செய்தி : பிரதமர் மன்மோகன் சிங் அரசுக்கு எந்த ஆபத்துமில்லை, மத்திய அரசு நிலையாக உள்ளது, அரசின் பொருளாதாரச் சீர்திருத்தங்களுக்கு காங்கிரஸ் காரிய கமிட்டி முழு ஆதரவு தெரிவித்துள்ளதாக சோனியா காந்தி தெரிவித்தார்.
கமெண்ட் – மத்திய அரசின் நடவடிக்கைகளால் மக்களுக்குத்தான் ஆபத்து!
*
செய்தி : நீர்ப்பாசனத் திட்டத்தில் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து, மகாராஷ்டிர அரசின் துணை முதல்வர் அஜித் பவார் ராஜினாமா செய்துள்ளார்.
கமெண்ட் – கிரிக்கெட் தொழிலுக்கிடையில் வேளாண் துறை மந்திரியாக இருக்கும் சரத்பவாரின் மருமகன் அஜீத் பவார் குடும்ப கவுரவத்தை காப்பாற்றி விட்டார். மாமா விவசாயத்திற்கு மந்திரி, மருமகன் நீர்ப்பாசனத்திற்கு மந்திரி என்றால் விதர்பா விவசாயிகள் ஏன் தற்கொலை செய்ய மாட்டார்கள்?
*
செய்தி : காவிரி நதியில் இருந்து தமிழ்நாட்டுக்கு தினமும் 2 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட கர்நாடகத்துக்கு உத்தரவிட வேண்டுமென்று தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்!
கமெண்ட் – மனுவை வாங்கி தினமும் கால் டிஎம்சி நீரை திறக்க வேண்டுமென்று உச்சநீதிமன்றம் உத்திரவிட அதை கர்நாடகம் மறுக்க அதை மறுத்து தமிழக அரசு மீண்டும் மனு தாக்கல் செய்ய…. உலகம் உருண்டைதானே?
*
செய்தி : சென்னையில் நடைபெற்ற இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியனின் 80வது பிறந்த நாள் விழாவில் அக்கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா பேசும்போது, “உலக கம்யூனிஸ்ட் கட்சிகளில் இன்றுள்ள அறிவாளிகளில் தா.பாண்டியனும் ஒருவர்” என்று பாராட்டினார்.
கமெண்ட் – முழு உலகிலும் நம்பர் ஒன்றில் இடம்பெறவேண்டிய ஜோக் இதுதான்! தா.பாவெல்லாம் கம்யூனிஸ்ட் அறிவாளியாக இருக்கும் பட்சத்தில் உலகில் எங்குமே புரட்சி சாத்தியமில்லை.
*
செய்தி : சென்னை அருகே முட்டுக்காட்டில் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் ஆக்கிரமித்திருந்த அரசு நிலத்தை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை மீட்டனர்.
கமெண்ட் – ப.சிதம்பரத்தின் ஆக்கிரமிப்பில் இருக்கும் மத்திய இந்தியாவை மீட்க மாவோயிஸ்டுகளும், பழங்குடி மக்களும் போராடி வருகின்றனர்.
*
செய்தி : மொத்த மின் உற்பத்தியில் மூன்றில் ஒருபங்கு சென்னைக்கே… 31 மாவட்டங்களுக்கு 5000 மெகாவாட்; சென்னைக்கு 2500 மெகாவாட்.
கமெண்ட் – அமைச்சர்கள், தலைவர்கள், நடிகர்கள், முதலாளிகள் வாழ்வதால் “வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது!”
*
செய்தி : கூடங்குளத்தில் அமைதியான சூழல் உருவானவுடன், அங்கு அரசு அறிவித்துள்ள ரூ.500கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கும் பணிகள் தொடங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
கமெண்ட் – கூடங்குளத்தில் அணு உலை மூடும் வரை அமைதியான சூழல் வராது என்பதால் அரசுக்கு 500 கோடி மிச்சம்தான்.
*
செய்தி : சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் இந்திய அரசின் முடிவு துணிச்சலானது என்று அமெரிக்கா பாராட்டி உள்ளது.
கமெண்ட் – இதையே ”நமது அடிமைகள் திறமைசாலிகள் என்ன நாக்குதான் கொஞ்சம் நீளம் அநியாயத்துக்கு நக்கித்தொலைக்கிறார்கள்…” என்றும் சொல்லலாம்
put the date correctly. then criticize.
நன்றி திருத்தப்பட்டது
தாபா போன்ற அறிவாழிகள் இருந்தால் எங்குமே புரட்சி சாத்தியேமில்லையா??? அய்யோ,,, சீக்கீரமே தாபாவுக்கு சங்கு ஊதிடுவார்கள் போலியிருக்கே!!!!!!!!
///தா.பாவெல்லாம் கம்யூனிஸ்ட் அறிவாளியாக இருக்கும் பட்சத்தில் உலகில் எங்குமே புரட்சி சாத்தியமில்லை//// என்ன வினவு…அஞ்சு வருசமா புரட்சி வந்துடும் வந்துடும்னு சொல்லிட்டிருக்கு…எப்ப ஐயா வரும்…எங்கே வரும்?
கூடங்குளத்தில்,அமைதி திரும்ப ,சுடுகாடு ஆனால், 500 கோடி கிடைக்கும் என அம்மா உத்தரவு!!!!
pathavi moham, panaththin meel peerasai konnda kalaignar, mulayam matrum sarath pawar pondra
aatkal irukkum varai, congress mathiriyana aatchiyai unmayana, unarvu poorvamana PURATCHI
KALAL mattume viratta mudiyum. Puratchiyalarkal innum ready aha villai ena soniya ninaikkindrar polum.