privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஅரசியல்ஊடகம்மகாபாரதத்தின் மூலம் இந்து ராஷ்டிரம் !

மகாபாரதத்தின் மூலம் இந்து ராஷ்டிரம் !

-

(1990-ம் ஆண்டு வெளியானது)

வ்வொரு நாட்டுக்கும் ஏடறிந்த வரலாறு உண்டு. ஏடறிந்த கலாச்சாரம் உண்டு. ஆனால, அந்த வரலாறுகள் ஆளும் வர்க்கங்கள் தங்கள் விருப்பத்துக்கேற்ப திரித்துப் புரட்டி எழுதிக் கொண்ட வரலாறுகளாகவே இருக்கின்றன. இந்தப் புரட்டல்களைத்தான் வரலாறு என்று பள்ளிக்கூடத்தில் படிக்கிறோம். 1857 ‘முதல் இந்திய சுதந்திர’ப் போராட்டத்தை, கடற்படை எழுச்சியை ‘சிப்பாய் கலகம்’ என்றும், இந்து-முஸ்லீம் வகுப்புக் கலவரம் என்றும் அவதூறு செய்கிறார்கள்; கேரள மாப்பிளா எழுச்சியையும் அவ்வாறுதான் கொச்சைப் படுத்துகிறார்கள்; மிகச் சமீபத்தில் நடந்து வருகிற ஈழத்தமிழர் சுயநிர்ணய உரிமைப் போரைப் பற்றிக் கூட சிதைத்து, திரித்துத்தான் செய்திகளை வெளியிடுகின்றன ஆளும் வர்க்க குழலூதிகளான செய்தி ஏடுகள். அடுத்த தலைமுறைக்கு இது தான் வரலாறு என்று சொல்லப்படும்.

இன்றைய இந்தியச் சமூகம் எப்படி இருக்கிறது? சகித்துக் கொள்ள முடியாதபடி நாறிக் கொண்டிருக்கிறது. ஏற்றுமதிப் பொருளாதாரத்தில் நாடு பணயம் வைக்கப்படுகிறது. ஏகாதிபத்திய அந்நியக் கூட்டு பங்குப் பெருகியுள்ள கலாச்சாரத்துறை ஆடம்பர, ஐந்து நட்சத்திரக் கலாச்சாரத்தின் சுமையால் திணறுகிறது. அரசியலில், காஷ்மீர் வடகிழக்கு மாநிலங்களில் தேசிய இனங்கள் சுய நிர்ணய உரிமைக்கான ஆயுதப் போரை விடாது நடத்துகின்றன. ஆள்பவர்களோ இந்திய தேசீயத்தை நிரூபிக்க முடியாது முழிக்கிறார்கள்.

இப்படிச் சுற்றிலும் எரிந்து கொண்டிருக்கும் பிரச்சனைகள் பற்றி ஏதாவது தீர்வு சொல்ல வேண்டியிருக்கிறது. அரசு அடக்குமுறைக்கு அஞ்சுபவர்கள் வலுவான ஆயுதத்தைக் களத்திலே இறக்கி விட்டிருக்கிறார்கள்.

தொலைக்காட்சிமேல்நாட்டு உபதேசம் தான் அதற்கும் காரணம். மார்ஷல் மக்ளூகன் என்ற அமெரிக்கர், ஏகாதிபத்திய விசுவாசி சொன்னார்: “மக்கள் தொடர்புச் சாதனமே இந்த யுகத்தின் செய்தி!” அவர்களின் அடியைப் பின்பற்றி டி.வி. (T.V)-ஐ இங்கே அவிழ்த்துவிட்டார்கள்.

ஞாயிற்றுக் கிழமைகளில் நகரங்களில் தெருக்களைப் பார்த்தால் உண்மை புரியும், போர் முற்றுகை நடந்திருப்பது போலவே காட்சியளிக்கும். முற்றுகையை வீடுகளுக்குள்ளே டி.வி. தான் நடத்துகிறது.

“7 மணிக்கு ரங்கோலியோடு எழுந்திருங்கள்; 8 மணிக்கு விளம்பரதாரர் நிகழ்ச்சி பார்த்துக் கொண்டே சிற்றுண்டி தயாரியுங்கள். 9 மணிக்கு பஞ்சபாண்டவர், கௌரவர், திரௌபதியோடு அமர்ந்து சிற்றுண்டி சாப்பிடுங்கள்….” இரவுவரை நிகழ்ச்சிகளுக்குப் பஞ்சமில்லை. கண்களுக்கு சுயிங்கம் போல டி.வி. ஞாயிற்றுக் கிழமைகளில் நீங்கள் துணியைச் சலவைசெய்ய, உங்கள் மூளைச்சலவைக்கோ மகாபாரதம்.

ஏறக்குறைய 2 வருடம் ஓடி முடிந்த இராமாயணம், மகாபாரதம் மக்களிடம் அதிவேகமாகப் பிரமிப்பை ஊட்டி விட்டது காட்சிப் பிரமிப்புகள் மட்டுமல்ல; கருத்து ரீதியிலும் அவை மோசமான விளைவை விளைவித்து விட்டன. ஒவ்வொரு சம்பவத்திலும் சூளுரைகள். துரியோதனன் துகிலுரித்தான்; “அவனைக் கொன்று ரத்தத்தை எடுத்துப் பூசாமல் கூந்தலை முடிய மாட்டேன்” என்று சபதம் போடுகிறாள் திரௌபதி. அபிமன்யு போர்க்களத்தில் கொல்லப்படுகிறான்; “அந்தப் பதர்கள் கவுரவர்களைப் பூண்டோடு ஒழிக்காமல் விடப் போவதில்ல” என்ற சூளுரைக்கிறான் அர்ச்சுனன். “மன்னிக்க மாட்டேன்” “பழிக்குப் பழி வாங்குவேன்” என்ற சூளுரைகள் அப்படியே ரீங்கரிக்கின்றன.

நடப்பு அரசியலுடன் பொருத்தினால் இந்தச் சூளுரைகள் முஸ்லீம்களுக்கெதிராக இந்து மதவாதத்தைத் தூண்ட ஆர்.எஸ்.எஸ்.ஸுக்கு கிடைத்த மந்திர ஆயுதங்கள்.

இதுநாள் வரை ராமாயண, மகாபாரதக் கதைகள் இருந்தனவே அவை பாதிப்பு ஏற்படுத்தி இருக்க வேண்டுமே என்ற கேட்கலாம். பத்திரிக்கை, ரேடியோ, காவியப் பகுதிகளைக் கொண்ட சில சினிமாப் படங்கள். தெருக் கூத்துக்கள் நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தத்தான் செய்கின்றன., என்றாலும் டி.வி-யில் முழு அளவில் காவியங்களைக் காட்டுவது, காட்சி உருவத்தில் நேருக்கு நேர் பார்த்து அனுபவிப்பது அதிகமான பாதிப்பையே கொடுக்கும்.

இராமயணம், மகாபாரதத்தையே பலர் பலவிதமாக எழுதப்பட்ட நூல் வடிவத்தை மட்டும் இப்படிக் குறிப்பிடுகிறோம். எழுதப்படாமல் செவி வழியாக பல வடிவங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிம் கூத்து வடிவங்கள், பயிலாட்டங்கள் உண்டு. ஒன்றுக்கொன்று அவை கதையளவில் கூட ஒத்துப் போவதே கடையாது.

ஆனால் இந்த டி.வி., மகாபாரதமோ இதுவரை வழங்கிய வடிவங்கள் அனைத்தினும் விரிவானது; காட்சிகள், பின்னணி இசை, துல்லியமாகக் கேட்கும் வசனங்கள் ஆகியவை தொலைக்காட்சிக்கே உரிய வலிமை. எல்லா வகை மகாபாரதக் கதைகளையும் ஒரே தட்டில் தகர்த்து விட்டு நாடு முழுவதற்கும் சோப்ரா மகாபாரதமே அங்கீகரிக்கப்பட்ட இறுதி வடிவமாகிவிட்டது.

இராமாயணத்தை எடுத்துக் கொண்டால் வால்மீகி இராமாயணம், கம்பராமயணம் பலவிதங்களில் வேறுபடுகிறது. இராவணன் சீதையை இழுத்துச் சென்று விமானத்தில் ஏற்றினான் என்கிறது வால்மீகி, ஆனால் அது ‘தமிழ்ப் பண்பாட்டுக்கு இழுக்கு என்று சொல்லி சீதை நின்ற பூமியோடு துண்டாக்கி எடுத்துச் சென்றான் இராவணன் என்று கம்பர் பாடுகிறார். சரியாகச் சொன்னால், இதுவே வால்மீகியைச் சிதைப்பதுதான். இன்று ராமானந்த சாகர், சோப்ரா போன்றவர்கள் பல இடங்களில் சிதைத்து உருட்டிப் புதிதாக ஒரு கதையை உருவாக்கிய பிறகு வால்மீகி, வியாசர் மற்றும் பிற நாட்டுப்புற வெளிப்பாடுகள் காலாவதியாகி விட்டன. இப்போது ராமானந்த சாகர் தான் வால்மீகி; சோப்ராதான் வியாசர்.

கிருஷ்ணன்இன்றைய நிலைமைகளுக்குப் பொருந்தி வரும்படி சோப்ரா வசனங்கள் சேர்த்து காட்சி அமைப்புகளை உருவாக்கியிருக்கிறார். ஏற்கனவே மகாபாரதத்தை முழுக்க ஆக்கிரமித்து விட்ட கிருஷ்ணன் பற்றியும், சோப்ரா செய்த தில்லுமுல்லுகள், சிதைப்புகள் பற்றியும் விரிவாகப் பார்த்தால்தான் எந்த அளவுக்கு மக்கள் ஏமாறப் பட்டிருக்கிறார்கள் என்பது புரியும்.

மகாபாரதத்தில் மையமாக முக்கியப் பாத்திரமாற்றுபவராக கிருஷ்ணன் வருகிறார். மகாபாரதத்தை டி.வி. தொடராகத் தயாரித்த சோப்ரா, வழங்கப்படும் கதையை விட ஒருபடி மேலே போகிறார். பாகவத புராணக்கதையில் சொல்லப்படும் கிருஷ்ணரின் கதைகளை எடுத்து மகாபாரதத்திலேயே சேர்த்து விடுகிறார். கிருஷ்ணாவதாரத்தின் முக்கியத்துவம் வரவேண்டாமா என்று திருப்பிக் கேட்கிறார் சோப்ரா.

ஆனால் அகழ்வாராய்ச்சியாளர்களும், டி.டி.கோசாம்பி போன்ற வரலாற்றாசிரியர்களும் நடத்திய ஆய்வின்படி “பகவான் கிருஷ்ணனே பாரதக் கதைக்குப் புதியவர்; அப்போர் நடந்து பல நூற்றாண்டுகள் கழிந்தும் அந்த பகவானின் உயர்ந்த தெய்வீகத் தலைமை ஏற்றுக் கொள்ளப்படவில்லை. பகவத்கீதையில் வழங்கும் சமஸ்கிருதம் கிட்டத்தட்ட கி.பி. மூன்றாம் நூற்றாண்டுக்குரியது…” என்று தெரிகிறது. மகாபாரதப் போர் கி.மு. 850-ல் நடைபெற்றிருக்க வேண்டும் என்கிறார் கோசாம்பி. எனவே கிருஷ்ணாவதாரத்தை மகாபாரதத்தில் நுழைத்ததே ஒரு பெரிய மோசடி.

மகாபாரதத்தில் இது ஒன்றுமட்டும் சேர்க்கையல்ல. கி.மு. 2 முதல் கி.பி 3-க்குள் இடைப்பட்ட 500 ஆண்டுகளில் செய்த சேர்க்கைகள் ஏராளம். பழைய உருவத்தில் 24,000 பத்திகளே இருந்தன. 76,000 பாடல்களும், சில உரைநடைத் தொகுப்புகளும் பின்னால் சேர்க்கப்பட்டன. இதைச் செய்தவர்கள் பார்ப்பனச் சாதியினரே. அவர்கள் மட்டுமே அன்று நூல்களை ஆக்குவதற்கு உரிமை படைத்தவர்கள். நாட்டுப் பாடல்கள், பூர்வகுடி தெய்வீகக் கதைகளை, யாதவ குலத்தோற்றத்தை ஒட்டிய கதைகள் ஆகிய மூன்று வகைகளிலிருந்தும் பலதரப்பட்ட புராணங்கள், தெய்வீகக் கதைகளிலிருந்து ஏறக்குறைய பொருந்தக் கூடிய பகுதிகளை எல்லாம் சேர்த்து விட்டனர். பாரதத்தை விரிவாக்கம் செய்த முறை 19 ஆம் நூற்றாண்டு வரை கூடத் தொடர்ந்தது எனகிறார் கோசாம்பி.

இச்சேர்க்கைகள், கிளைக் கதைகள் எதனால் ஏற்பட்டன? இந்துமதம் எனப்படும் பார்ப்பன மதம் சாதாரண மக்கள் மத்தியில் வேர்விடவில்லை. புத்த மதம் பார்ப்பன மதத்திற்குச் சவாலாகத் தோன்றியது. புத்தபிக்குகளைக் கொல்வது, மடாலயங்களைத் தகர்ப்பது போன்ற முறைகள் மூலம் புத்த மதத்தை ஒடுக்கினர். மக்களைத் தம் பக்கம் இழுத்துக் கொள்ள இரண்டு முறைகளைக் கையாண்டனர். பார்ப்பன மதக் கடவுளர்களை சாதாரண மக்களும் வழிபட அனுமதித்ததுடன் வழிபாட்டு முறையை எளிமையாக்க கடவுளை அண்ணனக, தம்பியாக, கணவனாக, காதலனாக எப்படி வேண்டுமானாலும் வரித்துக் கொண்டு பக்தி செலுத்தலாம் என்ற புதிய முறையைப் பரவவிட்டனர். ஏற்கெனவே அவர்கள் வழிபட்டு வரும் கிராம தேவதைகளை, குல தெய்வங்களை பார்ப்பனக் கடவுள்களுடன் உறவு கற்பித்து அதன் மூலம் அனைவரையும் பார்ப்பன மதத்தின் பிடியில் அதிகாரபூர்வமாகக் கொண்டு வந்தனர். தத்துவத் துறையில் அத்வைதம், நடைமுறையில் இந்தத் தில்லுமுல்லு. இதுதான் ஆதிசங்கரரின் திருப்பணி.

மகாபாரதத்தில் ஒன்றோடொன்று சம்பந்தமில்லாத கதைகள், பாத்திரங்கள் வந்து போவதும், அந்தரத்தில் தொங்கி ஊசலாடுவதும் இதனால்தான். கடவுள் ராமாயணத்தில் ராமராக, பாரதத்தில் கிருஷ்ணனாக அவதரித்ததாகச் சொல்கிறார்கள். ஆனால் ராமாயணத்தில் பரசுராமனும் வருகிறார்; அவரே மகாபாரதத்திலும் வருகிறார். ராமாயணத்தில் வரும் அனுமான் பாரதத்திலும் பீமனைச் சந்திக்கிறார். மகாபாரதத்தில் ஆரம்ப அத்தியாயத்தில் நாகர்களின் வம்சாவளியும், தெய்வீகக் கதைகளும் உயர்ந்த இடத்தைப் பெறுகின்றன. இது அப்போது வாழ்ந்த நாகர்கள் என்ற பூர்வகுடிகள் பற்றியது. சர்ப்ப அரக்கர்களுடன் போர் செய்து வெல்வதற்காகவே மூன்றாம் ஜனமேஜயன் சர்ப்பயாகம் நடத்தியதாக ஒரு கதை உண்டு. இந்தப் போரைப் பற்றிய விவரங்கள் மூடி மறைக்கப்பட்டு யாகச் சடங்குகள் மட்டும் நிரம்பிய பகுதி மகாபாரதத்தில் இடம்பெறுகிறது. கிருஷ்ணன் பாம்போடு சண்டை போடுகிறார். கிருஷ்ணராக அவதரித்த திருமாலின் – விஷ்ணுவின் மலர்ப்படுக்கையாக நாகம் மாறும்போது சண்டை தீர்ந்து அடக்கப்பட்டு விட்டதாகவும் தெரிகிறது. அப்படியானால், இத்தனை அவதாரங்களையும் சந்திக்கும் நாகர்கள் வென்றார்களா? தோற்றார்களா? அவர்கள் யார்? ஒரே நேரத்தில் சந்திக்கும் இரு அவதாரங்களுக்கு என்ன விளக்கம் சொல்லப் போகிறார்கள்?

கீதாஉபதேசம்ஆக, பண்டைய இனக் குழுக்களுக்குள் நடந்த ஒரு சண்டையைப் பற்றி அன்று பாடுவதைத் தொழிலாகக் கொண்ட பாணர்கள் பாடல் இயற்றியிருக்கின்றனர். அவற்றில் தங்களது தேவைக்கு ஏற்ப வெட்டியும் சேர்த்தும் பார்ப்பனர்கள் மகாபாரதத்தை உருவாக்கினார்கள்.

குறுக்குக் கேள்விகள் போட்டால் முழுமையாகப் பதில் சொன்னவர்களோ, மகாபாரத் இடைச் செருகல்களை மறுப்பவர்களோ ‘பார்ப்பனீய தரும’த்தை தூக்கிப் பிடிப்பவர்களில் யாரும் கிடையாது.

19-ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு இப்போது 20-ஆம் நூற்றாண்டில் சோப்ரா எல்லா செருகல்களுக்கும் மேலே தன் பங்குக்குக் கொசுறு வேலை செய்து இறுதிப் பக்குவம் கொடுத்திருக்கிறார்.

  • கிருஷ்ணனை பார்ப்பனர்கள் பாரதத்திற்குள் நுழைத்தார்கள். சோப்ராவோ கிருஷ்ணனையே பிரதான பாத்திரமாக்கிவிட்டார்.
    ராஹி மஸும் ராசா என்ற ஒரு முஸ்லீம் மகாபாரதத்திற்கு வசனம் எழுதுவதா என்று பாய்ந்தது ஆர்.எஸ்.எஸ். இந்த காரணத்தாலேயே துரியோதனன் பற்றி இப்படியெல்லாம் எழுதி பார்ப்பனீய இந்துமதத்துக்குத் தன் அதிக விசுவாசத்தைத் தெரிவித்து விட்டாரோ ராஹி மஸும் ராசா?
  • சினிமா பாணியில் கதாநாயகன் – கதாநாயகி – வில்லன்களை உருவாக்கியிருக்கிறார். பஞ்சபாண்டவர் – கதாநாயகர்கள்; திரௌபதி – கதாநாயகி; துரியோதனன் – வில்லன் (இத்தொடரைக் கொண்டாடும் பார்ப்பனீயச் ‘சோ’வுக்கே இப்படிக் கதாநாயகன் – வில்லன் என்று பிரிப்பது பிடிக்கவில்லை; அவ்வாறு பிரிப்பது தவறு என்கிறார்: நல்ல – கெட்ட குணங்கள் அனைவரிடமும் உள்ளதாகச் சொல்லும் ‘சோ’ கிருஷ்ணனைப் பற்றி ஒன்றும் சொல்லாமல் கடப்பாரை விழுங்கியவர் போல முழிக்கிறார்)
  • கர்ண பரம்பரைக் கதைகளை வைத்துப் பார்த்தால் கூட துரியோதனனிடம் பல சிறந்த குணங்கள் இருந்திருக்கின்றன. சூத்திரன் என்று மற்றவர்கள் ஒதுக்கியவனை – கர்ணனை சத்திரியனாக்கி அங்க தேசத்துக்கு அதிபதி ஆக்கினான் – அவனது சாவு வரை நட்பைக் காப்பாற்றினான். சோப்ரா தொடரின்படி பார்த்தாலும் சாவுக்குப் பிறகு அவனுக்கு, தான் கொள்ளி போட வேண்டும் என்று உரிமை கோருகிறான் சிறந்த நட்புக்கு இலக்கணமாக வாழ்ந்த துரியோதனன்.
    ஒரு சம்பவம்: பாண்டவர்களுக்கு தூதனாக வருகின்ற கிருஷ்ணனைக் கைது செய்ய முனைகிறான் துரியோதனன். கிருஷ்ணன் தனது ‘விஸ்வரூபத்தை’க் (பிரம்மாண்டமான பெரிய உருவம்) காட்டி தான் கடவுள் என்று சொல்கிறான். அதற்கெல்லாம் அயரவில்லை துரியோதனன். கிருஷ்ணனுக்கு ஒரு பதில் சேதி அனுப்பினான்: ”உன் மாயாஜால வித்தைகளுக்கெல்லாம் அடங்கிவிட மாட்டேன். கம்சனின் வேலையாளாக இருந்த நீ திடீரென்று புகழ்பெற்று விட்டாய், கிருஷ்ணா! அரச தகுதி படைத்தவனான நான் உன்னோடு சண்டை போட விரும்பவில்லை”.
    துரியோதனனை அருச்சுனனோட ஒப்பிட்டுப் பாருங்கள். கிருஷ்ணனின் ‘விஸ்வரூபத்துக்கு’ அருச்சுனன் சரணாகதி அடைகிறான்; துரியோதனன் சவால் விடுகிறான்.
  • கர்ணன்அடுத்து – கர்ணனின் ஜாதி விவகாரம், குந்தி சூரியனுக்குப் பெற்றெடுத்தவனே கர்ணன். எடுத்து வளர்த்தவன் தேரோட்டி. துரியோதனனோடு நட்பு பாராட்டி எள்ளளவும் நட்பு குறையாமல் சாகும் வரையில் ஒன்றாக வளருகிறான். ஆனால் அவனை சூத்திரன் என்று திரௌபதி இகழ்ந்து பேசுகிறாள்; வில்வித்தை கற்றுத்தர மறுக்கிறார் துரோணன்; தான் தலைமை தாங்கிப் போரிடக் கூடாது என்கிறார் பீஷ்மர்; அருச்சுனனுக்கு எதிராகப் போரிடும்போது பூமியில் தேர்ச் சக்கரம் சிக்கிக்கொள்ள, இறங்கி அதை மீட்க தேரோட்டும் சத்திரியனான சல்லியன் ‘சூத்திரனுக்கு நான் சேவை செய்வதா, முடியாது’ என்று மறுத்துவிடுகிறான். தற்காலத்திய மற்ற விவகாரங்கள் பற்றி மூக்கை நுழைக்கிற சோப்ரா இந்தச் சாதிய அடக்குமுறை பற்றி வாயே திறக்கவில்லை, அது ஏன்?
  • அதேபோல, பீமனுக்கும், அரக்கிக்கும் பிறந்த கடோத்கஜன் இறந்ததற்குச் சற்றும் கவலைப்படாத மற்ற பாண்டவர்கள் அபிமன்யு இறந்ததற்கு இரக்கம் காட்டி உருகிப் போகிறார்கள். சோப்ரா இந்த ஜாதி பாரபட்சத்தைக் கண்டுகொள்ளாமல் போனதேன்? சமகால விஷயத்தைக் காவியத்தில் நுழைத்து 2000 வருடங்களுக்கு முன்னேயே எல்லாம் சொல்லி விட்டார்கள் என்ற கருத்தை உருவாக்கி தகுதியைத் தேடிக் கொள்கிற சோப்ரா இன்று வரை சமூகத்தைச் சீரழிக்கும் சாதியத்தைத் தொடாமல் ஒதுங்கிக் கொள்வதேன்?
  • பாரதக் கதைப்படி 40 லட்சம் பேர் 18 நாள் போரில் இறந்திருக்கிறார்கள். நவீன ஆயுதம், போர் விமானங்கள், போர்க்கப்பல்கள் வளர்ச்சி அடைந்திருந்த இரண்டாம் உலகப் போரிலேயே கூட இவ்வளவு குறுகிய நாட்களில் இத்தனை பேர் சாகவில்லை. ஒரு நொடிக்கு ஒரு ஆள் செத்ததாக வைத்துக் கொண்டாலும், ஒரு நாளைக்கு 12 மணி நேரம் சண்டை நடந்ததாக வைத்தாலும் 18 நாள் பாரதப் போரில் 7,77,600 பேர்தான் இறந்திருக்க முடியும்.
  • கதக் நாட்டியத்தை அறிமுகப்படுத்தும் சோப்ராவுக்கு குருட்டுத் துணிச்சல் இருக்க வேண்டும். பார்ப்பவர்களில் யார் மூளையை உபயோகிக்கப் போகிறார்கள் என்று நினைத்துவிட்டார் போலும். அந்தக் காலகட்டத்தில் ஏதய்யா கதக்?

இவ்வளவும் சோப்ரா சேர்த்த கட்டுக் கதைகள். ஆனால் அதிகாரபூர்வமான மகாபாரதப்படியே பார்த்தாலும் சத்தியத்தின் உறைவிடமான கிருஷ்ணன் செய்த அட்டூழியங்கள் ஓகோவென்று பாராட்டப்படுகின்றன. ஏனெனில் அவை கடவுளின் கட்டளையால் நடப்பவை. அவற்றைக் கொஞ்சம் பார்ப்போமா?

  • கூட்டம்துரோணரின் மகன் அசுவத்தாமன் யுத்தகளத்தில் செத்துவிட்டதாக பொய் அறிவிப்பு கொடுத்து துரோணர் யுத்தகளத்திலிருந்து விலகுவதற்கு ஏற்பாடு செய்வது.
  • பீமன் போர்முறை மீறி துரியோதனன் தொடையில் கதாயுதத்தால் அடித்து வீழ்த்துகிறான்.
  • சிகண்டியின் பின்னால் இருந்து அருச்சுனன் பீஷ்மரைத் தாக்குகிறான். சிகண்டி ஓர் அலி. அலியைத் தாக்கக் கூடாது. சாகடிக்கக் கூடாது என்பது போர்விதி. பீஷ்மர் அந்த விதியை மீறமாட்டார் என்பது அருச்சுனனுக்குத் தெரியும்.
  • தேர்க்காலை எடுக்க அனுமதி கோரும் கர்ணனுக்கு நேரம் கொடுக்காமல் அருச்சுனன் அம்பெய்து கர்ணனைக் கொல்கிறான்.

இவ்வளவும் கிருஷ்ணர் பஞ்சபாண்டவர்களுகுச் சொல்லித் தந்த தந்திரங்கள். இப்படிப்பட்ட நேர்மையற்றவர் தான் உலக ஒழுக்கம் பற்றி கீதையில் போதிக்கிறார். பாரதத்தின் தொடக்கத்திலிருந்து கடைசிவரை கடவுளென்று போற்றப்படுகிறார். அவர் வரும் போதெல்லாம் இசை மாறுகிறது. சுற்றிலும் நிற்கும் பாத்திரங்கள் ஒரு பயம் கலந்த பக்தியிலும், மரியாதையிலும் நிற்கிறார்கள். அயோக்கியத்தனங்கள் செய்தவனுக்கு எப்படி மரியாதைப் பட்டம்?

வேதத்தின் சாரம் உபநிஷத் உபநிஷத்தின் சாரம் பகவத்கீதை, பகவத் கீதையிலிருந்து மனுநீதி, மனுநீதியிலிருந்து அர்த்த சாஸ்திரம். எல்லா அயோக்கியத்தனங்களுக்கும் கிருஷ்ணபகவானின் ஒப்புதல்!

“தருமத்தை அடைவதற்கு அதர்மத்தை ஆயுதமாகப் பயன்படுத்தலாம்” “கடமையைச் செய்: பலனை எதிர்பாராதே” – கீதையின் புகழ்பெற்ற உபதேசங்கள் இவை. ஒன்றுக்கு ஒன்று முரணான இந்த உபதேசங்களின் தத்துவ நிழலில் தான் ஆளும் வர்க்கங்கள் ஒண்டிக் கொள்கின்றன. அவர்களுடைய நலனை தர்ம்மாகத் தீர்மானித்துக் கொள்கிறார்கள். அதை எட்டுவதற்கு வசதியான முறைகளைக் கடைப்பிடிக்கிறார்கள். அத்தகைய அநீதியான முறைகளை அம்பலப்படுத்தும் போது “நான் கடமையச் செய்தேன் – கருமயோகி – பலனை பகவானிடம் விட்டுவிட்டேன்” என்று கீதோபதேசம் செய்கிறார்கள். கேள்வி கேட்காதே, சிந்திக்காதே, கடமையைச் செய், பலனை எதிர்பாராதே – இது தான் ஆண்டைகளின் கீதை அடிமைகளுக்குச் சொல்லும் தருமம்.

கடவுள் அவதாரங்களின் பொருள் இதுவே என்பதை வாசகர்கள் நன்றாகக் கவனிக்க வேண்டும். இதைச் சுற்றி எந்த வரலாற்று விஷயம் சொல்லப்பட்டாலும் அதைச் சந்தேகக் கண்ணோடுதான் பார்க்க முடியும்: பார்க்க வேண்டும். மகாபாரதத் தொடர் நமக்குக் கொடுக்கின்ற பாடம் இது.

***

பீஷ்மர், துரோணர்மகாபாரதத் தொடர் பொய்களை விற்று ஓய்ந்திருக்கிறது – ‘படம் எப்படி இருந்தது’ என்று எத்தனையோ ஏடுகளில் செய்திகள், மக்களின் பேட்டிகள் வெளியிடப்பட்டிருக்கிறன்றன. கடவுள் நம்பிக்கை இருப்பவர்கள் டி.வி. தொடர் பார்த்ததையே பெரிய புனிதக் கடமையாகச் சொல்லுகிறார்கள்.

இந்தப் புனிதக் கடமையிலிருந்து தென்னக மக்கள் தவறிவிடப் போகிறார்களே என்ற ‘அக்கறை’யுடன் ‘துக்ளக்’கும் ‘தினமலரு’ம் வசனத்தை இந்தியிலிருது தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டு தங்கள் இந்தி விசுவாசத்தை தெளிவாகக் காட்டிக் கொண்டனர். எதிர்ப்புகளின்றி இந்தியைத் திணிப்பதற்கு ஒரு பெரிய வாய்ப்பாக இந்தி ஆதிக்க வெறியர்கள் இதனைப் பச்சையாகப் பயன்படுத்தினார்கள்.

அரைகுறை எழுத்தறிவு உள்ளவர்கள், எழுத்தறிவே இல்லாதவர்கள், படித்தும் அறிவற்றவர்களான மத்தியதர வர்க்கம் ஆகிய மூன்று பகுதியினருமே டி.வி.-யே கதியென்று கிடக்கிறார்கள். அது சொல்லித் தருவதைக் ‘கடவுளின் கட்டளை’களாக ஏற்றுக் கொள்கிறார்கள். மகாபாரதத்தின் மூலம் பார்ப்பனீய இந்து மதவெறி பரப்பப்பட்டிருப்பதால், நாளை ‘ராமஜென்ம பூமி, கிருஷ்ண ஜென்மபூமியை மீட்கவா!’ என்று அழைப்பு வந்தால், ஏற்கனவே தயாரிக்கப் பட்டுவிட்டவர்கள் உடனே கலந்து கொள்வார்கள்.

தனக்கென்று வந்தால் சொல் அளவில் இருக்கும் லட்சியம் போதும்; எதிராளிக்கு என்றால் அவர்களின் நடைமுறைச் செயல்கள் உடனே பரிசீலிக்கப்பட வேண்டும் – இப்படி தனக்கொன்று, பிறருக்கொன்றாக இருக்கும் இரட்டை அளவுகோல்களை மகாபாரதம் அங்கீகரிக்கிறது; அதற்கு மிகபெரிய எடுத்துக்காட்டு மோசடிக்காரன் கிருஷ்ணன். அதற்கு அத்தாட்சி அவரே படைக்கும் ‘பகவத்கீதை’

இதற்கு வசதியாக மக்களிடம் பரம்பரை பரம்பரையாக நிலவிவரும் பாரதக் கதையும், அதில் சொல்லப்படும் ‘ஒழுக்கங்களும்’ ஆளும் வர்க்கங்களுக்குத் துணையாக இருக்கின்றன. பாண்டவர்கள் நல்லவர்கள்; கௌரவர்கள் தீயவர்கள. நீதி அநீதிக்கெதிராக குருக்ஷேத்திரத்தில் தர்மயுத்தம் நடத்தியது – இந்த வரிசைப்படி ஒரு கதை மக்கள் மனத்தில் விழுந்திருக்கிறது.

கௌரவர்இதையே காந்தி – திலகர் – பாரதி – கண்ணதாசன் – கோடம்பாக்கத்து கவிஞன்வரை; கட்சித்தாவல்கள் – காங்கிரஸ் உட்பூசல் – ஜனதாதள வி.பி.சிங் – தேவிலால் சண்டைகள் வரை இவர்கள் எல்லோரும் எல்லா விஷயங்களையும் குருக்ஷேத்திரம் என்று வருணிக்கிறார்கள். ஒவ்வொருவரும் தன்னை தர்மயுத்தம் நடத்துபவனாகச் சித்தரித்துக் கொள்கிறார்கள். நீ எப்படிப்பட்டவன், உன்பக்கம் என்ன நியாயம் இருக்கிறது என்று யாரும் கேட்க முடியாது; கேட்க அனுமதிப்பதில்லை.

காந்தி பிரிட்டிஷாருக்கு எதிராகவும் கட்சிக்குள்ளேயும் தர்மத்துக்காக ஓயாது போராடுவதாகச் சொல்லிக் கொண்டார். பிரச்சனை வந்த போதெல்லாம் தன் கருத்தை ஏற்கவில்லையானால் விலகி விடுவதாக மிரட்டி வந்தார். கேள்வி கேட்காமல் கீழ்படியக் கோரும் கீதையின் தத்துவம் அச்சாக காந்திக்குப் பொருந்துவதைப் பாருங்கள்! எனவே உபதேசங்கள் மட்டுமல்ல, உபதேசிகளையும் நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும். எல்லாக் காலத்திலும் போற்றப்படும் கீதை மக்களை அடிமைப்படுத்தவும் தத்துவரீதியாக விளக்கம் கொடுப்பதற்காகவே ஏற்பட்டது. இப்போது காஷ்மீரி தேசீய இன மக்களை அரசு அடக்குகிறதே என்று கேட்டால் தேசீய ஒருமைப்பாட்டைப் பலி கொடுப்பதா என்று கேட்கிறார்கள்; இந்தியா எங்கும் சிறுபான்மை முஸ்லீம்களைக் கொன்று குவிக்கிறார்களே என்றால் ‘நாம் இந்துக்கள் என்ற அடையாளத்தை இழக்க முடியாது. அதற்குக் குறுக்கே எதுவந்தாலும் அழிப்போம். அதில் தவறு கிடையாது’ என்கிறது ஆர்.எஸ்.எஸ். ‘நம் இளைய தலைமுறைக்கு அடையாளம் இல்லாமல் போய்விட்டது. அதையே மகாபாரதம் ஏற்படுத்தி கொடுக்கிறது.’ என்கிறார் சோப்ராவின் மகன் ரவிசோப்ரா. ஆர்.எஸ்.எஸ்ஸின் குரல் சோப்ராவில் கேட்கவில்லையா?

எது தர்மம் யாருக்கான தர்மம், எது பாதை ஏன் இந்தப் பாதை என்ற கேள்விகள் கீதைக்கெதிரான கேள்விகள் மட்டுமல்ல; ஆளும் வர்க்கத்தின் அடித்தளத்தை உலுக்கும் கேள்விகள். நாடெங்கும் இக்கேள்விகள் எழுந்து எதிரொலிக்கும் போது இந்து மகாராஷ்டிரக் கனவுகள் நொறுங்கும் – மக்கள் ஜனநாயகச் சூரியன் உதிக்கும்!
_____________________________________________
புதிய கலாச்சாரம், அக்டோபர் 1990
_____________________________________________

  1. //கேரள மாப்பிளா எழுச்சியையும் அவ்வாறுதான் கொச்சைப் படுத்துகிறார்கள்’//
    Dear Vinavu,
    i am great fan of your articles and ideals. But while dealing with Muslim subjects you go a little astray. I am giving 2 quotes from ‘Islamic Jihad’ by M A Khan (It can be downloaded from islam-watch.org) to support my view. (Anyway I can understand your compulsions: I am writing this anonymously, but you are not)
    A quote on Maappillai kalakam (p. 171)
    //In 1921, Muslims in Malabar (called Mopla) unleashed a heinous wave of violence against innocent Hindus, which became known as the “Mopla Rebellion”. This rebellion was instigated by two Muslim organizations: Khuddam-i-Kaba and Central Khilafat Committee. These movements were in favor of founding a pan-Islamic Caliphate. According to Ambedkar, they preached the doctrine that ‘India under the British government was Dar-ul-Harb and therefore, the Muslims must fight against it, and if they could not, they must carry out the alternative principle of Hijrat (departure to a Muslim land).’540 Although the rebellion was against the British, in their absence, Muslims unleashed terror on their innocent Hindu neighbors. Ambedkar recounts the horrific barbarity committed by the Moplas as thus:

    “The Hindus were visited by a dire fate at the hands of the Moplas. Massacres, forcible conversions, desecration of temples, foul outrages upon women, such as ripping of pregnant women, pillage, arson and wholesale destruction—in short, all the accompaniments of brutal and unrestrained barbarism, were perpetrated freely by the Moplas upon the Hindus… The number of Hindus who were killed, wounded or converted is not known. But the number must have been enormous.”
    //

    Another quote from above book (p.108)

    //there are far too many modern Muslim historians and their fellow travelers of non-Muslim variety—particularly of the leftist-Marxist leaning—who think that investigating history is not about enumerating and unearthing facts, but about hiding them while writing sophistry. This becomes the trend particularly when it comes to writing the history of Islam. But those, who wish to find unvarnished truth about Islamic history, say in India, they should go back to the writings of Al-Kufi (Chachnama), Al-Biladuri, Alberuni, Ibn Asir, al-Utbi, Hasan Nizami, Amir Khasrau, Ziauddin Barrani, Sultan Firoz Tughlaq, Emperor Babur and Jahangir, Badaoni, Abul Fazl, Muhammad Ferishtah and many more such medieval historians.//

    • Ambedkar soldrathellam unmai illa. ennathan jaathikku ethira pesunalum naathiganavo muslimavo maaramal Buddharin kaalil vizhunthavar endru Vinavukku theriyum. Allah mattumey unmaiyai solvar. Ambedkar poi solvar. Tipu Sultan Mangalore Catholicargalai paduthiya kodumaiyai maraithu pathivu potavan thaney… ithu onnum puthusilla.

  2. Even the late Maoist leader Kishenji said that the war with Indian Government is a Mahabarat war. He said “The Mahabharat [war]began when the Kauravas refused to grant the Pandavas even the five villages they asked for. The State refused our three-rupee hike. We are the Pandavas; they are the Kauravas”. Where can we put this? Even though he did not practice caste as a brahmin, but the inner sense made him to tell this?

  3. மகாபாரதம் போன்ற ஒரு காவியம் இதுவரை உருவாகவில்லை. இனியும் உருவாகப்போவதில்லை. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இது பேசப்பட்டு வருகிறது. உலகில் இதுவரை எத்தனையோ கதைகள் வெளியாகி உள்ளது. அவைகள் எல்லாம் எங்கே போனது என்றே தெரியவில்லை. ஆனால் மகாபாரதமும் ராமாயணமும் இன்னும் பல்வேறு மக்களால் பதிக்கப்பட்டும் பேசப்பட்டும் வருகிறது. உலகில் தோன்றிய அனைத்து பிற நூல்களும் சமாதியடைந்து விட்டன. இந்த இரண்டு இதிகாசங்கள் மட்டும் இன்னும் மக்கள் மனதில் நிலைபெற்று உள்ளது.

    முஸ்லீம்களை திருப்தி படுத்த நீங்கள் அரங்கேற்றும் இது போன்ற பொய் நாடகங்கள் எடுபடாது. இந்த உலகம் உள்ளளவும் இந்த இரண்டு காவியங்களும் நிலைத்து நிற்கும். இந்த காவியங்களை ஊன்றி படித்தால் கண்ணதாசனைப் போன்ற நாத்திகர்களும் நிலைபெற்று உலகப் புகழடைவார்கள்.

    • பூனை கண்ணை மூடிக்கிட்டா உலகமே இருண்டுபோச்சுன்னு நெனச்சுக்குமா

    • \\உலகில் இதுவரை எத்தனையோ கதைகள் வெளியாகி உள்ளது. அவைகள் எல்லாம் எங்கே போனது என்றே தெரியவில்லை. ஆனால் மகாபாரதமும் ராமாயணமும் இன்னும் பல்வேறு மக்களால் பதிக்கப்பட்டும் பேசப்பட்டும் வருகிறது. உலகில் தோன்றிய அனைத்து பிற நூல்களும் சமாதியடைந்து விட்டன. இந்த இரண்டு இதிகாசங்கள் மட்டும் இன்னும் மக்கள் மனதில் நிலைபெற்று உள்ளது.\\

      ஏன் மகாபாரதத்தையும் ராமாயணத்தையும் ஐம்பெருங்காப்பியங்களை தொடராக எடுக்க வேண்டியதுதானே? ஏன் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க வேண்டியதுதானே?

      திட்டமிட்டே வரலாற்றை அழிப்பது, திரித்து கூறுவது போன்ற வேலைகளை செய்துவிட்டு “உலகில் தோன்றிய அனைத்து பிற நூல்களும் சமாதியடைந்து விட்டன” என கதைப்பதேன்? திருக்குறள் என்ன அழிந்தா போய்விட்டது?

      உங்களது மகாபாரதம் சொல்லித்தருவது “சூது”. ஆனால் திருக்குறள் சொல்லுவதோ,

      வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்
      தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று.

      விளக்கம்: வெற்றியே பெறுவதாயினும் சூதாடும் இடத்தை நாடக்கூடாது. அந்த வெற்றி, தூண்டிலின் இரும்பு முள்ளில் கோத்த இரையை மட்டும் விழுங்குவதாக நினைத்து மீன்கள் இரும்பு முள்ளையே கவ்விக் கொண்டது போலாகிவிடும்.

      பாவம் உங்கள் தருமர் திருக்குறளை படிக்கவில்லை போலும். படித்திருந்தால் ஒரு போரையே தவிர்த்திருக்கலாமே.

      • ////அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க வேண்டியதுதானே///

        யார் வேண்டாமேன்றது. இது போன்ற படங்களை எடுக்க வேண்டியதுதானே! மகாபாரதத்தை படமாக எடுக்க வேண்டும் என்று அவருக்கு தோண்டியது அதனால் எடுத்தார். உங்களுக்கு ஏன் அம்பேத்கார் வரலாற்றை படமாக எடுக்க தோன்றவில்லை? இது யார் தவறு? உங்களுக்கு அம்பேத்காரை பற்றி நம்பிக்கை இல்லை போலும். அதனால்தான் நீங்கள் எடுக்க வில்லை. இதற்கு வேறு ஒருவரை பலிசொல்லுவது தவறு என்று உங்களைப் போன்றவர்களுக்கு ஏன் தெரியவில்லை?

        ///உங்களது மகாபாரதம் சொல்லித்தருவது “சூது”. ஆனால் திருக்குறள் சொல்லுவதோ////

        வள்ளுவர் சூதின் பயங்கரத்தை இரண்டு அடியில் எடுத்து சொல்லியுள்ளார். அதனால் ஏற்ப்படும் பயங்கரத்தை மகாபாரதத்தின் வழியாக எடுத்து சொல்லப்பட்டு உள்ளது. வள்ளுவர் கூறியதைத்தான் மகாபாரதத்தில் விரிவாக்கப்பட்டு உள்ளது. இதிலிருந்து அந்த காலத்தில் சூது பரவலாக இருந்தது என்று தெரிகிறது. ஆகையால் குறளும் மகாபாரதமும் ஒரு கருத்தைத்தான் வலியுருத்துக்கிறது!!!! இது கூட தெரியாமல் இருப்பது விசித்திரமானது!!!!!

  4. I have read C Rajagopalachari’s Ramayanam,called vyasar virundhu.

    All the points that vinavu mentions here were mentionend by Rajaji himself,Mahabharat is a lesson for a lot of us and lot of things changed ever since it happened but Vinavu is as usual short sighted enough to get stuck in silly stuff rather than truly understand the epic.

  5. //உலகில் இதுவரை எத்தனையோ கதைகள் வெளியாகி உள்ளது. அவைகள் எல்லாம் எங்கே போனது என்றே தெரியவில்லை// இது உஙகள் கற்பனையே! ரோமானிய இதிகாசஙகள் இன்னும் உலவுகின்றன, கடவுள், பக்தி போதையில்லாமல்! இன்னும் எத்தனையோ நாட்டுபுற கதைகள் உலகில் உண்டு ! உஙகளை போன்ற நெருப்புக்கோழிகளுக்கு தெரியாமல் இருக்கலாம்! மத போதனையுடன் உள்ளதால், இந்திய மககள் வரலாற்றுக்கும், கற்பனைக்கும் வேறுபாடு தெரியாத மூடர்களாயிருப்பதால், பல இடைச்செருகளுடன் பல பல கதைகள் இஙகு உலவுகின்றன! ஆதிக்க வர்க்கத்திற்கு சாதகமாயிருப்பதால் , இந்தியாவில் ராமாயணமும் , மகாபாரதமும் பெருமைப்படுத்தப்படுகின்றன!

    • // ரோமானிய இதிகாசஙகள் இன்னும் உலவுகின்றன, கடவுள், பக்தி போதையில்லாமல்! //

      கிறித்தவம் பரவிய பிறகு ரோமானிய (Aineid by Virgil), கிரேக்க (Iliad & Odyssey by Homer) இதிகாசங்களில் வரும் கடவுளர்கள் டம்மிகளாகிவிட்டார்கள்.. 17-ம் நூற்றாண்டைச் சார்ந்த (ஆங்கில) இதிகாசமான இழந்த சொர்க்கம் (Paradise Lost by John Milton) ஆதம், ஏவாள், சாத்தான், முதல் பாவம் என்று கிறித்தவ நம்பிக்கைகளைச் சார்ந்து இயற்றப்பட்ட இலக்கியம்.. இந்தியாவும் கிறித்தவ நாடானால் ராமரும், கிருஷ்ணனும் ஜீயஸ், ஏதனா, பாசெய்டான் போன்ற கிரேக்க கடவுளர்களைப் போல் டம்மிகளாவார்கள்.. பிதா, சுதன், பரிசுத்த ஆவி, புனித மேரி இந்தியாவுக்கும் கடவுளர்கள் ஆவார்கள்.. இந்தியா இஸ்லாமிய நாடானால் அல்லாஹ் (கூடவே அல்லாஹ்வின் இறுதித் தூதராக முகம்மது) இந்தியாவுக்கும் கடவுள்.. இந்தியா கம்யூனிச நாடானால் மார்க்ஸ், லெனின், ஸ்டாலின், மாவோ, பெரியார் போன்ற ’கிட்டத்தட்ட கடவுள்கள்’ இந்தியாவிற்கு கிடைப்பார்கள்.. மக்களைப் பொறுத்துதானே கடவுளர்களுக்கும் மவுசு, கருந்துச் சுடரே…

  6. சூது ஆடுவதே தவறு. நாட்டையும், நாட்டுமக்களையும் நாட்டு சொத்துக்களையும் வைத்து சூது விளையாடிய இவர்களை காவிய நாயகர்கள் என்றால் நம்ம 2ஜி, நிலக்கரி ஊழல் நாயகர்களை எப்படி அழைப்பது? போரில் தோற்று நாட்டை இழப்பது அரச லட்சணம். சூது விளையாட்டில் நாட்டை இழப்பது என்பது உலகத்தின் எந்த வரலாற்றிலும் இப்படி ஒரு அசிங்கம் நடந்ததாக தெரியவில்லை. தன மனைவியை அடமானம் வைத்து சூது விளையாடி தோற்பது என்பது தன மனைவியை அடுத்தவனுக்கு …..டி கொடுக்கும் செயலே அன்றி வேறென்ன ? இதைவிட உலகில் இழி செயல் வேறெதுவும் இருக்கிறதா ? அது தன மனைவி கூட கிடையாது 5 நபர்களுக்கு சொந்தமான மனைவி ( இவள் தான் காவிய நாயகி) மற்றவர்களை கேட்காமல் அனுமதி பெறாமல் அவளை பணயம் வைத்து தோற்றதுதான் காவியம். இப்படி மகா கேவலமான செயல்களால் இழந்தவைகளை மீட்க போர் என்ற பெயரில் நாட்டு மக்களை பலியாக்கி மீட்டெடுக்கும் இந்த அருவருப்பான கதைக்கு காவியம் என்று வெட்கமே இல்லாமல் கூறும், கூறவைக்கும் சூத்திரதாரிகளை பாராட்டாமல் இருக்கமுடியவில்லை.

  7. கிறித்துவ மிசி நரிகள் கற்று கொடுத்த விசயத்தை அப்படியே வாந்தி எடுத்துள்ள வினவுக்கு வாழ்ந்துக்கள்… எனினும் கீழ்கண்ட விசயத்தை படிக்கும் பொழுது இரண்டு விசயம் புரிகிறது…

    வினவுக்கு அறிவு என்பது சுத்தமாக கிடையாது

    காசுக்கு கூவுற முற்போக்கு ஆங்கில சேனல்கள் போல வினவும் ஒரு சேனல்…

    \\இந்தியா எங்கும் சிறுபான்மை முஸ்லீம்களைக் கொன்று குவிக்கிறார்களே என்றால் ‘நாம் இந்துக்கள் என்ற அடையாளத்தை இழக்க முடியாது. அதற்குக் குறுக்கே எதுவந்தாலும் அழிப்போம். அதில் தவறு கிடையாது’ என்கிறது ஆர்.எஸ்.எஸ். ‘நம் இளைய தலைமுறைக்கு அடையாளம் இல்லாமல் போய்விட்டது. அதையே மகாபாரதம் ஏற்படுத்தி கொடுக்கிறது.\\

  8. //காசுக்கு கூவுற முற்போக்கு ஆங்கில சேனல்கள் போல வினவும் ஒரு சேனல்…//

    உங்கள் Lotus news channel மட்டும் என்னத்த கூவுதாம்….

  9. //இந்தியா கம்யூனிச நாடானால் மார்க்ஸ், லெனின், ஸ்டாலின், மாவோ, பெரியார் போன்ற ’கிட்டத்தட்ட கடவுள்கள்’ இந்தியாவிற்கு கிடைப்பார்கள்.. மக்களைப் பொறுத்துதானே கடவுளர்களுக்கும் மவுசு….// அம்பிக்கு ஏனிந்த ஆதஙகம்? நான் சொல்ல வந்ததும் அதுதானே? காடு மிரான்டி காலத்து கதைகளை, கடவுள் புராணமாக நம்பி வழிபடும் முட்டாள் ஜ்னம் உள்ள வரை உஙள் ராஜ்ஜியம்தான்! அறிவு வந்து மக்கள் மனம் மாறினால் அப்புறம் மக்கள் ராஜ்ஜியம்தான்! அதாவது திருவாரூர் லேசில் நகராது! நகர ஆரம்பித்தால் நடுவில் நிற்காது! கிருத்துவ மதம் பரவியுள்ள அய்ரொப்பிய நாடுகளில் மத கட்டுப்பாட்டை மீறி அறிவியல் பாதையில் செல்ல ஆரம்பித்து விட்டனர்! இந்த காட்டு மிரான்டி கடவுளர்களை விட கண்கூடாக நம்மிடையே வாழ்ந்து மறைந்த இந்த பெரியார்களை மரியாதையுடன் வணஙகுவது எவ்வளவோ மேல்!

    • // இந்த காட்டு மிரான்டி கடவுளர்களை விட கண்கூடாக நம்மிடையே வாழ்ந்து மறைந்த இந்த பெரியார்களை மரியாதையுடன் வணஙகுவது எவ்வளவோ மேல்! //

      இந்தக் காட்டுமிராண்டி கடவுளர்களுக்கே ஆறு காலப் பூசை என்ன.. சூடம், சாம்பிராணி, அபிசேக ஆராதனைகள் என்ன என்ன.. ஆனால் கண்கூடாக நம்மிடையே வாழ்ந்து மறைந்த இந்தப் பெரியார்களுக்கு வெறும் மாலை போட்டு மரியாதையுடன் வணங்கினால் போதுமா.. மரியாதையுடன் முறைப்படி பூசைகள் நடத்தி சிறப்பிக்க வேண்டாமா..

  10. அதாவது திருவாரூர் தேர் லேசில் நகராது! நகர ஆரம்பித்தால் நடுவில் நிற்காது!

    • ஊர் கூடி வடமிழுத்தால்தானே தேர் நகரும்.. திருவாரூர் தேர் மட்டுமல்ல, எந்த தேருக்கும் பிரேக் இல்லாததால் டக் என்று நிறுத்த முடியாது.. கட்டையை கொடுப்பவர்கள், முட்டுக் கட்டை போடுபவர்கள் திறமையாக செயல்பட்டால்தான் தேர் சரியான பாதையில் செல்லும், நிற்க வேண்டிய சமயங்களில் நிறுத்தப்படும்.. இல்லாவிட்டால் தேர் வீடுகளுக்குள் புகுந்து பலத்த சேதத்தை விளைவித்துவிடும் அல்லது பள்ளங்களில் இறங்கி குடைசாய்ந்துவிடும்..

      • அம்பிகளின் ஆக்கபூர்வமான முட்டுகட்டையை நான் வரவேற்கிறேன்! ஆதிக்க மனப்பான்மையுடன் போடப்படும் முட்டுக்கட்டைகள் தூள் தூளாக்கப்படும்!

    • அது பரவாயில்லை, கம்யுனிஸத்தின் டவுசர் கழற்றபட்டு பல வருடங்கள் அகிவிட்டது.

  11. யப்பா வினவை எந்தப்பக்கம் பார்த்தாலும் முள்ளா இருக்கே…
    மகாபாரத்த்துல பல விஷயங்கள் ஒத்துபோகல…
    அவற்றில் சில
    – மெய்யாலுமே அந்த நாடு யாரது, ஒண்டவந்த நாட்டுக்கு பாண்டவர்கள் ஏன் அடிச்சிகனும் ?
    – அஞ்சு பிள்ளைகளை பெத்த பாண்டு யோகியனா ?
    – முறைதவறி கர்ணனை பெத்த மகராசி
    – சூதாடுனது தப்பு
    – அதுலயும் பெண்ணை வச்சி சூதாடி தொத்துட்டு அப்புறம் என்ன வீரம் வேண்டி கிடக்கு ?
    – பாஞ்சாலி சபதம் செய்யனுமின்னா மொதல்ல அவ புருஷங்களுக்குதான் தண்டனை கொடுக்கணும்.
    – போரில் கண்ணன் ஆடிய கோல்மால் ஏராளம் – இதுல தர்மத்துக்கு போர் செய்யுறதா பில்டப்பு.
    – துரியோதனன் ஆட்சியில் மக்கள் துன்பப்படுகிறார்கள் என்று ஒரு வரி கூட இல்லையே – அப்படி இருக்கும்போது இது வெறும் தேவையில்லாத குடும்ப சண்டைதானே.
    – ஏகலைவனுக்கு பாடம் சொல்ல மறுத்தது. கர்ணன் மறுமுறை அம்பை பிரயோகம் செய்யாமல் தடுத்தது, அவன் வஸ்திரத்தை திருட்டுத்தனமான கவர்ந்தது. கடைசியில் துரியோதனன் உடல் முழுக்க வலிமை பெற செல்லும்போது கண்ணன் செய்த தகிடுதத்தங்கள் இப்படி எவ்வளவோ துரோகங்கள் போருக்கு முன்னாடி பாண்டவர்கள் பண்ணிட்டு, தர்மத்துக்காக பண்றோம் என்பது எவ்வகையில் நியாயம்.

    இதனால்தான் என்னவோ நான் மகாபாரதம் என்று வரும்போது துரியோதனன் பக்கம் நிற்கிறேன்.

    • மகாபாரதத்தை தெயவீக கதையாக பார்க்காமல், ஒரு சரித்திர கண்ணாடியாக் பார்க்கவேண்டும்; இக்கால, ஆணாதிக்க கற்பு எனும் விலஙகுக்குள் பெண்கள் அகப்படாத காலம்! கல்வி, தவம் நிறைந்த பிரமச்சரிய சிரேஷ்டெர்களுக்கு, கன்னி பெண்களை பணிவிடைக்கு அனுப்புவது புண்ணியமாக கருதப்பட்டது! கன்னிகா தானம் என்ற பழக்கமும் இப்படித்தான் ஏற்பட்டது! முனிவரிடம் பெற்ற செக்ச் கல்வியினால் வந்த ஆர்வத்தினால் சூரிய பகவானை கூடி கர்ணணை பெற்றாள்! பின்னர் இளவரசன் பாண்டுவை மணந்து, அவன் குழந்தை பெறும் தகுதி அற்றவன் என்று தெரிந்தபின், கணவன் சம்மதத்துடன், தனக்கும் தன் சகொதரிக்குமாக செர்த்து , ஐந்து குழந்தைகள் பெறுகிராள்! தனது ஐந்து வீரபுதல்வர்களும் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்ற நல்ல நோக்கிலேயே, திரவுபதியை ஐவருக்கும் மனைவியாக்குகிறாள்! இந்தக்காலத்திலும் சில பழஙகுடி மக்களிடம் வெளிப்படையாகவும், பணக்கார சேட்டுகளிடம் விளம்பரமின்றியும் இந்த பழக்கம் நிலவுகிறது! வாரிசு வேண்டி குழந்தை பெற்ற குந்தியை பழிப்பவர்கள், அறியாத வயதில் அவரை கர்ப்பிணியாக்கிய கடவுளர்கலை ஏன் செருப்பால் அடிக்கவில்லை? ஆயிரம் கொபியர்களிடம் தினமும் சல்லாபம் செய்தும், கற்புக்கரசியான துளசியை கற்பழித்த கிருட்டினன் ஏன் கடவுளாக இன்னமும் மதிக்கப்படுகிறான்? முனிவர்களின் மனைவிகளை கற்பழித்த சிவன், பெற்ற மகளை புண்ர்ந்த பிரம்மா எப்படி இந்து மத கடவுளாக மதிக்கப்படலாம்? இந்த இதிகாச புராணஙகள் எல்லாம், கிரேக்கத்திலிருந்து வந்த கலாச்சாரத்திற்கும், இஙகிருந்த பழஙகுடி கலாச்சாரத்திற்கும் ஏற்பட்ட மோதலினால் வந்த முரண்பாடுகளே! ராமாயணத்திலும் பெண்ணையே கண்டிராத காட்டுவாசி ரிஷிய ஷ்ருஙகனின் விந்தினால், தசரத மன்னனின் ராணிகளுக்கு,ராமர் முதலிய நால்வர் பிறக்க வில்லையா? சீதையின் கரு, ராவணின் உறவினால் ஏற்பட்டது என்ற சந்தேகமும், சீதையின் இரண்டாவது குழந்தை வால்மீகிக்கு பிறந்ததே என்ற கருத்தும் இந்த இதிகாச காலத்திற்கும், பின்னர் இவற்றை கடவுள் கதைகளாக திரித்த காலத்திற்கும் இடையில் ஏற்பட்ட ஆணாதிக்க கலாச்சார மாற்றந்தான் காரணம்! இன்றும் பலநாடுகளிலும் வெவ்வேறு ராமயன கதைகள் வழஙகப்படவில்லையா?

      • // முனிவரிடம் பெற்ற செக்ச் கல்வியினால் வந்த ஆர்வத்தினால் சூரிய பகவானை கூடி கர்ணணை பெற்றாள்! //

        // வாரிசு வேண்டி குழந்தை பெற்ற குந்தியை பழிப்பவர்கள், அறியாத வயதில் அவரை கர்ப்பிணியாக்கிய கடவுளர்கலை ஏன் செருப்பால் அடிக்கவில்லை? //

        அறியாப் பருவத்தில் முனிவரிடம் செக்ஸ் கல்வி கற்றதால் வந்த ஆர்வம் என்று கூறுகிறீர்களா.. சூரியனை எப்படி செருப்பால் அடிக்கமுடியும்..?! நாம் மந்திரம் சொன்னாலும் செருப்படி வாங்க சூரியன் நம் முன்னால் வருவானா..?!

      • // ஆயிரம் கொபியர்களிடம் தினமும் சல்லாபம் செய்தும், கற்புக்கரசியான துளசியை கற்பழித்த கிருட்டினன் ஏன் கடவுளாக இன்னமும் மதிக்கப்படுகிறான்? //

        கிருட்டினன் பிறப்பதற்கு முன்பே துளசி செடியாகிவிட்டாள்..

        // முனிவர்களின் மனைவிகளை கற்பழித்த சிவன் //

        கற்பழித்தேவிட்டாரா..?!!!

        // பெற்ற மகளை புண்ர்ந்த பிரம்மா //

        பிரம்மா யாருக்கு யாரைப் பெற்றார்..?!

        // ராமாயணத்திலும் பெண்ணையே கண்டிராத காட்டுவாசி ரிஷிய ஷ்ருஙகனின் விந்தினால், தசரத மன்னனின் ராணிகளுக்கு,ராமர் முதலிய நால்வர் பிறக்க வில்லையா? //

        வால்மீகி ராமாயணத்தில், தசரதனுக்கு புத்திரகாமேச்ட்டி யாகம் நடத்திக் கொடுப்பதற்காக, அங்க தேசத்திலிருந்து அயோத்திக்கு வரும் முன்பே ரிஷிய சிருங்கர் ஒரு சம்சாரி.. சாந்தா என்ற தசரதனின் மகளை மணந்திருந்தார்.. தசரதனின் மாப்ளை..

        இவருடைய விந்தால் ராமர் முதலிய நால்வர் பிறந்ததாக கூறுவது வால்மீகி ராமாயணத்தைப் படிக்காதவர்களின் சிந்தனைத்திறன்.. வால்மீகி ராமாயணம் – பாலகாண்டம் முதல் யுத்தகாண்டம் வரை ஆறு காண்டங்களும் :

        http://www.valmikiramayan.net/

        // சீதையின் கரு, ராவணின் உறவினால் ஏற்பட்டது என்ற சந்தேகமும், சீதையின் இரண்டாவது குழந்தை வால்மீகிக்கு பிறந்ததே என்ற கருத்தும் //

        ராவணன் பரலோகம் போய் பல்லாண்டுகள் (உத்தர ராமாயணத்தின்படி 10,000 ஆண்டுகள்) கழித்து கர்ப்பவதியான சீதை காட்டில் வால்மீகி ஆசிரமத்துக்கு வந்து பிரசவிக்கிறாள்.. லவ, குச என்ற இரட்டைப் பிள்ளைகளின் வயதும் உருவமும் ஒன்றாக இருக்கும் போது, ஒன்று ராவணனுக்கும் இன்னொன்று வால்மீகிக்கும் பிறந்தது என்ற சிந்தனை பகுத்தறிவுக்கு ஒவ்வவில்லையே..

        • ஆகா ! என்னே நும் பகுதறிவு தாகம்,அம்பி அவர்களே! ராவணன் இறந்து பல்லாயிரம் ஆண்டு கழித்துதான் சீதை கருவுற்றால் எனில், சீதையை காட்டுக்கு அனுப்பவேண்டிய கட்டாய மென்ன? சீதை ராவணனுடன் வாழ்ந்த வாழெக்கையை மறுக்கவே அசொகவன கதை! அப்படியும் சந்தேகப்பட்ட ராமனின் அக்னி பரீட்சை! அதையும் தாண்டி காட்டுக்கு துரத்தல்! இப்பொது சொல்லுங்களேன் உங்கள் பகுத்தறிவுப்படி துரும்பை கிள்ளிப்பொட்டு க்லோனிங் குழந்தை உண்டாயிற்று என்று! அபத்த களஞ்சியம் ! அள்ள அள்ள மூட நாற்றம்! அம்பிகள் மட்டும் பக்தி மாஷ்க் பொட்டிருப்பார் போல!

          • நீங்களாக பலான கற்பனை செய்து கொண்டு, மூக்கைப் பிடித்துக் கொண்டு அவதிப்படுகிறீர்கள் அல்லது அதுபோல் நடிக்கிறீர்கள்.. நான் ஏன் உங்களைப் போல் நடிக்கவேண்டும்..?!!!

  12. மீண்டும் சொல்கிறேன்!
    1. மகாபாரதம் காட்டு மிராண்டி காலத்து கதை தொகுப்பு! இன்றையநாகரீக பழக்கஙகளை அதில் எதிர்பார்ப்பது தவறு!

    2. அதில் முக்கியமாக வலியுறுத்தப்படுவது, அந்தக்கால ஆட்சி முறை, ஷதிரிய தருமம் இவைகளே!

    3. பொதுமக்களுக்கான நீதியில், விதுரநீதி என்று சாதியநீதி புகுத்தப்படுகிறது! தருமன் இதை ஆதரிக்கிரார் ! துரியொதனன் எல்லோருக்கும் சமமான நீதியை ஆதரிக்கிரார்! ஆட்சி செய்ய அருகதை அற்ற, இழிந்த் சூத்திர பிறவியான விதுரன் வாயிலாக பார்ப்பனநீதி பகரப்படுகிறது! (என்றைக்குமே அவாள் நேரடியாக, வெளிப்படையாக எந்த கருத்தையும் எதிர்ப்பதில்லை; மறைமுகமாகவே வலைவிரிப்பர்)

    4. பாண்டவர் பக்கம்நீதி இல்லாவிட்டாலும் , தர்மம் காக்க கிருட்டினன் எனும் சூத்திர நண்பன் உதவிசெய்கிறான்!

    5. இதுவரை, எல்லோரும் அவரவர் சொந்த நட்பு அல்லது பகை காரணமாகவே அணி செர்கின்ற்னர்!

    6.உறவினர்கள், ஆசிரியர்கள் எல்லோரும் தனக்கு எதிராக போர்க்களத்தில் அணிதிரண்டதை கண்டு அர்ஜுனன் கலஙகுகிறான் !

    7. இஙகுதான் அவன் அச்சத்தை போக்க, கதைக்கு தேவையற்ற இடைச்செருகளாக , கிருட்டினன் பரமாத்மாவாக பிராமணிய விஷ கருத்துக்களை உபதேசிக்கிரார்! சிறு வயதிலிருந்தே மரபுகளை மீறிய பெண் பித்தன் பரமாத்மா ஆக்கப்படுகிறார்!

    8.இறுதிப்போரில் நியாயமற்ற முறையில் துரியோதனன் கொல்லப்படுகிரான்!

    இதை ஒரு மதநூலாக யாரும் கருதுவதில்லை! வீட்டில் படித்தால் கலகம் வரும் என்ற பயமும் உண்டு! ஏனென்றால் கலகக்காரன் கிருட்டினனை பெருமைபடுத்து கிறது அல்லவா!

  13. // துரியொதனன் எல்லோருக்கும் சமமான நீதியை ஆதரிக்கிரார்! //

    ஒண்ணு விட்ட பங்காளிகளுக்கே ஒரு அங்குல நிலமும் கிடையாது என்று கூறி ஒரு யுத்தத்தையே நடத்தி லட்சக்கணக்கில் உயிர்களை பலிகொடுத்தவர்தான் உங்கள் சமநீதிக் காவலர் துரியோதனர்..

    // ஆட்சி செய்ய அருகதை அற்ற, இழிந்த் சூத்திர பிறவியான விதுரன் வாயிலாக பார்ப்பனநீதி பகரப்படுகிறது! (என்றைக்குமே அவாள் நேரடியாக, வெளிப்படையாக எந்த கருத்தையும் எதிர்ப்பதில்லை; மறைமுகமாகவே வலைவிரிப்பர்) //

    திருதராட்டிரன், பாண்டு, விதுரன் மூவருக்கும் ஒரே தந்தைதான், அவர்தான் வியாசர்.. பராசரர் என்ற பார்ப்பன ரிஷிக்கும், மீனவப் பெண்ணுக்கும் பிறந்தவர் வியாச முனிவர்.. விதுரர் சூத்திரர் என்றால் வியாசரும் சூத்திரர்தானே.. வியாசரும், விதுரரும் முனிவராகலாம், ஆனால் மன்னராக விடமாட்டார்கள்..

    // சிறு வயதிலிருந்தே மரபுகளை மீறிய பெண் பித்தன் பரமாத்மா ஆக்கப்படுகிறார்! //

    கிருட்டிணன் எப்போது சிறுவயதிலேயே இந்திரன் ஏவிய பேய்மழையிலிருந்து ஆயர்பாடி மக்களை காப்பாற்ற மலையைப் பெயர்த்து குடையாகப் பிடித்தானோ அப்போதே அவனது மக்களுக்கு பரமாத்மாவாகிவிட்டான்..

  14. //அறியாப் பருவத்தில் முனிவரிடம் செக்ஸ் கல்வி கற்றதால் வந்த ஆர்வம் என்று கூறுகிறீர்களா.. சூரியனை எப்படி செருப்பால் அடிக்கமுடியும்..?! நாம் மந்திரம் சொன்னாலும் செருப்படி வாங்க சூரியன் நம் முன்னால் வருவானா..?!//.. அம்பியின் பகுத்தறிவு புல்லரிக்க வைக்கிறது! சூரியனுக்கு குழந்தை பெற்றால் என்ற கதையை நம்புவாராம்; ஆனால், அவன் வானத்தில் இருப்பானே !நம் முன்னால் எப்படி வருவான்? அறியாப்பெணை கற்பழிக்க மட்டும் வருவானோ? நவீன ஆத்திகர்களே இப்படித்தான்! அணுகுண்டையும் , அழுக்குருண்டையையும் செர்த்து கும்பிடுவார்கள்!

    //கிருட்டினன் பிறப்பதற்கு முன்பே துளசி செடியாகிவிட்டாள்//

    கிருட்டின அவதாரத்திற்கு முன்னரெ விஷ்ணு பெண்பித்தன்தான் !
    மைத்துணன் சிவனுடனும், மகன் பிரமாவுடனும் செர்ந்து சென்று அனுசுயாவின் நிர்வாண, முலைப்பால் பிச்சை கேட்டு மாட்டிக்கொள்ள வில்லையா?

    அனுசுயா தன் கற்பு வலிமையால் அயோக்கிய கடவுளர்களை குழந்தை யாக எண்ணி? பால் குடுத்தாளாம்! அனுசுயா வீட்டிலேயே முலைசுகம் கண்டு தஙகிவிட்ட மூவரும், ஆபீசுக்கு மட்டம் போட்டுவிட்டதால், அண்ட சராசரஙகளும் இயஙகவில்லை! மூவரின் மனைவிகளும் அனுசுயா வீட்டிற்கு வந்து கணவர்களை மீட்டுக்கொன்டு போனார்களாம்!

    • // அம்பியின் பகுத்தறிவு புல்லரிக்க வைக்கிறது! சூரியனுக்கு குழந்தை பெற்றால் என்ற கதையை நம்புவாராம்; ஆனால், அவன் வானத்தில் இருப்பானே !நம் முன்னால் எப்படி வருவான்? அறியாப்பெணை கற்பழிக்க மட்டும் வருவானோ? நவீன ஆத்திகர்களே இப்படித்தான்! அணுகுண்டையும் , அழுக்குருண்டையையும் செர்த்து கும்பிடுவார்கள்! //

      அறியாத வயதில் குந்தியை கர்ப்பிணியாக்கிய கடவுளரை செருப்பால் அடிக்கவேண்டும் என்ற உங்கள் தீர்ப்பை செயல் படுத்துவது கடினம் என்று உணர்வீர்களாக..

      // மைத்துணன் சிவனுடனும், மகன் பிரமாவுடனும் செர்ந்து சென்று அனுசுயாவின் நிர்வாண, முலைப்பால் பிச்சை கேட்டு மாட்டிக்கொள்ள வில்லையா? //

      இது தாத்தாச்சாரியின் காமரசக் கற்பனையா அல்லது தங்களது மாலை நேரத்து மயக்கமா..?!
      அனுசுயாவின் கற்பின் வலிமையை தங்களைப் போன்றவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக மேற்படி மூவரும் அனுசுயாவிடம் நிர்வாணமாக உணவளிக்க வேண்டும் (முலைப்பால் பிச்சை அல்ல) என்று கூற அனுசுயா இவர்களை கைக்குழந்தைகளாக்கிவிட்டாள் என்பதுதான் புராணக்கதை..

      • இது சாரி கற்பனையும் அல்ல! மாலை நேர மயக்கமும் அல்ல! மும்மூர்த்திகளும் நிர்வாண பிச்சை கேட்டதை ஒப்புக்கொள்கிரீர்! இவர்களின் விபரீத எண்ணம் புரிந்து, அனுசுயா மூவரையும் குழந்தை களாக்கி முலைப்பால் கொடுத்ததையும் ஒப்புகொள்ள வேண்டியதுதானே? அய்ந்தாம் வகுப்பு படக்கதைதவிர வேறு கதை தெரியாது என்றால் எப்படி? பழஙகால பாகவதம் முழுவதும் படியுஙகள் !

        • அவர்கள் கைக்குழந்தைகளாகிவிட்ட பின் அவர்கள் முலைப்பால் குடித்தால் என்ன, புட்டிப்பால் குடித்தால் என்ன.. நீங்கள் கூறுவது போல் //அனுசுயா வீட்டிலேயே முலைசுகம் கண்டு தஙகிவிட்ட மூவரும்// காமம் எல்லாம் குழந்தைகளுக்கேது..?!!!

        • // அய்ந்தாம் வகுப்பு படக்கதைதவிர வேறு கதை தெரியாது என்றால் எப்படி? பழஙகால பாகவதம் முழுவதும் படியுஙகள் ! //

          எவ்வளவு படிக்கிறோம் என்பதைவிட எவ்வளவு புரிந்து கொள்கிறோம் என்பது முக்கியம் அல்லவா..

          • புரிந்து கொள்ளும் திரந்த மனமிருந்தால் அம்பிகூட புரிந்துகொள்ளலாம் ! இப்படி வ்தன்டாவாதம் பண்ண வேண்டியதில்லை! தாருகாவனத்து ரிஷிபத்தினிகளை, பிட்சாடனராக சென்று சிவன் கற்பழித்த கதை சொல்வது சிவபுராணம் !

            • தவம் செய்து உய்ய வேண்டிய ரிஷிகளும், ரிஷிபத்தினிகளும் யாகங்கள் செய்து லவுகீக ஆற்றல் அதிகாரத்தில் கவனம் செலுத்தி அகங்கார,மமகாரங்களை வளர்த்துக் கொண்டு திசை மாறிவிட்டதால், அவர்களை லோலர்,லோலாயிகளாக அலையவிட்டு, ஆணவமாகப்பட்டது அறத்தையும், ஒழுக்கத்தையும் தூக்கி எறிந்துவிடும் என்பதை அவர்களது உணர்த்தி சிவனும்-திருமாலும் அவர்களது ஆணவத்தை அழித்தார்கள்.. ஆனால் கற்பழித்தார்கள் என்று நீவீர் கூறுவதைப் பார்த்தால் சிவபுராணத்தையும் தாங்கள் மாலை வேளைகளில் படித்து இன்புறுகிறீர்கள் என்று தோன்றுகிறது..

  15. //பிரம்மா யாருக்கு யாரைப் பெற்றார்..?!//நல்ல கேள்விதான்? ஆனால், இதை நாஙகள் கேட் க வேண்டியது! உஙகள் அபத்த களஞ்சியஙகளில் என்ன கூறப்பட்டுள்ளது? சிவ-பார்வதி திருமணத்தின் பொது, தம்பதியினர் தீயை வலம் வந்த பார்வதியின் தொடை அழகை பார்த்து மயஙகி, கையிலிருந்த கமண்டலத்தில் விந்தைவிட அகத்தியன் தொன்றினான்! அப்பொழுதும் காமம் தணியாததினால் அகத்தியனிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு, தனியாக சென்று பார்வதியின் அழகை மனதில் கொன்டு சரச்வதியை படைத்தானாம்! சரச்வதியைநெரில் கண்டவுடனேயெ காமம் மேலிட்டு, அவளை புணர முற்பட, சரசுவதி பயந்து ஓட, வழக்கம் போல மற்ற தேவர்கள் வந்து செர்த்து வைத்தனராம்! இது சிவ புராணம்!

    இன்னொரு கதையும் உண்டு!

    படைப்பு தொழிலில் தேர்ச்சி பெற்ற பிரமன், தனது திறமையெல்லாம் கூட்டி மூன்று அழகிகளை படைத்தானாம்! தக்க பருவம் வந்தவுடன் புணரலாம் என பிரமன் காத்திருக்கையில், தினமும் சந்திரன் திருட்டுத்தனமாக, இவர்களை புண்ர்ந்து விட, விஷ்னுவிடம் பிரமா முறையிட, லட்சுமியும், பார்வதியும் விசாரித்த வந்த விஷ்னு மேல் ஆசைப்பட்டு அவன் பின்னால் சென்று விட்டார்களாம்! ஏமாந்த பிரமா, கடைசி பெண்ணான சரசுவதியை பிடித்துக்கொண்டானாம்! சில காலம் கழித்து, விஷ்னு லக்சுமியிடமே மயஙகியிருந்ததால், அவன் ஆண்மையற்றவன் என குற்றம் சுமத்தி பார்வதியும் சிவனிடம் விரும்பி சென்றுவிட்டாள் !

    • // தனியாக சென்று பார்வதியின் அழகை மனதில் கொன்டு சரச்வதியை படைத்தானாம்! சரச்வதியைநெரில் கண்டவுடனேயெ காமம் மேலிட்டு, அவளை புணர முற்பட, சரசுவதி பயந்து ஓட, வழக்கம் போல மற்ற தேவர்கள் வந்து செர்த்து வைத்தனராம்! இது சிவ புராணம்! // – இது தங்கள் தற்போதைய திருவாசகம்..

      // பெற்ற மகளை புண்ர்ந்த பிரம்மா // – இதுதான் தங்கள் முந்தைய திருவாசகம்..

      // இன்னொரு கதையும் உண்டு!

      படைப்பு தொழிலில் தேர்ச்சி பெற்ற பிரமன், தனது திறமையெல்லாம் கூட்டி மூன்று அழகிகளை படைத்தானாம்! தக்க பருவம் வந்தவுடன் புணரலாம் என பிரமன் காத்திருக்கையில், தினமும் சந்திரன் திருட்டுத்தனமாக, இவர்களை புண்ர்ந்து விட, விஷ்னுவிடம் பிரமா முறையிட, லட்சுமியும், பார்வதியும் விசாரித்த வந்த விஷ்னு மேல் ஆசைப்பட்டு அவன் பின்னால் சென்று விட்டார்களாம்! ஏமாந்த பிரமா, கடைசி பெண்ணான சரசுவதியை பிடித்துக்கொண்டானாம்! சில காலம் கழித்து, விஷ்னு லக்சுமியிடமே மயஙகியிருந்ததால், அவன் ஆண்மையற்றவன் என குற்றம் சுமத்தி பார்வதியும் சிவனிடம் விரும்பி சென்றுவிட்டாள் ! //

      இதைவிட இன்னும் கிளுகிளுப்பாக உங்களால் எழுதமுடியும்.. சீரியல் புராணங்களைவிட இது போன்ற கதைகளுக்கு சில வட்டாரங்களில் மவுசு அதிகம்..

      • //இதைவிட இன்னும் கிளுகிளுப்பாக உங்களால் எழுதமுடியும்.. சீரியல் புராணங்களைவிட இது போன்ற கதைகளுக்கு சில வட்டாரங்களில் மவுசு அதிகம்..// நான் என்ன செய்யட்டும் அம்பி?
        இதை எல்லாம் அபத்தமானது என்று சொன்னதற்காகத்தானே எஙகளை நாத்திகர்கள் என்கிறீர்கள்? எழுதி வைததது நீஙகள் மட்டுமே படித்து ரசிப்பதற்காகத்தானே பெண்களும் சூத்திரனும் சம்சுகிருதம் படிக்க கூடாது, கேட்க கூடாது என்றீர்கள்! இதையெல்லாம் படித்து தானே, தேவனாத பூசாரி உருவானான்? அப்படி கேடுகெட்ட பூசாரியை அனுமதிக்கலாம், ஆனால் பிறவியில் பார்ப்பனல்லாத ஒரு யொக்கியனை அனுமதிக்க மாட்டீர்! ஏன் இந்த பார்பன கொலவெறி?

        • // இதையெல்லாம் படித்து தானே, தேவனாத பூசாரி உருவானான்? //

          அவன் மட்டும்தான் இதைப் படித்தானா..?! அல்லது இதை மட்டும்தான் அவன் படித்தானா..?!!!

  16. //வால்மீகி ராமாயணத்தில், தசரதனுக்கு புத்திரகாமேச்ட்டி யாகம் நடத்திக் கொடுப்பதற்காக, அங்க தேசத்திலிருந்து அயோத்திக்கு வரும் முன்பே ரிஷிய சிருங்கர் ஒரு சம்சாரி.. சாந்தா என்ற தசரதனின் மகளை மணந்திருந்தார்.. தசரதனின் மாப்ளை..//
    அம்பி! உன்கள் ஆர் எச் எச் வலைதடத்தையே ஆதாரம்காட்டினால் எப்படி? நான் படித்த, இப்பொதும் நூலகஙளில் உள்ள வால்மீகி ராமாயண மொழி பெயர்ப்பு உள்ளதே! ரிஷிய ச்ருஙகனை, ஒரு மானுக்கு பெற்றவர், அவனை பெண் வாடையே படாமல் பிரமச்சாரியாய் வளர்த்திருக்கிரார்! தசரதன் அனுப்பிய அழகிகள் காட்டில் அவனை சந்திததபொது ,’மான் களுக்கு தலையில் கொம்பிருப்பது போல, மார்பில் கொம்புள்ள நீஙகள் யார்?’ என கேட் கிரான்! அவனை மயக்கியே அயொத்திக்கு அழைத்து வருகின்றனர்! அவன் காலடி பட்டதும் மழை கொட்டுகிறது! வறட்சிநீங்கியதாம்! பின்னரே அவனை யாக புரொகிதாரக கொண்டு அச்வமேத யாகம் நடத்துகிறார்கள்! அது எப்படிநடந்தது, யார் யார் பாயாசம் உண்டது என்பதெல்லம் உஙகல் வலைத்தடத்தில் இருக்காது!

        • Rajaji ezhuthuna Chakravarthi Thirumagan series irukku,avura mattum thaan naan namba mudiyum.

          Thathachariyar ponra poli matter ezhuthalara ellam namba mudiyathu.

          • நன்றி அரிகுமார்! ஐய்ந்தாம் வகுப்பு சிறுவர்களுக்கு எழுதப்பட்ட கதை அல்லவா இது! பாவம் இதை படித்து,நீஙகளும், அம்பிகளும் தானும் குழம்பி அடுத்தவரையும் குழப்ப கிளம்பி விட்டீர் ! சக்கரவர்த்தி திருமகன் படித்த நீஙகள், அதன் முகவுரையாக ராஜாஜி எழுதியதை படிக்கவில்லையா? தெய்வீகததண்மை அற்ற ராமனாகவே அதில் சித்தரிப்பதை எழுதி இருப்பாரே!

        • வால்மீகியே ஒரு ஆர்.எஸ்.எஸ். காரர் என்று சொல்லாதவரை பிரச்சினையில்லை.. தாத்தாச்சாரியாரின் ராமாயணம்தான் எனக்கு ரொம்பப் பிடிக்கும் என்று நீங்கள் அடம் பிடிப்பது சீரியல் புராணங்களின் அவசியத்தை உணர்த்துகிறது..

          • அம்பி! நான் அடம் பிடிப்பவன் அல்ல! பழஙகால மொழிபெயர்ப்பு புத்தகஙள், சீனிவாச அய்ய்ஙகார் என்று நினைவு, எனது வீட்டிலேயே ஆராதிக்கப்பட்டு வந்தது, இப்பொதும் பொதுநூலகஙலில் இருக்கும்! பெரியார் திடலிலும் இருக்கும்! நூற்றாண்டுகளுக்கு மேலாக வைணவ குடும்பஙகளில் படிக்கப்படும்நூலாக இருப்பதால் அதுவே சரியான சாட்சி! உஙள் ஆர் எச் எச் பதிப்புகள் எல்லாம் திரித்து எழுதப்பட்டவை தானே!

              • …”The first and the last Books of the Ramayana are later additions. The bulk, consisting of Books II–VI, represents Rama as an ideal hero. In Books I and VII, however Rama is made an avatara or incarnation of Vishnu, and the epic poem is transformed into a Vaishnava text. The reference to the Greeks, Parthians, and Sakas show that these Books cannot be earlier than the second century B.C……”[ The cultural Heritage of India, Vol. IV, The Religions, The Ramakrishna Mission, Institute of Culture ]..
                at your same reference http://www.valmikiramayan.net/

      • காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் நம்பிக்கைக்குரிய
        “புராண மீமாம்ஸாத்வாய ஸுத்ர விஷாரத்” ,
        “வேதார்த்த ரத்னாகர வேதவாஸஸ்பதி”,
        “மஹோ பாத்யாய”,
        “மகா மஹோ பாத்யாய”
        Dr.
        அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் என்னும் வைணவப் பெரியார் ஒரு இந்து மதப் பார்ப்பனர் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.

        கேந்த்ரீய வித்யா பீடம் என்ற இந்திய அரசின் கல்வி நிறுவனம் வேதத்தை விஞ்ஞானபூர்வமாக அணுகி ஆராய்ந்ததற்காக தாத்தாச்சாரியாருக்கு ‘டாக்டர்’ பட்டம் வழங்கியிருக்கிறது.

        • பல பட்டங்களும், பாராட்டுகளும் பெற்ற பகுத்தறிவாளர் பெரியார்தாசன் இப்போது அப்துல்லாவாகி இஸ்லாத்துக்கு உங்களை அழைக்கிறார்.. எப்போது பாயாகப் போகிறீர்கள்..?!!

          • நண்பர் பெரியார்தாசனின் கட்டயம் வேறு! வெள்ளைதோல் இருப்பதால், ஒரு ஜர்மானியன் அய்யராகி அக்ரகார உறுப்பினர்ரகிவிட முடிகிறது! ஆனால் கருப்புத்தோல் இந்து (?), வர்ணாசிரப்படியின் கடைசியிலேயே காலந்தள்ள வேண்டியிருக்கிறது! மதம் மாறியது அவர் பிரச்சினை! எங்கு அந்த அவசியம் இல்லை! மனசாட்சி உள்ள இந்துவான தால் தாத்தாசாரி உண்மைக்கு சாட்சியம் கூறினார்! இதற்கு சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்பே வ ஊ சி எழுதிய முன்னுரையுடன் ‘ஞான சூரியன்’ (ஆக்கம்: சுவாமி சிவானந்த சரஸ்வதி) வெளிவந்திருக்கிறது!
            பூனை கண்ணை மூடிக்கொண்டால் பூலோகம் இருண்டுவிடுமா என்ன?

    • நீங்கள் படித்த அதே ராமாயண மொழி பெயர்ப்பை முழுதாகப் படித்திருந்தால் ரிஷ்ய சிருங்கரின் வாழ்க்கையின் அடுத்த கட்டத்தையும் படித்திருக்கலாம்.. காட்டில் இருந்து வந்து அவர் நடத்திய ராஜசூய யாகத்தையும், அதன் பின் அங்க தேசத்திலிருந்து வந்து நடத்திய புத்திரகாமேச்டி யாகத்தையும் போட்டு குழப்பியிருக்க மாட்டீர்கள்..

      • // காட்டில் இருந்து வந்து அவர் நடத்திய ராஜசூய யாகத்தையும், //

        ராஜசூய யாகமல்ல, அசுவமேத யாகம்.. என்னையும் குழப்பிவிட்டீர்கள்.. இந்த யாக குழப்பமெல்லாம் வரும் என்றுதான் கிருட்டினன் யாகம் தேவையில்லை, யோகமும், ஞானமும், பக்தியுமே போதும் என்று வைதிக யாகங்களின் முக்கியத்துவத்தைக் குறைத்தான்..

        • இந்த குழப்பம் எல்லாம் வேண்டாம் என்றுதான் , பெரியார் பித்தலாட்ட புராண இதிகாச பொய் மூட்டைகளை விடுத்து, பகுத்தறிவை நம்புஙகள் என்றார்! இந்து மதத்தை சீர்திருத்துஙகள்! அல்லது சீரழிந்து போய்விடுவீர்கள்!

  17. //ஒண்ணு விட்ட பங்காளிகளுக்கே ஒரு அங்குல நிலமும் கிடையாது என்று கூறி ஒரு யுத்தத்தையே நடத்தி லட்சக்கணக்கில் உயிர்களை பலிகொடுத்தவர்தான் உங்கள் சமநீதிக் காவலர் துரியோதனர்..//

    ஆகா ! என்ன அப்பாவிகள் ஒன்றுவிட்ட பஙகாளிகள்! ஏற்கெனவெ கொடுத்த சொத்தை சூதாட்டத்தில் இழந்துவிட்டு, மனவியையும் அல்லவா பணயம் வைத்தார்கள்! இழந்த சொத்தை மட்டும் கேட்டால் சரி! மொத்த ராஜ்ஜியத்தையும் அல்லவா கேட்டார்கள்! திரோபதியை திருப்பிக்கொடுத்தானே அதுவே அந்தக்காலநீதிப்படி பெருந்தண்மைதானே! இடைச்செருகளாக சூத்திர கிருட்டினன் ஒப்புக்கு தூது வந்த பொது தான் ஒரு வீடு கூட தர முடியாது என துரியொதனன் கூறுகிரான்! கிருட்டினன், அனுமார்,நந்தி போன்றோர் பார்ப்பன எதிர்ப்பாளர்களாய் இருந்தும், அவர்கள் பெயரில் பார்ப்பன விஷ கருத்துக்கள் இடைச்செருகலாகவே, திட்டமிட்டே புகுத்தப்பட்டன!

    • // திரோபதியை திருப்பிக்கொடுத்தானே அதுவே அந்தக்காலநீதிப்படி பெருந்தண்மைதானே! //

      வேலியில் போகும் பாம்பை எடுத்து வேட்டிக்குள் விட்டுக்கொள்வது போல்தான் வஞ்சம் தீர்க்க சபதமெடுத்த திரௌபதியை திருப்பி அனுப்பாமல் கூடவே வைத்துக் கொள்வது..

      // கிருட்டினன், அனுமார்,நந்தி போன்றோர் பார்ப்பன எதிர்ப்பாளர்களாய் இருந்தும், அவர்கள் பெயரில் பார்ப்பன விஷ கருத்துக்கள் இடைச்செருகலாகவே, திட்டமிட்டே புகுத்தப்பட்டன! //

      கிருட்டினன் ஒரு முஸ்லீம், அனுமார் ஒரு கிறித்தவர், நந்தி ஒரு பௌத்தர் என்று கூட தோன்றுமே…?!

          • thambi, selaiya uruvumpothu beeman enna tea kudikka poirunthana? aprom, pondatiya soothattathula thotuttu aprom enna veeram vendi kedakku. 1 doubt. 5 peru enthu oruthiya kattunappo avalukku erpadatha avamanama ippo innoruthan thottavodaney erpadapoguthu?

            • so if a woman is polyandric(opposite of polygamy),does it mean she is a prostitute?

              even if a woman is a prostitute/slutty,does it mean that anyone can go rape her without her consent?

              Bheeman was getting angry at this but if Dushasan went one step further,he would have got it.

        • // Delhi rape pola naalu peru sernthu drowpathiyai rape panna romba neram agiyirukaathu… . //

          கிருட்டினன் மட்டும் தொடர் சேலை வரமருளியிருக்காவிட்டால் அதையும் செய்திருப்பார்கள்..

  18. Ajaathashatru

    neenga innum ozhunga padikkala,

    Antha soothattathoda nibandhanai,12 varusham kaatulayum,oru varusham marainjum vaazhanum.

    Marainju vaazhum pothu oru sandai varuthu,appo 5 perum veliya varranga,adhula oru sikkal varudhu,13 varusham mudinju pocha illayannu.

    Antha panchayathu nadakkum pozhuthu,pandavargal kettadhu modhalla avunga raajjiyam adhavadhu indraprastham,kadaisiya 5 gramatha mattum kekkuraanga.

    adhuvum mudiyathu,anju kundumani nelam kooda kudukka mudiyathunnu solaran duryodhanan.

    bheeshmar,dronar mudhal ellarum solliyum avan kekkala.

    adhanaala por nadanthathukku kaaranam duryodhanan thaan.

    • அன்பான அரிகுமார்!நீஙகள்தான் நன்றக படிக்க வேண்டும்! சூதாட்டத்தில் எல்லாவற்றையும் இழந்தபின், திரவுபதியின் துகிலுரிதலும் நடந்தபின், பீழ்மர் முதலிய பெரியொர்கள் கேட்டுக்கொன்டதற்கு இணஙக, நீஙகள் சொல்லும் மாற்று நிபந்தனைகளை சகுனி முன்வைக்கிரான்! அதை அனைவரும் ஏற்றுக்கொள்கின்றனர்! வனவாசம் முடிந்து, அஞஞாதவாசமும் முடியும் சமயம் பாண்டவர் மறைவிடத்தை துரியொதனன் கண்டு பிடித்து விட , கிருட்டினன் அறிவுரைப்படி குழப்பமான காலண்டர் விவாதத்தை முன்வைத்து இழந்த ராஜ்ஜியத்தை பாண்டவர் கேட்க, போரிடுவதைதவிர வேறு வழியில்லாமல் போகிறது! மற்ற பாண்டவ சகொதரர்கள் போரை விரும்பும்போது, தருமன் தயங்குகிறான், சகாதெவனோ கிருட்டினனின் நாடகத்தை அறிந்து உன்னால் மட்டுமே சண்டையை நிறுத்தமுடியும், ஆனால் நீ அதை செய்ய மாட்டாய் , என குற்றம் சாட்டுகிறான்! ஆக பாரத போருக்கு காரண கர்த்தாவாக அறியப்படுவது கிருட்டினன் மட்டுமே!

      • naan thaan calendar panchayatuunu sonnane?

        Duryodhanan kandu ellam pudikkala,oru yoogathula poi sandaiya aarambam seigiraan.

        krishnan karya kartha thaan,aana duryodhanan nenaichu iruntha prachanaya thaduthu irukkalam,chinna vayasula bheeman kitta adi vaanguna kaduppu,draupadi kalaaicha kaduppa ellam manasula vachikittu comedy pieve aanavan avan.

      • சூதாடிப் பிடுங்கிய நாட்டை சொன்னது போல் வனவாசம் போய்வந்த பின்னும் கொடுக்கமுடியாது என்று முண்டா தட்டுபவர்களிடம் அடங்கி ஒடுங்கி சமாதானமாகப் போகாதே, யுத்தம் செய் என்பதுதான் கிருட்டினன் காட்டிய வழி..

        • ஒரு நாடு என்பது அங்கு வாழும் மக்களைக் குறிக்கும். அதன்படி நாட்டு மக்களை, அவர்களது வாழ்வை சூதாடத் துணிந்த மன்னர்களை, நாட்டை விட்டு துரத்துவதோ இல்லை மக்கள் நீதிமன்றத்தில் விசாரித்தூ தண்டனை வழங்குவதே மார்க்சிய வழி! மார்க்சிய வழி மக்களுக்கும் கண்ணன் வழி அம்பிகளுக்கும் சொந்தமானது!

          • Their lives were not gambled,only the control was.Is not one the same as what you say.

            Except the soldiers who were forced to fight,other common people had nothing to worry either ways.

          • திருதராட்டிரன் அவை மக்கள் நீதிமன்றமா..?! துரியோதனன் தோற்ற பாண்டவர்கள் நாட்டை அம்மக்களுக்குக் கொடுத்திருந்தானா..?!

            • //திருதராட்டிரன் அவை மக்கள் நீதிமன்றமா..?!//நன்றாக சொன்னீர்கள் அம்பி ! எந்தக்காலத்தில்தான் மக்கள்நீதிமன்றம் இயஙகியது? அப்பொதும்,இப்போதும், எப்போதும் நீதி? மன்றஙகள் மக்கள் மன்றஙகளாக இருந்ததில்லை! ‘ராமன் ஆண்டால் என்ன, ராவணன் ஆண்டால் என்ன’ என்ற பழமொழியே இதற்கு சான்று!

  19. Really annoyed by the amount of Hindu purana bullshit shown on kids channels. Pogo, Cartoon Network all are telecasting stupid stories like “Krishna makan”, “Chotta Bheem”, “Ganesa”, “Hanuman” etc. What these monkeys and elephants will teach kids? Stealing butter, cheating brother for a fruit etc are not moral values. All these shows are damaging the minds and thoughts of children.

    Don’t come against me on Angel TV or Aseervatham TV. I don’t support them too. But they are clearly religious channels but these programs are broadcasted in so called secular channels.

  20. Please dont proletyze on kanyakumari express,atleast you have a choice to switch channels or cancel subscription,we dont have any choice whether ac compartment / general compartment.

    And if you have issues,go fix your angel/aseervadham first,fix your home first before coming here to talk about us.

    • //And if you have issues,go fix your angel/aseervadham first,fix your home first before coming here to talk about us.//

      nee ponthu mathathila irukura ellathaiyum fix pannittu inga vanthirukiya? adadey!!!

    • // proletyze //

      இப்படி ஒரு வார்த்தை இருக்கிறதா? இதற்கு என்ன அர்த்தம் மொக்கை ‘அறிஞரே’ ?

  21. புதிய கள்ளச்சாராயமே மாகாபாரதத்தில் தேரோட்டி எடுத்து வளர்த்ததால் தேரோட்டியின் மகன் என்று சொன்னார்களே தவிர எந்த இடத்தில் சூத்திரன் என்று சொல்லப்பட்டுள்ளது , 18 நாளில் 40 லஷ்சம் பேர் எப்படி இறந்தார்கள் என்று வினவும் நீ சூரியனை நினைத்தவுடன் பிள்ளைபெற்றதாக ( 10 மாதம் காத்திறாமல் ) கூறுவதை மட்டும் ஏற்றுக்கொண்டு வினவுவதேன் , மகாபாரதம் ,ராமாயனம் – இரண்டும் கதையல்ல மனிதர்களின் வாழ்க்கைநெறி இதை யாரையும் ஏற்க கட்டாயப்படுத்தப்படவில்லை ,அது அவரவர் விருப்பம் . முதலில் உனது பிற்ப்பைபற்றி உனக்கு தெரியுமா ? அதை உன் தாயிடம் கேட்டு தெரிந்துகொள் .பிறகு மற்றவர்களின் நம்பிக்கைபற்றி பேசு . மா.குமார் ,விழுப்புரம் .

  22. Karna is called shudhputra not shudra.

    it also means something,his father was a charioteer so was called a shudra but Karna was only shudputra and when he became the king of Anga,he becomes a Kshatriya.

    People who talk about caste being a stable,sticky thing can see the flexibility of caste in the old times.

  23. //Karna is called shudhputra not shudra…….he became the king of Anga,he becomes a Kshatriya..// If so, Karna need not have suffered humiliation by his own father-in-law and need not have isolated and neglected by hardcore kshatriya Bishmaa during the great war! Even now shudraas supporting Aryan cause is called sath-shudraa, but still shudra which is by birth. Sage Viswaamithraa could not become brahma rishi as he is not a brahmin by birth, he was only a raaja rishi, in spite of his various contribution including Gaayathri mantraa. Ofcourse, later, his descendants are accepted as seperate brahmin Gotra. Is it not true Arikumaar?

  24. I dont think anyone though different of Karna because of where he came from,he was a great warrior and a deserving King of his country.

    I dont think Bheeshma/Father in Law had problems with his birth but the biggest accustaion against him is that when Draupadi got assaulted in the court,maybe others didn’t object but Karna was the only one who could have stopped it and he is a noble person who can but he didn’t.If at all anything goes against Karna,it is only that.

    I dont understand these terms like Sat Shudra/Sat Vaishya,these are terms introduced by some people for random reasons to distinguish between two but i dont believe in all this.The original definition is simple enough.

    From somethings i read,it seems sat shudra is someone who wants to learn the vedas and become a brahman,

    To become everything else it is just showing the qualities of that varna but for a brahman one has to elarn the vedas and show the temperment,

    most of today’s brahmins wont qualify for it.

    Vishwamitra story is different,basically when someone wants to enter an elite club,or a group of people,one has to win their trust and admiration.Vishwamitra became brahma rishi in the end and he did so after being challenged by Vashishta,which he did achieve in the end.

  25. Welcome Arkumaar! My job is easy now! You have accepted Viswamithra was finally accepted as Brahmarishi! Will you accept trained archagas as ‘pujaaris’ at par with brahmins?

  26. I am not opposed to anyone becoming poosari,but i dont trust these entities involved with this.

    Especially at a time when there are explicit reservations against socially forward but economically backward castes,i do not support something which hurts the situation even more.

Leave a Reply to Ajaathasathru பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க