privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்ஊழல்ஒரு பா.ஜ.க பெருச்சாளியின் வளைக்குள்ளே...

ஒரு பா.ஜ.க பெருச்சாளியின் வளைக்குள்ளே…

-

ஜனார்தன ரெட்டிநீங்கள் எதை பெயரிட்டுச் சொன்னாலும் அது அவரிடம் இருந்தது. 44 வயதான ரெட்டி தனது வீட்டருகே 3 அடுக்கு பிரம்மாண்ட வளாகம் ஒன்றை தனது குழந்தைகள் விளையாட மட்டும் அமைத்திருந்தார்.  ரெட்டியின் குழந்தைகள் பாதுகாப்பு கருதி வெளியில் செல்வதில்லை.  மாறாக தங்கள் நண்பர்களை அழைத்து வந்து தமது வளாகத்தில் தான் விளையாடுவார்கள். ஹெலிகாப்டர்கள் வைத்திருப்பதிலிருந்து, வீட்டினுள்ளே அமைத்துள்ள நீச்சல் குளத்தில் மிதந்து கொண்டே, அதன் அருகில் பிரத்யோகமாக அமைக்கப்பட்டுள்ள 70 எம் எம் திரையில் படங்களை ரசிக்கும் முன்னாள் அமைச்சரும், மேலவை உறுப்பினருமான ஜனார்த்தன ரெட்டி வாழ்ந்தது ஒரு ராஜ வாழ்க்கை.

ரெட்டி திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ 40 கோடி மதிப்பிலான வைர கிரீடத்தை நன்கொடையாக கொடுத்ததோடு, அதே போல் மற்றொன்றை தனது பெல்லாரி வீட்டிலும் வைத்திருக்கிறார்.  அவர் வீட்டிற்குள் ஒருவர் நுழைந்தால் சந்தனத்தால் வேலைப்பாடு செய்த அச்சு ஒன்றில் மின் ஒளியில் ஜொலித்துக் கொண்டு அந்த வைர கிரீடம் சுழன்று நம்மீது ஒளிக்கதிர்களை வீசும். பெங்களூருவில் உள்ள நிரந்தர அறை ஒன்று அவருக்காக ஒதுக்கப்பட்ட டாஜ் நட்சத்திர விடுதியின் மேற்கு எல்லைக்கு அருகில் ரெட்டிக்கு பாரிஜாதா என்ற பெயரில் பெரிய அடுக்கு மாடி குடியிருப்பு உள்ளது.  அதிகமான சொகுசுக் கார்கள் ரெட்டியின் வீட்டில். பென்ட்லே, மெர்சிடீஸ் பென்ஸ், ரேஞ்ச் ரோவர் என பல இதில் அடங்கும்.  விடுமுறைகளை உலகின் பல பகுதியிலுள்ள உல்லாச இடங்களில் பொழுதை கழிப்பவர் ரெட்டி.

சுரங்க தொழில் உச்சத்தை அடைந்து சில வருடங்களுக்கு முன் சுறுசுறுப்பானபோது, பெல்லாரிக்கும், பெங்களூருவிற்கும் சிற்றுண்டிக்கு, மதிய அல்லது இரவு உணவிற்கு ஹெலிகாப்டரில் பறப்பார் ரெட்டி.

ஆனால் சூழல் எப்போதும் ஒரே மாதிரி இருந்து விடுவதில்லை. கடந்த சில மாதங்களாக காரில்தான் அதிக அளவில் பயணித்துக் கொண்டிருக்கிறார்.  3 ஹெலிகாப்டர் வைத்திருந்த ரெட்டியிடம் தற்போது ஒன்றுதான் உள்ளது.  1990களின் இறுதியில் கோடிக்கணக்கில் கடனில் இருந்த ரெட்டி கடந்த 12 ஆண்டு காலத்திற்கு பிறகு அவர் ஒப்புக் கொண்டபடி பார்த்தாலே அவரது மனைவி பெயரில் மட்டும் 150 கோடி சொத்து. இந்த கொழுத்தலுக்கு நன்றி சொல்ல வேண்டியது சுரங்கத் தொழிலுக்கு.  பெல்லாரியில் அவர் வீட்டருகே உள்ள மலைகுன்றை விளக்குகளால் அலங்கரிக்க மட்டும் ஆன செலவு 30 லட்சம்.

அவரது அரசியல் கலந்தாய்விற்காக உள்ள அறையின் பெயர் குட்டீரா.  அங்கு நுழைந்தால் முன்னாள் பாரத பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயி, மூத்த பா ஜ க தலைவர் எல் கே அத்வானி, பாராளுமன்ற எதிர்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ், மற்றும் கர்நாடக முன்னாள் முதல்வர் பி எஸ் எடியூரபபா ஆகியோரின் பிரும்மாண்ட உருவப்படங்கள் நம்மை வரவேற்கும்.

ரெட்டியின் வீடு ஒரு கோட்டையை போன்றது. ஒரு பார்வையாளர் உள்ளே செல்ல வேண்டுமெனில் 3 செக்போஸ்ட், ஸ்கேனர்கள், வெடிகுண்டு சோதனைகள், மற்றும் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் என்ற அடுக்குகளை கடந்து தான் செல்ல வேண்டும்.

பணங்களின் சுரங்கம்

தங்கம், வெள்ளி, பண்ணை வீடுகள், கட்டிடங்கள், முன்னோர் சொத்துக்கள், என முன்னாள் அமைச்சரான ரெட்டியின் சொத்துக்கள் 153.49 கோடிகள்


மலை போல் நகைகள்

2.2 கோடி மதிப்புள்ள தங்க இருக்கை (சேர்)

2.58 கோடி மதிப்பில் தங்க சிலைகள்

13.15 லட்சம் மதிப்பில் தங்க பெல்ட்

20.87 லட்சம் மதிப்பில் தங்க சாப்பாட்டு தட்டு, ஸ்பூன், சிறு பாத்திரங்கள்

இவை தவிர வைர, வைடூரிய, கோமேதக கற்கள், கழுத்து நகைகள், ஆண்கள் அணியும் கங்கணங்கள், மோதிரங்கள், வளையல்கள் என ஒரு நகைக் குவியலே காணப்பட்டதாம்.

 

வருமானமும் முதலீடுகளும்-

கர்நாடக லோக்யுக்தா முன் அவர் சமா்ப்பித்த விபரங்களின்படி

பணம் ரொக்க கையிருப்பு

1.11 லட்சம்

கார் – லேன்சர்

ஆண்டுச் சம்பளம் – 31.5 கோடி

வியாபார வருவாய் – 18 கோடி

வட்டிகளின் மூலம் வருவாய் – 1.8 கோடி

காப்பீடு (இன்சூரன்ஸ்) – 18.91 கோடி

பரஸ்பர நிதி முதலீடு – 4.2 கோடி

பத்திரங்கள் – 14.4 கோடி

பங்கு முதலீடுகள் – 47.31 கோடி

மக்களுக்கு கடன் முன்பணம் – 8.6 கோடி

வியாபார நிறுவனங்களில் முதலீடு – 2.9 கோடி

வங்கி முதலீடுகள் – 14.51 கோடி

வங்கி சேமிப்பு கணக்குகள் – 60.79 லட்சங்கள்

அஞ்சலக முதலீடு – 24 லட்சங்கள்

 

பண்ணை வீட்டு சொத்துக்கள்-

பண்ணை வீடு 19.71 ஏக்கர்

4.4 கோடி மதிப்பில் 7800 சதுர அடி இடம்

ஆர் எம் வி விரிவாகத்தில் பெங்களூருவிலும், பெல்லாரியிலும் இரண்டு கட்டிடங்கள்

பெல்லாரியில் மூதாதையர் சொத்து 40 லட்சம்

பொறுப்புகள் – 16.82 கோடி

 

 குடும்ப வருவாய்-

மனைவி அருணா ரெட்டியின் சொத்துக்களை கணக்கிட்டால் அது ரெட்டியின் கணக்கிற்கு மேல் செல்லும்

ஆண்டுச் சம்பளம் – 16.5 கோடி

வியாபார வருவாய் 22.69 கோடி

நகைகள், இன்சூரன்ஸ், பங்கு வர்த்தகம், முதலீடுகள் என கணக்கிட்டால் கோடிகளில் வரும்

இவை தவிர இவரது குழந்தைகள் பிராமணி மற்றும் கிரீத்தியின்  வருடாந்திர வியாபார வருவாய் 3.7 கோடி

__________________________________________________________

நன்றி – டைம்ஸ் ஆப் இந்தியா, தமிழில் – சித்ரகுப்தன்
__________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்:

  1. இந்த பதிவு எதுக்கு… இது எல்லாருக்கும் தெரிந்த செய்தி தானே.. புதிதாக ஒன்றும் இல்லையே…இதுக்கு பதிலா…

    ரெட்டி-யை எல்லாரும் கெட்ட கெட்ட வார்த்தையால திட்டுங்கடா…
    உங்க வயித்தெரிச்சலை வந்து கொட்டுங்கடா – ன்னு ரெண்டு லைன்ல போட்டு இருக்கலாம்..

    • உங்களுக்கு தெருச்சா ஊருக்கே தெருச்ச மாதிரியா? இரண்டே வரியில போட்டா ஆதாரம் இல்லாம எப்படி போடிக்கனு கேப்பீங்க அத இந்த விளக்கம்.

      எல்லாம் தெருச்ச மனுசன் மாதிரி பேசாத….

    • இவரு வீட்டில் யாராவது வந்து கொள்ளை அடித்தால் கூட, இவரு சாவகாசமா “இது எல்லோர்க்கும் தெரிஞ்சது தானே , வீடுன்னா நாலுபேரு வந்து திருடத்தான் செய்வாங்கன்னு” சொல்லுவாரு போல இருக்கு!

    • இது கல்பனா மாதிரி வீட்டில டிவி-யோ அல்லது செய்தி தாள்கள் வாங்கும் வசதியோ அல்லது செய்திகளை படிக்கவும் பார்க்கவும் போதிய நேரம் இல்லாமலோ, இணையத்தில் இருபத்து நாலு மணி நேரம் உலவினாலும் இந்த செய்தியை இதுவரை வாசிக்க முடியாத ஆட்களுக்காக உள்ள பதிவு போல…

        • “பா.ஜ.க.வின் தியாகச் செம்மல் ஜானர்த்தன் ரெட்டி கைது”-என்ற முன்னால் வந்த கட்டுரையை நீங்கள் நன்றாக படித்திருந்தால் இரண்டு கட்டுரைக்கும் உள்ள வித்தியாசம் புரியும்.ஏற்கனவே கூறி உள்ள செய்தியை பற்றி கூடுதல் தகவல் கிடைக்கும் போது அதை மீண்டும் ஒரு முறை ஆதாரத்துடன் கூறுவது தவறு இல்லையே.

  2. ஊழல் பெருச்சாலியை பை க்குள் வைத்துக்கொண்டு அன்னாஹஜரே எனும் கிழவனை கேடயமாக வைத்துக்கொண்டு ஊழலை இவங்க(பா,ஜ.க)ஒழி(ளி)க்கபோறாங்களாம்,வெக்கமாயில்லை….

    • என்ன இருந்தாலும் ஊழல்னா கருணாநிதி தான் அந்த ஆளை மிஞ்ச உலகத்துல எவனும் பிறக்க போவதில்லை

  3. இவுங்க ஊழலை ஒழிக்கிரார்களோ இல்லையோ… அப்சல்களையும், கசாப்களையும் ஒழிப்பார்கள் என்பதில் சந்தேகமே இல்லை…

    • அப்சல்களையும்,கசாப்களையும் உருவாக்குவதே அத்வானிகளும் மோடிகளும் தானே,மதவெறிபிடித்த மிருகங்கள் தற்போது ஊழலை ஒழிப்பதாக சொல்லி புதுமுகமூடியுடன் வருகிறார்கள் ஆட்சியை இப்படியா அலையறது அம்பிகள்?

      • தவறு அப்சல்களையும்,கசாப்களையும் உருவாக்குவதே முற்போக்குவாதி/னடுனிலைவாதி எனும் முகமூடிகளில் ஒளிந்து கொண்டு..இந்தத் தீவிரவாதிகளூக்காக வாதாடிக்கொண்டிருக்கும் உம்மைப்போன்றோறால் தான்…

    • manithan!

      கட்டுரையை பற்றிய உங்கள் கருத்துக்களை முன்வைக்கலாமே? அதை விட்டுட்டு என்னென்னமோ சொல்லுறிங்களே……

      • தோழன், இந்த கட்டுரை முழுக்க முழுக்க உண்மை மற்றும் நியாமான கட்டுரை… இதில் ஆதரவு எதிர்ப்பு என்று சொல்வதெற்கே முகாந்திரம் இல்லை.. இதில் விவாதப்பொருள் ஒன்றும் இல்லாததால் இந்த களத்தை சற்று கட்டுரைக்கு விலகி எடுத்து செல்ல எம் கருத்துக்கள் மூலம் முயன்றிக்கிறேன் என்று சுட்டியமைக்கு நன்றி… தவறுக்கு வருந்துகிறேன்…பதிவின் தரம் காக்க பதிவர்களுக்கு எம் முழு ஒத்துழைப்பு என்றும் உண்டு என்று தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்ளுகிறேன்…

  4. ஜானர்த்தன ரெட்டி கொடுத்த வைரக்கிரிடத்தை திருப்பதி தேவஸ்தானம் திரும்ப தர மறுத்து விட்டதாமே? ஊழல் பணத்தில் உலவும் திருப்பதியை கைது செய்வது யாரோ?

    • திருப்பதியை கைது செய்ய தேவையில்லை… அந்த கிரீடத்தை கைப்பற்றி அரசு கஜானாவில் சேர்த்தாலே போதும்…

      • அரசு கஜானாவில் சேர்த்தால் மீண்டும் இதுபோன்ற அரசியல் வாதிகள் கையில் தான் வந்து சேரும்.திருப்பதி சொத்துக்களை மக்கள் பறிமுதல் செயும் காலம் மிகவிரைவில் வரும்.

      • அந்த கிரீடம் மட்டும்தானா ? மற்ற சொத்துக்கள் எல்லாம் எங்கிருந்து வந்தது, யாரால் கொடுக்கப்பட்டது?

  5. கேடி சகோதரர்கள் = ரெட்டி சகோதரர்கள்
    கேடி சகோதரர்கள் ரெட்டி சகோதரர்கள்

    மூன்றில் ஒன்றை தேர்வு செய்க. சரியான விடைக்கு பரிசு உன்டு….

  6. 1) கேடி சகோதரர்கள்= ரெட்டி சகோதரர்கள் 2) கேடி சகோதரர்கள் < ரெட்டி சகோதரர்கள்
    3) கேடி சகோதரர்கள் < ரெட்டி சகோதரர்கள். மூன்றில் ஒன்றை தேர்வு செய்க. சரியான விடைக்கு பரிசு உன்டு

Leave a Reply to manithan பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க