privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.க"புரட்சித் தலைவி எத்தனை புரட்சித் தலைவியடி!'

“புரட்சித் தலைவி எத்தனை புரட்சித் தலைவியடி!’

-

நமது-எம்ஜிஆர்

27.8.12 அன்று அதிமுக அடிமைகளின் செயற்குழு அல்லிராணி தலைமையில் கூடி, ‘அரசியல் முக்கியத்துவம்’ வாய்ந்த 16 தீர்மானங்கள் நிறைவேற்றியிருக்கிறதாம். சரி அதில் என்ன முக்கியத்துவம் என்று “நமது எம்ஜிஆர்” பத்திரிகையை வாங்கிப் பார்த்தோம்.

நிறுவனர் ஜெயலலிதா என்று தலையில் ஆரம்பித்து வெளியீடு ஸ்ரீ ஜெயா பப்களிகேஷன்ஸ் என்ற வால் வரைக்கும் மொத்தம் 12 பக்கங்களிலும் எங்கெங்கு பார்த்தாலும் ஜெயலலிதாதான். தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான் என்பதையே விஞ்சும் அளவுக்கு துண்டு துக்காணியிலும், சந்து பொந்துகளிலும் இருப்பாள் என்று ரணகளம்தான்.

அந்த இதழில் இன்று மட்டும் கூட்டிப் பார்த்தால் மொத்தம் எழுபது முறை “முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா” என்ற ஜிஞ்சக்கு ஜிஞ்சா வார்த்தை ஓதப்பட்டிருக்கிறது. பதினாறு தீர்மானங்களில் கருணாநிதியை திட்டிய ஒரு தீர்மானத்தைத் தவிர அநேக தீர்மானங்கள் ஜெயாவுக்கு பாராட்டுப்பத்திரம் வாசித்திருப்பவைதான்.  அதில் ஒரு தீர்மானமான “தொலைநோக்கு திட்டம்-2027 வகுத்துத் தந்த முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மாவுக்கு கழக செயற்குழு பாராட்டு” என்று தலைப்பில் ஒரு அம்மா,  பிறகு அதே செய்தி தடித்த மேற்கோளாக வரும் போது அதில் ஒரு அம்மா, அப்புறம் தீர்மானம் குறித்த ஆரம்ப பத்தி முன்னுரையில் பதவி ஏற்றது குறித்த ஒரு அம்மா, தீர்மானத்தின் இறுதியில் நன்றி தெரிவித்து ஒரு அம்மா என்று இருக்கின்றன.

எல்லாத் தீர்மானங்களையும் அடிமை இ. மதுசூதனன், கழக அவைத் தலைவர் முன்மொழிய, அனைத்து செயற்குழு உறுப்பினர்களும் வழிமொழிபவர்களாக வருகின்றது. அந்த வகையில் மதுசூதனன் பதினாறு முறை வந்தாலும் அது குட்டி எழுத்துருவில்தான்.

இது போக புகைப்படங்களிலும் அதே அம்மா, செயற்குழுவுக்கு வந்த அம்மாவுக்கு வரவேற்பு, கழக செயற்குழு அம்மா முன்னிலையில் நடந்தாக ஒரு செய்தி, புகைப்படம் இப்படி சர்வமும் அம்மா மயம்தான். ஆனால் எல்லா இடத்திலும் தமிழக முதலமைச்சர் புரட்சித் தலைவர் அம்மா என்று இருக்கிறது என்பதுதான் முக்கியம்.

தமிழக வரலாற்றிலேயே எந்த ஓர் அரசியல் கட்சியும் அடைந்திராத சாதனையான 21 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டை ஆட்சி புரியும் பெருமையை பெற்றுத் தந்த புரட்சித் தலைவி அம்மாவுக்கு நன்றி என்று ஒரு தீர்மானம். ஜால்ராவைக் கூட விதவிதமான மேத்தமேடிக்ஸ் போட்டு எப்படி தினுசு தினுசாக யோசிக்கிறார்கள் பாருங்கள்!

“மத்திய அரசின் சர்வாதிகாரப் போக்கைக் கண்டித்து ஜனநாயக கடமையாற்றும் புரட்சித் தலைவி அம்மாவுக்கு பாராட்டு” என்று ஒரு தீர்மானம்! இதற்கு ஏதாவது பொருள் உண்டா? லெட்டர் போட்டு கண்டிப்பதெல்லாம் ஜனநாயக கடமை என்றால் ஜனநாயகமே உன் விலை என்ன? விட்டால் தமிழக போலிசாரின் சட்டையை பேண்டுக்குள் இன் பண்ண வைத்து ஜனநாயக கடமையாற்றும் அம்மா என்று கூட பாடுவார்களோ, தெரியவில்லை.

அநேகமாக ஜெயலலிதா தன் வாழ்நாளில் அதிகம் கேட்ட, அதிகம் படித்த வார்த்தை என்பது இந்த அம்மா புராணம் மட்டுமாகத்தான் இருக்கும். அதையும் இத்தனை நாள் போராடிக்காமல் அலுக்காமல் மகிழ்ச்சியுடன் கேட்டு, படித்து ரசிக்கிறார் என்றால் அவரது புகழ் போதை என்பது எத்தனை வீரியம் கொண்டதாக இருக்கும்? அந்த புகழை யாராவது சற்றே தீண்டுவது போல தொட்டுவிட்டால் எத்தனை கோபம் இருக்கும்? ஜெயலலிதா ஒரு பாசிஸ்ட்டு என்பதற்கு இந்த ஜால்ரா நார்சிச நோய் ஒரு சான்று.

ஆனால் இந்த பாசிஸ்டின் மீதான அடிமைத்தனத்தை அதிமுக அடிமைகள் மட்டும்தான் வைத்திருக்கிறார்கள் என்பதல்ல. தினமலர், தினமணி போன்ற ஊடக அடிமைகளும் இருக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்க. அதிலும் இன்றைய தினமணியில் அ.தி.முக தீர்மானங்களை முக்கால் பக்கத்திற்கு போட்டிருந்தாலும் அதிலும் முக்கால் இடம் கருணாநிதியை கண்டித்த தீர்மானத்திற்குத்தான்.

ஆக, தினமணியை அம்மா புரட்டும் போது இந்த கண்டிப்பு ஃபோகசை பார்த்து கண்குளிர, மனம் குளிர நம்மை நினைப்பார் என்பதுதான் தினமணி அடிமைகளின் எதிர்பார்ப்பு! இதைத்தான் அம்மாவுக்கு பின்னாடி நிமிர்ந்த நன்னடை, அம்மா பார்க்கும் நேர்கொண்ட பார்வை, அம்மாவைக் கண்டிக்கும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள்! என்று தனது முத்திரை வாக்கியமாக தினமணி போட்டிருக்கிறது போலும்!

  1. அலோ காம்ரேடு.. ஜெ என்ன உம்ம மாதிரி கம்யூனிச கட்சியா நடத்தறார்.. பொதுககுழு அப்பற்ம் செயற்குழு அதன் பிறகு உச்ச கட்ட பொலிட்பீரோன்னு அடுக்கிக்கிட்டுப் போறதுக்கு.. அத ஒரு கச்சின்னும் சொல்ல முடியாது… யோசிச்சுப் பாத்தா, இன்ன பிற முதலாளித்துவ கட்சியிலும் அம்மா மாதிரிதான் நட்த்தறாங்க.. ஆனா சீன் போட்டு முடிவு பண்ணுவாங்க.. உதாரணம் திமுக-கருணா, காங்-சோனியா, பிஜேபி-ஒருcoterie, அட நம்ம மார்க்சிஸ்ட்டு கூட பிரகாஷ்காரட்-இந்துராம் coterie நடத்தறதா ஜெமோகன் அங்கலாய்க்கிறாரே…socalled தத்துவங்கள் இசங்கள் காலாவதியான நேரம் இது.. கம்யூனிசம் ஒண்ணையும் பொறட்டல பொறட்ட முடியல.. மக்களும் வெறுத்துப் போய் அம்மாவுக்கு மிருக மெஜாரிட்டி கொடுத்துட்டாங்க.. ஆக அம்மாவ குத்தம் சொல்லாதிக… மக்கள்தான் விரும்பறாங்க.. அதாவது ‘இவர் வரவேண்டும் புகழ் பெற வேண்டும்’னு.. ஆக எல்லாம் மக்கள் விருப்பம்தான்.. நீங்க எப்படியும் 2250 ல கணிசமா வளர்ந்துருவிங்க.. அப்ப எல்லாரையும் ஒரு வழி பண்ணலாம்….

  2. எம்ஜியார் கட்சி, ஜெயலலிதா கட்சி, கருணாநிதி கட்சி, ஸ்டாலின் கட்சி,விஜய்காந்த் கட்சி என்றுதான் பெருவாரியான வாக்காளப் பெருமக்கள் அடையாளம் காண்கிறார்கள்.. இவர்களை தவிர்த்து அதிமுக,திமுக,தேமுதிக என்றால் அந்தக் கட்சிகளும் இருக்காது..

  3. “காக்கும் கடவுள் கணேசனை நினை” என்பது போல் அம்மாவை கடவுளாய் பாவித்து துதிப்பாடுகிறார்கள். அம்மா மனிதர்களின் நலன் பற்றி மட்டும் அல்லாமல், கால்நடைகளை பற்றியும் கவலைப்படும் கனிவு கொண்ட தாய் உள்ளம் படைத்தவராம்! கேக்கவே காது கூசுதுங்க.

  4. அம்மா, என்னை காப்பாற்றுங்கள் அம்மா. (இங்கு அம்மா என்று நான் அழைத்திருப்பது என்னைப் பெற்ற அம்மா)

  5. தயக்கம்

    மத்திய வர்க்கத்தின் தயக்கத்தால்

    மறுமலர்ச்சி மறைந்தது

    மனசாட்சியின் தயக்கத்தால்

    மனித நேயம் தளர்ந்தது

    கடமையின் தயக்கத்தால்

    கையுட்டு வளர்ந்தது

    கண்ணியத்தின் தயக்கத்தால்

    காலில் விழும் கலாச்சாரம் வளர்ந்தது

    பத்திரிக்கைகளின் தயக்கத்தால்

    பண்பாடு பழமை யானது

    படித்தவரின் தயக்கத்தால்

    பணமும் பகடை யானது

    காதலரின் தயக்கத்தால்

    கலவி கரை படிந்தது

    காவலரின் தயக்கத்தால்

    காட்டு தர்பார் வளர்ந்தது

    ஏழைகளின் தயக்கத்தால்

    ஏற்ற தாழ்வு அதிகமானது

    ஏந்திளைகளின் தயக்கத்தால்

    ஏவல் தனம் மிகுதியானது

    இங்கே

    தயக்கத்தை வெளிப்படுத்துவதில் மட்டும்

    தயக்கம் தளராமல் போனதால்

    தன்னலம் மட்டும் மிச்சமானது

Leave a Reply to தமிழ் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க