ஈழத்தமிழரின் தன்னுரிமைக்கான மாணவர் முன்னணியின் போராட்ட அறிவிப்பு!
எங்களுடைய இந்த அமைப்பின் உடனடி செயல்திட்டமாக சென்னையிலுள்ள பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து இலங்கை செல்லும் விமானங்களை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்த உள்ளோம்.
ஈழத்தமிழரின் தன்னுரிமைக்கான மாணவர் முன்னணி சார்பில்
ஈழத் தமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு
ராஜபக்சேவின் கூட்டாளி டெல்லிக்கும்,
பங்காளி ஐ.நா.வுக்கும் காவடி தூக்குவதை நிராகரிப்போம்!
நூரம்பர்க் போன்ற போர்க்குற்ற விசாரணைக்குக்
குறைவான எதையும் ஏற்க மறுப்போம்!
ஈழத்தமிழின மக்களின் சுயநிர்ணய உரிமைக்காக
பொதுவாக்கெடுப்பு நடத்தப் போராடுவோம்!
தமிழகத்தின் வீதிகளில் 80களின்
மக்கள் எழுச்சியை மீண்டும் வெடிக்கச் செய்வோம்!
என்ற முழக்கத்தின் அடிப்படையில், அனைத்துக் கல்லூரிகளைச் சார்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்களை அணிதிரட்டி,
18.03.2013 திங்கட்கிழமையன்று காலை 11.30 மணியளவில், திரிசூலத்தில் அமைந்துள்ள பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து இலங்கை செல்லும் விமானங்களை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்த இருக்கிறோம்.
எமது இப்போராட்ட அறிவிப்பை நிகழ்வை தங்களது ஊடகத்தில் வெளியிடுமாறும், நாளை நடைபெறவிருக்கிற இப்போராட்டத்தைப் பதிவுசெய்ய தங்களது செய்தியாளரை அனுப்பி வைத்து ஆதரவளிக்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம்.
இப்போராட்ட நிகழ்வு குறித்த விரிவான தகவல்களுக்கும், எம்முடனான தொடர்பிற்கும் 95661 49374 என்ற எண்ணை அழைக்கவும் விழைகிறோம்.
இவண்
கணேசன், ஒருங்கிணைப்பாளர்,
ஈழத்தமிழரின் தன்னுரிமைக்கான மாணவர் முன்னணி
Sensible and logical step. My wishes and supports to you bros.
good luck ,cannot believe this,teach them good/ strong /never should not forget in their history——good lesson.
MGR did this once.IT WILL WORK.
VERY, VERY IN THIS STAGE. LOVE U ALL.YOU WILL BE REMEMBERED 4 THIS IN OUR TAMIL HISTORY.—————-TAKE CARE MY TAMIL CHILDREN.
See the arrogance of the Sri Lanka Ambassador. He abuses the student movement and says the student agitation is a terrorist movement. What kind of a person is he? why are we allowing him to speak like this. Sivarasa
Watch his arrogance here
http://ibnlive.in.com/cnnibnvideos/top-us/379523.html
suhasini haider is subramanian swamy’s daughter.
சமுதாயத்தில் வரக்கூடிய பிரச்சனைகளுக்காக தத்துவமா ? அல்லது தத்துவத்திற்காக பிரச்சனைகளையும் தீர்வுகளையும் மாற்றி அமைக்க முடியுமா ? பிரச்சனைகளை தீர்ப்பதர்க்குதான் தத்துவம் ஒழிய , தத்துவத்திற்காக பிரச்சனைகளை மாற்ற முடியாது. உதரணமாக கார்ல் மார்க்ஸ் பொருள் முதல் வாதம் உருவாக்கியது ஒவ்வொரு சமூகத்திலும் உள்ள தன்மை ஆய்வு செய்து அதனை உருவாகினர். இங்கு தனி ஈழம்தான் தீர்வு என்று தமிழ் ஈழ மக்களே முடிவு செய்து விட்ட பின்னர் அதற்க்கு தன்னுரிமை என்று கூறுவது மிகவும் வரட்டுவதிகல்தான் அவ்வாறு கூறுவார்கள். மேலும் ஒன்றுபட்ட இலங்கைக்குள்தான் தீர்வு என்பதை முடிவு செய்ய நீகள் யார் ?
தமிழ்தேசியவாதிகளுக்கு தத்துவம் எல்லாம் கூட இருக்கிறதா ? தன்னுரிமை என்று கூறுவது வறட்டுவாதம் என்று கூறியுள்ளீர்கள் தத்துவத்தில் வறட்டுவாதம் என்றால் என்ன என்பதையும் கூறுங்கள்.
மேலும் ஈழத்தமிழர்களுக்கு எது தேவை எது தேவை இல்லை என்பதையெல்லாம் முடிவு செய்வதற்கான அதிகாரத்தை தமிழகத்திலுள்ள முட்டாள்களிடம் கொடுத்தது யார் ? இங்குள்ள தமிழனைப் பற்றி பேசுவதற்கே வக்கில்லை இந்த லட்சணத்தில் கடல் கடந்து போய் புரட்சி செய்கிறார்களாம்.
This is not Tamil support. This is Hindu Tamil Support
rizvi,
appo muslim tamil supporta eppadi kaata poreenga?