privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தொழிலாளர்கள்புதுவை HUL நிர்வாகத்திற்கெதிரான புஜதொமு பொதுக்கூட்டம்!

புதுவை HUL நிர்வாகத்திற்கெதிரான புஜதொமு பொதுக்கூட்டம்!

-

12-1-2012 வியாழன் மாலை 5.30 மணிக்கு புதுவை சிங்காரவேலர் சிலை அருகில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியில் (புஜதொமு) இணைந்துள்ள இந்துஸ்தான் யுனிலீவர் ஒர்க்கர்ஸ் யூனியனும் இந்துஸ்தான் லீவர் வெல்ஸ் யூனியனும் இணைந்து HUL நிர்வாகத்தைக் கண்டித்து பொதுக்கூட்டம் நடத்தியது.

கூட்ட நாளன்று பாண்டிச்சேரியின் இன்றைய முதல்வரான என்.ரெங்கசாமியின் அடியாள் படை தொண்டரடிப்பொடி ஒருவன், எங்கள் முதல்வரை திட்டிப் பேசிய நீங்கள் எப்படி பொதுக்கூட்டம் நடத்திவிடுவீர்கள் என பார்த்துவிடுகிறேன், என தொலைபேசியில் மிரட்டியுள்ளான். ஏற்கனவே எல்லா தொழிற்பேட்டை பகுதிகளிலும் விரிவாக தெருமுனைக் கூட்டங்கள் நடத்தி, அணிதிரட்டிய போது தானே புயலின் கோர பாதிப்பு, அரசின் பாராமுகம் மற்றும் மெத்தனப் போக்கைக் கண்டித்ததோடு சட்டப்படி தொழிலாளர் உரிமைக்கு உதவ வேண்டிய அரசு முதலாளிகளின் எடுபிடிகளாக தொழிலாளர் விரோதப் போக்கிலிருப்பதையும் அம்பலப்படுத்தி தோழர்கள் பேசியிருந்தனர். இதனடிப்படையில் தொழிலாளர்கள் தங்களது வர்க்க ஒர்றுமையை நிரூபிக்கும் விதமாக பெருந்திரளாக பங்கேற்றனர். சுமார் ஆயிரம் பேர் வரை திரண்டிருந்த இப்பொதுக்கூட்டத்தில் யூனிலீவர் ஆலைத் தொழிலாளர்கள் தங்களது குடும்பங்களுடன் கலந்து கொண்டனர். இதுதவிர பல்வேறு ஆலையிலிருந்தும் கணிசமான தொழிலாளர்கள் பங்கேற்றனர்

5.30 மணிக்கு இந்துஸ்தான் ஒர்க்கர்ஸ் யூனியன் தலைவர் தோழர். அய்யனார் தலைமையில் கூட்டம் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தி தொடங்கப்பட்டது. வெல்ஸ் யூனியன் பொருளாளர் தோழர் விநாயகம், ஒர்க்கர்ஸ் யூனியன் தோழர் லோகநாதன், எல்&டி பட்டாளித் தொழிற்சங்கத் தலைவர் சிவக்குமர், புதுவை புஜதொமு பொதுசெயலாளர் தோழர் கலை ஆகியோர் HUL நிர்வாகத்தின் தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்தும், நிர்வாகம் சட்டத்தை மதிக்காமல் சட்டவிரோதமாகத் தொழிலாளர்களைப் பழிவாங்குவதைக் கண்டித்தும் பேசினர். தொழிலாளர்கள் ஒரே வர்க்கமாகத் திரண்டு பாண்டிச்சேரி முதலாளிகளின் தொழிலாளர் விரோதப் போக்குகளுக்கு சவக்குழி தோண்ட அறைகூவினர். தொழிலாளர்களுக்கே உரிய போர்க்குணத்துடன் நேர்படப் பேசினர்.

கண்டன உரை முடிந்ததும் சென்னை புமாஇமுவின் எழுச்சிமிகு கலைநிகழ்ச்சி நடைபெற்றது.

பின்னர், சிறப்புரையாற்றிய உயர்நீதிமன்ற வழக்கறிஞர் தோழர் பார்த்தசாரதி, தொழிலாளர்கள் தங்களது உரிமைப் பிரச்சினைகளுக்கு சட்டத்தையும் நீதிமன்றத்தையும் நம்புவது வீணான வேலை என்பதை தனது அனுபவத்தின் மூலமாக நிரூபித்தார். மாறாக தொழிலாளர்கள் தங்களது உரிமைக்கு வர்க்க ஒற்றுமையுடன் போராடுவதே தீர்வு என்பதனை மாருதி தொழிலாளர்களின் போராட்டத்தை உதாரணமாக எடுத்துக் கூறி விளக்கிப் பேசினார்.

அதன்பின் சிறப்புரையாற்றிய தமிழ் மாநில பொதுச் செயலாளர் தோழர் சுப.தங்கராசு, வருங்கால தொழிலாள வர்க்கத் தலைவர்களை முதலாளிகள்தான் உருவாக்குகிறார்கள் என HUL நிர்வாகத்தால் பழிவாங்கப்பட்ட தொழிலாளர்களை மேடையில் அறிமுகப்படுத்தி எழுச்சிமிகு உரையாற்றினார். தொழிலாளர்கள் தங்களது பொருளாதாரக் கோரிக்கைக்காக மட்டும் போராடுவதென்பது தொழிலாளர்களின் உரிமையை வென்றெடுக்குவதற்கு முழுமையான தீர்வாகாது. தொழிலாளர் வர்க்கம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றும் போதுதான், முதலாளித்துவ அடக்குமுறையிலிருந்து தங்களை முழுமையாக விடுவித்துக்கொள்ள முடியும். எனவே தொழிலாளர்கள் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்கத்துடன் தங்களது போராட்டங்களை அமைத்துக்கொள்ளவேண்டும் என அரசியல் போராட்டங்களுக்கு அணிதிரள அறைகூவினார். தமிழகமெங்கும் புரட்சிகர அமைப்புகள் பங்கெடுத்து வரும் முல்லைப் பெரியாறு அணைப் பாதுகாப்புப் போராட்டம், கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டங்கள் பற்றிக் குறிப்பிட்டு, அப்படிப்பட்ட அரசிய போராட்டங்களில் திரளாகப் பங்கேற்க வேண்டியதன் அவசியத்தையும் குறிப்பிட்டு பேசினார்.

இறுதியில் சர்வதேசிய கீதத்துடன் கூட்டம் முடிவடைந்தது.

-புஜதொமு செய்தியாளர், புதுவை