privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தொழிலாளர்கள்புதுவை HUL நிர்வாகத்திற்கெதிரான புஜதொமு பொதுக்கூட்டம்!

புதுவை HUL நிர்வாகத்திற்கெதிரான புஜதொமு பொதுக்கூட்டம்!

-

12-1-2012 வியாழன் மாலை 5.30 மணிக்கு புதுவை சிங்காரவேலர் சிலை அருகில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியில் (புஜதொமு) இணைந்துள்ள இந்துஸ்தான் யுனிலீவர் ஒர்க்கர்ஸ் யூனியனும் இந்துஸ்தான் லீவர் வெல்ஸ் யூனியனும் இணைந்து HUL நிர்வாகத்தைக் கண்டித்து பொதுக்கூட்டம் நடத்தியது.

கூட்ட நாளன்று பாண்டிச்சேரியின் இன்றைய முதல்வரான என்.ரெங்கசாமியின் அடியாள் படை தொண்டரடிப்பொடி ஒருவன், எங்கள் முதல்வரை திட்டிப் பேசிய நீங்கள் எப்படி பொதுக்கூட்டம் நடத்திவிடுவீர்கள் என பார்த்துவிடுகிறேன், என தொலைபேசியில் மிரட்டியுள்ளான். ஏற்கனவே எல்லா தொழிற்பேட்டை பகுதிகளிலும் விரிவாக தெருமுனைக் கூட்டங்கள் நடத்தி, அணிதிரட்டிய போது தானே புயலின் கோர பாதிப்பு, அரசின் பாராமுகம் மற்றும் மெத்தனப் போக்கைக் கண்டித்ததோடு சட்டப்படி தொழிலாளர் உரிமைக்கு உதவ வேண்டிய அரசு முதலாளிகளின் எடுபிடிகளாக தொழிலாளர் விரோதப் போக்கிலிருப்பதையும் அம்பலப்படுத்தி தோழர்கள் பேசியிருந்தனர். இதனடிப்படையில் தொழிலாளர்கள் தங்களது வர்க்க ஒர்றுமையை நிரூபிக்கும் விதமாக பெருந்திரளாக பங்கேற்றனர். சுமார் ஆயிரம் பேர் வரை திரண்டிருந்த இப்பொதுக்கூட்டத்தில் யூனிலீவர் ஆலைத் தொழிலாளர்கள் தங்களது குடும்பங்களுடன் கலந்து கொண்டனர். இதுதவிர பல்வேறு ஆலையிலிருந்தும் கணிசமான தொழிலாளர்கள் பங்கேற்றனர்

5.30 மணிக்கு இந்துஸ்தான் ஒர்க்கர்ஸ் யூனியன் தலைவர் தோழர். அய்யனார் தலைமையில் கூட்டம் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தி தொடங்கப்பட்டது. வெல்ஸ் யூனியன் பொருளாளர் தோழர் விநாயகம், ஒர்க்கர்ஸ் யூனியன் தோழர் லோகநாதன், எல்&டி பட்டாளித் தொழிற்சங்கத் தலைவர் சிவக்குமர், புதுவை புஜதொமு பொதுசெயலாளர் தோழர் கலை ஆகியோர் HUL நிர்வாகத்தின் தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்தும், நிர்வாகம் சட்டத்தை மதிக்காமல் சட்டவிரோதமாகத் தொழிலாளர்களைப் பழிவாங்குவதைக் கண்டித்தும் பேசினர். தொழிலாளர்கள் ஒரே வர்க்கமாகத் திரண்டு பாண்டிச்சேரி முதலாளிகளின் தொழிலாளர் விரோதப் போக்குகளுக்கு சவக்குழி தோண்ட அறைகூவினர். தொழிலாளர்களுக்கே உரிய போர்க்குணத்துடன் நேர்படப் பேசினர்.

கண்டன உரை முடிந்ததும் சென்னை புமாஇமுவின் எழுச்சிமிகு கலைநிகழ்ச்சி நடைபெற்றது.

பின்னர், சிறப்புரையாற்றிய உயர்நீதிமன்ற வழக்கறிஞர் தோழர் பார்த்தசாரதி, தொழிலாளர்கள் தங்களது உரிமைப் பிரச்சினைகளுக்கு சட்டத்தையும் நீதிமன்றத்தையும் நம்புவது வீணான வேலை என்பதை தனது அனுபவத்தின் மூலமாக நிரூபித்தார். மாறாக தொழிலாளர்கள் தங்களது உரிமைக்கு வர்க்க ஒற்றுமையுடன் போராடுவதே தீர்வு என்பதனை மாருதி தொழிலாளர்களின் போராட்டத்தை உதாரணமாக எடுத்துக் கூறி விளக்கிப் பேசினார்.

அதன்பின் சிறப்புரையாற்றிய தமிழ் மாநில பொதுச் செயலாளர் தோழர் சுப.தங்கராசு, வருங்கால தொழிலாள வர்க்கத் தலைவர்களை முதலாளிகள்தான் உருவாக்குகிறார்கள் என HUL நிர்வாகத்தால் பழிவாங்கப்பட்ட தொழிலாளர்களை மேடையில் அறிமுகப்படுத்தி எழுச்சிமிகு உரையாற்றினார். தொழிலாளர்கள் தங்களது பொருளாதாரக் கோரிக்கைக்காக மட்டும் போராடுவதென்பது தொழிலாளர்களின் உரிமையை வென்றெடுக்குவதற்கு முழுமையான தீர்வாகாது. தொழிலாளர் வர்க்கம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றும் போதுதான், முதலாளித்துவ அடக்குமுறையிலிருந்து தங்களை முழுமையாக விடுவித்துக்கொள்ள முடியும். எனவே தொழிலாளர்கள் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்கத்துடன் தங்களது போராட்டங்களை அமைத்துக்கொள்ளவேண்டும் என அரசியல் போராட்டங்களுக்கு அணிதிரள அறைகூவினார். தமிழகமெங்கும் புரட்சிகர அமைப்புகள் பங்கெடுத்து வரும் முல்லைப் பெரியாறு அணைப் பாதுகாப்புப் போராட்டம், கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டங்கள் பற்றிக் குறிப்பிட்டு, அப்படிப்பட்ட அரசிய போராட்டங்களில் திரளாகப் பங்கேற்க வேண்டியதன் அவசியத்தையும் குறிப்பிட்டு பேசினார்.

இறுதியில் சர்வதேசிய கீதத்துடன் கூட்டம் முடிவடைந்தது.

-புஜதொமு செய்தியாளர், புதுவை

  1. அரசியலற்ற தொழிற்சஙகத் தலைமைகள், தொழிலாளர் போராட்டம் என்ற தொடர் நடவடிக்கையின் இரண்டு அம்சங்களான உற்பத்திக்கான போராட்டம், உரிமைக்கான (வர்க்க) போராட்டம் என்பனவற்றில் முன்னதில் முழு விளைவை ஏற்படுத்தும்படியும், பின்னதில் எந்த விளைவும் நடந்திராவண்ணம் மடைமாற்றி வரும் சூழலில் பு.ஜ.தொ.மு. மட்டுமே போராட்டத்தை அதன் அரசியல் பொருளிலிருந்து வழிநடத்தி விளைவை சாதித்துக்காட்டி வருகிறது.

  2. // இறுதியில் சர்வதேசிய கீதத்துடன் கூட்டம் முடிவடைந்தது. //

    சர்வதேசிய கீதத்தின் தமிழ் மொழிபெயர்ப்பை வினவில் ஒரு தனிப் பக்கத்தில் வெளியிட்டு அதற்கான நிரந்தர சுட்டியை முகப்புப் பக்கத்தில் முதலில் தெரியும் வண்ணம் கொடுப்பது வினவின் கொள்கைகளுக்குப் பொருத்தமாயிருக்கும்.

  3. //வெல்ஸ் யூனியன் பொருளாளர் தோழர் விநாயகம், ஒர்க்கர்ஸ் யூனியன் தோழர் லோகநாதன், எல்&டி பட்டாளித் தொழிற்சங்கத் தலைவர் சிவக்குமர், புதுவை புஜதொமு பொதுசெயலாளர் தோழர் கலை ஆகியோர் HUL நிர்வாகத்தின் தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்தும், நிர்வாகம் சட்டத்தை மதிக்காமல் சட்டவிரோதமாகத் தொழிலாளர்களைப் பழிவாங்குவதைக் கண்டித்தும் பேசினர்.//
    ஓசூரில், குளோபல் ஃபார்மாடெக் லிட்- எனும் ஊசி மற்றும் மருந்து தயாரிக்கும் நிறுவனம் சார்பாக பு.ஜ.தொ.மு-க்கு போட்டியாக தொழிலாளர்களை அம்பலப்படுத்துகிறேன்பேர்வழி என்றவகையில் சில சுவரொட்டிகளை தங்களது கைக்கூலிகளைக் கொண்டு ஒட்டியிருந்தார்கள். அதில் தொழிலாளர்கள் தங்களின் ஓய்வரையில்(Recration centre) தூங்குவதை படம்பிடித்து அவர்களது பணியாளர் எண்களுடன் குறிப்பிட்டு இவர்களா கொத்தடிமைகள்? என்று திமிர்த்தனமாக குறிப்பிட்டு வினா எழுப்பியிருந்தார்கள். குறிப்பாக அவ்வாலையின் நிர்வாக அதிகாரி டி.ஜி.எம் ஏகாம்பரம் என்ற பொறுக்கி ஓநாய் பெண்கள் உடைமாற்றும் அறையில் ரகசியமாக புகுந்து ஃபோட்டோ எடுத்து அதையும் அந்த சுவரொட்டியில் வெளியிட்டுயிருக்கிறான். அதுவும் அந்த பெண் தொழிலாளி நிறைமாத கர்ப்பிணிப் பெண் என்றுகூட பாராமல் வக்கிரமாக நடந்துக் கொண்டான் அந்த பொறுக்கி. மேலும் சங்க முன்னணியாளர்களை வேலைநீக்கம் செய்தும், தொழிலாளர்களை பொய்க்குற்றச்சாட்டி பழிவாங்கிவருகிறான். சட்டத்தை மயிரளவிற்குகூட மதிக்காமல் திமிர்த்தனமாக நடமாடிவரும் இதுபோன்ற முதலாளித்துவ பயங்கரவாதிகளை தண்டிக்க மக்களை திரட்டி போராடிவரும் புரட்சிகர அமைப்புகளை இனம்கண்டு, அதில் தொழிலாளர்கள் பெருந்திரளாக தங்களை இணைத்துக் கொள்வதே ஒரே வழி.

Leave a Reply to asogane பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க