privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசமூகம்சாதி – மதம்அக்கிரகாரம், சேரியைப் பிரித்த அரசியல்வாதி யார்?

அக்கிரகாரம், சேரியைப் பிரித்த அரசியல்வாதி யார்?

-

விசுவ ஹிந்து பரிசத் மற்றும் அதனுடைய கிராமக் கோயில் பூசாரிகள் சங்கம் இணைந்து திருச்சியில் ஹிந்து மறுமலர்ச்சி மாநாடு ஒன்றை  ஞாயிற்றுக் கிழமை (03/03/2013) நடத்தியுள்ளன. இம்மாநாட்டில் இதுவரை ‘காமெராவில் சிக்காத’ சாமியார்களும், ‘லெட்டர் பேடு’ கட்சி ஒன்றின் ஏகபோக உரிமையாளரும் அரசியல் ரியல் எஸ்டேட் புரோக்கரும் அக்கட்சியின் ஒரே தலைவரும் ஒரே தொண்டருமான சுப்பிரமணிய சுவாமியும் கலந்து கொண்டுள்ளனர். நாடாளுமன்றத் தேர்தல் வருகிறதல்லவா, எனவே “ஹிந்துக்கள் அனைவரும் ஒன்றாய்ச் சேர்ந்து தீயாய் வேலை பாக்கணும் கொமாரு” என்பதே மாநாட்டின் நோக்கம் போல.

மேற்படி ‘தத்துவ’த்தின் அடிப்படையில் உரையாற்றிய வி.எச்.பியின் அகில உலக ஆலோசகர் வேதாந்தம், ‘சாதி அடிப்படையில் நம்மைப் பிரித்தவர்கள் அரசியல்வாதிகள்’ என்று பேசியுள்ளார். மேலும், “அரசியல்வாதிகள் மக்களுக்கு கடமையைச் சொல்லித் தருவதில்லை. மாறாக போராட சொல்லித் தந்திருக்கிறார்கள். என்றைக்கு கடமையைச் சொல்லித் தருகிறார்களோ அப்போது தான் நாடு சிறப்பாக இருக்கும்” என்றும் உரையாற்றியுள்ளார்.

தண்ணீரில் பூசாரிகள்

பிரம்மாவின் தலையிலிருந்து பார்ப்பானும், காலில் இருந்து சூத்திரனும் தோன்றினர் என்றும் சாதிவாரியான தண்டனைச் சட்ட தொகுப்பான மனுஸ்மிருதியை எழுதிய மனுவும், ‘நான்கு வர்ணங்களையும் நானே படைத்தேன்’ என்றும் ‘வர்ணக் கலப்பு ஏற்படுவது அதர்மம் தலையெடுப்பதாகும்’ என்றும் கீதோபதேசம் சொன்ன கிருஷ்ணனும், சூத்திரன் தவம் செய்யலாகாது என்று சம்பூகனின் தலையைக் கொய்த ராமனும் கேடு கெட்ட அரசியல்வாதிகள் என்று நாங்கள் சொல்லவில்லை; வேதாந்தமே சொல்கிறார். இந்த ‘அரசியல்வாதிகள்’ எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள்? இந்த ‘அரசியல் தலைவர்கள்’ எந்தக் கட்சியினரால் வழிபடப்படுகிறார்கள்?

அக்கிரகாரத்தில் அய்யரும் ஊருக்கு வெளியே சேரியில் பறையரும் வாழ வேண்டும் என்று நாடெங்கும் குறுக்கும் நெடுக்குமாக எல்லைக் கோடுகள் போட்டது அரசியல்வாதிகளென்றால் அவர்கள் தி.மு.கவா அ.தி.மு.கவா அல்லது வேறு எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களென்று வேதாந்தம் விளக்கியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். காற்றின் திசையைக் கூட துல்லியமாக கணக்கிட்டு தலித்துகளைத் தீண்டிய காற்று தம்மைத் தீண்டலாகாது எனும் சாதி அடிப்படையில் குடியிருப்புகளை அமைத்துக் கொடுத்த ‘கருணாநிதி’ யார் என்று வேதாந்தம் சுட்டிக் காட்டியிருக்க வேண்டும்.

மதுரை ஆதீனம் உள்ளிட்ட சைவ மடங்களில் சைவப் பிள்ளைகளே ஆதீனமாய் இருக்க வேண்டுமென்றும், காஞ்சி (‘கும்மோண’) மடத்துக்கு ஸமர்த்தப் பார்பனர்களே தலைமையேற்க வேண்டுமென்றும் மரபுகளை ஏற்படுத்திய அரசியல்வாதியின் பெயர் என்ன ஜான் பாண்டியனா? ஆகம விதிப்படி கட்டப்பட்ட கோயில்களில் பார்ப்பனர் அல்லாதோர் கருவறைக்குள் நுழையக் கூடாதென்றும், கருவறைக்குள் நுழையும் ‘புனிதமும் சுத்தபத்தமும்’ காஞ்சீபுரம் தேவநாதன் போன்ற தூய பார்ப்பனர்களுக்கே உரித்தானதென்றும் விதிகளை உருவாக்கிய அரசியல்வாதியின் பெயர் என்ன திருமாவளவனா? வேதாந்தம் கொஞ்சம் விரிவாய்ப் பேசியிருக்கலாம்.

ஹிந்துக்கள் எல்லோரும் ஒற்றுமையாய்ச் செயல்பட வேண்டுமென்று வேதாந்தம் விருப்பம் தெரிவித்துள்ளார். அர்ச்சகர் சங்க மாணவர்கள் ஆகமவிதிப்படி அமைந்த கோயில்களில் பணியற்றி ஒற்றுமையாகச் செயல்பட விடாமல் அழகிரியா தடுக்கிறார்? தமிழை நீச பாஷை என்று சொல்லி கருவறைக்குள் நுழைய விடாமல் தடுத்தவர்கள் பெயர் தீட்சிதர்களா இல்லை தீப்பொறி ஆறுமுகமா? வேதாந்தம் குழப்புகிறது. ஆனால், வேதாந்தத்தின் பேச்சைக் கேட்ட கூட்டத்தினர் தெளிவாகவே இருக்கிறார்கள். ஹரியானாவில் மாட்டுத் தோலை உரித்ததற்காக ஐந்து தலித்துகளைக் கொன்று போட்டு தலித்துகளை இந்த ஹிந்து ஜோதியில் எரித்து பொசுக்கும் அரசியல்வாதிகள் விசுவ இந்து பரிஷத்தில் தான் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்தவர்கள் தான் அவர்கள்.

வேதாந்தம் சொன்னபடி ஹிந்துக்களை ஒன்று சேர விடாமல் தடுக்கும்  இழிந்த பெருமைகளுக்கெல்லாம் உரியவர்கள் பாரதம் கண்ட மாபெரும் ரிஷிகளும், பார்ப்பன கடவுளர்களும், அவர்களின் இன்றைய அவதாரங்களான இந்துத்துவ இயக்கத்தினரும் தான். அதனால் தான் இந்த நிலைமைகளுக்குக் காரணமானவர்களின் ரிஷிமூலத்தை வேதாந்தம் கிண்டவுமில்லை,  அந்தப் பழம் பெரும் ‘அரசியல் கட்சியான’ பார்ப்பன இந்து மதத்தின் பெயரைக் கிளரவுமில்லை. உண்மையில் பார்ப்பனிய இலக்கியங்கள் கூறும் ரிஷிமூலத்தின் கதைகள் ஷகிலா படங்களோடு போட்டி போடும் அருகதை கொண்டவை! அதனால்தான் ரிஷிமூலம் பார்க்கக் கூடாது என்று பழமொழியே உருவாக்கியிருக்கிறார்கள்.

ஹிந்துக்கள் கடமையைச் செய்து கொண்டேயிருக்க வேண்டும்; பலன்களை நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா அறுவடை செய்து கொள்ளும் என்கிறார் வேதாந்தம். எது அந்தக் கடமை?

மலமள்ளுவதும், சாவுக்குச் சேதி சொல்வதும், மாட்டுத் தோல் உரிப்பதும், செருப்பு தைப்பதும், முடிவெட்டுவதும்,  சங்கராச்சாரியாவதும் வேதாந்தத்தின் பார்வையில் சரி நிகரான ‘கடமைகள்’. எனவே, ஜனநாயகம், உரிமை என்றெல்லாம் பேசிக் கொண்டிராமல் பஞ்சமன் மலமள்ளிக் கொண்டேயிருக்க வேண்டும்; பார்ப்பனன் சங்கராச்சாரியாகவோ, கலெக்டராகவோ இல்லை என்.ஆர்.ஐயாகவோ வேண்டும்.  அதாவது அவாள் பல்லக்கில் உலா வருவதும், நாம் அந்தப் பல்லக்கை தூக்கி சுமப்பதும்- இதற்குப் பெயர் தான் ‘கடமையாம்’. இதை மறந்து பல்லாக்கில் ஏறும் உரிமையை பிறர் கேட்க ஆரம்பித்தது தான் நாடு சீரழிந்து போனதற்குக் காரணம் என்கிறார் வேதாந்தம்.

இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ் போன்ற இந்துத்துவ அமைப்புகளில் இருக்கும் சொரணை கெட்டவர்கள் அவ்வமைப்புகளில் சேர்ந்து ‘கடமையை’ ஆற்றிக் கொண்டிருப்பது போல் மற்றவர்களும் செய்ய மறுப்பதால் தான், தர்மம் அழிந்து அதர்மம் தலையெடுத்து விட்டது  என்கிறார் வேதாந்தம்.

கூட்டத்தில் பேசிய அக்கீஸ்டு ஜெயேந்திரன், ‘இந்துக்கள் ஒன்றிணைந்தால் அயோத்தியில் ராமர் கோயில் கட்டி விடலாம்’ என்று பேசியுள்ளார். ‘இந்துக்கள் ஒற்றுமையாக இருப்பதன் மூலம்தான் பொறுப்புள்ள அரசு ஏற்படும்’ என்றும் பேசியுள்ளார். அவரவர்க்கு அவரவர் கவலை; சங்கர ராமன் கொலை வழக்கு வேறு மார்ச் 7ம் தேதி விசாரணைக்கு வருகிறது. இருக்கும் அரசோ, நீதிபதியோ பொறுப்பற்றவர்களாக இருந்து தொலைத்தால்?

சரி இந்துக்கள் ஒற்றுமையாக இருப்பது என்பது ஓட்டுப் போடுவதும் ராமர் கோவில் கட்டுவதும்தானா? அக்கிரகாரத்து ஐயர் பெண்ணை சேரியைச் சேர்ந்த கட்டிங்காளையான ஒரு அருந்ததியர் இளைஞனுக்கும், திருவரங்கரத்து ஐயங்கார் பெண்ணை ஒரு பறையருக்கும், இப்படி நாயுடு, முதலியார், ரெட்டியார், செட்டியார் வகையறாக்கள் வன்னியர், தேவர், பள்ளர், நாடார் என்று கலந்தாலும் கூட ‘இந்துக்கள்’ ஒற்றுமையாக ஒன்றிணையலாமே? யார் தடுத்தது? இந்த தடுப்பை தண்டனைகள் மூலம் கட்டிக்காக்கும் அரசியல்வாதிகள் யார்?

போகட்டும், வேதாந்தம் சொல்லியிருப்பதில் முக்கியமானது என்னவென்றால் ‘அரசியல்வாதிகள் கடமையை சொல்லித் தரவில்லை, போராட மட்டும் சொல்லி தந்திருக்கிறார்கள்’ என்பதுதான். இதைப் புரிந்து கொள்வதில் மறைபொருள் ஏதுமில்லை. அதாவது நாட்டில் உள்ள பிரச்சினைகள் பலவற்றுக்கு பல்வேறு பிரிவு மக்களும் போராடுகிறார்கள். இந்தப் போராட்டம்தான் வேதாந்தத்திற்கு எரிச்சலைத் தருகிறது. மக்கள் தமது உரிமைகளுக்கு போராடாமல் பார்ப்பனியம் வகுத்தளித்திருக்கும் கடமையை மட்டும் செய்து வந்தால் நாட்டில் தர்மம் தழைத்தோங்கும் என்பது பார்ப்பனிய வேதாந்தம் தொட்டு இந்துத்துவ வேதாந்தம் வரை குறியாகவும் வெறியாகவும் இருக்கிறார்கள். எனில் இந்த தருமத்தை குழி தோண்டி புதைப்பதில் நாமும் கொலவெறியோடு இருக்கிறோம் என்பதை சங்கபரிவார வானரங்களுக்கு நினைவு படுத்துகிறோம்.

  1. அரசியல்வாதிகள்தான் என்று வேதாந்தம் குழப்புகிறது என்றால்,
    அரசியல்வாதிகளா.. இல்லவே இல்லை என்று சித்தாந்தம் சொதப்புகிறதே..!

  2. // காற்றின் திசையைக் கூட துல்லியமாக கணக்கிட்டு தலித்துகளைத் தீண்டிய காற்று தம்மைத் தீண்டலாகாது எனும் சாதி அடிப்படையில் குடியிருப்புகளை அமைத்துக் கொடுத்த ‘கருணாநிதி’ யார் என்று வேதாந்தம் சுட்டிக் காட்டியிருக்க வேண்டும். //

    ரொம்பவும் புகழப்படாது.. வருசம் பூராவும் காற்று ஒரே திசையிலா அடித்துக் கொண்டிருக்கிறது..?!

      • Mano,

        சேரிக் காற்று ஊருக்குள் வராத விதத்தில் சேரிகள் உருவாக்கப்பட்டன என்பது எவ்வளவு தூரம் உண்மை என்பதுதான் என் கேள்வி.. விவசாயக் கூலிகளாக உழுவதிலிருந்து அறுவடைக்குப் பின் விளைபொருட்களை நில உடமையாளர்கள் வீட்டில் சேர்ப்பது வரை இல்லாத தீட்டும், கலக்காத காற்றும், காற்று அடிப்பதால் கலக்கும் என்ற விசித்திர வாதத்தை எடுத்து கொண்டாலும்,

        வருடத்தில் அந்தந்த பருவ காலத்திற்கேற்ப காற்றின் திசை மாறிக் கொண்டே இருக்கும்.. வடக்கிலிருந்து வாடை, தெற்கிலிருந்து தென்றல், கிழக்கிலிருந்து ஊதைக் காற்று, மேற்கிலிருந்து கூதல் காற்று என்று வருடம் பூராவும் மாற்றி,மாற்றி எல்லாத் திசைகளிலிருந்தும் காற்று அடிக்கிறது.. அடிக்கும் போது இரு பக்கங்களிலும் சாய்ந்தும் அடிப்பதால் சேரிக் காற்று ஊருக்குள் வராமல் இருக்கவேமுடியாது.. இது ஊருக்குள் இருக்கும் அறிவாளிகளுக்கும் தெரியும்..

        பார்ப்பனர்களின் அசட்டுத்தனமான ’தீட்டு’ என்ற பிதற்றலை பல்வேறு விதமான பயன்பாடுகளுக்கு உட்படுத்தும் சாத்தியக்கூறுகளை பயனாளர்கள் நன்றாகவே உணர்ந்திருந்தனர்.. தீட்டு என்ற திரைக்குப் பின் வசதியாக ஒளிந்திருக்கும் நிலப்பிரபுத்துவ சமூகத்தின் நலன்களுக்காகவே, உழைப்பவனையும் விளை நிலத்தையும் முழுமையாக கட்டிப் பிணைக்கும் வகையில், ஊருக்கு வெளியில் இருக்கும் விளை நிலங்களுக்கருகேயே 24 மணிநேர விவசாய சேவைக்கும், பயிர்க் காவலுக்கும் வசதியாக சேரிகள் பேணப்பட்டன..

  3. அரசியல்வாதி எண்றூ வெதாந்த்தம் சொல்லி இருப்பது பி.ஜெ.பி கும்பலைதான்!அய்யங்கார் பெண் பரயனை கல்யாணம் செய்யவதில் பிரச்சனை எதுமில்லை,பணம்நிரைய இருக்கணூம்,

  4. கேக்கரவன் கேனப்பயல இருந்த கேப்பயல நெய் வடியுதும்ப வேதந்த சொல்வது அது மதிரி இருக்கு

  5. Ha Ha Ha , Why agraharam Pen parayar payani kalyanam saiyanum ? Why not Agraharam Payan oru Muslim pennai kalyanam saiyakudathu – Enru Neengal ezuthakudathu ?

    Why oru Christian pen, oru muslim payani kalyanam pann kudathunu ezuthakudathu ?

    You do not have guts to place an article – leave an article – just a line in any of your postings . I am sure on it. The Main problem we all need to join our hands and fight is against corruption and punishment to those who were involved in looting public funds, justice to females, kids suffering with various tortures in their life and Free items distribution by political party from the public funds !!!. Concentrate on major issues, i am sure, people will follow you and support you. Regards,

    • “ஹிந்துக்கள் எல்லோரும் ஒற்றுமையாய்ச் செயல்பட வேண்டுமென்று வேதாந்தம் விருப்பம் தெரிவித்துள்ளார்.”

      அய்யா ராம், ஒரு முஸ்லிம் பெண்ணையோ அல்லது கிருத்துவப் பெண்ணையோ ஒரு அக்கிரகாரப் பையன் திருமணம் செய்வதால் வேதாந்தத்தின் மேற்படி ஆசை நிறைவேறுமா?
      விதண்டவாதம் (வேதாந்தத்தைப் போல்) பேசாதீர்கள்.
      முதலில் இந்து முண்ணனி ராம கோபால அய்யரையும், நாவிதர் தொழில் செய்த இந்து மக்கள் கட்சி அர்ஜீன் சம்பத்தையும் ஒரே இலையில் ஒன்றாய் அமர்ந்து சாப்பிட்டு ஒற்றுமையைக் காட்டச் சொல்லுங்கள் பார்ப்போம். பிறகு உங்கள் ஆசையைப் பற்றி பேசுவோம்.

  6. அக்கிரகாரத்து ஐயர் பெண்ணை சேரியைச் சேர்ந்த கட்டிங்காளையான ஒரு அருந்ததியர் இளைஞனுக்கும், திருவரங்கரத்து ஐயங்கார் பெண்ணை ஒரு பறையருக்கும், இப்படி நாயுடு, முதலியார், ரெட்டியார், செட்டியார் வகையறாக்கள் வன்னியர், தேவர், பள்ளர், நாடார் என்று கலந்தாலும் கூட ‘இந்துக்கள்’ ஒற்றுமையாக ஒன்றிணையலாமே?——அம்பிகளுக்கு புரிந்தால் சரி……….

    • அதுக்குத்தான் எல்லோரும் முதலில் பூணூல் போட்டுண்டு, வெஜிடேரியன் அம்பிகளா மாறுங்கோன்றேன்.. அப்பறம் தூர்த்தம்.. எல்லோரும் முதல்ல அதை நிறுத்தணும்.. கட்டிளங்காளையா இல்லாட்டாலும் கட்டிங் காளையா இருக்கப்படாது..

    • ஹரி சார், இது சவாலா அல்லது சவடாலா? ஏன் நீங்களே இதை ஆரம்பித்து வையுங்களேன். அவர்கள் சரியென்றால் உங்களை எங்கே என்று தேடுவது?

  7. இந்துக்களில் உள்ள பல்வேறு சாதியினரும் கலப்புத் திருமணத்தின் மூலம் இணைவதைத் தடுப்பது பார்ப்பனக் கும்பல் மட்டுமே என்று சொல்வது அறியாமை அல்லது அயோக்கியத்தனம்.இன்று இந்தக் கட்டுரையில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள கருணாநிதி,அழகிரி, திருமா,ஜான் பாண்டியன் போன்ற வினவின் புரட்சியாளர்கள் சாதி மீறிய கலப்புத் திருமணங்கள் நடக்கவேண்டுமென்று ஒற்றைக் காலில் நிற்கிறார்களா என்ன ?இவர்களும் கேவலமான சாதியவாதிகள் தான்.வினவுக்கு இது ஏன் புரியவில்லை ?

    • பல பேருக்கு தமிழில் எழுதி இருப்பதே கூட புரிய மாட்டேங்குதே.!

  8. இந்த தருமத்தை குழி தோண்டி புதைப்பதில் நாமும் கொலவெறியோடு இருக்கிறோம் என்பதை சங்கபரிவார வானரங்களுக்கு நினைவு படுத்துகிறோம்…. அப்படியா??? உன்னால ஒண்ணும் புடுங்க முடியாது… கீழ்சாதிக்கு எதிரி கீழிசாதித்தான்….. ஒரு பாட்டில் சாராயும் குடுத்தான் —- அவன் அப்பனை கூட வெட்டுவான்… அவனுங்களுக்கு நீ வக்காலத்து வாங்குற. வெக்கமே இல்லாம… தூ……..

  9. வினவு,

    தாழ்த்தப்பட்டவர்களிலேயே மிகவும் கீழ்மட்டத்தில், சமூகத்தால் மோசமான ஒடுக்குமுறைக்கு உள்ளாகிக் கொண்டிருக்கும் புதிரை வண்ணார்களைப் பற்றி ஒரு ஆய்வுக் கட்டுரை வெளியிடுமாறு வேண்டுகிறேன்.. தமிழகத்தில் சுமார் ஐம்பாதாயிரத்துக்குள் இருக்கும் இவர்களுக்கென்று ஒரு அமைப்போ, கட்சியோ இல்லையென்று தோன்றுகிறது.. ஒவ்வொரு கிராமத்திலும் அதிகபட்சம் ஒரிரு குடும்பங்களாக பிரிந்து கிடக்கும் இவர்களின் வாழ்வை அரசு நினைத்தால் மிகக் குறுகிய காலத்தில் மேம்படுத்தமுடியும்..

    இணையத்தில் இன்று காண நேர்ந்த ஒரு கட்டுரை :

    http://thaiammal.blogspot.in/2012/07/blog-post_18.html#!/2012/07/blog-post_18.html

  10. ஏ, இண்டியன்,உன்னப் பார்த்தா இண்டியன் மாதிரி தெரியலையே!ஆர்.எஸ்.எஸ்.தலைவன் மோகன் பாகவத் கருதுப்படி நீ ஒரு பாரதன்.பாரதத்தில்தான் இந்து தர்மம் இருக்கிறது என்கிறான் பாகவத்.சாதியை உருவாக்கியவனும் பாப்பாந்தான்,இப்ப கீழ் சாதின்னு பேசுறவனும் பாப்பாந்தான்.உன்னோட எழுத்தில சாதி துவேசம் எப்படி கொப்பளிக்குது பாத்தியா.சாதிக் கொடுமைகளை எதிர்கொள்கிறவர்கள் பார்ப்பன சனாதன இந்து (அ)தர்மத்தை குழி தோண்டிபுதைக்கும் போது இண்டியன்,பாரதன் எல்லாத்தையும் சேர்த்துத்தான் புதைப்போம்.வலையில தெனாவெட்டு காட்டலாம், நேர்ல நிலையழிஞ்சு போவ ஜாக்ரத!

  11. Mr Indian,Either you change your language or change your pet name.You people wanted to keep the status quo Is it not?As long as those lower caste people fight with each other,you will be happy.We want to educate them.What is your problem?Why you are furious?Because you do not want to come down from your pedestal.We are not ashamed about the ignorance of the lower castes.Only you should be ashamed about your selfish nature.

  12. தாழ்த்தபட்டவர்களின் சுயனலம் பலீரெனத்தெரிகிறது! ஏனென்றால் அவர்கள் வன்சகமற்றவர்கள்! முன்னேறிய சாதியினர் கபடநென்சத்தினர்! ஆச்சாரம் என்ற பெயரில் வெளியில் வேஷமிட்டாலும் உள்ளுக்குள் பலர் கீழ்தரமானவர்களே! சண்டாள்ர் தோன்றிய வரலாறு பார்க்கவும் க்ட்ட்ப்://ட்கட்கச்கரியர்.ப்லொக்ச்பொட்.இன்

    இதற்கு மேலும் இந்துமதம், சனாதன தர்மம் என்று பேசினால் தர்ம அடி வாஙகவேண்டியதுதான்!

  13. வினவு,
    இது ஒரு பாரபட்சமான கட்டுரையாகத்தெரிகிறது…
    பிராமனப்பெண்களை தலித் மணக்க வேண்டும் என்பது போல் எழுதியுள்ளீர்கள்…

    பிராமன சாதியில் பிறந்த ஆண்கள் மற்ற சாதிப்பெண்களை மனக்கலாம் “என்றும்” எழுதாததால் உங்கள் சாதி எதிர்ப்புக்கட்டுரை ஆணாதிக்க மனப்பான்மையில் எழுதியுள்ளதைப்போன்று தோன்றுகிறது…

    ஒருவேளை நீங்களும் பிராமன சாதியில் பிறந்த ஆண்கள் மனிதர்களே இல்லை என்று நவீன மனு சாஸ்திரம் படைக்கிறீர்களோ?

    இத்தகைய அமைப்பை யார் கண்டுபிடித்தார் என்று witch hunt செய்வதை விட ஆக்கபூர்வமாக எதாவது செய்யலாம் [உதா: அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆதல்]

    இத்தகைய அமைப்பு வெறும் பாரதத்தில் மட்டும் இல்லை:
    http://en.wikipedia.org/wiki/Cagot – France
    http://en.wikipedia.org/wiki/Madhiban – Somalia
    http://en.wikipedia.org/wiki/Burakumin – Japan
    http://en.wikipedia.org/wiki/Karen_people – Myanmar and Thailand

  14. ஓடும் உதிரத்தில் வழியும் கண்ணீரில் ஜாதி தெரிவது இல்லை. பறைச்சி என்பதும் பணத்தி என்பதும் எலும்பினில் இலக்கமிட்டு இருக்கிறதா?

  15. தாழ்த்தப்பட்ட சாதியை உருவாகியதால் பொருளாதார பயன் அடைந்தவர்கள் யார் ?
    நில உடைமையாளர்கள் மற்றும் சிறு தொழில் உரிமையாளர்கள். ஆயரம் வருடங்களுக்கு முன்பு இந்தியாவில் தங்கம் அதிகம். என்கிர்ந்து வந்தது ? தாளதபட்ட மக்களின் உழைப்பை உறிஞ்சி விற்று பணமாக்கபட்டதே

    தாழ்த்தப்பட்ட சாதியை உருவாகியதால் வாழ்க்கை தர பயன் அடைந்தவர்கள் யார் ?
    நில உடைமையாளர்கள் , சிறு தொழில் உரிமையாளர்கள் மற்றும் பிராமணர்கள்
    வீட்டு வேலைக்கு, உடை சுத்தம் , ஊர் சுகாதாரம் அனைத்தும் தாழ்த்தப்பட்ட மக்களே செய்து கொடுத்தார்கள்

    தாழ்த்தப்பட்ட மக்களால் பிராமணர்கள் அடைந்த பலன் ?
    சொகுசான சுகாதாரமான வாழ்க்கை . பொருளாதார ரீதியாக நேரடியாக பலன் இல்லை . வெட்டி அதிகாரம், மமதை மற்றும் பாலியல் ரீதியான ( வெற்று மாரோடு நடக்க சொல்லுதல் ) பலன்கள். கோயில் பூசை என்னும் குல தொழில். ( இதை மறைமுக பொருளாதார பலன் என்று கூறலாம் )

    தாழ்த்தப்பட்ட மக்களால் ஆதிக்க சாதிகள் அடைந்த பலன் என்ன ?
    பொருளாதாரம் மற்றும் சொகுசான வாழ்கை

    பத்தாம் நூற்றாண்டில் கல்வியின் தேவை ?
    ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நிலம்,தொழில் உரிமையாளர்களுக்கு கல்வி தேவை என்னும் நிலை இருந்ததா ? இல்லை
    அவர்களுடைய கணக்கு வழக்குகளை பேண பிராமணர்கள் கிடைத்தார்கள்
    பிராமணர்களுக்கு உடல் உழைப்பில் நாட்டம் இல்லை , மற்றவர்களுக்கு மன உழைப்பில் நாட்டம் இல்லை

    இன்றைய நிலை
    அனைவரின் சொகுசு வாழ்க்கைக்கும் தேவையான வாசிங் மெசின் , டிஷ் வாஷர் கிரைண்டர் போன்றவை வந்து விட்டன.
    கல்வி கற்றால் கை நிறைய சம்பளம் என்றாகி விட்டது.

    பிராமணர்கள் நிலை ( மூன்று பிரிவு )
    கோவில் வழி தொழில் செய்பவர்கள் : இவர்களுக்கு சொகுசாக தொழில் அமைந்த விடுகிறது. இவர்கள் சாதீய அமைப்பை கட்டி காத்தால் தான் சாப்பாட்டிற்கு வழி
    குமாஸ்தாக்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் :- இவர்கள் மாடர்ன் கல்வியின் பயன்பாட்டை அறிந்தவர்கள் , கல்வியின் மூலம் உயர நினைகிறார்கள்.சாதீய இட ஒதுக்கீட்டால் அமைப்பால் பாதிக்கப்பட்டவர்கள்.
    அதிகார மமதை கொண்டவர்கள் :- சாதீய அமைப்பை கட்டி காத்தால் தான் இவர்களுக்கு மதிப்பு

    ஆதிக்க சாதிகளின் நிலை தொடரும் ….

  16. //பொருளாதார ரீதியாக நேரடியாக பலன் இல்லை .// பார்ப்பனர்களும் பொருளாதார ரீதியாக பலன் அடைந்தார்கள். அன்றைய அரசர்களால் நிலங்கள் பார்ப்பனர்களுக்கு தானமாக வழங்கப்பட்டன. மேலும் பூஜை, யாகம், ஹோமம் என்று செய்து சம்பாதித்தார்கள்.

    //மற்றவர்களுக்கு மன உழைப்பில் நாட்டம் இல்லை// மற்றவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

    • //பார்ப்பனர்களும் பொருளாதார ரீதியாக பலன் அடைந்தார்கள். அன்றைய அரசர்களால் நிலங்கள் பார்ப்பனர்களுக்கு தானமாக வழங்கப்பட்டன. மேலும் பூஜை, யாகம், ஹோமம் என்று செய்து சம்பாதித்தார்கள்.//

      I agree

      // மற்றவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.//

      Totally disagree

      There is no need for education. You own land, you can meet your life expectations.

      Pray tell me, after British started/introduced their school system, Why we still have uneducated farmers? Did they discriminate Kavundars/Devars ?

      Or did Brahmins issued a Fatwa like if farmers go to school, they will be expelled from the community?

  17. Messers Raman and Harikumar,under the guise of Kulakalvi thittam thousands of schools were closed by Rajaji.When Kamaraj became CM,he not only reopened closed schools but also opened thousands of new schools Number of schools in TN got doubled during his rule..To arrest drop outs due to poverty only,he started the Midday Meal Scheme.Only after 70s,more and more children from lower castes started going to schools.I am the first graduate (graduated while in service by attending evening college)from my village.I could complete my school education at a nearby town thanks to two free boarding schools run by two wealthy gentlemen.In 50s and 60s only primary schools were there in villages.For studies above 5th standard,one has to go to nearby town.My village was connected by buses only around 1960.Myself and two of my elder brothers could complete school education only through the free boarding schools.My father who was educated only up to 5th std was well aware of value of education.He was a small farmer.Due to his tireless efforts only,we could get into the free boarding schools.No other farmer from my village bothered about educating their children.Only because of self respect movement of Periyar EVR,I could join a private bank which used to appoint only Brahmins and those belonging to the caste of the founders,This bank was subsequently nationalised.

    • //,I could join a private bank which used to appoint only Brahmins and those belonging to the caste of the founders,//

      This is where the flaw in the approach lies.
      Brahmin dominance was opposed and the movement was reasonably successful; this is appreciable.

      But what about the ***caste of founders***; why no one writes / speaks about that?
      Then how can casteism be removed from our society?

      Take for example an article in vinavu on actress trisha: while writing on what she said, vinavu subtly mentions about her caste.
      Court case of all caste people becoming temple priests is a valid scenario where brahminism can be discussed.
      If you consider the actress’s blog as irrelevant, vinavu’s article is even more irrelevant and illogical.

      There is a saying in tamil: kaamaalai kannukku paarppathellam manjal.

      If the objective is equality, one has to be logical and should place sound & relevant arguments.
      If the objective is just brahmin bashing – then anyone can bring in brahminism even for gastric trouble [which anyway is the practice mastered by many tamils].

    • //thousands of schools were closed by Rajaji.//

      This is a news for me. Could you point right URLs for me educate myself?

      //.I could complete my school education at a nearby town thanks to two free boarding schools run by two wealthy gentlemen.//

      What spectrum of community those wealthy gentlemen belong to? FC or BC?

      //only primary schools were there in villages.//

      How many of your villagers finished primary schools?

      //.For studies above 5th standard,one has to go to nearby town.//

      I mom walked 7kms each way to get her PUC

      //He was a small farmer//

      what about his grand father? his grand father’s grand father?
      If your father owned 2 acres,how many acres did your forefathers ruled?

      Brahmins got the nice deal. When they transfer knowledge to their kids it multiplies.
      But for Farmers and business community wealth shrinks when generations get by

      //No other farmer from my village bothered about educating their children//

      Exactly! There was no need for education to fulfill needs of life. And nobody in BC community cared.
      And today education is must to lead a decent life and instead of you compete with Brahmins , you wanted reservation? Why?
      Daliths were denied education and they are entitled for reservation.
      But others were not denied, They simply did not have interest to educate them self.

      //I could join a private bank which used to appoint only Brahmins and those belonging to the caste of the founders//

      Did those Brahmins got job because of their modern education or their vedic skills?
      Those Brahmins saw opportunity earlier than you. They quit their vedic education to get educated in modern syllabus. How is that sin?

      // those belonging to the caste of the founders//
      Business always want the people with right skills. Even muslim kings employed the brahmins. Question here is employable.

      If the caste of the founders had enough people with right skills, they wouldn’t have recruited brahmins.

      And I like to know if the caste of the founders enjoying the reservation.

      Thanks you sir for sharing your experience and perceptive

  18. Mr Raman,Thanks for analysing my comment.I will provide you the links regarding Rajaji.One wealthy gentleman was BC and the another FC.Most of my villagers finished primary school.As you have rightly pointed out the landholdings were subdivided from generation to generation.I do not agree with your view that there was no need to get education for BCs.They were not leading a life with self-sufficiency. For generations,we were denied opportunities.That is why we need reservation.The founders thought that Brahmins were docile people and will not form unions.That was the reason for recruiting Brahmins.The crux of the matter now comes, my dear.Once they got employment in large number,naturally they occupied higher posts.In order to retain the same recruitment policy,Brahmins saw to that no other caste people were recruited.Only because of Periyar”s movement,this situation started changing.Periyar released special supplement of “Viduthalai”daily to tell the world the happenings in this bank.How after changing the recruitment policy the bank could get people from all castes with required skills?The monopoly of Brahmins in the fields of Education,Govt services,judiciary only forced the Non-Brahmins to form Justice Party.Justice Party was the origin for Periyar”s Dravidar Kazhagam and later Dravida Munnetra Kazhagam. The caste of the founders are not enjoying reservation.

    • You forgot one thing,Brahmins have integrity and they wont steal money.

      And we know the situation of the Banks today and the amount of money someone pays to get a loan and the amount if irregularities that happen including PC emptying Indian Bank.

      Nationalise Banks and steal money at once.

      • You are having a wrong opinion about Public Sector Banks.Here and there there would have been wrong doings by certain bank officers.Do not generalise saying that all employees are looting PSBs.PC never emptied Indian Bank.He was the one who saved that bank by releasing additional capital.But for nationalised banks,agricultural and SME sectors would not have grown to this extent.I am telling this after serving a PSB for 37 years.

        • My uncle also served in one and i know how it works especially people who work in advances.

          I am not saying all employees are looting PSBs but there are enough people doing it and PC recapitalized it because it needed recap and why?

          Because he looted it along with Gopalakrishnan.

          He has to save it otherwise there ll be a backlash.

          Obviously National Banks do a job but are doing enough?

    • //I do not agree with your view that there was no need to get education for BCs.They were not leading a life with self-sufficiency//

      You see now after their land is subdivided for generations. Before that they were ruling and using the cheap dalith labor right?

      //For generations,we were denied opportunities//
      Could you be specific on what opportunities are denied?
      When your forefathers ruled land, brahmins ruled education.
      With education what could have been done thousand years ago? Could you enlighten me?
      What kind of education Brahmins received and your forefathers were denied?
      What are all the jobs were available for those educated ?
      In what language those people got educated ?

      What are all the steps your forefathers have taken and how the brahmin community suppressed.

      What I am saying is ,”In agrarian society there was never a need for education and hence your forefathers did not seek education”

      And on those days people were writing maximum poetry .Our kings never had a proper recruitment system or policy.

      //That is why we need reservation//
      Have you guys given up discriminating daliths? if so may be you are eligible.
      I still see two tumbler system. Why do you deserve reservation?

      //The founders thought that Brahmins were docile people and will not form unions.That was the reason for recruiting Brahmins.//
      You are saying Brahmins are recruited by other community and not because of the influence .

      Like US recruiting indian IT engineers.

      //my dear.Once they got employment in large number,naturally they occupied higher posts.In order to retain the same recruitment policy,Brahmins saw to that no other caste people were recruited.//
      Dude I have worked in Nayakar company and thats how every caste people are doing it. I dont see brahmins are different in this.
      //Only because of Periyar”s movement,this situation started changing.Periyar released special supplement of “Viduthalai”daily to tell the world the happenings in this bank.How after changing the recruitment policy the bank could get people from all castes with required skills?//

      So it is the policy of the bank which is not owned by brahmins. you should be blaming the founders of the bank right? Why blame only brahmins ?

      //he monopoly of Brahmins in the fields of Education,Govt services,judiciary only forced the Non-Brahmins to form Justice Party//
      what will you call Monopoly of Kavundars in farming . Shall we put inheritance tax on them ?

      • MrRaman,It seems that you are not having exact idea of landholdings in our villages.95% of villagers are small and marginal farmers(owning one and half to two and half acre of lands).Only 5% may be rich landlords 0wning about 75%of the landholdings in the villages.We are discussing about small and marginal farmers here.Marginal farmer is one who will be working in other farmers” land since his meagre landholding would not be sufficient to sustain him.All family members in a small and marginal farmers” household would be toiling in their own lands.They do not hire agricultural labourers in a big way.Only the rich landlords utilise agri.labourers in large number.

        Have you heard of Manusastra and four varnas mentioned there.Sudras were not allowed to educate themselves.Their only duty is to serve other varnam people such as Brahmins,Kshatriyas and Vysyas.By virtue of the number one position among the varnas,Brahmins were having the monopoly over education(not necessarily modern education)Brahmins made the kings(Kshatriyas)to believe that they are the Gurus.Brahmins were occupying key positions such as Minister or Rajaguru.They made use of their position to retain their monopoly right from Sangam days.

        Social reformers are still fighting to remove the discrimination on the basis of birth.But your view that BCs should not get reservations till the double tumbler is removed may not be a correct one.

        Both the founders of that bank and the Brahmins were blamed.New recruitment policy came into effect only later.

        For your better understanding of our society especially in South India,I would recommend you to read “Mother India”written by an American lady by name Katherine Mayo,who did an intensive study of Indian society prevalent in 1930s.This book published in 1937 is available as ebook under gutenburg.net.acc/ebooks03/0300811h.html

        • All the 4 varnas are always fighting to keep hold of their strength and thats the competitive survival game in picture.

          You say that the brahmins made the kings believe they are the gurus,are the kings idiots?

          You think they did not see reason in what the brahmins told them and not all brahmins were in the kings court,there were lot of poor brahmins too and there still are.

          Shudra is a bad word,used for someone who is good enough only for physical labour,if someone calls you a shudra you should get angry but the word shudra means just that.

          Lot of BCs are not really BC,they did get education and the only thing they did not know were the vedas which only a section of the brahmins could study.

          Reservations are fine but IMO i am grateful that the upper caste have learnt to be tough and competitive and dont rely on the government to survive.

          People dependent upon reservation are just there and nowhere.

          • Yes,the kings were either idiots or brainwashed by Brahmins.Four varnams were not fighting for their due share.The fourth varnam people ie Shudras were not in a position to know that they were also human beings and had self-respect.Even the poor brahmins were given fertile villages as gifts by the kings.If one accepts the four varnams then he is accepting the ridiculous justice on the basis of one”s birth as enunciated in Manusasthra.Shudra means not only manual labourer but also son of a prostitute.For removing this injustice only Periyar EVR fought all his life.BCs do not know Vedas since they were not allowed to learn anything but slavery.Are you aware of the incident quoted in Uttharkand of Ramayana wherein it is stated that Rama,the merciful beheaded a shudra by name Samboogan for his crime of doing penance.Even now,207 Archagar trainees who were trained in Agama sastra by TN Govt were prevented from getting their appointment as Archagars in TN temples since Brahmins got stay order from SC.People eligible for reserved seats also compete in all fields.They are not good for nothing people as you have suggested.

            • I never suggested anybody is good for nothing.

              Shudra doesn’t mean son of a whore,thats added propoganda.

              There were many brahmins who did not have all that wealth,that belonged only to certain ones and not everyone.

              Shudra means farmer,gold smith,iron smith etc etc and all kind of manual labour,Yadava or cow herd is also a shudra which would Krishna also a shudra.

              Not only BCs,except a few most brahmins also cant read the vedas.

              There is nothing for you to accept or not accept the 4 varnas,it is universal fact that you indulge is 4 kinds of occupations.

              Education,Administration,Business/Labour.

              To make a living one needs to do any of this.

              You can hate the brahmins for whatever reason you want,but your periyar and his revolution never had any gas in it as it evident from today’s TN with TasMac flowing and rivers dry.

              • If 4 varnas are accepted and shudras continue to do manual work ,will TASMAC shops be closed and rivers will be overflowing? How on earth you can force 4 varnas which is a anochronism today since occupations depend upon one”s birth according to Varnashrama dharma.Krishna was a yaadhav and Rama was a kshatriya.But both were carrying out the commands given by Brahmins.

                • That is the problem,Krishna became a Kashatriya even though born in a Yadav household,Pandavas led a life doing various occupations in hiding.

                  Anyway these things are not the issue,old hindu texts are nothing demonic as mentioned and they are just sued by everyone for their own progress.

                  What happens is that all communities/castes try to compete for survival all the time with the skills they have?

                  4 communities competing against each other is different from an anarchic situation of individuals fighting amongst themselves,thats all.

                • i told you varna system is already in place,if dmk/admk were not in government,Prohibition wouldn’t have been lifted and river sand smuggling would not have happened.

            • yeah according to you,everyone is an idiot,everyone gets brainwashed.

              They should have listened to you,but what did you have to say? what do you have to say now?

              what ideas have you contributed now? have the slums gone away,has manual scavenging gone away,has scams gone away,has it got better after 1967?

              • Only after 1967,Slum Clearance Board was formed and slum dwellers were provided with pucca houses.There is no manual scavenging in TN now Not only that, there is no rikshaw pulled by men in TN..Scams will be there even when Manuneedhi is implemented and in that scenario,justice will differ based upon one”s birth.

                • yeah and higher the birth,more the punishment.

                  slum clearance board?

                  Neenga mudhalvan padam ellam paakaliya.

                  So,there are no slums today near the cooum?

                  You think these would not have gone if congress stayed in power?

                  Are these

                  • No my dear friend.At least read Manuneedhishastra now before writing further comments about that shastra.Lower the birth ,more punishment.Until 1967 only Congress Govt was there.But they have done nothing for slum dwellers.In any city,slums are growing every day.At least the DMK Govt started the Slum Clearance Board and built tenements throughout the city.Succesive govts should continue the construction and resettlement.

        • // It seems that you are not having exact idea of landholdings in our villages.95% of villagers are small and marginal farmers(owning one and half to two and half acre of lands).Only 5% may be rich landlords 0wning about 75%of the landholdings in the villages.We are discussing about small and marginal farmers here.Marginal farmer is one who will be working in other farmers” land since his meagre landholding would not be sufficient to sustain him.All family members in a small and marginal farmers” household would be toiling in their own lands.They do not hire agricultural labourers in a big way.Only the rich landlords utilise agri.labourers in large number. //

          75% நிலங்கள் 5% நிலச்சுவான்தார்களிடம் இருக்கிறது என்கிறீர்கள்.. நீங்கள் கூறுவதில் உண்மையிருக்கிறது.. ஆனால் இந்த 5% பார்ப்பனர்களா..?! சேரிவாசிகளிடம் நிலம் இருந்ததா..?! அக்கிரகாரம்-சேரி என்ற பதிவில் பார்ப்பனர்களை மட்டும் குற்றம் சாட்டும் நீங்கள், ஊருக்குள் இருக்கும் 5% பெருநிலக்கிழார்கள் மற்றும் மீதியுள்ள குறு நில உடைமையாளர்கள் இவர்களில் பலரும் சேரிவாழ் மக்களைப் போன்றே பார்ப்பனர்களால் கல்வி மறுக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்கள் என்று கூறுவதோடு நிற்காமல், சேரிவாசிகள் மற்ற எல்லோராலும் நடத்தப்படும் விதத்தையும் விவாதிக்கலாமே..

  19. Mr Veeran,You can not find fault with the founders for employing people from their own caste since they were the ones who deployed their capital.Of course,when this bank was nationalised,the entire framework got changed.

    • I know about Kulakkalvi thittam. I am interested to know if Rajaji closed the schools.

      All I read is Kamarajar,The Great, reopened the schools as reference .That is not sufficient for me . I want to see Rajaji closed the schools as a statement.

      Anyone who has more information, please paste the url

  20. There is nothing called kulakalvi thittam,there is no government policy paper on this.

    It was a casual comment by Rajaji when asked what ll the students do in the afternoon.

    He just said,they can help around in the house.

    In our village,there are farms where brahmins kids would do farm work,take the buffaloes to bath,milk the cows,get the coconut from the trees,

    DK/DMk would want everyone to believe that brahmin kids ll go and their IAS officer fathers would coach them to be an IAS at 5-6 years old,

    Athaan enna sonnalum ooru nambuthey,piragu enna prachanai.

    • It was not a casual comment by a CM. To implement the Kulakkalvithittam Rajaji has closed 6000 schools.By virtue of making others to believe that they are the superior caste who originated from the very mouth of Brahma, Brahmins by preventing others from getting education, were having the monopoly in the educational field.At least one”s parent or uncle were in a position to guide the young aspirant.That sort of support was not available for a person belonging to BC.

      • All that is fine but did he give official policy paper called kulakalvi thittam?

        He closed schools due to financial problem in maintaining them and in paying the teachers?

        Brahmins ll always have a monopoly in the field because learning/teaching is their job?

        Just like how Nadars ll keep their business cartels,thevars/vanniyars ll keep their political power and others ll keep their land.

        It is normal.

      • திரு.சூரியன்,

        // To implement the Kulakkalvithittam Rajaji has closed 6000 schools. //

        திரு.ராஜாஜி 1953-ல் சட்டமன்றத்தின் அனுமதி பெற மேற்படி ‘குலக்கல்வி திட்டத்தை’ முன்வைக்கும் முன்பே, சென்னை மாகாணத்தில் மதுவிலக்கால் வரும் வருமான வரியிழப்பை ஈடு செய்ய 6000 பள்ளிகளை ராஜாஜி மூடப் போகிறார் என்ற குற்றசாட்டு எழுந்தது.. இது போன்ற குற்றசாட்டுகளைத் தவிர, 6000 பள்ளிகளை ராஜாஜி மூடினார் என்பதற்கான ஆதாரம் – அரசாணை, அரசு சுற்றறிக்கை என்று – ஏதாவது இருக்கிறதா..?!

        // By virtue of making others to believe that they are the superior caste who originated from the very mouth of Brahma, Brahmins by preventing others from getting education, were having the monopoly in the educational field. //

        பார்ப்பனர்களின் மேட்டிமை உணர்வுக்கு பிரம்மாவின் வாயிலிருந்து வந்தார்கள் என்ற ’நம்பிக்கையை’ விட வேதக் கல்வியும், வேதமுறை வழிபாடுகள், சடங்குகள் தங்கள் கையில் இருக்கிறது என்ற எண்ணம் முக்கிய காரணம்.. வேத பாட சாலைகளில் வேதக் கல்வியை பார்ப்பனர்கள் மட்டுமே (விரும்பினால், செல்வாக்குள்ள சத்ரியர்களும், வைசியர்களும்) கற்க முடிந்தது.. சூத்திரர்களுக்கு வேதக் கல்வி மறுக்கப்பட்டதே தவிர, கல்வி மொத்தமாக மறுக்கப் படவில்லை..

        ஏனெனில் கல்வி பார்ப்பனர்களின் தனியுடமையாக இருக்கவில்லை.. தமிழ், வடமொழி இலக்கியங்களும்; சிற்பம், நாட்டியம், இசை பற்றிய சாஸ்திரங்களும்; பார்ப்பனரல்லாதவர்களுக்கும் கற்க முடிந்தது.. சைவவேளாளர்கள் தமிழ்,வடமொழி சாஸ்திர, இலக்கியங்களில் பாண்டித்யம் பெற்றிருந்தார்கள்.. கம்மாளர்கள் அவர்களுக்குரிய சிற்பம், பொறி, கட்டிடக்கலை தொடர்பான சாத்திர, நூலறிவு பெற்றிருந்தார்கள்.. பாணர்களும், கலைஞர்களுக்கும் இசை-நாடகம்-ஓவியம் போன்றவை தொடர்பான சாத்திர கல்வி இருந்தது.. வள்ளுவர்கள்/பறையர்கள் வானியல்,மருத்துவம் தொடர்பான சாத்திரக் கல்வி பெற்றிருந்தார்கள்.. வேளாண்மை, விவசாய அறிவுக்கு ஒரு சாத்திரம் போதாது.. பொதுவாக, கணிதக் கல்வி எல்லா வகுப்பினருக்கும் கிடைக்கும் வாய்ப்பிருந்தது..

        இவற்றை பார்ப்பனரல்லாதவர்களுக்கு மறுக்கும் அவசியமோ, ஆற்றலோ பார்ப்பனர்களுக்கு இருக்கவில்லை.. கல்வி என்றாலே வேதக் கல்வி என்ற பார்வைதான், பார்ப்பனர்களைத் தவிர அனைவருக்கும் கல்வி மறுக்கப்பட்டது என்ற குற்றசாட்டுக்கு காரணமாயிருக்கிறது..

        வேதக் கல்வி மட்டுமல்லாது, சகல சாத்திரங்களையும் கற்ற பண்டிதர்களும் இருந்தார்கள்/இருக்கிறார்கள் என்பதையும் மறுப்பதற்கில்லை.. வேதக் கல்வியைத் தவிர வேறு கலை-இலக்கிய-தொழில் கல்வி கற்காது, எல்லாம் தெரிந்த ஏகாம்பரங்களாக தங்களை பாவித்துக் கொண்டிருந்த மௌட்டீக, மூடப் பார்ப்பனர்களும் கணிசமான எண்ணிக்கையில் இருந்தார்கள்/இருக்கிறார்கள்.. மீதியுள்ள பெரும்பான்மைப் பார்ப்பனர்கள் எல்லாவற்றிலும் கொஞ்சம் கூடக் குறைய தெரிந்து வைத்துக் கொண்டு வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்..

        ஆக, கல்வி இல்லாத/மறுக்கப்பட்ட தமிழகம் என்ற வாதம் நகைப்பிற்குரியது.. அதே நேரம் எல்லோரும் கல்வி கற்றிருந்தார்கள் என்ற கூற முடியாது.. கல்வி பெற இயலாத அன்றாடங்காய்ச்சிகள் என்ற வர்க்கம் உலகம் முழுதும் உள்ளது..

        • One more thing,paarpanarkal aasiriyara iruntha pozhuthu ellarum govt palikku thaan ponanga,aana ippo thaan govt palli vaathiyaru ellam tution eduthu sambaathikka aarambichutaanga.

              • Are you sure that there are no brahmin teachers in Govt schools?No Govt banished them.Better make sure of your data before levelling charges against Govt school teachers.85% of the students in TN are studying in Govt schools only Do you think students from pvt schools only go for higher studies or for employment?.Are you aware that for the past few years schools run by Corporation of Chennai are showing good results and the top rankers from these schools were sent for free educational tours by TN Govt?.Are you sure about quality of education in all private schools?

              • MrHarikumar,Today”s Hindu carries a news report about one Mr Gnanasampath,who scored 3rd All India Rank in CA.Gnanasampath,born to agricultural labourers in POGALUR,a village near Coimbatore,had to walk a few kilometers and to take a bus to reach his school every day.Sensing his difficulty,his parents sent him to Ellapalayam to live and study with his grandparents.Though they could barely make ends meet,they encouraged him to study.When Gnanasampath chose to pursue Commerce,his uncle ,himslf a graduate,supported his decision and asked him to also take up CA.He did his B.Com in Coimbatore and then his articleship.Recently,when results for the CA exams were announced,Gnanasampath was pleasantly surprised to find that he ranked third in the country.His parents did not really understand the value of a third rank but they know that he had made something out of himself.His uncle,on the other hand,was very excited because he knew how big his achievment was.

                Gnanasampath would have studied only in a Govt school in Ellapalayam .This is the success story from a section of the society whom you call as good for nothing people.

        • \\ குற்றசாட்டுகளைத் தவிர, 6000 பள்ளிகளை ராஜாஜி மூடினார் என்பதற்கான ஆதாரம் – அரசாணை, அரசு சுற்றறிக்கை என்று – ஏதாவது இருக்கிறதா..?!//

          http://www.ror.isrj.net/UploadedData/166.pdf

          Kamaraj removed the vocation based hereditary education policy
          introduced by Rajaji. He reopened the 6000 Schools closed by Rajaji’s government for financial reasons
          and also opened 12,000 new schools.

          • திப்பு,
            சற்று ஆராய்ச்சியின் தரத்தை நோக்கவும்.

            ஆராய்ச்சியாளர்கள் 6000 பள்ளிகள் திரு. ராஜாஜியால் மூடப்பட்டதிற்க்கு விக்கீபீடியாவை ஆதாரமாகக்காட்டியுள்ளார்கள்.
            விக்கிபீடியாவில் இத்தகவலுக்கு எந்த ஆதாரமும் தரப்படவில்லை.

            திரு. காமராசரிடத்தில் உள்ள மதிப்பினால் கூறுகிறேன்…இத்தகைய தலைவர்களைப்பற்றி எழுதும் பொழுது சற்று தரமான ஆராய்ச்சிக்கட்டுரை எழுத வேண்டும்…
            இப்படி குருட்டான் போக்கில் ஆதாரமாகக்காட்டக்கூடாது (இது அந்த இரண்டு ‘ஆராய்ச்சியாளருக்கு’)…

            எனக்கு காமரசர் ஆட்சியைக்காணும் வாய்ப்பு கிட்டாமல் போனாலும், அரசாங்கப்பள்ளியில் படிக்கும் அரிய வாய்ப்பு கிடைத்தது…
            சத்துணவிற்காகவே ஆர்வமாக பள்ளிக்கு வந்த / காலை சாப்பிட வசதியில்லாமல் முதல் வேளை உணவே சத்துணவாக அமைந்தவர்கள் மூலம் ஏழைகள் படும் பாட்டை அறிந்தவன் என்ற முறையில் கூறுகிறேன் – காமராசர் ஒரு பெருந்தலைவர் / முன்னோடி என்பதில் யாரும் சந்தேகப்பட முடியாது…

            ஒரு நல்ல தலைவன் சமூகத்தின் கீழ்மட்டத்தில் இருந்து வளர்ந்தால் அவனுக்கு அவர் படும் பாடு புரியும்…அந்த வகையில் கர்மவீரர் போன்ற தலைவர்கள் வருங்காலத்திலாவது வரவேண்டும்…

            அதே நேர்த்தில் திரு. ராஜாஜியையும் அவர் பிறந்த சாதியால் சற்று அதிகமாகவே சாடுகிறோம் என்று எண்ணுகிறேன்….
            அத்திட்டத்திற்க்கு ஆதரவாக ஓட்டளித்தவர்கள் எல்லாம் பல சாதிகளைச்சேர்ந்தவர்கள்…

            திரு. காமராசரைப்போற்ற யாரையும் தூற்றதேவையில்லை என்பது என் தாழ்மையான கருத்து…

            தமிழ்நாட்டில் பல தொழிற்சாலைகள் உருவாக திரு. சி. சுப்ரமனியமும் ஒரு காரணம்…

            ஒரு விசயம்: இவர்கள் எல்லாரும் யாரையும் தூற்றி, கேவலமாக மேடையில் பேசி அரசியல் பன்னவில்லை….நாமும் கற்றுக்கொள்ளலாம்…

            • வீரன்,
              காமராசரை புகழ்வதற்காக இந்த சுட்டியை கொடுக்கவில்லை.6000 பள்ளிகளை ராசாசி மூடினார் என்பதற்கான ஆதாரமே அது,

              கொடுக்கப்பட்டுள்ள ஆராய்ச்சி கட்டுரை யாரையும் தூற்றவில்லை.அது போல் கட்டுரையில் உள்ள தகவல்களுக்கான மூலம் [source ] என 47 ஆதாரங்கள் கட்டுரையின் கடைசியில் கொடுத்துள்ளார்கள்.அதில் மூன்று மாத்திரமே விக்கிபீடியா மற்றவை ஆதாரபூர்வமானவை.

              • திப்பு,

                ராஜாஜி 6000 பள்ளிகளை மூடினார் என்பதற்கு ஆராய்சிக் கட்டுரை சுட்டும் ஆதாரமும்(Ref 10) நீங்கள் கூறும் 3 விக்கிபீடியா ஆதாரங்களில் ஒன்றுதான்..

                1937-39-ல் ராஜாஜி சென்னை மாகாண பிரதமராக (Premier) இருந்தபோது கொண்டு வந்த மதுவிலக்கால் ஏற்படும் மதுவின் மீதான வரி இழப்பை ஈடு செய்ய 6000 பள்ளிகளை மூடினார் என்பது குற்றசாட்டு.. ஆனால் ராஜாஜி, மதுவின் மீதான வரி வகையிலான வருமான இழப்பை ஈடு செய்ய முதன் முதலா விற்பனை வரியை அறிமுகம் செய்திருக்கிறார்.. 6000 பள்ளிகளை மூட உத்தரவிடும் அரசின் ஆணையோ, சுற்றறிக்கையோ இருப்பதாகவே தெரியவில்லை..!

                மேலும் காமராஜர் மீண்டும் திறக்கும் வரை 6000 பள்ளிகள் மூடப்பட்டிருந்தன என்று கூறுவதற்கான ஆதாரமும் இல்லை.. 2-ம் உலகப்போர் சமயத்தில், 1939-அக்டோபர் முதல் 1946 வரை சென்னை மாகாணம் கவர்னர் ஆட்சியில் இருந்தது.. அதன்பின் டி.பிரகாசம் (ஏப்ரல் 1946 – மார்ச் 1947), ஓமந்தூரார் (மார்ச் 1947 – ஏப்ரல் 1949), பி.எஸ்.குமாரசாமி ராஜா (ஏப்ரல் 1949 – ஏப்ரல் 1952) என சென்னை மாகாண ஆட்சி, கவர்னர் மற்றும் 3 காங்கிரஸ் தலைவர்களால் நடத்தப்பட்டிருக்கிறது.. ராஜாஜி மீண்டும் 1952-54 வரை ஆட்சிப் பொறுப்பில் இருந்த போது பள்ளிகள் எதுவும் மூடப்படவில்லை.. 1952-ல் காமராஜர் ஆட்சிக்கு வரும்வரையில், சுமார் 13 வருட கால இடைவெளியில் 6000 பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் இருந்தன என்பதற்கான ஆதாரங்களோ, அந்த நிலையைக் கண்டித்து மீண்டும் திறக்கக் கோரும் வகையில் திராவிட இயக்கத்தின் கண்டனங்களோ, போராட்டங்களோ 1939-1952 காலகட்டத்தில் இல்லை..!

                வீரன் கூறியது போல், காமராஜரின் சாதனைகளை உலகம் அறியும்.. ’வில்லன்’ ராஜாஜி மூடிய 6000 பள்ளிகளை காமராஜர் மீண்டும் திறந்தார் என்ற கூடுதல் ’பெருமைகள்’ அவருக்குக் தேவையில்லை..

                • // 1952-ல் காமராஜர் ஆட்சிக்கு வரும்வரையில் //

                  1954-ல் காமராஜர் ஆட்சிக்கு வரும்வரையில் – என்று இருக்கவேண்டும்..

                  • ஹரி… நீங்க தயவு செய்து ஆங்கிலத்திலேயே தொடருங்கள். ப்ளீஸ்..ப்ளீஸ்..! உங்களைத் தொந்தரவு பண்ண மாட்டேன் 🙂

                    • இதெல்லம் பொன்கு,னான் கஷ்டபட்டு எழ்குதுன முன்னடி மாதிரி இல்ல,அப்படின்ன என்ன அர்தம் இது?

                • அம்பி,

                  வீரன் விக்கிபீடியாவில் ஆதாரம் இல்லை என்று சொன்னார்.அதற்கு அளித்த விடையாக ஆய்வு கட்டுரை 47 மூல ஆதாரங்களின் அடிப்படையில் எழுதப்பட்டிருப்பதை சுட்டிக் காட்டியிருக்கிறேன்.எந்த தகவலுக்கு எது ஆதார மூலம் என்று தனித் தனியாக குறிப்பிடப்படவில்லை.முனைவர் பட்டத்திற்கான ஆய்வறிக்கையில் ஆதாரமின்றி இட்டுக் கட்டி எழுதுவதற்கு வாய்ப்பில்லை.

                  மற்றபடி ராசாசி 6000 பள்ளிகளை மூடியது வரலாற்று உண்மை.உங்களுக்கு வேப்பங்காயாக கசந்தாலும் அதுதான் உண்மை.மேலும் நீங்கள் சொல்வது போல் 1937-ல் அல்ல 1953 ல் தான் 6000 பள்ளிகளை மூடினார்.

                  Rajaji ordered closure of 6000 schools என்று கூகுளில் தேடிப்பாருங்கள்.நூற்றுக் கணக்கில் ஆதாரங்கள் சுட்டிகளாக வந்து விழுகின்றன.அவற்றுள் சில,

                  http://www.iglobal-tamil.com/GTSpecial/kamaraj.htm

                  சுட்டியிலிருந்து;

                  From the Economics & Political Weekly Commentary by Y Vincent Kumaradoss – April 24, 2004:

                  Rajaji also took the drastic step of closing down nearly 6,000 schools, citing financial constraints.

                  http://www.tamiltribune.com/07/1102.html

                  சுட்டியிலிருந்து;
                  He reopened 6000 schools that Rajaji closed and opened about twice as many new ones

                  http://dbsjeyaraj.com/dbsj/archives/1195

                  சுட்டியிலிருந்து;

                  Rajaji intended to make children learn a vocational skill in order to be easily employable. Theoretically the concept was good but practically it was a disaster due to the nomenclature and envisaged implementation. Moreover it was pushed through by Rajaji without the approval of the party or legislators.
                  Rajaji called the scheme “Kulathozhil Kalvith thittam” (hereditary education scheme). It was to be implemented in rural areas first. According to this children would not study in the afternoon. Instead they would apprentice with their parents and learn the traditional occupation skills. School teachers would monitor their progress. Rajaji also announced that 6000 rural schools would be closed down.

                  • tippu,
                    First learn how to read a document and interpret citations.

                    The author’s statement below refers to item number 10 under references.

                    “First of all, Kamaraj removed the vocation based hereditary education policy introduced by Rajaji. He reopened the 6000 Schools closed by Rajaji’s government for financial reasons and also opened 12,000 new schools. -10 ”

                    And the 10th Item in the reference list is wikipedia:

                    “10.Wikipedia Kamaraj as chiefminister , A Free Encyclopedia Report”

                    And wikipedia doesn’t have any proof to substantiate this claim. Just because some one writes something in a website and google gives that page’s reference it doesn’t become true.
                    If someone says government closed, you need to cite a government order / any document from government.

                    If not, it is propaganda.

                    • ஆதாரங்களுக்கு குறியீடாக எண்கள் கொடுக்கப்பட்டிருப்பதை கவனிக்கவில்லை.அதனால் நேர்ந்த தவறு.

                      ஆனால் அதற்காக நீங்களும் அம்பியும் இராசாசி பள்ளிகளை மூட சொன்ன அரசாணை நகலை கொண்டு வா என அடம் பிடிப்பதைத்தான் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

                      எடுத்துக்காட்டுக்காக எளிமையான கேள்வி ஒன்று.

                      ”சிறைத்துறை கையேட்டின்படி தூக்குத் தண்டனை நிறைவேற்ற நாள் குறிக்கப்பட்டு விட்டால் அந்த கைதிக்கும் அவரது உறவினருக்கும் அந்த தகவலை தெரிவிக்க வேண்டியது சிறை கண்காணிப்பாளரின் கடமை ஆகும்” என்று ஒருவர் சொல்லி அதற்கு ஆதாரமாக இந்த சுட்டியை கொடுத்தால் ஏற்றுக் கொள்வீர்களா.அதெல்லாம் முடியாது சிறை கையேடு உள்ள சுட்டியை கொடு என பிடிவாதம் செய்வீர்களா.

                      http://www.thehindu.com/opinion/lead/the-disturbing-truth-about-an-execution/article4501567.ece?homepage=true

                      அதே போன்றுதான் இராசாசி பள்ளிகளை மூடியதற்கு ஆதாரமாக Economics & Political Weekly முதலான தரமான ஏடுகளின் சுட்டிகளை கொடுத்தாலும் ஏற்றுக் கொள்ள மறுக்கிறீர்கள் என்றால் என்ன சொல்ல முடியும்.பிடித்த முயல் அத்தனைக்கும் மூன்று கால்கள்தான் என்கிறீர்கள் என்பதை தவிர.

                  • திப்பு,

                    // முனைவர் பட்டத்திற்கான ஆய்வறிக்கையில் ஆதாரமின்றி இட்டுக் கட்டி எழுதுவதற்கு வாய்ப்பில்லை. //

                    உலகம் முழுவதும் உள்ள பல்கலைக் கழகங்களின் அறிவியல், தொழில் நுட்பத் துறைகளில், முனைவர் பட்டத்திற்கான ஆய்வறிக்கையில் விக்கிபீடியாவை ஆதாரமாகக் காட்டுவது ஒரு மன்னிக்கமுடியாத ‘குற்றம்’..! ஆனால் இங்கு அரசியலில் முனைவர் பட்டத்திற்கான ஆராய்சிக் கட்டுரையில் விக்கிபீடியா ஆதாரமாக அனுமதிக்கப்படுவது சர்வ சாதாரணம் போலத் தோன்றுகிறது..

                    ஆயிரம் முறை திரும்பச் சொல்லப்படும் ஒரு இட்டுக்கட்டல், பலராலும் பலர் சொன்னதாக/எழுதியதாக மேற்கோள் காட்டப்பட்டு, ஒரு ’உண்மையாகவே’ மாறும் மரபு தமிழகத்தின் தலைவிதி அய்யா..!

                    // மற்றபடி ராசாசி 6000 பள்ளிகளை மூடியது வரலாற்று உண்மை.உங்களுக்கு வேப்பங்காயாக கசந்தாலும் அதுதான் உண்மை.மேலும் நீங்கள் சொல்வது போல் 1937-ல் அல்ல 1953 ல் தான் 6000 பள்ளிகளை மூடினார். //

                    1953-ல் தான் 6000 பள்ளிகளை மூடினார் என்றால் இன்னும் வசதி.. அரசாணை நகல் கூட வேண்டாம், ஆணையின் எண், தேதியைக் கூடக் கொடுக்கலாம்.. மாகாண, ஜில்லா அளவில் கூட முடப் படும் பள்ளிகளின் பட்டியலும், அரசாணையின் நகலுடன் அந்தந்த பள்ளிக்கல்வி அதிகாரிகள், ஆட்சியர்கள், பள்ளிகளை மேற்பார்வை செய்யும் அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அனுப்பப் பட்டிருக்கும்.. இவை எதுவுமே இல்லாமல் பள்ளிகளை மூட ராஜாஜி சென்னை மாகாண மன்னர் அல்லவே.. அப்படியே மன்னரின் வாய்மொழி அரசகட்டளையாக இருந்தாலும் 6000 பள்ளிகளை மூடியதை எதிர்த்து திராவிட இயக்கங்களின் கண்டனம், போராட்டம் என்று ஏதும் நடந்திருக்கிறதா..?!

                    // Rajaji ordered closure of 6000 schools என்று கூகுளில் தேடிப்பாருங்கள்.நூற்றுக் கணக்கில் ஆதாரங்கள் சுட்டிகளாக வந்து விழுகின்றன.அவற்றுள் சில, //

                    “first couple Adam and Eve” என்று கூகிளில் தேடினால் கூட லட்சக் கணக்கில் ‘ஆதாரங்கள்” சுட்டிகளாக வந்து விழுகின்றன.. அவற்றை ஆதாரங்களாக ஏற்பதும் ஏற்காததும் உங்கள் விருப்பம்..!

                    • Yes Mr Veeran,Periyar EVR conducted DK conference against Kulakkalvithittam at Erode.When the new scheme was introduced by M.V.Krishna Rao ,Education Minister in TN Assembly on 29-7-1953,K.P.Gopalan,Communist Member moved a resolution to drop the scheme.When the motion was put to vote,there were 138 ayes and 138 noes.Speaker used his casting vote to defeat the motion.Second motion to defer the scheme was moved by K.R.Viswanatham.Motion was passed with 138 ayes against 137 noes.The scheme was stayed and Parulkar Committee was appointed vide GO No 1888 dated 20-8-1953.Besides opposition parties,Congress members themselves opposed the scheme.Kamaraj wanted Rajaji to withdraw the scheme.On 20-10-1953,40 Cong MLAs led by P.Varadarajulu Naidu sent a memorandum to Nehru against Rajaji.On 9-3-1954,former CM O.P.Ramasamy Reddiar made an open appeal in the legislature to drop the scheme.At this juncture only C.S as Education Minister announced that the scheme would be extended to urban areas from June,1954.With imminent defeat looming large in the Cong legisture meeting,Rajaji tried a compromise deal also.According to his deal,he would quit if C.S is chosen as his successor and scheme kept.Kamaraj refused to accept the deal.In the meeting held to elect new leader on 31-3-1954,Kamaraj defeated C.S.Rajaji resigned and Kamaraj became C.M on 13-4-1954.On 18-5-1954,CS announced withdrawal of the scheme in the Assembly.

                      DMK held its Executive Committee meeting on this issue on 13-7-1953 and nominated EVK Sampath to lead the agitation. On 14-7-1953,a procession was led by Sathyavanimuthu to Rajaji”s residence at T.Nagar.It was stopped by the police.In the next 15 days DMK organised 20 such processions.

                      In spite of so much details furnished above,still if you want GO No closing 6000 schools then only God can help the readers of Vinavu.By forcing students to assist their parents in their occupation for half day,any body can guess no of schools that would have been closed . Do you mean to say all references are telling lies?As per the scheme,hours of instruction during the afternoons need not be adhered.Students whose parents do not have any particular occupation,should go to farms to work.

                    • // In spite of so much details furnished above,still if you want GO No closing 6000 schools then only God can help the readers of Vinavu. //

                      தென்னை மரத்தைப் பற்றி விளக்கம் கேட்டால், பசு மாட்டைப் பற்றி விளக்கிவிட்டு அதை தென்னைமரத்தில் கட்டியிருக்கிறார்கள் என்கிறீர்களே..

  21. ஒரு தமிழ் தளத்தில் இது போன்ற ஆங்கில விவாதங்களைப் பார்க்க படு எரிச்சலாக இருக்கிறது. 🙁

      • ஆங்கிலத்தில் எழுத பர்மிசனெல்லாம் யாரும் இங்கே கொடுக்கல. கீழே ஆங்கிலம்’ தேர்ந்தெடுத்துவிட்டு தமிழிலோ, ஹிந்தியிலோ, மலையாளத்துலயோ டைப்பிப் பாருங்க. அது சரியாவே வெளியாகும்.

        ஆனா ஒன்னு.. இந்த தங்கிலீசுக்கு சுத்தமான ஆங்கிலமே பரவால்ல பாஸ்!!!!

        • எல்லாம் ஒன்னு தான் பாசு.

          ஆன இப்படி ட்ய்பெ செஇரதுல சில சமயம் கர்ன கொடோரம வார்தை வந்து விழோம்,இப்பொ வுழ்குந்த மாதிரி.

          • ஹரி,

            போன வருசம் நீங்க போட்ட தமிழ் பின்னூட்டத்துக்கப்பறம் ரிஷி தொல்லை தாங்காம இப்பதான் தமிழ் பின்னூட்டம் போட்டுருக்கீங்க.. வாழ்க..

            type ன்னு அடிக்காம taip ன்னு அடிச்சா டைப் ன்னு சரியா டைப்படிக்கலாம்..

            இணையத்தில் கிடைக்கும் NHM writer – இலவச எழுதியை பயன்படுத்திப் பாருங்கள்..

            • சரி அம்பி,எப்படி டைப் பண்ணீனால் இப்படி வருமுன்னு ஸொதனை செய்யலம் ஆன fலொந் மிச்ச் ஆயிடிது.

  22. சூரியன் அவர்களுக்கு மிக்க நன்றி.வரலாற்று உண்மைகளை தெளிவாக எடுத்து வைத்துள்ளீர்கள்.இதை தமிழில் எழுதி இருந்தால் ஆங்கிலம் அறியாதவர்களும் புரிந்து கொள்ள ஏதுவாக இருந்திருக்கும்.அடுத்து எழுதும் வாதங்களை இந்த சுட்டியில் உள்ள தமிழ் எழுதியை பயன்படுத்தி தமிழில் எழுதவும்.அனைவருக்கும் பயன்படும்.

    http://www.google.com/intl/ta/inputtools/cloud/try/

  23. திப்பு,
    உங்கள் பின்னூட்டம் எண்: 24.1.2.2.1.1.1.3.1.1 க்கு பதில் அளிக்க ரிப்ளை பட்டனே காணோம்…வினவு கவனிக்கவும்…

    //அதே போன்றுதான் இராசாசி பள்ளிகளை மூடியதற்கு ஆதாரமாக Economics & Political Weekly முதலான தரமான ஏடுகளின் சுட்டிகளை கொடுத்தாலும் ஏற்றுக் கொள்ள மறுக்கிறீர்கள் என்றால் என்ன சொல்ல முடியும்//

    நீங்கள் கொடுத்திருப்பது இந்த சுட்டி தான்: http://www.iglobal-tamil.com/GTSpecial/kamaraj.htm

    Economics & Political Weekly இன் சுட்டியைக்கொடுங்கள்…

    //பிடித்த முயல் அத்தனைக்கும் மூன்று கால்கள்தான் என்கிறீர்கள் என்பதை தவிர.//

    நான் அப்படி சொல்லவில்லை நண்பரே…

    மதிப்பிற்குரிய திரு. சி. சுப்ரமனியம் தான் 1952 முதல் 1962 வரை கல்வி அமைச்சர் என்பது உங்களுக்கு தெரியுமா?

    உங்கள் பார்வை எப்படியோ எனக்குத்தெரியாது…

    என்னைப்பொறுத்தவரை,அக்காலத்திலிருந்த அனைத்துத்தலைவர்களும் (திரு. காமராஜர், திரு. ராஜாஜி, திரு. சி. சுப்ரமனியன் போன்றோர்) மக்களுக்கு துரோகம் இழைத்ததில்லை…

    நேரம் கிடைத்தால் இங்கு தேடலாம்: http://www.assembly.tn.gov.in/archive/Resumes/review_01assly/index.htm

    • EPW சுட்டியை பயன்படுத்தி அதன் சந்தாதாரர்கள் மட்டுமே படிக்க முடியும். அதனால்தான் அதை நகல் எடுத்து வெளியிடப்பட்ட தளத்தின் சுட்டியை தந்திருக்கிறேன்.

      EPW சுட்டி;http://www.epw.in/commentary/kamaraj-remembered.html

      இந்த கட்டுரையின் புகைப்பட நகல் வெளியாகியிருக்கும் சுட்டி.

      http://www.jstor.org/discover/10.2307/4414921?uid=3738256&uid=2&uid=4&sid=21101758248723

      முந்தய பின்னூட்டத்தில் மறுமொழி பொத்தான் இல்லாமற் போக காரணம் அது ஒன்பது மறுமொழி கட்டங்களை எட்டி விட்டது.பத்தாவது கட்டம் கிடையாது.வினவு தள மென்பொருள் அப்படித்தான் வடிவமைக்கப்பட்டிருக்க வேண்டும் என நினைக்கிறேன்.

      • நண்பரே….

        கட்டுரை ஆசிரியர் திரு. காமராசர் முதல் பிராமனரல்லாத முதலமைச்சர் என்கிறார்…
        அப்படியா? http://www.assembly.tn.gov.in/archive/list/cmlist.htm

        பல பிராமனர் அல்லாதவரும் அதற்கு முன்பு சென்னை மாகான முதல்வராக இருந்துள்ளனர்..

        எக்கனாமிக் அன்ட் பொலிடிசல் வீக்லி என்றால் தப்பாக இருக்கக்கூடாதா?

        • இதன் ஆசிரியர் ஒரு வரலாற்றுப்பேரசிரியர்…

          அவர் இப்படி தவறாக எழுதலாமா? இதன் மூலம் கட்டுரையின் தரம் தாழ்கிறது…

          இப்படி ஒரு கட்டுரை எழுதி கர்மவீரருக்குப யாரும் புகழ் சேர்க்க வேண்டாம்…

          அவர் தனது சீரிய செயல்களால் மக்கள் மனதில் இடம் பெற்றுள்ளார்…

        • காமராஜருக்கு முன், பிரிக்கப்படாத சென்னை மாகாணத்தின் தலைமை அமைச்சர்கள் மாகாண பிரதமர் (Premier) என்றழைக்கப்பட்டனர்..

      • They are talking about after independence and it is very funny because Rajaji’s was the first chief minister of TN since 1950 and Kamaraj was the second,it is not like there were 5-6 brahmin CMs and Kamaraj followed after.

    • When the Kulakkalvi Thittam was introduced as a new scheme in TN Assembly on 29-7-1953,the motion was moved by Mr M.V.Krishna Rao,the then Education Minister.Mr Subramaniyam ,it seems became the Education Minister subsequently and announced in the Assembly in Mar,1954 that the scheme would be extended to urban areas in June,1954.During July,1953,what was the portfolio of Subramaniyam?Let MrVeeran enlighten us since he is so emphatic to say that C.S was Education Minister right from 1952.

      • Sorry Mr. Sooriyan,
        There is an error in my statement.
        CS was education minister from Oct 1953 – http://www.assembly.tn.gov.in/archive/Resumes/review_01assly/table04.pdf

        What I wanted to say is, after this, thiru. CS continued to retain education portfolio even during thiru. kamarajar’s tenure.

        Thiru. CS also contributed for development of education even during Thiru. Kamaraj’s tenure.
        All I wanted to say is – Leaders of those era (be it thiru. kamaraj, thiru. rajaji, thiru. CS, thiru. kakkan or anybody else) – they were never ‘makkal dhrogis’…..

        My opinion is Thiru. Kamaraj is a true leader; a true leader is a one who extracts the best from his team. A true leader would extract the best performance from his team and allow the team to perform.

        All I wanted to say is – Leaders of those era (be it thiru. kamaraj, thiru. rajaji, thiru. CS, thiru. kakkan or anybody else) – they were never ‘makkal dhrogis’…..

        The statement I was contesting is about closure of 6000 schools.
        Leaders do make mistakes…and we can’t blame someone just based on caste…

        This is my opinion and you are free to have yours.

        • A leader is one, who at least after becoming CM should think about the welfare of all citizens irrespective of caste,creed,religion,gender etc.Since Rajaji never thought about the implications of Kulakkalvithittam in spite of opposition indicating valid reasons,nothing wrong in criticising him on caste basis.He made Hindi as compulsary language during his first term as CM in 1930s.I have high regard for CS.But on this issue he toed the views of Rajaji.The dictatorial tendency was evident in Rajaji”s action.He never contested any election.

          • whats wrong if hindi is made as a compulsory language?

            It is compulsory in Andhra/Karnataka/Kerala?

            Have they forgotten their native languages as a result of it/illa sothukku singi adikkirangala?

            we are the only losers from this policy.

            And the poorest of the poorest are the even bigger losers.

            • Not all the people who are unemployed are suffering only because of lack of fluency in Hindi.Learning a language out of one”s initiative is different from learning under compulsion.Our rural youth are suffering from lack of fluency in English only.

  24. By introducing a scheme for denying primary education to first generation students from rural areas was a major welfare measure to TN citizens according to Mr Veeran.Both Rajaji and C.S would bear the cross for this dastardly move for generations to come.Loyalists like Veeran can not wash off this blot.

    • That did nothing,the real boost came from mid day meal scheme,whats happening today?

      Rural kids graduate and then drink their way to doom,all because of the great dravidian parties.

      • Again your wrong perception saying that all rural youth are drunkards.I have already quoted a success story by a person from a village not well connected with the nearby city.Remove your coloured glass and look at the real world.

        • My whole family is from a village only and i did not say rural youth are drunkards.

          Urban youth are beyond help,rural youth are still the decent folks left and i am saying the tasmac-dmk culture is eating that too.

  25. Yes MrVeeran,you have your views,I will have mine.According to me branding certain current leaders as Makkal Throgis is also your perception.I may also brand some but not necessarily some one you have in your mind.

  26. Today only I happened to read the full news item about the conference cited by Vinavu.See how these Viswa Hindu Parishat leaders and others are taking steps to spread the concept of unity among Hindus?Mr.Vedanthamji,Adviser,All World Viswa Hindu Parishat-“If only those Tamils killed by Rajapakshe in Srilanka were not mentioned as “Tamils” but mentioned as ‘Hindus”for the sake of those Srilankan ‘Hindus”100 crore Indian Hindus would come forward to remove their sufferings..

    Messers Karunanidhi,Nedumaran,Thirumavalavan and Vaiko were not knowing why Indians all over India were not bothered about the fate of Srilankan Tamils.Now listen to Vedanthamji.You have to learn a lot from him.Even when a person is murdered in daylight in front of Vedantamji,the victim should cry like this”I am a Hindu,help me”Then only Vedanthamji would bother even to call police. ,, \\

    Next speaker was MrVelukkudi Krishnan.He told the gathering about 6 Dharmas to be followed by every Hindu on daily basis.1.Give keerai to a cow-Yes,by buying from a person sitting nearby-do not bother his ownership of the cow.
    2.Help a poor student for his studies-Make sure that he is a Brahmin
    3.Go and worship in temples-see to it that no person sings Thevaram there
    4.Go for pilgirimage-Krishnan assumes every Hindu is that much financially sound
    5.Give Thulasi plant to somebody-By growing in roof garden?
    6.Protect old cows-Krishnan does not know that even cows purchased with Govt subsidy are sent to slaughter houses by the beneficiaries.
    From his advice you can see that Hindus need not bother about fellow human beings who are under distress.
    Thirukurungudi Ramanuja Jeer-‘In olden days the kings were learning from rishis.That is why Dharmam flourished.Nowadays,our politicians are having foreign education.That is why there is no Dharmam.”
    Probably,the Jeer mentions about Manuneedhidharmam.Right from Sangam days rishis taught Manuneedhi only to our kings and the kings also followed them faithfully.Social reformers like Periyar disrupted the designs of the Jeer.
    Now comes biggest political leader of the world and top most intellectual whose intelligence could not be stomached even by Harward University-Yes Subramaniyan Swamy-‘Tamils should learn Sanskrit besides Tamil.Or else they should learn Hindi without fail.The poosaris in every village should bring about ‘Hindu Renaissance”among the devotees.By creating such ‘Renaissance’,in all the 40 constituencies,only Hindus will be elected as MPs.
    Let the devotees do not forget the importance of Aaduvettu,Kidavettu,Mayana Kollai,Theemidhi,Kavadi etc.Even Subramaniyan Swamy knows that non-brahmins will not be taught Sanskrit even if they are willing to study.He is the backbone of the stay obtained in SC against appointment of Archagar trainees from all castes in TN temples.By creating the “Renaissance”people should forget their rights as human beings.Then only Hindu religion will flourish.
    Gopalji(General Secretary,Viswa Hindu Parishat)”In spite of so many differences amongst them,all Christians are following the dictum of their priests,all Muslims are following the commands of Jamaths.Likewise,all Hindus should follow whatever dictated by Viswa Hindu Parishat.Only if all Hindus do so,they can live peacefully in TN.Next to DMK and ADMK,only VHP and Grama Poosarigal Sangam have so much branches”
    Probably,Gopalji is not satisfied with instant unity only during Ganesh Chadurthi.He wanted that every Hindu should have the killer instict shown during Karseva days.DMK and ADMK leaders,beware there is stiff competition in politics.
    Kanchi Mutt”s Jayendrar-“If Hindus are united,we can build Ram”s temple and bring about a responsible Govt”
    Responsible enough to withdraw murder case against him.
    Now Vinavu readers,see how the so called Hindu leaders are spreading the Hindu religion by teaching Universal brotherhood and compassion for the suffering humanity..

    • Sooriyan,

      Great post..

      Till now you have been complaining that brahmins and hinduism are evil.. What are your suggestions, necessary efforts to be taken on your part, for integrating Dalits with hindu non-brahmins with equality and honour..?

      • Brahmins are the ones who are keen to maintain the caste differences.Their philosophy was copied by caste Hindus.My complaints against brahmins and Hinduism continue.Unless all Hindus are treated equally,conversions will continue.First of all,brahmins should shed their superiority complex and join the mainstream.

        • you are talking as if they live is castles in the air Mars,they are right on the street,you see them everyday all around you as much a part of the mainstream,dont know what that word means.

          They are clear about their role and presence in the society and they also maintain their distinctive personality all the time.

          Let the conversions continue.

          • Yes,we have seen the features of their distinctive personality in calling people eligible for reservation as good for nothing and dragging Maniyammai unnecessarily into the debate.Also the super intellectuals like Cho and Subramaniyam Swamy treating all those killed in Srilanka as LTTE cadres.And we have seen their efforts to bring stay from SC against appointment of Archagars belonging to all castes.In closing the south gate of Chidambaram temple permanently since Nandan came in by that gate and in preventing Thevaram recited in the garpagraha.By occupying vital positions in the media spreading misinformation during last Assembly elections.Giving wrong interpretation to Naanmanikadigai in Dinamani by following the foot steps of Parimelazhagar in writing wrong interpretation to the great work of Tiruvalluvar.And in keeping in force Manuneedhi in all their thinking while dealing with other castes.In showing discrimination on the basis of caste even while distributing prasadams in vaishnavite temples of Kanchi and in not allowing devotees from other castes to recite Naalaayiradivyaprabandham..

            • These are all individual actions of a group of people.

              Not all of them are wrong,People or an atheist government has no right to interfere with the temples an dtheir traditions.The temple is not dependent on the government to survive,the government eats off and live off looting all the temple wealth.

              Spreading misinformation,nobody can beat bltant lies and porpoganda of the dravidar kazhagam and media has everyone in it and not necessarily one caste.

              And regarding literature,many people got to know about it only from such people and not before that.If you are so convinced of the true interpretation,why dont you go for a debate with them and prove them wrong?

              Like i said again,traditions cant be messed with just to keep an atheist happy.

              • Individual actions by group of people was not criticised by right thinking people like you.How do you come to the conclusion that people who criticise these wrong doers as atheists? For your information,out of my own personal interest,I have done Saiva Siddhaantha Course of 3 years duration and got a title “Siddhantha Sironmani”. Because of looting and mismanagement by private individuals only,HR&CE took control of certain temples.In media also dominance by one section of people is still prevalent.It seems you are unaware of literary debates going on the interpretation of Kural by Parimelazhagar.If you are interested,I can quote books written by some well respected authors on this subject.What is tradition?Keeping temple worship as monopoly with one section of people?There was lengthy debate on Agama rules which allegedly permit one section of people only to be priests in another webmagazine”s site and till the end the protectors of Agama rules never disclosed the contents of Agama sasthra.In Kerala,about 40% of temple priests were recruited by Travancore Devoswam last year from non-brahmins.Earlier,SC in a suit filed by an Yeezhava claiming his right to become a temple priest passed judgement in the following manner;-“India has a constitution.It guarantees equal rights to every citizen.,Old dogmas based on birth are no longer valid”.Kerala is also an Indian State like TN,Is it not?Only TN Gods refuse to be worshipped by non brahmins?

                • Who said that i or people you are referring to dont criticize those actions?

                  I dont know about the interpretation of thirukural,my teacher in school was a brahmin and she taught me thirukural and she did not try to misintrepret it.

                  Temple worship is not monopoly for one set of people,it was banned for one set of people,dont twist the argument here and make it to be brahmins vs the others.

                  Agama vidhis are not rocket science,it is just normal things but people dont trust people other than gurukkals,even other brahmins to take it up with integrity.

            • Mr.Sooriyan,

              // Brahmins are the ones who are keen to maintain the caste differences. Their philosophy was copied by caste Hindus.//

              great escape..!!

              // My complaints against brahmins and Hinduism continue.//

              It cannot be stopped.. for your own sake..!!!

              // Unless all Hindus are treated equally,conversions will continue. //

              I agree..

              // First of all,brahmins should shed their superiority complex and join the mainstream. //

              I agree..

            • Mr.Sooriyan,

              // Brahmins are the ones who are keen to maintain the caste differences. Their philosophy was copied by caste Hindus.//

              great escape..!!

              // My complaints against brahmins and Hinduism continue.//

              It cannot be stopped.. for your own sake..!!!

              // Unless all Hindus are treated equally,conversions will continue. //

              I agree..

              // First of all,brahmins should shed their superiority complex and join the mainstream. //

              I agree.. What about others..?! You yourself was responding to my English comments only..!!!

  27. வீரன்,அம்பி,
    உங்களுடைய வாதங்களுக்கு நண்பர் சூரியனும்,நானும் தக்க விடை பகர்ந்திருப்பதாகவே கருதுகிறேன்.உங்கள் விதண்டாவாதத்திற்கும் பிடிவாதத்திற்கும்தான் எங்களிடம் விடையில்லை.

    ஆம் நண்பர்களே,நாம் மெய்யுலகில் விவாதிக்கவில்லை.மெய் நிகர் உலகில் இணையத்தில் விவாதிக்கிறோம்.மெய்யுலகின் செய்திகள் அனைத்தும் இணையத்தில் பதிவு செய்யப் பட்டிருக்கும் எனபது நிச்சயமில்லை.அதனால் அரசாணை போன்ற ஆவணங்களின் நகல்களை இங்கு கொண்டுவர முடியாமல் போகலாம்.இந்த இணையதள விவாதத்திற்காக அப்படி ஒரு சான்றை மெய்யுலகில் தேடி பெற்று இங்கு கொண்டுவந்து போட்டாலும் அது உங்களிடம் எந்த மாற்றத்தையும் கொண்டு வரப்போவதில்லை.

    ஒரு பேச்சுக்கு,நாங்கள் தகவல் உரிமை சட்டத்தின் கீழ் தமிழக அரசு கல்வித் துறைக்கு விண்ணப்பித்து இராசாசி 6000 பள்ளிகளை மூடியதற்கு ஆதாரம் பெற்று இங்கு பதிவு செய்தாலும் என்ன நடந்து விடும்

    பொருளாதார நெருக்கடி காரணமாகத்தான் பள்ளிகளை மூடினார்,அவர் மக்கள் துரோகி அல்லர் என்று மிகச் சாதாரணமாக அதனை கடந்து சென்று விடுவீர்கள்.

    இராசாசி தமிழினப் பகைவர்தான் ,இந்தியை திணித்து தமிழ் மொழியை சிதைத்து தமிழர் வாழ்வை சூறையாட முயன்ற தமிழின எதிரி ,தமிழினம் படித்து விழிப்புணர்வு அடைந்து முன்னேறி விட கூடாது,வேலை வாய்ப்புகளில் பார்ப்பனர்களுக்கு போட்டியாக வந்து விடகூடாது,அதன் மூலம் பார்ப்பனிய ஆதிக்கம் வலுவிழந்து போய் விட கூடாது என்ற கெட்ட நோக்கத்தில் சொந்த கட்சியினரே ஏற்றுக் கொள்ளாதபோதும் குலக்கல்வி திட்டத்தை கொண்டுவந்த சூதுமதியாளர் என ஒப்புக் கொண்டு விடுவீர்களா என்ன.ஆனாலும் உங்களுடன் தொடர்ந்து விவாதிக்க காரணம் இதனை திறந்த மனதுடன் படிப்பவர்கள் எது உண்மை என புரிந்து கொள்ள உதவும் என்ற நம்பிக்கையில்தான்.

    பி.கு;
    வீரன் EPW கட்டுரையில் காமராசர் முதல் பார்ப்பனர் அல்லாத முதல்வர் என தவறான தகவல் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அதனால் அந்த கட்டுரையே நம்பத் தகுந்ததல்ல என்கிறார்.ஆனால் உண்மையில் கட்டுரையாளர் என்ன சொல்லியிருக்கிறார்.”தமிழை தாய்மொழியாக கொண்ட ” முதல் பார்ப்பனர் அல்லாத முதல்வர் என்கிறார்.இப்படி இவர்களாகவே கற்பனை செய்து கொண்டு கட்டுரை நம்பத் தகுந்ததல்ல என்று சொன்னால் நாங்கள் என்னதான் செய்வது.

    இராசாசி பிறந்த சாதியின் காரணமாக அவரை நாங்கள் விமரிசிக்கவில்லை. அவரது செயல்களைத்தான் விமர்சிக்கிறோம்.கவனிக்கவும்.

    • நண்பரே,
      இத்துடன் நான் இவ்விவாதத்தைநிறுத்திக்கொள்கிறேன்…

      //He made history as the state’s first non-brahmin chief minister//

      இதற்கு என்ன பொருள்? இங்கு தமிழைத்தாய் ‘மொழியாகக்கொண்ட’ என்று பொருள்படவில்லயே?

      இதற்கு முன் மாகான முதல் / தலைமை அமைச்சர்களாக இருந்த பி.டி. ராஜன், சுப்பராயன் பிராமனரல்லாத தமிழரில்லயா?
      இதன் மூலம் பிராமனர் அல்லாதவரும் தலைமை ஏற்க வாய்ப்பு இருந்த்ததாகவே தெரிகிறது…

      //ஒரு பேச்சுக்கு,நாங்கள் தகவல் உரிமை சட்டத்தின் கீழ் தமிழக அரசு கல்வித் துறைக்கு விண்ணப்பித்து இராசாசி 6000 பள்ளிகளை மூடியதற்கு ஆதாரம் பெற்று இங்கு பதிவு செய்தாலும் என்ன நடந்து விடும்//

      இதைப்பற்றி பேசாவிட்டாலும் ஒன்றும் நடக்கப்போவதில்லை…ஆனால் பின்னூட்டம் இடாமல் இருக்கிறோமா?

      • நண்பரே,

        //He made history as the state’s first non-brahmin chief minister// இது absract பகுதியில் உள்ளது.கட்டுரையின் உள்ளே இதுவும் உள்ளது.

        \\The elevation of Kamaraj as the chief minister on the wave of opposition to the Rajaji scheme of education, led to the development of closer ties between Kamaraj and E V Ramasamy. The Congress gained the support of E V Ramasamy and Kamaraj’s equation with the non-Brahmins was kept intact. E V Ramasamy was all set to endorse his solidarity with Kamaraj on the grounds that in all these years he was the first and only non-Brahmin with Tamil as his mother tongue to become the chief minister; and for the first time a full-fledged ministry had been formed without a single Brahmin headed! by Kamaraj//

        • நண்பரே,
          கடைசி பின்னூட்டம் என்று கூறி மறுபடியும் பின்னூட்டமிட்டுவிட்டேன் 🙂

          //E V Ramasamy was all set to endorse his solidarity with Kamaraj on the grounds that in all these years he was the first and only non-Brahmin with Tamil as his mother tongue to become the chief minister;//

          என் பின்னூட்டத்திலிருந்து:
          //இதற்கு முன் மாகான முதல் / தலைமை அமைச்சர்களாக இருந்த பி.டி. ராஜன், சுப்பராயன் பிராமனரல்லாத தமிழரில்லயா?//

          //for the first time a full-fledged ministry had been formed without a single Brahmin headed! by Kamaraj//
          இதுவும் சாதீயம் தான்….

    • திப்பு,

      // ஒரு பேச்சுக்கு,நாங்கள் தகவல் உரிமை சட்டத்தின் கீழ் தமிழக அரசு கல்வித் துறைக்கு விண்ணப்பித்து இராசாசி 6000 பள்ளிகளை மூடியதற்கு ஆதாரம் பெற்று இங்கு பதிவு செய்தாலும் என்ன நடந்து விடும்

      பொருளாதார நெருக்கடி காரணமாகத்தான் பள்ளிகளை மூடினார்,அவர் மக்கள் துரோகி அல்லர் என்று மிகச் சாதாரணமாக அதனை கடந்து சென்று விடுவீர்கள். //

      எக்காரணம் கொண்டும் அரசுப் பள்ளிகள் மூடப்படக் கூடாது, அது மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி.. ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளால் ராஜாஜி இந்த அநீதியை இழைத்தார் என்ற அவதூறு தொடராமலிருக்க ஆதாரம் இருக்கிறதா என்பதையாவது சோதித்துப் பார்த்து இருந்தால் கொடுத்துவிடுங்கள்..

      // இராசாசி தமிழினப் பகைவர்தான் ,இந்தியை திணித்து தமிழ் மொழியை சிதைத்து தமிழர் வாழ்வை சூறையாட முயன்ற தமிழின எதிரி //

      பிற்காலத்தில், திமுக முன்னெடுத்த 1965 இந்தி எதிர்ப்பு போராட்டங்களின் போது ராஜாஜி இந்தித் திணிப்பை எதிர்த்து இருப்பதை மறந்துவிட்டீர்கள்.. இதே குற்றச்சாட்டை, இந்தப் போராட்டங்களின் போது இந்தித் திணிப்புக்கு ஆதரவாகவும், போராடிய மாணவர்களை காலிகள் என்றும் கூறிய பெரியார் மீதும் வைப்பீர்களா..?

      // தமிழினம் படித்து விழிப்புணர்வு அடைந்து முன்னேறி விட கூடாது,வேலை வாய்ப்புகளில் பார்ப்பனர்களுக்கு போட்டியாக வந்து விடகூடாது,அதன் மூலம் பார்ப்பனிய ஆதிக்கம் வலுவிழந்து போய் விட கூடாது என்ற கெட்ட நோக்கத்தில் சொந்த கட்சியினரே ஏற்றுக் கொள்ளாதபோதும் குலக்கல்வி திட்டத்தை கொண்டுவந்த சூதுமதியாளர் என ஒப்புக் கொண்டு விடுவீர்களா என்ன. //

      மதுவிலக்கைக் கொண்டுவந்து தமிழர்கள் குடிப்பதை நிறுத்தி, அவர்களுக்கு ’குடிமக்கள்’ என்ற உரிமையை மறுத்த சூதுமதியாளர் என்றும் கூறலாம்..

      சென்னையை ஆந்திராவுடன் இணக்க திரு. சிறிராமுலு உண்ணாவிரதம் இருந்து உயிர் நீக்கும் தருவாயில்,
      சென்னையை இழந்துவிடக் கூடாது என்ற உறுதியுடன்,
      நேருவின் நிர்பந்தங்களுக்கும் மறுத்து அவரின் தொலைபேசி அழைப்புகளை உதாசீனம் செய்ததால் நேருவின் வெறுப்புக்குள்ளாகி காங்கிரசில் ஓரம் கட்டப்பட்ட ஒரு கெடுமதியாளர் என்றும் கூட அழைக்கலாம்..

      • \\ திமுக முன்னெடுத்த 1965 இந்தி எதிர்ப்பு போராட்டங்களின் போது ராஜாஜி இந்தித் திணிப்பை எதிர்த்து இருப்பதை//

        ஓகோ,சாத்தான் வேதமும் ஓதியிருக்கிறதா.கொள்ளைக் கூட்டத்துக்காக கன்னக்கோல் போட்டவனே களவு போகும்போது மனப்பூர்வமாக வருந்துவானா.தமிழர் எழுச்சியை வைத்து சுதந்திரா கட்சிக்கு வாக்கு பொறுக்க எத்தணித்திருக்கிறார்.அவ்வளவுதான்.

        \\ இந்தித் திணிப்புக்கு ஆதரவாகவும், போராடிய மாணவர்களை காலிகள் என்றும் கூறிய பெரியார் //

        இது எனக்கு புதிய செய்தியாக இருக்கிறது.சுட்டி இருந்தால் கொடுங்கள்.படித்து விட்டு வருகிறேன்.

        \\சிறிராமுலு உண்ணாவிரதம் //

        அவர் உயிர் இழக்கும் வரை மைய,மாநில காங்கிரசு அரசுகள் அசைந்து கொடுக்கவில்லை. உயிர் இழந்தவுடன் ஆந்திரப் பகுதிகளில் வெடித்த வன்முறைக்கு அஞ்சி மூன்றே நாட்களில் ஆந்திர மாநில கோரிக்கையை அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள்.அப்போதும் இராசாசிதான் முதல்வர்.சென்னையை மீட்ட சுந்தரபாண்டியன் என்றெல்லாம் அவரை புகழாதீர்கள்.உயிரோடு இருந்து இதை படித்தால் அவரே கூச்சப்படுவார்.

        தமிழ்ப் பகுதிகளை மீட்க ம.பொ.சி,நேசமணி போன்றவர்கள் போராடிய போது .சென்னையை மீட்ட சுந்தரபாண்டியன் என்ன செய்து கொண்டிருந்தார் என்பதையும் தாங்கள் விளக்க வேண்டும்.சென்னையை மீட்ட பெருமை இராசாசியை சாரும் என்றால் வேங்கடத்தை பறிகொடுத்த பழியும் அவரை சாருமா.

        • // ஓகோ,சாத்தான் வேதமும் ஓதியிருக்கிறதா.கொள்ளைக் கூட்டத்துக்காக கன்னக்கோல் போட்டவனே களவு போகும்போது மனப்பூர்வமாக வருந்துவானா.தமிழர் எழுச்சியை வைத்து சுதந்திரா கட்சிக்கு வாக்கு பொறுக்க எத்தணித்திருக்கிறார்.அவ்வளவுதான். //

          மாமியார் உடைச்சா மண்குடம், மருமகள் உடைச்சா பொன்குடம் என்ற சொல்வழக்கு நினைவுக்கு வருகிறது.. இந்த சாத்தான் வேதம் மட்டும் ஓதவில்லை.. குரானும் ஓதியிருக்கிறது.. மத அடிப்படையில் பாக்கிஸ்தான் பிரிவினை வேண்டும் என்ற ஜின்னாவையும் ஆதரித்திருக்கிறது.. சொந்த அரசியல் வாழ்வில் ஏற்படக்கூடிய பாதகமான பின்விளைவுகளையும், எதிர்ப்புகளையும் பற்றி கவலைப்படாத சாத்தான் போலிருக்கிறது..

          // இது எனக்கு புதிய செய்தியாக இருக்கிறது.சுட்டி இருந்தால் கொடுங்கள்.படித்து விட்டு வருகிறேன். //

          ’கண்ணீர்த்துளி’களின் (அண்ணாவும், திமுக வும்) இந்தி எதிர்ப்பு போராட்டத்தை ‘புகழ்ந்து’ அவர் விடுதலையில் 1965-ல் எழுதியிருப்பதை மேற்கோள் காட்டிய ஒரு பதிவை இணையத்தில் பல மாதங்களுக்கு முன் பார்த்த நினைவு.. தேடிப்பார்த்து கொடுக்கிறேன்..

          // அவர் உயிர் இழக்கும் வரை மைய,மாநில காங்கிரசு அரசுகள் அசைந்து கொடுக்கவில்லை. உயிர் இழந்தவுடன் ஆந்திரப் பகுதிகளில் வெடித்த வன்முறைக்கு அஞ்சி மூன்றே நாட்களில் ஆந்திர மாநில கோரிக்கையை அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள்.அப்போதும் இராசாசிதான் முதல்வர்.சென்னையை மீட்ட சுந்தரபாண்டியன் என்றெல்லாம் அவரை புகழாதீர்கள்.உயிரோடு இருந்து இதை படித்தால் அவரே கூச்சப்படுவார். //

          சென்னை இல்லாத ஆந்திர மாநிலம் என்ற கோரிக்கைதான் ஏற்கபட்டது.. ராஜாஜியும், ம.போ.சி.யும் அன்று காங்கிரஸ் தலைமைக்குப் பணிந்திருந்தால் சென்னையை மீட்க சுந்தர பாண்டியர்தான் மீண்டும் வரவேண்டியிருக்கும்..

          // தமிழ்ப் பகுதிகளை மீட்க ம.பொ.சி,நேசமணி போன்றவர்கள் போராடிய போது .சென்னையை மீட்ட சுந்தரபாண்டியன் என்ன செய்து கொண்டிருந்தார் என்பதையும் தாங்கள் விளக்க வேண்டும்.சென்னையை மீட்ட பெருமை இராசாசியை சாரும் என்றால் வேங்கடத்தை பறிகொடுத்த பழியும் அவரை சாருமா. //

          1956-ல் மொழிவாரி மாநில எல்லைப் பிரிவைனயின் போது, ஆந்திரா, கர்நாடகா, கேரளாவுடன் சேர்க்கப்படவிருந்த தமிழ்ப் பகுதிகளில் பலவற்றை மீட்ட எல்லை காக்கும் போராட்டங்களை ம.போ.சி., மார்ஷல் நேசமணி முதலான தலைவர்கள் முன்னின்று நடத்திய போது ராஜாஜி முதல்வர் அல்ல.. அன்றைய முதல்வர் காமராஜரின் எல்லாம் ஒரே தேசம்தானே என்ற தேசிய உணர்வு அண்டை மாநிலங்களின் தலைவர்களுக்கு இல்லாமல் போனது..

          • அதில் என்ன ஐயம் உங்களுக்கு.ஏதேனும் வேறுபாடு உங்களுக்கு தென்பட்டால் சொல்லுங்கள்.

            \\மத அடிப்படையில் பாக்கிஸ்தான் பிரிவினை வேண்டும் என்ற ஜின்னாவையும் ஆதரித்திருக்கிறது//

            பிரிவினை பற்றி சரியான புரிதலுக்கு இந்த கட்டுரையை படித்துவிட்டு இராசாசி உள்ளிட்டு யார் யாரையெல்லாம் பாராட்டலாம் என முடிவு செய்து கொள்ளலாம்.

            சுட்டியிலிருந்து

            http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=80405273&edition_id=20040527&format=html

            இந்திய இந்து-முஸ்லிம் மக்களை பிரித்து மத அடிப்படையில் நாட்டைப்பிரித்துவிடவேண்டும் என்று ‘இரு நாட்டுக்கொள்கையை ‘ இந்த மண்ணிற்கு முதன் முதலில் அறிமுகம் செய்தது முகம்மது அலி ஜின்னாவோ அல்லது முஸ்லிம் லீகோ அல்ல. யார் தெரியுமா ? தேச பக்தர், வீரர் என்று போற்றி அழைக்கப்படும் வி.டி.சவார்க்காரால் 1923 ஆம் ஆண்டு எழுதப்பட்ட ‘ஹிந்துத்வா ‘ என்ற கட்டுரையில்தான் ‘இரு நாட்டுக்கொள்கைக்கு ‘ பிள்ளையார் சுழி போட்டார்.

            ஹிந்து மகாசபா தலைவரான லாலா லஜபதிராய் (The Tribune of December 14, 1924) கீழ்கண்டவாறு எழுதியிருக்கிறார் ‘ என்னுடைய திட்டத்தின் அடிப்படையில், முஸ்லிம்களுக்கு நான்கு மாகானங்கள்: (1) பதான் பிராந்தியம் அல்லது வடமேற்கு பிராந்தியம் (The Pathan Province or North-West Frontier) (2) மேற்கு பஞ்சாப் (3) சிந்து மாகானம் (4) கிழக்கு வங்காளம். மேலும் மாகானங்களை உருவாக்கும் அளவிற்கு அதிக எண்ணிக்கையில் முஸ்லிம்கள் இருக்கும் இந்தியாவின் பிறபகுதிகளையும் இணைக்கவேண்டும் ‘ என்று மத அடிப்படையில் இந்தியாவை துண்டுபோட்டு விடவேண்டும் என்று முன்கூட்டியே திட்டம் தீட்டப்பட்டுவிட்டது. (Frontline Vol.18, Issue 26, Dec.22-2001-Jan, 04, 2002)

            மத அடிப்படையிலான இந்திய பிரிவினை எண்ணம் பெரும்பாலான மக்களிடம் பரவ முக்கிய காரணம் ‘இந்து மஹா சபா ‘ (Struggle for Freedom, Bharathiya Vidhya Bhavan, 1961; Page 661) தான் என்ற உண்மையை யாரும் மறக்கவோ மறுக்கவோ முடியாது. வி.டி. சவார்கார் தலைமையில், இந்தியப்பிரிவினை எண்ணத்தை, கருவாக்கி, உருவாக்கி, நீர்பாய்ச்சி, களையெடுத்து வளர்த்துவிட்டு காந்தி சொன்னதை காயிதே மில்லத் கேட்டாரா, காதர் மெய்தீன் கேட்டாரா என்று வதந்தி பரப்பும் கூப்பாடை தயவு செய்து இனிமேலாவது நிறுத்துங்கள்!

            \\1956-ல் மொழிவாரி மாநில எல்லைப் பிரிவைனயின் போது, ஆந்திரா, கர்நாடகா, கேரளாவுடன் சேர்க்கப்படவிருந்த தமிழ்ப் பகுதிகளில் பலவற்றை மீட்ட எல்லை காக்கும் போராட்டங்களை ம.போ.சி., மார்ஷல் நேசமணி முதலான தலைவர்கள் முன்னின்று நடத்திய போது ராஜாஜி முதல்வர் அல்ல.. //

            1953-ல் ஆந்திரா உருவானபோதே திருப்பதி பறி போய் விட்டது.அப்போது இராசாசிதான் முதல்வர்.மேலும் முதல்வராக இருந்தால்தான் தமிழர் உரிமைக்காக பேச வேண்டுமோ. சென்னையை காப்பதற்காக முதல்வர் பதவியையே தியாகம் செய்தார் என்று நீங்கள் போட்டுவிடும் ஒளிவட்ட ”பிம்பத்துக்கு” இது பொருந்தவில்லையே.

            • 1906-ல் தொடங்கப்பட்ட முஸ்லீம் லீக் முஸ்லீம்களுக்கு இரட்டை வாக்குரிமை-தனித்தொகுதிகள் என்ற கோரிக்கை மூலம் பிரிவினைக்கு வித்திட்டுவிட்டது.. 1916-ல் உருவாக்கப்பட்ட இந்து மகா சபாவுக்கு இது வசதியாகப் போய்விட எந்தப்பகுதிகள் பிரிக்கப்பட வேண்டும் என்று பட்டியல் போட ஆரம்பித்தார்கள்..

              சரி விசயத்துக்கு வருவோம்.. முஸ்லீம் லீகுடன் எந்த பேச்சு வார்த்தையும் கூடாது என்று நிலை எடுத்திருந்த காங்கிரசுக்கு, ஜின்னாவுடன் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என்று வலியுறுத்திய ராஜாஜி, C-R Formula என்ற பிரிவினைக்கான திட்டத்தை முன்வைத்தார்.. முஸ்லீம்கள் அதிகமுள்ள பகுதிகளில் பொதுவாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்ற சரத்தை ஜின்னா ஏற்கவில்லை.. முஸ்லீம் லீக் எல்லா முஸ்லீம்களையும் பிரதிநிதித்துவப் படுத்துகிறது என்று கூறி முஸ்லீம் லீக் உடன் ஒப்பந்தம் செய்வதன் மூலம் பிரிவினையை செய்து கொள்ளலாம் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார்.. ஆனால் பிரிவினையை ஆதரித்த இந்து மகா சபாவும், சாவர்கரும், சியாமா பிரசாத் முகர்ஜியும் ராஜாஜியின் திட்டத்தை கடுமையா எதிர்க்க காரணம் என்ன..?! சாத்தான் வேதம் ஓதாமல், குரான் ஓதுகிறதே என்பதாலா..?!

              // 1953-ல் ஆந்திரா உருவானபோதே திருப்பதி பறி போய் விட்டது.அப்போது இராசாசிதான் முதல்வர்.மேலும் முதல்வராக இருந்தால்தான் தமிழர் உரிமைக்காக பேச வேண்டுமோ. சென்னையை காப்பதற்காக முதல்வர் பதவியையே தியாகம் செய்தார் என்று நீங்கள் போட்டுவிடும் ஒளிவட்ட ”பிம்பத்துக்கு” இது பொருந்தவில்லையே. //

              ஆந்திர மாநிலத்தின் – சித்தூர் ஜில்லாவின் – தெற்கெல்லையில் இருக்கும் திருப்பதி, 1956-ல் மாநில எல்லைகள் மறுசீரமைக்கப்படும் வரையில், எல்லைத் தாவாவில் இருந்தது..

              அது சரி, ராஜாஜி தமிழர் விரோதி என்று ஆரம்பித்து, அவர் செய்த நல்லவற்றை ஏற்க மனமில்லாமல், அவர் ஏன் இதைச் செய்யவில்லை, அதைச் செய்யவில்லை என்று அடுக்குகிறீர்களே, இதையெல்லாம் செய்தால்தான் அவரை தமிழர் விரோதி இல்லை என்று ஏற்றுக் கொள்வீர்களா..? முஸ்லீம்கள் அதைச் செய்யவில்லை-இதைச் செய்யவில்லை அதனால் அவர்கள் தேச பக்தி இல்லாதவர்கள் என்று இந்துத்வர்கள் கூறுவதைப் போல் இருக்கிறது இந்த வாதம்..

              • இராசாசி செய்த செயல்களை -குலக் கல்வி திட்டம்,இந்தி திணிப்பு- வைத்துத்தான் அவரை தமிழின பகைவர் என மதிப்பிடுகிறோம், வரையறுக்கிறோம்.செய்யாத செயல்களை வைத்து அல்ல.

                அப்புறம் முசுலிம்கள் நாட்டுப் பற்றுக்கு சங் பரிவார் கும்பல் சான்றிதழ் வழங்க வேண்டியதில்லை.அவர்கள் சான்றிதழ் தேவைப்படும் அளவுக்கு இழிநிலையில் முசுலிம்களை இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களான இந்து மத சகோதரர்கள் வைத்திருக்கவில்லை.

                இந்த சமயத்தில் ஒரு தொடர் வண்டி பயணத்தில் ஒரு வடஇந்திய முசுலிம் நண்பர் ஒரு RSS அம்பியுடன் நடத்திய விவாதத்தின்போது சொன்னதை இங்கு பதிவு செய்வது பொருத்தமாக இருக்கும் .

                You are INDIANS by chance.
                We are INDIANS by choice.

                • as usual comedy dialogue,

                  He is also Indian by chance only,he makes the best choice for his survival just like the RSS guy,so no different.

                  Rajaji is the best politician to have emerged out of TN and his policies of Hindi and efficient schooling would have been most useful for the Tamil people but they lost their chance.

                • // இராசாசி செய்த செயல்களை -குலக் கல்வி திட்டம்,இந்தி திணிப்பு- வைத்துத்தான் அவரை தமிழின பகைவர் என மதிப்பிடுகிறோம், வரையறுக்கிறோம்.செய்யாத செயல்களை வைத்து அல்ல. //

                  இந்தி திணிப்பைப் பொறுத்தவரை, அன்று ( 1937-39 ) சுதந்திர போராட்ட காலகட்டத்தில், எல்லா இந்தியர்களுக்கும் ஒருங்கிணைந்த தேச விடுதலைப் போராட்டத்திற்காக இந்தி தெரிந்திருப்பது அவசியமானது என்ற கருத்து கொண்டிருந்த ராஜாஜி, 1937-39-ல் ஒன்றுபட்ட சென்னை மாகாணத்திலிருந்த தமிழர்கள், மலையாளிகள், கன்னடர்கள், தெலுங்கர்கள் எல்லோருக்கும் இந்தியை கட்டாயப் பாடமாக்கிய போது எப்படி தமிழினத்துக்கு மட்டும் எதிரியானார்..?!

                  1953-ல் ராஜாஜி கொண்டுவந்த “Modified System of Elementary Education” என்ற ஆரம்பக் கல்வித்திட்டம் (Hereditary Education Policy – குலக் கல்வித் திட்டம் என்ற பெயரைச் சூட்டியது திராவிட இயக்கங்கள்) அன்றைய காலகட்டத்தில் குழந்தைகளை கல்வி கற்க பள்ளிக்கு அனுப்புவதற்காகவே பெற்றோர்களை ஊக்கப்படுத்த பாதி நேரம் கல்வி, பாதி நேரம் வீட்டில் உதவுவது அல்லது தொழில் கல்வி கற்பது என்ற நோக்கம் கொண்டிருந்தாலும், நடைமுறையில் பெற்றோரின் தொழிலையே பிள்ளைகளும் கற்கவேண்டியிருக்கும் என்ற சூழலையும், அதன் சாதக-பாதகங்களையும் அலசி ஆராய்ந்து மாற்றாக என்ன செய்யவேண்டும் என்ற விவாதங்களுக்கு வாய்ப்பளிக்காமலும் கொண்டுவரப் பட்டது..

                  ராஜாஜியின் இந்தத் திட்டம் கல்வி, வணிகம், பெருந்தொழில்கள், நவீன விவசாயம் முதலிய தொழில்களை மேற்கொண்டிருந்த வசதியான தமிழர்களுக்கு ஏற்புடையதாக இருந்தாலும் பெரும்பான்மை உழைக்கும் தமிழ் மக்களுக்கு முழுநேர பள்ளிக் கல்வி கிடைக்காத குறையை ஏற்படுத்துவதாக இருந்தது..

                  ராஜாஜியை, மணியாட்டுபவன் மகன் மணியாட்டவேண்டும் – செருப்பு தைப்பவன் மகன் செருப்பு தைக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தவராகவோ, மொத்த தமிழர்களின் இன எதிரியாகவோ முத்திரை குத்துவது திராவிட, காங்கிரஸ் அரசியலுக்கு வசதியாக இருந்திருக்கலாம்.. ராஜாஜியின் இது போன்ற ஒரு கல்வித்திட்டத்துக்கு அடிப்படையாக இருந்தது அவருக்கிருந்த காந்திய பாணி கிராமத் தன்னிறைவு & முதலாளித்துவ பாணியிலான முன்னேற்றம் சார்ந்த கருத்துகள்.. அதற்காக அவரை – அவரது கருத்துக்களை – விமர்சனத்துக்குள்ளாக்குவது வசதிப்படாத ஒன்று.. காரணம் அவர் ஒரு பார்ப்பனர்..!!!

                  • Most of the velai illa thindattam like varumayin niram sigappu in the 1970s is because of this fake ego boost.

                    People working on their farms were always happy.

                  • \\ ஒருங்கிணைந்த தேச விடுதலைப் போராட்டத்திற்காக இந்தி தெரிந்திருப்பது அவசியமானது//

                    பாவம் அம்பி நீங்கள்.எந்த அளவுக்கு மூளையை கசக்கி இருந்தால் இந்தி திணிப்பை நியாயப்படுத்த புது புது காரணங்களை கண்டு பிடித்திருப்பீர்கள் என உணர முடிகிறது.சுதந்திரா கட்சி பெருசுகள் உங்கள் பின்னூட்டத்தை படித்தால் இந்த காரணங்கள் எல்லாம் இராசாசிக்கே சொல்லத் தெரியாமல் போய் விட்டதே என்று நிச்சயம் வருந்துவார்கள்.

                    பிறமொழி பேசுவோரெல்லாம் இந்தி கற்றுக் கொண்டால் மட்டுமே நாட்டு விடுதலை போராட்டம் ஒருங்கிணைந்ததாக இருக்கும் என்று சொல்கிறீர்கள்.அப்படியானால் ,1937-க்கு முன்பு நடந்த ஒத்துழையாமை இயக்கம்,உப்பு காய்ச்சும் போராட்டம் போன்றவை எல்லாம் சென்னை மாகாணத்தின் பங்களிப்பு இல்லாமல் அல்லது போதிய அளவு இல்லாமல் நடந்தது என்கிறீர்களா.

                    ஆனால் வரலாறு இந்த மாதிரியான உளறல்களின் முகத்தில் கரி பூசிக் கொண்டிருக்கிறது.எல்லோரும் இந்தி கற்காமலேயே நாடு ”விடுதலை” பெற்று விட்டது அம்பி.

                    \\எப்படி தமிழினத்துக்கு மட்டும் எதிரியானார்.//

                    நான் எனது இனத்தின் நலனிலிருந்து எண்ணிப் பார்க்கிறேன். இராசாசியை எம் இனப்பகைவராக காண்கிறேன்.மலையாளிகள், கன்னடர்கள், தெலுங்கர்கள் எல்லோருக்கும் இந்தியை கட்டாயப் பாடமாக்கியதால் அவர்களுக்கும் எதிரியாக நீங்கள் அடையாளம் காட்டுகிறீர்கள்.ஏற்றுக் கொள்கிறேன்.

                    மற்றபடி குலக்கல்வி திட்டம் குறித்து போதிய அளவு விவாதித்து விட்டோம்.படிப்பவர்களின் முடிவுக்கு விட்டு முடித்துக் கொள்கிறேன்.

                    • திப்பு,

                      // பாவம் அம்பி நீங்கள்.எந்த அளவுக்கு மூளையை கசக்கி இருந்தால் இந்தி திணிப்பை நியாயப்படுத்த புது புது காரணங்களை கண்டு பிடித்திருப்பீர்கள் என உணர முடிகிறது.சுதந்திரா கட்சி பெருசுகள் உங்கள் பின்னூட்டத்தை படித்தால் இந்த காரணங்கள் எல்லாம் இராசாசிக்கே சொல்லத் தெரியாமல் போய் விட்டதே என்று நிச்சயம் வருந்துவார்கள் //.

                      ராஜாஜிக்கே சொல்லத் தெரியாத காரணங்களை நான் சொல்வதாகக் கூறி என்னை புகழாதீர்கள்.. ஒரு தேச மக்களை வலுவாக ஒருங்கிணைக்க ஒரே மொழி தேசிய மொழியாக இருக்கவேண்டும் என்ற கருத்து இந்தியத் தலைவர்களுக்கு மட்டும் அவசியமாகத் தோன்றிய ஒன்றல்ல (எனக்குத் தோன்றியதாக காட்டும் வகையில் வாக்கியத்தை நறுக்கி மேற்கோள் காட்டியிருக்கிறீர்கள்).. பல் தேசிய இன, மொழிக் கூட்டரசான சோவியத் ஒன்றியத்தில் ரசிய மொழியை தேசிய மொழியாக்கியிருந்ததே அன்றைய காங்கிரசுக்கும் முன்னுதாரணமாக அமைந்தது..

                      // பிறமொழி பேசுவோரெல்லாம் இந்தி கற்றுக் கொண்டால் மட்டுமே நாட்டு விடுதலை போராட்டம் ஒருங்கிணைந்ததாக இருக்கும் என்று சொல்கிறீர்கள்.அப்படியானால் ,1937-க்கு முன்பு நடந்த ஒத்துழையாமை இயக்கம்,உப்பு காய்ச்சும் போராட்டம் போன்றவை எல்லாம் சென்னை மாகாணத்தின் பங்களிப்பு இல்லாமல் அல்லது போதிய அளவு இல்லாமல் நடந்தது என்கிறீர்களா. //

                      அன்றைக்கு காங்கிரஸ் தலைவர்கள் கொண்டிருந்த கருத்தை கூறினேன்.. அது சரியா, தவறா என்று அன்று இருந்த நிலைமையைக் கொண்டுதான் ஊகிக்கவேண்டும்..

                      // ஆனால் வரலாறு இந்த மாதிரியான உளறல்களின் முகத்தில் கரி பூசிக் கொண்டிருக்கிறது.எல்லோரும் இந்தி கற்காமலேயே நாடு ”விடுதலை” பெற்று விட்டது அம்பி. //

                      1937-39-ல் பிரிட்டன் இன்னும் பத்து வருடங்களில் இந்தியாவை விட்டு ஓடப்போகிறது என்பது ராஜாஜிக்கோ, காந்திஜிக்கோ கூட தெரிந்திருக்க வாய்ப்பில்லை.. விடுதலைப் போராட்டம் இன்னும் நீண்டதாக இருக்கலாம் என்ற எண்ணத்தில் அதை இன்னும் தீவிரமாகவும், ஒருங்கிணைந்ததாகவும் நடத்த என்னென்ன செய்ய வேண்டும் என்று நினைத்தார்களோ அதை செய்ய முனைந்திருந்தார்கள்..

                      // நான் எனது இனத்தின் நலனிலிருந்து எண்ணிப் பார்க்கிறேன். இராசாசியை எம் இனப்பகைவராக காண்கிறேன்.மலையாளிகள், கன்னடர்கள், தெலுங்கர்கள் எல்லோருக்கும் இந்தியை கட்டாயப் பாடமாக்கியதால் அவர்களுக்கும் எதிரியாக நீங்கள் அடையாளம் காட்டுகிறீர்கள்.ஏற்றுக் கொள்கிறேன். //

                      உங்கள் இனப்பற்றின் பல்வேறு பரிமாணங்கள் என்னை வியக்க வைக்கிறது.. இந்தி கற்ற மலையாளிகளும், கன்னடர்களும், தெலுங்கர்களும் ராஜாஜியை தங்கள் எதிரியாக நினைக்கிறார்களா..?! அவர்களுக்கிருக்கும் தாய் மொழிப்பற்றும், மொழி உணர்வும் தமிழர்களுக்கிருப்பதைவிட குறைவானதாகி விட்டதா..?!

                      தாய் மொழியின் பாதுகாப்புக்காக, வளர்ச்சிக்காக என்றுதான் இந்தி திணிப்பை எதிர்த்தோம்.. அதையாவது செய்தோமா..?! இன்று தமிழின் கதி என்ன..?! ஆங்கிலத்தில் கேட்டால்தான் பதில் கிடைக்கும் என்ற அவலநிலை நீடிக்கிறதே..

                    • ஒரே மொழியை கொண்டுதான் ஒரு நாட்டு மக்களை ஒருங்கிணைக்க முடியும் என்பதே தவறானது.வாதத்திற்காக சரி என்று வைத்துக் கொண்டாலும் அந்த தேசிய மொழி பல்வேறு மொழி பேசும் மக்களிடையேயான இயல்பான வர்த்தக,கலாசார,சமூக பரிமாற்றங்களிலிருந்து முகிழ்த்து வரவேண்டும்.அப்போதுதான் எந்த மொழி தகுதியானதோ அது தேசிய மொழியாக உருவெடுக்கும்.வலுக் கட்டாயமாக ஒரு மொழியை தேசிய மொழியாக கொண்டு வர எத்தணிப்பது நேர்மையற்றது.அநீதியானது.

                      இந்தி மொழி வெறியர்களின் செயலை சோவியத் ஒன்றியத்துடன் ஒப்புமைப் படுத்துவதே தவறு.ருசிய மொழி தேசிய மொழி என்றபோதும் அதனை கற்பது கட்டாயமில்லை.தேவை படுவோர் மட்டும் கற்றுக் கொள்ளலாம்.ருசிய மொழியில் தேர்ச்சி பெற்றால்தான் ஒரு மாணவனின் கல்வி தகுதி முழுமை பெறும் என்ற அயோக்கியத்தனம் எல்லாம் இல்லை.-இந்த இடத்தில் இந்தியாவில் அடிமை மோகம் ஆங்கிலத்தை எப்படி பாடத் திட்டங்களில் ஆணி அடித்து இறக்கியுள்ளது என்பதை நினைவில் கொள்க-அந்தந்த குடியரசுகளில் அவரவர் மொழியே ஆட்சி மொழி. பயிற்று மொழி.சோவியத் அரசு வழங்கிய கடவு சீட்டுகளில் இரண்டு நாட்டு அடையாளங்கள் [nationality] -ஒன்று சோவியத்,மற்றொன்று வாழும் குடியரசு-இருந்தன.அவ்வளவு ஏன்.பிரிந்து போகும் உரிமையே அரசியல் சட்டப்படி வழங்கப்பட்டிருந்தது.

                      சோவியத்தின் சனநாயக பண்பு எங்கே.கேடுகெட்ட இந்திய ஏகாதிபத்தியவாதிகளின் தகிடுதத்தங்கள் எங்கே.இந்த இடத்தில் அண்மையில் நடுவண் அரசுப் பணி ஆணைய தேர்வுகளுக்கான விதிமுறைகளில் இந்திக்கு ஆதரவாகவும் பிற மொழி பேசுவோருக்கு எதிராகவும் செய்யப்பட தகிடுதத்தங்களை நினைவு படுத்தி கொள்க.

                      எனது இனப்பற்று எந்த வகையில் உங்களுக்கு வியப்பாக இருக்கிறது என்று சொன்னால் தெரிந்து கொள்வேன்.உங்களுக்கு பூணூல் பாசம் இருக்கும்போது எனக்கு எம் மொழி பேசும் இனம் மீது பற்று இருக்காதா.இந்தி கற்ற மலையாளிகளும், கன்னடர்களும், தெலுங்கர்களும் ஆரிய சூழ்ச்சிக்கு பலியாகிப் போனவர்கள்.அவர்களை வைத்து தமிழினத்தின் இன,மொழி உரிமை வேட்கையை எடை போட முடியாது.இந்தியின் உருவில் நீங்கள் வாழ வைக்க விரும்பும் எப்போதோ செத்து வழக்கொழிந்து போன சமத்கிருதத்தை விட செழுமையான,பழமையான,இனிமை மிகுந்த மொழிக்கு சொந்தக்காரர்கள் நாங்கள்.இன்னும் ஆயிரம் ஆண்டுகள் போனாலும் எம் மொழியை ஆரியக் கூட்டம் சிதைக்க அனுமதியோம்.

                      ஆங்கிலப்பயன்பாடு பற்றி வருந்துகிறீர்கள்.நன்று.மணிப்பிரவாள நடை என்று தமிழ்த்தாயின் மீது வீசப்பட்ட சமத்கிருத சக்தியை ஒரு வழியாக ராசுட்டிரபதியை குடியரசு தலைவராக்கி,அங்கத்தினரை உறுப்பிரனராக்கி துடைத்து முடித்து நிமிர்வதற்குள் இன்னொருபுறம் ஆங்கிலத்தை தமிழில் புகுத்தி விட்டீர்கள். மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள்.திருமண கைக்கூலி [வரதட்சணை] என்ற தீமையை உருவாக்கி தானும் கெட்டு தமிழ்ச் சமூகம் முழுவதுக்கும் பரவ செய்ததை போல தமிழில் பேசும்போதே அங்கங்கே ஆங்கில சொற்களையும் சொற்றொடர்களையும் வலிந்து திணித்து பேசுவது பார்ப்பன சமூகம் ஆரம்பித்து வைத்த தீமைதானே.இன்றும் கூட கவனித்து பார்த்தால் பார்ப்பனர்கள் உரையாடலில் மிகுதியாக ஆங்கிலத்தை பயன்படுத்துவதை பார்க்கலாம்.நடைபாதையில் பூட்டும்,செருப்பும் விற்கும் படிப்பறிவு இல்லாத தமிழர்களிடம் கூட இந்த மேதாவிகள் பிப்டி கொடுங்கோ,கவ் மச் என்று பேசுகிறார்கள்.

                      இந்த இழிநிலையையும் நீண்ட நாள் நீடிக்க தமிழ்த் தாயின் புதல்வர்கள் அனுமதிக்க மாட்டார்கள்.நிச்சயம் ஒரு நாள் ஆங்கிலமே கலவாத பைந்தமிழ் பேசி எம் தமிழ் சமூகம் தழைத்திருக்கும்.

                    • // ஒரே மொழியை கொண்டுதான் ஒரு நாட்டு மக்களை ஒருங்கிணைக்க முடியும் என்பதே தவறானது.வாதத்திற்காக சரி என்று வைத்துக் கொண்டாலும் அந்த தேசிய மொழி பல்வேறு மொழி பேசும் மக்களிடையேயான இயல்பான வர்த்தக,கலாசார,சமூக பரிமாற்றங்களிலிருந்து முகிழ்த்து வரவேண்டும்.அப்போதுதான் எந்த மொழி தகுதியானதோ அது தேசிய மொழியாக உருவெடுக்கும்.வலுக் கட்டாயமாக ஒரு மொழியை தேசிய மொழியாக கொண்டு வர எத்தணிப்பது நேர்மையற்றது.அநீதியானது. //

                      விடுதலை பெற்றதற்குப் பின்னால், ஒரு தீவிரமான, முனைப்பான போராட்டத்திற்கான தேவைகள் மறைந்த பிறகு, நேருவின் வாக்குறுதிகளை மீறி, இந்தி தேசிய மொழியாக திணிக்கப்படுவதாக ராஜாஜி எதிர்த்தார்..

                      // சோவியத்தின் சனநாயக பண்பு எங்கே.கேடுகெட்ட இந்திய ஏகாதிபத்தியவாதிகளின் தகிடுதத்தங்கள் எங்கே.இந்த இடத்தில் அண்மையில் நடுவண் அரசுப் பணி ஆணைய தேர்வுகளுக்கான விதிமுறைகளில் இந்திக்கு ஆதரவாகவும் பிற மொழி பேசுவோருக்கு எதிராகவும் செய்யப்பட தகிடுதத்தங்களை நினைவு படுத்தி கொள்க. //

                      நீங்கள் இப்போது நினைவு படுத்திக் கொள்ள வேண்டியது என்னவெனில், காங்கிரசுக்கும், ராஜாஜி போன்ற தலைவர்களுக்கும் சோவியத்தில் ரசிய மொழி தேசிய மொழியானது முன்னுதாரணமானது என்பதுதான்.. ராஜாஜிக்கு சொல்லத் தெரியாததை நான் என் மூளையைக் கசக்கி கண்டுபிடித்துச் சொல்லவில்லை..

                      // எனது இனப்பற்று எந்த வகையில் உங்களுக்கு வியப்பாக இருக்கிறது என்று சொன்னால் தெரிந்து கொள்வேன்.உங்களுக்கு பூணூல் பாசம் இருக்கும்போது எனக்கு எம் மொழி பேசும் இனம் மீது பற்று இருக்காதா. //

                      எனது பூணூல் பாசம் போல்தான் உங்கள் இனப்பாசமும் என்கிறீர்கள்.. பூணூலை இடது-வலதாக மாற்றி மாற்றி போடமுடிவதைப் போல உங்கள்து இனப்பாசமும், மார்க்கப் பாசமும், புரட்சிகர கொள்கைப் பாசமும் மாறி மாறி முன்னுக்கு வருவது சரிதானா, இது எங்கே கொண்டுபோய் விடும் என்று யோசித்துப் பார்க்கவேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்..

                      // இன்றும் கூட கவனித்து பார்த்தால் பார்ப்பனர்கள் உரையாடலில் மிகுதியாக ஆங்கிலத்தை பயன்படுத்துவதை பார்க்கலாம்.நடைபாதையில் பூட்டும்,செருப்பும் விற்கும் படிப்பறிவு இல்லாத தமிழர்களிடம் கூட இந்த மேதாவிகள் பிப்டி கொடுங்கோ,கவ் மச் என்று பேசுகிறார்கள். /

                      பார்ப்பனர்களை கண்கானிப்பதையே வேலையாக வைத்திருந்தால் அவர்கள் விடும் பீட்டர் மட்டும்தான் தெரியும்.. அக்கம் பக்கம் மற்றவர்களையும் பார்க்கப் பழகுங்கள்..

                      // இந்த இழிநிலையையும் நீண்ட நாள் நீடிக்க தமிழ்த் தாயின் புதல்வர்கள் அனுமதிக்க மாட்டார்கள்.நிச்சயம் ஒரு நாள் ஆங்கிலமே கலவாத பைந்தமிழ் பேசி எம் தமிழ் சமூகம் தழைத்திருக்கும்.//

                      முதலில் இங்கே பீட்டர் விட்டுக் கொண்டிருக்கும் திருவாளர் சூரியனாரை தமிழில் பின்னூட்டம் இடச் செய்யுங்கள்.. தமிழ்த் தாய் அகமகிழ்வாள்..

                    • // இந்தி கற்ற மலையாளிகளும், கன்னடர்களும், தெலுங்கர்களும் ஆரிய சூழ்ச்சிக்கு பலியாகிப் போனவர்கள்.அவர்களை வைத்து தமிழினத்தின் இன,மொழி உரிமை வேட்கையை எடை போட முடியாது.இந்தியின் உருவில் நீங்கள் வாழ வைக்க விரும்பும் எப்போதோ செத்து வழக்கொழிந்து போன சமத்கிருதத்தை விட செழுமையான,பழமையான,இனிமை மிகுந்த மொழிக்கு சொந்தக்காரர்கள் நாங்கள்.இன்னும் ஆயிரம் ஆண்டுகள் போனாலும் எம் மொழியை ஆரியக் கூட்டம் சிதைக்க அனுமதியோம்.//

                      மீண்டும் கேட்கிறேன்.. மலையாளிகளுக்கும், கன்னடர்களுக்கும் இருக்கும் தாய்மொழிப் பற்றும், மொழியால் ஏற்படும் பிணைப்பும், ஒற்றுமையுணர்வும் தமிழர்களுக்கு இருக்கிறதா..? இப்படி ஆரியம்-திராவிடம் பேசியே இயல்பான தாய்மொழிப் பற்றையும், தமிழர் என்ற உணர்வையும் சிதைத்தது போதாதா..?

                    • இராசாசிக்கு போட்டு விட்ட ஒளி வட்டம் கலைந்து விட கூடாது மிகவும் மெனக் கெடுகிறீர்கள்.விடுதலை பெற்ற பிறகுதானே அரசியல் சட்டம் வகுக்கப்பட்டது.உங்கள் சொற்களிலேயே ”விடுதலை பெற்றதற்குப் பின்னால், ஒரு தீவிரமான, முனைப்பான போராட்டத்திற்கான தேவைகள் மறைந்த பிறகு” இந்தியை தேசிய மொழியாக அந்த சட்டத்தில் வரையறுக்கப்பட்ட போது உங்கள் ஒளி வட்டம் தாங்கிய மொழிப் போர் வீரர் வாயை மௌனிக்கச் செய்தது என்னவோ.

                      இந்தியை தேசிய மொழியாக முழுமை பெற செய்ய அரசியல் சட்டம் வழங்கியிருந்த பதினைந்து ஆண்டு கால அவகாசம் 1965 சனவரி 26 ஆம் நாளோடு முடிவடைவதை அடுத்தே தமிழ் நாட்டில் மொழிப் போர் தீ மூண்டெழுந்தது.அதில் குளிர் காயலாம் என ஓடி வந்து குத்த வைத்த இராசாசியை,இந்த பதினைந்து ஆண்டு காலமும் இந்தி திணிப்பை எதிர்க்க துரும்பை கூட அசைக்காத இராசாசியை உங்கள் பூணூல் பாசத்தால் மொழிப் போர் வீரராக காட்ட முனைகிறீர்கள்.

                      இனப்பாசமும், மார்க்கப் பாசமும், புரட்சிகர கொள்கைப் பாசமும் மாறி மாறி முன்னுக்கு வருவது எங்கே கொண்டுபோய் விடும் என்று யோசித்துப் பார்த்ததில் ஏகாதிபத்திய எதிர்ப்பு,மற்றும் சங் பரிவார் கும்பலின் வகுப்புவாத பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணி கட்டுவதில் போய் முடியும் என விளங்கி கொண்டேன்.

                      \\பார்ப்பனர்களை கண்கானிப்பதையே வேலையாக வைத்திருந்தால் அவர்கள் விடும் பீட்டர் மட்டும்தான் தெரியும்.. அக்கம் பக்கம் மற்றவர்களையும் பார்க்கப் பழகுங்கள்..//

                      பார்ப்பனர் அல்லாதவர்களும் ஆங்கிலம் கலந்து பேசி தமிழை கொல்கிறார்கள்தான்.இதை ஆரம்பித்து வைத்து இன்னமும் வளர்த்து செல்பவர்கள் பார்ப்பனர்கள் என்பதுதான் குற்றச்சாட்டு.நோயின் மூலம் இன்னதென்று தெளிந்தால்தானே அதை போக்குவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.

                      \\முதலில் இங்கே பீட்டர் விட்டுக் கொண்டிருக்கும் திருவாளர் சூரியனாரை தமிழில் பின்னூட்டம் இடச் செய்யுங்கள்.. தமிழ்த் தாய் அகமகிழ்வாள்..//

                      நண்பர் சூரியன் அவர்களை தமிழில் எழுதுமாறு கேட்டுக் கொண்டு அதற்கான சுட்டியும் கொடுத்திருந்தேன்.அவர் தான் ஒரு பொதுத் துறை வங்கியில் 37 ஆண்டுகள் பணியாற்றியுள்ளதாக ஒரு பின்னூட்டத்தில் தெளிவாக சொல்லியிருக்கிறார்.அதை வைத்து அவர் ஒரு ஓய்வு பெற்ற மூத்த குடிமகனார் என்பதை புரிந்து கொள்ள முடியும்.எனது ஆலோசனைக்கு நன்றி தெரிவித்த அவர் தமிழில் எழுத முயற்சி செய்வதாக சொல்லி விட்டு தனக்கு கணினி தொழில் நுட்பத்தில் அவ்வளவாக பரிச்சயமில்லை என்றும் நேர்மையாக சொல்லி இருந்தார். முதியவர் ஒருவர் இந்த அளவுக்கு வலையுலகில் வந்து நடமாடுவதே ஒரு சாதனை எனும்போது அவரால் புதிய நுட்பங்களை பழகி கொள்ள முடியாமல் இருந்திருக்க வேண்டும்.முதிய வயதில் கணினி நுட்பங்களை கற்பது சற்று கடினம்தான் என்பதை அனைவரும் அறிவோம்.ஆகவே அவர் தமிழில் எழுதாமல் இருப்பதற்கு இயலாமையே காரணமாக இருக்கும்.உங்கள் சமூகத்தவர்கள் போல் அற்ப பெருமைக்கு ஆங்கிலத்தில் எழுதுகிறார் என நினைக்க வேண்டாம்.

                      இவ்வளவு பேச தெரிந்த உங்களுக்கு அரிகுமார் என்பவர் கூத்தில் கோமாளி வருவது போல் நம்முடைய விவாதத்தில் அங்கங்கே வந்து ஆங்கில பின்னூட்டம் போடுவது தெரியவில்லையா.நண்பர் சூரியனாவது கடந்த ஒரு மாதமாகத்தான் வினவில் எழுதுகிறார்.இன்னும் சிறிது காலம் கழித்தேனும் அவர் தமிழில் எழுத கற்றுக் கொள்ள கூடும்.உங்கள் அரிகுமாரோ நீண்ட காலமாக இங்கு ஆங்கிலமே கதி என கிடக்கிறார்.

                      மலையாளிகளுக்கும், கன்னடர்களுக்கும் இருக்கும் ”தாய்மொழிப் பற்றும், மொழியால் ஏற்படும் பிணைப்பும், ஒற்றுமையுணர்வும்” தமிழர்களுக்கு எதிரான பகையுணர்வின் அடிப்படையில் கட்டப்பட்டவை.அதனால்தான் காவிரியில் ஒரு சொட்டு நீர் கூட விட முடியாது என அடாவடியாக திமிர்வாதம் பேசுகிறது கன்னடர் ஒற்றுமை.அதே போலதான் மலையாள ஒற்றுமை.இதற்கு பெயர் ஒற்றுமை அல்ல.அநீதியின் மறு வடிவம்.தமக்கான நன்மை தேடுவதற்காக அல்லாமல் பிறருக்கு தீங்கு இழைக்க ஒன்று கூடுவதை ஒற்றுமை என கொண்டாட முடியாது.

                      கன்னடரும் மலையாளிகளும் தத்தமது தேசிய இன நலனுக்காக ஒன்று கூடினால் அப்போது தெரியும் அதை சீர்குலைக்க யார் யார் கிளம்புகிறார்கள் என்று.

                      ஆரியம்-திராவிடம் பேசுவது இயல்பான தாய்மொழிப் பற்றையும், தமிழர் என்ற உணர்வையும் சிதைக்கும் எனபது அவதூறு.எதிரியை அடையாளம் காண்பதும் இன நலனுக்காக பேசுவதும் தமிழ் உணர்வை வளர்க்குமே அல்லாது சிதைக்காது.

                      பெரியார் இந்தி திணிப்பை ஆதரித்தார் என்று முன்பு ஒரு அவதூறை அள்ளி விட்டு இன்னமும் அதற்கு ஆதாரம் தராமல் கள்ள மவுனம் சாதிக்கிறீர்கள்.

                    • // இராசாசிக்கு போட்டு விட்ட ஒளி வட்டம் கலைந்து விட கூடாது மிகவும் மெனக் கெடுகிறீர்கள்.//

                      நீங்கள் ராஜாஜிக்கு போட்ட முள் கிரீடம் எனக்கு ஒளிவட்டமாகத் தெரியவில்லை..

                      // விடுதலை பெற்ற பிறகுதானே அரசியல் சட்டம் வகுக்கப்பட்டது.உங்கள் சொற்களிலேயே ”விடுதலை பெற்றதற்குப் பின்னால், ஒரு தீவிரமான, முனைப்பான போராட்டத்திற்கான தேவைகள் மறைந்த பிறகு” இந்தியை தேசிய மொழியாக அந்த சட்டத்தில் வரையறுக்கப்பட்ட போது உங்கள் ஒளி வட்டம் தாங்கிய மொழிப் போர் வீரர் வாயை மௌனிக்கச் செய்தது என்னவோ. //

                      கவர்னர் ஜெனரல் என்ன செய்ய முடியும்..?! பிரதமர் நேருவிடம்தான் அவர் அதுபற்றி பேச முடியும்..

                      அரசியல் சட்டத்தில் இந்தி தேசிய மொழியாக அல்ல, ஆட்சி மொழியாகத்தான் வரையறுக்கப்பட்டுள்ளது..

                      அரசியல் சட்டத்தில் இந்தி தேசிய மொழியாக வரையறுக்கப்படுவதை டி.டி.கிருஷ்ணமாச்சாரி, டி.ஏ.ராமலிங்கம் செட்டியார், என்.கோபாலசாமி அய்யங்கார் போன்ற தமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்த்தனர்.. இணைப்பு மொழியான ஆங்கிலம் ஆட்சிமொழியாக இருப்பதே அன்றைய தேவை என்று வாதிட்டார்கள்.. இந்தி ஆதரவாளர்களுக்கும் – எதிர்ப்பாளர்களுக்கும் இடையே ஒரு சமரசமாக, இந்தி தேசிய மொழியாக அல்லாமல் ஆட்சி மொழியாக, அரசியல் சட்டத்தில் வரையறுக்கப் பட்டது..

                      ஜனவர் 1956-ல் ஆங்கிலம் ஆட்சி மொழியாகத் தொடர வேண்டும் என்ற தீர்மானத்தில், பெரியார், அண்ணாவுடன் இணைந்து ராஜாஜி கையெழுத்திட்டார்..

                      மார்ச் 1958-ல் நடந்த அகில இந்திய மொழிகள் மாநாட்டில் “இந்தி பேசுகிறவர்களுக்கு ஆங்கிலம் எப்படி அன்னிய மொழியோ அதே போல்தான் இந்தி பேசாத மக்களுக்கு இந்தி அன்னிய மொழி” என்று இந்தி ஆதரவாளர்களுக்கு உறைக்கும் வகையில் அறிவித்தார்..

                      இவையெல்லாம் சுதந்திராக் கட்சி 1959-ல் உருவாவதற்கு முன்பே இந்தி திணிப்பை எதிர்த்து ராஜாஜி எடுத்த நிலைப்பாடுகள்..

                      // இந்தியை தேசிய மொழியாக முழுமை பெற செய்ய அரசியல் சட்டம் வழங்கியிருந்த பதினைந்து ஆண்டு கால அவகாசம் 1965 சனவரி 26 ஆம் நாளோடு முடிவடைவதை அடுத்தே தமிழ் நாட்டில் மொழிப் போர் தீ மூண்டெழுந்தது.அதில் குளிர் காயலாம் என ஓடி வந்து குத்த வைத்த இராசாசியை,இந்த பதினைந்து ஆண்டு காலமும் இந்தி திணிப்பை எதிர்க்க துரும்பை கூட அசைக்காத இராசாசியை உங்கள் பூணூல் பாசத்தால் மொழிப் போர் வீரராக காட்ட முனைகிறீர்கள்.//

                      உங்களுக்கு தெரிந்ததெல்லாம் இதுதான் என்றால் அது உங்கள் பிரச்சினை..

                      // இனப்பாசமும், மார்க்கப் பாசமும், புரட்சிகர கொள்கைப் பாசமும் மாறி மாறி முன்னுக்கு வருவது எங்கே கொண்டுபோய் விடும் என்று யோசித்துப் பார்த்ததில் ஏகாதிபத்திய எதிர்ப்பு,மற்றும் சங் பரிவார் கும்பலின் வகுப்புவாத பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணி கட்டுவதில் போய் முடியும் என விளங்கி கொண்டேன். //

                      வகுப்புவாத பாசிச எதிர்ப்பிலும் மேற்படி பாசங்கள் முன்னுக்கு வர வாய்ப்புண்டு.. இன்னும் யோசிக்கவும்..

                      // பார்ப்பனர் அல்லாதவர்களும் ஆங்கிலம் கலந்து பேசி தமிழை கொல்கிறார்கள்தான்.இதை ஆரம்பித்து வைத்து இன்னமும் வளர்த்து செல்பவர்கள் பார்ப்பனர்கள் என்பதுதான் குற்றச்சாட்டு.நோயின் மூலம் இன்னதென்று தெளிந்தால்தானே அதை போக்குவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். //

                      உங்கள் மூலம் பக்கத்து வீட்டுக்காரனுக்கு ஒரு நோய் தொற்றிக் கொண்டால் அவனுக்கு வைத்தியம் பார்த்துக் கொள்வானா.. உங்களுக்குத்தான் வைத்தியம் பார்க்கவேண்டும் என்று அடம் பிடிப்பானா..?

                      // நண்பர் சூரியன் அவர்களை தமிழில் எழுதுமாறு கேட்டுக் கொண்டு அதற்கான சுட்டியும் கொடுத்திருந்தேன்.அவர் தான் ஒரு பொதுத் துறை வங்கியில் 37 ஆண்டுகள் பணியாற்றியுள்ளதாக ஒரு பின்னூட்டத்தில் தெளிவாக சொல்லியிருக்கிறார்.அதை வைத்து அவர் ஒரு ஓய்வு பெற்ற மூத்த குடிமகனார் என்பதை புரிந்து கொள்ள முடியும்.எனது ஆலோசனைக்கு நன்றி தெரிவித்த அவர் தமிழில் எழுத முயற்சி செய்வதாக சொல்லி விட்டு தனக்கு கணினி தொழில் நுட்பத்தில் அவ்வளவாக பரிச்சயமில்லை என்றும் நேர்மையாக சொல்லி இருந்தார். முதியவர் ஒருவர் இந்த அளவுக்கு வலையுலகில் வந்து நடமாடுவதே ஒரு சாதனை எனும்போது அவரால் புதிய நுட்பங்களை பழகி கொள்ள முடியாமல் இருந்திருக்க வேண்டும்.முதிய வயதில் கணினி நுட்பங்களை கற்பது சற்று கடினம்தான் என்பதை அனைவரும் அறிவோம்.ஆகவே அவர் தமிழில் எழுதாமல் இருப்பதற்கு இயலாமையே காரணமாக இருக்கும்.உங்கள் சமூகத்தவர்கள் போல் அற்ப பெருமைக்கு ஆங்கிலத்தில் எழுதுகிறார் என நினைக்க வேண்டாம். //

                      சரிதான்..

                      // இவ்வளவு பேச தெரிந்த உங்களுக்கு அரிகுமார் என்பவர் கூத்தில் கோமாளி வருவது போல் நம்முடைய விவாதத்தில் அங்கங்கே வந்து ஆங்கில பின்னூட்டம் போடுவது தெரியவில்லையா.நண்பர் சூரியனாவது கடந்த ஒரு மாதமாகத்தான் வினவில் எழுதுகிறார்.இன்னும் சிறிது காலம் கழித்தேனும் அவர் தமிழில் எழுத கற்றுக் கொள்ள கூடும்.உங்கள் அரிகுமாரோ நீண்ட காலமாக இங்கு ஆங்கிலமே கதி என கிடக்கிறார். //

                      அவர் முயற்சி செய்தார்.. தமிழின் நலனை முன்னிட்டு அவர் ஆங்கிலத்திலோ, தங்கிலீசிலோ தொடரலாம் என்று ரிஷி மற்றும் ஏனைய தமிழ் ஆர்வலர்களால் சிறப்புச் சலுகை வழங்கப்பட்டுள்ளது.. திரு.சூரியனுக்கு இப்போது நீங்கள் வழங்கிவிட்டீர்கள்.. மறுபடியும் முதலிலிருந்து ஆட்டத்தைத் துவக்கப்படாது..

                      // மலையாளிகளுக்கும், கன்னடர்களுக்கும் இருக்கும் ”தாய்மொழிப் பற்றும், மொழியால் ஏற்படும் பிணைப்பும், ஒற்றுமையுணர்வும்” தமிழர்களுக்கு எதிரான பகையுணர்வின் அடிப்படையில் கட்டப்பட்டவை.அதனால்தான் காவிரியில் ஒரு சொட்டு நீர் கூட விட முடியாது என அடாவடியாக திமிர்வாதம் பேசுகிறது கன்னடர் ஒற்றுமை.அதே போலதான் மலையாள ஒற்றுமை.இதற்கு பெயர் ஒற்றுமை அல்ல.அநீதியின் மறு வடிவம்.தமக்கான நன்மை தேடுவதற்காக அல்லாமல் பிறருக்கு தீங்கு இழைக்க ஒன்று கூடுவதை ஒற்றுமை என கொண்டாட முடியாது. //

                      ஒற்றுமைக்கு அருஞ்சொற்பொருள் எல்லாம் இருக்கட்டும்.. தமிழர்களுக்கு அப்படிப்பட்ட ஒற்றுமை தேவையில்லை என்கிறீர்களா..?

                      // கன்னடரும் மலையாளிகளும் தத்தமது தேசிய இன நலனுக்காக ஒன்று கூடினால் அப்போது தெரியும் அதை சீர்குலைக்க யார் யார் கிளம்புகிறார்கள் என்று. //

                      இன்னிக்கு புதன் கிழமை ஒற்றுமை.. சனிக்கிழமை ஒற்றுமை பற்றி அன்றைக்கு பதில் சொல்கிறேன்..

                      // ஆரியம்-திராவிடம் பேசுவது இயல்பான தாய்மொழிப் பற்றையும், தமிழர் என்ற உணர்வையும் சிதைக்கும் எனபது அவதூறு.எதிரியை அடையாளம் காண்பதும் இன நலனுக்காக பேசுவதும் தமிழ் உணர்வை வளர்க்குமே அல்லாது சிதைக்காது. //

                      அப்படியா..?! வளர்ந்திருக்கிறதா.. சிதைந்திருக்கிறதா..?!

                      // பெரியார் இந்தி திணிப்பை ஆதரித்தார் என்று முன்பு ஒரு அவதூறை அள்ளி விட்டு இன்னமும் அதற்கு ஆதாரம் தராமல் கள்ள மவுனம் சாதிக்கிறீர்கள். //

                      உங்கள் அறியாமையைப் போக்க தாமதமானால் கள்ள மவுனம் ஆகிவிடுகிறதா.. அதுவரை, 1965 இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தில் பெரியாரின் பங்கு என்ன என்று தேடிப்பாருங்கள்..

                    • உண்மையிலேயே எனக்கு மிக்க மகிழ்ச்சி.முதல் முறையாக பார்ப்பனர்கள் நிகழ்த்தும் சமூக தீமையொன்றை உண்மை என ஏற்றுக் கொண்டிருக்கிறீர்கள்.
                      ஆங்கிலம் கலந்து பேசும் நோயை பார்ப்பனர் அல்லாதவர்களிடம் மட்டும் தனியாக ஒழித்து பயனில்லை. பார்ப்பனர்கள் மீண்டும் மீண்டும் நோய் தொற்றை கொண்டு வந்து விடாமல் தடுக்க நோயின் மூலம் இன்னதென்று அனைவரும் உணர்ந்து தெளிவடைய வேண்டும்.பார்ப்பன பாசாங்கு தமிழருக்கு தேவையில்லை என அந்த நோயிலிருந்து விலகி இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் தமிழ் ஆர்வலர்கள பாடுபடுகிறார்கள்.

                      தேசிய மொழி,ஆட்சி மொழி சொற்பதங்களை பயன்படுத்துவதில் ஒரு கவனக் குறைவு நேர்ந்து விட்டது.நீங்கள் கூட \\ டி.டி.கிருஷ்ணமாச்சாரி, டி.ஏ.ராமலிங்கம் செட்டியார், என்.கோபாலசாமி அய்யங்கார் போன்ற தமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள் // என்று எழுதியுள்ளீர்கள்.அது பாராளுமன்றம் அல்ல,அரசியல் சட்ட அமைப்பு அவை.இதெல்லாம் பெரிய குறையல்ல.நாம் ஒன்றும் முதன்மைத்துவம் வாய்ந்த வரலாற்று ஆவணம் ஒன்றை எழுதிக் கொண்டிருக்கவில்லை.சொல்ல வந்த கருத்தை புரிந்து கொள்ளும் வண்ணம் எழுதியிருந்தால் போதும்.நீங்கள் சொல்லும் நபர்கள் இந்தியை ஆட்சி மொழியாக்குவதற்கு ஏன் எதிர்ப்பு தெரிவித்தார்கள் என்பதையும் நீங்கள் பதிவு செய்திருந்தால் அது நேர்மையாக இருந்திருக்கும்.எந்த விக்கிபீடியாவிலிருந்து இதை எடுத்தீர்களோ அதே கட்டுரையில் எதிர்ப்புக்கான காரணமும் போட்டுள்ளார்கள்.

                      This anti-Hindi block favoured retaining English as official language.[37][38] Their views were reflected in the following pronouncement of Krishnamachari:
                      We disliked the English language in the past. I disliked it because I was forced to learn Shakespeare and Milton, for which I had no taste at all. If we are going to be compelled to learn Hindi, I would perhaps not be able to learn it because of my age, and perhaps I would not be willing to do it because of the amount of constraint you put on me. This kind of intolerance makes us fear that the strong Centre which we need, a strong Centre which is necessary will also mean the enslavement of people who do not speak the language at the centre. I would, Sir, convey a warning on behalf of people of the South for the reason that there are already elements in South India who want separation…, and my honourable friends in U.P. do not help us in any way by flogging their idea of “Hindi Imperialism” to the maximum extent possible. So, it is up to my friends in Uttar Pradesh to have a whole India; it is up to them to have a Hindi-India. The choice is theirs.[33][39]

                      ஆக உங்கள் ஆட்களை இந்தியை எதிர்க்க வைத்ததே எங்கள் விடுதலை வேட்கைதான் என்பதை கருத்தில் வைக்கவும்.

                      அதே போன்றுதான் இராசாசியின் இந்தி எதிர்ப்பும் இருந்திருக்கிறது.சுதந்திரா கட்சி ஆரம்பிக்கு முன்னரே அவர் காங்கிரசிலிருந்து வெளியேறி காங்கிரசு சீர்திருத்த குழு,இந்திய தேசிய சனநாயக காங்கிரசு என்றெல்லாம் கட்சி நடத்தியுள்ளார்.இந்த கட்சிகள 1957 தேர்தல்களிலும் போட்டியிட்டுள்ளன. மேற்கு வங்க ஆளுநர்,தலைமை ஆளுநர்,ஒன்றிய அமைச்சர்,சென்னை மாகாண முதல்வர் என காங்கிரசு தயவில் பதவி சுகம் காணும்போதெல்லாம் அவருக்கு இந்தி எதிர்ப்பு கை வரவில்லை.பதவிகள் பறிபோய் காங்கிரசை எதிர்த்து தி.மு.க.வுக்கு இணையாக அரசியல் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இந்தி எதிர்ப்பை கையில் எடுத்திருக்கிறார்.

                      ஈழத்தமிழர்களுக்காக இரண்டு முறை ஆட்சியை இழந்ததாகவும்,இப்போது நடுவண் அரசு பதவிகளை அவர்களுக்காக தியாகம் செய்திருப்பதாகவும் சொல்லும் கலைஞரின் கூற்று எந்த அளவிற்கு உண்மையோ அந்த அளவிற்குதான் இராசாசியின் இந்தி எதிர்ப்பும் உண்மை.

                      \\தமிழர்களுக்கு அப்படிப்பட்ட ஒற்றுமை தேவையில்லை என்கிறீர்களா..?//

                      நிச்சயமாக தேவையில்லை.அக்கம் பக்கமாக வாழும் பிற தேசிய இன மக்களை வஞ்சித்து அவர்கள் உரிமைகளை மறுத்து அநீதி இழைக்க தமிழர் ஒற்றுமை பயன்பட கூடாது,அதே சமயம் நியாயமான எமது உரிமைகளுக்காக தமிழர் ஒற்றுமை உருவாக்கப் பட வேண்டும்.

                      \\உங்கள் அறியாமையைப் போக்க தாமதமானால் கள்ள மவுனம் ஆகிவிடுகிறதா.. அதுவரை, 1965 இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தில் பெரியாரின் பங்கு என்ன என்று தேடிப்பாருங்கள்..//

                      பெரியாரின் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம்..இந்தி திணிப்பை அவர் ஆதரித்தார் என்று கூசாமல் பொய் சொல்லி இருக்கிறீர்கள்.அதற்குத்தான் ஆதாரம் கேட்கிறேன்.

                    • // உண்மையிலேயே எனக்கு மிக்க மகிழ்ச்சி.முதல் முறையாக பார்ப்பனர்கள் நிகழ்த்தும் சமூக தீமையொன்றை உண்மை என ஏற்றுக் கொண்டிருக்கிறீர்கள். //

                      உங்கள் மகிழ்ச்சியை குலைப்பதற்காக மன்னிக்கவும்.. பார்ப்பனர்கள் ‘மட்டும்’ நிகழ்த்தும் சமூகத் தீமையென்று ஏற்றுக் கொள்ளவில்லை..

                      // ஆங்கிலம் கலந்து பேசும் நோயை பார்ப்பனர் அல்லாதவர்களிடம் மட்டும் தனியாக ஒழித்து பயனில்லை. பார்ப்பனர்கள் மீண்டும் மீண்டும் நோய் தொற்றை கொண்டு வந்து விடாமல் தடுக்க நோயின் மூலம் இன்னதென்று அனைவரும் உணர்ந்து தெளிவடைய வேண்டும்.பார்ப்பன பாசாங்கு தமிழருக்கு தேவையில்லை என அந்த நோயிலிருந்து விலகி இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் தமிழ் ஆர்வலர்கள பாடுபடுகிறார்கள். //

                      இந்தத் தமிழர்கள் இன்னும் பார்ப்பனர்களிடமிருந்துதான் ‘நோயை’ வாங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்ற மூட நம்பிக்கை உள்ளவரை பாடுபட்டுக் கொண்டே இருக்க வேண்டியிருக்கும்..

                      // தேசிய மொழி,ஆட்சி மொழி சொற்பதங்களை பயன்படுத்துவதில் ஒரு கவனக் குறைவு நேர்ந்து விட்டது.நீங்கள் கூட \\ டி.டி.கிருஷ்ணமாச்சாரி, டி.ஏ.ராமலிங்கம் செட்டியார், என்.கோபாலசாமி அய்யங்கார் போன்ற தமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள் // என்று எழுதியுள்ளீர்கள்.அது பாராளுமன்றம் அல்ல,அரசியல் சட்ட அமைப்பு அவை.இதெல்லாம் பெரிய குறையல்ல.நாம் ஒன்றும் முதன்மைத்துவம் வாய்ந்த வரலாற்று ஆவணம் ஒன்றை எழுதிக் கொண்டிருக்கவில்லை.சொல்ல வந்த கருத்தை புரிந்து கொள்ளும் வண்ணம் எழுதியிருந்தால் போதும்.//

                      சுதந்திரத்திற்குப் பிறகு மேற்படி அவை குடியரசுக்கு முந்தைய பாராளுமன்றமாகவும் (தற்போதைய மாநிலங்களவையைப் போன்று) இருந்தது.. அதன் உறுப்பினர்கள் மாகாண சபை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு சென்றவர்கள்.. சந்தேகம் இருந்தால் Constituent Assemby of India என்றோ Indian Constitunet Assembly என்றோ கூகிளில் தேடிப் பார்த்து தெளிந்து கொள்ளலாம்..

                      // நீங்கள் சொல்லும் நபர்கள் இந்தியை ஆட்சி மொழியாக்குவதற்கு ஏன் எதிர்ப்பு தெரிவித்தார்கள் என்பதையும் நீங்கள் பதிவு செய்திருந்தால் அது நேர்மையாக இருந்திருக்கும். //

                      அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தது இந்தியை தேசிய மொழியாக்குவதை.. சீட்டு குலுக்கிப் போட்டுப் பார்த்துத்தான் எதிர்த்தார்கள் என்று நான் நம்பவில்லையாதலால் அதற்கு காரணங்களையோ, பின்புல ஆராய்சிகளையோ எடுத்துக் காட்டும் அவசியமும் எழவில்லை.. என் நேர்மையை பறைசாற்றிக் கொண்டிருக்க வேண்டிய அவசியமுமில்லை..

                      // ஆக உங்கள் ஆட்களை இந்தியை எதிர்க்க வைத்ததே எங்கள் விடுதலை வேட்கைதான் என்பதை கருத்தில் வைக்கவும்.//

                      எங்கள் ஆட்களை இந்தியை எதிர்க்க வைத்தீர்களா..?! ஏன் ‘உங்கள்’ ஆட்கள், 1965-ல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தி 70 தமிழர்களை (அரசுக் கணக்கு) கொலை செய்ததை தடுக்க முடியவில்லை..? மாறாக அதைச் செய்த அன்றைய காங்கிரசு அரசைக் கண்டிக்காமல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை கண்டிப்பது, இந்தி திணிப்புக்கு ஆதரவான தமிழக அரசுக்குத் துணைபோய் அதன் மூலம் இந்தி திணிப்பை ஆதரிப்பதாகாதா..? :

                      //Periyar criticized the spontaneous and fierce agitation that raged through out Tamil Nadu between January 25 and February 15, 1965 against the imposition of Hindi resulting in several deaths, because it was rudderless and unorganized. //

                      http://www.periyar.org/html/dk_movement_eng.asp

                      // அதே போன்றுதான் இராசாசியின் இந்தி எதிர்ப்பும் இருந்திருக்கிறது.சுதந்திரா கட்சி ஆரம்பிக்கு முன்னரே அவர் காங்கிரசிலிருந்து வெளியேறி காங்கிரசு சீர்திருத்த குழு,இந்திய தேசிய சனநாயக காங்கிரசு என்றெல்லாம் கட்சி நடத்தியுள்ளார்.இந்த கட்சிகள 1957 தேர்தல்களிலும் போட்டியிட்டுள்ளன. மேற்கு வங்க ஆளுநர்,தலைமை ஆளுநர்,ஒன்றிய அமைச்சர்,சென்னை மாகாண முதல்வர் என காங்கிரசு தயவில் பதவி சுகம் காணும்போதெல்லாம் அவருக்கு இந்தி எதிர்ப்பு கை வரவில்லை.பதவிகள் பறிபோய் காங்கிரசை எதிர்த்து தி.மு.க.வுக்கு இணையாக அரசியல் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இந்தி எதிர்ப்பை கையில் எடுத்திருக்கிறார். //

                      ஏன், அப்படி அரசியல் செய்து திமுக தயவில் பதவியேற்கலாம் என்றா..?! பதவி பறிபோகும் என்று தெரிந்தும் தான் கொண்டுவந்த மாற்றியமைக்கப்பட்ட கல்வி திட்டத்தை (”குலக்கல்வித் திட்டம்”) கைவிடமாட்டேன் என்ற பிடிவாத்தால் பதவியை இழந்தவர், பதவி ருசிக்கு அலைந்தார் என்று பேசுவதுதான் நேர்மையா..!

                      // நிச்சயமாக தேவையில்லை.அக்கம் பக்கமாக வாழும் பிற தேசிய இன மக்களை வஞ்சித்து அவர்கள் உரிமைகளை மறுத்து அநீதி இழைக்க தமிழர் ஒற்றுமை பயன்பட கூடாது,அதே சமயம் நியாயமான எமது உரிமைகளுக்காக தமிழர் ஒற்றுமை உருவாக்கப் பட வேண்டும். //

                      இந்த பிற தேசிய இன மக்களின் உரிமைகள் எது என்று தீர்மானிப்பது யார்..? நீங்களா, அக்கம் பக்க தேசிய இன மக்களா.. தமிழர்களா..?!

                      // பெரியாரின் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம்..இந்தி திணிப்பை அவர் ஆதரித்தார் என்று கூசாமல் பொய் சொல்லி இருக்கிறீர்கள்.அதற்குத்தான் ஆதாரம் கேட்கிறேன். //

                      புத்தகம் திறந்துதான் இருக்கிறது.. ஆனால் படித்தால்தானே..
                      1965-ல் பெரியார் இந்தி திணிப்பை ஆதரித்தார் என்பது பொய் என்றால் இந்தி திணிப்பை எதிர்த்தார் என்பது உண்மை என்கிறீர்கள்.. வேறு நிலைப்பாடு எதுவும் இருக்கமுடியாது.. இருந்தால் அது கள்ளமவுனமாகத்தான் இருக்கமுடியும்.. எனவே எப்படி எதிர்த்தார் என்று காட்டிவிட்டு அதன்பின் என்னைப் பொய்யன் என்று குற்றம் சாட்டுங்கள்..

                      நேர்மையில்லாதவன், பொய்யன் என்றெல்லாம் கூறுவதன் மூலம் தனிநபர் தாக்குதலில் இறங்கிவிட்டீர்கள்.. இது உங்கள் பலவீனத்தைக் காட்டுவதாகவே எனக்குத் தோன்றுகிறது..

                    • \\ பதவி பறிபோகும் என்று தெரிந்தும் தான் கொண்டுவந்த மாற்றியமைக்கப்பட்ட கல்வி திட்டத்தை (”குலக்கல்வித் திட்டம்”) கைவிடமாட்டேன் என்ற பிடிவாத்தால் பதவியை இழந்தவர், பதவி ருசிக்கு அலைந்தார் என்று பேசுவதுதான் நேர்மையா..!//

                      இந்த அளவுகோலின்படி பார்த்தால் மன்மோகன் கூட பதவி ஆசை இல்லாதவர்தான்..பதவி பறிபோகலாம் என்ற நிலையிலும் அமெரிக்க அணு ஆற்றல் ஒப்பந்தத்தை விட்டுக் கொடுக்க மறுத்தார் மன்மோகன். அந்த அடிமைக்கு பதவியை விட அமெரிக்காவின் நலன்தான் பெரிது.இராசாசிக்கு பார்ப்பனியம்தான் பெரிதாக இருந்திருக்கிறது,அதனால்தான் போனவர் பதவி போட்டியை விட்டு விலகி இருக்கவில்லை.முதல்வர் பதவிக்கு சி.சுப்ரமணியை களமிறக்கினார், அவரை வைத்தாவது பார்ப்பனிய நலன்களை பேணிக் கொள்ளலாம் என்ற ஆசையிலும் கடைசியில் மண்ணள்ளி போட்டு விட்டார் காமராசர்.

                      இராசாசி மற்றும் கிருசுணமாச்சாரிகள் எல்லாம் இந்தி திணிப்பை எதிர்த்து போராடினர் என்று ஒப்புக் கொள்வதாக இருந்தால் இன்னும் ஐம்பது ஆண்டுகள் கழித்து கருணாநிதியும் செயலலிதாவும் கூட ஈழ விடுதலைக்கு அரும்பாடு பட்டனர் என ஒப்புக் கொள்ளவேண்டியிருக்கும். அவர்கள் எழுதியதும் பேசியதும் என அதற்கு ஆதாரங்கள் ஒரு மாநகராட்சி குப்பை வண்டி நிறைய கிடைக்கும்.

                      பெரியார் 1965 இந்தி எதிர்ப்பு போராட்டத்தை ஆதரிக்கவில்லை.உண்மைதான். நான் கேட்பது அதுவல்ல.இந்தி திணிப்பை ஆதரித்தார் என்ற உங்களுடைய அபாண்டமான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் என்ன என்பதுதான்,

                      நீங்கள் கொடுத்த சுட்டி என்ன சொல்கிறது.அமைப்பாக்கப்படாமல் வழிகாட்டுதல் இன்றி அந்த போராட்டம் நடந்ததால் அதனை விமரிசித்தார் என்கிறது.இதில் இந்தி திணிப்புக்கு ஆதரவு எங்கே இருக்கிறது.

                      1965-ல் காங்கிரசு அரசு இந்தி எதிர்ப்பு போராட்டத்தை ஒடுக்கியதை பெரியார் கண்ணை மூடிக் கொண்டு ஆதரிக்கவில்லை.இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கெடுத்த குன்றக்குடி அடிகளாரை கைது செய்ததை வெகுண்டெழுந்து கண்டித்தார் பெரியார்.அடிகளாருக்கு நீதிமன்றம் விதித்த தண்டனையையும் சாடினார்,1965-ல் மட்டுமல்ல தன் வாழ்நாள் எல்லாம் பெரியார் இந்தி திணிப்பை எதிர்த்தார் என்பதுதான் உண்மை.

                      இந்தி திணிப்புக்கு ஆதரவாகத்தான் 1965 இந்தி எதிர்ப்பு போராட்டத்தை எதிர்த்தார் எனபது அடிப்படையற்ற குற்றச்சாட்டு. விதண்டாவாதம் எனபதற்கு சரியான எடுத்துக்காட்டு.அவர் இந்தி திணிப்பை ஆதரித்தார் எனபது அவதூறுதான்.ஆகவே நீங்கள் தனிநபர் தாக்குதல் என கோபித்துக் கொண்டாலும் உங்கள் குற்றச்சாட்டு பொய் என சொல்வதில் எனக்கு தயக்கமில்லை.யானையை யானை என்றுதானே சொல்ல முடியும்.

                    • // இந்த அளவுகோலின்படி பார்த்தால் மன்மோகன் கூட பதவி ஆசை இல்லாதவர்தான்..பதவி பறிபோகலாம் என்ற நிலையிலும் அமெரிக்க அணு ஆற்றல் ஒப்பந்தத்தை விட்டுக் கொடுக்க மறுத்தார் மன்மோகன். அந்த அடிமைக்கு பதவியை விட அமெரிக்காவின் நலன்தான் பெரிது.இராசாசிக்கு பார்ப்பனியம்தான் பெரிதாக இருந்திருக்கிறது,அதனால்தான் போனவர் பதவி போட்டியை விட்டு விலகி இருக்கவில்லை.முதல்வர் பதவிக்கு சி.சுப்ரமணியை களமிறக்கினார், அவரை வைத்தாவது பார்ப்பனிய நலன்களை பேணிக் கொள்ளலாம் என்ற ஆசையிலும் கடைசியில் மண்ணள்ளி போட்டு விட்டார் காமராசர். //

                      முதலில் பதவி சுகம் என்றீர்கள்.. இப்போது பதவியை விட அவருக்கு பார்ப்பனிய நலன் பெரிது என்கிறீர்கள்..

                      இரண்டுமே அவருக்கு முக்கியம் என்றே வைத்துக் கொண்டாலும், ‘குலக் கல்வித் திட்டம்’ பெரும்பான்மையோர் எதிர்ப்பால், சி.சுப்ரமணியம் முதல்வரானலும் கூட, தோல்வியடையும் என்று தெளிவாகத் தெரிந்த போது பதவியைத் தக்க வைத்துக் கொள்ள, திட்டத்தை கைவிட்டு முதல்வராக நீடித்திருக்கலாம்.. நேருவோ, காமராஜரோ அதற்கு மறுப்பு தெரிவித்திருக்கப் போவதில்லை.. ஏன் அவர் பதவியில் ஒட்டிக் கொண்டிருக்கவில்லை என்ற காரணத்தையும் கண்டுபிடித்துச் சொல்லுங்கள்..

                      // 1965-ல் காங்கிரசு அரசு இந்தி எதிர்ப்பு போராட்டத்தை ஒடுக்கியதை பெரியார் கண்ணை மூடிக் கொண்டு ஆதரிக்கவில்லை.இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கெடுத்த குன்றக்குடி அடிகளாரை கைது செய்ததை வெகுண்டெழுந்து கண்டித்தார் பெரியார்.அடிகளாருக்கு நீதிமன்றம் விதித்த தண்டனையையும் சாடினார் //,

                      அருமை நண்பரான குன்றக்குடி அடிகளாரைக் கைது செய்த போது வந்த கோபாவேசம் துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களுக்காக வரவில்லையே..

                      // 1965-ல் மட்டுமல்ல தன் வாழ்நாள் எல்லாம் பெரியார் இந்தி திணிப்பை எதிர்த்தார் என்பதுதான் உண்மை. //

                      பிடிக்காதவர்கள் (உதாரணம் கண்ணீர் துளிகள் – அதாவது அண்ணா, திமுக) எதிர்த்தால் அவர்களை எதிர்த்தார்.. இந்தப் போக்குதான் இன்றும் திராவிட அரசியலில் தொடர்கிறது..

                      // இந்தி திணிப்புக்கு ஆதரவாகத்தான் 1965 இந்தி எதிர்ப்பு போராட்டத்தை எதிர்த்தார் எனபது அடிப்படையற்ற குற்றச்சாட்டு. விதண்டாவாதம் எனபதற்கு சரியான எடுத்துக்காட்டு.அவர் இந்தி திணிப்பை ஆதரித்தார் எனபது அவதூறுதான்.ஆகவே நீங்கள் தனிநபர் தாக்குதல் என கோபித்துக் கொண்டாலும் உங்கள் குற்றச்சாட்டு பொய் என சொல்வதில் எனக்கு தயக்கமில்லை.யானையை யானை என்றுதானே சொல்ல முடியும். //

                      ஏற்கனவே கூறியது போல், எதிர்க்கவேண்டிய நேரத்தில் எதிர்க்காமலிருப்பதும், எதிர்ப்பவர்களை எதிர்த்து போராட்டத்தை முடக்குவதும் உங்களுக்கு எதிர்ப்பாகத் தோன்றுகிறது.. யானையை யானை என்று சொல்கிறீர்கள்..?! மிக நல்ல கொள்கை.. தும்பிக்கை இருந்தால் சரிதான்..

                    • போதும்.மிகவும் மிருதுவாக மாவை அரைத்து விட்டோம்.முடிவு படிப்பவர்களின் கையில்.

                      தும்பிக்கை இருந்தால் சரிதான் என்ற நகைச்சுவை வாய் விட்டு சிரிக்க வைக்கிறது.நன்றி.ஆனா பாருங்க அம்பி சாதாரணமாக யானையால் தன தும்பிக்கையை பார்க்க முடியாது.

  28. Messers Harikumar,Raman,Veeran &Ambi,Today”s news item in The Times of India says about interim stay orders passed by The Madurai Bench of the Madras High Court staying a notification by Srirangam Ranganathaswamy Temple dated 13-2-2013 inviting applications to fill up 29 posts and reserving 9 posts for brahmins.The temple authority has invited applications to fill up various posts including junior assistant.The authority has kept some posts exclusively for brahmins,which is unfair and against the constitution,the petitioner V.Aranganathan said.

    • // The authority has kept some posts exclusively for brahmins,which is unfair and against the constitution,the petitioner V.Aranganathan said. //

      அரங்கநாத குருக்களை ஆகமக் கோவில்களில் அர்ச்சகராக்காவிட்டால் அவர் பெரியாருக்கு கோவில் கட்டி பூசை செய்ய ஆரம்பித்துவிடுவார் என்பதை எல்லா சிவாச்சாரியார்களும், பட்டாச்சாரியர்களும் புரிந்து கொண்டு வழிவிடுங்கோ…

      https://www.vinavu.com/wp-content/uploads/2010/10/ranganathan.jpg

  29. why is it unfair?

    I mean people didn’t make an effort all these years to try being a priest of the temple,now you want to be the priest to make political points?

    • What political points can be made by becoming temple priest?After making efforts to become temple priests,207 trainees are awaiting judgement from SC.What is your solution to those who have made efforts?How it is fair?You only told that Agama Sasthra is not rocket science.

    • ஏய்யா ஹரிகுமார்,tradition ன்னா இருந்தா மாத்த மாட்டீங்களோ,அப்டின்னா கடல் தாண்ட கூடாதுன்ற வழக்கத்த ஏய்யா மாத்தினீங்க.குடுமிய கட் பண்ணி கிராப்பு வச்சது எப்படி.பொண்ணு வயசுக்கு வர முன்னாடி கண்ணாலம் கட்டிறனும்னு tradition ஐ மாத்தி இப்ப முப்பது வயசு வரைக்கும் கட்டிக் குடுக்காம அது சம்பாதிக்கிற பணத்தையும் வாங்கி தின்கிறது என்ன tradition.உஞ்ச விருத்தி வழக்கத்த ஏன் இப்பல்லாம் கடைபிடிக்க மாட்டேங்கிறீங்க.முதல்ல நீ பாக்குற வெளிநாட்டு வேலைக்கு ஒரு மாதம் லீவு போட்டுட்டு வந்து தெரு தெருவா பிச்சை எடுத்து உஞ்ச விருத்தி tradition நை நிலை நாட்டிட்டு கோயில் tradition ஐ பத்தி பேசு.

  30. Koil koodaathu yenbathalla,koil kurippitta jaadhikkaarargalin thani udaimai alla yenbathai nilainirutthavendum Koilil thangal aadhikkam poyvidum yenbadharkkaaga pudhidhaaga angu pani puriya varuvorukku adhikka saadhigal thaguthiyai nirnayam seivadharkku avargalukku urimai illai

  31. koil enga yaaru sotha irunthichu,

    undiyala ellam govt thaana aattaya poduthu.

    Thaguthiyay nirnayam seyya avargalukku mattume urimai undu, kadal nambikkai illatha thiruttu thanam seythu oor sothai thingum arasiyal kattupadugalukku utpadathu.

    • Even for looting temple property,this man wants to have monopoly.What was happening at Chidambaram temple before it was taken over by HR&CE?Pazhani Andavar has become slim because of these Punniyavans.

  32. amam,naanga ellam thaan serndhu kollai adichom.

    thalaivar kalaignar rationa arisi mudhal 2G varaikkum sillarai paartha mahaan,avuru ithai ellam vuttruvara,avlo nallavara avuru?

  33. Tippu,answering you here

    You cannot negate permanent changes in language like Manipravalam/Urdu-Arabic-Turko language words in use/english words in use and sanskrit lives a much better,cleaner life than tamizh and ll continue to do so.

    So,in hope that a varuthapadatha valibar like you should not become a varunthithavikkum mudhiavara later,please dont have unreasonable expectations in life.

  34. and thippu,

    Impartiality of USSR?

    kalangaathale coemdyaa,

    Forget Central asian Stans,even Poland/East germany/Hungary had no right to cross the Iron Curtain?

    solradhu poi aana unmai maadhiri,yappa enakku ippave kanna kattudhu.

  35. Again thanks to Thippu for his kind understanding of my inability to write in Tamil.I have differences of opinion with your evaluation of Kalaignar.However I have regard for your admiration for Periyar.

  36. நண்பர் சூரியன்

    கலைஞர் மீது அரசியல் ரீதியாக விமரிசனங்கள் இருந்தாலும் தமிழின நலனை கருத்தில் கொண்டு பார்த்தால் கலைஞர் தமிழர்கள் தவிர்க்க முடியாத அரசியல் ஆற்றலாக திகழ்கிறார் என்பதை ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும்.வாக்கு அரசியலில் பார்ப்பனிய எத்தணிப்புகளுக்கு சவாலாக மக்கள் செல்வாக்கு உள்ள தலைவராக அவர் மட்டுமே களத்தில் நிற்கிறார்.அவர் போன்ற ஒரு தலைவர் இல்லாமலிருந்திருந்தால் பார்ப்பனியத்தின் முழுமையான வேட்டைக் காடாக தமிழகம் மாற்றப்பட்டிருக்கும்.

    சிற்றூர்ப்புற மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள்,பார்ப்பனிய சதியான தொழிற் கல்லூரி நுழைவு தேர்வை ரத்து செய்தது,சிறிய நகரங்களிலும் கல்லூரிகள் துவங்கியது, முசுலிம்களுக்கும் அருந்ததியருக்கும் உள் ஒதுக்கீடு என தமிழர் நலனில் அக்கறை கொண்டு ஆட்சி செய்தவர் அவர் என்பதையும்

    70-களின் பிற்பகுதியில் இட ஒதுக்கீட்டில் வருமான வரம்பு எனும் பார்ப்பனிய சதியை MGR அரங்கேற்றிய போது அதை கடுமையாக எதிர்த்து போராடி திரும்ப பெற வைத்தார் கலைஞர்,அவரது பரப்புரையால் தமிழின எதிரியாக அம்பலப்பட்டு போன MGR மக்களிடம் இழந்த செல்வாக்கை மீட்க பிற்படுத்தப்பட்டோர் ஒதுக்கீட்டை 31 லிருந்து 50 விழுக்காடு ஆக உயர்த்த வேண்டியிருந்தது.ஆக இன்று இந்தியாவில் எங்கும் இல்லாத அளவுக்கு 69 விழுக்காடு இட ஒதுக்கீடு தமிழகத்தில் அமுலில் இருப்பதற்கு கலைஞர்தான் காரணம் என்பதையும்

    பார்ப்பனியத்தின் பிரதிநிதியாக தமிழக அரசியலில் திட்டமிட்டு திணிக்கப்பட்ட செயலலிதா கூட சமூக நீதி காக்க பாடுபடுவதாக காட்டிக் கொள்ள வேண்டியிருப்பது கலைஞர் தலைமையில் தமிழின அணி வலுவாக இருப்பதால்தான்,காங்கிரசோ அல்லது பொதுவுடைமை கட்சியினரோ செயாவுக்கு மாற்றாக தி.மு.க.வின் இடத்தில் இருந்திருந்தால் தமிழகத்தில் சமூக நீதி சவக்குழியில் தள்ளப்பட்டிருக்கும் என்பதையும்

    நன்றியோடு நினைத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது.

    அதே சமயம் தனது பதவி ஆசையால் சொல்லப்போனால் பதவி வெறியால் தமிழினத்துக்கு பல சமயங்களில் கேடு விளைய காரணமாக இருந்தார் என்பதையும் சொல்லித்தான் ஆக வேண்டும்.

    MGR முதல்வரான 1977 சட்ட மன்ற தேர்தலில் கருப்பு குதிரையாக இருந்தார் கலைஞர்.யாரும் எதிர்பாராத வகையில் 48 தொகுதிகளை கைப்பற்றியது தி.மு.க.கலைஞர் முதல்வராக வேண்டும் என்று வாக்களித்தவர்கள் 42 லட்சம் பேர்.MGR முதல்வராக வேண்டும் என்று வாக்களித்தவர்கள் 52 லட்சம் பேர்.கிட்டத்தட்ட MGR க்கு இணையாக மக்கள் செல்வாக்கு பெற்றிருந்த கலைஞர் இந்த 10 இலட்சம் இடைவெளியை மிக எளிதாக கடந்து அடுத்த தேர்தலில் MGR ஐ வீழ்த்தி இருக்க முடியும்.ஆம்,அந்த அளவுக்கு MGR தனது கோமாளித்தனமான பாசிச ஆட்சியின் மூலம் மக்களிடம் செல்வாக்கை இழந்திருந்தார்.

    நாராயண சாமி தலைமையில் விவசாயிகள் MGR ன் மக்கள் விரோத ஆட்சியை மிக தீவிரமாக எதிர்த்து போராடிக் கொண்டிருந்தனர்,கடும் அடக்குமுறையை அவர்கள் மீது ஏவிய MGR அதன் உச்ச கட்டமாக திருச்சி வேப்பந்தட்டையில் துப்பாக்கி சூடு நடத்தி இரண்டு விவசாயிகளின் உயிரை குடித்தார்.TVS ஆலை தொழிலாளர்கள் போராடிய போது அ.தி.மு.க.குண்டர்களை ஏவி அவர்கள் மண்டையை பிளந்தார் MGR. இதன்னியில் கடும் விலைவாசி உயர்வு போன்றவற்றால் மக்களிடமிருந்து அன்னியப்பட்டு கிடந்தார்.விவசாயி,தொழிலாளி,மீனவ நண்பன் என்பதெல்லாம் திரையில் வந்த ஏமாற்றுகள் என்பதை மக்கள் உணர ஆரம்பித்திருந்தனர்,

    MGR ஆணையிட்டால் ஏழைகள் வேதனை பட மாட்டார் என்ற மாயை கலைந்து கொண்டிருந்தது.

    ஆனால் கலைஞரோ 1980 நாடாளுமன்ற தேர்தலில் கிடைத்த வெற்றியின் போதையால் அவசரப்பட்டு MGR ஆட்சியை கலைக்க செய்தார்.அதை வைத்து அனுதாபம் தேடி MGR மீண்டும் ஆட்சிக்கு வர கலைஞரே காரணமானார்.இந்த முறை வந்த MGR சும்மா போகவில்லை.இந்து முன்னணி,செயலலிதா என்று பார்ப்பனியத்தை தமிழர் தலையில் ஏற்றி வைத்து விட்டுத்தான் போனார்.

    பதவி ஆசையால் உந்தப்பட்ட கலைஞரின் இரண்டு ஆண்டுகள் பொறுமையின்மை தமிழினம் பல ஆண்டுகள் துன்புறுவதற்கு காரணமாகி போனது.

    இதை விட கொடுமை.அவரது பதவி ஆசை பாசிச பா.ச.க வுடன் கூட கை கோர்க்க வைத்தது.எந்த பார்ப்பனிய ஆதிக்கத்தை ஒழிக்க காலமெல்லாம் பெரியார் பாடுபட்டாரோ,தமிழர் நலனுக்காக தள்ளாத வயதில் கூட மூத்திரப் பையை கையில் சுமந்தபடி ஊர் ஊராய் அலைந்து திரிந்து பெரியார் யாருக்கு எதிராக மக்களை திரட்டினாரோ அந்த பார்ப்பனியத்தையே பெரியாரின் மாணவன் என பெருமையுடன் தன்னை அழைத்துக் கொள்கிற கலைஞர் தூக்கி திரிந்தார்.அவருக்கு எப்படி இருக்கிறதோ,இன்றைக்கு நினைத்தால் கூட ஒரு காலத்தில் கலைஞரை நேசித்தவன் என்ற முறையில் எனக்கு வெட்கமாக இருக்கிறது.

  37. Thanks again Thippu for listing out Kalaignar”s accomplishments in the cause of Tamils.Any political leader is subjected to certain slips.However,overall he continues to be the champion of Tamils.Nobody in India can ignore him.Like Periyar,in spite of his ripe age,he continues to fight for causes dear to his heart.

    • //Any political leader is subjected to certain slips.//

      Yes Sir. As long as a leader is not born in brahmin caste, the leader can slip.

      //he continues to fight for causes dear to his heart//
      🙂 I am not saying anything here…

  38. ஆயிரம் அம்பிகள், ரஜாஜிக்கு சப்பைகட்டு கட்டினாலும் , அவர் தமிழக அரசியலில் பார்ப்பன நலஙகளுக்காக, அவாளின் ஆதாயத்திற்க்கு மட்டுமே செயலாற்றினார் என்பது மறுக்க முடியாதது! அப்போதைய சென்னை மாகாண பிரதமராக இருந்த போதும், அதற்கு முன்பும் அவர் இந்தி தினிப்பை எதிர்க்கவில்லை! இந்தி எதிர்ப்பை பெரியார் 1936 -ல் அவரே முன்னின்றுநடத்தியதை அம்பிகள் மறைக்கலாமா? மாணவர்கள் பக்தவட்சலம் அரசால் கொலை செய்யப்படுவதை தான் எதிர்த்தார்! ஆனால் ராஜாஜியோ 1937-ல் இந்தியை கட்டய பாடமாக தமிழகத்தில் திணித்தவர்! தமிழக அரசியலில், பெரியார் மற்றும் அவர் சீடர்கள் செவாக்கு பெருவதை தடுக்கவே, பார்பபனர்கள் இந்தி திணிப்பை எதிர்ப்பது போல நாடகம் ஆடினர்! இப்பொது ஈழம் விடுதலைக்கு முதலை கண்னணீர வடிப்பது போல!

    • வந்துவிட்டீர்களா… சேரி மக்களை ஊருக்குள் கொண்டுவர என்ன செய்வது என்று விளக்கியருள வேண்டும்.. 3% பார்ப்பனர்களை அக்கிரகாரத்திலிருந்து விரட்டிவிட்டு அங்கே சேரிமக்களை குடியமர்த்தினாலும், மீதி (15 %) சேரிமக்களை எங்கே குடியமர்த்துவது என்று கேட்டால், பெரியார் பக்தர்களும், முன்னாள்-இந்நாள் உடன்பிறப்புகளும் ’குலக்கல்வித் திட்டம்’, கருவறைத் தீண்டாமை, இந்தித் திணிப்பு-எதிர்ப்பு என்று வூடு கட்டுகிறார்களே தவிர மேட்டருக்கே வரமாட்டேன் என்கிறார்கள்.. பார்ப்பனப் பல்லவியையே பாடிக்கொண்டிருக்கிறார்கள்.. நீங்களாவது என்ன செய்யவேண்டும் என்று தெளிவாகச் சொல்வீர்களா.. கட்டாயம் சொல்வீர்கள்.. நீங்கள் சொல்லாவிட்டால் வேறு யாரால் சொல்லமுடியும்..?!

      • அம்பி அக்ரக்காரம் வீடுகளைப் பார்த்ததில்லை போலிருக்கிறது. இரண்டு தெருக்களை இணைக்கும் அளவு நீண்ட வீடுகள் கொண்ட அ.காரத்தில் ஒரு வீட்டில் பத்து குடும்பங்கள் தங்க முடியும். சேரியில் ஒரு வீட்டில் பரப்பளவு 10க்கு 10தான். அதுவே அக்ரகார வீட்டின் பரப்பளவு எப்படியும் 1500 சதுர அடிக்கு குறையாது. அதனால் 18 சதவீதகுடும்பங்களை 3 சதவீத்தினர் குடியிருக்கும் வீடுகளில் தாராளமாக தங்க வைக்க முடியும். கண்டிப்பாக மீதம் வீடுகள் இருக்கும். மற்றபடி உங்கள் விவாதத்தில் தலையிடவில்லை. இந்த விவரப்பிழையை மட்டும் எடுத்தியம்பவே வந்தோம். தொடருங்கள் நன்றி

        • வசதியான அக்கிரகாரங்கள் போலிருக்கிறது.. ஒரு சேரியை இப்படியான ஒரு அக்கிரகாரத்துக்குள் திணித்து,அடைத்து விடலாம்தான்.. சேரிமக்களுக்கு கிடைக்கும் இந்த ’புதிய சேரியில்’ பல்வேறு வசதிகள் பற்றாக்குறைகளாகவே நீடிக்கும்.. கேட்காமலேயே ஆஜரான உங்கள் பதிலுக்கு நன்றி.. தொடர்வதற்கு என்ன இருக்கிறது..?!

      • அம்பி,

        குழாயடி சண்டையில் கைதேர்ந்த பெண்கள் மாதிரி சாடை பேச வேண்டாம். நேரடியாகவே கேட்கலாம்.

        \\ சேரி மக்களை ஊருக்குள் கொண்டுவர என்ன செய்வது என்று விளக்கியருள வேண்டும்.. 3% பார்ப்பனர்களை அக்கிரகாரத்திலிருந்து விரட்டிவிட்டு அங்கே சேரிமக்களை குடியமர்த்தினாலும், மீதி (15 %) சேரிமக்களை எங்கே குடியமர்த்துவது என்று கேட்டால், பெரியார் பக்தர்களும், முன்னாள்-இந்நாள் உடன்பிறப்புகளும் ’குலக்கல்வித் திட்டம்’, கருவறைத் தீண்டாமை, இந்தித் திணிப்பு-எதிர்ப்பு என்று வூடு கட்டுகிறார்களே தவிர மேட்டருக்கே வரமாட்டேன் என்கிறார்கள்.. பார்ப்பனப் பல்லவியையே பாடிக்கொண்டிருக்கிறார்கள்..//

        சேரிமக்களை எங்கே குடியமர்த்துவது என்று இது வரை நாம் விவாதித்ததாக நினைவில்லை.மேலும் பார்ப்பனர்களை துரத்தி விட்டு அவர்கள் இடத்தில் தாழ்த்தப்பட்டவர்களை குடி அமர்த்த வேண்டும் என்று திராவிட இயக்கங்கள் எப்போதும் சொன்னதில்லை.ஏன் உங்களுக்கு இந்த இட்டுக் கட்டும் வேலை.

        ”பார்ப்பன பல்லவி” யை பாடுவது உங்களுக்கு எரிச்சல் ஊட்டுகிறது என்பதற்காக நாங்கள் பேச கூடாது என்று உங்களால் உத்தரவு போட முடியாது.நாக்கை அறு,ஈயத்தை காய்ச்சி ஊத்து என உத்தரவு போட பார்ப்பன பாதந்தாங்கி மன்னர்கள் ஆட்சி நடக்கவில்லை.

        • திப்பு,

          // குழாயடி சண்டையில் கைதேர்ந்த பெண்கள் மாதிரி சாடை பேச வேண்டாம். நேரடியாகவே கேட்கலாம். //

          குழாயடி சண்டையில் கைதேர்ந்த பெண்கள் என்ன மாதிரி சாடை பேசுவார்கள் என்று எனக்குத் தெரியாது.. வேடிக்கை பார்க்கும் பழக்கமில்லை..

          // சேரிமக்களை எங்கே குடியமர்த்துவது என்று இது வரை நாம் விவாதித்ததாக நினைவில்லை. //

          இந்நாள் உடன்பிறப்பிடம் மேலே பின்னூட்டம் 31.1-ல் கேட்டேன்..

          ” அம்பி March 16, 2013 at 1:43 pm Permalink 31.1
          Sooriyan,

          Great post..

          Till now you have been complaining that brahmins and hinduism are evil.. What are your suggestions, necessary efforts to be taken on your part, for integrating Dalits with hindu non-brahmins with equality and honour..?

          Reply
          Sooriyan March 16, 2013 at 10:02 pm Permalink 31.1.1
          Brahmins are the ones who are keen to maintain the caste differences.Their philosophy was copied by caste Hindus.My complaints against brahmins and Hinduism continue.Unless all Hindus are treated equally,conversions will continue.First of all,brahmins should shed their superiority complex and join the mainstream. “

          அதாவது, ’பார்ப்பனர்களை குற்றம் சாட்டுவது இருக்கட்டும், தலித்துகளை சேரியிலிருந்து ஊருக்குள் கொண்டுவர அவர் பங்குக்கு என்ன செய்யப் போகிறார்’ என்று கேட்டதற்கு, ’பார்ப்பான் வழியே எம் வழி, கூடவே பார்ப்பானை குற்றம் சாட்டுவதும் எமது வழி, வேறொன்றும் அறியோம் பராபரமே’ என்கிறார்.. அவருடைய பதில்களை கவனமாகப் படித்து அவரது பிரச்சினைகளை நன்றாக புரிந்து கொண்டிருக்கும் நீங்கள், இதற்கான விளக்கத்தையும் கொடுப்பதில் தவறில்லை..

          // மேலும் பார்ப்பனர்களை துரத்தி விட்டு அவர்கள் இடத்தில் தாழ்த்தப்பட்டவர்களை குடி அமர்த்த வேண்டும் என்று திராவிட இயக்கங்கள் எப்போதும் சொன்னதில்லை.ஏன் உங்களுக்கு இந்த இட்டுக் கட்டும் வேலை. //

          அவர்கள் சொன்னதாகச் சொன்னேனா.. அவர்கள் சொல்லமாட்டார்கள் என்பது நன்றாகத் தெரியும்.. இந்த விடயத்தில் பார்ப்பானை விட அதிகமாக சாதிய நலன் பார்ப்பது யார் யார் என்று எல்லாத் தரப்பினருக்கும் தெரியும்..

          // ”பார்ப்பன பல்லவி” யை பாடுவது உங்களுக்கு எரிச்சல் ஊட்டுகிறது என்பதற்காக நாங்கள் பேச கூடாது என்று உங்களால் உத்தரவு போட முடியாது.நாக்கை அறு,ஈயத்தை காய்ச்சி ஊத்து என உத்தரவு போட பார்ப்பன பாதந்தாங்கி மன்னர்கள் ஆட்சி நடக்கவில்லை. //

          நான் எங்கே அய்யா உத்தரவு போட்டேன்..?! சுட்டிக் காட்டினால் எரிச்சல் வருவது உங்களுக்குத்தான்..

          • அம்பி,இது தகிடுதத்தம்.

            தலித் மக்களை பார்ப்பனர் அல்லாத இந்துக்களுடன் சமமாகாவும் கௌரவத்துடனும் ஒருங்கிணைக்க நண்பர் சூரியனின் ஆலோசனைகள் மற்றும் அவரது தரப்பில் அதற்காக செய்யப்பட வேண்டிய முயற்சிகள் யாவை என்று கேட்டிருக்கிறீர்கள்.

            அதற்கு அவர்

            சாதிய வேறுபாடுகளை அப்படியே வைத்திருப்பதில் பார்ப்பனர்கள் குறியாக இருக்கிறார்கள்.அவர்களது தத்துவத்தை சாதி இந்துக்களும் பின்பற்றி நடக்கிறார்கள்.அனைத்து இந்துக்களும் சமமாக நடத்தப்படாவிட்டால் மத மாற்றங்கள் தொடரவே செய்யும்.எல்லாவற்றுக்கும் முதலில் பார்ப்பனர்கள் தங்கள் உயர்வு மனப்பான்மையை கைவிட்டு மைய நீரோட்டத்தில் சேரட்டும் என்கிறார்.

            அவர் சொன்னது சரிதானே.இன்றைக்கும் பார்ப்பன சாதி குறிப்பிட்டு வேலைக்கு ஆள் தேவை என்று விளம்பரம் வருகிறதே.இந்த சாதி திமிரை முதலில் விட்டொழியுங்கள் என்கிறார் அவர்.

            இதை நீங்கள் எப்படி மறுபதிப்பு செய்கிறீர்கள்.\\பார்ப்பான் வழியே எம் வழி,// என்று அவரது சொற்களுக்கு பொருள் சொல்கிறீர்கள்.சாதி வெறி பாராட்டுவதில் பார்ப்பனர்களை பிற சாதி வெறியர்கள் பின்பற்றுவதுதான் நண்பர் சூரியனுடைய வழி என முடிவு செய்கிறீர்களே இதுதான் தகிடுதத்தம்.

            அடுத்தது உங்கள் பித்தலாட்டம்.

            தலித் மக்களை பார்ப்பனர் அல்லாத இந்துக்களுடன் சமமாகாவும் கௌரவத்துடனும் ஒருங்கிணைக்க என்ன வழி என நீங்கள் கேட்டதற்கு சேரியை காலி செய்து விட்டு தலித்களை ஊருக்குள் குடி வைக்க என்ன வழி என்று கேட்டதாக பொருள் சொல்வதும்

            அதற்கு அக்கிரகாரங்களிலிருந்து பார்ப்பனர்களை வெளியேற்றிவிட்டு அங்கு சேரி மக்களை குடி அமர்த்த வேண்டும் என்றுநிலப்பறிப்பு கொள்ளையர்கள் மாதிரி நாங்கள் சொன்னது போலவும் எழுதுவது அப்பட்டமான பித்தலாட்டம். அக்கம் பக்கமாக குடியிருந்தால் மட்டும் சாதிய நோய் ஒழிந்து விடுமா என்ன.அப்படி ஒழிக்க முடியும் என்றால் நகரங்களில் ஒழிந்திருக்க வேண்டுமே.சாதியம் மக்களின் மனங்களில் படிந்திருக்கும் நோய்.குடித்தனத்தை மாற்றினால் சாதியத்தை ஒழித்து விடலாம் எனபது மடமை.

            அடுத்தது விதண்டாவாதம்

            \\அவர்கள் சொன்னதாகச் சொன்னேனா.. // இப்படி திராவிட இயக்கத்தினர் சொன்னதாக சொல்லவில்லை என்று ஒரே போடாக போடும் நீங்கள் கீழே உள்ள மேற்கோளில் சேரிமக்களை எங்கே குடியமர்த்துவது என்று யாரை கேட்கிறீர்கள்.

            \\சேரி மக்களை ஊருக்குள் கொண்டுவர என்ன செய்வது என்று விளக்கியருள வேண்டும்.. 3% பார்ப்பனர்களை அக்கிரகாரத்திலிருந்து விரட்டிவிட்டு அங்கே சேரிமக்களை குடியமர்த்தினாலும், மீதி (15 %) சேரிமக்களை எங்கே குடியமர்த்துவது என்று கேட்டால், பெரியார் பக்தர்களும், முன்னாள்-இந்நாள் உடன்பிறப்புகளும் ’குலக்கல்வித் திட்டம்’, கருவறைத் தீண்டாமை, இந்தித் திணிப்பு-எதிர்ப்பு என்று வூடு கட்டுகிறார்களே தவிர மேட்டருக்கே வரமாட்டேன் என்கிறார்கள்//

            பெரியார் தொண்டர்களையும் தி.மு.க உடன்பிறப்புகளையும் நோக்கி எழுப்பப்படும் கேள்வி திராவிட இயக்கங்களை குறிக்காது என்று சொன்னால் அதுதான் விதண்டாவாதம்.

            இதனை படித்துவிட்டு தனிநபர் தாக்குதல், பித்தலாட்டக்காரன், விதண்டாவாதி,தகிடுதத்தக்காரன் என்று திட்டுவதாக ஒப்பாரி வைக்க வேண்டாம்.உங்கள் வாதங்கள் அத்தகையவை என்றுதான் எழுதி இருக்கிறேன்.முடிந்தால் அப்படிப்பட்ட தன்மையில் அவை இல்லை என்று விளக்கம் அளிக்கலாம்.

            உங்களால் முடியும்.எளிதில் புரியாத வண்ணம் எதையாவது போட்டு குழப்பி விளக்கம் அளித்து விட்டதாக தன் திருப்தி அடைய உங்களால் முடியும்.

            உங்களை தனிப்பட்ட முறையில் வசை பாட நமக்குள் சொந்த பகை ஏதுமில்லை.சொல்லப்போனால் எனது கருத்துக்களை வெளிப்படுத்த வாய்ப்பு ஏற்படுத்தி தருவதால் நல்ல நண்பர் நீங்கள்.

              • பொதுவாக பண்பாடு,நாகரீகம் இல்லாத அரிகுமாரின் பின்னூட்டங்களுக்கு மறுமொழி எழுதுவதில்லை.விவாதம் செய்யும் அளவுக்கு அவை அறிவார்ந்தவையும் அல்ல.இந்த முறை மறுமொழி எழுதுவது அறிவும் நாகரீகமுமற்ற இந்த பின்னூட்டத்திற்கு கண்டனம் தெரிவிக்கவே.

                \\please convert and become christians,u ll get respect if you deserve it//

                இழிவு தரும் சாதியத்தின் பிடியிலிருந்து தப்புவதற்காக கீழ்சாதியினர் மதம் மாறுகிறார்கள் என்ற எமது கூற்றுக்கு இதுதான் பதிலா. சரி ஒரு கிண்டல் என்று வைத்துக் கொண்டாலும் அது என்ன மரியாதைக்கு உரியவர்கள் என்றால் அது கிடைக்கும் என்று எழுதுவது.கீழ்சாதியினர் என்றால் மரியாதைக்கு உரியவர்களாக இருக்க மாட்டார்களா.இது ஆணவம்,தானே உயர்ந்தவன் என்ற மேல்சாதி ஆணவம்,.பிறரை இழிவு படுத்தும் அகங்காரம்.பார்ப்பன மேட்டிமைத்திமிர்.

                \\dont come and beg//

                கீழ்சாதியினர் யாரும் உம்மிடம் வந்து எனக்கு மரியாதை கொடு என்று இரந்து நிற்கிறார்களா.என்ன பேச்சு இது.தங்களுக்கான மரியாதையை எப்படி பேணிக்கொள்வது என்பதை சூத்திர பஞ்சம சாதியினர் அவர்களே முடிவு செய்து கொள்வார்கள்.அது மதம் மாறுவதோ,அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவதோ,படித்து முன்னேறி பெரிய பதவிகளில் அமர்வதோ,வலுவான அரசியல் இயக்கங்களை கட்டமைத்து அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதோ என்று அந்த வழி எதுவாக இருந்தாலும் அதை அந்த மக்கள் முடிவு செய்து கொள்வார்கள்.அதில் நீர் உமது கழுகு மூக்கை நுழைக்க தேவையில்லை.

                • Thippu

                  I have seen too many people in reality to make my judgement and i also know whose agenda is what,so please dont teach me about media stuff and how one thinks?

                  you yourself say keezh saadiyar?

                  There are many of those caste people who were called panjamars who have worked hard using their reservation and done well in life and i know many converts who have not done well enough.

                  I know many of those panjamars myself and they also know about your undiyal group.

                  so,dont give empty rhetoric like you are used to and please dont use words like nagareegam,panpaadu and all,it matters only if you follow it in action and not alone,if you talk big idealistic words.

                  Like i say not only today even 200 years before,a man gets respect only from his actions and not from his caste.

                  A brahmin who is not good/sincere wont get respect from anyone,he ll only get the benefit of the doubt but not free food.

                  We have also seen the families of brahmins/castes who cheated and got wealth and how they have been ruined because of that and the shudra/panjamars of those very village know very well the character of each and every person in the village.

                  People with good character get respect even today and your empty rhetoric ll only attract idle minds and not useful people.

                  Finally,i saw your description of the USSR democracy in another discussion and you never replied to it.That explains your level of education/character.

            • // எல்லாவற்றுக்கும் முதலில் பார்ப்பனர்கள் தங்கள் உயர்வு மனப்பான்மையை கைவிட்டு மைய நீரோட்டத்தில் சேரட்டும் என்கிறார். //

              அதுவரைக்கும் சேரி இருக்கட்டுமா..?!

              // தலித் மக்களை பார்ப்பனர் அல்லாத இந்துக்களுடன் சமமாகாவும் கௌரவத்துடனும் ஒருங்கிணைக்க என்ன வழி என நீங்கள் கேட்டதற்கு சேரியை காலி செய்து விட்டு தலித்களை ஊருக்குள் குடி வைக்க என்ன வழி என்று கேட்டதாக பொருள் சொல்வதும் //

              பிரிக்கப்பட்டிருக்கும் சேரியையும் ஊரையும் ஒருங்கிணைப்பதுதானே முதல்படி.. வேறு என்னவாறு பொருள் கொள்ள முடியும் என்பதையும் சொல்லுங்கள்..

              // அதற்கு அக்கிரகாரங்களிலிருந்து பார்ப்பனர்களை வெளியேற்றிவிட்டு அங்கு சேரி மக்களை குடி அமர்த்த வேண்டும் என்றுநிலப்பறிப்பு கொள்ளையர்கள் மாதிரி நாங்கள் சொன்னது போலவும் எழுதுவது அப்பட்டமான பித்தலாட்டம். //

              நீங்கள் அப்படிச் சொல்வீர்களா.?! மூணோடு கூட பதினைந்து சதவீதம் ( 3+15 %) அல்லவா..?!

              பித்தலாட்டம் என்று பொதுவாகச் சொல்லாமல், பார்ப்பனப் பித்தலாட்டம் என்று சொல்லலாமே..

              // அக்கம் பக்கமாக குடியிருந்தால் மட்டும் சாதிய நோய் ஒழிந்து விடுமா என்ன.அப்படி ஒழிக்க முடியும் என்றால் நகரங்களில் ஒழிந்திருக்க வேண்டுமே.சாதியம் மக்களின் மனங்களில் படிந்திருக்கும் நோய்.குடித்தனத்தை மாற்றினால் சாதியத்தை ஒழித்து விடலாம் எனபது மடமை. //

              என்ன நண்பரே தலைப்பையே மாற்றுகிறீர்கள்..

              கிராமங்களோடு ஒப்பிடுகையில் நகரங்களில் நிலைமை பரவாயில்லை..

  39. frankly jaathashatru,

    Rajaji doesn’t care,he tried to his bets to help but if the people want petromax light only,nobody bothers.

    His place in History was made the moment he was born.

  40. வேண்டுமென்றே உள் நோக்கத்துடன் பேசப்படும் வெட்டி வம்பளப்புகளுக் கெல்லாம் பதில் சொல்லத் தேவையில்லை. விவாதத்தை முடிக்கலாம்.

Leave a Reply to harikumar பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க