய் நாட்டை நேசிப்பது வரைக்கும் போனதிலிருந்தே தெரிகிறது.

      ஒரு நாட்டை நேசிக்க நீங்கள் சொன்ன காரணங்கள் மட்டும் இல்லை. அதுபோல் இந்த நாட்டை சிலர் வெறுக்க இன்னும் சிலவும் உண்டு. அது தினசரி வாழ்கையை அடிப்படையாக கொண்டது.

      காலையில் வீட்டை விட்டு வெளியே வரும் இந்து இல்லாத ஒருவன், வீதி முனையில் விநாயகர் கோவிலை பார்க்கிறான் அங்கு பூஜை நடக்கிறது, அடுத்து பேருந்து நிறுத்தம் , அங்கே இந்து முறைப்படி நடக்க இருக்கும் திருமணத்திற்கு செல்ல பேருந்து காக காத்திருக்கும் மக்கள் கூட்டம். அடுத்து பேருந்தில் ஏறினால் அங்கே இந்துசாமிகளின் புகைப்படங்களில் மலர் மாலைகளுடன் ஊதுபத்தி வாசனை .ஜன்னல் வழியே வெளியே பார்த்தால் அங்கே புதிதாக கட்டபோகிற கட்டடத்திற்கு இந்து முறைப்படி பூமி பூஜை .அடுத்து அதை விட்டு கீழிறங்கி ஆபீஸ் உள்ளே நுழைந்தால் மிகப்பெரிய இந்து கடவுள் புகைப்படங்கள். கோப்புகளை எடுத்துகொண்டு மானேஜரை போய் பார்த்தால் குங்குமபோட்டு விபூதியுடன் காட்சியளிக்கும் ஒரு உருவம். சிறிது நேரம் கழித்து இருக்கையில் வந்து அமர்ந்து பார்த்தால் திருப்பதிக்கோ பழனிக்கோ சென்று விட்டு வந்து மொட்டை தலையுடன் பிரசாதம் விநியோகிக்கும் சக ஊழியர். ஒருவழியாக ஆபீஸ் முடிந்து திரும்பவும் அதே பேருந்து அதே சாலை. அங்கே சாமி ஊர்வலம். வீட்டுக்கு வந்து படுத்தால் தூக்கம் வரவில்லை. அன்றைய சம்பவங்கள் தான் ஞாபகத்தில். தன்னோட மத நம்பிக்கைக்கு முற்றிலும் பொருந்தாத இந்து சமுதாயம், சம்ப்ரதாயம் மேல் வெறுப்பு தான் வருகிறது. இதே போலதான் அணு தினமும்.

      என்னதான் பண்றது. இதுக்கெல்லாம்? என்னதான் தீர்வு ?

      மனமாற்றம் தான் ஒரே தீர்வு. (மத மாற்றம் இல்லை, அழுத்தமாக படிக்கவும் ).


      மாக்ஸிமம்

      • நான் சொன்னதுக்கும் நீ சொன்னதுக்கும் எதாவது ஒத்துபோகுத நான் சொல்றது ஒருத்தவனுக்கு கிடைக்ககூடிய அடிப்படை
        உரிமை பத்தி சொன்னேன், நீ என்ன சொல்றா, காலை எழுதுததும் பல் விளக்கணும்,பாத்துரூம் போகணும் , குளிக்கணும் சாப்பிடனும் , சாமி கும்பிடனும், ஆபீஸ் போகணும், ஸோ இதுதான் ஒரு மனிதனுக்கு தினமும் கடமை, இப்படித்தான் இருக்கு நீ சொன்னது, முதல்ல நீ பெயரை மாத்துட உனக்கும் உன் பெயருக்கும் பொருத்தமே இல்லை நீ அவாள் எனக்கு புரியுது

        • மக்குசிமம்,
          புரட்சி என்றால் உனக்கு சரியாய் தெரியலே ஏன் என்றால் புரசிக்கும் உனக்கும் நிறைய தூரம் நீங்கள் நாட்டை காட்டி, கூட்டி, சிங்கி அடித்து வாழ்ந்த கூட்டமாச்சே, புரட்சி என்பது எங்கெல்லாம் ஒரு மனிதனின் அடிப்படை சுதந்திரம் பறிக்க படுதோ, அவனுடைய உரிமைகள் நசுக்கபடுதோ, நீதி மறுக்கபடுதோ, அப்போல்லாம் புரட்சி வெடிக்கும், என்னடா இவன் மறுபடியும் புரச்சியை பத்தி பேசுறானே நினைகிரியா, இந்தியாவுல நடக்கபோறதே சொன்னேன், ஆனால் அது உண்மையான ஹிந்து தலிதுடைய புரசிய இருக்கலாம் , இஸ்லாமிய புரச்சியா இருக்கலாம், இல்லை கமுனிஸ்ட் புரச்சியா இருக்கலாம், ஆனால் ஒருபோதும் ஹிந்துத்துவ புரச்சியா இருக்காது, ஏன்டா உங்களுடைய சதவிதம் 2 % இப்பயாவது புரிசிச்சா சரி ஓகே ,

          • உங்களுடைய சதவிதம் 2 %
            Enda , 2% ennavo poi kanakeduthu vandha maadhiri solra
            naanga 2% na unna madhir alunga ellam 0.0000002% kooda irukka maatengada adhu therinjikada modhalla

        • மதிப்பிர்குரிய துலுக்க தோழர் புரட்சி அவர்களே,

          நீங்கள் ஏன் வெறும் புரட்சி என்று வைத்து உள்ளீர்கள். உங்கள் உண்மை நோக்கமான துலுக்க புரட்சி என்றே வைத்து கொண்டு இருக்கலாமே?

          ஒருவன் காலையில் எழுந்து கக்கா போவான். இரண்டு மணி நேரத்திற்கு சிறுநீர் கழிப்பான் என்று கூறீனாள். அவன் இதை மட்டும் தான் செய்கிறான் வேறு எதுவும் செய்வதில்லை என்று அர்த்தமா? உங்கள் மூலையில் உள்ள லாஜிக் சிஸ்டத்தை புரிந்து கொள்ள முடியவில்லை

          • நாங்கள் செய்வது துலுக புரட்சி என்றால் நீங்கள் செய்வது காவி வர்ணாசிரம புரச்சியா, நீங்க ரொம்ப லாஜிக்க சொல்றியோலோ , போடா குடும்பி போரம் போக்கு ,

            மற்ற நண்பர்கள் மனிக்கவும் இவன் தவறாக வார்த்தை உபயோகிபதனால் நானும் தவறாக பேச வேண்டி உள்ளது, சோழனே கண்ணியமாக உரையாட வருக,

            • ஹா ஹா… உண்மையை சொன்னவுடன் என் உங்களுக்கு கோபம் வருகிறது, ஏன் நீங்கள் மட்டும் சீனுவை கண்டபடி RSS காரன், குடுமி, பாப்பான் என்று சொல்லலாம். நான் சொன்னால் கண்ணியம் குறைந்து பேசுகிறேன் என்று சொல்வீர்களா?

              \\மதம் மாறிய முஸ்லிம்கள் முதலில் ஏக இறைவனுக்கு நன்றி பிறகு ,சத்திய இசுலாத்துக்கு மாறிய எங்கள் முன்னோர்களுக்கு நன்றி ,\\

              இப்படி எழுதினால் நான் உங்களை என்ன் வென்று சொல்வது.. எங்கப்பன் புதர்க்குள் இல்லை என்று சொல்லி நீங்களே இப்படி வசமாக மாட்டி கொண்டுவிட்டீர்களே…

              நான் முதலிலேயே சொன்னது போல், இது ஒரு போலி கம்யூனிஸ் வளைதலம். கம்யூனிஸ்டு முகமுடி அணிந்து கொண்டு நீங்கள் செய்யும் நாடகத்தை கண்டு ஏமாறா நான் ஒன்றும் பூணுல் போட்ட பிராமணன் கிடையாது

              சீனு இத நோட் பன்னுங்க 🙂

        • கிடைக்கும் அது மக்களால் ஏற்படும் போராட்டத்திற்கு கிடைக்கும், ஆனால் உன்னை மாதிரி பாசிச வெறி உள்ளவனுக்கு உன்னுடைய கையும் காலும் உனக்கே கிடைக்கும். முயற்சி பண்ணு ஆல் தி பெஸ்ட்

        • ஏன் லிபியா-எகிப்து-துனிசியா இங்கெல்லாம அமெரிக்க ஆதரவு புரட்சி நடக்கின்றதே சுவாமி

          • நண்பா

            லிபியா-எகிப்து-துனிசியா மக்களால் ஏற்படுத்திய புரசியை தனக்கு சாதகமாக பயன்படுத்திய ஏகாதிபத்திய கயவர்கள் அமரிக்கா, தயவு செய்து அவர்களுடைய( லிபியா-எகிப்து-துனிசியா ) மக்களின் தியாகத்தை கொச்சை படுத்தாதீர்கள் நண்பரே,

      • கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் என்று கேட்கும் போதோ அல்லது அல்லாஹோ அக்பர் என்று கேட்கும் போதோ காதில் தேனும், ஹரிஹர சுதனே அண்ணாமலையே ஓம் நமச்சிவாய என்று கேட்கும் போது மட்டும் காதில் ஈயத்தை காய்ச்சி ஊத்தியது போலவும் இருக்கிறதே! இதைச் சொல்ல மறந்து விட்டீர்கள் மாக்ஸிமம் 🙂

        அருமையான பதில். ஆங்… இது இந்து மதத்தவருக்கும் பொருந்துமா? இல்லை இந்து அல்லாத இஸ்லாமிய, கிறிஸ்தவ மதத்தவருக்கு மட்டுமான ‘கட்டளையா’????

      • மாக்ஸிமம் அண்ணே. எப்படிண்ணே இப்புடி சளைக்காம சோக்கு அடிச்சுட்டே இருக்கீங்க. சரிண்ணே. ஆய் போறதில இந்துவுக்கும் முஸ்லிமுக்கும் எதாச்சும் வித்தியாசம் இருக்காண்ணே. கொஞ்சம் ஆரய்ச்சி பண்ணி சொல்லுங்கண்ணே. ஏன்னா அவங்க அதில வித்தியாசம் இருக்குன்னு மனசு வெசனப்பட்டு தீவிரவாதி ஆயிருவாங்களோ.

    • //1 ,நீதி ( இஸ்லாமியர்களுக்கு இந்த நாட்டில் நீதி மறுக்க படுகின்றன அப்படியே கிடைத்தாலும் ( தாமதமாக கிடைக்கும் நீதி அநீதிக்கு சமம் ) இன்று வரை குஜராத்தில் முஸ்லிம்களுக்கு நீதி கிடைக்கவில்லை (ஒன்பது வருடம் )
      ஆனால் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தில் (அப்பாவி முஸ்லிம்களுக்கு ) மரண தண்டனை//

      கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தில் மாட்டியிருப்பவர்கள் மட்டும் அப்பாவியாம்.

      //3 , பசி இந்த நாட்டில் தலித்துகளை விட முஸ்லிம்கள் வறுமை கோட்டுக்கு கேலெ உள்ளார்கள் ( லிபரன் கமிசன் )//

      இதே நாட்டில் தான் கிருஸ்தவர்களும் இருக்கிறார்கள். அவர்களால் மட்டும் எப்படி ந்ல்லா துறைகளிலும் வேலை பார்க்க முடிகிறது? காரணம், அவர்கள் மொத்த கல்வித்துறையையும் அவர்கள் வசம் வைத்திருக்கிறார்கள். ஆனால், முஸ்லீம்களால் அறிவியல் கல்வியை ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. போன தலைமுறையில் எல்லோரும் அரசாங்க பள்ளியில் படித்தவர்கள் தான். அவர்களில் பிள்ளைகள் இப்போது ஆங்கில பள்ளியில் படிக்க காரணம் போன தலைமுறை ஆட்கள். ஆனால், எத்தனை முஸ்லீம்கள் அரசாங்க பள்ளியில் படித்தார்கள்?

      • கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தில் மாட்டியிருப்பவர்கள் மட்டும் அப்பாவியாம்.//

        மன்னிக்கவும் மலேகன், அஜ்மீர். இப்ப இரண்டும் சொன்னேன், இன்னும் பல ஆயிரம் இருக்கு.

        போச்சி கிறிஸ்துவ மக்களே உசார இருகல். இப்புளுது ஹிந்டுதுவவின் பார்வை உங்கள் மீது ஜாக்கிரதை ,

        //முஸ்லீம்களால் அறிவியல் கல்வியை ஏற்றுக் கொள்ளமுடியவில்லை//
        போய் பண்டைய வரலாறு படி அதுக்காக 160000 ஆயிரம் வருடங்கள் என்று ராமர் காலத்துக்கு போகதே,
        1000 வருடங்கள் பின்னே உள்ளே இஸ்லாமிய அரசை வரலாறை படி அறிவியலில் கல்வியுலும் உலகத்துகே முன்னோடி என்பதில் உலகறிந்த விஷயம் .

        • இதில் என்ன வேண்டி இருக்கிறது, செய்கின்ற திருட்டு தனத்தில் 75% கிறித்துவ மிஷி நரி கயவர்கள் தான் என்பது உங்களுக்கு தெரியாமல் போனது ஆச்சரியமாக உள்ளது. நீங்கள் ஏன் உங்கள் அமெரிக்கா மதம் மாற்ற கொடுக்கும் பணத்தை பங்கு போட்டு கொள்ளை அடிக்கும் பங்கு தந்தையிடம் கேட்கக் கூடாது. மறக்காமல், நாளை சர்ச்க்கு போகும் பொழுது இதை பற்றீ கேளுங்கள் கண்டிப்பாக சொல்வார்.

        • //1000 வருடங்கள் பின்னே உள்ளே இஸ்லாமிய அரசை வரலாறை படி அறிவியலில் கல்வியுலும் உலகத்துகே முன்னோடி என்பதில் உலகறிந்த விஷயம் .//

          உங்களால மட்டும் தான் இப்படி எல்லாம் ஆராய்ச்சி பன்ன முடியும். 1000 வருஷங்களை விடுங்கள். அது இன்னோரு முறை பேசிக்கலாம்.

          ஏங்க போன தலைமுறை அரசு பள்ளியில் படித்தவர்களில் முஸ்லீம்கள் கொஞ்சம் கூட இல்லை?

          • ஏன் இல்லை? நீங்களே அந்த பிரம்மரகசியத்தை கண்டுபிடித்து டெல்லுங்களேன்

          • அண்ணே சீக்கு ( சீனு )

            உங்களே மாதிரி வாயிலே லிங்கம் எடுக்கும் ஆராயிச்சி,சாமியார்களின் செக்ஸ் ஆராயிச்சி, பல காவி ஆசிரம ஆராயிச்சி, எல்லாம் எங்களுக்கு தெரியாது தப்புதான். //ஏங்க போன தலைமுறை அரசு பள்ளியில் படித்தவர்களில் முஸ்லீம்கள் கொஞ்சம் கூட இல்லை?//

            எப்படி அண்ணே இருக்க முடியும் அது தான் அங்கே காவி ஹிந்துத்துவ இருக்குதே, அப்ப எப்படி அண்ணே எங்க பிள்ளைகள் படிக்கும், நீங்க தான் ஒன்னேம் விடு வைகலே,

      • <>
        கடந்த 10 வருடங்களாக சங்பரிவாரங்கள் ஊரெல்லாம் குண்டு வைத்துவிட்டு முஸ்லீம்கள் மேல் பழியே போடவில்லையா? பிறகு அம்பலப்பட்டு நாறவில்லையா? அவர்களுக்கு என்ன தண்டனை கிடைத்தது. பழிவிழுந்த காரணத்தினால் இன்றுவரை சிறையிலிருக்கும் முஸ்லீம்கள் அப்பாவிகள் இல்லாமல் வேறென்ன? கொஞ்ச நாயமா பேசுங்க சாரே…

  40. விவாதம் ஆரோக்கியமானதாக இல்லை .படித்தவர்கள் மத்திலேயே இவ்வளவு கோபம் இருந்தால் …..பாமரர்கள் உணர்ச்சி வசப்பட்டு ஏன் தவறான வழிகாட்டுதல்களுக்கு பின் அணிதிரள மாட்டார்கள் .
    குழையடி சண்டைகளாய் பின்னூட்டங்கள் …

  41. மிகச்சிறப்பான கட்டுரை.
    இந்து குண்டு வைத்தால் பார்ப்பன பாசிச வெறி.
    கிறிஸ்துவன் குண்டு வைத்தால் ஏகாதிபத்திய வெறி, முதலாளித்துவ வெறி.
    முஸ்லீம் குண்டு வைத்தால் யாரோ தூண்டிவிட்டு செய்கிறான். அவன் அப்பாவி. அவன் பாகிஸ்தானில் ஷியா சுன்னி மீதும் சுன்னி ஷியா மீதும் குண்டு வைப்பதற்கும் ஏதோ ஆர்.எஸ்.எஸ் அல்லது அமெரிக்கா அல்லது யூத சதி இருக்கும்.
    இது மிகச்சரியான புரிதல்.
    இதே பார்வையில் பல கட்டுரைகள் வினவு தளத்தில் வந்துள்ளன. இவற்றை தொகுத்து ஒரு புத்தகமாக வெளியிடலாமே?

  42. கிட்ட தட்ட தேஞ்சு போன டேப்பு மாதிரி ஒவ்வொரு குண்டு வெடிப்புக்கு பின்பும் கேட்கும் குரல்கள்.

    இது இஸ்லாமிய தீவிரவாதம். ஹிந்துக்கள் சாதுவானவர்கள். வாயில் வாழை பழம் வைத்தால் கூட கடிக்க தெரியாது.
    இதற்கு காரணம் பாகிஸ்தான் மற்றும் உலகளாவிய இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகள்.
    – வலது சாரி அமைப்புகள்

    இது ஹிந்துத்வா தீவிரவாதம். முஸ்லிம்கள் சாதுவானவர்கள். வாயில் வாழை பழம் வைத்தால் கூட கடிக்க தெரியாது.
    இதற்கு காரணம் பார்ப்பனர்கள், அமெரிக்கா, யூதர்கள்..
    – இடது சாரி அமைப்புகள்

    மும்பை இந்த சதியில் மனம் தளராது. மீண்டும் மக்கள் தங்கள் வாழ்கையை தொடங்கி தீவிரவாதிகளின் முகத்தில் கறியை பூசுவார்கள். வாழ்க , வெல்க , “ஸ்பிரிட் ஒப் மும்பை” – பத்திரிகைகள்.

  43. ஏஎதுக்கு என் பெயரை மாத்தனும் என்னுடைய பதிவுக்கும் என் பெயருக்கும் தொடர்பு இருக்குதுடா, ஏன்டா நான் சொன்னது இந்த நாட்டில் ஒரு மனிதனுக்கு கிடைக்ககூடிய
    அடிப்படை உரிமை பத்தி சொன்னேன், நீ என்ன சொல்ற காலையில் விழித்தவுடன் பல் விலக்கவும், கக்குசு போகவும், குளிக்கவும், சாப்பிடவும், சாமி கும்பிடவும், ஆபீஸ் போகவும் இது ஒரு மனிதனுடைய தினசரி கடமைடா பொறம்போக்கு, //தன்னோட மத நம்பிக்கைக்கு முற்றிலும் பொருந்தாத இந்து சமுதாயம், சம்ப்ரதாயம் மேல் வெறுப்பு தான் வருகிறது// ஏன்டா பரதேசி பல நூறு வருசமா மேலே சொன்னியே அந்த சமுதாய மக்களோடுதனேட ஒன்ன இருத்தோம், அப்ப ஒன்னும் பிரச்சினை வரலே, எப்போ நீங்க உள்ளே ( அவாள் ) வந்திகளோ அப்பவே இந்த நாட்டுக்கு சனியன் பிடுச்சிருசி, மதமாற்றம் பெயரை கேட்டாவே கீழே ஒழுகுதோ, சோம்பேறி இனிமேலாவது புரட்சிகரமான பதிலை தா ஓகே ,

  44. Maximum, Madham enra onru Ivargiladam irukkum varai. ingu nimmadhi irukkadhu. ella madhamum paithiyakara madhame……Madham enra saakadaikkul ivargal moozhgi kidappathal thaan sila panni kootangal adhaneye suthi meigiradhu…

        • nanga thundum போடுவோம் துணியும் போடுவோம் , உன்னக்கு தான் kovalam அவுந்து கிடக்குது, அதை முதல்ல சரி செய் ,taken நீங்க தான் மொக்கே போடுரிக .

          • hahahah Komanama enna thankar bachaan kalathule irukkiya andha aalu thaan tamil panbadu, kalacharamnu kovanathayum eruma maatayum kaatunaru.. nee computerla use panra aana innum manadhalavil neengalam innum thirunthaliya.. Po sombu nerambidichu.. po andava konduva!!!

  45. அது தான் உங்களை பாத்து ஊரு சிரிப்பாய் சிரிக்குதே, உங்களுடைய தேசபற்று தான் எல்லாருக்கும் தெரிச்சி
    போச்சே, அப்புறம் ஏன் இந்த பொலப்பு , போங்கடா உங்களை பேசவே எனக்கு புடிகலே,ஆனால் நீங்க மறுபடியும்
    வந்திக்கான நானும் வருவேன் சொல்லிபுட்டேன் , சும்மா எப்பவுமே அதுதான் இது அதுதான் இது காமெடி பன்னுரனுவோ,ஹ ஹ ஹ ஹ ஹ எப்படி ,

  46. இது போன்ற குண்டு வெடிப்புகளையும் இந்து மத வெறியர்கள் தான் செய்கின்றனர். Recent proof Malagon, Hydrabath, Ajmeer … blast.

    • இப்போ எங்க அந்த கேள்விகுறி?இவனும் முஸ்லீம் இல்லைன்னு சொல்லேன்!!

      • பிரவீன்.. கொண்டை எப்படி வெளியே தெரிஞ்சுது அப்டீங்குற லாஜிக் உங்களுக்கு இன்னும் புரியலியா?

        அந்த முஹமது இந்த பிரவீன் இல்லை. இந்த லாஜிக்கும் உங்களுக்கு புரியாது.

        காமெடி பீசுங்க நீங்க!!!!

        • வடிவேலு: நானும் விதவிதமா மாறுவேசம் போட்டுட்டு வந்து நிக்கிறேன். பாடிசோடான்னு எப்படிடா கண்டுபுடிக்கிறீங்க. அப்புறம் அந்த கெட்டப்புக்கு என்னடா மரியாதை.
          விஜய் நண்பர்கள்: உன் கொண்டய வச்சுத்தாண்டா லூசு.
          வடிவேலு: கொண்டய மறந்துட்டேனே.

          இன்னும் நம்ம பிரவீண் அண்ணாத்தைக்கு புரியலை. காமெடி பீசு போங்கோ

  47. சபாஷ் சரியான போட்டி! எங்கே இன்னொரு கோஷ்டியை கானோம்?
    ஒவ்வொரு மனிதனும் செய்யும் செயல்கள் அவன் மதத்தால் தான் நடைபெறுகிறது என எல்லாரும் நம்பரீங்களா? நல்லவன் கெட்டவன் என பிரிப்பது ஒருவனின் மதத்தை பொருத்துதானா? நல்ல கட்டுரை தான், ஆனால் முட்டாள்தனமான வாதங்கள்.

  48. வினவுக்கு விண்ணப்பம்

    கோவையில் காவலர் செல்வராசு கொலைசெய்யப்பட்டதை அடுத்து//

    ஏன் கொல்லப்பட்டார்? இதை ஏன் விரிவாக ஆராயவில்லை?

    2002 குஜராத் கலவரத்திற்கு பிந்தையதுதான் 2008 அகமதாபாத் குண்டுவெடிப்பு! //

    அதற்கு முன்பு கலவரம் ஏன் நடந்தது என்பதையும் கொஞ்சம் தெளிவுபடுத்தி இருக்கலாம் ?

    எந்த குண்டு வெடிப்பை எந்த அமைப்பு நடத்தியது என்று ஒரு பட்டியல் வெளியிடுங்களேன். இங்கே 90 சதவிகதம் இந்து வெறியர்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்றெல்லாம் உளறிக் கொண்டிருக்கிறார்கள். இந்து மத வெறி அமைப்புகளை கண்டித்து பேசும் அதே நேரம் இஸ்லாமிய வெறியர்களை கண்டுகொள்ளாமல் இருக்க முடியாது.கொஞ்சம் எண்ணிக்கையில் பெரும்பான்மையராக இருக்கும் நாடுகளில் சிறுபான்மையினரை இதே இஸ்லாமிய வெறியர்கள் என்ன பாடு படுத்துகிறார்கள் என்பதையும் பேச வேண்டும்

    • அரபு நாடுகளில் வேலை செய்யும் இந்தியர்களில் பெரும்பான்மையினர் இந்துகள் தான். இங்கு rss க்கு ஆதரவாக பேசும் பல தேசபக்தர்கள் ரியால் களில் தான் சம்பாதிக்கின்றனர். அவர்களெல்லாம் அப்படியென்ன சொல்லொண்ணா துன்பங்களை அனுபவித்து வருகிறார்கள் என்று நமக்கு ஒன்றும் புரியவில்லை.

      அங்கிருக்கும் முஸ்லிம்களை இவர்கள் கையால் படுகொலை செய்ய முடியவில்லை என்பதுதான் அன்பர் எழில் கூறும் வேதனையாக இருக்குமோ?

        • உன் லெவலுக்கு கேவலமா யோசிக்க முடியாது. ஒன்னு கேட்டா சம்பந்தம் இல்லாம வேற ஒன்னு பேசுற.

  49. //கோவையில் காவலர் செல்வராசு கொலைசெய்யப்பட்டதை அடுத்து//

    //ஏன் கொல்லப்பட்டார்? இதை ஏன் விரிவாக ஆராயவில்லை?//

    செல்வராசு கொல்லப்பட்டது அது அவனுடைய தனிப்பட்ட விஷயம் , இதை ஏன் பாசிச வெறியர்கள் கலவரமாக உண்டு பண்ணினார்கள்,அதற்காக ஏன் பல அப்பாவி முஸ்லிம்கள் கொல்லபட்டார்கள்,

    //2002 குஜராத் கலவரத்திற்கு பிந்தையதுதான் 2008 அகமதாபாத் குண்டுவெடிப்பு! //

    அதற்கு முன்பு கலவரம் ஏன் நடந்தது என்பதையும் கொஞ்சம் தெளிவுபடுத்தி இருக்கலாம்//

    கோதர ரயில் எரிப்பு என்பது ஹிந்டுதுவவின் சதி, மத்திய அரசால் நியமிக்கப்பட்ட பானேர்ஜி கமிசன் ஆதரத்துடன் நிருபித்து இருகிறார்கள், ரயிலின் உள் பக்கம் தீ வைக்க பட்டது என்று சொல்லி இருகிறார்கள்.

    ஆனால் இதை பாசிச மோடி ஏற்கவில்லை கண்டிப்பாக சத்தியம் ஒரு நாள் வென்றே தீரும்.

    • அய்யா பொரட்சி காவலர் செல்வராஜ் கொல்லப்பட்டது அவருடைய தனிப் பட்ட விஷயம் என்று மிக எளிதாக கடந்து செல்கிறீர்கள் அப்படி அவர் தனிப்பட்ட காரணத்துக்காக கொல்லப் பட்டிருந்தால் ஏன் அவ்வளவு பெரிய கலவரம் எதிர்வினையாக நடந்தது? நடந்ததன் உண்மையான காரணம் இது தான் மூன்று பேர்(உக்கடம் பகுதியை சேர்ந்த இசுலாமியர்கள்) ஒரு இரு சக்கர வாகனத்தில் செல்கிறார்கள், அவர்களை விதிமீறலுக்காக செல்வராஜ் தடுத்து நிறுத்துகிறார் அதனால் வாக்குவாதம் வருகிறது பின்னர் அங்கிருந்து சென்று கத்தியோடு திரும்பி வந்து பட்டப் பகலில் அவரை நடு வீதியில் வைத்துக் கொல்கிறார்கள். அதனால் ஆத்திரமடைந்த காவல்துறையினர் மற்றும் இந்துத்துவ கொள்கை பேசுவோர் இணைந்து தாக்குதல் நடத்தப் படுகிறது. பலர் கொல்லப் படுகிறார்கள். அப்படியே உங்கள் வாதப் படி இது தனிப்பட்ட தாக்குதல் என்றாலும் எதிர் வினை என்பது அப்படி வன்முறையில் ஈடுபட்டவர்களை குறித்து தானே இருந்திருக்க வேண்டும்?. மார்க்கெட்டுக்குப் போறவனையும் கடை வீதிக்கு வருபவனையும் பேருந்து நிலையத்தில் காத்திருப்பவனையும் குறிவைத்து ஏன் தாக்குதல் நடத்த வேண்டும்? அதாவது பரவாயில்லை தாக்குதலில் காயமடைந்து மருத்துவ மனைக்கு எடுத்து வரப் படுகிறவர்களை குறிவைத்து அரசு மருத்துவ மனை வளாகத்திலும் தாக்குதல் நடந்தது ஏன்?
      உக்கிடம் பகுதியல் தலித் பெண்கள் மீது இந்த இசுலாமிய வெறியர்கள் பாலியல் வன்முறையிலும் ஈடுபட்டார்கள். அதனால் ஆத்திரமடைந்த தலித்துகள் கூட பதிலடி கொடுத்தார்கள் இதெல்லாம் அந்தப் பகுதியை சேர்ந்த எனக்கு தெளிவாகவே தெரியும் சும்மா வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று உளறக்கூடாது

      • தங்கள் அந்த பகுதியை சேர்ந்தவர் என்று கூறி விட்டால்.. தங்கள் உளறல்கள் சந்தேகத்திற்கு இடமின்றி ஏற்று கொள்ளப்பட வேண்டுமா என்ன?

        எனது நண்பர் ஒருவர் சொன்னார், சம்பவத்தன்று அங்கிருந்த மருத்துவ மனைகளில் ஒரு முஸ்லிம் டாக்டரும் வரவில்லை என்று. அதாவது அங்கு நிகழ இருக்கும் அசம்பாவிதம் டாக்டர்களுக்கு முன்பே தெரியுமாம். எப்படிப்பட்ட அயோக்கியத்தனமான குற்றச்சாட்டு இது. அதாவது இந்த வதந்தி மூலம் இந்த அசம்பாவிதங்கள் அனைத்தும் இஸ்லாமியர்களுக்கு தெரிந்தே நடத்தப்பட்டது என்று அவர்கள் மீது வெறுப்பை விதைப்பது தான் இந்த இந்து மற்றும் மீடியா பயங்கரவாதிகளின் நோக்கம். அதில் அவர்கள் ஓரளவு வெற்றியும் பெற்று விட்டனர். அதனால் தானே இந்து வெறியன்கள் குண்டு வைத்தாலும் அது இஸ்லாமிய தீவிரவாதம் என்று பேசபடுகிறது.

        இஸ்லாமியர்கள் உரக்க சொல்வோம்.. குண்டு வைத்தவன் இஸ்லாமிய பெயர் தாங்கியாக இருந்தாலும் அவன் தண்டிக்கப்பட வேண்டியவன்தான் என்று.

        மோடி கழு மரத்தில் ஏற்றப் பட வேண்டியவன்தான் என்று ஒத்துகொள்ள நீங்கள் தயாரா?

        • Mr Vyaaki,
          . pakistana edhirkadhile ungalukku enna thayakaam??
          pakistan kaaran Sadhi panna nenacha adhayum potta thanamava inga RSSnu podra Pottathanathin Ucha kattam.. Bedi kootam kooda indha madhiri nenaikkadhu
          Hello Mr Vyaaki, peirua dash maari Vyakyanam pesuriye idhukku modhalla badhil sollu??

          • அய்யா! பதில் சொல்ல முடியாத பெரிய பொடலங்கா கேள்வியா கேட்டுடீங்க? நான் ஏற்கனவே சொன்ன பதிலுக்கு நீங்க கேள்வி கேட்டிருக்கீங்க?
            //இஸ்லாமியர்கள் உரக்க சொல்வோம்.. குண்டு வைத்தவன் இஸ்லாமிய பெயர் தாங்கியாக இருந்தாலும் அவன் தண்டிக்கப்பட வேண்டியவன்தான் என்று.//
            இதன் அர்த்தம் உங்களுக்கு புரியவில்லை போலும். என் தாய் நாட்டையும் என் மக்களையும் கொல்பவன் பாகிஸ்தானியாக இருந்தாலும் அமெரிக்கனாக இருந்தாலும் அவன் எனக்கு எதிரி தான்! உன்கிட்ட யாருய்யா வந்து சொன்னா பாகிஸ்தான எதிர்க்க தயக்கம்னு.

            அமெரிக்க நலனுக்காக சொந்த நாட்டு மக்களை பலியிடும் (உங்களைப் போன்ற) தேசபக்தர்கள் அல்ல நாங்கள். இந்திய விடுதலைக்காக சிறை சென்ற குடும்பம் தான் எங்கள் குடும்பங்களும்.

            முதலில் நீங்க தமிழ் கத்துக்க ட்ரை பண்ணுங்க. அப்புறம் ‘peirua dash maari ‘ – பேசலாம்.

            • சஹோதரனே,

              சத்தியத்தை எடுத்துரைப்பதில் நாம் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிருபித்து கொண்டு இருக்கிறாய் உன்னுடைய பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகள் ,

            • Mr Vyaaki, The tamil i know is sufficient for my survival here. So instead of educating me why dont to try to educate your unwashed masses..I asked Naankadavul to reply on searchindia’s review he vanished like a fart in the wind.. Why dont u ask him to come here again and blow his horns
              and Hats off to your point on “என் தாய் நாட்டையும் என் மக்களையும் கொல்பவன் பாகிஸ்தானியாக இருந்தாலும் அமெரிக்கனாக இருந்தாலும் அவன் எனக்கு எதிரி தான்!” Eppadiyo Indiava Thainnadunu othukitta varaikkum sandhosham…

            • சரியாக கூறினீர்கள் வியாக்கி. இந்தத் திருநாடு நம் அனைவருக்குமானது. இது என்றும் இவர்களுக்குப் புரியாது. சற்றே உரக்கச் சொல்லுங்கள். இன்குலாப் ஜிந்தாபாத். புரட்சி ஒங்குக, வெல்கவே.

        • வியாக்கி அண்ணே. எனக்கும் சொந்த அனுபவம் உள்ளது.அன்று எனது வகுப்பில் படித்த இசுலாமிய மாணவர்களும் வரவில்லை.நான் கோவையில் தான் படித்தேன்.குண்டுவெடிப்பு,கலவரம் நடந்த போது நான் அங்கு தான் இருந்தேன்.நீங்கள் பூசணிக்காயை அல்ல பூசணிக்காய் தோட்டத்தையே சோற்றில் மறைக்க முயலுகிறீர்கள்.
          மோடி கழு மரத்தில் ஏற்றப் படவேண்டியவன் தான் அதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை அப்படி ஏற்றப் படும்போழுது குண்டு வைத்த வெறியர்களும் சேர்த்தே ஏற்றப் பட வேண்டும் அப்பொழுதான் எல்லா மத வெறியர்களும் அடங்குவார்கள்.எனக்கு மத நம்பிக்கை கிடையாது அது போல மத சார்பின்மை என்ற பெயரில் உங்களை யும் ஆதரிக்க வேண்டிய தேவை இல்லை இந்து வெறியன்களையும் ஆதரிக்க வேண்டிய தேவை இல்லை

          • எழில் தம்பி! நானும் கோயம்புத்தூர் காரன்தான். நாங்களெல்லாம் school க்கு போனோம் தம்பி. எங்க வீட்டிலெல்லாம் எங்களை தடுக்கல.
            நான் பொய் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை…. உங்களை மாதிரி ஆள்களின் ஆதரவும் தேவை இல்லை.

            குண்டு வைக்காதவனாக இருந்தாலும் இஸ்லாமியனாக இருக்கும் பட்சத்தில் கழுவில் ஏற்றி கொல்ல துடிக்கும் கயவர்கள் பெரும்பான்மையாக இருக்கும் நாடு தானே இது.
            ஆனால் 3000 பேரை கொன்ற மோடிக்கு எதிரான நடவடிக்கை என்ன? அந்த கொடிய செயலுக்கு அவனுக்கான பரிசு முதல்வர் பதவி. அம்மையார் ஜெயலலிதாவில் இருந்து பையாக்கள் வரை ரசிகர்கள். ஒரு வேளை இதுதான் மகாபாரத தருமன் காட்டிச் சென்ற நீதியோ?

      • அய்யா, எழில் ,

        மூன்று முஸ்லிம்கள் ஒரு காவலரை கொன்றார்கள் என்றால் ( உண்மைல் என்ன நடந்தது என்று இறைவன் மட்டுமே அறிவான்)கண்டிப்பா சட்டத்தின் மூலம் அவர்கள் தண்டிக்க பட வேண்டியவர்கள் அதில் எந்த மாற்று கருத்து இல்லை, அதை விட்ட்டு காவல்துறையும் ஹிந்துவவினரும் ஒன்றாக சேர்த்து அப்பாவி முஸ்லிம்களை படுகொலை செய்வது தீவரவதம்னே , ஆனால் அதற்கு பதிலாக பொது இடங்களில் குண்டு வைத்து அப்பாவி மக்கள் சாவது,கண்டிப்பா அதை இஸ்லாம் வெறுக்கிறது, இங்குள்ள முஸ்லிம் மக்களும் வெருகிரார்கள், மாங்காய் புளிகிறது என்பதால் தான் வாய் புளிகிறது.

  50. ஹ்ம்ம்… அதே நீதி துறை தான் துலுக்க தீவிர வாதிகள் தான் இந்த செயலை செய்தார்கள் என்று ஆயுல் தண்டனையை கொடுத்து… சில நிரபராதிகளை விடுதலையும் செய்தது.

    \\இதை பாசிச மோடி ஏற்கவில்லை கண்டிப்பாக சத்தியம் ஒரு நாள் வென்றே தீரும்.\\

    மோடி மீரியாக்கள் மூலம் கூறப்பட்ட குற்ற சாட்டுக்கள் பொய் என்பது விரைவில் வரத்தான் போகிறது.

    இதன் தமிழ் மொழி பெயர்ப்பு:

    1. டீஸ்டா செதல்வாட்டின் அமைப்பின் மூலம் 22 சாட்சியங்கள் கொடுத்துள்ள கோர்ட்-மனுக்கள் (affidavits) அனைத்தும் போலியாகத் தயாரிக்கப்பட்ட பொய் சாட்சியங்களே. அவை ஒரே மாதிரி தயாரிக்கப்பட்டு, ஒரே மாதிரி தட்டச்சு செய்யப்பட்டு, ஒரே கணினியிலிருந்து அச்செடுக்கப்பட்டவை என்பதும், சாட்சியங்கள் அனைவரும் பொய் சொல்லப் பயிற்சி அளிக்கப்பட்டவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. கலவரங்களின்போது நடந்த சம்பவங்களைப் பற்றிய தகவல்கள் எதுவுமே அவர்களுக்குத் தெரியவில்லை என்பதும், பலருக்கு அச்சம்பவங்கள் நடந்ததாகவே தெரியவில்லை என்பதும் புலனாய்வுக் குழுவின் விசாரணையில் தெரியவந்துள்ளது. அனைவரும் பொய் சாட்சியங்களானபடியாலும், சொல்லப்பட்டுள்ள சம்பவங்கள் நடக்காத படியாலும், பாதிக்கப் பட்டதாகக் கூறப்பட்டுள்ளவர்களும் பொய்யாகவே இருக்க வேண்டும்.

    2. கௌஸர் பானு என்கிற கர்ப்பிணிப் பெண்ணை ஹிந்துக்கள் பலர் சேர்ந்து கற்பழித்ததாகவும், அவர் வயிற்றை வாளினால் கிழித்து உள்ளிருந்த பாதி வளர்ந்த கருவை வெளியே எடுத்துக் கொன்றதாகவும் ஒரு சம்பவத்தை டீஸ்டா செடல்வாட்டும், அருந்ததி ராயும், மற்றும் பல போலி மதச்சார்பின்மை வாதிகளும் ரத்தக் கண்ணீர் விட்டுப் பிரச்சாரம் செய்தனர். தற்போது அம்மாதிரியான ஒரு சம்பவம் நடக்கவேயில்லை என்று தெரியவந்துள்ளது.

    3. அகமதாபாத் அருகில் உள்ள நரோடா பாடியா என்ற இடத்தில் பல முஸ்லீம்களைக் கொன்ற ஹிந்துக்கள் அவர்களின் உடல்களை ஒரு கிணற்றில் போட்டு மூடியதாக ஒரு சம்பவம் ஜோடித்துச் சொல்லப்பட்டது. அதற்கு சாட்சியங்களாக சிலரைத் தயார் செய்திருந்தார் ‘மனித உரிமைக் காவலர்’ டீஸ்டா! தற்போது அனைத்துச் சாட்சியங்களும் பொய் என்பதும் அவ்வாறு ஒரு சம்பவம் நடக்கவேயில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

    4. கலவரத்தின் போது ஆங்கிலேயர் ஒருவரைக் கொன்ற கொலையாளிகளுக்கு சாதகமாக குஜராத் காவல் துறை செயல்பட்டது என்ற குற்றச் சாட்டும் போலியானது என்று தெரியவந்துள்ளது.

    5. அகமதாபாத் காவல் துறை ஆணையராக இருந்த பி.சி. பாண்டே என்பவர், குல்பர்கா சொசைடியில் நடந்த கலவரத்தின் போது, முஸ்லீம்களைத் தாக்கும் ஹிந்துக்களுக்கு பெரிதும் உதவி புரிந்தார் என்ற குற்றச்சாட்டும் பொய் என்று தெரியவந்துள்ளது. சொல்லப் போனால் அவரது பதவியைப் பறிக்கும் அளவிற்குப் பொய்ப் பிரச்சாரம் செய்தனர் டீஸ்டாவும் அவரது ‘மதச்சார்பற்ற’ கும்பலும். அக்குற்றச்சாட்டு தவறு என்பதும் வெளியாகியுள்ளது. உண்மையில் அவர் அச்சமயத்தில் பாதிக்கப் பட்டவர்களுக்காக மருத்தவமனையில் பல உதவிகள் செய்து கொண்டிருந்தார், பாதிக்கப் பட்டவர்கள் அனுமதிக்கப் படுவதை மேற்பார்வை செய்துகொண்டிருந்தார் என்பதும் உறுதி செய்யப் பட்டுள்ளது.

    • சோழன்,

      , நீ அரிசியை தான் உண்பியா இல்ல வேறே ஏதாவது, நீ சொல்லறது எப்படி தெரயுமா இருக்குது ஏன் அப்பன் குதிருக்குள்ளே இல்லை , ஏன்டா கொண்டவன் அத்தனை பேரும் தான் வாயாலே தெகல்ஹா முன்னாடி ஒப்புகொண்டார்கள். இப்ப வந்து கதை விடுற

      • அண்ணே அவுரு வெச்ச குற்றச்சாட்டுக்கு பதில் சொல்லுங்க.அதா விட்டுட்டு நீ சோறு திங்குறா நான் பீட்சா திங்குறேன் போன்ற தீனி பண்டார வேலை எதுக்கு?

        • வாங்க அண்ணே (ரஹீம்) நீங்க முதல்ல உங்க பேரு என்ன உங்களைதேன் கேள்வி குறி அண்ணே தேடுனரே ,இப்ப சோழன் என்ன கேள்வி கேட்டருனும் என்னை பதில் சொல்ல
          சொல்ரிக்க, முதல்ல அவருடைய பதிவு படிக்க, என்ன சொல்றாரு கொலை பண்ணின எல்லாம் உத்தமர்கல்லாம் .அதை விடுக்க, தெகல்ஹா யாரு முஸ்லிமா நபரா,
          அவருதானே எல்லாத்தையும் விடியோ ஆதராம காட்டினாக , அப்பா அவரு சொன்னது பொய்யா,சரி அதையும் விடுக்க
          எல்லாரும் நான் தான் கொலை பண்ணுனே என்று ஹிந்துத்து வெறி உள்ள ஸ்டைலில் சொன்னார்களே அதுவும் பொய்யா, இப்ப சொல்லுக அவருக்கு நான் என்ன பதில் சொல்லணும், இப்ப நீங்க எனக்கு பதில் சொல்லுங்க

    • நீதிமன்றம் என்பது குறிஅறுந்த பல குரங்குகள் அமர்ந்து கொண்டு ஏற்கனவே எழுதப் பட்டதைத் தீர்ப்பாகக் கூறும் கொட்டகை. அங்கே குரங்குகள் கண், காது, வாய், சூ**உ ஆகிய அவயங்களை மூடிக் கொண்டு எதை பார்க்க, கேட்க, பேச வேண்டுமோ அதை மட்டுமே செய்யும்.

      இவர்களால் குஜராத்தில் அனைத்து முசுலிம்களுமே தற்கொலை செய்து கொண்டு மாண்டு போனார்கள் என்று கூடத் தீர்ப்பெழுத இயலும்

      • நண்பா போதும் நாம் பொறுமையாக இருத்தது, இப்படி கூனி குறுகி ஆட்டு மந்தைகளாக 100 வருடம் வாழ்வதை விட அவர்களை எதிர் கொண்டு வீழ்வதே மேல்,

  51. எந்த மதத்தையும் ஆதரிக்காமல் இருப்பதே மெய்யான கம்யுனிசம் ஆக இருக்கும். மனித உரிமைகள் என்ற நோக்கில் எழுத பட்டதால் இக்கட்டுரை ஒரு சார்பு உடையதாக தோன்றுகிறது. அதே போல் தீவரவாதத்தை ஆதரிக்கும் மத அமைப்புகளும் தடை செய்ய பட வேண்டும். அது எந்த மதத்தை சார்ந்ததாக இருந்தாலும் சரி. மதத்தை பொறுத்த வரை நடுநிலை என்றால் என்ன என்பதை பற்றி வினவு தெளிவு படுத்த வேண்டும் என்பது என் வேண்டுகோள்.

  52. புரட்சி,

    முதலில் நான் நீங்கள் நினைக்குற மாதிரி பாப்பான் இல்லை, தேவன்,
    இதை நான் ஏற்கனவே சொல்லி இருக்கேன். ஹிண்டுக்கு ஆதரவா எழுதுறவன் எல்லாம் பாப்பான் இல்லை. உங்க பயம் புரியுது.

    உங்களை போல எனக்கும் ஏக வசனத்துல பேச தெரியும். அப்படி பேசினா உங்களுக்கும் எனக்கும் வித்தியாசம் இல்லாம போய்டும்.

    ரெண்டு சதவீதம் நாலு சதவீதம் னு கணக்கு எல்லாம் சொல்றீங்க? உங்க சதவீதம் என்னன்னு ஞாபகம் இருக்கா? இல்லை மறந்து போச்சா?

    பார்பான் ரெண்டு சதவீதம் இருக்கலாம் ஆனான் அவன் கூட பாக்கி உள்ள எண்பதும் சேர்ந்தா உங்க நிலைமை?

    புரட்சியை பத்தி எல்லாம் நீங்க பேசாதீங்க!உங்க புரட்சி என்னனு ஊருக்கே தெரியும்.

    நான் கடவுள் இல்லை,

    உனக்கு தெளிவா சொல்றேன், இப்போதாவது உனக்கு புரியுதான்னு பாப்போம்.
    இப்போ சாக்கடைல ஒரு சொறி நாய் படுத்துகிட்டு இருக்கு, அந்த வழியா போற வர எல்லாரையும் பார்த்து குலைக்குது. எல்லாரும் இது கூட சண்டை போட்டா நமக்குதான் அசிங்கம் னு போய்ற்றுக்காங்க. அது மாதிரி தான் நானும்.

    அந்த வழியா நீ போற!. நீ என்னா பண்ணுவ? அது கூட கட்டி புரண்டு சண்டை போடுவியா? இல்லை உன் வழியை பார்த்துகிட்டு போவியா?
    நீ கட்டி புரண்டு சண்டை போட்டாலும் போடுவ! [obscured]

    முதல்ல ஒழுங்கா உட்கார்ந்து சாப்பிட கத்துக்குங்கடா!
    படிச்சுட்டா மட்டும் போதாது. ஒழுக்கமா பேச கத்துக்கோ , அப்புறம் கேள்வி கேட்கலாம் பதில் சொல்லலாம்.

    உனக்கு பதில் சொல்லலைனா நீ ஜெயிச்சுட்டதா நினைச்சுப்பியா? பைத்தியக்காரா!
    கண்ணியத்துடன் நான் கேட்ட நியாயமான கேள்விக்கு உன்னால் பதில் சொல்ல முடியலை.

    உன் லெவல் க்கு இறங்கி வந்து உன்னை மாதிரியே லோக்கல் ஆ பேச தெரியும். ஆனா வினவு சென்சர் பண்ணிடுவாங்க! ஆனா உன்னோட குப்பையெல்லாம் போடுவாங்க!

    ஆய் போறதுல இந்துவுக்கும் மத்தவனுக்கும் வித்தியாசம் இருக்கா இல்லியான்னு என்னை கேட்டா எனக்கு எப்படி தெரியும். [obscured]


    மாக்ஸிமம்

    • மக்சிமம்,
      நான் பாப்பான் இல்லை தேவன் சொன்னீக, கொஞ்ச சந்தோசம் அப்ப ஏன் உங்களுக்கு இஸ்லாமியர்கள் இவ்வளவு வெறுப்பு, சரி விஷயத்துக்கு வர்றேன், //பார்பான் ரெண்டு சதவீதம் இருக்கலாம் ஆனான் அவன் கூட பாக்கி உள்ள எண்பதும் சேர்ந்தா உங்க நிலைமை?// சத்தியமா நடக்காது ஏன்டா அதை
      உங்க வர்ணாசிரம கொள்கை ஏத்துகுராது, உலகத்துல எந்த மத கொள்கைளே தலைலே ஒருத்தன்,நெஞ்சிலே ஒருத்தன், காலிலே ஒருத்தன், மனித பிறவியே பிரித்து பாக்கலே,ஆனால் வர்ணாசிரம கொள்கையல் அது இருக்கு பின்னே எப்படி ஒன்னு சேருவிகோ , அப்படியே நீங்க 80 % போன்னாலும் அவன் உங்களை அபிஸ்டு
      என்று தான் பாப்பான், //ரெண்டு சதவீதம் நாலு சதவீதம் னு கணக்கு எல்லாம் சொல்றீங்க? உங்க சதவீதம் என்னன்னு ஞாபகம் இருக்கா? இல்லை மறந்து போச்சா?// மறந்து போகலே ஆனால் இங்கே உள்ள முஸ்லிம் மக்கள் தொகை, பாகிஸ்தானில் உள்ள மக்கள் தொகையை விட அதிகம் என்பது எனக்கு, அனைவர்க்கும் தெரியும்,இப்ப சொல்லுங்க புரட்சி வந்த நல்லா இருக்கும்லே, என்ன அண்ணே பயமா இருக்குதா, ஒழுகுது பாத்து.

      • மறந்து போகலே ஆனால் இங்கே உள்ள முஸ்லிம் மக்கள் தொகை, பாகிஸ்தானில் உள்ள மக்கள் தொகையை விட அதிகம் என்பது எனக்கு, அனைவர்க்கும் தெரியும்,இப்ப சொல்லுங்க புரட்சி வந்த நல்லா இருக்கும்லே, என்ன அண்ணே பயமா இருக்குதா, ஒழுகுது பாத்து.

        Unakku keezha Ozhuvudhu adha modhalla thoda,
        Pesuriye edhavadhu onnavadhu arivulladha pesuriyya?? Pakistanoda inga oirukkura muslimgal Jasthiyaam.. Sari un kanakku padiye irukkatum, irundha enna ivlo varusham irundhukittu thaana irukeenga o.. ungala enna pudunga mudinchithu??
        summa vijayakanth padathukku vasanam ezhudhvadhu pol punch dialoghuelam vidatha, Un poochandilam Unga veetula irukkara kuzhanda kitta vidu adhu kooda bayapadrathu sandhegam thaan??

        • அட TAKEN ,

          நான் தான் ஏற்கனவே சொன்னேன் நீ முதலே ஒன்னு தமிழே எழுது இல்லை ஆங்கிலத்துல எழுது ஏன் இப்படி கொலப்புற போடா முதலே அரசு ஆரம்ப பள்ளிக்கு பொய் படி, இப்ப இடைத்தை காலி பண்ணு ,

          • Should that calamitous day arrive when I happened to seek advice on what to write from Jackasses like you I’ll stop writing… Till then get back to ur sewer pipe…Kiddo, From Now try to focus on the subject asked

    • //இப்போ சாக்கடைல ஒரு சொறி நாய் படுத்துகிட்டு இருக்கு, அந்த வழியா போற வர எல்லாரையும் பார்த்து குலைக்குது. எல்லாரும் இது கூட சண்டை போட்டா நமக்குதான் அசிங்கம் னு போய்ற்றுக்காங்க. அது மாதிரி தான் நானும்.//

      Same blood…Thats y sometime I used to keep mum. They think that they have won 🙂

      • ஐ, சார் நீங்க எதுக்கெதுக்கெல்லாம் ‘மம்’மா இருக்கீங்க, எங்க வந்து பின்னூட்டம் போடுவீங்கன்னு மக்சிமத்துக்கு தெரியாம இருக்கலாம், ஆனா நேக்கு தெரியுமே 🙂

        • correct .. . ‘?’. மக்கள் பிரச்னை என்றால் ‘மம்’ ஆகிடுவாரு. முஸ்லிம் வெறுப்பு என்றால் மடை திறந்த வெள்ளம் ஆகிடுவாரு..

    • தம்பி தேவன் என்கிறாயே அது நீ படிச்சு வாங்கின பட்டமா,இல்ல அரசு கொடுத்த கௌரவமா?அந்த பட்டதை வாங்க நீ என்ன செய்தாய்?செஞ்சது உங்க அப்பாவும் அம்மாவும் தானே?அமெரிக்காவுக்கு போய் நான் தேவன்னு சொல்லுப்பா அவுங்கல்லாம் சிரிச்சு கொஞ்சம் நாள் ஆயிடுச்சாம்.

    • இதை நான் ஏற்கனவே சொல்லி இருக்கேன். ஹிண்டுக்கு ஆதரவா எழுதுறவன் எல்லாம் பாப்பான் இல்லை. உங்க பயம் புரியுது. …/////நூத்துக்கு நூறு உண்மை

    • மக்சிமம் தேவன்…. ரொம்ப நல்ல இருக்கு உங்க பதில். உங்களுடைய இந்த அறிவார்ந்த பதிலை வினவு வெளியிட்டிருக்க தானே செய்றாங்க.
      அப்போ ஏன் வினவு ஓர வஞ்சனை பண்றாங்கன்னு பொய் சொல்றீங்க.

      உங்களை குற்ற பரம்பரைன்னு அறிவிச்ச வெள்ளைக்கார, பார்பன பசங்களுக்கு தான் இப்போ நீங்க சொம்பு தூக்குறீங்க.

      அப்படிப்பட்ட பார்பன வந்தேறிகளுடன் சேர்ந்து பெரும்பான்மை பலத்தை காட்ட வேண்டிய இழிநிலைக்கு தள்ளப்பட்டு விட்டீங்களே தேவன். அந்தோ பரிதாபம்.

      இன்னும் ஒரு படி மேலே போய் வந்தேறிகளுடன் சேர்ந்து மண்ணின் மைந்தர்களை கருவறுக்க ஆவலாக இருக்குறீர்கள்…. என்னே உங்கள் தேசப்பற்று.

      இன்னும் தமிழ் நாட்டின் பல பகுதிகளில் இஸ்லாமியர்கள் தேவனையும், நாடாரையும், தலித் சமூகத்தினரையும், ஆசாரியையும் உறவு முறை வைத்து தானே அழைக்கிறார்கள்.

      நமக்குள் இந்த பிளவை ஏற்படுத்தி ஆதாயம் தேடுபவர் யார் என்று நீங்கள் உணர வில்லையா?

      காரணமே இல்லாமல் இஸ்லாமியர்களை எதிர்க்கும் பார்பனை புத்தியை உங்கள் உள்ளத்தில் இருந்து விரட்டுங்கள்.

      பார்பானுக்கு நான், நீங்கள், தலித் சகோதரர்கள் எல்லோருமே தீண்ட தகாதவர்கள் தான்.

      வாருங்கள்! ஒன்று படுவோம்!! சகோதரர்களாக வாழ்வோம்!!!

        • Taken , நீங்களும் மக்சிமமும் எந்த புள்ளியில் ஒன்று படுகின்றீர்கள் என்று புரியவில்லை. இந்தியன், ஹிந்து என்று மட்டும் பொய் சொல்லி விடாதீர்கள்.

          இந்து மனு தர்மத்தை போற்றி வாழும் மக்சிமம் (பார்பனால் தான் தீண்டதகாதவன் என்பதையும் மனதார ஏற்றுக்கொண்டார் நமது மக்சிமம்), நீங்கள் தாழ்த்தப்பட்டவராக இருக்கும் பட்சத்தில் உங்களுடன் கைகுலுக்க கூட மாட்டார்.

          ஆனால் எனக்கு அப்படி அல்ல.. நீங்கள் யாராக இருந்தாலும் உங்களுடன் கைகுலுக்குவதிலும் உடன் அமர்ந்து சாப்பிடுவதிலும் எந்த தயக்கமும் இல்லை. நீங்கள் இந்தியன் என்பதால் அல்ல.. மனிதன் என்பதால். இந்த சகோதரத்துவதைதான் நாங்கள் பின்பற்றுகிறோம். ஆனால் முரண்பாடாக நாங்கள் தான் உங்கள் எதிரிகள். விந்தையான ஆள் சார் நீங்கள்.

          ஆமா நீங்க இன்னும் தமிழ் கத்துக்க வில்லையா?

          • Sir,

            Naan ezhudharadhu Ungalukku pruigaradhu, neenga ezhudharadhu ennaku Puriyudhu.. Appuram enna pirachanai. Madha veriyai edhirthivittu mozhi veriyai en support panreenga??? I’ve said hats off to you on ur statement on Pakistan please refer…
            .I feel religion is only for the imbeciles and Im against you because of ur continuous attack on a particular religion and cashing in on already existing hatred and blowing it further for your own benefit. If you claim to be “REAL” communists, you must be impartial on all the religions and condemn each of it instead of trying to make a mincemeat of a particular religion…

            • நான் மொழி வெறியை தூண்ட வில்லை.I Just say if you type in Tamil, it will increase the readability.

              I never blame any religion on my comments. The intention of my comments is to claim justice for the people killed by Modi and RSS Terrorists.
              That’s all.

    • உன் லெவல் க்கு இறங்கி வந்து உன்னை மாதிரியே லோக்கல் ஆ பேசமுடியாது………முதல்ல ஒழுங்கா உட்கார்ந்து சாப்பிட கத்துக்குங்கடா……….உங்களுக்கும் எனக்கும் வித்தியாசம் இல்லாம போய்டும்………மாக்சிமம் சார் இவ்வளவு பெரிய பருப்பை எல்லாம் நாங்க பார்த்ததே கிடையாது கொஞ்சம் உங்க அட்ரஸ்ஸை சொல்லுங்க பாஸ் இப்படி ஒரு ஜாதிமான் எப்படி உடை உடுத்துகிறார் பேசுகிறார் பழகுகிறார் எப்படி உட்கார்ந்து சாப்பிடுகிறார் என்பதையெல்லாம் பார்க்கவேண்டும்.நீங்கள் சொல்வதை வைத்து பார்த்தால் உங்களை பற்றி உங்கள் ஊரில் அனைவருக்கும் தெரியும் போல் இருக்கிறதே!பாஸ் நீங்க எல்லாம் அவர்கள் லெவெலுக்கு இறங்கி விடாதீர்கள்.

  53. எல்ல வாடியும் அடுதவரை டவுசர் கழன்டு Komanam kizhhindhahdu enru oda சொல்லும்vinavikirke Komanam kizhinju எல்லம் உருன்டொடிகிட்டு இருக்கு… comedy panradha niruthittu ehdavadhu uruppadiye seinga inimeyavadhu

  54. மாக்ஸிமம் அண்ணே. கோச்சுக்காதீங்கண்ணே.நாமெல்லாம் அப்புடியா பழகியிருக்கோம்.நாமெல்லாம் டிகிரி தோஸ்துண்ணேன். கோலிக்கால்லாம் ஒண்ணா ஆடியிருக்கோம். இப்புடி சோக்கடிச்சா சிரிச்சுட்டு போவணும்ணேன். கோச்சுக்கக் கூடாது.

    அப்புடி உங்கள மரியாதையில்லாம என்னத்த பேசிப்புட்டேன். உங்கள எங்கேயாவது ஒருமையில கூப்புட்டிருக்கேனா. நீங்க என்னோட மூத்த அண்ணாத்தே.

    • எனது நோக்கம் உங்கள் மதவுணர்வுகளை புண்படுத்துவதல்ல. எனக்கு உங்கள் மத உணர்வைப் பற்றி பெரிய அக்கறை கிடையாது. அது சமூக ஏற்றத்தாழ்வுகளை அங்கீகரிக்கிறது. மேலும் பாரதத்தாய் என்று உங்கள் கடவுளர்களின் உருவமாகப் பார்ப்பதால் இது தேசிய பற்றிலிருந்து தேசிய இன வெறியாக மாறும். மாற்று மதத்தோர் இழிபிறவிகள், மிலேச்சர்கள், இரண்டாந்தர குடிமக்கள் என்று மனதினடியில் உணர்வு உண்டாகும். இதற்கெல்லாம் பயன்படுபவை இந்த நாட்டை தாய், கடவுள் என்று உருவகப்படுத்துவது. இந்து மதம் நிச்சயம் ஒரு கேவலமான மதம்தான். அதில் எந்த ஒரு ஐயப்பாடுமில்லை. சக மனிதனை இரண்டாந்தரமானவன், மூன்றாந்தரமானவன்,நாஙாந்தரமானவன் என்று படினிலைகளை அமைத்த ஒன்றை மதம் என்று கூறாதீர்கள். சதிவேலை என்று கூறுங்கள். உங்களுக்கு பதில் எழுதியிருப்பதில் எங்காவது உங்களை தரந்தாழ்ந்து குறிப்பிட்டிருகிறேனா. ஒருமையில் விளித்திருக்கிறேனா. உங்கள் மதத்தை எங்களுக்கு விரோதமாகக் கொண்டு வரும் போது அதை நிச்சயம் எதிர்க்கதான் செய்வேன்.

  55. இந்தியாவை பொருத்தவரை இந்து மத பயங்கரவாதம் மேலோங்கியுள்ளது கோத்ரா ரயில் குண்டு வெடிப்பு முதல் பல்வேறு குண்டுவெடிப்புகள் BJP யின் மதவெறி அமைப்பான R S S கும்பல்களால்தான் வைக்கப்பட்டது என தெரிந்தும் அந்த அமைப்புகளை தடை செய்யாமல் அரசியல் இலாபத்திற்க்காக மட்டும் எச்சரிப்பது என்ற போக்கே காங்கிரசிடம் நிலவுகிறது. சிமி,அல்கொய்தா போன்ற அமைப்புகளை தடை செய்த காங்கிரசால் ஏன் R S S , விஸ்வ இந்து பரிசத் போன்ற மதவெறி அமைப்புகளை முழுமையாக தடை செய்யவில்லை. ஏனென்றால் இவர்களது நாணயத்தின் இரு புறமும் தலைதான். காங்கிரசும் காவி அனியாத கதர்இந்துத்துவம்தான் அதனால் நாம் மத இன உணர்வுகளை களைந்து பாட்டாளி வர்க்கமாய் ஒன்று சேர்ந்து போராடாத வரை இந்த காவி குண்டுகள் வெடித்துக்கொண்டுதான் இருக்கும்.

  56. உண்மை கம்யூனிஸ்டுகளின் சிறப்பான பதில்கள் நெஞ்சம் குளிர வைக்கின்றன. முதலாளித்துவ ஏகாதிபத்திய பார்ப்பன பாசிச அடிவருடிகள் துண்டக்காணம் துணியக்காணம் என்று ஓடுகின்றனர்.
    இன்னொரு விஷயம்.
    தாய்லாந்தில் நேற்று ஒரு பௌத்த சிறுவனை அவனது தாய்க்கு முன்னாலேயே முஸ்லீம் பயங்கரவாதிகள் சுட்டுகொன்றதாக செய்தி வந்திருக்கிறது. ஆகவே தாய்லாந்தில் ஏன் முஸ்லீம்கள் அங்குள்ள பௌத்தர்களை கொலை செய்கிறார்கள் என்பதற்கு அத்வானியோ அல்லது மோடியோ காரணம் என்று கட்டுரை எழுத முடியுமா என்று சிந்திக்க வேண்டும். பிலிப்பைன்ஸிலும் அங்குள்ள கிறிஸ்துவர்களை தலையை சீவி கொல்வது என்று முஸ்லீம்கள் சிறப்பாக போராடி வருகிறார்கள். இந்தோனேஷியாவில் அவர்கள் மெஜாரிட்டியாக இருந்தாலும் அங்குள்ள சிறுபான்மை இந்துக்களை கொலை செய்து வருகிறார்கள். நைஜீரியாவில் முஸ்லீம்கள் அங்குள்ள கிறிஸ்துவர்களை இந்த மாதம் மட்டுமே நூற்றுக்கு மேல் பலிவாங்கியுள்ளார்கள். ரஷ்யாவில் அங்குள்ள கிறிஸ்துவ பள்ளிக்கூடங்களில் குண்டு வைத்து கொல்வதும் அடிக்கடி நடந்துவருகிறது. எகிப்தில் அங்குள்ள கிறிஸ்துவ சிறுபான்மையை கொலை செய்துவருகிறார்கள். இதற்கும் மோடி, அத்வானி, குஜராத், பாபர் மசூதி போன்றவற்றை இழுத்து ஒரு சிறப்பாக கட்டுரை வரைய முடியுமா என்று சிந்தித்து வருகிறேன். உங்கள் ஆலோசனைகளை வழங்கலாம்.

  57. “ரெண்டு சதவீதம் நாலு சதவீதம் னு கணக்கு எல்லாம் சொல்றீங்க? உங்க சதவீதம் என்னன்னு ஞாபகம் இருக்கா? இல்லை மறந்து போச்சா?

    பார்பான் ரெண்டு சதவீதம் இருக்கலாம் ஆனான் அவன் கூட பாக்கி உள்ள எண்பதும் சேர்ந்தா உங்க நிலைமை?”

    இதுவரை இணையத்தில் பார்த்தது.

    “இடது சாரி” சிந்தனை :
    இந்து மதத்தை எதிர்த்தால் பகுத்தறிவாளன். மற்ற மதங்களை எதிர்த்தால் அவன் பார்ப்பான் இல்லை பார்ப்பன அடிவருடி.

    “வலது சாரி” சிந்தனை:
    இந்து மதத்தை எதிர்த்தால் இஸ்லாமிய, கிருத்துவ கைகூலிகள், இட ஒதுக்கீட்டில் படித்து முடித்த தலித் மற்றும் கீழ் சாதியினர். மற்ற மதங்களை எதிர்த்தால் அவன் உண்மையான “இந்தியன்”.

  58. அதனால் நாம் மத இன உணர்வுகளை களைந்து பாட்டாளி வர்க்கமாய் ஒன்று சேர்ந்து போராடாத வரை இந்த காவி குண்டுகள் வெடித்துக்கொண்டுதான் இருக்கும்.///////….
    ..
    அண்ணே அப்படி பாட்டாளி வர்க்கமா போராடி பெற்ற சோவியத் யூனியனில் குண்டு
    வெடிக்கலையா?செசென்யாவை நீங்கள் கையாண்ட முறை என்ன?எந்த ஒரு அமைப்போ அல்லது மதமோ பெரும்பான்மை பெறும்போது தவறுகள் நடக்கத்தான் செய்யும்.ஸ்டாலின் பல லட்சம் எதிர்ப்பாளர்களை கொன்றார்.இஸ்லாமிய நாடுகளில் ஷியா சன்னி அஹமதியா மோதல் நடக்குது.இல்லையா?அதை ஒப்பிடும்போது இந்தியாவில் இந்து மதம் ஒன்னும் கொடுமை செய்யலை.செய்யாது.இப்போ இந்து மததக்குள் பல பிரிவுகள் இருக்குறதா சொல்றீங்க இல்லை?சரி அவர்களுக்கு வழிபாட்டு இடம் ஒன்றுதான்.ஆனால் ஷிய சன்னி பிரிவுக்கு வேறுவேறு மசூதிகள்.அதனால் இவுக மசூதியில் அவுக குண்டு வைக்கின்றாங்க.தெனம் படிக்கிறீங்க இல்ல?

    • //அதை ஒப்பிடும்போது இந்தியாவில் இந்து மதம் ஒன்னும் கொடுமை செய்யலை.செய்யாது.இப்போ இந்து மததக்குள் பல பிரிவுகள் இருக்குறதா சொல்றீங்க இல்லைசரி அவர்களுக்கு வழிபாட்டு இடம் ஒன்றுதான்//

      ஏன்னே உங்களுக்கு மனசாச்சி இருகதுத ,அது எப்படி வெக்கமே இல்லாம பொய் சொல்ரிகோ,உங்க ஹிந்து மதம் என்ன கொடுமை செய்யலே கேளுங்கோ , குஜராத்துல 3000 மக்களை கொன்று குவித்தது யாரு, பாம்பே 2000 மக்களை கொன்று குவித்தது யாரு, சரி அவங்க முஸ்லிம் மதம் செய்ய தான் செய்விங்க, நீங்க எப்பயாவது ஹிந்து சொல்ற தலித் மக்களை கொள்ளதனே செயய்ரிகோ ,சரி அது விடு , எந்த கோவிலே தலித்து விட்டிக சும்மா போக்கனே, எங்களுக்கு தந்தை பெரியார் எல்லாத்தியும் சொல்லிடார்.

  59. போன வருடம் கைது பண்ணின அப்பாவி முஸ்லிம் நபர்களை இப்ப நடத்த மும்பை குண்டு வெடிப்புடன் தொடர்பா அட பாவிகளா உங்களுக்கே ஓவரார தெரியலை, இங்கே நீதி எப்பவே செத்து

    புழுத்து போச்சி, கண்டிப்பா இந்திய தேதசதுல எந்த மூலைக்கு போன்னாலும் நீதி கிடைக்க போவதில்லை ஏனென்றால் இங்கு உள்ள துறைகள் எல்லாம் காவிமயமகிவிட்டது, இப்பொழுது இங்கு உடனடியாக தேவை ஒரு போராட்டம் ,யோசிபார்களா நீதி மறுக்க பட்ட ஓடுகபட்ட மக்கள் ,காத்திருப்போம் ஆனால் அது எந்த மாதிரி போராட்டம் என்பதை நம்முடைய எதிரி தீர்மானிக்க ( ஹிந்துத்துவ ) வேண்டும்.

    • புழுத்து போச்சி, கண்டிப்பா இந்திய தேதசதுல எந்த மூலைக்கு போன்னாலும் நீதி கிடைக்க போவதில்லை ஏனென்றால் இங்கு உள்ள துறைகள் எல்லாம் காவிமயமகிவிட்டது///////
      .
      .
      அப்படியா?அப்போ பசைமயமான பாகிஸ்தான் ஆப்கனில் நீதி கிடைக்குதா?இல்லை கம்யூனிச சீனாவில் நீதி கிடைக்குதா?எதுகீடுதாலும் காவிதான் உங்களுக்கு பதில்.சிகப்பு என்ன செய்தது?

    • ஹ்ம்ம், குஜராத் முன்னாள் அமைச்சரை நீதிமன்றத்தின் மூலம் CBI கைது செய்யும் பொழுது மட்டும் நீதி நிறம் அற்றும் உங்கள் மதத்தை சேர்ந்தவர்களை கைது செய்யும் பொழுது காவி நிறமாகவும் மாறிவிட்டதா? முதலில் காவி நிற கண்ணாடியை கழட்டுங்கள்.

      அரண்டவன் கண்ணுக்கு இருந்ததெல்லாம் பேய்

  60. Faiz Usmani’யை டேசனுக்கு கூட்டிகினு போய் விசாரணை செஞ்சதுல செத்து போயிட்டாரு. கேட்டா பிபினால மூளையில ரத்த நாளம் வெடிச்சு செத்தாராம். #நம்பிட்டோம்

  61. ஆக ஒன்று மட்டும் இங்கு நன்றாக புரிகிறது.

    அதாவது, சவுதி அரேபியா, பாகிஸ்தான் மாதிரியான இஸ்லாமிய நாடுகள் போன்று இந்தியா ஒரு இந்து நாடாக இருக்க வேண்டுமென இங்குள்ள (விவாதத்தில் உள்ள) இந்து நண்பர்கள் ஆசைப்படுகிறார்கள்.

    ஆனால், அவர்கள் எதற்க்கெடுத்தாலும் எடுத்துக்காட்டாக பேசும் சவுதி அரேபியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளின் அரசியலமைப்பு சட்டமே தன்னை இஸ்லாமிய நாடு என்று சொல்லுவதையும், இந்தியா தன்னை ஒரு மதச்சார்பற்ற அரசாக சொல்லுவதையும் நினைவில் கொள்ள மறுக்கிறார்கள்.

    மேலும், ரஷ்யா, அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற உலகின் அதிகமான மதச்சார்பற்ற நாடுகளில் எந்த மதத்தவரும் மத ரீதியாக பெரும்பான்மை சிறுபான்மை என பிரித்துப் பார்ப்பதும், மத ரீதியான மோதல்கள் நடைபெறுவதாக தெரியவில்லை. ஆனால் உலகிலேயே இந்தியா என்ற ஒரே ஒரு மதச்சார்பற்ற நாட்டில் தான் பெரும்பான்மை சிறுபான்மை என்னும் பேதமும், பெரும்பான்மைக்கு சிறுபான்மை அடங்கிப் போக வேண்டும் என்று (இந்தியா மதச்சார்பற்ற நாடாக இருப்பினும், இந்துக்கள் அல்லாதவர்கள் இந்திய மண்ணின் பூர்வீகக் குடிகளாக இருப்பினும்) இந்துக்களால் கட்டளை பிறப்பிக்கபடுவதும், மத ரீதியான மோதல்களும், ‘பலி’ வாங்கல்களும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதை சிந்திக்க வேண்டும்.

    இங்கே விவாதம் செய்யும் சில குறிப்பிட்ட நண்பர்கள், இந்தியா ஒரு பிற்போக்கான – மத அடிப்படைவாத நாடாக இருக்கவும், அதே நேரம் மதச்சார்பற்ற வல்லரசு நாடாக இருக்கவும் வேண்டுமென்று கனவு காண்பது எந்த விதமான அடிப்படை அறிவில் என்பதை சிந்திக்க வேண்டும். அறிவுள்ளோர் சிந்திப்பார்களாக!

    • மேலும், ரஷ்யா, அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற உலகின் அதிகமான மதச்சார்பற்ற நாடுகளில் எந்த மதத்தவரும் மத ரீதியாக பெரும்பான்மை சிறுபான்மை என பிரித்துப் பார்ப்பதும், மத ரீதியான மோதல்கள் நடைபெறுவதாக தெரியவில்லை. ////////
      .
      .
      ஆமா இலங்கைல சிறுபான்மையினராக உள்ள தமிழர்கள் ஒரு லட்சம் பேர் கொல்லப்பட்டனர்.அதற்கு ரசியா சீனா அமெரிக்கா இந்தியா என எல்லா நாடுகளும் உதவியதே!!இங்கும் வினவு இங்கிலாந்தின் உதவியை நாடக்கொடாது என பிணத்தின் மேல் அரசியல் செய்தாரே.அதை பத்தி என்னத்த சொல்ல!!
      ******************************************************************
      ஆனால், அவர்கள் எதற்க்கெடுத்தாலும் எடுத்துக்காட்டாக பேசும் சவுதி அரேபியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளின் அரசியலமைப்பு சட்டமே தன்னை இஸ்லாமிய நாடு என்று சொல்லுவதையும், இந்தியா தன்னை ஒரு மதச்சார்பற்ற அரசாக சொல்லுவதையும் நினைவில் கொள்ள மறுக்கிறார்கள்.
      ///////////////////
      .
      அப்போ முஸ்லிம்கள் பெரும்பான்மையினரா உள்ள எந்த நாடும் மத சார்பற்ற தன்மையில்லாதது என நீங்களே ஒப்புகொண்டுவிட்டீர்.நன்றி.

      • மதப் பிரச்சனைகும், இனப் பிரச்சனைக்கும் வேறுபாடு தெரியாதவரா நீங்கள்.. ம்ம் என்னத்த சொல்ல!

        //அப்போ முஸ்லிம்கள் பெரும்பான்மையினரா உள்ள எந்த நாடும் மத சார்பற்ற தன்மையில்லாதது என நீங்களே ஒப்புகொண்டுவிட்டீர்.நன்றி.//

        இதில் மறைக்க என்ன இருக்கிறது!! மதசார்பற்ற நாடு என்று வெறும் வாய் சவிடால் காட்டுவதற்கு அது எத்தனையோ நல்லதல்லவா 🙂

  62. ஐயா ஒருவர் தேவராக பிறப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?நீங்கள் எதுவும் செய்ய முடியாது உங்கள் அப்பா அம்மா தான் செய்ய வேண்டும் அனால் அதற்கு அவர்கள் இருவரும் தேவர்களாக இருக்க வேண்டும் அதாவது அவர்கள் இருவரின் தாய் தந்தையரும் தேவர்களாய் இருக்க வேண்டும் அதாவது அவர்களின் தாய் தந்தையர்……………போங்கடா நீங்களும் ஒங்க சாதியும்.

  63. நான் பிராமின் இல்லை, தேவன் என்று சொன்னது உங்களுக்கு என் மீதான சந்தேகத்தை போக்கத்தான்!

    மத்தபடி, சாதியை பத்தி நீங்களும் நானும் விவாதிக்க இது இடம் இல்லை, இந்த பதிவும் பொருத்தமில்லை.

    கொஞ்சம் வெயிட் பண்ணுங்க , எப்படியும் இந்த வாரமோ அடுத்த வாரமோ வினவுல தேவர் சாதி வெறி, தீண்டாமை கொடுமையில் தேவர் பங்கு அப்படி இப்படின்னு கண்டிப்பா ஒரு பதிவு போடுவாங்க ! அப்போ நம்ம சமாச்சாரத்தை வச்சுக்கலாம்.

    புரட்சி,
    இஸ்லாமியர்கள் மீதோ , தலித்துகள் மீதோ எனக்கு தனிப்பட்ட வெறுப்பு ஏதும் கிடையாது. நம்மல்லாம் எந்த சண்டை சச்சரவும் இல்லாம இருந்தா அதுல சந்தோஷம் அடையபோற மக்கள்ல நானும் ஒருவன். ( என்னோட நண்பர்களில் எல்லா மதத்துகாரங்களும், இனத்தினரும் உண்டு. நீங்களும் அப்படிதானே? இங்கே எல்லாரும் அப்படிதானே?)

    ஆனா குறிப்பிட்டு ஒரு இனத்தை, சமுதாயத்தை, மதத்தை தரக்குறைவா எழுதும் போது நாம பொறுத்துக்க மாட்டேங்குறோம், குறிப்பா என்னை மாதிரி சில பேர், ஏன்னா நாமல்லாம் மனுஷன்,, உயிருள்ள ஜென்மம், அடிச்சா வலிக்கும், வெட்டுனா ரத்தம் வரும், பொறுமையா இருந்துபோரதுக்கு ஜடம் இல்லை.

    நீங்கதான் இந்தியன் ஆச்சே? பின்ன எதுக்கு பாகிஸ்தான் மக்கள் தொகையோட இங்கே உள்ள இஸ்லாமிய மக்கள் தொகையை கம்பார் பண்ணி புரட்சி வரும் பூதம் வரும் னு பூச்சாண்டி காட்டுறீங்க?

    பாகிஸ்தானையோ, அங்கே உள்ள மக்களை பத்தியோ , தீவிர வாதத்தை பத்தியோ இங்கே பேசினா உங்களுக்கு ஏன் கஷ்டமா இருக்கு? உங்க பாஷையிலேயே சொல்லனும்னா உங்களுக்கு ஏன் கீழ ஒழுகுது?

    அப்புறம் உங்களுக்கு கலகக்காரர் தந்தை பெரியார் ஈ.வே.ரா. எல்லாத்தையும் சொல்லிட்டாரா?

    அவர் என்னா சொன்னார்? சாமி இல்லை னு சொன்னார். சாமியை கும்புட்றவன் மனுஷனே இல்லை னார்.

    நீங்க எப்படி? இறைவனை தொழுவது இல்லையா? இல்ல மனுஷனே இல்லையா?

    இந்த தேசத்துல உங்களுக்கு எங்கியுமே நீதி கிடைக்க போவதில்லையா?

    மிஸ்டர் புரட்சி, தப்பு பண்ணினவன் இந்து மதத்தை சேர்ந்தவன்னு தீர்ப்பு சொன்னதும் இந்த நாடுதான், தப்பு பண்ணின அஜ்மல் கசாப் ய் இன்னமும் ராஜ உபசாரம் செய்து சாதாரண குடிமகனுக்கு உறுதி செய்யாத பாதுகாப்பை அவனுக்கு கொடுதுகிற்று இருக்குறதும் இந்த நாடுதான். உங்களுக்கு புரட்சி பண்ணனும்னா தாராளமா போய் பண்ணுங்க. அதுக்காக இந்த நாட்டை குறை சொல்லாதீங்க !

    கலப்பிரான் நம்பர் டூ,

    இந்த சினிமா டயலாக் எல்லாம் இருபது வருஷத்துக்கு முன்னாடியே நாங்க கேட்டாச்சு. அதை எழுதினதும் ஒரு தேவன் தான்.

    உங்கள் பெயர் கூட ஒரு இனத்தின் பெயராக தெரியுது.

    நான் பெயரை வைத்து சந்தேக பட மாட்டேன், போலிகள் உலவும் உலகம் இது.

    ஒருவேளை நீங்கள் சாதி மறுக்கும் கம்யூனிஸ்ட் ஆக இருப்பின் கீழே உள்ளவற்றை , அதான் நீங்க கேட்ட்டவற்றை ஒருமுறை படித்து பார்த்து நீங்களே பதில் சொல்லுங்கள்.

    ” தம்பி கம்யூனிஸ்ட் என்கிறாயே அது நீ படிச்சு வாங்கின பட்டமா,இல்ல அரசு கொடுத்த கௌரவமா?அந்த பட்டதை வாங்க நீ என்ன செய்தாய்?செஞ்சது உங்க அப்பாவும் அம்மாவும் தானே?அமெரிக்காவுக்கு போய் நான் கம்யூனிஸ்ட் னு சொல்லுப்பா அவுங்கல்லாம் சிரிச்சு கொஞ்சம் நாள் ஆயிடுச்சாம்”.

    இதை நீங்கள் தலித்தாகவும், அல்லது கலப்பிரானாகவும் இருக்கும் பட்சத்தில் அந்த வார்த்தைகளை மாற்றி போட்டு உங்களயே கேள்வி கேட்டு கொள்ளுங்கள்.

    கம்யூனிஸ்ட் என்றும் , தலித் என்றும், கலப்பிரான் என்றும் ,கிறிஸ்துவன் என்றும், இசுலாமியன் என்றும் பட்டத்தை வாங்க நீங்கள் என்ன செய்தீர்களோ அதையே தான் நானும் செய்தேன். உங்க அப்பா அம்மா செய்ததைத்தான் எங்க அப்பா அம்மாவும் செய்தார்கள். போதுமா?

    இன்னொரு சாதி தொடர்புடைய பதிவில் உங்களை நான் சந்திக்கிறேன்.

    வியாக்கி,

    ஒத்து கொள்கிறேன், நீங்கள் சொல்வது சரிதான், பார்பானுக்கு நான், நீங்கள், தலித் சகோதரர்கள் எல்லோருமே தீண்ட தகாதவர்கள் தான். ஆனால்
    இந்து மதத்திற்கு அல்ல. இந்து கடவுள்களுக்கு அல்ல.

    நான் சப்போர்ட் பண்றது, பார்ப்பானுக்கு அல்ல, ஹிந்துக்களுக்கு. அதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.

    நீங்கள் ஏற்று கொண்ட ஒன்று எதுவாயிருப்பினும், அது கம்முன்னிசம் ஆகட்டும், பெரியார் ஆகட்டும், அதை முழுமையாக நீங்கள் ஆதரிக்கும் வரை நான் ஏற்று கொண்ட ஒன்று அது ஹிந்துயிசம் ஆகட்டும் தேவர் சாதி பற்று ஆகட்டும் நான் ஆதரிப்பதில் என்ன தவறு இருக்க முடியும்?

    குற்ற பரம்பரை பற்றி நாம் வினவின் அடுத்தடுத்த சாதி தொடர்புடைய கட்டுரைகளில் பேசலாம்.

    ஆப்டிமம்,

    வினவின் அடுத்த சாதி தொடர்புடைய பதிவில் கட்டாயம் நீங்க வரணும் .


    மாக்ஸிமம்

  64. ஆனால் உங்கள் பெரும்பான்மையை காட்ட நீங்க அழைத்தது இந்து கடவுள்கள் அல்லவே. நீங்க அழைத்தது பிராமணனை தானே.. அதை தான் நான் குறிப்பிட்டு இருக்கிறேன்.

  65. கட்டுரை = சுவாரசியம்
    248 பின்னூட்டங்கள் = தலைவலி
    கட்டுரை + 248 பின்னூட்டங்கள் + சுயசிந்தனை = பெருந்தலைவலி + டைகர் பாம் வாங்க கடைக்குப் போகணும்!!!

    இப்படிக்கு
    பதிவர் அல்லாத பொதுஜனம்

    • // தமிழக சட்டமன்றத் தேர்தலில் மிகப் பெரிய வெற்றி பெற்ற அஇஅதிமுக, மிகப் பெரிய தவறுக்குத் துணைசென்றுள்ளது.// அதை தான் நாங்களும் சொல்கிறோம் தமிழகத்தில் மிக பெரிய உன்னதமான இயக்கம் ( அரசியல்) , பாசிச ஹிந்துத்துவ அஇஅதிமுக உடன் கூட்டணி வைத்தது மிக பெரிய தவறு.என்று .

      இதில் இருந்து தெரிய வருவது என்னவென்றால் உங்கள் அம்மா இஸ்லாமிய அமைப்புடன் கூட்டணி வைபார், ஆனால் ஹிந்துத்துவ வெறி பிடித்த பி ஜே பி உடன் கூட்டணி போக வில்லை, தமிழகத்தில் 1 MLA வைத்திருக்கும் அரசியல் இயக்கள் கூட பி ஜே பி உடன் நெருக்க வில்லை என்றால் அவர்களின் தகுதியை தெரித்து கொள்ளுகள் ,

  66. Very Important point : all below discussion is not pointing to ALL muslims, just the folks who are supporting terrorism, from whichever part they are from the world

    http://www.tamilhindu.com/2010/09/whither_the_gentle_muslim-2/

    My sincere request to Indian Muslims : please don’t support these terrorists in any form, activities….come out of the shell, and spread the noble points rendered by Islam to the world, after eliminating the ‘unnecssary jigad’

  67. மக்களே ஒன்று சொல்கிறென் இந்த குண்டுகளெல்லாம்,நாட்டில் ஏதாவது அரசு பெரிய பிரச்சனையில் மாட்டும் போது மட்டுமே வெடிக்கின்றன.
    எனக்கென்னவோ மக்களை திசை திருப்ப நடக்கும் சதியென்றே தோன்றுகிறது.

  68. nan eppodhum pinnutangal athigam seivathu illai..aanal thangal intha katuraiyal pothuvaga antha kunduvedipuku kandangal therivikkalam..aanal thangal indiyavil nadakum kunduvedipukal anaithukkum hindukal than karanam enbathupol ezudiyullergal..mudalil madarediyaga unarvugalai punpaduthum vasagangalai thavirungal..intha pathivu thangaludaiya thalvu manapanmaiyai miga thelivaga eduthukattugirathu..indiya sudanthiram adaintha pin perumbalum congress aatchithan nadakirathu..neengal sollukirapadi urimaigal marukappatu irunthal entha oru musulim nanbarum ingu periya uyar pathavigalil iruka mudiyathu..anaithu manila, mathiya katchigalium muslim nanbargal mukkiyamana porupugalai vagikkindranar..arasiyalvathigal makkalin ariyamaiyai ubayogapuduthi kolkindranar..avaithan mukiayamaga ulnattu kalavarangaluku karaname thavira ungalathu karuthinai mutrilumaga eetrukkolla mudiyathu..Sari indiyavil ippadiyendral en pakistanil dinamum kundugal vedikindrana..atarku angulla sirubanmai makkal karanama…neengal ondrai nangu purinthu kolla vendum..athu entha nadaga irupinum kevalamana aatchiyalargalum, ellai thandiya bayangaravathume thavira namathu makkalal alla.. nam ippadi mari mari kurugiya kannotathudan ovvondraiyum parkum varai ithu thodarnthukonduthan irukum..inimelavathu ippadi thevai illatha vagaiyil madha reethiyana unarvugali thundiviitu oruvarai oruvar adithukolvathium, palaiya puranangal paduvathaiyum vittuvittu tharpothaiya ugathuku enna thevaiyo atahi patri sinthiyungal…thangalidamirunthu arokiyamana pathivai ethiparkum

    Endrum Natpudan
    Oru tamilan..
    (mudinthal intha pathivai maraikavum allathu matha reethiyana karuthukkali neekavum)…

  69. அவன் வைத்தான் இவன் வைத்தான்னு சண்டை போடுறீங்க உங்க சீட்டுக்கு அடியில வச்சு இருந்த செத்தவனோட\குடும்பத்து வேதனை புரியும்..
    ஆமா.. உங்க முறைக்கு நீங்களும் இரண்டு சைடிலும் நல்ல ஏத்தி விடுங்க அப்பதான உங்க வியாபாரம் நடக்கும்..

Leave a Reply to raheem பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க