Friday, May 2, 2025
முகப்புவாழ்க்கைபெண்குருதியில் மலர்ந்த மகளிர் தினம்: மார்ச் 8 திருச்சியில் கூட்டம்!

குருதியில் மலர்ந்த மகளிர் தினம்: மார்ச் 8 திருச்சியில் கூட்டம்!

-

குருதியில் மலர்ந்த மகளிர் தினம்: மார்ச் 8 திருச்சியில் கூட்டம்!

சமூக விடுதலையே! பெண் விடுதலை!

குருதியில் மலர்ந்த அனைத்துலக பெண்கள் தினம்!

அரங்கக் கூட்டம்:
கவிதை, நாடகம், புரட்சிகர கலைநிகழ்ச்சி

நாள்: 8.3.2012, வியாழன்- மாலை 6 மணி
இடம்: கைத்தறி நெசவாளர் கல்யாண மண்டபம்,

தலைமை: தோழர் இந்துமதி, செயலர், பெ.வி.மு, திருச்சி.

சிறப்புரை: ‘மறுகாலனியாக்கச் சூழலில் பெண்கள் மீதான அடக்குமுறையும் அவர்களது விடுதலையும்’

– கவிஞர் தோழர் துரை.சண்முகம்
மக்கள் கலை இலக்கியக் கழகம், சென்னை.

‘பெண்கள் சட்டத்தின் முன் சமமானவர்களா?’

தோழர் மீனாட்சி, உயர்நீதிமன்ற வழக்கறிஞர்
மனித உரிமை பாதுகாப்பு மையம், சென்னை.

பெ.வி.மு-வின் ‘நவீன அடிமைகள்’ நாடகம், ம.க.இ.க மையக் கலைக்குழுவின்  புரட்சிகர கலை நிகழ்ச்சி நடைபெறும்.

கூட்ட ஏற்பாடு: பெண்கள் விடுதலை முன்னணி, திருச்சி.

__________________________________

உழைக்கும் பெண்கள் தமது அடிப்படை உரிமைக்காக போராடி இரத்தம் சிந்திய நாள்!

அரசியல், சமூக, பொருளாதார உரிமைகள் பெறவேண்டி போராடச் சொல்லும் பெண்கள் தினம் மார்ச் -8. இந்த உண்மை மறைக்கப்பட்டு, கோலப்போட்டி, சமையல் போட்டி, அழகிப்போட்டி என பெண்களின் சிந்தனை திட்டமிட்டு திசை திருப்பப்பட்டுள்ளது. இன்று காதலர் தினம் போல பெண்களுக்கு ஏதோ ஒரு பரிசு கொடுத்து வாழ்த்துக்கூறுவது என்று நிறுவனமயப்படுத்தப் பட்டிருக்கிறது.

பெண் வயிற்றில் பிறந்து, பெண்ணால் வளர்க்கப்பட்டு, பெண்ணோடு வாழ்பவர்கள்தான் எனினும், பெண்ணின் துயரங்களையும், விருப்பங்களையும், உணர்வுகளையும் ஆண்கள் தெரிந்து கொள்வதில்லை. தெரிந்து கொள்ள இந்த ஆணாதிக்க சமூகம் விரும்புவதுமில்லை.

இந்த நிலையை மாற்றி பெண்ணுரிமைகளை வென்றெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு மார்ச் -8, 1857இல் நியூயார்க்கில் உழைக்கும் வர்க்கப் பெண்களின் அமைப்புகள் தோன்றி போராட்டங்களை முன்னெடுத்தன. அம்மாநாட்டில் இயற்றப்பட்ட புரட்சிகர தீர்மானங்களும், சட்டத்திருத்தங்கள் மூலமான உரிமைகளையும் முன் வைத்து போராட்டங்கள் நடத்தப்பட்டது. உழைக்கும் பெண்கள் இரத்தம் சிந்தி வென்றெடுத்த இந்த உரிமைகள்தான் இன்று பல நாடுகளிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு சட்டமாக்கப் பட்டிருக்கின்றன. ஆனலும் இன்றைய நம் பெண்களுக்கு போராடி வென்ற பெண்ணிய உரிமைகள் இல்லாமல் போய்விட்டது ஏன்?

பொருளாதார விடுதலைதான் பெண்விடுதலையின் முதல்படி. அப்படிப் பார்த்தால் முன்னெப்போதைக் காட்டிலும் பெண்கள் படிப்பதும், வேலைக்குப் போவதும் அதிகரித்திருக்கிறது. இந்தப் பொருளாதார சுதந்திரம் ஒரு பெண் என்ற முறையில் கூடுதல் சுதந்திரத்தை இவர்களுக்கு வழங்கியுள்ளதா? அல்லது பெண்ண்டிமைத்தனம் புதிய வடிவங்களில் இவர்கள் மீது திணிக்கப்பட்டிருக்கிறதா? இந்த அடிமைத்தனத்தை இன்றைய தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் என்கின்ற மறுகாலனியாக்கச்சூழலில் பெண்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள்? என்ற கேள்விகளுக்கு விடை தேடுவோரையும், பெண்கள் விடுதலையிலும் சமூகவிடுதலையிலும் அக்கறையுள்ள அனைவரையும் அரங்குக்கூட்டத்திற்கு அழைக்கிறோம்.

பெண்கள் விடுதலை முன்னணி

தொடர்புக்கு: தோழர் நிர்மலா, பெ.வி.மு, திருச்சி. செல் 8012421471

_______________________________________________________________

– பெண்கள் விடுதலை முன்னணி, திருச்சி

_______________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்