privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபார்ப்பனிய பாசிசம்பார்ப்பன இந்து மதம்ஜெயேந்திரனை கூண்டிலேற்று, தில்லை கோயிலை காப்பாற்று - செய்தி, படங்கள்

ஜெயேந்திரனை கூண்டிலேற்று, தில்லை கோயிலை காப்பாற்று – செய்தி, படங்கள்

-

1. புதுச்சேரி

27-11-2013 போராட்டம் – நீதிபதியை விலை பேசி கொலைகாரன் சங்கராச்சாரி விடுதலை : புதுச்சேரி புஜதொமு போராட்டம்!

னது காமலீலைகளையும், ஊழல்களையும் அம்பலப்படுத்திய சங்கரராமனை காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் சன்னதியில் கூலிப்படையை வைத்துப் படுகொலை செய்த சங்கராச்சாரி, விஜயேந்திரன் உள்ளிட்ட 23 பேரையும் புதுச்சேரி நீதிமன்றம் விடுதலை செய்து விட்டது. அரசுத் தரப்பில் போதிய சாட்சிகள், ஆதாரங்கள் இல்லாததால் விடுதலை செய்வதாக 27-11-2013 அன்று அறிவித்தது நீதிமன்றம்.

இத்தீர்ப்பு வெளியான ஒரு மணி நேரத்தில் புதுச்சேரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் வாயிலில் கூடிய அப்பகுதி புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தோழர்கள், நீதிமன்றம், போலிசு, அதிகார வர்க்கம் என்றுமே பார்ப்பனிய கட்டுமானத்திற்கு துணை நிற்பவர்கள் என நிரூபிக்கும் விதமாக அளிக்கப்பட்ட தீர்ப்பினை எதிர்த்தும், சாட்சிகள் அனைவரையும் விலை பேசியும், படியாதவர்களை  மிரட்டியும் பிறழ் சாட்சிகளாக மாற்றிய சங்கராச்சாரியாரை தூக்கிலிட வேண்டும் என்ற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீதிமன்ற வளாகத்தில் உள்ளே சென்று முழக்கமிட வேண்டும் என்பதாலும், சுமார் 200-க்கும் மேற்பட்ட துப்பாக்கி ஏந்திய போலிசு நீதிமன்றத்தின் உள்ளே செல்லும் அனைவரையும் சோதனை செய்து அனுப்பியதாலும், சிவப்பு செட்டை இல்லாமல் கொடியுடன் செல்வது என திட்டமிடப்பட்டு சென்ற போது நீதிமன்ற வாயிலிலேயே காவல் துறையினர் நம்மை அடையாளம் கண்டு நிறுத்தி விட்டதால் அங்கேயே முழக்கமிட ஆரம்பித்தோம்.

வழக்கை விசாரித்த நீதிபதிகளை ரேட் பேசி விலைக்கு வாங்கியவன் இன்று தீர்ப்பையும் ரேட் பேசி தனக்கு சாதகமாக வாங்கி விட்ட கொலைகாரன் சங்கராச்சாரியை தூக்கில் போட வேண்டும்.

தமிழை வேசிமொழி என்றும், தமிழர்களை வேசிமக்கள் என்றும் தீண்டாமை சேமகரமானது என்றும் பார்ப்பனிய விஷத்தைக் கக்கும் சங்கராச்சாரியை கைது செய்ய வேண்டும்.

உழைக்கும் மக்களை பிளவுபடுத்தி ஒற்றுமையை சீர்குலைக்கும் இது போன்ற பயங்கரவாதிகளை தூக்கில் போட்டால்தான் நாடும், மக்களும் ஒற்றுமையாக வாழ முடியும்

என்றும் விளக்கும் வகையில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

பகுதியில் பெரியார், அம்பேத்கர் பெயரைத் தாங்கி செயல்படும் எந்த அமைப்பும் எதிர்ப்பு காட்டாத நிலையில் புதுச்சேரி புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தங்கள் எதிர்ப்பை உடனடியாக பதிவு செய்தோம்.

ஏற்கனவே தீர்ப்பு வெளியாவதை ஒட்டி இந்தியாவின் பல டிவி சேனல்களும் அங்கே முகாமிட்டிருந்தன. நாம் எதிர்ப்பு தெரிவிக்க ஒன்று கூடிய சிறிது நேரத்திலேயே பல டிவி சேனல்கள் போராட்டத்தினை படம் பிடிக்க ஆரம்பித்தனர்.

உடனே, அங்கிருந்த போலிஸ் அதிகாரிகள், “இது நீதிமன்ற வளாகம், ஆகவே, இங்கு கோஷம் போடக் கூடாது” என்று கூறித் தடுத்தனர். “நாங்கள் வளாகத்திற்கு வெளியேதான் போராடுகிறோம்” என்று பதில் தெரிவித்தவுடன், “நீதிமன்றத்தின் அதிகாரம், வளாகத்திற்கும் அப்பாற்பட்டது” என ஒரு போலிசு அதிகாரி கூற, “அப்படியானால் நீதிமன்றத்தின் அதிகார எல்லையானது அரபிக் கடல், இந்து மாக் கடல், வங்காரள விரிகுடா என்பதாக இருக்கிறதா? மக்களுக்கு ஜனநாயகம் இல்லையா” என்று தோழர்கள் கேட்க, அது பற்றி பேச முடியாமல், “அதெல்லாம் தெரியாது, இப்போது இங்கு செய்யக் கூடாது, அனுமதி வாங்கி செய்யுங்கள், அதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் செய்யுங்கள்” என்று கேட்டுக் கொண்டனர்.

எனினும் சுமார் 30 நிமிடங்கள் முழக்கமிட்டு மக்கள்  மத்தியில் நமது எதிர்ப்பை பதிவு செய்தோம். உடனே போலிசு “நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போடுவோம்” என்று மிரட்டினர். தோழர்கள் தொடர்ச்சியாக முழக்கமிட்டதால் காவல்துறை “நாங்கள், 200 பேர் உள்ளோம், உங்களை இங்கு முழக்கமிட விட்டால் எங்களை சும்மா விட மாட்டார்கள்” என்று கூறி, “தயவு செய்து முறையாக அனுமதி பெற்று நடத்துங்கள்” என்று கூறியதால் போராட்டத்தை முடித்துக் கொண்டு திரும்பினோம். பார்ப்பனியத்தை ஒழிக்கும் வரையில் எமது போராட்டத்தை தொடருவோம்!

நாம் முழக்கமிட்டு முடித்தவுடன் நீதிமன்றத்தின் உள்ளே இருந்த விசிக வழக்கறிஞர்கள் 10 பேர் தங்களின் எதிர்ப்பைக் காட்டும் விதமாக முழக்கமிட ஆரம்பித்தனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

30-11-2013 ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி பு.ஜ.தொ.மு, விழுப்புரம் மாவட்டம் பு.மா.இ.மு, வி.வி.மு மற்றும் கடலூர் மாவட்டம் பு.மா.இ.மு ஆகிய தோழமை அமைப்புகளும் இணைந்து இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு புதுச்சேரி பு.ஜ.தொ.மு அலுவலக செயலாளர் தோழர் லோகநாதன் தலைமை ஏற்று நடத்தினார். கண்டன உரை நிகழ்த்திய விழுப்புரம் மாவட்டம் பு.மா.இ.மு செயலாளர் தோழர் செல்வகுமார் பார்ப்பன பயங்கரவாதி சங்கராச்சாரியார் இந்த கொலையை எப்படி திட்டமிட்டு நடத்தினான், அவ்வழக்கில் இருந்து தப்பிக்க சங்கராச்சாரியார் என்னென்ன ப்ராடு வேலை செய்தான், நீதி மன்றங்களை எப்படி விலை பேசினான். சாட்சிகளை மிரட்டியது மற்றும் கொலை செய்தது என பார்ப்பனிய பூநூல் அதிகாரத்தையும் அதன் திமிரையும் அம்பலப்படுத்தி பேசினார்.

இறுதியாக பேசிய புதுச்சேரி பு.ஜ.தொ.மு பொதுச்செயலாளர் தோழர் கலை பார்ப்பன பயங்கரவாதத்தையும், அது எவ்வாறு கொடூரமான முறையில், ஈவிரக்கமற்ற முறையில், மனித நேயமற்ற முறையில் சர்வாதிகாரம் கொண்டு கேட்பாரற்று இந்த நாட்டின் மக்களை ஒடுக்குகிறது என்பதையும், “அதனால்தான் 2000 இஸ்லாமியர்களை கொன்றுவிட்டு தண்டிக்கபட முடியாமல் அடுத்த பிரதமர் நான்தான் என்று ”மோடி” யால் நாடு முழுவதும் உலாவர முடிகிறது. தான் கொலை செய்துவிட்டு இல்லையென சங்கராச்சாரியார் ஜந்து வெளியில் திரிய முடிகிறது. விஞ்ஞானம் செழிப்பாக வளர்ந்துவரும் இந்த 21-ம் நூற்றாண்டில் கூட புராண கட்டுக்கதைகளை சொல்லி தில்லை கோயில் தனக்கு சொந்தம் என்றும், ராமர் பாலம் என்றும் மக்களை வலுக்காட்டாயமாக நம்ப வைக்க முடிகிறது. தான் செய்த படுபாதக கொலைகளையும், மனித உரிமை மீறல்களையும், சாதிவெறி கொடுமைகளையும் செய்துவிட்டு இந்த அரசையும் நீதி துறையையும் தனது அதிகார மன்றங்களாக மாற்ற முடிகிறது. இதுதான் பார்ப்பன பயங்கரவாதம். இந்த பார்ப்பன பயங்கரவாதத்தை முறியடிக்க பாட்டாளி வர்க்க தலைமையில் அணிதிரண்டு போராடுவதன் மூலம்தான் சாதிக்க முடியும் ” என்று பேசினார்.

ஆர்ப்பாட்டத்தையொட்டி மக்களிடம் பெற்ற கருத்துக்கள் :

  • கண்டன ஆர்ப்பாட்டம் வரவேற்கத் தக்கது. அநீதியான தீர்ப்பு. சங்கராச்சாரியார் தண்டிக்கப்பட வேண்டும்.
  • ஜனநாயகத்திற்கு எதிரான தீர்ப்பு, மேல் முறையீடு செய்ய வேண்டும் –   ( 7 பேர் )
  • நீதி விலைக்கு வாங்கப்பட்டுள்ளது.
  • நீதி மன்றத்தின் தீர்ப்பு 90% தவறு. பிராமணர்கள் செய்யக்கூடிய தவறுக்கு அரசு உடந்தையாக இருக்கு. இதை விடக்கூடாது.
  • இந்த அநியாயத்திற்கு மக்கள் எழுச்சி தேவை. நான் கண்டிப்பாக கலந்து கொள்வேன்.
  • கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும். அதுதான் சரியானது.
  • தீர்ப்பு தவறானது, கடுமையாக எதிர்க்க வேண்டும்.
  • விசாரணை போலியானது, இதற்கு அனைத்துக் கட்சிகளும் உடந்தை.
  • இந்த கேடுகெட்ட தீர்ப்புக்கு மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்பட்டுள்ளது.
  • நீதி மன்றத்தைவிட கட்டப் பஞ்சாயத்து தேவலாம்.
  • வசதி படைத்தவனுக்கு ஒரு தீர்ப்பு, இல்லாதவனுக்கு ஒரு தீர்ப்பா?
  • இந்த தீர்ப்பு தவறானது. சங்கராச்சாரியார் குற்றவாளி இல்லை என்றால் கொலைகாரன் யார்? அவனுக்கு தண்டனை வழங்கு? ( 5 பேர் )
  • இந்த போலிசும், அரசும் மற்றும் அதிகாரிகளும் சரியாக செயல்படவில்லை என்பதே உண்மை.
  • தீர்ப்பு தவறானது, பணம் மற்றும் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி தவறான தீர்ப்பை வழங்கியுள்ளது.( 2 பேர் )
  • சாட்சியங்களை விலைக்கொடுத்து வாங்கிவிட்டார்கள்.
  • பாதிக்கப்பட்டவருக்கு கண்டிப்பாக நியாயம் கிடைக்க வேண்டும்.
  •  சங்கராச்சாரியாரை தூக்கில் போட வேண்டும். வழக்கு நிதியாக 10 லட்சம் தருகிறேன்.
  • பார்ப்பான் பார்ப்பான் என்று எல்லோரையும் பேசாதே, நானும் பார்ப்பாந்தான், சம்பந்தப்பட்டவரை பேசு, இல்லையேல் பேசுவதை நிறுத்து.
  • சார் நீங்க சரியா பேசுரிங்க, வேறு எந்த கட்சிகளும் இப்படி பேசுவதில்லை, பெரியாருக்கு பிறகு உங்களைத்தான் பார்க்கிறேன்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல் :
பு.ஜ.தொ.மு, புதுச்சேரி

2. கிருஷ்ணகிரி

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி மற்றும் விவசாயிகள் விடுதலை முன்னணி, புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணியின் சார்பாக, சங்கர்ராமன் கொலை வழக்கில், குற்றவாளி ஜெயேந்திரன் உள்பட 24 பேர் விடுதலை செய்யப்பட்டதை கண்டித்தும், உச்சிக் குடுமி மன்றத்தின் அநீதியான தீர்ப்பை முறியடிப்போம் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் கிருஷ்ணகிரியில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி, அனுமதி மறுக்கப்பட்டதால் தடையை மீறி கிருஷ்ணகிரி ரிஜிஸ்டர் அலுவலகம் முன்பிருந்து ஊர்வலமாக சென்று ரவுண்டானாவில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் பெண்களும் சிறுவர்களும் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயிகள் விடுதலை முன்னணியை சேர்ந்த தோழர் ஆம்பள்ளி முனிராஜ் தலைமை தாங்கினார். புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாவட்ட செயலாளர் தோழர் இரா. சங்கர், புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணி தோழர் ராஜா, விவசாயிகள் விடுதலை முன்னணியை சேர்ந்த தோழர் முத்துக்குமார் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இறுதியாக பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்படும்போது தோழர்கள் வழிநெடுகிலும் விண்ணதிர முழக்கமிட்டே சென்றனர். இதனை ஏராளமான பொதுமக்கள் கடை வியாபாரிகள் என திரண்டு நின்று கவனித்துச் சென்றனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல்:

புதிய ஜனநாயகம் செய்தியாளர்,
கிருஷ்ணகிரி மாவட்டம்.

3. கோவை

சங்கரராமன்  கொலை வழக்கு – குற்றவாளி  ஜெயேந்திரன்  உள்பட 24 பேர்  விடுதலை!
உச்சிக்குடுமி  மன்றத்தின்  அநீதியான தீர்ப்பை  முறியடிப்போம்!

என்கின்ற தலைப்பை   மையமாக வைத்து   கோவை  மாவட்டத்தின்   செஞ்சிலுவை முன்பாக   பு.ஜ.தொ.மு. மற்றும் ம.க.இ.க  சார்பாக 30.11.2013 (சனி கிழமை) ஆர்ப்பாட்டம் நடத்த     காவல் துறையிடம்     அனுமதி   கோரினோம்    காவல்துறை அனுமதி  மறுத்து விட்டது.

திட்டமிட்ட  தேதியில்   சனி கிழமை   மாலை 5.00  மணிக்கு   கோவை  நீதி மன்ற  வாளகத்தில் இருந்து  கோவை  ம.க.இ.க.  செயலாளர் தோழர்  மணிவண்ணன்  தலைமயில்  கோவை  பு.ஜ.தொ.மு   செயலாளர்  தோழர்   விளவை  ராமசாமி, H.R.P.C   செயலாளர்  தோழர்  அபுதாகிர்  அவர்களுடன்  சாலையில்   இடி முழக்கங்களு​டன்  400 மீட்டர்   தொலைவில்  உள்ள செஞ்சிலுவை  சங்கத்தை  நோக்கி  ஊர்வலமாக சென்றோம்.

தயாராக இருந்த 20 -க்கும்  மேற்பட்ட  காவல்துறையினர்    தடுத்தனர்.  அங்கேயே  5 நிமிடம்  தமிழக  அரசை  கண்டித்து

தமிழக  அரசே,

  • தீர்ப்பை  எதிர்த்து  மேல்  முறையீடு  செய்து  கொலைகாரன்  சங்கராச்சாரி கும்பலுக்கு தண்டனை வழங்க  நடவடிக்கை எடு!
  • உச்சிக் குடுமி  மன்றத்தில்  தில்லைக்  கோவிலை  தீட்சதர் கும்பலுக்கு  தாரைவார்க்க சதிசெயும்   சுப்பரமணிசாமி பார்ப்பன கும்பலை விரட்டியடிப்போம்!
  • சாதி தீண்டாமையை   உயர்திபிடிக்கும்  பார்ப்பனியத்திற்கு பாடைகட்டுவோம்!
  • சங்கரமடத்திற்கு  சமாதிகட்டுவோம்!

என்று இடி  முழக்கம் போட்டு  கொண்டிருந்தவர்களை   காவல் துறை  கைது செய்தனர். இந்த  ஆர்ப்பாட்டத்தில்  நிலமாலை, திருப்பூர், உடுமலை தோழர்களும்  பங்கேற்றனர். கோவையில் இருந்து  என்.டி.சி , எஸ்.ஆர்,ஐ , சி.ஆர்.ஐ , டூ
​கெ​தர், பெரோலிங்க்ஸ் போன்ற ஆலை  தொழிலாளர்களும்  ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

செய்தி :
கோபிநாத்

4. திருச்சி

ங்கரராமன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளான சங்கராசாரிகள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மேல் முறையீடு செய்யக் கோரியும் தில்லைக்கோயிலை மீண்டும் தீட்சிதர்களிடம் ஒப்படைக்க ஜெயலலிதா அரசும் சுப்பிரமணியசாமியும் நடத்தும் சதிதிட்டங்களை எதிர்த்தும் திருச்சியில் 30.11.2013 காலை 10.30 மணியளவில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. முன்னதாக, திருச்சி ஜங்சன் எதிரே காதிகிராஃப்ட் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி தந்த காவல் துறையினர் கடைசி நேரத்தில் அனுமதியை மறுத்தனர். எனவே, தடையை மீறி மத்திய பேருந்து நிலைய பெரியார் சிலை முன்பு சாலை மறியலாக நடத்தப்பட்டது.

இதில் தஞ்சை, கரூர், திருச்சியைச் சேர்ந்த தோழர்கள்பெண்கள் உட்பட கலந்து கொண்டு கைதாயினர். இந்த மறியல் போராட்டத்திற்கு பு.மா.இ.மு – வின் மாவட்ட செயலர் தோழர் செழியன் தலைமை தாங்கினார். ம.க.இ.க-வின் மாநில இணைப்பொதுச் செயலர் தோழர் காளியப்பன் சிறப்புரையாற்றினார். பெருந்திரளாக மக்கள் கூடி நின்று ஆதரவளித்தனர். மக்களிடையே ஆயிரக்கணக்கான பிரசுரங்கள் மூலம் பிரச்சாரம் கொண்டு செல்லப்பட்டது.

முழக்கங்கள்

trichy-posterதமிழக அரசே, ஜெயா அரசே,
தப்ப விடாதே, தப்ப விடாதே
கொலை கார சங்கராச்சாரிகளை
தப்ப விடாதே, தப்ப விடாதே
உடனடியாக மேல்முறையீடு செய்!

கொலை காரன் சங்கராச்சாரி
நிரபராதி என்றானால்
சங்கர ராமன கொன்று போட்டது
யாருன்னுசொல்லு, உண்மையச் சொல்லு!

தமிழக அரசே, ஜெயா அரசே,
தில்லைக் கோயிலைக் காப்பாற்று !
தீட்சிதர் கும்பல் கைப்பற்ற
இடம்தராமல் வழக்கை நடத்து!

உழைக்கும் மக்களே, தமிழர்களே,
நந்தனை எரித்த தீட்சிதர்கள்
தில்லைக் கோயிலைக் கைப்பற்ற

அனுமதியோம்! அனுமதியோம்!
தில்லைக் கோயிலும் தமிழ் வழிபாடும்
நமது உரிமை, தமிழனின் உரிமை!

உச்ச நீதி மன்றமா?
உச்சிக்குடுமி மன்றமா?
ஜெயா அரசும் பார்ப்பன கும்பலும்
சு.சாமியும் தீட்சித கும்பலும்
தில்லைக் கோயிலை மீட்கத் துடிக்கும்
கூட்டுச் சதியை முறியடிப்போம்!
தில்லைக் கோயிலை கைப்பற்ற முயலும்
தீட்சித கும்பலை விரட்டியடிப்போம்!

கொலை காரன் சங்கராச்சாரி
காமவெறியன் ஆசாராம் பாபு
குடும்பத்தையே கொலை செய்து
சொத்தைப் பறித்த சோதிடர் கண்ணன்!
நம்பாதீங்க, நம்பாதீங்க!
சாமியார்களை நம்பாதீங்க!
தமிழர்கள் நாம் ஒன்றிணைவோம்!
சாமியார் கூட்டத்தை விரட்டிடுவோம்!
காவிக் கும்பலை விரட்டியடிப்போம்!

மக்கள் கலை இலக்கியக் கழகம்
புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
விவசாயிகள் விடுதலை முன்னணி
பெண்கள் விடுதலை முன்னணி

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல்:
ம.க.இ.க., திருச்சி.

5. மதுரை

ஜெயேந்திரனை கூண்டிலேற்று ! தில்லை கோயிலை காப்பாற்று ! – ஆர்ப்பாட்டம்

காலை 10.30 மணியளவில் மதுரை தலைமை தபால் நிலையம் முன்பாக விண்ணதிரும் முழக்கஙளுடன் ஆர்ப்பாட்டம் துவங்கியது.

புதுச்சேரி நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட சங்கராச்சாரி ஜெயேந்திரன் ஒரு கொலைகாரன் மட்டுமல்ல,

  • தமிழ் வழிபாட்டுக்கு உகந்த மொழி அல்ல என்றும் , தமிழ் நீச பாஷை என்றும், தமிழில் வழிபடுவது தீட்டு என்றும் கூறியவன்.
  • சாதி – தீண்டாமையை தொடர்ந்தும் விடாதும் கடைபிடிப்பவன். அதனை சரி என்று நியாயப்படுத்துபவன்.
  • பெண்களை இழிவாக கருதியும் பேசியும் வருபவன்.
  • தமிழகத்தை பார்ப்பன நாடாக்க முயலும் பாசிச ஜெயா, துக்ளக் சோ, சுப்பிரமணிய சாமி, ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. இந்து முன்னணி கும்பலின் தலைவன்.

மொத்தத்தில் ஜெயேந்திரன் ஒரு பார்ப்பன பயங்கரவாதி  என்பதையும்….

தில்லைக் கோயிலை கைப்பற்ற திட்சித பார்ப்பன கும்பலுடன் கை கோர்த்து நிற்கும் சுனா சாமி, சோ.ராமசாமி, ஜெயா மாமி, மற்றும் உச்சிக் குடுமி மன்றத்தின் கூட்டு சதிகளை அம்பலப்படுத்தியும்….

தோழர்.குருசாமி (வட்ட செயலாளர், வி.வி.மு.,உசிலை), தோழர்.நாகராசன் (அமைப்பாளர், பு.ஜ.தொ.மு. சிவகங்கை மாவட்டம்), தோழர்.லயனல் அந்தோணி ராஜ் (செயலாளர்,மதுரை மாவட்டக் கிளை, ம.உ.பா.மையம்), தோழர்.கதிரவன் (மாநில செயற்குழு உறுப்பினர், ம.க.இ.க.) ஆகியோர் உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்திற்கு தோழர்.மருது (மகஇக மதுரை ) தலைமை தாங்கினார்.

பெண்கள், குழந்தைகள் உட்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல்:

ம.க.இ.க
மதுரை

6. சிதம்பரம்

தில்லைக் கோயிலை தீட்சிதர் சொத்தாக மாற்ற உச்ச நீதிமன்ற வழக்கில்
ஜெ அரசு
– சு.சாமி பார்ப்பனக் கும்பல் கூட்டுச் சதி!

தில்லைக்கோயில் மீதான தமிழ் மக்களின் உரிமையை நிலை நாட்டுவோம்!
தமிழ் வழிபாட்டுரிமையை நிலை நாட்டுவோம்
!

என்ற முழக்கங்களுடன்

சிவனடியார் ஆறுமுகசாமியின் உண்ணாநிலை போராட்டம் சிதம்பரம் காந்தி சிலை அருகில் 30 -11-13 சனிக்கிழமை, காலை  9-00 மணி முதல் மாலை 6-00 மணி வரை நடைபெற்றது.

தகவல் :

மனித உரிமைப் பாதுகாப்பு மையம்,
சிதம்பரம்.