privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபார்ப்பனிய பாசிசம்பார்ப்பன இந்து மதம்பிப் - 16 :தில்லைக் கோவில் மீட்பு - தீண்டாமை ஒழிப்பு மாநாடு

பிப் – 16 :தில்லைக் கோவில் மீட்பு – தீண்டாமை ஒழிப்பு மாநாடு

-

சிதம்பரம் மாநாடு

ன்பார்ந்த உழைக்கும் மக்களே!

  • சிதம்பரம் நடராசர் கோவிலில் நமது முப்பாட்டன் நந்தனார் நுழைந்த தெற்கு வாயிலை அடைத்து, தீட்சிதர்கள் எழுப்பியிருக்கும் தீண்டாமைச் சுவரை அகற்றுவோம்!
  • தீட்சிதர்களால் அகற்றப்பட்ட நந்தனார் சிலையை மீண்டும் நிறுவ போராடுவோம்!
  • மக்கள் சொத்தான தில்லைக்கோவிலை மீட்க சட்டமன்றத்தில் தனிச்சட்டம் இயற்ற நிர்பந்திப்போம்!

மாநாடு-பேரணி-பொதுக்கூட்டம்-கலைநிகழ்ச்சி

நாள் : 16-2-14 ஞாயிற்றுக் கிழமை
நேரம் : காலை 10.00 மணி முதல்
இடம் : சிதம்பரம்.

மது முப்பாட்டன் நந்தனாரை இழிவுபடுத்தி வேள்வித் தீ முட்டி கொன்றொழித்த பார்ப்பனர்கள் தீண்டாமைச் சுவரையும் எழுப்பி அவரது ஆளுயர சிலையையும் அகற்றி தனது பார்ப்பன சனாதன ஆதிக்கத்தை இன்று வரை நிலைநாட்டி வருகின்றனர்.

“தில்லை நடராஜர் கோவில் நிர்வாகத்தை தீட்சிதர்களே தொடர வேண்டும்” என்று உச்சிக்குடுமி மன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. “சூத்திரனுக்கு ஒரு நீதி, தண்டச்சோறு உண்ணும் பார்ப்பானுக்கு ஒரு நீதி” என்பது நந்தனார் காலத்தில் மட்டுமல்ல. 21ஆம் நூற்றாண்டிலும் தொடர்கிறது.

“1951-ல் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் தீட்சிதர்கள் மடாதிபதி போன்றவர்கள் என்று சொல்லியுள்ளதை நாங்கள் ஏற்கிறோம். ஆனால் அந்த தீர்ப்பு சரியா? தவறா? என்று ஆராய விரும்பவில்லை” என்பது தான் தற்போது வழங்கப்பட்ட தீர்ப்புக்கு அடிப்படை. சிதம்பரம் கோயில் மடம் அல்ல. தீட்சிதர்கள் கோவிலில் மணியாட்டும் அர்ச்சகர்கள் மட்டுமே. ஆனால் தீட்சிதர்கள் சார்பில் பா.ஜ.க. சு.சாமி வாதிட பார்ப்பன ஜெயா அரசு ஆதரவு அளிக்க, பார்ப்பன நீதிபதிகள் அக மகிழ்வுடன் வழங்கிய அயோக்கியத்தனமான தீர்ப்பு இது.

உச்சநீதிமன்ற தீர்ப்பு ஒன்றும் புனிதமானதும், இறுதியானதும் அல்ல. உச்சநீதிமன்றத்தில் வழங்கப்படும் பெரும்பான்மை தீர்ப்புகள் ஊழல் அடிப்படையிலேயே வழங்கப்படுகிறது. பெரும்பான்மை மக்கள் நலன் சார்ந்த, தொழிலாளர்கள், விவசாயிகள், கல்வி உரிமைகள், இயற்கை வளங்கள் ஆகியவற்றுக்கு எதிராக தனியார்மயக் கொள்கையை ஆதரித்து பல தீர்ப்புகளை வழங்கியுள்ளனர். பாதிக்கப்படும் மக்கள் எதிர்த்துப் போராடாமல் எப்படி இவற்றை ஏற்க முடியும்?

பக்தர்கள் நடராசனை பார்க்க தீட்சிதர்கள் கேட்கும் காசை கொடுக்க முடியாத போது, தீட்சிதர்கள், “சுப்ரீம் கோர்ட் சொல்லிடுச்சு, வெளியே போ” என மக்களை அவமானப் படுத்துகிறார்கள். காசுக்காக மட்டுமல்ல நந்தனார் தொடங்கி வள்ளலார், வாரியார் வரை தனது பார்ப்பன ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்கு தயங்கியதில்லை. இத்தகைய கொடுமைகளையும் தமிழ் மொழியை இழிவுபடுத்துவதும், சாதி தீண்டாமையை கடைபிடிப்பதும், ஒழிக்கப்பட வேண்டுமென்றால் நடராசர் கோவிலை அரசு கட்டுப்பாட்டில் கொண்டுவர சட்டமன்றத்தில் தனிச்சட்டம் இயற்ற வேண்டும். இத்தகைய நீதியை நிலைநிறுத்த மக்கள் மன்றத்தில் இறங்கி நாம் போராட வேண்டும்.

தில்லைக் கோவிலில் உண்டியல் வைத்த பிறகு அதன் வருமானம் மூன்று ஆண்டுகளில் 1.5 கோடி ரூபாய். கிலோ கணக்கிலான தங்கம், வெள்ளி தனி கணக்கு ! ஆனால் முன்பு தீட்சிதர்கள் ஆண்டுக்கு வெறும் 199 ரூபாய் இருப்பு என பொய் கணக்கு காண்பித்தார்கள். வருமானத்தில் உள்ள மோசடி மட்டுமல்ல? கோவில் சொத்தையே மோசடியாக விற்று பணம் பார்த்த தீட்சிதர்களிடம், 40 ஏக்கரில் அமைந்த தில்லை கோவில் சாவியையும், ஆருத்ரா தரிசனம் ஆனி திருமஞ்சனம் என்று பக்தி பெருக்குடன் செல்லும் லட்சக்கணக்கான பக்தர்களின் உரிமையையும், எத்தகைய படுபாதக செயலையும் செய்யத் தயங்காத சதிகாரர்கள் கையில் கோவிலை கொடுத்துள்ள இழி செயலை அனுமதிக்க முடியாது.

வரலாற்றில் சமயக்குரவர்கள் நால்வருக்குப் பிறகு தில்லை நடராசர் கோவில் சிற்றம்பல மேடையில் 2008-ல் சூத்திரர் என்று இழிவுப்படுததப்படும் சிவனடியார் ஆறுமுகசாமி மூலம் தேவாரம் பாடி தமிழ் உரிமையை நிலை நாட்டினோம். தில்லை கோவில் நிர்வாக அதிகாரி நியமனத்திற்கு தடை பெற்று, தீட்சிதர்கள் சென்னை உயர் நீதி மன்றத்தில் பல ஆண்டுகளாக உறங்க வைத்த வழக்கை, மனித உரிமை பாதுகாப்பு மையம் மூலம் விசாரணைக்கு கொண்டு வந்து மக்கள் ஆதரவுடன் புரட்சிகர அமைப்புகளின் போராட்டத்தின் மூலம் வெற்றி பெற்று 2009-ல் அரசு கட்டுப்பாட்டில் வந்ததுடன் முதல் முறையாக உண்டியல் வைக்கப்பட்டது.

மறுபுறம் தீட்சிதர்கள் தனது வரம்பற்ற கொள்ளைக்கு தடையாக அறநிலையத்துறை இருப்பதால் உச்சநீதிமன்றம் சென்றனர். அன்றைய எதிர்கட்சி தலைவராக இருந்த ஜெயலலிதாவை நேரில் சென்று பார்த்தனர். அதன் கைமாறாக தற்போது உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞரை வைத்து “தில்லைக் கோவில் மக்கள் சொத்து, தீட்சிதர் தனி சொத்து அல்ல” என வாதிடாமல் ஜெயா அரசு தமிழக மக்களுக்கு துரோகம் இழைத்தது. மேலும் தீட்சித பார்ப்பனர்களுக்கு ஆதரவாக ஆரம்பம் முதலே பா.ஜ.க. சு.சாமி, இந்து முன்னணி இராம.கோபாலன், இந்து மக்கள் கட்சி அர்ஜூன் சம்பத், வி.எச்.பி.அசோக் சிங்கால், வேதாந்தம், பிராமணர் சங்கத்தலைவர் நாராயணன், சங்கராச்சாரி ஆகியோர் களத்தில் நேரடியாக அறிக்கை விடுவதும், கூட்டம் நடத்துவதும், பேட்டி கொடுப்பதும் கோவிலுக்கு சென்று ஆதரவு தெரிவிப்பதும் அன்றாட நிகழ்வுகளாக நடந்தேறியது.

இந்த பார்ப்பன சதித்திட்டங்களை சு.சாமி, ஜெயா கூட்டுச்சதி என உச்சநீதிமன்றத்தில் வழக்கு இறுதி விசாரணை ஆரம்பிக்கும் போதே தமிழக அரசைக் கண்டித்து ம.க.இ.க உள்ளிட்ட எமது அமைப்புகள் தமிழகம் முழவதும் பல வடிவங்களில் போராட்டங்களை நடத்தின, தோழர்கள் சிறை சென்றனர். உச்சநீதிமன்ற வழக்கில் மூத்த வழக்கறிஞர் வைத்து வாதிட வேண்டும் எனக்கோரி சிவனடியார் ஆறுமுகசாமி சிற்றம்பல மேடையில் தேவாரம் பாடி உயிர் துறப்பேன் என மனித உரிமை பாதுகாப்பு மைய வழக்கறிஞர்களுடன் தீட்சிதர்கள்,  ஜெயா அரசின் சதி திட்டத்தை கேள்விக் குள்ளாக்கி உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

எதிர்பார்த்ததுபோலவே தீட்சிதர்களின் மனம் குளிர 6114 அன்று டெல்லி உச்சி குடுமி மன்றம் தீட்சிதர்களே கோவிலை நிர்வாகம் செய்யலாம் என மக்கள் நலன்களுக்கு விரோதமாக தீர்ப்பு அளித்துள்ளது. தீர்ப்பு பற்றி தீட்சிதர்கள், “நடராசன் எங்களுக்கு கொடுத்த புத்தாண்டு பரிசு” என பார்ப்பனக் கொழுப்புடன் திருவாய் மலர்ந்துள்ளனர்.

“தில்லைக் கோவில் மட்டுமல்ல! தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் இருந்து அறநிலையத்துறை வெளியேற வேண்டும். இந்து மதவாதிகளிடம் கோவில்களை ஒப்படைக்க வேண்டும்” என சு.சாமி உள்ளிட்ட மதவாதிகள் பிரச்சாரம் செய்கின்றனர். கோவிலில் தமிழ் மொழித் தீண்டாமையை, சாதித் தீண்டாமையை, கருவறைத் தீண்டாமையை பாதுகாக்கும் இத்தகைய பார்ப்பன மதவாதிகள், எல்லோரும் இந்துக்கள், அனைவரும் சமம் என பித்தலாட்டம் செய்வதுடன் பார்ப்பன தீட்சிதர்களுக்கு ஆதரவாக நிற்கிறார்கள்.

உலகிற்கே உழைத்து சோறு போடும் பொருட்களை உற்பத்தி செய்யும், இருப்பிடத்தை கட்டிக் கொடுக்கும் பெரும்பான்மை மக்களை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சூத்திரர்கள், பஞ்சமர்கள் என்று இழிவுபடுத்தி தீண்டாமைக் கொடுமை நடத்திய பார்ப்பனக் கும்பல் இன்று பயங்கரவாதிகளாக உருவெடுத்து குண்டு வைப்பது, கொடூர முறையில் கொலை புரிவது, வம்சத்தையே கூண்டோடு கருவருப்பது என்று பரிணாம வளர்ச்சியடைந்துள்ளது.

இந்த பார்ப்பன கும்பல் நீதித்துறை, அரசு அதிகார துறை, கல்வித்துறை உள்ளிட்டு அனைத்து துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தி கொண்டு வரலாற்று புரட்டுகளையும் அறிவியலுக்கு புறம்பான புராண இதிகாச கட்டுக்கதைகளையும் பரப்பி மக்களை அறியாமை இருட்டில் அழுத்தி வைத்துள்ளது.

உச்சிக்குடுமி மன்றத்தின் பார்ப்பன நீதிமான்களின் துணையுடன் இந்து அறநிலையத்துறையை வெளியேற்றி தனது கொள்ளைக் கூடாரமாக மாற்றிக் கொண்டு, உண்டு கொழுக்கவும், தினவெடுத்து திரியவும் வெறியுடன் கிளம்பியுள்ளது தீட்சிதர் பார்ப்பன கும்பல். பா.ஜ.க., இந்து முன்னணி உள்ளிட்ட சங்க பரிவாரம் முதல் உள்ளூர் ஏமாந்த சோனகிரி ஆலயப்பாதுகாப்பு குழு வரை இதற்கு உறுதுணையாக நின்று கூட்டுக் கொள்ளையில் ஈடுபட்டு நடராசர் கோவில் சொத்துக்களை சூறையாடுகின்றனர். இது தமிழகம் முழுவதும் அனைத்து கோவில்களுக்கும் விரிவுபடுத்தும் முயற்சிதான் தில்லைக் கோவில்.

தமிழ் மொழியின் தமிழ் இனத்தின் தமிழர்களின் மீது இனப்பகைமை கொண்டுள்ள பார்ப்பன தீட்சித கும்பல் தற்போது கிடைத்துள்ள தற்காலிக வெற்றிக்களிப்பில் அறிவிழந்து மூடர்கூடமாக மாறி குதியாட்டம் போடுகின்றனர். இந்த அழுகுணி ஆட்டத்தை, சுயமரியாதை உள்ள, தன்மானம் மிக்க, பகுத்தறிவு கொண்ட தமிழர்கள் ஒருபோதும் அனுமதிக்க கூடாது.

உழைப்பாளிகள் உதிரம் கொடுத்து உயிரை துறந்து கட்டிய சிதம்பரம் நடராசர் கோவில் தொன்மையான வரலாற்று சின்னம். 100 ஆண்டுகளுக்கு முன்பு வரை பிச்சாவரம் ஜமீனிடம் இருந்து கோவில் சாவியை வாங்கி மணி ஆட்டி வந்த தீட்சிதர்கள், இன்று கேட்டுக் கேள்வி இன்றி ஆண்டு அனுபவிக்கலாம் என்றால், அதை நீதிமன்றமும் ஆமாம் என தீர்ப்பு சொல்லும் என்றால், இது தமிழர்களுக்கு விடப்பட்ட சவால் இல்லையா?

பகுத்தறிவுள்ள, சுயமரியாதையுள்ள பக்தர்களே!

  • பார்ப்பன கெடுங்கோன்மைக்கு எதிராக ஆன்மிக அடிமைத்தனத்திற்கு எதிராக போராடுவோம்.
  • கடவுளை வழிபட பார்ப்பானின் ஆதிக்கத்திற்கு அடிபணிந்து போக வேண்டிய அவசியமில்லை.
  • பார்ப்பன ஆதிக்கத்திற்கு எதிராக போராட தில்லைக்கு அணிதிரள்வீர்!

இவண்

விவசாயிகள் விடுதலை முன்னணி
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி
கடலுர்ர்-விழுப்புரம்-புதுச்சேரி

ஒருங்கிணைப்பு
மனித உரிமை பாதுகாப்பு மையம்-தமிழ்நாடு.
தொடர்பு 99650 97801, 97917 76709, 9597789801