privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்கூடங்குளம் அணு உலையை மூடு! பிப்.25 சென்னையில் பொதுக்கூட்டம்!! அனைவரும் வருக!

கூடங்குளம் அணு உலையை மூடு! பிப்.25 சென்னையில் பொதுக்கூட்டம்!! அனைவரும் வருக!

-

ஆபத்தான அணு உலை வேண்டாம்! அனைவருக்கும் தடையற்ற மின்சாரம் வேண்டும்!!

 

பொதுக்கூட்டம்

பிப்ரவரி 25, மாலை 6 மணி

எம்.ஜி.ஆர் நகர் மார்க்கெட், சென்னை.

தலைமை

தோழர் அ. முகுந்தன், தலைவர், பு.ஜா.தொ.மு, தமிழ்நாடு

சிறப்புரை

தோழர் மருதையன், பொதுச்செயலாளர், ம.க.இ.க தமிழ்நாடு

தோழர் ராஜூ, வழக்குரைஞர், மாநில ஒருங்கிணைப்பாளர், ம.உ.பா.மையம்,தமிழ்நாடு

புரட்சிகர கலைநிகழ்ச்சி, ம.க.இ.க மையக் கலைகுழு

பதிவர்கள், வாசகர்கள், அனைவரும் வருக

தொடர்புக்கு

முகுந்தன் – 944448 34519
வினவு – 97100 82506

கூடங்குளம் அணு உலையை மூடு பிப்.25 சென்னையில் பொதுக்கூட்டம்

கூடங்குளம் அணு உலையை மூடு பிப்.25 சென்னையில் பொதுக்கூட்டம்

அழைப்பிதழை பெரிதாக பார்க்க அதன் மீது அழுத்தவும்

இந்த அழைப்பிதழ் PDF பெற இங்கு அழுத்தவும்

தகவல் :
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
விவசாயிகள் விடுதலை முன்னணி,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ,
பெண்கள் விடுதலை முன்னணி.

  1. அய்யோ,இந்தியன். தாங்கள் அவசியம் பொதுக்கூட்த்திற்கு செல்லவேண்டும்.தங்கள் பதிவுகளுக்கு கேள்வியும் பதிலும் கிடைக்கும் கண்டிப்பாக செல்லக….

  2. இந்தியன்னு பெருவச்சுகிட்டு இந்திய நாட்டு மக்களின் உயிர ஏலம் விடறியேப்பா.லட்ச ரூபா பந்தயத்துக்கு, எத்தன தலைமுறையை பாதிக்கும் என்று யோசிக்காம பந்தயம் கட்ரியப்பு.

    • அன்பு சகோதரி ,

      முதலில் என்னுடைய பெயரில் யாரோ , ஏலம் விட்டு இருக்கிறார்கள் . தயை கூர்ந்து நீங்கள் அதை நம்ப வேண்டாம் . இரண்டாவது கருத்துகள் என்னுடையது . அணுமின் நிலையம் குறித்த எனது கருத்துகளை பாருங்கள் ..
      http://naanoruindian@blogspot.com
      நன்றி

    • வேணீ அவர்களே…. அணூ உலை வருவது உறுதி….அப்பிடி ஆனா…நீங்க யெல்லாம் மின்சாரமே உபயோகிக்க கூடாது. யென்னா நம்ம் யெல்லாம் மாணமுள்ள ஆளூ இல்ல???

      • @Indian. தற்போது 2% மின்சாரமே அணு உலை மூலம் உற்பத்தி செய்யபடுகிறது. அணு உலையை ஆதரிப்பவர்கள் அந்த 2% சதவீதத்தை மட்டுமே பயன்படுத்தவும்.

      • இந்தியன் அவர்களே… அணு உலை வந்தால் உயிருக்கே உத்திரவாதம் இருக்காது. பிறகு பார்க்கலாம் மானத்தைப் பற்றி. மக்களுக்கு பாதிப்பில்லாத மின்சாரம் வேண்டும் என்பதுதான் நாம் செய்யவேண்டியது. அதுக்கு அணுஉலை இல்லாமல் மற்ற முறையில் மின்சாரம் தயாரிக்கலாமே.

  3. அழைப்பிதழில் அனைத்து பாயிண்ட்டும் ஆணித்தரம்! ஆனா அந்த எரிமலை மேட்டர்தான் கொஞ்சம் இடிக்கிறது! அப்படி எரிமலை இருக்குதுனா அந்த ஏரியா மக்கள் வாழவே தகுதியற்றதாகி விடுமே!

  4. அணு உலை இல்லாமல் இனி மின்சாரம் இல்லை. உலகம் முழுவதும் அதிக அலவு மின்சாரம் அணு உலை மூலமே தயாரிக்கப்ப்படுகிறது. அமெரிக்க ஏகாதிபத்திய கைக்கூலிகளுக்கு அடிமை ஆகாதீர்கள். உதய குமாரும் கிருத்துவ பாதிரிகளும் அமெரிக்க ஏஜன்டாக செயல் படுகிறார்கள்.

    • அணைத்து வளர்ந்த நாடுகளும் படிப்படியாக அணு உலைகளை மூட முடிவு எடுத்துள்ளார்கள்.

  5. தமிழர்களைப் பற்றிய உணர்வே இல்லாத அரசிடம் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம்.தமிழகத்தைச் சுடுகாடாக உள்ள ஒரு திட்டமே அணு உலை திட்டம். நாங்கள் கேட்பது மின்சாரம்தான்.ஆனால் எங்களை அழித்து அரசும் அதில் குளிர்காயும் முதலைகளும் திட்டமிடுவதென்பது கூட்டணிக் கொள்ளை. ஆகவே புரிந்துக் கொண்டு நாம் செயல்படுவோம். கூடுவோம்,இணைவோம். வெற்றி நமக்கே! அணு உலை வேண்டாம். நாம் அல்லல் படவும் வேண்டாம்.

  6. மின்சாரத் தேவையில் நாடு தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில், ‘அணு மின்சாரம் வேண்டாம்’ என்று சொல்வதை யாரும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. ஆனால் சில கட்சிகளும், அமைப்புகளும் அணுமின்சாரத் தயாரிப்பை எதிர்த்து வருகின்றன. கூடன்குளம் போராட்டம் நமத்துப் போய்விட்டது. இடிந்தகரை, கூடன்குளம் பகுதியில் உள்ளவர்களில் சிலரைத் தவிர, குறிப்பாக கிறிஸ்தவர்களைத் தவிர, அந்தப் போராட்டத்தைத் தமிழகத்தில் வேறு யாரும் ஆதரிக்கவில்லை.

    வைகோ, தொல் திருமாவளவன் போன்ற சுண்டைக்காய் கட்சிகளின் தலைவர்கள் எல்லாம் போராட்டத்தை ஊதி விட்டுப் பார்த்தனர். ‘தாம்பரத்தைத் தாண்டாத நாடகங்கள்’ என்று சென்னை சபாக்களில் நடந்த நாடகங்களை எம்.ஆர். ராதா கிண்டல் செய்தது மாதிரி, கூடன்குளம் போராட்டம் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தைக் கூடத் தாண்டவில்லை.

    உலகமெங்கும் நூற்றுக்கும் மேற்பட்ட அணுமின் உலைகள் – ஜப்பான் உட்பட – செயல்பட்டு வருகின்றன. செர்னோபில் விபத்தைக் காட்டி இவர்கள் போடும் அணுமின்சாரப் பூச்சாண்டி பயம் – அர்த்தமற்றது. பிரிட்டீஷ் இளவரசி டயானா சென்ற கார் ஃப்ரான்ஸில் ஒரு சுரங்கப் பாதையில்தான் விபத்துக்குள்ளானது. அதற்காக உலகம் பூராவும் உள்ள சுரங்கப் பாதைகளை இடித்து விடவா முடியும்?

    கல்பாக்கம் அணு மின்சாரத்தைத் தமிழகம் பல ஆண்டுகளாகப் பயன்படுத்தி வருகிறது. உதயகுமாரும், அவரது கட்சிக்காரர்களும் கூட, கல்பாக்கம் அணு மின்சாரத்தைப் பயன்படுத்திதான் கல்பாக்கத்துக்கும், கூடன்குளத்துக்கும் எதிராகக் கூட்டம் போட்டுப் பேச முடிகிறது. போராட்டத்தை ஆரம்பத்திலேயே ஒடுக்க வேண்டும்.

    மத்திய நிபுணர் குழு : நீங்க யாரும் பயப்படத் தேவையே இல்லை. உங்களுக்கு எந்தவித ஆபத்தும் வராம நாங்க பார்த்துக்கறோம். எங்களை நம்புங்க.

    எதிர்ப்பாளர்கள் குழு : அணு உலையாலே ஆபத்து உண்டுன்னு சொல்றவங்க பேச்சை நம்பறதா, உங்க பேச்சை நம்பறதா? நீங்க அவங்களை விட அறிவாளிகளா? அப்படின்னா, மொதல்லே நாங்க கேக்கற எல்லா கேள்விகளுக்கும் நியாயமான பதில் சொல்லுங்க.

    ம.நி. குழு : சரி. பதில் சொன்ன பிறகு நாங்க வேலையை ஆரம்பிக்கலாம் இல்லையா?

    எதிர் குழு : அதெப்படி? பதில் சொன்ன பிறகு, புது சந்தேகங்கள் வரும் இல்லே? அதுக்கும் பதில் சொன்ன பிறகுதான், அடுத்த கட்ட கேள்விகளைக் கேட்போம்.

    ம.நி. குழு : சரி. கேளுங்க.

    எதிர் குழு : இந்த அணு உலையை எதுக்காக கூடன்குளத்திலே ஆரம்பிக்கிறீங்க? ஏன் கூடுவாஞ்சேரியிலே ஆரம்பிக்கலை? அதை விடுங்க. இந்தியாவிலே வேறே இடமே இல்லையா? இந்தியாவிலே இருக்கிற எல்லா மக்களும் அணுக்கழிவு பிரச்சனை இல்லாம நிம்மதியா இருக்கும்போது, நாங்க மட்டும் இதுலே மாட்டிக்கணுமா?

    ம.நி. குழு : அப்படியெல்லாம் இல்லை. நிபுணத்துவம் பெற்ற விஞ்ஞானிகள் பல விஷயங்களையும் ஆராய்ஞ்சுதான் இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்திருக்காங்க.

    எதிர் குழு : நிபுணத்துவம் பெற்ற விஞ்ஞானிகள்னு மொட்டையா சொன்னா நம்பிட முடியுமா? யார் அவங்க? அவங்க பயோ-டேட்டா எங்களுக்கு வேணும். எந்த காலேஜ்லே படிச்சாங்க? சொத்துக் கணக்கு விவரம் என்ன? எத்தனை வருஷமா வருமான வரி கட்டறாங்க? ஏன் அவங்க டாக்டராகவோ வக்கீலாகவோ ஆகாம விஞ்ஞானி ஆனாங்க? அப்படி என்ன எங்க மேலே விரோதம்? எல்லாம் தெரியணும்.

    ம.நி. குழு : இவ்வளவுதானே? எல்லா விவரத்தையும் கொடுக்கிறோம்.

    எதிர் குழு : இந்த அணு உலையாலே ஆபத்து வருமா வராதான்னு இந்தியா முழுவதும் ஜாதி – மத அடிப்படையிலே கருத்துக் கணிப்பு நடத்தணும். 2/3 மெஜாரிட்டி இல்லாம நீங்க வேலையை ஆரம்பிக்கக் கூடாது.

    ம.நி. குழு : வந்து… காலா காலத்திலே ஆரம்பிக்கலைன்னா ஆபத்து.

    எதிர் குழு : ஆரம்பிக்கலைன்னாலே ஆபத்துன்னா, ஆரம்பிச்சா எவ்வளவு ஆபத்து வரும்? சரி, சூரிய கிரகணம், சந்திர கிரகணம் வரும்போது, அதனாலே அணு உலைக்கு ஆபத்து வருமா?

    ம.நி. குழு : அதுக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை.

    எதிர் குழு : சம்பந்தமில்லாம எப்படி இருக்க முடியும்? நாள் தவறாம மத்தியானம் 12.30 மணிக்கு அணு உலைக்கு நேர்மேலேதான் சூரியன் வருது. கிரகண காலத்திலே சூரியனோட கிரணங்கள் அணு உலை மேலே நேரடியாப் பாய்ஞ்சா, சூரியனுக்கே கூட ஆபத்து வரலாம். அதன் விளைவாக சூரிய ஒளி குறைஞ்சு போச்சுன்னா எவ்வளவு பிரச்சனை . மக்கள் 24 மணி நேரமும் இருட்டிலே கஷ்டப்படணுமா? இது சம்பந்தமா வானியல் நிபுணர்கள் கிட்டேயிருந்து நோ-அப்ஜெக்ஷன் சர்டிஃபிகேட் வாங்கிட்டு வாங்க

    ம.நி. குழு : சரி வாங்கிடறோம்.

    எதிர் குழு : திடீர்னு பின்லேடன் மாதிரி பயங்கரவாதிகள் அணு மின் நிலையத்துக்குள்ளே நுழைஞ்சுட்டா, அவங்க கிட்டேயிருந்து அணு உலையை எப்படிக் காப்பாத்துவீங்க? அமெரிக்க ரெட்டை கோபுரத்துக்கு ஏற்பட்ட கதி அணுமின் நிலையத்துக்கு ஏற்பட்டா எங்க கதி என்ன? சொல்லும்போதே எவ்வளவு பயமாயிருக்குது தெரியுமா?

    ம.நி. குழு : யாரும் உள்ளே நுழையாதபடி தக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்குது.

    எதிர் குழு : பாதுகாப்புன்னு வாயாலே சொன்னா போதாது. இந்திய ராணுவத்திலே மூன்றில் ஒரு பகுதியை கூடன்குளத்திலே குடி அமர்த்தணும்.

    ம.நி. குழு : ஏற்பாடு பண்றோம்.

    எதிர் குழு : அவ்வளவு ராணுவத்தினர் இங்கே வந்துட்டா, எல்லைப் பகுதிக்கு ஆபத்து வராதா? அதைப் பத்தி யோசிக்காம, ஏற்பாடு பண்றோம்னு உடனே சொல்றீங்களே?

    ம.நி. குழு : யோசிச்சு, உரிய நடவடிக்கை எடுக்கறோம்.

    எதிர் குழு : இந்த தியாகத்துக்காக கூடன்குள மக்களுக்கும் அவங்க வாரிசுகளுக்கும் நூறு வருஷம் இலவச மின்சாரம், இலவச பெட்ரோல், டீஸல், டெலிஃபோன் கொடுக்க சம்மதிச்சு ஒப்பந்தம் போடணும். ஒப்பந்தத்திலே 25000 பேர் சாட்சி கையெழுத்துப் போடணும். அப்பதான் எங்களுக்கு ஓரளவு நம்பிக்கை வரும்.

    ம.நி. குழு : சரி, இந்த கோரிக்கையையும் கவனிக்கிறோம்.

    எதிர் குழு : அணு உலை வர்றதாலே நிலத்தடி நீருக்கு பாதிப்பு வரலாமோன்னு சந்தேகமா இருக்குது. அதனாலே, புவியியல் நிபுணர்களைச் சந்திச்சு அவங்க கிட்டேயும் இதே மாதிரி கேள்விகள் கேட்போம். 12335 கேள்விகள் ரெடியா இருக்குது.

    ம.நி. குழு : அது உங்க உரிமையாச்சே. தாராளமா கேக்கலாம்.

    எதிர் குழு : தீபாவளி டைம்லே ஆட்டம் பாம் பட்டாசு வெடிக்கும்போது, அந்தப் புகை அணு உலைக்குள்ளே நுழைஞ்சுட்டா விபரீதம் ஏற்படுமா?

    ம.நி. குழு : ஊஹும்.

    எதிர் குழு : அதைச் சொல்றதுக்கு நீங்க யார்? நாங்க கேட்டா, உடனே நீங்களே பதில் சொல்லிடறதா? சிவகாசி பட்டாசு தயாரிப்பாளர்களோட கருத்தை விஞ்ஞானிகள் ஆராய்ஞ்சு அறிக்கையை எங்களுக்கு அனுப்பட்டும். அந்த அறிக்கை சரியான்னு எங்க ‘எதிர்ப்பு நிபுணர்கள் குழு’ செக் பண்ணும்.

    ம.நி. குழு : சரி…

    எதிர் குழு : அணு உலைக்குத் தேவையான யுரேனியம், நைட்ரஜன், ஆக்ஸிஜன், கார்பன்டை ஆக்ஸைடு இதெல்லாம் எப்படி கொண்டு வருவீங்க? லாரியிலா, பஸ்லேயா? வண்டி நம்பர் என்ன? வழியிலே காஸ் சிலிண்டர் லாரி மேலே மோதி ஆக்ஸிடெண்ட் ஆகி, அணுக் கதிர்கள் வெளியே பரவிட்டா என்ன பண்ணுவீங்க?

    ம.நி. குழு : அதெல்லாம் விஞ்ஞானிகள் பாத்துக்குவாங்க.

    எதிர் குழு : அந்த நேரத்திலே திடீர்னு விஞ்ஞானிகள் கிடைக்காமப் போயிடலாம். காத்துல பரவற அணுக் கதிர்களைப் பிடிச்சு திருப்பி அனுப்ப, தெருவிலே ஒவ்வொரு டிராஃபிக் கான்ஸ்டபிளுக்குப் பக்கத்திலேயும் ஒரு விஞ்ஞானியை நிறுத்தணும்.

    ம.நி. குழு : இதெல்லாம் முடியுமான்னு…

    எதிர் குழு : இது கூட முடியாதுன்னா எப்படி? எங்களை ஏமாத்தி அணு உலை கொண்டு வரச் சதி பண்றீங்க! உங்க கூட பேச்சுவார்த்தை நடத்தறதிலே அர்த்தமே இல்லை. நாங்க வர்றோம்.

    • //பிரிட்டீஷ் இளவரசி டயானா சென்ற கார் ஃப்ரான்ஸில் ஒரு சுரங்கப் பாதையில்தான் விபத்துக்குள்ளானது. அதற்காக உலகம் பூராவும் உள்ள சுரங்கப் பாதைகளை இடித்து விடவா முடியும்?

      அந்த சுரங்கபாதை தொடர்ந்து பயன்படுத்த படுகிறது. செர்நோபில் நகரில் மக்கள் தொடர்ந்து வசிக்க முடிகிறதா?

      • @ஆனந்த் இவ்ளோ பெரிய உரையாடலில் உங்களுக்கு மறுதலிக்க ஒரே ஒரு பாயிண்ட் தான் கிடைத்திருக்கிறதா ?

    • பெட்மாஸ் லைட்டுதான் வேணுமா? அரிக்கன் எதுவும் வச்சுக்க கூடாதா?

  7. //மின்சாரத் தேவையில் நாடு தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில், ‘அணு மின்சாரம் வேண்டாம்’ என்று சொல்வதை யாரும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. ஆனால் சில கட்சிகளும், அமைப்புகளும் அணுமின்சாரத் தயாரிப்பை எதிர்த்து வருகின்றன. கூடன்குளம் போராட்டம் நமத்துப் போய்விட்டது. இடிந்தகரை, கூடன்குளம் பகுதியில் உள்ளவர்களில் சிலரைத் தவிர, குறிப்பாக கிறிஸ்தவர்களைத் தவிர, அந்தப் போராட்டத்தைத் தமிழகத்தில் வேறு யாரும் ஆதரிக்கவில்லை//

    Mr.Indian, some time back in Singhur there was a protest to remove TATA car factory at that time most of the people who where participated where HINDUS at that tiime y didn’t u cry “HINDUS are not allowing the nation to develop”, WHen HINDUS protest its just protest but when Christians or Muslims protest its always “Foreign Conspiracy” …What kind of Logic is this ??? Ok comming to the questions..

    Do you know what questions did the protestors asked the govt (I mean the real questions not ur questions) ?? If yes can u list it here and answer it or criticize the questions..

  8. //அணு உலை இல்லாமல் இனி மின்சாரம் இல்லை. உலகம் முழுவதும் அதிக அலவு மின்சாரம் அணு உலை மூலமே தயாரிக்கப்ப்படுகிறது. அமெரிக்க ஏகாதிபத்திய கைக்கூலிகளுக்கு அடிமை ஆகாதீர்கள். உதய குமாரும் கிருத்துவ பாதிரிகளும் அமெரிக்க ஏஜன்டாக செயல் படுகிறார்கள்.//

    Why u didnt say this when there was a protest in Singhur ??? What u r thinking that INDIA is really a competition to US ?? Also if the Reactor comes the most benifited are US based companies only.. Do not try to a false threat from US they do not need to threat a country like INDIA…

  9. உங்களையும் பார்க்கனும்.

    எப்படி வரணும் என குறித்து தயவுசெய்து காலை 10 மணீக்கு ஒரு போன் பண்ணி சொல்லுங்கள், எனக்கு வழி தெரியாது என்பதால்

    9994500540

  10. உலகில் உள்ள அனைத்து நாடுகளும் அணு மின் நலையங்க்களை மூடப்போகிறது என்பது இந்தியர்களை முட்டாளுக்கும் செயலாகும். ஜெர்மனி ஆஸ்திரேலியா மற்றும் பல மேலை நாடுகளில் அனல் மின்சாரம் தேவையான அளவு தயாரிக்கப்படுகிறது. அதற்கான மூலப் பொருள்கள் கிடைக்கின்றன. தன்னிறைவு பெற்று செயல் படுகின்றன. ஆனால் இந்தியாவில் அனல் மின்சாரத்திற்கான மூலப்பொருள் மற்றும் நீர் மின்சாரத்திற்கான இடங்கள் இல்லை. இதே நிலைதான் சீனாவிலும். அதனால்தான் அங்கு அதிக அளவில் அணுமின்சாரம் தயாரிக்கப்படுகிறது. ஆகையால் நமக்கு அணுமின்சாரம் அவசியம் தேவை. கிருத்துவ பாதிரிகளின் ஏஜன்ட் வேலையை மூளையிலேயே கில்லிஎரியவேண்டும். “பெற்றோ டாலர்களால்” வளம் கொளித்துவரும் சில அரசியல் வாதிகளும் சில “வலை பத்திரிக்கைகளும்” அமெரிக்காவின் டாலருக்கு மயங்கிவிட்டன.

Leave a Reply to ஆனந்த் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க