privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காஈழம் : திருச்சியில் பு.மா.இ.மு. போராட்டங்கள்!

ஈழம் : திருச்சியில் பு.மா.இ.மு. போராட்டங்கள்!

-

ழத்தமிழின மக்களின் சுயநிர்ணய உரிமையை நிலைநாட்ட….
இனப்படுகொலை குற்றவாளி ராஜபக்சேவை தண்டிக்க….
மீண்டும் தமிழகத்தில் மக்கள் எழுச்சியை வெடிக்கச் செய்வோம்!

இலங்கையில் கடந்த 2009ஆம் ஆண்டு சிங்கள இனவெறி அரசால் ஈழத் தமிழ் மக்களின் மீது தொடுக்கப்பட்ட இன அழிப்புப் போருக்கு எதிராக தமிழகம் அன்று கொதித்தெழுந்தது. ஆனால், இந்திய அரசோ அந்த இனப் படுகொலை யுத்தத்தை வழிகாட்டி இயக்கியது. இந்திய அரசின் இந்த அணுகுமுறையை எதிர்த்து தமிழக மாணவர்கள் அன்று போராட்டக் களத்தில் முன்னணியில் நின்றனர்.

இன்று ஈழ இன அழிப்பு யுத்தம் தொடர்பான ஆவணங்கள் நாளுக்கொன்றாய் வெளிவந்து கொண்டிருக்கின்றன. மீண்டும் தமிழகம் ஒரு மாணவர் எழுச்சியைக் காண தயாராகிறது என்பதை சமீப நாட்களாக நடந்து வரும் போராட்டங்கள் எடுத்துக் காட்டுவதாய் உள்ளன. இனப் படுகொலை தொடர்பாக ராஜபக்சே மீது ராஜபக்சேவையே விசாரணை நடத்தச் சொல்லும் ஐ.நா.சபையின் கபட நாடகத்துக்கு இனப்படுகொலையை வழிநடத்திய மன்மோகன் அரசிடமே ஜெனீவாவில் தீர்மானம் கொண்டுவரக் கோருவது ஏமாற்று வேலையே. உலக பயங்கரவாதி அமெரிக்காவையும் அதன் எடுபிடி நாடுகளையம் ‘சர்வதேச சமூகம்’ என்று கொண்டாடுவதும் அவர்களிடமே இனப்படுகொலைக்கு நீதி கேட்பதும் கேலிக் கூத்தாகும். பிரபாகரனின் மகன் மட்டுமல்ல பிரபாகரனும் சிங்கள ராணுவத்தால் அநீதியான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். தமிழர் உரிமைக்காக குரல் கொடுக்கும் சிலர் பிரபாகரனின் பிம்பத்தை பாதுகாப்பதற்காக அவர் கொல்லப்பட்டதை மறைக்க முயல்கின்றனர். இது சிங்கள இனவெறி அரசு மற்றும் ராஜபக்சேவை போர்க் குற்றத்திலிருந்து தப்பிக்கவே வழிவகுக்கும் என்பதை அவர்கள் உணர்வதில்லை.

போர்க் குற்றவாளி ராஜபக்சேவை தண்டிக்க இந்திய அரசை ஒத்துழைக்கக் கோருவது ‘கொக்கு தலையில் வெண்ணெய் வைக்கும் கதை’யாகவே முடியும். எனவே ஈழத்தின் துயரத்தை விலை பேசும் காங்கிரசு, பாரதீய ஜனதா, வலது-இடது போலி கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட தேசியக் கட்சிகள் முதல் டெசோ அமைப்பைத் தொடங்கி நாடகமாடும் கருணாநிதி, திடீர் ஈழத்தாயாக அவதாரமெடுத்திருக்கும் ஜெயலலிதா வரை அனைவரும் ஈழ விடுதலையின் எதிரிகளே! இனப்படுகொலை குற்றவாளி ராஜபக்சே கும்பலை தண்டிக்க சிங்கள குடியேற்றம்-இராணுவ ஆக்கிரமிப்பு உள்ளிட்ட இன அழிப்பு நடவடிக்கைகளை முறியடிக்க ஈழத்தமிழின மக்களின் சுய நிர்ணய உரிமையை நிலைநாட்ட குறுக்குவழி தீர்வு எதுவும் இல்லை.

  • ஈழத்தமிழன படுகொலைக்கு நீதிகேட்டு ராஜபக்சேவின் கூட்டாளி டெல்லிக்கும் பங்காளி அய்.நா-வுக்கும் காவடி தூக்குவதை நிராகரிப்போம்!
  • நூரம்பர்க் போர்க் குற்ற விசாரணையைப் போன்றதொரு விசாரணையைத் தவிர வேறு எதையும் ஏற்க மறுப்போம்!
  • தமிழகத்தின் வீதிகளில் மீண்டும் மக்கள் எழுச்சியை தோற்றுவிப்போம்!.

என்ற முழக்கத்தின் அடிப்படையில் திருச்சியில் புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி சார்பில் மார்ச் 13, 2013 அன்று போராட்டங்கள் நடைபெற்றன.

பெரியார் ஈ.வெ.ரா.கல்லூரியில் காலை உள்ளிருப்பு போராட்டம் நடத்த புமாஇமு தோழர்கள் தப்படித்து, வகுப்புவாரியாக சென்று அணி திரட்டினர். இதையறிந்த கல்லூரி நிர்வாகம், ‘கல்லூரியில் நிகழ்ச்சி நடத்த இருக்கிறோம். அதனால் 3 நாட்கள் வரை எந்த போராட்டமும் வேண்டாம் நிறுத்திவிடுங்கள் என்று கோரியது’. ஆனால், தோழர்கள் அதை ஏற்கவில்லை. இரண்டு மணி நேரம் மட்டும்தான் நடத்திக் கொள்கிறோம் எனக் கூறியும் நிர்வாகம் அனுமதி தரவில்லை. உடனே பு.மா.இ.மு. கிளைத் தோழர்கள் 10பேர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைப் பார்த்த மாணவர்கள் 20பேர் இப்போராட்டத்தில் கலந்துகொண்டு தங்கள் ஆதரவை தெரிவித்தனர். அதன்பிறகு போராட்டம் மாலை வரை தொடர்ந்து நடைபெற்றது.

மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காலை சட்டக்கல்லூரி மாணவர்கள் டோல்கேட் பகுதியில் ராஜபக்சே, மன்மோகன் கொடும்பாவியை எரித்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். சுமார் 60பேர் கலந்து கொண்ட இப்போராட்டத்தில் சட்டக்கல்லூரி பு.மா.இ.மு கிளை இணைச்செயலர் சாருவாகன் உட்பட முன்னணியாளர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டனர். இதன்பிறகு இன்று மதியம் சுமார் 3.30 மணியளவில் கைது செய்யப்பட்ட 8பேரை விடுவிக்கக் கோரியும் மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தியும் அதே டோல்கேட் பகுதியில் சட்டக்கல்லூரி மாணவர்கள் 150பேர் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். நகரின் முக்கியமான 4 வழி சாலையை மறித்து மாணவர்கள் போராடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கைது செய்யப்பட்ட 8பேரை இதே இடத்தில் கொண்டு வந்து விடவேண்டும் என மாணவர்கள் கூறியதையடுத்து அடுத்த அரை மணி நேரத்தில் தோழர்கள் 8பேர் விடுவிக்கப்பட்டனர். இதன்பிறகும் போராட்டத்தை முடிக்காமல் தொடர்ந்து கோரிக்கையை வலியுறுத்தி மறியலை நடத்தினர்.உளவுப்பிரிவை சேர்ந்த போலீசார்கள் மாணவர்கள் போராட்டத்தை திசைதிருப்பவும், நீர்த்துப்போகச் செய்யவும் மேற்கொண்ட முயற்சிகளை மாணவர்களே முறியடித்து வெற்றிகரமாக நடத்தினர். மாணவர்களின் உற்சாகத்தையும், போர்க் குணத்தையும் தூண்டும் வகையில் புமாஇமு தோழர் தப்படித்தது மாணவர்களை மேலும் உணர்வூட்டியது. போராட்டத்தை வீரியமடைய வைத்தது. கற்களையும், சாலை தடுப்பரண்களையும் வைத்து சாலையை மறித்து, மாணவர்களே போராட்டத்தை தங்களுக்குள் ஒற்றுமையுடன் ஒருங்கிணைத்து சிறப்பான விஷயமாகும். கூடிநின்ற பொதுமக்கள் மத்தியில் கோரிக்கையை விளக்கியும், போராட்டத்தை விளக்கியும் சட்டக்கல்லூரி கிளைத் தோழர்கள் பேசினர். இதற்கு பொதுமக்களும் நல்ல ஆதரவு தெரிவித்தனர். சிலிண்டர் போடும் ஒருவரும் கூட்டத்தில் மாணவர்களுடன் சேர்ந்து முழக்கமிட்டார். மாணவர்களின் இப்போராட்டம் வீரியமாக சென்றதை ஒட்டி சன் டி.வி, புதிய தலைமுறை போன்ற சேனல்கள் போராட்டத்தை நேரடியாக ஒளிபரப்பி பேட்டியெடுத்தனர்.  போலீசார் பலர் குவிக்கபட்டிருந்தும்ர மாணவர்களின் போராட்டத்தை தடுக்க முடியவில்லை. அனைவரும் கைகட்டி நின்று வேடிக்கை பார்க்கும் அளவுக்கு போராட்டத்தின் வீரியம் இருந்தது. இந்த போராட்டம் சுமார் 2மணிநேரம் நடைபெற்றது.

திருச்சி காட்டூர் உருமு தனலெட்சுமி கல்லூரியில் இலங்கையில் பொது வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்தனர். சுமார் 200பேர் கலந்து கொண்ட இந்த போராட்டத்தில் திருச்சி புமா.இமு அமைப்பு கமிட்டி உறுப்பினர் மாணவர்களின் போராட்டத்தை ஆதரித்து பேசியதோடு, மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், இப்பிரச்சினையில் நமது அரசியல் நிலைப்பாட்டையும் விளக்கி பேசினார். வேறு எந்த அரசியல் கட்சிகளையம் மாணவர் அமைப்புகளையும் கல்லூரிக்குள் அனுமதிக்காத நிலையில் நம்மை மட்டும் அனுமதித்து மாணவர்களிடையே போராட்டக் களத்தில் பேச அனுமதித்தனர்.

பு.மா.இ.மு. சார்பாக தொடர்ந்து தொடர் போராட்டங்களை மேற்கொள்ள இருக்கிறோம். பாரதிதாசன் பல்கலைக் கழகத்திலும் போராட்டத்தை முன்னின்று நடத்த, மாணவர்களை சந்தித்து பேச அழைப்பு விடுத்துள்ளனர்.