privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கசாமி சரணம் ஐயப்பா! விலைவாசி பாடலை கேளப்பா! - ரீமிக்ஸ்!

சாமி சரணம் ஐயப்பா! விலைவாசி பாடலை கேளப்பா! – ரீமிக்ஸ்!

-

இரு முடி சாமான்கள் விலையேற்றத்தாலும் பொதுவான விலைவாசி உயர்வாலும் மனம் புழுங்கி புலம்பும் கன்னிச்சாமிகளுக்கு இப்பாடல்கள் காணிக்கை.

_______________________________________________

பாடல் 1        இருமுடி  தாங்கி

(பல்லவி)

இரு  முடி  தாங்கி  ஒரு  மன தாகி

கடனுடனே  வந்தோம்

தெருவினில்  துரத்தும்   பார்வையை  வெல்லும்

திருவடியைக்  காண  வந்தோம்!

(அனுபல்லவி)

பஸ் டிக்கட்டு ஏறிப் போச்சு
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை
சாமியே  ஐயப்போ
கடங்காரன்  வர்றான்  போ!

(சரணம்)

நெய் அபிஷேகம்  ஸ்வாமிக்கே
நெம்புறான்  சேட்டு  நேத்திக்கே
ஐயப்ப  மார்களும்   கூடிக்கொண்டு
ஐந்து  வட்டிக்கு  வாங்கிடுவார்
சபரி  மலைக்கு   சென்றிடுவார்
(.. சாமியே ஐயப்போ
கடன்காரன் வர்றான் பா..)

கார்த்திகை மாதம் மாலை அணிந்து
நேர்த்தியாகவே  பட்டினி  கிடந்து
பார்த்த சாரதியின் மைந்தனே- நான்
பால் விலைக் கேட்டு நொந்தனே!

இருமுடி சாமான் சந்தனம் வாங்க
ஒருவழியாகி  ’பாட்டில்’ தள்ளி
அடகு  கடைக்கார  நண்பரைத் தொழுது
அய்யனின்  அருள்மலை ஏறிடுவார்

(..சாமியே ஐயப்போ
கடன்காரன் வர்றான் பா..)

அரிசி  விலைதான்  ஏறும்  போது
அரிகரன் மகனைத்  துதித்துச்  செல்வார்
வட்டிக்  காரனும்  வந்திடுவார் – ஐயன்
வன்புலி  ஏறி  வந்திடுவார்!
கற்பூர  விலையும்  கடினம்  கடினம்
கைமாத்து  வாங்கவும்  துணை வருவார்
எரிமலை இறக்கம்  வந்த உடனே
கூடவே  பைனான்சுகாரனைக்  கண்டிடுவார்..

(..சாமியே ஐயப்போ
கடன்காரன் வர்றான் பா..)

தேக  பலம்  தா – பாத பலம் தா
தேங்கா  மூடி  யை –  திருப்பி  த்தா
தேங்கா  பழத்தை  தா  என்றால்  அவரும்
தோலையே  தூக்கி  எறிந்திடுவார்!
பாத  பலம்  தா  என்றால் – அவரும்
பாதத்தில்  அடித்திடுவார் – போலீசு

லாடத்தையே கட்டிடுவார்

(..சாமியே ஐயப்போ
கடன்காரன் வர்றான் பா..)

சபரி  பீடமே  வந்திடுவார்
அவரவர்  மடிதனை  பிடித்திடுவார்
நெய்த்  தேங்காவின்  விலையை நினைத்ததும்
கை  கால் நடுங்கி  கத்திடுவார்!

ஏத்தி விடப்பா… தூக்கி  விடப்பா
ஜெயலலிதாவ  தாங்க  முடியல
ஏத்தி  விடப்பா.. தூக்கி  விடப்பா

(..சாமியே ஐயப்போ
கடன்காரன் வர்றான் பா..)

_____________________________________

பாடல் 2    என்ன மணக்குது  எங்கே மணக்குது

என்ன மணக்குது  எங்கே மணக்குது
கல்லா மணக்குது ஐயப்பன் மலையிலே

அல்லி மலர்  மணமும் எங்கே மணக்குது
அஞ்சு  வட்டிக்  காரனின் மேலே  மணக்குது

ஒல்லித்தேங்கா  வியர்வ  நாத்தம் எங்கே மணக்குது
நம்ப  தரக்கடமூர்த்தியின் மேலே  மணக்குது

சம்பங்கி  ரோஜாவும்  எங்கே  மணக்குது
லஞ்சமஹா  பாலகனின்  மேலே  மணக்குது

பிச்சலும், புடுங்கலும்  எங்கே  மணக்குது
பிரியமுள்ள  ஆட்டோக்காரர்  மேலே  மணக்குது

குங்குமப்பூ  ஜவ்வாது  எங்கே  மணக்குது
கொலுசுக்  கடக்காரன்  மேலே  மணக்குது

மட்ட சாம்பிராணி  எங்கே  மணக்குது
மட்டப்பலகை  பாலகனின்  மேலே  மணக்குது

பன்னீரும்  சந்தனமும்  எங்கே  மணக்குது
வட்டச்  செயலாளர்  மேலே மணக்குது

கற்பூரம்  அணைஞ்சணைஞ்சு  எங்கே  மணக்குது
காய்கறி ஏவாரி  கை மேல  மணக்குது

பாங்கான  நெய்  மணமும் எங்கே  மணக்குது
பேங்கு  ஆபிசரு  பேண்ட்டுல மணக்குது

பழைய சோறு  வெங்காயம்  எங்கே  மணக்குது
கூலிக்காரர்  வாயிலதான்  குப்புனு  மணக்குது .

என்ன  மணக்குது  எங்கே  மணக்குது
கல்லா  மணக்குது  ஐயப்பன்  மலையிலே

_______________________________________________

பாடல்  3    பதினெட்டுப் படி பாட்டு

ஒன்றாம்  திருப்படி  உப்பு  பொன்  ஐயப்பா
உப்பு   ரொம்ப   விலையப்பா, என்  ஐயனே  வாங்க  உய்யப்பா!

இரண்டாம் திருப்படி  பூண்டு  பொன்  ஐயப்பா
பூண்டோடு  போகும் முன்னே  ஐயப்பா,  ஐயனே  வாங்க  உய்யப்பா !

மூன்றாம்  திருப்படி  மிளகாய்  பொன்  ஐயப்பா
வாங்கவே  வழி  இல்லப்பா,  என்  ஐயனே  வாங்க  உய்யப்பா!

நான்காம்   திருப்படி  புளி  பொன்  ஐயப்பா
வாங்க   நாக்கு   தள்ளுதப்பா, ஐயனே  என்னை  உய்யப்பா!

ஐந்தாம்  திருப்படி  எண்ணைய்  பொன்  ஐயப்பா

விலையோ  ஐயோ அப்பா,  ஐயனே  வாங்க  உய்யப்பா!

ஆறாம்  திருப்படி  முட்டை பொன்  ஐயப்பா
வீட்டுல  கோழி  இல்லயப்பா,  ஐயனே  ரெண்டு  உய்யப்பா!

ஏழாம்  திருப்படி  பாலு  பொன் ஐயப்பா
வெல ஏறிப் போச்சு ஐயப்பா,  அய்யனே பச்சத் தண்ணியில் உய்யப்பா!

எட்டாம்  திருப்படி  பஸ் டிக்கெட்  பொன்  ஐயப்பா
ஏத்திட்டாளே  ஐயப்பா,  எதுத்து புலிய விட்டு பாரப்பா!

ஒன்பதாம் திருப்படி  கரண்ட்டு  பொன்  ஐயப்பா
கட்டணம் ஷாக்கடிக்குதுப்பா, அய்யனே கரண்ட்டு பில்ல கட்டப்பா!

பத்தாம்  திருப்படி  பள்ளிக்கூடம்  பொன் ஐயப்பா
படிக்க சொத்து இல்லப்பா, அய்யனே கான்வெண்ட்டு பல்லத்தானே பிடுங்கப்பா!

பதினோறாம் திருப்படி கூலி வேலை பொன் ஐயப்பா
கொல்லுறான்  முதலாளியப்பா, அய்யனே உன் பாயும் புலி எங்கப்பா!

பன்னிரெண்டாம்  திருப்படி துக்ளக் சோ  பொன் ஐயப்பா
புடுங்கல் தாங்கல அய்யப்பா,  அய்யனே காட்டுக்கு புடிச்சுட்டு போயிடப்பா!

பதிமூனாம்  திருப்படி  ராகுல்காந்தி  பொன்  ஐயப்பா

பதினான்காம்  திருப்படி ப.சிதம்பரம்  பொன்  ஐயப்பா

பதினைந்தாம்  திருப்படி மோடி  பொன்  ஐயப்பா

பதினாறாம்  திருப்படி   டாடா  பொன்  ஐயப்பா

பதினேழாம்  திருப்படி  அம்பானி  பொன்  ஐயப்பா

மொத்தமும்  சதிவலையப்பா, தப்பிச்சு  நீயாவது  உய்யப்பா!

பதினெட்டாம்  திருப்படி  அமெரிக்கா  பொன்  ஐயப்பா
மன்மோகன்  அவன்  கையப்பா,  ஐயனே  ஒரு  அம்ப விட்டு உய்யப்பா!

(அறிந்தும், அறியாமலும், தெரிந்தும், தெரியாமலும் செய்த சகல குற்றங்களையும் பொருத்து காத்து இரட்சிக்க வேண்டும். ஓம் சத்தியமான பொன் பதினெட்டாம் படிமேல் வாழும், வில்லாளி வீரன், வீரமணிகண்டன், காசி, இராமேசுவரம், பாண்டி, மலையாளம் அடக்கியாளும், ஓம் ஹரிஹர சுதன், ஆனந்த சித்தன் ஐயன் ஐயப்ப சாமியே சரணம் ஐயப்பா!)

குறிப்பு;  எந்தக் குற்றமும் செய்யாதவர்களுக்கு மேற்கண்ட பாராயணம் உசிதமில்லை.

_______________________________________________

–              துரை.சண்முகம்

_______________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

  1. வழக்கம் போல்———தனமான் டீசர் வகைப்பதிவு இது….னீ திருந்தவே மாட்டியாடா???

    • அய்யோடா தம்பி நம்மள மன்னிச்சுவுட்டுர்ராராம்…டேய் காமிடி பீசு…இந்து மதத்த சீண்டி நீங்க எழுதும் இது போன்ற வெட்டிக்கட்டுக்கதைகளுக்கு நாங்க தான்டா உன்ன மன்னித்தருளுகிறோம்..

      • அண்ணே, வெட்டிக்கதைகாரர்களை நீங்க மன்னிக்கிறது இருக்கட்டும். முதலில் இந்து மதத்தில் இருக்கும் ஜாதிகள், அதில் எது உயர்த்தப்பட்ட ஜாதி, எது தாழ்த்தப்பட்ட ஜாதி,தீண்டத்தகாதவர்களை என்ன செய்யனும்? அப்படீங்கிற உண்மை கதைகளை நீங்களே சொல்லறீங்ளா? அதெல்லாம் பழைய கதைனு பின்வாங்கவேண்டாம்.

  2. sama super,,,,, intha padalai iyyapa bakthargal kayttal . nichayamaga.,,, thirunthuvargal, yandru yanuku nambikai irukirathu…….. intha padalai heyzhuthiya thozhar ku nandri…….. mattrum yannudaya vazhthukal………..

  3. இப்படியே ஹஜ் பயணிகளுக்கு பாடல் ரோம் செல்வோருக்கு பாடல் வேளாங்கண்ணி பாடல் எல்லாம் எப்போ ரிலீஸ்?

    • நெத்தி அடி..வினவு என்ன பதில் இருக்கா ,,?? இல்ல வழக்கம் போல சப்பை கட்டா ??

      • வினவின் இஸ்லாம்,கிறித்தவம் குறித்த விமர்சனக் கட்டுரைகளையெல்லாம் படிப்பது கிடையாது அல்லது அதைப் படித்தும் விட்டு வேண்டுமென்றே ஏதோ எழுத வேண்டும் என்பதற்காக இங்கே பின்னூட்டமிடுவது.

        அப்படிபட்டவர்கள் தான் இந்த பையா, போக்கன், பாகவதர் போன்றோர்.

        இடது புறம் இருக்கும் சொற்களில் மதம் என்று தெரிவு செய்து அதில் இருக்கும் இஸ்லாம், கிறித்தவம் குறித்த கட்டுரைகளை படியுங்கள்.அது உங்களுக்கு சிரமமாக இருக்கும் என்றால் நானே அதற்கான முகவரிகளைத் தருகிறேன்..

        இஸ்லாமியப் பெண்களைச் சிதைக்கும் ஆணாதிக்க அமிலம்!
        https://www.vinavu.com/2011/08/12/acid/

        “தொடைகளுக்கு நடுவே ஒளிந்திருக்கும் நரகம்” !
        https://www.vinavu.com/2011/07/07/desert-flower/

        2010-ல் இசுலாமியப் பெண்கள்: மதமும் வாழ்க்கையும் !!
        https://www.vinavu.com/2010/03/22/muslim-women-today/

        தலாக் – சரியத் சட்டமும் இசுலாமியப் பெண்களின் அவலமும்!
        https://www.vinavu.com/2011/04/04/sharia-talaq/

        இசுலாமிய “உணர்வு” பத்திரிகைக்கு ஒரு மறுப்பு!
        https://www.vinavu.com/2011/10/08/unarvu-reply/

        பெண்களுக்குள் ஆசிர்வதிக்கப்பட்டவர் நீரே!
        https://www.vinavu.com/2011/01/03/st-josephs-trichy-3/

        ” நமீதா அழைக்கிறார் ” – நாசரேத் ஆயர்
        https://www.vinavu.com/2008/09/10/nameetha/

        ‘புனிதமும்’ வக்கிரமும்: திருச்சபையின் இருமுகங்கள் !
        https://www.vinavu.com/2009/06/29/amen/

        ஆபாச நடிகை நக்மா நடத்திய ‘அல்லேலூயா’ மதப்பிரச்சாரம்! – நாத்திகம் இராமசாமி
        https://www.vinavu.com/2009/10/06/nagma-hallelujah/

        பாதிரியார்களின் பாலியல் குற்றம்-போப்பாண்டவரை கைது செய்ய வேண்டுமா ?
        https://www.vinavu.com/2010/04/28/sasi-pope/https://www.vinavu.com/2010/04/28/sasi-pope/

        யேசுவே நீரும் இல்லை – அன்னை தெரசா !
        https://www.vinavu.com/2008/12/29/mteresa/

        இதையெல்லாம் படித்து விட்டு வந்து பின்னூட்டமிடுங்கள்.

  4. மதவாதம் கூடாதென்று கூறும் நீங்கள், ஒரு மதத்தினை புண்படுத்தி, அந்த மதத்தில் சாதாரணமாக இருப்பவரை உசுப்பேத்தி மதவாதத்தை வளர்கிரீர்களே! இதுதான் உங்களுக்கு பெரியார் சொல்லி கொடுத்த பகுத்தறிவா?

    • சாதாரணமானவர்கள் படிச்சா சிரிச்சிக்கிட்டுத்தான் போவாய்ங்க. பையா மாரி மதவாதிங்களுக்குத்தான் கோவம் வரும்

    • இதுதான் உங்களுக்கு பெரியார் சொல்லி கொடுத்த பகுத்தறிவா?////
      .
      .

      பெரியாரே அதைத்தானே செய்தார்?
      மற்ற மதங்களுக்கு ஆதரவாக பெரியார் பேசியவற்றை தொகுத்து அவர்கள் மத மாற்றத்துக்கு பயன்படுத்திகொல்கின்றனர்!

      • கடவுளை கண்டுபிடித்தவன் காட்டுமிராண்டி”,என்று பொதுவாகதானே கூறினார்.இதை எந்த மதவாதி தனக்கு ஆதரவாக பயன்படுத்திகொள்ள முடியும்…?

    • மதத்தின் பேரால் நீங்கள் எதை வேண்டுமானாலும் செய்வீர்கள். அதை சுட்டிக் காட்டினால் மதத்தினை புண்படுத்துவதாகக் கூறுவீர்கள்.

      மதத்தின் பேரால் நல்லது செய்கிறீர்களோ இல்லையோ கெட்டது செய்யாமல் இருங்களேன். கெட்டது செய்வதால்தானே எழுதுகிறார்கள். கெட்டதை சுட்டிக்காட்டினால் உங்கள் மனம் புண்படுகிறது என்றால் நீங்கள் நல்லவரா-கெட்டவரா?

      சாதாரண பக்தன் பெரியாரையும் ரசித்தான். துரை சண்முகத்தையும் ரசிக்கிறான். இந்த உளவியல் உங்களுக்குப் புரியாது. சாதாரண பக்தனோடு பழகிப் பாருங்கள். உண்மை விளங்கும்.

      காஞ்சிக் காமகோடியின் லீலாவிநோதங்களையும் நித்தியானந்தாவின் ரஞ்சித லீலைகளையும் ரசிக்காத பக்தன் உண்டோ?

      அட போங்க பொல்லாதவன்! உங்களுக்கு பக்தியும் இல்லை ரசனையும் இல்லை.

  5. தோழர்களே!
    இந்த பாடலை ம.க.இ.க வின் இசையில்,தோழர்களின் குரளில் கேட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

  6. Well , the song is good. the author does not make any joke about Hinduism. He only tells Lord Ayyapan about the present worst conditions prevailing. Very good and this is the realty. There is nothing against hindu god in the authors article. commonsense and second time reading will help to understand further.
    Regards
    GV

  7. /பன்னிரெண்டாம் திருப்படி துக்ளக் சோ பொன் ஐயப்பா
    புடுங்கல் தாங்கல அய்யப்பா, அய்யனே காட்டுக்கு புடிச்சுட்டு போயிடப்பா!/

    அப்படியே சு சாமி ஐயப்பா ! காட்டுக்கு கடத்திட்டு போயிடு அய்யனே !

  8. “ஐயப்பனுக்கு நடை திறந்த பிறகு தமிழகமே தலைகீழாக மாறிவிட்டது. பெரும்பாலானவர்கள் மதுவுக்கு மட்டுமல்ல மாமிசத்துக்கும் டாட்டா காட்டி விட்டார்கள். துடைப்பக்கட்டையால் அடித்தும் கூட திருந்தாதவர்கள் ஒரு கருப்புத் துண்டால் மதுவைக் கைவிட்டது…..”

    மகர ஜோதிக்குத் தடையா?
    http://hooraan.blogspot.com/2011/12/blog-post_09.html

  9. கல்லும் முள்ளும் காலுக்கு மெத்த

    சபரிமலை போனா நீ செத்த

    (நெரிசலில் சிக்கி).

    • கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை என்பது பொய்..
      டாட்டா சூமோவிலே சபரிக்கு போகும்போது

      ‘குஷன் சீட்டு குண்டிக்கு மெத்தை’ என்பதுதான் மெய்..

  10. இந்த ரெமிx பாடல் மிகவும்நன்ராக உல்லது
    மூடநம்பிக்கைல் ஆல்ந்து கிடபவர்கலுக்குநல்ல பதிலடி

  11. Appreciation for pointing out superstitious activities. But look at RAMALINGA VALLALAR. He fought against caste/religion/superstition …

    He has shown best way for self realization.

    Why self realization? We live a life as body and mind? But we are creator of them.

    We don’t realize that.

  12. அன்பான தமிழா உறவுகளே சாவுத தண்டனையை எதிர் நோக்கி இருக்கும் குற்றமற்ற சாந்தன், முருகன், பேரறிவாளனை காப்பாற்ற விரும்பினால் நீங்கள் ஒரே ஒரு கீழ் கண்ட எண்ணுக்கு (“மிஸ்டு கால்” ) அழைப்பு கொடுத்து துண்டிக்கவும் .

    9282221212

    நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு அழைப்பும் மூவர் உயிரை காப்பாற்ற நிச்சயம் உதவும். உங்கள் அழைப்பு தானியங்கி முறையில் தானாகவே இணைப்பு துண்டிக்கப்படும்.

    நம்பிக்கையோடு உடனே துவக்குங்கள் உங்கள் பணியை…

Leave a Reply to guru பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க