privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்இதர கட்சிகள்வன்னி அரசுவின் பித்தலாட்டத்தை தோலுரிக்கும் தோழர் ஆம்பள்ளி.முனிராஜ்!

வன்னி அரசுவின் பித்தலாட்டத்தை தோலுரிக்கும் தோழர் ஆம்பள்ளி.முனிராஜ்!

-

வன்னி அரசுவின் (விடுதலை சிறுத்தைகள்) பித்தலாட்டங்களை தோலுரிக்கும்
விவசாயிகள் விடுதலை முன்னணி தோழர் ஆம்பள்ளி. மு
னிராஜ்.

அன்பிற்குரியவர்களே,

வம்பர் 7-ம் தேதி மாலை 4.30 மணியிலிருந்து இரவு 10 மணி வரை தருமபுரி மாவட்டம் நாயக்கன்கொட்டாய் அருகிலுள்ள நத்தம், அண்ணா நகர், கொண்டாம்பட்டியிலுள்ள தாழ்த்தப்பட்ட மக்களின் வீடுகள் மீது பா.ம.க. சாதிவெறியர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஊடகங்கள் மற்றும் பல்வேறு கட்சிகளின் பிரச்சாரத்தின் மூலம் நாடே இதை அறிந்தது.

பா.ம.க தான் இத்தாக்குதலை திட்டமிட்டு நடத்தியது. இதை மக்கள் மத்தியிலிருந்து ஆய்வு செய்து, அம்பலப்படுத்தி சுவரொட்டி ஒட்டியும், ஆர்ப்பாட்டம் நடத்தியும் வெளிக்கொண்டு வந்துள்ளோம். நான் இந்த பகுதியில் தங்கி நீண்டகாலமாக செயல்பட்டவன் என்கிற முறையில் இங்குள்ள தாழ்த்தப்பட்ட மக்கள், வன்னிய மக்களை பற்றியும் இன்னபிற சாதியினர் பற்றியும் நன்றாக அறிவேன்.

1980-ல் தோழர் பாலன் இங்கு அரசியல் வேலை செய்துகொண்டிருந்த போதும், பின்னர் அவர் படுகொலை செய்யப்பட்டு தியாகியாகி அவருக்கும் தோழர் அப்புவுக்கும் நாயக்கன்கொட்டாயில் சிலை வைத்த போதும், அதன்பிறகு 1989 வரை அப்பகுதியில் தங்கி அரசியல் வேலைகளை செய்திருக்கிறேன். தோழர்கள் அப்பு, பாலன் சிலை நிறுவும் கமிட்டிக்கு தலைமை பொறுப்பேற்றுள்ளேன். அங்கிருந்த முன்னணி புரட்சியாளர்கள் மற்றும் அனைத்து சாதி உழைக்கும் மக்களுடனும் ஐக்கியப்பட்டு இணைந்து தான் அந்த சிலைகள் நிறுவப்பட்டன. நக்சல்பாரி வரலாறு இம்மாவட்டத்தில் நீண்ட நெடிய துயரம் நிறைந்த பயணம் கொண்டது. இதனை சாதிக் கண்கொண்டு பார்க்கும் வன்னியரசு போன்ற பிழைப்புவாதிகள் தெரிந்திருக்க நியாயமில்லை.

அங்கு சிலைகள் நிறுவப்பட்டதானாலும், இரட்டை குவளை முறையை எதிர்த்த போராட்டமானாலும், கந்துவட்டி கொடுமைகளை எதிர்த்த போராட்டமானாலும் இது போன்ற பல நூறு பிரச்சினைகள் புரட்சிகர அமைப்புகளின் முன்னிலையில் தீர்க்கப்பட்டிருக்கிறது என்றால் அதை எப்போதும் இங்குள்ள தாழ்த்தப்பட்ட மக்கள், வன்னியர்கள், இன்னபிற சாதி உழைக்கும் மக்கள் என அனைவரும் சேர்ந்தே செய்துள்ளனர். சிலை அமைப்பதில் உழைப்பு, உணவு, தண்ணீர்,பொருளாதாரம் அனைத்தும் அனைத்து சாதி மக்களின் உணர்வும், உழைப்பும் தான். அனைத்து சாதி மக்களும் ’தோழர்’  ’தோழர்’  என்கிற ஒரே உணர்வில் தான் செயல்பட்டு வந்தனர்.

உதாரணத்திற்கு, மாரவாடி என்கிற ஊரில் ஒரு தாழ்த்தப்பட்ட உழைப்பாளரின் மனைவியை கந்துவட்டிக்காரன் அடித்து உதைத்த போது அந்த பெண்ணுக்கு கருவே கலைந்து போனது. இந்த கந்துவட்டி கொடுமைக்காரன் தருமபுரியிலுள்ள ரவுடி ரங்கன் என்பவனின் தந்தை. கந்துவட்டிக்காரனின் சைக்கிளை பிடுங்கிக்கொண்டு பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நட்ட ஈடு கொடுத்துவிட்டு சைக்கிளை வாங்கிக்கொள் என்று தோழர் பாலன் தலைமையில் முடிவு செய்து அறிவித்த போது, அதை ஏற்று அவனை மீட்டுக்கொண்டு போனவர் தான் இன்ஸ்பெக்டர் சிவகுரு. இந்த சம்பவத்தில் வன்னியரான அந்த கந்துவட்டிக்காரனை அடித்ததில் முன்னணியில் நின்றவர்கள் வன்னிய மக்கள் தான்.

அத்தகையவர்கள் இன்று தாழ்த்தப்பட்ட மக்களின் வீடுகளை தாக்குகிறார்கள் என்றால் இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் பா.ம.க சாதிவெறியர்களால் தூண்டப்பட்டு வழிநடத்தப்பட்டிருக்கிறார்கள் என்பதே முதன்மையான காரணம். அதே போல தாழ்த்தப்பட்ட மக்களை வி.சி அமைப்பும் தவறாக வழிகாட்டி இழுத்துச்செல்ல முயற்சிக்கிறது. இப்படி தவறாக வழிகாட்டுகிறார்கள் என்பதை புரிந்து கொள்வதற்கு வன்னியரசின்  இந்த  பித்தலாட்டங்களே போதுமானது.

தருமபுரி மாவட்டம் நாயக்கன் கொட்டாய்க்கு அருகிலுள்ள அண்ணா நகரில் வன்னியர்கள் இருப்பதாகவும், அதில் கிருஷ்ணன் என்கிற வன்னியர் இருப்பதாகவும், அவர் தான் இந்த சாதிவெறி தாக்குதலை பின் நின்று நடத்தியதாகவும் அவர் ம.க.இ.க வைச் சேர்ந்தவர் என்றும் வன்னியரசு கூறியுள்ளார்.

அண்ணா நகரில் வன்னியர்கள் இருப்பதாக கூறுவது முதல் பொய். அங்கு தாழ்த்தப்பட்ட மக்களை தவிர வேறு எந்த சாதியினரும் இல்லை. இரண்டாவதாக தருமபுரி மாவட்டத்தில் ம.க.இ.க அமைப்பே இல்லை. வி.வி.மு என்கிற அதன் தோழமை அமைப்புதான் செயல்படுகிறது.

அண்னா நகரில் வி.வி.மு உறுப்பினரோ, ஆதரவாளரோ கூட இல்லை. எனவே இல்லாத ஒரு நபரை இருப்பதாகவும், இல்லாத ஒரு சாதியை இருப்பதாகவும், இல்லாத ஒரு அமைப்பை இருப்பதாகவும் பச்சை பொய்யை கூறுகின்றார் வன்னியரசு. இப்படி அந்த பகுதி பற்றி தெரியாத, நேரடி பரிச்சயம் இல்லாத, மாநிலத்தின் பிற மாவட்ட மக்களுக்கு தவறான தகவலை கொடுத்து பொய் பிரச்சாரம் செய்கிறார்.

இந்த அமைப்பின் தலைமை பொறுப்பில் இத்தகையவர்களும் இருக்கிறார்கள் என்பது அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. உண்மையில் வன்னியரசுக்கு கொஞ்சமாவது நேர்மை, நாணயம் இருக்கிறது என்றால் இதே அண்ணா நகருக்கு வந்து அவர் கூறும் ம.க.இ.க கிருஷ்ணனை காட்டட்டும் பார்க்கலாம். எப்போது வருகிறார் என்று தகவல் கூறினால் நானும் வருகிறேன். சவாலை ஏற்கத் தயாரா ?

இப்படிக்கு

ஆம்பள்ளி.முனிராஜ்,
விவசாயிகள் விடுதலை முன்னணி,
கிருஷ்ணகிரி மாவட்டம்.