privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபார்ப்பனிய பாசிசம்சிறுபான்மையினர்பாக் கிரிக்கெட் அணியை ஆதரிப்பது குற்றமா ?

பாக் கிரிக்கெட் அணியை ஆதரிப்பது குற்றமா ?

-

காஷ்மீர் மக்களின் தேசிய இனப் போராட்டத்தை தீவிரவாதமாகவும், பாக் சதியாகவும் மட்டும் பார்க்க பழக்கும் அரசு – ஊடகங்களின் செல்வாக்கு, வட இந்தியாவில் அதிகம். அதனால் எங்கு சென்றாலும் காஷ்மீர் மாணவர்கள் இத்தகைய வன்மத்துடன்தான் பார்க்கப்படுகின்றனர் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு சான்று.

ஷாகித் அப்ரிடி
பாக் அணியின் அப்ரிடி ஒரு சிங்கம் போல கடைசி ஓவரில் இரண்டு சிக்சர் அடித்து இந்தியாவை தோற்கடிக்க வைத்தார்.

சு வாமி விவேகானந்தா சுபார்த்தி எனும் தனியார் பல்கலைக் கழகம் உபி மாநிலம் மீரட் நகரில் உள்ளது. இங்கு படிப்பவர்களில் சுமார் 200-க்கும் மேற்பட்ட காஷ்மீர் மாணவர்கள் இருக்கிறார்கள். இந்தியாவின் நிரந்தர ஆக்கிரமிப்பு போரினால் பாதிக்கப்பட்டிருக்கும் காஷ்மீரில் கல்வி, அதுவும் உயர் கல்வி கற்பது என்பது பல்வேறு காரணங்களால் கடினமானது. கல்லூரிகளும் அதிகம் இல்லை. இதன் பொருட்டு காஷ்மீர் மாணவர்கள் அருகாமை வட இந்திய மாநிலங்களில் படிக்கச் செல்கின்றனர்.

சுபார்தி பல்கலைக் கழகத்தில் கடந்த ஞாயிறு 2.3.2014 அன்று மாணவர்கள் அவர்கள் தங்கியிருக்கும் மதன் திங்கரா விடுதியில் கிரிக்கெட் போட்டியை பார்த்திருக்கின்றனர். வங்கதேசத்தில் நடக்கும் ஆசியக் கோப்பைக்கான லீக் சுற்று போட்டி ஒன்றில் இந்தியாவும், பாக்கும் மோதி அதில் பாகிஸ்தான் வெற்றி பெற்றிருப்பதை கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்தப் போட்டி நடக்கும் போது காஷ்மீர் மாணவர்கள் பாகிஸ்தான் அணியை ஆதரித்திருக்கிறார்கள்.

ஆரம்பத்தில் இந்தியா வெற்றிபெறும் நிலையில் ஆட்டம் இருந்ததால் ஏனைய ‘இந்து-இந்தியா’ மாணவர்கள் காஷ்மீர் மாணவர்களின் குரலை கண்டு கொள்ளவில்லை. ஆனால் இறுதியில் பாக் அணியின் அப்ரிடி ஒரு சிங்கம் போல கடைசி ஓவரில் இரண்டு சிக்சர் அடித்து இந்தியாவை தோற்கடிக்க வைத்தார். இதை  காஷ்மீர் மாணவர்கள் கைதட்டி கொண்டாடியிருக்கிறார்கள்.

போதாதா, இந்து மாணவர்களுக்கு சினம் ஏறி காஷ்மீர் மாணவர்களை தாக்கியிருக்கிறார்கள். பத்து மாணவர்கள் கடுமையாக தாக்கப்பட்டிருக்கின்றனர். மூத்த மாணவர்கள் தலையிட்டு காப்பாற்றவில்லை என்றால் சில காஷ்மீர் மாணவர்கள் கொல்லப்பட்டிருப்பார்கள் என்று அங்கு படிக்கும் காஷ்மீர் மாணவர் ஒருவர் கூறியிருக்கிறார். பிறகு காஷ்மீர் மாணவர்களின் விடுதி சன்னல்களை தாக்கி, உடைத்து இரவு முழுவதும் அச்சுறுத்தியவாறே இருந்திருக்கிறார்கள். காலையில் பல்கலைக்கழக வளாகத்தில் “காஷ்மீர் மாணவர்களை வெளியேற்று” என்று முழக்கமிட்டபடியே இந்து-இந்திய மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்திருக்கின்றனர்.

ஆர்ப்பாட்டம் செய்த மாணவர்களை பெரும்பான்மையாகவும் விவேகானந்தரை பெயரிலும் கொண்டிருக்கும் பல்கலைக் கழக நிர்வாகம் என்ன செய்திருக்கும்? ‘இந்திய’ மாணவர்களின் நிர்ப்பந்தத்திற்கு பணிந்த நிர்வாகம் காஷ்மீர் மாணவர்கள் பலரை வளாகத்தை விட்டே வெளியேற்றியிருக்கிறது. அல்லது விரட்டியிருக்கிறது என்றும் சொல்லலாம். மேலும் எந்தக் காரணமோ விளக்கமோ அன்றி ரூ 5,000 அபராதமும் இம்மாணவர்கள் மீது திணிக்கப்பட்டிருக்கிறது.

இம்மாணவர்களை அண்டை மாநிலங்களில் படிப்பதற்கு ஏற்பாடு செய்து அனுப்பும் “காஷ்மீர் கன்சல்டன்சி” நிறுவனத்தை சேர்ந்த ராபியா பாஜி, இந்த சம்பவம் குறித்து தனக்குத் தெரியவில்லை என்றாலும் அன்று மாலை பல்கலையின் தலைவர் அதுல் கிருஷ்ணா அனுப்பியிருக்கும் மின்னஞ்சல் குறித்து தெரிவித்திருக்கிறார்.

அதில் “ இந்த ஆண்டிலிருந்து காஷ்மீர் மாணவர்களுக்கு இடம் கொடுப்பதாக இல்லை, வேண்டுமானால் காஷ்மீர் மாணவர்கள் படிப்பதற்கு பாகிஸ்தான் செல்லலாம்” என்றும் கூறப்பட்டிருப்பதாக ராபியா தெரிவித்தார்.

இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் வெறி
இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் வெறி

இதே போன்று பஞ்சாப் மாநிலத்தில் தேசி பகத் பல் மருத்துவக் கல்லூரியிலும் காஷ்மீர் மற்றும் ‘இந்திய’ மாணவர்களிடையே இந்த கிரிக்கெட் போட்டியை வைத்து சச்சரவு எழுந்திருக்கிறது. எனினும் விவேகானந்தர் போல பகத் நிர்வாகம் மாணவர்களை வெளியேற்றவில்லை.

விவேகானந்தா பல்கலைக் கழகத்தில் மொத்தம் 67 மாணவர்கள் வெளியேற்றப்பட்டு காஷ்மீர் அனுப்பப்பட்டதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகை தெரிவிக்கிறது. மேலும் அந்த செய்தியில், பல்கலையின் துணை வேந்தரான டாக்டர் மன்சூர் அகமது, “இத்தகைய நடைமுறைகளை மேற்கொள்ளும் மாணவர்களை நாங்கள் எப்போதும் அனுமதிப்பதில்லை” என்றும் தெரிவித்திருக்கிறார். காஷ்மீர் மாணவர்கள் “பாகிஸ்தான் ஜிந்தாபாத்” என்று முழக்கமிட்டதாக சக மாணவர்கள் புகார் அளித்ததாக கூறும் அகமது அவர்களை மீது மட்டும் நடவடிக்கை எடுக்க நினைத்ததாகவும், அந்த மாணவர்கள் யார் என்று மற்ற காஷ்மீர் மாணவர்கள் தெரிவிக்க மறுத்ததால் 67 பேர்களை வெளியேற்றியதாகவும் கூறியிருக்கிறார்.

அந்த மாணவர்கள் மன்னிப்பு கேட்பார்கள் என்று எதிர்பார்த்தாகவும் அது நடக்கவில்லை என்பதாலேயே இந்த் தற்காலிக நீக்கம் எடுக்க நேரிட்டது என்று அகமது நியாயப்படுத்துகிறார்.

கிரிக்கெட்டில் வெற்றி பெறும் பாக் அணியை இந்திய முசுலீம்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடுகிறார்கள் என்று இந்துமதவெறி அமைப்புகள் இந்தியாவெங்கும் உருவாக்கியிருக்கும் ஒரு அவதூறும், வெறுப்புணர்வும் கலந்த கருத்து, நெடுங்காலம் செல்வாக்கோடு இருக்கிறது. முதலில் இது உண்மையல்ல. இங்கிருக்கும் முசுலீம்கள் எவரும் இந்தியாவைத்தான் தமது நாடாக கருதுகின்றனரே அன்றி பாக்கை அல்ல.

முசுலீம் என்றால் மதம்தான் முக்கியம், தேசிய இனம், மொழி, நாடு, வர்க்கம், பால் என்பதெல்லாம் அப்புறம்தான் என்ற கருத்து முதன்மையாக ஏகாதிபத்திய ஊடகங்களால் பரப்பப்படுகிறது. அமெரிக்காவின் இளவல் சவுதி புரவலராக இருந்து உருவாக்கிய இசுலாமிய மதவாதிகள் கூட அப்படித்தான் கூறுகிறார்கள். ஆனால் அத்தகைய மதம் சார்ந்த இசுலாமிய சகோதரத்துவம் இந்த உலகில் எப்போதும் இருந்ததில்லை. காரணம் ஒரு மனிதன் அல்லது சமூகத்தின் பிரச்சினைகள் அனைத்தும் கடவுள் நம்பிக்கை அல்லது மதத்தோடு தொடர்புடையவை அல்ல.

மேலும் குறிப்பிட்ட மக்களை ஒடுக்கும் இன-மத-ஏகாதிபத்திய ஒடுக்குமுறையாளர்கள் அனைவரும் ஒடுக்குபவர்கள் குறித்த துவேசத்தை கிளப்புகிறார்கள். தேவையென்றால் அமெரிக்கா தன்னை இசுலாத்தின் புனிதனாக காட்டிக் கொள்ளும். தேவையில்லை என்றால் இசுலாத்தின் பிற்போக்குத்தனத்தைக் கண்டிக்கும்.

இப்படித்தான் இந்தியாவில், பார்ப்பன இந்துமதவெறி இயக்கங்களால் இந்த கிரிக்கெட் பிரச்சினையில் மதம் திணிக்கப்பட்டது. இந்திய முசுலீம்கள் அனைவரும் இந்துமதவெறியர்கள் உருவாக்கியிருக்கும் அவதூறுகளை அன்றாடம் சந்தித்தபடியேதான் வாழ்கிறார்கள். மேலும் குஜராத் போன்ற நாடறிந்த கலவரங்கள் வரும் போதும், அதில் இந்துமதவெறியர்களை ஜனநாயகத்தின் படியே தண்டிக்க முடியாது என்று இந்த நாட்டின் அரசியல்-நீதி அமைப்புகள் நிரூபிக்கும் போது ஒரு கோபம் கொண்ட இசுலாமிய இளைஞன் சுலபமாக தீவிரவாதத்தின் பக்கம் போக முடியும். அப்படி போக முடியாமலும், அதே நேரம் இந்த நாட்டின் மீது தனது அதிருப்தியை காட்ட வேண்டும் என்று விரும்பும் ஒரு இசுலாமிய இளைஞன் பாக் கிரிக்கெட் அணியின் வெற்றிக்காக கை தட்டுவதற்கு வாய்ப்பிருப்பதை அனைவரும் உணர வேண்டும். எனினும் அப்படி அநேகம்பேர் கைதட்டுவதில்லை.

ஆனால் விளையாட்டில் அரசியலும், தேசபக்தியும் நுழைந்தது எப்படி?

இந்த உலகில் விளையாடப்படும் அனைத்து அணி விளையாட்டுகளிலும் அதன் போட்டிகளிலும் இத்தகைய சமூக, அரசியல் நிலைமைகள் காரணமாக ரசிகர்கள் ஆதரிக்கவோ இல்லை எதிர்க்கவோ செய்கின்றனர். ஏகாதிபத்தியங்களால் பிரிந்திருக்கும் உலகில் விளையாட்டுகள் மட்டும் ஒற்றுமையை ஏற்படுத்தி விடாது. கால்பந்து போட்டியில் அமெரிக்க அணியை ஈரான் அணி வென்றால் ஈரான் மக்கள் கொண்டாடத்தான் செய்வார்கள். ஜப்பான் அணியை சீனா வென்றால் அதன் மக்களும் கொண்டாடுவார்கள்.

ஈழப்போராட்டத்தை ஒடுக்க சிங்கள அரசுக்கு உதவியாக இருக்கும் இந்தியாவை கண்டிக்க நினைக்கும் ஒரு ஈழத்தமிழர், கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோற்க வேண்டும் என்று நினைப்பதற்கும் இதுவே காரணம். இப்படித்தான் காஷ்மீர் மக்களும் தங்களை ஆக்கிரமித்து கொன்றோ இல்லை சித்ரவதை செய்தோ நடத்தி வரும் இந்தியாவை இயல்பாக வெறுக்கிறார்கள். இங்கே இந்தியா என்பது அரசு-கட்சி-இராணுவம்-நீதி-நிர்வாக அமைப்புகளின் கட்டுமானத்தை குறிக்கிறதே அன்றி இந்திய மக்களை அல்ல.

மூவர்ணக் கொடி பறப்பது, ஜனகனமண பாடுவது, வீட்டில் பாரதமாதா படத்தை பூஜை செய்வதையெல்லாம் வைத்து தேசபக்தியை மதிப்பிடுவது பார்ப்பனிய மேட்டிமைத்தனமே அன்றி வேறல்ல. ஒருவகையில் இது அடக்குமுறைக்கான பாசிச கருத்தியலாகவும் விளங்குகிறது. உண்மையில் இந்திய தேசபக்தி என்பது அங்கு வாழும் மக்களின் துன்ப துயரங்களோடு தொடர்புடையது. அதனால்தான் காஷ்மீர் மக்களின் துயரத்தை பார்த்து நாம், ஆளும் வர்க்க இந்தியாவை கண்டிக்கிறோம்.

காஷ்மீர் இளைஞர்கள்
காஷ்மீர் இளைஞர்கள்

காஷ்மீரில் ஐந்தடிக்கு ஒரு இந்திய இராணுவத்தின் துப்பாக்கியை பார்த்து மிரண்டவாறே காலத்தை ஓட்டும் மக்களில் கொல்லப்பட்டவர்கள், காணாமல் போனவர்கள், வாழ்க்கையை இழந்தவர்கள், சிறையில் அடைக்கப்பட்டவர்கள் என்று ஏதாவது ஒரு பாதிப்பின்றி எவரும் இல்லை. மற்ற பகுதிகளில் உள்ள மக்கள் கிரமமாக தமது வாழ்க்கை வசதிகளுடன் வாழும் சூழலில் காஷ்மீரின் சூழலை பலரும் புரிந்து கொள்வதில்லை.

ஒருக்கால் தேசபக்தி வெறி கொண்டு காஷ்மீரை நடத்துவதாக இருந்தால் முழு காஷ்மீர் மக்களையும் கொன்றால்தான் பள்ளத்தாக்கை இந்தியாவோடு இணைத்திருக்க முடியும். அப்படிப் பார்த்தால் இந்தியாவில் பல மாநிலங்களில் மக்களே இருக்க முடியாது எனும் நிலையே உள்ளது. இந்நிலையில் ஒரு காஷ்மீர் மாணவன் கிரிக்கெட் போட்டியில் பாக்கை ஏன் ஆதரிப்பான் என்பதைக் கூட புரிந்து கொள்ள முடியவில்லை என்றால் ‘பயங்கரவாதத்தின்’ அபாயத்தை வரவேற்கிறீர்கள் என்று பொருள்.

காஷ்மீரில் இந்திய அரசின் அடக்குமுறை மட்டுமல்ல, அதை கேடாகப் பயன்படுத்திக் கொண்டு பாகிஸ்தானும் நிறைய தீங்கை இழைத்திருக்கின்றது. முக்கியமாக ஜனநாயக முறையில் இருந்த விடுதலை இயக்கங்களை மதவாதிகளாக மாற்றியது பாக்கின் சாதனை. என்றாலும் இந்தியா போன்று பாக் நேரடியாக காஷ்மீர் மக்களை ஒடுக்கவில்லை, இந்தியாவை அநேக நேரங்களில் எதிர்க்கிறது, போராட்டத்திற்கு உதவி செய்கிறது என்ற காரணங்களினால் காஷ்மீர் மக்களிடையே பாக் மீது ஒரு கரிசனம் இருக்கிறது.

ஈழத்தமிழ் மக்களுக்கு தமிழகத்து மக்கள் மீது அப்படி ஒரு கரிசனம் இருப்பதை இதோடு ஒப்பிட்டுச் சொல்லலாம். அதனால்தான் சிங்கள இனவெறி அரசும் கூட ஏனைய இந்தியாவை ஆதரித்தும் தமிழகத்தை எதிர்த்தும் வருகிறது. ஆகவே ஒரு இனத்து மக்கள் தமது உயிர்வாழும் உரிமைக்கு ஆதரவானவர்களோடு இணக்கம் காண்பிப்பது இயல்பானது. இதை தேசபக்தியோடு முடிச்சுப் போடுவது அயோக்கியத்தனம்.

காஷ்மீர் மக்கள் இந்தியாவோடு இருப்பதா, இல்லை பாக்கோடு இணைவதா, இல்லை தனியாக இருப்பதா என்பதெல்லாம் அவர்களுடைய சுயநிர்ணய உரிமையோடு சம்பந்தப்பட்டவை. அத்தகைய முடிவு எடுக்கும் உரிமை காஷ்மீர் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதே ஜனநாயகத்தை ஆதரிப்போர் செய்ய வேண்டிய கடமை. இதில் அவர்கள் இந்தியாவை ஆதரிக்க வேண்டும் என்று ஒருவர் நினைத்தால் அது அடக்குமுறை மூலம் சாத்தியமில்லை, அது எதிர்விளைவைத்தான் ஏற்படுத்தும் என்பதெல்லாம் பாசிஸ்டுகளுக்கு புரிவதில்லை. துப்பாக்கிகளின் பலத்தில் வாழ்பவர்களுக்கு அன்பும், தோழமையும் சமத்துவத்தின் மூலம்தான் வரும் என்பதெல்லாம் தெரியாது.

ஆக மீரட்டில் படிக்கும் ஒரு காஷ்மீர் மாணவன் பாக் அணியை ஆதரிக்கிறான் என்பதை எளிமைப்படுத்தி புரிந்து கொள்ளாமல் அதன் சமூகப்பின்னணியை புரிந்து கொள்வதே அவசியம். ஆகையால் அது எந்தக்காலத்திலும் ஒரு குற்றமாக முடியாது. இதை இந்த அர்த்தத்தில் மட்டுமல்ல ஒரு விளையாட்டு என்ற கோணத்திலும் பார்க்கலாம்.

காஷ்மீர் மாணவியர்
காஷ்மீர் மாணவியர்

ஒரு விளையாட்டு போட்டியில் இரு நாட்டு அணிகளே போட்டியிட்டாலும் கூட ஒரு நாட்டு ரசிகன் தனது நாட்டைத்தான் ஆதரிக்க வேண்டும் என்று கட்டாயமில்லை. விளையாட்டை விளையாட்டாய் ரசிப்பவர்கள் எந்த நாட்டையும் ஆதரிக்கலாம், எந்த நாட்டு வீரருக்கும் ரசிகராக இருக்கலாம். இதையெல்லாம் தேசபக்தி அல்லது தேச துரோகத்தோடு முடிச்சுப்போடுவது அயோக்கியத்தனம். பொதுவில் விளையாட்டு என்பது மதம்,மொழி,இனம்,நாடு கடந்தது என்று சொல்லிவிட்டு நாடுவிட்டு நாடு ஆதரித்தால் மட்டும் தேச துரோகம் என்று சொல்பவர்களை எதைக் கொண்டு அடிப்பது?

மீரட் பல்கலைக்கழகத்தில் இந்த பிரச்சினையை வேறு முறையில் கையாண்டிருக்க வேண்டும். காஷ்மீர் மாணவர்களை தாக்கிய பிற மாணவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருந்தால் அதே காஷ்மீர் மாணவர்கள் இந்தியா மீது ஒரு புதிய நம்பிக்கையை பெற்றிருக்க கூடும். மாறாக அவர்கள் இந்தியா மீது என்ன கோபத்தை கொண்டிருந்தார்களோ அதை பல்கலைக்கழக நிர்வாகம் அதிகப்படுத்தியிருக்கிறது.

ஊடகங்களிலும் நிர்வாகத்திற்கு ஆதரவான தேசபக்தி வன்முறையின் ஒளியிலேயே இந்த செய்தி வந்திருக்கிறது. பல ஊடகங்களில் இந்த செய்தி வரவே இல்லை. தினமணியில் இந்த செய்தியை பல்கலையின் பெயர் போடாமல் போட்டுவிட்டு துணை வேந்தர் அகமதுவின் கருத்தை மட்டும் கவனப்படுத்தி போட்டிருந்தார்கள். அதாவது ஒரு இசுலாமியர்,  காஷ்மீர் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுத்ததாக நாம் புரிந்து கொள்ள வேண்டுமான். இது குறித்து செய்தி வெளியிட்ட எந்த ஊடகங்களும் காஷ்மீர் மாணவர்கள் மீது எடுக்கப்பட்ட இந்த வன்முறையை கண்டிக்கவில்லை. இதுதான் இந்திய ஜனநாயகத்தின் இலட்சணம்.

என்னதான் தேசபக்தி என்று கூச்சமிட்டாலும், வல்லரசு என்று பெருமிதத்தை கடைவிரித்தாலும் ஒடுக்கப்படும் மக்கள் போராட்டத்தை எவரும் அடக்கியதாக சரித்திரமில்லை.

காஷ்மீர் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுத்த விவேகானந்தர் பல்கலைக்கழம் மீது மாநில, மத்திய அரசுகள் நடவடிக்கை எடுக்க குரல் கொடுப்போம்.

இன்னும் புரியும் விதத்தில் சொல்வதாக இருந்தால் இந்திய அணியை தோற்கடித்த பாக் அணியின் வெற்றியை நாமும் கொண்டாடுவோம்.!
___________________

மேலும் படிக்க

  1. //ஒடுக்கப்படும் மக்கள் போராட்டத்தை எவரும் அடக்கியதாக சரித்திரமில்லை.

  2. /ஒரு விளையாட்டு போட்டியில் இரு நாட்டு அணிகளே போட்டியிட்டாலும் கூட ஒரு நாட்டு ரசிகன் தனது நாட்டைத்தான் ஆதரிக்க வேண்டும் என்று கட்டாயமில்லை. விளையாட்டை விளையாட்டாய் ரசிப்பவர்கள் எந்த நாட்டையும் ஆதரிக்கலாம், எந்த நாட்டு வீரருக்கும் ரசிகராக இருக்கலாம். இதையெல்லாம் தேசபக்தி அல்லது தேச துரோகத்தோடு முடிச்சுப்போடுவது அயோக்கியத்தனம். பொதுவில் விளையாட்டு என்பது மதம்,மொழி,இனம்,நாடு கடந்தது என்று சொல்லிவிட்டு நாடுவிட்டு நாடு ஆதரித்தால் மட்டும் தேச துரோகம் என்று சொல்பவர்களை எதைக் கொண்டு அடிப்பது?/

    இந்த கேடு கெட்ட இந்திய அரசியல் வாதிகளும் இந்து – இந்தியர்களும் கல்பனா சாவ்லா விற்கு விருது வழஙகுவார்கள் – கேட்டால அவள் இந்திய தேசியாவாதி ஏனென்றால் அவள் அமெரிக்க குடியுரிமை பெற்றவள்

    பில்கேட்சை ஆதரிக்கலாம், ஓபாமாவை ஆதரிக்கலாம், ரபேல் நடாலை ஆதரிக்கலாம், வில்லியம் சகோட்கரிக்ளை ஆதரிக்கலாம் ஆனால் பாக்கிஸ்தானைச் சேர்ந்த யாரையும் ஆதரிக்கூடாதாம், நாங்கள் யாரையும் ஆதரிப்போம் எங்களை சொல்ல இந்து – இந்தியர்களுக்கும் உரிமை இல்லை

    எனக்கு பிடித்த டீம் பாக், இலங்கை

    காஷ்மீர் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுத்த விவேகானந்தர் பல்கலைக்கழம் மீது மாநில, மத்திய அரசுகள் நடவடிக்கை எடுக்க குரல் கொடுப்போம்.

    • புரட்சியாளன் பகத்சிங் தெரியுமா??

      அந்த மாபெரும் மனிதன் பிறந்த மண் எது ??அது எங்கிருக்கிறது தெரியுமா??

      இப்பொழுது பாக்கிஸ்தான் என்று அழைக்கிறோமே, அங்குள்ள லாகூர் அருகேயுள்ள ஒரு

      கிராமத்தில்தான் பிறந்தார்.அவர் பிறந்த மண்ணிற்கு பெருமை சேர்க்கும் விதமாக பாக்கிஸ்தான்

      அரசாங்கம் நிதி ஒதுக்கி ஒரு சுற்றுலா தளமாக ஆக்கி வருகிறார்கள்.அந்த புரட்சியாளனுக்கு

      அவர்கள் செய்யும் மரியாதையில் ஏதேனும் சிறிதளவாவது நாம் செய்கிறோமா??

      அங்குள்ள சாதரண மக்கள் எவ்வாறு வாழ்கிறார்கள் என்பதை பார்ப்போம். அது போல் நாமும் வாழ

      முயற்சிப்போம்.

      வேண்டாத பகை உணர்வை மனதிலிருந்து அகற்றுவோம்.

      • Bhagat Singh from Lyallpur(Faislabad today) not lahore,Lyallpur is not a village but a big city.

        2 more people died with him,Rajguru & Chandrashekar Azad.

        40% of Hindu/Sikh people who migrated during partition from Lyallpur were slaughtered by Muslims.

        Ara korai arivoda inga post panna vandhuttanga.

  3. பாக்கிஸ்த்தான் அணியை ஆதரிப்பது குற்றமில்லை…ஆனால் அதை ஏதோ மிகப்பெரிய வீர சாகசமாகவும், இந்தியாவை ஆதரித்தால் இந்து மத வெறியன் போலவும் வினவு சித்தரிப்பது கேலிக்க்குறியது…. இதே பாகிஸ்த்தான் உலக கோப்பை போட்டியில் டெண்டுல்கரின் மட்டையின் அடியில் அடிமை போல சுருண்ட போது வினவு வெளியிட்டு இருந்தால் தோழரின் நடுநிலைமையை பாராட்டலாம்…. மிக சொற்ப்ப வாசகர்ளை ( அதுவும் போராளிகளை அல்ல, போரடித்தால் வலையை நோண்டுபவர்கள்!!!!!!) கொண்ட வினவு அற்ப்பத்தனமான் கட்டுரைகளை தவிர்க்கவேண்டும்… ஆஜ்மல் கசாபை அனுப்பிய பாகிஸ்தான் போன்ற கோழை நாட்டவர்களைவிட இந்திய மக்கள் எவ்வளவோ மேல்…..

    • இந்தியன் ?????? அது என்னையா இந்தியன் ????? ஒரு வேளை இந்தியன் என்றாலே.. இப்படி தான் என புரிய வைக்கின்றீரா? அதுவும் இந்த முறை பெயரிலேயே தவறுடன்..

      சரி உமது பிளாக் லிங்க் கொடும்…

    • சொற்ப வாசகர்கள்தான் வினவுக்கு இருக்குனு இன்ட்டியன் அண்ணன் கணக்கெடுத்து கண்டுபிடிச்சிட்டாப்ல….என்ன ஒண்ணு இந்த சொற்ப வாசகர்கள்கிட்ட அண்ணன் டவுசர் கழண்டு ஓடுனதும் அண்ணன் கணக்குப்படி சொற்ப முறைதானுதாங்கோ…..

  4. செய்தி வாசிப்பவர் தொலைகாட்சியில் இப்படி சொன்னார்.இந்தியா பாகிஸ்தானை பழி தீர்த்துக்கொண்டது.அக்கிரகார விளையாட்டான கிரிக்கெட்டில் இந்தியா வெற்றிபெற்ற செய்தியில் கூட பார்ப்பன கொலைவெறி! நானும் காஸ்மீரத்து மாணவர்கள் போல இந்தியா தோல்வி அடைவதையும்,இலங்கை படுதோல்வி அடைவதையும் ரசிக்கிரேன்.ஆனால் ஆசிய கோப்பைக்கான போட்டியில் இந்தியா பாக்கிஸ்தானிடம் தோற்றுபோனது மோ..டீ யின் வெற்றியை பாதிக்கும் என்ற பயம் பார்ப்பன கும்பலுக்கு வந்துவிட்டது.இந்திய மக்கள் அFரிடியின் கையில் இருக்கும் பேட் போலவும் மோடி எனும் பந்து அடித்துவிளாசப் பட்டு சிக்சர் ஆகி காணாமல் போவது போல் கெட்ட கனவு.அபசகுணமாக தெரிவதால் யாகம்நடத்த அம்பிகள் ஏற்பாடு செய்வார்கள் என நம்பலாம்.

    • //அக்கிரகார விளையாட்டான கிரிக்கெட்டில் இந்தியா வெற்றிபெற்ற செய்தியில் கூட பார்ப்பன கொலைவெறி! //

      அக்கிரகார எதிர்ப்பு விளையாட்டான கபடியில், சென்ற டிசம்பர் மாதம் உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தானை இந்தியா வென்றபோது கொண்டாட மறந்துவிட்டீர்களோ..

      சமீபத்தில் பஞ்சாபில் நடந்த கபடி போட்டியில் ’சூத்திர’ இந்தியர்களுக்கு பாடம் கற்றுக் கொடுத்த பாகிஸ்தானிய சிங்கங்களை பாராட்டும் பாகிஸ்தானிய பார்ப்பன ஏடு..:

      http://www.nation.com.pk/sports/04-Mar-2014/pakistan-men-s-team-teach-india-kabaddi-lesson

      • அய்யா,கபடி அக்கிரகார எதிர்ப்பு விளையாட்டு என்று யார் சொன்னார்கள்?அங்கும் கோடிகள் புரளுமானால் அக்கிரகாரம் கபளீகரம் செய்துகொள்ளும்.மேட்ச் பிக்சிங்,சூதாட்டம்,குத்தாட்டம் எல்லாம்நடக்கும்.வருமானம் இருந்தால் மாரியாத்தா கோவிலுக்கும் மணியாட்ட வருவார்கள் பார்ப்பனர்கள்.

        • //வருமானம் இருந்தால் மாரியாத்தா கோவிலுக்கும் மணியாட்ட வருவார்கள் பார்ப்பனர்கள்.//நல்லா சொன்னீங்க தல… வந்துட்டானுங்கையா வந்துட்டானுங்க.

          • உங்க தலயும் பாகிஸ்தான் செய்தி தளத்திலிருந்து டக்குன்னு மாரியாத்தா கோவில் பக்கம் தாவிட்டாரு..

            அந்த பாக் செய்தி தளத்தில் போட்டிருக்கும் படத்தையும் உங்க தல ரசிச்சாரா என்னன்னு கேட்டுச் சொல்லுங்க.. ஆமான்னாருன்னா உங்க தலயையும் உங்களையும் மாரியாத்தா சூலத்தால குத்தாம இருக்க ஒரு பரிகார பூஜை பண்ணவேண்டியிருக்கும்..(குறிப்பு : ”செய்தி வாசிப்பவர் தொலைகாட்சியில் இப்படி சொன்னார்.இந்தியா பாகிஸ்தானை பழி தீர்த்துக்கொண்டது.அக்கிரகார விளையாட்டான கிரிக்கெட்டில் இந்தியா வெற்றிபெற்ற செய்தியில் கூட பார்ப்பன கொலைவெறி! நானும் காஸ்மீரத்து மாணவர்கள் போல இந்தியா தோல்வி அடைவதையும்,இலங்கை படுதோல்வி அடைவதையும் ரசிக்கிரேன்.” – தல )

  5. Entha oru manavanum thannudaiya thai nattai athigam nesikkamal irrukka mattan. Thannudaiya thaiyai than siranthaval enru pottruvan. Intha katturayil kasmir manavargalin kuthattam pattri virivaga ezhutha villai. Intha katturaiyin asiryar inthiyavil ithu ponra kondattangali hyderabad mattrum karnatakavil sendral kankulira parkalam. Athuvum inthiya thotral jandippaga vedi vaithu kondaduvargal. Kasmir makkalukku inthiya thannudaiya thai nadu enra ennam sirithalavum illai. Athupola avarkalukku pakisthan than ellam. athai than avargal thai nadaga yerkirargal. Enave avargalin kondattam iyarkkaiye. irandu manava samugathin thesa pakithiyai ippadi matha veriyaga parpathu asiriyarin unmai vetkaiyai kattukirathu. Athuvum mathathai ivarthan sambantha paduthikirar. manavargal kandipaga ithu ponru thavarugalai seivathillai, avarkalaugu nattpu than ellam, athupoga thannudaiya thainadu thorpathai veru oruvan kondaduvathu nichayamaga yarrukkum pidikathu.

  6. Olympic ponra sarvathesa pottikal, nadukalukku idaiye nadakirathu, athile kalanthu kollum ella virarkalum thannudiya thai nattu kodiyai than thangi pidikirargal. vilayattu enbathu vilayattga eduthu kollum monobhavam virarkalukku mattum porunthume thavira athai parkkum rasikargalukku alla. vettriyai thannudaiya thai nattin kavurvamagavum, athai kondadum manopavam anaithu nattu makkalukkum irupathu iyarkiye. Thannudaiya nattil thannudaiya thai nadu thorpathai kondadum matra manithargalai kandal veruppu yerpaduvathum athanal kaikalappu yerpaduvathum nadakkum vizhayame.

  7. அப்படிஎன்றால் பாகிஸ்தான் சென்று கல்வி கற்கலாமே!!! எதற்கு இந்தியாவில் படிக்கிறார்கள் ?? இந்திய அரசைத்தான் எதிர்க்கிறோம் என்றால், விளையாட்டு வீரர்கள் என்ன இந்திய அரசா ??? அவர்கள் இந்தியாவையும் இந்திய மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்திதான் விளையாடுகிறார்கள், இந்திய அரசை அல்ல……அப்படியிருக்க, இந்திய அணியை வெறுப்பது ஏன்??? இந்திய அணி தோற்றதால் இந்திய அரசுக்கு ஒரு இழப்பும் இல்லை…..ஒட்டுமொத இந்தியர்களுக்கு ஏற்பட்ட ஏமாற்றமே மிஞ்சும்

    • //அப்படிஎன்றால் பாகிஸ்தான் சென்று கல்வி கற்கலாமே!!! // பிறகு ஏன் காஷ்மீர் இந்தியாவோடு இருக்க வேண்டும்.
      //விளையாட்டு வீரர்கள் என்ன இந்திய அரசா ??? அவர்கள் இந்தியாவையும் இந்திய மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்திதான் விளையாடுகிறார்கள்//இதை ஏன் நீ இந்திய அணியை ஆதரிப்பவர்களையும் கேட்க்க கூடாது
      //அப்படியிருக்க, இந்திய அணியை வெறுப்பது ஏன்??? //
      வெண்ண ,கட்டுரையை ஒழுங்கா படி

      • இந்தியா வேண்டாமாம், ஆனால் இந்தியாவில் கல்வி மட்டும் கற்றுக்கொள்ள வேண்டுமாம், அதுவும் இந்தியாவில் இருந்துகொண்டே இவர்கள் பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடுவார்களாம்…….இது என்ன கொடுமை……

        இந்திய அணி, இந்தியர்களை இந்தியாவை ப்ரிதிநிதிப்படுத்துகிறது…..பிறகு, இந்திய அணியை இந்தியர்கள் ஆதரிக்காமல், பாகிஸ்தானா வந்து ஆதரிக்கும் ???

        • BCCI எனபது ஒரு கிரிக்கெட்டு க்ளப் .ஆதரிக்காம பாகிஸ்தான் க்ளப் ஆதரிச்சா இந்தியால படிக்க கூடாதாம், இந்தியாவை வுட்டு போயிடனுமாம் ….கோவணத்த இருக்கி கட்டிகிட்டு பார்ப்பன குடிமிகள் அடிக்கற லூட்டி இருக்கே அய்யோயோயோ ….

    • //அப்படிஎன்றால் பாகிஸ்தான் சென்று கல்வி கற்கலாமே!!! //
      நல்ல கேள்வி

      கிளியை கூண்டில் அடைத்து அய்ய தான் எஜமான் என்று சொல்ல சொல்வது சொல்லாவிடில்நான் தான் உனக்கு சாப்பாடு போடுகிறேன் என்று சொல்லி தன்டிப்பது போல் உள்ளது.

      அவர்கள் பாகிஸ்தான் சென்று கல்வி கற்பது இருக்கட்டும். முதல் நீங்கள் அவர்களை விட்டு அகலுங்கள்

  8. ஆனந்த்.

    எந்த ஒரு மாணவனும் தன்னுடைய தாய்நாட்டை அதிகம் நேசிக்காமல் இருக்க மாட்டான்.

    தன்னுடைய தாய்யைதான் சிறந்தவள் என்று போற்றுவான்.இந்த கட்டுரையில்.காஷ்மீர்

    மாணவர்களின் குத்தாட்டம் பற்றி விரிவாக எழுதவில்லை.இந்த கட்டுரையின் ஆசிரியர் இந்தியாவில்

    இது போன்ற கொண்டாட்டங்களை ஹைதரதாபாத்,மற்றும் கர்நாடகாவில் சென்றால் கண் குளிர

    பார்க்கலாம்.அதுவும் இந்தியா தோற்றால் கண்டிப்பாக வெடி வெடித்து கொண்டாடுவார்கள். காஷ்மீர்

    மக்களுக்கு இந்தியா தன்னுடைய தாய் நாடு என்ற எண்ணம் சிறிதளவும் இல்லை. அதுபோல

    அவர்களுக்கு பாக்கிஸ்தான் தான் எல்லாம்.அதைத்தான் அவர்கள் தாய்நாடாக ஏற்கிறார்கள்.எனவே

    அவர்களின் கொண்டாட்டம் இயற்கையே.இரண்டு மாணவ சமூகத்தின் தேசபக்தியை இப்படி மத

    வெறியாகப் பார்ப்பது ஆசிரியரின் உண்மை வேட்கையை காட்டுகிறது.அதுவும் மதத்தை இவர்தான்

    சம்பந்த படுத்துகிறார்.மாணவர்கள் கண்டிப்பாக இது போன்றதவறுகளை செய்வதில்லை,அவர்களுக்கு

    நட்புதான் எல்லாம்,அதுவும் தன்னுடைய தாய் நாடு தோற்பதை வேறு ஒருவன் கொண்டாடுவது

    நிச்சயமாக யாருக்கும் பிடிக்காது.

  9. // பாக் கிரிக்கெட் அணியை ஆதரிப்பது குற்றமா

    முசுலீம் என்றால் மதம்தான் முக்கியம், தேசிய இனம், மொழி, நாடு, வர்க்கம், பால் என்பதெல்லாம் அப்புறம்தான் என்ற கருத்து முதன்மையாக ஏகாதிபத்திய ஊடகங்களால் பரப்பப்படுகிற //

    நகை முரண்

    பாலஸ்தீன மக்களுக்காக அவர்கள் வருந்துவது இலங்கை தமிழர்களுக்காக வருந்துவதை விட அதிகம் . இது சரி தவறு என்று வாதிட விரும்பவில்லை . இந்த தாக்கம் மத அடிப்படையில் வராமல் மனிதம் அடிப்படையில் வந்ததா ?

    //காஷ்மீர் மக்கள் இந்தியாவோடு இருப்பதா, இல்லை பாக்கோடு இணைவதா, இல்லை தனியாக இருப்பதா என்பதெல்லாம் அவர்களுடைய சுயநிர்ணய உரிமையோடு சம்பந்தப்பட்டவை//

    எங்க ஊரு குப்பனாயக்கன் பட்டிஇக்கு தனி நாடு வேணும் . இந்திய அரசு சாலை வசதி செய்து தரவில்லை

    //கிரிக்கெட்டில் வெற்றி பெறும் பாக் அணியை இந்திய முசுலீம்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடுகிறார்கள் என்று இந்துமதவெறி அமைப்புகள் இந்தியாவெங்கும் உருவாக்கியிருக்கும் ஒரு அவதூறும்//
    This news is about their celebration. Nobody lied it is the bitter truth. I have seen the celebration and one of my friend cheering and showing pride for pakistan. This guy is not from educated family
    However other muslim friends who are from educated family does not want to support Pak.
    I see this as an identity crisis. Do you want to identify based on your country with alien culture or the enemy with your culture.

    It is easy for me to support my country which is inline with my culture
    For him the choice is not simple.

    //மூவர்ணக் கொடி பறப்பது, ஜனகனமண பாடுவது, வீட்டில் பாரதமாதா படத்தை பூஜை செய்வதையெல்லாம் வைத்து தேசபக்தியை மதிப்பிடுவது பார்ப்பனிய மேட்டிமைத்தனமே அன்றி வேறல்ல//

    If they are not the right scale to measure patriotism what else?
    So we should not trust the people who sing Jana gana but the the person who claps for Pak ?!

  10. அந்த நிர்வாகம் 67 மாணவர்களை கொன்றிருந்தாலும் அது சரியாகதான் இங்கே கருத்து பேசும் பலருக்கு பட்டிருக்கும்.

    நாம் ஆஸ்திரேலியாவை ஆதரிக்கலாம், அமெரிக்காவை ஆதரிக்கலாம், சீனாவை ஆதரிக்கலாம் ஆனால், பாகிஸ்தானை மட்டும் ஆதரிக்க கூடாது. அப்படி ஆதரித்தல், அது நமது தேசபக்தியை குறைத்துவிடும்.

    எனக்கு தெரிந்து, இந்தியாவில் இருக்கும் சாதாரண மக்களும், பாகிஸ்தானில் இருக்கும் சாதாரண மக்களும் ஒருவருடன் இன்னொருவர் சேர்ந்து வாழவே விரும்புகின்றனர். அப்படி சேர்ந்து விட்டால், பல அரசியல்வாதிகள் பிழைக்க முடியாது. அதுனாலேயே இந்த நஞ்சை மக்களின் மனதில் விதைத்துள்ளனர். இது இரண்டு நாட்டு அரசியல்வாதிகளுக்கும் பொருந்தும்.

  11. //This news is about their celebration. Nobody lied it is the bitter truth. I have seen the celebration and one of my friend cheering and showing pride for pakistan. This guy is not from educated family
    However other muslim friends who are from educated family does not want to support Pak.
    I see this as an identity crisis. Do you want to identify based on your country with alien culture or the enemy with your culture.

    It is easy for me to support my country which is inline with my culture
    For him the choice is not simple.//

    This means you are okay to support muslims on the reservation claim or you will say “well no” and prove again to us you are a hypocrite

    We are all international citizens and support good anywhere and oppose bad wherever it happens, Flags and Anthems mean nothing Humanity and the right to express whoever they support has to be protected no matter you agree with them or not

    • //This means you are okay to support muslims on the reservation claim or you will say “well no” and prove again to us you are a hypocrite//

      Daliths were denied all the opportunity to own wealth ( education,land ,job) for 2000 years.
      They have the right to get reservation

      Are you saying, Muslims who ruled us for 800 years and never once denied opportunity to own a wealth should be treated on par with daliths just because he is muslim without checking if he is wealthy or not?

      If you say so, then brahmins will also cry and demand reservation for their poor?

      However if a dalith go to another religion , he should still be given reservation.

      Justify me why muslims,Thevars,Velalrs be given reservation?

      //We are all international citizens//
      That works in paper. In reality you need army and Pakistan is our enemy

      • //Daliths were denied all the opportunity to own wealth ( education,land ,job) for 2000 years.
        They have the right to get reservation

        Are you saying, Muslims who ruled us for 800 years and never once denied opportunity to own a wealth should be treated on par with daliths just because he is muslim without checking if he is wealthy or not?

        If you say so, then brahmins will also cry and demand reservation for their poor?

        However if a dalith go to another religion , he should still be given reservation.

        Justify me why muslims,Thevars,Velalrs be given reservation//

        There you go hypocrite
        Muslims died more in independence war when your grand fathers polished shoes for the british and held all the positions.
        Muslims pulled their children out of educational institutions and fought british when your grand fathers waited in line to get sir and bagadur medals.

        Why cant you simply agree every community gets the fair share of their reservation brahmins get their 1.5% and rest get the share according to their population.

        Ofcorse you wont agree because you internally believe you are superior to others. This wont happen in tamil nadu ever, you can consider to leave to gujarat instead or any brahmin country or state if you have the balls to create one, Ofcorse you ar enot capable of that also as you are a parasite cant do things of your own.

        No country is india’s enemy hypocrites like you are enemies to indian society

        • They say that Muslims should not lie,but this kayalaan is to think we ll believe whatever he says.

          Nizam of hyd the most promiment king of Indian muslims was licking the boots of the british,so did nawabs of oudh,so did so many people,all punjabi muslims were serving in the british army and now he comes up with his gas.

          People like Nawab of Pataudi were going to oxford n playing cricket,Sir Syed Ahmad khan established Aligarh Muslim University with the British,mr.Mohd Ali Jinnah smoking cigars/drinking whiskey n chewing pork split the independence movement to make pakistan.

          Nizam of Hyd is settled in London with the money which he gave to pakistan.

          Ivalavu unmayayum maraikkum enna vendru solvadhu.

          • மேலே குறிப்பிட்ட அளும் வர்க செம்பு தூக்கிகள் ஆங்கிலேயர்கள் காலை நக்கினார்கள் என்று வினவு ஏற்கனவே கூறியிருக்கிறது.

            நீங்கள் பார்பனர்கள் ஆங்கிலேயர்கள் காலை நக்கினார்கள் என்று ஒத்துக் கொண்டமைக்கு நன்றி.

            • ஆங்கிலேயர் காலத்தில் யார் யார் ஆங்கிலேயரிடம் பணி புரிந்தனர் ?

              உழவு தொழில் செய்ய நிலம் இல்லாதவர் , வியாபராம் போன்ற சொந்த தொழில் இல்லாதவர் என அனைவரும் ஜாதி மதம் இல்லாமல் வர்க்க அளவில் , வெள்ளையனிடம் பணி புரிந்தார்கள்.

              அட ராபர்ட் கிளைவ் கூட இந்தியாவில் இருந்து ஆட்களை தேர்ந்தெடுத்து அவருடைய போரிலே ஈடு படுத்தினான் . அப்போது கிளைவோடு சேர்ந்து போரிட்டவர்களை , வெள்ளையல் காலை நக்கினன்வன் என்பதா ? குறைந்த கூலிக்கு ரத்தம் உறிஞ்சியவர்களை விட நிறைந்த கூலிக்கு வேலை செல்வதை தொழிலாளி அடிப்படையில் எவ்வாறு தவறாகும் ?

              ஹைதர் அலி பிரெஞ்சு அரசாங்கத்தின் படை தளபதி , உடனே அவன் பெரெஞ்சு கைக்கூலி என்பதா ?

              பணி ஆற்றுவது எனபது வேறு , அதை பயன்படுத்தி மக்களை சுரண்டுவது எனபது வேறு
              அரசாங்க பணி என்பதற்கு படிப்பறிவு வேண்டும். ஆரம்பத்தில் இருந்தே கல்வி அதை சார்ந்த தொழில்கள் பிராமணர்கள் செய்து வந்ததால் , அவர்களுடைய தொழிலில் அவர்களால் ஏற்றம் பெற முடிந்தது.

              ராஜராஜ சோழன் பிராமனர்களைதான் அரசாங்கம் கணக்குக் வழக்கு பார்க்க வடக்கில் இருந்து கூட்டி வந்தான். பிராமணர்கள் ராஜராஜனின் காலை நக்கியதால் கூட்டி வரவில்லை

              இசுலாமிய மன்னர்கள் கூட, பிராமணர்களை அரசாங்க வேலையில் அமர்த்தி இருந்தார்கள். ஏன் ?

              அவர்கள் மற்றவர்களை அரசாங்க வேலையில் வளர் விடவில்லை எனபது மனித இயல்பே .
              ஒரு விவசாயி ஜாதி , மற்ற ஜாதி மக்களை விவசாய எல்லைக்குள் விடுவதில்லை எனபது போலதான் இதுவும்

              //மேலே குறிப்பிட்ட அளும் வர்க செம்பு தூக்கிகள் ஆங்கிலேயர்கள் காலை நக்கினார்கள் என்று வினவு ஏற்கனவே கூறியிருக்கிறது//

              அதாவது இசுலாமியர் செய்வது ஓரிரு இசுலாமியர் செய்வதாக உங்கள் மனம் பொருள் கொள்கிறது

              //நீங்கள் பார்பனர்கள் ஆங்கிலேயர்கள் காலை நக்கினார்கள் என்று ஒத்துக் கொண்டமைக்கு நன்றி.
              //
              ஆனால் அதே போல ஓரிரு பார்பனர் செய்வது அனைத்து பார்பனர்களும் இப்படிதான் என்கின்ற உங்களது ஜாதி வெறி தெரிகிறது

              ஓரிரு இசுலாமிய இளைஞர்கள் செய்ததை ஒட்டு மொத இசுலாமியர்களும் பாகிஸ்தான் ஆதரவாளர்கள் என்று நிறுவ முயலும் இந்து மத அடிப்படைவாத தந்திரமும் உங்கள் கூற்றும் தந்திரமும் ஒன்றே. முற்போக்கு என்று பெயரில் இருந்தால் போதாது சிந்தனையில் இருக்க வேண்டும்

  12. //காஷ்மீர் மக்கள் இந்தியாவோடு இருப்பதா, இல்லை பாக்கோடு இணைவதா, இல்லை தனியாக இருப்பதா என்பதெல்லாம் அவர்களுடைய சுயநிர்ணய உரிமையோடு சம்பந்தப்பட்டவை//

    மக்கள் நிர்ணயிக்கலாம் என்றால் எந்த அளவுக்கு போகலாம்? ஒரு மாநிலம் தனி நாடு கேட்பது வரையா? அல்லது ஒரு மாவட்டம்? அல்லது ஒரு கிராமம்? ஒரு மனிதன் இந்தியாவை பிடிக்கவில்லை என்றால் தன்னுடைய வீட்டை தனி நாடாக அங்கீகரிக்க கேட்கலாமா?
    என்ன அளவுகோலை வைத்து இது allowed அல்லது disallowed என்று முடிவெடுப்பது? அதை சொல்லிட்டு பிறவு பாப்போம் Kashmir பிரிக்கறதா வேணாமானு.

    • //மக்கள் நிர்ணயிக்கலாம் என்றால் எந்த அளவுக்கு போகலாம்? ஒரு மாநிலம் தனி நாடு கேட்பது வரையா? அல்லது ஒரு மாவட்டம்? அல்லது ஒரு கிராமம்? ஒரு மனிதன் இந்தியாவை பிடிக்கவில்லை என்றால் தன்னுடைய வீட்டை தனி நாடாக அங்கீகரிக்க கேட்கலாமா?
      என்ன அளவுகோலை வைத்து இது அல்லொநெட் அல்லது டிசல்லொநெட் என்று முடிவெடுப்பது? அதை சொல்லிட்டு பிறவு பாப்போம் Kஅஷ்மிர் பிரிக்கறதா வேணாமானு.//

      சகோதரா காஸ்மீரை இந்தியாவுடன் இணைக்கும் போது என்ன வாக்குறுதிகள் தந்து இணைத்தனர் என்பது உங்களுக்கு தெரியுமா?

      இப்பொழுது அங்கு என்னநிலை தெரியுமா?

      இதையெல்லாம் தெரிந்து அதன் பின்பு கருத்தை பதிவு செய்யுங்கள்…

      • It was decided that there will be the voting system for deciding the feature of Kashmir, United Kashmir, along with the region Occupied by Pakistan and China. Try to unite all parts of Kashmir, then we can call for the voting

        • //It was decided that there will be the voting system for deciding the feature of Kashmir, United Kashmir, along with the region Occupied by Pakistan and China. Try to unite all parts of Kashmir, then we can call for the voting//

          Pls small one correction Kashmir not only occupied by China and Pakistan. It is occupied by India, Pakistan and china.

      • // இந்தியாவுடன் இணைக்கும் போது என்ன வாக்குறுதிகள் தந்து இணைத்தனர் என்பது உங்களுக்கு தெரியுமா//

        I dont understand why did Nehru agreed to this. United India itself is new idea.It is not India took over Kashmir. When A country called India is formed, Kashmir is annexed. Now Giving freedom to Kahmir, will be below to the very idea for India.

        And It may not be fair,but it is right thing to do.

        I ask questions to Muslims who support Kashmir, Lahur was ruled by Sikh king and it was Sikh kingdom. If it is fair to split their country for the sake of muslims, to have their relegios rule, it is also fair.

  13. //பாலஸ்தீன மக்களுக்காக அவர்கள் வருந்துவது இலங்கை தமிழர்களுக்காக வருந்துவதை விட அதிகம் . இது சரி தவறு என்று வாதிட விரும்பவில்லை . இந்த தாக்கம் மத அடிப்படையில் வராமல் மனிதம் அடிப்படையில் வந்ததா ?// கண்டிப்பாக மத அடிப்படையில் தான். ஆனால் பல இஸ்லாமியர்கள் ஈழ தமிழர்களுக்காகவும் வருந்துகின்றனர். பல இஸ்லாமிய இயக்கங்கள் போராட்டங்களிலும் கலந்து கொள்கின்றன.
    ஆனால், அதற்க்கு மாறாக பார்ப்பனர்கள் பெரும்பாய்மையோர் ஈழ தமிழரை வெறுக்கின்றனர்,இலங்கையை ஆதரிக்கின்றனர், பாலஸ்தீன மக்களை வெறுக்கின்றனர் இஸ்ரேலை ஆதரிக்கின்றனர். இதற்க்காக இஸ்லாமியாரை குற்றம் சொல்லும் எவரும் பார்ப்பனரின் மத அல்லது இன அடிப்படையை பற்றி கேள்வி எழுப்புவதில்லை.
    //எங்க ஊரு குப்பனாயக்கன் பட்டிஇக்கு தனி நாடு வேணும் . இந்திய அரசு சாலை வசதி செய்து தரவில்லை // காஷ்மீர் குறித்த அடிப்படை அறிவு கூட இல்லாததால் வந்த கருத்து.
    //If they are not the right scale to measure patriotism what else?
    So we should not trust the people who sing Jana gana but the the person who claps for Pak ?!//
    எளிமையாக சொல்லனம்னா, மக்களை நேசிப்பதே தேச பற்று, நாட்டின் பரப்பளவை, நிலத்தை நேசிப்பது போலி தேச பற்று.

    • பல பார்ப்பனர்கள் ஈழத்தமிழர்களை வெறுக்கின்றனர்/வெறுத்தனர், அது மட்டுமல்ல, ஈழத்தமிழர்களில் பெரும்பான்மையினர் அசைக்க முடியாத இந்துக்கள் என்று தெரிந்தும், ஈழத்தமிழர்களுக்கெதிராக, சிங்களவர்களுக்காதரவாக பொய்ப்பிரச்சாரங்கள் செய்தனர்/செய்கின்றனர். உதாரணமாக, வன்னியில் இறுதி யுத்தத்தின் போது, அப்பாவி ஈழத்தமிழர்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்படும் போது, இந்தியா வெளிப்படையாக இலங்கைக்கு ராணுவ உதவி அளிக்க வேண்டுமென, தொலைக்காட்சிகளில் தோன்றி கருத்துத் தெரிவித்தனர் பிரபலமான தமிழ்நாட்டுப் பார்ப்பனர்களில் சிலர். இந்திய மத்திய அரசின் வெளியுறவு அமைச்சு (South Block) பூணூலால் வரிந்து கட்டப்பட்டுள்ளது என்பது எல்லோருக்கும் தெரியும். சோ ராமசாமி, சுப்பிரமணியம் சுவாமி, இந்து ராம் போன்ற பார்ப்பனர்கள் சிங்கள அரசுக்கு ஆதரவாக இயங்கினர். ஏனென்றால் பார்ப்பனர்கள் ஈழ விடுதலைப் போராட்டத்தைப் பெரியாரினதும், திராவிடக் கட்சிகளினதும் தனிநாட்டுக் கோரிக்கை என்ற பம்மாத்தின் தொடர்ச்சியாகக் கருதினர். தமிழ் நாட்டில் தமது ஆதிக்கத்தை இல்லாதொழித்து, தம்மை அமெரிக்காவுக்கும், இந்தியாவின் ஏனைய மாநிலங்களுக்கும் ஓடச் செய்த, திராவிட அரசியலை, திராவிடம் பேசும் தமிழர்களைப் பழிவாங்கத் தருணம் பார்த்துக் கொண்டிருந்த பார்ப்பனர்கள், தமிழ்நாட்டின் திராவிடக் கட்சிகளிடமிருந்த கோபத்தை ஈழத்தமிழர்களிடம் காட்டித் தணித்துக் கொண்டனர். ஆரம்பகாலத்தில், தமிழீழ விடுதலை இயக்கங்கள், நிதி, ஆயுத உதவி வேண்டி, திராவிடத்தலைவர்களின் சால்வைத் தலைப்பில் தொங்கியதும், அவர்கள் ஈழத்தமிழர்களுக்கு எதிராக இயங்கத் தொடங்கியதற்கு முக்கிய காரணமாகும்.

      இவ்வளவுக்குப் பின்பும், பார்ப்பனர்களை எவரும் குற்றம் சாட்டுவதில்லை, ஏன் என்கிறார் அஸ்வின். ஆனால், பார்ப்பனர்கள் உண்மையில் தமிழர்களா இல்லையா என்பது தமிழ் நாட்டில் பல ஆண்டுகளாக நடந்து வரும் விவாதமாகும். அத்துடன் பல பார்ப்பனர்கள் கூடத் தம்மை, தமிழர்களாக அடையாளப்படுத்துவதில்லை. பார்ப்பனர்களின் தமிழெதிர்ப்பு நடவடிக்கைகளின் அடிப்படையில் அவர்கள் தமிழர்கள் தானா என்பதில் கருத்து வேறுபாடு தமிழர்களில் பலருக்குண்டு. அவர்களில் பலர் தமது தமிழடையாளத்துக்கு முன்னுரிமை கொடுப்பதை விட, முழு இந்தியாவிலும் தமது ஆளுமையை, இருப்பை தக்க வைத்துக் கொள்வதில் தான் மிகவும் அக்கறை கொண்டுள்ளனர். ஆனால், இலங்கை முஸ்லீம்களைப் போன்று, தமிழ்நாட்டு முஸ்லீம்கள் தாம் தமிழர்கள் அல்ல என்று வாதாடியதாக யாரும் கேள்விப்பட்டதில்லை. தமிழர்கள் எவருமே தமிழ்நாட்டு முஸ்லீம்கள் தமிழர்களல்ல என்று விவாதிப்பதில்லை. அதனால், தமிழ்நாட்டு முஸ்லீம்கள் தமிழர்கள் தான் என்பது விவாதத்துக்குட்படாத ஏற்றுக் கொள்ளப்பட்ட விடயம். அதனால் தான், தமிழர்களாகிய தமிழ்நாட்டு முஸ்லீம்கள் ஏன் தமது சகோதரர்களாகிய ஈழத் தமிழர்களுகாக குரலெழுப்பவில்லை, அவர்களின் மதம் அவர்களைத் தடுத்ததா என்ற கேள்வி எழுப்பும் என்னைப் போன்றவர்கள் பார்ப்பனர்களிடம் அந்தக் கேள்வியைக் கேட்பதில்லை. விளங்குதா? 🙂

      • பார்ப்பனர் யாரும் ஈழ தமிழரை வெறுக்கவ்இல்லை.

        பிராபகரன் மேற்கு மாம்பலத்தில் துப்பாக்கி சூடு நடத்தியதும், மேலும் 1989 இல் தமிழகம் முழுக்க புலிகளை குவிததும்,திராவிட அரசியல் வாதிகளின் திமிரும் காவலித்தனமும் தான் புலிகள் மீது பார்ப்பனர் உட்பட பலருக்கு வெறுப்பை உண்டாக்கியது.

        ஆனால் இது பங்காளி சண்டை போன்ற ஒன்று தானே தவிர,முஸ்லிம்களை போல் முட்டாள்தனமாக சிந்திப்பது இல்லை.

        பல இலங்கை முஸ்லிம்கள் இன்று முஸ்லிம் என்ற ஆடாயலம் கொண்டுள்ளனர். மற்ற இருவருக்கும் மொழி ரீதியான அடையாளம் ஆனால் இவர்களுக்கு மட்டும் மத அடையாளம்.

  14. //ஈழத்தமிழ் மக்களுக்கு தமிழகத்து மக்கள் மீது அப்படி ஒரு கரிசனம் இருப்பதை இதோடு ஒப்பிட்டுச் சொல்லலாம். அதனால்தான் சிங்கள இனவெறி அரசும் கூட ஏனைய இந்தியாவை ஆதரித்தும் தமிழகத்தை எதிர்த்தும் வருகிறது. ஆகவே ஒரு இனத்து மக்கள் தமது உயிர்வாழும் உரிமைக்கு ஆதரவானவர்களோடு இணக்கம் காண்பிப்பது இயல்பானது. இதை தேசபக்தியோடு முடிச்சுப் போடுவது அயோக்கியத்தனம்.///

    இந்தக் கட்டுரையாசிரியர் ஈழத்தமிழர்களுக்கு தமிழ்நாட்டில் மீதுள்ள கரிசனத்தை உதாரணம் காட்டி, தான் சொல்ல வந்த கருத்தைக் கோட்டை விட்டு விட்டார் போல் தெரிகிறது.

    ஈழத்தமிழர்கள் தமிழ்நாட்டின் மீது காட்டும் பரிவுக்கும், பாசத்துக்கும், தமிழ்நாட்டின் நலன்களில், அரசியலில், அக்கறை காட்டுவதற்கும் காரணம், தமிழ் நாட்டுத் தமிழர்களை எமது இரத்த உறவாக, எமது இனமாக, எமது மொழியின், எமது வரலாற்றின் கலாச்சாரத்தின் பிரிக்க முடியாத அங்கமாகப் பார்க்கிறோம், அது மட்டுமல்ல, தமிழ்நாட்டின் கோயில்கள், சின்னங்கள், வரலாறு எல்லாவற்றிலும் எங்களின் முன்னோர்களுக்கும் எங்களுக்கும் தமிழர்கள் என்ற முறையில் பங்கிருப்பதாக உணர்கிறோம். தமிழ்நாட்டில் இருக்கும் போது நாங்கள் வேறு நாட்டில் இருப்பது போன்று அல்லது அன்னியராக உணர்வதில்லை. வரண்டு தண்ணியில்லாக் காடாக இருக்கும் தமிழ்நாட்டின் பகுதிகளில் கூட எங்களுக்கு அழகாகத் தெரிகிறது, ஏனென்றால் அந்த மண்ணுக்கும் எங்களுக்குமிடையே எங்களையறியாமலே ஒருவித தொடர்பை. பந்தத்தை உணர்கிறோம். அதே வேளையில் வேங்கடத்தின் குன்றுகளைத் தாண்டியவுடனேயே அந்த பந்தம், பாசம் எல்லாம் காணாமல் போய், ஒரு பயவுணர்வு வந்து விடுகிறது. எங்களையறியாமலே நாங்கள் நிமிர்ந்து உட்கார்ந்து கொள்கிறோம்.

    நாங்கள் தமிழ்நாட்டில் கரிசனம் காட்டும் காரணம் எமது உணர்வு பூர்வமான பந்தமும், பாசமுமே தவிர, தமிழ்நாட்டு மக்கள் எமது “உயிர்வாழும் உரிமைக்கு” ஆதரவு தருகிறார்கள் என்பதற்காக அல்ல. அந்தக் காரணத்துக்காக நாங்கள் தமிழ்நாட்டில் கரிசனம் காட்டுவதாக இருந்தால். கனடாவின் மீது தான் நாங்கள் அதிகம் கரிசனம் காட்ட வேண்டும். அதனால், இலங்கைத் தமிழர்களின் தமிழ்நாட்டுக் கரிசனத்தை, காஸ்மீரிகள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு, அதுவும் அவர்கள் இந்தியாவுடன் விளையாடும் போது ஆதரவு தெரிவித்ததை நியாயப்படுத்த, உதாரணமாகக் காட்டுவது வெறும் அபத்தம் மட்டுமல்ல அயோக்கியத்தனம்.

    அல்லது ஈழத் தமிழரக்ள் தமிழ்நாட்டில் கரிசனம் காட்டும் காரணங்களுக்காகத் தான் காஸ்மீரிகள் பாகிஸ்தானின் மீது கரிசனம காட்டுகிறார்கள், அதற்காகத் தான் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு ஆதரவு தெரிவித்தார்கள் என்றால், அந்த இந்திய மாணவர்கள் ஆத்திரப்பட்டு, அவர்களை அடித்ததில் தவறேதுமிருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ஏனென்றால் இந்திய மாணவர்களை ஆத்திரப்படுத்துவதற்காக கூட அவர்கள் அதைச் செய்திருக்கலாம். ஏனென்றால், இலங்கைச் சிங்களவர்களை எரிச்சலூட்ட, ஈழத்தமிழர்களும், இலங்கை கிரிக்கெட் வீரர்களை ஆதரிப்பதில்லை. தமிழ்நாடு தனிநாடாக இருந்து, இலங்கையும் தமிழ்நாடும் கிரிக்கெட் விளையாடினால், ஈழத்தமிழர்கள் நிச்சயமாக தமிழ்நாட்டைத் தான் ஆதரிப்பார்கள். ஆனால் இலங்கைக்கெதிராக, இந்தியக் கிரிக்கெட் வீரகளை ஆதரிக்குமளவுக்கு இந்தியாவின் மீது ஈழத்தமிழர்களுக்கு எந்தப் பந்தமும், பாசமும் கிடையாது. இலங்கைத் தீவின் மீது, குறிப்பாக வட, கிழக்கு மண்ணின் மீது ஈழத்தமிழர்களுக்கு தாய்நாட்டுப் பற்றுண்டு, ஆனால் சிங்கள சிறீலங்காவின் மீது தாய்நாட்டுப் பற்றுக் கிடையாது.

    தனது தாய்நாடு இன்னொரு நாட்டுடன் போட்டி போடும் போது எம்மையறியாமலே நாம் காட்டும் உணர்வு பூர்வமான ஆதரவு தான் தாய்நாட்டுப் பற்றுக்கு சரியாக உதாரணமாகும். பாகிஸ்தான், இலங்கையுடன் போராடும் போது அவர்கள் பாகிஸ்தானுக்கு ஆதரவளித்திருந்தால் அதைப் பெரிது படுத்தத் தேவையில்லை. ஆனால், இந்தியாவும், பாகிஸ்தானும் விளையாடும் போது அவர்கள் பாகிஸ்தான் வீரர்களுக்கு ஆதரவளித்ததன் நோக்கம், இந்தியாவின் மீது தமக்குள்ள வெறுப்பைக் காட்டி, இந்து மாணவர்களை ஆத்திரமூட்டுவது தான் என்பதை நீங்கள் எப்படித் தான் பூசி மெழுகினாலும் மறைக்க முடியாது.

    • //தனது தாய்நாடு இன்னொரு நாட்டுடன் போட்டி போடும் போது எம்மையறியாமலே நாம் காட்டும் உணர்வு பூர்வமான ஆதரவு தான் தாய்நாட்டுப் பற்றுக்கு சரியாக உதாரணமாகும். பாகிஸ்தான், இலங்கையுடன் போராடும் போது அவர்கள் பாகிஸ்தானுக்கு ஆதரவளித்திருந்தால் அதைப் பெரிது படுத்தத் தேவையில்லை. ஆனால், இந்தியாவும், பாகிஸ்தானும் விளையாடும் போது அவர்கள் பாகிஸ்தான் வீரர்களுக்கு ஆதரவளித்ததன் நோக்கம், இந்தியாவின் மீது தமக்குள்ள வெறுப்பைக் காட்டி, இந்து மாணவர்களை ஆத்திரமூட்டுவது தான் என்பதை நீங்கள் எப்படித் தான் பூசி மெழுகினாலும் மறைக்க முடியாது.//

      நீங்கள் இந்தியா தாய்நாடு என்று பெருமை படலாம் அதற்கான பலனை அனுபவீக்கின்றீர்கள்
      ஆனால் காஸ்மீரிகள்….

      அப்படி ஒருநிலை வந்தால் நீங்கள்சொல்ல தேவை இல்லை அவர்கள் மனதில் மாற்றம் வரும் இதில்நாங்கள் பூசி மெழுக வேண்டிய அவசியம் கிடையாது

      • நாங்கள், ஈழத்தமிழர்கள், இந்தியாவையோ அல்லது தமிழ்நாட்டையோ எமது தாய்நாடாக நினைக்கவில்லை. இலங்கை தான் எங்களின் தாய்நாடு. தமிழ்நாட்டில் எங்களுக்கு உள்ள கரிசனை, பாசம் எல்லாம் அது தமிழர்கள் பாரம்பரியமாக வாழ்ந்து வரும் தமிழ்மண் அந்த மண்ணுக்கும் எங்களுக்கும் வரலாறு பூர்வமான தொடர்புண்டு என்பதால் தான். எங்களுக்கு தமிழ்நாட்டில் பந்தம், பாசம் அல்லது கரிசனையுள்ள அளவுக்கு, காஷ்மீரிகளுக்கு இந்தியா மீது எந்த பந்தமும், பாசமும், கரிசனையும் இல்லை ஆனால் பாகிஸ்தான் மீது உண்டு என்பதைத் தான் இந்த சம்பவம் எடுத்துக் காட்டுகிறது. அதனால் தான் இந்தியாவும், பாகிஸ்தானும் விளையாடும் போது, ஏனைய இந்தியர்களை கோபமூட்டும் நோக்கத்துடன் அவர்களுக்கு முன்னால் பாகிஸ்தானுக்கு ஆதரவளித்தனர். அந்த உண்மையை மறைத்து, சம்பந்தமில்லாமல், ஈழத்தமிழர்களையும் உதாரணம் காட்டி சப்பைக் கட்டு கட்டுகிறார் இந்தக் கட்டுரையாசிரியர். அதைத் தான் நான் சுட்டிக் காட்டினேன்.

        இலங்கையில் உள்ள முஸ்லீம்கள் எவ்வாறு இலங்கையும் பாகிஸ்தானும் விளையாடும் போது பாகிஸ்தானுக்கு ஆதரவளித்தார்களோ, அதே போல் முஸ்லீம்கள் என்ற அடிப்படையில், காஸ்மீரி முஸ்லீம்களும், பாகிஸ்தானுக்கு ஆதரவளிப்பதில் தவறில்லை. அது அவர்களின் தனிமனித சுதந்திரம். காஸ்மீரி மக்களின் சுயநிர்ணய உரிமையைத் தீர்மானிக்கும் வகையில் அல்லது அவர்களின் விருப்பு, வெறுப்பை அறியும் வகையில் பொது வாக்கெடுப்பு நடத்த மறுக்கும், இந்திய அரசுக்கு அவர்கள் இவ்வாறு தமது எதிர்ப்பைத் தெரிவித்தனர், என்று மழுப்பினால் கூட அதை ஏற்றுக் கொள்ளலாம. ஆனால் அந்த காஸ்மீரி மாணவர்களின் இந்திய வெறுப்பை மூடி மறைக்க, தாய்நாட்டுப்பற்றுக்கு வெவ்வேறு உதாரணங்களும், வியாக்கியானங்களும் கொடுத்து, அவர்களுக்கு இந்தியா மீதுள்ள வெறுப்பை இந்தக் கட்டுரையாசிரியர் பூசி மெழுகி, மூடி மறைக்க முயல்வதைப் பார்க்க சிரிப்பு வருகிறது. 🙂

  15. //முசுலீம் என்றால் மதம்தான் முக்கியம், தேசிய இனம், மொழி, நாடு, வர்க்கம், பால் என்பதெல்லாம் அப்புறம்தான் என்ற கருத்து முதன்மையாக ஏகாதிபத்திய ஊடகங்களால் பரப்பப்படுகிறது. ///

    அது தான் உண்மையும் கூட. உதாரணமாக பலத்தீனத்தில் ஒரு குழந்தைக்குப் பல்லு விழுந்தால், சிரியாவில் யாராவது கொல்லப்பட்டால் மட்டுமன்றி தனது சொந்த நாட்டு மக்களையே நச்சுக் காற்றின் மூலம் கொலை செய்த சர்வாதிகாரி சதாம் ஹுசையினுக்குக் கூட ஆதரவு தெரிவித்து, ஆர்ப்பாட்டம் செய்து, அதைப் பற்றி எழுதி வலைப்பதிவுகளை நிரப்பிய தமிழ்நாட்டு முஸ்லீம்கள், ஈழத்தமிழர்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்ட போது, ஏனைய தமிழர்களுடன் சேர்ந்து ஆர்ப்பாட்டம் செய்து, தமது எதிர்ப்ப்பைத் தெரிவிக்காதிருந்தாலும் பரவாயில்லை, அவர்கள் ஈழத்தமிழர்களுக்கெதிராக, சிங்கள அரசுக்காதரவாக பொய்ப்பிரச்சாரம் செய்தனர். ஏனென்றால், அவர்களுக்கு மதம் தான் முக்கியமே தவிர இனமல்ல, மத அடிப்படையில் ஈழத்தமிழர்களை விட அரேபியர்களும், ஆபிரிக்கர்களும், ஆப்கானியர்களும் அவர்களுக்கு நெருக்கமானவர்கள், அவர்களின் சகோதரர்கள். அதனால் தான், தமிழ்நாட்டு முஸ்லீம்கள் வெறும் உதாரணத்துக்குக் கூட, அரேபியாவுக்கும் ஆபிரிக்காவுக்கும் ஓடுகிறார்கள். முஸ்லீம்களுக்கு இயற்கையாகவே இஸ்லாமிய நாடுகளில் பாசம் அதிகம் என்பது பொதுவாக எல்லோரும் அறிந்ததே. உதாரணமாக, **2011 இல் இலங்கை முஸ்லீம்கள் கூட, இலங்கையும் பாகிஸ்தானும் கிரிக்கெட் விளையாடிய போது, பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்து சிங்களவர்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்டார்கள். அரேபியர்கள் அவர்களைக் கேவலமாக, மிருகங்களை விடக் கேவலமாக நடத்தினாலும் கூட, அரேபியர்களின் செல்வத்தையும் அவர்களைப் பற்றி பெரிதாக, உயர்வாகப் பீற்றிக் கொள்ளும் பல முஸ்லீம்களை நான் அனுபவத்தில் பார்த்திருக்கிறேன். 🙂

    • //சர்வாதிகாரி சதாம் ஹுசையினுக்குக் கூட ஆதரவு தெரிவித்து, ஆர்ப்பாட்டம் செய்து, அதைப் பற்றி எழுதி வலைப்பதிவுகளை நிரப்பிய தமிழ்நாட்டு முஸ்லீம்கள், ஈழத்தமிழர்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்ட போது, ஏனைய தமிழர்களுடன் சேர்ந்து ஆர்ப்பாட்டம் செய்து, தமது எதிர்ப்ப்பைத் தெரிவிக்காதிருந்தாலும் பரவாயில்லை, அவர்கள் ஈழத்தமிழர்களுக்கெதிராக, சிங்கள அரசுக்காதரவாக பொய்ப்பிரச்சாரம் செய்தனர். ஏனென்றால், //

      விடுதலை புலிகலால் அதிகம் கொலையுண்டது முஸ்லிம்கள் பின்பு எப்படி ஈழத்தமிழர்களை ஆதரிக்கிறோம் என்று புலிகலை ஆதரிப்பது
      விடுதலை புலிகலால் முஸ்லிம்கள் கொல்லப்பட்ட பொழுது ஈழத்தமிழர்கள் எங்கு போனார்கள்?
      சதாமை முஸ்லீம்கள் மட்டும் இல்லை உலகமே ஆத்ரித்தது இந்தியாவில் பிஜேபி கூட பாராளுமன்றதில் அமெரிக்கவுக்கு எதிராக் கண்டன தீர்மானம் கொண்டுவர உத்தேசித்தது

      //சிங்கள அரசுக்காதரவாக பொய்ப்பிரச்சாரம் செய்தனர்//

      இலங்கையில் அரசுக்காதரவாக பிரச்சாரம் செய்தால் பொய்ப்பிரச்சாரம்
      உங்களி உண்மை முகம் என்னவெனில் முஸ்லிம்களை கொச்சை படுத்துவது மட்டும் தான்.

  16. மேலோட்டமாக பார்க்கும்போது விளையாட்டு சம்பந்தப்பட்டிருப்பினும் நடைமுறையில் இது மிகவும் உணர்வுபூர்வமான விடயம். பாகிஸ்தானில் இருக்கும் இந்துக்கள் இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் (இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் விளையாடி இந்தியா ஜெயிக்கும்போது) இந்திய கிரிக்கெட் அணியை ஆதரித்திருப்பார்களானால் அவர்கள் கொல்லப்பட்டே இருப்பார்கள். அப்படியே வடகொரியா தென்கொரியா நாடுகளின் நிலைமைகளையும் யோசித்துப்பாருங்கள்.

    • அதை பற்றியெல்லாம் நாம பேச உரிமையில்லை பாஸ்…மத சார்பின்மை, கம்யூனிசம்,முற்போக்கு என்றாலே இசுலாத்தை ஆதரிப்பது என்றுதான் அர்த்தம்

    • //மேலோட்டமாக பார்க்கும்போது விளையாட்டு சம்பந்தப்பட்டிருப்பினும் நடைமுறையில் இது மிகவும் உணர்வுபூர்வமான விடயம். பாகிஸ்தானில் இருக்கும் இந்துக்கள் இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் (இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் விளையாடி இந்தியா ஜெயிக்கும்போது) இந்திய கிரிக்கெட் அணியை ஆதரித்திருப்பார்களானால் அவர்கள் கொல்லப்பட்டே இருப்பார்கள். அப்படியே வடகொரியா தென்கொரியா நாடுகளின் நிலைமைகளையும் யோசித்துப்பாருங்கள்//

      இது உங்களின் சிருபிள்ளைத்தனமான பேச்சு காரணம் எத்தனையோ பாக்கிஸ்தான் பிளேயர்கள் இந்தியாவுக்கு(கிரிக்கெட்டில்) ஆதரவாக கருத்துக்களை கூறியுள்ளனர்

      தவரியும் நம்மவர்கள் அதுபோல் பேச முடியுமா பேசினால் அவர்கள் தேச துரோக முத்திரை குத்தப்படும் என்பதால் யாரும் வாய் திறப்பதில்லை

      • ஐயா பெரியவரே!
        எங்கே இந்தியாவிற்கு எதிராக பாக்கிஸ்தான் விளையாடிய ஏதாவது ஒரு போட்டியில் இந்தியாவிற்கு ஆதரவாக பாகிஸ்தான் வீரர்கள் கருத்துக்களை கூறியுள்ளனர் என்பதற்கு ஒரேயொரு ஆதாரத்தைக் காட்டுங்கள். அதன்பின் நான் சிறுபிள்ளைதான் என்பதை ஒத்துக் கொள்கிறேன்.

        • இம்ரான்கானும், வாசிம்அக்ரமும் பலமுறை இந்திய வீரர்களை பாராட்டியுள்ளனர்.

        • பெயரளவில் இனியவரே
          //இது உங்களின் சிருபிள்ளைத்தனமான பேச்சு காரணம் எத்தனையோ பாக்கிஸ்தான் பிளேயர்கள் இந்தியாவுக்கு(கிரிக்கெட்டில்) ஆதரவாக கருத்துக்களை கூறியுள்ளனர்//

          இதில்நான் இந்தியாவும் பாக்கிஸ்தானும் விளையாடி போட்டி என்று குறிப்பிடவில்லை

          இந்தியாவிற்கு எதிராக பாக்கிஸ்தான் விளையாடிய ஏதாவது ஒரு போட்டியில் இந்தியாவிற்கு ஆதரவாக பாகிஸ்தான் வீரர்கள் கருத்துக்களை கூர அவர்கள் ஒன்றும் இனியன்கள் அல்ல

          • ஒன்றுக்கொன்று சம்பந்தமற்ற விடயங்களை பிதற்றுவதை நிறுத்துங்கள். இங்கே நடந்த சம்பவத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் விளையாடியுள்ளன, அதன் வெற்றி தோல்வி பற்றி கொண்டாடியதில் ஏற்பட்ட மனக்கசப்புகள் பற்றியதே விவாதம்.

            அதைவிடுத்து வேறு ஏதாவது சந்தர்ப்பத்தில் ஒரு பேட்டியில் பாகிஸ்தான் வீரர்கள் கூறியதை இச்சம்பவத்துடன் ஒப்பிடுவதில் அர்த்தமில்லை.

          • சிலருக்கு தமிழில் நடைபெறும் கருத்துப் பரிமாற்றங்களே புரிவதில்லை. சம்பந்தமற்றவற்றைப் பற்றி பின்னூட்டமிடுபவர்களுக்கு என்ன சொல்வது?

  17. என்னது இந்தியாவுக்கும் பாக்.கும் நடந்தது விளையாட்டா, போர் நடக்கப்போதுன்ல தினமலர்காரன் சொன்னான்.

  18. இது என்னைய ஞாயம். அடி வாங்குறதும் முஸ்லிம், அபராதம் விதிக்கபடுவதும் முஸ்லிமுக்கே, வெளியேற்றபடுவதும் முஸ்லிமே.

    குண்டு வெடிப்பில் சாவதும் முஸ்லிம் கைதாவதும் முஸ்லிம் போல.

    • // இது என்னைய ஞாயம். அடி வாங்குறதும் முஸ்லிம், அபராதம் விதிக்கபடுவதும் முஸ்லிமுக்கே, வெளியேற்றபடுவதும் முஸ்லிமே.//

      Ameen Bhai,

      // ஆனால் அத்தகைய மதம் சார்ந்த இசுலாமிய சகோதரத்துவம் இந்த உலகில் எப்போதும் இருந்ததில்லை. காரணம் ஒரு மனிதன் அல்லது சமூகத்தின் பிரச்சினைகள் அனைத்தும் கடவுள் நம்பிக்கை அல்லது மதத்தோடு தொடர்புடையவை அல்ல. // – இதை நீங்கள் ஏற்கவில்லையா..?!

      // அந்த மாணவர்கள் மன்னிப்பு கேட்பார்கள் என்று எதிர்பார்த்தாகவும் அது நடக்கவில்லை என்பதாலேயே இந்த் தற்காலிக நீக்கம் எடுக்க நேரிட்டது என்று அகமது நியாயப்படுத்துகிறார். // – இந்த அகமது உங்களுக்கு முஸ்லீமாக தெரியவில்லையா..?! ஒரு முஸ்லீம் இந்தியர், மேற்படி முஸ்லீம் காசுமீரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது இஸ்லாத்துக்கு விரோதமானதா..?!

    • ஆமாம் பாய் என்ன அநியாயம் பாருங்க …இங்க முஸ்லீம்க்கு ஆதரவா கருத்து சொல்லறதும் முஸ்லிம், இந்த கட்டுரையை பதிந்த வினவும் முஸ்லிம் . இல்லையா பாய்..எனக்கென்னமோ, இது இஸ்லாத்துக்கு எதிரான சதியாக தோன்றுகிறது.

    • அல்லாவின் பெயரால் முஸ்லிம்களை முஸ்லிம்களே வரிசையாக நிற்கவைத்து சுட்டுகொல்லும் சிரிய நாட்டு பயங்கரம்…..

      • //அல்லாவின் பெயரால் முஸ்லிம்களை முஸ்லிம்களே வரிசையாக நிற்கவைத்து சுட்டுகொல்லும் சிரிய நாட்டு பயங்கரம்…..//
        இவர்கள் சிரியநாட்டு விடுதலை புலிகள்…

        • அல்லாவின் பெயரால் முஸ்லிம்களை முஸ்லிம்களே வரிசையாக நிற்கவைத்து சுட்டுகொல்லும் சிரிய நாட்டு “விடுதலைப்புலிகளை” எதிர்க்கும் அமெரிக்காவைப் பாரட்ட வேண்டும் ஆனால் உலக முஸ்லீம்களும் அவர்களின் முல்லாக்களும் ஏனோ “Death to America” என்று கூச்சலிடுவதிலேயே குறியாக இருக்கிறார்கள். 🙂

      • அப்பா, என்ன ஒரு பயங்கரம். நெஞ்சு கனக்கிறது. உலகம் எங்கே செல்கிறது. சக மனிதரை கொல்லும் அளவிற்கு மதவெறி இனவெறி தாண்டவமாடுகிறது. இதனால் தான் மதமே இல்லாத மனிதம் நோக்கி என் பயணம் போகிறது.

  19. இந்திய, பாகிஸ்தானிய மட்டையடி விளையாட்டு வீரர்களில் எத்தனை பேர் துட்டை வாங்கிக் கொண்டு தத்தமது தேசபக்தியை கூட்டி,குறைத்து விளையாடினார்கள் என்று தெரியவில்லை..

    // ஆனால் இறுதியில் பாக் அணியின் அப்ரிடி ஒரு சிங்கம் போல கடைசி ஓவரில் இரண்டு சிக்சர் அடித்து இந்தியாவை தோற்கடிக்க வைத்தார். இதை காஷ்மீர் மாணவர்கள் கைதட்டி கொண்டாடியிருக்கிறார்கள். //

    ’எங்க பாகிஸ்தான் பாய் சிங்கம்லே, இந்தியப் பாப்பானுகளா’ என்று கைதட்டிக் கொண்டாடினால் பாப்பானுக்கு கோவம் வருவது கிடக்கட்டும், தேசபக்தி இல்லாத(?!) ‘சூத்திரனுக்கும்’ தேசபக்தி வந்துவிடுமேய்யா..

    // ஈழப்போராட்டத்தை ஒடுக்க சிங்கள அரசுக்கு உதவியாக இருக்கும் இந்தியாவை கண்டிக்க நினைக்கும் ஒரு ஈழத்தமிழர், கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோற்க வேண்டும் என்று நினைப்பதற்கும் இதுவே காரணம். //

    இந்தியா-இலங்கைக்கு இடையே நடக்கும் கிரிகெட் போட்டியாயிருந்தால், யார் தோற்றாலும் ஈழத்தமிழர்களுக்கு வருத்தம் வரப் போவதில்லை, இந்தியா தோற்க வேண்டும் அல்லது ஜெயிக்க என்ற விருப்பம் இருக்குமா என்றுகூட தெரியவில்லை.. பாக் ஆதரவு – இந்திய எதிர்ப்பு காசுமீரிகளோடு, இலங்கை-அதற்கு உதவிய இந்தியா இரண்டையும் கிட்டத்தட்ட ஒன்றாக பார்க்கும் மனநிலையில் உள்ள ஈழத்தமிழர்களை ஒப்பிடுவது பொருத்தமாக இல்லை..

    //இன்னும் புரியும் விதத்தில் சொல்வதாக இருந்தால் இந்திய அணியை தோற்கடித்த பாக் அணியின் வெற்றியை நாமும் கொண்டாடுவோம்.!//

    ரொம்ப முக்கியம்.. சராசரி முஸ்லீம் இந்தியன்கூட ‘நம்மளே தேசத்துரோகியாக்கி அழகு பார்க்காமல் விடமாட்டாங்க போலிருக்கே’ என்று கலவரப்பட்டு தனது தேசபக்தியை இரண்டுமடங்காக்கி காட்டிக் கொள்ளவேண்டிய கட்டாயத்துக்கு அவனை உள்ளாக்குவது ஏன்..?!

    • \\தனது தேசபக்தியை இரண்டுமடங்காக்கி காட்டிக் கொள்ளவேண்டிய கட்டாயத்துக்கு அவனை உள்ளாக்குவது//

      ஏற்கனவே இந்த அவல நிலைக்கு இந்திய முசுலிம்களை சங் கும்பல் தள்ளியிருக்கிறது.முன்பு ஒரு முறை இந்திய பாக். போட்டியில் இந்தியா வெல்ல வேண்டும் என மும்பையில் முசுலிம்கள் பொது இடம் ஒன்றில் கூடி பிரார்த்தனை செய்து தங்கள் நாட்டுப்பற்றை மெய்ப்பிக்க வேண்டியிருந்தது.

      வெள்ளைக்காரனிடம் மன்னிப்பு கடிதம் கொடுப்பதையே பெரும் விடுதலை போராட்டமாக கொண்டிருந்த சங் பரிவார் கும்பல் முதல் விடுதலை போரையும் வேலூர் புரட்சியையும் நடத்திய, முசுலிம்களின் வாரிசுகளை நாட்டுப்பற்று இல்லாதவர்கள் என தூற்றுகிறது.

      பாக்-க்கு எதிரான அத்தனை போரிலும் பல முசுலிம்கள் உயிர்த்தியாகம் செய்துள்ளனர். குளு குளு அறைகளில் கணினியின் முன் உட்கார்ந்து கொண்டு அந்த முசுலிம்களை அவதூறு பேசுகிறது எத்துவாளி கும்பல்.

      • தேச பக்திக்கும் இந்திய கிரிக்கெட் அணிக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.கிரிக்கெட் வீரர்கள் தேர்வுமுறையானது இந்தியாவை பிரதிநிதித்துவம் படுத்துமாறு அமைவதில்லை.18 பேர் கொண்ட அணியில் 10 பேர் பார்ப்பனர்களாக இருப்பர்.தலைமுதல் கால்வரை பன்னாட்டு நிறுவனங்களின் விளம்பரங்களை சுமந்துகொண்டு காசு பார்க்கும் இவர்களுக்கே தேச பக்தி கிடையாது.பாமர ரசிகனுக்கும் இந்த போலி தேச பற்று தேவையற்றது.இந்திய கிரிக்கெட் வாரியம் என்ற அமைப்பும் பாரத மாதா குடியிருக்கும் கோவில் அல்ல.இந்தியாவை ரேட்டு பேசி வியாபாரம் செய்யும் டால்மியா ,சீனிவாசன் போன்ற கேடிகள் உலாவும் இடம்.நம் உச்சநீதி மன்றம் போல சிண்டிலும் பூணூலிலும் சிக்கி தவிக்கும் இடம்.இயல்பாகவே கிரிக்கெட்டில் தேச பக்திக்கு இடமில்லை.அவர்கள் சொல்லும் வயாகரா தேச பக்தி யாருக்கும் அவசியம் இல்லை.

    • எந்த ஒரு சுதந்திரப் போராட்டத்திலும் ஈடுபடாத RSS காரர்களுக்கு தேசியத்தையும், தேச ஒற்றுமையையும் பேச என்ன உரிமை இருக்கிறது. முதல் தேச துரோகிக்ளே இவர்கள் தான்.

  20. பாகிசுதான் வெற்றியை இந்திய முசுலிம்களில் சிலர் இனிப்பு வழங்கி வெடி போட்டு கொண்டாடுகிறார்கள் என்பது அப்பட்டமான அவதூறு.இப்படி ஒரு செய்தி ஆதாரத்துடன் எந்த செய்தி ஏட்டிலும் வந்ததில்லை.முழுக்க முழுக்க வதந்தியாக கிளப்பி விடப்பட்டு தொடர்ச்சியாக செய்யப்படும் கள்ளப்பரப்புரை இது.

    இந்த வதந்திகளில் ஒன்றை எடுத்துக் கொண்டு ஒரு பானை சோற்றையும் பதம் பார்த்து விடலாம்.கர்நாடகத்தில் அப்படி முசுலிம்கள் கொண்டாடுவதாக இங்கு ஒரு மேதை கதைக்கிறார்.அந்த கர்நாடகத்தில் ஐந்து ஆண்டுகள் பா.ச.க ஆட்சி செய்திருக்கிறது.இப்போதும் வலுவான எதிர்க் கட்சியாக உள்ளது.அப்படியானால் அம்மாநிலத்தில் பட்டி தொட்டி முதல் மாநகரங்கள் வரை சங் பரிவார் கும்பலுக்கு கிளைகள் இருக்கும் என்பது சொல்லாமலே தெரியும்.அங்குதான் சங் பரிவார் காலிகள் வட்டாட்சியர் அலுவலகத்தில் பாக். கொடியை பறக்க விட்டு முசுலிம்கள் மீது பழி போட்டு கலவரம் நடத்த முயன்றனர்.இப்படிப்பட்ட அயோக்கியர்களும் கெடுமதியாளர்களும் நடமாடும் மாநிலத்தில் பாகிசுதான் வெற்றியை முசுலிம்கள கொண்டாடி இருந்தால் அது எத்தகைய கலவரத்தை கொண்டு வந்திருக்கும்.இந்த எளிய உண்மையை கூட உணராத முட்டாள்களாகத்தான் இந்த கள்ளப்பரப்புரையில் ஈடுபடுவோர் இருக்க வேண்டும் அல்லது மக்களை அப்படி நம்ப வைக்க முயலும் எத்தர்களாக இருக்க வேண்டும்.

    • இவர்களே பட்டாசு கொளுத்தி போட்டுட்டு, முஸ்லிம்தான் பட்டாசு கொளுத்தி கொண்டாடுகிரான்னு சொன்னாலும் சொல்லுவாங்க. தன்னோட வீட்டுலே தானே பெட்ரோல் பாம் போட்டு முஸ்லிம் மீது பழி போட்ட கூட்டம்தானே.

  21. இந்திய அணிக்கு பயிற்சியளிக்கும் வெளிநாட்டு பயிற்சாளர்கள் எல்லாம் அந்தந்த நாட்டு தேசத் துரோகிகள?

  22. இந்தியாவும், பிரிடிஷ் அரசாங்கத்துடன் அகிம்சை முறையில் போராடி விடுதலை பெற்ற மிகப்பெரிய ஜனநாயகநாடு.சிறிய ஈழநாட்டில் காந்தி போன்ற தலைவர்கள் இல்லாதது, ஈழ மககளின் ஒட்டு மொத்த தகுதிக்குறைவு.வாய்ப்பிருந்தவர்களயும் கொன்று குவித்த பிரபாகரன்.மக்களின்நல் வாழ்வை விரும்பாத சர்வாதிகார போராளி என்று கொண்டாடினால் செருப்படிதான் கிடைக்கும்.

    • இந்த உளறலின் சொந்தக்காரருக்கு இலங்கையைப் பற்றியோ அல்லது ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தின் பரிமாணத்தைப் பற்றியோ ஒரு மண்ணும் தெரியாது என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது. ஈழத்திலும், ஈழத்துக் காந்தி என்றழைக்கப்படும் ஈழத்தமிழர் தலைவர் சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் இருந்தார். அறுதிப் பெரும்பான்மை இந்துக்களாகிய ஈழத் தமிழர்கள், ஒரு கிறத்தவராகிய அவரைத் தமது தலைவராக 50 வருடங்களுக்கு முன்பே ஏற்றுக் கொண்டு, ஈழத் தமிழர்களுக்கு மதம் முக்கியமல்ல, இனமும், மொழியும் தான் முக்கியம் என்பதைக் காட்டினார்கள். அவரை இன்றும் தந்தை செல்வா என அன்புடன் நினவு கூருகிறார்கள் ஈழத் தமிழர்கள். ஈழத்தமிழர்களும் அவரும் முப்பது வருடங்களுக்கு மேலாக அகிம்சை வழியில் போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதங்கள், சட்ட மறுப்பு இயக்கங்கள், சிறை நிரப்பும் போராட்டங்கள் எல்லாம் நடத்திப் பார்த்து, அதில் எந்த பயனும் ஏற்படாமல் போன பின்னர் தான் தமிழீழக் கோரிக்கையை பிரகடனப் படுத்தினார்கள். இந்த வரலாறு தெரியாமல் உளறுவது வெறும் அபத்தம்.

      அகிம்சை வழியில் போராடியவர்கள் மீது, இராணுவத்தையும், நாய்களையும் விட்டுத் தாக்குதல் நடத்தியது இலங்கை அரசு. அடுத்தடுத்து இனக்கலவரங்களை நடத்தி தமிழர்களைக் கொன்று, அவர்களைச் சிங்களவர்கள் கொள்ளையடித்ததைப் பார்த்துக் கொண்டிருந்தது இலங்கை அரசு. இவற்றுக்கெல்லாம் பின்னர் தான் ஈழத்தமிழர்கள் ஆயுதப் போராட்டத்தைத் தொடங்கினர். அதன் பின்னணியிலிருந்து தூண்டி விட்டு, பயிற்சியுமளித்து பின்னர் தமிழர்களின் முதுகிலும் குத்தியதும் இந்தியா, அதற்குத் தம்மையறியாமலே துணை போனவர்கள் தமிழ்நாட்டுத் தமிழர்கள்.
      அத்துடன் இலங்கையில் மகாத்மாக காந்தியிருந்தாலும் அவரால் ஒன்றும் சாதித்திருக்க முடியாது.

      இந்தியாவில் மகாத்மா காந்தி பெரும்பான்மை மக்களின் தலைவர், அவர் சிறுபான்மை வெள்ளையர்களுடன் அகிம்சை வழியில் போராடி வென்றார். ஆனால் இலங்கையில் நிலைமை வேறு, ஈழத்தமிழர்கள் சிறுபான்மை, அத்துடன் பிரிட்டிஸ் வெள்ளையர்களின் ஜனநாயக பண்பாடுகள் சிங்களவர்களிடம் கிடையாது. இலங்கை முழுவதையும் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டுமென்பது சிங்களவர்கள் இரண்டாயிரமாண்டுக் கனவு. பிரித்தானியர்களால் நனவாகிப் போன அந்த கனவை, விட்டுக் கொடுக்க அவர்கள் தயாராகவில்லை. அதனால், இலங்கையில் மகாத்மாக காந்தி பிறந்திருந்தால் கடைசியில் அவரும் ஆயுதம் தூக்கியிருப்பார் அல்லது அந்தப் போராட்டத்தில் அவரும் செத்து மடிந்திருப்பார்.

      (உலகயுத்தம் நடக்காதிருந்திருந்தால், உண்மையில் பிரித்தானியர்களுக்கு இந்தியாவை தமது தலையில் தொடர்ந்து சுமப்பது இலாபகரமானதாக இருந்திருந்தால், இந்தியாவுக்கு மகாத்மா காந்தியால் சுதந்திரம் பெற்றிருக்க முடியாது. அந்தக் காலத்தில், பிரிட்டிஸ் மக்களிடமும், அரசாங்கத்திலும், வெள்ளையர்கள் இல்லாத நாடுகளில் பிரிட்டிஸ் காலனிகளை தொடர்ந்து கட்டியாள்வது இலாபமற்ற வீண்வேலை என்ற கருத்து பரவலாக ஏற்படத் தொடங்கியதால் தான் இந்தியாவை விட்டகல அவர்கள் முடிவு செய்தார்களே தவிர, இந்தியர்களின் கூச்சலுக்கும், சாவுக்கும், ஊர்வலங்களுக்கும், போராட்டங்களுக்கும், உண்ணாவிரதங்களுக்கும் அஞ்சியல்ல என்ற கருத்துமுண்டு.)

    • மிஸ்டர் காந்தியவாதி,
      உங்கள் கையில் செருப்புக்கு பதில் ஏகே47 இருந்தால் என்னவெல்லாம் செய்வீர்கள் என்பது புரிகிறது.. முதலில் நமக்கு மனநோய் இல்லை என்று உறுதி செய்து கொண்டு அதன் பின் காந்தியையோ பிரபாகரனையோ பற்றி பேசுவது நல்லது..

    • கோபால கரி,
      மனநோயாளி,நாய்,செருப்படி போன்ற வார்த்தைகளை தமிழ்நாட்டின் எந்தப்பகுதியிலும் மக்களுக்கு கேட்கும் படி பேசாமல் இருப்பது உங்களுக்கு நல்லது.மீறி வாய்க்கு வந்ததையெல்லாம் உளரிக் கொட்டினால் உமக்கு செருப்படிகள் உறுதி.

  23. //விடுதலை புலிகலால் அதிகம் கொலையுண்டது முஸ்லிம்கள் பின்பு எப்படி ஈழத்தமிழர்களை ஆதரிக்கிறோம் என்று புலிகலை ஆதரிப்பது விடுதலை புலிகலால் முஸ்லிம்கள் கொல்லப்பட்ட பொழுது ஈழத்தமிழர்கள் எங்கு போனார்கள்?///

    இப்பொழுது தான் சரியான பதில் கிடைத்திருகிறது, நன்றி. இப்பவும் ஜவாகிர் காக்காவின் பொய்ப்பிரச்சாரப் புத்தி போகவில்லை, அதனால் தான் விடுதலை புலிகளால் அதிகம் கொலையுண்டது முஸ்லிம்கள் என்கிறார்.

    இலங்கை முஸ்லீம்கள் தம்மை தமிழர்களாக அடையாளப்படுத்துவதில்லை, அதனால் அவர்கள் தமிழர்கள் அல்ல, ஆனால் தமிழ்நாட்டு முஸ்லீம்கள் தாம் தமிழர்கள் தான் என வாதாடுகிறார்கள். ஆனாலும், விடுதலைப் புலிகள் இலங்கை முஸ்லீம்களைக் கொலை செய்ததால், தமிழர்களான ஈழத்தமிழர்களுக்கு தமிழ்நாட்டு முஸ்லீம்கள் ஆதரவு தெரிவிக்கவில்லை. அதற்குப் பதிலாக, ஈழத்தமிழர்களைப் பழிவாங்குவதற்காக இலங்கை முஸ்லீம்கள் தமிழர்களைக் கொலை செய்ததை, தமிழ்ப்பெண்களைக் கற்பழித்ததை, வீரமுனைப் பிள்ளையார் கோயிலில் நூற்றுக்கணக்கான தமிழர்களைப் வெட்டி படுகொலை செய்து, கோயிலில் இரத்த ஆற்றை ஓடவிட்டதை, கிழக்கு மாகாணத்தில் பல கிராமங்களில் தமிழர்களே இல்லாமல், இலங்கை இராணுவத்துடன் சேர்ந்து அழித்ததை, பல இந்துக்கோயில்களையும், நிலங்களையும் ஆக்கிரமித்ததை எல்லாம் மறைத்து விட்டு, (இலங்கை முஸ்லீம்களைக் கண்டிக்கவில்லை, அல்லது நடுநிலையாக இருக்கவில்லை) பதிலுக்குப் புலிகள் செய்ததாக, இலங்கை அரசு, விசாரணை எதுவுமில்லாமல் மூடி மறைத்த முஸ்லீம் கொலைகளின் அடிப்படையில், சிங்கள அரசுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்தார்கள் தமிழ்நாட்டுத் “தமிழ்” முஸ்லீம்கள்.

    ஆனால், சிங்களவர்கள் மத்தியிலும் கத்தோலிக்கர்களும், கிறித்தவர்களும் உள்ளார்கள். ஆனால் தமிழ்க் கிறித்தவர்கள் மதத்தை விட தமது மொழி, இன அடையாளத்தைத் தான் முதன்மையாகக் கருதுவதால், அவர்களால் மத வேறுபாடின்றி, தமிழர்களாக ஒன்றுபட முடிந்தது. தமிழீழ மாவீர்கள் இந்துவாக, கிறித்தவனாக அல்லாமல் தமிழனாக தமது மண்ணைக் காக்கப் போராடினார்கள். அவ்வாறு ஒன்றுபட, முஸ்லீம்களின் மதமும், மதவெறியும் அவர்களை அனுமதிக்கவில்லை, அவர்கள் யாழ்ப்பாணத்தில் தமிழர் மத்தியில் தாய், பிள்ளையாக வாழ்ந்து கொண்டே, இலங்கை ராணுவத்துக்கு உளவு பார்த்தார்கள். காட்டிக் கொடுத்த தமிழர்களை நடுச்சந்தியில் கொன்று தூக்கிய புலிகள் முஸ்லீம்களை யாழ்ப்பாணத்திலிருந்து, பாதுகாப்பாக வெளியேற்றியதற்கு அது தான் காரணம்.

    இதிலிருந்து என்ன தெரிகிறது, தமிழைப் பேசினாலும், தம்மை தமிழர்களாக அடையாளப்படுத்தினாலும், முஸ்லீம்களுக்கு தமது மத அடையாளம் தான் முக்கியமானதே தவிர, இன அடையாளமல்ல. அவர்கள் தாமும் தமிழர்கள் தான் என என்ன பம்மாத்து விட்டாலும், முஸ்லீம்களா, தமிழர்களா என வரும் போது, முஸ்லீம்களுடன் தான் இணைவார்கள், அவர்களுக்குத் தான் ஆதரவளிப்பார்கள். அது அவர்களின் கடமையும் கூட.

    //ஆதரவு தமிழ்நாட்டு முஸ்லீம்களை சதாமை முஸ்லீம்கள் மட்டும் இல்லை உலகமே ஆத்ரித்தது இந்தியாவில் பிஜேபி கூட பாராளுமன்றதில் அமெரிக்கவுக்கு எதிராக் கண்டன தீர்மானம் கொண்டுவர உத்தேசித்தது///

    சதாமை உலகமே ஆதரித்திருந்தால் சதாம் இப்பவும் உயிரோடிருந்து கொண்டு உலக முஸ்லீம்களுக்கு தனது வாள்வித்தையைக் காட்டிக் கொண்டிருந்திருப்பார். உண்மையென்ன வென்றால், அவரது சொந்த நாட்டிலேயே சதாமுக்கு ஆதரவு கிடையாது. இந்திய இலங்கை முஸ்லீம்களிடம் கடாபி, சதாமைப் பற்றியெல்லாம், அவர்கள் முஸ்லீம்கள் என்ற காரணத்துக்காக ஒரு நல்லெண்ணத்தை சில முல்லாக்களும், வஹாபிஸ்டுகளும் உருவாகியிருப்பதில் எந்த உண்மையும் கிடையாது. அந்த சர்வாதிகாரிகளை அவர்களின் நாட்டு மக்களே ஆதரிக்கவில்லை என்பதை, எவ்வாறு அந்த நாட்டு மக்கள், அவர்களின் குடும்பங்களைப் பழி வாங்கினார்கள் என்பதிலேயே தெரிகிறது. முஸ்லீம்களின் வாக்குகளைப் பெற, முஸ்லீம்கள் அனுமதித்தால் பாஜகவினர் ஹஜ்ஜுக்கு கூடத்தான் யாத்திரை போவார்கள், அதெல்லாம் அரசியலில் சகஜம் பாய். 🙂

    //இலங்கையில் அரசுக்காதரவாக பிரச்சாரம் செய்தால் பொய்ப்பிரச்சாரம்//

    உதாரணமாக பி. ஜெய்னுலாப்தீன் உண்மைகளைத் திரித்து எப்படி சிங்கள ஆதரவு பொய்ப்பிரச்சாரம் செய்தார் என்பதை நீங்கள் அவரது கானொளியில் காணலாம்.

    //உங்களி உண்மை முகம் என்னவெனில் முஸ்லிம்களை கொச்சை படுத்துவது மட்டும் தான்.///

    இலங்கை முஸ்லீம்கள் தம்மை தமிழர்களாக அடையாளப்படுத்தாது விட்டாலும் கூட, அவர்கள் தமது, தமிழர்களின் முதுகில் குத்தும், சுயநல அரசியலை விட்டு, அவர்களின் மொழிவழிச் சகோதரர்களாகிய ஈழத்தமிழர்களுடன் இணைந்தால், அதைப் பார்த்துப் பூரித்துப் போகும் பல்லாயிரக்கணக்கான தமிழர்களில் நானும் ஒருவன். நான் தமிழ்நாட்டுக்கு போகத் தொடங்கிய இந்த பத்து வருடங்களிலேயே, என்னுடைய தமிழ்நாட்டு முஸ்லீம் நண்பர்களில், அவர்களின் குடும்பங்களில் தீவிரவாத வஹாபியிசத்தினதும், அரபு மயமாக்கலினதும் தாக்கங்களை என்னால் உணரவும், காணவும் முடிகிறது. அது இன்று தமிழர்களாக ஒற்றுமையாக இருக்கும் தமிழ்நாட்டு தமிழர்களுக்கும், தமிழர்களாகிய தமிழ்நாட்டு முஸ்லீம்களுக்கும் இடையில், இலங்கையில் நடந்தது போன்றே, ஒரு நிரந்தர இடைவெளியை ஏற்படுத்தி விடுமோ என்று எனக்குப் பயமாக இருக்கிறது. அதனால் தான் அதை வெளிப்படையாக எதிர்க்கிறேன், எனது கருத்தைத் தெரிவிக்கிறேன்.

    • அநீதி இழைக்கப்பட்டவர்களையே அநியாயக்காரர்களாக காட்டும் பித்தலாட்ட வாதக்காரர் அய்யா வியாசன் அவர்களே,

      கிழக்கு மாகாணத்தில் ஈழ தமிழ் மக்கள் மீது சிங்கள ராணுவம் நடத்திய தாக்குதல்களுக்கு எல்லாம் முசுலிம்கள் மீதும் பழி போட்டு அவர்களையும் பொறுப்பாக்கி காட்டும் கள்ளப்பரப்புரையே உங்கள் வாதங்கள்.நீங்கள் கழுத்து நரம்பு புடைக்க கூச்சலிடும் வீர முனை படுகொலைகளை நடத்தியது சிங்கள இராணுவமே.இதோ

      http://www.yarl.com/forum3/index.php?showtopic=127333

      யாழ் இணைய கருத்துக்களத்தில் அந்த படுகொலைகள் பற்றி எழுதியவர்கள் கூட சிங்கள ராணுவம் அந்த கொலைகளை செய்ததாகவும் முசுலிம் காடையர்கள் அதை கை தட்டி ரசித்ததாகவும் சொல்கிறார்கள்.ஒரு இடத்தில் சிங்கள ஊர்க்காவல் படையுடன் இணைந்து முசுலிம் ஊர்க்காவல் படையினர் எட்டு தமிழர்களை கொன்றதாகவும் சொல்கிறார்கள்.

      உண்மை என்னவென்றால் பாசிச விடுதலை புலிகள் ஈழ மக்கள் மீதான சிங்கள ராணுவ தாக்குதல்களுக்கு முசுலிம்களை திட்டமிட்டு பொறுப்பாக்கி தங்கள் செய்யவிருந்த இன சுத்திகரிப்பு பாசிச நடவடிக்கையை நியாயப்படுத்த கண்டுபிடித்த சாக்குதான் முசுலிம்கள் வன்முறை.

      ஆனால் நீங்கள் ஏற்றிப்போற்றும் விடுதலை புலிகளின் யோக்கியதையையும் பார்ப்போமா.உங்கள் சொற்களில் ”காட்டிக் கொடுத்த தமிழர்களை நடுச்சந்தியில் கொன்று தூக்கிய புலிகள் ” அதே போன்ற ”துரோகம்” செய்த முசுலிம்களை மட்டும் கொன்று தூக்க வேண்டியதுதானே.அதை விடுத்து 60.000 முசுலிம்களை அவர்களின் வாழ்விடங்களை விட்டு துரத்தி அடித்தது அவர்களின் குறுந்தேசிய இன வெறியை காட்டவில்லையா.

      அந்த கொடும் நிகழ்வை ”முசுலிம்களை பாதுகாப்பாக” வெளியேற்றியதாக சொல்லும் வியாசன் அவர்களே உங்களுக்கு சிங்கள இனவெறியன் தரக்கேடில்லை போலிருக்கிறது.இன தூய்மைவாத நடவடிக்கை பாதிக்கப்பட்டவர்களின் பாதுகாப்புக்கானது என சொல்ல முடியும் என்றால் நீங்கள் உச்ச நீதி மன்றத்திற்கே நீதிபதியாக வேண்டியவர் என புலனாகிறது.

      காத்தான்குடியிலும் எராவூரிலும் பள்ளிவாசலில் தொழுது கொண்டிருந்த 200 க்கும் அப்பாவி முசுலிம்களை கொன்று குவித்த தமிழ்க் காடையர்களை ஏவிவிட்ட விடுதலை புலிகள்தான் இனவெறியர்கள்.அநியாயக்காரர்கள்.மீலாது நபி ஊர்வலத்தில் குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்திய கொலைகார விடுதலை புலிகள்தான் இனவெறியர்கள். அநியாயக்காரர்கள். முசுலிம்கள் அல்ல.

      ஈழ இறுதி யுத்தம் எப்படி ஆரம்பித்தது.நினைவிருக்கிறதா.மாவிலாறு அணையின் மதகுகளை திறப்பது குறித்த சர்ச்சையிலிருந்து துவங்கியது.அப்போது மூதூர் முசுலிம்களை ஊரை விட்டு வெளியேற உத்தரவிட்டது பாசிச விடுதலை புலிகள் இயக்கம்.அப்படி வெளியேறி மூன்று பள்ளிக்கூடங்களில் தஞ்சமடைந்திருந்த முசுலிம்கள் மீது பீரங்கி குண்டுகளை வீசி கொன்று குவித்த விடுதலை புலிகளை முசுலிம்கள் மொழிவழி சகோதரர்களாக பார்க்கவில்லை என குற்றம் சொல்வது எந்த வகையில் நியாயம்.எட்டி உதைக்கும் கால்களையும் நக்கிப் பிழைக்கும் ஈனப்பிறவிகள் வேண்டுமானால் எதிரியையும் பணிந்து வாழ்த்தலாம்.

    • முசுலிம் மக்கள் மீது தாங்கள் நடத்திய அக்கிரமங்களுக்கு விடுதலை புலிகள் அளித்த ஒப்புதல் வாக்குமூலமாக இந்த ஆவணத்தை எடுத்துக் கொள்ளலாம்.

      முசுலிம் மக்களை வாழ்விடங்களை விட்டு துரத்தி அடித்ததையும் ,முசுலிம்களின் விவசாய நிலங்களை பறித்துக் கொண்டு அதில் நுழைய விடாமல் அவர்களை துரத்தி அடித்ததையும்,முசுலிம்களை மிரட்டி பணம் பறிக்கும் வழக்கத்தை கொண்டிருந்ததையும் விடுதலை புலிகளே அவர்கள் வாயால் ஒப்புக்கொண்டுள்ளார்கள்.
      http://www.slnewsonline.net/Hakeem_Prabha_Secrete_Agreement.jpg

  24. மேலே பதியப்பட்ட இந்த்துவா கருத்துகளிருந்து தெரிய்வருவது

    இல்ங்கைத் தமிழர்களை யாரும் (தமிழக முஸ்லீம்கள்) இந்துக்கள் என பார்ப்பதில்லை
    ஆனால் காஸ்மீரிகளை மட்டும் மத ரீதியாக பிரித்து பார்ப்பது ஏன்?

    பாக்கிஸ்தானில் சென்று ஒரு இந்தியன் குண்டு வைத்து பலரை கொன்றால் அவன் இங்கு தியாகி. ஆனால் ஒரு பாக்கிஸ்தானி செய்தால்…

    முஸ்லீம் அல்லாதவன் இங்கு முதன் மந்திரியை கொன்றாலும், முன்னால் பிரதமரை கொன்றாலும், அப்பாவி கால்லூரி மாணவிகளை தீவைத்து கொன்றாலும் கருனை மனுவை குடியரசு தலைவருக்கு அனுப்பிநிம்மதியாக ஜெயிலில் இருந்துவிட்டு ஒருநாள் திரும்பி விட்லாம்

    ஆனால் முஸ்லீம்கள் குற்றம்நிருபிக்கபடவில்லை (அப்சல் குரு) என்றாலும் தூக்கிடப்படுவர். அதுமட்டுமில்லை விசாரணை கைதியாக அடைபட்ட முஸ்லீம்கள் வாழ்நாள் முழுவதும் சிறையில் கழிக்க வேண்டும்

    • //மேலே பதியப்பட்ட இந்த்துவா கருத்துகளிருந்து தெரிய்வருவது//

      தமிழ்நாட்டுத் தலிபான்களுக்கு அவர்களின் கருத்துக்கு எதிர்க்கருத்துக்கள் எல்லாம் இந்துத்துவாகத் தான் தெரியும். இந்துத்துவா மட்டுமல்ல, இஸ்லாமியத்துவாவும் எதிர்க்கப்பட வேண்டியதே.

      //இல்ங்கைத் தமிழர்களை யாரும் (தமிழக முஸ்லீம்கள்) இந்துக்கள் என பார்ப்பதில்லை. ஆனால் காஸ்மீரிகளை மட்டும் மத ரீதியாக பிரித்து பார்ப்பது ஏன்?///

      தமிழ்நாட்டு முஸ்லீம்கள் இலங்கைத் தமிழர்களை இந்துக்களாகப் பார்க்காமல், தமிழர்களாகப் பார்த்தால், அவர்கள் ஏன் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவளிக்கவில்லை. இலங்கை முஸ்லீம்களைப் புலிகள் கொன்றதால் தான், தமிழ்நாட்டு முஸ்லீம்கள், ஈழத்தமிழர்களுக்கெதிராக பொய்ப்பிரச்சாரம் செய்தானர் என்றார் ஜவகர் பாய். அதனால் தமிழ்நாடு முஸ்லீம்கள் தமது முதன்மையான அடையாளமாக, மதத்தைத் தான் கருதுகிறார்களே தவிர இனத்தையோ அல்லது மொழியையோ அல்ல என்பது தெளிவாகிறதல்லவா? அதனால் இந்த காஷ்மீரி மாணவர்கள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு ஆதரவளித்தனர்.

      //பாக்கிஸ்தானில் சென்று ஒரு இந்தியன் குண்டு வைத்து பலரை கொன்றால் அவன் இங்கு தியாகி. ஆனால் ஒரு பாக்கிஸ்தானி செய்தால்…///

      ஒரு பாகிஸ்தானி இந்தியாவில் குண்டு வைத்தால் அவன் ஒரு ஜிகாதி, அவனுக்கு சொர்க்கத்தில் எழுபத்திரண்டு கன்னியர்கள் வழிமேல் விழிவைத்துக் காத்திருக்கிறார்கள் என்பார்கள் பாகிஸ்தானியர்கள். 🙂

      • //தமிழ்நாட்டு முஸ்லீம்கள் இலங்கைத் தமிழர்களை இந்துக்களாகப் பார்க்காமல், தமிழர்களாகப் பார்த்தால், அவர்கள் ஏன் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவளிக்கவில்லை. இலங்கை முஸ்லீம்களைப் புலிகள் கொன்றதால் தான், தமிழ்நாட்டு முஸ்லீம்கள், ஈழத்தமிழர்களுக்கெதிராக பொய்ப்பிரச்சாரம் செய்தானர் என்றார் ஜவகர் பாய். அதனால் தமிழ்நாடு முஸ்லீம்கள் தமது முதன்மையான அடையாளமாக, மதத்தைத் தான் கருதுகிறார்களே தவிர இனத்தையோ அல்லது மொழியையோ அல்ல என்பது தெளிவாகிறதல்லவா? அதனால் இந்த காஷ்மீரி மாணவர்கள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு ஆதரவளித்தனர்.//

        முஸ்லீம்கள், ஈழத்தமிழர்களுக்கெதிராக பொய்ப்பிரச்சாரம் செய்தார்கள் என்று ஜவகர் சொல்லவில்லை அரசுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார்கள் என்றுதான் சொல்லியுள்ளார்

        இந்தியாவிலுமே முஸ்லீம்கள், அரசுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தால் பொய்ப்பிரச்சாரம் செய்கிறர்கள் என்றுதான் சொல்வீர்கள் உங்களின் சிந்தனை அவ்வளவுதான்

        //ஒரு பாகிஸ்தானி இந்தியாவில் குண்டு வைத்தால் அவன் ஒரு ஜிகாதி, அவனுக்கு சொர்க்கத்தில் எழுபத்திரண்டு கன்னியர்கள் வழிமேல் விழிவைத்துக் காத்திருக்கிறார்கள் என்பார்கள் பாகிஸ்தானியர்கள்//
        இது உங்களின் கற்பனைக்குநீங்கள்தான் பொறுப்பு

        இலங்கையில் கொலையுண்ல்து சிங்கள் முஸ்லிம்கள் அல்ல என்பது நான் சொல்லி தெரியவேண்டியதில்லை

  25. காஸ்மீர் பிரச்சனை வரும்போது தேசியம் பேசுபவர்களே…

    முல்லைபெரியர் சம்பவத்தின் போது எங்கே சென்றது தேசியம்

    காவிரி பிரச்சனையில் எங்கே சென்றது தேசியம்

    மும்பையில் மகராஸ்ட்டிரன் தவிர மற்றவர்க்கு இடமில்லை என்று பால்தாகாரே கொக்கரித்த போது எங்கே சென்றது தேசியம்

    அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரின் மகனும், கல்லூரி மாணவருமான நிடோ டானியம் தலைநகர் டெல்லியில் இனவெறிபிடித்த பெட்டிக்கடைக்காரர்களால் கடந்த ஜனவரியில் அடித்தே கொல்லப்பட்ட் போது எங்கே சென்றது தேசியம்

    • கூட்டு குடும்பத்தில் பிரச்சினை இருக்கத்தான் செய்யும் . தனி குடித்தனம் போவேன் எனபது அதை விட பெரிய பிரச்சினை

  26. \\இறுதியில் பாக் அணியின் அப்ரிடி ஒரு சிங்கம் போல கடைசி ஓவரில் \\

    அட வினவு கூட திராவிட அரசியல் வாதிகளை போல் தனது எஜமானர்களை சிங்கம், புலி என்று
    வர்ணிக்கிறதே !!!

  27. உண்மையில், ஏன் இத்தனை மறுப்புகளும், வாதங்களும், விதண்டாவாதங்களும், பொருத்தமற்ற உதாரணங்களும் இந்த விடயத்தில் நடைபெறுகின்றன என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. இங்குள்ள முஸ்லீம்கள் சும்மா மழுப்பலும், மறுப்புகளும் எழுதித் தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்ளாமல், துணிச்சலுடன் தமது பக்க நியாயத்தைக் கூறலாம் தானே.

    தமது, மொழி, இனம் எல்லாவற்றையும் விட மதத்துக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டியது முஸ்லீம்களின் கடமை. உதாரணமாக தமிழ்நாட்டு முஸ்லீம்களுக்கு, இலங்கைத் தமிழர்களை விட, முஸ்லீமல்லாத இந்தியர்களை விட, அல்லது வேற்றினக் காபிர்களை விட, வேறோரு முஸ்லீம் – அவன் ஆபிரிக்கக் காப்பிரியாக இருந்தாலென்ன, ஆப்கானிஸ்தான் தலிபானாக இருந்தாலென்ன, பாகிஸ்தான் ஜிகாதியாக இருந்தாலென்ன, சோமாலிய கடல் கொள்ளைக்காரனாக இருந்தாலென்ன, , சீனாவின் உய்கர் தீவிரவாதியாக இருந்தாலென்ன, முஸ்லீம் என்ற அடிப்படையில், அவர்கள் தான் சகோதர்கள், நெருக்கமானவர்கள். “உம்மத்துக்கள்” என்ற அடிப்படையில், முஸ்லீம்களா, முஸ்லீம் அல்லாத காபிர்களா என்று வரும் போது, தமிழ்நாட்டு முஸ்லீம்கள் அவர்களைத் தான் ஆதரிக்க வேண்டும். அதனால் தான் தமிழன் என்ற வகையில் ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்படும் போது துடிக்காத, தமிழ்நாட்டு முஸ்லீம்களின் இதயம், அவர்கள் முன்பின் அறியாத, பலத்தீனர்களுக்காகவும், பாகிஸ்தானியர்களுக்காகவும், அரபுக்களுக்காகவும், ஆபிரிக்கர்களுக்காகவும் துடிக்கிறது. இந்த உண்மையை எதற்காக மழுப்ப வேண்டும், அதை துணிச்சலாகக் கூறுவதற்குப் பதிலாக ஏன் இத்தனை வாதங்களையும், மறுப்புகளையும் அவர்கள் முன்வைக்கிறார்கள்.

    உதாரணமாக, எங்களுக்கு, அதாவது ஈழத்தமிழர்களுக்கு தமிழ்நாட்டிலுள்ள கரிசனம் முழு இந்தியாவிலும் கிடையாது என்பது யாவரும் அறிந்ததே. அத்துடன் இந்தியாவின் சிங்கள அரசு சார்பு நடவடிக்கைகளில் எங்களுக்கு இந்தியாவின் மீது கசப்புணர்வுமுண்டு. ஆனால், இந்திய – பாகிஸ்தான் யுத்தம் என்று வரும் போது, நிச்சயமாக பெரும்பான்மை ஈழத்தமிழர்களின் உள்ளம் இந்தியாவுக்காத் தான் துடிக்கும், இந்தியா வெற்றி பெற வேண்டுமெனத் தான் விரும்புவோம். இந்தியாவின் மீது கசப்புணர்வுகள் இருந்தாலும் கூட, இந்தியா வெல்ல வேண்டுமென விரும்பும் காரணம், இந்தியா எங்களுக்குப் புனிதமான நாடு, இந்துக்களைக் கொண்ட நாடு, எங்களுக்கும் முக்கியமான, புனிதமான கோயில்களைக் கொண்ட நாடு, அவற்றின் மீது பாகிஸ்தானிகளின் எந்தக் குண்டும் விழுவதை நாங்கள் விரும்ப மாட்டோம். அதாவது எமது மதவுணர்வு எங்களையறியாமலே, நிச்சயமாக, இந்தியச் சார்பாக எம்மை நடந்து கொள்ளத் தூண்டும். அதனால், இந்த காஸ்மீரி மாணவர்களும், முஸ்லீம்கள் என்ற அடிப்படையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு ஆதரவளித்திருக்கலாம், என்ற உண்மையை முஸ்லீம்கள் துணிச்சலுடன் ஒப்புக் கொண்டிருந்தால், இந்தக் கட்டுரைக்கும், மறுப்புகளுக்கும், மழுப்பல்களுக்கும் தேவையே இருந்திருக்காது.

    • //இங்குள்ள முஸ்லீம்கள் சும்மா மழுப்பலும், மறுப்புகளும் எழுதித் தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்ளாமல், துணிச்சலுடன் தமது பக்க நியாயத்தைக் கூறலாம் தானே.//

      //உண்மையை முஸ்லீம்கள் துணிச்சலுடன் ஒப்புக் கொண்டிருந்தால், இந்தக் கட்டுரைக்கும், மறுப்புகளுக்கும், மழுப்பல்களுக்கும் தேவையே இருந்திருக்காது.//

      முஸ்லீம்கள் துணிச்சலைப் பற்றிநீங்கள் ச்ந்தேக்ப்பட வேண்டாம். முஸ்லீம்கள் துணிச்சலுடன் இருந்தால் தான் வெள்ளையனை எதிர்த்து வீரமுடன் போரிட்டு மாண்டர்கள்

      நீங்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுபர்களைப்போல் ஓடி ஒளியவும் இல்லை எழுதிக்கொடுதுவிட்டு ஒதுங்கவும் இல்லை.

      அதே வீர பரம்பரை வழியில் வந்தவர்கள்தான் இன்றைய முஸ்லீம்கள்…

      • //முஸ்லீம்கள் துணிச்சலைப் பற்றிநீங்கள் ச்ந்தேக்ப்பட வேண்டாம். முஸ்லீம்கள் துணிச்சலுடன் இருந்தால் தான் வெள்ளையனை எதிர்த்து வீரமுடன் போரிட்டு மாண்டர்கள்.///

        எங்கிருந்தோ வந்து தமது நாட்டைப் பிடித்து, அவர்களின் கலாச்சாரத்தை, மதத்தை அழித்து மக்களை வாள்முனையில் மதமாற்றம் செய்து, கோயில்களைக் கொள்ளையடித்த அதே முஸ்லீம்களை எதிர்த்து தமது நாட்டையும், மொழியையும், மதத்தையும் கலாச்சாரத்தையும் காக்க அவர்களுடன் போராடி தமதின்னுயிரை நீத்தவர்களின் பரம்பரையில் வந்தவர்கள் தான் முஸ்லீம் அல்லாத இந்தியர்கள் என்ற உண்மையை யாரும் மறக்கவோ மறைக்கவோ முடியாது.

        //அதே வீர பரம்பரை வழியில் வந்தவர்கள்தான் இன்றைய முஸ்லீம்கள்…///

        நீங்கள் திப்பு சுல்தானைக் குறிப்பிடுகிறீர்கள் என்று நம்புகிறேன். திப்பு சுல்தானின் தந்தை ஹைதர் அலி, அரேபியாவின் Qureshi tribe ஐச் சேர்ந்தவன் என்கிறார்கள். அப்படிப் பார்த்தால், திப்பு சுல்தான் ஒரு வந்தேறி அரேபியனே தவிர இந்தியனல்ல. ஒரு நாடு பிடிக்க வந்த வந்தேறி அரபுக்கள் எப்படி ஏதோ காரணங்களுக்காக மதம் மாறிய தமிழ் முஸ்லீம்களின் முன்னோராக இருக்க முடியும், தமிழ் முஸ்லீம்கள் எப்படி திப்பு சுலதானின் பரம்பரையில் வந்தவர்கள் என்று கூற முடியும் என்பதை தயவு செய்து விளக்கவும். 🙂

        • //எங்கிருந்தோ வந்து தமது நாட்டைப் பிடித்து, அவர்களின் கலாச்சாரத்தை, மதத்தை அழித்து மக்களை வாள்முனையில் மதமாற்றம் செய்து, கோயில்களைக் கொள்ளையடித்த அதே முஸ்லீம்களை எதிர்த்து தமது நாட்டையும், மொழியையும், மதத்தையும் கலாச்சாரத்தையும் காக்க அவர்களுடன் போராடி தமதின்னுயிரை நீத்தவர்களின் பரம்பரையில் வந்தவர்கள் தான் முஸ்லீம் அல்லாத இந்தியர்கள் என்ற உண்மையை யாரும் மறக்கவோ மறைக்கவோ முடியாது.//

          வந்தேறி ஆரியர் கூட்டம் எங்களை வந்தேறி என்கிறது…

          //நீங்கள் திப்பு சுல்தானைக் குறிப்பிடுகிறீர்கள் என்று நம்புகிறேன். திப்பு சுல்தானின் தந்தை ஹைதர் அலி, அரேபியாவின் Qஉரெச்கி ட்ரிபெ ஐச் சேர்ந்தவன் என்கிறார்கள். அப்படிப் பார்த்தால், திப்பு சுல்தான் ஒரு வந்தேறி அரேபியனே தவிர இந்தியனல்ல. ஒரு நாடு பிடிக்க வந்த வந்தேறி அரபுக்கள் எப்படி ஏதோ காரணங்களுக்காக மதம் மாறிய தமிழ் முஸ்லீம்களின் முன்னோராக இருக்க முடியும், தமிழ் முஸ்லீம்கள் எப்படி திப்பு சுலதானின் பரம்பரையில் வந்தவர்கள் என்று கூற முடியும் என்பதை தயவு செய்து விளக்கவும்.//

          உமக்கு வீரமரணம் அடைந்த முஸ்லீம்களில் திப்பு சுல்தானை மட்டுமே தெரியும் பரவாயில்லை ஆனாலும் அப்பேற்பட்ட மதிக்க தெரியாதது உம்முடைய சுய புத்தியைக் காட்டி விட்டது..

          வாள் முனையில் யாரும் இங்கு மதம் மாறவில்லை அப்படி ஒரு வால் சொல்வதை கனக்கில் கொள்ள வேண்டியதில்லை
          முகலாயர்களின் படையெடுப்புக்கு முன்னறே இந்தியாவில் இசுலாம் பரவியது என்ற உண்மையும் உ(மக்கு) தெரியவில்லை
          இங்குள்ள இந்துக்கள் அவாள்களின் தீண்டாமை மற்றும் சமூக கொடுமையிலிருந்து விடுபடவும் சத்திய மார்க்கத்தின் மேல் கொண்டநம்பிக்கையாலுமே …
          இந்த உண்மையை அவாள்களின் வால்கள் புரிந்தால்நல்லது

          • fake jahawairullah,

            stop feeding nonsense to innocent people.

            Tamizh Muslim DNA testing shows clear arabic markers,north indian and pakistani muslims belong to clear cut defined clans and dont show arabic blood.

            Tamizh/Kerala/Karnataka/Gujarat muslims show a lot of Arab DNA,they are children of Arab traders.

            Brahmins are mixed well with the rest of the population,muslims are not.

            you cannot disprove DNA testing,u ll always be people who ll do anything for money.

          • //வந்தேறி ஆரியர் கூட்டம் எங்களை வந்தேறி என்கிறது…//

            வியாசன் தன்னை ஆரியர் என்று எங்கும் கூறவில்லை. நீங்கள் உங்களை யாரென்று நிருபியுங்கள் . தெரியாவிட்டால் உங்கள் பள்ளிவாசல் இம்மமிடம் தெரிந்துகொண்டு பின் இங்கு வந்து பதில் பேசுங்கள்.

          • //வந்தேறி ஆரியர் கூட்டம் எங்களை வந்தேறி என்கிறது…///

            ஒரு சில அரபுக்கள் தமிழ்நாட்டரசர்களுக்கு குதிரை விற்க தமிழ்நாட்டுக்கு வந்ததால், தமிழ்நாட்டுக்கு இஸ்லாம் அறிமுகமானாலும் கூட, பெருமளவில் இஸ்லாம் பரவியது, முகலாயர் காலத்தின் பின்பு தான். இஸ்லாம் இந்தியாவில் உருவாகிய மதம் அல்ல, இஸ்லாத்தின் அடிப்படை இந்தியர்களின் நம்பிக்கை, பாரம்பரியம் என்பவற்றில் தங்கியிருக்கவில்லை. அது எங்கிருந்தோ வந்த ஆபிரகாமிய, மத்திய கிழக்கு மதம், அதனால் அதைக் கொண்டு வந்தவர்களும், அவர்களின் வாரிசுகளும் எந்த வழியில் பார்த்தாலும் வந்தேறிகள் தான். ஆரியர்கள் வந்த வழியால் தான் முகலாயர்களும் வந்தார்கள்.

            //உமக்கு வீரமரணம் அடைந்த முஸ்லீம்களில் திப்பு சுல்தானை மட்டுமே தெரியும் பரவாயில்லை ///

            திப்பு சுல்தானின் வீரத்தை மதிப்பதற்கும் அவன் அரபுக்களின் பரம்பரையில் வந்தவனே தவிர இந்தியனல்ல என்ற உண்மையைக் கூறுவதற்கும் என்ன சம்பந்தமையா.

            //வாள் முனையில் யாரும் இங்கு மதம் மாறவில்லை ///

            வாழ் முனையில் தான் இந்தியாவில் மட்டுமல்ல, பல நாடுகளில் இஸ்லாம் பரவியது. மதம் மாற மறுத்த இந்துக்கள் எவ்வளவு கொடுமைகளை அனுபவித்தனர், அவர்களுக்கு அதிகளவு வரி விதிக்கப்பட்டன, முகலாயர்கள் எவ்வாறு இந்தியாவில் மட்டுமல்ல, தமிழ்நாட்டில் எத்தனை கோயில்களைக் கொள்ளையடித்தார்கள் என்பதை நடுநிலையான வரலாற்றாசிரியர்கள் பலர் விவரமாக எழுதியுள்ளனர் என்பது கூடத் தெரியாதா?

            //முகலாயர்களின் படையெடுப்புக்கு முன்னறே இந்தியாவில் இசுலாம் பரவியது என்ற உண்மையும் உ(மக்கு) தெரியவில்லை///

            குதிரை விற்க வந்த அரபுக்கள் இஸ்லாமை தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தினார்கள், ஆனால் வேகமாகப் பரவியது முகலாயர்களால் தான்.

            //இங்குள்ள இந்துக்கள் அவாள்களின் தீண்டாமை மற்றும் சமூக கொடுமையிலிருந்து விடுபடவும் சத்திய மார்க்கத்தின் மேல் கொண்டநம்பிக்கையாலுமே …இந்த உண்மையை அவாள்களின் வால்கள் புரிந்தால்நல்லது//

            அதெல்லாம் நடைபெற்றது, வந்தேறி முகலாய முஸ்லீம்கள் தமது இஸ்லாமிய ஆட்சியை இந்தியாவில் நிறுவிய பின்னர் தான். அதாவது ஆட்சியாளர்களின் ஆதரவு இருக்கும் போது மதம் மாறுவது இலாபகரமான செயல், அது வாழ்க்கையில் முன்னுக்குப் போகும் வழி, அதற்கு பல சாக்குப் போக்குகள் சொல்லி மழுப்புவது மனித இயல்பு. தமிழ்நாட்டில் ஆற்காடு நவாப் போன்ற, பிரிட்டிஸ் காரர்களுக்கு வால் பிடித்த முஸ்லீம்(முகலாய எச்சங்கள்) ஆட்சியாளர்களின் காலத்தில் தான் பல தமிழர்கள் இஸ்லாத்துக்கு மாறினார்கள் ஏனென்றால் அது பொருளாதார அடிப்படையில் அவர்களின் நிலையை உயர்த்த உதவியிருக்கும். அதே போல் போத்துக்கேய, ஆங்கிலேய ஆட்சியின் கீழ் கிறித்தவத்துக்கு மதம் மாறியது போல், இப்பொழுது யாரும் மதம் மாறுவதில்லை.

            உண்மையில் இந்துக்கள் தீண்டாமை மற்றும் கொடுமையிலிருந்து விடுபடத்தான் முஸ்லீமாக மதம் மாறினார்கள் என்றால் ஏன் இன்னும் பெரும்பான்மையான தாழ்த்தப்பட்ட மக்கள் இந்துக்களாக உள்ளனர். அவர்கள் அப்படி கூட்டம், கூட்டமாக இஸ்லாத்துக்கு மதம் மாறுவதை நாம் காணவில்லை, அப்படியானால் அவர்களுக்கு தீண்டாமைக் கொள்கைகளிலும் அவாள்களிலும் பற்றும் பாசமும் உண்டு என்று கருத்தாகுமா?

        • யோவ் …அவங்கதான் பீ.ஜெ பேச்சை கேட்டுகிட்டு தாலிபானிசம் பேசுறானுங்கனா , நீங்க திப்பு சுல்தான கேவல படுத்தறீங்க. எல்லாம் சரி எதுக்கு திப்புவை பத்தி பேசுற …நாங்க பேசிக்கிறோம் நீங்க கெளம்பு இலைங்கைக்கு.

          • @Ashvin: உங்களுடைய பல கருத்துக்களுக்கு நான் உடன்படுகிறேன். அதே சமயம் நண்பர் வியாசரை இலங்கைக்கு கிளம்பச்சொல்வது எனக்கு சரியாக படவில்லை. நான் மதங்களை நம்பாதவன் தான். நான் பிறந்த இந்து மதத்தில் சாதி வேறுபாடு, தீண்டாமை போன்ற சில குறைகள் உண்டென்று ஆணித்தரமாக பல முறை கூறியுள்ளேன். அதே சமயம் மற்ற மதத்தவர் தங்களது மதம் மட்டுமே உயர்ந்த மதம் என்று கூறி இந்து மதத்தை இழிவாக பேசுவதை என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது. எல்லா மதங்களிலும் நன்னெறியும் ஒழுக்கமும் முக்கிய பங்கு வகிக்கிறது. அதே சமயம் எல்லா மதங்களிலும் சில குறைகளும் உள்ளது. அவரவர் மதங்கள் அவரவருக்கு உசத்தி. என்னை பொறுத்தவரை நான் மதங்களை நம்புவதில்லை, கடவுள் என்ற கருத்துருவில் எனக்கு நம்பிக்கையில்லை. அதே சமயம் உயிர் எங்கிருந்து வந்தது,ஆதிப்பெருவெடிக்கு முன் என்ன நடந்தது, எப்படி இருந்தது, நாம் காணும் விண்வெளியை தாண்டி எல்லைகளுக்கு அப்பால் என்ன உள்ளது, இத்தனை பெரிய அண்டசராசரத்தில் நமது பூமியில் மட்டும் தான் உயிரினம் உள்ளதா, இந்த கேள்விகளுக்கு விடை கிடைக்க ஆர்வமாக உள்ளேன். அணுவை துளைத்து, புரோட்டானை துளைத்து தற்போது குவார்க் என்ற புள்ளி தான் மிகச்சிறிய பொருளாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இத்தனை சிறிய ஒரு பொருளில் உயிர் என்ற அமைப்பு எப்படி உண்டானது, ஓர் சிறிய உயிர் அணு எப்படி ஒரே அமைப்பில் ஒரே வகையில் வெவ்வேறு உயிரினமாக ஆகிறது, மிக மிக சிறிய ஒரு மரபணுவில் எப்படி ஒரு பரம்பரைக்குண்டான குணாதிசயங்கள் அடங்கியது, இது போன்ற பல கேள்விகளுக்கு இன்னும் விடை தேடிக்கொண்டிருக்கிறோம். ரொம்பவும் யோசித்தால் ஒன்றே ஒன்று மட்டும் விளங்குகிறது. நாம் கற்றது கையளவு, கல்லாதது உலகளவு. அதனால் சின்ன சின்ன விடயங்களுக்காக நாம் ஒருவோருக்கொருவர் சண்டை போட்டுகொள்வது சிறுபிள்ளைத்தனமாக உள்ளது. கடவுளை நம்புபவர்களின் நம்பிக்கையை நாம் கிண்டல் செய்யத்தேவையில்லை. கடவுளை நம்பாதிருப்பதும் (என்னை போல) அவரவர் விருப்பம், அதிலும் தவறில்லை. If you say there is no God, thats fine, No Problem. If you say there is One God, I wont argue with you, If you say ONLY GOD, then I cannot accept that notion.

            • @கற்றது கையளவு //தே சமயம் மற்ற மதத்தவர் தங்களது மதம் மட்டுமே உயர்ந்த மதம் என்று கூறி இந்து மதத்தை இழிவாக பேசுவதை என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது// அது சரி, ஆனால் நமது நாட்டு விடுதலை வீரரை பற்றி கேவலமாக பேசும்போது உங்களுக்கு இனிக்குதா?

              • // நமது நாட்டு விடுதலை வீரரை பற்றி கேவலமாக பேசும்போது உங்களுக்கு இனிக்குதா?//
                திப்பு சுல்தானின் பரம்பரையினர் யார் என்பதைத் தான் நான் குறிப்பிட்டேன். அவரது தந்தை ஹைதர் அலியே தான் ஒரு அரபு என வாதாடியதாக கூறப்படும் வரலாற்றுக் குறிப்பை நான் எங்கே வாசித்தேன் என்பதை அந்த இணையத்தளத்தின் இணைப்பையும் தந்து, ஆதாரத்துடன் குறிப்பிட்டேன். உண்மையைக் கூறினால் அது இழிவாகப் பேசுவதென்று கருத்தா?

          • நான் இந்தியனாகவோ அல்லது இலங்கையனாகவோ பேசவில்லை, ஒரு இந்துவாகப் பேசுகிறேன். இந்தியா உலகம் முழுவதுமுள்ள இந்துக்களுக்கும் பொதுவான, புனிதமான நாடு, அது இலங்கை இந்துவாக இருந்தாலும் பாலித்தீவின் இந்துவாக இருந்தாலும் சரி. அதனால் எனக்கும் இந்தியாவையும், காஸ்மீரின் இந்துக்களையும் பற்றிப் பேச உரிமையுண்டு. என்னை “கெழம்ப” சொல்ல உமக்கு அருகதை இல்லை. சும்மா தேவையில்லாமல் மூக்கை நுழைக்க வேண்டாம், உம்மைப் போல் இந்தியர்கள் இலங்கையைப் பற்றியும், இலங்கைத் தமிழர்கள் பற்றியும் பேசும் யார் ‘கெழம்ப’ வேண்டுமென்பதை நினைவில் வைத்துக் கொள்ளுமையா. 🙂

            • அப்போ னி நேபாலுக்கு தான் போகனும். இந்தியா இந்து நாடு கிடையாது ராசா…எங்க நாட்டு பிரச்சனையில உனக்கு என்ன வேல ..எங்க பிரச்சனைய நாங்க பாத்துக்குறோம் … ..கெளம்பு…. …

              • அமெரிக்கா கனடா, மேலும் ஐரோப்பிய நாடுகளின் அரசியலமைப்பும் அவை கிறித்தவ நாடென்று கூறவில்லை, ஆனால் அவை கிறித்தவ நாடுகள் அல்ல என்று எந்த முட்டாளும் வாதாட மாட்டான். அத்துடன் இந்தியா எங்களின் நாட்டில் எங்களின் பிரச்சனையில் மூக்கை நுழைத்தது தான் இலங்கையில் இவ்வளவு பிரச்சனைக்கும் காரணம். அதனால் தான் நாங்களும் இந்தியப் பிரச்சனையில் மூக்கை நுழைக்கிறோம். 🙂

                • //இந்தியா எங்களின் நாட்டில் எங்களின் பிரச்சனையில் மூக்கை நுழைத்தது தான் இலங்கையில் இவ்வளவு பிரச்சனைக்கும் காரணம்.// இது உண்மைன்னா நீ காஷ்மீர் இந்தியாவில் இருந்து பிரிவதை ஆதரிக்கவல்ல வேண்டும்…ஏன் எடுக்கற ? எதுக்கு இன்னும் இந்தியாவுக்கு வால் பிடிக்க ஆசப்படுற…

            • திப்பு சுல்தான் ,மற்ற இந்து ராஜாக்களை போல் வெள்ளையனுக்கு காட்டி கூட்டி கொடுக்காமல் ,எங்கள் நாட்டிர்க்காக வெள்ளையனை சமரசமின்றி எதிர்த்து போரிட்டவர். உனக்கு என்ன அருகதை இருக்கிறது எங்கள் விடுதலை போராட்ட வீரர்களை பற்றி பேச.

              • அப்படியானால் ஈழத்து விடுதலைப் போராட்ட வீரர்களாகிய விடுதலைப் புலிகளைப் பற்றி இந்தியர்கள் பேசுவதை உன்னால் நிறுத்த முடிந்தால், நாங்களும் உங்களின் விடுதலைப் போராட்ட வீரர்களைப் பற்றிப் பேசுவதை நிறுத்துகிறோம். சரியா? 🙂

                • அட…நான் என்ன எல்லா இந்தியர்களின் பிரதிநிதியா ….நான் பேசி இருந்தால் நீ கேட்பதில் நியாயம் இருக்கு…ஏன் உளறுற..

                  • அஸ்வின், வியாசன்

                    விவாதங்களில் மற்றவர்களை ஒருமையாக விளிப்பதை தவிர்க்கவும். கருத்து ரீதியான வேறுபாட்டை கண்ணியமான வார்த்தைகளில் விவாதிப்பது சரியாக இருக்கும். நன்றி

                  • அவ்வளவு மறதியா அல்லது Senile ஆ? “எங்க நாட்டு பிரச்சனையில உனக்கு என்ன வேல ..எங்க பிரச்சனைய நாங்க பாத்துக்குறோம் … ..கெளம்பு….” என்று நீங்கள் கூறிய போது எல்லா இந்தியர்களும் உங்களை அவர்களுக்குப் பிரதிநிதியாகத் தெரிவு செய்து இங்கு எனக்குப் பதிலளிக்குமாறு அனுப்பினார்களா. உங்கள் பதில்கள் எல்லாமே முட்டாள்தனம் கலந்த அதிகப்பிரசங்கித்தனம், இந்த உளறல்களுக்கெல்லாம் பதிலளித்து எனது நேரத்தை இனிமேலும் வீணாக்க நான் விரும்பவில்லை. 🙂

                • அஸ்வின், வியாசன்

                  விவாதங்களில் மற்றவர்களை ஒருமையாக விளிப்பதை தவிர்க்கவும். கருத்து ரீதியான வேறுபாட்டை கண்ணியமான வார்த்தைகளில் விவாதிப்பது சரியாக இருக்கும். நன்றி

                  • மன்னிக்கவும். நான் எப்பொழுதுமே யாரையும் ஒருமையில் விளித்ததில்லை. அது ஈழத்தமிழர்களின் பேச்சு வழக்குமல்ல. ஆனால் அஸ்வின் தான் முதலில் தனது கேள்வியில் “அத சொல்லு மொதல்ல ..” என்று கூறியதால், அவரது பாணியில் நானும் பதிலளித்தேன். அப்படி எழுதுவது எனக்கு எவ்வளவு uneasy ஆக இருந்தது என்பது கடவுளுக்குத் தான் தெரியும். அப்படி ஒருமையில் பதில் எழுதியமைக்கு வருந்துகிறேன். நன்றி.

    • \\துணிச்சலுடன் தமது பக்க நியாயத்தைக் கூறலாம் தானே//

      முசுலிம்கள் தாங்கள் வாழும் நாட்டை நேசிக்க வேண்டும் என்றுதான் இசுலாம் கட்டளையிடுகிறது.தாய்நாட்டை நேசிப்பது இறைநம்பிக்கையில் ஒரு பகுதி என்றே இசுலாம் வலியுறுத்துகிறது.ஆதாரம்.சில்சிலா எண்.36.

      உதடுகள் பருத்த ஒரு கறுப்பினத்தவர் உங்களுக்கு தலைவராக இருந்தாலும் அவருக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்பது நபிகள் நாயகத்தின் பொன்மொழி.அதே சமயம் அந்த ஆட்சியாளர்கள் அநீதியாளர்களாக இருந்தால் அவர்களை எதிர்த்து புனித போர் நடத்த சொல்கிறது இசுலாம்.

      ‘அதனால்தான் தாய் நாட்டை நேசிக்கும் இந்திய முசுலிம்கள் ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றுகிறார்கள்.பாகிசுதானுடன் சண்டை வந்தால் அவன் முசுலிமாயிற்றே என்று பார்க்காமல் அவனை எதிர்த்து போரிடுகிறார்கள்.தேவைப்பட்டால் அந்த போரில் தங்கள் இன்னுயிரையும் தாய்நாட்டுக்காக தியாகம் செய்கிறார்கள்.

      \\\\காஸ்மீரி மாணவர்களும், முஸ்லீம்கள் என்ற அடிப்படையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு ஆதரவளித்திருக்கலாம்//

      காசுமீரி மாணவர்கள் முசுலிம்கள் என்ற அடிப்படையில் பாகிசுதான வெற்றியை கொண்டாடவில்லை.தங்கள் தாய்நாட்டை ஆக்கிரமித்திருக்கும் இந்தியாவின் தோல்வியை கொண்டாடி இருக்கிறார்கள்.பத்ரிபால் கொலையாளிகளை பாதுகாக்கும் இந்த நாட்டை அவர்கள் எப்படி ஆதரிக்க முடியும் .I.O.K. யில் இருப்பவன் இந்தியாவை ஆதரிக்க வேண்டும் என்றால் P.O.K. யில் இருப்பவன் பாகிசுதானை ஆதரிக்க வேண்டும் என்றாகிறது.ஒரே இனத்தவனை இரண்டு நாடுகள் அநியாயமாக ஆக்கிரமித்துக் கொண்டு என்னை நீ ஆதரித்துத்தான் ஆக வேண்டும் என்று கட்டயப்படுத்துகிறார்கள்.இது என்ன நியாயம்.இதற்கு அந்த மாணவர்களை பொறுப்பாக்கி தண்டிக்க முடியாது.காசுமீர் மக்கள் இந்தியாவை தங்கள் தாய்நாடு என்று ஏற்கவே இல்லை.ஆனாலும் என்னை நீ ஆதரிக்க வேண்டும் என்று சொல்வதற்கும் பாலியல் வன்முறைக்கும் வேறுபாடு இல்லை.

      \\\\இந்திய – பாகிஸ்தான் யுத்தம் என்று வரும் போது, நிச்சயமாக பெரும்பான்மை ஈழத்தமிழர்களின் உள்ளம் இந்தியாவுக்காத் தான் துடிக்கும், இந்தியா வெற்றி பெற வேண்டுமெனத் தான் விரும்புவோம். //

      போர் என்று வந்தால் நியாயம் யார் பக்கம் இருக்கிறது என்பதை வைத்துத்தான் ஆதரிக்க வேண்டும்.எனக்கு அந்த நாடுதான் புடுச்சிருக்கு,நா கும்புடுற கோயில் இருக்குற நாட்டை ஆதரிப்பேன் என்பதெல்லாம் முட்டாள்தனமான பிதற்றல்.

      ”உங்கள் சமூகத்தவர் என்பதற்காக அவர்கள் மற்ற சமூகத்தினர் மீது நடத்தும் அநியாயங்களுக்கு துணை போகாதீர்கள்’.அதுதான் வகுப்புவாதம்” என்பது நபிகள் நாயகத்தின் பொன்மொழி.முசுலிம்கள் மட்டுமல்ல உலக மக்கள் அனைவருமே ஏற்று பின்பற்ற தக்கதொரு பொன்மொழி.

      • //உதடுகள் பருத்த ஒரு கறுப்பினத்தவர் உங்களுக்கு தலைவராக இருந்தாலும் அவருக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும்//

        இந்த புன்மொழியின் மற்றொரு வடிவம் கீழே.

        “Listen and obey (your chief) even if an Ethiopian whose head is like a raisin were made your chief.” (Sahih Bukhari 1:11:662)

        கருப்பரே என்றாலும் கட்டுப்பட்டு நடக்க வேண்டுமாம். (உதடுகளைப் பற்றியும் தலைமுடியைப் பற்றியும் கேவலப்படுத்தும் பேச்சு வேறு) இவற்றைத்தான் பொன்மொழி என்று ஊளையிடுகிறார்கள். நான் இதைப் புன்மொழி என்றுதான் கூறமுடியும்.

        தமிழகத்தின் கருப்பாயிக்களின் (நூர்ஜஹான்களின்) பெற்றோர்கள் இப்படிப்பட்ட புன்மொழி மனிதனை வழிகாட்டியாக தேர்ந்தெடுத்தது எவ்வளவு பெரிய கொடுமை?

        • Note:

          கறுப்பினத்தவர் என்ற வார்த்தையோ
          Ethiopian என்ற வார்த்தையோ

          மூல அரபி நூல்களில் இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது.

      • //முசுலிம்கள் தாங்கள் வாழும் நாட்டை நேசிக்க வேண்டும் என்றுதான் இசுலாம் கட்டளையிடுகிறது//

        இதற்கு இந்த முகமதியர் ஆதாரமாகக் கொடுக்க முடிந்த்தெல்லாம், தலைவர் கருப்பரே ஆனாலும் கட்டுப்பட்டு நட என்று கூறம் புன்மொழிதான்.

        இப்படிப்பட்ட கேவலமான ஆதாரங்களையும் பெருமையுடன் கொடுப்பதற்கு ஒரு கொடிய நெஞ்சழுத்தம் வேண்டும்.

        Or, you need to be a Muhamadan.

      • //முசுலிம்கள் தாங்கள் வாழும் நாட்டை நேசிக்க வேண்டும் என்றுதான் இசுலாம் கட்டளையிடுகிறது//

        உன்மையில் முகமதியர்கள் காபிர்களை தங்களின் தலைவர்களாக ஏற்றுக்கொள்ளக்கூடாது. அப்படிப்பட்ட நிலை oppression என்றும் corruption என்றும் கூறப்படுகிறது. இந்நிலையை எதிர்த்து ஜிஹாத் தொடுக்கவேண்டியது முகமதியர்களின் கடமை.

        And those who disbelieve are allies to one another, (and) if you (Muslims of the whole world collectively) do not do so (i.e. become allies, as one united block with one Khalifah – chief Muslim ruler for the whole Muslim world to make victorious Allâh’s Religion of Islâmic Monotheism), there will be Fitnah (wars, battles, polytheism, etc.) and oppression on earth, and a great mischief and corruption (appearance of polytheism). Q 8:73

        This is repeated in so many verses in many varieties. Some are given below.
        Q 9:23, 42:9, 9:71, 4:144, 4:139, 4:88-89

      • kashmiris are such sell outs,they murder their own hindu brothers over religion.

        They are the biggest religious bigots who use indian money/colleges/facilities etc etc but act like they are some big stars who deserve this treatment.

        They extract rent from the Indian government,but after paying so much rent tenants get the property.

        Kashmir is Indian property as the maharaja willed.

        Tippu never had shame,he lies constantly twisting and turning the statements,he cant handle common sense as it ll make him question his religion.

        so,it is no surprise he gets exposed for teh clown that he is,

  28. சோவியத் யூனியன் ஆட்சியில் அமெரிக்க அணியை ஆதரித்தும் சோவியத் அணியை எதிர்த்தும் மக்கள் கோஷம் போட அனுமதி இருந்ததா?மட்டறுக்காமல் உண்மையை சொல்லுங்க

  29. கிரிக்கெட் என்ற சூதாட்டத்தின் பிடியில் உழன்று கொண்டு இருப்பவர்களுக்கு ஒன்றை சொல்லி கொள்ள ஆசைபடுகிறேன். பசியும் பட்டினியுடன் இன்னும் நமது தேச மக்கள் இன்னும் மிகவும் சிரமத்துடன் வாழ்வை கழித்துக்கொண்டு இருக்கின்றனர்.இவர்களை மேம்படுத்துவதற்கு உழைப்பதே நமது இன்றியமையாத கடமை இந்த சூதாட்டத்தின் பிடியிலிருந்து வெளிவந்து கோடிக்கணக்கில் புரளும் இந்த பணத்தை ஏழை மக்களின் வாழு மேம்படுவதில் செலவளிக்கலாம்

  30. //உதடுகள் பருத்த ஒரு கறுப்பினத்தவர் உங்களுக்கு தலைவராக இருந்தாலும் அவருக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்பது நபிகள் நாயகத்தின் பொன்மொழி///

    அப்படியானால், “உதடுகள் பருத்த ஒரு கறுப்பினத்தவர் உங்களுக்கு தலைவராக இருந்தாலும்” என்று அந்தக் கருப்பினத்தவர்கள் அரபுக்களை விட தாழ்ந்தவர்கள் என்ற கருத்தில், அவர்கள் ‘தலைவராக இருந்தாலும்’ கட்டுப்பட வேண்டும் என்கிறாரா நபிகள் நாயகம். அதனால் தான் போலும் இன்றும், 21ம் நூற்றாண்டில் பல இஸ்லாமிய நாடுகளில் கருப்பின மக்களை அடிமைகளாக வைத்திருக்கும் பழக்கம் வழக்கத்திலுண்டு, அது மட்டுமன்றி, அரபுக்கள் தான், ஆப்பிரிக்க கறுப்பின மக்களை அடிமைகளாக்கி விற்பதில் முன்னணியில் இருந்தவர்கள், அமெரிக்காவில் அடிமை வியாபாரம் தடைசெய்யப்படும் வரை அடிமை வியாபாரத்தில் திழைத்தவர்கள் அரபு முஸ்லீம்கள் . இப்படியான கருத்துக்களால் தான், இன்றும் மனிதரை, மனிதர் அடிமைகளாக வைத்திருக்கும் வழக்கம் இஸ்லாமிய ஆபிரிக்க நாடுகளில் உண்டு. இதனால் தான் மத்திய கிழக்குக்கு வேலை தேடிப் போகும் கறுப்பின, ஆசிய மக்களை (இந்திய முஸ்லீம்கள் உட்பட) அரபுக்கள், அதாவது இஸ்லாத்தின் காவலர்கள், அடிமைகளை விடக் கேவலமாக நடத்துகிறார்கள் போல் தெரிகிறது.

    //காசுமீரி மாணவர்கள் முசுலிம்கள் என்ற அடிப்படையில் பாகிசுதான வெற்றியை கொண்டாடவில்லை.தங்கள் தாய்நாட்டை ஆக்கிரமித்திருக்கும் இந்தியாவின் தோல்வியை கொண்டாடி இருக்கிறார்கள்///

    காஸ்மீர் பிரச்சனை நீங்கள் சொல்வது போல் இலகுவானதல்ல, குழப்பம் நிறைந்தது. காஸ்மீர் இந்தியாவின் பிரிக்க முடியாத அங்கமாகத் தான் வரலாறு தொட்டு இருந்து வருகிறது. ஹைதராபாத்தும், திருவனந்தபுரமும், ஏன் இரமானதபுரம் கூடத் தான் தனிப்பட்ட அரசர்களைக் கொண்டிருந்தது, அவையெல்லாம் தனிநாடாகவா இருக்கின்றன. உதாரணாமாக, திருவரங்கத்திலும் கூடத் தான் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள், இன்னும் 50 வருடங்களில், இஸ்லாத்தில் குடும்பக் கட்டுப்பாடு தடை செய்யப்பட்டிருப்பதால், அவர்கள் பல்கிப் பெருகி, அது முஸ்லீம்களின் நகரமானால், அந்த அடிப்படையில் ஸ்ரீரங்கத்தை முஸ்லீம்களின் தனிநாடாக்க முடியுமா? ஸ்ரீரங்கம் எப்படி தமிழர்களுக்கு முக்கியமானதோ அது போன்றே காஸ்மீரும், வரலாற்றுப் புகழ் பெற்ற ஸ்ரீநகரும் இந்தியர்களுக்கு முக்கியமானது. முஸ்லீம்கள் அங்கு பெரும்பான்மையினராகி விட்டனர் என்ற காரணத்துக்காக, காஷ்மீரை அப்படியே தூக்கி முஸ்லீம்களிடம் கொடுத்து விட வேண்டியதில்லை.

    //போர் என்று வந்தால் நியாயம் யார் பக்கம் இருக்கிறது என்பதை வைத்துத்தான் ஆதரிக்க வேண்டும்.///

    அப்படியானால், ஆப்கானிஸ்தான் யுத்தத்தில் முஸ்லீம்கள் அமெரிக்காவை ஆதரித்திருக்க வேண்டும். தலிபான்கள் தமது நாட்டு மக்களுக்கும், பெண்களுக்கும், இளம் சிறுவர்களுக்கும் இழைத்த கொடுமைகள் ஒருபுறமிருக்க, அமெரிக்காவில் நாலாயிரத்துக்கும் மேலான ஆமேரிகக்ர்களை ஒரே நாளில் கொன்றதற்கு தலிபான்களைத் தண்டிக்க வேண்டிய நியாயம் அமெரிக்காவின் பக்கம் இருந்தது.

    //எனக்கு அந்த நாடுதான் புடுச்சிருக்கு,நா கும்புடுற கோயில் இருக்குற நாட்டை ஆதரிப்பேன் என்பதெல்லாம் முட்டாள்தனமான பிதற்றல்.///

    இந்த அறிவுரை ஒரு முஸ்லீமிடமிருந்து வருவதைப் போன்ற வேடிக்கை எதுவும் கிடையாது. தமது முக்கிய பள்ளிவாசல் இருக்கிற காரணத்துக்காக சவுதி அரேபியாவை புனித நாடாகக் கருதுவது மட்டுமன்றி, ஒரு நாளைக்கு ஐந்து முறை அதை நினைவு கூரும் முஸ்லீம்கள், “கும்பிடுற கோயில் இருக்கிற நாட்டை ஆதரப்பது முட்டாள் தனம் என்பதைப் பார்க்கச் சிரிப்பு வருகிறது.. அப்படியானால், தமிழ் முஸ்லீம்கள் ஏன் இஸ்ரேலை எதிர்க்கிறார்கள். இஸ்ரேல் தமிழர்களுக்கு ஒன்றும் செய்யவில்லையே. இஸ்ரேல் அல்-அக்சா பள்ளிவாசலை ஆக்கிரமித்தால், தமிழ் முஸ்லீம்கள் எதற்காக பொங்கி எழுகிறார்கள்.

    //”உங்கள் சமூகத்தவர் என்பதற்காக அவர்கள் மற்ற சமூகத்தினர் மீது நடத்தும் அநியாயங்களுக்கு துணை போகாதீர்கள்’.அதுதான் வகுப்புவாதம்” என்பது நபிகள் நாயகத்தின் பொன்மொழி.முசுலிம்கள் மட்டுமல்ல உலக மக்கள் அனைவருமே ஏற்று பின்பற்ற தக்கதொரு பொன்மொழி.///

    இங்கு சமூகத்தவர் என்று குறிப்பிடப்படுவது முஸ்லீம்களுக்கிடையிலுள்ள வெவ்வேறு Clan, Tribe, சாதி வேறுபாடுகளைத் தான் போலிருக்கிறது, ஏனென்றால் காபிர்களை (முஸ்லீம் அல்லாதவர்களை) நண்பர்களாகக் கூட ஏற்றுக் கொள்ள வேண்டாமென குரான் கூறுகிறது.

    3:28
    Let not believers take disbelievers as allies rather than believers. And whoever [of you] does that has nothing with Allah , except when taking precaution against them in prudence. And Allah warns you of Himself and to Allah is the [final] destination.

    அதிலும் குறிப்பாக யூதர்களையும், கிறித்தவர்களையும் கூட்டாளிகாளாக ஏற்றுக் கொள்ளவே கூடாதாம்.. 🙂

    5:51

    O you who have believed, do not take the Jews and the Christians as allies. They are [in fact] allies of one another. And whoever is an ally to them among you – then indeed, he is [one] of them. Indeed, Allah guides not the wrongdoing people.

    • இவ்வளவு பெரிய அறிவாளியா என வியப்பூட்டுகிறீர்கள் வியாசன்.அழகின்மை என கருத கூடிய அம்சம் உள்ளவரே ஆனாலும் அவருக்கு கட்டுப்படுங்கள் என சொல்வதால் அவர் தாழ்ந்தவர் என்ற பொருள் எங்கிருந்து வருகிறது.

      நபிகள் நாயகம் அவர்கள்
      “எல்லா மனிதர்களும் ஒரே தாய் தந்தையிலிருந்தே வந்தனர். ஒரு அரபி, அரபி அல்லாதவரை காட்டிலும் உயர்ந்தவரல்ல. அதுபோலவே ஒரு அரபி அல்லாதவர், அரபியரை விட உயர்ந்தவரல்ல. மேலும், வெள்ளையர் கருப்பரை விடவோ அல்லது கறுப்பர் வெள்ளையரை விடவோ உயர்ந்தவரல்ல”
      என்று சொல்லியிருப்பதை வைத்து பார்க்கும்போது மனிதர்கள் அனைவரும் சமம் என்றே பொருள் தருகிறது.

      நான் முன் நோக்கி தொழும் மசூதி இருக்கும் நாட்டை என்ன அக்கிரமம் செய்தாலும் ஆதரிப்பது என சொல்லவில்லையே.நான் மட்டுமல்ல.உலக முசுலிம்கள் அனைவருமே அப்படித்தான்.வளைகுடா போரில் அமெரிக்க வெறி நாய்களுக்கு தளம் அமைக்க இடம் கொடுத்ததற்காக சவூதி அரேபியா உலகளாவிய அளவில் கண்டனத்துக்கு உள்ளானது.முசுலிம்கள் அனைவருமே கண்டித்தனர்.

      அதே போரில் இராக் மக்களை குண்டு வீசி கொல்ல போகும் போர் வானூர்திகளுக்கு எரிபொருள் நிரப்பி கொடுத்து அடிமை சேவகம் செய்தது இந்தியா.ஆனால் இராக் மக்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட துணை போன இந்தியாவை நீங்கள் கண்டிக்க மாட்டீர்கள்.ஏன்னா நீங்க கும்புடுற கோவில் அங்கே இருக்குல்ல.

      \\காஸ்மீர் இந்தியாவின் பிரிக்க முடியாத அங்கமாகத் தான் வரலாறு தொட்டு இருந்து வருகிறது//

      உங்கள் வரலாற்று அறிவை எண்ணும்போது ரெம்ப பெருமையா இருக்கு.1947 க்கு முன் இந்தியா என்ற ஒரு நாடே இருக்கவில்லை.இல்லாத ஒரு நாட்டுக்கு பிரிக்க முடியாத உறுப்பாக இருந்ததா காசுமீர்.வேடிக்கைதான்.வெள்ளைக்காரன் வருமுன் இப்போது இந்தியா என்று அழைக்கப்படும் பகுதிகள் ஒரே குடை ஆட்சியின் கீழ் இருந்ததே இல்லை.துண்டு துண்டாக ஆயிரம் நாடுகளாக இருந்த பகுதியைத்தான் வெள்ளைக்காரன் ஆக்கிரமித்து ஒரே நாடாக்கினான்.வெள்ளைக்காரன் இடத்தில் இன்றய பார்ப்பன-பனியா ஆளும் கும்பல் உட்கார்ந்து கொண்டு இது ஒரே நாடு என்கிறது.அதையே நீங்களும் இங்கு வாந்தி எடுத்து நாறடிக்கிறீர்கள்.காசுமீர் பிரச்னை பற்றிய உங்கள் அறியாமையை மேலும் வெளிப்படுத்தாமல்
      காசுமீர் பற்றி முன்னர் எழுதிய ஒரு பதிவுக்கான சுட்டி இது. .படித்து விட்டு மறுப்பை எழுதலாம்.விவாதிக்க அணியமாக இருக்கிறேன்.

      http://thippuindia.blogspot.in/2010/11/blog-post.html

      \\இங்கு சமூகத்தவர் என்று குறிப்பிடப்படுவது முஸ்லீம்களுக்கிடையிலுள்ள வெவ்வேறு Clan, Tribe, சாதி வேறுபாடுகளைத் தான் போலிருக்கிறது//

      போலிருக்கிறது என்ற கற்பனைகள் வாதங்கள் ஆகா.முசுலிம்கள் அனைவருமே ஒரே சமூகம்தான்.அதைத்தான் உங்கள் ஆட்களே உம்மா என்று கிண்டலாக அழைக்கிறார்கள்.பிற சமூகம் என்பது பிற மத மக்களைத்தான்.

      அப்புறம் உங்களுக்கு நண்பர்கள்,கூட்டாளிகள் [friends, allies] ஆகிய பதங்களுக்கு இடையிலான வேறுபாடு தெரியாதா.எந்த எந்த இடங்களில் கூட்டாளிகள் எனப்படுவோர் சேர்கிறார்கள் என்று பெரியவர்கள் யாரிடமாவது கேட்டு தெரிந்து கொண்டு வந்திருக்கலாம்.போர்.வணிகம்,விவசாயம்,தொழிற்துறை போன்றவற்றில்தான் கூட்டாளிகள் சேர்கிறார்கள்.இவற்றில் யூத,கிருத்துவர்களுடன் சேர்வதைத்தான் இசுலாம் தடுக்கிறது.நண்பர்களாக பழக எந்த தடையுமில்லை.

      • //அழகின்மை என கருத கூடிய அம்சம் உள்ளவரே ஆனாலும் அவருக்கு கட்டுப்படுங்கள்//

        திப்பு முகமதுக்கும் முகமதியத்திற்கும் மேலும் மேலும் அவப்பெயர் வரும் வகையில் பின்னூட்டமிட்டுக் கொண்டிருக்கிறார். அவர் யூத ஏஜென்ட்டாக இருப்பாரோ?

      • இஸ்லாம் ஒரு குப்பையா… உங்க விவாதத்துக்கு அதை துணைக்கிழுத்து உங்க டவுசரையும் இஸ்லாம் டவுசரையும் சேத்து அவுத்துக்கீறீங்க ….

  31. // அழகின்மை என கருத கூடிய அம்சம் உள்ளவரே ஆனாலும் அவருக்கு கட்டுப்படுங்கள் என சொல்வதால் அவர் தாழ்ந்தவர் என்ற பொருள் எங்கிருந்து வருகிறது.///

    ஒருவரை மற்றவரை விட அழகில்லாதவர் அல்லது “அழகின்மை என கருத கூடிய அம்சம் உள்ளவரே” என்று கூறுவது, மற்றவரைத் தாழ்த்துவது அல்லாமல், வேறு என்ன என்பதை விளக்குவீர்களா, திப்பு சுல்தான்? 🙂

    அது ஒருபுறமிருக்க, இஸ்லாத்தின் சகோதரத்துவத்தையும், சமத்துவத்தையும் பற்றி வாய் கிழிய எத்தனையோ பேர் பேசி இஸ்லாம் சகோதரத்துவம் நிறைந்த, சமத்துவமான மார்க்கம் என்று பரப்பியிருக்கும் மாயையை ஓரு சில வரிகளில் இல்லாமல் செய்து விட்டீர்கள் திப்பு சுல்தான் அவர்களே. நபிகள் நாயகம் அவர்கள் மானிடர்கள் அனைவரையும் ஒரே சமமாகப் பார்த்திருப்பார் என்று நான் இவ்வளவு நாளும் அவரைப் பற்றி பற்றி வைத்திருந்த உயரிய கருத்தை ஒரு நொடியில் பொடிப்பொடியாகி விட்டீர்கள். 🙂

    வெளிப்புறத் தோற்றத்தை அதாவது, “உதடுகள் பருத்த ஒரு கறுப்பினத்தவர்கள்” அழகில்லாதவர்கள், “அழகின்மை எனக் கருதக் கூடிய அம்சம் உள்ளவர்கள்” என நபிகள் நாயகம் கருதினார் என்கிறீர்கள். அதாவது, “உதடுகள் பருத்த ஒரு கறுப்பினத்தவர்”களான கோடிக்கணக்கான ஆபிரிக்க முஸ்லீம்களை, அழகானவர்களாக, ஆளுமை உடையவர்களாக, தலைமைத்துவ ஆற்றல் உள்ளவர்களாக முகம்மது நபிகள் கருதவில்லை. உதடுகள் பருத்த ஒரு கறுப்பினத்தவர்களிலும் பேரழகிகளும், உலக ஆணழகர்களும் உண்டு, அண்மையில் ஆஸ்கர் விருதைப் பெற்ற நடிகை Lupita Nyong’o (12 years of a Slave) கூட உதடுகள் பருத்த ஒரு கறுப்பினத்து அழகி தான். உங்களின் கருத்துப்படி பார்த்தால் , நபிகள் நாயகம் வெள்ளைத்தோல் உள்ள அரபுகக்ளைத் தவிர, “உதடுகள் பருத்த ஒரு கறுப்பினத்தவர்களை” அழகான அம்சமுள்ளவர்களாகக் கருதவில்லை. அப்படியா?

    உங்களின் அறியாமையை, அல்லது உங்களின் அதிகப்பிரசங்கித்தனத்தை மறைக்க நபிகள் நாயகம் “அழகின்மை என கருத கூடிய அம்சம் உள்ளவரே ஆனாலும் அவருக்கு கட்டுப்படுங்கள்” என்று சொன்னார் என்று கூறி, பல கோடிக்கணக்கான முஸ்லீம்கள் போற்றும் ஒருவரை இழிவு படுத்துவது முறையானதாக எனக்குப் படவில்லை, ஏனென்றால் எந்த மதத்தைச் சேர்ந்த ஞானியுமே அழிந்து போகும் இந்த உடலின் வெளியழகின் அடிப்படையில் மனிதர்களை அழகுள்ளவர்கள், “அழகின்மை என கருத கூடிய அம்சம் உள்ளவர்” என பிரித்து, தன்னைப் பின்பற்றுகிறவர்களுக்குக் போதிப்பதில்லை. அதனால் நபிகள் நாயகமும் அப்படி ஒரு கருத்தைத் தெரிவிப்பார் என்பதை என்னால் நம்ப முடியவில்லை.

    ஆனால் ஆராய்ந்து பார்த்தால், இஸ்லாத்தில் எவ்வளவோ முரண்பாடுகள் உண்டு என்பதை உங்களின் பதில்களிலிருந்து மட்டுமல்ல, பல முன்னாள் முஸ்லீம்களின் கருத்துக்களிருந்தும் அறிய முடிகிறது.. உங்களைப் போன்ற முஸ்லீம்களுக்குத் தான் உங்களின் மதத்தைப் பற்றி நன்கு தெரியும்? அதனால் நீங்கள் நபிகள் நாயகம் பற்றிக் கூறுவது உண்மையாகத் தானிருக்கும் அல்லவா? 🙂

  32. சகோதரர் திப்பு அவர்களே
    வியாசன் போன்றவர்கள் உண்மையை தெரிந்துகொள்ளவோ அல்லது தாங்களின் தவறை திருத்திக்கொள்ளவோ மாட்டார்கள்
    ….. கையில் மாலையைக் கொடுத்து கோபுரத்தின் மேல் நிக்க வைத்தாலும் அது அப்படித்தான்

    • தலிபான்களின் கைகளில் குண்டைக் கொடுத்து பாமியன் புத்தர் சிலைக்குப் பக்கத்தில் விட்டது மாதிரி தான் திப்புவினதும் ஜவகரினதும் கருத்துக்கள், அதை விடுத்து மாலை, கோபுரமேன்று சம்பந்தமில்லாமல் உளறுகிறார் ஜவகர் காக்கா. 🙂

  33. ///எல்லா மனிதர்களும் ஒரே தாய் தந்தையிலிருந்தே வந்தனர். ஒரு அரபி, அரபி அல்லாதவரை காட்டிலும் உயர்ந்தவரல்ல. அதுபோலவே ஒரு அரபி அல்லாதவர்…. Yada yada ya”…..என்று சொல்லியிருப்பதை வைத்து பார்க்கும்போது மனிதர்கள் அனைவரும் சமம் என்றே பொருள் தருகிறது.//

    அப்படிச் சொன்னவர் தான் அதாவது சமத்துவம் பேசியவர் , “உதடுகள் பருத்த ஒரு கறுப்பினத்தவர்கள்” அழகில்லாதவர்கள், அல்லது “அழகின்மை எனக் கருதக் கூடிய அம்சம் உள்ளவர்கள் ஆனால் அவர்கள் ஆண்டால் கூட அவர்களுக்குக் கட்டுப்படுங்கள் என்றாரா. 🙂

    //நான் முன் நோக்கி தொழும் மசூதி இருக்கும் நாட்டை என்ன அக்கிரமம் செய்தாலும் ஆதரிப்பது என சொல்லவில்லையே.நான் மட்டுமல்ல.உலக முசுலிம்கள் அனைவருமே அப்படித்தான்.///

    அப்படியானால் ,மெக்காவில் அமெரிக்கர்களின் குண்டு விழுந்தாலும் நீங்கள் முஸ்லீம்கள் எனக்கென்ன போச்சென்று இருப்பீர்களா? அப்படியானால் இஸ்ரேலியர்கள் ஜெருசலேமில் அல் அக்சா பள்ளிவாசலை ஆக்கிரமித்து விட்டார்கள் என்று முஸ்லீம்கள் எதற்காக அழுதார்கள்.

    //வளைகுடா போரில் அமெரிக்க வெறி நாய்களுக்கு தளம் அமைக்க இடம் கொடுத்ததற்காக சவூதி அரேபியா உலகளாவிய அளவில் கண்டனத்துக்கு உள்ளானது.முசுலிம்கள் அனைவருமே கண்டித்தனர்.//

    ஆனால் அமெரிக்காவில் அப்பாவி மக்களை குண்டு வைத்துக் கொன்ற தலிபான்களை, பழமை வாய்ந்த பாமியன் புத்தர் சிலையை குண்டு வைத்துத் தகர்த்த தலிபான்களை முசுலீம்கள் கண்டிக்கவில்லை, அல்லது வெளிநாடுகளுக்கு தீவிராத இஸ்லாத்தை ஏற்றுமதி செய்வதற்காக சவூதி அரேபியாவை முஸ்லீம்கள் கண்டிக்கவில்லை. அமெரிக்காவுக்கு ஆதரவான எல்லா நாட்டையும் தான் முஸ்லீம்கள் எதிர்ப்பார்கள், அது ஒன்றும் புதிய விடயம் அல்லவே.

    //அதே போரில் இராக் மக்களை குண்டு வீசி கொல்ல போகும் போர் வானூர்திகளுக்கு எரிபொருள் நிரப்பி கொடுத்து அடிமை சேவகம் செய்தது இந்தியா.ஆனால் இராக் மக்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட துணை போன இந்தியாவை நீங்கள் கண்டிக்க மாட்டீர்கள்.ஏன்னா நீங்க கும்புடுற கோவில் அங்கே இருக்குல்ல.///

    நீங்கள் தமிழ்நாட்டு முஸ்லீம்கள் ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்ட போது, ஆதரவளித்தது போன்று நான் ஈராக்கிகளுக்காக குரல் கொடுக்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்களா?, அதற்க்காக இந்தியாவை நான் கண்டிக்க மாட்டேன். ஈராக்கி எனக்கென்ன மாமனா, மச்சானா எனக்கும் அவனுக்கும் இன, மொழி, மத எந்த சம்பந்தமும் கிடையாது. Charity begins at home. 🙂

    • மிகச்சரியான விளக்கம் வியாசன், பிறப்பால் யாரும் உயர்ந்தவரில்லை. அரபு பரம்பரையில் வந்தவர்கள் என்றால் என்ன, அவர்களுக்கு தலையில் ஏதாவது கொம்பு முளைத்து விடுமா? பின்னோக்கி போய் வரலாற்றை பார்ப்பது என்று முடிவுக்கு வந்த பின்னால் ஏன் 1400 வருடங்கள் மட்டும் பின்னோக்கி போக வேண்டும்? அதற்கும் பின்னோக்கி போகலாமே? 10,௦௦௦ வருடங்களுக்கு முன்னர் நாம் எந்த DNA வில் இருந்து வந்திருப்போம். அதற்கும் முன்னே, ஆதிமனிதனாக, குரங்கில் இருந்து வந்தவர்கள் தானே நாம். இன்னும் பின்னோக்கி போனால் நாம் அனைவரும் அமீபா போன்ற நுண்ணுயிர்களாக இருந்த உயிரினம் தானே. அதற்க்கும் முன்னே பூமி தோன்றிய காலகட்டத்தில் நாம் யார், வெறும் தூசு தானே. இந்த சாதி சங்கங்களும், மதவாதிகளும் நாங்கள் மன்னரினம், ஆண்ட பரம்பரை, ஆண்டவன் வழி வந்தவர்கள், இறைதூதர் பரம்பரை என்று கூறும்போது எனக்கு சிரிப்பு தான் வருகிறது. பழம்பெருமை பேசுபவர்களுக்கு ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். உங்கள் பாட்டன், முப்பாட்டன் பெருமை எல்லாம் இருக்கட்டும். நீங்கள் என்ன செய்துள்ளீர்கள். இவர் இன்னார் மகன்/மகள் என்பது ஒரு அடையாளம் மட்டுமே. அதுவே உங்கள் தகுதி ஆகாது. ஒருவன் வேசிக்கு மகனாக பிறப்பது அவனது தவறல்ல. அதே போல ஒரு உயர்ந்த குடும்பத்தில் பிறப்பது ஒருவனுக்கு பெருமையும் அல்ல. பிறந்த பின் அவர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பது தான் முக்கியம். வேசியான மாதவிக்கு பிறந்த மணிமேகலை, நல்ல குடும்பத்தில் பிறந்து சோரம் போன கோவலனை விட எவ்வளவோ மேல். பிறப்பும் இறப்பும் நம் கையில் இல்லை. தூசியில் இருந்து பிறக்கிறோம். தூசாக முடிகிறோம். இருக்கிற காலத்தில் மற்றவர்களுக்கு ஏதாவது நல்லது செய்து பொய் சேருவோம். அவ்வளவுதான்.

    • \\ஈராக்கி எனக்கென்ன மாமனா, மச்சானா .//

      ஈராக் மீது அமேரிக்கா படையெடுத்த போது போரை எதிர்த்து லட்சக்கணக்கான அமெரிக்கர்கள் வீதிகளில் திரண்டு போராடினார்கள்.அதே போல் வியட்நாம் யுத்தத்தை எதிர்த்தும் போராடினார்கள்.பாதிக்கப்படுபவர்கள் மாமனா மச்சானா என்று பார்க்கவில்லை.அது மனித நேயம்.

      சாலையில் போகும் ஒருவர் மயங்கி விழுந்தால் மனிதர்கள் ஓடிச்சென்று உதவுவார்கள்.அது மனித நேயம்.வியாசு அவர் தனக்கு மாமனா மச்சானா என்று பார்த்துக் கொண்டிருப்பார்.

      மனித நேயம் மனிதர்களிடம் இருக்கும்.வியாசுவிடம் இல்லை எனபது தெளிவாகிறது.

      \\Charity begins at home. //

      தானுண்டு தன் வேலையுண்டு
      தன் பெண்டு பிள்ளையுண்டு
      என்றிருப்போன் கடுகு போல்
      உள்ளங்கொண்டோன்

      என்றார் பாவேந்தர்.

      • தாமும் ஒரே மொழியைப் பேசும் , ஒரே இனமென பம்மாத்து விடும் தமிழ்நாட்டு முஸ்லீம்கள் (அதாவது அவர்களும் தமிழர்கள் தான் என்கிறார்கள்), ஈழத்தமிழர்கள் பதைக்கப் பதைக்க படு கொலை செய்யப்படும் போது, பேசாமால், நடுநிலையாக இருந்திருந்தாலும் பரவாயில்லை, சிங்கள அரசுக்குச் சார்பாக, அவர்களின் பொய்ப்பிரச்சாரத்தை தமிழ்நாட்டில் தொடர்ந்து நடத்திய தமிழ்நாட்டு முஸ்லீம்கள், ஈராக்கி முஸ்லீம்களுக்காதரவாக ஈழத்தமிழர்கள் ஆர்ப்பாட்டம் செய்யவில்லையாம், அதனால் எனக்கு மனிதநேயம் இல்லையாம். முஸ்லீம்களின் மனிதநேயம், முஸ்லீம்களுக்கு மட்டும் தான் அது தமிழர்களுக்கல்ல என்று மற்றவர்களுக்குத் தெரியாது என்ற நினைப்பில் வாய்ப்பந்தல் போடுகிறார் முல்லா திப்பு, அதற்கு அவருக்கு பாரதிதாசனின் துணை வேறு கேட்கிறது, அது தான் வேடிக்கை.

        ஈழத்தில் தமிழ்க்குழந்தைகள் கொல்லப்படும் பொது துடிக்காத முஸ்லீம்களின் உள்ளம், சிரியாவில் ஒரு முஸ்லிம் கொல்லப்பட்டால் துடிக்கிறது ஏனென்றால் அவர்கள் தான் முஸ்லீம்களின் மாமானும் மச்சானும். இந்த லட்சணத்தில் மனிதநேயம் என்று தமிழ்நாட்டு முஸ்லீம்கள் போடும் மாய்மாலத்தைப் பார்க்கச் சிரிப்பு தான் வருகிறது.

        //ஈராக் மீது அமேரிக்கா படையெடுத்த போது போரை எதிர்த்து லட்சக்கணக்கான அமெரிக்கர்கள் வீதிகளில் திரண்டு போராடினார்கள்.அதே போல் வியட்நாம் யுத்தத்தை எதிர்த்தும் போராடினார்கள்.பாதிக்கப்படுபவர்கள் மாமனா மச்சானா என்று பார்க்கவில்லை.அது மனித நேயம்.//

        அத்தகைய மனிதநேயம் மிக்க ஆயிரக்கணக்கான அமெரிக்கர்களை உயிரோடெரித்துக் கொன்ற தலிபான்களையும், பின்லாடனையும் அமெரிக்க தண்டித்ததற்காக இன்றும் அமெரிக்காவைப் பழி வாங்கத் துடிக்கிறார்கள் முஸ்லீம்கள். அந்த தலிபான்களின் உண்மையான முகத்தை ஒரு திரைப்படத்தில் காட்டியதற்காக வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டம் செய்த தமிழ்நாட்டு முஸ்லீம்களில் ஒருவர் மனிதநேயம் பேசுவதைப் பார்த்து எங்கே போய் முட்டிக் கொள்வதென்று எனக்குத் தெரியவில்லை. 🙂

  34. //வெள்ளைக்காரன் வருமுன் இப்போது இந்தியா என்று அழைக்கப்படும் பகுதிகள் ஒரே குடை ஆட்சியின் கீழ் இருந்ததே இல்லை.துண்டு துண்டாக ஆயிரம் நாடுகளாக இருந்த பகுதியைத்தான் வெள்ளைக்காரன் ஆக்கிரமித்து ஒரே நாடாக்கினான்.///

    அது எல்லோருக்கும் தெரியும். அந்த அடிப்படையில் பார்த்தால், காஷ்மீர் மட்டுமல்ல, தமிழ்நாதடுக்கும் ஏனைய மாநிலங்களுக்கும் கூட பிரிந்து போகும் உரிமை உண்டு. இந்திய சுதந்திரத்தின்போது காஷ்மீர் ஒரு முடியாட்சியாக இருந்தது, அதனால் அதற்கு பிரிந்து போகும் உரிமையுண்டு, என்றால், இந்தியாவிலிருந்த பல Princely States களும் அந்த அடிப்படையில் பிரிவினை கேட்கலாம். இந்த காஷ்மீர் பிரச்சனைக்கே காரணம் நேருவின் பெருந்தன்மை தான்.

    இந்தியா என்ற நாட்டை ஒரு நிர்வாகத்தின் கீழ் வெள்ளையர்கள் கொண்டு வந்தார்களே தவிர, திருக்கைலாயம் தொடக்கம் திருகோணமலை (இலங்கை) வரையுள்ள மக்கள் அனைவரையும் இந்தியாவிலுருவாகிய மதங்கள் ஒருங்கிணைத்தன என்ற உண்மையை யாரும் மறுக்க முடியாது. ஆட்சியாளர்களும் எல்லைகளும் வேறு வேறாக இருந்தாலும், ஆபிரகாமிய மதங்களின் வருகைக்கு முன்னர், ஒரே கலாச்சார தொடர்புகளும் யாத்திரைகள் மூலம் மக்களின் தொடர்பும் நடந்து கொண்டு தான் வந்தன. அதனால் இந்தியா என்ற ஒரு நாட்டை வெள்ளைக்காரன் உருவாக்கினான் என்பது விவாதத்துக்குரிய விடயம். வடக்கில் எங்கே தொலைவில் இருந்த காஷ்மீரி சைவனையும் தெற்கில் குமரிக் கடலுக்கருகில் வாழ்ந்த தமிழ்ச் சைவனையும் எது இணைத்ததோ அது தான் பாரதக் கலாச்சாரத்தின் அடிப்படை. அதனால் இந்து மதத்தின் அடிப்படையில் காஷ்மீர், திருக்கைலாயம் தொடக்கம் திருகோணமலை வரை வாழ்ந்த மக்களின், அந்த நாட்டின் பிரிக்க முடியாத அங்கமென்பதை யாராலும் மறுக்க முடியாது. அதை வந்தேறி முஸ்லீம்கள் எப்படி சொந்தம் கொண்டாட முடியும்.

    //வெள்ளைக்காரன் இடத்தில் இன்றய பார்ப்பன-பனியா ஆளும் கும்பல் உட்கார்ந்து கொண்டு இது ஒரே நாடு என்கிறது.///

    வெள்ளைக்காரனுக்கோ அல்லது முஸ்லீம்களுக்கோ இந்து மதத்தின் இந்துக்களின் காஷ்மீர் எப்படி சொந்தமாகும். இப்படியே போனால், பாண்டிச்சேரி பிரஞ்ச்சுக்காரனுக்குச் சிந்தாம் என்று கூறினாலும் கூறுவார் அண்ணன் திப்பு சுல்தான்.

    //.காசுமீர் பிரச்னை பற்றிய உங்கள் அறியாமையை மேலும் வெளிப்படுத்தாமல்
    காசுமீர் பற்றி முன்னர் எழுதிய ஒரு பதிவுக்கான சுட்டி இது.///

    அருந்ததி ராயின் உளறலை அதாவது மனிதவுரிமை அடிப்படையிலான கருத்தை வரலாற்றுக்கு ஆதாரமாகக் காட்டுவது வெறும் முட்டாள்தனம். அருந்ததி ராயின் காஸ்மீர் பற்றிய வரலாறு பிரித்தானியர்களுடனும் குலாப்சிங்குடனும் தான் தொடங்குகிறது. ஆனால் காஸ்மீருக்கும் இந்துக்களுக்குமுள்ள தொடர்பு அதற்கு ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. அந்த வரலாற்றை முதலில் கற்றுக் கொள்ளுங்கள், அதன் பின்னர் எப்படி காஸ்மீர், முஸ்லீம்களுக்கும், வெள்ளையர்களுக்கும் சொந்தமாகும் என்பதை விளக்குங்கள்.

    (என்னுடைய கருத்துக்கள் RSS அல்லது இந்துத்துவாக்களின் கருத்தைப் போன்றிருக்கிறது என்று எனக்கும் தெரியும், பேச வேண்டிய தேவை ஏற்பட்டால் உண்மையைப் பேச தயங்கக் கூடாது என்பது தான் என்னுடைய கொள்கை. )

    • \\என்னுடைய கருத்துக்கள் RSS அல்லது இந்துத்துவாக்களின் கருத்தைப் போன்றிருக்கிறது என்று எனக்கும் தெரியும்//

      ஆமா வியாசு ,நீங்க அரைக்கால் சட்டை ஆசாமிதான்னு எல்லாருக்கும் தெரியுது. முன்னொரு காலத்துல எங்க மதம் அங்கே நிலவியது.அதுனால அந்த பகுதி எங்களுக்கு சொந்தம்.அட அட அட என்ன ஒரு சித்தாந்தம்.இதை ஐ.நா.அவை வாசல்ல கல்வெட்டா எழுதி வச்சுட்டு பக்கத்துலேயே உக்காந்துக்கங்க வியாசு.பின்னால வர்ற சந்ததிகள் படிச்சு பாத்து தெளிவா நடந்துக்குவாங்க.

      சரி.காசுமீர் மக்கள் ஏமாந்த சமயம் பார்த்து காசுமீரை இந்துக்களுக்குத்தான் சொந்தம்னு ஆட்டைய போட்டாச்சு.சீனாக்காரன் ஏமாற மாட்டேன்றானே.அவன்டேர்ந்து எப்போ திருக்கயிலாயத்தை மீட்பதாக இருக்குறீங்க.ஆமா,நேபாள் இந்துக்களுக்குத்தானே சொந்தம்.அதை ஏன் தனிநாடா உட்டு வச்சுருக்கீங்க.அவ்வளவு ஏன் ஈழம் இந்துக்கள் வாழும் நாடுதானே.அதை ஏன் இந்தியாவோட இணைக்கனும்னு போராடாம தனி நாடு ஆக்கணும்னு போராடுறீங்க.

    • நேபாளம், ஈழம், திபெத் இவை அனைத்தும் வியாசனின் கொள்கைப்படி இந்தியாவுடன் அகண்ட பாரதமாக இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.அங்கேயெல்லாம் இவர்களின் பருப்பு வேகவில்லை.ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி எனபது போல மாட்டிக் கொண்ட காசுமீரை வறுத்தெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

  35. //.முசுலிம்கள் அனைவருமே ஒரே சமூகம்தான்.அதைத்தான் உங்கள் ஆட்களே உம்மா என்று கிண்டலாக அழைக்கிறார்கள்.பிற சமூகம் என்பது பிற மத மக்களைத்தான்.///

    அப்படியானால் காஸ்மீரி மாணவர்கள் தமது ஒரே சமூகத்தைச் சேர்ந்த பாகிஸ்தானிய முஸ்லீம்களை இந்திய – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியில் ஆதரித்தனர், அதற்கு காரணம் அவர்களுக்கு, முஸ்லீம்கள் தான் அவர்களின் சமூகமே தவிர இந்தியர்களல்ல என்று முன்பே கூறியிருக்கலாமே.

    //போர்.வணிகம்,விவசாயம்,தொழிற்துறை போன்றவற்றில்தான் கூட்டாளிகள் சேர்கிறார்கள்.இவற்றில் யூத,கிருத்துவர்களுடன் சேர்வதைத்தான் இசுலாம் தடுக்கிறது.நண்பர்களாக பழக எந்த தடையுமில்லை.///

    சமத்துவம் பேசினாராம் நபிகள் நாயகம் ஆனால் குரானோ வணிகம்,விவசாயம்,தொழிற்துறை போன்றவற்றில்தான் யூதர்களுடனும் கிரித்தவர்களுடனும் கூட்டுச் சேர வேண்டாம் என்கிறது என்கிறார். அபப்டியானால் மேலை நாடுகளில் வாழும் பெரும்பான்மை முஸ்லீம்கள் குரானின் கட்டளையை மீறுகிறார்கள் ஏனென்றால் பெரும்பான்மை வணிக நிறுவனங்களும் தொழிற்துறையும் யூதர்களினதும் கிறித்தவர்களினதும் கைகளில் தான் உள்ளது. அவர்களுக்கும் குர்ஆனில் இப்படி சொல்லியிருக்கிறது என்பது தெரியாது போலிருக்கிறது. தெரிந்தால் எந்த முஸ்லீமையும் வேலைக்கு அமர்த்த மாட்டார்கள்.

    தமிழில் நண்பர்கள் என்றாலும் கூட்டாளிகள் என்றாலும் ஒரு கருத்துத் தான். உங்களின் வசதிக்கேற்றவாறு தமிழ்க் கருத்தையும் மாற்றுகிறீர்கள்போல் தெரிகிறது. போரின் போது பகை நாடுகள் ஒன்று சேர்வது உடன்படிக்கை அல்லது ஒப்பந்தத்தின் அடிப்படையில். எல்லாமே மழுப்பலும் கருத்துத் திரிப்புகளும் தான், பெண்களுக்கு சமவுரிமை கொடுக்காத குரான் வரிகளைக் காட்டுமாறு சவால் விட்டார் திப்பு காக்கா, அந்த வரிகளைக் குறிப்பட்டதும் அதைப் பற்றி பேசாமல் அடக்கி வாசித்து விட்டார். 🙂

  36. நண்பர் வியாசனின் கருத்துக்களுடன் நான் ஒத்து போகிறேன். குரான் என்பது 1400 ஆண்டுகளுக்கு முன், அப்போது இருந்த கால நிலவரத்துக்கும், குறிப்பிட்ட சில நில வரையறைக்குள் (அரேபிய பகுதிகள்) ஒத்துப்போகக்கூடிய ஒரு நூலே அன்றி எல்லா காலத்திற்கும் எல்லா இடங்களுக்கும், பொருந்தக்கூடிய நூல் அல்ல. எல்லா மத நூல்களிலும், அது குரானாகட்டும், பைபிள் ஆகட்டும், பகவத் கீதை ஆகட்டும், சில குறிப்பிட்ட விடயங்கள் எல்லா காலத்திற்கும் பொருந்துவனவாக இருந்தாலும், சில விடயங்கள் தற்போதைய காலத்திற்கு பொருந்தாததாக இருப்பதை மறுப்பதற்கில்லை. அந்தந்த மதங்களிலும், மத நூல்களிலும் உள்ள நன்னெறி மற்றும் நல்லொழுக்க கருத்துக்களை பின்பற்றி, தற்காலத்திற்கு பொருந்தாத விடயங்களை பிடிவாதமாக கடைபிடிக்காமல் கொஞ்சம் விசாலமாக அனைவரும் யோசித்து பழகினால் உலகம் அமைதியடையும், உருப்படும். என் மதம் பெரிதா, உன் மதம் பெரிதா, என்ற தேவையற்ற சண்டைகளை தவிர்த்து அவரவர் மதம் அவரவருக்கு உயர்ந்தது என உணர்ந்து, அதே சமயம் தங்களது மதங்களில் உள்ள குறைகளை நேர்மையாக ஒத்துக்கொண்டு அந்த குறைகளை நிவர்த்தி செய்ய முயற்சி எடுக்கலாம். மதங்கள்,மார்க்கங்கள் மக்களை நல்லொழுக்க வழியில் நடக்க செய்ய வேண்டுமேயன்றி மக்களை ஒருவரோடு ஒருவர் மோதுவதற்கு பயன்படக்கூடாது.

  37. Hi கற்றது கையளவு,

    //பிறப்பால் யாரும் உயர்ந்தவரில்லை. *** நாம் யார், வெறும் தூசு தானே.//

    விரிந்த பார்வை.

    //*** மகனாக பிறப்பது, *** குடும்பத்தில் பிறப்பது, சோரம் போவது //

    தவறான பார்வைகள். இந்த தவறான பார்வைகளிலிருந்து நீங்கள் விரைவில் விடுதலை பெறவேண்டும்.

    //தங்களது மதங்களில் உள்ள குறைகளை நேர்மையாக ஒத்துக்கொண்டு//

    மக்கள் தங்களுக்குள் வேறுபாட்டைக் கற்பிக்கும் அனைத்து அம்சங்களையும் கைவிட்டு உலக மக்கள் அனைவருக்கும் பொதுவான அம்சங்களை மட்டும் கொண்ட ஒரு புது வாழ்க்கைநெறியைக் கைக்கொள்ளலாம்.

  38. பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு ஆதரவு தெரிவிப்பது தனி மனித விருப்பம், அதற்கு தடை போடுபவன் முட்டாள். ஆனால் பாகிஸ்தான் ஒரு நாடு என்று ஏற்றுகொள்ள என்னால் இயலவில்லை ஏன் என்றால் அது ஒரு திட்டம் அவ்ளவே, அதை எந்த அடிப்படையில் பிரித்தார்கள் என்று பார்த்தால் அதுதான் மிகபெரிய முட்டல்துவமாக இருக்கும்.

  39. பாகிஸ்தான் என்னும் திட்டம் இப்போது வேசி போல் அமெரிக்காவுக்கும், ஆர்பு நாடுகளுக்கும் பயன்பட்டு வருகிறது என்பதுதான் நிதர்சன உண்மை.

  40. இந்தியாவும் கூடியசீக்கிரம் பாகிஸ்தான் போல் ஆகுவதற்கு ஒரு பக்கம் சங்க பரிவார் தீவிரவாதிகளும், தூய இஸ்லாத்தை கற்றுகொடுகிறோம் பேர்வழி வஹாபிய அடிப்படைவாதமும் ஒன்றோடு ஒன்று மோதி நாட்டை உருக்குலைக்கும் நாட்கள் வெகுதொலைவில் இல்லை. இதற்கிடையில் ஊழல், அரசு தீவிரவாதம் இந்த காமெடியெல்லாம் நடந்துகொண்டே இருக்கும், நாம் விளிதேலவில்லைஎன்றால் நாடு இரண்டாகும்.

  41. //காசுமீர் மக்கள் ஏமாந்த சமயம் பார்த்து காசுமீரை இந்துக்களுக்குத்தான் சொந்தம்னு ஆட்டைய போட்டாச்சு.///

    காசுமீருக்குப் பரமபரைச் சொந்தக்கரார்களான இந்துக்களை அங்கிருந்து விரட்டியடித்து விட்டு வந்தேறி முஸ்லீம்கள் காஸ்மீரை ஆட்டைய போட்டு விட்டு, இப்பொழுது உலகப்புகழ் பெற்ற வரலாற்று ஆராய்ச்சியாளர் அருந்ததி ராய் அவர்களின் ஆராய்ச்சிக் கட்டுரையின் அடிப்படையில் காஷ்மீர் தமது முன்னோர்களின் பாரம்பரியபூமி என்கிறார்கள் முஸ்லீம்கள், அப்படித்தானே திப்பு சுல்தான். 🙂

    //சீனாக்காரன் ஏமாற மாட்டேன்றானே.அவன்டேர்ந்து எப்போ திருக்கயிலாயத்தை மீட்பதாக இருக்குறீங்க.///

    திருக்கைலாயத்தில் மனிதர்கள் வாழ்ந்ததில்லை அப்படி வாழ்ந்ததாக இந்துக்கள் நம்புவதுமில்லை. திருக்கைலாயம் என்பது இந்துக்களுக்கு எல்லை என்பது தான் நான் கூறியதன் கருத்து.

    //ஆமா வியாசு ,நீங்க அரைக்கால் சட்டை ஆசாமிதான்னு எல்லாருக்கும் தெரியுது//
    இனிமேல், குல்லா போட்ட முல்லாவாகிய உங்களுக்கு அரைகால் சட்டை ஆசாமியாகவே பதிலளிக்கிறேன். சரியா? 🙂

    //ஆமா,நேபாள் இந்துக்களுக்குத்தானே சொந்தம்.அதை ஏன் தனிநாடா உட்டு வச்சுருக்கீங்க.///

    நேபாளம் இன்றும் இந்துக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட இந்து நாடு தானே, அங்கும் முஸ்லீம்கள் குடியேறி, அவர்கள் பெரும்பான்மையாகி, இந்துக்களை வெளியேற்றும் போது தான் இணைப்பை பற்றி யோசிக்க வேண்டுமே தவிர, இப்போதல்ல.

    ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு என்பார்கள் அதனால் உங்களுக்கு தமிழும் புரியவில்லை போல் தெரிகிறது. வெள்ளைக்காரன் இந்தியா என்ற நாட்டை உருவாக்கவில்லை, ஆனால் இந்தியாவில் உருவாகிய மதங்களைக் கொண்ட சிறிய பல நாடுகளை அவர்கள் ஒரே நிர்வாகத்தின் கீழ் கொண்டுவந்தனர். ஆனால் இந்திய உபகண்டத்தில் இருந்தது ஒரே இந்துக்கலாச்சாசாரம் தான். ஆனால், வந்தேறி முஸ்லீம்களின் மத மாற்றத்தாலும், குடியேற்றத்தாலும், இஸ்லாத்தில் குடும்பக் கட்டுப்பாடு தடை செய்யப்பட்டிருப்பதாலும் அவர்கள் காஷ்மீர் மாநிலத்தில் பல்கிப் பெருகி பெரும்பான்மையாகி விட்டனர். அந்த காரணத்துக்காக, ஏனைய இந்தியர்கள் காஷ்மீர் மண்ணில் தமது பாரம்பரிய உரிமையை இழந்து விடவில்லை. இந்தியா முழுவதும் எத்தனையோ சிற்றரசர்கள் ஆண்டனர் அவையெல்லாம் எப்படி, இந்தியாவுக்குள் அடக்கமோ அது போல் தான் காஸ்மீரும் இந்தியாவுக்குள் அடக்கம்.

    இந்தியர்களை சுதந்திரமாக இந்தியா முழுவதும் நடமாடவும், குடியேறவும் நேரு அனுமதித்திருந்தால் இந்தக் காஸ்மீர் பிரச்சனையே இருந்திருக்காது. இலங்கையில் பாரம்பரிய தமிழ்ப் பிரதேசங்களில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை உருவாக்கி வடக்கு, கிழக்கிலேயே தமிழர்களை சிறுபான்மையினமாக்கிறது இலங்கை அரசு. இவ்வளவுக்கும் இலங்கையின் தமிழ்ப்பகுதிகளில் 2000 வருடங்களுக்கு மேலாக தமிழர்கள் வாழ்கின்றனர் என்பதை சிங்களவர்களின் மகாவம்சமே உறுதி செய்கிறது. இலங்கை அரசின் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை எதிர்க்கும் ஈழத்தமிழர்கள், இலங்கை மக்கள் அனைவரும், அவர்கள் விரும்பினால், அவர்கள் சுயமாக இலங்கை முழுவதிலும் குடியேறும் உரிமை உண்டென்பதை மறுக்கவில்லை. திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை அரசாங்கம் நடத்துவதை மட்டும் தான் எதிர்க்கிறோம், ஆனால் இந்தியாவில் இந்தியர்கள் விரும்பினால் கூட காஸ்மீரில் நிலங்களை தமது சொந்தப் பணத்தில் வாங்கிக் கூட குடியேற முடியாது. இந்துக்களின் பாரம்பரிய புனித பூமியாகிய காஸ்மீரை அந்தளவுக்கு முஸ்லீம்களுக்கு விட்டுக் கொடுத்திருக்கிறார்கள் பொறுமையும் சகிப்புத் தன்மையுள்ள பெரும்பான்மை இந்துக்களாகிய இந்தியர்கள். அவர்களின் அந்த பொறுமையை என்னால் பாராட்டாமலிருக்க முடியவில்லை..

    //அவ்வளவு ஏன் ஈழம் இந்துக்கள் வாழும் நாடுதானே.அதை ஏன் இந்தியாவோட இணைக்கனும்னு போராடாம தனி நாடு ஆக்கணும்னு போராடுறீங்க.///

    ஈழத்தை இந்தியாவோடு இணைக்க வேண்டிய தேவையே இல்லை. ஈழம் பிரிந்தால். தெற்காசியாவில் இந்தியாவை எப்படா கடித்துக் குதறுவோம் என்று காத்திருக்கும் முஸ்லீம் நாடுகளால் சுற்றி வளைக்கப்பட்டிருக்கும் இந்தியாவுக்கு, தமிழீழம் உற்ற நண்பனாக இருக்கும், அதை உணராத பார்ப்பனர்களால் தான் ஈழத்தின் விடுதலைக்குத் தடையேற்பட்டு விட்டது. ஆனால், சீனர்கள் இலங்கையில் முற்றாகக் காலூன்றியவுடன், பெரும்பான்மை இந்துக்களைக் கொண்ட தமிழீழத்தின் விடுதலை தான் இந்தியாவின் தென்பகுதியின் பாதுகாப்பை உறுதி செய்யும் என்ற உண்மை இந்தியர்களுக்குப் புரியும் காலம் வெகு தூரத்தில் இல்லை.

    • இசுலாம் குடும்பக் கட்டுப்பாட்டை தடை செய்யவில்லை.மக்கள் தொகை பெருக்கத்திற்கும் கல்வி அறிவிற்கும் நெருங்கிய தொடர்புண்டு.கேரளா தமிழ்நாடு போன்ற கல்வி செழித்த மாநிலங்களில் சிறு குடும்பங்கள் இன்றைய நிலைமையாக இருக்கிறது.இதில் முசுலிம்,இந்து என வேறுபாடு இல்லை.இதை நேரடி அனுபவத்தை கொண்டு எண்ணிப் பார்ப்போர் உணர்ந்து கொள்ளலாம்.

      உ.பி. பீகார் போன்ற கல்வியில் பின்தங்கிய மாநிலங்களில் ஒப்பீட்டளவில் மக்கள் தொகை பெருக்கம் கூடுதலானது.இதிலும் இந்து,முசுலிம் வேறுபாடு இல்லை.இதற்கும் ஆதாரம் தேடி எங்கும் அலையவேண்டாம்.தமிழகம் முழுவதும் அற்ப கூலிக்கு, நெஞ்சை உருக்கும் பணி நிலைமைகளில் வேலை செய்யும் வட இந்திய இந்து ,முசுலிம் தொழிலாளர்களிடம் பேசிப் பார்த்தால் தெரிந்து கொள்ளலாம்.

      • //இசுலாம் குடும்பக் கட்டுப்பாட்டை தடை செய்யவில்லை///

        இருக்கிற குழந்தைகள் போதுமென்று நிரந்தரமாகத் தடை (Permanent method) செய்யும் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டங்கள் இஸ்லாத்தில் ஹராம் அதாவது தடை செய்யப்பட்டுள்ளது என்கிறார் Dr. Zakir ஆனால் அப்படிடியல்ல என்கிறார் Dr. திப்பு. 🙂

        உடலுறவில் குழந்தை பெறுவதைத் தடை செய்யும் நோக்கத்துடன் Condom பாவிப்பதைக் கூட இஸ்லாம் தடை செய்கிறதாம். திருமணமான கணவனும் மனைவியும் உடலுறவின் போது Condom பாவிப்பது பெரும்பாலும் குழந்தை பிறப்பதை தடுக்கும் நோக்கத்துடனேயே அல்லாமல் AIDS வராமல் தடுப்பதற்காக அல்ல என்பது யாவரும் அறிந்ததே.

    • மக்கள் வாழாத பகுதி என்று திருக்கயிலாயத்தை சீனாவிடமே வுட்டு வச்சுருக்கீங்களா.அப்ப யார் வீட்டு எழவெடுக்க மனிதர்கள் வாழவே முடியாத சியாசின் பனிப் பாலைவனத்துக்கு ஆண்டுக்கணக்குல தாழ் நிலை யுத்தம் நடத்துறீங்க.அதுவும் ஒரு நாளைக்கு 3 கோடி உருவாக்கள் செலவுல.

      உண்மையான காரணம் சீனாவிடம் உங்கள் பருப்பு வேகவில்லை.

      \\ இந்திய உபகண்டத்தில் இருந்தது ஒரே இந்துக்கலாச்சாசாரம் தான்//

      https://www.vinavu.com/2013/06/03/war-mongering-indian-politicians/#comment-86978
      https://www.vinavu.com/2013/06/03/war-mongering-indian-politicians/#comment-86466

      \\தெற்காசியாவில் இந்தியாவை எப்படா கடித்துக் குதறுவோம் என்று காத்திருக்கும் முஸ்லீம் நாடுகளால் சுற்றி வளைக்கப்பட்டிருக்கும் இந்தியாவுக்கு//

      தெற்காசியாவில் ராணுவ வலிமையில் மிகைத்த நாடு இந்தியா.

      \\காசுமீருக்குப் பரமபரைச் சொந்தக்கரார்களான இந்துக்களை //

      நாடு என்பது அந்த நிலப்பரப்பில் வாழும் மக்களுக்கு சொந்தம்.அவர்கள் எந்த மதத்தை பின்பற்றுகிறார்கள் என்பது கேள்வியில்லை.மதத்தை வைத்து அந்த நிலப்பரப்பை வெளியார்களும் சொந்தம் கொண்டாட முடியும் என கொஞ்சம் கூட வெட்கப்படாமல் அடித்து விடும் ”வியாசன்ஜி” இன்று முதல் அரைக்கால் சட்டைகளின் ”சரங்சலக்” என அன்போடு அழைக்கப்படுவாராக.

      • திப்பு இது ரொம்ப தப்பு.ஏற்கனவே வைகோஜி,அன்புமணிஜி,சீமான்ஜி என ஏகப்பட்ட ஜிம்மிக்கள் கூஜா தூக்க நாக்க தொங்கப்போட்டுகினு இருக்க சொல்ல நீங்க எப்புடி வியாசன்ஜியை சரஞ்சலக் ஆக்கலாம்.உங்களை கடுமையா கண்டிக்கிறேன்.

      • //மக்கள் வாழாத பகுதி என்று திருக்கயிலாயத்தை சீனாவிடமே வுட்டு வச்சுருக்கீங்களா.///

        திருக்கைலாயத்தில் இந்தியர்கள் வாழ்ந்தததாகவோ அல்லது இந்திய அரசர்கள் ஆண்டதாகவோ வரலாறு கிடையாது. முகம்மது நபிகளுடன் வானதூதர் வந்து பேசினார் என்பதை எப்படி முஸ்லீம்கள் நம்புகிறார்களோ அதே போல் தான் திருக்கைலாயத்தில் சிவபெருமான் வாழ்கிறார் என்ற இந்துக்களின் நம்பிக்கையும். அந்த நம்பிக்கையின் அடிப்படையில், திருக்கைலாயத்தை மீட்க சீனர்களுடன் போருக்குப் போகுமளவுக்கு இந்துக்கள் மட்டுமல்ல எந்த இந்தியர்களுமே முட்டாள்களல்லவென, முல்லா திப்புசுல்தான் இந்துக்களின் பாரம்பரிய பூமியாகிய காஷ்மீரைப் பற்றிய விடயத்தை திருக்கைலாயத்துடன் ஒப்பிடும் வரை நானும் நினைத்திருந்தேன். 🙂

        //அப்ப யார் வீட்டு எழவெடுக்க மனிதர்கள் வாழவே முடியாத சியாசின் பனிப் பாலைவனத்துக்கு ஆண்டுக்கணக்குல தாழ் நிலை யுத்தம் நடத்துறீங்க.அதுவும் ஒரு நாளைக்கு 3 கோடி உருவாக்கள் செலவுல.///

        காஸ்மீரில் தான் Siachen Glacier இருக்கிறது. இந்தியாவுக்கு காஷ்மீர் சொந்தமென்றால் அதன் கருத்து, அங்குள்ள ஆறு, மலை, பள்ளத்தாக்கு, பனிமலை, பணிப்பாலைவனம் எல்லாம் இந்தியாவுக்கு சொந்தமென்பது தானே தவிர மக்கள் வசிக்கும் பகுதிகள் மட்டுமல்ல. இந்தியர்களும், இந்துக்களும் வாழ்ந்த பாரம்பரிய பூமியாகிய காஸ்மீரையும், இந்துக்கள் புனிதமாகக் கருதும், இந்துக்கள் ஒருபோதும் வாழ்ந்திராத திருக்கைலாயத்தையும் ஒப்பிட்டு, மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட்டு, தன்னைத் தானே குழப்பிக் கொள்கிறார் திப்பு.

        \\ இந்திய உபகண்டத்தில் இருந்தது ஒரே இந்துக்கலாச்சாசாரம் தான்///

        திப்பு காமெடியைத் தாங்க முடியவில்லை, காஸ்மீர் யாருக்குச் சொந்தம் என்ற விடயத்துக்கு வரலாறு, அகழ்வாராய்ச்சி, பழமையான வரலாற்றுச் சின்னங்கள் மூலம் ஆதாரம் காட்ட வேண்டிய விடயத்துக்கு அகழ்வாராய்ச்சிப் பக்கம் தலைவைத்துக் கூடப் படுத்திராத அருந்ததி ராயின் கட்டுரையை ஆதாரமாகக் காட்டினார். இப்பொழுது என்னடாவென்றால் வினவில் வந்த கட்டுரையை “இந்திய உபகண்டத்தில் இருந்தது இந்துக்கலாச்சாரம் அல்ல” என்பதற்கு ஆதாரமாகக் காட்டுகிறார். வினவில் வரும் கட்டுரைகள் எப்படியானவை, அதை எழுதுகிறவர்களின் நோக்கம் என்ன என்பதை, ஈழத்தில் பாலர் வகுப்பில் படிக்கும் பாலகன் கூட ஒரு நாளில் புரிந்து கொள்வான் ஆனால் இவ்வளவு காலம் வினவில் குப்பை கொட்டும் திப்பு அதைக் கூடப் புரிந்து கொள்ள முடியவில்லை போலிருக்கிறது. 🙂

        • யாழ்ப்பாணத்து வேளாளத் திமிருன்னா எப்படி இருக்கும்? அது இந்த வியாசன பாத்தா புரியும். அருந்ததி ராயும், வினவும் முட்டாளுங்கன்னு அறிவுல கடுகு அளவு கூட இல்லாத இந்த தெண்டம் வரலாறு, காஷ்மீர், இந்துன்னு உளறதை பாத்தா இந்த ஜென்மத்தை புலிகள் _________ தோணுது. இவ்வளவுக்கும் நானும் புலியை எதிர்க்கிறவன்தான்.இவங்கள மாதிரியான வேளாளக் கூட்டம்தான் ஈழத்தோட இன்னைய துக்கத்துக்கு காரணமுன்னு என்னைக்கு ஈழத்தமிழன் புரிஞ்சிக்கிறானா அன்னைக்குத்தான் விமோசனம்.பாவம் ஈழத் தமிழ் மக்கள்!

          • //அருந்ததி ராயும், வினவும் முட்டாளுங்கன்னு அறிவுல கடுகு அளவு கூட இல்லாத இந்த தெண்டம் வரலாறு, காஷ்மீர், இந்துன்னு உளறதை பாத்தா//

            அண்ணன் வெற்றிவேலுக்கு தமிழில் எழுதியதைக் கூட சரியாக வாசித்துப் புரிந்துகொள்ளத் தெரியவில்லைப் போலிருக்கிறது. அருந்ததி ராயும் வினவும் முட்டாள்களா இல்லையா என்பதை அப்படி ஓரு விவாதம் வரும் போது பார்ப்போம். அருந்ததி ராயினதும், வினவு கட்டுரைகளையும் சம்பந்தமில்லாமல் ஆதாரங்களாகக் காட்டுவது முட்டாள் தனம், அதை விட முட்டாள்தனம் கருத்தைச் சரியாக புரிந்து கொள்ளாமல் குய்யோ முறையோ, அருந்ததி ராயையும், வினாவையும் “முட்டாளுங்கன்னுட்டான்னு” அலறுவது.

            //இவ்வளவுக்கும் நானும் புலியை எதிர்க்கிறவன்தான்.//

            இன்னமும் புலிகளை எதிர்த்தும் ஆதரித்தும், தமது வயிற்றுப் பிழைப்பை பல தமிழ்நாட்டுத் தமிழர்கள் நடத்துகிறார்கள் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை, எங்களுக்குத் தெரியும்.

            //இவங்கள மாதிரியான வேளாளக் கூட்டம்தான் ஈழத்தோட இன்னைய துக்கத்துக்கு காரணமுன்னு என்னைக்கு ஈழத்தமிழன் புரிஞ்சிக்கிறானா அன்னைக்குத்தான் விமோசனம்.பாவம் ஈழத் தமிழ் மக்கள்!//

            அண்ணன் வெற்றிவேலின் புதிய கண்டுபிடிப்பின் படி யாழ்ப்பாணத்து வேளாளர்கள் எல்லாம் ஈழத் தமிழர்கள் அல்ல, பப்புவா நியூகினியிலிருந்து போனவர்கள். 🙂

      • //தெற்காசியாவில் ராணுவ வலிமையில் மிகைத்த நாடு இந்தியா.//

        Thank God for that அல்லது இந்துக்கள் எல்லோரும் jizyah வரி கட்டவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும். 🙂

  42. //நாடு என்பது அந்த நிலப்பரப்பில் வாழும் மக்களுக்கு சொந்தம்.அவர்கள் எந்த மதத்தை பின்பற்றுகிறார்கள் என்பது கேள்வியில்லை……… .///

    திப்பு அவர் எழுதுவதை மீண்டும் வாசித்துப் பார்ப்பதில்லை போல் தெரிகிறது. மத அடிப்படையில் தான் முஸ்லீம்கள் காஸ்மீரில் பெரும்பான்மையினராக உள்ளனர் அல்லது அவர்களும் அங்கு வாழும்/வாழ்ந்த இந்துக்கள் சீக்கியர் போன்று காஷ்மீரிகள் அல்லது இந்தியர்கள் தான். காஷ்மீரில் மத அடிப்படையில் தான் முஸ்லீம்கள் ஒன்றுபட்டு காஷ்மீரை இந்தியாவிடமிருந்து பிரித்தெடுக்கப் பார்க்கிறார்கள்; அப்படியிருக்க “அவர்கள் எந்த மதத்தை பின்பற்றுகிறார்கள் என்பது கேள்வியில்லை” என்று same side goal போடுகிறார் திப்பு காக்கா.

    ஒரு நாட்டின் உரிமை என்பது அந்த நிலப்பரப்பில்வாழும் மக்களுக்கு மட்டுமல்ல, அந்த மண்ணின் வரலாற்றின் அடிப்படையில் அந்த மண்ணில் வாழ்ந்த மக்களின் வாரிசுகளுக்கும் சொந்தமானது, அவர்கள் இன்று திட்டமிட்டுச் சிறுபான்மையினராக்கப் பட்டிருந்தாலும் கூட. உதாரணமாக இன்று கனடாவில், அந்த மண்ணின் பாரம்பரிய மக்களாகிய பூர்வீக கனேடியர்கள் (native Canadians) சிறுபான்மையினராக்கப்பட்டு, அவர்களின் கையில் ஆட்சி இல்லாதிருந்தாலும் கூட, அவர்களா அல்லது வந்தேறிய குடியேறிகளா கனடாவின் சொந்தக்காரர்கள் என்ற கேள்வி எழும்போது. அவர்கள் தான் அந்த மண்ணின் உரிமையாளர்கள் என்பதை யாரும் மறுப்பதில்லை.

    முகலாயர்கள் காஷ்மீருக்குள் நுழைந்து, மக்களையும் மதம் மாற்றி, அவர்களும் பெருமளவில் குடியேறி காஸ்மீரில் முஸ்லீம்கள் பெரும்பான்மையினராகு முன்பு காஸ்மீரில் யார் வாழ்ந்தார்களோ அவர்களுக்குத் தான் காஷ்மீர் சொந்தம். அந்த பூர்வீக காஷ்மீர மக்களின் மதம் இந்தியாவில் உருவாகிய மதங்களான இந்து அல்லது பெளத்தம், அதனால் அவர்களின் ஒப்புதல் இல்லாமல், வெறும் எண்ணிக்கையின் அடிப்படையில் வந்தேறி முஸ்லீம்களிடம் அவர்கள் வாழும் பகுதிகளையும் தாரை வார்ப்பது போன்ற கொடுமை வேறேதுவுமிருக்க முடியாது. தமது சொந்த மண்ணிலேயே சிறுபான்மையினராக்கப்பட்டது மட்டுமல்ல, தமது மண்ணிலிருந்து வந்தேறிகளால் விரட்டியடிக்கப்படும் கொடுமை மீண்டும் நடைபெற எந்த உண்மையான இந்தியனும் அனுமதிக்கக் கூடாது, அனுமதிக்கவும் மாட்டார்கள் என நம்புகிறேன்.

    • ஈழத்தமிழர்கள்(புலத்தில் வாழ்பவர்களில் பெரும்பாலானவர்கள்)எத்தகைய பிழைப்புவாதிகள் காரியவாதிகள் என்பதற்கு ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு தான் இந்த வியாசன். அடிமைக்குரிய பிராந்திய விசுவாசம், சாதித் திமிர், சிறுபாண்மையினர் மீதான பார்ப்பன பயங்கரவாதிகளுக்கே உரிய வெறுப்பு – இந்துமதவெறி, ஈழத்தமிழர்க்கும் நேர்மையாக இல்லாமல் புலம்பெயர்ந்து ஐரோப்பிய நாடுகளில் கொழுத்து திரிந்து உடம்பை வளர்த்துக்கொண்டு அந்த செயலிலும் ஏதோ சமூக அக்கறை இருப்பதை போல காட்டிக்கொள்ளும் பிழைப்புவாதம், காரியவாதம் இவை அனைத்தும் தான் இந்த வியாசன். எனவே இவர் இவ்வாறு பேசுவார். ஆனாலும் அடிமைகளான உங்களை இந்திய எஜமான்கள் சேர்த்துக்கொள்ளமாட்டார்கள் மிஸ்டர்வியாசன்.

      • //இந்திய எஜமான்கள் சேர்த்துக்கொள்ளமாட்டார்கள்//
        இந்தியர்களை எஜமானர்களாக இலங்கைத் தமிழர்கள் எவரும் ஏற்றுக்கொண்டதாக வரலாறே கிடையாது. இந்திய எஜமான்களின் கீழ் அவதிப்படுவது தமிழ்நாட்டுத் தமிழர்கள் தான் நாங்கள் அல்ல. 🙂

        • இந்திய மேலாதிக்கவாதிகளுக்கு அடிக்கும் உங்கள் ஜால்ரா சத்தத்திலேயே தெரிகிறது நீங்கள் எப்படிப்பட்டவர் என்று.

          • நான் உண்மையைப் பேசுவதை விடுத்து முஸ்லீம்களுக்குத் தாளம் போட்டால், நான் முற்போக்குவாதி அப்படித்தானே? எனக்கு யாருக்கும் ஜால்ரா போடும் பழக்கமில்லை என்பதை, இந்த குறுகிய காலத்தில் இந்த இணையத்தளத்தில் எனது பதில்களைப் பார்த்தவர்களுக்குப் பிரியும், அதை விட, யாரிடமும், குறிப்பாக உங்களைப் போன்றவர்களிடம் Kudos ஐ எதிர்பார்த்து நான் இங்கு பதிலெழுதவில்லை. 🙂

    • ஏ எப்பா… என்னா கோவம்….யாருப்பா அந்த விரட்டி அடிக்கப்பட்ட சிறுபாஇமையினர்…கிராஸ் பெல்ட்டுங்களா…

  43. ///தமது சொந்த மண்ணிலேயே சிறுபான்மையினராக்கப்பட்டது மட்டுமல்ல, தமது மண்ணிலிருந்து வந்தேறிகளால் விரட்டியடிக்கப்படும் கொடுமை மீண்டும் நடைபெற எந்த உண்மையான இந்தியனும் அனுமதிக்கக் கூடாது, அனுமதிக்கவும் மாட்டார்கள் என நம்புகிறேன்.///

    எவ்வளவு இந்திய அடிமை புத்தி இந்த வியாசனுக்கு. இந்தியாவின் காலை நீங்கள் எவ்வளவு தான் நக்கினாலும் இந்திய அரசு உங்களுக்கு ஈழத்தை வாங்கித்தராது நண்பரே.

    • Hi நெருப்பு,

      // எவ்வளவு தான் நக்கினாலும்//

      Very ugly remark. (You must be a Muhamadan) .

      // இந்திய அரசு உங்களுக்கு ஈழத்தை வாங்கித்தராது//

      No need. Tamils can always live along with Singhalese as brothers and ‘bungaalees’, not like muhamadans.

      • எல்லா முல்லாக்களும், முகம்மதுக்களும் தமது அரபு பெயர்களை மறைத்து வைத்து விட்டு இப்படித் “தமிழனாக” வந்து உலறுவார்கள் என்று, நான் திப்புவுக்குப் பதிலளிக்கும் போதே தெரியும். இந்த உளறல்களுக்கெல்லாம் எனக்குப் பயமில்லை. 🙂

        • என்ன ஒரு பார்ப்பன கொலைவெறி இந்த வியாசனுக்கு. நான் கூறிய வார்த்தைகள் உண்மையா இல்லையா என்பதை ஆர்.எஸ்.எஸ் காலிகளின் வாயிலிருந்து வரும் வார்த்தைகளைப் போன்று மதவெறி வண்மம் கொப்பளிக்க விழும் வியாசனின் வார்த்தைகளே அவரை அம்மணமாக்கும்ம் போது நான் எதையும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போய்விடுகிறது. நன்றி வியாசன்.

      • ஏம்பா உனுக்கு இவ்வளோ காண்டு.

        // எவ்வளவு தான் நக்கினாலும்//
        Very ugly remark. (You must be a Muhamadan) .//

        முசுலிம்களை இழிவு படுத்தோணும்னு வெறிபுடிச்சு ரொம்பத்தா அலையுற

        11.1.1.1- நம்பர் கமண்ட்ல் அறிகுமார்னு ஒர்த்தர் எழுதிக்கிராறு பாரு.

        \\Nizam of hyd the most promiment king of Indian muslims was licking the boots of the british,//

        அப்போவெல்லாம் உனுக்கு கோவம் வரலையே ஏம்பா காண்டுராஜா.

        • கலைச்செல்வன்,

          // முசுலிம்களை இழிவு படுத்தோணும்னு //

          முகமதியத்தைப் பற்றிப் பேசினாலே அதை இழிவு படுத்தியதாகத்தான் தோன்றும்.

          //அப்போவெல்லாம் உனுக்கு கோவம் வரலையே//

          Nizam accepted British rule for keeping his position. Harikumar has likened this to licking the boots of British. Why should I get angry to this reasonable comparision? In what way Viyasan’s comments can be equated to Nizam’s actions?

          • \\முகமதியத்தைப் பற்றிப் பேசினாலே அதை இழிவு படுத்தியதாகத்தான் தோன்றும்.//

            நெருப்புன்னு ஒருத்தர் ”எவ்வளவு நக்கினாலும்” என்று கமண்ட் போடுறார். இவ்வளவு அசிங்கமா பேசுனா அது முஸ்லிமாகத்தான் இருக்கணும்னு சொல்லிருக்கு.இதுல முகமதியத்த பத்தி எதுவும் இல்லையே.

            ஒன்னு நல்லா தெர்யுது.நாட்டுல மதவெறி புட்ச லூசுங்க நெறிய நடமாடுதுங்க.

            \\In what way Viyasan’s comments can be equated to Nizam’s actions?//

            இது எலாம் வியாசன் கொட்டி வைத்த முத்துக்கள்.இந்திய வல்லாதிக்க அரசை நசுக்குகிறரா நக்குகிறாரா.

            \\சீனர்கள் இலங்கையில் முற்றாகக் காலூன்றியவுடன், பெரும்பான்மை இந்துக்களைக் கொண்ட தமிழீழத்தின் விடுதலை தான் இந்தியாவின் தென்பகுதியின் பாதுகாப்பை உறுதி செய்யும் //

            \\அதற்க்காக இந்தியாவை நான் கண்டிக்க மாட்டேன். ஈராக்கி எனக்கென்ன மாமனா, மச்சானா //

      • \\No need. Tamils can always live along with Singhalese as brothers and ‘bungaalees’, not like muhamadans.//

        யோவ் யுனிவர்லூஸ்ஸு.சிங்கள கேடிப்பசங்கள அண்ணன் தம்பி பங்காளி தக்காளின்னு சொல்றியே உன் குடும்பத்துல நாலு பேர சிங்கள காடயனுங்க சுட்டு சாவடிச்சு ரெண்டு பொண்ணுங்கள கற்பளிச்சுருந்தா இப்டி பேசுவியா.

        தமிழீழம் தேவையில்லைன்னு முடிவு பண்றதுக்கு நீ யாருய்யா.

        • கலைச்செல்வன்,

          // தேவையில்லைன்னு முடிவு பண்றதுக்கு நீ யாருய்யா.//
          //உன் குடும்பத்துல ***கற்பளிச்சுருந்தா இப்டி பேசுவியா.//

          அது விதான்டாவாதிக்கான பதில். My point is there is no need of Eelam if it can only happen if India supports it on Viyasan licking India’s boots. அதையும் வாதத்திற்கு இழுக்கிறீர்கள். I don’t have time.

          By the by,
          ஒருமையில் பேசுவதை இனிமேல் தவிர்க்கவும்.

          • \\My point is there is no need of Eelam if it can only happen if India supports it on Viyasan licking India’s boots. //

            ஈழ வரலாறே தெர்யாதா.முப்பது வருஷமா இந்தியாவுக்கு அனுசரனையா இருப்போம்.இந்தியாவுட பாதுகாப்புக்கு தமிழீழம் அமைஞ்சா நல்லது அப்படி இப்டின்னு சொம்படிக்கிரதெல்லாம் தெரியாதா.இங்கயும் கூட சீனா இடமிருந்து நாங்க காப்பாத்துவோம்னு வியாசன் சொம்படிக்கிறது தெரிலையா.

    • ஈழத்தை இந்திய அரசு வாங்கித் தருமென்று எந்த ஈழத் தமிழனும் நம்பியதில்லை. அப்படியிருந்தால் ஈழத்துக்காகப் போராடிய எமது சகோதர்களும், சகோதரிகளும் இந்தியாவின் சொல்லைக் கேட்டு, அதன்படி நடந்திருப்பார்கள். தமிழீழத்தை முஸ்லீம்கள் ஆதரித்தில்லை, அது மட்டுமல்ல, தமிழீழ விடுதலைப் போரின் தோல்விக்கு முஸ்மீம்களும் ஒரு காரணமாகும். முஸ்லீம்கள் தமிழர்களின் முதுகில் குத்தி, சிங்களவர்களுக்கு உதவியவர்கள்., அப்படியிருக்க ஈழத்தமிழர்குள் எதற்காக முஸ்லீம்களை ஆதரிக்க வேண்டும், எந்த வித நியாயமுமில்லாம்ல் காஷ்மீர் பிரிவினைக்கு எதற்காக ஆதரவு தெரிவிக்க வேண்டுமென்று எனக்குத் தெரியவில்லை.

      • ஈழ பிரிவினைக்கு எதற்க்கு ஆதரவு தெரிவிக்கணும் அத சொல்லு மொதல்ல ..

        • ஈழப்பிரிவினையை ஆதரிக்குமாறு உன்னை யாரும் கேட்டார்களா. நான் இலங்கையில் வாழும் தமிழ் பேசும் முஸ்லீம்கள் தமிழீழ விடுதலையை ஆதரிக்கவில்லை, அதனால் நான் எதற்காக முஸ்லீம்களை ஆதரிக்க வேண்டுமென்கிறேன். அது புரியாமல், நீ என்னடாவென்றால், உன்னை நான் ஈழப்பிரிவினையை ஆதரி என்று கேட்டது போல் என்னிடம் கேள்வி கேட்கிறாயே, ஏன்? 🙂

          • நான் ஆதரிக்கிறதா பத்தி இல்ல பிரச்சன…இலங்கையை தவிர்த்த நாடுகளில் உள்ளவர்கள் ஈழ பிரிவினையை ஆதரிக்கனுமா, வேண்டாமா? என்பதுதாண் அதன் பொருள்…

          • இன்னாத்துக்கு முஸ்லீமுங்க ஆதரிக்கனும் மறுபடியும் கொல்றதுக்கா? அது இருக்கட்டும் ஈழத்த பத்தி பேச நீங்க யாருப்பா?

            • ஆதரிக்கவில்லை என்று கடந்த காலத்தை குறிப்பிடுவது அவர்கள் தற்போது ஆதரிக்கவேண்டும் என்பதல்ல பொருள். இதன் பொருள் அறிய நீங்கள் இன்னொரு பிறவி எடுக்க வேண்டும் பிறவி. இஸ்லாமியரின் ஆதரவில் தான் ஈழம் பெற வேண்டும் என ஒரு நிர்பந்தம் ஏற்ட்பட்டால் அனேகமாக அது ஒரு கனவில் முடியும் என ஈழதமிழர்க்கு மட்டும் அல்ல பெருன்பான்மை சிங்களவர்க்கும் தெரியும். அடுத்த பிறவியிலாவது எல்லாம் வல்லவன் உங்களுக்கு குறைந்த பட்ச அறிவை கொடுக்கட்டும்.

  44. Mr. Vijayasan,
    You are doing great in this the post. Keep rocking.
    In addition you save me a lot of time too. .
    //ஒரு நாட்டின் உரிமை என்பது அந்த நிலப்பரப்பில்வாழும் மக்களுக்கு மட்டுமல்ல, அந்த மண்ணின் வரலாற்றின் அடிப்படையில் அந்த மண்ணில் வாழ்ந்த மக்களின் வாரிசுகளுக்கும் சொந்தமானது,********************************************************************
    **************** ************ தமது மண்ணிலிருந்து வந்தேறிகளால் விரட்டியடிக்கப்படும் கொடுமை மீண்டும் நடைபெற எந்த உண்மையான இந்தியனும் அனுமதிக்கக் கூடாது, அனுமதிக்கவும் மாட்டார்கள் என நம்புகிறேன்.//

    Wonderful. This section has moved me tears.

  45. சகோதரர் வியாசரின் வாதம் தர்க்க ரீதியாக உள்ளது.அவர் வாதத்தை கருத்தியல் தளத்தில் சந்திக்க முடியாமல் தனிநபர் தாக்குதலில் இறங்குபவர்களை பார்க்க சிரிப்பாக உள்ளது.

    • அடேங்கப்பா தர்க்க ரீதியா பேசுறாராம்ல வியாசன்.

      அகழ்வாராய்ச்சி நடத்தி நாடு யாருக்கு சொந்தம் என தீர்மானிக்க வேண்டும் என சொல்லும் ஒரு ”அறிவாளி” யை இந்த உலகம் முதன்முறையாக வியாசன் உருவில் காண்கிறது.

      இது தர்க்கமா உளறலா.தர்க்கமாக தேவரீருக்கு தெரிகிறது என்றால் அதுதான் வேலிக்கு ஓணான் சொல்லும் சாட்சியம்.

      ”our kashmir would be incomplete without our pandit brothers” என்று சொல்லும் கசுமீரிகள் எங்கே.அந்த மக்கள் அங்கு பெரும்பான்மையாக இருந்தாலும் வேறு மதத்திற்கு மாறிவிட்டதால் அந்த நாடு அவர்களுக்கு சொந்தமில்லை என வெறிக் கூச்சலிடும் வியாசன் எங்கே.

      • //”our kashmir would be incomplete without our pandit brothers” //

        I guess kashmir pandits fled kashmir for their own betterment and they slaughter them self to accuse their muslim counterpart. AM I CORRECT MR.THIPPU ????

      • வரலாற்றின் அடிப்படையில் காஷ்மீரின் சொந்தக்காரர்கள் யார் என்று தீர்மானிப்பதற்கு, அயோத்தியில் அகழ்வாராய்ச்சி செய்தது போன்று காஸ்மீரில் யாரும் அகழ்வாராய்ச்சி செய்யத் தேவையில்லை. அயோத்தி போல் காஷ்மீரிலுள்ள கோயில்கள் எல்லாம் இன்னும் முற்றாக முஸ்லீம் படையெடுப்பினால் அழிக்கப்படவில்லை. அங்கு நிறைந்திருக்கும் பழமை வாய்ந்த இந்துக் கோயில்களே வரலாற்றின் அடிப்படையில் அது யாருடைய மண் என்பதை அனைவருக்கும் பறை சாற்றுகிறது. ஆனால், நான் கூறுவதெல்லாம், முஸ்லீம்கள் இன்று பெரும்பான்மையினர் என்பதற்காக, அந்த மண்ணின் பாரம்பரியமாக வாழ்கின்ற இந்துக்களின் ஒப்புதல் இல்லாமல் அல்லது அவர்களின் இருப்பை, கலாச்சாரத்தைப் பாதுகாக்கும் வகையில் உறுதிப்படுத்தாமல், முஸ்லீம்கள், வெறும் எண்ணிக்கையின் அடிப்படையில் காஸ்மீரைப் பிரித்துக் கொண்டு போவதை அனுமதிக்கக் கூடாது என்பது தான். காஸ்மீரின் பாரம்பரிய மக்களாகிய இந்துக்களும், பெளத்தர்களும் இஸ்லாமிய காஷ்மீரில் இரண்டாந்தர குடிமக்ககளாக அல்லது பெரும்பான்மையினருடன் கலந்து காணாமல் போகும் நிலை ஏற்படக் கூடாது.

        //”our kashmir would be incomplete without our pandit brothers” என்று சொல்லும் கசுமீரிகள் எங்கே///

        காஷ்மீரிய ஜிகாதிகளின் தீவிரவாதத்தை மறைக்க திப்பு சுல்தான் என்ன தான் வாய்ப்பந்தல் போட்டாலும், அது அவ்வளாவு இலகுவான காரியமல்ல, காஷ்மீரி இந்துக்கள் தாமாகவே விரும்பி, தமது வீடுகளை மண்ணை விட்டு, உடுத்த உடையுடன், சொந்த நாட்டில் அகதிகளாகி காஷ்மீரை விட்டு வெளியேறவில்லை. அவர்கள் முஸ்லீம் ஜிகாதிகளால், பலரைக் கொலை செய்த பின்னர் விரட்டியடிக்கப்பட்டனர் என்ற உண்மை உலகுக்குத் தெரியும்.

        • முந்தய உளறல்

          //காஸ்மீர் யாருக்குச் சொந்தம் என்ற விடயத்துக்கு வரலாறு, அகழ்வாராய்ச்சி, பழமையான வரலாற்றுச் சின்னங்கள் மூலம் ஆதாரம் காட்ட வேண்டிய விடயத்துக்கு அகழ்வாராய்ச்சிப் பக்கம் தலைவைத்துக் கூடப் படுத்திராத அருந்ததி ராயின் கட்டுரையை ஆதாரமாகக் காட்டினார்.//

          இப்போ உதிர்க்கும் முத்து.

          // வரலாற்றின் அடிப்படையில் காஷ்மீரின் சொந்தக்காரர்கள் யார் என்று தீர்மானிப்பதற்கு, அயோத்தியில் அகழ்வாராய்ச்சி செய்தது போன்று காஸ்மீரில் யாரும் அகழ்வாராய்ச்சி செய்யத் தேவையில்லை//

          // முஸ்லீம்கள் இன்று பெரும்பான்மையினர் என்பதற்காக, அந்த மண்ணின் பாரம்பரியமாக வாழ்கின்ற இந்துக்களின் ஒப்புதல் இல்லாமல் அல்லது அவர்களின் இருப்பை, கலாச்சாரத்தைப் பாதுகாக்கும் வகையில் உறுதிப்படுத்தாமல், முஸ்லீம்கள், வெறும் எண்ணிக்கையின் அடிப்படையில் காஸ்மீரைப் பிரித்துக் கொண்டு போவதை அனுமதிக்கக் கூடாது என்பது தான்.//

          இந்துக்களின் இருப்பை, கலாச்சாரத்தைப் பாதுகாக்கும் வகையில் காசுமீர் விடுதலை இருக்குமானால் அதை ஆதரிப்பாரா வியாசன்.

          காசுமீர் மக்கள் அந்த மண்ணின் மைந்தர்கள்.மதம் மாறியதால் அம்மண்ணின் மீது அவர்களுக்கு உரிமை இல்லை என்று ஆகிவிடாது.

          காசுமீர் விடுதலைக்கு இந்துக்களின் ஒப்புதல் வேண்டும் என்கிறாரே வியாசன்.இதுவும் தர்க்க ரீதியில்தான் உள்ளதா என்பதை மெத்த படித்த ”மேதாவிகள்” சொல்ல வேண்டும்.

          • 1. அகழ்வாராய்ச்சி என்பது வரலாற்றுடன் சம்பந்தப்பட்டது. அதனால் வரலாற்றறறிவற்ற, அதாவது வரலாறு என்பது அருந்ததி ராயின் Expertise அல்ல என்ற கருத்தில் அவர் அகழ்வாராய்ச்சின் பக்கம் தலை வைத்துக் கூடப் படுக்காதவர் என்றேன். ஏனென்றால் காஸ்மீர் யாருக்குச் சொந்தம் என்றதை நிரூபிக்க, அருந்ததி ராயின் கட்டுரையை ஆதாரமாகக் காட்டினார் திப்பு. அதைக் கூடச் சரியாகப் புரிந்து கொள்ள முடியாமல் பிதற்றுகிறார் திப்பு. 🙂

            2. என்னுடைய கருத்து வெறும் எண்ணிக்கையின் அடிப்படையில் அல்லாமல், வரலாற்றையும் அடிப்படையாகக் கொண்டு காஸ்மீர்ப் பிரச்சனைக்கு தீர்வு காணப்படவேண்டுமென்பது தான். உதாரணமாக, கனடா, அமெரிக்க போன்ற நாடுகளில்அங்கு பாரம்பரியமாக வாழ்ந்த மக்கள் இன்று குடியேற்ற வாதிகளால் சிறுபான்மையினராக்கப்பட்டாலும் கூட, அந்த மண்ணுக்குச் சொந்தக்காரர்கள் அவர்கள் தான் என்பதை யாரும் மறுக்க முடியாது. இப்படியே போனால், முஸ்லீம்கள் பெரும்பான்மையாகிக் கொண்டு வரும் தஞ்சாவூரைக் கூட, நூறாண்டுகளுக்குப் பின்னால் முஸ்லீம்கள் தம்முடையதென சொந்தம் கொண்டாடும் நிலை ஏற்படலாம்.

            3. காஷ்மீர் இந்தியாவுக்குத் தான் சொந்தம் என்ற நிலைப்பாட்டை இந்தியா எக்காரணம் கொண்டும் மாற்றக் கூடாது. காஸ்மீர் இந்தியாவின் பிரிக்க முடியாத அங்கம், அது இந்துக்களின் புனிதநாடு. முஸ்லீம்கள் எப்படி இஸ்ரேலியர்களின் பாரம்பரிய பூமியாகிய ஜெருசலேமில் உள்ள ஒரு பள்ளிவாசலுக்காக இன்றும் போராடுகிறார்கள் ஆனால் காஸ்மீர் முழுவதும் பழமையான இந்துக் கோயில்களால் காணப்படும் போது அவற்றை எல்லாம் அழிக்குமாறு முஸ்லீம்களிடம் விட்டு, விட்டு இந்தியாவோ அல்லது இந்துக்களோ வெளியேறக் கூடாது. சுதந்திரத்துக்குப் பின்னால், காஸ்மீரில் குடியேறிய பாகிஸ்தான் முஸ்லீம்களும் அவர்களின் வாரிசுகளாலும் கூட முஸ்லீம்களின் எண்ணிக்கை காஸ்மீரில் அதிகரித்துள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது. எந்தவொரு அரசியல் தீர்வுக்கும் முன்னால், அவர்கள் அனைவரும் பாகிஸ்தானுக்கு திருப்பியனுப்பப் பட வேண்டும் என்பது தான் எனது நிலைப்பாடு.

      • “செவப்பா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்” என்று சொன்ன வடிவேல் காமடிக்கு போட்டியா செவப்பா இருக்குறவன் தான் தலைவன் ஆகணும்,சில நேரத்தில் கரிய நிறமுடையன் ஆனாலும் அதையும் ஏத்துக்கணும் என்று ஒரு புது சித்தாந்தத்தை உருவாக்கி அதுக்கு காப்புரிமை பெற்று உள்ளவர் திப்பு.

        அதை போன்ற தர்க்கங்களை நான் பாராட்டவில்லை என்று கோபிக்கிறார் என நினைக்கிறேன்.

  46. தர்க்க ரீதியாக பேச முடியவில்லை என்ற நிலையில் தனி நபர் தாக்குதல் நிகழ்த்தப்படுகிறது. எல்லோரும் நம்மை போலவே நினைக்க வேண்டும், நம்மை போலவே யோசிக்க வேண்டும் என்பது இயலாது. மாற்று கருத்து உள்ளோரிடம் தர்க்க ரீதியாக விவாதியுங்கள் நண்பர்களே. நமது கருத்துக்கு எதிராக பேசினால் நமது எதிரி ஆகிவடப்போவதில்லை. ஆரோக்கியமான விவாதங்களை வரவேற்கிறேன். தனிநபர் தாக்குதலை தவிருங்கள். விவாதத்தின் தரம் தாழும்போது அவ்விவாதத்தில் நான் கலந்து கொள்வதில்லை. மௌனமாகிவிடுகிறேன். நன்றி.

    • அது மட்டுமா தல, கற்றது கையளவு முஸ்லிம திட்டுனா ஜாலியாயிடுவாரு, இந்துவ திட்டுனா பொங்குவாரு…திப்பு சுல்தானை கேவலப்படுத்தினால் மௌனமாயிடுவாரு.,ஏன்னா திப்பு சுல்தான் முஸ்லீமு. ஜாய் ஹிந்து … 🙂

  47. @Ashvin: எனக்கு மதச்சாயம் பூசாதிங்க நண்பா. நான் நானாவே இருக்கிறேன். நான் பிறந்தது இந்து மதம். அவ்வளவுதான். இந்து மதத்திலுள்ள நல்ல விடயங்களை நான் ஆதரிக்கிறேன். அதே சமயம் சாதி பாகுபாடு, தீண்டாமை போன்ற விடயங்களை என் மதத்திலிருந்து விலக்கவே விரும்புகிறேன். விவாதத்தின் தரம் தாழும்போது அவ்விவாதத்தில் நான் கலந்து கொள்வதில்லை என்று தான் சொன்னேன். திப்பு சுல்தான் ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடியதை நான் மறுக்கவில்லை. நம்ம விவாதங்களை ஆக்கபூர்வமாக விவாதிக்க வேண்டும் என்று தானே சொன்னேன்.

  48. //திப்பு சுல்தான் ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடியதை நான் மறுக்கவில்லை//
    திப்பு சுல்தான் மட்டுமல்ல, அன்னி பெசன்ட் கூடத்தான் இந்தியாவின் விடுதலைக்காகப் போராடினார். அதனால் அன்னி பெசன்ட் இந்தியனா? அவரது பரம்பரையினர் இந்தியர்கள் ஆகி விடுவார்களா? திப்பு சுல்தான் இந்தியனா அல்லது அரபுக்களின் இரத்தம் அவரது உடலில் ஓடுகிறதா என்பது விவாதத்துக்குரியது. அதாவது திப்பு சுலதானின் தந்தை இந்தியாவுக்கு வந்த அரபுக்களின் பரம்பரையில் வந்தவன். அல்லது தன்னை ஏனைய இந்திய முஸ்லீம்களை விட உயர்ந்தவனாகக் காட்டிக் கொள்ள, திப்பு சுல்தானின் தந்தை ஹைதர் அலி அப்படி ஒரு பொய்யை அவிழ்த்து விட்டிருக்க வேண்டும். அதே போல் இலங்கையிலும் பல முஸ்லீம்கள் தமது முன்னோர்கள் அரேபியாவிலிருந்து வந்ததாக கதை விடுவதுண்டு. 🙂

    ….Tipu Sultan (Tiger of Mysore) (1782-1799), son of Hyder Ali, written by one of his French military officers, Hyder himself claimed descent from the Quraysh tribe of Arabs…..

    http://mysoreinfo.net/index.php?option=com_content&view=article&id=66:maharaja-of-mysore&catid=19:mysore-history&Itemid=3

    • எங்கள் நாட்டுக்காக,விடுதலைக்காக போராடிய வீரரை ,தூய இனவாதம் பேசுவதன் மூலம் கேவலப்படுத்த முயல்பவர்கள் தாங்கள் தூய்மையான இனத்தவரா அல்லது சிங்கள விதையில் உருவானவரா என்று தெளிவு படுத்த வேண்டும்.

  49. @ வியாசன்: நீங்கள் திப்பு சுல்தானை இந்த விவாதத்தில் இழுத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை நண்பரே. தேவையில்லாமல் விவாதம் வேறு திசை நோக்கி பயணிக்கின்றது.

    @அஷ்வின்: நீங்களும் உங்களது விவாதத்தின் தரத்தை தாழ்த்த வேண்டாம் நண்பா. (//சிங்கள விதை// போன்ற இழிநிலை வார்த்தைகள் வேண்டாமே.

    நீங்கள் இருவரும் தமிழரே. முடிந்தவரை ஆக்கபூர்வமாக விவாதிக்கலாமே

    • //@ வியாசன்: நீங்கள் திப்பு சுல்தானை இந்த விவாதத்தில் இழுத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை நண்பரே. தேவையில்லாமல் விவாதம் வேறு திசை நோக்கி பயணிக்கின்றது.//

      திப்பு சுல்தானை இந்த விவாதத்தில் இழுத்தது திப்பு தானே தவிர நானல்ல. தமிழ்நாட்டு முஸ்லீம்கள் திப்பு சுல்தானின் பரம்பரையில் வந்தவர்கள் என்றார் திப்பு. ஆனால் தமிழ்நாட்டு முஸ்லீம்கள், மதம் மாறிய தமிழர்கள் தான் என்றும் அவரே முன்பு கூறினார். ஆனால் திப்பு சுலதானின் தந்தை குரேஷி அரபுக்கள் என்று நான் எங்கேயோ படித்தது எனக்கு நினைவுக்கு வந்தது. அதனால், தமிழர்களுக்கும், குரேஷி அரபுக்களுக்கும் என்ன பரம்பரைத் தொடர்பு இருக்க முடியுமென்று எனக்குத் தெரியவில்லை. அதனால் தான் நான் திப்பு சுல்தானின் தந்தை, தான் அரபுக்களின் பரம்பரையில் வந்ததாகக் கூறியிருப்பதை நான் ஆதாரத்துடன் குறிப்பிட்டேன். அதை விட திப்பு சுல்தானை அவமதிப்பது எனது நோக்கமல்ல, உண்மையைச் சொல்வது அவமதிக்கும் செயல் என்று சிலர் கருதினால் அதற்கு நான் பொறுப்பாக முடியாது.

      • விளக்கியமைக்கு நன்றி. விவாதம் வேறு திசை நோக்கி பயணித்ததால் அவ்வாறு கூறினேன். தங்களுடைய கருத்துக்களுக்கு பெரும்பாலும் உடன்படுகிறேன்.

      • முசுலிம் எதிர்ப்பு மத வெறி நோய் முற்றிப் போய் வியாசன் சித்த சுவாதீனத்தை இழந்து வருகிறாரோ என பரிதாபப்பட தோன்றுகிறது.

        \\திப்பு சுல்தானை இந்த விவாதத்தில் இழுத்தது திப்பு தானே தவிர நானல்ல// என்று பிதற்றுகிறாரே இந்த பதிவின் விவாதத்தில் முதன் முறையாக திப்பு சுல்தான் என்ற பெயரை இப்போதுதான் எழுதுகிறேன்.ஆனால் நான் இழுத்ததாக பிதற்றுகிறார்.பின்னூட்டங்கள் நம் முன்னால் இருக்கின்றன.யார் வேண்டுமானாலும் சரி பார்த்துக் கொள்ளலாம்.

        அவருக்கு புத்தி பேதலிக்கிறது என்று இதை வைத்து மட்டும் சொல்லவில்லை.திப்பு சுல்தானை இந்த விவாதத்தில் முதன் முதலில் இழுத்தது வேறு யாருமில்லை.சாட்சாத் வியாசனேதான்.பின்னூட்டம் எண் 27.1.1 ல் அவர்தான் திப்பு சுல்தானை முதன் முதலில் இழுக்கிறார்.அதுவும் என்னுடன் விவாதிக்கும்போது அல்ல.jawahar என்பவருடன் விவாதிக்கும்போதுதான் இழுக்கிறார்.

        தான் செய்த ஒரு செயலை தான் செய்யவில்லை என நினைப்பதும் வேறு ஒருவர் செய்ததாக நம்புவதும் மன நோயின் அறிகுறி அல்லவா.வியாசன் நல்ல மருத்துவம் பெற்று விரைவில் குணமடைய வாழ்த்துக்கள்.

        • திப்பு,

          [1]வியாசனுக்கு இலங்கை-தமிழ் முஸ்லிம் மக்கள் மீது உள்ள வெறுப்பு உணர்வு அவருக்கு உள்ள சிங்கள பேரினவாதத்தீன் மீதான வெறுப்பு உணர்வை விட 100 மடங்கு அதிகமானது!

          [2]வியாசன் சிங்கள பேரினவாதத்துடன் கூட சமரசம் செய்து கொள்வார் , ஆனால் சிறுபான்மை இலங்கை-தமிழ் முஸ்லிம் மக்களுடன் ஒரு போதும் இணக்கமாக இருக்க மாட்டார்

          [3] ஏன் எனில் அவருக்கு ஈழ-தமிழ் பற்றை விட ஹிந்து மத பற்று அதிகம்

      • //தமிழ்நாட்டு முஸ்லீம்கள் திப்பு சுல்தானின் பரம்பரையில் வந்தவர்கள் என்றார் திப்பு. ஆனால் தமிழ்நாட்டு முஸ்லீம்கள், மதம் மாறிய தமிழர்கள் தான் என்றும் அவரே முன்பு கூறினார்.//

        நாங்கள் பிரபாகரன் பரம்பரையில் வந்தவர்கள் என்று ஈழ தமிழர்கள் கூறினால், அதற்க்கு பொருள் பிரபாகரனுக்கு பிறந்தவர்கள் என்று பொருளா ,இல்லை அவரை போன்ற கொள்கையுடையவர்கள் போராளிகள் என்று பொருளா..?

        • பிரபாகரனின் கொள்கையுடையவர்கள் என்றும், பிரபாகரனின் இனத்தைச் சேர்ந்தவன் என்றும் பொருள் கொள்ளலாம், அதை நான் மறுக்கவில்லை. ஆனால் கொள்கையால் மட்டும் வீரம் வருவதில்லை. அப்போது, திப்பு சுல்தான் வெள்ளையர்களுடன் போராடியது அவனது மதத்தினாலா அல்லது இந்திய மண்ணிலுள்ள நாட்டுப்பற்றினாலா என்ற கேள்வியெழுகிறது. நாட்டுப்பற்றினால் என்றால், முஸ்லீம்கள் மட்டுமல்ல, எல்லா இந்தியர்களும் திப்பு சுல்தானின் பரம்பரை என்று கூறலாம். ஆனால் ‘எங்களின் திப்பு’ அவர்கள் கூறியது இந்திய முஸ்லீம்கள் திப்பு சுல்தானின் பரம்பரை என்று. மத அடிப்படையில் திப்பு சுல்தான் வெள்ளையர்களை எதிர்த்துப் போராடவில்லை.. அப்படியானால், இந்திய முஸ்லீம்களின் முன்னோர்கள் திப்பு சுல்தானின் வழிவந்தவர்கள் என்று கருத்துப்படுகிறது. ஆனால் தமிழ் முஸ்லீம்களும், இந்திய முஸ்லீம்கள் தான். ஆனால் தமிழ் முஸ்லீம்கள் அரபு வம்சாவழியில் வந்த திப்பு சுல்தானின் பரம்பரையாக இருக்க முடியாது. அப்படியிருந்தால் கூட எனக்குக் கவலையில்லை. திப்பு சுல்தான் இந்தியன் என்பது விவாததத்துக்குரியது, அவர் அரபுக்களின் வம்சாவளியில் வந்தவர் என அவர் தந்தை கூறினார் என்கிறது வரலாற்றுக் குறிப்பைத் தான் நான் குறிப்பிட்டேன்.

          • வியாசன் அவர்களே, இறந்தவர்களை தவறாக பேசுவது சரியல்ல என்று எனக்கு தோன்றுகிறது. திப்பு சுல்தான் என்ன பரம்பரையிலிருந்து வந்தால் என்ன, இந்துவாக இருந்தாலும், இசுலாமியராக இருந்தாலும், இந்திய வம்சாவளியினாராக இருந்தாலும், அரபு வம்சாவளியனராக இருந்தாலும் இறந்த பின் புதைத்த/எரித்த பின்னர் நாம் அனைவரும் தூசு தானே. பரம்பரை பெருமைகள் எல்லாம் பிடி சாம்பல் அல்லது பிடி மண்ணில் கரைந்து விடப்போகிறது. தேவையில்லாத விவாதங்கள் வேண்டாமே, விடுங்கள்.

    • தூய இனவாதம் பேசுபவனிடம் ,அதற்க்கு முன் அவன் சிங்கள கலப்பில்லாதவனா என்று கேட்பதில் என்ன தவறு.

      • அஸ்வினுக்கு தனது பிறப்பில் சந்தேகம் இருக்கிறதோ என்னவோ எனக்குத் தெரியாது. ஆனால் எனக்கு அப்படி எந்த சந்தேகமும் கிடையாது. 🙂

        • அஷ்வின், வியாசன் : விவாதம் வேறு திசையில் செல்கிறது, வேண்டாமே …

  50. இங்கு நடைபெறும்கருத்துப் பரிமாற்றலில் ஒரு தெளிவில்லாமல், அடிக்கடி தாவுகிறவர் திப்பு என்பது எல்லோருக்கும் தெரியும். கேள்விக்குப் பதிலெழுதாமல் நழுவவதில், அல்லது தானே ஒரு விடயத்தைத் தொடக்கி விட்டு, அதற்கு மற்றவர்களுக்கு பதிலளித்தவுடன், அப்படியே அடக்கி வாசித்து விடுவார். ஏனென்றால் தானே கேட்ட கேள்விக்குப் பதிலளிக்க அவருக்குத் தெரியாது அதற்கு காரணம் Senile அல்லது சித்த சுவாதீன்மையாக இருக்காலாம். உதாரணமாக இஸ்லாத்தில் பெண்கள் சமமாக நடத்தப்படவில்லை என்பதற்கு ஆதாரம் தருமாறு சவால் விட்டார் குரானில் ஆதாரம் காட்டியதை அதற்குப் பதிலளிக்காமல் அடக்கி வாசித்தார். முகம்மது நபிகள், உதடு பருத்த கறுப்பின மக்கள் அழகின்மை என்ற அம்சம் கொண்டவர்கள் என்ற கருத்தைக் கொண்டிருந்தார் என்றார் அதற்குப் பதிலளித்ததும், அந்தக் கொப்பை அப்படியே விட்டு விட்டு, அடுத்த கொப்புக்குத் தாவி விட்டார். இவரது தாவல்களைப் பார்க்க ஒரே சிரிப்பாக இருக்கிறது, இந்த லட்சணத்தில் சித்த சுவாதீனம் பற்றி அவர் பேசுகிறார் அதை விட வேடிக்கை வேறெதுவுமிருக்க முடியாது. 🙂

    தான் திப்பு பரம்பரையில் வந்தவர் என்று ஜவகர், பேசவில்லை. திப்புவின் பரம்பரையில் வந்தவர்கள் என்று பீற்றிக் கொண்டவர் திப்பு தான், அதனால் தான் திப்பு இந்தியனல்ல, அவரது தந்தை அரபுக்களின் பரம்பரையில் வந்தவர் என்றேன் அதைக் கூடச் சரியாகப் புரிந்து கொள்ள திப்புவால் முடியவில்லைப் போல் தெரிகிறது. திப்புவின் அரபு பரம்பரை பற்றிய விடயத்தைப் பேச வேண்டிய கார்ணத்துக்குக் காரணம், திப்புவின் “திப்பு சுல்தான் பரம்பரையில் வந்தவர்கள்” என்ற பீற்றல் தான், அதை விட திப்பு சுல்தான் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவன் அல்ல. முஸ்லீம்களைத் திருப்திப்படுத்துவதற்காக ஊடகங்களால் ஊதிப் பெருக்கப்பட்ட அவனது பிம்பம் விவாதத்துக்குரியது.

    • //திப்பு சுல்தான் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவன் அல்ல. முஸ்லீம்களைத் திருப்திப்படுத்துவதற்காக ஊடகங்களால் ஊதிப் பெருக்கப்பட்ட அவனது பிம்பம் விவாதத்துக்குரியது.//
      இந்த வியாசன் ______க்கு எப்படி பதில் சொல்ல வேண்டும் என்று நீங்கள் விளக்க வேண்டும். ஒரு நாட்டின் மாபெரும் தலைவரை பற்றி இந்த ________ கேவலமாக,ஒருமையில் பேசுவதை எந்த அடிப்படையில் அனுமதிக்கிறீர்கள்.

      • திப்பு மீதான வியாசனின் ஒருமைப் பேச்சு தவறுதான் அஸ்வின் !

        ஆமாம் 50.1 உங்கள் பின்னூட்டத்தின் கோடு இட்ட இடங்கள் கூறுவதும் ஆபாசம் இல்லையா அஸ்வின் ?

      • அஸ்வினின் இந்தக் கருத்துக்கு எனது பதிலை வினவு வெளியிடவில்லை. யாருக்குப் பயமோ, யார் கண்டது. அப்படியானால் வினவுக்கு ராஜ ராஜ சோழனை விட திப்பு சுல்தான் பெரியவன் என்ற கருத்தா? ஆனானப்பட்ட ராஜ ராஜ சோழனை மட்டுமல்ல பல தமிழ்ப்பேரரசர்களை தமிழில் ஒருமையில் தான் அழைக்கிறோம். அப்படியிருக்க, திப்பு சுலதானை மட்டும் எதற்கு அவர் என்ற வேண்டும். தமிழில் மன்னர்களை அவன், செய்தான் என்று ஒருமையில் எழுதுவது வழக்கத்திலுண்டு என்று என்று அழைப்பது தெரியாமல் அஸ்வினின் உளறலுக்கு பக்கவாத்தியம் வாசிக்கிறார் செந்தில்குமரன். மாமன்னன் ராஜ ராஜ சோழனே பலரின் விமர்சனத்துக்கும் (முஸ்லீம்கள் உட்பட), வசைபாடுகளுக்கும் உட்படும் போது திப்பு சுல்தான் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவன் என்பவர்களின் முட்டாள் தனத்துக்கு எல்லையேயில்லை என்று தான் கூற வேண்டும்.

        • மன்னிக்கவும். நான் எப்பொழுதுமே யாரையும் ஒருமையில் விளித்ததில்லை. அது ஈழத்தமிழர்களின் பேச்சு வழக்குமல்ல. ஆனால் அஸ்வின் தான் முதலில் தனது கேள்வியில் “அத சொல்லு மொதல்ல ..” என்று கூறியதால், அவரது பாணியில் நானும் பதிலளித்தேன். அப்படி எழுதுவது எனக்கு எவ்வளவு uneasy ஆக இருந்தது என்பது கடவுளுக்குத் தான் தெரியும். அப்படி ஒருமையில் பதில் எழுதியமைக்கு வருந்துகிறேன். நன்றி.

          by viyasan!!!!!!!!!!!!!!!!!!!!!!

          • குமரன் அண்ணாச்சி, சம்பந்தமில்லாத இரண்டு விடயங்களை ஒப்பிட்டுக் குழம்புகிறார். முன்பின் தெரியாதவர்களுடன் விவாதிக்கும் போது நீ, உன்னை, சொல்லு என்று ஒருமையில் பேசுவது தவறு, அது நாகரீகமான செயல் அல்ல. ஆனால் பழைய மன்னர்களை ‘அவன், ஆண்டான், படைஎடுத்தான், கைப்பற்றினான்’ என்று ஒருமையில் எழுதவது தமிழில் ஏற்றுக் கொள்ளப்பட்ட வழக்கம் என்பது உங்களுக்குத் தெரியாது போல் தெரிகிறது. 🙂

            • செந்தில்,அஸ்வின் ,ஹரியீன் கருத்துக்கள் ,சிங்களத்தானின் ஈழ-வன்னி மக்கள் மீதான முள்ளிவாய்கால் மும்முனை தாக்குதல் போல உள்ளதா வியாசன்?

              காமராசர்,ஜீவா இன்று வரலாறு தான் ,காந்தியும் தான் ,லெனின் ,மார்க்ஸ்,அம்பேத்கார்,பெரியார் எல்லாரும் இன்று வரலாறு தான்.

              ஒருமையில் அழைத்து தான் பாருங்கள் வியாசன் !

              ஆமாம் பிரபாகரன் அவர்களை ஒருமையில் அழைக்கின்றோமா இல்லை தமிழ் தேசியத் தலைவர் என்று அழைக்கின்றோமா?

              • அண்ணன் செந்தில் குமரன் முதலில் தமிழைக் கற்க வேண்டும் என்பது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள். மன்னர்களை ‘அவன், ஆண்டான், படைஎடுத்தான், கைப்பற்றினான்’ என்று ஒருமையில் எழுதுவது தமிழில் ஏற்றுக் கொள்ளப்பட்ட வழக்கம். ஆனால் நீங்கள் குறிப்பிட்ட மற்றவர்கள், அதாவது சாமானிய மனிதர்களை, அவர்கள் என்று எழுதிக் கொண்டு, ஏன் மன்னர்களை மட்டும் ஒருமையில் எழுதுகிறோம் என்பதை யாராவது தமிழ்ப்பண்டிதர்கள் தான் விளக்க வேண்டும்.

              • //செந்தில்,அஸ்வின் ,ஹரியீன் கருத்துக்கள் ,சிங்களத்தானின் ஈழ-வன்னி மக்கள் மீதான முள்ளிவாய்கால் மும்முனை தாக்குதல் போல உள்ளதா வியாசன்?//
                சிங்களத்தானின் தாக்குதல் போல ஆத்திரம் நிறைந்ததாக, அடாவடித்தனமானதாக, அநியாயமானதாக, முட்டாள்தனமாக இருக்கிறது. ஏனென்றால் சிங்களத்தான் கூட, கொஞ்சம் சிந்தித்து , உலகநாடுகளின் சட்டங்களை மதித்து, பின்வரும் விளைவுகளைக் கருத்தில் கொண்டு தாக்குதலை நடத்தியிருந்தால், மனித உரிமைகள் விடயத்தில் உலக அரங்கில் தீண்டப்படாதவர்காளாக அவர்கள் இன்று இருக்கும் நிலை ஏற்பட்டிருக்காது. அதனால் நீங்களும் கொஞ்சம் சிந்தித்துப் பார்த்துப் பதிலெழுதுங்கள் குமரனண்ணா! 🙂

        • சேரியை உருவாக்கிய ராசா ராசனும், வெள்ளையனை சமரசமின்றி எதிர்த்து போரிட்ட திப்புவும் ஒன்றா. அப்படியே திப்புவை விமர்சிக்க ________ தகுதி இல்லை. விமர்சனம் நேர்மையற்று வன்மமாக இருக்கும் பட்சத்தில் அவ்வாறுதான் பதிலளிக்க முடியும்.ஒரு எழவும் தெரியாட்டியும் ___________ எல்லாம் தெரிஞ்ச மாதிரியே மத்தவங்கள முட்டாளா நெனச்சி பேசுவாங்க என்பதற்க்கு சரியான உதாரணம் இந்த வியாசன்.

          • திப்பு சுல்தானையும், ராஜ ராஜ சோழனையும் ஒப்பிடுவது சாணிச்சட்டியையும், சருவச்சட்டியையும் ஒப்பிடுவது போன்றது.

              • அஸ்வின் , பார்பனனுக்கும்,வெள்ளாளனுக்கும் மட்டும் சிறப்பு உரிமை கொடுத்த ராஜ ராஜானை வியாசனும் ,யாழ்-வெள்ளாளன் ஆதரிக்காமல் கம்யூனிஸ்ட்களா ஆதரிப்பார்கள் ?

            • வியாசன் ,

              பிற்பட்ட , மிகவும் பிற்பட்ட, தலித்தியர் மக்கள் மீது அதிக வரியும் ,

              பார்பன ,வெள்ளாள சாதிக்கு வரி விலக்கும் அளித்த ராச ராசன்

              உங்களுக்கு உயர்தவன் என்றால் ,

              உங்கள் வெள்ளாள சாதிபற்று தெளிவாக எமக்கு புரிகிறது !

              ராஜபட்சேயும் யாழ்-வெள்ளாளனுக்கு சலுகை அளித்தால்

              ராஜபட்சேயும் ராச ராசனாக அறியப்படுவானா உம்மால் ?

              உங்களின் தவறான அவதனிப்புகளே

              உங்களுக்கு சாபமாகும் நேரம் இது

              • //பிற்பட்ட , மிகவும் பிற்பட்ட, தலித்தியர் மக்கள் மீது அதிக வரியும் ,

                பார்பன ,வெள்ளாள சாதிக்கு வரி விலக்கும் அளித்த ராச ராசன்//

                திரு செந்தில் குமரன் நீங்கள் இட்ட மேல நான் அடைப்பிட்டிருக்கும் மறுமொழிக்கு உரிய ஆதாரம் எங்கு கிடைக்கும் என்று அறிய தருவீர்களா? என்னக்கு சரியாக GOOGLE செய்யத்தெரியவில்லை என்று நினைக்கிறேன்.

                • காந்தன் ,

                  நான் கூறுவது வரலாறு.

                  நீங்கள் googleல் தேடியும் ஆதாரம் கிடைக்காதது எனக்கு வியப்பாக உள்ளது .

                  நான் ராசா ராசன் பற்றி கூறியது வெறும் முன்னுரை தான் !

                  கல்கியீன் பொன்னியீன் செல்வன் மட்டும் நான் படித்து இருந்த போது ராசா ராசன் பற்றி மிகவும் பெருமையாக நினைத்து இருந்தேன்.

                  ஆனால் செங்கல்பட்டு மற்றும் பிற இடங்களின் கல்வெட்டு ஆதாரங்கள் என் கருத்தை மாற்றி அமைத்தது.

                  உம் :

                  https://www.vinavu.com/2011/01/05/raja-raja-cholan/

                  https://www.vinavu.com/2010/09/30/rajaraja-cholan/

                  • அருந்ததி ராயின் கட்டுரைகளின் அடிப்படையில் எப்படி காஸ்மீருக்கு யார் சொந்தக்கர்கள் என்பதைத் தீர்மானிப்பது எவ்வளவு அபத்தமோ அதை விட அபத்தம் வினவிலுள்ள கட்டுரைகளின் அடிப்படையில் ராஜ் ராஜ சோழனை வசைபாடுவதும். அப்படிச் செய்வது அபத்தம் மட்டுமல்ல weird உம் கூட. 🙂

                    தமது வரலாற்றை, தமது முன்னோர்களை தாமே இழிவு படுத்தும் எந்த இனமும் உருப்படப் போவதில்லை. என்னுடைய அவதானத்தில் தமிழ்நாட்டில் தமிழ் அரசர்களை, தமிழர்களின் வரலாற்றைக் கொச்சைப்படுத்துகிறவர்கள் எல்லாம் உண்மையான தமிழர்கள் அல்ல, தமிழ் பேசுகின்ற திராவிடர்களின் எச்சங்கள் சில தமிழ்நாட்டில் வாழ்ந்து கொண்டே தமிழர்களின் வரலாற்றை அவர்களின் முன்னோர்களின் புகழை மறைத்து அவர்களை இகழ்கிறார்கள்.

                    இந்த வரலாற்றுத் திரிப்பில், அல்லது தமிழ் அரசர்கள் செய்த சாதனைகளை இருட்டடிப்பு செய்து, அவர்களின் ஆட்சியில் நடந்த சில விடயங்களை இக்காலத்துடன் ஒப்பிட்டு இழிவு படுத்துவதில், தமிழ்த்தேசியத்தின் எதிரிகளுக்கு மட்டுமல்ல சாதிக்கும் பங்குண்டு. ஏனென்றால் தமிழ்நாட்டில் எல்லாமே சாதியின் அடிப்படையில் தான் நடைபெறுகின்றன. தமிழர்களின் முன்னோர்களையும், தமிழ் அரசர்களையும் கூட எல்லாத் தமிழர்களுக்கும் பொதுவானவர்கள், அவர்கள் தமிழர்கள் என்ற கண்ணோட்டத்தில் தமிழ்நாட்டில் யாரும் பார்ப்பதில்லை. அவர்களையும் சாதியடிப்படையில் தான் பிரித்திருக்கின்றனர்.

                    “ராஜராஜசோழன்- தேவரடியார்கள்– தமிழ் முன்னோர்களை தமிழர்களே கொச்சைப்படுத்தும் கொடுமை.”
                    http://viyaasan.blogspot.ca/2013/08/blog-post.html

                    • யாழ்-வெள்ளாள-வியாசன் தமிழ்கத்தீன் பெரும்பாமை மக்களான பிற்பட்ட , மிகவும் பிற்பட்ட, தலித்தியர் மக்கள் மீது அடக்கு முறை செலுத்திய ராஜராஜனை பாராட்டுவது ஒன்றும் வியப்பு இல்லை !

                  • திரு செந்தில் குமரன் அவர்களுக்கு

                    //நீங்கள் googleல் தேடியும் ஆதாரம் கிடைக்காதது எனக்கு வியப்பாக உள்ளது .//

                    எனக்கு அதில் ஏதும் வியப்பில்லை ஏனெனில் நான் முன்பே ஒபுக்கொண்டவாறு ன்னக்கு சரியாக GOOGLE செய்யத்தெரியவில்லை என்று நினைக்கிறேன்.

                    //ஆனால் செங்கல்பட்டு மற்றும் பிற இடங்களின் கல்வெட்டு ஆதாரங்கள் என் கருத்தை மாற்றி அமைத்தது.//

                    அந்த ஆதாரங்கள் வரலாற்று நிபுணர்களால் உருதிபடுதப்பட்டிருந்தால் அது எதோ ஒரு விதத்தில் எல்லோரும் அறியும் வண்ணம் இணையத்தில் இருக்கும் அல்லது அந்த வரலாறு அவனப்படுதப்பட்டிருக்கும். அதை முழுமையாக அறியும் ஆவளலில் தான் நான் உங்களிடம் அந்த இணைப்பை தருமாறு கேட்டேன். விருப்பம் இல்லாதது உங்கள் உரிமை.

                    • ஆதாரங்கள்:

                      சதாசிவ பண்டாரத்தார்,
                      கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி,
                      மயிலை சீனி.வேங்கடசாமி,
                      குடவாயில் பாலசுப்ரமணியம்,
                      நா.வானமாமலை, பொ.வேல்சாமி, அ.மார்க்ஸ், ஆ.சிவசுப்பிரமணியன், தொ.பரமசிவன் ஆகியோரது நூல்கள் மற்றும் கட்டுரைகள்.

                    • உத்திரமேரூர் கல்வெட்டுகளின் முழுமையான பரிமாணம்:

                      உள்ளாட்சி தேர்தலில் பங்குபெறுபவர்களுக்கான தகுதிகளை விளக்கும் இக்கல்வெட்டை கவனியுங்கள்.

                      1) கால்வேலி நிலமாவது தேவை
                      2) தன் மனையில் வீடு இருத்தல் வேண்டும்
                      3) வயது முப்பத்தைந்துக்கு மேல் எழுபதுக்குள் இருக்க வேண்டும்
                      4) வேதபாஷ்யங்கள், மந்திர ப்ராம்மணம் இவற்றில் எடுத்துரைக்கும் புலமை வேண்டும்
                      5) ஆசாரம் வேண்டும்
                      6) முந்தின மூன்றாண்டுகளுக்கு இப்பதவி வகிக்காதவனாக இருக்கவேண்டும்

                      ஆறில் நான்கு சாதியைச் சார்ந்த தகுதிகள்(தானமாக கொடுக்கப்பட்ட சதுர்வேதி மங்கலத்து நிலங்கள் எல்லாம் பார்ப்பனர்களுக்கே சொந்தம்). இதிலேயே பல்லிளித்துவிட்டது உள்ளாட்சியில் மக்களாட்சியின் இலட்சனம்.

                    • // ஆதாரங்கள்:

                      சதாசிவ பண்டாரத்தார்,
                      கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி,
                      மயிலை சீனி.வேங்கடசாமி,
                      குடவாயில் பாலசுப்ரமணியம்,
                      நா.வானமாமலை, பொ.வேல்சாமி, அ.மார்க்ஸ், ஆ.சிவசுப்பிரமணியன், தொ.பரமசிவன் ஆகியோரது நூல்கள் மற்றும் கட்டுரைகள். //

                      செந்தில் குமரன்,

                      நீங்கள் சுட்டிய வினவு பதிவுகள் கூறும் ஆதாரங்களையே நீங்களும் கொடுக்கிறீர்கள்.. குடவாயில் பாலசுப்ரமணியம் அவர்களின் ‘தஞ்சாவூர்’ என்ற வரலாற்று ஆய்வு நூலை படித்தீர்களா..?! தயவு செய்து படியுங்கள்.. ராஜ ராஜ சோழர் ஏன் ‘ஜனநாதன்’ என்று புகழ்பெற்றார் என்பது புரியும்..

                      1. பல்லாயிரக்கணக்கான கிராமங்களையும், ஊர்களையும், நகரங்களையும் உள்ளடக்கிய பரந்த சோழப் பேரரசில், சில நூறு கிராமங்களை கோயில்,அரசு பணியாற்றிய பார்ப்பனர்களுக்கு பரவலாக, இறையிலியாக வழங்கியதால் ராஜ ராஜ சோழருக்கு பார்ப்பனதாசன் என்று பட்டம் கட்டுவது சரியா..?!

                      2. அவர் காலத்தில் நில உடமையாளர்களாக இருந்த பறையர்களின் நிலங்களுக்கும் வரிவிலக்கு அளித்ததாக கூறும் கல்வெட்டுகள் எதைக் குறிக்கின்றன.. ஒடுக்குமுறையையா..?!

                      3. கோயில் பணிகளுக்கும், கலை வளர்ச்சிக்கும் நிவந்தங்களுடன் பணிக்கப்பட்ட தேவரடியார்கள் ராஜராஜருக்கும் முன்பே நூற்றாண்டுகளாக இப்பணிகளைச் செய்து வந்திருக்கின்றனர்.. அவர் காலத்தில் அவர்கள் வேசிகளாயிருந்தார்கள் என்பதற்கு
                      ஆதாரம் உண்டா..?!

                      4. பெரிய கோவிலைக் கட்டுவதற்கே ராஜ ராஜர் போர் செய்து கொள்ளையிட்டார் என்பது போன்ற அபத்தங்களை ஏற்கிறீர்களா..?! போர்களால் கவர்ந்த செல்வம் மலைபோல் இருக்க, கோவில் கட்டவும், கோயிலின் அன்றாட செலவுகளை சந்திக்க இறையிலியாக வழங்கப்பட்ட சுற்றுப்புற ஊர்களின் வருவாய் இழப்பும் ஆக மொத்த செலவுகள் எத்தனை.. பரந்து விரிந்த சோழப் பேரரசின் ஒருநாள் வரவு/செலவு கணக்குக்கு ஈடாகுமா..?!

                      5. மக்களை வரிச்சுமையால் கசக்கிப் பிழிந்த கொடுங்கோலனாக ராஜ ராஜரை சித்தரிப்பது பகுத்தறிவுக்கு உகந்ததா..?! நிலங்களை அளந்து, வேளாண்மையையும், வணிகத்தையும் ஊக்குவித்து உபரியால் விரிவாக்கப்பட்ட ஒரு பேரரசு மக்களை வரியால் கசக்கிப் பிழிந்திருந்தால் 2 நூற்றாண்டுகளுக்கும் மேல் அமைதியுடன் நிலைத்திருந்திருக்க முடியுமா..?!

                    • //அவர் காலத்தில் நில உடமையாளர்களாக இருந்த பறையர்களின் நிலங்களுக்கும் வரிவிலக்கு அளித்ததாக கூறும் கல்வெட்டுகள் எதைக் குறிக்கின்றன.. ஒடுக்குமுறையையா..?!//

                      நன்றி திரு அம்பி.
                      உங்கள் பின்னுடம் 50.1.2.2.1.2.1.1.2.4 ராஜ ராஜன் மேல் சுமத்தும் அனைத்து குற்றச்சடுகளுக்கும் பதில் அளிக்கிறது. இங்கு மருமொழியிடுவோர் நிறைய பேர் பொய்யும் அறியாமையும் கலந்த ஒரு மனநிலையோடு விதண்டாவாதம் செய்கிறார்கள் என்பது உங்கள் பின்னுட்டம் தெளிவாக அறியத்தருகிறது.

              • கண்டிப்பா ஆதரிப்பானுங்க..பல வெள்ளாளனுங்க ராஜபக்சேவை ஆதரித்து பிழைப்பும் ஒட்டிட்டு இருக்கான்.

                //

                உங்களின் தவறான அவதனிப்புகளே

                உங்களுக்கு சாபமாகும் நேரம் இது// உண்மை …

    • புத்தி பேதலித்து விட்டால் என்ன சொன்னாலும் மண்டையில் ஏறாது போலிருக்கிறது.

      \\தான் திப்பு பரம்பரையில் வந்தவர் என்று ஜவகர், பேசவில்லை. திப்புவின் பரம்பரையில் வந்தவர்கள் என்று பீற்றிக் கொண்டவர் திப்பு தான்// இப்படி பிதற்றுகிறார் வியாசன்.பின்னூட்டம் எண் 49.1.2 நான் சொன்னது.\\இந்த பதிவின் விவாதத்தில் முதன் முறையாக திப்பு சுல்தான் என்ற பெயரை இப்போதுதான் எழுதுகிறேன்.ஆனால் நான் இழுத்ததாக பிதற்றுகிறார்.பின்னூட்டங்கள் நம் முன்னால் இருக்கின்றன.யார் வேண்டுமானாலும் சரி பார்த்துக் கொள்ளலாம்.//

      நான்தான் திப்பு சுல்தானை இழுத்தேன் என்று வியாசன் சொல்வது உண்மையானால் இதோ சொல்லியிருக்கிறாயே என எடுத்துக்காட்ட வேண்டியதுதானே.

      \\கேள்விக்குப் பதிலெழுதாமல் நழுவவதில், அல்லது தானே ஒரு விடயத்தைத் தொடக்கி விட்டு, அதற்கு மற்றவர்களுக்கு பதிலளித்தவுடன், அப்படியே அடக்கி வாசித்து விடுவார். //

      தகுந்த விளக்கம் அளித்து விட்டோம் என கருதும் பட்சத்தில் எது சரி என்பதை படிப்பவர்கள் முடிவு செய்யட்டும் என விவாதத்தை முடித்துக் கொள்வது எனது வழக்கம்.கடைசியாக பின்னூட்டம் போட்டவரே ”வெற்றி” பெறுகிறார் என கருதிக் கொண்டு சவ்வு மிட்டாய் போல இழுத்துக் கொண்டு கிடப்பது ஏன் வழக்கமல்ல.

      கறுப்பினத்தவர் தலைவராக வருவது பற்றி பதில் சொல்லி இருக்கிறேன்.அது போதும் என்று மேற்கொண்டு தொடரவில்லை.

      \\இஸ்லாத்தில் பெண்கள் சமமாக நடத்தப்படவில்லை என்பதற்கு ஆதாரம் தருமாறு சவால் விட்டார் //

      இது பொய்.வியாசன் கற்பனை உலகில் சஞ்சரிக்க வேண்டாம்.இப்படியே போனால் கொஞ்ச நாளில் யாருமே இல்லாத வெட்டவெளியை நோக்கியும் அவர் பேசிக்கொண்டிருக்க கூடும்.
      விவாதங்கள் கண் முன்னால் உள்ளன.வியாசன் சித்த சுவாதீனத்துடன்தான் இருக்கிறார் என்பது உண்மையானால் இதோ இந்த எண்ணுள்ள பின்னூட்டத்தில் ஆதாரம் தருமாறு சவால் விட்டிருக்கிறாய் என காட்டட்டும்.

      • //தகுந்த விளக்கம் அளித்து விட்டோம் என கருதும் பட்சத்தில் எது சரி என்பதை படிப்பவர்கள் முடிவு செய்யட்டும் என விவாதத்தை முடித்துக் கொள்வது எனது வழக்கம்.//
        அது தான் எனது வழக்கமும் கூட என்று வைத்துக் கொள்ளுங்கள். எல்லா உளறல்களுக்கும் மீண்டும், மீண்டும் பதிலளித்துக் கொண்டிருக்க என்னால் முடியாது. 🙂

    • பெரும்பான்மையான ஈழத்தமிழர்கள் சைவமும் தமிழும் பிரிக்க முடியாதவை மட்டுமல்ல பிரியக் கூடாதவை என்ற கருத்தைக் கொண்டவர்கள். அது எங்களின் பாரம்பரியம், அப்படியிருக்க ஈழத்தமிழனாகிய நான் எப்படி விதிவிலக்காக இருக்க முடியும்.

      எங்களின் வரலாற்றைத் திரித்து, இலங்கையில் எமது உரிமையை மறுக்க முனையும் சிங்களவர்களுக்கு ஈழத்தில் எமது தொன்மையையும், எமது வரலாற்றின் பழமையையும், எமது உரிமையையும் நிரூபிக்க ஈழத்திலுள்ள பழமையான கோயில்கள் எங்களுக்கு உதவுகின்றன. அதனால் அவை அழிவிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டுமென நாங்கள் கூறினால், அதை இந்துமதவெறி அல்லது தமிழை விட “ஹிந்து மத பற்று” என்று ஒரு தமிழ்நாட்டுத் தமிழன், அதாவது தனது முன்னோர்களின் கோயில்களை, அதுவும் தமிழர்களின் சிற்ப, கட்டிட, தொழில்நுட்ப, விஞ்ஞான அறிவை உலகுக்குப் பறை சாற்றும்ம பழமபெரும் வரலாற்றுச் சின்னங்களில் தனதுரிமையை இழந்து, தமிழில் கூடப் பாடமுடியாமல், கோயிலுக்கு வெளியே கைகட்டி வாய்புதைத்து நின்று கொண்டு நாத்திகமும் பகுத்தறிவும் பேசுகின்ற ஒரு தமிழன் கூறினால் அதை வெறும் உளறல் என்று உதறித் தள்ளி விட்டுப் போகக் கூடிய அறிவும் மனப்பக்குவமும் ஈழத்தமிழனாகிய எனக்குண்டு. 🙂

      • என்ன வித்தியாசம் வியாசன் !

        இங்கு பார்பனர்கள்

        அங்கு வெள்ளாளர்கள்

        புரிகிறதா வியாசன்!

        என்ன செய்ய வியாசன் !

        சிதம்பரம் கோவில் உரிமைக்கு கூட

        நாத்திகனும் ,கம்யூனிஸ்ட்டும் மட்டுமே போராட வேண்டியுள்ளது

        மற்றவருக்கு மோடி-பார்பன மோக நோய் !

        தமிழக மக்கள் இழந்த உரிமைகளுக்காக போராடினால்

        அதிலும் வியாசனின் நக்கல் ,கிண்டல் ,பகடியா ?

        உங்கள் பகடி……….. ஈழப் போராட்டத்துக்கும் பொருந்துமா வியாசன் ?

        //தமிழில் கூடப் பாடமுடியாமல், கோயிலுக்கு வெளியே கைகட்டி வாய்புதைத்து நின்று கொண்டு நாத்திகமும் பகுத்தறிவும் பேசுகின்ற ஒரு தமிழன் கூறினால் //

      • நந்தனின் வாரிசுகள் சிதம்பரம் கோவில் உரிமைக்கு

        போராடினால் வியாசனுக்கு வரும் உணர்வுகள்

        எத்தகையது?

        ஆம் இத்தகையது :-

        வியாசன் ://தமிழில் கூடப் பாடமுடியாமல், கோயிலுக்கு வெளியே கைகட்டி வாய்புதைத்து

        நின்று கொண்டு நாத்திகமும் பகுத்தறிவும் பேசுகின்ற

        ஒரு தமிழன் கூறினால் அதை வெறும் உளறல் என்று உதறித் தள்ளி

        விட்டுப் போகக் கூடிய அறிவும் மனப்பக்குவமும் ஈழத்தமிழனாகிய எனக்குண்டு//

      • சாதி வெறியன்கள்(வெள்ளாள) ஈழத்தில் அதிகம். இவங்க போராட்டம் இப்படி முடித்ததுக்கும் அதுதான் காரணம். அது புரியாம இவங்க இன்னும் புலி பெரும பேசிட்டு திரியிறாங்க.

        • Caste issues were irrelevant in SL,the only issue ever was the decision to talk or to fight,thats what caused many deaths.

          Personal politics were as much happening as the larger struggle,

          ashvin cant know .

      • திப்பு ,

        வியாசனுக்கு உள்ளது மன நோய் அல்ல

        அது மோடி-இந்து மோக நோய் !

        யார் கசடை தீண்னாவது ஈழம் பெறவேனும் என்ற அல்ப ஆசை

        இறுதி வரை போராடி ஈழத்துக்காக உயிர் விட்ட ஈழ-வன்னி மக்களும் ,பிரபாகரனும் எங்கே ?

        இந்த யாழ்-வியாசன் எங்கே ?

    • மன்னிக்கவும். செந்தில்குமரனின் Weird கருத்துக்களுக்கெல்லாம் பதிலளிக்க எனக்கு நேரமில்லை. 🙂

        • உங்களின் எல்லாக் கருத்துக்களுக்கும் பதிலளிக்க நேரமில்லை என்றேனே தவிர உங்களுக்குப் பதிலளிக்கவே மாட்டேன் என்று கூறினேனா? உங்களுக்குத் தமிழை விட ஆங்கிலத்தில் தான் அதிகம் புலமை போல் தெரிகிறது.

          • Viyasan:செந்தில்குமரனின் “Weird” கருத்துக்களுக்கெல்லாம் பதிலளிக்க எனக்கு நேரமில்லை

            Viyasan:உங்களின் “எல்லாக்” கருத்துக்களுக்கும் பதிலளிக்க நேரமில்லை

            According to Mr.Viyasan “Weird” means “ALL”. Let he make changes on the oxford Dictionary!!!

            • கருத்துக்களுக்கெல்லாம் = கருத்துக்கள் + எல்லாம்

              திருவாளர் செந்தில்குமரனுக்குப் பதிலுமேழுதி, அந்தப் பதிலுக்கு தமிழ் விளக்கம் அளிப்பதிலேயே என்னுடைய நேரம் போய்விடும் போலிருக்கிறது. 🙂

  51. [1]தன்[வியாசன்] மீது யாராவது குற்றம் கூறினால் , முறையாக பதில் கூறாமல் நக்கல் ,கிண்டல் ,பகடி செய்வது வியாசனுக்கே உரிய பார்பனீய குணம் சார்ந்த நடத்தை[behavior ]

    [2]நடத்தையை மாற்றிக் கொள்வாரா ?

  52. வியாசன்,

    தவறு செய்யாமலா யாழ்-முஸ்லீம் மக்கள் இடம் LTTE மன்னிப்பு கேட்டாங்க?

    தவறு செய்யாமலா பா ஜ க இந்திய-முஸ்லீம் மக்கள் இடம் மன்னிப்பு கேட்டாங்க போன மாதம் ?

    ஒரு பக்கம் முஸ்லீம் மக்கள் இடம் மன்னிப்பு கேட்பது மறுபக்கம் முஸ்லீம் எதிர்பு முழக்கம் !

    என்ன மாதிரியான அரசியல் செய்கின்றீர் வியாசன்?

    • குமரன் அண்ணா,

      உங்களின் கேள்விகளுக்கு எனது பதில்களை வினவு வெளியிடவில்லை, எனது வலைப்பதிவில் உங்களின் கேள்விகள் எல்லாவற்றுக்கும் பதிலுண்டு, தேடுங்கள் கிடைக்கும். 🙂

      • தம்பி வியாசன் , உங்கள் வளைப்பூச்சரத்தில் பொக்கிசமான பதில்கள் கிடைக்கிறது !

        வினவில் மறு பதிவு செய்து கொண்டு தான் உள்ளேன் !

        பின்னூட்டங்கள் 55.2.1.3.2, 55.2.1.3.3 பார்க்கவும்

  53. viyasan’s approach is very clear.

    He do not have any policy in his process of attaining EElam.

    It depends on time, he may support anyone in Indian politics.!

    One day Jayalalitha another day Modi very next week ramdass and extra extra……

    If u ask about this he replay that his support is based on the issue!

    I understand all this from his blog content and from his replays in vinavu.

    Do not wonder that one day he may support killer Rajabathcha based on some issue!

    Best wishes Mr.Viyasan

    • K.Senthilkumaran,தமிழ் தேசிய, தமிழ இனவாத ,சைவ சாதி வெறியர்கள் எல்லோருமே இப்படிதான். உதாரணம் பழ நெடுமாறன்.

        • தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமை வேறு, இனவாதம் வேறு…தமிழ் தேசியம் சாதி தேசியமாத்தான் இருக்கு.

    • இலங்கையில் சீனர்கள் வேரூன்றி, இந்தியாவின் தென்பகுதியின் பாதுகாப்புக்கு சீனா அச்சுறுத்தலாக வந்தால், முழு இலங்கையையும் இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியாது விட்டாலும், இலங்கையைப் பிரித்து, ஒரு பகுதியாவது இந்தியாவின் நட்பு நாடாக இருக்கச் செய்ய வேண்டிய தேவை இந்தியாவுக்குத தேவை ஏற்பட்டாலே தவிர இந்தியாவின் உதவியுடன் தமிழீழம் ஒரு போதும் உருவாகப் போவதில்லை.

      ஆனால் ஈழத்தமிழர்களின் பிரச்சனையில் தமிழ்நாட்டு மக்களினதும், எல்லா அரசியல் தலைவர்களினதும் ஒன்றுபட்ட ஆதரவு, இந்திய மத்திய அரசு இலங்கைத் தமிழர்களின் நலன்களுக்கெதிராக சிங்களவர்களுக்கு உதவாமல் தடுக்க தேவையானது. அதனால் என்னைப் போன்ற ஈழத்தமிழர்கள், தமிழ்நாட்டில் ஒரு குறிப்பிட்ட கட்சியையோ அல்லது தலைவர்களையோ ஆதரிக்காமல், எங்களுக்காக குரல் கொடுக்கும் எல்லோரையும் ஆதரிக்க வேண்டும். தமிழ்நாட்டில் அவர்களின் கொள்கை, அரசியல் என்பன எப்படி இருந்தாலும், ஈழத்தமிழர்களின் பிரச்சனையில் அவர்களின் நிலைப்பாடு என்ன என்பதில் மட்டும் தான் நாங்கள் கவனம் செலுத்த வேண்டும். தமிழ்நாட்டின் கட்சி அரசியலில் நாங்கள் எமது மூக்கை நுழைக்கக் கூடாது. இந்த தவறைத் தான் ஆரம்ப காலத்தில் தமிழீழ விடுதலை இயக்கங்கள் செய்து, தமிழ்நாட்டில் மட்டுமல்ல, முழு இந்தியாவிலும் இந்துக்களின் ஆதரவை இழந்தனர். அவர்கள் பெரியாரிச, பகுத்தறிவு, திராவிடக் கட்சிகளின் சால்வைத் தலைப்பில் தொங்கியது, பெரும்பான்மை ஈழத்தமிழர்கள் இந்துக்களாக இருந்தும், தமிழீழ விடுதலைப் போராட்டம், பெரியாரிச, கடவுள் மறுப்பு, பார்ப்பன எதிர்ப்பு, திராவிட அரசியலின் தொடர்ச்சியாக கல்வி, பொருளாதார, அரசியல், ஊடக அதிகாரங்கள் கொண்ட தமிழ்நாட்டுப் பார்ப்பனர்களை மட்டுமன்றி, தமிழ்நாட்டுக்கு வெளியேயுள்ள கோடிக்கணக்கான இந்துக்களையும் நினைக்கச் செய்து விட்டது., அதனால் அவர்களின் திராவிட பெரியாரிஸ்டுக்களைப் பழி வாங்கும் வெறியை ஈழத்தமிழர்களின் விடுதலை போராட்டத்தை நசுக்கி, ஈழத்தமிழர்களை அழித்து தீர்த்துக் கொண்டனர். தமிழ்நாட்டுக்கு வெளியேயுள்ள இந்தியர்களின் ஆதரவைத் திரட்டுவதில் ஈழத் தமிழர்கள் தோற்று விட்டார்கள். அந்த தவறை நாங்கள் மீண்டும் செய்யக் கூடாது. அதனால், இந்தியாவில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவளிக்கும் தலைவர்கள் எந்தக் கட்சியில் இருந்தாலும் நாம் ஆதரிக்க வேண்டும், அது ராமதாசோ, ஜெயலலிதாவோ, கருணாநிதியோ, ஏன் மோடியாக இருந்தாலும் கூட. நரேந்திர மோடி தமிழர்களுக்கு ஏதும் தீங்கிழைத்திருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அதனால் தமிழர்கள் அவரை ஆதரிப்பதிலும் தவறில்லை.

      • அக்க….இதுவல்லவோ அரசியல் அறிவு.

        நீங்க, ” நாங்க இந்து,நாங்க இந்து “ன்னு தல கீழ நீனாலும் பாப்பான்களுக்கு நீங்க திராவிடன் – சூத்திரன்தாண்டி . இது புரியாம இது “தமிழ்நாட்டுக்கு வெளியேயுள்ள இந்தியர்களின் ஆதரவை திரத்டுதாம்.”

        • My friend is a Pillai married to a brahmin and we just had a get together in bangalore,people with faith and pride in hinduism can fix their issues between themselves

        • ஒரு பார்ப்பாத்தியை அவர்களின் திராவிடக் கட்சிக்குத் தலைவியாக்கி, அவரை அடுத்தடுத்து முதலமைச்சருமாக்கி,அவரைப் பார்த்ததும் அப்படியே பூரித்துப் போய் அம்மா, தாயே ஆதி பராசக்தி என்று காலிலும் விழுகிறார்கள் தமிழ்நாட்டுச் திராவிடச் சூத்திரர்கள். இந்த லட்சணத்தில் நாங்கள் ஈழத்தமிழர்கள், பெரும்பான்மை இந்துக்கள் என்ற வகையில் பார்ப்பனர்களுடன் வெறும் நட்பைத் தொடர வேண்டுமென்பதை நக்கலடிக்கும் தமிழ்நாட்டுச் சூத்திரர்களைப் பார்க்க வேடிக்கையாக இருக்கிறது. 🙂

            • மன்னிக்கவும். தமிழ்நாட்டுத் திராவிடச் சூத்திரர்கள் பார்ப்பன எதிர்ப்பு, பார்ப்பன எதிர்ப்பு என்று உளறிக் கொண்டு, ஈழத்தமிழர்கள் பார்ப்பான்களை ஆதருக்கிறார்கள் என்று குற்றம் சாட்டிக் கொண்டு, அவர்களால் பார்ப்பனர்களின் தலைமை, அறிவு, உதவி, உறவு என்பன இல்லாமல் வாழ முடியாத கையறு நிலையில் இருந்து கொண்டு, தமது கையாலாகாத்தனத்தை மறைக்க இணையத்தளங்களில் மட்டும் ஈழத்தமிழர்களுடன் மல்லுக் கட்டும் முட்டாள்தனத்தை விளக்க வேறு உதாரணம் எனக்குக் கிடைக்கவில்லை. பெரியாரின் பிரதம சீடர் கூட பார்ப்பனப் பெண்ணுக்கு முன்பு சாமரம் வீசினார், “உலகத்தமிழர் தலைவர்” அவர்களின் குடும்பத்தில் கூட பார்ப்பன இரத்தம் தான் ஓடிக் கொண்டிருக்கிறது. அவரது வாரிசுகளுக்கும், அவரது வாரிசுகளின் வாரிசுகளுக்கும் கூட பார்ப்பனப் பெண்களின் வாழ்க்கைத்துணை தான் தேவைப்பட்டிருக்கிறது. இந்த லட்சணத்தில், அடிமட்டத்திலுள்ள தமிழ்ச் சூத்திரன் மட்டும் தான் தமது இயலாமையை மறைக்க பார்ப்பன எதிர்ப்பு வேடம் போடுகிறார்கள் போல் தெரிகிறது. 🙂

          • செல்வி. ஜெயலலிதாவிடம் ஒரு வேண்டுகோள்!

            உலகில் தமக்கென ஒரு கொடியில்லாத தேசிய இனம் தமிழினமாகத் தானிருக்க வேண்டும். ஏழு கோடி தமிழர்கள் உலகெங்கும் பரவி வாழ்ந்தாலும் கூட எங்களுக்கென, தமிழர்கள் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட பொதுவான கொடி தமிழர்களுக்கு கிடையாது. அதனால் உலகத் தமிழர்கள் அனைவருக்கும் பொதுவான, தமிழர்கள் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படக் கூடிய கொடியை வடிவமைக்க ஒரு குழுவை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி, ஜெயலலிதா அமைக்க வேண்டுமென்பது அன்பான வேண்டுகோள்.

            by viyasan

            http://viyaasan.blogspot.in/2013/09/blog-post_8502.html

            • ஆகா , பாப்பான் கிட்ட பிச்ச எடுத்து ஈழம் வாங்கிடலாம் என்று நினைக்கும் லூசு மாக்கான்.

          • அம்மா இருக்கும்போது மோடி எதுக்கு?

            எல்லோரும் குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி பிரதமராகலாமா அல்லது ஆகக் கூடாதா என விவாதித்துக் கொண்டிருக்கும் போது, இந்திய அரசியல் விமர்சகரும் பத்திரிகையாளருமாகிய சஞ்சய் பின்ரோ அவர்கள், தமிழ்நாட்டுப் பெண் ஒருவர் இந்தியாவின் பிரதமராகும் வாய்ப்பைப் பற்றிப் பேசுகிறார். ஜெயலலிதாவின் இன்றைய ஈழத்தமிழர் ஆதரவு கோசம் நாளைக்கு எதிர் மாறாக மாறலாம், ஆனால் யாராக இருந்தாலும் தமிழர் ஒருவர் பிரதமர் ஆவதில் எங்களுக்கு மகிழ்ச்சியே. அதனால் தான் இந்த Why only Modi, why not Amma? ஆங்கிலக் கட்டுரையை, இயன்றவரை, கருத்து மாறாமல் தமிழாக்கம் செய்ய முயன்றிருக்கிறேன்…..

            by viyasan
            http://viyaasan.blogspot.in/2013/06/blog-post_12.html

  54. வினவு மற்றும் வாசகர் ,

    பின்நவினத்துவம் சார்ந்த கட்டுரைகள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உம் : வியாசன் அவர்களின் பின்னூட்டங்கள்.

    • @செந்தில்குமரன்: Why this much Kolaiveri against Mr.Viyasan? தொடர்ந்து இத்தனை பின்னூட்டங்கள்? 🙂 அடுத்த டாபிக் போகலாம் இல்லையா 🙂 In life, some things are not clear Black or White. We come across some grey regions, grey persons whom if viewed in light will appear dark and if viewed in dark, will appear light. இராசராசன், திப்பு சுல்தான், காந்தி, இப்படி புகழ்பெற்ற பல பேருக்கு இரு பக்கங்கள் உண்டு. அதில் நெகடிவ் விடயங்களை மட்டும் கோடிட்டு காட்டிக்கொண்டிருப்பது ஏன்? செயலலிதா விடயத்தில் வியாசன் ஏமாந்து இருக்கிறார், அவரை போல பல பேர் ஏமாந்து தான் இருக்கின்றனர். விடுங்கள் நண்பரே. “6” என்று எழுதினால் உங்கள் எதிரில் இருப்பவருக்கு அது “9” என்று தெரியும். உங்களை பொறுத்தவரை அது 6. உங்கள் எதிரில் இருப்பவரை பொறுத்தவரை அது 9. இருவருமே தாங்கள் சொல்வது தான் சரி என்று விவாதிக்கக முடியும்.

  55. ////viyasan’s approach is very clear.
    He do not have any policy in his process of attaining EElam.
    It depends on time, he may support anyone in Indian politics.!// 55

    ///வியாசனுக்கு உள்ளது மன நோய் அல்ல
    அது மோடி-இந்து மோக நோய் !
    யார் கசடை தீண்னாவது ஈழம் பெறவேனும் என்ற அல்ப ஆசை// 51.1.4

    Senthilkumaran is a weirdo….. 🙂

    • viasan,

      இன்று உங்களுக்கு உள்ளது மோடி-இந்து மோக நோய்!
      it [நோய்] depends on time !

      நாளை…. after election in India ?
      you may support any one in Indian politics for attaining EElam !

      உண்மை தானே வியாசன் ….,

      யார் கசடை தீண்னாவது ஈழம் பெறவேனும் என்ற அல்ப ஆசை தானே உங்களுக்கு உள்ளது!

      மறுக்க முடியுமா ?

  56. வியாசன் ,

    புத்தி சுவாதீனம் இல்லாதது போல ஏன் நடிக்கின்றிர் ?

    ஒரு முறை திட்டுவது !

    வியாசன் :// ஒரு பார்ப்பாத்தியை அவர்களின் திராவிடக் கட்சிக்குத் தலைவியாக்கி, அவரை அடுத்தடுத்து முதலமைச்சருமாக்கி,அவரைப் பார்த்ததும் அப்படியே பூரித்துப் போய் அம்மா, தாயே ஆதி பராசக்தி என்று காலிலும் விழுகிறார்கள் தமிழ்நாட்டுச் திராவிடச் சூத்திரர்கள்//

    அடுத்த முறை வேண்டுகோள் விடுப்பது :

    வியாசன் ://கொடியை வடிவமைக்க ஒரு குழுவை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி, ஜெயலலிதா அமைக்க வேண்டுமென்பது அன்பான வேண்டுகோள்.//
    http://viyaasan.blogspot.in/2013/09/blog-post_8502.html

    மீண்டும் ஆதரிப்பது :

    வியாசன் ://ஜெயலலிதாவின் இன்றைய ஈழத்தமிழர் ஆதரவு கோசம் நாளைக்கு எதிர் மாறாக மாறலாம், ஆனால் யாராக இருந்தாலும் தமிழர் ஒருவர் பிரதமர் ஆவதில் எங்களுக்கு மகிழ்ச்சியே. அதனால் தான் இந்த Why only Modi, why not Amma? ஆங்கிலக் கட்டுரையை, இயன்றவரை, கருத்து மாறாமல் தமிழாக்கம் செய்ய முயன்றிருக்கிறேன்…..//
    http://viyaasan.blogspot.in/2013/06/blog-post_12.html

    இப்படி மாற்றி மாற்றி பேசுவதற்கு தமிழகத்தில் பச்சோந்திதனம் என்று கூறுவோம் !
    ஈழத்தில் இதற்கு என்ன பெயர் வியாசன்?
    இப்படி பட்ட நபரை weirdo person என்றும் இக் குணத்தை weird என்று கூறுவீர்களா ?

    • //வியாசன் :// ஒரு பார்ப்பாத்தியை அவர்களின் திராவிடக் கட்சிக்குத் தலைவியாக்கி, அவரை அடுத்தடுத்து முதலமைச்சருமாக்கி,அவரைப் பார்த்ததும் அப்படியே பூரித்துப் போய் அம்மா, தாயே ஆதி பராசக்தி என்று காலிலும் விழுகிறார்கள் தமிழ்நாட்டுச் திராவிடச் சூத்திரர்கள்///

      இங்கு நான் ஜெயலலிதாவைத் திட்டவில்லை, அஸ்வின் போன்ற தமிழ்நாட்டுச் சூத்திரர்களின் பம்மாத்தை சுட்டிக் காட்டினேன், அவ்வளவு தான்.

      குமரன் அண்ணாச்சி என்ன புகைக்கிறாரோ எனக்குத் தெரியாது ஆனால் அவருக்கு தாய்மொழி தமிழைக் கூடச் சரியாகப் புரிந்து கொள்ள முடியவில்லை

      • தெரியாம சொல்லிட்டேன் மன்னிச்சுடுங்க “அம்மா” என்று செல்லிடுங்க வியாசன்!!!!

        தேர்தல் நேரம் மன்னிச்சுடுவாங்க!!!!!

      • “பார்ப்பாத்தி” என்று குறிப்பிடுவது ;

        அடுத்த முறை அவரிடமே வேண்டுகோள் விடுப்பது;

        மீண்டும் அவரையே ஆதரிப்பது;

        இப்படி செய்வது பச்சோந்தித்தனம் இல்லையா வியாசன் ?

        இதை எல்லாம் அஸிவின் அவர்களா செய்கின்றார் வியாசன்? நீங்கள் தானே செய்கின்றிர் !

        ஆமாம் அஸிவின் அவர்கள் எப்போது ADMK வில் உங்களிடம் கூறிவிட்டு சேர்ந்தார்!!! ?

        viyasan: //இங்கு நான் ஜெயலலிதாவைத் திட்டவில்லை, அஸ்வின் போன்ற தமிழ்நாட்டுச் சூத்திரர்களின் பம்மாத்தை சுட்டிக் காட்டினேன், அவ்வளவு தான்.//

        • செந்தில் அண்ணாச்சி,

          உங்களுக்கு தமிழ் தெரியாதற்கு நான் எப்படி பொறுப்பாக முடியும். தமிழில் பார்ப்பானுக்கு பெண்பால் சொல் பார்ப்பாத்தி என்பது உங்களுக்குத் தெரியவில்லை அதற்கு நான் என்ன செய்ய முடியும். உங்களின் தாய் மொழி தமிழ் இல்லைப் போல் தெரிகிறது. ராஜராஜ சோழன் மீது உங்களுக்குள்ள இவ்வளவு காழ்ப்புணர்வுக்கு அது கூடக் காரணமாக இருக்கலாம். ராஜ ராஜ சோழன் தலித்தியர் மீது அடக்கு முறை செலுத்தியதாக கூறுகிறீர்கள். அப்படி என்றால் அந்தக் கால சாதி நடைமுறைகளின் படி இந்தியாவையும், இலங்கையையுமாண்ட மன்னர்கள் எல்லோருமே அவ்வாறு, அந்தக் கால வழக்கப்படி தான் நடந்தார்கள். ஆனால் எந்தச் சிங்களவனும் இலங்கை அரசர்கள் எவரையும் தூற்றுவதை நாம் காணோம், இதெல்லாம் பெரியாரிசம் செய்த வேலை, சாதியொழிக்கிறேன் என்ற போர்வையில் தமிழர்களுக்கும் அவர்களது மொழி, கலாசார, வரலாறு, பண்பாடு என்பவறுக்குகுமிடையே பெரிய இடைவெளியை ஏற்படுத்தி, தமிழினத்தின் ஒற்றுமையைக் கெடுத்து, பெரிய அழிவை ஏற்படுத்தி விட்டது பெரியாரிசம். ஆனால் பெரியாரிசத்தால் சாதியையும் ஒழிக்க முடியவில்லை. பெரியாரிசத்தின் பக்க விளைவுகளாகிய திராவிட ஆட்சியிலும், கட்சியிலும் தான் சாதி இன்னும் கோரமாகத் தாண்டவமாடுகிறது.

          ராஜ ராஜ சோழனை வசை பாடி, திப்பு சுல்தானைப் போற்றும் உங்களைப் போன்றவர்களுக்கு ………….

          (திப்பு சுல்தான் குறித்த பொய்களும் துவேஷமும் மதவெறியும் நிறைந்த கருத்துக்கள் நீக்கப்பட்டிருக்கிறது – வினவு)

          • திப்பு சுல்தானைப் பற்றிப் பேசினால் அது துவேசமும் மதவெறியும், ஆனால் ராஜ ராஜ சோழனை இழிவுபடுத்தினால், அது துவேசமும், மதவெறியும் அல்ல. நல்ல நியாயமான, நடுநிலையான செயல். 🙂

          • தம்பி வியாசன் ,

            [1]உங்கள் நடத்தை-பச்சோந்தித்தனம் நன்று என்று உங்களுக்கே புரியவில்லையா ?!!!!

            [2]”பார்ப்பாத்தி” என்று நீங்கள் தூற்றும் தமிழக முதலமைச்சரிடமே “தமிழ் தேசியத்துக்கு” கொடி கேட்டும் ,அவருக்கு “பிரதமர்” ஆக ஆதரவும் அளிக்கும் உங்கள் கொள்கை மிகவும் சிறப்பு வாய்தது ! போதுமா !!!!!!!!

            [3]தமிழ்கத்தீன் பெரும்பாமை ம்க்களான பிற்பட்ட , மிகவும் பிற்பட்ட, தலித்தியர் மக்கள் கல்வி அறிவு பெற தடை செய்து அவர்களை அவர் அவர் குலத்தொழில் செய்ய பணித்த ராஜராஜ சோழன் மிகவும் நல்ல அரசன் !!!! போதுமா !!!

            [4] நீங்கள் படைக்கப்போகும் ஈழத்திலும் ராஜராஜ சோழன் கொள்கை படியே சிறப்பான மனு தர்ம ஆட்சி தான் நடக்கும்… போதுமா !!!

            [5]என்ன வியாசன் வேறு எதாவது ஒப்புதல் வாக்குமூலம் நான் தரவேண்டுமா ?

          • திப்பு சுல்தானைப் பற்றி நான் இன்னும் என் விமர்சனத்தை கூறவில்லை !

            திப்பு சுல்தானைப் பற்றிய என் விமர்சனம் :

            தன் தேசத்துக்காக இறுதி வரை போராடி உயிர் விட்ட எம் தமிழ்த் தேசியத் தலைவர் பிரபாகரனுக்கு இணையான வீரன் தான் திப்பு

            //திப்பு சுல்தானைப் போற்றும் உங்களைப் போன்றவர்களுக்கு

          • // (திப்பு சுல்தான் குறித்த பொய்களும் துவேஷமும் மதவெறியும் நிறைந்த கருத்துக்கள் நீக்கப்பட்டிருக்கிறது – வினவு) //

            ராஜ ராஜ சோழன் குறித்த துவேஷமும், விஷமும் நிறைந்த வினவின் பதிவுகள் எப்போது நீக்கப்படும்..?! மேலும் திப்பு சுல்தான் குறித்து வட கேரளத்தில் உள்ள உங்கள் புரட்சிகர சகாவுகள் என்ன கூறுகிறார்கள் என்றும் பதிவிடலாமே..

          • // தமிழில் பார்ப்பானுக்கு பெண்பால் சொல் பார்ப்பாத்தி என்பது உங்களுக்குத் தெரியவில்லை அதற்கு நான் என்ன செய்ய முடியும். //

            ஜெயலலிதா தன்னை ’ஆமாண்டா நான் பாப்பாத்திதான், அதுக்கு என்ன இப்ப’ என்று கூற வேண்டியிருந்த நிலைமைக்குக் காரணம் அவருக்கெதிரான ஆணாதிக்க பார்ப்பன துவேஷம்தான்.. இதையே அவர் தன்னை பாப்பாத்தி என்று ஆணவமாகக் கூறிக்கொண்டார் என்று திரிப்பதும் திராவிடப் பம்மாத்தாளர்கள்தான்.. நீங்கள் ‘பாப்பாத்தி’ என்று quotation-ல் கூறியிருந்தால்கூட செந்தில் குமரன் இக் கேள்வியை கேட்டிருக்கமாட்டார்..

          • //”திப்பு சுல்தான் குறித்த பொய்களும் துவேஷமும் மதவெறியும் நிறைந்த கருத்துக்கள் நீக்கப்பட்டிருக்கிறது – வினவு”//
            நன்றி வினவு. பார்ப்பன -வெள்ளாள அரிப்புக்கு சொரிஞ்சுக்குறதுக்கான இடம் இதுவல்ல என்று சாதி -பொந்து மத வெறியர்களுக்கு புரிந்திருக்கும்.

          • திப்பு சுல்தான் இந்த நாட்டை அடிமையாக்க முயன்ற வெள்ளையனை விடாப்பிடியாக எதிர்த்து போரிட்ட மாவீரர்.அந்த போராட்டத்துல தன் உயிரையும் தியாகம் செய்த தியாகி.இறுதிப் போர்ல அவர் விரும்பி இருந்தால் தப்பி சென்று மறைந்து வாழ்ந்திருக்கலாம்.ஆனால் அவரோ தன் படை வீரர்களை பலி கொடுத்து தான் மட்டும் வாழ விரும்பாமல் வீரர்களோடு வீரனாய் போரிட்டு மடிந்தார்.இந்த நாட்டை நேசிக்கும் ஒவ்வொரு மனிதனின் மனதிலும் லட்சிய புருசனாய் இன்றும் வாழ்கிறார்.

            அவரை வியாசன் என்ற அரை வேக்காடு சுயநலம் விமர்சனம்ங்கிற பேர்ல தரக்குறைவா பேசுது.

            சொந்த நாட்டுல சிங்களவன் தமிழர்களை கொன்று குவிப்பது தமிழ் பெண்களை கற்பழிக்கிறது கடும் அடக்குமுறைகளை ஏவி விடுறது சோறு தண்ணி கிடைக்காம ஜனங்க கஷ்டப்படுரது பத்தி எந்த கவலையும் இல்லாமல் கனடாவுக்கு ஓடிப்போன வியாசனுக்கு திப்பு சுல்தானை பத்தி பேசுறததுக்கு என்ன தகுதி இருக்கு.

            தானும் தன் குடும்பமும் வாழ்ந்தால் போதும்னு ஓடிப்போன வியாசனே
            சிங்களனை எதிர்த்து துப்பாக்கி பிடிக்காத நீங்க ஒரு கோழை .சொந்த நாடும் மக்களும் அடிமையாக அவதிப்பட்டபோது பசுமையான மேச்சல் நிலம் பார்த்து ஓடிப்போன சுயநலக்காரன்.ஆனால் திப்பு சுல்தானோ வெள்ளையனை எதிர்த்து வாள் பிடித்த மாவீரன்.வெள்ளையனுக்கு கால் நூற்றாண்டுகாலம் சிம்ம சொப்பனமாக விளங்கியவர்.அவனை பல போர்க்களங்களில் ஓட ஓட விரட்டியவர். நாட்டுக்காக உயிரையே கொடுத்தவர்.அவர் பெயரை உச்சரிக்க கூட உம் போன்ற சுயநல பிண்டங்களுக்கு உரிமை இல்லை.

            • அருமையாக சொன்னீர்கள் கலைசெல்வன். போன வருடம் மைசூர் சென்றிருந்தேன். திப்பு சுல்தான் கோட்டை,அவர் சமாதி ,அவர் வீரர்களுடன் வீரராக கொல்லப்பட்ட இடம்(உடல் கண்டெடுக்கப்பட்ட இடம்) எல்லாம் பார்த்தேன், அவருடைய சம்மர் அரண்மனையில் அவர் வெள்ளையனிடம் போரிட்டதை ஓவியங்களாக பதித்துள்ளனர். அவரின் மகன்கள் எல்லோரும் கொல்லப்பட்ட செய்திகள் அனைத்தும் அங்கு வைக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் பிறந்த ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய தெரிந்து கொள்ள வேண்டிய மாவீரர் அவர். அப்படியே மறக்காமல், மைசூர் ராஜாவின் ஜகன்மோகன் அராண்மையையும் பார்த்தேன், அவன்கள் வெள்ளையர்களுடன் அடித்த கூத்துக்கள், கூஜாக்கள், விலை உயர்ந்த பொருட்கள் ,மர சாமான்கள், அவர்கள் பயன்படுத்திய தட்டு,கோப்பைகள் இவைதான் இருந்தன, வீர வரலாறு இல்லை கூஜா வரலாறுதான் இருந்தது.

              • நானும் நவம்பர் மாதம் தஞ்சாவூருக்குப் போயிருந்தேன். தஞ்சாவூர் பெரிய கோயிலில், பெருவுடையார் முன்னால் நின்று சாமி கும்பிடும்போது, இதே இடத்தில் மாமன்னன் ராஜ ராஜ சோழன் ஆயிரமாண்டுகளுக்கு முன்னால் நின்றிருப்பான், அதே இடத்தில் நானும் நிற்கிறேன் என்பதை நினைத்த போது, என்னையறியாமலே எனக்கு புல்லரிப்பு ஏற்பட்டது. அந்த பெருமையை, அந்த உணர்வை விவரிக்க வார்த்தைகளே இல்லை.

  57. திரு . வியாசன்

    //எங்களின் வரலாற்றைத் திரித்து, இலங்கையில் எமது உரிமையை மறுக்க முனையும் சிங்களவர்களுக்கு ஈழத்தில் எமது தொன்மையையும், எமது வரலாற்றின் பழமையையும், எமது உரிமையையும் நிரூபிக்க ஈழத்திலுள்ள பழமையான கோயில்கள் எங்களுக்கு உதவுகின்றன. அதனால் அவை அழிவிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டுமென நாங்கள் கூறினால், அதை இந்துமதவெறி அல்லது தமிழை விட “ஹிந்து மத பற்று” என்று ஒரு தமிழ்நாட்டுத் தமிழன், அதாவது தனது முன்னோர்களின் கோயில்களை, அதுவும் தமிழர்களின் சிற்ப, கட்டிட, தொழில்நுட்ப, விஞ்ஞான அறிவை உலகுக்குப் பறை சாற்றும்ம பழமபெரும் வரலாற்றுச் சின்னங்களில் தனதுரிமையை இழந்து, தமிழில் கூடப் பாடமுடியாமல், கோயிலுக்கு வெளியே கைகட்டி வாய்புதைத்து நின்று கொண்டு நாத்திகமும் பகுத்தறிவும் பேசுகின்ற ஒரு தமிழன் கூறினால் அதை வெறும் உளறல் என்று உதறித் தள்ளி விட்டுப் போகக் கூடிய அறிவும் மனப்பக்குவமும் ஈழத்தமிழனாகிய எனக்குண்டு. //

    தங்கள் மேற்கூறிய கருத்துகளை நான் வரவேற்கிறேன்… அதிலும் குறிப்பாக தமிழர் பண்பாட்டை காக்க வேண்டும் என்கிற தங்களின் நன்நோக்கத்தை நான் பெரிதும் வரவேற்கிறேன் . ஆனால் ஒன்றை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும்.. தமிழர்களின் தொன்மை வாய்ந்த பண்பாட்டை அழிக்க முற்படுவது முசுலீம்களோ அல்லது கிருத்துவர்களோ அல்ல. பார்பனர்கள்தான்.. தமிழ் பண்பாடு என்பதே வேத கால பண்பாட்டை அடிப்படியாக கொண்டது தான் என்று ஆண்ட புளுகை புளுகுகிறார்கள்.. தமிழ் மொழியையும் அதன் கலாச்சாரத்தையும் நாம் மீட்க வேண்டியது பார்பன தாக்குதலில் இருந்து தான்.

    மேலும் . செந்தில் குமரன்,

    //பார்பனனுக்கும்,வெள்ளாளனுக்கும் மட்டும் சிறப்பு உரிமை கொடுத்த ராஜ ராஜானை வியாசனும் ,யாழ்-வெள்ளாளன் ஆதரிக்காமல் கம்யூனிஸ்ட்களா ஆதரிப்பார்கள் ?/

    என்ன பேசுகிறீர்கள்… அறிவில் சிறந்த பார்பனர்,வெள்ளாளர் ஆகிய இருவரும் தான் அந்நாளில் நீதி துறை, நிர்வாக துறை(Civil departments) இரண்டையும் கவனித்து கொண்டார்கள். அதனால் அவர்களுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கப்பட்டது.. இன்றும் கூட இந்த இரு துறைகளிலும் இருபவர்களுக்கு தான் மதிப்பும் கௌரவமும் அளிக்க படுகிறது.. அதற்காக ராச ராசன் என்ன மற்ற சாதி உழைக்கும் மக்களை கொன்றா விட்டான்.. அவர்களுக்கு என்று ஒரு குடியிருப்பு ஏற்படுத்தி அவர்கள் வாழ அணைத்து வசதிகளையும் செய்து கொடுத்தான்.. அவர்களை வைத்து தான் தஞ்சை பெரிய கோவிலை கட்டுவித்தான். அதற்கான கூலியையும் அவர்களுக்கு நியாயமான முறையில் கொடுபித்தான் . இதற்கான அதாரம் தஞ்சை கோவில் கல்வெட்டுகளிலேயே காண கிடைக்கிறதே.

    • //
      அறிவில் சிறந்த பார்பனர்,வெள்ளாளர் ஆகிய இருவரும் தான் அந்நாளில் நீதி துறை, நிர்வாக துறை(ஸிவில் டிபார்ட்மென்ட்ஸ்) இரண்டையும் கவனித்து கொண்டார்கள்.// அவங்க மட்டும் எப்படிப்பா அறிவுல சிறந்தாங்க அதையும் சொல்லுங்களேன்.

    • பார்பனனுக்கும்,வெள்ளாளனுக்கும் மட்டும் சிறப்பு உரிமை கொடுத்த ராஜ ராஜானை “—-தாயுமானவ பிள்ளை—-“,வியாசனும் ,யாழ்-வெள்ளாளன் ஆதரிக்காமல் கம்யூனிஸ்ட்களா ஆதரிப்பார்கள் ?!!!!!!!!!!

    • என்ன தாயுமானவ பிள்ளை! கம்யூனிஸ்ட்களும் ராஜராஜனை பாராட்ட வேண்டும் என்று கோருகின்றிர்களா ?

    • // தமிழர்களின் தொன்மை வாய்ந்த பண்பாட்டை அழிக்க முற்படுவது முசுலீம்களோ அல்லது கிருத்துவர்களோ அல்ல. பார்பனர்கள்தான்.. தமிழ் பண்பாடு என்பதே வேத கால பண்பாட்டை அடிப்படியாக கொண்டது தான் என்று ஆண்ட புளுகை புளுகுகிறார்கள்.. தமிழ் மொழியையும் அதன் கலாச்சாரத்தையும் நாம் மீட்க வேண்டியது பார்பன தாக்குதலில் இருந்து தான். //

      பிள்ளைவாள்,

      ராஜ ராஜ சோழர் தமிழ் பண்பாட்டை அழிக்கத்தான் வேதநெறி தழைக்க பார்ப்பனர்களுக்கு நிலமும், அதிகாரமும் தந்தாரா..?! பார்ப்பனர்களால் அழிக்கப்பட்ட தமிழ் பண்பாட்டை முசுலீம்கள், கிறித்தவர்கள் உதவியோடு மீட்கப் போகிறீர்களா..?! வாழ்த்துக்கள்..!

  58. 1]சாதி அடிப்படையில் மக்களை பிரித்து தமிழ்கத்தீன் பெரும்பாமை ம்க்களான பிற்பட்ட , மிகவும் பிற்பட்ட, தலித்தியர் மக்கள் மீது அடக்கு முறை செலுத்திய ராஜராஜனை பாராட்டுவது யாழ்-வியாசனும் அவர் சார்ந்த வெள்ளாளர்களும் தான் !

    2]2007-2009 ஆண்டுகளில் வன்னியும் ,கிழக்கும் ஈழத்தில் “சிவந்த போதும் ” யாழ்பானத்தில் பஜனை பாடிக்கொண்டு இருந்த ஜன்மங்கள் தானே இவர்கள் .

    3]இத்தகைய வியாசன் போன்ற ஈழ வரலாற்று பொறம்போக்குகள் தான் ஈழத்துக்குகாக போரடுகின்றார்கலாம் !

    //தமிழர்களின் வரலாற்றைக் கொச்சைப்படுத்துகிறவர்கள் எல்லாம் உண்மையான தமிழர்கள் அல்ல, தமிழ் பேசுகின்ற திராவிடர்களின் எச்சங்கள் சில தமிழ்நாட்டில் வாழ்ந்து கொண்டே தமிழர்களின் வரலாற்றை அவர்களின் முன்னோர்களின் புகழை மறைத்து அவர்களை இகழ்கிறார்கள்.//

  59. செந்தில் குமரன்…

    நீங்கள் பாராட்டவில்லை என்றாலும் பரவாயில்லை.. கொச்சை படுத்தாமல் இருங்கள் போதும்..என்னமோ கம்யுனிஸ்டுகள் கூடவே இருந்து ராசா ராசன் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு செய்த கொடுமைகளை நேரில் பார்த்ததை போன்றே பேசுகிறீர்களே அதை தான் நான் கண்டிக்கிறேன்.. இன்றளவும் தமிழ் வாழ்கிறதென்றால் அதற்க்கு கரணம் ராஜா ராஜனால் தான் ..

    கரையானுக்கு விருந்தாகி இருக்க வேண்டிய தேவாரம், திருவாசகம் போன்ற ஒப்பற்ற தமிழ் பக்தி இலக்கிய ஓலை சுவடிகளை மீட்டது யார் . அன்றே தஞ்சை பெரிய கோயில், சிதம்பரம் நடராசர் கோவில் போன்ற அனைத்து கோயில்களிலும் ஓதுவார்களை நியமித்து தினப்படி தேவாரம் திருவாசகம் பாசுரங்களை ஒத செய்தது யார் .. இன்று போல் அன்றும் ஆட்டம் போட்ட கேரள மலையாளிகளையும்,சிங்களர்களையும், களமறுத்து கேரளாந்தகன், சிங்களாந்தகன் என்று போற்றப்பட்டவன் யார்.. இதையெல்லாம் செய்தது எங்கள் ஒப்பற்ற தமிழ் குலதனமாகிய ராஜா ராஜா சோழன் தான். அவனை பற்றி பேச உங்கள் யாருக்கும் எந்த தகுதியும் கிடையாது ..

    உங்களை போன்றவர்களுக்கு தமிழை காட்டு மிராண்டி பாஷை என்று சொன்ன ராமசாமிதான் தமிழன் போலும்..

    திரு. வியாசன் உங்களின் மறுமொழிகளை தொடருங்கள்.. மிகவும் அற்புதமாக களமாடிநீர்கள். உங்கள் தமிழ் பணி தொடர என் வாழ்த்துக்கள்..

    • தாயுமானவன் பிள்ளை,

      தமிழ்கத்தீன் பெரும்பாமை ம்க்களான பிற்பட்ட , மிகவும் பிற்பட்ட, தலித்தியர் மக்கள் கல்வி அறிவு பெற தடை செய்து அவர்களை அவர் அவர் குலத்தொழில் செய்ய பணித்த ராஜராஜ சோழன் மிகவும் நல்ல அரசன் !!!! போதுமா !!! நீங்கள் படைக்கப்போகும் ஈழத்திலும் ராஜராஜ சோழன் கொள்கை படியே சிறப்பான மனு தர்ம ஆட்சி தான் நடக்கும்… போதுமா !!!

      //கம்யுனிஸ்டுகள் கூடவே இருந்து ராசா ராசன் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு செய்த கொடுமைகளை நேரில் பார்த்ததை போன்றே பேசுகிறீர்களே அதை தான் நான் கண்டிக்கிறேன்

    • “……..தோற்கடித்த போரில் நகரங்களைக் கொளுத்தியும், குழந்தைகள் எனக்கூடப் பாராது அனைவரையும் கொன்று வெறியாட்டம் போட்டது…..”

      ஈழம் போரில் சிங்கலத்தான் செய்த கொடுரம் போல உள்ளதா தாயுமானவன்?

      மேலே படியுங்கள்….

      “மேலைச் சாளுக்கிய மன்னன் சத்தியாசிரயனைத் தோற்கடித்த போரில் நகரங்களைக் கொளுத்தியும், குழந்தைகள் எனக்கூடப் பாராது அனைவரையும் கொன்று வெறியாட்டம் போட்டது சோழர்படை. கன்னிப்பெண்களைக் கைப்பற்றி மனைவியராக்கிக் கொண்டும் அளவற்ற பொருட்களைக் கவர்ந்து கொண்டும் தன் நாட்டிற்குத் திரும்பினர்”

      !!!!!இதையெல்லாம் செய்தது எங்கள் – நமது ஒப்பற்ற தமிழ் குலதனமாகிய ராஜா ராஜா சோழன் தான்!!!!!!

    • கைத்தொழில் செய்வோர் ஒவ்வொரு தொழிலுக்கும் வரி (இறை) செலுத்த வேண்டி இருந்தது. நெசவாளர் ’தறி இறை’யும், எண்ணெய் பிழிபவர் ’செக்கு இறை’யும், தட்டார், தட்டாரப்பாட்டத்தையும், தச்சர், ‘தச்சு இறை’யும் வரிகளாகச் செலுத்தினர். மக்களிடமிருந்து புரவு, இரவு, குடிமை, திருமணவரி, போர்வரி எனப் பல வரிகளை அரசு வசூலித்த அதே நேரத்தில், ஊர், சபை போன்ற அமைப்புகளும் தனியாக வரி விதித்தன.

      இவ்வாறு விதிக்கப்பட்ட 400க்கும் மேற்பட்ட வரிகளில் பெரும்பாலானவை, பார்ப்பன, வெள்ளாள சாதி தவிர்த்த பிற சாதியினரிடமிருந்துதான் வசூலிக்கப்பட்டன.

      நீங்கள்[வெள்ளாள சாதி] ராஜராஜ சோழனை பாராட்டலாம் தவறு இல்லை !!!!

      //நீங்கள் பாராட்டவில்லை என்றாலும் பரவாயில்லை.. கொச்சை படுத்தாமல் இருங்கள் போதும்

      • இந்த ஆள் சரியான ஒரு விவரங்கெட்ட மனுசனாக இருப்பார் போலிருக்கிறது. இப்பொழுதும் தான் நாங்கள் எல்லா விதமான வரிகளும் கட்டுகிறோம். இக்காலத்திலேயே வரி இல்லாத நாடில்லை, எதற்கெடுத்தாலும் வரி கட்ட வேண்டும். இப்பொழுதும் தான், மேலை நாடுகளில் கூட பணக்கார்கள் குறைய வரி கட்டுகிறார்கள். ஆனால் சாதாரண அடிமட்ட வேலையாள் தனது வருமானத்தில் அதிகளவில் வரிகட்டுகிறார். மக்களிடம் வரி வசூலித்ததால் தான், கங்கை முதல் கடாரம் வரை சோழர்கள் படையெடுக்கக் கூடியதாக இருந்தது, அதையிட்டு இன்று நாங்களும் பெருமைப்படுகிறோம்.

        உலகின் எல்லா நாட்டு அரசர்களும் தான் மக்களிடம் வரி பெற்றார்கள். ராஜ ராஜ சோழன் சிறந்த நிர்வாகி ஆகையால், எல்லா விவரங்களையும் கல்வெட்டில் எழுதி வைத்துப் போனான். அதனால் தான் ஒவ்வொரு முட்டாளும் அதைப் படித்து விட்டு, ராஜ ராஜ சோழனைத் தூற்றுகிறார்கள். அதற்குப் பின்னர் நாடு பிடிக்க வந்தவர்கள் தமிழ்நாட்டுக் கோயில்களில் ராஜ ராஜ சோழன் சேர்த்து வைத்த செல்வங்களை எல்லாம் கொள்ளையடித்த விவரங்களை எழுதி வைக்கவில்லை, அதனால் அவர்களை யாரும் தூற்றுவதில்லை.

        இலங்கை அரசர்கள் இதை விட மோசமான வரிகளையும், ராஜகாரியம் எனப்படும் அரசனுக்கு இலவசமாக வேலை செய்யும் முறையையும் வைத்திருந்தனர் அத்துடன் உரலில் போட்டுக் குழந்தைகளைக் கொன்று பெற்றோருக்கு தண்டனை கொடுப்பது, யானையால் ஏறி மிதிப்பது போன்ற தண்டனைகள் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னால் கூட நடை முறையிலிருந்த்து. ஆனால் எந்த இலங்கையரும், சிங்களவனோ, தமிழனோ, அதை இக்காலத்துடன் ஒப்பிட்டு, அக்கால மன்னர்களைத் தூற்றுவதில்லை, ஏனென்றால் இலங்கையில் படித்தவர்கள் அதிகம் என்பது தான் காரணம் போலும். 🙂

    • ராஜராஜன் பெண்களுக்கு அளித்த சிறப்புகள் :

      ராஜராஜன், 400க்கும் மேற்பட்ட பெண்களை வலுவில் கொணர்ந்து உடம்பில் சூடு போட்டு ‘தேவரடியார்களாக’ மாற்றினான். இப்பெண்கள் கோவிலின் பணிகளோடு நிரந்தரமாகப் பிணைக்கப்பட்டனர்.இறைவனின் பெயரால் விபச்சாரத்தைப் புனிதமாக்கி தஞ்சையில் ‘தளிச்சேரி’யை உருவாக்கினான். கோவில் அடிமைகளென கட்டாயப்படுத்தி இழுத்து வரப்பட்ட இப்பெண்கள், அரசனின் அந்தப்புரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்ட கொடுமைகளும் சோழப் பொற்காலத்தில்தான் நிகழ்ந்தன. கோவில் பூசகர்கள், பெருநிலவுடமையாளர்களின் காமவெறிக்குப் பலி கொடுக்கப்பட்ட ‘தேவரடியார்’ குலப் பெண்களின் ஆயிரம் ஆண்டுகாலக் கொடுமையை 1929 இல் சுயமரியாதை இயக்கமும், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியும் போராடி சட்டம் மூலம் முடிவுக்குக் கொண்டுவந்தனர்.

      இதற்கான ஆதாரம் தஞ்சை கோவில் கல்வெட்டுகள்.
      //அன்றே தஞ்சை பெரிய கோயில், சிதம்பரம் நடராசர் கோவில் போன்ற அனைத்து கோயில்களிலும் ஓதுவார்களை நியமித்து தினப்படி தேவாரம் திருவாசகம் பாசுரங்களை ஒத செய்தது யார் ..

    • //கரையானுக்கு விருந்தாகி இருக்க வேண்டிய தேவாரம், திருவாசகம் போன்ற ஒப்பற்ற தமிழ் பக்தி இலக்கிய ஓலை சுவடிகளை மீட்டது யார் . அன்றே தஞ்சை பெரிய கோயில், சிதம்பரம் நடராசர் கோவில் போன்ற அனைத்து கோயில்களிலும் ஓதுவார்களை நியமித்து தினப்படி தேவாரம் திருவாசகம் பாசுரங்களை ஒத செய்தது யார் .. இன்று போல் அன்றும் ஆட்டம் போட்ட கேரள மலையாளிகளையும்,சிங்களர்களையும், களமறுத்து கேரளாந்தகன், சிங்களாந்தகன் என்று போற்றப்பட்டவன் யார்.. இதையெல்லாம் செய்தது எங்கள் ஒப்பற்ற தமிழ் குலதனமாகிய ராஜா ராஜா சோழன் தான்.//

      இதையெல்லாம் ராஜா ராஜா சோழன் செய்யும் போது நேருல நின்னு பாத்தாராம் இந்த வெள்ளாளன்.

      //உங்களை போன்றவர்களுக்கு தமிழை காட்டு மிராண்டி பாஷை என்று சொன்ன ராமசாமிதான் தமிழன் போலும்..//
      சாதி வெறி பிடிச்ச பாடுங்களுக்கு பெரியார் தமிழர் இல்லைதான். ராஜா ராஜாணே தமிழன் இல்லையாமே ..தெலுங்கு வந்தேரியாம்.

    • மிஸ்‌டர் கீரிப்பிள்ளை , இதுக்கு எங்க சத்தத்தையே காணோம்

      // K.Senthilkumaran March 19, 2014 at 5:19 pm
      50.1.2.2.1.2.1.1.2.3

      உத்திரமேரூர் கல்வெட்டுகளின் முழுமையான பரிமாணம்:

      உள்ளாட்சி தேர்தலில் பங்குபெறுபவர்களுக்கான தகுதிகளை விளக்கும் இக்கல்வெட்டை கவனியுங்கள்.

      1) கால்வேலி நிலமாவது தேவை
      2) தன் மனையில் வீடு இருத்தல் வேண்டும்
      3) வயது முப்பத்தைந்துக்கு மேல் எழுபதுக்குள் இருக்க வேண்டும்
      4) வேதபாஷ்யங்கள், மந்திர ப்ராம்மணம் இவற்றில் எடுத்துரைக்கும் புலமை வேண்டும்
      5) ஆசாரம் வேண்டும்
      6) முந்தின மூன்றாண்டுகளுக்கு இப்பதவி வகிக்காதவனாக இருக்கவேண்டும்

      ஆறில் நான்கு சாதியைச் சார்ந்த தகுதிகள்(தானமாக கொடுக்கப்பட்ட சதுர்வேதி மங்கலத்து நிலங்கள் எல்லாம் பார்ப்பனர்களுக்கே சொந்தம்). இதிலேயே பல்லிளித்துவிட்டது உள்ளாட்சியில் மக்களாட்சியின் இலட்சனம்.//

      • ஆசியாவில் முதல்முறையாக ஜனநாயக முறையில் வாக்கெடுப்பு (குடவோலை முறை) நடத்தியவர்கள் தமிழர்கள் என்று உலகம் போற்றுவதைப் பார்த்துப் பொறுக்க முடியாத சிலரின் பொய்ப்பிரச்சாரங்களை நம்பி, ஆயிரமாண்டுகளுக்கு முன்னால் நிர்வாகத்தில் ஊழல் நடந்தது, அல்லது Favoritism இருந்தது என்று complaint பண்ணும் தமிழரக்ளைப் பார்க்க சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை.

        இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த 21ம் நூற்றாண்டிலேயே, சனநாயக ஆட்சியில் தமிழ்நாட்டில் ஊழலும், Favoritism உம் இருக்கிறது. அதனால் தமிழ்நாட்டுக் கட்சிகள் கூடத் தான் தொகுதிக்கு வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் போது, அவர்களின் சாதியையும், எத்தனை கோடிபணம் செலவு செய்ய முடியும் படிப்பு என்ன, தனித்தொகுதியாக இருந்தால் கட்டாயம் தலித்தாக இருக்க வேண்டுமென்றெல்லாம் கூறுகிறார்கள். இன்னும் ஆயிரமாண்டுகளுக்குப் பின்னால், அப்பொழுது தமிழ்நாட்டில் வாழும் தமிழர்கள் கூட, இப்படியான ஒரு இணையத் தளத்தில் போய், அக்காலத்தில் தமிழ்நாட்டில் , சாதியடிப்படையில் கூட தேர்தல் தொகுதிகள் ஒதுக்கப்பட்டனவாம். அதைப் போல் கொடுமை இருக்க முடியுமா, அதனால், அக்காலத்தில் ஆட்சி செய்த அரசி செயலலிதாவும் அரசன் கருணாநிதியும் கொடுங்கோலர்கள் என்று சொன்னால், அது எப்படியானதோ, அது போன்றது தான் குடவோலை முறையின் குறைபாட்டைக் காட்டி இப்பொழுது சிலர் கும்மியடிப்பதும், ராஜ ராஜ சோழனைக் குறை கூறுவதும்.

        அதனால் அக்கால சமுதாய, அரசியல் கட்டமைப்பை, மக்களின் கல்விநிலை என்பவற்றை மறந்து, இப்பொழுதே நிலைமை இவ்வளவு மோசமாகவிருக்கும் போது, ஆயிரமாண்டுகளுக்கு முன்னால் வேட்பாளர்களிடம் கேட்ட கேள்விகளைக் காட்டி, அது ஒரு பெரிய விடயமாக தூற்றுவதைப் பார்க்க, ஒரு விவஸ்தை கெட்ட செயலாகத் தான் எனக்குத் தெரிகிறது. இலங்கைத்தமிழில் இப்படிச் செய்வதை விவரிக்க ஒரு பழமொழி உண்டு. ஆனால் அதைச் சொன்னால் கெட்ட வார்த்தை பேசுவதாக, தமிழ்நாட்டுத் தமிழர்கள் கோபித்துக் கொள்வார்கள். 🙂

  60. திரு. தாயுமானவ பிள்ளை,

    நான் பார்ப்பனர்களுக்கு வக்காலத்து வாங்கவில்லை. தமிழ்நாட்டில், இணையத்தளங்களில் யாரவது முஸ்லீம்களின் மதவெறி, அவர்களின் முஸ்லீம் விசுவாசம், அதாவது தம்மைத் தமிழர்கள் என்று அடையாளப்படுத்திக் கொண்டே, தமிழர்களா, முஸ்லீம்களா என்று வரும் போது முஸ்லீம்களுக்கு ஆதரவளிக்கும், அதாவது அவர்களின் மொழி, இன அடையாளத்தை விட, தமது மத அடையாளத்துக்கும், மதவழிச் சகோதர்களுக்கும் சார்பாக நடந்து கொள்ளும் தன்மை என்பவற்றைப் பேசினால், அப்படி பேசுகிறவர்களை இந்துத்துவாக்களாகி, பூணூலும் போட்டு விட என்றே சிலர் இணையத்தளங்களில் அலைகிறார்கள்.

    உண்மையில் தமிழர்களிடையே பெரியாரிசத்தின் விளைவாக, பார்ப்பன எதிர்ப்பு வெறி பரிணாம வளர்ச்சியடைந்து இந்துக்கள் என்று தம்மை அடையாளப்படுத்தும் சக தமிழர்களையும் எதிர்க்குமளவுக்கு மாறியுள்ளது. அதனால் தமிழினம் இரண்டு பட்டுக் கிடக்கிறது. இதன் விளைவை தில்லைச் சிதம்பரத்தை பார்ப்பனர்களிடம் மீட்கும் போராட்டத்தில் பார்த்தோம். வாழ்நாள் முழுவதும் தம்மை இந்துக்கள் என அடையாளப்படுத்தும் தமிழர்களைத் தூற்றிய பெரியாரிசஸ்டுக்களும், கம்யூனிஸ்டுகளும், தாமும் தமிழர்கள் என்பதை உணர்ந்து, தில்லையில் தமிழுக்கு இடமில்லை என்று கேள்விப்பட்டதும் பொங்கியெழுந்து தமிழுக்காகப் போராடத் துணிந்தும் கூட ஏனைய இந்து தமிழர்கள் அவர்களை நம்பவில்லை. அவர்களுடன் சேர்ந்து போராடத் துணியவில்லை. இவ்வளவு நாளும் இந்து மதத்தை மட்டும் தூற்றியவர்கள் இன்று, கோயிலை மீட்க ஒன்றுபடுங்கள் என்று கூறியதை பெரும்பான்மையினராகிய சைவத் தமிழர்கள் நம்பவில்லை. அது தான் தில்லையை மீட்கும் போராட்டம் பிசு பிசுத்துப் போனதற்கு காரணமாகும்.

    தமிழ்நாட்டுப் பார்ப்பனர்களின் தமிழெதிர்ப்புக்குக் காரணம் கூட, கடவுள் மறுப்பும, பெரியாரிசம் தான். ஆனால் Anti Tamil பார்ப்பான்கள் எதிர்க்கப்பட வேண்டியவர்கள். தமிழ்ப்பண்பாடு வேதகாலப் பண்பாட்டை அடிப்படையாகக் கொண்டது என்று கூறுபவர்களை, இங்கு மட்டுமல்ல, வேறு இனையத்தளங்களிலும் நான் எதிர்த்திருக்கிறேன். நாம் தமிழர்கள் அவர்களின் புளுகையும், திருகு தாளங்களையும் எதிர்க்க வேண்டும். சோ ராமசாமி போன்ற சமக்கிருதவாதிகளும், தமிழர்களின் நலன்களுக்கெதிராக எப்பொழுதும் இயங்கும் சுப்பிரமணிய சுவாமி போன்ற தமிழெதிரிகளும் எதிர்க்கப்பட வேண்டியவர்கள். அதற்காக, தம்மை தமிழர்களாக அடையாளபடுத்தி, தமிழ்நாட்டில் இருக்கும் போது மட்டுமல்லாமல், வெளிநாடுகளில் கூட வீட்டிலும் தமிழில் பேசி, தமது குழந்தைகளுக்கும், எங்கிருந்தாலும் தமிழைப் போதித்து தம்மைத் தமிழர்களாக மட்டும் அடையாளப்படுத்தும் பார்ப்பனர்களும் உண்டு என்பதை நாம் மறந்து விடக் கூடாது. சாதிக்காக மட்டும் பார்ப்பனர்களை வெறுக்கும் முட்டாள்தனத்தை விட வேறெதுதுவிமிருக்க முடியாது. ஏனென்றால் பார்ப்பனர்களை விட மோசமான சாதி வெறியர்கள், பார்ப்பனர்களல்லாத தமிழர்கள் மத்தியில் தான் அதிகமுள்ளனர்.

    முஸ்லீம்கள் எல்லோரும் தமிழ் ஆதரவாளர்கள் அல்லது பார்ப்பனர்கள் எல்லோரும் தமிழெதிரிகள் அல்ல. பார்ப்பனர்கள் சமக்கிருதத்தை உயர்த்திப் பிடிப்பது போல், முஸ்லீம்களிலும் அரபு மொழியை, உருது மொழியையும் உயர்ந்ததாக கருதி, அவற்றுக்கு தமிழ்நாட்டில் உரிமையும், ஒதுக்கீடும், கல்வி வசதியும் கேட்பவர்கள் இருக்கிறார்கள். என்னைப் பொறுத்த வரையில் தமிழ்க் கிறித்தவர்கள் மட்டும் தான் தமது மதத்தையும், மொழியையும், இனத்தையும் ,கலாச்சாரத்தையும் கலக்காமல், கிறித்தவ விழுமியங்களை ஏற்றுக் கொண்டு, அதே வேளையில் தமது மொழி, இன அடையாளத்துக்கும் உண்மையாக இருந்து அதைக் காப்பவர்கள். அது தான் ஏசுநாதரின் போதனைகளின் மகிமை.

  61. காந்தளூரில் (இன்றைய திருவனந்தபுரத்தின் ஒரு பகுதி) சேரனைத் தோற்கடித்து, உதகை நகர் (கல்குளம் வட்டம்) கோட்டை தகர்க்கப்பட்டு எஞ்சிய நகரெங்கும் தீவைக்கப்பட்டது. இது அவனுடைய மெய்க்கீர்த்தியில் ‘காந்தளூர்ச்சாலை கலமறுத்தருளி’ என்று சொல்லப்படுகிறது.அண்மையில் கண்டறியப்பட்ட கல்வெட்டில் இதன் அடுத்த வரி ‘மலையாளிகள் தலை அறுத்து‘

    “காந்தளூர்ச்சாலை கலமறுத்தருளி
    மலையாளிகள் தலை அறுத்து”

    இந்த சேரர்கள் ?
    நம் தமிழர்கள் !
    கொன்றவன் நமது ஒப்பற்ற தமிழ் குலதனமாகிய ராஜா ராஜா சோழன் தான்!!!!!!

    ஆதாரம் : ராஜராஜ சோழன்மெய்க்கீர்த்தி

    //இன்று போல் அன்றும் ஆட்டம் போட்ட கேரள மலையாளிகளையும்

    • //இந்த சேரர்கள் ?
      நம் தமிழர்கள் !//

      மலையாளிகள் இந்த நவீன காலத்தில், 21ம் நூற்றாண்டிலேயே தமிழர்களுடன் ஒற்றுமையாக இல்லை. ஈழத்தமிழர் இன அழிப்பில் மலையாளிகளின் பங்கு என்ன என்பது எல்லோருக்கும் தெரியும். சென்னையிலுள்ள மலையாளிகள் தமிழர்களைத் தமிழர் (பாண்டி) என்று மதிப்பதில்லை. இப்படியானவ்ர்கள் அக் காலத்தில், போரும், போட்டியும், நாடு பிடித்தலும் நிறைந்த மன்னர் ஆட்சியில் எவ்வளவுக்கு தமிழர்களை எதிர்த்திருக்க வேண்டும் அதானால் தான் ராஜ ராஜ சோழன் மலையாளிகளின் கொட்டத்தை அடக்கியது மட்டுமல்ல, அந்த வெற்றியைக் கொண்டாட தனக்கு கேரளாந்தகன் என்றும் பெயரிட்டுக் கொண்டான். அந்த வீரத்துக்காகவே நான் தஞ்சாவூருக்குப் போகும் போதெல்லாம் அந்த மண்ணை எடுத்து நெற்றியில் இட்டுக் கொள்கிறேன். செந்தில்குமரன் தமிழனல்ல, வடுகர் அல்லது மலையாளி திராவிடர் எச்சமாகத் தானிருப்பார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். அதானால் இவ்வளவு காட்டமாக ராஜ ராஜ சோழனை எதிர்க்கிறார். இவரெல்லாம் எதிர்த்து ராஜ ராஜ சோழனின் புகழ் அழியப் போவதில்லை. 🙂

      • vyasan,

        The term pandi comes from centuries long fight between ramanathapuram marvars and the travancore nairs.

        It is a racially & Ethnically abusive term and u ll find it funny that even the so called tamil brahmins are called pandis by their own relatives,kerala iyers.

        This is irrelevant today,if u want a honest answer,rajiv’s assasination polarized the whole of India against the government’s active involvement or support to the LTTE,it is a big event marking the political failure of the LTTE.

        To commit a mistake like that and expecting mercy/pardon doesn’t work.U should also the blame the so called angry/aggressive/emotionally appearing but cunning folks of TN who caused the assasination attempt but are still trying to make political benefit out of it.

        Sad to say but the Tam Brahm bureaucratic lobby was also looking to punish the Dravidian lazy bums and ended up pushing it against them,but the real victims of this game were people with whom they had no enemity.

      • வரலாற்று ரீதியாக பார்க்கும் போது சேர அரசர்கள் ஆண்ட பகுதிதான் இன்றைய கேரளா.

        நாயர், நம்பூதிரி வருகை வரை அது[கேரளா] தமிழ் பேசும் மக்கள் வாழ்ந்த பகுதி தான் கேரளம் !

        சேர நாட்டு தமிழ் மக்களை கொன்றவன் நமது ஒப்பற்ற தமிழ் குலதனமாகிய ராஜா ராஜா சோழன் தான்!

  62. திரு செந்தில் குமரன் அவர்களுக்கு

    உங்கள் எந்தவொரு மறுமொழிக்கும் கீழ் பதிலளிக்கும் செயல் முறை வினவு தளத்தில் காணப்படவில்லை. வினவு உங்கள் நெருங்கிய நட்பு வலை பின்னலில் இருந்தால் தயவு செய்து அவர்களுக்கு அறிவுறுத்தவும்.

    • மன்னிக்கவும் தவறு என்னுடையது தான். தளத்தின் வடிவமைப்பை நான் சரியாக புரிந்துகொண்டிருக்கவில்லை

  63. வினவு……..
    //(திப்பு சுல்தான் குறித்த பொய்களும் துவேஷமும் மதவெறியும் நிறைந்த கருத்துக்கள் நீக்கப்பட்டிருக்கிறது – வினவு//

    மத வெறியன் திப்பு சுல்தானை பற்றி திரு . வியாசன் அவர்கள் கூறிய உண்மை செய்திகளை பொய்கள் என்றும் துவேஷம் என்றும் கூறி நீக்கி தன்னுடைய இசுலாமிய அடிவருடி தனத்தை மீண்டும் ஒரு முறை நிருபித்து இருக்கிறது வினவு..

    திப்பு நிச்சயமாக ஒரு மத வெறியன் தான்.. அவன் வெள்ளையர்களுடன் போரிட்டது இங்கிருக்கும் மக்கள் மீதான பற்றுதலுக்காக எல்லாம் கிடையாது தன்னுடைய ஆட்சி அதிகாரம் பறி போய் விட கூடாது என்கிற கையறு நிலை மட்டுமே … தமிழ்ஹிந்து தளம் திப்பு சுல்தானின் மத வெறியை தோலுரித்து காடும் விதமாக மிக சிறந்த கட்டுரை ஒன்றை தக்க ஆதாரங்களுடன் வெளியிட்டு இருக்கிறது… முடிந்தால் இந்த கட்டுரைக்கு மறுப்பு கூறி பாருங்கள்.

    http://www.tamilhindu.com/2013/06/tipu-memorial-in-tn-a-shame/.

    வினவின் பார்வையில் வந்தேறி திப்புசுல்தான் மிக நல்லவன்,தேச பற்றாளன் வெள்ளையர்களை எதிர்த்த மாவீரன். ஆனால் ராஜ ராஜன் ஒரு அயோக்கியன், பார்பன அடிவருடி, அப்பாவி ஏதுமறியா சிங்களர்களை படையெடுத்து சென்று கொன்ற கொடியவன் அப்படி தானே.. ராஜ ராஜன் ஆதிக்க பார்பன வெள்ளாள சாதிகளை ஆதரித்தவன் என்று வார்த்தைக்கு வார்த்தை விசத்தை கக்கும் வினவு.. அப்பாவி இந்துக்களை வாள்முனையிலும், ஜிசியா என்கிற வரி முனையிலும் வதைத்த அவ்ரங்கசீப் போன்ற இசுலாமிய மத வெறியனை பற்றி ஒரு வார்த்தையாவது கூறியதுண்டா.. உண்மையில் துவேஷ புத்தி எங்களுக்கு இல்லை வினவிற்கு தான்.

  64. //ராஜராஜன், 400க்கும் மேற்பட்ட பெண்களை வலுவில் கொணர்ந்து உடம்பில் சூடு போட்டு ‘தேவரடியார்களாக’ மாற்றினான்.///

    //இதற்கான ஆதாரம் தஞ்சை கோவில் கல்வெட்டுகள்.///

    செந்தில் சார்,

    சும்மா வழக்கம் போல் உளறாமல் தஞ்சை கோவில் கல்வெட்டுக்களில் “ராஜராஜன், 400க்கும் மேற்பட்ட பெண்களை வலுவில் கொணர்ந்து உடம்பில் சூடு போட்டு ‘தேவரடியார்களாக’ மாற்றினான்” என்பதற்கு ஆதாரத்தைக் காட்டுங்கள்.

    சமுதாயத்தில் நல்ல அந்தஸ்துடன் கலைகளில் சிறந்தும் தேவாரப் பாடல்களில் சிறந்தும் விளங்கிய தேவரடியார்களைத் தேவடியாள்களாக மாற்றியது இஸ்லாமியப் படையெடுப்பு தான். இஸ்லாமியப் படையெடுப்பினால், கோயிலகள் கொள்ளையடிக்கப்பட்டு, தமிழர்களின் ஆட்சி வீழ்ந்து, நாட்டில், நீதி நிர்வாகம் கெட்டதால் தான், ஆதரவற்ற நிலையில் அந்தப் பெண்கள் அந்நியர்களின் கைகளில் பட்டு சீரழிந்து தேவடியாள்களானார்கள்.

    தமிழர்களின் வரலாற்றைத் திரிப்பதாலும், எமது முன்னோர்களை நாமே இழிவு படுத்துவதாலும் இந்துமதத்துக்கு எந்தக் கெடுதலும் ஏற்படாது, ஏனென்றால் இந்துமதத்தைப் பாதுகாக்க கோடிக்கணக்கான தமிழரல்லாத இந்துக்கள் உள்ளனர். ஆனால் சில தமிழர்கள் இந்துமத எதிரிகளின் எடுப்பார் கைப்பிள்ளையாகி, இந்துமதத்துக்கு ஆதரவளித்தான் என்பதற்காக அல்லது இக்காலத்தில் சில உயர்ந்த சாதிக்கார்கள் ராஜ ராஜ சோழனைத் தமது சாதியைச் சேர்ந்தவனாக சொந்தம் கொண்டாடுகின்றனர் என்பதற்காக, ராஜ ராஜ சோழனைத் தூற்றுகின்றனர். சாதி, மதம் எல்லாவற்றையும் தாண்டி, அவர்களும் தமிழர்கள் தான், ராஜ ராஜ சோழனைக் கொச்சைப்படுத்தும் போது முழுத் தமிழினத்தையும் தான் கொச்சைப்படுத்துகிறோம் என்பதை ஒருநாள் உணர்வார்கள். எல்லாமே தமிழனல்லாத பெரியாரின் போதனைகளின் விளைவு தான் போலிருக்கிறது. பெரியார் தமிழர்களின் சாதியை ஒழிக்கப் பாடுபட்டார் என்பது உண்மையோ என்னவோ ஆனால் அவரால் தமிழ்நாட்டுத் தமிழர்கள் தமது வரலாற்றை, பண்பாட்டை, மொழியைக் கலாச்சாரத்தை மதிக்கும் தன்மையை இழந்து விட்டார்கள் என்பது மட்டும் உண்மை. ஈழத்தில் பெரியாரின் கொள்கைகள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை, ஆனால், தமிழ்நாட்டுடன் ஒப்பிடும் போது ஈழத் தமிழர் மத்தியில் சாதிப்பிரிவுகள் இல்லையென்றே கூறலாம்.

    • இப்படி பரவசம் அடையும் வியாசனுக்கு

      கல்வெட்டு எப்படி கண்களுக்கு

      தெரியும் ?

      தமிழ் நாட்டில் இப்படி தான் ஒரு

      வயதான தலைவர் 90 வயதிலும் தன்னை ராஜராஜனா நினைத்து

      வாழ்ந்து கொண்டு உள்ளார்!

      அவருக்கு போட்டியா நீங்களுமா வியாசன் !

      //தஞ்சாவூர் பெரிய கோயிலில், பெருவுடையார் முன்னால் நின்று சாமி கும்பிடும்போது, இதே இடத்தில் மாமன்னன் ராஜ ராஜ சோழன் ஆயிரமாண்டுகளுக்கு முன்னால் நின்றிருப்பான், அதே இடத்தில் நானும் நிற்கிறேன் என்பதை நினைத்த போது, என்னையறியாமலே எனக்கு புல்லரிப்பு ஏற்பட்டது. அந்த பெருமையை, அந்த உணர்வை விவரிக்க வார்த்தைகளே இல்லை.

    • // ஈழத்தில் பெரியாரின் கொள்கைகள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை// உங்க முட்டாள் தனத்தை பார்த்தாலே தெரியுது. அதனால் தான் பாப்பான் ______________ ஈழத்தை தேடிட்டு இருக்கானுங்க.

  65. தாயுமானவர் அவர்களே.

    //கரையானுக்கு விருந்தாகி இருக்க வேண்டிய *** சுவடிகளை மீட்டது யார் //

    என்ன பயன்? நாக்கு வலிக்கக்கூட ஆகாது என்ற சொலவாடையை இந்த சுவடிகளுக்குத்தான் சொல்லியிருப்பார்களோ?

    //ஒத செய்தது யார்//

    என்ன பயன்?

    //இன்றளவும் தமிழ் வாழ்கிறதென்றால் அதற்க்கு கரணம் ராஜா ராஜனால் தான்.//

    உளறலுக்கு ஒரு அளவேயில்லையா?

    • தமிழ் செய்யுள்கள் மீதுள்ளவெருப்பு அப்பட்டமாக தெரிகிறது.தமிழ் இலக்கியங்களில் உங்களுக்கு மதிப்பில்லை என்றால் உங்கள் வேலையை பார்த்துகொண்டு செல்லலாம்.அநாகரிமான வார்த்தைகளை பயன்படுத்துவது தேவை அற்றது.

  66. Hi Viyasan,

    //ஏனென்றால் இலங்கையில் படித்தவர்கள் அதிகம் என்பது தான் காரணம் போலும்//

    You are degenerating into a silly guy.

  67. viyasan,

    கல்கியும் ராசராசனும் :
    —————————————
    [1]கல்வெட்டு,செப்பேடு ,இலக்கிய பாடல்கள் இவற்ன் மூலமாகத் தான் கல்கி அவர்கள் 1950-53 ஆம் ஆண்டுகளில் பொன்னியின் செல்வன் நாவலை படைத்து உள்ளார்!

    [2]ஐந்து பாகங்கலாக விரியும் பொன்னியின் செல்வன் சுந்தர சோழனுக்கு பின் ராஜ ராஜனின் சித்தப்பா உத்தம சோழனுக்கு முடி சூட்டுவது போல முடிவடையும் ! அதன் பின்பு 15 ஆண்டுகள் கழித்து தான் ராஜ ராஜனுக்கு முடி சூட்டப்படும். அது தான் வரலாறும் .

    [3]பொன்னியின் செல்வனை 5 பாகங்கள் எழுதிய கல்கி அவர்கள் நீங்கள் நினைக்கும் ராசராசனின் ஆட்சி சிறப்புகள் பற்றி ஏன் எழுதவில்லை தெரியுமா? உண்மை கல்கியை சுட்டது வியாசன்! கல்வெட்டு,செப்பேடு உண்மைகள், ராசராசனை பற்றிய கல்கியின் நல் சிந்தனைகளுக்கு எதிராக இருந்தன!

    [4]மேலும் உண்மைக்கு புறம்பாக ராசராசனை புகழ்ந்து எழுத கல்கி அவர்கள் தரம் கேட்டவரும் இல்லை ! இகழ்ந்து எழுதவும் கல்கியீன் பார்பனீய சிந்தனை இடம் கொடுக்கவில்லை!

    [5] எனவே தான் பொன்னியின் செல்வன் நாவலின் முடிவுரையில் வரும் காலங்களில் பிறர் ராசராசனை பற்றிய நவினங்கள் படைக்குமாறு கல்கி அவர்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளார்

    • //ராஜராஜன், 400க்கும் மேற்பட்ட பெண்களை வலுவில் கொணர்ந்து உடம்பில் சூடு போட்டு ‘தேவரடியார்களாக’ மாற்றினான்.///

      //இதற்கான ஆதாரம் தஞ்சை கோவில் கல்வெட்டுகள்.//

      நான் கேட்டது நீங்கள் மேலே கூறியவற்றுக்கான ஆதாரங்கள். நீங்கள் என்னடாவென்றால் கல்கியைப் பற்றிப் பேசுகிறீர்கள். இதைத்தான் “*வட்டுக்கோட்டைக்கு வழி என்னென்று கேட்டால், துட்டுக்கு இரண்டு கொட்டைப்பாக்கு என்றானாம்” என்பார்கள் ஈழத்தில். 🙂

      *யாழ்ப்பாணத்திலுள்ள ஒரு ஊர்.

      • வியாசன் மீண்டும் கூறுகிறேன் !பொறுமை வேண்டும் உங்களுக்கு!

        நீங்கள் [தஞ்சை கோவில் கல்வெட்டுகள் பற்றி] கேள்வி எழுப்பிய உங்கள் பின்னூட்டம் 69 க்கு கீழ் 69.1 ல் என் பதில் உள்ளது. பார்க்கவும்

  68. பொறுமை வேண்டும் வியாசன் உங்களுக்கு!

    தேச வழமைகள் என்பது எல்லா சாதிக்கும் பொதுவானவை.

    ஆனால் சமுக வழமைகள் என்பது ஒவ் ஒரு சாதிக்கும் தனி தனியானவை .

    ராச ராசனின் ஆட்சி அமைப்பு சமுக வழமைகள் சார்ந்தது ஒவ் ஒரு சாதிக்கும் தனித் தனி சட்டங்களும் வேறு வேறு வரி விதிப்பு முறைகளாலும் கட்டமைக்கபட்டது.

    ராச ராசனால் விதிக்கப்பட்ட 400க்கும் மேற்பட்ட வரிகளில் பெரும்பாலானவை, பார்ப்பன, வெள்ளாள சாதி தவிர்த்த பிற சாதியினரிடமிருந்துதான் வசூலிக்கப்பட்டன.[சமுக வழமைகள்]

    இப்போது கூறுங்கள் தேச வழமைகள் அல்லது சமுக வழமைகள் இதில் எது ஒரு நல்ல அரசனால் கடைபிடிக்க வேண்டியது?

    viyasan://இந்த ஆள் சரியான ஒரு விவரங்கெட்ட மனுசனாக இருப்பார் போலிருக்கிறது. இப்பொழுதும் தான் நாங்கள் எல்லா விதமான வரிகளும் கட்டுகிறோம். இக்காலத்திலேயே வரி இல்லாத நாடில்லை, எதற்கெடுத்தாலும் வரி கட்ட வேண்டும்//

    • //தேச வழமைகள் என்பது எல்லா சாதிக்கும் பொதுவானவை.
      ஆனால் சமுக வழமைகள் என்பது ஒவ் ஒரு சாதிக்கும் தனி தனியானவை ///

      பெரியாரிஸ்டுகள் “மகன் செத்தாலும் பரவாயில்லை, மருமகளுக்கு தாலியறுந்தால் போதும்” என்ற மாதிரி, ராஜ ராஜ சோழனை மட்டும் வசைபாடுவதன் காரணம் அவன் பார்ப்பனர்களையும், இந்து மதத்தையும் ஆதரித்தான் என்பதால் தான். மாமன்னன் ராஜராஜ சோழனோ அல்லது இந்தியாவிலும், இலங்கையிலுமுள்ள எந்த அரசனும் சாதி வெறியினால் குறிப்பிட்ட சாதியினருக்கு மட்டும் அதிக வரிகளை விதித்ததில்லை. அக்கால வழக்கம், சமுக கட்டமைப்பு அப்படி, அதை இக்கால மார்க்சிய, பெரியாரிய சிந்தனைகளுடன் ஒப்பிட்டு, எமது முன்னோர்களை இழிவு படுத்துவது முட்டாள் தனமென்பதைத் தான் நான் மீண்டும்,மீண்டும் கூறுகிறேன். தமிழ்நாட்டில் மட்டுமல்ல, வட இந்தியாவிலும் இலங்கையிலும் கூட, சாதிப்பாகுபாடுகள் மன்னராட்சியில் இருந்தன. அதற்காக தமிழ்நாட்டில் உங்களைப் போன்றவர்களைத் தவிர இந்தியாவிலோ, இலங்கையிலோ தமது முன்னோர்களை இப்படி அநியாயமாக, அவர்கள் தூற்றுவதும், தாழ்த்துவதுமில்லை.

      • பேராசிரியர் க.கைலாசபதி அவர்களின் கீழ் கண்ட விமர்சன புத்தகங்களை படியுங்கள் ; வரலாற்றை விமர்சிக்க தெரிந்து கொள்ளுங்கள் வியாசன் !

        [1]சமூகவியலும் இலக்கியமும் (1979)

        [2]நாவலர் பற்றி கைலாசபதி (2005)

        [3]மக்கள் சீனம் காட்சியும் கருத்தும்( திருமதி சர்வமங்களம் கைலாசபதியுடன் )

        [4]அடியும் முடியும் (1970)

        //அதை இக்கால மார்க்சிய, பெரியாரிய சிந்தனைகளுடன் ஒப்பிட்டு, எமது முன்னோர்களை இழிவு படுத்துவது முட்டாள் தனமென்பதைத் தான் நான் மீண்டும்,மீண்டும் கூறுகிறேன்.

        //அதற்காக தமிழ்நாட்டில் உங்களைப் போன்றவர்களைத் தவிர இந்தியாவிலோ, இலங்கையிலோ தமது முன்னோர்களை இப்படி அநியாயமாக, அவர்கள் தூற்றுவதும், தாழ்த்துவதுமில்லை.

      • நீங்கள் பேராதனை பல்கலைக் கழக வரலற்று பேராசிரியர் சி.பத்மநாதன் அவ்ர்களீன் ஆய்வுகளை படிப்பது இல்லை போலும் !

        [1]The Laws and Customs of the Tamils of Sri Lanka, (Tamil), Kumaran Book House, Colombo

        [2]ஈழத்து இலக்கியமும் வரலாறும், குமரன் புத்தக நிலையம், கொழும்பு

        [3]இலங்கைத் தமிழ்ச் சாசனங்கள் (Tamil Inscriptions of Sri Lanka), இந்து கலாசாரத் திணைக்களம், இலங்கை

        [4]இலங்கைத் தமிழர் தேச வழமைகளும் ,சமுக வழமைகளும்

        கல்கியீன் வார்த்தைகளில் கூறுவது என்றால் ….

        “அறிவிலும் ஆற்றலிலும் ஆராய்ச்சியிலும் மிக்கவர்கள் வருங்காலத்தில் சோழ சரித்திரத்தை அடிப்படையாகக்கொண்டபல மகோந்நதமான நவீனங்களை எழுதி தமிழகத்திற்கு மேலும் மேலும் தொண்டு செய்வார்கள் என்று நம்புகிறேன்.”

        வரலாற்று நவீனங்கள் படைக்க மற்றும் அன்று வியாசன், வரலாற்றை ஆய்வு செய்யவும் அறிவையும் ,ஆற்றலையும் , ஆராய்ச்சி உணர்வையும் பயன் படுத்துவது மிகவும் தேவையானது வியாசன் .

        //அதற்காக தமிழ்நாட்டில் உங்களைப் போன்றவர்களைத் தவிர இந்தியாவிலோ, இலங்கையிலோ தமது முன்னோர்களை இப்படி அநியாயமாக, அவர்கள் தூற்றுவதும், தாழ்த்துவதுமில்லை.//

      • வியாசன், இன்றும் இப்படி கூறிக்கொண்டு தானே சாதி வெறியர்கள், கலப்பு திருமணம், சமுக ஒற்றுமைக்கு எதிராக கொடி பிடிக்கின்றார்கள் ! உங்கள் இக் கட்டுரைகளை மீண்டும் நீங்கலே படியுங்கள்.

        http://viyaasan.blogspot.in/2013/07/blog-post_5.html

        http://viyaasan.blogspot.in/2013/07/blog-post_11.html

        இன்றைய சாதிய அரசியலை ஆய்வு செய்யும் உங்களால் நேற்றைய வரலாரை ஆய்வு செய்ய தடை செய்வது எது வியாசன்?

        //அக்கால வழக்கம், சமுக கட்டமைப்பு அப்படி,

  69. Who is Tipu? He is good or bad ?

    “உங்களுக்கு இடையில் ஒரு பெண் பத்து ஆண்களுடன் இணைந்து உறவு கொள்வதும் உங்களின் தாய், சகோதரிகளை இவ்விதம் நடப்பதற்கு சம்மதிப்பதும் பூர்வ ஆச்சாரமாக இருந்து வருகின்ற நிலையில், நீங்கள் அனைவரும் விபச்சாரத்தில் பிறந்தவர்களும் ஆண், பெண் உறவு விஷயத்தில் நிலத்தில் மேய்ந்து நடக்கும் கால்நடைகளை விட கீழான வெட்கமற்றவர்களுமாகின்றீர்கள். இவ்விதமுள்ள பாவகரமான துர் ஆச்சாரங்களை விட்டொழித்துச் சாதாரண மனிதர்களைப் போன்று வாழ்வதற்கு நாம் இதன் மூலம் உங்களுக்குக் கட்டளையிடுகின்றோம்”

    இது நாகரீகம் வளர்ந்து உச்சியை நோக்கிப் பயணிக்க ஆரம்பித்த 17 – 18 ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில் வாழ்ந்த ஒரு மன்னன் பிறப்பித்தக் கட்டளையாகும். 17 – 18 ஆம் நூற்றாண்டிலும் மக்கள் கால்நடைகளைப் போன்று காணும் ஆடவர், பெண்டிருடன் உறவு வைத்து நடந்தனர் என்பதை நம்பமுடியவில்லை தானே?. ஆனால் அது தான் உண்மை!

    கேரள நம்பூதிரிகளின் அக்ரஹார அலங்கோல ஆச்சாரங்களை ஒரே கட்டளையின் மூலம் தகர்த்தெறிந்தத் திப்புவின் இந்தக் கட்டளைக்கான காரணம் என்ன? தனது ஆட்சிபரப்பை விரிவாக்கும் எண்ணத்தில் கேரளத்தில் அடியெடுத்து வைத்தத் திப்புவின் வாயிலிருந்து வெளியான இந்தக் கட்டளைக்கும் அன்றையக் கேரள அரசவைக் கூட்டத்தையும் அடிதட்டு மக்களையும் ஒருங்கே கைகளில் அடக்கி ஆட்சி செய்துகொண்டிருந்த நம்பூதிரிகளுக்கும் என்ன சம்பந்தம்?

    திப்புவைக் குறித்துப் பேசப்படும் வரலாற்று நூல்களில் பெரும்பாலானவைகளிலெல்லாம் காணப்படும் பிரசித்தமான இந்தத் திப்புவின் கட்டளைக்குக் காரணம் தான் என்ன?. அதனை அறிந்துக் கொள்ள வேண்டுமெனில், திப்பு கேரளத்தில் கால்பதித்த வேளை கேரள மக்கள் எந்நிலையில் வாழ்ந்து வந்தனர் என்பதைக் குறித்துத் தெரிந்துக் கொள்ள வேண்டும்.

    மேலும் படிக்க :

    http://www.sinthikkavum.net/2011/02/blog-post_6826.html

    https://seidhigal.wordpress.com/tag/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF/

    • // கேரள நம்பூதிரிகளின் அக்ரஹார அலங்கோல ஆச்சாரங்களை ஒரே கட்டளையின் மூலம் தகர்த்தெறிந்தத் திப்புவின் இந்தக் கட்டளைக்கான காரணம் என்ன? //

      கேரளா முழுவதையும் இஸ்லாமியமயமாக்கவேண்டும் என்பதுதான்.. திப்புவின் வெறியாட்டத்தில் பலியானவர்கள் நம்பூதிரிகளும், நாயர்களும் மட்டுமல்ல, பிற்படுத்தப்பட்ட ஈழவர்களும், நஸ்ரானிகள் எனப்பட்ட சிரியன் கிறித்தவர்களும் கூடத்தான்..

      மலபார் மேனுவல்..: “Because the facts presented here are mainly from the Malabar Manual as edited by Dr. C.K. Kareem,1 himself a Muslim, and published by the Charitram Publications of Trivandrum with the assistance of Kerala and Cochin universities, we are sure, they will be more acceptable as authentic and unbiased than any other version of Kerala history.”
      ……

      ”Tipu’s brutalities were against all sections – Brahmins, Nairs and Thiyyas of Hindu community, not excluding even women and children. Even Christians were not spared.
      “It was not only against the Brahmins who were thus put in a state of terror of forcible circumcision and conversion; but against all sections of Hindus. In August, 1788, a Raja of the Kshatriya family of Parappanad and also Trichera Thiruppad, a chieftain of Nilamboor, and many other Hindu nobles who had been carried away earlier to Coimbatore by Tipu Sultan, were forcibly circumcised and forced to cat beef. Nairs in desperation, under the circumstances, rose up against their Muslim oppressors under Tipu’s command in South Malabar and the Hindus of Coorg in the North also joined them (p. 507).” – சாதி, மதம் பாராத திப்புவின் சமத்துவ வெறியாட்டம்..

      ”Tipu had sent a formal request to the English Company at Tellicherry asking them “not to give protection and shelter to Nairs fleeing from South Malabar” (p. 509).
      A similar letter had been sent to the English Company in Tellicherry by Hyder Ali Khan in 1764 before he launched his Malabar invasion (Kerala History by A.S. Sreedhara Menon, p. 372). These letters clearly show that neither Hyder Ali nor Tipu was at war with the British.”
      (கிழக்கிந்திய கம்பெனியிடம் திப்பு விடுத்த வேண்டுகோள்).

      ”That was the first time, January 1, 1790, when Tipu Sultan tasted a humiliating defeat. It is recorded in Travancore history and also confirmed by the local folklore that as the wounded Tipu was lying unconscious in the battlefield he was rescued by a Nair soldier who quietly carried the unconscious Sultan to the Mysore military camp during the night and left quickly (p. 518). The brave Nair soldier could have easily killed the unconscious Tipu as many Muslims have done to a Hindu in similar circumstances; but his Hindu values of life prompted him to deposit the helpless victim near the Muslim camp.” – திருவிதாங்கூர் போரில் தோற்று மயங்கி விழுந்த திப்புவை காப்பாற்றி தூக்கிக் கொண்டு போனதும் ஒரு நாயர் படை வீரன்..!

      ”According to authentic historical records, the Nair forces of Travancore attacked the Mysore army which was crossing the defence fortification, and inflicted heavy casualties on it. The sudden and unexpected attack made the Mysore Army panicky, and in the confusion Tipu Sultan fell down from the ramparts of the fort into the ditch below along with his palanquin. The fall made him permanently lame. Later on, the Travancore forces recovered from the ditch the sword, the pallanquin, the dagger, the ring and many other personal effects of Tipu and presented them to the Dharma Raja. Some of Tipu’s personal weapons and ornaments were sent to the Nawab of Arcot on his request (Travancore History by P. Sankunny Menon, published by Kerala Bhasha Institute, Trivandrum, pp. 191-92).-திருவிதாங்கூர் மன்னர் சக்தன் தம்புரானின் நாயர் படைகளால் திப்புவின் வாள், பல்லக்கு, குறுவாள், மோதிரம் எல்லாம் கைபற்றப்பட்டது.. பிறகு திப்புவின் வாள் ஆர்காட்டு நவாபுக்கு பரிசளிக்கப்பட்டது..

      http://voiceofdharma.org/books/tipu/ch04.htm

      ******

      சிரியன் கிறித்தவர்கள் என்ன பாவம் செய்தார்கள்..? :

      ”However by then much damage was done. Along with the old syrian seminary at Angamaly, many churches in the Malabar and Cochin were damaged. The Mor Sabor church at Akaparambu and the Martha Mariam Church attached to the old seminary at Angamaly bore the brunt of the mysoreans. Whatever remained of Syrian Christianity in Malabar since ancient times was destroyed. The Syrian Christian community had to flee Calicut and even towns like Arthat in Kunnamkulam. Several lives were lost too.

      Tippu Sultan’s army set fire to the church at Palayoor and attacked the Ollur Church in 1790. Further the Mysoreans destroyed the Arthat church and the Ambazhakkad seminary was also destroyed. Paremmakkal Thoma Kathanar, the author of malayalam language’s first travelogue and Governor of Kodungallur had his office at Alangad but he and others had to flee from there following the invasion of Tippu Sultan and they set up the office at Church at Vadayar and later at Ramapuram.”

      ”In the end, the syrian christians like their brethren among the hindus and jews recovered from this nightmare and continued trying to live their way of life as they had known for almost two millenia since the advent of St. Thomas in kerala. But then, nothing would be same again.”

      http://forums.joeuser.com/152227

  70. Mr. Ambi,

    1.//சில நூறு கிராமங்களை *** பார்ப்பனர்களுக்கு பரவலாக, இறையிலியாக வழங்கியதால்//

    வேறு யாருக்கெல்லாம் இதுபோன்று சில நூறு கிராமங்கள் இறையிலியாக வரியில்லாத கொடுக்கப்பட்டன என்ற

    கூற முடியுமா?

    2//தாசன் என்று பட்டம்//

    ஆண்டையை உங்கள் அடிமையாகப் பார்க்க அவ்வளவு விருப்பமா? யாரும் கூறாக போதே நீங்களே

    கூறிக்கொள்கிறீர்களே? பாப்பாத்திதாசனுக்கு மாற்றி பெயர் வைப்பதில் அவ்வளவு பெருமையா? பாப்பாத்திக்களுக்காகத்தான் இறையிலியாக சில நூறு கிராமங்கள். இதற்கும் ஆதாரம் கேட்காதீர்கள்.

    3 //பறையர்களின் நிலங்களுக்கும் வரிவிலக்கு *** ஒடுக்குமுறையையா..?!//

    முத்து ராமலிங்கம் தனது கையாளாக இருந்தவருக்கு நிலங்கள் கொடுத்தது வரலாறு அதற்காக அவர் தலித்

    மக்களின் நண்பேன்டா என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியுமா

    4. Rest in subsequent days.

    • ////
      1.//சில நூறு கிராமங்களை *** பார்ப்பனர்களுக்கு பரவலாக, இறையிலியாக வழங்கியதால்//

      வேறு யாருக்கெல்லாம் இதுபோன்று சில நூறு கிராமங்கள் இறையிலியாக வரியில்லாத கொடுக்கப்பட்டன என்ற

      கூற முடியுமா?
      ////

      சதுர்வேதிமங்கலம் என்றல்லாது தேவதானம் என்ற பெயரில் கோவில் பணிகளுக்காகவென்று யாருக்கு கொடுத்திருந்தாலும் அது இறையிலி நிலம்தான்..

      ///
      2//தாசன் என்று பட்டம்//

      ஆண்டையை உங்கள் அடிமையாகப் பார்க்க அவ்வளவு விருப்பமா? யாரும் கூறாக போதே நீங்களே

      கூறிக்கொள்கிறீர்களே?
      ////

      எனது பின்னூட்டத்திற்கு மேலே செந்தில் குமரன் ஆதாரங்கள் என்று கொடுத்த சுட்டியில் காணப்படும் வினவு கட்டுரையில் எத்தனை முறை ராஜராஜரை பார்ப்பனதாசன் என்று கூறியிருக்கிறார்கள் என்பது படித்திருந்தால் தெரிந்திருக்கும்.. எதற்காக கூட்டம் கூடியிருக்கிறது என்று தெரியாமல் நடுவில் புகுந்து லேகியம் விற்பதே உமது வழக்கமாகிவிட்டது..

      // பாப்பாத்திதாசனுக்கு மாற்றி பெயர் வைப்பதில் அவ்வளவு பெருமையா? பாப்பாத்திக்களுக்காகத்தான் இறையிலியாக சில நூறு கிராமங்கள். இதற்கும் ஆதாரம் கேட்காதீர்கள்.//

      எந்த மைனர் எழுதி கொடுத்த சொத்தை நீர் குடும்பத்தோடு அனுபவித்துக் கொண்டிருக்கிறீரோ தெரியவில்லை.. அரசியல் காரணங்களுக்காக ராஜ ராஜர் பல மனைவியரை மணந்து கொண்டாலும் அவர் மைனர் அல்ல..

      முசுலீம் பெண்களுக்கு பர்தா போட்டு கொடுமைப்படுத்துகிறார்கள் என்று ஒரு பெண்ணுரிமை காவலர் போல் அடுத்த முறை நீர் ஊளையிடும் போது பாய்களுடன் நானும் சேர்ந்து கொண்டு உமக்கு அறுவை சிகிச்சை செய்வது என முடிவெடுத்திருக்கிறேன்..

      // முத்து ராமலிங்கம் தனது கையாளாக இருந்தவருக்கு நிலங்கள் கொடுத்தது வரலாறு அதற்காக அவர் தலித்

      மக்களின் நண்பேன்டா என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியுமா //

      தன்னிடம் பணியாற்றியவர்களுக்கு சாதி பார்க்காமல் நிலங்கள் எழுதி வைக்க எத்தனை பேருக்கு மனம் வரும்..? உம்மை போன்ற நண்பேர்கள், அவர்களின் வேட்டி சேலையையும் உருவாமல் விட்டாலே அதிசயம்தான்.. அது சரி, ராஜ ராஜருக்கு ஏன் கையாட்கள் தேவை..? அவரைப் போன்ற பேரரசனுக்கு எதிரணியில் யாரேனும் தலித் மக்களோ அல்லது வேறு எந்த குடிமக்களோ இருந்தார்கள் என்று வரலாறு ஏதேனும் வைத்திருக்கிறீரா..?

      • வினவு கவனிக்கவும் ஆபாசமாக உள்ளது

        //எந்த மைனர் எழுதி கொடுத்த சொத்தை நீர் குடும்பத்தோடு அனுபவித்துக் கொண்டிருக்கிறீரோ தெரியவில்லை

    • வினவு கவனிக்கவும் ஆபாசமாக உள்ளது

      //பாப்பாத்திக்களுக்காகத்தான் இறையிலியாக சில நூறு கிராமங்கள்.

  71. செந்தில் குமரன் .

    //[3]பொன்னியின் செல்வனை 5 பாகங்கள் எழுதிய கல்கி அவர்கள் நீங்கள் நினைக்கும் ராசராசனின் ஆட்சி சிறப்புகள் பற்றி ஏன் எழுதவில்லை தெரியுமா? உண்மை கல்கியை சுட்டது வியாசன்! கல்வெட்டு,செப்பேடு உண்மைகள், ராசராசனை பற்றிய கல்கியின் நல் சிந்தனைகளுக்கு எதிராக இருந்தன!

    [4]மேலும் உண்மைக்கு புறம்பாக ராசராசனை புகழ்ந்து எழுத கல்கி அவர்கள் தரம் கேட்டவரும் இல்லை ! இகழ்ந்து எழுதவும் கல்கியீன் பார்பனீய சிந்தனை இடம் கொடுக்கவில்லை!

    [5] எனவே தான் பொன்னியின் செல்வன் நாவலின் முடிவுரையில் வரும் காலங்களில் பிறர் ராசராசனை பற்றிய நவினங்கள் படைக்குமாறு கல்கி அவர்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளார்//

    ஒருவர் கூறியதை எப்படியெல்லாம் நம் வசதிக்கு ஏற்றபடி மாற்றி சொல்லலாம் என்பதற்கு நீங்கள் ஒரு சிறந்த உதாரணம்.. சும்மா சொல்ல கூடாது திராவிட அரசியலுக்கு ஏற்ற சரியான வாரிசு நீங்கள் தான் என்பதை நிருப்பிதுவிடீர்கள். கல்கி ராச ராசனின் நிர்வாகம் மிக கீழ் தரமாக இருந்தது அதனால் அவரின் வரலாற்றை எழுத எனக்கு மனம் வரவில்லை என்று எங்கு எந்த இடத்தில் எப்போது கூறினார் அல்லது எழுதினார் என்று தாங்கள் கூறமுடியுமா.. கல்கி உங்களிடம் மட்டும் சொல்லி விட்டு போனாரா.. அவர் பொன்னியின் செல்வன் நாவலில் முடிக்கும் போது கூறியது இது தான்

    “நேயர்களை திருப்தி படுத்துவதர்க்காகவே மேலே கண்டவற்றை எழுதினேன். உண்மையில் இவை எல்லாம் இன்னும் ஒரு பெரிய சரித்திர கதைக்கு ஆதாரமாகக் கூடிய முக்கிய நிகழ்ச்சிகள் ஆகும்”

    அவர் பெரிய சரித்திரக் கதை என்று கூறியது ராச ராச சோழனின் திவ்ய சரிதத்தை தான்.. மேலும் அவர் கூறுவது, “உத்தம சோழனுக்கு பின்னால் சிங்காதனம் ஏறிய ராஜ ராஜன், ராஜேந்திரன். ராஜாதி ராஜன்,வீர ராஜேந்திரன், குலோத்துங்க சோழன் முதலிய சோழ பேரரசர்களின் காலத்திய மகோன்னத நிகழ்ச்சிகள் பொன்னியின் செல்வன் கதையை போல பல சரித்திர கதைகள் புனைவதற்கு ஆதாரமாக கூடியவை”. ஆகவே , கல்கி அவர்கள் சாதரணமாக நிகழ்ச்சிகள் என்று கூறவில்லை மகோன்னத என்கிற வார்த்தையை முன்னால் கூறி இருக்கிறார்.. தவறான வரலாற்றை அவ்வாறு கூற வேண்டிய அவசியம் அவருக்கு இல்லை.. எது எப்படியோ வரலாற்று நாவல் என்பது ஆராய்ச்சி செய்து தகுந்த ஆதாரங்களோடு எழுத வேண்டிய ஒன்று.. அதற்கு கால அவகாசம் நிறைய தேவை.. தான் பல காலம் ஆய்ந்து பொன்னியின் செல்வன் என்கிற நாவலை எழுதியதே போதும் என்று நினைத்து இருக்கலாம்.. தன்னுடைய வயது, உடல்நிலை காரணமாக மற்ற சோழ வேந்தர்களின் வரலாற்றை அவர் எழுதாமல் இருந்திருக்கலாம்.. ஆனால் முழுமையாக சோழ பேரரசின் கதையை முடிக்காமல் போயிற்றே என்ற வருத்தம் இருப்பதை அவர் வார்த்தைகளிலேயே வெளிப்படுவதை காணலாம் அவர் கூறியது என்ன, அவர் கூறியதாக நீங்கள் வெளிபடுத்தியது என்ன. கல்கி கூறியது ” இந்த கதையின் ஆசிரியரை காட்டிலும் அறிவிலும், ஆற்றலிலும், ஆராய்ச்சியிலும் மிக்கவர்கள் வருங்காலத்தில் சோழ சரித்திரத்தை அடிப்படையாக கொண்ட பல மகோன்னதமான நவீனங்களை எழுதி தமிழகதிற்கு மேலும் மேலும் தொண்டு செய்வார்கள் என்று நம்புகிறேன்” என்று தெளிவாக ஆணித்தரமாக கூறிவிட்டார். ஆனால் நீங்கள் கூறியதை நீங்களே படித்து பாருங்கள் “எனவே தான் பொன்னியின் செல்வன் நாவலின் முடிவுரையில் வரும் காலங்களில் பிறர் ராச ராசனை பற்றிய நவீனங்களை படைக்கும்மாறு கல்கி அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்”. இது நீங்கள் கூறிய அவதூறு எவ்வளவு வேறுபாடு என்று பாருங்கள்.. ஏதோ கல்கி வேண்டா வெறுப்பாக ஏன்தான் பொன்னியின் செல்வனை கூட எழுதினோமோ என்று வருத்தப்பட்டு கூறும் அளவிற்கு எழுதியுள்ளீர்கள்.

    அது தவறு உங்கள் மீதில்லை எதையும் பெரியாரின் கண்கொண்டோ அல்லது பகுத்தறிவு என்கிற பெயரில் வெத்து வெட்டு தனமாகவோ பார்த்தால் இந்த லட்சணத்தில் தான் போய் முடியும். நாடு போற்றும் ஒரு சிறந்த எழுத்தாளரின் பெயரில் இப்படி ஒரு அவதூறை சொல்வதற்கு உங்கள் நா கூசவில்லையா.. இனியாவது தமிழக வரலாற்றுக்கு சிகப்பு சாயம் பூசாமல் பார்க்க கற்று கொள்ளுங்கள்.

    • பொன்னியின் செல்வன் முடிவுரையில் கல்கி :

      “கதையில் சிகரமான நிகழ்ச்சி பொன்னியின் செல்வன் தன்கையில் கிடைத்த மகா சாம்ராஜ்ஜியத்தை தியாகம் செய்து இன்னொருவருக்கு முடிசூட்டியதேயாகும். ஆகையால், அந்த பெரு நிகழ்ச்சிக்குப்பிறகு கதையை வளர்த்திக்கொண்டு போவது ஆங்கிலத்தில் சொல்லப்படுவது போல், ‘கிளைமேக்ஸு’ க்குப்பிறகு ‘ஆண்டி கிளைமேக்ஸு’ க்குப்போவதாக முடியும். ”

      இங்கு கிளைமேக்ஸு : பொன்னியின் செல்வன் ஆட்சி உரிமையை தன் சித்தப்பனுக்கு கொடுப்பது

      ஆண்டி கிளைமேக்ஸு : பொன்னியின் செல்வன் தன் சித்தப்பனுக்கு பின் செய்த ஆட்சி முறை

    • பொன்னியின் செல்வன் நாவலை படைக்க கல்வெட்டுகள் ,செப்பேடுகள் ,இலக்கிய பாடல்கள், இலங்கை பயணம் மூலம் எல்லாம் ஆதாரம் தேடிய திரு கல்கி அவர்கள் , திரு க. அ. நீலகண்ட சாத்திரி அவர்கள் எழுதிய கீழ் கண்ட நுல்களை படிக்காமாலா இருந்து இருப்பார் !

      [1]Studies in Chola history and administration. University of Madras. 1932.

      [2]The Cholas. University of Madras. 1935.

      இன் நூட்கள் சோழர் ஆட்சியீன் சமுக வழமைகள் [சாதி சார்ந்த சட்டங்கள் ,வரி விதிப்புகள்] இவற்றை விளக்குகின்றன. எனவே கல்கி அவர்கள் ராச ராசனின் முடி துறக்கும் தியாகத்துடன் பொன்னியின் செல்வன் நாவலை முடித்து கொண்டார்!

      கல்கியீன் வார்த்தைகளில் கூறுவது என்றால் ……

      “கதையில் சிகரமான நிகழ்ச்சி பொன்னியின் செல்வன் தன்கையில் கிடைத்த மகா சாம்ராஜ்ஜியத்தை தியாகம் செய்து இன்னொருவருக்கு முடிசூட்டியதேயாகும். ஆகையால், அந்த பெரு நிகழ்ச்சிக்குப்பிறகு கதையை வளர்த்திக்கொண்டு போவது ஆங்கிலத்தில் சொல்லப்படுவது போல், ‘கிளைமேக்ஸு’ க்குப்பிறகு ‘ஆண்டி கிளைமேக்ஸு’ க்குப்போவதாக முடியும். ”

    • திரு.தாயுமானவன்,

      மாமன்னன் ராஜ ராஜ சோழனால் புகழ்பெற்ற தமிழர்களின் வரலாற்றையும், மாமன்னன் ராஜ ராஜ சோழனையும் தமிழ்நாட்டில் வாழும் தமிழரல்லாத திராவிட எச்சங்களும், பெரியாரிஸ்டுக்களும், இந்துமத எதிரிகளும் அரைகுறை ஆய்வுகளுடன் கொச்சைப்படுத்தும் போது, பெரும்பான்மை தமிழ்நாட்டுத் தமிழர்கள் மெளனமாக இருந்தது தான், இந்த உளறல்களுக்குக் காரணம். உங்களைப் போன்றவர்கள் மெளனம் கலைந்து, பொய்ப்பிரச்சாரங்களை எதிர்ப்பதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. நன்றிகள்.

  72. மேலும் செந்தில் குமரன் ……

    //“காந்தளூர்ச்சாலை கலமறுத்தருளி
    மலையாளிகள் தலை அறுத்து”//

    இதை நீங்கள் கூறும் போது எனக்கு ராச ராசன் மீது கோவம் தான் வருகிறது … செய்த வேலையை முழுமையாக செய்யமால் விட்டானே.. மலையாளிகளின் கழுத்தை அறுத்தவன் மொத்தமாக அனைவரையும் செய்து முடிக்காமல் போனானே.. செய்திருந்தால் இன்று தமிழர்களுக்கு ஒரு பெரும் தலைவலி ஒன்று அன்றே தீர்ந்து போய் இருக்கும்.. கேரளம் தனி மாநிலம் ஆகி இருக்காது.. எங்கள் ஈழ தமிழர்களை கொல்ல மலையாள மூளை உதவி இருக்காது.. நாங்களும் முல்லை பெரியாருக்காக கெஞ்சி கொண்டு இருந்திருக்க மாட்டோம். நிச்சயமாக எங்கள் கேரளாந்தகன் எங்களின் ஒப்பற்ற தமிழ் குலதனம் தான்..

    • //செய்த வேலையை முழுமையாக செய்யமால் விட்டானே.. மலையாளிகளின் கழுத்தை அறுத்தவன் மொத்தமாக அனைவரையும் செய்து முடிக்காமல் போனானே.. // இப்பவும் ஒன்னும் கேட்டுவிடவில்லை, தமிழ் நாட்டுல இருக்க வெள்ளாளனுங்க இலங்கை வெள்ளாளனுங்க,பார்ப்பன சங்கத்துடன் இணைந்து முடிச்சிட்டு வாங்களேன், நீங்கதான் ராஜராஜனுடைய வீர பரம்பரை ஆச்சே.

    • ராச ராசனின் காந்தளூர்ச்சாலை போரின் போது அங்கு நாயர் ,நம்பூதிரிகள் இல்லை. போர் செய்தது சேர நாட்டு தமிழர்களும் சோழ நாட்டு தமிழர்களும் தான் !

      உங்கள் கொலை வெறி …

      உங்கள் கண்களை மறைத்து….

      ………
      ……..

      • // ராச ராசனின் காந்தளூர்ச்சாலை போரின் போது அங்கு நாயர் ,நம்பூதிரிகள் இல்லை. //

        காந்தளூர்ச்சாலை என்பது ஒரு military & administrative academy மற்றும் அதர்வ வேத பாடசாலை.. அது சேர மன்னர் மற்றும் சேர நாட்டுப் பார்ப்பனர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது.. சோழ நாட்டுக்கெதிரான சதிகளில் அது ஈடுபட்டதால் ராஜ ராஜர் அதை அழிக்க முடிவு செய்தார்.. சோழநாட்டுத் தூதரை, அரசியல் நெறிமுறைகளைப் பின்பற்றாமல், சேரமன்னர் உதயகிரி கோட்டையில் சிறை வைத்தது உடனடிப் போருக்கு வழிவகுத்தது.. ராஜ ராஜர் தலைமையில் சோழப்படை ஒரே பகலில் 18 காடுகளைத் தாண்டி சேரநாடு சென்று எதிர்பாராத வகையில் அதிரடித்தாக்குதல் நடத்தியது..

        • “எல்லாளன்” என்று பெயர் இடப்பட்ட “சிங்களனின் அனுராதபுரம் விமான நிலையத்தின் மீதான” புலிகளின் அதிரடி தாக்குதல்[நேரலையுடன்] போல வருணனை செய்கின்றீர். நயம் நன்று .

        • அம்பி,

          “காந்தளூர்ச்சாலை கலமறுத்தளி” மீது இரு மாறுபட்ட கருத்து உருக்கள் உள்ளன. ஒன்று நீங்கள் மேலே கூறியது. மற்றது இது :

          காந்தளூர்ச் சாலையில் இருந்த கடற்படையில் உள்ள மரக்கலங்களை (கப்பல்களை) எல்லாம் ராஜ ராஜர் அழித்தான். இவ்வெற்றியை இராசராசனின் 29ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, காந்தளூர்ச் சாலைக் கலம் அறுத்து அருளி என்று குறிப்பிடுகிறது. காந்தளூர்ச் சாலை திருவனந்தபுரத்திற்குத் தெற்கே பத்துமைல் தொலைவில் உள்ள கடற்கரை சார்ந்த ஊராகப் பண்டைய நாளில் விளங்கியது.

          காந்தளூர்ச் சாலை நடவடிக்கை, எல்லாளன் நடவடிக்கையில் சிங்களத்தானின் விமானப் படையை அனுராதபுரத்தில் கரும்புலிகள் அழித்தது போல உள்ளது.

        • காந்தளூர்ச் சாலை நடவடிக்கை மற்றும் எல்லாளன் நடவடிக்கை ஓர் ஒப்பாய்வு :

          தமிழீழ தேசியத்தலைவர் அவர்களால் பெயர்சூட்டி வைக்கப்பட்ட நடவடிக்கைதான் இந்த எல்லாளன் நடவடிக்கை. அனுராதபுர வான்படைத்தளத்தில் 21 சிறப்பு கரும்புலிகளின் நெஞ்சில் எரிந்த விடுதலைத் தீ அன்று [22.10.2007 ]அந்த விமானநிலையத்தினை சுட்டெரித்துக்கொண்டிருந்தது. சிங்களப் படையின் உதவிக்கு வந்த உலங்கு வானூர்தியும் விடுதலைப்புலிகளால் சுட்டுவீழ்த்தப்படுகின்றது.

          இந்தத் தாக்குதலுக்காக 21 கரும்புலிப் போராளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர். அத்துடன், இந்தத் தாக்குதலுக்கான திட்டம் வெளியில் அல்ல போராளிகளின் உயர் மட்டங்களில் கூட தெரியாத அளவிற்கு மிகவும் இரகசியம் காக்கப்பட்டிருந்தது. இந்தத் தாக்குதலுக்காக ஒருங்கிணைக்கப்பட்டிருந்த 21 கரும்புலி போராளிகளிடமும் தாக்குதலுக்கான திட்டங்கள் நேரடியாக விபரிக்கப்படும். இந்தத் தகவல்களை உள்வாங்கி தாக்குதல் திட்டங்களை இந்த அணிக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டிருந்த சிறப்பு கரும்புலி லெப்.கேணல் இளங்கோ ஏனைய கரும்புலிப் போராளிகளுக்கும் அத்திட்டத்தை புரியவைப்பான்.

          அனுராதபுர வான்கலமறுத்தளிய

          சிங்களத்தான் அகங்காரம்சிதைத்த

          இளங்கோ புகழ்

          வாழ்க வாழ்கவே !

          எம் கணிப்பு படி சில ஆயிரம் வீரர்களுடன் சென்று காந்தளூர்ச் சாலை கடற்படையில் உள்ள மரக்கலங்களை (கப்பல்களை) எல்லாம் அழித்த ராஜ ராஜர் ஆற்றலையும் விட 20+1 வீரர்கலாக மட்டும் சென்று சிங்களத்தான் அகங்காரம்சிதைத்த,வான்கலமறுத்தளிய லெப்.கேணல் இளங்கோவின் ஆற்றல் மிகவும் சிறந்தது

        • தமிழீழ மக்களுக்கு லெப்.கேணல் இளங்கோ எழுதிய இறுதி மடலின் வரி இது

          “வானேறி வந்து குண்டு போடுகிற சிங்கங்களை அவையிட குகைக்கையே சந்திக்கப்போறம்.”

      • செந்தில்குமரன் போன்றவர்கள் தமது வசதிக்கேற்றவாறு, தேவையேற்பட்டால் பார்ப்பனர்களையும் தமிழர்களாக்கி அவர்களுக்காகவும் முதலைக்கண்ணீர் வடிப்பார்கள் போல் தெரிகிறது.

  73. அம்பி ..

    //ராஜ ராஜ சோழர் தமிழ் பண்பாட்டை அழிக்கத்தான் வேதநெறி தழைக்க பார்ப்பனர்களுக்கு நிலமும், அதிகாரமும் தந்தாரா..?! பார்ப்பனர்களால் அழிக்கப்பட்ட தமிழ் பண்பாட்டை முசுலீம்கள், கிறித்தவர்கள் உதவியோடு மீட்கப் போகிறீர்களா..?! வாழ்த்துக்கள்..!//

    நீங்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளீர்கள் நான் பார்பனர்கள் என்று பொத்தாம் பொதுவாக அனைவரையும் கூறவில்லை… இன்று தமிழ் புகழோடு விளங்க காரணமானவர் சங்க இலக்கியங்களை தேடி தேடி அச்சேற்றிய ஊ.வே.சா என்னும் பார்பனர் தான். அவர் இல்லையேல் தமிழின் உயர்ந்த நாகரிகத்தை பற்றி நமக்கு தெரியாமல் போய் இருக்கும்.. மேலும் தமிழ் உயர் தனி செம்மொழி என்று முதன் முறையாக ஆய்ந்து அறிவித்தவர் பரிதிமாற் கலைஞர் என்னும் சூரிய நாராயண சாஸ்திரி என்கிற பார்பனர் தான்… ஆனால் , அவர்களின் தொண்டினை மறைக்கும் அளவிற்கு இருக்கிறது தற்போதுள்ள பார்பனர்களின் செயல்கள்.. வேண்டும் என்றே வடமொழி சொற்களை அதிக அளவில் கலந்து மணிப்ரவாளம் என்னும் கொடுந்தமிழ் நடையை உருவாகியது .. தமிழர் பண்பாட்டை வேத பண்பாட்டின் நீட்சி தான் என்று திரித்து கூறுவது.. தமிழ் எழுத்தில் கிரந்த எழுத்துகளை புகுத்த நினைப்பது போன்றவைகளை தான் நாம் எதிர்ப்பது.. மற்றபடி பார்பனர்கள் மீது எனக்கு திராவிட இயக்கத்தவர்களுக்கு இருக்கும் கோபம் போன்ற அர்த்தம்கேட்ட கோபம் ஏதும் கிடையாது…

    • அய்யா

      மொழி கலப்பு தவிர்க்க முடியாத ஒன்று. மணிப்ப்பிராலவத்தினால் எந்த கெடும் இல்லை.

      தமிழ் நாடு தனித்தீவு இல்லை. இன்று கூட மாநில எல்லை பகுதிகளில் மொழி கலப்பு அதிகம்.

      வட்டார வழக்குகளும் உண்டு. நீங்கள் அங்கு போய் தஞ்சாவூரில பேசுவது போல் பேசவும் என்று விண்ணப்பம் செய்ய முடியாது.

  74. @செந்தில் குமரன்

    ///தன் தேசத்திற்காக இறுதிவரை போராடி உயிர் விட்ட எம் தமிழ்தேசியத் தலைவர் பிரபாகரனுக்கு இணையான வீரன் தான் திப்பு///

    தில்லை கோவில் போஸ்ட்டில் பிரபாகரனை வேறுமாதிரி திட்டியதாக நினைவு.ஏன் இந்த திடீர் மனமாற்றம்?

    • தில்லைக் கோயில்:இறுதிக் கட்டப் போராட்டம்! ஆதரவு தாரீர்!

      இதில் செந்தில் குமரனின் மறுமொழிகள் 22.1.1,22.1.2,26.1.

      இதற்கு பதில் சொல்வாரா செந்தில்?

  75. இன்று தமிழ்நாட்டில் உள்ள நீர்பாசன கட்டமைப்புகளில் பெரும்பாண்மையானவை சோழர்களின் நன்கொடை.வீராணம் ஏரி உட்பட.

    தற்கால அரசுகளுக்கு அதை தூர்வாரும் யோக்யதை கூட இல்லை.

    சோழ பேரரசோ,ராஜ ராஜனோ பிறக்கவில்லை என்றால் தமிழ்நாடு என்றோ பாலைவனமாகி இருக்கும்.

    காவேரி முன்பு தமிழ்நாட்டில் பாயவில்லை என்றும் சோழ மன்னன் காவேரன் என்பவந்தான் பாறைகளை ஊடருத்து காவேரியை தமிழ்நாட்டுக்கு கொண்டுவந்தான் என்று ஒட்டகூத்தர் பாடுகிறார்.

    காவேரி ஆறு தமிழ்நாட்டுக்கு வந்தது குறித்து அகத்தியர் கதைசார்ந்த தொன்மம் ஒன்று உள்ளதால் அதை நம்பலாம்.

    • சேரி எப்படி உருவாச்சுன்னா ஒரு வெள்ளாள,பாப்பார ஆளுங்களும் பதில் சொல்லமாட்டாங்க, பாலம் கட்டுனானாம் …எந்த பாலம்டா கட்டுனான் ராஜா ராஜன் …?

        • வினவுக்கு வேண்டிய ஆளா அஸ்வின்? அவர்மட்டும்தான் “டா” போடலாமா.சூப்பர்.

          • அவரது மறுமொழிகளையும் திருத்தித்தான் போடுகிறோம். ஏதாவது விடுபட்டிருக்கலாம். இனி அத்தகைய மறுமொழிகள் யார் எழுதினாலும் நீக்கப்படும். நன்றி.

      • தேவரர்
        அந்த ஒட்டகூத்தர் பாடலை இங்கு பதிவு செய்ய முடியுமா இணையத்தில் கிடைத்தால் சுட்டி தந்தால் கூட போதும்.

        • திப்பு,

          ஒட்டக்கூத்தர்:

          தூக்குந்துலைபுக்க தூயோனும்-மேக்குயரக்
          கொள்ளுங் குடகக் குவடூ டறுத்திழியத்
          தள்ளுந் திரைப்பொன்னி தந்தோனும்.[விக்கிரம சோழனுலா-22-24]

          மலைகொன்று பொன்னிக்கு வழிகண்ட கண்டன் வரராசாராசன்கை வாளென்ன வந்தெ
          [தக்கயாக பரணி-549]

          றலையெறியுங் காவேரி யாற்றுப் படைக்கு
          மலையெறிய மன்னர்க்கு மன்னன்.[குலோத்துங்க சோழன் உலா-30,31]

          கரையெறிந்த பொன்னி கடலேழுங் கோப்ப
          வரையெறிந்த மன்னர்க்கு மன்னன்[இராசராச சோழனுலா-29,30]

          செயங்கொண்டார்:

          காவரி ரிப்புனல்கொ ணர்ந்தவ னும்பு வனியின்[கலிங்கத்து பரணி]

          சிலப்பதிகாரம்,மணிமேகலை போன்றவற்றில் இது குறித்து செய்தி உண்டு.

    • மறுமொழி 80.1.2.1ல் இலக்கிய சான்றுகளை தந்துள்ளேன்.

      அகத்தியர் கமன்டலத்தில் இருந்து காவேரி வந்தது என்பதே புராண தொன்மம்.அகத்தியர் ஆலோசனை படி சோழமன்னன் ஒருவன் காவேரியை தமிழ்நாட்டுக்கு திருப்பி இருக்கலாம்.

      மாற்று ஆதாரங்கள் இருந்தால் நீங்கள் முன்வைக்கலாம்

      • தேவரீர்,
        புலவர் பெருமக்கள் தங்கள் புரவலர்களை இந்திரனே சந்திரனே என மிகைப்படுத்தி புகழ்வதுண்டு.அதையெல்லாம் வரலாற்று ஆதாரமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.

        காவிரியை தமிழ்நாட்டுக்கு ”கொண்டு”’ இந்த விவகாரத்தை பொறுத்தவரை புலவர்களின் கூற்றை நம்புவது அறிவுக்கு பொருத்தமாக இல்லை.அதற்கு முதலில் காவிரியின் வயதை கணக்கிட வேண்டும்.

        ஆறுகளின் வயதை பல காரணிகளை வைத்து கணக்கிடுகிறார்கள்.அந்த ஆறுகள் உற்பத்தியாகும் மலைகளின் வயது,ஏதாவது ஒரு மலைத்தொடரை ஊடறுத்தால் அந்த மலைத்தொடரின் வயது ,ஆற்றின் வண்டல் படுகை முதலானவற்றை வைத்து கணக்கிடுகிறார்கள்.எடுத்துக்காட்டாக மலைத்தொடரை ஊடறுக்கும் ஆறு அந்த மலைத்தொடர் எழுவதற்கு முன்னமேயே அந்த வழியாக ஓடிக் கொண்டிருப்பதாக பொருள்.

        காவிரி ஊடறுக்கும் மேற்கு தொடர்ச்சி மலையின் வயது 15 கோடி ஆண்டுகள்.அதன்படி பார்த்தால் காவிரி 15 கோடி ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்துக்கு வந்து விட்டது.அப்போது சோழப்பேரரசு தோன்றியிருக்காது என நான் நினைக்கிறேன்.நீங்க என்ன நினைக்கிறீங்க தேவரீர்.

        • திப்பு, இப்படி எல்லாம் கேள்வி கேட்டா எப்படி, இதே மாதிரி கேள்விகள் வைத்தால் தமிழர்களுக்கு என்று ஒரு பெருமையும் மிஞ்சாதாம் .

        • திப்பு ,
          உங்களுக்கு குசும்புதனம் அதிகம் !

          //காவிரி ஊடறுக்கும் மேற்கு தொடர்ச்சி மலையின் வயது 15 கோடி ஆண்டுகள்.அதன்படி பார்த்தால் காவிரி 15 கோடி ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்துக்கு வந்து விட்டது.அப்போது சோழப்பேரரசு தோன்றியிருக்காது என நான் நினைக்கிறேன்.நீங்க என்ன நினைக்கிறீங்க தேவரீர்.//

        • என்ன திப்பு,

          வியாசன் அவர்களின் நீநீநீண்ட மொக்கையில் இருந்து 16/3/2014 முதல் உங்களை யாம் “நஞசு உண்ட சிவன்” போல காத்து அவ்வளவு தீரா மொக்கைகளையும் யாம் ஏற்று உள்ளேனே !!!!

          நன்றி கூற மாட்டிர்களா ?

        • உங்களிடம் ஒரு கேள்வி ஜனாப்,

          மனித இனம் உருவாவதற்கு பல பத்து லெட்சம் ஆண்டுகளுக்கு முன்பே நீரும் ஆறும் உருவானதாக கூறும் நீங்கள் இஸ்லாம் கூறும் படைப்பு வாதத்தை ஏற்கிறீர்களா? இல்லையா?

          இதற்கு பதில் கூறுங்கள் பிறகு பேசலாம்.

          • Stalemate between Mr.Deva and Mr.Tipu!
            —————————————

            “Stalemate is a situation in the game of chess where the player whose turn it is to move is not in check but has no legal move. The rules of chess provide that when stalemate occurs, the game ends as a draw”

            Stalemate is happening between Mr.Deva and Mr.Tipu!

            • திரு தேவார நாயனார், திரு திப்பு இருவருமே சென்னை புத்தக கண்காட்சியீல் புத்தகமா வாங்கி,நல்லா படித்து , ரூம் போட்டு தீர யோசித்து பின்பு கேள்வி கேட்கின்ற “விடாகண்டன் கொடா கண்டன்” போல நிற்கின்றனர்!

              இருவர் கேள்வியும் அறிவுபூர்வமாக உள்ளது .

              நன்று.

              So Stalemate!

              Tipu://காவிரி ஊடறுக்கும் மேற்கு தொடர்ச்சி மலையின் வயது 15 கோடி ஆண்டுகள்.அதன்படி பார்த்தால் காவிரி 15 கோடி ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்துக்கு வந்து விட்டது.அப்போது சோழப்பேரரசு தோன்றியிருக்காது என நான் நினைக்கிறேன்.நீங்க என்ன நினைக்கிறீங்க தேவரீர்.//

              Deva://மனித இனம் உருவாவதற்கு பல பத்து லெட்சம் ஆண்டுகளுக்கு முன்பே நீரும் ஆறும் உருவானதாக கூறும் நீங்கள் இஸ்லாம் கூறும் படைப்பு வாதத்தை ஏற்கிறீர்களா? இல்லையா?//

              • இல்லை செந்தில்,இதில் பெரிய புத்திசாலித்தனம் ஏதுமில்லை.தமிழகத்தின் பிற ஆறுகளை விட மிகுந்த ஆழத்திலும் மணல் கிடைப்பதால் தமிழக ஆறுகளில் மிகவும் மூத்த ஆறு பாலாறுதான் என முன்பு ஒரு ஏட்டில் படித்ததாக நினைவு.

                பாறைகளை உடைத்து காவிரியை தமிழகத்துக்கு சோழ மன்னன் ஒருவன் கொண்டு வந்ததாக தேவரர் சொன்னபோது அது நினைவுக்கு வந்து அகெ ஒf ரிவெர்ச், அகெ ஒf நெச்டெர்ன் க்கட்ச் என்று இணையத்தில் தேடியதில் கிடைத்த தகவல்கள்தான் இவை.

                தேவரரின் புத்திசாலித்தனம் செய்யுளாக எதை சொன்னாலும் நம்பி விடும் அப்பாவித்தனமாக மாறி விட்டிருக்கிறது.மேலும் நன்றாக தெளிவு படுத்திய பின்னும் உண்மையை ஏற்றுக் கொள்ள மறுக்கும் ”சின்னப்புள்ள”தனமாகவும் உள்ளது.அதனால்தான் ”உனது மத நம்பிக்கை பத்தி பேசு அப்புறமா நான் காவிரி பத்தி பேசுறேன்” என்று போக்கு காட்டுகிறார்.

                • ஆங்கில சொற்கள் தமிழுக்கு மாறி விட்டன,\\அது நினைவுக்கு வந்து age of rivers, age of western ghats என்று இணையத்தில் தேடியதில் கிடைத்த தகவல்கள்தான் இவை.//என மாற்றிப் படிக்கவும்.

                  • ஆமா செந்தில்,பதில் சொல்ல வேண்டிய தேவார நாயனார் வெளியூருக்கு போயிருக்காராம்.போற போக்குல ”உனது மத நம்பிக்கை பத்தி பேசு அப்பத்தா நான் காவிரி பத்தி பேசுவேன்” என்று திரியை கொளுத்தி போட்டுட்டு போயிட்டார்.

                    வெடிச்சத்தம் கேட்டு வெருண்ட கழுதை பாதையில போறவன மிதிச்சு தள்ளுன கதையாக ”யாழ்ப்பான மொக்கை” [உண்மையிலேயே இந்த பேரை படித்தவுடன் வாய் விட்டு சிரித்து விட்டேன்] தண்டமாரம் கொட்டுது.[ஆத்திரமும் ஆங்காரமுமாக கூச்சலிடுவதை எங்க ஊர் பக்கம் தண்டமாரம்னு சொல்வார்கள்.]ஆத்திரம் கண்ணை மறைக்கிரதுனால நாம சொல்றதும் அதுக்கு விளங்க மாட்டேங்குது.நாம பதில் சொல்லிவிட்டாலும் சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லிக்கிட்டு இருக்கு.

                    • திப்பு,

                      அதற்கு காரணம் பார்பன-தேவதாசி எச்சங்களான “யாழ் வெள்ளாளனின் ” சாதி திமீர் என்று கூறலாம் .

                      வியாசன் மொக்கைக்கு, Cast and tributes of south indian.vol V page-84 அய் படியுங்கள் என்று reference கொடுத்தல் தவறாக vol 1 படித்து விட்டு வந்து என் மீது கழிகின்றது.

                      வியாசன் மொக்கைக்கு ரோமன் எழுத்து I க்கும் V க்கும் வித்தியாசம் தெரியவில்லை

                      //ஆத்திரம் கண்ணை மறைக்கிரதுனால நாம சொல்றதும் அதுக்கு விளங்க மாட்டேங்குது.நாம பதில் சொல்லிவிட்டாலும் சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லிக்கிட்டு இருக்கு.//

                    • ஊர் இரண்டுபட்டால் முசல்மான்களுக்குக் கொண்ட்டாட்டம் போல் தெரிகிறது. இலங்கையிலும் முஸ்லீம்கள் இதைத் தான் செய்தார்கள். மண்ணின் மைந்தர்களாகிய சிங்களவர்களும், தமிழர்களும் தேவையில்லாமல் ஆளுக்காள் அடித்துக் கொள்ள, முஸ்லீம்கள் தொப்பியைப் பிரட்டி ஆதாயம் தேடிக் கொண்டார்கள். 🙂

                    • “யாழ்பான மொக்கை” ,பார்பன-தேவதாசி எச்சங்களான வியாசன் பற்றி நான் கூறியது …..

                      [1]வியாசனுக்கு இலங்கை-தமிழ் முஸ்லிம் மக்கள் மீது உள்ள வெறுப்பு உணர்வு அவருக்கு உள்ள சிங்கள பேரினவாதத்தீன் மீதான வெறுப்பு உணர்வை விட 100 மடங்கு அதிகமானது!

                      [2]வியாசன் சிங்கள பேரினவாதத்துடன் கூட சமரசம் செய்து கொள்வார் , ஆனால் சிறுபான்மை இலங்கை-தமிழ் முஸ்லிம் மக்களுடன் ஒரு போதும் இணக்கமாக இருக்க மாட்டார்

                      [3] ஏன் எனில் அவருக்கு ஈழ-தமிழ் பற்றை விட ஹிந்து மத பற்று அதிகம்
                      ref feedback 49.1.2.2

                      ராஜபட்சேயும் யாழ்-வெள்ளாளனுக்கு சலுகை அளித்தால்
                      ராஜபட்சேயும் ராச ராசனாக அறியப்படுவானா உம்மால் ?
                      refer feedback 50.1.2.2.1.2

                      //மண்ணின் மைந்தர்களாகிய சிங்களவர்களும், தமிழர்களும் தேவையில்லாமல் ஆளுக்காள் அடித்துக் கொள்ள//

                    • சிங்களனும் தமிழர்களும் போட்ட சண்டையில் இரு தரப்பினராலும் பாதிக்கப்பட்டவர்கள் முசுலிம்கள்.ஆனால் ஆதாயம் அடைந்தார்கள் என கூசாமல் புளுகும் வியாசன் இன்று முதல் ”புளுகு மூட்டை” என அன்போடு அழைக்கப்படுவாராக.

                      முசுலிம்களுக்கு விடுதலை புலிகள் இழைத்த கொடுமைகள் பற்றி இதே பதிவில் பின்னூட்டங்கள் 23.1 மற்றும் 23.2-ல் எடுத்து சொன்னபோது பதிலளிக்காமல் ஓடி ஒளிந்த வியாசன் இலங்கை முசுலிம்கள் மீது அபாண்டங்களை அடுக்குவதன் மூலம் அவர் எப்படி முசுலிம் எதிர்ப்பு வெறி பிடித்து அலைகிறார் என தெளிவாகிறது.

                    • //இதே பதிவில் பின்னூட்டங்கள் 23.1 மற்றும் 23.2-ல் எடுத்து சொன்னபோது பதிலளிக்காமல் ஓடி ஒளிந்த வியாசன்///

                      ஓடி ஒளித்தேனா, நல்ல வேடிக்கை. நான் அந்தப்பதிலையே இப்பொழுது தான் பார்க்கிறேன். இலங்கையின் தமிழ் பேசும் ‘தொப்பிபிரட்டி’ முஸ்லீம்கள், தமிழ்- சிங்களப் பிரச்சனையில் அப்பாவிகள் அல்ல, ஊர் இரண்டு பட்டால் கூத்தாட்டிக்குக் கொண்டாட்டம் என்பது போல், இலங்கை மாதாவின் மைந்தர்களாகிய தமிழர்களும், சிங்களவர்களும் தேவையில்லாமல் அடித்துக் கொன்று சாக, அதில் ஆதாயமடைந்தவர்கள் முஸ்லீம்கள், அவர்கள் சிங்களவர்களுடன் இணைந்தும், தனியாகவும் தமிழர்களைப் படுகொலை செய்தவர்கள், தமிழ்ப்பெண்களைக் கற்பழித்தவர்கள், கிழக்கில் பல கிராமங்களிலிருந்து தமிழர்களை அடியோடு விரட்டியவர்கள், அது மட்டுமல்ல அவர்கள் செய்த கொலைகளை மறைத்து, அவர்களின் தமிழ்நாட்டு முஸ்லீம் சகோதர்களின் உதவியுடன் தமிழர்களுக்கேதிராகப் பொய்ப்பிரச்சாரங்கள் செய்தவர்கள். ஈழத் தமிழர்களை அழிக்க இலங்கை அரசுக்கு உதவி, முஸ்லீம் நாடுகளிலிருந்து உதவிகள் பெற்றுக் கொடுத்தவர்கள் என்ற உண்மையை தொடர்ச்சியாக துணிச்சலுடன் கூறிவரும் நான் இப்படியான சந்தர்ப்பத்தை விட்டு ஓடி ஒளிவேன் என்று ஜனாப் திப்பு தப்புக் கணக்குப் போட்டு விட்டார்.

                      கீழேயுள்ள இணைப்புகளில் எனது பதிலைக் காணலாம். 🙂

                      1. காத்தான்குடியில் நடந்த முஸ்லீம்களின் படுகொலையும் – நிந்தவூரில் நடக்கவிருந்த முஸ்லீம்களின் படுகொலையும்.
                      http://viyaasan.blogspot.ca/2013/02/blog-post_21.html

                      2. சிங்களவரும் முஸ்லீம்களும் இணைந்து தமிழர்களை வேட்டையாடிய சத்துருக்கொண்டான் படுகொலையின் நினைவு தினம் இன்று.

                      http://viyaasan.blogspot.ca/2013/09/blog-post_10.html

                      3. சிங்கள இராணுவமும், முஸ்லீம்களும் இணைந்து உடும்பன்குளத்தில் 130 தமிழர்களைப் படுகொலை செய்த 27ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று.

                      http://viyaasan.blogspot.ca/2013/02/27.html

                      4. இலங்கையில் தமிழர் படுகொலைகளில் தமிழ் பேசும் முஸ்லீம்களின் பங்களிப்பு. ஈழத்தில் தமிழர்களுக்கெதிரான போரில் முஸ்லீம்கள் வெறும் பார்வையாளர்கள் அல்ல தீவிர பங்கேற்றவர்கள்.

                      http://viyaasan.blogspot.ca/2013/02/blog-post_10.html

                      5. சிங்களவர்களின் முஸ்லீம் எதிர்ப்பை தமிழ்நாட்டு முஸ்லீம்கள் அடக்கி வாசிப்பதேன்?
                      த‌மிழ‌ர்க‌ள் மீது அப‌க‌ரிப்பு யுத்த‌ம் -‍ சிங்க‌ள‌த்துட‌ன் முஸ்லீம்க‌ளும் கூட்டு.

                      http://viyaasan.blogspot.ca/2013/01/blog-post_24.html

                      6.முஸ்லீம் அமைச்ச‌ர்க‌ளின் உத‌வியுட‌ன் த‌மிழ‌ர்க‌ள் மீது காணி அப‌க‌ரிப்பு யுத்த‌ம் ந‌ட‌த்தும் இல‌ங்கை முஸ்லீம்க‌ள். ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளின் கேட்பார‌ற்ற‌ நிலை.

                      http://viyaasan.blogspot.ca/2013/01/blog-post_6702.html

                    • குறிப்பான வாதத்திற்கு குறிப்பான பதிலை அளிப்பதுதான் சரியான வாத முறை.முசுலிம்கள் எத்தனையோ முறை பதில் அளித்து விட்ட பழங்குப்பைகளை அள்ளிப்போட்டு பார்த்துக் கொள் என சொல்வது விவாதமல்ல.

                  • திப்பு காக்கா,

                    ஜம் ஜம் நீரூற்றை அல்லா உருவாக்கினாரா அல்லது பாலகன் இஸ்மாயில் தனது பிஞ்சுக் கால்களால் பாலைவனத்தில் உதைத்ததால் உருவாகியதா என்று இன்னும் பதில் சொல்லவேயில்லையே? 🙂

                    • அது வெறும் மழுப்பல், அல்லா ஜம் ஜம் நீரூற்றை உருவாக்கினாரா இல்லையா, அகத்தியரின் கமண்டலத்திலிருந்து காவிரி உருவாகியது போன்ற புராணக் கதைகளை எப்படி நம்ப முடியாதோ அப்படி குரானின் ஜம்ஜம் கதைகளையும் நம்பலாமா, நம்பமுடியாதா என்று எதையும் குறிப்பிடாமல் மழுப்பியிருப்பது தான் உங்களின் பதிலா? 🙂

                    • கனம் கோர்ட்டார் அவர்களே!

                      இந்த நீதிமன்றத்தில் தவறான தகவல்களை திரு. செந்தில்குமரன் முன்வைக்கிறார் என கூறிகொள்கிறேன்.

                      ///சுந்தர சோழனின் தாய் வீமன் குந்தவை என்பவள் வேங்கி நாட்டு[கீழைச் சாளுக்கிய[ஆந்திரா]]மன்னனாகிய இரண்டாம் வீமன் சாளுக்கியனின் புதல்வி///

                      மறுமொழிகள்
                      88
                      88.1.1
                      88.1.2
                      88.1.1.3.1
                      89.1.1
                      89.2.1

                      ஆனால் உண்மை அது இல்லை.சுந்தர சோழன் வைதும்பராயன் மகள் கல்யாணியின் மகன்.

                      “அரிஞ்சயன் இறந்த பின்னர்,அவன் மகன் இரண்டாம் பராந்தகன் கி.பி.957-ல் சோழ இராச்சியத்திற்குச் சக்கரவர்த்தியாக முடிசூட்டப் பெற்றான்.இவன் அவ்வேந்தற்கு வைதும்பராயன் மகள்பாற் பிறந்த அரசகுமாரன் ஆவன்.பெற்றோர்கள் இவனுக்கிட்ட பெயர் பராந்தகன் என்பதேயாம்.இவன் பேரழகுடையவனாயிருந்தமை பற்றிச் சுந்தர சோழன் என்னும் பெயரைப் பின்னர் எய்தினன் என்பது அன்பிற் செப்பேடுகளால் அறியப்படுகிறது”[பிற்காலச் சோழர் சரித்திரம்-பகுதி:1-டி.வி.சதாசிவ பண்டாரத்தார்-பக்கம்-59-ராமையா பதிப்பகம்]

                      “இவ்வேந்தனுக்கு[அரிஞ்சயன்] பராந்தகன் என்ற புதல்வன் ஒருவன் இருந்தனன்.அவன் வைதும்பராயன் மகள் கல்யாணி என்ற அரிசியின்பாற் பிறந்தவன் என்பது அன்பிற் செப்பேடுகளால் உணரப்படுகின்றது”[மேலது நூல் பக்கம்.57]

                      “இரண்டாம் பராந்தகன்[கி.பி.956-973].இவன் அரிஞ்சயன் மகன்;வைதும்பராயன் மகளான கல்யாணிக்குப் பிறந்தவன்[சோழர் வரலாறு-டாக்டர் மா.இராசமாணிக்கனார்-பூரம் பதிப்பகம்-பக்கம்-173]

                      மேலே உள்ள நூல் ஆதாரங்கள் மூலம் சுந்தர சோழனாகிய இரண்டாம் பராந்தகன் பீமன் குந்தவை மகன் இல்லை என்பது நன்கு விளங்கும்.

                      செந்தில் குமரன் தனது ஆதாரங்களை முன்வைக்கலாம்

                      தட்ஸ் ஆல் யுவர் ஆனர்.

                    • ராச ராசனின் பாட்டி, சுந்தர சோழனின் தாய் ,வீமன் குந்தவை என்பவள் வேங்கிநாட்டு[கீழைச்சாளுக்கிய [ஆந்திரா] ] மன்னனாகிய இரண்டாம் வீமன் சாளுக்கியனின் புதல்வி!

                      ஆதாரம்:டாக்டர் மா.இராசமாணிக்கனார் எழுதிய “சோழர் வரலாறு” பக்கம் 172.

                      [1]சுந்தர சோழன் தன் மகளுக்கு “குந்தவை” என்று தம் தாய் பெயரான வீமன் குந்தவையை பெயர் இட்டதன் மர்மம் என்ன கனம் கோர்ட்டார் அவர்களே!!

                      [2]சுந்தர சோழனின் தாய் ஒரு வேலை “வைதும்பராயன் மகள் கல்யாணி” என்று இருப்பின் அவர் தம் மகளுக்கு “கல்யாணி” என்று தானே பெயர் இட்டு இருக்க வேண்டும் ? ஆனால் அவர் [சுந்தர சோழனின்] மகள் பெயர் “குந்தவை” என்று தானே உள்ளது கனம் கோர்ட்டார் அவர்களே!!.!

                      [3]நம் முன்னோர் வழமை படி ஒரு குடும்பத் தலைவன் தம் தாய் ,தந்தை பெயரை தானே தம் குழந்தைகளுக்கு சூட்டும் மரபு உள்ளது கனம் கோர்ட்டார் அவர்களே!!

                    • திரு.செந்தில் குமரன்,

                      நான் கொடுத்து இருப்பது நூலில் வாசகத்தை அப்படியே பக்க ஆதாரத்துடன்.நீங்கள் அதே போன்று நூலில் உள்ள வாசகத்தை தரலாம்.

                      டாக்டர் மா.ராசமாணிக்கனாரின் சோழர் வரலாறு நூலில் 173ம் பக்கத்தில் உள்ளதையும் அப்படியே தந்துள்ளேன்.

                      எனவே மழுப்பாமல் பதில் கூறவும்.நீங்கள் கூறும் லாஜிக் படி சுந்தர சோழனும்,சுந்தர பாண்டியனும் உறவாகி விடுவார்கள்.

                    • ஐயா,

                      “வீமன் குந்தவையார் கீழைச்சாளுக்கிய வீமன் மகள் “[பக்கம் 172.]

                      டாக்டர் மா.ராசமாணிக்கனா இவ் விடயத்தில் நழுவிச் செல்வதன் மர்மம் என்ன ?

                    • ஐயா,

                      கேள்வி வீமன் குந்தவை யாருடைய மகள் என்பது குறித்து இல்லை.

                      சுந்தரசோழன் யார் மகன் என்பது குறித்து.அன்பிற் செப்பேடுகள் வைதும்பராயன் மகள் கல்யாணியின் மகன்தான் அவன் என்று குறிப்பிடுவதாக சதாசிவ பண்டாரத்தார்,ராசமாணிக்கனார் போன்ற வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

                      ராசமாணிக்கனார் நழுவுகிறார் என்பதெல்லாம் அபத்தமான குற்றசாட்டு.

                      நீங்கள் ஆதாரமாக சுட்டிய 172ம் பக்கத்தில் உள்ளதை பதிவிடுங்கள்.ராசமாணிக்கனார் நழுவுகிறாரா இல்லையா என்று பார்க்கலாம்.

                    • தேவார நாயனார் ஐயா ,என் பின்னூட்டம் 191க்கு முதலில் பதில் கூறுங்கள்.

                      [I am very sorry for changing the numbers ]

                    • பின்னூட்டம் எண் 50.2 ன் முதல்வரியின் பொருத்தப்பாடு கொஞ்சம் கூட மாறவில்லையே.எத்தனை முறைதான் சொல்வது.

                      அய்யா அறிவாளியே,

                      ஜம் ஜம் நீரூற்றின் அற்புதத்தை நம்புங்கள் என்று இசுலாமியர் யாரும் இங்கு கேட்கவில்லை.குறிப்பாக வியாசனோ தேவார நாயனாரோ நம்புவார்கள் என எதிர்பார்க்கவுமில்லை.ஆகையால் அது இங்கு விவாதப்பொருள் இல்லை.அதை பற்றி விவாதித்துதான் ஆக வேண்டும் என்றால் அந்த நீரூற்று பற்றி எழுதப்பட்ட கட்டுரை ஒன்றின் சுட்டியை வியாசன் தந்துள்ளாரே அந்த தளத்தில் போய் சண்டமாருதம் பொழியலாம்.

                      ஆனால் பல்வேறு சமயங்களை சார்ந்தவர்களும் முதன்மையாக கடவுள் மறுப்பாளர்களும் படிக்கும் வினவு போன்ற தளங்களில் வந்து கொஞ்சம் கூட வெட்கப்படாமல் தனது மத நம்பிக்கையின் அடிப்படையில் இங்கு ஓடாத காவிரியை தமிழகத்துக்கு சோழ மன்னன் கொண்டு வந்தான் என்று சொல்லி அதற்கு ஆதாரம் என்று சில பழந்தமிழ் பாடல்களையும் எடுத்து விடுகிறார் தேவார நாயனார்.அதுதான் இங்கு விவாதப்பொருள்.

                      வியாசனுக்கு வக்கு இருந்தால் அது பற்றி விவாதிக்கலாம்.

                      இசுலாமியன் என்பதால் எனது வாதத்திற்கு பதில் அளிக்காமல் ஜம் ஜம் நீரூற்று பற்றி வாய் கிழியும் வியாசன் இதே வாதத்தை ஒரு கடவுள் மறுப்பாளர் சொன்னால் என்ன கிழிப்பாராம்.

                    • ///இசுலாமியன் என்பதால் எனது வாதத்திற்கு பதில் அளிக்காமல் ஜம் ஜம் நீரூற்று பற்றி வாய் கிழியும் வியாசன் இதே வாதத்தை ஒரு கடவுள் மறுப்பாளர் சொன்னால் என்ன கிழிப்பாராம்.///
                      அது தான் பிரச்சனையே, தமிழ்நாட்டில் கடவுள் மறுப்பாளர் என்று கூறிக் கொள்பவர்கள் எவரும் இந்துமதத்தை விமர்சிப்பது போல் இஸ்லாத்திலுள்ள நம்பிக்கைகள் எதையும் விமர்சிப்பதில்லை. அதனால் தான் தமது மதத்தில் அதே போன்ற நம்பிக்கைகள் இருந்தாலும், முஸ்லீம்களும் இந்துக்களின் நம்பிக்கைகளை மட்டும் துணிச்சலுடன் விமர்சிக்கிறார்கள்.

                    • வினவிலேயே ஏராளமான கட்டுரைகள் இசுலாத்தை விமரிசித்து வருகின்றனவே.

                      சரி காவேரி பற்றிய விவாதத்திற்கு என்னதான் பதில்.

                    • //சரி காவேரி பற்றிய விவாதத்திற்கு என்னதான் பதில்.///

                      முஸ்லீம்களுக்குப் புனிதமான ‘ஜம் ஜம்’ நீரூற்று பாலகன் இஸ்மாயிலின் பிஞ்சுக் கால்கள் பாலைவனத்தில் உதைத்ததால் அல்லா உருவாக்கினார் என்பது உண்மையானால், இந்துக்களுக்குப் புனிதமான காவிரியும் அகத்தியரின் கமண்டலத்திலிருந்து தான் உருவாகியது. அப்படியல்ல, ஜம் ஜம் நீரூற்றும், இயற்கையில் சவூதி அரேபியாவில் காணப்படும் Aquiferகளில் ஒன்று தான் என்று ஒப்புக் கொண்டால், காவிரியும் இயற்கையில் பல ஆயிரமாண்டுகளுக்கு முன்னால் உருவாகிய ஆறு தானே தவிர, அகத்தியருக்கும் காவிரிக்கும் சம்பந்தமில்லை. 🙂

                    • ஜனாப்,

                      நீர் உருவாகி பலகோடி ஆண்டுகளுக்கு பிறகு உயிர்கள் உருவானதாக அறிவியல் கூறும் விதமும்,

                      குரான் கூறும் படைப்புவாதமும் ஒரே மாதிரிதான் உள்ளதா? ஏன் இந்த பித்தலாட்டம்?.

                      அப்புறம் வெட்கமின்மை, விவாதத்திற்கு பதில் கூறாமல் ஓடுவது பற்றி நீங்கள் பேசலாமா? வாணக்காரையா போஸ்டில் வெட்கமில்லாமல் ஓடியது மறந்துவிட்டதா?

                    • \\நீர் உருவாகி பலகோடி ஆண்டுகளுக்கு பிறகு உயிர்கள் உருவானதாக அறிவியல் கூறும் விதமும்,
                      குரான் கூறும் படைப்புவாதமும் ஒரே மாதிரிதான் உள்ளதா? ஏன் இந்த பித்தலாட்டம்?.//

                      குரான் கூறும் படைப்புவாதமும் உயிர்கள் உருவானதாக அறிவியல் கூறும் விதமும் ஒரே மாதிரி இல்லை.உண்மை.அதுவும் நாம் விவாதிக்கும் பொருளும் வேறு வேறு.உலகில் மனிதர்கள் வருவதற்கு முன்னரே நீரும் காவிரி ஆறும் உருவாகிவிட்டன என்று நான் சொல்வது குரானின் படைப்பு வாதத்துடன் எந்த வகையிலும் முரண்படவில்லை.இதில் என்ன பித்தலாட்டம் இருக்கிறது.
                      குரானின் படைப்பு வாதம் முசுலிம்களின் நம்பிக்கை.அவ்வளவுதான்.அது அறிவியல் அடிப்படையிலானது என நான் தம்பட்டம் அடிக்கவில்லை.ஆனால் உங்கள் நிலை என்ன.உங்கள் மத நம்பிக்கையை நடந்த வரலாறு என சில பாடல்களை மேற்கோள் காட்டி சொன்னீர்கள்.அது தவறு என சுட்டிக்காட்டி இருக்கிறேன்.அதை மறுக்க துப்பில்லை உங்களுக்கு.ஆம் தவறாக சொல்லிவிட்டேன் என உண்மையை ஒப்புக் கொள்ளும் நேர்மையும் இல்லை.
                      காவேரன் கொண்டு வந்த காவேரி பற்றி விவாதிக்க வக்கற்று போய் இன்னும் எத்தனை நாளைக்கு இசுலாமிய மத நம்பிக்கைகளை பிடித்துக் கொண்டு தொங்குவதாக இருக்கிறீர்கள்.
                      உண்மையில் இந்த பின்னூட்டத்தை நான் எழுத வேண்டிய அவசியமே இல்லை.விவாதப்பொருளான காவிரி பற்றி எழுத உங்களிடம் சரக்கில்லை என்பது விவாதத்தை படிக்கும் எவருக்கும் தெளிவாகி இருக்கும்..அதனால் மேற்கொண்டு பேச என்ன இருக்கிறது என அமைதி காத்திருப்பேன்.வாணக்காரய்யா பதிவை குறிப்பிட்டு இருப்பதால் கொஞ்சம் எழுத வேண்டியதாகி விட்டது.இல்லை என்றால் ஓடி விட்டேன் என கற்பனையில் மிதந்து வக்கணை பேசுவீர்கள் .
                      \\அப்புறம் வெட்கமின்மை, விவாதத்திற்கு பதில் கூறாமல் ஓடுவது பற்றி நீங்கள் பேசலாமா? வாணக்காரையா போஸ்டில் வெட்கமில்லாமல் ஓடியது மறந்துவிட்டதா?//

                      அந்த பதிவில் இரண்டு மூன்று வாரங்கள் ஐம்பதுக்கும் மேற்பட்ட பின்னூட்டங்கள் எழுதி உங்களுடன் விவாதித்திருக்கிறேன்.உங்க ஊர்ல இதுக்கு பேர்தான் ஓடுவதா.விவாதம் என்று வந்தால் ஒரு நாள் நிறுத்தித்தான் ஆக வேண்டும்.போதுமான அளவு விவாதித்து விட்டோம் என கருதும் பட்சத்தில் நிறுத்திக்கொள்வதில் என்ன தவறு.கடைசி பின்னூட்டம் போடுபவரே வெற்றியாளர் என்ற மனநோய் என்னிடம் இல்லை.தவறை சுட்டிக்காட்டினால் அதை ஒப்புக் கொள்ளும் நேர்மையும் என்னிடம் உண்டு.வாணக்காரய்யா பதிவிலேயே ஒரு தவறான கருத்தை நீங்கள் சுட்டிக்காட்டிய போது தவறுதான் என ஒப்புக் கொண்டிருக்கிறேன்.அதற்காக விவாதத்திலிருந்து பின்வாங்கவுமில்லை.

                      ஆனால் உங்கள் நிலை என்ன.மீண்டும் சொல்கிறேன்.உங்களுக்கு வெட்க உணர்வு கொஞ்சம் கூட இல்லை.உங்கள் மத நம்பிக்கைபடிதான் வரலாறு நிகழ்ந்தது என மொக்கை ஆதாரங்களை காட்டி சொல்லி விட்டு அது தவறு என சுட்டிக்காட்டினாலும் அது பற்றி எதுவுமே பேச மாட்டேன் என கல்லுளி மங்கனாக சாதிக்கிறீர்கள்.ஆனாலும் நாம் அறிவாளியாயிற்றே கடைசி பின்னூட்டம் நம்முடையதாகத்தான் இருக்க வேண்டும் என்று ஈகோ உந்தி தள்ள இசுலாமிய மத நம்பிக்கைகளை பிடித்து தொங்கிக் கொண்டு இருக்கிறீர்கள்.

                      .மீண்டும் சொல்கிறேன்.உங்களுக்கு வக்கு இருந்தால் காவேரன் கொண்டு வந்த காவேரி பற்றி பேசுங்கள்.

                    • தேவரீர்.
                      தகுந்த இடத்தில் விவாதத்தை நிறுத்திக் கொள்வதை எப்போதுமே வழக்கமாக கொண்டிருக்கிறேன்.சில ஆண்டுகளுக்கு முன் எழுதிய பின்னூட்டம் ஒன்று.

                      https://www.vinavu.com/2011/09/12/dalits-killed/#comment-49753

                      நண்பர் அம்பியுடன் நடத்திய மிக நீண்ட ஒரு விவாதத்தின் கடைசி சுட்டிகள் இவை.

                      https://www.vinavu.com/2013/03/05/vhp-blames-politicians-for-caste/#comment-81575

                      https://www.vinavu.com/2013/03/05/vhp-blames-politicians-for-caste/#comment-81593

                      விவாதத்தை நிறுத்திக் கொள்வதாக நான் தெரிவித்த போது அம்பியும் நாகரீகமாக முடித்துக் கொள்கிறார் பாருங்கள்.அதுவும் நகைச்சுவையுடன் சிரித்தபடி விவாதம் முடிகிறது.அந்த நாகரீகம் உங்களிடம் இல்லை.

                    • ///குரான் கூறும் படைப்புவாதமும் உயிர்கள் உருவானதாக அறிவியல் கூறும் விதமும் ஒரே மாதிரி இல்லை.உண்மை///

                      சரி

                      ///உலகில் மனிதர்கள் வருவதற்கு முன்னரே நீரும் காவிரி ஆறும் உருவாகிவிட்டன என்று நான் சொல்வது குரானின் படைப்பு வாதத்துடன் எந்த வகையிலும் முரன்படவில்லை///

                      அடடா! என்ன விளக்கம் என்ன விளக்கம்.விஞ்ஞானியே! மனிதர்கள் வருவதற்கு முன்பே நீர் உருவானது என்பதற்கு அறிவியலை மேற்கோள்காட்டும் நீங்கள்,அதற்கு பிறகு வந்த மனிதர்கள் எப்படி உருவானதாக நம்புகிறீர்கள் அறிவியல் சொல்லும் முறையிலா? இல்லை குரான் சொல்லும் முறையிலா?அதைதானே நான் முதலில் இருந்து கேட்டுவருகிறேன்.

                      ஒரு அறிவியல் கருத்தியலில் பாதியை நம்பி தன் கருத்தாக முன் வைத்துவிட்டு மீதியை நம்பவில்லை என்றால் அது பித்தலாட்டம் இல்லாமல் என்ன?

                      உங்களுக்கு வக்கு இருந்தால் உயிர்கள் எப்படி உருவானது என்று சொல்லுங்கள்

                      வெட்கம் இல்லாமல் அறைகுறை விஞ்ஞான வாதம் பேசாதீர்கள்.

                      செவப்பா இருக்குறவன் பொய் சொல்ல மாட்டான் என்பது மட்டுமே உங்கள் லாஜிக் என நினைத்தேன்.

                      ஐந்து பதில் போட்டுட்டு போனா தோத்து ஓடினவர்,ஐம்பது மொக்க பதில் போட்டுட்டு போனா தோத்து ஓடினவர் இல்லை என்பது அடுத்த லாஜிக்.

                      திராணி இருந்தால் பதில் சொல்லுங்கள் என்று கேட்ட பிறகுதான் நீங்கள் ஓடினீர்கள் மறந்துவிட்டதா?

                      நீர் உருவான பிறகு உயிர்கள் எப்படி உருவானது என்று சொல்லுங்கள் காவிரி பற்றி பேசலாம்.

                    • நாகரீகமற்றமுறையில் வெட்கமில்லாமல் கருத்து சொல்வதாக திட்டியது நீங்கள்தான் ஜனாப்.அதனால்தான் நானும் கூறினேன்.

                      இலக்கியங்களின் அடிப்படையில்தான் ராமர் பாலமும்,குமரிக்கண்டமும் பேசப்படுகிறது.ஆய்வு நூல்கள் எழுத்தப்படுகிறது.அதெல்லாம் வெட்கமில்லாத கருத்துகளா?

                      விவாதத்தில் பதில் கூறவில்லை என்றால் அத்துடன் விட்டுவிடுவதே என் இயல்பு.

                      உங்கள் எகத்தாளம் என்னை சுட்டிகாட்ட வைத்துவிட்டது.அம்பியின் விவாதமுறையை நான் அறிவேன்.அது போன்ற பெருந்தன்மை உங்களிடம் எப்போதும் இல்லை.

                    • திரு.செந்தில் குமரன்,

                      ஐயா என்றெல்லாம் கூறவேண்டாம்.நான் வயதில் சிறியவன் தான்[32].உங்கள் பின்னுட்டம் 191க்கான பதில் எனது பின்னுட்டம் 196ல் உள்ளது.

                    • நமது விவாதம் இசுலாமிய படைப்பு வாதத்திற்கும் பரிணாம கோட்பாட்டிற்கும் உள்ள முரண்பாடு பற்றி இல்லை.அது பற்றி விவாதிக்க வேண்டுமென்றால் பக்கத்திலேயே இசுலாமிய பிற்போக்குத்தனத்தால் கொல்லப்பட்ட அமீனா பவஷர் பதிவில் சகோதரர் அமீன் இது பற்றி விவாதிக்கிறார்.அங்கு செல்லலாம்.

                      நீங்களும் நானும் வேறு வேறு மத நம்பிக்கைகள் கொண்டவர்கள்.மேலும் பல சமயத்தவரும் கடவுள் மறுப்பாளர்களும் படிக்கும் இணைய தளம் ஒன்றில் நீங்கள் உங்களுடைய மத நம்பிக்கையை அடிப்படையாக கொண்டு ஒரு கருத்தை சொல்கிறீர்கள்.அதனை நான் எனது மத நம்பிக்கை அடிப்படையில் மறுக்க முடியாது.காவேரி அகத்தியரின் கமண்டலத்திலிருந்து வரவில்லை.குன் என்ற அல்லாவின் சொல்லிலிருந்து வந்தது என சொன்னால் அது இசுலாமியர் தவிர வேறு யாருக்கும் ஏற்புடையதாக இருக்காது.ஆகவே அனைவருக்கும் பொதுவாக யாரும் ஆட்சேபிக்க முடியாத வகையில் அறிவியல் ஆதாரங்களை காட்டி மறுக்கிறேன். எதிர் வாதம் வைக்கவும் வக்கில்லாமல் அல்லது தவறு என ஏற்கவும் மனமில்லாமல்இசுலாமிய படைப்பு வாதம் பற்றி பேசினால்தான் விவாதப் பொருளான காவிரி பற்றி பேசுவேன் என்று விதண்டாவாதமாக அடம் பிடிக்கிறீர்கள்.

                      பரிணாம கோட்பாட்டை ஏற்காத நீ எப்படி நீர் உருவான காலம் பற்றி அறிவியல் சொல்வதை ஆதாரமாக காட்டலாம் என்கிறீர்கள்.இதை விட முட்டாள்தனம் இந்த உலகில் வேறெதுவும் இருக்க முடியாது.இதன் படி பார்த்தால் சந்திரனையும் சூரியனையும் ராகு,கேது பாம்புகள் முழுங்கறதா நம்புற இந்துவான நீங்கள் அவை பொய்யென நிரூபிக்கும் வான் அறிவியலின் பயனாக கிடைக்கும் செயற்கைக்கோள் தொலைக்காட்சி கைப்பேசி போன்றவற்றை பயன்படுத்த கூடாது என சொன்னால் ஒப்புக் கொள்வீர்களா.இந்த வரையறையின்படி முசுலிம்கள்,கிருத்துவர்கள்,இந்துக்கள் எந்த ஒரு அறிவியல் சாதனத்தையும் பயன்படுத்தக்கூடாது என்று கூட வாதிடலாம்.எப்படியாவது கடைசி பின்னூட்டம் நம்முடையதாகத்தான் இருக்க வேண்டும் என்ற வெறியில் இதெல்லாம் ஒரு வாதம் என பேசிக் கொண்டு இருக்கிறீர்கள்.

                      வாணக்காரய்யா பதிவில் திராணி இருந்தால் என்று இரண்டு நாட்களில் போட்ட இரண்டு பின்னூட்டங்களுக்கு இடையில் நான் போட்டஎனது இறுதி பின்னூட்டத்தில் சொன்ன கடைசி இரண்டு வரிகள் இன்னும் அப்படியே பொருந்துகின்றன.

                      ஏற்கனவே வியாசனிடம் கேட்ட கேள்விதான் இது. காவிரி பற்றிய எனது வாதத்தை ஒரு இந்து சகோதரரோ,கடவுள் நம்பிக்கை இல்லாத தோழர் ஒருவரோ சொன்னால் குரானின் படைப்புவாதம் என வாய் கிழியும் தேவரர் எதை கிழிப்பார்.

                    • \\அதனால் தான் தமது மதத்தில் அதே போன்ற நம்பிக்கைகள் இருந்தாலும், முஸ்லீம்களும் இந்துக்களின் நம்பிக்கைகளை மட்டும் துணிச்சலுடன் விமர்சிக்கிறார்கள்.//

                      அகத்தியர் கமண்டலத்திலிருந்து காவேரி வந்தது என்ற உங்கள் நம்பிக்கையை நான் விமர்சிக்கவில்லையே.சோழ மன்னன் அகத்தியர் ஆலோசனைப்படி பாறைகளை ஊடறுத்து காவேரியை தமிழகத்துக்கு கொண்டு வந்ததாக இட்டுக்கட்டப்படும் கட்டுக்கதையைத்தான் விமர்சிக்கிறேன்.

          • தேவரீர்,
            விவாதத்திற்கு பதில் இருந்தால் கேள்விக்கு விடை தெரிந்தால் சொல்லுங்கள்.அதை விடுத்து விவாதத்தை திசை திருப்புவது மலிவான உத்தி.
            .
            இங்கு எனது தனிப்பட்ட குணநலன்கள் பற்றி ஆய்வு நடக்கவில்லை.முன்னரே சொல்லியிருக்கிறேன். மதம் சாராத விவாதங்களில் எனது மத நம்பிக்கைகள் தலையிட நான் இடம் கொடுப்பதில்லை.மதம் சார்ந்த விவாதங்களில் கூடதர்க்க நியாயமின்றி ”எனது நம்பிக்கை இது ஆகவே நீங்களும் ஏற்றுக்கொள்ளுங்கள்”என்று வாதிட்டதில்லை.

            காவிரியை சோழனும் அகத்தியரும் தமிழகத்திற்கு கொண்டு வந்தார்கள் என்ற உங்கள் வாதத்தை மறுத்து அல்லாதான் தமிழகத்துக்கு கொண்டு வந்தான் என சொல்லவில்லை.இயற்கையைத்தான் சுட்டிக்காட்டுகிறேன்.அந்த இயற்கையை இயக்குவது பரலோகத்தில் இருக்கும் பரமபிதாவா,கயிலையில் நடனமாடும் சிவனா,அளவற்ற அருளாளன் அல்லாவா அல்லது அது தானே இயங்குகிறதா என்ற கேள்விக்கு விடை அவரவர் ஏற்றுக் கொண்ட கருத்தியலில் உள்ளது.அதற்கும் நமது விவாதத்திற்கும் தொடர்பில்லை.

        • ஜனாப்.திப்பு,

          அப்படியானால் முஸ்லீம்கள் புனிதமான நீராக கருதும் சவூதி அரேபியாவில் உள்ள “ஜம் ஜம்'(zamzam) நீரூற்றைக் கூட அல்லா உருவாக்கவில்லை, குரானிலுள்ள அந்தக் கதை உண்மையாக இருக்க முடியாது. அதாவது இந்த விவகாரத்தை பொறுத்தவரை குரானின் “கூற்றை நம்புவது அறிவுக்கு பொருத்தமாக இல்லை” என்று ஒப்புக் கொள்வீர்களா? ஜம் ஜம் நீரூற்றை அன்னை ஹாஜரா அம்மையாரினதும், பாலகன் இஸ்மாயிலின் தாகத்தையும் போக்க அல்லா உருவாக்கவில்லை, முதலில் அந்த நீரூற்றின் வயதைக் கணக்கிட வேண்டும் என்று கூறுவீர்களா என்பதை தயவு செய்து அறியத் தரவும்.

          • முஸ்லீம்களுக்குப் புனிதமான அரேபியாவிலுள்ள “ஜம்ஜம்” நீரூற்றின் கதை:

            “ஜம் ஜம்”! அது ஒரு கடலோ, ஏறியோ, நதியோ அல்ல ! இரண்டு ஒன்று நபர்கள் கட்டிப் பிடித்தால் அதற்குள் அடங்கி நிற்கும் அளவுள்ள ஒரு ஊற்றுக் கிணறு தான் ! ஆனால் அது படைத்து நிற்கும் சரித்திரமோ வரலாற்று நாயகர்களை எல்லாம் வியப்பில் ஆழ்த்தி நிற்கச் செய்திருக்கிறது !
            வறண்ட பாலைப் பகுதியில் வற்றாத சுனையாகக் கிளம்பி நிற்கும் அந்த ஊற்றின் அஸ்த்திவாரமே இஸ்மாயில் நபியின் பூவையொத்த பஞ்சுப் பாதங்கள் தான் !

            ஆமாம் ! அன்னை ஹாஜராவையும், பூம் பாலகன் இஸ்மாயீலையும் பாலை வனக்காட்டில் விட்டுவிட்டுத் திரும்பிப் பாராமல் வந்து விடும்படி இறைக்கட்டளை பிறந்தது நபி இப்றாஹீம் அவர்களுக்கு ! அவ்வாறே செய்து திரும்பினார்கள் !

            அக்கினிக் குழம்பாகக் கொதித்துக் கிடந்த அந்தப் பாலை மணற்காட்டில் கண் எட்டிய தூரம் வரை எதுவுமே இல்லை. உலக உருண்டையில் இரண்டு எறும்புகள் இருப்பது போல அந்த வனத்தில் அன்னை ஹாஜராவும் பிள்ளை இஸ்மாயீலும் இருந்தனர்.

            அனல் பறக்கும் கொடும் வெய்யிலில் தரையில் கிடத்தப்பட்டிருந்த பிஞ்சுப் பாலகன் இஸ்மாயீல் தாகக்கொடுமை தாழாமல் கதறிப் பீறிட்டுக் கத்தி அழுது கொண்டு கிடந்தார்கள். பசியும் சேர்ந்து சோதித்தது !

            குழந்தையின் அழுகுரல் கேட்டு மனம் பதைத்த அன்னை ஹாஜரா அவர்கள் செய்வதறியாது விழித்தார்கள். மார்பிலே அமுது வற்றிப் போயிருந்தது. மண்ணிலே நீர் வறண்டு போய்க் கிடந்தது. தொண்டை கிழியக் கதறி அழும் மழலைக்குத் தொண்டையை நனைத்து விடக்கூட அங்கு ஒரு துளி நீரும் இல்லை. பெற்ற மனம் பதறியது !

            இடப்புறம் திரும்பிப்பார்த்தார்கள். அன்னை ஹாஜரா அம்மையார் ! “ஸபா” குன்றில் நீர் வடிவம் தெரிந்தது ! ஓடிச் சென்று பார்த்தார்கள் ! அது காணும் நீரல்ல ! கானல் நீர் ! மீண்டும் வலப்புறம் பார்த்தார்கள். “மர்வா” குன்றில் நீர் வடிவம் நெழிந்தது. ஓடிச்சென்று பார்க்கையில் அதுவும் வெற்றுக் கானல் நீரே ! இப்படியே ஏழுமுறை ஸபா – மர்வா மலைக்குன்றுகளில் தன் பெண்மையின் மென்மையை சிதைத்து வதைத்து ஓடி ஓடிப் பார்த்தார்கள். எல்லாம் ஏமாற்றமே ! குழந்தையின் அழுகுரல் தவிர எதையும் பெற முடியவில்லை. அந்தோ பரிதாபம் !

            தாகக் கொடுமையால் தளிர் பாதம் உதறி உதறிக் கதறும் இஸ்மாயீல் அவர்களின் மேல் இறைவன் கருணை கொண்டு விட்டான். அவர்களின் பிஞ்சுப்பாதம் உதைத்து உதைத்துத் தோண்டிய சின்னஞ்சிறு குழியில் புனித அமுத “ஜம் ஜம்” நீர் பொங்கிப் பெருகி ஓடத் துவங்கியது ! திடீரென்று இதைக் கண்ணுற்ற அன்னை ஹாஜரா அவர்கள் அத்தண்ணீர் எங்கே ஓடி மறைந்து விடுமோ என்ற பயத்தால் தன்னிரு கரம் கொண்டு மணல் அணை கட்டி தன் தாய் மொழியால் “ஜம் ஜம்” “நில் ! நில்” என்றார்கள். அள்ளிப் பருகினார்கள் ! ஆனந்தம் கொண்டார்கள் ! இறைவனுக்கு நன்றி சொன்னார்கள் !
            அன்று அன்னை ஹாஜரா அவர்கள் அணை போட்டுத் தடுத்து ஜம் ஜம் (நில் நில்) என்று சொல்லாமல் இருந்திருந்தால் இக்காலமும் இனி எக்காலமும் அந்நீர் உலகமெல்லாம் ஓடிக் கொண்டு இருக்கும். இறைவன் எண்ணம் அப்படி நடந்து விட்டது !

            ஒரு பெண்மையின் பாதம் புண்ணாகிப் போன நிலைக்கு இறைவன் அளித்த அருட்கொடை தான் “ஜம் ஜம்” தண்ணீர் ! இறைவனுக்காக எதையும் தாங்கும் இதயம் கொண்ட குடும்பத்துக்குக் கிடைத்த பரிசு தான் “ஜம் ஜம்” தண்ணீர் !

            http://vkalathurone.blogspot.ca/2013/04/blog-post_7590.html

            • பச்சைக் குழந்தையின் பிஞ்சுப் பாதம் உதைத்ததாலேயே தண்ணியில்லாக் காடாகிய சவூதி அரேபியாவில் ஒரு நீரூற்று உருவாகி, அது ஆயிரமாண்டுகளுக்கு மேல் வற்றாமல் ஓடிக் கொண்டிருக்கும் போது நீர்வளமுள்ள பாரத மண்ணில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் கமண்டலத்திலிருந்து காவேரி வந்திருக்க முடியாதா? 🙂

              • அய்யா அறிவாளியே,இங்கு விவாதம் எது குறித்து என்று புரியுதா..இந்துமத நம்பிக்கையா இசுலாமிய மத நம்பிக்கையா எது உயர்ந்தது என விவாதிக்கவில்லை.காவேரி முன்பு தமிழ்நாட்டில் பாயவில்லை சோழ மன்னன் காவேரன் என்பவந்தான் பாறைகளை ஊடருத்து காவேரியை தமிழ்நாட்டுக்கு கொண்டுவந்தான் என்று தேவாரநாயனார் இலக்கிய சான்றுகளை சுட்டிக்காட்டி சொல்கிறார்.அது சரிதானா என்பதுதான் விவாதம்.

                மற்றபடி காவிரி குறித்த உங்கள் இந்து மத புராண கதைகளை நம்புவது உங்கள் உரிமை.அந்த நம்பிக்கையை தன்னளவில் ஒருவர் வைத்துக் கொள்வதுதான் சரியானது.அதை உண்மையில் நடந்த வரலாற்று நிகழ்வாக அனைவரும் ஏற்கத்தக்க ஆதாரபூர்வமான ஒன்றாக காட்ட முயலுவது சரியல்ல.சோழமன்னர்கள் அணை கட்டினார்கள் கால்வாய், ஏரி ,குளம்,வெட்டினார்கள் என்று உண்மையை சொல்வது வேறு. அடுப்பில் தூங்கும் பூனையை விரட்ட இல்லாததையும் பொல்லாததையும் இட்டுக் கட்டி பாடிய பரிதாபத்துக்குரிய புலவர்களின் மிகைப்படுத்தல்களை வரலாறாக நம்பி எடுத்து வருவது வேறு.

  76. சென்னையில் இந்தக் காலத்தில் கூட எத்தனையோ சேரிகள் இருக்கின்றனவே அவற்றை, ஆட்சியாளர்கள், அதாவது கருணாநிதியும், ஜெயலலிதாவும் உருவாக்கினார்களா? 🙂

  77. ராஜ ராஜ சோழரை இழிவுபடுத்தும் திரிபுவாதிகளும்,போலி மார்க்சியம் பேசுபவர்களும்,
    வந்தேறிகளின் எச்சங்களும் கீழ்கண்ட 8 பகுதிகளையும் முழுமையாக படித்துவிட்டு வழக்கம் போல் உங்களது அவதூறுகளைத் தொடரவும்.

    இராச இராசச் சோழர் தமிழிய ஆய்வு

    பகுதி:1
    http://kaattchi.blogspot.in/2010/10/blog-post_31.html#more

    பகுதி:2
    http://kaattchi.blogspot.in/2010/11/blog-post_08.html#more

    பகுதி:3
    http://kaattchi.blogspot.in/2010/11/blog-post_16.html#more

    பகுதி:4
    http://kaattchi.blogspot.in/2010/11/blog-post_21.html#more

    பகுதி:5
    http://kaattchi.blogspot.in/2010/12/blog-post_07.html#more

    பகுதி:6
    http://kaattchi.blogspot.in/2010/12/blog-post_22.html#more

    பகுதி:7
    http://kaattchi.blogspot.in/2010/12/blog-post_30.html#more

    பகுதி:8
    http://kaattchi.blogspot.in/2011/01/blog-post_05.html#more

    • Kavin,

      ‘இராச இராசச் சோழர் தமிழிய ஆய்வு’ பதிவுகள் , மாமன்னன் இராச இராச சோழன் பற்றிய பல பொய்ப்பிரச்சாரங்களுக்கு பதிலளிக்கிறன. வினவிலும் அப்படியான கட்டுரைகள் வெளியிடப்பட வேண்டும்.

  78. Mr. Viyasan,

    //இந்தக் காலத்தில் கூட எத்தனையோ சேரிகள் *** கருணாநிதியும், ஜெயலலிதாவும் உருவாக்கினார்களா?//

    Do you think the oppressing class do [did] not have any role in the formation of slums?

    It is only during the periods of கருணாநிதி, ஜெயலலிதா, that the slums like Kannaki nagar, Thideer nagar, etc were created. Slums inside cities caught on mysterious fires one after another and they were all moved out to new slums. Some of them are vertical slums. [For me the whole city is a one single big SLUM, with filthy roads, rubbish strewn everywhere, drainages with full of decaying matter, etc]

    Fisher men who were living on the beaches were also thrown out to new slums.

  79. தேவார நாயனார் அவர்களே,

    // இலக்கியங்களில் உங்களுக்கு மதிப்பில்லை என்றால்//

    பயன் என்ன என்ற கேட்டேன். அதற்கு பதிலில்லை. இலக்கியங்களை மதிக்கவேண்டிய கட்டாயமில்லை. ஒன்ற பழமையானது என்பதற்காக அது மதிக்கப்படவேண்டிய கட்டாயமுமில்லை. சாரத்தைத்தான் நான் மதிப்பேன். மேலே குறிப்பிட்ட இலக்கியங்களின் சாரம் என்ன?

    //உங்கள் வேலையை பார்த்துகொண்டு செல்லலாம்//

    மாற்றுக்கருத்துக்கள் ஒவ்வாது என்றால் நீங்கள் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.

    //அநாகரிமான வார்த்தைகளை பயன்படுத்துவது தேவை அற்றது.//

    எனது மதிப்பீடு அநாகரிமாக தெரியலாம். ஆனால் பொருளற்றதல்ல. அந்த இலக்கியங்களலால் [சுவடிகளால்] பொது மக்களுக்கு விளைந்த பயன் என்ன?

  80. தேவார நாயனார் அவர்களே,

    // இலக்கியங்களில் உங்களுக்கு மதிப்பில்லை என்றால்//

    பயன் என்ன என்ற கேட்டேன். அதற்கு பதிலில்லை. இலக்கியங்களை மதிக்கவேண்டிய கட்டாயமில்லை. ஒன்ற பழமையானது என்பதற்காக அது மதிக்கப்படவேண்டிய கட்டாயமுமில்லை. சாரத்தைத்தான் நான் மதிப்பேன். மேலே குறிப்பிட்ட இலக்கியங்களின் சாரம் என்ன?

    //உங்கள் வேலையை பார்த்துகொண்டு செல்லலாம்//

    மாற்றுக்கருத்துக்கள் ஒவ்வாது என்றால் நீங்கள் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.

    //அநாகரிமான வார்த்தைகளை பயன்படுத்துவது தேவை அற்றது.//

    எனது மதிப்பீடு அநாகரிமாக தெரியலாம். ஆனால் பொருளற்றதல்ல. அந்த இலக்கியங்களலால் [சுவடிகளால்] பொது மக்களுக்கு விளைந்த பயன் என்ன?

    • // பயன் என்ன என்ற கேட்டேன்.//

      உம்மால் மட்டும் இந்த உலகிற்கு என்ன பயன், புட்டி..? நீர் பெண்ணாக பிறந்திருந்தால் உம் குடும்பமாவது வழக்கப்படி லாபம் பார்த்திருக்கும்..

      //சாரத்தைத்தான் நான் மதிப்பேன்.//

      சாரத்தையா, சோரத்தையா..?!

        • // Haven’t you heard of male sex workers? Being a பெண்ணுரிமை காவலர் i can also do this.//

          என்னமோ போ.. எப்படியோ போ..

    • பத்து பாடல்களை மேற்கோள் காட்டி அது நாக்குவழிக்கதான் லாயக்கு என்று விளக்குங்கள் பிறகு பேசலாம்.

      பி.கு.: நேரமின்மையால் என்னால் உடனுக்குடன் பதில் கூறமுடியாமல் போகலாம்.பொருத்துக்கொள்ளவும்.

  81. Hi தேவார நாயனார்,

    // பாறைகளை ஊடருத்து காவேரியை தமிழ்நாட்டுக்கு கொண்டுவந்தான்//

    Too much.

    //கதைசார்ந்த தொன்மம் ஒன்று உள்ளதால் அதை நம்பலாம்.//

    செய்யுள்+தொன்மம் இருந்தால் நம்பிவிடுவீர்களா?

  82. ராச ராசனின் உண்மை வரலற்றை கூறினால் எம்மை வந்தேறிகள் ,வடுகர் அல்லது மலையாளி திராவிடர் எச்சம் என்று எல்லாம் புகழும் கவின் மற்றும் வியாசன் அவர்களே !

    சோழர்கள் தமிழர்களா ?

    கன்னட சாளுக்கியர்களுடன் திருமண உறவுகள் வைத்துக் கொண்ட சோழர்கள் தமிழர்களா ?

    ராச ராசனின் தந்தையாகிய சுந்தர சோழனின் தாய் வீமன் குந்தவை என்பவள் வேங்கிநாட்டு[கீழைச்சாளுக்கிய ] மன்னனாகிய இரண்டாம் வீமன் சாளுக்கியனின் புதல்வி!

    மரபியல்[Genetics] ரீதியாக சோழர்கள் தூய தமிழர்கள் தானா ?

    • Gandaraditya’s queen was Madevadigalar alias Sembiyan Madeviyar who bore him a son called Madhurantaka Uttama Chola

      சுந்தரசோழனின் தாய் மாதேவடிகளார் அல்லது செம்பியன்மாதேவியே தவிர சாளுக்கியப்பெண் அல்ல. சோழர்களுக்கு இன்னொரு பெயர் தான் செம்பியர். இலங்கையில் சோழர்களின் நினைவாகத் தான் செம்பியன்பற்று என்ற இடம் உண்டு.ராஜ ராஜ சோழனின் தாயும், தந்தையும் தமிழர்கள் அதனால் ராஜ ராஜ சோழன் தமிழன்.

      உதாரணமாக சிங்கள அரச குடும்பத்தினர், பாண்டியர்களிடம் நெருங்கிய திருமண உறவு கொண்டிருந்தனர். அப்படியானால் இலங்கையின் சிங்கள் அரசர்களை தமிழர்கள் என்பதா. என்னுடைய பரம்பரையினர் அல்லது உறவினர்கள் எதிர்காலத்தில் ஆங்கிலேயரகளை மணந்தால், நானும் ஆங்கிலேயனா. அண்ணன் செந்தில் குமரன் சரியான அவசரக் குடுக்கை, வாசிப்பதை எல்லாம் நம்பி விடும் வெள்ளையுள்ளம் கொண்டவர் போல் தெரிகிறது. 🙂

      • என்ன வியாசன் வரலற்றை திரிக்க வேறு தொடங்கிவிட்டீர் !

        [1]மாதேவடிகளார் அல்லது செம்பியன்மாதேவி சுந்தரசோழனின் தாய் அல்ல தாரம் வியாசன் !

        ஆதாரம் : சுந்தர சோழனின் மனைவியுமான வானவன் மாதேவியார் உடன்கட்டை ஏறிய செய்தி திருவாலங்காட்டுச் செப்பேட்டில் குறிக்கப்பட்டிருக்கிறது.

        [2]அரிஞ்சய சோழனுக்கு வீமன் குந்தவை ( கீழச்சாளுக்கிய மன்னன் இரண்டாம் வீமனின் மகள்) ஆதித்தன் கோதைபிராட்டி (சேரமன்னனின் மகள்) கல்யாணி ( வைதும்பராயர் மகள் அன்பிற்செப்பேடுகள் குறிப்பிடுகின்றன) மற்றும் பூதி ஆதித்தபிடாரி ( கொடும்பாளூர் மன்னன் பூதி விக்ரம கேசரியாகிய தென்னவன் இளங்கோவன் மகள்) என்று நான்கு மனைவிகள் இருந்தனர்

        [3]ராச ராசனின் பாட்டியும், சுந்தர சோழனின் தாய் வீமன் குந்தவை என்பவள் வேங்கிநாட்டு[கீழைச்சாளுக்கிய [ஆந்திரா] ] மன்னனாகிய இரண்டாம் வீமன் சாளுக்கியனின் புதல்வி!

        உங்களுக்கு என்னை திட்டுவதில் உள்ள ஆர்வம் உண்மையை அறிவதில் இல்லையே வியாசன்

        • குறிப்பு :

          சுந்தர சோழன் பெரியம்மா பெயர் :செம்பியன் மாதேவி

          சுந்தர சோழன் மனைவி பெயர் :வானவன் மாதேவி

        • Change:
          [Viyasan I am sorry for my mistake]

          [1]மாதேவடிகளார் அல்லது செம்பியன்மாதேவி சுந்தரசோழனின் தாய் அல்ல பெரியம்மா வியாசன் !
          சுந்தர சோழன் மனைவி பெயர் :வானவன் மாதேவி

        • வீமன் குந்தவை தமிழ் சிற்றரசன்”அரையன் ஆதித்த வீமன்” மகள்

          ஆதாரம்:டாக்டர் மா.இராசமாணிக்கனார் எழுதிய “சோழர் வரலாறு” பக்கம் 172.

          • ராச ராசனின் பாட்டி, வீமன் குந்தவை என்பவள் வேங்கிநாட்டு[கீழைச்சாளுக்கிய [ஆந்திரா] ] மன்னனாகிய இரண்டாம் வீமன் சாளுக்கியனின் புதல்வி!

            ஆதாரம்:டாக்டர் மா.இராசமாணிக்கனார் எழுதிய “சோழர் வரலாறு” பக்கம் 172.

      • உங்கள் குழப்பம் புரிகின்றது வியாசன்.

        [1] கண்டராதித்தன் (கி.பி. 949-957),அரிஞ்சயன் (கி.பி. 956 – 957) ஆகியேர் அண்ணன் த்ம்பிகள்.

        [2]கண்டராதித்தனின் மனைவி செம்பியன் மாதேவி என்பவள் ஆவாள்

        [3] கண்டராதித்தனுக்கும் செம்பியன் மாதேவிக்கும் பிறந்தவன் உத்தம சோழன் ஆவான்.

        [4]கண்டராதித்தன் மறைந்தபோது அவன் மகன் உத்தம சோழன் வயதில் மிகவும் சிறியவனாக இருந்தான். எனவே, கண்டராதித்தனைத் தொடர்ந்து அவன் தம்பி அரிஞ்சயன் ஆட்சிக்கு வந்தான்.

        [5]அரிஞ்சய சோழனுக்கு வீமன் குந்தவை ( கீழச்சாளுக்கிய மன்னன் இரண்டாம் வீமனின் மகள்) ஆதித்தன் கோதைபிராட்டி (சேரமன்னனின் மகள்) கல்யாணி ( வைதும்பராயர் மகள் அன்பிற்செப்பேடுகள் குறிப்பிடுகின்றன) மற்றும் பூதி ஆதித்தபிடாரி ( கொடும்பாளூர் மன்னன் பூதி விக்ரம கேசரியாகிய தென்னவன் இளங்கோவன் மகள்) என்று நான்கு மனைவிகள் இருந்தனர்

        [6]அரிஞ்சய சோழனுக்கும் வீமன் குந்தவைக்கும் ( கீழச்சாளுக்கிய மன்னன் இரண்டாம் வீமனின் மகள்) மகனாக பிறந்தவன் சுந்தர சோழன். [தமிழ்-ஆந்திர கலப்பு வம்சம் உருவாதல் ]

        [7]சுந்தர சோழனுக்கும்[தமிழ்-ஆந்திர கலப்பு] ,வானவன் மாதேவியாருக்கும் மகனாக பிறந்தவன் ராச ராச சோழன்.

        குறிப்பு :

        *மாதேவி என்ற பெயர் இரு மன்னர்கள் மனைவி பெயராக உள்ளது. குழம்ப வேண்டாம்
        ———>கண்டராதித்தனின் மனைவி பெயர் செம்பியன் மாதேவி
        ———->சுந்தர சோழன் மனைவி பெயர் வானவன் மாதேவி

        *உத்தம சோழனும் சுந்தர சோழனும் ஒன்று விட்ட சகேதரர்கள்

        *உத்தம சோழன் ராச ராசனுக்கு ஒன்று விட்ட சித்தப்பா

  83. கவின் மற்றும் வியாசன் அவர்களே, !

    முதலாம் குலோத்துங்கன். கி.பி.1070 – 1120 யார்?

    தந்தை வழிசாளுக்கிய – தாய்வழியில் சோழர் மரபில் வந்த இளவரசன் தான் பின்பு சோழ அரசன் ஆன முதலாம் குலோத்துங்கன்!

    இவன் தமிழனா ?

    • இந்தியாவிலும், இலங்கையிலும் மட்டுமல்ல, ஐரோப்பாவில் கூட அந்த நாட்டு அரசர்கள், அடுத்த நாட்டில் பெண் எடுத்து, தமது நாட்டைப் பாதுகாக்க அவர்கள் எடுத்த Military strategy மட்டுமே. அதனால் அரசர்களின் இன அடையாளம் மாறுவதில்லை.

      • [1]ஆக, உங்களை பொருத்த வரை சோழ வம்சம் தமிழ்-ஆந்திரா கலப்பு வம்சமாக [“ஆந்திர திராவிடர் எச்சமாக”] இருப்பதில் தவறு இல்லை அல்லவா ?!

        [2]ராச ராசனின் பாட்டி வீமன் குந்தவை என்பவள் கீழைச்சாளுக்கிய [ஆந்திரா] ] மன்னனாகிய இரண்டாம் வீமன் சாளுக்கியனின் புதல்வி!

        viyasan://இந்தியாவிலும், இலங்கையிலும் மட்டுமல்ல, ஐரோப்பாவில் கூட அந்த நாட்டு அரசர்கள், அடுத்த நாட்டில் பெண் எடுத்து, தமது நாட்டைப் பாதுகாக்க அவர்கள் எடுத்த Military strategy மட்டுமே. அதனால் அரசர்களின் இன அடையாளம் மாறுவதில்லை.//

    • அது மட்டுமன்றி பிற்கால (later Chola) சோழர்கள் full-fledged தமிழர் என்று யாரும் வாதாடுவதில்லை. அவர்கள் தெலுங்கு பேசும் தமிழர்கள். ராஜ ராஜ் சோழன் இடைக்காலச் சோழரே தவிர பிற்காலச் சோழர் அல்ல.

      • இடைக்கால ராஜ ராஜ சோழனே தமிழன்-ஆந்திரபெண் [வடுகர்-திராவிடர் எச்சமாக] வம்சத்தில் வந்தவன் தானே !

        பிற்கால முதலாம் குலோத்துங்கன் ஆந்திரன்[வடுகர்-திராவிடர் எச்சமாக]-தமிழச்சி கலப்பில் வந்தவன் தானே !

  84. கவின் மற்றும் வியாசன் அவர்களே, !

    கீழைச் சாளுக்கிய நாடு[ஆந்திரா ],மேலைச் சாளுக்கிய நாடு[கர்நாடகா] இவற்றுடன் திருமண உறவு கொண்ட சோழர்கள் தமிழர்களா ?

    உங்கள் தமிழ்,ஆந்திரா,கர்நாடகா தேசீய உணர்வு மிகவும் சிறப்பு !

    என்ன வியாசன் தெலுங்கு தெலீசா ?!!!!!
    என்ன கவின் பாகுன்னாரா ?!!!!!

  85. கவின் மற்றும் தம்பி வியாசன்,

    இப்போது சொல்லுங்க யாரு வந்தேறிகள் ,வடுகர் அல்லது மலையாளி திராவிடர் எச்சம் ?

    நானா ? உங்கள் ராச ராசனா ?

    தம்பி வியாசா!, மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, தமிழக எல்லைகளை காக்க போராடிய ஒரு பெரிசு வம்சத்தில் வந்தவன் நான்.

  86. இருபது ஒன்றாம் நூற்றாண்டின் அளவுகோலை வைத்து ராஜராஜனை அளப்பது சரி அல்ல .

    முதன் முதலாக இந்தியாவை விட்டு சென்று போரிட்டவன் எனபது குறிப்பிட தக்கது . ஒரு வேலை அவன் வியட்நாம் போன்ற நாடுகளில் காலூன்றி இருந்தால் , பேரரசு விரிவடைந்து இருக்கும் .

    சீன அரசன் செய்தது போல , ஜமீன்களை எலாம் கொன்றுவிட்டு , புதிதாக அமைப்பது சாதீய அமைப்பில் எளிது அல்ல .

    பார்பனர்களை அழைத்து வந்தது , அரசாங்கம் கடல் கடந்து விரியும் பொது , சமஸ்கிருதம் தேவைப்பட்டது என்பதால் .

    திப்பு சுல்தான் நல்லவனாக தெரிவதற்கு காரணம் , அவன் பெரேஞ்சு அரசாங்கத்தோடு ஏற்பட்ட நட்பு மற்றும் பெரஞ்சு வளர்ப்பு . திப்பு இந்திய பரம்பரை மன்னனாக இருந்திருந்தால் மன்னனாக இருப்பதற்கு சாதகமான சாதீய கட்டமைப்பை உடைத்திருக்க மாட்டான் .

    அடுத்து திப்பு சமத்துவம் கொடுத்தான் வெள்ளைக்காரன் கொடுத்தான் அவன் ஆண்டு இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைப்பது , சொல் பேச்சு கேட்காத மற்ற தவளைகளை அடக்க பாம்பை கூட்டி வந்த தவளை மன்னன் கதை தான் . இதைதான் மாவைச்டுகள் சீன்போரின் பொது செய்ய துடித்தார்கள்

    நமது சமுதாயத்திலே எப்படி மாற்றம் கொண்டு வருவது என்றுதான் சிந்திக்க வேண்டுமே ஒழிய , மாற்றத்தை இறக்குமதி செய்ய முடியாது.
    ஏன் நம் முன்னோர்கள் அறிவியலை கண்டுபித்க்கவில்லை என்று முன்னோர்களை திட்டி என்ன ஆகா போகிறது ? நாம் எப்படி மாறுவது என்று சிந்திக்க வாண்டாமா ?

  87. Mr. Ambi,

    //தேவதானம் என்ற பெயரில் கோவில் பணிகளுக்காகவென்று யாருக்கு கொடுத்திருந்தாலும் அது இறையிலி நிலம்தான்..//

    தேவதானம் யாருக்கோவெல்லாம் கொடுக்கப்படவில்லை. கோவில்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டன. அதனால் பயனடைந்தவர்கள் பாப்பனர்களும் (பாப்பாத்திகளும்) மற்ற ஆதிக்க சாதிகளும் தான்.

    //எந்த மைனர் எழுதி கொடுத்த சொத்தை *** அனுபவித்துக் கொண்டிருக்கிறீரோ//

    I know I have hit the underlying truth. I can understand this reaction of yours. But, if it is not for Paappaathis (cute light skinned girls), paarpanars would not have got special welcome (agrahaarams, tax free villages, etc.) here in south India. This is like current custom of importing lighter skinned actresses from elsewhere to Tamil films. These films are enjoyed by all. All people, including those who were oppressed to the extreme degree, should have welcomed the sight of paapaathis in their midst. (But the price was paid by those oppressed who were forced to work in lands given to ‘paarpanars’ and temples)

    //அரசியல் காரணங்களுக்காக ராஜ ராஜர் பல மனைவியரை மணந்து கொண்டாலும்//

    முகமதியர்களிடமிருந்து சுட்டது போல இருக்கே.

    //அவர் மைனர் அல்ல..//

    அரைக்கிழவனா? முக்கால்கிழவனா? அதிகாரத்தில் உள்ள கிழவர்களின் அட்டகாசம் பற்றி அறியாதவரா நீர்.

    //பெண்ணுரிமை காவலர் போல்//

    If i speak about the role of exotic women (paapaathis) in the spread of paarpanars and their acceptance in the new lands, I don’t know how i would loose the title, that you have rightly given me.

    //பாய்களுடன் நானும் சேர்ந்து கொண்டு உமக்கு அறுவை சிகிச்சை செய்வது என முடிவெடுத்திருக்கிறேன்..//

    I did not expect such strange reactions. (ஆத்திரம் கண்ணை மறைப்பதென்பது இதுதான் போலும்) Anyway, you are welcome. i can handle any number of persons, in the topics i choose to handle.

    • // தேவதானம் யாருக்கோவெல்லாம் கொடுக்கப்படவில்லை. கோவில்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டன. அதனால் பயனடைந்தவர்கள் பாப்பனர்களும் (பாப்பாத்திகளும்) மற்ற ஆதிக்க சாதிகளும் தான். //

      யார் யாருக்கு எத்தனை வேலி நிலம் இறையிலியாக வழங்கப்பட்டது என்று பெயர்,பணி விவரங்களுடன் விலாவாரியாக ராஜராஜர் செதுக்கி வைத்திருக்கிறார்.. பெரிய கோவில் கல்வெட்டு எண் 66 பக்கத்தில் போய் குந்திக் கொண்டு படிக்கவும், வேறு எதுவும் அசிங்கம் பண்ணி வைக்கப்படாது, அது கோவில்..

      // This is like current custom of importing lighter skinned actresses from elsewhere to Tamil films. These films are enjoyed by all. //

      சிவப்புத் தோல் பெண்கள் மட்டும்தான் அழகிகளா..? பார்ப்பனப் பெண்களுக்கு மட்டும்தான் சிவப்புத் தோல் இருக்கிறதா..? ராஜராஜர் போன்ற ஒரு பேரரசனுக்கு சிவப்புத் தோல் அழகிகள் வேண்டியிருந்தால் அவர் கோவில் கட்டி இறையிலி கொடுக்கவேண்டியதில்லை.. சினிமாக்காரர்கள்,செவத்த நடிகைகளின் ரசிகர்கள் இவர்களின் புத்திதான் ராஜராஜருக்கும் இருந்தது என்று கூறும் உம் புத்தியைப் பார்த்தால் இப்போது வியப்பாக இல்லை..

      //I don’t know how i would loose the title, that you have rightly given me.//

      பெண்ணுரிமைக் காவலர் போல் என்றுதான் கூறியிருக்கிறேன், உமக்கெல்லாம் பெண்ணுரிமை காவலர் பட்டத்தை கொடுத்தால் பெண்கள் செருப்பால் அடிப்பார்கள்..

    • Only brahmin males came to TN and not with their families,my wife’s family is one such,where only their male forefathers came.

      They married local women,who may have belonged to any caste but most probably vellalars.

      Dont imagine your own history and brahmin people of TN are very similar to all upper castes,chettiars/mudaliars/vellalars.

      You cant see much difference.

  88. செந்தில் குமரன்…..

    சத்தியமா சிரிப்பு தாங்கல… உங்க காமெடிக்கு ஒரு அளவே இல்லையா ஏன் இப்படி..

    நான் தங்களிடம் கேட்டது என்ன …

    //கல்கி ராச ராசனின் நிர்வாகம் மிக கீழ் தரமாக இருந்தது அதனால் அவரின் வரலாற்றை எழுத எனக்கு மனம் வரவில்லை என்று எங்கு எந்த இடத்தில் எப்போது கூறினார் அல்லது எழுதினார் என்று தாங்கள் கூறமுடியுமா..//

    நான் என்ன கேள்வி கேட்டேனோ அதற்க்கு உருப்படியாக எந்த பதிலும் வரவில்லை… கேட்ட கேள்விக்கு ஆதார பூர்வமான பதிலை கூறாமல் சம்மந்தா சம்மந்தம் இல்லாமல் எதை எதையோ உளறி கொண்டு இருக்கிறீர்கள்.. நான் கேட்டது அமரர் கல்கி ராஜ ராஜ சோழனின் நிர்வாகம் மிக கீழ் தரமாக இருந்தது அதனால் அவரின் வரலாற்றை எழுத எனக்கு மனம் வரவில்லை என்று எங்கு எந்த இடத்தில் எப்போது கூறினார் அல்லது எழுதினார் என்று… ஆனால், அதற்க்கு தக்க பதிலை கொடுக்காமல் சம்மந்தம் இல்லாமல் பேசுகிறீர்கள். அமரர் கல்கி கூறியவைகளை உங்களுக்கு வசதியாக மடைமாற்றி இன்னும் அந்த பெருமகனாரின் மீது சேற்றை வாரி இரைப்பதிலேயே இருக்கிறீர்கள்…

    //இன் நூட்கள் சோழர் ஆட்சியீன் சமுக வழமைகள் [சாதி சார்ந்த சட்டங்கள் ,வரி விதிப்புகள்] இவற்றை விளக்குகின்றன. எனவே கல்கி அவர்கள் ராச ராசனின் முடி துறக்கும் தியாகத்துடன் பொன்னியின் செல்வன் நாவலை முடித்து கொண்டார்!//

    இது உங்களுக்கே பைத்தியகார தனமாக இல்லையா.. செந்தில்.. நான் கேட்டது கல்கி என்ன கூறினார் என்று தான்.. செந்தில் குமரன் கல்கியாக இருந்திருந்தால் என்ன கூறியிருப்பார் என்று கேட்கவில்லை… ஏன் தேவை இல்லாமல் உங்கள் “Mind Voice”ஐ கல்கியின் மீது திணித்து அவருக்கு களங்கம் ஏற்படுத்துகிறீர்கள்… நீங்கள் மேலே கூறியதற்கு எதாவது ஆதாரம் உண்டா…

    முதலில் தமிழர்களின் வரலாற்றை பற்றி கல்கி அவர்கள் கூறுவது என்ன ..

    பொன்னியின் செல்வன் புதினத்திற்காக மக்கள் கொடுத்த பாராட்டுகளை பற்றி அவர் குறிப்பிடும் போது..

    “இந்தப் பாராட்டுதல்களையெல்லாம் கதையின் ஆசிரியருக்குரியவையாக நான் கருதவில்லை. பழந்தமிழ் நாட்டின் சரித்திரத்துக்குரிய பெருமையாகவே கருதினேன். உண்மையிலேயே, தமிழ்நாட்டின் பழைய வரலாறு, தமிழர்கள் மிகவும் பெருமிதம் கொள்ளக்கூடிய வரலாறுதான்”..

    எவ்வளவு அழகாகவும் தெளிவாகவும் கூறி இருக்கிறார்… நீங்கள் கூறியது போல் தமிழக வரலாற்றை குறிப்பாக சோழ வரலாற்றை.. அதிலும் நீங்கள் கூறிய நீல கண்ட சாஸ்திரியின் நூல்களை படிக்காமலா இதை கூறி இருப்பார்..

    என்னமோ ராஜ ராஜ சோழன் தான் மனு தர்ம நெறி படி ஆட்சி செய்தது போலவும்.. அவருக்கு முன்பு இருந்த சோழ மன்னர்களின் காலத்தில் பார்பனர்களும், வேளாளர்களும் தாழ்த்தப்பட்ட மக்களிடம் கொள்வனவும், கொடுப்பனவும் வைத்து கொண்டு சகோதரர்கள் போல் சமத்துவமாக வாழ்ந்தது போலவும், அதை என்னமோ தங்கள் நேரில் இருந்து பார்த்தது போலவும் பேசுகிறீர்கள்.. ராஜ ராஜனின் காலம் இன்றோடு 1000 ஆண்டுகள் தான் ஆகிறது.. ஆனால் மனுதர்ம ஆட்சி தமிழ்நாட்டில் கடந்த 1800 ஆண்டுகளாகவே நடைபெற்று வருகிறது.. சோழ ராஜ்யத்தில் மட்டுமல்ல சேர. பாண்டிய, சாளுக்கிய, சாதவாகன, ராஜபுதனம் போன்ற இந்திய தேசம் முழுக்க அப்படி தான் இருந்தது.. இது போக இசுலாமிய மொகலாய அரசர்களின் ஆட்சில் இசுலாமிய சட்டமாகிய ஷரியத் சட்ட படி ஆட்சி நடைபெற்றது.. அது மனு தர்ம ஆட்சியை விட இன்னும் கேவலமாக இருக்கும்…

    அமரர் கல்கி ஏன் ராசா ராசனின் வரலாறை கூறவில்லை என்பதை அவரே தெளிவாக கூறி விட்டார்…

    “முன்னமே குறிப்பிட்டதுபோல், கதையில் சிகரமான நிகழ்ச்சி பொன்னியின் செல்வன் தன் கையில் கிடைத்த மகாசாம்ராஜ்யத்தைத் தியாகம் செய்து இன்னொருவருக்கு முடிசூட்டியதேயாகும். ஆகையால், அந்தப் பெரு நிகழ்ச்சிக்குப் பிறகு கதையை வளர்த்திக் கொண்டு போவது ஆங்கிலத்தில் சொல்லப்படுவது போல, ‘கிளைமாக்ஸு’க்குப் பிறகு, ‘ஆண்டி கிளைமாக்ஸு’க்குப் போவதாக முடியும். நேயர்கள் பலர் இப்போது சீக்கிரம் முடித்துவிட்டதற்காகக் குறை சொன்னாலும், இந்தக் கதையை மேலும் வளர்த்தால் விரைவில் அதே நேயர்கள் வேறுவிதமாகக் குறைப்பட நேரிடும். “எப்போது முடிக்கப் போகிறீர்?” என்று ஆசிரியரை நேயர்கள் கேட்கும் நிலைமை விரைவில் வந்துவிடும்.”

    ஆனால்,நீங்கள் சமார்த்தியமாக முதல் 5 வரிகளை மட்டும் கூறி விட்டு முடித்து விட்டீர்கள் என்ன ஒரு அல்பதனம் உங்களுக்கு …

    மேலும் ராஜ ராஜ சோழனை பற்றி கல்கியின் கருத்து என்ன என்பதை அவரின் வரிகளிலேயே பாப்போம் ..

    “சுந்தரசோழனுக்குப் பின்னர் அவனுடைய மகன் அருள்மொழிவர்மனே சோழ சிங்காதனம் ஏறி அரசாள வேண்டும் என்று சோழ நாட்டு மக்கள் பெரிதும் விரும்பினார்கள். ஆயினும் அருள்மொழிவர்மன் தன் பெரிய பாட்டனாகிய கண்டராதித்தனுடைய புதல்வனும், தனக்குச் சிறிய தகப்பன் முறையிலிருந்தவனுமான உத்தமசோழனுடைய உரிமையை மதித்து அவனுக்கு முடிசூட்டி வைத்தான்.” என்று திருவாலங்காட்டுச் செப்பேடுகள் அறுதியிட்டு உறுதி கூறுகின்றன.

    இந்த நிகழ்ச்சியை மற்றும் பல செப்பேடுகளும், கல்வெட்டுக்களும் அந்தக் காலத்தில் அறிஞர்கள் பலரால் எழுடப்பட்ட நூல்களும் உறுதிப்படுத்துகின்றன.
    அருள்மொழிவர்மன் திருமுடி சூட்டிக் கொள்ளவேண்டும் என்று இராஜ்யத்தின் மக்கள் விரும்பினார்கள். உற்றார் உறவினர் விரும்பினார்கள். அக்காலத்தில் மிக்க வலிமை பெற்றிருந்த சோழப் பெரும் படையின் வீரர்கள் அனைவரும் விரும்பினார்கள். அவ்வாறு எல்லாவித ஆதரவும் அனுகூலங்களும் அருள்மொழிவர்மனுக்கு இருந்தும் அவன் சாம்ராஜ்யத்தை உத்தம சோழனுக்கு அளித்துப் பட்டம் கட்டுவித்தான்.

    உலக சரித்திரத்திலும், காவிய இதிகாசங்களிலும் இதற்கு ஒப்பான இன்னொரு அரும் பெரும் செயலைக் காணுதல் அரிது. அசோக சக்கரவர்த்தி கலிங்கநாட்டுப் போரில் மகத்தான வெற்றி அடைந்த பிறகு, “இனி யுத்தமே வேண்டாம்” என்று முடிவு செய்ததைத்தான் அருள்மொழிவர்மனின் தியாகத்துக்கு இணையாகக் கூறலாம்.”

    செந்தில்… ராச ராசனின் வரலாற்றை படிக்காமல் ஆய்வு செய்யாமலா கல்கி இதை கூறி இருப்பார். விஷயம் என்னன்னா.. வரலாற்றை வரலாறாக பார்க்கும் சிறந்த அறிவினர் கல்கி.. சரித்திர மகா ஞானி அவர்.. 10ஆம் நூற்றாண்டில் நடந்ததை 20ஆம் நூற்றாண்டின் மார்க்சிய, பெரியாரிய குருட்டு பார்வையில் பார்க்கும் முதிர்ச்சியற்ற புத்தி எல்லாம் அமரர் கல்கிக்கும் கிடையாது.. வியாசனுக்கும் கிடையாது..எனக்கும் கிடையாது.. இனியாவது நீங்கள் வரலாற்றை வரலாறாக பார்க்க பழகி கொள்ளுங்கள்.. மார்க்சிய, பெரியாரிய கண்ணாடி அணிந்து பார்த்தல் வரலாறு மட்டுமல்ல நம் குடும்பமே நமக்கு தவறாக தான் தெரியும்..

    • தாயுமானவன் ://கல்கி ராச ராசனின் நிர்வாகம் மிக கீழ் தரமாக இருந்தது அதனால் அவரின் வரலாற்றை எழுத எனக்கு மனம் வரவில்லை என்று எங்கு எந்த இடத்தில் எப்போது கூறினார் அல்லது எழுதினார் என்று தாங்கள் கூறமுடியுமா//

      பொன்னியின் செல்வன் நாவலை படைக்க கல்வெட்டுகள் ,செப்பேடுகள் ,இலக்கிய பாடல்கள், இலங்கை பயணம் மூலம் எல்லாம் ஆதாரம் தேடிய திரு கல்கி அவர்கள் , திரு க. அ. நீலகண்ட சாத்திரி அவர்கள் எழுதிய கீழ் கண்ட நுல்களை படிக்காமாலா இருந்து இருப்பார் !

      [1]Studies in Chola history and administration. University of Madras. 1932.

      [2]The Cholas. University of Madras. 1935.

      இன் நூட்கள் சோழர் ஆட்சியீன் சமுக வழமைகள் [சாதி சார்ந்த சட்டங்கள் ,சாதி சார்ந்த வரி விதிப்புகள்] இவற்றை விளக்குகின்றன. எனவே கல்கி அவர்கள், ராச ராசனின் முடி துறக்கும் தியாகத்துடன் பொன்னியின் செல்வன் நாவலை முடித்து கொண்டார்!

      தாயுமானவன் ://மார்க்சிய, பெரியாரிய கண்ணாடி அணிந்து பார்த்தல் வரலாறு மட்டுமல்ல நம் குடும்பமே நமக்கு தவறாக தான் தெரியும்..//

      எப்படி என்று தான் விளக்குங்கள் தாயுமானவன்!

    • [1]ராச ராசனின் வரலாற்றை எழுதாதற்கு கல்கி உங்களிடம் இப்படி கூறினாரா !!!!

      தாயுமானவன்://தான் பல காலம் ஆய்ந்து பொன்னியின் செல்வன் என்கிற நாவலை எழுதியதே போதும் என்று நினைத்து இருக்கலாம்.. தன்னுடைய வயது, உடல்நிலை காரணமாக மற்ற சோழ வேந்தர்களின் வரலாற்றை அவர் எழுதாமல் இருந்திருக்கலாம்..//

      [2]ராச ராசன் உங்கள் கனவில் வந்து இதனை கூறினாரா ?!!!!

      தாயுமானவன்://அறிவில் சிறந்த பார்பனர்,வெள்ளாளர் ஆகிய இருவரும் தான் அந்நாளில் நீதி துறை, நிர்வாக துறை(Civil departments) இரண்டையும் கவனித்து கொண்டார்கள்//

  89. Mr. Ambi,

    //செந்தில் குமரன் ஆதாரங்கள் என்று கொடுத்த சுட்டியில் காணப்படும் வினவு கட்டுரையில் //

    I did not see it. If i had seen it, my response would have been slighthly

    different. I take back those 2 questions addressed to YOU. I am sorry for

    those questions.

    That said, it is unfortunate than many people use such wrong name. Some may

    be doing it without realizing the underlying reason. (Now you and others here

    know.). Others may be doing it for various other reasons.

    By the by,

    லேகியம் விக்றது தப்பா? (remember மிக்சர் தின்றது தப்பா?)

  90. வியாசன் ,தாயுமானவன் இருவருமே ராச ராசன் கடைபிடித்த சமுக வழமைகளை [சாதி அடிப்படையீல் வரி ,சட்டம் ] நான் சுட்டிகாட்டியபோது மறுக்கவில்லை . அவர்கள் பதில்கள் :

    வியாசன்: அக்கால வழக்கம், சமுக கட்டமைப்பு அப்படி, அதை இக்கால மார்க்சிய, பெரியாரிய சிந்தனைகளுடன் ஒப்பிட்டு, எமது முன்னோர்களை இழிவு படுத்துவது முட்டாள் தனமென்பதைத் தான் நான் மீண்டும்,மீண்டும் கூறுகிறேன். [feedback 73.1]

    தாயுமானவன்:என்ன பேசுகிறீர்கள்… அறிவில் சிறந்த பார்பனர்,வெள்ளாளர் ஆகிய இருவரும் தான் அந்நாளில் நீதி துறை, நிர்வாக துறை(Civil departments) இரண்டையும் கவனித்து கொண்டார்கள் [feedback 62]

    ராச ராசன் வரலற்றை விமர்சிக்காதே என்று வியசனும், ஆம் பார்பனர்,வெள்ளாளர் மட்டுமே ராச ராசன் வரலாற்றில் உயர்தவர்கள் என்று தாயுமானவனும் இன்று கூறும் போது, அறம் சார்ந்த மனித வாழ்வு சிதையும் கொடுரம் தான் தெரிகின்றது.

    • செந்தில்,

      நிலவரியை நெசவாளர்களிடமோ, தச்சுவரியை மீனவர்களிடமோ, தறி வரியை ஆயர்களிடமோ, கொல்லர் வரியை கணியர்களிடமோ, வணிக வரியை கொல்லர்களிடமோ, செக்குவரியை தலையாரியிடமோ வசூலிக்க முடியுமா..?! மேலும் எத்தனை தொழில்கள் செழித்து வருவாய் மிகுந்ததோ அதற்கேற்றாற் போல்தான் வரிகளின் எண்ணிக்கையும், அளவும் இருக்கும்.. சோழப் பேரரசில் விதிக்கப்பட்ட வரிகள் சுமையாக இருந்ததா அல்லது வரிகளை செலுத்தக்கூடிய வளமான நிலையில் மக்கள் இருந்தார்களா என்றுதானே பார்க்கவேண்டும்.. வரிச்சுமை அதிகம் என்றால் எந்த பேரரசும் உள்நாட்டுக் கலகத்தால் குறுகிய காலத்தில் சிதைந்துவிடுமே..

      • அம்பி,

        [1]விதிக்கப்பட்ட 400க்கும் மேற்பட்ட வரிகளில் பெரும்பாலானவை, பார்ப்பன, வெள்ளாள சாதி தவிர்த்த பிற சாதியினரிடமிருந்துதான் வசூலிக்கப்பட்டன.

        [2]பார்ப்பனர்களுக்கென்று, வேதம் கற்க பாடசாலைகள், உணவு உறைவிட வசதிகளுடன் ஆரம்பிக்கப்பட்டன. இப்பாடசாலை மாணவர்களுக்கு 6 கலம் நெல்லோடு 1 பொன் உபகாரச் சம்பளமாகவும் வழங்கப்பட்டது.

        [3]நுந்தா விளக்கெரிப்பதற்காக 400 இடையர்கட்கு ‘ சாவா மூவாப் பேராடுகள்’ எனும் பெயரில் ஆடு, மாடு, எருமைகள் வழங்கப்பட்டன. ‘வெட்டிக் குடிகள்’ என அழைக்கப்பட்ட இந்த 400 பேரும் கோவிலுக்கு விளக்கெரிக்க நாளொன்றுக்கு உழக்கு நெய் கொடுக்க வேண்டும் என விதிக்கப்பட்டிருந்தது. கோவிலுக்குக் கொடுத்தது போக, இவர்களுக்கு ஆடுமாடுகளிடமிருந்து கிடைத்த உபரியைத் தவிர வேறு சம்பளம் கிடையாது. கால்நடைகளின் எண்ணிக்கை குறையாமல் அவற்றைப் பராமரித்து கோவிலுக்கு நெய் அளக்கும் ‘வெட்டிக் குடி’ (ஊதியம் இல்லா வேலையாட்கள்)களாக அவர்களின் உழைப்பு உறிஞ்சப்பட்டது. நெய் அளக்கத் தவறிய இடையர்களின் உடைமைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

        [4]பார்ப்பனரைத் தவிர அனைத்துத் தரப்பினரும் தத்தம் ஊர்களுக்கு அரசு ஏற்பாடு செய்திருந்த காவலுக்கென்று ‘பாடி காவல் வரி’ செலுத்தினர்

        [5]சோழர் ஆட்சிக்காலத்தில் அடிமை முறை இருந்துள்ளதையும் வறுமையினால் மக்கள் தம்மை கோவிலுக்கு அடிமையாக விற்றுக் கொண்டதையும் கல்வெட்டு ஆதாரங்கள் காட்டுகின்றன. ஆறு பேர் பதின்மூன்று காசுகளுக்குத் தம்மைப் பெரிய கோவிலுக்கு விற்றுக் கொண்டுள்ளனர்

        [6]பார்ப்பனர்கள் நிறைந்துள்ள ஊர்களில் மற்ற சாதியினர் யாரும் நிலவுடைமையாளராக இருப்பின் அவர்கள் நிலங்களை விற்றுவிடச் சொல்லி ராஜராஜன் ஆணை பிறப்பித்தான். அந்நிலங்களை ராஜராஜனின் தமக்கை குந்தவை விலைக்கு வாங்கி கோவிலுக்கு சொந்தமாக்கினாள். இவ்வாறாக பார்ப்பனர் ஊர்களில் பார்ப்பனரல்லாதோரின் நில உரிமை பறிக்கப்பட்டு அவர்கள் உழுகூலிகளாகத் தாழ்த்தப்பட்டனர்.

        [7]பிரம்மதேயம் என்ற பெயரில் பார்ப்பனர்களுக்கு நிலங்கள் வழங்கப்பட்டன. அகரங்கள், அக்கிரகாரங்கள், சதுர்வேதிமங்கலங்கள் எனப்படும் தனிக் கிராமங்கள், கோவில்கள், மடங்கள் ஆகியவை அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்தன.

        [8]வேதக் கல்வி பார்ப்பனர்களுக்கு மட்டுமேயான உரிமையாக இருந்ததால், பார்ப்பன நிலவுடைமையாளர்கள் மட்டுமே ஊர்ச்சபைக்குத் தேர்வு செய்யப்பட்டனர். இதுதான் குடவோலை முறையின் யோக்கியதை. அதுமட்டுமல்ல, நிலவுடைமையாளர்களான பிராமணர்கள் மட்டுமே பெருவுடையார் கோவிலின் நிதி நிர்வாகிகளாக (பண்டாரி) இருக்க முடியும் என்று ராஜராஜன் ஆணை பிறப்பித்திருந்தான்.

        [9]மண்ணும் பொன்னும் தந்து பார்ப்பனர்களை மகிழ்வித்த ராஜராஜன், தனது அரசாட்சியிலும் பார்ப்பன நீதிமுறைகளையே பின்பற்றினான். தனது அண்ணன் ஆதித்த கரிகாலனைக் கொலை செய்த பார்ப்பனர்களைக்கூட அவன் தண்டிக்கவில்லை.

        [10]இன்று ராஜராஜனை ‘மாமன்னன்’ என்றும் அவனது ஆட்சி ‘தமிழனின் பொற்காலம்’ என்றும் புகழ்பவர்கள் “அக்காலத்தில் ஒரு மன்னன் அப்படித்தான் இருந்திருக்க முடியும்” என்று நியாயப்படுத்துகின்றனர். வரலாற்றில் கீதையும் இருந்தது. அதே காலத்தில் அதனை எதிர்த்து நின்ற பவுத்தமும் இருந்தது. அசோகன் இருந்தான். பவுத்தத்தை வீழ்த்திய புஷ்யமித்திர சுங்கனும் இருந்தான். பார்ப்பனர்க்கு தனிச் சலுகை நீக்கி நிலங்களைப் பொதுவாக்கிய களப்பிரர் இருந்தனர்.

        நீங்கள் [பார்பன,வெள்ளாள சாதி எனில் ] ராஜராஜ சோழனை பாராட்டலாம் தவறு இல்லை !!!!

        • உண்மையில் பார்ப்பனர்களின் மீதுள்ள காழ்ப்புணர்வால், தமிழ் நாட்டிலுள்ளவர்கள் சிலர் ராஜ ராஜ சோழன் மீது அநியாயமாக குற்றங்களைச் சுமத்துகின்றனர். செந்தில் குமரன் போன்றவர்கள் ஊதிப்பெரிது படுத்துவது போல் ராஜ ராஜ சோழன் பார்ப்பனர்களுக்கு ஊரிலுள்ள காணிகள் அனைத்தையும் அல்லது ஊர்களையே கொடுத்திருந்தால், இன்று தமிழ்நாட்டில் ஒரு சில ஊர்களிலாவாது பார்ப்பனர்கள் அறுதிப் பெரும்பான்மையினராக இருக்க வேண்டும். அப்படி எந்த ஊரிலும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.(சென்னையின் சில பகுதிகள், அவர்கள் அவர்கள் சொந்தமாக நிலங்களை வாங்கிக் குடியேறிய இடங்கள்) நான் தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளுக்குப் போயிருக்கிறேன்.

          ராஜ ராஜ சோழன் காலத்தில் தமிழ் கோலோச்சியிருந்த தமிழ்நாட்டுக் கோயில்கள் எல்லாம், பார்ப்பானர்களின் வசமானது தெலுங்கர்களின் விஜய நகர் ஆட்சியில் தான். (ராஜ ராஜ சோழனின் கல்வெட்டுக்களில் கோயில்களுக்கும், சடங்க்குலளுக்கும், பல அன்றாடம் பாவனையில் உள்ள பொருட்களுக்குமான தூய தமிழ்ச் சொற்களை நாங்கள் மீண்டும் எமது பேச்சு வழக்கில் கொண்டு வர வேண்டும். அந்த விஜயநகர (தெலுங்கு, கன்னட)ஆட்சியாளர்கள் தான், தெலுங்கு ரெட்டிகளையும், நாயுடுகளையும், நாயக்கர்களையும் தமிழ்நாட்டுக் கிராமங்களில் கிராம தலைவர்களாக, அதிகாரிகளாக நியமித்து, தமிழர்களின் உழுநிலங்களைப் பறித்து அவர்களிடம் கொடுத்தார்கள், அவர்களின் காலத்தில் நிலங்களை இழந்த வேளாளர்கள் தான், தமிழ்நாட்டை விட்டு, யாழ்ப்பணத்தில் குடியேறிய யாழ்ப்பான வெள்ளாளர்கள் எனவும் சிலர் கூறுவர். விஜயநகர ஆட்சியாளர்களால் தான் இன்றும் தமிழ்நாட்டுக் கிராமங்களில் ரெட்டிகளும், நாயுடுக்களும், நாயக்கர்களும், ஏனைய தெலுங்கர்களும், தமிழர்களுடேன் ஒப்பிடும் போது கூடியளவு நிலச் சொந்தக்காரர்களாக உள்ளனர். ஆயிரம் வருடம் பின்னோக்கிப் போய் ராஜ ராஜ சோழனைத் தாக்கும், தமிழ்நாட்டில் வாழும் தமிழரல்லாத திராவிட எச்சங்கள் தமது முன்னோர்களாகிய விஜயநகர் ஆட்சியாளர்களை குற்றம் கூறாமல், ராஜ ராஜ சோழனை வசைபாடுவதன் சூக்குமத்தை தமிழர்கள் அறியார் என்று அவர்கள் நினைத்துக் கொள்கிறார்கள்.

          • viyasan,

            தாயுமானவன் அவ்ர்களின் பதிலை படிக்கவும் !

            தாயுமானவன்://என்னமோ ராஜ ராஜ சோழன் தான் மனு தர்ம நெறி படி ஆட்சி செய்தது போலவும்.. அவருக்கு முன்பு இருந்த சோழ மன்னர்களின் காலத்தில் பார்பனர்களும், வேளாளர்களும் தாழ்த்தப்பட்ட மக்களிடம் கொள்வனவும், கொடுப்பனவும் வைத்து கொண்டு சகோதரர்கள் போல் சமத்துவமாக வாழ்ந்தது போலவும், அதை என்னமோ தங்கள் நேரில் இருந்து பார்த்தது போலவும் பேசுகிறீர்கள்.. ராஜ ராஜனின் காலம் இன்றோடு 1000 ஆண்டுகள் தான் ஆகிறது.. ஆனால் மனுதர்ம ஆட்சி தமிழ்நாட்டில் கடந்த 1800 ஆண்டுகளாகவே நடைபெற்று வருகிறது.. சோழ ராஜ்யத்தில் மட்டுமல்ல சேர. பாண்டிய, சாளுக்கிய, சாதவாகன, ராஜபுதனம் போன்ற இந்திய தேசம் முழுக்க அப்படி தான் இருந்தது…..//

            மனுதர்ம ஆட்சி தமிழ்நாட்டில் கடந்த 1800 ஆண்டுகளாகவே நடைபெற்று வருகிறது என்பது தானே உண்மை!

            ராச ராசனின் “மனு தர்ம” பொற்கால ஆட்சியை மறுக்கும் அளவுக்கு உங்கள் பதில்களில் உண்மை இல்லையே !

            ஆகம விதிகள் படி கோவில் கட்டி , ஆகம விதிகள் படி பூசையையும் செய்ய ஊக்கம் கொடுத்த ராச ராசனும் மனு தர்ம அடிப்படையில் ஆட்சி செய்தவன் தானே !

            ராச ராசன் ஆட்சியில் செல்வாக்குடன் இருந்த வெள்ளாளன் விஜய நகர் ஆட்சியில் செல்வாக்கு இழந்தான் என்பது தான் வியாசனுக்கு உள்ள வருத்தம் !

            ஆனால் தமிழர்க்கு [“பிற்பட்ட , மிகவும் பிற்பட்ட, தலித்தியர் மக்களுக்கு ” ] ராச ராசன் ஆட்சி மற்றும் விஜய நகர் ஆட்சியில் என்ன பயன் ?

            எம்மை போன்ற தமிழர்க்கு,

            பச்சை தமிழர் காமராசர் அவ்ர்களின் ஆட்சி சிறப்பு வரலற்று ஆதாரங்களும் ,

            தமிழ் தேசிய தலைவர் பிரபாகரனின் வீர வரலற்று சுவடுகளும் தான்

            பெருமை படக்கூடிய விடையங்கள் !

        • //[1]விதிக்கப்பட்ட 400க்கும் மேற்பட்ட வரிகளில் பெரும்பாலானவை, பார்ப்பன, வெள்ளாள சாதி தவிர்த்த பிற சாதியினரிடமிருந்துதான் வசூலிக்கப்பட்டன.//

          மேலே நீங்கள் கூறிய பினுட்டதுக்குசரியான வரலாற்று ஆவணங்களை கூறுங்கள் திரு செந்தில். ஒ மன்னிக்கவும் நீங்களே “பெரும்பாலான” என்ற வார்த்தை மூலம் உண்மை வரலாற்றை பூசி மெழுகி இருககுரிர்கள்

        • 1. இன்று கூட பல நாடுகளில் மதகுருமார்கள் வரி செலுத்துவதில்லை அத்துடன் விவசாயிகளுக்கு சிறப்பான மானியங்கள் உண்டு. அக்காலத்தில் சமூகத்திலிருந்த சாதிக் கட்டமைப்பின் படி, சமூகத்தில் அவர்களின் சேவையின் தேவையைக் கருதி அவர்களுக்கு சலுகை அளிக்கபப்பட்டிருக்கலாம், உதாரணமாக, கனடாவின் பூர்வீக குடிகளுக்கு வரிவிலக்கு சலுகைகள் உண்டு ஆனால் ஏனைய கனேடியர்கள் தமது வருமானத்தின் கணிசமான பகுதியை அரசாங்கத்துக்கு வரியாகச் செலுத்துகின்றனர்.

          2. அத்துடன் பணக்காரர்கள், சமூகத்தின் மேல் மட்டத்தில் உள்ளவர்கள் குறைந்தளவில் வரி செலுத்துவதாக மேலைநாடுகளில் கூட முறைப்பாடுகள் உண்டு. அதனால், ஆயிரம் வருடங்கள் பின்னோக்கிப் போய், ராஜ ராஜ சோழனை இழிவு படுத்தும் செந்தில்குமரனுடைய நோக்கம் என்னவென்று தெரியவில்லை.

          3. இலங்கையில் இக்காலத்திலும் மத குருமார்களுக்குஅவர்களை மதத்தைக் கற்க, வேத பாடசாலைகளுக்கும், பெளத்த பிரிவேனாக்களுக்கும், கிறித்தவ தேவலாயங்களுக்கும் வரி விலக்குண்டு. பல நாடுகளில் இது இன்றும் வழக்கத்திலுண்டு.

          4. அரசர்கள் சம்பளம் எதுவும் கொடுக்காமல் வேலைவாங்கிய அக்காலத்தில் ஆடுமாடுகளை அவர்களை நம்பிக் கொடுத்து, கோயிலுக்குக் கொடுக்கும் கடமையைச் செய்து விட்டு, மீதியை நீயே வைத்துக் கொள், என்று கூறிய பெருந்தன்மையை செந்தில் குமாரனால் புரிந்து கொள்ள முடியவில்லை. இலங்கை அரசர்கள் சம்பளம், எதுவுமே கொடுக்காமல் “ராஜகாரியம்” என்ற முறையில் வேலை வாங்கினார்கள், அந்த வழக்கத்தை ஆங்கிலேயர்கள் தான் தடை செய்தார்கள்.

          5. பார்ப்பனர்கள் சோழர்கள் கட்டிய கோயில்களில்வேலை செய்ய பிறமண்ணிலிருந்து வந்த பிறமண்ணர்கள்(பிராமணர்கள்), அவர்கள் எதற்காக ஊர்காவலுக்கு வரி செலுத்த வேண்டும். ஊர்காவல் வரியை ஊர்ச் சொந்தக்காரர்கள் தான் செலுத்த வேண்டும்.

          6. வறுமையினால் மக்கள் அடிமையாவது இன்றும் இந்தியாவில் உண்டு. இந்த 21ம் நூற்றாண்டிலும் எத்தனையோ தமிழர்கள் கூட இந்தியாவில் கொத்தடிமைகளாக உள்ளனர். பல ஆபிரிக்க முஸ்லீம் நாடுகளில் இன்று அடிமைகளை வைத்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் அடிமை, குடிமை முறை வழக்கத்தில் இருந்தது. அதற்கு ராஜ ராஜ சோழனை மட்டும் வறுத்தெடுப்பது ஏன்?

          7. கோயில்களுக்கும் அரச தேவைகளுக்கும், வேறு பல திட்டங்களுக்கும் நிலங்களை மக்களிடமிருந்து எடுத்துக் கொள்ளும் வழக்கம் எல்லா நாடுகளிலும் உண்டு. சோழர்கள் கட்டிய பெருங்கோயில்களில் வேலை செய்வதற்காக அழைத்து வரப்பட்ட பார்ப்பனர்களுக்கு கோயிலுக்கருகில் வீட்டு வசதி செய்து கொடுக்க காணிகள் அரசால் எடுக்கப்பட்டிருக்கலாம். தமிழ்நாட்டில் இருந்து தமிழர்களை இலங்கைத் தேயிலைத் தோட்டங்களில் குடியேற்றிய போது சிங்களக் கிராமங்கலிலிருந்து சிங்களவர்களை வெளியேற்றி, அவர்களின் காணிகளைப் பறித்து. தேயிலைத் தோட்டங்களை உருவாக்கி, அதில் இந்திய வம்சாவழித் தமிழர்களைக் குடியேற்றினர் ஆங்கிலேயர்கள். .

          8. மதகுருமார்களுக்கும், மடங்களுக்கும், கோயில்களுக்கும் நிலங்கள் வழங்குவது மானியம் வழங்குவதும், வரிவிலக்கு அளிப்பதும் இன்றும் வழக்கத்தில் உண்டு. பார்ப்பனர்களை பெரும்பான்மையாகக் கொண்ட பிரமதேயங்களில் ஒன்றையாவது காட்ட முடியுமா?

          9. இன்றும் தேர்தலில் போட்டியிட காசு, பணம், குறைந்தபட்ச கல்வித் தகுதி மட்டுமல்ல, தமிழ்நாட்டில் சாதியையும் முக்கியம். அதனால் ஆயிரமாண்டுகளுக்கு முன்னாள் அப்படி விதிமுறைகள் இருந்தது மட்டுமல்ல, முடியாட்சியிலேயே, சனநாயகத்தைப் புகுத்திய சோழர்களைப் பாராட்ட வேண்டும். இலங்கையில் கூட 1948 வரை படித்த இலங்கையர்களுக்கு மட்டும் தான் வாக்குரிமை இருந்தது. வெள்ளையர்கள் குடியேறிய பிரிட்டிஸ் காலனிகளில் நிலச் சொந்தக்கார்களுக்கு மட்டும் தான் 1800களின் கடைசிப்பகுதி வாக்குரிமை இருந்தது.

          10.

          *“ஆதித்த கரிகாலனை பிராமணர்கள் கொன்றதன் காரணத்தாலோ என்னவோ இராசராசன் தம் நாட்டில் வேதங்கள் ஒலிப்பதற்குப் பதிலாக திருமுறை ஓதுவதற்கு அதிக முக்கியத்துவம் தந்திருக்கிறான். ஆதித்த கரிகாலனைக் கொன்றவர்களைக் கண்டு பிடிப்பதில் கால தாமதம் ஏற்பட்டாலும் இராஜ ராஜன் அவர்களை சரியாக அடையாளம் கண்டு அழித்தான் என்றும் இவ்வெற்றியை திருவாலங்காட்டுச் செப்பேடு “பரசுராமனது நாட்டை வென்றது” என்று குறிப்பிடுகிறது.

          “பிராமணர்களுக்கு இவன் காலத்தில் நிலக்கொடை வழங்கிய செப்புப்பட்டயம் ஒன்று கூடக் கிடைக்காமலிருப்பதும் இவன் பிராமணர்கள் மீது கொண்டிருந்த வெறுப்பைப் பிரதிபலிப்பதாகத் தெரிகிறது”

          மேலேயுள்ள குறிப்புகள் சி, இளங்கோ என்பவர் எழுதியா “இராஜராஜ சோழனின் காந்தளூர்ச் சாலைப் போர்” என்ற புத்தகத்தில் 73ம் பக்கத்தில் உள்ளது. இதன் படி பார்த்தால் உண்மையில் ராஜ ராஜ சோழன் காலத்துக்குப் பின்னர் நடந்த சம்பவங்கள், தஞ்சாவூர்க் கோயில் கல்வெட்டுக்களிலுள்ளவற்றை எல்லாம் ராஜ ராஜ சோழனின் தலையில் போட்டு அந்த மாமன்னனை வசைபாடுகின்றனர் தமிழ்பேசும், தமிழரல்லாத திராவிட எச்சங்கள் என்பது தெரிகிறது.

        • //[1]விதிக்கப்பட்ட 400க்கும் மேற்பட்ட வரிகளில் பெரும்பாலானவை, பார்ப்பன, வெள்ளாள சாதி தவிர்த்த பிற சாதியினரிடமிருந்துதான் வசூலிக்கப்பட்டன.//

          400க்கும் மேற்பட்ட வரிகள் என்றும் மீண்டும் மீண்டும் குறை கூறுகிறீர்கள்.. அத்தனை வகையான தொழில்களும் வருவாய்களும் இருந்தன என்பது புரியவில்லையா..? வேளாளர்கள் அரசுக்கு தங்கள் நிலங்களுக்கான இறை(வரி) செலுத்தியிருக்கிறார்கள்.. பார்ப்பனர்களும் (பிரமதேயம் தவிர்த்த) நிலம் ஏதேனும் வைத்திருந்தால் இறையை அரசுக்கு செலுத்தவேண்டியிருக்கும்..

          //[2]பார்ப்பனர்களுக்கென்று, வேதம் கற்க பாடசாலைகள், உணவு உறைவிட வசதிகளுடன் ஆரம்பிக்கப்பட்டன. இப்பாடசாலை மாணவர்களுக்கு 6 கலம் நெல்லோடு 1 பொன் உபகாரச் சம்பளமாகவும் வழங்கப்பட்டது.//

          அது தேவைப்பட்ட பார்ப்பனர்களும் இருந்திருக்கிறார்கள் என்று கொள்ளலாமா..!

          //[3]நுந்தா விளக்கெரிப்பதற்காக 400 இடையர்கட்கு ‘ சாவா மூவாப் பேராடுகள்’ எனும் பெயரில் ஆடு, மாடு, எருமைகள் வழங்கப்பட்டன. ‘வெட்டிக் குடிகள்’ என அழைக்கப்பட்ட இந்த 400 பேரும் கோவிலுக்கு விளக்கெரிக்க நாளொன்றுக்கு உழக்கு நெய் கொடுக்க வேண்டும் என விதிக்கப்பட்டிருந்தது. கோவிலுக்குக் கொடுத்தது போக, இவர்களுக்கு ஆடுமாடுகளிடமிருந்து கிடைத்த உபரியைத் தவிர வேறு சம்பளம் கிடையாது. கால்நடைகளின் எண்ணிக்கை குறையாமல் அவற்றைப் பராமரித்து கோவிலுக்கு நெய் அளக்கும் ‘வெட்டிக் குடி’ (ஊதியம் இல்லா வேலையாட்கள்)களாக அவர்களின் உழைப்பு உறிஞ்சப்பட்டது. நெய் அளக்கத் தவறிய இடையர்களின் உடைமைகள் பறிமுதல் செய்யப்பட்டன.//

          உழைப்பு உறிஞ்சப்பட்டதா..?! முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியம் அவர்களின் ‘தஞ்சாவூர்’ என்னும் வரலாற்று ஆய்வு நூலை இதற்காகத்தான் உங்களுக்கு முன்பே பரிந்துரைத்தேன்.. அதிலிருந்து..:

          “பற்பல இடங்களில் வாழ்ந்த இடையர்களும் இந்த கால்நடைகளைப் பெற்றுக்கொண்டு நாள்தோறும் உழக்கு நெய் அளக்க ஒப்பந்தம் செய்திருந்திருந்தனர். ஒருவன் 96 ஆடுகளையோ, 48 பசுக்களையோ, 16 எருமைகளையோ பெற்றுக் கொண்டால் அவற்றை அவன் நன்றாக பராமரித்து அதிலிருந்து வரும் பயன் முழுவதையும் அடையமுடியும். கோயிலுக்கு அவன் தரவேண்டியது நாள்தோறும் ஓர் உழக்கு நெய் மட்டும்தான். ஆனால் கால்நடைகளை தான் பெற்ற எண்ணிக்கையிலேயே சந்திர சூரியர் உள்ளளவும் அவனும் அவன் வம்சத்தாரும் நன்கு பராமரிக்க வேண்டும். இதனால் கோயிலில் ஒரு விளக்கு எரியும் போது அதன் பின்புலத்தில் சோழ நாட்டில் ஒரு கால்நடைப்பண்ணை தொடர்ந்து மக்களுக்கு பலன் அளித்தது என்பதை அறியலாம். இவ்வாறு 4000க்கும் மேற்பட்ட ஆடுகளும், 4000க்கும் மேற்பட்ட பசுக்களும், நூற்றுக்கு மேலான எருமைகளும் அளிக்கப்பெற்றதைக் காணமுடிகிறது. இக் கொடையை இராசராசனோடு இணைந்து அளித்த தேவியர் பெயர்களும், உயர்நிலை அலுவலர்கள் இருபத்து எழுவர் பெயர்களும், படையினர் பலர் பெயரும் இக்கல்வெட்டால் அறியமுடிகிறது.”
          – ‘தஞ்சாவூர், p-293, 2009

          //[4]பார்ப்பனரைத் தவிர அனைத்துத் தரப்பினரும் தத்தம் ஊர்களுக்கு அரசு ஏற்பாடு செய்திருந்த காவலுக்கென்று ‘பாடி காவல் வரி’ செலுத்தினர்//

          பார்ப்பானுக்கு காவல் தேவைப்படவில்லையோ என்னமோ..

          //[5]சோழர் ஆட்சிக்காலத்தில் அடிமை முறை இருந்துள்ளதையும் வறுமையினால் மக்கள் தம்மை கோவிலுக்கு அடிமையாக விற்றுக் கொண்டதையும் கல்வெட்டு ஆதாரங்கள் காட்டுகின்றன. ஆறு பேர் பதின்மூன்று காசுகளுக்குத் தம்மைப் பெரிய கோவிலுக்கு விற்றுக் கொண்டுள்ளனர்.//

          விற்றுக்கொண்டவர்களை பிரியாணி போட்டு சாப்பிட்டுவிட்டார்களா அல்லது பெரிய கோவில் கல்வெட்டுகளில் காணப்படும் ஊதியங்களைக் கொடுத்து கோயில் பணிகளுக்கு பயன்படுத்திக் கொண்டார்களா என்று தெரியவில்லை..

          //[6]பார்ப்பனர்கள் நிறைந்துள்ள ஊர்களில் மற்ற சாதியினர் யாரும் நிலவுடைமையாளராக இருப்பின் அவர்கள் நிலங்களை விற்றுவிடச் சொல்லி ராஜராஜன் ஆணை பிறப்பித்தான். அந்நிலங்களை ராஜராஜனின் தமக்கை குந்தவை விலைக்கு வாங்கி கோவிலுக்கு சொந்தமாக்கினாள். இவ்வாறாக பார்ப்பனர் ஊர்களில் பார்ப்பனரல்லாதோரின் நில உரிமை பறிக்கப்பட்டு அவர்கள் உழுகூலிகளாகத் தாழ்த்தப்பட்டனர்.//

          கருந்திட்டைக்குடி கல்வெட்டிலிருந்து அறியக் கிடைப்பது வேறாக இருக்கிறது..

          பிரமதேய ஊர்களில், கோயில் கடமைகளுக்கான மானியமாக காணிகளைப் பெற்ற பார்ப்பனர் அல்லாதவர்கள் தங்களிடம் உள்ள பணிசெய்யா நிலங்களை பிரமதேய சபையிடமே விற்கவேண்டும் என்றும், அவ்வாறு விற்கப்பட்ட காணிகளை மீண்டும் மானிய காணிகளாக பிரமதேய சபை மறுசுழற்சிக்கு பயன்படுத்திக் கொண்டது என்று அறியலாம்..

          அதாவது, பிரமதேய சபையிடமிருந்து கோயில் பணிகளுக்கான மானியமாக 2 வேலி நிலத்தை காணி உரிமையாகப் பெற்ற பார்ப்பனரல்லாத ஒருவர், ஒரு வேலியில் பயிர்செய்து பயன்படுத்தி வருவாய் ஈட்டி, இன்னோரு வேலியை பயன்படுத்தாமல் வைத்திருப்பின் அந்த பயன்படுத்தாத 1 வேலி நிலத்தை பிரமதேய சபையிடமே விலைக்கு விற்கவேண்டியிருக்கும்.. இது விற்பவருக்கும், அதை வாங்கிய பிரமதேய சபையிடமிருந்து இந்த 1 வேலி நிலத்தை அதே விலைக்கு வாங்கி (கோயில் கொடைக்காக மீண்டும் மானிய நிலமாக) தானம் செய்பவர்களுக்கும் பயனளிக்கும் முறை.. பிரமதேய சபைக்கு எந்த லாபமும் நட்டமும் இல்லை.. நிலங்கள் வீணாக கிடப்பதும் தவிர்க்கப்படும்..

          ஒரு முறை இப்படித்தான் குந்தவைப் பிராட்டியார் , பிரமதேய சபைக்கு விற்கப்பட்ட நிலத்தை பிரமதேய சபையிடமிருந்து வாங்கி மீண்டும் மானியக் கொடையாக அளித்திருக்கிறார்..

          //[7]பிரம்மதேயம் என்ற பெயரில் பார்ப்பனர்களுக்கு நிலங்கள் வழங்கப்பட்டன. அகரங்கள், அக்கிரகாரங்கள், சதுர்வேதிமங்கலங்கள் எனப்படும் தனிக் கிராமங்கள், கோவில்கள், மடங்கள் ஆகியவை அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்தன.//

          அரசுக்கு வரி(இறை) செலுத்தாத பள்ளிசந்தங்களும் (சாத்தமங்கலம், ஆனைமங்கலம் முதலிய ஊர்கள்) சமண, புத்த மடங்களுக்கு அளிக்கப்பட்டிருக்கின்றன..

          //[8]வேதக் கல்வி பார்ப்பனர்களுக்கு மட்டுமேயான உரிமையாக இருந்ததால், பார்ப்பன நிலவுடைமையாளர்கள் மட்டுமே ஊர்ச்சபைக்குத் தேர்வு செய்யப்பட்டனர். இதுதான் குடவோலை முறையின் யோக்கியதை. அதுமட்டுமல்ல, நிலவுடைமையாளர்களான பிராமணர்கள் மட்டுமே பெருவுடையார் கோவிலின் நிதி நிர்வாகிகளாக (பண்டாரி) இருக்க முடியும் என்று ராஜராஜன் ஆணை பிறப்பித்திருந்தான்.//

          கோயில் பண்டாரிகள் பெரும்பாலும் பிராமணர்களாகவோ,வேளாளர்களாகவோ மட்டுமே இருக்கமுடிந்தது என்பது உண்மைதான்.. ஆனால் கோயில் பண்டாரிகளும், கணக்கர்களும் ஊதியம் பெற்றது நாட்டுப்பண்டாரம் என்ற அரசுக் கருவூலத்தில்தான்.. பிற கோயில் பணியாளர்கள் கோவில் பண்டாரத்தில் இருந்து ஊதியம் பெற்றனர்.. இதுபோன்று முறைகேடுகளைத் தவிர்க்கும் வகையிலான ஊதியமுறையையும் அரசு கடைபிடித்தது..

          //[9]மண்ணும் பொன்னும் தந்து பார்ப்பனர்களை மகிழ்வித்த ராஜராஜன், தனது அரசாட்சியிலும் பார்ப்பன நீதிமுறைகளையே பின்பற்றினான். தனது அண்ணன் ஆதித்த கரிகாலனைக் கொலை செய்த பார்ப்பனர்களைக்கூட அவன் தண்டிக்கவில்லை.//

          ஆதித்த கரிகாலரின் கொலையாளிகள் 15 ஆண்டுகளாக, ராஜராஜர் ஆட்சிக்கு வந்து தங்களை தண்டிக்கவேண்டும் என்று தவம் கிடந்ததைப் போல் பேசுகிறீர்கள்.. அவர்கள், கொலை நடந்தவுடன் சோழநாட்டைவிட்டு எஸ்கேப் ஆயிருப்பார்கள்.. ராஜராஜரால் அவர்களது சொத்துக்களைத்தான் பறிமுதல் செய்யமுடிந்தது..

          //[10]இன்று ராஜராஜனை ‘மாமன்னன்’ என்றும் அவனது ஆட்சி ‘தமிழனின் பொற்காலம்’ என்றும் புகழ்பவர்கள் “அக்காலத்தில் ஒரு மன்னன் அப்படித்தான் இருந்திருக்க முடியும்” என்று நியாயப்படுத்துகின்றனர். வரலாற்றில் கீதையும் இருந்தது. அதே காலத்தில் அதனை எதிர்த்து நின்ற பவுத்தமும் இருந்தது. அசோகன் இருந்தான். பவுத்தத்தை வீழ்த்திய புஷ்யமித்திர சுங்கனும் இருந்தான். பார்ப்பனர்க்கு தனிச் சலுகை நீக்கி நிலங்களைப் பொதுவாக்கிய களப்பிரர் இருந்தனர்.//

          சேர சோழ பாண்டிய மன்னர்களுக்கு விசுவாசிகளாக இருந்த காரணத்தாலேயே பார்ப்பனர்கள் களப்பிரரின் சினத்துள்ளானார்கள்..

          //நீங்கள் [பார்பன,வெள்ளாள சாதி எனில் ] ராஜராஜ சோழனை பாராட்டலாம் தவறு இல்லை !!!!//

          பார்ப்பன துவேசம் கண்ணைக்கட்டாத எவருக்கும், மாமன்னர் ராச ராசரை போற்றாமல் இருக்க முடியாது..

          • “பிற்பட்ட , மிகவும் பிற்பட்ட, தலித்தியர் மக்களுக்கு ” கல்வியை மறுத்த ராச ராசனின் மனு தர்ம பொற்கால ஆட்சியை “தாயுமானவன் பிள்ளை” ,”அம்பி” உயர்தி பேசுவதில் எந்த மர்மமும் இல்லை !

            அம்பி://பார்ப்பன துவேசம் கண்ணைக்கட்டாத எவருக்கும், மாமன்னர் ராச ராசரை போற்றாமல் இருக்க முடியாது..//

          • அம்பி ,

            நான் ராச ராசன் ஆட்சியின் மீது வைத்த குற்றசாட்டுகளை பொறுமையுடனும், கவனத்தை சிதறடிக்காமலும் ஒவ் ஒரு குற்றசாட்டுக்கும் ராச ராசனே நேரில் வந்து பதில் அளிப்பது போல பதில் அளித்து உள்ளீர்கள். நன்று !

            ஆனால் ராச ராசனின் “மனு தர்ம” பொற்கால ஆட்சியை மறுக்கும் அளவுக்கு உங்கள் பதில்களில் சத்து இல்லையே !

            ராச ராசன் ஆட்சியின் மீது நான் வைத்த குற்றசாட்டுகள் , ராச ராசனின் தரப்பு வழக்கு அறிஞர் [அம்பியின் ] மறுப்பு உரைகள் இவற்றை படிக்கும் வினவு வாசகர்கள் முடிவு செய்யட்டுமே !

          • //முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியம் அவர்களின் ‘தஞ்சாவூர்’ என்னும் வரலாற்று ஆய்வு நூலை இதற்காகத்தான் உங்களுக்கு முன்பே பரிந்துரைத்தேன். //

            Mr.அம்பி,

            இந்த நூலை Online இல் வாங்க முடியுமா? Google search இல் முழு விவரமும் கிடைக்கவில்லை. ஆனால் பல கட்டுரைகளில் அந்த புத்தகத்தை மேற்கோள் காட்டியிருக்கிறார்கள். உங்களிடம் அந்த புத்தகம் இருந்தால், அதிலுள்ள விவரங்களைத் தர முடியுமா? நன்றி.

            • வியாசன்,

              ’தஞ்சாவூர்’,
              2ம் பதிப்பு 2009
              பக்கங்கள் :384
              விலை : ரூ. 400

              ஆசிரியர் : முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்
              பதிப்பகம் :
              அன்னம் (அகரம் பதிப்பகம்)
              மனை எண்.1, நிர்மலா நகர், தஞ்சாவூர் – 613 007

              ஆசிரியரின் ’இராசராசேச்சரம்’ நூலும் அகரம் பதிப்பகத்தாரிடம் கிடைக்கலாம்..

              பதிப்பகத்தின் அலைபேசி எண்ணை இந்த சுட்டியில் காணலாம்..:

              http://www.dinamani.com/book_reviews/article707805.ece?service=print

        • செந்தில்குமரன்,

          1954-ல் பொன்னியின் செல்வனை எழுதிமுடித்தபின் கல்கி மறைந்துவிட்டார்.. அவர் மேலும் பல்லாண்டுகள் வாழ்ந்திருந்தால் ராஜராஜரின் முழு வாழ்க்கையும் பற்றி நாவல் தொகுதிகள் எழுதியிருப்பார்.. பரவலான தமிழ் மக்களுக்கு தங்கள் பேரரசனைப் பற்றி முழுமையாக அறிந்துகொள்ள முடிந்திருக்கும்.. நீங்களும் இப்படி ராஜராஜரை குறை சொல்லிக் கொண்டிருந்திருக்கமாட்டீர்கள்..

          • பொன்னியின் செல்வன் முடிவுரையை ஆழ்ந்து படியுங்கள் அம்பி !

            அவருக்கு மேலும் ராச ராசனை பற்றி எழுதும் எண்ணம் இல்லை !கல்கியீன் வார்த்தைகளில் கூறுவது என்றால் ……

            [1]”கதையில் சிகரமான நிகழ்ச்சி பொன்னியின் செல்வன் தன்கையில் கிடைத்த மகா சாம்ராஜ்ஜியத்தை தியாகம் செய்து இன்னொருவருக்கு முடிசூட்டியதேயாகும். ஆகையால், அந்த பெரு நிகழ்ச்சிக்குப்பிறகு கதையை வளர்த்திக்கொண்டு போவது ஆங்கிலத்தில் சொல்லப்படுவது போல், ‘கிளைமேக்ஸு’ க்குப்பிறகு ‘ஆண்டி கிளைமேக்ஸு’ க்குப்போவதாக முடியும். ”

            [2]“அறிவிலும் ஆற்றலிலும் ஆராய்ச்சியிலும் மிக்கவர்கள் வருங்காலத்தில் சோழ சரித்திரத்தை அடிப்படையாகக்கொண்டபல மகோந்நதமான நவீனங்களை எழுதி தமிழகத்திற்கு மேலும் மேலும் தொண்டு செய்வார்கள் என்று நம்புகிறேன்.”

            1954-ல் பொன்னியின் செல்வனை எழுதிமுடித்தபின் கல்கி மறைந்துவிட்டார் என்பதும் உண்மை தான்.

            • //அவருக்கு மேலும் ராச ராசனை பற்றி எழுதும் எண்ணம் இல்லை !//

              ராஜராஜரின் தியாகத்தோடு முடிக்கவே பொன்னியின் செல்வன் 5 பாகங்கள் ஆனது என்றால் உத்தம சோழரின் காலத்திலும், அதன்பின் சோழ மன்னனாகி, பேரரசனாகி, திருமுறை கண்டு என்று நீளும் ராஜராஜரின் முழு வரலாற்றையும் எழுத எத்தனை பாகங்கள் வேண்டியிருக்கும்..?! சுமார் 40, 50 பாகங்களை ’மேலும் எழுதும் எண்ணம் கல்கிக்கு இல்லாததால் அவர் மேற்கொண்டு ராஜராஜரைப் பற்றி எழுத விரும்பவில்லை’ என்று நீங்கள் வாதிடுவது கல்கி மீதும், ராஜராஜரின் மீதும், உங்கள் மீதும் பரிதாபத்தை ஏற்படுத்துகிறது..! 55 வயதிலேயே மறைந்து போன அந்த மகத்தான எழுத்தாளர் மேலும் பல்லாண்டுகள் வாழ்ந்திருந்தால் ராஜராஜரின் சாதனைகளை கூறும் நாவல்களை முடிந்தளவுக்கு எழுதியிருக்கமாட்டாரா..?!

              • அம்பி ,

                கல்கியீன் வார்த்தைகளிலேயே என் பின்னூட்டம் 96.1.1.5.1ல் பதில் கூறிவிட்டேன் .

                மீண்டுமா ?

                ஒரு விடயம் :

                கல்கி பிறப்பு : 9/9/1899
                கல்கி அமரர் ஆனது : 5/12/1954

  91. என்ன வியாசன் ,

    [1]திப்புக்கு ஒரு நியாயம் ,ராச ராசனுக்கு வேறு நியாயமா ?

    [2]திப்பு இந்தியன் இல்லை என்றால் , தமிழ்-ஆந்திர கலப்பின் வம்சத்தில் பிறந்த ராச ராசன் மட்டும் எப்படி தமிழன் ஆவான் ?

    viyasan://திப்பு சுல்தான் இந்தியன் என்பது விவாததத்துக்குரியது, அவர் அரபுக்களின் வம்சாவளியில் வந்தவர் என அவர் தந்தை கூறினார் என்கிறது வரலாற்றுக் குறிப்பைத் தான் நான் குறிப்பிட்டேன்.//

    viyasan://ஆனால் திப்பு சுலதானின் தந்தை குரேஷி அரபுக்கள் என்று நான் எங்கேயோ படித்தது எனக்கு நினைவுக்கு வந்தது. அதனால், தமிழர்களுக்கும், குரேஷி அரபுக்களுக்கும் என்ன பரம்பரைத் தொடர்பு இருக்க முடியுமென்று எனக்குத் தெரியவில்லை.//

    viyasan://இந்தியாவிலும், இலங்கையிலும் மட்டுமல்ல, ஐரோப்பாவில் கூட அந்த நாட்டு அரசர்கள், அடுத்த நாட்டில் பெண் எடுத்து, தமது நாட்டைப் பாதுகாக்க அவர்கள் எடுத்த Military strategy மட்டுமே. அதனால் அரசர்களின் இன அடையாளம் மாறுவதில்லை.//

    • செந்திலுக்குப் புரியவைப்பதே பெரிய வேலை. திப்பு சுல்தானின் தந்தை இந்தியாவுக்கு வந்த பின்பும் தான் அரேபியாவின் குரேசி பரம்பரையில் வந்ததாக பீற்றிக் கொண்டிருக்கிறார். மேலும் அடுத்த நாட்டில் பெண் எடுத்து, தமது நாட்டைப் பாதுகாக்கும் Military strategy அது இளவரசிகளுக்குத் தான் பொருந்தும் அரசர்களுக்கல்ல. 🙂

      • வியாசன் அவர்களே ……..,

        [1]திருவாலங்காட்டுச் செப்பேட்டில் சோழ மன்னர் ,நால்வருண மனு சாஸ்திரத்தை உருவாக்கிய மனு உட்பட பண்டைய ஆரிய அரசை தோற்றுவித்த பரதனின் வழி எனவும் எழுதி பீற்றிக் கொண்டிருக்கின்றனர் !

        [2]அப்படி என்றால் சோழர்கள் ஆரியர் என்று ஒத்துக்கொல்கின்றிர்களா ?

        [3]இனத் தூய்மை பேசும் வியாசன், நீங்கள் திப்புக்கு ஒரு நியாயம் ,ராச ராசனுக்கு வேறு நியாயம் கூறுவதால் உங்களுக்கு தமிழ் இன பற்றை விட இந்து மதப் பற்று தான் உள்ளது என்பது உண்மையாகிறது.

  92. மேலும் செந்தில் ……

    //சோழர்கள் தமிழர்களா ?

    கன்னட சாளுக்கியர்களுடன் திருமண உறவுகள் வைத்துக் கொண்ட சோழர்கள் தமிழர்களா ?

    ராச ராசனின் தந்தையாகிய சுந்தர சோழனின் தாய் வீமன் குந்தவை என்பவள் வேங்கிநாட்டு[கீழைச்சாளுக்கிய ] மன்னனாகிய இரண்டாம் வீமன் சாளுக்கியனின் புதல்வி!

    மரபியல்[Genetics] ரீதியாக சோழர்கள் தூய தமிழர்கள் தானா ?//

    இதற்க்கு திரு . வியாசன் அவர்கள் 88.1 சரியான பதில் கொடுத்து விட்டார்…வேற்று இனத்து அரச குடும்பத்துடன் மண உறவு வைத்து கொள்வது என்பது அரச மரபில் ஒரு சாதாரண விஷயம்..இது எல்லா நாட்டிலும் நடக்கும் ஒன்று தான். அதற்க்காகவெல்லாம் சோழர்கள் தமிழர்கள் இல்லையென்று ஆகிவிட மாட்டார்கள்… மொகலாய மன்னர் அக்பர் திருமணம் செய்து கொண்டதே ஒரு ராஜபுதனத்து இந்து பெண்மணியை தான் .. அவர்கள் இருவருக்கும் பிறந்தவர் தான் ஜெஹன்கிர்.. அக்பருக்கு பிறகு அரியணை ஏறி சிறப்பாக ஆட்சி புரிந்தவர் .. அவரின் தாய் ஒரு இந்து பெண்மணி என்பதற்காக ஜெஹங்கிரோ அவருக்கு பின் வந்த மொகலாய வாரிசுகளோ யாரும் ராஜ்புட் அரச பரம்பரையினராகவோ அல்லது இந்துவாகவோ மாறி விடவில்லை… கடைசி வரை அவர்கள் முகலாயர்கள் தான்..

    //கீழைச் சாளுக்கிய நாடு[ஆந்திரா ],மேலைச் சாளுக்கிய நாடு[கர்நாடகா] இவற்றுடன் திருமண உறவு கொண்ட சோழர்கள் தமிழர்களா ?//

    நிச்சயம் தமிழர்கள் தான் … கீழை, மேலைச் சாளுக்கியர்களுடன் மண உறவு கொண்டு இருந்தார்கள் என்பதற்காக எந்த சோழ வாரிசும் தன்னை தெலுங்கன் என்றோ கன்னடன் என்றோ தங்களை அடையாள படுத்தி கொண்டதில்லை… எந்த சோழ மன்னனும் சாளுக்கிய தேசத்தை மையமாக கொண்டு தஞ்சையை ஆண்டதாக வரலாறு கிடையாது.. தஞ்சையை மையமாக வைத்து தான் சோழ தேசத்தை வடக்கே கங்கை வரை தெற்க்கே கடாரம் விரிவு படுத்தினார்கள்…

    எந்த சோழ மன்னனும் தெலுங்கு பேசியதாக இது வரை எந்த ஆராய்ச்சியிலும் சொன்னதில்லை.. தங்களின் மெய்கீர்த்திகள் அனைத்தையுமே தமிழில் தான் அவர்கள் பதிந்து வைத்தார்கள்.. தஞ்சை பெரிய கோவில் சுவற்றில் குமைந்து இருக்கும் கல்வெட்டுகளில் எங்காவது தமிழை தவிர வேறு மொழிகள் இருக்கிறதா. தெலுங்கு மொழி தமிழ்நாட்டில் ஏற்றம் பெற்றதே 14ஆம் நூற்றாண்டிற்கு பிறகு தமிழ்நாட்டை ஆண்ட நாயக்க, விஜய நகர மன்னர்களின் ஆட்சியில் தான் .

    கரையானுக்கு விருந்தாகியிருக்க வேண்டிய தேவாரம் திருவாசகம் போன்ற ஒப்பற்ற ஓலை சுவடிகளை அழிவிலிருந்து மீட்டு.. தினபடி ஓதுவார்களை கொண்டு ஆலயத்தில் தமிழ் பக்தி பனுவல்களை ஒலிக்க செய்தது ராஜ ராஜ சோழனே .. தஞ்சை தரணியையும் தமிழ் மொழியையும் கடைசி வரை நேசித்தவர்கள் சோழர்கள்..

    • தாயுமானவர் அவர்களே,

      //தாய் ஒரு இந்து பெண்மணி என்பதற்காக ஜெஹங்கிரோ அவருக்கு பின் வந்த மொகலாய வாரிசுகளோ யாரும் ராஜ்புட் அரச பரம்பரையினராகவோ அல்லது இந்துவாகவோ மாறி விடவில்லை… கடைசி வரை அவர்கள் முகலாயர்கள் தான்.//

      As a women’s right activist, again, I strongly object denying the presence of mother’s genes in a child.

      In the case of Rahul Gandhi, Sonia’s genes are given value and Rahul is rightly considered half Italian. Why not in the case of Moghuls, Cholas, etc?

  93. இரண்டாம் ஆதித்தன் கொலை மீது ஆய்வுகள் :
    ——————————————————————————

    சுந்தர சோழனின் மூத்த மகன் இரண்டாம் ஆதித்தனை “யார் நலனுக்காக” ,”யார்” கொன்றார்கள் ?

    கொலைகாரர்களை தண்டிக்க சுந்தர சோழனால் முடியாது ஏன் ?

    பல ஆண்டுகள் கழித்து கொலைகாரர்கள் கொல்லப்படாமல் நாடு கடத்தபட்டது [கேரளாவுக்கு ] ஏன் ?

    சித்தப்பா உத்தம சோழனுக்கும் ,ராச ராசனுக்கும் இடையே என்ன மறைமுக ஒப்பந்தம் ?

    திருவாலங்காட்டுச் செப்பேடுகள்,உடையார்க்குடிக் கல்வெட்டுகள் கூறுவது என்ன ?

    ராஜீவ் கொலையில் உண்மை குற்றவாளிகள்[உம் சு.சா. ] மறைக்கப்பட்டது போல இரண்டாம் ஆதித்தன் கொலையில் உண்மை குற்றவாளிகள் மறைக்கப்பட்டார்களா ?

    உண்மை விரைவில்………………….

  94. போலி தமிழ் தேசியம் பேசுவோரின் இலக்கணப் படி சோழர்கள் தமிழர்களாக இருக்க இயலுமா? ஏனெனில் இன்று போலி தமிழ் தேசியம் பேசுவோருக்கு தமிழகத்தில் வாழ்ந்தாலும், தமிழ் மொழி பேசினாலும், தமிழகத்தை ஆண்டாலும் கூட தமிழர்கள் ஆகிவிட முடியாதே. அவர்களுக்கு அப்பன், ஆத்தாள், அவங்களோடு அப்பன், ஆத்தாள், அவங்களோடு அப்பன், ஆத்தாள் என அனைவரும் சுதிசுத்தமான தமிழர்களாக இருக்க வேண்டுமே.!

    இங்கு தான் இடிக்கின்றது. அப்படிப் பார்த்தால் நடுக்காலத்தில் தமிழகத்தை ஆண்ட சோழர்கள் சுத்தமான தமிழர்களாக இருந்திருக்கவில்லை என்பதை வரலாற்றின் ஊடாக அறியலாம். உலகில் உள்ள அனைத்து மன்னர் குடும்பங்களைப் போல இவர்களும்[சோழர்களுக்கும்] பிற மொழி பேசும் மன்னர் குடும்பங்களோடு சம்பந்தம் செய்துள்ளனர். ஆக ஒரு வகையில் இவர்கள் யாவரும் “கலப்புற்றவர்கள்”. இனத் தூய்மை பேசும் நவீன இட்லர்களுக்கு[வியாசனுக்கு] இது பொறுக்காதே!

    திருவாலங்காட்டுச் செப்பேட்டில் பழஞ்சோழ மன்னர் பெயரை இட்டும், மறு பக்கம் ஆந்திரத்தை ஆண்ட இக்சவாகு மன்னர் குலத்தை இட்டும், இன்னொரு பக்கம் நால்வருண மனு சாஸ்திரத்தை உருவாக்கிய மனு உட்பட பண்டைய ஆரிய அரசை தோற்றுவித்த பரதனின் வழி எனவும் எழுதி வைத்துள்ளார்கள்.

    • //திருவாலங்காட்டுச் செப்பேட்டில் பழஞ்சோழ மன்னர் பெயரை இட்டும், மறு பக்கம் ஆந்திரத்தை ஆண்ட இக்சவாகு மன்னர் குலத்தை இட்டும், இன்னொரு பக்கம் நால்வருண மனு சாஸ்திரத்தை உருவாக்கிய மனு…..///

      அந்தக் காரணத்தால் சோழர்கள் தமிழர்கள் இல்லை என்றால், தீச்சட்டிக்குள் இருந்து குதிரையில் வெளியே வந்த சத்திரியர்களாகிய வன்னியர்களும், தம்மை வானவர்களின் தலைவனாகிய தேவேந்திரன் வழியில் வந்ததாகக் கூறும் தேவேந்திர குல வெள்ளாளர்களும், தமது சத்திரியர்களாக உயர்த்திக் கொள்ள, மகாபாரதத்தில் வேரைத் தொடும் மள்ளர்களும், பள்ளர்களும், ஏனைய ஒவ்வொரு தமிழ்நாட்டுச் சூத்திர சாதிகளும் மட்டுமல்ல, ஆதித்தமிழர்களாகிய பறையர்கள்ள் கூட, யாரோ சாம்பவன் என்ற பார்ப்பானின் வழியில் வந்ததாக கூறி, தம்மைச் சாம்பவர்கள் என்று அழைத்துக் கொள்கிறார்களாம், அதன் படி பார்த்தால் தமிழ்நாட்டில் உள்ள எவனுமே உண்மையான தமிழன் இல்லை, எல்லோருமே ஆரியர்கள் என்றாகி விடுகிறது.

      இன்று பல தமிழ்நாட்டுச் சாதிக் குழுக்கள் எவ்வாறு தமது சாதியையும் மகாபாரதத்துடன் இணைத்து, ஒவ்வொரு புராணக் கதைகளை இயற்றி வைத்துக் கொண்டிருகின்றனவோ, அதைத் தான் சோழர்களின் கல்வெட்டுக்களையும், செப்புத் தகடுகளையும் எழுதியவரும் செய்திருக்கிறார். அதனால் அந்த அடிப்படையில் சோழர்கள் தமிழர்கள் அல்ல என்றால், தமிழ்நாட்டிலுள்ள பல சாதிக்குழுக்கள் தமிழர் அல்ல. வடநாட்டு மகாபாரதத்தில் தமது வேர்களைத் தேடும் வன்னியர்கள், முத்தரையர்கள், மள்ளார்கள், தேவேந்திரகுல வேளாளர்கள், சாம்பவர்கள் எல்லாம் தமிழர்கள் அல்ல என்று துணிந்து யாரும் தமது வலைப்பதிவில் எழுதக் காணோம்

      • வியாசன் நன்று !

        பெரியார் கூட எப்படி சாதி பற்று உள்ளவர்களீன் ஆரிய பற்றை சாடி இருக்க மாட்டார் !

        தம் சாதியுடன் ஆரிய புராணக் கதைகளை சேர்த்து தம் சாதியை உயர்த்த நினைக்கும் தமிழர்களுக்கு வியாசன் கொடுக்கும் சாட்டை அடி !

        வியாசனின் சாட்டை அடி உங்கள் ஆரிய மாயைய் கலைக்குமா எம் சாதீய தமிழர்களே !

        வியாசன் மிக்க நன்று !

  95. செந்தில் குமரன்……..

    16 வயதினிலே என்ற திரைபடத்தில் கமல் ” சந்தைக்கு போகணும் ஆத்தா வைய்யும் காசு குடு” என்று லூசு போல் சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லுவான்.. அதை போல தான் இருக்கிறது உங்களின் மறுமொழிகளும்….

    நான் மீண்டும் என்னுடைய 94ஆவது மறுமொழியில் கல்கி ராச ராசனை பற்றி எதாவது கடுமையான விமர்சனத்தை கூறி இருக்கிறாரா என்று கேட்டதற்கு திரும்பவும் அதை பல்லவியை பாடுகிறீர்கள்…

    //தாயுமானவன் ://கல்கி ராச ராசனின் நிர்வாகம் மிக கீழ் தரமாக இருந்தது அதனால் அவரின் வரலாற்றை எழுத எனக்கு மனம் வரவில்லை என்று எங்கு எந்த இடத்தில் எப்போது கூறினார் அல்லது எழுதினார் என்று தாங்கள் கூறமுடியுமா// என்று கேட்டதற்கு ..

    அதே பழைய அனுமான உளறல்கள்..

    //பொன்னியின் செல்வன் நாவலை படைக்க கல்வெட்டுகள் ,செப்பேடுகள் ,இலக்கிய பாடல்கள், இலங்கை பயணம் மூலம் எல்லாம் ஆதாரம் தேடிய திரு கல்கி அவர்கள் , திரு க. அ. நீலகண்ட சாத்திரி அவர்கள் எழுதிய கீழ் கண்ட நுல்களை படிக்காமாலா இருந்து இருப்பார் !

    [1]Studies in Chola history and administration. University of Madras. 1932.

    [2]The Cholas. University of Madras. 1935.

    இன் நூட்கள் சோழர் ஆட்சியீன் சமுக வழமைகள் [சாதி சார்ந்த சட்டங்கள் ,சாதி சார்ந்த வரி விதிப்புகள்] இவற்றை விளக்குகின்றன. எனவே கல்கி அவர்கள், ராச ராசனின் முடி துறக்கும் தியாகத்துடன் பொன்னியின் செல்வன் நாவலை முடித்து கொண்டார்!//

    //[1]ராச ராசனின் வரலாற்றை எழுதாதற்கு கல்கி உங்களிடம் இப்படி கூறினாரா !!!!?(அதாவது, கல்கி வந்து உங்களிடம் மட்டும் கூறி சென்றாரா என்று கேட்டதற்கு இப்படி பதிலடி கொடுத்துவிட்டாராம்)

    தாயுமானவன்://தான் பல காலம் ஆய்ந்து பொன்னியின் செல்வன் என்கிற நாவலை எழுதியதே போதும் என்று நினைத்து இருக்கலாம்.. தன்னுடைய வயது, உடல்நிலை காரணமாக மற்ற சோழ வேந்தர்களின் வரலாற்றை அவர் எழுதாமல் இருந்திருக்கலாம்..//

    [2]ராச ராசன் உங்கள் கனவில் வந்து இதனை கூறினாரா ?!!!!
    தாயுமானவன்://அறிவில் சிறந்த பார்பனர்,வெள்ளாளர் ஆகிய இருவரும் தான் அந்நாளில் நீதி துறை, நிர்வாக துறை(Civil departments) இரண்டையும் கவனித்து கொண்டார்கள்//

    இதற்க்கான விடை…

    //[1]ராச ராசனின் வரலாற்றை எழுதாதற்கு கல்கி உங்களிடம் இப்படி கூறினாரா !!!!
    தாயுமானவன்://தான் பல காலம் ஆய்ந்து பொன்னியின் செல்வன் என்கிற நாவலை எழுதியதே போதும் என்று நினைத்து இருக்கலாம்.. தன்னுடைய வயது, உடல்நிலை காரணமாக மற்ற சோழ வேந்தர்களின் வரலாற்றை அவர் எழுதாமல் இருந்திருக்கலாம்..//

    செந்தில் அது என்னுடைய அனுமானம் தான்…ஆனால், நீங்கள் கூறியது மட்டும் என்னவாம் …

    //பொன்னியின் செல்வன் நாவலை படைக்க கல்வெட்டுகள் ,செப்பேடுகள் ,இலக்கிய பாடல்கள், இலங்கை பயணம் மூலம் எல்லாம் ஆதாரம் தேடிய திரு கல்கி அவர்கள் , திரு க. அ. நீலகண்ட சாத்திரி அவர்கள் எழுதிய கீழ் கண்ட நுல்களை படிக்காமாலா இருந்து இருப்பார் !

    [1]Studies in Chola history and administration. University of Madras. 1932.

    [2]The Cholas. University of Madras. 1935.

    இன் நூட்கள் சோழர் ஆட்சியீன் சமுக வழமைகள் [சாதி சார்ந்த சட்டங்கள் ,சாதி சார்ந்த வரி விதிப்புகள்] இவற்றை விளக்குகின்றன. எனவே கல்கி அவர்கள், ராச ராசனின் முடி துறக்கும் தியாகத்துடன் பொன்னியின் செல்வன் நாவலை முடித்து கொண்டார்!//

    நீங்கள் ஒரு விசயத்தை எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் வெறும் அனுமானத்தின் (Guess) அடிப்படையில் கூறும்போது.. நானும் உங்களுக்கு அதே பாணியில் என் பதிலையும் அனுமானமாக கூறினேன்.. ஆனால் கல்கி ராஜ ராஜ சோழன் மீது பெரு மதிப்பு வைத்திருந்தார் என்பதற்க்கான தகுந்த சான்றுகளை அவரின் வரிகளிலேயே அளித்து விட்டேன் … எங்கே .. உங்களின் அனுமானத்தை தாண்டி ராஜ ராஜனுக்கு எதிராக எதாவது அதிருப்தியை கல்கி வெளிபடுத்தினார் என்று concrete ஆதாரம் ஒன்றை காட்டுங்கள் பார்க்கலாம்…

    [2]ராச ராசன் உங்கள் கனவில் வந்து இதனை கூறினாரா ?!!!!

    தாயுமானவன்://அறிவில் சிறந்த பார்பனர்,வெள்ளாளர் ஆகிய இருவரும் தான் அந்நாளில் நீதி துறை, நிர்வாக துறை(Civil departments) இரண்டையும் கவனித்து கொண்டார்கள்//

    சத்தியமா இல்லங்க…. அது வரலாற்று உண்மை.. தமிழக பண்பாடும் வரலாறும் என்கிற நூலை படித்து பாருங்கள் .. தேவநேயர், மூ.வரதராசனார், ராசமாணிக்கனார் என்று ஆசிரியர் யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும் இந்த செய்தி அதில் இருக்கும்.. கூடுதலாக அறிவில் சிறந்த என்கிற வார்த்தை உங்களை புண்படுத்தி இருந்தால் அதற்க்கும் நான் பொறுப்பில்லை காரணம் அன்று, நீதி,நிர்வாகம் ஆகிய இரு துறைகளிலும் அவர்கள் தான் அறிவில் சிறந்து விளங்கினார்கள்.. நான் அன்றைய கால கட்டத்துடன் கூறினேன்…(இதை இப்போது விவாத பொருள் ஆக்கிவிட வேண்டாம்).

    ஆனால் கல்கியின் விவாதத்திற்கு சரியான பதில் கூறாமல் ஒரே தாவலாக ராஜ ராஜனின் பிறப்பை பற்றி ஆராய்ச்சி செய்ய போய் விட்டார்.. செந்திலின் 88.1.2 இல் உள்ள உளறல்களை பாருங்கள் .. ஆனால் அதற்க்கு வியாசன் தக்க பதிலை “உதாரணமாக சிங்கள அரச குடும்பத்தினர், பாண்டியர்களிடம் நெருங்கிய திருமண உறவு கொண்டிருந்தனர். அப்படியானால் இலங்கையின் சிங்கள் அரசர்களை தமிழர்கள் என்பதா. என்னுடைய பரம்பரையினர் அல்லது உறவினர்கள் எதிர்காலத்தில் ஆங்கிலேயரகளை மணந்தால், நானும் ஆங்கிலேயனா. அண்ணன் செந்தில் குமரன் சரியான அவசரக் குடுக்கை, வாசிப்பதை எல்லாம் நம்பி விடும் வெள்ளையுள்ளம் கொண்டவர் போல் தெரிகிறது. :)” கொடுத்த பின்பும் ராஜ ராஜனின் மீதான அவரின் அரிப்பு ஓயவில்லை… உடனே,

    //போலி தமிழ் தேசியம் பேசுவோரின் இலக்கணப் படி சோழர்கள் தமிழர்களாக இருக்க இயலுமா? ஏனெனில் இன்று போலி தமிழ் தேசியம் பேசுவோருக்கு தமிழகத்தில் வாழ்ந்தாலும், தமிழ் மொழி பேசினாலும், தமிழகத்தை ஆண்டாலும் கூட தமிழர்கள் ஆகிவிட முடியாதே. அவர்களுக்கு அப்பன், ஆத்தாள், அவங்களோடு அப்பன், ஆத்தாள், அவங்களோடு அப்பன், ஆத்தாள் என அனைவரும் சுதிசுத்தமான தமிழர்களாக இருக்க வேண்டுமே.!// என்று அறச்சீற்றம் பாடுகிறார்…

    செந்தில்.. இந்த வாதத்தை நீங்கள் போலி தமிழ் தேசியவாதிகளிடம் சென்று கூறுங்கள் தவறில்லை… எங்களிடம் எதற்கு.. எங்களை பொறுத்த வரை தமிழ்நாட்டில் தமிழ் மொழியை மட்டும் அறிந்த தாய் தந்தையருக்கு பிறந்தவன் தான் தமிழன் என்றால் அப்புறம் பா. சிதம்பரம், நாராயணசாமி, தங்கபாலு மற்றும் தமிழ் பண்பாட்டை, இலக்கியத்தை ஆரியத்திற்கு அடிபணிய வைக்கும் வையாபுரி பிள்ளை போன்ற ஈன ஜென்மங்களை தான் தமிழர்களாக ஏற்று கொள்ள இயலும்… என்னை பொறுத்த வரை தமிழை தன் சொந்த மொழி போலவும் , தமிழர்களை தன் சொந்த மக்கள் போன்றும் நேசிப்பவன் எவனோ அவனே உண்மையான தமிழன்.. அவன்தன் தாய்மொழி எதுவாக வேண்டுமானாலும் இருந்து விட்டு போகட்டும். அந்த அலகீட்டின் படி பார்த்தல் சோழ மன்னர்கள் அனைவருமே குறிப்பாக அருள்மொழி வர்மனாகிய ராஜ ராஜ சோழன் சுத்தமான தமிழன் தான் போதுமா… தமிழுக்கு அவன் செய்த தொண்டே இதற்க்கு போதுமான சான்றுகளாகும்..

    செந்தில் குமரன்.. இப்போதும் சொல்கிறேன் வரலாற்றை வரலாறாக பார்க்க பழகுங்கள்.. உங்கள் மார்க்சிய பெரியாரிய அளவுகோலின் படி பார்த்தால்.. தமிழனுக்கென்று எந்த வரலாறுமே மிஞ்சாது.. அப்புறம் வரலாறற்ற அனாதைகள் ஆகிவிடுவோம் நாம்.. ராஜ ராஜ சோழன் உங்களுக்கும் எங்களுக்குமான அரசன்.. நம்முடைய தமிழ் பண்பாட்டின் முத்திரை அவன்…

    இறுதியாக , உலகின் தலை சிறந்த விஞ்ஞான மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஒன்று கூறுவார் “The difference between stupidity and genius is that genius has its limits.” ராஜ ராஜ சோழன் மீதான விவாததிற்கு போதுமான விளக்கங்களை கொடுத்து விட்டேன். இதற்க்கு மேலும், வம்பாக ஏற்க மறுத்தால் என்ன சொல்வது.. எனக்கு போட்டியாக ஐன்ஸ்டீனின் பழமொழி ஒன்றை நீங்கள் போடுவீர்கள்.. வேறு ஒன்றும் சொல்ல இயலாது.. Because i have my own limit. ok

    • தாயுமானவன்,

      இது வியாசனுக்கு !!!

      அவர் பெயரும் அக் கருத்தில் இருக்குமே !” [[நவீன இட்லர்களுக்கு[வியாசனுக்கு]]] ”

      //போலி தமிழ் தேசியம் பேசுவோரின் இலக்கணப் படி சோழர்கள் தமிழர்களாக இருக்க இயலுமா? ஏனெனில் இன்று போலி தமிழ் தேசியம் பேசுவோருக்கு தமிழகத்தில் வாழ்ந்தாலும், தமிழ் மொழி பேசினாலும், தமிழகத்தை ஆண்டாலும் கூட தமிழர்கள் ஆகிவிட முடியாதே. அவர்களுக்கு அப்பன், ஆத்தாள், அவங்களோடு அப்பன், ஆத்தாள், அவங்களோடு அப்பன், ஆத்தாள் என அனைவரும் சுதிசுத்தமான தமிழர்களாக இருக்க வேண்டுமே.!//

      • இல்லை, முன்னோர்கள் தமிழர்காக இல்லாது விட்டாலும், அவர்களின் முதன்மையான அடையாளம் தமிழன் என்பது மட்டுமாக இருந்தால் அவர்கள் தமிழர்களே. ஆனால் வீட்டில் ஒரு அடையாளம், வெளியில் ஒரு அடையாளமும் கொண்டு, அவர்களின் முன்னோர்களின் மாநிலங்களின் நலன்களில் அக்கறை கொண்டும், முன்னோர்களின் பண்டிகைகளைக் கொண்டாடிக் கொண்டும், தமிழரல்லாத வேறு கலாச்சார அடையாளங்களை கொண்டும், அவற்றைத் தமிழ்நாட்டில் பாதுகாத்துக் கொண்டும், தமிழ்நாட்டில் வாழ்கிற தமிழரல்லாத திராவிடர்கள் தமிழர்கள் அல்ல, அவர்கள் தமிழ் பேசும் மக்கள் மட்டும் தான் என்பது தான் என்னுடைய கருத்தாகும். ஆனால் முன்னோர்கள் தமிழர்களாக இருந்தால், அவர்கள் இப்பொழுது தமிழ் பேசாது விட்டாலும் கூட, உதாரணமாக புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களின் மூன்றாவது தலைமுறையினர், பிஜி, மலேசியா, மொரீசியஸ், ரியூனியன், தென்னாபிரிக்க போன்ற நாடுகளில் வாழும் தமிழ் வம்சாவழித் தமிழர்கள் எல்லோரும் தமிழர்களே. ஏனென்றால் அவர்களின் இன அடையாளம் தமிழன் என்பது மட்டுமே.

  96. எதை சொன்னாலும் நம்புவதற்கு இளிச்சவாய கூட்டம் இருக்கும்போது, கதை விடுவது கஷ்டமா என்ன? குடகு பகுதியிலிருந்து இயற்கையாகவே காவிரி சமவெளிநோக்கி வந்தது!அகஸ்தியர் கதைகளும், பிள்ளையார் கமண்டலத்தை தட்டிவிட்ட கதைகளும் பின்னாளில் ஏற்பட்டவை!
    காவிரியில் அணைகட்டி பாசன வசதி செய்து கொடுத்தது, தமிழ் மன்னர்கள்; கல்லணை கட்டி, கொள்ளிடத்தில் வீணாகும் தண்ணீரை இன்றைய டெல்டா பகுதிக்கு திருப்பும் தொழிற்னுட்பத்தை முதலில் கையாண்டவன் கரிகால் சோழன்! பின்னர் மைசூரை ஆண்ட மன்னர்களும் காவிரிக்கு குறுக்கே அணைகட்டியபோதெல்லாம், தமிழ் மன்னர்கள் போரிட்டு அவர்கள் கட்டிய அணைகளை இடித்துள்ளனர்! கடைசியாக மூக்கரிந்த போர் நடத்தி, மைசூர் மன்னனை தோற்கடித்தது திருமலைநாயக்கர்!

  97. வியாசன் , தாயுமானவன் அவர்களே,

    சோழர்கள் தமிழ்-தெலுங்கு கலப்பு இனமாக இருப்பினும் அவர்களும் தமிழர் தான் என்று பெருமையுடனும் ,பெருந்தன்மையுடன் ஒத்துக்கொண்ட வியாசன் , தாயுமானவன் அவர்களே ……..,

    பின்பு ஏன் ராச ராசன் மீது நான் விமர்சனம் செய்யும் போது, ராச ராசனின் உண்மை வரலற்றை கூறும் போது…….. ,

    எம்மை வந்தேறிகள் ,வடுகர் அல்லது மலையாளி திராவிடர் எச்சம் என்று எல்லாம் இகழுகின்றீர் !

    தாயுமானவன் அவர்களே ……,
    நீங்கள் கீழ் கூறுவது முற்றும் உண்மை !

    தாயுமானவன்://என்னமோ ராஜ ராஜ சோழன் தான் மனு தர்ம நெறி படி ஆட்சி செய்தது போலவும்.. அவருக்கு முன்பு இருந்த சோழ மன்னர்களின் காலத்தில் பார்பனர்களும், வேளாளர்களும் தாழ்த்தப்பட்ட மக்களிடம் கொள்வனவும், கொடுப்பனவும் வைத்து கொண்டு சகோதரர்கள் போல் சமத்துவமாக வாழ்ந்தது போலவும், அதை என்னமோ தங்கள் நேரில் இருந்து பார்த்தது போலவும் பேசுகிறீர்கள்.. ராஜ ராஜனின் காலம் இன்றோடு 1000 ஆண்டுகள் தான் ஆகிறது.. ஆனால் மனுதர்ம ஆட்சி தமிழ்நாட்டில் கடந்த 1800 ஆண்டுகளாகவே நடைபெற்று வருகிறது.. சோழ ராஜ்யத்தில் மட்டுமல்ல சேர. பாண்டிய, சாளுக்கிய, சாதவாகன, ராஜபுதனம் போன்ற இந்திய தேசம் முழுக்க அப்படி தான் இருந்தது…..//

    ராஜ ராஜ சோழனு”ம்” மனு தர்ம நெறி படிஆட்சி செய்தான் என்பது உண்மை தான் !நானும் இதை தானே கூறுகின்றேன் !

    “பிற்பட்ட , மிகவும் பிற்பட்ட, தலித்தியர் மக்கள் மீது அதிக வரியும் ,

    பார்பன ,வெள்ளாள சாதிக்கு வரி விலக்கும் அளித்த ராச ராசன்”

  98. தாயுமானவன்,

    தாயுமானவன்://என்னமோ ராஜ ராஜ சோழன் தான் மனு தர்ம நெறி படி ஆட்சி செய்தது போலவும்.. அவருக்கு முன்பு இருந்த சோழ மன்னர்களின் காலத்தில் பார்பனர்களும், வேளாளர்களும் தாழ்த்தப்பட்ட மக்களிடம் கொள்வனவும், கொடுப்பனவும் வைத்து கொண்டு சகோதரர்கள் போல் சமத்துவமாக வாழ்ந்தது போலவும், அதை என்னமோ தங்கள் நேரில் இருந்து பார்த்தது போலவும் பேசுகிறீர்கள்.. ராஜ ராஜனின் காலம் இன்றோடு 1000 ஆண்டுகள் தான் ஆகிறது.. ஆனால் மனுதர்ம ஆட்சி தமிழ்நாட்டில் கடந்த 1800 ஆண்டுகளாகவே நடைபெற்று வருகிறது.. சோழ ராஜ்யத்தில் மட்டுமல்ல சேர. பாண்டிய, சாளுக்கிய, சாதவாகன, ராஜபுதனம் போன்ற இந்திய தேசம் முழுக்க அப்படி தான் இருந்தது…..//

    [1]நீங்கள் கூறும் இவ் உண்மை , உங்களுக்கும் எனக்கும் புரியும் போது , கல்கி அவர்களுக்கும் புரிந்து இருக்குமே !

    [2]பின்பு எப்படி ராஜ ராஜ சோழன் ஆட்சி நிர்வாகம்[மனு தர்ம நெறி] பற்றி பொய்யாக புகழ்ந்து எழுதுவார் ?

  99. //…தமிழ்நாட்டில் உள்ள எவனுமே உண்மையான தமிழன் இல்லை, எல்லோருமே ஆரியர்கள் என்றாகி விடுகிறது.//

    உண்மைதான் வியாசன் அவர்களே! தான் தமிழன் என்பதில் பெருமை கொள்ளாமல், ஆரிய தேசம், ஆரிய மொழி, ஆரிய கலாச்சாரம் கடைசியில் ஆரிய அரசுக்கு அடிமையாய் கிடப்பவன் எப்படி தமிழனாவான்? அவர்களை அப்படியே பெருமைபட்டுக்கொள்ளுமாறு விட்டுவிடவேண்டியதுதான்!

    திருவாலஙகாட்டு செப்பேட்டுப்படி, தான் ஆரிய இட்சுவாகு வம்சத்தவன் என்று அவர்களே கூறிக்கொள்ளும்போது, அது உண்மையா அல்லது வெறும் போலி குலப்பெருமையா என்பதைவிட, அவர்கள் தமிழர் அல்ல என்றுதான் கொள்ளவேண்டும்!

    மேலும், சஙக கால சோழர்களின் பெயர்கள் தூய தமிழ்பெய்ர்களாயிருக்க, பலநூறாண்டுகள் கழித்து, திடீரென்று முளைத்த இடைக்கால ‘சோழர்கள்’ தஙகளை ஆரிய வம்சத்தினர் என்று சம்ஷ்கிருத பெயர் அல்லவா சூட்டிகொண்டனர்?

    பார்க்க:http://en.wikipedia.org/wiki/Legendary_early_Chola_kings#Prehistorical_Cholas

    • ‘//சோழர்கள்’ தஙகளை ஆரிய வம்சத்தினர் என்று சம்ஷ்கிருத பெயர் அல்லவா சூட்டிகொண்டனர்?//
      சமஸ்கிருதப் பெயர்கள் உள்ள காரணத்தால் சோழர்கள் தமிழர்கள் அல்ல என்றால், திருமாவளவனின் கட்சியினரைத் தவிர, தமிழ்நாட்டிலுள்ள தமிழர்களில் அரைவாசிப்பேர் தமிழர்கள் அல்ல என்றாகி விடுவது மட்டுமல்ல, இந்த இணையத்தளத்தில் நீங்கள் கூட தமிழரல்லாதவர் என்றாகி விடும். 🙂

      • //சமஸ்கிருதப் பெயர்கள் உள்ள காரணத்தால் சோழர்கள் தமிழர்கள் அல்ல என்றால், திருமாவளவனின் கட்சியினரைத் தவிர, தமிழ்நாட்டிலுள்ள தமிழர்களில் அரைவாசிப்பேர் தமிழர்கள் அல்ல என்றாகி விடுவது மட்டுமல்ல, இந்த இணையத்தளத்தில் நீங்கள் கூட தமிழரல்லாதவர் என்றாகி விடும். :)//
        அவரு என்ன சொல்றாருனு ….
        “சஙக கால சோழர்களின் பெயர்கள் தூய தமிழ்பெய்ர்களாயிருக்க, பலநூறாண்டுகள் கழித்து, திடீரென்று முளைத்த இடைக்கால ‘சோழர்கள்’ தஙகளை ஆரிய வம்சத்தினர் என்று சம்ஷ்கிருத பெயர் அல்லவா சூட்டிகொண்டனர்?”

        • அஸ்வின்,

          நன்று . வியாசன் மண்டையில் உரைக்கும் படி பதில் அளித்திர்கள் .

          வியாசனின் வேளையே பிறர் கூறும் நியாயமான ,அறிவுபூர்வமான கருத்ததுகளை திசை திருப்பி “மொக்கையாக” பெனாத்துவது தான்.

        • அஸ்வினுக்குப் புரியும் வகையில் மட்ராஸ் தமிழில் எழுத எனக்குத் தெரியாது. சங்ககாலத் தமிழர்களின் பெயர்கள் எல்லாம் தூய தமிழ்ப்பெய்ர்களாயிருக்க, இக்காலத் தமிழர்களில் பெரும்பான்மையினரின் பெயர்கள்,சமக்கிருதப் பெயர்கள் அல்லது சமக்கிருதக் கலப்புடையவை. அந்த அடிப்படையில், அதாவது சோழர்களின் பெயர்கள் சமக்கிருதத்திலும் இருந்த காரணத்தால் (ராஜராஜ சோழனின் இயற்பெயர் அருண்மொழி, தூயதமிழ்ப்பெயர்)அவர்கள் தமிழர்கள் அல்ல என்றால், இன்று தமிழர்கள் என தம்மை அடையாளப்படுத்தும் தமிழர்களில் பெரும்பான்மையினர்(அஸ்வின், அஜாதசத்ரு உட்பட) தமிழர்கள் இல்லை என்றாகி விடும். 🙂

      • வியாசன்,

        ஆம் நாங்கள் தான் இந்த தமிழ் மண்ணின் பூர்வகுடிகள் என்று பெருமையுடன் செல்லக் கூடிய தகுதி நமது ஆதி திராவிட சகோதர,சகோதரிகளுக்கு மட்டும் தான் உள்ளது .

        மற்றவர் அனைவருமே ஆரிய-திராவிட கலப்பு தான்

        viyasan://திருமாவளவனின் கட்சியினரைத் தவிர, தமிழ்நாட்டிலுள்ள தமிழர்களில் அரைவாசிப்பேர் தமிழர்கள் அல்ல என்றாகி விடுவது மட்டுமல்ல, இந்த இணையத்தளத்தில் நீங்கள் கூட தமிழரல்லாதவர் என்றாகி விடும்.//

  100. இந்த சுட்டியிலுள்ள கட்டுரையை படித்துப்பார்த்தால் காவேரி எவ்வளவு பழமையான ஆறு என்பதை புரிந்து கொள்ளலாம். இந்த உலகில் மனிதர்கள் வருவதற்கு முன்னரே பல பத்து லட்சம் ஆண்டுகள் பாடு பட்டு திருச்சிக்கு கிழக்கே பரந்து விரிந்து கிடக்கும் வண்டல் படுகையை காவேரித்தாய் எதிர் காலத்தில் வரப்போகும் தனது குழந்தைகளுக்காக உருவாக்கியிருக்கிறாள் என்பதை புரிந்து கொள்ளலாம்.

    http://www.currentscience.ac.in/Downloads/article_id_063_07_0348_0353_0.pdf

    ஆங்கிலம் அறியாத நண்பர்கள் தெரிந்தவர்களின் உதவியுடன் படித்து அவசியம் தெரிந்து கொள்ளவும்.

  101. வியாசன் ,தாயுமானவன் இருவருமே ராச ராசன் கடைபிடித்த மனு தர்ம நெறியை நான் சுட்டிகாட்டியபோது மறுக்கவில்லை .

    நான் கூறியது :

    “பிற்பட்ட , மிகவும் பிற்பட்ட, தலித்தியர் மக்கள் மீது அதிக வரியும் ,

    பார்பன ,வெள்ளாள சாதிக்கு வரி விலக்கும் அளித்த ராச ராசன்”

    அவர்கள் பதில்கள் :

    தாயுமானவன் ://என்னமோ ராஜ ராஜ சோழன் தான் மனு தர்ம நெறி படி ஆட்சி செய்தது போலவும்.. அவருக்கு முன்பு இருந்த சோழ மன்னர்களின் காலத்தில் பார்பனர்களும், வேளாளர்களும் தாழ்த்தப்பட்ட மக்களிடம் கொள்வனவும், கொடுப்பனவும் வைத்து கொண்டு சகோதரர்கள் போல் சமத்துவமாக வாழ்ந்தது போலவும், அதை என்னமோ தங்கள் நேரில் இருந்து பார்த்தது போலவும் பேசுகிறீர்கள்.. ராஜ ராஜனின் காலம் இன்றோடு 1000 ஆண்டுகள் தான் ஆகிறது.. ஆனால் மனுதர்ம ஆட்சி தமிழ்நாட்டில் கடந்த 1800 ஆண்டுகளாகவே நடைபெற்று வருகிறது.. சோழ ராஜ்யத்தில் மட்டுமல்ல சேர. பாண்டிய, சாளுக்கிய, சாதவாகன, ராஜபுதனம் போன்ற இந்திய தேசம் முழுக்க அப்படி தான் இருந்தது…..//feedback 94

    வியாசன்: //அக்கால வழக்கம், சமுக கட்டமைப்பு அப்படி, அதை இக்கால மார்க்சிய, பெரியாரிய சிந்தனைகளுடன் ஒப்பிட்டு, எமது முன்னோர்களை இழிவு படுத்துவது முட்டாள் தனமென்பதைத் தான் நான் மீண்டும்,மீண்டும் கூறுகிறேன். //[feedback 73.1]

    நன்றி வியாசன் , தாயுமானவன்!!!

  102. Hi K.Senthilkumaran,

    // ராச ராசன் வரலற்றை விமர்சிக்காதே என்று வியசனும், ஆம் பார்பனர்,வெள்ளாளர் மட்டுமே ராச ராசன் வரலாற்றில் உயர்தவர்கள் என்று தாயுமானவனும் இன்று கூறும் போது, அறம் சார்ந்த மனித வாழ்வு சிதையும் கொடுரம் தான் தெரிகின்றது.//

    //வரலாற்றில் கீதையும் இருந்தது. அதே காலத்தில் அதனை எதிர்த்து நின்ற பவுத்தமும் இருந்தது. அசோகன் இருந்தான். பவுத்தத்தை வீழ்த்திய புஷ்யமித்திர சுங்கனும் இருந்தான். பார்ப்பனர்க்கு தனிச் சலுகை நீக்கி நிலங்களைப் பொதுவாக்கிய களப்பிரர் இருந்தனர்.//

    Wonderful Senthil. You have transformed into a true Hero of mine.

    • Hello Univerbuddy,

      This is taken from vinavu.com Essay ! So your credit also goes to vinavu people!

      //வரலாற்றில் கீதையும் இருந்தது. அதே காலத்தில் அதனை எதிர்த்து நின்ற பவுத்தமும் இருந்தது. அசோகன் இருந்தான். பவுத்தத்தை வீழ்த்திய புஷ்யமித்திர சுங்கனும் இருந்தான். பார்ப்பனர்க்கு தனிச் சலுகை நீக்கி நிலங்களைப் பொதுவாக்கிய களப்பிரர் இருந்தனர்.//

      • செந்தில், லேகியம் வேண்டாமென்று நீங்கள் மறுத்தால் புட்டிக்கு கோவம் வந்து உங்கள் வேட்டியைப் பிடித்து இழுக்க ஆரம்பித்துவிடும்..

        • அம்பி,

          உங்கள் இருவருக்கும்[அம்பி,Univerbuddy] இடையில் நடக்கும் ஆபாச தனி மனித தாக்குதலில் என் வேட்டியை யாரும் அவிழ்க்க வேண்டாம்.

        • உங்கள் இருவருக்கும்[அம்பி,Univerbuddy] இடையில் நடக்கும் ஆபாச தனி மனித தாக்குதலை கண்டிக்காத “பஞசாயத்து வினவு” வேட்டியை வேண்டுமானால்……..!

  103. Mr. Ambi,

    //சிவப்புத் தோல் பெண்கள் மட்டும்தான் அழகிகளா..?//

    Did I say this? [My heart flutters at the sight of beauty, brown/black/pink/white/yellow and all-shades-in-between.]
    People are especially smitten by exotic types. It applies to all people, including Dravidians and Aryans, both Men and Women. For Dravidian men, Aryan women have been and still are visual magnets. I, being for full and equal women rights, let me add. For Dravidian&Aryan women, Aryan&Dravidian men could have been and still are visual magnets.
    [Above, I have written ‘could have been’, because, as a man, I should not speak for women. I can just guess. This is also part of equal rights. Women should speak for themselves. Any Dravidian/Aryan women are reading this? I request you to record your say here]

    //பார்ப்பனப் பெண்களுக்கு மட்டும்தான் சிவப்புத் தோல் இருக்கிறதா..? //

    Fortunately, it is NOT so. But, if you go back by 1000 years, we had only Paapaathis as exotic visitors. Since then, lot of mixing has fortunately happened, thanks to Devaradiyaals, Devaradiyaans [menfolk of Devaradiyaals], etc. In addition, thanks to Cinema, TV, DVDs, Internet, Live shows, etc., more and more exotic varieties are available now.

    //பேரரசனுக்கு சிவப்புத் தோல் அழகிகள் வேண்டியிருந்தால் அவர் கோவில் கட்டி இறையிலி கொடுக்கவேண்டியதில்லை.//

    People may choose a direct way or a roundabout way. Temples, tax-free lands are polished ways. And it had the approval of people too, because, it is not that only the king was enamored of Pappaathis, but the whole society was enamored of them. That’s why I gave the example of actresses before. Apparently, temple work was more palatable way both to Aryans [guests] and Dravidian subjects [hosts]. And the king just fulfilled the society’s desire.

    • // Since then, lot of mixing has fortunately happened, thanks to Devaradiyaals, Devaradiyaans [menfolk of Devaradiyaals], etc. //

      பின்னூட்டம் 86.1.1-ல் // Haven’t you heard of male sex workers? Being a பெண்ணுரிமை காவலர் i can also do this.// என்று தே.பையனாகத் தயார் என்று கூறிக்கொள்ளும் மானங்கெட்ட உமக்கு, மேற்படி பாணியில் நிறக்கலப்பு ஏற்பட்டு தமிழர்கள் பலரும் சிவப்புத் தோலோடு திரிகிறார்கள் என்று கூறுவதற்கு எந்த தயக்கமும் இருக்கப்போவதில்லை.. ஆனால் இதை சிவப்புத் தோல் தமிழர்கள் ஏற்கிறார்களா..?!

      • Mr. Ambi,

        //இதை சிவப்புத் தோல் தமிழர்கள் ஏற்கிறார்களா..?!//

        கருப்புத் தோல் பார்ப்பனர்களும் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும்.

        • ’தேவரடியாள்கள்’ & ‘தேவரடியான்கள்’ மூலம்தான் நிறக்கலப்பு ஏற்பட்டது என்ற உமது கழிசடைத்தனமான கற்பனையை கருப்பு பார்ப்பனர்களும், சிவப்புத் தமிழர்களும் ஏற்றுக்கொண்டேதான் ஆக வேண்டும் என்ற உம் ஆதங்கமும், தவிப்பும் புரிகிறது.. ஆனால் தன்மானமும், அறிவும் உள்ளவர்களால் ஏற்றுகொள்ள இயலாது..

          • Mr. Ambi,

            // நிறக்கலப்பு ஏற்பட்டது//

            நிறக்கலப்பு ஏற்பட்டிருப்பது கண்கூடு.
            வெவ்வேறு குழுக்களுக்கிடையேயான நபர்களின் ஜோடிசேர்தல்களால் தான் நிறக்கலப்பு ஏற்படமுடியும் என்பதற்கும் மாற்றுக்கருத்துக்கள் இருக்கமுடியாது.
            எல்லா மதுரைவீர்ர்-வெள்ளையம்மாக்களும், காத்தவராயர்-ஆர்யமாலாக்களும், முத்துபட்டர்-பொம்மக்கா-திம்மக்காக்களும் கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள் என்று கொண்டாலும் இதுபோன்ற ஜோடிசேர்தல்கள் குறைவாகத் தான் இருந்திருக்க வாய்ப்பிருக்கிறது.
            இதைவிட்டால் அடுத்த முக்கியமான, யாரும் மறுக்கமுடியாத பாணி தேவரடியார் முறைதான்.
            தேவரடியாள்கள், தேவரடியான்கள், etc (மற்றும் பலவழிகள்) என்றுதான் நான் கூறியிருக்கிறேன். தேவரடியாள்கள், தேவரடியான்கள் மட்டும் என்று நான் கூறவில்லை.
            தேவரடியாள்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆனாலும் அவர்களுக்கு குழந்தைகள் பிறந்தன. (There were no condoms or contraceptive pills or morning-after pills or other IU devices). எனவே தேவரடியாள்கள் வழியே நிறக்கலப்பு ஏற்பட்டிருப்பதற்கு மாற்றுக்கருத்துக்கள் இருக்கமுடியாது. இதை ஏற்றுக் கொண்டால் தேவரடியாள்களின் ஆண் சந்ததிகளான தேவரடியான்கள் வழியே நிறக்கலப்பு ஏற்பட்டிருப்பதையும் ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும். இதுதான் இயற்கை. தேவரடியார்கள் (அதாவது ஆணும் பெண்ணும்) யார்யாருடன் உறவுகொண்டார்கள் என்பது அவர்களுக்கே தெரியும். எல்லா ஜாதிகளிலும் சிவப்புத் தோலும் கறுப்புத் தோலும் இருப்பதுதான் தற்போதைய நிலை.

            Nature imposes free pairing between individuals of different groups and gradually becoming one group. When this normal way is obstructed with artificial barriers, nature finds its own way to achieve its aim.

            //உம் ஆதங்கமும், தவிப்பும் புரிகிறது //

            You can give an alternate theory if you have one.

            // தன்மானமும், அறிவும் உள்ளவர்களால் ஏற்றுகொள்ள இயலாது//

            I recall you that Paarpanars and other oppressor castes were great fans of the தேவரடியார் system. They opposed, tooth and nail, the act abolishing this system.

            • // நிறக்கலப்பு ஏற்பட்டிருப்பது கண்கூடு….எல்லா ஜாதிகளிலும் சிவப்புத் தோலும் கறுப்புத் தோலும் இருப்பதுதான் தற்போதைய நிலை.//

              நிறக்கலப்பு இல்லை என்று யார் கூறினார்கள்..? ராஜராஜரின் காலத்திலும், அதற்கு முன்பேயும், பல்வேறு சாதிகளிலிருந்து தங்களை கோயில்,கலை பணிகளுக்காக அர்ப்பணித்துக் கொண்ட தேவரடியார் என்போர் (தேவரடியாள்கள் என்று நீர் அழைத்து மகிழ்வதைப் போல்) பரத்தையரைப் போல சிறுமையுடன் அழைக்கப்படவில்லை, அவர்களது வேலை வேசித்தனமும் அல்ல.. மூவேந்தருக்கு பிந்தைய காலங்களில் கோயில் பணி, கலைப்பணி செய்து வருவோர் என்ற நிலையிலிருந்து பரத்தையர்களின் நிலைக்கு தள்ளப்பட்டனர்.. இந்த நிலையில் அவர்களின் பெயரும் தேவடியாள் என்று இழிசொல்லாகியது, அவர்களுக்குப் பிறந்தோரும் ஒரு குலமாக, தனிச்சாதியாகப் பிரித்துவைக்கப்பட்டனர்.. இவர்களை எந்த சாதியினருமே தங்களுடன் கலக்கவிடவில்லை.. இத்தொழிலிருந்து இவர்களை விடுதலை செய்ய சென்ற நூற்றாண்டில் சட்டம் கொண்டுவர வேண்டியிருந்தது..

              உமது கற்பனைக்கு மாறாக, நிறக்கலப்பு என்பது எப்போதோ ஏற்பட்டுவிட்டது.. பிறப்பு அடிப்படையில்தான் தொழில்,வர்ணம்,சாதி என்று இறுகிய காலகட்டத்துக்கு முன் – எந்த தொழிலையும் எந்த இனக்குழுவைச் சார்ந்தவரும் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் இருந்த காலகட்டத்தில் – பல்வேறு நிறமுள்ள இனக்குழுக்களைச் சார்ந்தவர்களிடையே, ஒரே தோழில் / ஒரே சமயம் / சம அந்தஸ்து / காதல் போன்றவற்றின் அடிப்படையில் திருமணங்கள் மூலம் நிறக்கலப்பு நிகழ்ந்தே வந்திருக்கிறது..

              • Mr. Ambi,

                //தேவரடியாள்கள் என்று நீர் அழைத்து மகிழ்வதைப் போல்//

                மைனர் கொடுத்த சொத்து என்றும் குல வழக்கம் என்றும் தே.பையன் என்றும் விளக்குப்பிடிப்பது என்றும் எழுதி இன்பம் கண்டது நீர். ஆணாதிக்க சூழலில் தேவரடியார் என்றாலே பெண்ணை மட்டுமே குறித்துவிடும் என்பதற்காகவும் அவ்வாறு பொருள்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவும் நான் பெண்ணுக்கு ள் வைத்தும் ஆணுக்கு ன் வைத்தும் இருபாலரையும் பொதுவாகக் குறிக்கும் இடத்தில் ர் வைத்தும் அருகிலேயே அடைப்புக்குறியில் இருபாலரையும் குறிப்பிட்டும் எழுதியிருக்கிறேன். நமது பரிமாற்றத்தைப் படிப்பவர்கள் சிலரேனும் நம்மில் யார் தேவரடியார்களை சிறுமைப்படுத்தியது என்று புரிந்து கொள்வார்கள்.

                //பிந்தைய காலங்களில் கோயில் பணி, கலைப்பணி செய்து வருவோர் என்ற நிலையிலிருந்து பரத்தையர்களின் நிலைக்கு தள்ளப்பட்டனர்.//

                மணம்புரியாமல் குழந்தைபிறந்தால் அதற்கு என்ன பொருள்? குழந்தைகள் சில சமயங்களில் வெள்ளைத்தோலுடன் பிறந்தால் (எ.கா. மதுரைவீரன் கவர்ந்த வெள்ளையம்மா) என்ன பொருள்? முன்னர் ரகசியமாக நடந்தது பிறகு வெளிப்படையாக நடக்க ஆரம்பித்து விட்டது என்று சொல்கிறீர்கள்.

                // தனிச்சாதியாகப் பிரித்துவைக்கப்பட்டனர். இவர்களை எந்த சாதியினருமே தங்களுடன் கலக்கவிடவில்லை.//

                இவர்களின் ஆண் குழந்தைகள் பரவலாக தத்து எடுக்கப்பட்டிருக்கின்றன. மற்றவர்களின் வேண்டாத பெண் குழந்தைகள் இவர்களால் வாங்கி வளர்த்து கலைப்பணியாளர்களாக்கப் பட்டிருக்கின்றார்கள். சில சமயம் கடத்தப்பட்ட வெள்ளைத்தோல் பெண் குழந்தைகளும் இவர்களை வந்து சேர்ந்திருக்கும். இவர்களின் வயது வந்த ஆண் பெண் வாரிசுகளும் மற்றவர்களை காதல் மணம் புரிந்திருக்கிறார்கள். இவர்கள் பல்வேறு சாதிகளிலிருந்து வந்தவர்கள் என்று நீரே கூறுயிருக்கிறீர். இவர்களின் சாதியை மாற்றிச் சொல்வது ஒன்றும் கடினமில்லை. இப்படிப்பட்ட வழிகளில்தான் இவர்கள் நிறக்கடத்திகளாக இச்சமூகத்திற்கு பெரிய சேவை செய்திருக்கிறார்கள். இச்சேவை காதும்காதும் வைத்தாற்போல்தான் நடக்கும். எனவே இவர்களை எந்த சாதியினருமே தங்களுடன் கலக்கவிடவில்லை என்று நீர் கூறுவது பொருளற்றது.

                //பல்வேறு நிறமுள்ள இனக்குழுக்களைச் சார்ந்தவர்களிடையே, *** நிறக்கலப்பு நிகழ்ந்தே வந்திருக்கிறது.//

                நான் இதையும் சொல்லியிருக்கிறேன். கடைசி மனிதனாகக்கூட இதை நான் மறுக்கமாட்டேன். ஆனால் எனது பின்னூட்டங்களில் “பிறப்பு அடிப்படையில்தான் தொழில்,வர்ணம்,சாதி என்று இறுகிய காலகட்டத்துக்கு” பின் வந்த பாணியைத்தான் விளக்கிவருகிறேன்.

                //உமது கற்பனைக்கு மாறாக, நிறக்கலப்பு என்பது எப்போதோ ஏற்பட்டுவிட்டது//

                “பிறப்பு அடிப்படையில்தான் தொழில்,வர்ணம்,சாதி என்று இறுகிய காலகட்டத்துக்கு” பின் நிறக்கலப்பு நின்றுவிட்டதா?

                • அம்பி ,Univerbuddy,

                  ஏன் இந்த சூட்சுமமான பேச்சு. உண்மையை நேராகவே கூறுங்களேன் !

                  [1]தமிழகத்தில் பிள்ளை,முதலி என்ற “பட்ட பெயர்” [சாதி பெயர்கள் அல்ல ] ஏற்றுகொண்டவர்களில் சிலரும் ,யாழ்பான பொன்னம்பலம் இராமநாதன் வெள்ளாளர்,ஆறுமுக நாவலர் போன்றவர்களும் தானே பிராமணர்-தேவதாசி [கலப்பின் ] வாரிசு பிள்ளைகள். இவர்கள் இன்றும் பிராமணனுக்கு அடிமை ஊழியம் செய்கின்றனரே !

                  [2]இந்த சமூகம் மினுக்கமும் கொழுப்பும் தடிப்புமாக இருக்கும் தானே !

                  Ref : Off springs of devadasi style themselves as Pillai and Mudaliyaar.(Cast and tributes of saouth indian.vol V page-84)

                  • // அம்பி ,Univerbuddy,

                    ஏன் இந்த சூட்சுமமான பேச்சு. உண்மையை நேராகவே கூறுங்களேன் !//

                    இதுபோன்ற சேறிறைத்தலில் ஈடுபடுவதாக என்னையும், புட்டியுடன் சேர்த்து scoolboys என்று கண்டித்தது நீங்கள்தானே, யுவர் ஆனர்..?!!

                    • அம்பி,

                      வரலாற்று ஆவணமான “Castes and Tribes of Southern India” Vol. 1 to 7 என்று 7 தொகுப்பாக Edgar Thurston, C.I.E., Superintendent, Madras Government Museum அவர்களால் எழதப்பட இப் புத்தகம் 1909 ஆம் ஆண்டு பதிப்பிக்கபபட்டது.

                      pls refer ambi.

                      மேலும் ,

                      சுப்பிரமணியன்சாமி, அறிஞர் அண்ணாதுரை ஒரு “அரைப் பிராமணர்” என்று உரிமை கொண்டாடி பாராட்டும் மர்மம் என்ன யுவர் ஆனர்..?!!?

                    • ஆபாசம் இல்லாமல் வரலாற்று விவரங்களை மட்டும் தான் ஆவணங்கள் அடிப்படையில் தருகின்றேன் யுவர் ஆனர்..!!!

                • ////

                  //பிந்தைய காலங்களில் கோயில் பணி, கலைப்பணி செய்து வருவோர் என்ற நிலையிலிருந்து பரத்தையர்களின் நிலைக்கு தள்ளப்பட்டனர்.//

                  மணம்புரியாமல் குழந்தைபிறந்தால் அதற்கு என்ன பொருள்? குழந்தைகள் சில சமயங்களில் வெள்ளைத்தோலுடன் பிறந்தால் (எ.கா. மதுரைவீரன் கவர்ந்த வெள்ளையம்மா) என்ன பொருள்? முன்னர் ரகசியமாக நடந்தது பிறகு வெளிப்படையாக நடக்க ஆரம்பித்து விட்டது என்று சொல்கிறீர்கள்.

                  ////

                  மூவேந்தர் காலத்து தேவரடியார்கள் பரத்தையர் அல்ல, அவர்கள் மணம் புரிந்து குழந்தைகளும் பெற்றிருக்கிறார்கள், அவர்கள் சார்ந்த சாதிகளும் அவர்களை தனி குலமாக ஒதுக்கி வைக்கவில்லை.. வெள்ளையம்மா மூவேந்தர் காலத்து தேவரடியார் அல்ல, அவரைப் பற்றிய விவரங்களை ஆதாரங்களுடன் கூறவும்..

                  //“பிறப்பு அடிப்படையில்தான் தொழில்,வர்ணம்,சாதி என்று இறுகிய காலகட்டத்துக்கு” பின் நிறக்கலப்பு நின்றுவிட்டதா?//

                  நிற்காமல் இருந்திருந்தால் முத்துப்பட்டன், காத்தவராயன், மதுரைவீரனுக்கு ஏன் அந்த துயரமான முடிவு..?!

  104. Mr. Ambi,

    //நிலவரியை நெசவாளர்களிடமோ, தச்சுவரியை மீனவர்களிடமோ, தறி வரியை ஆயர்களிடமோ, கொல்லர் வரியை கணியர்களிடமோ, வணிக வரியை கொல்லர்களிடமோ, செக்குவரியை தலையாரியிடமோ வசூலிக்க முடியுமா..?!//

    பார்ப்பனர்கள் ஆட்டிய மணிக்கு ஏன் வரியில்லை என்று இப்பொழுதேனும் யோசித்துப் பார்த்தீர்களா?

    • // பார்ப்பனர்கள் ஆட்டிய மணிக்கு ஏன் வரியில்லை என்று இப்பொழுதேனும் யோசித்துப் பார்த்தீர்களா? //

      உங்கள் லொள்ளுத் தாத்தா பிடித்த விளக்குக்கும்தான் வரியில்லை..

      • Mr. Ambi,

        // லொள்ளுத் தாத்தா பிடித்த விளக்குக்கும்தான் வரியில்லை..//

        ஒருவிதத்தில் மணியாட்டுவதும் விளக்குப்பிடிப்பதும் ஒரேமாதிரியான வேலையென்பதைத்தான் நானும் இங்கே நிறுவ முயன்றிருக்கிறேன். இதை ஒருவிதத்தில் நீர் ஒத்துக்கொண்டிருக்கிறீர்கள்.

        • இரண்டுக்கும் வரியில்லை என்பதால் ஆண்டவனுக்கு மணியாட்டுவதும், ஆண்டைகளுக்கு விளக்கு பிடிப்பதும் எப்படி ஒன்றாகும்..? பார்ப்பானின் மணியாட்டும் வேலைக்கு எல்லா சாதியினரும் போட்டி போடுகிறார்கள், போராட்டம் நடத்துகிறார்கள்.. ஆனால் உம் வேலைக்கு வரியுமில்லை போட்டியுமில்லை.. ஆகவே நீர் எப்போதும் போல் அச்சம் சொச்சம் இல்லாமல் தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கவும்..

          • Mr. Ambi,

            //*** மணியாட்டுவதும், *** விளக்கு பிடிப்பதும் எப்படி ஒன்றாகும்..?//

            பின்வாங்குகிறீர்கள். பரவாயில்லை. இரண்டுமே பலனை எதிர்பார்த்து செய்வதுதான்.

            //மணியாட்டும் வேலைக்கு எல்லா சாதியினரும் *** போராட்டம் நடத்துகிறார்கள்//

            இந்த ‘வேலையை’ பார்ப்பனர்களுக்கு மட்டும் விட்டுவைத்திருக்க வேண்டிய காலம் மலையேறிவிட்டது. பார்ப்பனர்கள் மணியாட்டும் தொழிலை தாங்கள் மட்டுமே செய்யவேண்டும் என்று இன்றும் பிடிவாதம் பிடிக்கிறார்கள். எனவேதான் போராட்டம்.

            கட்டாயத்தினால் விளக்கு பிடிக்கும் தொழிலுக்கு வந்தவர்கள் சமயம் கிடைத்தபோது அதிலிருந்து போராடி விடுபட்டுக் கொண்டார்கள். ஆதாயம் வேண்டுவோர் யார்வேண்டுமானாலும் விளக்கு பிடிக்கும் தொழிலை செய்யலாம். செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். இதில் எல்லா ஜாதிகளும் அடக்கம். எனவேதான் போராட்டம் இல்லை.

            • // பின்வாங்குகிறீர்கள். பரவாயில்லை. இரண்டுமே பலனை எதிர்பார்த்து செய்வதுதான். //

              இரண்டும் பலனை எதிர்பார்த்து செய்வது

              என்ன ஒரு கண்டுபிடிப்பு..!

  105. Hi All,

    I just finished reading துரை. இளமுருகு அவர்கள் எழுதிய ‘ராஜராஜ சோழனின் மறுபக்கம்’ (நுண்மை பதிப்பகம்).

    Two small quotes from the foreword of this book.

    “மார்க்சியப் பார்வையில் எழதப்பட்டது என்று சொல்லுவதைவிட மக்கள் பார்வையில் எழதப்பட்டது என்று சொல்லுவது சரியாக இருக்கும்”
    “நூலைப் படித்த பின் நீங்களும் அந்த முடிவிற்கு வந்தால் அதுவே நூலின் வெற்றியாகும்.”

    More in subsequent days, as per need.

    • செந்தில் அண்ணா,

      உங்களின் உளறல்களைப் பார்த்து விட்டு, நீங்கள் அந்த துரை. இளமுருகு, பெயரை செந்தில் குமாரனாக மாற்றிக் கொண்டு வந்திருக்கிறீர்கள் என்று நான் நினைத்ததுண்டு. அவர் முன்பு உங்களைப் போலவே ராஜ ராஜ சோழனை வசைபாடி கீற்றில் குப்பை கொட்டிக் கொண்டிருந்தார். அவரது குப்பை எப்படி இருக்கும் என்று எனக்குப் பரிச்சயம் உண்டு. உங்களின் கருத்துக்கள் தான் அவரது கருத்துக்களும். 🙂

      • தம்பி வியாசன், உலகத்தில் யாழ் வெள்ளாளன் தான் அறிவாளி என்று நினைக்க வேண்டாம் !

        //உங்களின் உளறல்களைப் பார்த்து விட்டு, நீங்கள் அந்த துரை. இளமுருகு, பெயரை செந்தில் குமாரனாக மாற்றிக் கொண்டு வந்திருக்கிறீர்கள் என்று நான் நினைத்ததுண்டு. அவர் முன்பு உங்களைப் போலவே ராஜ ராஜ சோழனை வசைபாடி கீற்றில் குப்பை கொட்டிக் கொண்டிருந்தார். அவரது குப்பை எப்படி இருக்கும் என்று எனக்குப் பரிச்சயம் உண்டு. உங்களின் கருத்துக்கள் தான் அவரது கருத்துக்களும்//

  106. ராச ராசன் ஆட்சியில் “மனு தர்ம அடிப்படையில்” “அறிவு ஒட்ட பந்தயத்தில்” கலந்து கொண்டதே பார்பனர்களும் ,வெள்ளாளர்களும் தான். அப்படி இருக்கும் போது ராச ராசன் ஆட்சியில் கல்வி மறுக்கப்பட்ட

    “————–பிற்பட்ட , மிகவும் பிற்பட்ட, தலித்தியர் மக்கள்——————-”

    அறிவு அற்றவர்கள் என்று நீங்கள் மறைமுகமாக கூறுவது ….
    you said :”அறிவில் சிறந்த பார்பனர்,வெள்ளாளர் ஆகிய இருவரும்”

    உங்களுக்கு முரனாக இல்லை ?

    ஆனால் இன்று பிற்பட்ட , மிகவும் பிற்பட்ட, தலித்தியர் மக்களும் கல்வி பெரும் போது நிலை என்ன ?

    10வது ,12வது , தேர்வுகள் ,உயர் கல்வி ஆகியவற்றில் பிற்பட்ட , மிகவும் பிற்பட்ட, தலித்தியர் மக்களும் தம் ஆளுமையை செலுத்துகின்றார்கள் !

    “பிற்பட்ட , மிகவும் பிற்பட்ட, தலித்தியர் மக்களுக்கு ” க்ல்வியை மறுத்த ராச ராசனின் மனு தர்ம பொற்கால ஆட்சியை “தாயுமானவன் பிள்ளை” உயர்தி பேசுவதில் எந்த மர்மமும் இல்லை !

    தாயுமானவன்://அறிவில் சிறந்த பார்பனர்,வெள்ளாளர் ஆகிய இருவரும் தான் அந்நாளில் நீதி துறை, நிர்வாக துறை(Civil departments) இரண்டையும் கவனித்து கொண்டார்கள்//

    • செந்தில் குமரன், எல்லா மனிதர்களிடமும் நல்ல, கெட்ட குணாதிசயங்கள் உள்ளன. நீங்கள் சொல்வது போல இராஜராஜ சோழன் ஒரு சில குறிப்பிட்ட சாதியினருக்கு அதிக சலுகைகளையும் மற்ற சாதிகளுக்கு அதிக வரியையும் விதித்திருப்பதாக தாங்கள் கூறியது உண்மையாகவே இருந்தாலும், அதை இப்போது மீண்டும் மீண்டும் கூற வேண்டிய அவசியம் என்ன. நீங்கள் கூறியது உண்மை என்றே எடுத்து கொண்டாலும் (பல கல்வெட்டு ஆதாரங்கள் இருப்பதாக சொல்கிறீர்கள்) அதே இராஜராஜன் தமிழ் வளர்ச்சிக்கும், உலகே வியக்கத்தகும் வண்ணம் தஞ்சை பெரிய கோவிலை கட்டியதும் உண்மை தானே. சாதி பாகுபாடு தவறு தான். இல்லை என்று சொல்லவில்லை. அதே சமயம் அந்த கால அரசர்கள் பெரும்பாலும் அந்தணர்களின் ஜோசிய சூழ்ச்சி வார்த்தைகளை எளிதில் நம்பி ஏமாந்தனர் என்பதும் உண்மை. இராஜராஜனை நீங்கள் குறை சொன்னால் அதே காரணத்தால் தமிழகத்தை ஆண்ட பல்வேறு அரசர்களும் அதே தவறை அல்லவா செய்தார்கள்? 1000 ஆண்டுகளுக்கு முன் இருந்த நடைமுறைகளை தற்கால விதிகளோடு ஒப்பிட்டு பார்த்தால் பொருந்தி வராது தான். காமராஜர் ஆட்சியில் கூட கோவில் கர்ப்பகிரகத்தினுள் செல்ல பார்ப்பனர்கள் அல்லாதவர்கள் அனுமதிக்கப்படவில்லையே. அதனால் காமராஜர் மனுதர்ம ஆட்சி புரிந்தார் என்று சொல்வீர்களா? பார்ப்பனர்கள் அந்த கால அரசர்களை மிகவும் சூழ்ச்சியுடன் தெய்வ குற்றம், ஆசாரம் என்று பயமுறுத்தி அவர்கள் பயனடைந்து உள்ளனர். புலவர்கள் புகழ்ச்சி மூலம், சிவப்புத்தோல் கொண்ட மங்கையர் மூலம், தெய்வத்தின் மேல் உள்ள பயத்தின் மூலம், சாத்திர சம்பிரதாயம் என்ற பெயரின் மூலமும் அரசர்கள் மயக்கப்பட்டனர் என்பது உண்மை தான். இந்த குற்றச்சாட்டு கிட்டத்தட்ட அந்த காலத்தில் ஆண்ட அத்தனை அரசர்களுக்கும் பொருந்தும் இல்லையா, ஏன் ராஜராஜனை மட்டும் குறி வைத்து தாக்குகிறீர்கள்?

      • பார்பனியத்தின் மனு தர்ம கசடுகளை முறையாக உள் வாங்கிக்கொண்டு நடை முறை படுத்திய மனு தர்ம ராஜா ராஜராஜனை நான் விமர்சனம் செய்யும் போது கற்றது கையளவுக்கு ஏன் வருத்தம். !!

        ராஜராஜன் மக்கள் நல அரசன் என்று நீங்கள் நீனைத்தால் நண்பர்கள் அம்பி ,வியாசன் , தாயுமானவன் போல நீங்களும் எதிர் விமர்சனம் செய்யலாமே !

        //இந்த குற்றச்சாட்டு கிட்டத்தட்ட அந்த காலத்தில் ஆண்ட அத்தனை அரசர்களுக்கும் பொருந்தும் இல்லையா, ஏன் ராஜராஜனை மட்டும் குறி வைத்து தாக்குகிறீர்கள்?//

      • கற்றது கையளவு,

        நீங்கள் ஏன் ராஜராஜனை இந்த அளவுக்கு கேவலமாக விமர்சனம் செய்கின்றிர் ?

        //பார்ப்பனர்கள் அந்த கால அரசர்களை மிகவும் சூழ்ச்சியுடன் தெய்வ குற்றம், ஆசாரம் என்று பயமுறுத்தி அவர்கள் பயனடைந்து உள்ளனர். புலவர்கள் புகழ்ச்சி மூலம், சிவப்புத்தோல் கொண்ட மங்கையர் மூலம், தெய்வத்தின் மேல் உள்ள பயத்தின் மூலம், சாத்திர சம்பிரதாயம் என்ற பெயரின் மூலமும் அரசர்கள் மயக்கப்பட்டனர் என்பது உண்மை தான். இந்த குற்றச்சாட்டு கிட்டத்தட்ட அந்த காலத்தில் ஆண்ட அத்தனை அரசர்களுக்கும் பொருந்தும் இல்லையா, ஏன் ராஜராஜனை மட்டும் குறி வைத்து தாக்குகிறீர்கள்?//

      • கற்றது கையளவு,

        ராஜராஜனை பற்றி அரசியல் ரீதியான ஆதரவு ,எதிர்பு கருத்துகளுக்கு மட்டும் தான் எம்மால் எதிர் வினையாற்ற முடியும்.

      • கற்றது கையளவு,

        மனுதர்ம “குலத் தொழில் பழகு ” என்ற கொள்கையை ஆதரித்து நடை முறை படுத்த விரும்பியது யார்?

        ராஜாஜியா ?காமராஜரா?

        //காமராஜர் ஆட்சியில் கூட கோவில் கர்ப்பகிரகத்தினுள் செல்ல பார்ப்பனர்கள் அல்லாதவர்கள் அனுமதிக்கப்படவில்லையே. அதனால் காமராஜர் மனுதர்ம ஆட்சி புரிந்தார் என்று சொல்வீர்களா?//

        • செந்தில் குமரன்,

          மனுதர்ம கொள்கையை ராஜாஜி ஆதரித்தார், குலத்தொழில் கல்வி கொண்டு வர முயன்றார், இதெல்லாம் நான் மறுக்கவில்லை. நீங்கள் இராஜராஜ சோழன் ஆட்சியில் சாதி பாகுபாடு உண்டென்று சொன்னீர்கள். அந்த சாதி பாகுபாடு காமராஜரின் ஆட்சியிலும் இருந்தது என்று தான் கூறினேன். இன்று வரையும் சாதி பாகுபாடு நம் சமுதாயத்தில் உள்ளது. வெட்கக்கேடு தான். இரட்டை டம்ளர் முறை, சாதி கலவரங்கள், குறிப்பிட்ட சாதியினருக்கு மட்டும் கோவில் கர்ப்பகிரகத்தினுள் செல்ல அனுமதி, இந்த வெட்கப்படக்கூடிய சங்கதிகள் நம் காலத்திலும் உள்ளது. மேலும், நீங்கள் இராஜஇராஜ சோழன் மேல் கூறிய குற்றச்சாட்டுகள் அக்கால அரசர்கள், அவர்கள சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்கள், நாயக்கர்கள், அனைவருக்கும் பொருந்தியதே. உங்கள் பதில்களில் இராஜராஜ சோழன் ஒருவரை மட்டும் குறி வைத்து தாக்குவது ஏன் என்று தான் நான் கேட்டேன். இராஜராஜ சோழன் மட்டும் அல்ல, மற்ற ஏனைய அரசர்களும் 23ஆம் புலிகேசி படத்தில் உள்ளது போல தான் தங்களது பெருமையை புலவர்கள் பாட வைத்து அதை கல்வெட்டில் பதிக்க வைத்து மகிழ்ந்தார்கள். தற்கால ஆட்சியர்கலான ஜெயலலிதா, கருணாநிதி இருவரும் புகழ்ச்சிக்கு மயங்குவதில்லையா? ஜெயலலிதா அனைவரையும் தன் காலில் விழவைத்து ரசிக்கிறார். கருணாநிதி திரைப்பட நடிக நடிகைகளை வைத்து ஆடல் பாடல்களோடு விழா அமைத்து புகழ் பாட வைத்து ரசிக்கிறார். ஆட்சியில் இருந்தாலே, பதவி மயக்கம், புகழ் மயக்கம், கர்வம், எல்லாம் தானாக வந்து விடுகிறது. இதில் நாம் 1000, 2000 வருடங்கள் பின்னோக்கி பார்க்கிறோம். நம் காலங்களில் பகுத்தறிவுடன் நாம் சில விடயங்கள் சரி, சில விடயங்கள் தவறு என்று ஆராய்ந்து முடிவெடுக்கிறோம். சரித்திரம் நமக்கு சில பாடங்களை கற்று கொடுத்ததனால் பட்டறிவுடன் நாம் சில முடிவெடுக்கிறோம். கடந்த கால அனுபவங்கள் நமக்கு நல்ல பாடங்களை கற்று கொடுக்கின்றன. அந்த பாடங்கள் மன்னர் காலங்களில் இல்லாத போது அந்த கால நடைமுறைப்படி சரி எனப்பட்டதை அவர்கள் செய்து வந்துள்ளனர். தற்கால கண்ணாடியை கொண்டு அந்த கால ஆட்சிமுறையை காணுவது சரியல்ல என்பது என்னுடைய தாழ்மையான கருத்து. வேட்டையாடி வாழ்ந்த ஆதிகால மனிதன் உடை அணியவில்லை என்றால் அது அந்த கால நடைமுறை. தற்கால கண்ணாடியை கொண்டு அந்த நிகழ்வை பார்த்தால் அது நமக்கு தவறாக தான் தோன்றும். தேவதாசி முறை, சதி, ஆகிய பெண்ணடிமை முறைகள் அந்த காலங்களில் நடந்தன. மன்னராட்சி முறை தவறு, ஜனநாயகம் தான் சரி என்று இன்று நமக்கு விளங்குகிறது. அந்த காலத்தில் மன்னராட்ச்சியே சிறந்தது என்று மக்கள் நம்பிக்கொண்டிருந்தனர். ஜனநாயகம் என்ற கருத்தே அவர்களிடம் இல்லை.

          • கற்றது கையளவு,

            “திப்பு சுல்தானையும், ராஜ ராஜ சோழனையும் ஒப்பிடுவது சாணிச்சட்டியையும், சருவச்சட்டியையும் ஒப்பிடுவது போன்றது.” என்ற வியாசனின் வாக்கு மூலம் அடிப்படையில் தான் இந்த விவாதம் நடைபெறுகின்றது.

            try to understand!

            திரு வியாசன் அவர்கள்,மனு தர்ம ராஜராஜனை புகழ்வது போல மனு தர்ம விஜயநகர் ஆட்சியாளர்களையும் வியசன் அல்லது வேறு எவரோ , புகழ்ந்து பேசினால் அப்போது தாமாகவே விஜயநகர் ஆட்சியாளர்கள் மீதும் “மனு நீதி குற்ற ” விவாதம் நடைபெறுகின்றது

            //மேலும், நீங்கள் இராஜஇராஜ சோழன் மேல் கூறிய குற்றச்சாட்டுகள் அக்கால அரசர்கள், அவர்கள சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்கள், நாயக்கர்கள், அனைவருக்கும் பொருந்தியதே. உங்கள் பதில்களில் இராஜராஜ சோழன் ஒருவரை மட்டும் குறி வைத்து தாக்குவது ஏன் என்று தான் நான் கேட்டேன்.//

  107. தாயுமானவன்,

    பச்சை தமிழர் காமராசர் அவ்ர்களின் ஆட்சி சிறப்பு வரலற்று ஆதாரங்களும் ,

    தமிழ் தேசிய தலைவர் பிரபாகரனின் வீர வரலற்று சுவடுகளும் தான்

    எம்மை போன்ற தமிழர்க்கு பெருமை படக்கூடிய விடையங்கள் !

    மனு தர்ம ———- ராசாக்களை[உம் : ராஜ ராஜன்,ராஜாஜி ]——– நீங்கள் வேண்டுமானால் புகழ்ந்து கொள்ளுங்கள் !

    மனு தர்ம ராஜ ராஜன்,ராஜாஜி இவர்களை புகழ்ந்து பேசுவது உங்கள் “மனு தர்ம” கடமை !

    //இப்போதும் சொல்கிறேன் வரலாற்றை வரலாறாக பார்க்க பழகுங்கள்.. உங்கள் மார்க்சிய பெரியாரிய அளவுகோலின் படி பார்த்தால்.. தமிழனுக்கென்று எந்த வரலாறுமே மிஞ்சாது.. அப்புறம் வரலாறற்ற அனாதைகள் ஆகிவிடுவோம் நாம்.. ராஜ ராஜ சோழன் உங்களுக்கும் எங்களுக்குமான அரசன்.. நம்முடைய தமிழ் பண்பாட்டின் முத்திரை அவன்…//

    • //பச்சை தமிழர் காமராசர் அவ்ர்களின் ஆட்சி சிறப்பு வரலற்று ஆதாரங்களும் எம்மை போன்ற தமிழர்க்கு பெருமை படக்கூடிய விடையங்கள் //

      மன்னிக்கவும் உங்களின் காமராஜர் பற்றிய கருத்தை நான் முற்றாக எதிர்க்கிறேன். காமராஜர் காலத்தில், அவரது ஆட்சியில், அவரது மேற்பார்வையில் தான் தமிழகம் சுருங்கியது. எமது முன்னோர்கள் ஆயிரமாயிரமாண்டுகள் காத்த மண்ணை அந்நியர்களுக்கு எந்த ஆரவாரமும் இல்லாமல், இந்திய மாயையில் விட்டுக் கொடுத்தவர் காமராஜர்.

      திரு. ம.பொ.சிவஞானம், திரு.நேசமணி போன்ற தமிழர்கள் மட்டும் போராடாமலிருந்திருந்தால் தமிழ்மண் இன்னும் சுருங்கி கன்யாகுமரி மலையாளிகளின் கைகளிலும், திருத்தணி வடுகர்களின் கைகளிலும் இருந்திருக்கும். ஒரு இனம், தனது மொழி, கலாச்சாரம், பண்பாடு என்பவற்றைக் காக்க அந்த இனத்தின் பாரம்பரிய மண்ணைக் காப்பது முக்கியம். அந்த மண்ணை அன்னியர்களிடடமிருந்து காப்பவன் தான் தலைவனே தவிர பேச்சு மூச்சில்லாமல் விட்டுக் கொடுப்பவன் உணமையான தலைவனல்ல. மண்ணை விட்டுக் கொடுத்து விட்டு, அதை ஈடுகட்ட, பள்ளிக்கூடங்களைக் கட்டியது பெரிய பாரட்ட வேண்டிய விடயமல்ல. பள்ளிக்கூடங்களைக் கட்டுவதும், மக்களுக்கு கல்வி வசதிகள் செய்து கொடுப்பதும் ஒவ்வொரு ஆட்சியாளரினதும் கடமை. கல்வி போன்ற அடிப்படை சேவைகளும் செய்திருக்க வேண்டும் ஆனால் மண்ணையும் விட்டுக் கொடுத்திருக்க கூடாது, அவன் தான் தலைவன். காமராஜர் மட்டும் இந்திய தேசிய மாயையிலிருந்து விடுபட்டு, தன்னை தமிழனாக நினைத்திருந்தால் தமிழ்நாடு இன்று தண்ணியில்லாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டிருக்காது என்று சிலர் கூறுவதை நான் கேட்டிருக்கிறேன்.

      இலங்கையில் தமிழ்மண்ணைக் காக்க தமதின்னுயிரை ஈந்தார்களே அவர்கள் பச்சைத் தமிழர்கள், கங்கை முதல் கடாரம் வரை சென்று தமிழர்களின் புலிக்கொடி நாட்டினானே ராஜ ராஜ சோழன் அவன் பச்சைத் தமிழன், ஆனால் என்னைப் பொறுத்த வரையில் காமராஜர் பச்சை இந்தியனே தவிர பச்சைத் தமிழன் அல்ல.

  108. வியாசன்,அம்பி ,

    [1]ராச ராசன் ஆட்சியின் மீது நான் வைத்த 10 குற்றசாட்டுகளுக்கும் பதில் அளித்தற்க்கு மிக்க நன்றி !

    [2]ஆனால் உங்கள் பதில்கள் “ராஜ ராஜன்” மனு தர்ம அடிப்படையில் ஆட்சி செய்தான் என்பதை மறுக்கவில்லையே !

    [3]ஆனால் உங்கள் பதில்கள் “ராஜ ராஜன்” மனு தர்ம அடிப்படையில் பிற்பட்ட , மிகவும் பிற்பட்ட, தலித்தியர் மக்களுக்கு கல்வியை மறுதான் என்பதை மறுக்கவில்லையே !

    [4]ஆனால் உங்கள் பதில்கள் “ராஜ ராஜன்” மனு தர்ம அடிப்படையில் “பிற்பட்ட , மிகவும் பிற்பட்ட, தலித்தியர் மக்கள் மீது அதிக வரியும் , பார்பன ,வெள்ளாள சாதிக்கு வரி விலக்கும் அளித்த ராச ராசன்” என்பதை மறுக்கவில்லையே !

    • மனுதர்ம அடிப்படையில் தான் இந்தியாவின் அரசர்கள் எல்லோரும் ஆண்டிருக்கிறார்கள்.விஜயநகர ஆட்சியாளர்களும், சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் திருவாங்கூர் அரசர்களும் கூட மிகவும் மோசமாக மனுதர்மத்தைக் கடைப்பிடித்து அதனடிப்படையில் ஆட்சி புரிந்துள்ளனர். அவர்களை எல்லாம், கன்னடர்களும், வடுகர்களும், மலையாளிகளும் இழிவு படுத்துவதை நாம் காணோம். ஆனால் பெரியாரிசம், கம்யூனிசம் என்பவற்றால் மூளைச்சலவை செய்யப்பட்ட சில தமிழ்நாட்டுத் தமிழர்களும், அவர்களின் தாயைப் பழித்தாலும் பொறுமை கக்கும் இழிச்சவாயர்கள் தமிழர்கள் என்பதை அறிந்த, தமிழ்நாட்டில் வாழும் தமிழரல்லாத திராவிட எச்சங்களும், ராஜ ராஜ சோழனின் ஆட்சியை மட்டும் மோசமான முறையில் விமர்சனம் செய்கின்றனர், ஏனென்றால் பெரும்பான்மையான தமிழர்கள் ராஜ ராஜ சோழனை , அவரது சாதனைகளை நினைத்து பெருமைப்படுகிறார்கள். அதை விட தஞ்சைப்பெரிய கோயில் மாமன்னன் ராஜ ராஜ சோழனை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருநாளும் கம்பீரமாக நினைவூட்டிக் கொண்டிருக்கிறது. அத்துடன் சிங்களவர்களும் ராஜ ராஜ சோழனுடன் வாங்கிய அடியை, ஆயிரமாண்டுகளாகியும், இன்னும் மறக்காமல் அவரை வசை பாடுகிறார்கள். பல தமிழரல்லாத இந்தியர்கள் சிங்கள ஆதரவாளர்கள் என்பதை நாங்கள் எல்லா இணையத்தளங்களிலும் காணலாம்.

      இவற்றை எல்லாம் தாங்க முடியாத தமிழரல்லாதாரின் உளறல்கள் ஒருபுறமிருக்க, சில தமிழர்கள் கூட ராஜ ராஜ சோழன் தமிழனேயில்லை என்று வாதாடினால் தமது முற்போக்கு, எம்மதமும் சம்மத, தமிழ்த்தேசிய எதிர்ப்பு தகைமைகள் இணையத்தளங்களில் உறுதி செய்யப்படும், அதனால் அதிகமான Kudos கிடைக்கும் என்று நினைத்துக் கொண்டும் ராஜ ராஜ சோழனை வசைபாடுகிறார்கள்.

      பெரியாரிஸ்டுகளுக்கு ராஜ ராஜ சோழன் பார்ப்பனர்களை ஆதரித்தார் என்றதால் அவரின் மீது எரிச்சல், முசல்மான்களுக்கு அவர் இந்து மதத்தை ஆதரித்தார் என்பதால் எரிச்சல், அதிலும் தமிழர்கள் என்ற பெயரில் இணையத்தளங்களில் உலாவும் பல திராவிட எச்சங்களுக்கு ஈழத்தமிழர்களைக் கண்ணில காட்டக் கூடாது, நாங்கள், ஈழத்தமிழர்கள் ராஜ ராஜ சோழனை எண்ணிப் பெருமைப்படுகிறோம், எங்களின் முன்னோர் என சொந்தம் கொண்டாடுகிறோம், ராஜ ராஜ சோழனின் புலிக் கொடியை ஈழத்தமிழரக்ளின் கொடியாக கொண்டுள்ளோம், இதெல்லாம் அவர்களுக்கு வயிற்றெரிச்சலைக் கொடுக்கிறது. அதனால் தான் ராஜ ராஜ சோழன் தமிழன் அல்ல என்றும் வாதாடுகிறார்கள். ஆனால் இதுவரை எந்த வரலாற்றாசிரியரும் ரார ராஜ சோழன் தமிழன் அல்ல என்று கூறியதாக எனக்குத் தெரியவில்லை.

    • செந்தில்குமரன்,

      மேல்தட்டு மக்கள் யானை, பல்லக்கு, குதிரை என்று பயணம் செய்த போது பிறருக்கு பேருந்து வசதியைக்கூட ராஜராஜர் ஏன் செய்து தரவில்லை என்று கேட்கமாட்டீர்கள் என்று நினைக்கிறேன்..

      //ஆனால் உங்கள் பதில்கள் “ராஜ ராஜன்” மனு தர்ம அடிப்படையில் பிற்பட்ட , மிகவும் பிற்பட்ட, தலித்தியர் மக்களுக்கு கல்வியை மறுதான் என்பதை மறுக்கவில்லையே ! //

      கல்வி என்று எதைக் கூறுகிறீர்கள்..?! வேதக் கல்வியையா..?!

      கம்மாளர்கள்/விசுவபிராமணர் என்றழைக்கப்படும் தச்சர்கள், உலோக கொல்லர்கள், பொற் கொல்லர்கள், சிற்பிகள், ஸ்தபதிகள் போன்றோருக்கென கட்டிட, சிற்ப, தேர், நாவாய்/கப்பல், ஆபரண, ஆயுத, எந்திர சாத்திரங்கள் வாய்மொழி, எழுத்து, செயல்வழி கல்வி மூலம் குருகுல/குடும்ப வழி கற்பிக்கப்பட்டே வந்தது..

      வானியல், கணித, மருத்துவ சாத்திரங்களும் நீங்கள் இன்று ‘தலித்’ என்று வகைப் படுத்தும் மக்களுக்கு மேற்கூறிய குரு/குடும்ப வழி கற்பிக்கப்பட்டே வந்தது..

      கடலோடும் மீகான்மன்களுக்குத் தேவையான சூழியல், வானியல் கல்வி போன்றவையும், மரக்கல சாத்திரக் கல்வியும் பரதவர்களுக்கும் கிட்டியிருந்தது..

      போர்ப் பயிற்சி, யுத்த சாத்திரக் கல்வி போர்க்குடிகளுக்கு கிட்டியது.. விலங்குகள் பற்றிய சாத்திரக் கல்வி, இசைக் கல்வி ஆயர்குடிகளுக்கு கிட்டியது.. இசை, நாட்டிய, ஓவிய சாத்திரக் கல்வி பாணர்களுக்கும், கலைஞர்களுக்கும் கிட்டியது..

      வேளாண்மைக் கல்வி என்பது ஒரு கடல் போன்றது.. இதற்கு ஒரு சில சாத்திரங்களைக் கொண்டு கல்வியளிப்பது கடினம்.. கிணறு வெட்டுதல், சூழியல், நீரோட்டம் அறிதல் போன்றவற்றிற்கு நூல்கள் இருந்தது என்று கேள்வி.. மண், நீர் மேலாண்மை, பயிர் வகைகள், பயிர் வளர்ப்பு முறைகள் பற்றிய அறிவானது வாய் மொழி, செயல்முறை, பாடல்கள் வாயிலாக தலைமுறை தலைமுறையாக கற்பிக்கப்பட்டிருக்கிறது..

      தமிழ், கணிதம் போன்ற கல்விகள் எல்லா குடிமக்களுக்கும் அந்தந்த குடிகளின் அறிஞர்களால் அனைவருக்கும் கிட்டியது..

      அன்றைய தமிழர் கல்வியற்ற தற்குறிகள் என்ற உங்கள் வாதம் பிழையானது..

      //ஆனால் உங்கள் பதில்கள் “ராஜ ராஜன்” மனு தர்ம அடிப்படையில் “பிற்பட்ட , மிகவும் பிற்பட்ட, தலித்தியர் மக்கள் மீது அதிக வரியும் , பார்பன ,வெள்ளாள சாதிக்கு வரி விலக்கும் அளித்த ராச ராசன்” என்பதை மறுக்கவில்லையே ! //

      மறுக்கவில்லையா..?!

      • அம்பி,

        “குலத் தொழில் பழகு ” என்ற ராஜாஜியீன் கொள்கைக்கு முன்னேடியே ராஜராசன் தான் என்பதை அழகாக கூறுகின்றிர்.

        நன்றி !

        இதை தானே “ராஜ ராஜன்” மனு தர்ம அடிப்படையில் ஆட்சி செய்தான் என்று கூறுகின்றேன்

        • // [3]ஆனால் உங்கள் பதில்கள் “ராஜ ராஜன்” மனு தர்ம அடிப்படையில் பிற்பட்ட , மிகவும் பிற்பட்ட, தலித்தியர் மக்களுக்கு கல்வியை மறுதான் என்பதை மறுக்கவில்லையே ! //

          கல்வியை மறுதான் என்றால் என்ன பொருள்..?! அரசு பொறியியல், கலைக் கல்லூரிகள் கட்டிவைத்து மேற்கூறிய மக்களுக்கு மட்டும் இடமில்லை, போய் குலக்கல்வி பயிலுங்கள் என்று கல்வியை மறுத்தாரா..?!

  109. வியாசன்,

    [1]சோழ வம்சமே மரபு[genetics] அடிப்படையில் “ஆரிய-கன்னட-தெலுக்கு” எச்சம் தானே !

    [2]சோழ அரசர்களுக்கு உயிர் கொடுத்த கரு முட்டைகள் கன்னட[மேலைசாளுக்கிய] ,தெலுக்கு[கீழைச்சாளுக்கிய] பெண்கள் கொடுத்த பிச்சைதானே ?

    [3]முதலாம் குலோத்துங்கனுக்கு கி.பி.1070 – 1120 ] உயிர் கொடுத்த விந்து அணு சாளுக்கிய ஆண்க்கும் கருமுட்டை தமிழ் பெண்ணுக்கும் உரியது தானே !

    [4]மேலும் மானுடவியல் ஆய்வுகள் [ஆதி திராவிடர் தவிர்த்து] திராவிட-ஆரிய கலப்பு இந்தியா முழுவதும் நடந்து உள்ளது என்பதை உறுதி படுத்துகின்றது.

    [5]உண்மை இப்படி இருக்க ஹிட்லர் போல தூய இனவாதம் பேசும் நீங்கள் உருப்பட வழி உண்டா ?

    [6]மற்றவர்களை “தமிழ்நாட்டில் வாழும் தமிழரல்லாத திராவிட எச்சங்கள்” என்று நீங்கள் இகழும் போது ராச ராசனின் தந்தையாகிய சுந்தர சோழனுக்கு உயிர் கொடுத்த தாய் வீமன் குந்தவை என்னும் கீழைச்சாளுக்கிய [தெலுக்கு] பெண்னின் “கருமுட்டைக்கு” நன்றி செலுத்த கடமைபட்டு உள்ளீர்கள்.!!!

    viyasan://ஆயிரம் வருடம் பின்னோக்கிப் போய் ராஜ ராஜ சோழனைத் தாக்கும், தமிழ்நாட்டில் வாழும் தமிழரல்லாத திராவிட எச்சங்கள் தமது முன்னோர்களாகிய விஜயநகர் ஆட்சியாளர்களை குற்றம் கூறாமல், ராஜ ராஜ சோழனை வசைபாடுவதன் சூக்குமத்தை தமிழர்கள் அறியார் என்று அவர்கள் நினைத்துக் கொள்கிறார்கள்.//

  110. viyasan,

    [1]ராச ராசனின் ஆளுமைச் சிறப்பே அவன் நிகழ்வுகளை ஆவனபடுத்தியது [documentation ] தான்.

    [2]பெரிய கோவில் கல்வெட்டுகள் ,மூன்று மெய்கீர்திகள் , செப்புபட்டையங்கள் ,ஒவ் ஒரு ஆட்சி ஆண்டிலும் எழுதப்பட்ட கல்வெட்டு ஆவணங்கள் இவை மூலம் தான் ராச ராசனின் மனு தர்ம ஆட்சி முறை பற்றி அறிய முடிகின்றது.

    [3]ஒவ் ஒரு ஆவணமும் மிகவும் நுட்பமான விவரங்களுடன் இருப்பது மிகவும் சிறப்பு.

    [4] இவ் வகையில் வரலாறு, ராச ராசனுக்கு நன்றி செலுத்த கடமைபட்டு உள்ளது

    //இதன் படி பார்த்தால் உண்மையில் ராஜ ராஜ சோழன் காலத்துக்குப் பின்னர் நடந்த சம்பவங்கள், தஞ்சாவூர்க் கோயில் கல்வெட்டுக்களிலுள்ளவற்றை எல்லாம் ராஜ ராஜ சோழனின் தலையில் போட்டு அந்த மாமன்னனை வசைபாடுகின்றனர் தமிழ்பேசும், தமிழரல்லாத திராவிட எச்சங்கள் என்பது தெரிகிறது.//

  111. தம்பி வியாசன்,

    கீழ்வெண்மணி
    ————–

    டிசம்பர் 25, கீழத் தஞ்சையின் கீழ்வெண்மணி கிராமத்தில், 1/2 படி நெல் கூட்டிக்கேட்ட கூலிவிவசாயிகளை, கோபாலகிருஷ்ண நாயுடு எனும் திருச்சூர் பண்ணையாரின் உத்தரவின்படி அடியாட்கள் கூரை வீட்டுக்குள் அடைத்து உயிருடன் எரித்துக் கொன்ற நாள். கொல்லப்பட்ட 44 தாழ்த்தப்பட்ட மக்களில் பெண்கள் குழந்தைகளும் அடக்கம்.

    தம்பி வியாசா !,

    இந்த “கோபாலகிருஷ்ண நாயுடுவை “——கணக்கு தீர்த்தது——-“உன்னை போல ” போலி தமிழ் தேசியம் பேசுவோர் இல்லை !

    ஆம் “கோபாலகிருஷ்ண நாயுடுவை” கணக்கு தீர்த்தவர்கள் எம் கம்யூனிஸ்ட் தோழர்கள்!

    தெலுங்கானா விவசாயிகளின் புரட்சி:
    ————————————

    நிஜாம் சமஸ்தானம்,நிலப்பிரபு ரெட்டிகள் , நிலப்பிரபு நாயுடுக்கள் அவர்களுக்கு எல்லாம் எதிரா வர்க்க ரீதியா ஆயுத போராட்டம் நடத்தி இந்திய பாட்டாளி வர்க புரட்சிக்கு ஒத்திகை பார்த்ததும் எம் கம்யூனிஸ்ட் தோழர்கள் தான் !

    //விஜயநகர ஆட்சியாளர்களால் தான் இன்றும் தமிழ்நாட்டுக் கிராமங்களில் ரெட்டிகளும், நாயுடுக்களும், நாயக்கர்களும், ஏனைய தெலுங்கர்களும், தமிழர்களுடேன் ஒப்பிடும் போது கூடியளவு நிலச் சொந்தக்காரர்களாக உள்ளனர். ஆயிரம் வருடம் பின்னோக்கிப் போய் ராஜ ராஜ சோழனைத் தாக்கும், தமிழ்நாட்டில் வாழும் தமிழரல்லாத திராவிட எச்சங்கள் தமது முன்னோர்களாகிய விஜயநகர் ஆட்சியாளர்களை குற்றம் கூறாமல், ராஜ ராஜ சோழனை வசைபாடுவதன் சூக்குமத்தை தமிழர்கள் அறியார் என்று அவர்கள் நினைத்துக் கொள்கிறார்கள்.//

  112. வியாசன் ,

    “மனு நீதியை ஆட்சி முறை ஆக்கிய ராச ராசனை

    ஆதரிக்கும் வியாசன் , மனு நீதியை படைத்த ஆரியர்களீன்

    எச்சமாகத் தானிருப்பார் என்று நான் உறுதியாக நம்புகிறேன்”

    viyasan://ராஜ ராஜ சோழனைத் தாக்கும், தமிழ்நாட்டில் வாழும் தமிழரல்லாத திராவிட எச்சங்கள்

    viyasan://செந்தில்குமரன் தமிழனல்ல, வடுகர் அல்லது மலையாளி திராவிடர் எச்சமாகத் தானிருப்பார் என்று நான் உறுதியாக நம்புகிறேன்

  113. காமராஜர் மீது வியாசன் வைக்கும் குற்றச்சாட்டுக்கள் :
    ——————————————————

    [1]அவரது ஆட்சியில், அவரது மேற்பார்வையில் தான் தமிழகம் சுருங்கியது. எமது முன்னோர்கள் ஆயிரமாயிரமாண்டுகள் காத்த மண்ணை அந்நியர்களுக்கு எந்த ஆரவாரமும் இல்லாமல், இந்திய மாயையில் விட்டுக் கொடுத்தவர் காமராஜர்.

    [2]காமராஜர் மட்டும் இந்திய தேசிய மாயையிலிருந்து விடுபட்டு, தன்னை தமிழனாக நினைத்திருந்தால் தமிழ்நாடு இன்று தண்ணியில்லாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டிருக்காது என்று சிலர் கூறுவதை நான் கேட்டிருக்கிறேன்.

    [3]இலங்கையில் தமிழ்மண்ணைக் காக்க தமதின்னுயிரை ஈந்தார்களே அவர்கள் பச்சைத் தமிழர்கள், கங்கை முதல் கடாரம் வரை சென்று தமிழர்களின் புலிக்கொடி நாட்டினானே ராஜ ராஜ சோழன் அவன் பச்சைத் தமிழன், ஆனால் என்னைப் பொறுத்த வரையில் காமராஜர் பச்சை இந்தியனே தவிர பச்சைத் தமிழன் அல்ல.

  114. காமராஜர் மீது வியாசன் வைக்கும் குற்றச்சாட்டுக்கள் & என் பதில்கள்: 1
    —————————————————————-

    ராஜபட்ச,சரத் பொன் சேகா வுக்கு இணையானவர்கள் தான் இராஜராஜ சோழன்,இராஜேந்திரன்

    இராஜராஜ சோழன்:

    [1]தார்வார் மாவட்டம் ஹொட்டூரில் கி.பி 1007ம் ஆண்டைச் சேர்ந்த(929) சத்தியாசிரயனின் கல்வெட்டு ஒன்று, சோழ குலத்திற்கு அணியாக விளங்கியவனும் இராஜராஜ நித்தியாவிநோதனின் மகனுமாகிய, நூர்மடிச் சோழ இராஜேந்திர வித்தியாதரன் என்பவன், ஒன்பது லட்சம் வீரர்கள் அடங்கிய பெரும்படையுடன் பீஜப்பூர் மாவட்டத்திலுள்ள தோனூர் வரையில் வந்து, பெரும்போர் புரிந்து நாட்டைச் சூறையாடிப் பாழ்படுத்தியும் நகரங்களைக் கொளுத்தியும், இளங்குழவிகள், அந்தணர் என்றும் பாராமல் அவர்களைக் கொன்றும், கன்னியரைக் கைப்பற்றி மனைவியராக்கியும், அந்தச் சாதியை அழித்தும் அளவற்ற பொருள்களைக் கவர்ந்து கொண்டு தன்நாட்டுக்குத் திரும்பிச் சென்றான் என்று இக்கல்வெட்டு கூறுகிறது. இதன் பிறகு, தமிழரைக் கொன்று (திருள-மாரி) சத்தியாசிரயன் சோழரை விரட்டியடித்து, அவரிடமிருந்து தன் வஸ்து-வாகனத்தை மீட்டு தென் பகுதியையும் கைப்பற்றினான் என்று இதே கல்வெட்டு மேலும் கூறுகிறது.

    இராஜேந்திரன்

    [2]922ம் ஆண்டிற்குப் பிறகு சில ஆண்டுகளில் இரண்டாம் தைலப்பன் இறந்தான். அதன் பின்னர் அவனுடைய மகன் சத்தியாசிரயன் சாளுக்கிய மன்னனானான். சத்தியாசிரயனை எதிர்த்துப் போர் புரிந்து வெற்றியடைந்து, அவனிடமிருந்த செல்வத்தில் ஒரு பங்கைத் தஞ்சை பெரிய கோயிலுக்கு என்று இராஜராஜன் ஆட்சியின் பிற்பாதிக் கல்வெட்டுகளில் காணப்படுகிறது.

    ஆனால் காமராஜர் ஆட்சியில்…….

    ராசாசி கொண்டு வந்திருந்த ‘குலக்கல்வித் திட்டத்’தினைக் கைவிட்டார். அவரது ஆட்சிக் காலத்திற்குள் தமிழகத்தில் பள்ளிகளின் எண்ணிக்கை 27000 ஆனது. அவரது மதிய உணவுத் திட்டம் இன்று உலக அளவில் பாராட்டப்படும் திட்டமாகும். அதன் பலனாக பள்ளிகளில் படிப்போரின் எண்ணிக்கை 37 சதவீதமாக உயர்ந்தது. (வெள்ளையர் காலத்தில் இது 7 சதவீதமாக இருந்தது). பள்ளிகளில் வேலைநாட்கள் 180-லிருந்து 200 ஆக உயர்த்தப்பட்டது. சென்னை இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம் (IIT) தொடங்கப் பட்டது.

    //இலங்கையில் தமிழ்மண்ணைக் காக்க தமதின்னுயிரை ஈந்தார்களே அவர்கள் பச்சைத் தமிழர்கள், கங்கை முதல் கடாரம் வரை சென்று தமிழர்களின் புலிக்கொடி நாட்டினானே ராஜ ராஜ சோழன் அவன் பச்சைத் தமிழன், ஆனால் என்னைப் பொறுத்த வரையில் காமராஜர் பச்சை இந்தியனே தவிர பச்சைத் தமிழன் அல்ல.//

  115. காமராஜர் மீது வியாசன் வைக்கும் குற்றச்சாட்டுக்கள் & என் பதில்கள்: 2
    ———————————————————————————————————-

    அவரது ஆட்சியின் கீழ் 9 முக்கிய நீர்பாசனதிட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை கீழ் பவானித்திட்டம், மேட்டூர் கால்வாய்த்திட்டம், காவேரி டெல்டா வடிகால் அபிவிருத்தி திட்டம், மணிமுத்தாறு, அமராவதி, வைகை, சாத்தனூர், கிருசுணகிரி, ஆரணியாறு ஆகியவையாகும்.

    //காமராஜர் மட்டும் இந்திய தேசிய மாயையிலிருந்து விடுபட்டு, தன்னை தமிழனாக நினைத்திருந்தால் தமிழ்நாடு இன்று தண்ணியில்லாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டிருக்காது என்று சிலர் கூறுவதை நான் கேட்டிருக்கிறேன்.//

  116. காமராஜர் மீது வியாசன் வைக்கும் குற்றச்சாட்டுக்கள் & என் பதில்கள்: 3
    ——————————————————————————————————————————————-

    குலக்கல்வித் திட்டத்தால் ராசாசியின் செல்வாக்கு வேகமாகக் கீழிறங்கிக் கொண்டிருக்க, மொழிவாரி மாநிலங்கள் அமைப்பின் காரணமாக (அக்டோபர் 1, 1953-ல் ஆந்திரா பிறந்து விட்டது) தமிழ்நாடும் சுருங்கிப் போக, காங்கிரஸின் உள்ளேயே ராசாசிக்குப் பெரும் எதிர்ப்பு கிளம்பி விட்டது. நிலைமை அறிந்த கட்சி மேலிடம், தமிழக அளவில் தீர்மானித்துக் கொள்ள அனுமதி வழங்கி விட்டது. ராசாசி தான் அவமானப்படுவதைத் தவிர்க்க, ‘எனக்கு எதிராகக் கட்சியில் யாரும் தீர்மானம் கொண்டு வர வேண்டாம. நானே விலகிக் கொள்கிறேன்’ என்று அறிவித்து விட்டாலும் தன் இடத்திற்குத் தன்னுடைய முக்கிய ஆதரவாளரான சி.சுப்பிரமணியத்தை முன்னிறுத்த பின் வேலை செய்தார். அவருடைய இன்னொரு முக்கிய ஆதரவாளரான எம். பக்தவத்சலம் அதனை முன்மொழிந்தார்.
    ஆனால் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் காமராசர் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.!!!!

    //அவரது ஆட்சியில், அவரது மேற்பார்வையில் தான் தமிழகம் சுருங்கியது. எமது முன்னோர்கள் ஆயிரமாயிரமாண்டுகள் காத்த மண்ணை அந்நியர்களுக்கு எந்த ஆரவாரமும் இல்லாமல், இந்திய மாயையில் விட்டுக் கொடுத்தவர் காமராஜர்.//

  117. [1]வரலாற்றில் ரத்த வெறி பிடித்து எம் ஈழ மக்களை கொன்ற ராஜபட்சே, சரத் பொன் மாதிரி இராஜராஜ சோழனும்,இராஜேந்திர சோழனும் இந்திய முழுவதும் கொலை வெறியேடு அலைந்து மக்களை போர் என்ற பெயரில் கொன்று இருக்காங்க. இவர்கள் தான் ஹீரோக்களா ?

    [2]”History repeats itself ” எனற உண்மைக்கு ஏற்ப இருதியில் கி.பி 1279 ஆம் ஆண்டில் சோழ வம்சமே பண்டிய மன்னன் சுந்தர பண்டியனிடம் மண்டி இட்டு பின்பு ஒன்றும் இல்லாமல் நாசமா போச்சு.

    [3]”சிவன் சொத்து குல நாசம்” என்பது எப்படி உண்மையே அது போல மக்களை கொன்று ,போர்களில் மக்கள் சொத்தை கொள்ளை அடிக்கும் எந்த வம்சமும் சோழ வம்சம் போல நாசமா தான் போகும்.

    [4] கங்கையில் நீர் எடுக்க போனான் இராஜேந்திர சோழன் ,போற வழியில் உள்ள நாடுகளை எல்லாம் வேட்டையாடி மக்களை கொன்று கூவித்த ,இராஜேந்திர சோழனும் அவன் சோழ வம்சமும் நாசமா தான் போனாங்க

    [5]இது மாதிரியான மிருக ஜென்மங்களை ஆதரிக்கும் ஜென்மங்கள் கொலை வெறி பிடித்த மிருக ஜென்மங்களீன் எச்சமாகத்தான் இருப்பர்

  118. செந்தில்…………

    பொதுவா போலி கம்யுனிஸ்டுகளை பற்றி கேள்வி பட்டு இருக்கிறேன்.. அனால் முதன் முறையாக சிரிப்பு கம்யுனிஸ்டை இப்போதுதான் உங்கள் மூலமாக பார்கிறேன் அவ்ளோ காமெடி பண்றீங்க போங்க. நீங்கள் இவ்வளவு மோசமாக இறங்குவீர்கள் என்று நான் நினைக்கவில்லை… இத்தனை நாட்களாக உங்கள் மொக்கை அனுமானங்களை வைத்து கொண்டு அமரர்.கல்கியின் மீது அவதூறை வாரி இறைத்து கொண்டு இருந்தீர்கள் இப்போது என்மீது சேற்றை வாரி இறைக்க தொடங்கிவிட்டீர்கள்.. ஒருவர் கூறும் விஷயத்தை தன் வசதிக்கு ஏற்றபடி எப்படி வேண்டுமானாலும் திரித்து கூறலாம் என்பதற்கு ஒரு மட்டமான எடுத்துகாட்டு நீங்கள் … நான் கூறியது என்ன…

    தாயுமானவன் ://என்னமோ ராஜ ராஜ சோழன் தான் மனு தர்ம நெறி படி ஆட்சி செய்தது போலவும்.. அவருக்கு முன்பு இருந்த சோழ மன்னர்களின் காலத்தில் பார்பனர்களும், வேளாளர்களும் தாழ்த்தப்பட்ட மக்களிடம் கொள்வனவும், கொடுப்பனவும் வைத்து கொண்டு சகோதரர்கள் போல் சமத்துவமாக வாழ்ந்தது போலவும், அதை என்னமோ தங்கள் நேரில் இருந்து பார்த்தது போலவும் பேசுகிறீர்கள்.. ராஜ ராஜனின் காலம் இன்றோடு 1000 ஆண்டுகள் தான் ஆகிறது.. ஆனால் மனுதர்ம ஆட்சி தமிழ்நாட்டில் கடந்த 1800 ஆண்டுகளாகவே நடைபெற்று வருகிறது.. சோழ ராஜ்யத்தில் மட்டுமல்ல சேர. பாண்டிய, சாளுக்கிய, சாதவாகன, ராஜபுதனம் போன்ற இந்திய தேசம் முழுக்க அப்படி தான் இருந்தது…..//

    இதை நான் எந்த அர்த்தத்தில் கூறினேன் என்று உங்களுக்கு நன்றாகவே தெரியும் .. மனுதர்ம ஆட்சி என்பது ராஜ ராஜன் கொண்டுவந்ததல்ல .. அவனுக்கு முன்பே ராஜ ராஜனின் முன்னோர்களால் கொண்டுவரப்பட்ட ஒன்று தான் இந்த மனுதர்ம நீதி என்று ..

    நீங்கள் கல்கியின் பெயரால் அளந்து விட்ட அனுமான புரட்டுரைகளுக்கு// 1]நீங்கள் கூறும் இவ் உண்மை , உங்களுக்கும் எனக்கும் புரியும் போது , கல்கி அவர்களுக்கும் புரிந்து இருக்குமே !

    [2]பின்பு எப்படி ராஜ ராஜ சோழன் ஆட்சி நிர்வாகம்[மனு தர்ம நெறி] பற்றி பொய்யாக புகழ்ந்து எழுதுவார் ?// நான் கூறிய தக்க பதில் அது …

    பொன்னியின் செல்வனில் எந்த சோழ மன்னர்களை பற்றி கல்கி புதினம் புனைந்துள்ளாரோ அவர்களின் ஆட்சி காலத்திலேயே மனுதர்ம நியதி படி தான் நீதி நிர்வாகம் நடந்த வந்தது… உங்களால் கூறப்படும் மனு தர்ம கொடுங்கோன்மை என்னும் ஆட்சி தான் பின்பற்ற பட்டு வந்தது…. இன்னும் சொல்ல போனால் சங்க இலக்கியத்தில் பெயரில் தமிழை தாங்கி வரும் சோழ மன்னர்கள் காலத்திலேயே இந்த முறையில் தான் ஆட்சி நடந்தது.. இதை பற்றி கல்கி தன் நாவலில் பேசாததற்கு காரணம் அவர் வரலாற்றை வரலாறின் கண் கொண்டு மட்டுமே பார்த்தார்.. அதற்க்கு காரணம் ஈ.வே.ரா என்னும் கொடு நோய் அவரை பீடிக்கவில்லை… இதை மனதில் வைத்து தான் நான் அப்படி கூறினேன்… ஆனால் ஒரு வார்த்தை கிடைத்தால் அதை எப்படி எல்லாம் சிண்டு முடியலாம் என்பதை மட்டும் தான் இது நாள் வரை நான் உங்களிடம் கண்டு வந்தது …..

    //பச்சை தமிழர் காமராசர் அவ்ர்களின் ஆட்சி சிறப்பு வரலற்று ஆதாரங்களும் ,//

    அட அப்படிங்களாங்க.. அப்படி என்ன அவர் சிறப்பா ஆட்சி பண்ணிட்டாரு.. எங்கள் தமிழ்நாட்டுக்கு சொந்தமான நில பகுதிகளை மலயாளிகளிடமும் , கன்னடதானிடமும் , தெலுங்கனுக்கும் தாரைவார்த்தார்…. தேவிகுளம் , பீர்மேடு, மைசூர், கோலார், நெல்லூர் , குண்ட்டூர் போன்ற தமிழகத்திற்கு சொந்தமான நில பகுதிகளை இந்திய தேசியம் பேசி கொண்டு தாரை வார்த்தவர் தான் இந்த காமராசர்.. சட்டசபையில் தமிழ்நாட்டிற்க்கு சொந்தமான நிலங்களை விட்டுகொடுத்தது தவறு அவற்றை மீட்க வேண்டும் என்று அனைவரும் வலியுறுத்தி கேட்டதற்கு ” விடுங்க யாரு கிட்ட இருந்தா என்ன எல்லாம் இந்தியாகுள்ள தானே இருக்கு அங்க போகணும்னா என்ன பாஸ்போர்ட் விசாவா எடுக்கணும்” என்று கேட்ட ஒரே அதிபுத்திசாலி இந்த காமராஜ்தான் .. தமிழருக்கு சொந்தமான இந்த நிலங்களை விட்டுக்கொடுத்தால் அதனால் எதிர்காலத்தில் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்கிற ஒரு துல்லிய தொலை நோக்கு பார்வை இல்லாத ஒரு அறிவிலி தான் இந்த காமராஜ். அதன் பயனை தான் இன்று தமிழர்கள் அனுபவிக்கிறார்கள் .. காவேரி பிரச்சனையாகவும் , பெரியார் அணை பிரச்சனையாகவும் இன்று தமிழர்கள் தலையில் வந்து விடிந்து இருக்கிறது.. அதுபோக கேரளா எல்லையோரமாக காலம் காலமாக குடியிருந்த தமிழர்களை அவர்களின் இடத்தை விட்டே விரட்டி கொண்டிருக்கிறது கேரள அரசு..

    இந்தி மொழியை காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு தமிழர்கள் மீது திணித்த போது கை கட்டி நின்று வேடிக்கை பார்த்தார். 1965ஆம் ஆண்டு கட்டாய இந்தி திணிப்பிற்கு எதிராக போராடியவர்களை போலீசையும்,ராணுவத்தையும் கொண்டு நசுக்கி ஒடுக்க அத்தனை முயற்சிகளையும் மேற்கொண்டது காமராஜர் தலைமையிலான அரசு.. தங்களின் மொழிஉரிமைக்காக போராடிய மாணவர்களின் மீது துப்பாக்கி சூடும் தடியடியும் நடத்தி பல மாணவர்களின் உயிரை பறித்தது அன்றைய காங்கிரஸ் அரசு.. இதையெல்லாம் மவுனமாக நின்று வேடிக்கை பார்த்தவர் தான் இந்த காமராஜர் என்கிற பச்சை தமிழர்.. இந்தி திணிப்பிற்கு எதிராக போராடி கொண்டு இருந்த மாணவர்களை நோக்கி ” இந்திய கத்துகிட்டா வடமாநிலங்களுக்கு போய் டி கடை வச்சாவது பொழசிக்கலாம்யா” என்று ஏகடியம் பேசியவர் தான் காமராசர்… இந்த வார்த்தைகள் தமிழ்நாட்டு மாணவர்களின் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது..

    இதுபோதாதென்று…. அன்றிருந்த உணவு பஞ்சத்தில் மக்கள் நியாயவிலை கடையில் விடியற்காலை முதற்கொண்டு மணிக்கணக்கில் அரிசியை வாங்க பெரும் வரிசையில் வெயிலில் கால் கடுக்க காத்துகொண்டு நிற்பார்கள். குறிப்பிட்ட அளவு மக்களுக்கு அரிசி கொடுத்தவுடன் No stock போர்டை மாட்டிவிடுவான் .. மக்கள் ஏமாந்து திரும்பிவிடுவது வாடிக்கை ஆகி கொண்டே போனது.. இதை பற்றி செய்தி சேகரிக்க சென்ற நிருபர்கள் கேட்டதற்கு ” சினிமா பார்க்க போகும்போது நீண்ட வரிசையில் டிக்கெட்டுக்காக நிற்பதில்லையா டிக்கெட் கிடைகலேனா இன்னொரு நாள் பாக்றதுஇல்லையா அது மாதிரி நினைச்சிகிட்டு போகவேண்டி தான்”. என்று மிக அலட்சியமாக கூறிய பதில் தான் காமராஜரின் மீதான மக்களின் எரிச்சலை உச்சத்திற்கு கொண்டு சென்றது … அன்று மக்கள் எடுத்த முடிவு அடுத்து வந்த பொது தேர்தலில் காமராஜரின் ஆட்சிக்கு பாடை கட்டினார்கள் … இன்று வரை எழுந்திருக்க முடியவில்லை… விருது நகரில் படுத்து கொண்டே வெற்றி பெறுவேன் என்று கூறினார்… மக்கள் அவரை படுக்கவே வைத்து விட்டார்கள்..

    செந்தில்… எந்த ராஜாஜியை தரம் தாழ்த்தி கூறினீர்களோ அவரின் ஆட்சி காலத்தில் தான் அரசு பணியில் அதி திராவிடர்களுக்கு முதன் முறையாக 8 விழுக்காடு இட ஒதுக்கீட்டை அமலுக்கு கொண்டு வந்தார்.. அவர்கள், அரசு பணிகளில் சேர வயது வாரம்பை 27ஆக உயர்த்தினார் …

    ராஜாஜியின் ஆட்சியின் போது தான் தனி ஆந்திரா மாநிலம் கோரி ஆந்திரர்கள் போராட்டம் செய்தனர்.. போட்டி ஸ்ரீ ராமுலு சென்னையை அந்திரத்துடன் இணைக்க வேண்டும் என்று 58 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிரை விட்டார்.. ஆகையால் சென்னை மாகாணத்தை பிரிக்க மதிய அரசு ஏற்றுகொண்டது.. ஆனால் பொட்டி ஸ்ரீ ராமுலு உண்ணா விரதம் இருந்து உயிர் விட்டதை எல்லாம் ஆச்சாரியார் ஒரு பொருட்டாகவே எடுத்து கொள்ளவில்லை .. அவர் என்ன காமராஜரா வெட்டி இந்திய தேசியம் பேசி தமிழ் குலத்தை அழிக்க .. சென்னை மாவட்டம் தமிழர்கள் உடைய சொத்து.. அதை எக்காரணம் கொண்டு ஆந்திரர்கள் கொண்டு செல்ல அனுமதிக்க மாட்டேன் என்று ஆணித்தரமாக கூறினார்…

    முதல் அமைச்சர் ராஜாஜி ஆந்திராவில் சுற்று பயணம் செய்தபோது அவருக்கு எதிராக கல்வீச்சு அவரின் கார் கண்ணாடியை உடைப்பது போன்று பல வன்முறை சம்பவங்களை தெலுங்கர்கள் நிகழ்த்தினார்கள்.. ஒரு கூடத்தில் அவர் முகத்தில் தார் வீச பட்டது.. இத்தனைக்கும் பிறகும் ராஜாஜி அசைந்து கொடுக்கவில்லை.. “குறி தவறாமல் என் மீது தார் வீசிய இளைஞரை பாராட்டுகிறேன் ஆனால். இதன் மூலம் தனி மாநிலம் கிடைத்து விடாது” என்று கூறினார் ராஜாஜி.

    58 நாட்கள் சாப்பிடாமல் இருந்தா பொட்டி ஸ்ரீ.ராமுலு டிசம்பர் 15 அன்று மரணம் அடைந்தார்.. இதை தொடர்ந்து ஆந்திர பகுதிகளில் பயங்கர கலவரம் மூண்டது … இதன் காரணமாக தனி ஆந்திரா மாநிலம் அமைக்க படும் என்று பிரதமர் நேரு அறிவித்தார்..

    சென்னை மாகாணத்தை இரண்டாக பிரிக்கும் பணிகள் தொடங்கின.. ஆந்திரர்கள் “மதராஸ் மனதே” அதாவது சென்னை மாநிலம் எங்களுக்கே என்று கோரினர்.. தர முடியாது என்று ராஜாஜி திட்டவட்டமாக மறுத்தார்.. இதே உங்கள் பச்சை தமிழர் இருந்திருந்தால் இந்நேரம் சென்னை ஆந்திரர்கள் வசமாகி இருக்கும்.. அப்புறம் “எல்லாம் இந்தியால தானையா இருக்கு சென்னைக்கு போக நீ பாஸ்போர்ட் வீசாவா எடுக்கணும்” என்று நையாண்டி செய்திருப்பார் …

    மேலும் சென்னை நகரத்தை இரண்டாட பிரித்து, ஒரு பகுதியை தங்களுக்கு தர வேண்டும் என்று ஆந்திரர்கள் வற்புறுத்தினார்கள்.. அதற்க்கும் ராஜாஜி இணங்க வில்லை… சென்னை நகரின் விசயத்தில் ஆந்திரர்களின் ஆசை நிராசை ஆகி போனது ..

    செந்தில் …ஆச்சாரியாரின் … ஆட்சி என்னவோ நல்ல முறையில் தான் போய் கொண்டு இருந்தது.. அன்னார் கொண்டு வந்த கல்வி திட்டம் தான் பெரும் சர்ச்சையாக எழுந்தது … திருவான்மியூரில் நடந்த மாநாட்டில் இந்த திட்டத்தை அவர் அறிமுக படுத்தினார் அதன் பெயர் “புதுகல்வி திட்டம்”. திராவிட இயக்கத்தினர் தங்களின் அரசியல் சுயலாபத்திற்காக அதை குலகல்வி திட்டம் என்று கூறினர்…

    “மாணவர்களுக்கு தினமும் அரை வேலை தான் படிப்பு. மீதி அரை நேரம்,எதாவது கைத்தொழில் கற்க வேண்டும்” என்பதே அவரின் கல்வி திட்டம்.

    இரண்டு ஷிப்டுகளில் பள்ளிகுடம் நடத்தி அதன் மூலம் அதிகமானவர்களை சேர்க்கலாம் என்று ராஜாஜி நினைத்தார். ஏனெனில் நாடு அப்போது தான் சுதந்திரம் அடைந்தது புது பள்ளிகூடங்களை திறக்க போதிய நிதி இல்லை அதற்காக புதிதாக கல்வி கூடங்களை திறக்கும் வரை இந்த திட்டம் நீடிக்கட்டும் என்று நினைத்து கூறினார்…

    என்ன தொழில் கற்பது? அரசாங்கமே தொழிலில் கல்விக்கு ஏற்பாடு செய்யுமா என்று எதிர் காட்சியினர் கேட்டனர்..

    தந்தை செய்யும் தொழிலுக்கு மகன் உதவியாக இருந்து அந்த தொழிலை கற்று கொள்ளலாம் என்று ராஜாஜி கூறினார்… இதை கூறியதற்கு உடனே எதிர்கட்ச்யினர் மனு தர்ம சாயத்தினை பூசினார்கள்.. இப்போது இருப்பதை விட அன்று நாட்டில் வறுமை கோட்டிற்கு கீழ் அதிகமாக இருந்தார்கள்.. பிள்ளைகளை படிக்க வைக்க முடியமால் வேலைக்கு அனுப்பி குடும்பத்தை காப்பாற்றும் சூழ்நிலை அன்று அதிகம் அதை தடுக்கும் பொருட்டே ராஜாஜி இந்த திட்டத்தை கொண்டு வந்தார்.. இப்போது இருப்பதை போன்று அப்போதெல்லாம் part time job கிடையாது.. ஆகவே படிக்கவும் வேண்டும் வீட்டுக்கு சம்பாதித்தும் கொடுக்க வேண்டும் என்னும் நல்ல நோக்கத்தில் கொண்டு வந்தார்.. இதன் மூலம் படிப்பு தடை படுவது ஏற்படாது…

    ராஜாஜி கொண்டு வந்த கல்வி திட்டத்திற்கு எதிர்ப்பு வலுத்தது.. ஆனால் அவர் திட்டத்தை கைவிட மறுத்துவிட்டார்.. ராஜாஜியின் மீது நம்பிக்கை இல்ல தீர்மானம் கொண்டுவந்தனர்.. நிலைமைகளை புரிந்து கொண்ட ராஜாஜி.. பதவியா ? கல்வித்திட்டம்மா என்று வந்தது.. தனக்கு சரி என்று தோன்றியதை எப்போதுமே ராஜாஜி மாற்றி கொண்டது கிடையாது.. அவருக்கு சமரசம் செய்து கொள்ளும் Cheap politics எல்லாம் அவருக்கு பிடிகாது.. சரி கல்வி திட்டத்தை இரத்து செய்கிறேன் என்று அவர் ஒத்து போய் இருந்தால் அவர் தான் முதல் அமைச்சராக வெகு காலம் நீடித்து இருந்திருப்பார்..

    24-3-54 அன்று தன்னுடைய பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார் .. முறைப்படி ராஜினாமா கடிதத்தை ஆளுனரை சந்தித்து கொடுத்தார்.. செய்தியாளர்களை அவர் சந்தித்த பொழுது, ஒவ்வொரு மனிதனுக்கும், பதவியை விட அவனது சுய மரியாதை தான் முக்கியமானதாகும் என்று பதிலளித்தார். (என்ன இருந்தாலும் மேன்மக்கள் மேன்மக்களே) பிறப்பினால் அல்ல கொள்கையினால் …

    ஆகவே… செந்தில்.. ராஜாஜியுடனும் ராஜ ராஜனுடனும் காமராஜரை ஒப்பிடுவதென்பது நினைத்து கூட பார்க்க முடியாத ஒன்று.. இனியாவது இந்த அட்டு பிடித்த பொய் புரட்டு பிரச்சாரத்தை நிறுத்தி விட்டு உள்ளதை உள்ள படி சிந்திக்க கற்று கொள்ளுங்கள்..அது தான் உண்மையான பகுத்தறிவு…

    • “மனு நீதி” தவறு என்று தெரிந்தும் அத் தவறையும் சரி என்று கூறி சாதிக்கும் தாயுமானவன் போல புனைந்து எழுத கல்கி ஒன்றும் தாயுமானவன் இல்லை

      தாயுமானவன்://மனுதர்ம ஆட்சி என்பது ராஜ ராஜன் கொண்டுவந்ததல்ல .. அவனுக்கு முன்பே ராஜ ராஜனின் முன்னோர்களால் கொண்டுவரப்பட்ட ஒன்று தான் இந்த மனுதர்ம நீதி என்று ..//

      தாயுமானவன்//பொன்னியின் செல்வனில் எந்த சோழ மன்னர்களை பற்றி கல்கி புதினம் புனைந்துள்ளாரோ அவர்களின் ஆட்சி காலத்திலேயே மனுதர்ம நியதி படி தான் நீதி நிர்வாகம் நடந்த வந்தது… உங்களால் கூறப்படும் மனு தர்ம கொடுங்கோன்மை என்னும் ஆட்சி தான் பின்பற்ற பட்டு வந்தது…. இன்னும் சொல்ல போனால் சங்க இலக்கியத்தில் பெயரில் தமிழை தாங்கி வரும் சோழ மன்னர்கள் காலத்திலேயே இந்த முறையில் தான் ஆட்சி நடந்தது.. இதை பற்றி கல்கி தன் நாவலில் பேசாததற்கு காரணம் அவர் வரலாற்றை வரலாறின் கண் கொண்டு மட்டுமே பார்த்தார்.. //

      • ராஜாஜியின் மனு நீதிபற்று! :

        காமராஜர் முதலமைச்சராக வருவதற்கான முதல் படியாக அமைந்தது ராஜாஜியின் குலக்கல்வித் திட்டம் ஆகும். 1952-ஆம் ஆண்டு தமிழக முதல்வரான ராஜாஜி புதிய கல்வித்திட்டம் ஒன்றை வெளியிட்டார். அதன்படி கிரமப்புறத்தில் தொடக்கக்கல்வி பயிலும் மாணவர்கள் முழுநாள் படிப்பதற்குப் பதில், அரைநாள் படித்துவிட்டு மீதி பாதி நாள் தத்தம் குலத் தொழிலைச் செய்ய வேண்டும். பொதுமக்களுக்கு தங்கள் குலத் தொழிலும், ஓரளவு எழுத்தறிவும் பெறும் வகையிலான இதனைக் குலக் கல்வித் திட்டம் என அழைத்தார். இந்தத்திட்டம் பெரியாரைப் பொங்கி எழச் செய்த்து. குலக்கல்வித்திட்டத்தைக் க்ண்டித்து அறிக்கை எழுதி தனது விடுதலை நாளிதழில் பெரியார் வெளியிட்டார்.

        ராஜாஜி முதலமைச்சராக நீடிப்பதையும், ராஜாஜியின் குலக்கல்வித் திட்டத்தையும் எதிர்த்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. குலக்கல்வித் திட்டத்தை நியாயப்படுத்தும் வகையில் குலக் கல்வி முறையை ஆராய்வதற்கு அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கைகளுக்குப் பின்னரும் புதிய கல்வித் திட்டத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் குறையவில்லை. அதிருப்தி அடைந்த பல காங்கிரஸ்கார்ர்களும், ராஜாஜி எதர்ப்புக் கிளர்ச்சியில் ஈடுபட்டார்கள். ராஜாஜியின் மீது நம்பிகைக் இல்லாத் தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சியினர் முடிவு செய்தனர். பெரும்பான்மையும் கிடைத்தது. நம்பிக்கை இருக்கிறது என்ற தீர்மானத்துக்குக் கையெழுத்து வாங்க ராஜாஜி கோஷ்டியினர் முயன்றனர். இதற்கு ஆதரவு கிடைக்காத்தால் நெருக்கடி அதிகமாகியது.

    • ராஜாஜியின் தமிழ்ப்பற்று! :

      தனது மகனுக்கு ராஜாஜி ஆங்கிலத்தில்தான் கடிதம் எழுதுகிறார் என்று தெரிந்த மகாத்மா காந்தி மிகுந்த மனவருத்ததுடன் தமிழன்னையின் மிகச்சிறந்த புதல்வர்களே அவளை கைவிடுவார்களேயானால் பெருவாரியான தமிழ் மக்கள் என்ன செய்வது, பொது ஜனங்களிடையே ஊழியம் புரிய வேண்டியவர்கள் எதிர்காலம் என்ன ஆகும், இனி உங்கள் மகனுடன் நீங்கள் தமிழில்தான் கடித தொடர்பு கொள்வேன் என எனக்கு சத்தியம் செய்து தரவும், உங்களை நினைத்து என்னால் தூங்க முடியவில்லை, இது சம்பந்தமாக எனக்கு விளக்கம் தரவும் என ராஜாஜிக்கு கண்டனக் கடிதம் எழுதியிருக்கிறார் காந்தி.

      ராஜாஜி வாழ்க்கை வரலாறு’
      ஆசிரியர்: ராஜ்மோகன் காந்தி
      தமிழில்: கல்கி ராஜேந்திரன்

    • காமராசருக்கு அண்ணாவின் பாராட்டு:

      1957-ல் அப்போதைய திராவிட முன்னேற்றக் கழகத்தலைவர் திரு. அண்ணாதுரை,காமராசர் அவர்களுடைய ஆட்சியைப் பற்றிக் கூறும்போது,

      “வேறு எந்த அமைச்சரவையையும் விட, இந்த அமைச்சரவயிடத்தில் நாங்களும் நாடும் மிக அதிகமாக எதிர்பார்க்கிறோம் என்பதை அமைச்சரவையும் , அமைச்சரவை நடத்தும் கட்சியும் பெருமைக்குரியதாக எடுத்துக்கொள்ள வேண்டும். நாட்டை ஆளுகிற இன்றைய அமைச்சரவை உண்மையிலேயே நாட்டு மக்களுக்கு மிக அதிகமாச் செய்யக் கடமைப்பட்டிருக்கிறார்கள் என்பது மாத்திரம் அல்ல. அதற்கேற்ற திறமை அவர்களிடத்திலே இருக்கிறது என்று நாட்டு மக்கள் நிச்சயமாக நம்புகிறோம். உண்மையிலேயே இன்றைய தினம் இருக்கிற அரசியல் சூழ்நிலையில் இந்த அமைச்சரவையை விட வேறு ஒரு அமைச்சரவை இதே கட்சியாலே நிறுவப்பட்டாலும் கூட, அந்த அமைச்சரவையினால் அதிகமான அளவிறகு நனமை கிடைக்கும் என்று நாங்கள் யாரும் எண்ணி ஏமாந்து கொண்டிருக்கவில்லை.

      இத்தகைய பதிவுகளை ஏற்படுத்திய சிறந்தொரு ஆட்சியை அளித்ததற்கு காமராஜரின் தன்னலமற ஈடுபாடும் தான் காரணம். எதிர்ப்புகள் இல்லாமல் 1954 ஏப்ரல் 13-ஆம் தேதி தமிழ்நாடு முதல் அமைச்சராகப்பொறுப்பேற்ற காமராஜர் ஒன்பது ஆண்டுகளாலம் அப்பதவியிலிருந்து, பதவிக்கு பெருமை சேர்த்தார்.

      அவரின் ஆட்சிக் காலம்தான் தமிழகத்தின் வளர்ச்சிக்கு வித்திட்ட பொற்காலமாகும்.

    • லெனின் வழியில் காமராஜர்
      ——————————-

      கல்வியின் தேவையை உணர்ந்திருந்த லெனில், ரஷ்ய புரட்சிக்கு பின்னர் அமைந்த ஆட்சியில் எல்லாவற்றிற்கும் மேலான முக்கியத்துவத்தை மக்களின் கல்விக்கு அளித்தார். கலாச்சாரப் புரட்சியின் வெற்றி உறுதி பெற வேண்டுமென்றால், கல்லாமையைப் போக்குவது இன்றியமையாத்து என லெனில் உறுதியாக கருதினார். 1918 – ம் ஆண்டு ஆகஸ்ட் 28 -ம் தேதி நடைபெற்ற கல்வியைப் பற்றிய அகில-ருஷ்ய காங்கிரசில் லெனின் பின்வருமாறு உரையாற்றினார்.

      “உழைக்கும் மக்கள் அறிவத்தாகம் கொண்டு இருக்கிறார்கள். ஏனெனில் அவர்கள் வெற்றிபெற அதுதேவைப்படுகிறது. உழைக்கும் மக்களில் பத்தில் ஒன்பது பேர், அறிவுதான் அவர்களுடைய விடுதலைப் போராட்டத்தின் ஆயுதம் என்பதையும், அவர்களுடைய தோல்விகள் என்பதையும், இப்பொழுது உண்மையிலேயே கல்வி ஒவ்வொருவருக்கும் இப்பொழுது உண்மையிலேயே கல்வி ஒவ்வொருவருக்கும் எளிதில் கிடைக்கும்படி செய்வது நம் கடமை என்பதையும் உணர்ந்து விட்டார்கள். நம்முடைய இலட்சியத்திற்கு உத்தரவாதம் கிட்டிவிட்டது. ஏனெனில் மக்கள் திரள் தானே புதிய சோசலிச ருஷ்யாவைக் கட்டுவதற்கு ஆயத்தமாகிவிட்டது. அவர்களுடைய அனுபவம், அவர்களுடைய தோல்விகள், தவறுகள் ஆகியவற்றிலிருந்து அவர்கள் படிப்பினை பெறுகிறார்கள். மேலும் அவர்களுடைய போராட்டத்தின் வெற்றிகரமான முடிவிற்கு கல்வி எவ்வளவு இன்றியமையாத்து என்பதையும் அவர்கள் பார்க்கிறார்கள்” என்றார்.

      அதைப்போலவே, கூட்டுறவுத்துறைக்கு லெனில் அதிக முக்கியத்துவம் அளித்ததைப் பற்றி ‘கூட்டுறவு குறித்து’ எனும் நூலில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

      “சோசலிசத்தைநிர்மாணிக்கின்ற வடிவமாக்க் கூட்டுறவு முறையைப் பயன்படுத்துவது தொழிலாளி வர்க்கத்துக்கும் உழைக்கும் விவசாயி வர்க்கத்துக்கும் பொருளாதார ரீதியிலும் லாபகரமானது என்பதை லெனின் சிறப்பாக நிரூபித்தார்.”

      இத்தகைய லெனின் கருத்துக்கள், ரஷ்ய புரட்சிக்கு பின்னர் மேற்கொள்ளப்ட்ட புதிய ஆட்சி அனுபவங்களை எல்லாம் படித்து அறிந்து கொள்ள வேலூர் மற்றம் அமராவதி சிறைச்சாலைகளில் இருந்த நேரத்தை காரமராஜர் பயன்படுத்திக் கொண்டார்.

      எனவேதான்,புதிய எதிர்பார்ப்புக்களை மக்கள் புரிந்து கொள்ளவும், அவர்களே திட்டமிட்டு செயல்படுத்தவும் மக்களுக்காகன அடித்தளம் அமைக்க வேண்டியதை உணர்ந்திருந்தார் காமராஜர்.

      லெனின் பார்வையிலும் ஆட்சியில்மு,கல்வியும் கூட்டுறவம் அதிக முக்கியத்துவம் பெற்றது. காமராஜர் ஆட்சியிலும் கல்வியும் கூட்டுறவும் முதன்படுத்தப்பட்டது. இதற்கு இணையாக உள்ளாட்சி அமைப்புக்களையும் முதன்மைப்படுத்துவது அவசியம் என்பதை காமராஜர் உணர்ந்திருந்தார்.

      இந்த மூன்று துறைகளிலும் காமராஜர் ஆட்சி காட்டிய முக்கியத்துவத்தை விட, இந்த மூன்று துறைகளையம் தமிழ்நாட்டிற்கு ஏற்ற முறையில் மாற்றி அமைத்தது தான் எல்லாவற்றிலும் சிறப்பானது ஆகும். வளம் கொழிக்கும் தமிழகம் அமைய வகுத்த அந்தத் திட்டங்கள் பற்றிய புதிய பார்வை காமராஜர் ஆட்சியின் சிறப்பை வெளிப்படுத்தும்.

    • [This could be duplicate]
      Mr. தாயுமானவன்

      // “மாணவர்களுக்கு தினமும் அரை வேலை தான் படிப்பு. மீதி அரை நேரம்,எதாவது கைத்தொழில் கற்க வேண்டும்”//

      Does a child have to learn a job at 5 years itself? Don’t you think it is too early?

      // தந்தை செய்யும் தொழிலுக்கு மகன் உதவியாக இருந்து அந்த தொழிலை கற்று கொள்ளலாம்//

      If father is a doctor, can a child of 5 years, help his father? If father is a driver, can a child of 5, help his father? Consider also other jobs like, teacher, nurse, miner, fitter, founder, smith, etc.

      // பிள்ளைகளை படிக்க வைக்க முடியமால் வேலைக்கு அனுப்பி குடும்பத்தை காப்பாற்றும் சூழ்நிலை அன்று அதிகம்//

      Can a 5 year old earn and support its family? Is this how a Country needs to tackle its poverty? What about those families which can support the education of its children? Will they have full time school?

  119. வியாசன்,

    உங்களின் கீழ் கண்ட கருத்துக்கு தான் நான் இது வரை எதீர் வினை ஆற்றிக்கொண்டு உள்ளேன்.

    “திப்பு சுல்தானையும், ராஜ ராஜ சோழனையும் ஒப்பிடுவது சாணிச்சட்டியையும், சருவச்சட்டியையும் ஒப்பிடுவது போன்றது.”viyasan feedback: 50.1.2.2.1

    வியாசன் ,மனு தர்ம ராஜராஜனை நீங்கள் புகழ்வது போல மனு தர்ம விஜயநகர் ஆட்சியாளர்களையும் நீங்கள் புகழ்ந்து பேசினால் அப்போது வெடிக்கும் எம் சர வெடி !

    //ஆயிரம் வருடம் பின்னோக்கிப் போய் ராஜ ராஜ சோழனைத் தாக்கும், தமிழ்நாட்டில் வாழும் தமிழரல்லாத திராவிட எச்சங்கள் தமது முன்னோர்களாகிய விஜயநகர் ஆட்சியாளர்களை குற்றம் கூறாமல், ராஜ ராஜ சோழனை வசைபாடுவதன் சூக்குமத்தை தமிழர்கள் அறியார் என்று அவர்கள் நினைத்துக் கொள்கிறார்கள்.//

    • வியாசன், ஆமாம் ராஜ ராஜ சோழன் சாணிச்சட்டிதான் என ஒத்துகொள்ளுங்கள். நான் என் விமர்சனத்தை நிறுத்திக் கொள்கிறேன்

    • இந்த வாய்ப்பந்தலுக்கு ஒன்றும் குறைச்சலில்லை. நீங்கள் சரவெடி வெடித்து ஒன்றும் ஆகப் போவதில்லை என்பதை தமிழர்களின் தில்லைக் கோயிலுக்குப் பார்ப்பனர்கள் ஆட்டையைப் போட்ட போதே நாங்கள் பார்த்து விட்டோம். அதனால் உங்களைப் போன்றவரக்ளின் சரவெடி எல்லாம் ராஜ ராஜ சோழனின் புகழின் முன்னால் புஸ்வாணமாகி விடும். 🙂

      • விழ விழ எழுவோம்! என்ற உங்கள் கருத்து பொய்யா வியாசன் !

        //தமிழர்களின் தில்லைக் கோயிலுக்குப் பார்ப்பனர்கள் ஆட்டையைப் போட்ட போதே நாங்கள் பார்த்து விட்டோம்//

    • “சிவன் சொத்து குல நாசம்” என்பது உண்மை தான் ,

      அதே போல சிதம்பரம் சிவன் கோவில் மக்கள் சொத்தை கொள்ளை அடிக்கும்

      தீச்சதன் குடும்பங்களும் நாசமா,நாறித் தான் போகும்

  120. Mr. Ambi,

    //தச்சர்கள், உலோக கொல்லர்கள், ***
    ***எல்லா குடிமக்களுக்கும் அந்தந்த குடிகளின் அறிஞர்களால் அனைவருக்கும் கிட்டியது..//

    We are aware of this. My questions are:

    Why the government funded schools welcomed only the Paarpanars and taught only the Paarpanars’ trade? Why other trades had to manage with their own funds and in their own families?

    Though I know the answer and have revealed it here, I want to see your view on it.

  121. சிரிப்பு கம்யூனிஸ்ட் செந்தில்…

    //1]வரலாற்றில் ரத்த வெறி பிடித்து எம் ஈழ மக்களை கொன்ற ராஜபட்சே, சரத் பொன் மாதிரி இராஜராஜ சோழனும்,இராஜேந்திர சோழனும் இந்திய முழுவதும் கொலை வெறியேடு அலைந்து மக்களை போர் என்ற பெயரில் கொன்று இருக்காங்க. இவர்கள் தான் ஹீரோக்களா ?//

    அட அறிவிலியே …..

    சோழ அரசர்களும், ராஜபட்சே பொன்சேகாவும் ஒன்றா….இந்தியா,பாகிஸ்தான், ரஷ்யா,சீனா,இஸ்ரேல், கியூபா,மலேசியா,ஜப்பான், அமெரிக்கா, சவுதிஅரேபியா என்கிற 10 நாடுகளை துணைக்கு அழைத்துக்கொண்டு ஒரு சிறுபான்மை இனத்தை கருவருத்ததும் … ஒரு வீரம் செறிந்த இயக்கத்தை அழித்ததும், தன்னந்தனியாக சோழ படைகள் மட்டுமே எந்த துணையுமின்றி தான் சென்ற இந்திய தேசம் வழி நெடுக இந்தியாவை தாண்டி ஈழம், சாவகம், சுமத்ரா, கடாரம் வரை சென்று களமாடி தன செல்வாக்கை நிறுவிய வரலாறு உங்களுக்கு ஒன்று போல் தெரிந்தால் பிழை சோழர்களுடையது அல்ல .. உங்களுடைய மழுங்கி போன மார்கிச்ய தலித்திய பார்வையின் மீது தான்..

    //[2]“History repeats itself ” எனற உண்மைக்கு ஏற்ப இருதியில் கி.பி 1279 ஆம் ஆண்டில் சோழ வம்சமே பண்டிய மன்னன் சுந்தர பண்டியனிடம் மண்டி இட்டு பின்பு ஒன்றும் இல்லாமல் நாசமா போச்சு.

    [3]“சிவன் சொத்து குல நாசம்” என்பது எப்படி உண்மையே அது போல மக்களை கொன்று ,போர்களில் மக்கள் சொத்தை கொள்ளை அடிக்கும் எந்த வம்சமும் சோழ வம்சம் போல நாசமா தான் போகும்.

    [4] கங்கையில் நீர் எடுக்க போனான் இராஜேந்திர சோழன் ,போற வழியில் உள்ள நாடுகளை எல்லாம் வேட்டையாடி மக்களை கொன்று கூவித்த ,இராஜேந்திர சோழனும் அவன் சோழ வம்சமும் நாசமா தான் போனாங்க//

    கொஞ்சம் கூட லாஜிக்கே இல்லாம இப்படி மொக்க தட்றீங்க …. தோன்றினவெல்லாம் என்றாவது ஒரு காலத்தில் அழியும் என்பது தான் இயற்கை விதி அப்படி இருக்க அது சோழ வம்சத்திற்கு மட்டும் எப்படி பொருந்தாமல் போகும்… ம்ம்.. கம்யுனிச அடிப்படை தத்துவமான இயக்கவியல் பொருள்முதல் வாதமும் , வரலாற்று பொருள் முதல் வாதமும் படித்த உங்களுக்கு இது கூடவா தெரியாமல் போகும்..என்னையா நீர் ஒரு கம்யுனிஸ்ட்.. ஸ்டாலின் இதை அழகாக கூறி இருப்பார் போய் படித்துவிட்டு வாரும் …மன்னரின் கடமை போர்மேல் செல்வது.. நீங்கள் என்னமோ மன்னர்களையே பார்காத வேறு கிரகத்தில் இருந்து வந்தவர் போல் பேசுகிறீர்கள்.. இந்த உலகில் ஒரு தனி மனிதன் எப்படி வாழ்ந்தாலும்( நல்லவனாகவோ, கெட்டவனாகவோ) ஒரு நாள் அவன் காலம் முடிந்தே தீரும் .. இந்த கூற்று ஒரு ராஜ்யத்திற்கும் பொருந்தும்.. இது கூட தெரியாத அளவுக்கு உங்களுக்கு அவ்வளவு அற்ப அறிவா…

    சரி, உங்கள் கணக்கு படி பார்த்தால்… திப்பு சுல்தான் வம்சமே இப்போது இல்லையே பூண்டோடு அழிந்து விட்டதே அவன் கேரள இந்துகளின் வம்சத்தை அழித்து வெறியாட்டம் போட்டான் அதனால் அவனுக்கு இந்த கதி நேர்ந்தது என்று நான் கூறலாமே .. வெள்ளையன் உடனான வீர போரில் களமாடிய மருது சகோதரர்களின் வம்சத்திலும் யாரும் கிடையாதே.. அவர்கள் யார் குலத்தை அழித்தார்கள் … இலங்கையை ஆண்ட தமிழ் மன்னர்களாம் எல்லாளன், பண்டாரகா வன்னியன் போன்றோரின் வம்சம் ஒன்று கூட இல்லையே அவர்கள் யார் யாரின் வம்சத்தை அழித்தார்கள் என்று கூறமுடியுமா… அவ்வளவு ஏன்,

    சோழ மன்னர்களின் பரம்பரையாவது 600 ஆண்டுகள் இந்த மண்ணை ஆண்டிருகிறது .. இன்றும் அவர்களின் வரலாற்றினை நினைவு கூறுகின்றோம்.. ரஷ்யாவில் உங்கள் சோசியலிச பாட்டாளி வர்க்க சர்வாதிகார ஆட்சி பூண்டற்று போய் விட்டதே அது ஏன்.. முழுதாக 100 ஆண்டுகளை கூட தொட முடியாமல் சிதறி போய் விட்டதே..ரஷ்ய கம்யுனிஸ்டுகள் எந்த குலத்தை குடியை கெடுத்தார்கள் என்று கூற முடியுமா. செந்தில் இந்த உலகமே என்றாவது ஒருநாள் அழியதான் போகிறது .. அதுதான் இயற்கையும் கூட… அதை புரிந்து கொள்ளுங்கள். உங்களின் மறுமொழிகளை பார்த்தல் 5 வயது சிறுவனின் முதிர்ச்சியற்ற பேச்சு போல் இருக்கிறது.. என்ன செய்வது வரலாற்றை வரலாறாக பார்க்காமல் தலித்திய பார்வை கொண்டு பார்த்தல் இப்படி தான் இருக்கும்.. எத்துனை முறை தான் மூடர்க்கு உரைப்பதோ எனையாளும் தஞ்சை பெருவுடையானே

    • K.Senthilkumaran://இது மாதிரியான மிருக ஜென்மங்களை ஆதரிக்கும் ஜென்மங்கள் கொலை வெறி பிடித்த மிருக ஜென்மங்களீன் எச்சமாகத்தான் இருப்பர்// feedback 124

      repeat

    • பெனாத்தள் பெரீயவர் தாயுமானவன் அவர்களே ,

      பெருசுகள் எல்லாம் சிங்களத்தானின் கொடுமைகளுக்கு எதிரா பெனாத்திக்கொண்டு இருந்த போது “——-நம்மை அடிக்கும் சிங்களத்தானை திருப்பி அடிக்கனும்——- ” என்று தீர்க்கமாக சொன்னது பாலகனாக இருந்த தம்பி பிரபாகரன் தான்

    • பெனாத்தள் பெரீசு தாயுமானவன்,

      [1]தீமிர் பிடித்த உன் பெனாத்தள்களுக்கு எல்லாம் எம் இடம் நாகரிகம் கருதி பதில் இல்லை

      [2]என்ன நீயும் சிவம் போல கஞசா புகையுடன் எப்போதும் இருபியா ?

      தாயுமானவன்://எத்துனை முறை தான் மூடர்க்கு உரைப்பதோ எனையாளும் தஞ்சை பெருவுடையானே
      தாயுமானவன்://அட அறிவிலியே …..,

  122. ராச ராசன் “மனு நீதி குற்ற ” வழக்கு -தீர்ப்பு
    ———————————————————
    26/3/2014
    சென்னை

    ராசராசன் மீது தொடுக்கபட்ட மனு நீதி குற்ற வழக்கில் , ராசராசன் தரப்பில் வாதாடிய வழக்கு அறிஞர்கள் திரு அம்பி ,திரு வியாசன் ,திரு தாயுமானவன் பிள்ளை ஆகியோர் ராசராசன் மீது வைக்கபட்ட குற்றச்சாட்டுகளுக்கு ஆதரவாகவே தம் கருத்துகளை கூறினார்கள்!

    [1]திரு அம்பி அவர்கள் “குலத் தொழில் பழகு ” என்ற ராஜாஜியீன் கொள்கைக்கு முன்னேடியே ராஜராசன் தான் என்பதை அழகாக 115.2ல் எடுத்து உரைத்தார் !

    [2] திரு தாயுமானவன் பிள்ளை அவர்கள் …

    “என்னமோ ராஜ ராஜ சோழன் தான் மனு தர்ம நெறி படி ஆட்சி செய்தது போலவும்.. அவருக்கு முன்பு இருந்த சோழ மன்னர்களின் காலத்தில் பார்பனர்களும், வேளாளர்களும் தாழ்த்தப்பட்ட மக்களிடம் கொள்வனவும், கொடுப்பனவும் வைத்து கொண்டு சகோதரர்கள் போல் சமத்துவமாக வாழ்ந்தது போலவும், அதை என்னமோ தங்கள் நேரில் இருந்து பார்த்தது போலவும் பேசுகிறீர்கள்.. ராஜ ராஜனின் காலம் இன்றோடு 1000 ஆண்டுகள் தான் ஆகிறது.. ஆனால் மனுதர்ம ஆட்சி தமிழ்நாட்டில் கடந்த 1800 ஆண்டுகளாகவே நடைபெற்று வருகிறது.. சோழ ராஜ்யத்தில் மட்டுமல்ல சேர. பாண்டிய, சாளுக்கிய, சாதவாகன, ராஜபுதனம் போன்ற இந்திய தேசம் முழுக்க அப்படி தான் இருந்தது..”

    என்று கூறி ராச ராசன் மட்டுமா குற்றவாளி? அனைத்து மன்னர்களும் தான் மனு தர்ம நெறி படி ஆட்சி செய்த குற்றவாளிகள் என்று தம் கட்சிகாரர் ராஜ ராஜ சோழன் அவர்களை குற்றவாளியே என்று வாதாடினார்

    [3]புரட்சி புயல் ,உணர்சி புயல் திரு வைகோ மன்னிக்கவும் திரு வியாசன் அவர்கள் சூராவெளியாய் சுழன்று ,சுழன்று வழக்கையே தள்ளுபடி செய்ய கோரினார். வழக்கு தள்ளுபடி ஆகாததால் பின்பு ,

    “எந்த அரசனும் சாதி வெறியினால் குறிப்பிட்ட சாதியினருக்கு மட்டும் அதிக வரிகளை விதித்ததில்லை. அக்கால வழக்கம், சமுக கட்டமைப்பு அப்படி, அதை இக்கால மார்க்சிய, பெரியாரிய சிந்தனைகளுடன் ஒப்பிட்டு, எமது முன்னோர்களை இழிவு படுத்துவது முட்டாள் தனமென்பதைத் தான் நான் மீண்டும்,மீண்டும் கூறுகிறேன்” 73.1

    என்று கூறியும் ,

    “ஆயிரம் வருடம் பின்னோக்கிப் போய் ராஜ ராஜ சோழனைத் தாக்கும், தமிழ்நாட்டில் வாழும் தமிழரல்லாத திராவிட எச்சங்கள் தமது முன்னோர்களாகிய விஜயநகர் ஆட்சியாளர்களை குற்றம் கூறாமல், ராஜ ராஜ சோழனை வசைபாடுவதன் சூக்குமத்தை தமிழர்கள் அறியார் என்று அவர்கள் நினைத்துக் கொள்கிறார்கள்.” 96.1.1.1ல்

    என்று கலைஞரின் பாரசக்தி வசனத்தை சிறிது மாற்றி பேசியும் ,

    “விஜயநகர் ஆட்சியாளர்களும்” “ராஜ ராஜனை” போன்று குற்றவாளிகள் தான் என்று அருமையாக எடுத்து உரைத்தார்.

    [4] இப்படி தம் கட்சிகாரர் ராஜ ராஜனையே குற்றவாளி தான் என்று அவர் தரப்பு lawyers மூவருமே கூறுவதன் உள் நேக்கம் என்ன என்பதை இந்த நீதி மன்றம் “CPI Director திரு மாக்கன்” அவ்ர்களீன் உதவியுடன் ஆய்வு செய்த போது கிடைத்த விடைங்கள் ……

    [அ ] குற்றம் சாட்டபட்ட ராஜ ராஜன் மூன்று lawyers க்கும் சம்பளம் கொடுக்க இயலாத நிலையீல் கும்பகோணம் அருகில் பழையாரு என்னும் ஊரில் ஒரு ஏழை குடியானவன் நிலத்தில் உறங்குகிறார்

    [ஆ] குற்றம் சாட்டபட்ட ராஜ ராஜன் அவ்ர்களீன் வம்சத்தினர் சிதம்பரம் அருகில் மிகவும் நலிந்த நிலையீல் வாழுகின்றனர்

    [இ]எனவே குற்றம் சாட்டபட்ட ராஜ ராஜன் தரப்பில் ,அவர்களால் lawyers மூவ்ருக்கும் சம்பளம் தர இயலாது என்பது தெரிகின்றது.

    எனவே இந்த நீதி மன்றம் , ராஜ ராஜன் அவ்ர்களுக்கு இப்போது உள்ள lawyersஐ விலக்கிக்கொண்டு அரசாங்கமே இலவச lawyer ஐ நியமிக்கும் படி உத்தரவு இடுகின்றது.

    [5] மேலும் இந்த நீதி மன்றம் குற்றம் சாட்டபட்ட ராஜ ராஜனின் இயல்புகளை கள ஆய்வு செய்ய தன் முக்கிய வேளைகளை[Java ,Struts ,Ajax ,MYSQL, php programming ] தள்ளி வைத்து விட்டு இரு நாட்கள் தஞசை,கும்பகோணம் ,பழையாரு ,உடையார்பாளையம் செல்ல உள்ளது.

    [6] திரு அம்பி அவர்கள் வேறு ஒருவருடன்[Univerbuddy] school boys போன்று போசி போசி நீதி மன்றத்தின் கவனத்தை சிதரடித்ததுக்கு “இருவருக்கும்” கண்டனம் தெரிவிக்கின்றது .

    [7] திரு வியாசன் அவர்கள் உரையில் பயன் அற்ற பேச்சுகளும் , மொக்கைகளும் நிறைந்து இருப்பது தவறு என்று இந்த நீதி மன்றம் விமர்சிக்கின்றது.

    [8] திரு வியாசன் அவர்கள் விரும்பினால் விஜயநகர் ஆட்சியாளர்கள் மீதும் “மனு நீதி குற்ற” வழக்கு தனியாக பதிவு செய்யும் படி இந்த நீதி மன்றம் ஆலோசனை கூறுகின்றது.

    judgement copy to :

    [a] ராஜ ராஜன்,பழையாரு
    [b]திரு வியாசன்
    [c ]திரு அம்பி
    [d ]திரு தாயுமானவன் பிள்ளை

    • மாமன்னன் இராச ராச சோழன் வழக்கு தீர்ப்பு சம்பந்தமான மேன்முறையீடு:
      26 March 2014
      ஜெனீவா, சுவிற்சர்லாந்து

      இந்த வழக்கில் அரசு வழக்கறிஞர், நீதிபதி, சட்டமா அதிபர் எல்லாமே பக்கச் சார்புள்ளவர்களாகவும், தமிழ்நாட்டில் வாழும் தமிழரல்லாத திராவிட எச்ச்சங்களாகவும், பார்ப்பன எதிர்ப்பு என்ற பெயரில் தமிழர்களின் வரலாற்றைக் கொச்சைப்படுத்தி, நோகாமல் அவர்களின் முதுகில் குத்தும் கபடதாரிகளாகவும் இருப்பதுடன், வழக்கறிஞர் செந்தில் குமரனும் அவரும் அவரது சாட்சிகளும் ராஜ ராஜ சோழன் எதிர்ப்பு Crony களாகவும் இருப்பதால், இந்த வழக்கில் இங்கு நீதி கிடைக்காது என்பது வெளிப்படையாக தெரிகிறது. அதனால் இந்த வழக்கை ஐக்கியநாடுகள் சபை மூலமாக சர்வதேச நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்ல தீர்மானித்துள்ளோம். ஆகவே இனிமேலும் இந்த வழக்கு சம்பந்தமான விசாரணைகள் இந்த நீதிமன்றத்தில் நடைபெற அனுமதிக்கக் கூடாதென நாங்கள் விண்ணப்பிக்கிறோம்.

      இந்த வழக்கில் முந்திரிக்கொட்டை போல் அவசரப்பட்டு தீர்ப்புக் கூறியது மட்டுமன்றி நீதிபதி, அரசுதரப்பு வழக்கறிஞர், சட்டமா அதிபர், சாட்சி, வாதி, Peon, Court Jester போன்ற எல்லாப் பொறுப்புகளையும் சுமந்த வழக்கறிஞர் செந்தில் குமரனை, நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் அடிப்படையில் மட்டுமன்றி, அடிமுட்டாள் தனமாக வாதாடிய காரணத்துக்காகவும், அதாவது வழக்கறிஞர் செந்தில்குமரன் கல்லூரியில் இறுதித் தேர்வில் குறைந்த புள்ளிகள் எடுத்திருந்தும், ஒருவேளை சாதிச்சான்றிதழின் அடிப்படையில் சட்டக் கல்லூரிக்கு இவர் தெரிவு செய்யப்பட்டது அதற்கு காரணமாக இருக்கலாம் என்று கருதுவதாலும், இனிமேலும் இப்படியான வரலாறு சம்பந்தமான வழக்குகளில் வாதாட அனுமதிக்காமலும், ஏனைய வழக்கறிஞர்கள் இவரது பேச்சுக்களை கணக்கில் எடுத்துக் கொள்ளாமலும் இருக்கும் வகையில் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, தெற்காசியாவில் எந்த நாட்டிலும் இவர் வழக்கறிஞர் தொழிலில் ஈடுபடாத வகையிலும், இவர் சட்டவியல் சம்பந்தமான எந்த தொழிலும் மேற்கொள்வதை தடை செய்யும் வகையிலும் இவரது தொழில் செய்யும் உரிமை தடை செய்யப்படுவதுடன், இவரது கடவுச்சீட்டும் பறிமுதல் செய்யப்பட வேண்டுமென இந்தியாவின் உச்ச நீதிமன்றத்தில் விண்ணப்பத்தை தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளோம். ஆனால் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளிவரும் வரை, அரசியலமைப்பில் உறுதி செய்யப்பட்டுள்ள தனிமனித பேச்சு சுதந்திரத்தின் அடிப்படையில் திருவாளர் செந்தில் குமரன் தனது ஆசை தீரும் வரை தொடர்ந்து தனி ஆவர்த்தனம் செய்யலாம்

      ‘ராஜராஜ சோழன்’ வழக்கறிஞர்கள் சார்பாக

      வியாசன்
      26 March 2014

      • Viyasan,

        Your Bramin mindset is very super!

        keep it up!

        Go ahead…

        Try for EElam bast on this mind set!

        //ஒருவேளை சாதிச்சான்றிதழின் அடிப்படையில் சட்டக் கல்லூரிக்கு இவர் தெரிவு செய்யப்பட்டது அதற்கு காரணமாக இருக்கலாம் என்று கருதுவதாலும்//

      • வியாசனின் யாழ் வெள்ளாள சாதி வெறி :
        —————————————————-

        [1]பிற்பட்ட , மிகவும் பிற்பட்ட, தலித்தியர் மக்கள் அறிவு அற்றவர்கள் என்று கூறும் வியாசனின்
        “பார்பனிய” நரி தனத்தின் வால்கள் ஓட்ட வெட்டபடும்.

        [2] பிச்சாவரம் ஜாமீனை சேர்ந்த மிகவும் பிற்பட்ட வன்னியர் மக்கள் ராஜராஜனின் வாரிசுகளாக இருக்கும் போது வியாசன் கல்வி-வேளை வாய்ப்பில் இட ஒதுக்கிட்டை எதிர்பது ,ராஜராஜனை ஆதரிப்பது போல பேசிக்கொண்டு ராஜராஜன் வாரிசுகளுக்கே ஆப்பு வைக்கும் வியாசனின் ஈனமான புத்தி அவரின் யாழ் வெள்ளாள புத்தி

        [3]viyasan,

        [a]பிற்பட்ட , மிகவும் பிற்பட்ட, தலித்தியர் மக்களை இழிவு படுத்தும் உங்கள் சாதி வெறி
        [b]முஸ்லிம் மக்களை வேர் அறுக்க நினைக்கும் உங்கள் மத வெறி
        [c]வந்தேரியாய் வேறு நாட்டில் வாழும் வியாசன் , வேற்று இனத்தவறை வந்தேரிகள் என்று துற்றும் உங்கள் இன வெறி

        என்று தனியும் !

        Viyasan://ஒருவேளை சாதிச்சான்றிதழின் அடிப்படையில் சட்டக் கல்லூரிக்கு இவர் தெரிவு செய்யப்பட்டது அதற்கு காரணமாக இருக்கலாம் என்று கருதுவதாலும்//

      • மாமன்னன் இராச ராச சோழன் “மனு நீதி குற்ற ” வழக்கு தீர்ப்பு சம்பந்தமான மேன்முறையீடு: மறு ஆய்வு மனு மீது தீர்ப்பு:

        [1]”திப்பு சுல்தானையும், ராஜ ராஜ சோழனையும் ஒப்பிடுவது சாணிச்சட்டியையும், சருவச்சட்டியையும் ஒப்பிடுவது போன்றது.” என்ற வியாசனின் வாக்கு மூலம் அடிப்படையில் தான் இவ் வழக்கு நடைபெறுகின்றது. திரு வியாசன் அவர்கள் விரும்பினால் விஜயநகர் ஆட்சியாளர்கள் மீதும் “மனு நீதி குற்ற” வழக்கு தனியாக பதிவு செய்யும் படி இந்த நீதி மன்றம் ஆலோசனை கூறுகின்றது.

        [2]திரு வியாசன் அவர்கள்,மனு தர்ம ராஜராஜனை புகழ்வது போல மனு தர்ம விஜயநகர் ஆட்சியாளர்களையும் வியசன் அல்லது வேறு எவரோ , புகழ்ந்து பேசினால் அப்போது தாமாகவே விஜயநகர் ஆட்சியாளர்கள் மீதும் “மனு நீதி குற்ற ” வழக்கு பதிவு செய்யப்படும்

        [3]மேலும் பிற்பட்ட , மிகவும் பிற்பட்ட, தலித்தியர் மக்கள் அறிவு அற்றவர்கள் என்று கூறும் வியாசனின் “பார்பனிய” நரி தனத்தின் வால்கள் ஓட்ட வெட்டபடுகின்றது.
        Viyasan://ஒருவேளை சாதிச்சான்றிதழின் அடிப்படையில் சட்டக் கல்லூரிக்கு இவர் தெரிவு செய்யப்பட்டது அதற்கு காரணமாக இருக்கலாம் என்று கருதுவதாலும்//

        • செந்தில் அண்ணாச்சியின் குளறலைப் பார்க்க, ** “அல்லாவுக்குப் பகிடி வெற்றி தெரியாது” என்ற ஈழத்தமிழ் Phrase தான் நினைவுக்கு வருகிறது. அவர் மற்றவர்களை எப்படி விமர்சனம் பண்ணி ஜோக்கடித்தாலும், அதை மற்றவர்கள் பெரிது படுத்துவதில்லை. நகைச்சுவையாக எடுத்துக் கொள்கிறோம். அவர் எழுதிய நக்கலுக்கு, அவரது பாணியில் மற்றவர்கள் நக்கலடித்தால், அதை பெரிது படுத்தி குய்யோ முறையோ என்று கூக்குரலிடுகிறார். இது எந்த விதத்தில் நியாயமாகும்.

          சாதியடிப்படையிலான இட ஒதுக்கீடு, தமிழர்கள் மத்தியில் சாதிப்பாகுபாடு தொடந்து நீடிக்க வழிவகுக்கிறது. சாதியடிப்படையில் சலுகைகளை வழங்கிக் கொண்டும், சலுகைகளைப் பெற்றுக் கொண்டும், சாதியை ஒழிப்போம் என்று கூக்குரலிடுவதால், சாதியொழிப்பு சாத்தியமாகாது என்பது, எனது கருத்தாக இருந்தாலும் கூட, ‘ராஜராஜன் வழக்கு தீர்ப்பு மேன்முறையீடு’ என்ற பதிலில் நான் சாதிச்சான்றிதழ் பற்றிக் குறிப்பட்டது வெறும் நகைச்சுவைக்காக மட்டும் தானே தவிர, வேறு எந்த விதமான உள்நோக்கத்துடனும் அல்ல. இனிமேல் உங்களுடன் எந்த வித நகைச்சுவையும் பண்ண மாட்டேன், சரியா?

          **( “அல்லாவுக்குப் பகிடி, வெற்றி தெரியாது” என்று ஈழத்தமிழர்களின் பேச்சுவழக்கில் ஒரு Phrase உண்டு. அதன் பின்னணியிலுள்ள கதை என்னவென்றால், மன்னாரிலுள்ள முஸ்லீம் ஒருவர் மீன்பிடிக்கப் போனாராம், தொடர்ந்து இரண்டு, மூன்று நாளாய் ஒரு மீனும் பிடிபடவில்லையாம். அதனால் இன்றைக்கு நல்லல பெரிய மீனாய்ப் பிடிபட்டால், அதை விற்றுப் பணத்தை பள்ளிவாசலுக்கே கொடுப்பதாக வேண்டிக் கொண்டாராம், கொஞ்ச நேரத்தில் நல்ல பெரிய மீன் பிடிபட்டது. அதனால் அவர் இதை பள்ளிவாசலுக்குக் கொடுக்கத் தேவையில்லை, அடுத்த மீனைக் கொடுப்போம் என்று நினைத்துக் கொண்டாராம். அதற்கிடையில் அந்த பெரிய மீன் துள்ளி கடலுக்குள் விழுந்து ஓடிவிட்டதாம். உடனே அவர் அண்ணாந்து வானத்தைப் பார்த்து, அல்லாவுக்கு பகிடி, வெற்றி தெரியாது என்றாராம். இதில் அல்லாவுக்குப் பதிலாக, புத்தர், முருகன், கர்த்தர் யாரையும் போடலாம், ஆனால் இலங்கையில் “அல்லாவுக்குப் பகிடி வெற்றி தெரியாது” என்று தான் சொல்லுவார்கள். )

          • வியாசன்,

            [1]நீங்கள் என் இடம் மன்னிப்பு கேட்க தேவை இல்லை .என்னை நீங்கள் பகடி செய்யவும் இல்லை.[அப் பகடி எமக்கு பொருந்தாது ]. “சாதியும் நானும்” -கி.செந்தில்குமரன் என்ற என் கட்டுரையை உங்களுக்கு நேரம் இருப்பின் வாசிக்கவும்.

            http://vansunsen.blogspot.in/2014/02/cast-and-i-ksenthilkumaran.html

            [2]ஆனால் கல்வி-வேலை வாய்ப்பில் இட ஒதுக்கிடு மூலம் சிறிதாவது சமுக,பொருளாதாரத்தில் முன்னேறும் எம் தமிழ் நாட்டை சேர்ந்த பிற்பட்ட , மிகவும் பிற்பட்ட, தலித்தியர் மக்கள் இடம் கண்டிபாக நீங்கள் அவர்கள் “அறிவு அற்றவர்கள்” என்று நேரடியாகவே பகடி செய்ததுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும்.

            //சாதியடிப்படையிலான இட ஒதுக்கீடு, தமிழர்கள் மத்தியில் சாதிப்பாகுபாடு தொடந்து நீடிக்க வழிவகுக்கிறது. சாதியடிப்படையில் சலுகைகளை வழங்கிக் கொண்டும், சலுகைகளைப் பெற்றுக் கொண்டும், சாதியை ஒழிப்போம் என்று கூக்குரலிடுவதால், சாதியொழிப்பு சாத்தியமாகாது என்பது, எனது கருத்தாக இருந்தாலும் கூட, ‘ராஜராஜன் வழக்கு தீர்ப்பு மேன்முறையீடு’ என்ற பதிலில் நான் சாதிச்சான்றிதழ் பற்றிக் குறிப்பட்டது வெறும் நகைச்சுவைக்காக மட்டும் தானே தவிர, வேறு எந்த விதமான உள்நோக்கத்துடனும் அல்ல. இனிமேல் உங்களுடன் எந்த வித நகைச்சுவையும் பண்ண மாட்டேன், சரியா?//

          • தமிழர் எல்லாம் “அறிவு அற்றவர்கள்” என்று எவராவது உங்கள் முன் வந்து கூறினால் , கூறியவன் சட்டையை பிடித்து சண்டை போடுவீர்களா ? இல்லை நகை என்று எண்ணி நட்பு பாராட்டுவிர்களா வியாசன் ?

            //நான் சாதிச்சான்றிதழ் பற்றிக் குறிப்பட்டது வெறும் நகைச்சுவைக்காக மட்டும் தானே தவிர, வேறு எந்த விதமான உள்நோக்கத்துடனும் அல்ல//

          • viyasan, கல்வி-வேலை வாய்ப்பில் இட ஒதுக்கிடு மூலம் சிறிதாவது சமுக,பொருளாதாரத்தில் முன்னேறும் எம் தமிழர்களை “அறிவு அற்றவர்கள்” என்று நீங்கள் கூறும் போது எனக்கு உங்கள் சட்டையை பிடித்து சண்டை போட வேண்டும் என்று தோன்றுகிறது.

  123. சகோதரர் வியாசருக்கு நன்றிகள்.நண்பர்கள் திப்பு,செந்தில் குமரன் ஆகியோருக்கு நான் பணிநிமித்தம் வெளியில் செல்வதால் இரண்டு மூன்று நாட்கள் சென்று உங்களுக்கு பதில் கூறுகிறேன்.நன்றி.

  124. இரட்டைப் புலவர் தாயுமானவன் பிள்ளைக்காகவே[அறிவிலி] எழுதிய கவிதை !
    ———————————————————————————-

    மூடர்முன்னே பாடல் மொழிந்தால் அறிவரோ
    ஆடெடுத்த தென்புலியூர் அம்பலவா – ஏடாகேள்!!!! ]அல்லது [ஆடகப்பொன்!!!!!]
    செந்திருவைப் போலணங்கைச் சிங்காரித் தென்னபயன்
    அந்தகனே நாயகனா னால்.

    பொருள் :

    தென்புலியூர் ->சிதம்பரம்
    வடபுலியூர்->திருப்பாதிரிப்புலியூர் [கடலூர் ]
    அம்பலவா->சிவனே
    செந்திருவைப் போலணங்கைச் சிங்காரித்->அழகிய திருமகள் போல் அலங்காரம்
    அந்தகனே->கண் அற்றவர்

    இரட்டைப் புலவர் பாடல் ஒன்றை பற்றியது.ஒருவர் கண்ணும் ,மறுவர் கால்களும் அற்ற புலவர்கள். கண் அற்றவர், கால் அற்றவரின் வழிகாட்டுதளில் தூக்கி ந்டந்து ஊர் ஊராகச் செல்வர்தனை நாடிச் செல்வார். இருவரும் கவி கூறி பொருள் நாடுவர். கல்வி அறிவு இல்லா பொருளாலாளர் புற முதுகுக் காட்ட ,நொந்து போன புலவர்களின் புலம்பலுடன் கூடிய நையாண்டிக் கவிதை தான் இது.

    தாயுமானவன் பிள்ளைக்காகவே [அறிவிலி] எழுதிய கவிதை

  125. விஞ்ஞானி திப்பு சுல்தான் அவர்களே,

    நீங்கள் விடயத்தை திசை திருப்ப முயற்சிக்கிறீர்கள், ஆனால் இந்த இணையத் தளத்தில் அது இலகுவான செயல் அல்ல என்பதும் உங்களுக்குத் தெரியும். இங்குள்ளவர்கள் எல்லாம் விடாக்கண்டன், கொடாக்கண்டன் போன்றவர்கள். 🙂

    நானும் இங்கு இந்து நம்பிக்கையா அல்லது இஸ்லாமிய நம்பிக்கையா உயர்ந்தது என விவாதிக்கவில்லை. ஆனால் “அகத்தியர் கமண்டலத்தில் இருந்து காவேரி வந்தது என்பதே புராண தொன்மம்” என்ற தேவாரநாயனாரின் கருத்துக்கு நீங்கள் அளித்த பதில்:

    1. “…மிகைப்படுத்தி புகழ்வதுண்டு.அதையெல்லாம் வரலாற்று ஆதாரமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.”

    2. “…புலவர்களின் கூற்றை நம்புவது அறிவுக்கு பொருத்தமாக இல்லை.அதற்கு முதலில் காவிரியின் வயதை கணக்கிட வேண்டும்.”

    என்னுடைய கேள்வி என்னவென்றால், தமிழ்நாட்டில் அகத்தியரின் கமண்டலத்திலிருந்து காவேரி பிறந்தது என்ற புராண தொன்மம் இருப்பது போல், அரேபியாவில் மட்டுமல்ல, முஸ்லீம்கள் மத்தியிலும், பச்சிளம் பாலகன் இஸ்மாயில் தனது பிஞ்சுக்கால்களால் உதைத்ததால், பாலைவனத்தில் ஜம் ஜம் நீரூற்று, தோன்றியதாக, தொன்மம் அல்லது குரான் கதை உண்டு.
    அதனால் அகத்தியரின் கமண்டலத்திலிருந்து காவேரி வந்தது என்ற புராண தொன்மமம் “மிகைப்படுத்தல்”, “அறிவுக்கு பொருத்தமாக இல்லை”, என்றெல்லாம் வியாக்கியானம் கொடுத்த நீங்கள்:

    முஸ்லீம்கள் புனிதமான நீராக கருதும் சவூதி அரேபியாவில் உள்ள “ஜம் ஜம்’(zamzam) நீரூற்றைக் கூட அல்லா உருவாக்கவில்லை, குரானிலுள்ள அந்தக் கதை உண்மையாக இருக்க முடியாது. அதாவது இந்த விவகாரத்தை பொறுத்தவரை குரானின் “கூற்றை நம்புவது அறிவுக்கு பொருத்தமாக இல்லை” என்று ஒப்புக் கொள்வீர்களா?

    • அறிவாளி வியாசன்,

      “அகத்தியர் கமண்டலத்தில் இருந்து காவேரி வந்தது என்பதே புராண தொன்மம்” என்பதோடு தேவரர் நிறுத்தவில்லை.அப்படி ஒரு தொன்மம் இருப்பதால் அகத்தியர் ஆலோசனைப்படி சோழ மன்னன் காவிரியை தமிழகத்துக்கு கொண்டு வந்திருக்கலாம் என்று அதனை வரலாற்று நிகழ்வாக ஆக்கி அதற்கு இலக்கிய ஆதாரங்கள் காட்டுவதைத்தான் மறுக்கிறேன்.

      மற்றபடி உங்கள் புராண தொன்மங்களை நீங்கள் நம்புவது உங்கள் உரிமை என ஏற்கனவே சொல்லி விட்டேன்.நம்பிக்கையின் அடிப்படையில் அப்படி நடந்தது என சொன்னால் அதில் எனக்கு ஆட்சேபனை இல்லை.அதுதான் வரலாறு என சொன்னால்தான் ஆட்சேபனை வருகிறது.

      எனது மத நம்பிக்கைகளை இப்படி அதுதான் வரலாறு என கடை விரித்திருந்தாலோ பின்னாளில் விரித்தாலோ அப்போது வாருங்கள்.ஜம் ஜம் பற்றி பேசலாம்.எனது மத நம்பிக்கைகளை என்னளவிலேயே வைத்துக் கொள்கிறேன்.அதில் உங்களுக்கு என்ன பிரச்னை.

  126. கோமாளி விகடகவி கம்யுனிஸ்ட் செந்தில்…..

    கேட்ட கேள்விகளுக்கு உருப்படியாக ஒரு பதிலும் அளிக்க துப்பில்லை .. உங்களுக்கு கோபம் ஒரு கேடு…. இதில் கவிதை என்கிற பெயரில் இன்னொரு மொக்க வேற.. சும்மா சொல்ல கூடாது சிரிப்பு நடிகர் செந்தில விட செம காமெடி பண்றீங்க

    பிறரிடம் எப்படி பேசவேண்டும் என்கிற நாகரீகம் கூட தெரியாமல் ஒருமையில் பேசும் உங்களுக்கு உங்கள் பாணியிலேயே எனது பதில்கள்..

    //மூடர்முன்னே பாடல் மொழிந்தால் அறிவரோ
    ஆடெடுத்த தென்புலியூர் அம்பலவா –//

    செந்தில்… நீ கவிதை என்று சொன்ன இந்த குப்பையை கொண்டு போய் போர்ட்ல எழுதி கழுத்துல தொங்க போட்டுட்டு உமது பகுத்தறிவு பகலவன் ஈ.வே.ரா. சமாதி பக்கத்துல எங்கேயாச்சு ஒரு ஓரமா உட்கார்ந்துகொள்… உனக்கு பின்னாடி வர சந்ததிங்க பார்த்து படிச்சு தெளிவாயிடுவாங்க என்ன சரியா… கண்டிப்பா என் பேர எழுத மறந்திட கூடாது …

    //[2]என்ன நீயும் சிவம் போல கஞசா புகையுடன் எப்போதும் இருபியா ?//

    ஹ்ம்ம் .. கஞ்சா புகையுடன் அல்ல .. தெய்வ மணங்கமழும் தேவார, திருவாசகதுடன் இருப்போம் .. ஆனால் நீங்கள் எப்படி எப்போதும் கையில் கள்ளு பானையுடன் தீண்டாசேரியில் மொக்கை கவிதைகளை பாடிக் கொண்டு புலையர்களுடன் ஆடி கொண்டிருப்பீரோ… யாம் அறியோம் பராபரமே…

  127. Hi Parpana-vellala Viyasan,

    Minimum government medical college cutoff mark for mbbs in TN 2012-2013

    OC =198.75

    BC =197.75

    BCIM =196.5

    MBC =196.25

    SC = 189.25

    The range bound for overall cutoff mark is 189.25 to 198.75

    The mark difference between OC and SC is just 9.5

    The mark difference between OC and MBC is just 2.5

    The mark difference between OC and BC is just 1.0

    Do you think these MINOR difference in cutoff marks will make any huge difference in KNOWLEDGE acquisition process of OC,BC,MBC,SC students?

    As I am a teacher Nothing!

    But You said quota people are having low knowledge!

    Viyasan Are you fool?

    Viyasan are you stupid ?

    Viyasan are you Weird man?

    viyasan://கல்லூரியில் இறுதித் தேர்வில் குறைந்த புள்ளிகள் எடுத்திருந்தும், ஒருவேளை சாதிச்சான்றிதழின் அடிப்படையில் சட்டக் கல்லூரிக்கு இவர் தெரிவு செய்யப்பட்டது அதற்கு காரணமாக இருக்கலாம்//

    • செந்தில்குமரன்,
      தங்களது வாதத்தின் உண்மையை ஒத்துக்கொள்கிறேன்.

      அதே சமயம் தங்களின் ஒவ்வொரு பதிவிலும் யாழ் வெள்ளாள சாதியை குறிப்பிடுவது சரியாக படவில்லை. உணர்ச்சிவசப்பட்டு அவசரப்பட்டு பதிலளிக்கும்போது கொட்டிய வார்த்தைகளை அள்ள முடியாது. தங்களுக்கும் சரி, வியாசன் அவர்களுக்கும் சரி, ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

      இனிய உளவிருக்க இன்னாத கூறல்,
      கனியிருப்ப காய் கவர்ந்தற்று.

      விவாதம் செய்யுங்கள். விவாதத்தின் வேகத்தை அதிகரிக்கையில் அதன் தரத்தை குறைத்திட வேண்டாம். இந்த வேண்டுகோள் செந்தில்குமரன், வியாசன் இருவருக்குமே விடுக்கிறேன்.

      • கல்வி-வேலை வாய்ப்பில் இட ஒதுக்கிடு மூலம் சிறிதாவது சமுக,பொருளாதாரத்தில் முன்னேறும் எம் தமிழர்களை “அறிவு அற்றவர்கள்” என்று வியாசன் கூறும் போது எனக்கு சட்டையை பிடித்து சண்டை போட வேண்டும் என்று தோன்றுகிறது.

        உங்களுக்கு என்ன தோன்றுகிறது கற்றது கையளவு?

        //அதே சமயம் தங்களின் ஒவ்வொரு பதிவிலும் யாழ் வெள்ளாள சாதியை குறிப்பிடுவது சரியாக படவில்லை. //

  128. அன்பின் திரு.வியாசன்….

    //பெரும்பான்மை தமிழ்நாட்டுத் தமிழர்கள் மெளனமாக இருந்தது தான், இந்த உளறல்களுக்குக் காரணம். உங்களைப் போன்றவர்கள் மெளனம் கலைந்து, பொய்ப்பிரச்சாரங்களை எதிர்ப்பதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. நன்றிகள்.//

    76.3இல் தாங்கள் பதிந்த மறுமொழிகளுக்கு என்னால் சரியான நேரத்தில் பதில் அளிக்க இயலாமல் போனதற்கு வருந்துகிறேன்..

    இதில் நன்றி கூற என்ன இருக்கிறது அன்பரே .. உலகிற்கே நனி சிறந்த நாகரிகமாக திகழும் தமிழரின் பண்பாட்டு விழுமியங்களை காக்க வேண்டியது ஒவ்வொரு உண்மையான தமிழனின் கடமை.. அதற்க்கு காரணம், உலகின் ஆக சிறந்த பண்பாடுகளில் முதன்மையான பண்பாடாக உலக வரலாற்று ஆய்வாளர்களால் போற்றப்படும் தமிழ் பண்பாட்டில் இருந்து வந்தவன் என்கிற ஒரு கர்வமாக கூட இருக்கலாம்… அமரர் கல்கி கூறுவது போன்று,

    “இந்தப் பாராட்டுதல்களையெல்லாம் கதையின் ஆசிரியருக்குரியவையாக நான் கருதவில்லை. பழந்தமிழ் நாட்டின் சரித்திரத்துக்குரிய பெருமையாகவே கருதினேன். உண்மையிலேயே, தமிழ்நாட்டின் பழைய வரலாறு, தமிழர்கள் மிகவும் பெருமிதம் கொள்ளக்கூடிய வரலாறுதான்”..

    கல்கி அவர்கள் கூறுவது போன்று தமிழ்நாட்டின் பழைய வரலாறு என்பது தமிழர் அனைவரும் பெருமை பட கூடிய ஒன்று.. இந்த பெருமையை உணராமல்.. வெறும் நாத்திகவாதம், மார்க்சியம் , தலித்தியம் பேசி கொண்டு நமக்கென்று இருக்கும் வரலாற்றை இருட்டடிக்க செய்யும் அல்லது ஒரு சாமானிய தமிழனின் மனதில் வெறுப்பினை தூவி தன் சொந்த கலாசாரத்தின் மீது அருவெருப்பை ஏற்படுத்திட நினைக்கும் முயற்சியை முறியடிப்பது தான் ஒவ்வொரு இனஉணர்வு கொண்ட தமிழனின் இன்றியமையா பணியும் கூட ..

    பெருமையும், போற்றுதலுக்குமுரிய தனித்துவமான சிறந்த பண்பாடாக விளங்கும் ஒன்றை காக்க வேண்டியது நம் தலையாய கடமை என்றே கருதுகிறேன்… அந்த பணியினை தாங்கள் சிறப்பாக செய்து கொண்டிருகிறீர்கள்..

    இங்கு மறுமொழிகள் இடுவது செந்தில் குமரனின் வெற்று உளறல்களுக்கு பதில் அளிப்பது என்பதை தாண்டி. தாங்கள் மற்றும் திரு. அம்பி ஆகிய தங்கள் போன்றோரின் தீர்கமான அறிவுசால் எழுத்துகளை நீங்கள் இங்கு பதிப்பது..இந்த கட்டுரையை வாசிக்கும் ஒரு எளிய வாசகருக்கு இந்த கட்டுரை சார்ந்த மறுமொழிகளை பார்க்க நேர்ந்தால்.. வரலாறு தொடர்பாக பெரியாரிச பைத்தியங்களின் சாரம் இல்லாத குப்பைகளை கடாசிவிட்டு வரலாற்றை வரலாற்றின் கண்கொண்டு பார்க்க வேண்டும் என்கிற ஒரு சிறு முனைப்பையாவது ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்… நன்றி

  129. பெரிசு, சாதி வெறி தாயுமானவன் பிள்ளைக்கு சுடுகாட்டு சித்தன் கி.செந்தில் குமரன் பாடும் பாட்டு
    —————————————————————————————————————————————————————————-

    பெரிசு ரொம்ப சாதி வெறியோட ஆடாத .

    நீ செத்து சுடுகாட்டுக்கு போறபோதும்

    எங்க தீண்டாசேரியில் இருந்து தான்

    சிவனின் உண்மை வாரிசுகளான “பிதாமகன்கள்” வந்து தான்

    “காமன் – அரிச்சந்திரன்” பாடல்கள் பாடி

    “உன்னைய” சிவலோகத்துக்கு அனுப்பி வேக்கோனும்!

    பெரிசு “செத்த” உன் பொணம் தன்னால சுடுகாடு போவாது !

    நான் அரிச்சந்திரன் பாட்டு படாட்ட உன்

    கட்டையும் வேகாது.

    நீ என்னைய புலையனு சாடுற-ஆனா

    நீ செத்தா என் காலடி மண்ணுலதான்

    மண்டியீட்டு புதையுர !

    நீ படுத்த குழிய என் கலால

    மண்ணை தள்ளி மூடுறேன்

    செத்த பின்பாவது இவன் சாதி வெறி

    அடங்குமானு கள்ளு குடித்து தன்னால புலம்புறேன்!

    பைத்தியகார நான் சித்தனடா ,சுடுகாட்டு சிவனடா !

    குறிப்பு :

    இப் பாடல் தாயுமானவன் பிள்ளை போன்ற அனைத்து சாதி வெறியன்களுக்கும் சமர்பணம்

    தாயுமானவன் பிள்ளை://நீங்கள் எப்படி எப்போதும் கையில் கள்ளு பானையுடன் தீண்டாசேரியில் மொக்கை கவிதைகளை பாடிக் கொண்டு புலையர்களுடன் ஆடி கொண்டிருப்பீரோ… யாம் அறியோம் பராபரமே…//

  130. வினவுக்கு நன்றி !
    வியாசன் மற்றும் தாயுமானவன் இவர்களின் சாதி வெறி கசடுகளையும் வெளியிட்டு இந்த சாதி வெறியர்களை அன்பலம் செய்தமைக்கு நன்றி !

    தாயுமானவன் பிள்ளை://நீங்கள் எப்படி எப்போதும் கையில் கள்ளு பானையுடன் தீண்டாசேரியில் மொக்கை கவிதைகளை பாடிக் கொண்டு புலையர்களுடன் ஆடி கொண்டிருப்பீரோ… யாம் அறியோம் பராபரமே…//

    viyasan://கல்லூரியில் இறுதித் தேர்வில் குறைந்த புள்ளிகள் எடுத்திருந்தும், ஒருவேளை சாதிச்சான்றிதழின் அடிப்படையில் சட்டக் கல்லூரிக்கு இவர் தெரிவு செய்யப்பட்டது அதற்கு காரணமாக இருக்கலாம்//

  131. செந்திலு…..

    அட இங்க பாருடா நம்ம செந்தில …. உங்கள ஒரு காமெடி பீசுன்னு தான் இவ்ளோ நேரம் நினச்சேன் … ஆனா உனக்குள்ள இப்படி ஒரு அழு முஞ்சி செந்தில் இருக்காருன்னு இப்போ தன் தெரிஞ்சிகிட்டேன்.. ஆனா என்ன கவிதைல Sympathy பத்தல.. ஏன் கிட்டே கேட்டிருந்தா என்னையே திட்டி நானே ஒரு சூப்பர் கவிதையே எழுதி குடுதிருப்பேனே… விடுங்க அதான் நீங்களே கிழிசிட்டீன்களே …. எப்புடியோ காலைல நீர் போட்ட மொக்க இரட்டை புலவர் கவிதைக்கு இது எவ்வளவோ பரவால…My Kudos to you.. சரி நம்ம விஷயத்துக்கு வாரன்…. நீங்க எழுதின இந்த அலம்பலுக்கு.. ச்சீ பொலம்பலுக்கு கொஞ்சம் பொழிப்புரை போடலாம்னு நினைக்கிறன்..

    //சுடுகாட்டு சித்தன் கி.செந்தில் குமரன் பாடும் பாட்டு//….

    யாரு நீர் சித்தன்… அட ச்சீ.. அடிப்படை அறிவு கூட இல்லாத குருட்டு பித்தன் என்று வேண்டுமானால் உன்னை அழைக்கலாம்.. உம்மை எல்லாம் சித்தன் என்று சொன்னால் அப்புறம் ஒரிஜினல் சித்தர்களை என்னவென்று கூறுவது..

    //சிவனின் உண்மை வாரிசுகளான “பிதாமகன்கள்” வந்து தான்

    “காமன் – அரிச்சந்திரன்” பாடல்கள் பாடி

    “உன்னைய” சிவலோகத்துக்கு அனுப்பி வேக்கோனும்!//

    பிதாமகன் படத்த ரொம்ப பார்த்து விட்டீரோ…. உன் மொக்க புலம்பலுக்கு பாலா ஓட திரைபடத்த ஏன்யா inspiration ஆக்கி அந்த படத்தோட மரியாதைய கெடுக்குற… விடுயா.. பொழச்சு போகட்டும் பாலா..

    //பெரிசு “செத்த” உன் பொணம் தன்னால சுடுகாடு போவாது !

    பொணம் எந்த காலத்துலயா தன்னால சுடுகாடு போச்சு.. அதுக்கு தான் இன்னிக்கு நெறைய தன்னார்வ நிறுவனங்கலாம் ஏகப்பட்ட சவ ஊர்வல வாகனம்னு maruthi omni வண்டிய தான் வாடகைக்கு விட்டு பொழைகிரானுகளே அப்புறம் என்ன உனக்கு கவலை ..

    //அரிச்சந்திரன் பாட்டு படாட்ட உன்

    கட்டையும் வேகாது.//

    யோ.. லூசு நீ இன்னும் எந்த காலத்துல இருக்க.. காலம் எங்கயோ போய்கிட்டு இருக்கு.. இப்பலாம் யாரும் கட்டய போட்டு எரிக்கிறதுலாம் இல்ல .. மின்சார சுடுகாடுன்னு அரசாங்கமே கொண்டு வந்து எவ்ளோ நாள் ஆகுது.. பாடிய கொண்டு பொய் எலெக்ட்ரிக் Tray ல தள்ளி ஸ்விட்ச போட்டா 5000 வோல்டாம்.. ஒரு மணி நேரத்துல சாம்பல சொம்புல கொண்டு வந்து டெலிவரி பண்ணிட்றான்… இப்ப வந்து கட்டை வேகாது , கொட்டை வேகாது , இரும்பு வேகாதுன்னு.. உன் பருப்ப இங்க வந்து வேக வைக்கிற.. அந்த மின்சார சுடுகாட கூட சீக்ரம் தனியாருக்கு தாரை வார்க்க சொல்லி உலக வங்கி தமிழக அரசுக்கு நெருக்கடி கொடுக்குதாம்.. அதுனால எப்ப வேணாலும் சுடுகாடு தனியார் மயம் ஆகலாம்.. போ.. போய்.. அத எப்புடி தடுக்கலாம்னு யோசிப்பியா.. அத வுட்டு புட்டு நீ என்னடான..

    //நீ என்னைய புலையனு சாடுற-ஆனா

    நானாச்சும் உன்ன ஒருதடவ தான் சொன்னான்.. அதுவும் நீங்க என்ன கஞ்சா குடிக்கிற பரதேசின்னு சொன்னதால விளையாட்டுக்கு தான் சொன்னன்.. நீ தான் உன்ன இப்ப 100 தடவைக்கு மேல சொல்லிக்கிற.. புலையர்கள நா அசிங்கம்னு எப்போ சொன்னன் ராசா.. உனக்கு வேல்லாலனுங்கோ , பாபானுங்கோ, செட்டியாரு இவங்கல்லாம் புடிக்காதுன்னு நினச்சு தான் உங்களுக்கு பிடிச்ச மாதிரி உழைக்கும் மக்கள் கூட டான்ஸ் ஆட்ற மேதிரி சொன்னன்.. கல்லு குடிக்கிறதுல தப்பு இல்ல.. அது உழைக்கும் மக்களோட பானம்.. அந்த காலத்துல அவங்க தான் உடல் உழைப்பு அதிகம் பன்னுவன்கலாம் அதான்.. சரி போ உமக்காக.. பார்பன சேரில போய் கல்லு குடிச்சு வெள்ளலாலனுங்க கூட சேந்து ஆடு … போதுமா .. அப்புறம் தீண்டசெர்ரின்னு நான் பேரு வைகல அது அப்ப இருந்த சாதி வெறி புடிச்சவனுங்க வச்ச பேரு.. நான் வரலாற சொன்னன் அவ்ளோதான்…

    //நீ செத்தா என் காலடி மண்ணுலதான்

    மண்டியீட்டு புதையுர !

    நீ படுத்த குழிய என் கலால

    மண்ணை தள்ளி மூடுறேன்//

    so sorry … எங்க பரம்பரைல எரிகிற பழக்கம் தா.. பொதைக்கிற பழக்கம்லா இல்லையாம்…. Bow .. Bow ..போ உன் ஆசைல மண்ணு விழுந்துடிச்சு…

    //பைத்தியகார நான் சித்தனடா ,சுடுகாட்டு சிவனடா !//

    சிவன் கைல இருக்ற திருவோட்டாலையே அடிப்பன்… யோ .. உனக்கு தான் ஆன்மீக நம்பிக்கை, கடவுள் நம்பிக்கை இதெல்லாம் கிடையாது.. இந்த பிரச்சனி ஆரமிச்சதே நீ சொன்ன//[2]என்ன நீயும் சிவம் போல கஞசா புகையுடன் எப்போதும் இருபியா// அப்ப சிவன கேவல படுத்திட்டு இப்ப என்ன அவர புடிச்சு உள்ள இழுக்குற.. ஓ.. என்ன இருந்தாலும் கவிதைல கொஞ்சம் உணர்ச்சி மிகுதி வேணும்ல அதுக்கு இப்படிலாம் பட்டினத்தார், சிவவாக்கியர், வைரமுத்துவலாம் கலந்துஅடிக்க வேணாமா … அண்ணே .. (actuala .. உங்கள விட நான் வயசுல சின்னவன் தான்) … அண்ணே.. கவிதைல உப்பு பத்தல..

    செந்தில் …

    இது நான் எதிர் பார்த்த ஒன்று தான்.. சாதரணமாக ஒரு வார்த்தை கிடைத்தாலே அதை வைத்து திருமாவளவனை மிஞ்சும் அளவிற்கு தலித் அரசியல் செய்வதில் கில்லாடி நீங்கள் .. எப்போது அறிவில் சிறந்த பார்பனர்களும் வேளாளர்களும் என்று அன்றைய நிலவரத்தை கணக்கில் கொண்டு சொன்னதை வைத்து நீங்கள் சிண்டு முடித்தீர்களோ.. அப்போதே நீர் யார் என்பதை தெரிந்து கொண்டேன்.. அதாவது நீர் இங்கு மறுமொழி போடுவது வெறும் உனது சுயபெருமைக்காக தானே தவிர .. தாழ்த்தப்பட்ட மக்களின் மீது கொண்ட பாசத்தினால் அல்ல …

    செந்தில் குமரன் என்றால் பெரிய அறிவாளின்னு ஒதுக்கணும்.. அவரு எல்லாம் தெரிந்த அறிவாளி என்று நீர் போடும் மொக்கை மறுமொழிகளுக்கு எல்லாம் kudos போடவேண்டும்.. இந்த அல்ப புத்தி தான் உமக்கு இருப்பது.. தொடக்கத்தில் இருந்து நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு அவதூறான விடை அளிப்பது.. முட்டாள் தனமாக பேசியதையே திரும்ப திரும்ப பேசுவது. ஒரு விஷயம் கிடைத்தால் அதை வைத்து கொண்டு சர்ச்சையை கிளப்புவது போன்ற ஈன செயல்களில் தான் இது நாள் வரை நீங்கள் செய்தது.. நீங்கள் விவாதிக்கும் எந்த விஷயத்திலும் கருத்தாழமோ, விஷயதெளிவோ, தகுந்த ஆதாரங்களோ இது வரை நான் கண்டதில்லை.. உமது blogger இல் தான் உமது லட்சணம் தெரிகிறதே.. நீங்களே கட்டுரை எழுதி.. அதற்க்கு நீங்களே கமெண்டும் போட்டு கொள்ளும் அவல நிலையில் தான் இருக்கிறது உங்களின் அடையலாம்.. ஆகவே, அறிவுக்கு அடையாளம் தேடும் அற்ப எண்ணத்தை மறுமொழிகளில் எல்லாம் வந்து தேடாதே.. இது கருது பரிமாற்றத்திற்கான இடம்…

    செந்தில், என்னை பொறுத்த வரை தமிழக வரலாற்றையும் அதன் பண்பாட்டையும் நேசிப்பவன் யாராக இருந்தாலும்.. எந்த சாதியை சேர்ந்தவனாக இருந்தும் எமக்கு சகோதரனே.. புரியும் படி சொல்லவேண்டுமானால் ” தமிழை பழித்தவனை தாய் தடுத்தாலும் விடேன்”.

    இப்படி கவிதை கூறி அழுவும் நடிப்பெல்லாம் என்னிடம் வேண்டாம்.. வேறு யாரிடமாவது வைத்து கொள்ளுங்கள்.. இது போன்று பல குப்பைகளை நான் பார்த்து விட்டேன்.. உங்கள் கவிதையில் தெரியும் முதலை கண்ணீரை துடைக்க என்னை திட்டி உங்களை சமாதன படுத்த என்று 4 பேரு வருவார்கள்.. அவர்களிடம் வைத்து கொள்ளுங்கள் இந்த கவிதை எழுதும் கபட நாடகத்தை எல்லாம் ..

  132. //பெரிசு, சாதி வெறி தாயுமானவன் பிள்ளைக்கு//

    எடுத்த எடுப்புலயே சொதபல் ஆமா… என்ன பெரிசுனு எத வச்சு முடிவு கட்டினீர்.. நான் சொன்னனா. தாயுமானவன்னு பேர வச்சா வயசுல மூத்தவர்னு அர்த்தமா.. என் மறுமொழிகள இவ்வளோ காலமாக பார்கிற .. கேவலம் என் வயசு என்னனு கூட யுக்கிக முடியாத நீ எல்லாம் ஒரு எழுத்தாளன். நீர் எல்லாம் ராஜ ராஜனை பற்றி விமர்சனம் பண்ண வந்துடீர்.. யோகித இருக்காயா உனக்கு… ஒரு வேளை 5 வயது சிறுவனுக்கு இருக்கும் அறிவு கூட உமக்கு இல்லை என்று கூறியதால் இந்த முடிவா.. செந்தில் உமக்கு இருப்பது ஒரு முதிர்ச்சியற்ற அறிவு என்பதை கூற 60 வயது பெரியவர் தேவை இல்லை .. 10 வயது சிறுவனே போதும்…

  133. அசுரனின் [பெரியார்] தாடி மயிரைக்கூட அசைக்க முடியாது!
    ———————————————————

    சாதி வெறி தாயுமானவன் பிள்ளைக்கு……..,

    கருப்பு ராஜாவால்
    நன்மை பெற்ற கருப்பர்கள்[தாயுமானவன்]
    வெள்ளை ராஜாவுக்கு
    விசுவாசமாகி
    முதுகில் கத்தி வைக்கிறார்கள்.

    விரோதிகளும் துரோகிகளும்
    ஓரே அணியில்..
    ஆனாலும் வீழ்த்த முடியாத வீரம்.

    அவன் உயிர்..
    அவன் பெயரிலோ
    புகழிலோ இல்லை
    எதிரிகளை அச்சம் கொள்ள வைத்த
    அவனின் உண்மையிலிருக்கிறது.

    எத்தனை அவதாரங்கள் எடுத்தாலும்
    இந்த அசுரனின் தாடி மயிரைக்கூட
    அசைக்க முடியாது.

    ஏன்னெறால்
    இவன்
    எதிரிகளிடமே மண்டியிட்டு
    தவம் செய்து
    வரம் கேட்ட
    மூட அசுரனல்ல.

    எதிரிகளை துவம்சம் செய்து
    துரோகிகளுக்கும்
    அருளிய
    கோபம் நிறைந்த
    அன்பான அசுரன்.

    -வே. மதிமாறன்.

    தாயுமானவன் பிள்ளை://செந்தில்… நீ கவிதை என்று சொன்ன இந்த குப்பையை கொண்டு போய் போர்ட்ல எழுதி கழுத்துல தொங்க போட்டுட்டு உமது பகுத்தறிவு பகலவன் ஈ.வே.ரா. சமாதி பக்கத்துல எங்கேயாச்சு ஒரு ஓரமா உட்கார்ந்துகொள்… உனக்கு பின்னாடி வர சந்ததிங்க பார்த்து படிச்சு தெளிவாயிடுவாங்க என்ன சரியா… கண்டிப்பா என் பேர எழுத மறந்திட கூடாது …//

  134. வினவு,

    வர வர வினவு தமிழ்இந்து .காம் ராஞ்சுக்கு போயிட்டு இருக்கு. எல்லா பார்ப்பன வெள்ளாள ______ இங்க வந்து தான் கழியுது. அதுகல கல்லை கொண்டு அடிச்சா ..அடிக்க உட மாட்டேங்குறீங்க…

    ஆனா அந்த பக்கிங்க அதுகளோட விசத்தை கக்குறதுக்கு இடம் கொடுக்கறீங்க.. இதுக்கு பேருதான் மட்டுறுத்தலாப்பா ……..

    • அஸ்வின் ,

      பிராமணர்-தேவதாசி [கலப்பின் ] முறையற்ற வாரிசு பிள்ளைகள் ,ஆம் தேவரடியார் மகன்கள் …..,

      “நீங்கள் எப்படி எப்போதும் கையில் கள்ளு பானையுடன் தீண்டாசேரியில் மொக்கை கவிதைகளை பாடிக் கொண்டு புலையர்களுடன் ஆடி கொண்டிருப்பீரோ… யாம் அறியோம் பராபரமே”

      “கல்லூரியில் இறுதித் தேர்வில் குறைந்த புள்ளிகள் எடுத்திருந்தும், ஒருவேளை சாதிச்சான்றிதழின் அடிப்படையில் சட்டக் கல்லூரிக்கு இவர் தெரிவு செய்யப்பட்டது அதற்கு காரணமாக இருக்கலாம்”

      “அறிவில் சிறந்த பார்பனர்,வெள்ளாளர் ஆகிய இருவரும் தான் அந்நாளில் நீதி துறை, நிர்வாக துறை(Civil departments) இரண்டையும் கவனித்து கொண்டார்கள்”

      என்று பிற்பட்ட , மிகவும் பிற்பட்ட, தலித்தியர் மக்கள் அறிவு அற்றவர்கள் என்று கூறுவதில் என்ன வியப்பு இருக்க முடியும் .

      • அஸ்வின் ,

        தமிழர்களை [பிற்பட்ட , மிகவும் பிற்பட்ட, தலித்தியர் மக்கள்] அறிவு இல்லாதவர்கள் என்றும் ,பார்பனர்,வெள்ளாளர் ஆகிய இருவரும் தான் அறிவு உள்ளவர்கள் என்றும் ,

        சாதிச்சான்றிதழின் அடிப்படையில் படிப்பவர்கள் அறிவு இல்லாதவர்கள் என்றும் ,

        தமிழர்களை “தீண்டாசேரியில்”,”புலையர்களுடன்” என்றும் கூறும்

        இந்த பிராமணர்-தேவதாசி [கலப்பின் ] முறையற்ற வாரிசு பிள்ளைகள் ,ஆம் தேவரடியார் மகன்கள் பற்றீய வரலாறு உங்களுக்கு தெரியாதா ?

        “தேவரடியார் முதலி ,பிள்ளை பட்டங்களும் ஆய்வு” தொடரும்……………….

        • அஸ்வின் ,

          முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணாதுரையை

          “பிற்பட்ட , மிகவும் பிற்பட்ட, தலித்தியர் மக்கள் விரோதியான”

          சுப்பிரமணியன்சாமி, அறிஞர் அண்ணாதுரை ஒரு “அரைப் பிராமணர்”

          என்று உரிமை கொண்டாடி பாராட்டும் மர்மம் என்ன ?

          “தேவரடியார் முதலி ,பிள்ளை பட்டங்களும் ஆய்வு” தொடரும்……………….

    • அஸ்வின் ,

      சாதி வெறி பிடித்த பார்பன-தேவதாசி எச்சமான “யாழ் வெள்ளாளன் வியாசன்” ஓடும் ஓட்டத்தை பார்தீர்கலா !

      //இனிமேலும் சாதி வெறி பிடித்த செந்திலுடன் பேசினால், அவரது சாதி வெறியும், அவரது பேச்சு வழக்கும் எனக்கும் தொற்றி விடுமோ என்று பயமாக இருக்கிறது. அதனால் அவர் என்ன உளறினாலும் நான் பதிலெழுதப் போவதில்லை.//

  135. தேவரடியார் ஆய்வும் முதலி ,பிள்ளை பட்டங்களும் :
    ————————————————————————–
    உண்மை தான் அம்பி!

    நிறைகள்:
    ————
    [1]இவர்கள் [தேவரடியார் என்போர்] பல்வேறு சாதிகளிலிருந்து வந்தபோதும் பின்னாளில் இவர்களே ஒரு சாதியாயினர். தமிழகச் சாதிகள் பலவும் காலப்போக்கில் இப்படியெல்லாம் உருவானவைதானே. பிற மொழிக் கலப்பு உட்பட எல்லாச் சாதிகளிலும் ஏற்பட்ட மாற்றங்கள் இதிலும் நிகழ்ந்தன. ‘சின்னமேளம்’, ‘பெரியமேளம்’ முதலான பிரிவுகளும் உருவாயின.

    [2]முதலியார், பிள்ளை [இவை சாதிப் பெயர்கள் அல்ல அம்பி ] முதலான பட்டப் பெயர்களையும் இவர்களும் பயன்படுத்திக் கொண்டனர்.

    [3]மத்திய காலத்தில் ஏற்பட்ட வேலைப் பிரிவினைகளின் ஊடாக சிலப்பதிகாரக் காலம் தொடங்கி வளர்ந்து வந்த தமிழின் வளமான இசை மற்றும் நாட்டியப் பாரம்பரியத்திற்கு உரியவர்களாக இவர்கள் ஆயினர்.

    [4]பெண்களுக்குக் கல்வி மறுக்கப்பட்ட நமது சமூகத்தில், கல்வி கற்கும் வாய்ப்புப் பெற்றவர்களாகவும் தேவரடியார்களே இருந்தனர். அச்சுக் கோர்ப்பு முறையைத் தமிழுக்கு அறிமுகப்படுத்திய சீகன்பால்கு அக்காலக் கல்வி முறையின் பாடத்திட்டங்கள் குறித்துச் சேகரித்துள்ள தகவல்கள் இதற்குச் சான்று ( முத்துப்பழனி, புட்டலக்‌ஷ்மி நாகரத்தினம்மாள் முதலியோர் சில எடுத்துக்காட்டுகள்.

    [5]மூவேந்தருக்கு பிந்தைய காலங்களில், இவர்கள் கோவிற் பூசகர்கள், நிர்வாகிகள், ஊர்ப் பெரியமனிதர்கள் ஆகியோரின இச்சைகளைத் தீர்த்துக் கொள்வதற்கான பண்டங்களாகப் பயன்படுத்தப்பட்டதோடன்றி, இவர்களின் முதுமைக் காலம் ம்கவும் அவலத்துக்குரிய ஒன்றாக அமைந்தது.

    [6]காலங்காலமாக இப்படிப் பாலியல் சுரண்டல்களுக்க்கு ஆட்பட்டு வந்த இச் சமூகம் சென்ற நூற்றாண்டில் இப் பொட்டுக்கட்டும் அவலத்திலிருந்து விடுபட்ட வரலாற்றையும், அதில் முத்துலட்சுமி, ராமாமிர்தம் ஆகியோரின் பங்கையும், திராவிட இயக்கம் இதில் முன் நின்றதையும், சத்தியமூர்த்தி முதலானோர் இந்தியப் பாரம்பரியம் என்கிற வகையில் தெவதாசி முறையை ஆதரித்துப் பேசிய வரலாற்றையும், காக்க முயன்று தோற்ற கதையையும் நாம் அறிவோம்.

    [7]திராவிட இயக்கம் தவிர காந்தியடிகளும் முத்துலட்சுமி ரெட்டிக்கு ஆதரவாக இருந்தது குறிப்பிடத்தக்கது. தமிழகச் சுற்றுப்பயணம் ஒன்றில் அவர் அத்தனை கூட்டங்களிலும் தேவதாசிமுறை ஒழிப்பை ஆதரித்துப் பேசியது குறிப்பிடத்தக்கது

    [8]தேவதாசியரால் காபாற்றப்பட்டு வந்த தமிழ்நாட்டிய மரபும் (‘சதிர்’) இங்கே ‘கர்நாடக சங்கீதமாகவும்’, ‘பரத நாட்டியமாகவும்’ உருமாற்றப்பட்டது.

    [8]இம் மாற்றத்துக்கு திரு பத்மா சுப்பிரமணியம் போன்றோர் இதில் பெரும் பங்கு வகித்தனர். தேவதாசி மரபில் வந்த கலை என்கிற உண்மை இவர்களுக்கு இழுக்காக இருக்கும் என்பதால், தேவதாசியரின் பங்கு இவர்களால் மூடி மறைக்கப்பட்டது. சதிர் பரதமாகியது.

    [9]எனவே இந்தக் கலையின் தமிழ் வேர்களையும், இதக் காப்பாற்றி வந்ததில் தேவதாசியரின் மரபையும் நாம் அழுத்திச் சொல்ல வேண்டியுள்ளது. அப்படிச் சொல்வது யாராக இருந்தபோதிலும் அதை நாம் வரவேற்க வேண்டியவர்களாகவே இருக்கிறோம்.

    [முனைவர் சொர்ணமாலா அவ்ர்களீன் நாட்டியம் பற்றீய phd ஆய்வுகள் பரத நாட்டியத்தில் தேவதாசியரின் மரபை ஆய்வு செய்கின்றது.]

    [10]ஆனால் இன்று தேவதாசி முறையை முனைவர் சொர்ணமாலா போன்ற பார்ப்பனர் மட்டும் போற்றவில்லை. மணியரசனின் ‘தமிழ்த் தேசப் பொதுவுடமைக் கட்சி’ போன்ற தமிழ்த் தேசிய அமைப்புகளும் போற்றிப் புகழ்கின்றன. அவர்கள் ராஜராஜ சோழன் போன்றோரை தமிழ் வீரத் திரு உருக்களாகப் பார்க்கின்றனர். பெருமிதத்திற்குரிய சோழர் காலத்தை கம்யூனிஸ்டுகள் நில உடைமை என்றும், பெரியாரியர்கள் பார்ப்பனீயம் என்றும் இதுகாறும் கீழ்மைப்படுத்தி விட்டனரே என வெளிப்படையாக ஓலமிடுகின்றனர்.

    குறைகள் :
    ——————-
    [1]இந்த தேவதாசி மக்கள் மூத்தோரை மதிக்க மாட்டார்கள்.தமிழ் இலக்கியத்தில்,திருக்குறளில் கூறிய தர்மம் நீதி நியாயங்கள் எதனையும் மதிக்க மாட்டார்கள். அவர்கள் தமிழர்களும் அல்ல .ஏனென்றால் அவர்கள் தமிழ் பேசும் தெலுங்கு வடுகர்கள்.தேவதாசி மரபை சேர்ந்த வெள்ளாள முதலியார்கள்.தாய் வழி சமூகத்தவர்கள்.தாயை மாத்திரம் மதிப்பவர்கள்.தகப்பன்மார் பலர் வந்து போவர்.தாய் மாத்திரம் அங்கே இருப்பாள்.தாய் குறிப்பாக பிராமணர்களின் வைப்பாட்டியாக இருந்தே பிள்ளைகளை பெறுவாள்.[சேர்.பொன்னம்பலம் இராமநாதன் வெள்ளாளர் தான் அனால் அவர் தேவதாசி வம்சத்தை சேர்ந்தவர் என்பது எதனை பேருக்கு தெரியும்? தேவதாசி வம்சத்தவர் மினுக்கும் கொழுப்பும் நிறைந்தவர்கள் என்பது சொல்லித்தான் தெரியவேண்டும் என்பதில்லை.சேர்.பொன்னம்பலம் இராமநாதன் தேவதாசி வம்சத்தை சேர்ந்த வெள்ளாள முதலியார்.]

    [2]இந்த சமூகம் மினுக்கமும் கொழுப்பும் தடிப்புமாக இருக்கும்.நீதியைப் பற்றி சிந்திக்காது.மற்றவரை சாதியின் பெயரால் அழைத்து அவர்களை அவமானப் படுத்தும்.ஏனென்றால் அவர்கள் தேவதாசி மரபை சேர்ந்த வெள்ளாள முதலியார்கள்.தகப்பன்மார் வந்து போவர்.தாய் மாத்திரம் அங்கே இருப்பாள்

    [3].யாழ்ப்பாணத்து வெள்ளாளர்களில் சில பிரிவினர் அந்த தேவதாசி வழிவந்தவரே.பத்தொன்பதாம் நூற்றாண்டுவரை நல்லூரில் தேவதாசி கலாசாரம் அனுஸ்டிக்கப் பட்டு வந்தது.இப்பொழுது அது மறைந்தாலும் அதன் தாக்கம் சாதிய வடிவில் தேங்கி நிற்கின்றது.பதினாறாம் நூற்றாண்டுகளுக்குப் பின் கோயில் அதிகாரங்கள் எல்லாம் வெள்ளாள முதலியார்களிடமே போய் விட்டதற்கு இதுவே பிரதான காரணம்.தெலுங்குப் பிராமணர்கள் தங்கள் வைப்பாட்டி மக்களிடம் கோயில் அதிகாரங்களை எல்லாம் முழுமையாக தாரை வார்த்துவிட்டார்கள்.சாதியம் என்ற வேசிக்கலாசாரத்துக்கும் தேவதாசி மரபை சேர்ந்த வெள்ளாள முதலியார்கள்தான் காரணம்.

    [4]இவர்களுக்கே கல்வியில் உத்தியோகத்தில் எப்பொழுதும் முன்னுரிமை வழங்கப் பட்டது.கிறிஸ்தவ மிசனரிகளின் முயற்சியால் தான் பிற சமூகங்களும் கல்வியிலும் உத்தியோகத்திலும் பங்கு வகிக்க முடிந்தது.தேவதாசி வெள்ளாள முதலியார்கள் தமிழ் வெள்ளாளர்களை ஒரு போதும் மதித்தவர்களல்ல.

    [5]வெள்ளாளர் என்றால் அது உயர்சாதி என்று அர்த்தமும் அல்ல.முதலி,பிள்ளை,பெரிய கவ்ரவப் பட்டம் என நினைத்து தேவரடியார்கள் வழிவந்தோரும் தங்களை பிள்ளை முதலியார் எனக் கூற தயங்கவில்லை.(Off springs of devadasi style themselves as Pillai and Mudaliyaar.(Cast and tributes of saouth indian.vol V page-84)வெள்ளாளர் என்றால் சூத்திரன்.சூத்திரன் என்றால் நாலாம் சாதி அதாவது தாசி மக்கள்.அவர்கள் பிராமணனுக்கு அடிமை ஊழியம் செய்ய இந்துக்கடவுளான பிரம்மாவில் காலினால் பிறப்பிக்கப் பட்டவர்.இன்றைக்கும் வெள்ளாளர் இந்துமதத்தை விட்டு வெளியேறாவண்ணம் இருப்பதற்கு இதுவே காரணம்

    //மூவேந்தருக்கு பிந்தைய காலங்களில் கோயில் பணி, கலைப்பணி செய்து வருவோர் என்ற நிலையிலிருந்து பரத்தையர்களின் நிலைக்கு தள்ளப்பட்டனர்.. இந்த நிலையில் அவர்களின் பெயரும் தேவடியாள் என்று இழிசொல்லாகியது, அவர்களுக்குப் பிறந்தோரும் ஒரு குலமாக, தனிச்சாதியாகப் பிரித்துவைக்கப்பட்டனர்.. இவர்களை எந்த சாதியினருமே தங்களுடன் கலக்கவிடவில்லை.. இத்தொழிலிருந்து இவர்களை விடுதலை செய்ய சென்ற நூற்றாண்டில் சட்டம் கொண்டுவர வேண்டியிருந்தது..//

    • Dear K.Senthilkumaran,

      Very impressive.

      You are my hero not only for copy-pasting a quote from Vinavu (another hero of mine).

      You are my hero for being here as a protector of names of Periyar, Kamaraj, comrades who
      avenged Venmani martyrs, etc.

    • செந்தில் குமரனின் ஆதாரமற்ற ‘காப்பி பேஸ்ட்’ உளறல்களால் வினவின் தரம் கெட்டுப் போகிறது. சும்மா படிப்பறிவற்ற, சாதிவெறியும், சாதிக்காழ்ப்புண்ர்வும் கொண்டவர்களின் வலைப்பதிவுகளில் காணப்படும், ஆதராமற்ற உளறல்களை இங்கு வந்து கொட்டுகிறார். ___________ செந்திலின் உளறல்களைப் பார்க்கும் போது அவர் உண்மையிலேயே சாதிச் சான்றிதழின் உதவியுடன் தான் பல்கலைக்கழகம் போயிருப்பார் என்பதில் யாருக்கும் சந்தேகமேற்படாது. 🙂

      எனக்கு சாதிப்பாகுபாடுகளில் எந்தவித ஈடுபாடுமில்லை, என்னுடைய வாழ்க்கையில் சாதியடிப்படையில் எந்த சலுகைகளையும் நான் பெற்றதுமில்லை. சாதி எனக்கு எந்த விதத்திலும் உதவியதில்லை. சாதியடிப்படையில் நான் யாரையும் விரும்பியதோ அல்லது வெறுத்ததோ இல்லை. என்னுடைய சாதி என்னவென்று இணையத்தளங்களில் எங்குமே நான் குறிப்பிட்டதில்லை. யாழ்ப்பாண் வெள்ளாளர்களை மட்டுமல்ல, பறையர்களையும் ஆதரித்து எனது கருத்தைத் தெரிவித்திருக்கிறேன். பார்ப்பனர்களையும், வன்னியர்களையும் எதிர்த்துமிருக்கிறேன். நான் தமிழர்களை சாதியடிப்படையில் பிரிப்பவர்கள் அனைவரையும் எதிர்க்கிறேன். அதனால் என்னுடைய பார்வையில் சாதியடிப்படையில் எல்லா சலுகைகளையும் பெற்றுக் கொண்டு, சாதியொழிப்பு பேசிக் கொண்டே தமிழர்களை சாதியிடைப்படியில் பிரிக்கும் செந்தில் போன்றவர்களும் எதிர்க்கப்பட வேண்டியவர்களே.

      1. Cast and tributes of saouth indian.vol V page-84 இல் இப்படி எதுவுமே இல்லை. Page 84 இல் Badaga என்ற சாதியைப் பற்றி உள்ளது.

      2.இந்த உளறல்களை எல்லாம் செந்தில் இந்த வலைப்பதிவில் இருந்து தான் எடுத்திருக்கிறார். http://yaalppaanam.wordpress.com

      3. அந்த வலைப்பதிவை எழுதியவரின் நோக்கம் ஈழத்தமிழர்களைச சாதியடிப்படையில் பிரித்து, சிங்களவர்களுக்கு உதவுவது. குலத்துக்கும் குணத்துக்கும் என்ன சம்பந்தம் என்று எனக்குத் தெரியாது. இப்படியான செயல்களைச் செய்பவர்களைப் பார்த்து அவன் “சாதிப்புத்தியைக் காட்டுகிறான்” அல்லது “குலத்தளவேயாகுமாம் குணம்” என்பார்கள் யாழ்ப்பாணத்தில். அதாவது தனது இனத்தை இழிவு படுத்துகிறவன், காட்டிக் கொடுப்பவன் தான் இழிந்த சாதியைச் சேர்ந்தவன்.

      4. செந்திலுக்கு வரலாறு பற்றி எதுவும் தெரியாது என்பது இங்கு எல்லோருக்கும் தெரியும் அதனால் அவருடன் வரலாறு பற்றிப் பேசுவது முட்டாள்தனம். பிள்ளை, முதலியார் என்ற பட்டங்கள் முறையே பாண்டியர்களாலும், பல்லவர்களாலும் அரசவையில் கணக்கர்களாக, மந்திரிகளாக இருந்த வேளாளர்களுக்கு அளித்த பட்டங்கள். அதிலிருந்து தான் கணக்குப்பிள்ளை என்ற பெயர் உருவானது.

      5. செந்தில் இனிமேலாவது ஆதாரமற்ற காப்பி பேஸ்ட் செய்யும்போது, அதில் கூறப்படும் ஆதரங்களை அவரும் ஒருமுறை சரி பார்ப்பது நல்லது, அப்படிச் செய்ய அவருக்குத் தெரியாது விட்டால் அவர் தான் சாதிச்சான்றிதழால் பல்கலைக் கழகம் போகவில்லை என்று எப்படித்தான் வாதாடினாலும் யாரும் நம்பமாட்டார்கள், நம்பவும் முடியாது. 🙂

      • வினவு , காப்பாத்துங்க … காப்பாத்துங்க இந்த வியாசன் மொக்கை இடம் இருந்து காப்பாத்துங்க!

        [1]”Castes and Tribes of Southern India” Vol. 1 to 7 என்று 7 தொகுப்பாக Edgar Thurston, C.I.E.,
        Superintendent, Madras Government Museum அவர்களால் எழதப்பட இப் புத்தகம் 1909 ஆம் ஆண்டு பதிப்பிக்கபபட்டது.

        [2]வியாசன் மொக்கையர் இப் புத்தகத்தீன் “vol 5 அய் ” படிப்பதற்கு பதிலாக “vol 1 அய் ” படித்துவிட்டார் !
        “vol 1 ல்” “Badaga” என்ற மக்களை பற்றி விவரங்கள் இருப்பது உண்மை ! இப் புத்தகத்தீன் vol 1 html இணைப்பை கீழே கொடுத்து உள்ளேன்.

        http://www.gutenberg.org/files/42991/42991-h/42991-h.htm

        [3] “Castes and Tribes of Southern India” “vol 5 ல்” கீழ் பக்கம் 84ல் கண்ட விவரங்கள் தெளிவாக உள்ளது.

        “—————- The title Mudali is used chiefly by the offspring of Dēva-dāsis (dancing-girls), Kaikōlans, and Vellālas. The Vellālas generally take the title Mudali in the northern, and Pillai in the southern districts————”

        இப் புத்தகத்தீன் vol 5ன் html இணைப்பை கீழே கொடுத்து உள்ளேன்.

        http://www.gutenberg.org/files/42995/42995-h/42995-h.htm

        [4] வரலாற்று ஆவணமான இப் புத்தகத்தில் உள்ள விவரங்களை கூட சரியான vol 5ல் [தொகுப்பு 5ல் ] பார்க்க கூட தெரியாத மொக்கையர் வியாசன் மற்றவர் கல்வி அறிவை “சாதி அடிப்படையில்” சந்தேகித்து , அவர்[வியாசன் ] “பிராமணர்-தேவதாசி [கலப்பின் ] எச்சம் ” என்பதை சரியாக நிருபணம் செய்கின்றார்.

        [5] வினவு,அம்பி,அஸ்வின்,திப்பு, எல்லாரும் ஓடுங்க…. ஓடுங்க….. வியாசன் மொக்கை வருது… துரத்திகொண்டு வருது ஓடுங்க…. ஓடுங்க….. உங்கள் மீதும் கழியப்போவுது ஓடுங்க…..

        வியாசன் என்ற மொக்கை கூறியது ://1. Cast and tributes of saouth indian.vol V page-84 இல் இப்படி எதுவுமே இல்லை. Page 84 இல் Badaga என்ற சாதியைப் பற்றி உள்ளது.//

        வியாசன் என்ற மொக்கை என் மீது கழிந்தது ://செந்தில் இனிமேலாவது ஆதாரமற்ற காப்பி பேஸ்ட் செய்யும்போது, அதில் கூறப்படும் ஆதரங்களை அவரும் ஒருமுறை சரி பார்ப்பது நல்லது, அப்படிச் செய்ய அவருக்குத் தெரியாது விட்டால் அவர் தான் சாதிச்சான்றிதழால் பல்கலைக் கழகம் போகவில்லை என்று எப்படித்தான் வாதாடினாலும் யாரும் நம்பமாட்டார்கள், நம்பவும் முடியாது//

  136. வியாசன் , Cast and tributes of south indian.vol V page-84 அய் படியுங்கள் என்று reference கொடுத்தல் தவறாக vol 1 அய் நீங்கள் படித்து விட்டு வந்து என் மீது கழிகின்றிர்களே ! இவ்வளவு தான் “பிராமணர்-தேவதாசி [கலப்பின் ] எச்சமான” உங்களின் அறிவு திறனா?

    வியாசன் என்ற மொக்கை என் மீது கழிந்தது ://செந்தில் இனிமேலாவது ஆதாரமற்ற காப்பி பேஸ்ட் செய்யும்போது, அதில் கூறப்படும் ஆதரங்களை அவரும் ஒருமுறை சரி பார்ப்பது நல்லது, அப்படிச் செய்ய அவருக்குத் தெரியாது விட்டால் அவர் தான் சாதிச்சான்றிதழால் பல்கலைக் கழகம் போகவில்லை என்று எப்படித்தான் வாதாடினாலும் யாரும் நம்பமாட்டார்கள், நம்பவும் முடியாது//

  137. viyasan,

    மீண்டும் சொல்கின்றேன்.

    கல்வி-வேலை வாய்ப்பில் இட ஒதுக்கிடு மூலம் சிறிதாவது சமுக,பொருளாதாரத்தில் முன்னேறும் எம் தமிழர்களை[பிற்பட்ட , மிகவும் பிற்பட்ட, தலித்தியர் மக்களை] நீங்கள் இழிவு செய்யும் போது எனக்கு உங்கள் சட்டையை பிடித்து சண்டை போட வேண்டும் என்று தோன்றுகிறது.

    viyasan://எனக்கு சாதிப்பாகுபாடுகளில் எந்தவித ஈடுபாடுமில்லை, என்னுடைய வாழ்க்கையில் சாதியடிப்படையில் எந்த சலுகைகளையும் நான் பெற்றதுமில்லை. சாதி எனக்கு எந்த விதத்திலும் உதவியதில்லை. சாதியடிப்படையில் நான் யாரையும் விரும்பியதோ அல்லது வெறுத்ததோ இல்லை. என்னுடைய சாதி என்னவென்று இணையத்தளங்களில் எங்குமே நான் குறிப்பிட்டதில்லை. யாழ்ப்பாண் வெள்ளாளர்களை மட்டுமல்ல, பறையர்களையும் ஆதரித்து எனது கருத்தைத் தெரிவித்திருக்கிறேன். பார்ப்பனர்களையும், வன்னியர்களையும் எதிர்த்துமிருக்கிறேன். நான் தமிழர்களை சாதியடிப்படையில் பிரிப்பவர்கள் அனைவரையும் எதிர்க்கிறேன். அதனால் என்னுடைய பார்வையில் சாதியடிப்படையில் எல்லா சலுகைகளையும் பெற்றுக் கொண்டு, சாதியொழிப்பு பேசிக் கொண்டே தமிழர்களை சாதியிடைப்படியில் பிரிக்கும் செந்தில் போன்றவர்களும் எதிர்க்கப்பட வேண்டியவர்களே.//

    • இட ஒதுக்கீடு கொள்கையின் அவசியம் இன்னும் உள்ளது. அடிமட்ட அளவில் இன்னும் சாதிய வேறுபாடுகள், தீண்டாமை இன்னும் உள்ளது. வேண்டுமென்றால் வருங்காலத்தில் இட ஒதுக்கீட்டை வைத்து முன்னேறியவர்கள், தங்களுக்கு இனி இட ஒதுக்கீடு தேவை இல்லை என்று முன் வரலாம். தொடர்ந்து இரண்டு அல்ல மூன்று தலைமுறையினர் முன்னேறிய பின் அவர்களாகவே முன்வந்து இட ஒதுக்கீட்டை மறுக்கலாம். இதில் சாதி அரசியலோ, சந்தர்ப்பவாத அரசியலோ குட்டையை குழப்பாமல் இருந்தால் இருந்தால் நன்றாக இருக்கும்.

  138. திருவாளர் செந்தில் அவர்கள் “கழிந்தது, கழியப்போவுது” என்றெல்லாம் எழுதி அவரைப் பற்றிய மேலதிக விவரங்களை எல்லோருக்கும் சொல்ல முயல்கிறாரோ என்னவோ எனக்குத் தெரியாது. 🙂

    அந்தப் புத்தகம் Castes and Tribes of Southern India” ஒரு வெளிநாட்டவரின் பார்வையில் எழுதப்பட்டது. அதில் உள்ளவை உண்மையாக இருந்தாலும் கூட, தமிழ், தமிழினம், பிரபாகரன், பெரியார், சிறியார் என்று பலரது பெயரையும் துணைக்கழைத்து சாதியொழிப்பைப் பற்றி பேசும் எந்த தமிழனும் , சாதியின் அடிப்படையில் சக தமிழர்களை இப்படி இழிவு படுத்துவான் என நான் இதுவரை எதிர்பார்த்ததில்லை.

    சாதியொழிப்பு பற்றி பேசும் பெரியாரிஸ்டுக்களின் அசிங்கத்தை இப்பொழுது தான் பார்க்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. உண்மையில் தமிழ்நாட்டில் ஆதிக்க சாதியினரிடம் சாதி வெறி இவ்வளவு மோசமான நிலையில் இருப்பதற்குக் காரணம், தாழ்த்தப்பட்ட தலித்துக்களும் சாதி வெறியில் எந்தளவிலும் குறைந்தவர்கள் அல்ல என்பதால் தான் என்ற உண்மை செந்திலின் உளறல்களைப் பார்க்கத் தெரிகிறது. தமிழரல்லாத ஈவேராமசாமி அவரகள் சாதியை ஒழிக்கிறேன் என்ற பெயரில் தலித்துக்களிடம் அவர்களின் தமிழ்ச் சகோதரர்களையே வெறுக்குமளவுக்கும் , இழிவு படுத்துமளவுக்கும் வெறியை ஏற்படுத்தி, தமிழ்னத்தை பிளவு படச் செய்து விட்டுப் போய்விட்டார் போல் தெரிகிகிறது. ஆனால் சாதியும் இன்னும் ஒழியவில்லை.

    தலித்துக்களிடமும், சாதியொழிப்பு பேசும் பெரியாரிஸ்டுக்களிடமும், தமிழ்நாட்டின் முற்போக்குவாதிகளிடம் சாதியை ஒழிக்க வேண்டுமென்ற நோக்கத்தை விட, ஆதிக்கசாதி தமிழர்களைப் பழிவாங்க வேண்டும், அவர்களை இழிவு படுத்த வேண்டும் என்ற வெறி தான் அதிகமாக உள்ளதென்பது வினவில் செந்திலின் பதிவுகளிலிருந்து தெரிகிறது. இவர்களின் இப்படியான செயல்களையும், சாதி வெறியையும், காழ்ப்புணர்வையும் பார்க்கும் போது, உண்மை தெரியாமல், இவ்வளவு காலமும், தமிழ்நாட்டின் ஆதிக்க சாதிகளை வில்லன்களாகவும், தலித்துக்களையும், பெரியாரிஸ்டுக்களையும் தமிழினத்தின் சாதிப்பிளவுகளை நீக்கப் போராடும் போராளிகளாகவும், ஒன்றுமறியாத அப்பாவிகள் போலவும் நான் நினைத்துக் கொண்டதை எண்ணி வருந்துகிறேன்.

    Castes and Tribes of Southern India” Vol. 1 to 7 என்ற அந்தப் புத்தகத்திலேயே “as it is also the title of weavers.58 Mudali further occurs as a title of some Jains, Gadabas, Ōcchans, Pallis or Vanniyans, and Panisavans. Some Pattanavans style themselves Varūnakula Mudali. என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால் செந்தில் இங்கு முதலியார்களையும், பிள்ளைமார்களையும் மட்டும் இங்கு அவமதிக்கவில்லை, வன்னியர்கள், நெசவாளர்கள் போன்ற ஏனைய தமிழர்களையும் தான்.

    இனிமேலும் சாதி வெறி பிடித்த செந்திலுடன் பேசினால், அவரது சாதி வெறியும், அவரது பேச்சு வழக்கும் எனக்கும் தொற்றி விடுமோ என்று பயமாக இருக்கிறது. அதனால் அவர் என்ன உளறினாலும் நான் பதிலெழுதப் போவதில்லை.

    “கோவில் யானை ஒன்று நன்றாகக் குளித்துவிட்டு சுத்தமாக வந்து கொண்டிருந்தது.ஒரு ஒடுக்கமான பாலத்தில் அது வரும் போது எதிரே சேற்றில் குளித்துவிட்டு ஒரு பன்றி, வாலை ஆட்டிக் கொண்டே வந்தது. யானை ஒரு ஓரத்தில் ஒதுங்கி நின்று அதற்கு வழி விட்டது. அந்தப் பன்றி, எதிரே இருந்த இன்னொரு பன்றியிடம், “பார்த்தாயா, அந்த யானை என்னைக் கண்டு பயந்து விட்டது!” என்று சொல்லிச் சிரித்தது. அந்த யானையைப் பார்த்து இன்னொரு யானை, “அப்படியா, நீ பயந்து விட்டாயா?” என்று கேட்டது.

    அதற்குக் கோவில் யானை கீழ்க்கண்டவாறு பதில் சொன்னது:

    “நான் தவறி இடறி விட்டால் பன்றி நசுங்கி விடும். மேலும் நான் சுத்தமாக இருக்கிறேன். பன்றியின் சேறு என் மேல் விழுந்து நானும் அசுத்தமாகி விடுவேன். இந்தக் காரணங்களால், நான் ஒதுங்கிக் கொண்டேன்.”

    • [1]”Castes and Tribes of Southern India” was written by Edgar Thurston, C.I.E.,
      Superintendent, Madras Government Museum assisted by an Indian K,Rangachari of the Madras Gov Museum based on the cast wise census taken during 1900’s.

      [2] It is only the authenticated document of the Gov of India during British rule and also after Independence.

      [3]This document is valid not only to take decisions for the enlistment of socially oppressed people during British period and also after independence

      [4]Based on this document only landless people have been provided land for cultivation during British period.

      [5] வியாசன் ரோமன் எழுத்து I க்கும் V க்கும் வித்தியாசம் தெரியாம புத்தகத்தீன் தொகுபபை[vol ] மாற்றி மாற்றி படித்து விட்டு வந்து இங்கு வந்து கழியுது !

      [6]வியாசன் போன்ற பார்பன-தேவதாசி கலப்பு எச்சங்களுக்கு கல்வி-வேலை வாய்ப்பில் இட ஒதுகீட்டை பெற்று முன்னேறும் பிற்பட்ட , மிகவும் பிற்பட்ட, தலித்தியர் மக்களை பார்த்தால் பொறாமையாகவும் , வேதனையாகவும் இருப்பது இயல்பு தானே!

      //அந்தப் புத்தகம் Castes and Tribes of Southern India” ஒரு வெளிநாட்டவரின் பார்வையில் எழுதப்பட்டது. அதில் உள்ளவை உண்மையாக இருந்தாலும் கூட, தமிழ், தமிழினம், பிரபாகரன், பெரியார், சிறியார் என்று பலரது பெயரையும் துணைக்கழைத்து சாதியொழிப்பைப் பற்றி பேசும் எந்த தமிழனும் , சாதியின் அடிப்படையில் சக தமிழர்களை இப்படி இழிவு படுத்துவான் என நான் இதுவரை எதிர்பார்த்ததில்லை.//

    • [1]”பார்பன-தேவதாசி கலப்பு எச்சங்கள்” தமிழர்க்கு சகோதரர்கள் இல்லை.

      [2]வியாசன் மொழிநடையில் கூறினால் வந்தேரிகலான பார்பனர்களீன் தேவதாசி கலபு எச்சங்கள் தமிழர்கள் இல்லை

      //தமிழ்ச் சகோதரர்களையே வெறுக்குமளவுக்கும் , இழிவு படுத்துமளவுக்கும் வெறியை ஏற்படுத்தி, தமிழ்னத்தை பிளவு படச் செய்து விட்டுப் போய்விட்டார் போல் தெரிகிகிறது. ஆனால் சாதியும் இன்னும் ஒழியவில்லை.//

    • வியாசா மீண்டும் மொக்கையடிக்க தொடங்கிட்டியா ?
      சரி சரி அந்த யானைக்கு அப்பனே ஆரிய யானை தானே வியாசா !

      //அதற்குக் கோவில் யானை கீழ்க்கண்டவாறு பதில் சொன்னது:

      “நான் தவறி இடறி விட்டால் பன்றி நசுங்கி விடும். மேலும் நான் சுத்தமாக இருக்கிறேன். பன்றியின் சேறு என் மேல் விழுந்து நானும் அசுத்தமாகி விடுவேன். இந்தக் காரணங்களால், நான் ஒதுங்கிக் கொண்டேன்.”//

    • [1]The title Mudali is used “chiefly” by the offspring of Dēva-dāsis (dancing-girls).வெள்ளாளர் என்றால் அது உயர்சாதி என்று அர்த்தமும் அல்ல.முதலி,பிள்ளை,பெரிய கவ்ரவப் பட்டம் என நினைத்து தேவரடியார்கள் வழிவந்தோரும் தங்களை பிள்ளை முதலியார் எனக் கூற தயங்கவில்லை.

      [2]முதலி, பிள்ளை [இவை சாதிப் பெயர்கள் அல்ல வியாசன்] முதலான பட்டப் பெயர்களையும் இவர்களும் [தேவதாசி மக்கள்] பயன்படுத்திக் கொண்டனர்.

      [3]யாழ்ப்பாணத்து வெள்ளாளர்களில் சில பிரிவினர் அந்த தேவதாசி வழிவந்தவரே.பத்தொன்பதாம் நூற்றாண்டுவரை நல்லூரில் தேவதாசி கலாசாரம் அனுஸ்டிக்கப் பட்டு வந்தது.இப்பொழுது அது மறைந்தாலும் அதன் தாக்கம் சாதிய வடிவில் தேங்கி நிற்கின்றது.பதினாறாம் நூற்றாண்டுகளுக்குப் பின் கோயில் அதிகாரங்கள் எல்லாம் வெள்ளாள முதலியார்களிடமே போய் விட்டதற்கு இதுவே பிரதான காரணம்.தெலுங்குப் பிராமணர்கள் தங்கள் வைப்பாட்டி மக்களிடம் கோயில் அதிகாரங்களை எல்லாம் முழுமையாக தாரை வார்த்துவிட்டார்கள்.சாதியம் என்ற வேசிக்கலாசாரத்துக்கும் தேவதாசி மரபை சேர்ந்த வெள்ளாள முதலியார்கள்தான் காரணம். தமிழகத்தில் பிள்ளை,முதலி என்ற “பட்ட பெயர்” [சாதி பெயர்கள் அல்ல ] ஏற்றுகொண்டவர்களில் சிலரும் ,யாழ்பான பொன்னம்பலம் இராமநாதன் வெள்ளாளர்,ஆறுமுக நாவலர் போன்றவர்களும் தானே பிராமணர்-தேவதாசி [கலப்பின் ] வாரிசு பிள்ளைகள். இவர்கள் இன்றும் பிராமணனுக்கு அடிமை ஊழியம் செய்கின்றனரே !

      [4]முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணாதுரையை “பிற்பட்ட , மிகவும் பிற்பட்ட, தலித்தியர் மக்கள் விரோதியான” சுப்பிரமணியன்சாமி, அறிஞர் அண்ணாதுரை ஒரு “அரைப் பிராமணர்”
      என்று உரிமை கொண்டாடி பாராட்டும் மர்மம் என்ன ?

      //Castes and Tribes of Southern India” Vol. 1 to 7 என்ற அந்தப் புத்தகத்திலேயே “as it is also the title of weavers.58 Mudali further occurs as a title of some Jains, Gadabas, Ōcchans, Pallis or Vanniyans, and Panisavans. Some Pattanavans style themselves Varūnakula Mudali. என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால் செந்தில் இங்கு முதலியார்களையும், பிள்ளைமார்களையும் மட்டும் இங்கு அவமதிக்கவில்லை, வன்னியர்கள், நெசவாளர்கள் போன்ற ஏனைய தமிழர்களையும் தான்.//

    • // சாதியொழிப்பு பற்றி பேசும் பெரியாரிஸ்டுக்களின் அசிங்கத்தை இப்பொழுது தான் பார்க்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. உண்மையில் தமிழ்நாட்டில் ஆதிக்க சாதியினரிடம் சாதி வெறி இவ்வளவு மோசமான நிலையில் இருப்பதற்குக் காரணம், தாழ்த்தப்பட்ட தலித்துக்களும் சாதி வெறியில் எந்தளவிலும் குறைந்தவர்கள் அல்ல என்பதால் தான் என்ற உண்மை செந்திலின் உளறல்களைப் பார்க்கத் தெரிகிறது. தமிழரல்லாத ஈவேராமசாமி அவரகள் சாதியை ஒழிக்கிறேன் என்ற பெயரில் தலித்துக்களிடம் அவர்களின் தமிழ்ச் சகோதரர்களையே வெறுக்குமளவுக்கும் , இழிவு படுத்துமளவுக்கும் வெறியை ஏற்படுத்தி, தமிழ்னத்தை பிளவு படச் செய்து விட்டுப் போய்விட்டார் போல் தெரிகிகிறது. ஆனால் சாதியும் இன்னும் ஒழியவில்லை. //

      மிகச்சரி வியாசன். இங்குள்ள எவனுக்கும் சாதி ஒழிப்பை பற்றி உணர்வே கிடையாது. அவன் நம்மை இவ்வளவு காலம் அடிமைபடுத்தினான். இப்போ நாம் அவனை மிதிப்போம் என்ற vicious cycle க்குள் தான் செல்கின்றனர். சக்கரம் சுழன்று கொண்டேதான் இருக்கும்- எப்படி சாதி ஒழியும்? செந்தில் மட்டுமல்ல இன்னும் பலர் இந்நிலையிலேயே உள்ளனர். இவர்கள் எடுக்கும் நிலைபாடுகளும் பெரும்பாலும் சாதியை சார்ந்தே உள்ளது. பிறகெப்படி சாதி ஒழியும்? வினவு மற்றுமொரு சாதிக்கட்சி என்பதில் சந்தேகமேயில்லை.

      • தமிழ்நாட்டில் உயர்ந்த சாதியினர் இந்த 21ம் நூற்றாண்டிலும், தலித்துக்களை ஏன் இப்படி வெறுக்கிறார்கள், குடிசைகளை எரிக்கிறார்கள், காதலர்களைப் பிரிக்கிறார்கள், மலம் கூடத் தீற்றுகிறார்கள் என்று நான் வியந்ததுண்டு. அதற்கான காரணம் இப்பொழுது தான் எனக்குத் தெரிகிறது. தமிழ்நாட்டில் நடக்கும் சாதிக் கொடுமைகளுக்கு, ஆதிக்க சாதிகளை மட்டும் குறை கூறுவது எவ்வளவு முட்டாள்தனமென்று புரிகிறது. உண்மையான நிலை தெரியாமல், அதாவது தலித்துக்களும் சாதி வெறியில் சளைத்தவர்கள் அல்ல, அவர்களும் சாதியொழிய வேண்டுமென்பதை விட சாதி வெறியுடன் மற்றவர்களைப் பழி வாங்கத் தான் அலைகிறார்கள் என்று தெரியாமல், பார்ப்பனர்களை எதிர்த்தும், தலித்துக்களின் அமைப்புகளுக்கு, நிதி மற்றும் ஆதரவு வழங்கியது தவறு போன்ற உணர்வு ஏற்படுகிறது. 🙁

        • \\தலித்துக்களும் சாதி வெறியில் சளைத்தவர்கள் அல்ல, அவர்களும் சாதியொழிய வேண்டுமென்பதை விட சாதி வெறியுடன் மற்றவர்களைப் பழி வாங்கத் தான் அலைகிறார்கள் என்று தெரியாமல், பார்ப்பனர்களை எதிர்த்தும், தலித்துக்களின் அமைப்புகளுக்கு, நிதி மற்றும் ஆதரவு வழங்கியது தவறு போன்ற உணர்வு ஏற்படுகிறது. :(//

          அதியமான் பரம்பரையில வந்த எட்டாவது வள்ளல் தலித் அமைப்புகளுக்கு அள்ளி அள்ளி குட்த்துட்டாராமா.இவரே கனடாவுக்கு பஞ்சம் பொழைக்க போன பரதேசி.யாழ்ப்பாண வெள்ளாள வெறி புட்ச இந்த பரதேசி தலித் விடுதலைக்கு அள்ளி அள்ளி குட்தீங்களோ யாராண்ட கத

          பள்ளு பறஎல்லாம் திமிரா இருக்கானுவ பழி வாங்க அலையுறாங்க அதுனாலதா அடி வாங்குரானுவ அப்டீங்கறீங்க.ஏய்யா எந்த ஊர்லயா தலித் மேல்சாதிக்காரன அட்சிருக்கான்.ஆமா நாங்க என்ன தப்பு செஞ்சோம்னு வாயில பீய கரைச்சு ஊத்துரானுங்கனு தெர்யுமா .அத சொல்லு முதல்ல.

          சொந்த நாட்டுல நின்னு போராட துப்பு கெட்ட பரதேசிக்கு லொள்ள பாரு எகத்தாளத்த பாரு.

          • //அதியமான் பரம்பரையில வந்த எட்டாவது வள்ளல் தலித் அமைப்புகளுக்கு அள்ளி அள்ளி குட்த்துட்டாராமா.///

            கொடுத்ததைச் சொல்லிக் காட்டும் வழக்கம் என்னிடம் கிடையாது. அனால் தலித்துக்கள் பழிவாங்கத் தான் அலைகிறார்கள் என்பதையறியாமல் கொடுத்து விட்டேனா என்பது தான் என்னுடைய கவலை. எனக்கும் பல தலித் நண்பர்கள் தமிழ்நாட்டில் உள்ளனர். அதில் ஒரு சிலர் தலித் அரசியலில் தீவிர ஈடுபாடும், தொடர்புமுள்ளவர்கள். எந்த வித எதிர்பார்ப்புமின்றி அவர்களுக்குப் பல வழிகளில் நான் பொருளாதரா ரீதியில் உதவியிருக்கின்றேன் அதற்குக் காரணம் தலித்துக்கள் ஈழத்தமிழர்களிடம் காட்டும் சகோதர உணர்வும் நட்பும், அதே வேளையில் அவர்கள் பொருளாதார ரீதியில் உயர்ந்தால், சாதியொழியும் என்ற நல்லெண்ணமும் தான். ஆனால் அவர்களில் எவரும் இப்படி தமது சாதிவெறி, பழிவாங்கும் முகத்தை இதுவரை காட்டவில்லை.

            //இவரே கனடாவுக்கு பஞ்சம் பொழைக்க போன பரதேசி.யாழ்ப்பாண வெள்ளாள வெறி புட்ச இந்த பரதேசி தலித் விடுதலைக்கு அள்ளி அள்ளி குட்தீங்களோ யாராண்ட கத//
            “பஞ்சம் பிழைக்க போன பரதேசி” ஈழத்தமிழர்ககளிடம் (அதில் பெரும்பான்மை யாழ்ப்பாண வெள்ளாளர்) நிதி கேட்டு நக்கும் பல பேர் தமிழ்நாட்டில் (தலித்துகள் உட்பட) உள்ளார்கள். அவர்களை கலைச்செல்வனுக்குத் தெரியாதிருக்கும் என்று நான் நம்பவில்லை. 🙂

            //பள்ளு பறஎல்லாம் திமிரா இருக்கானுவ பழி வாங்க அலையுறாங்க அதுனாலதா அடி வாங்குரானுவ அப்டீங்கறீங்க.ஏய்யா எந்த ஊர்லயா தலித் மேல்சாதிக்காரன அட்சிருக்கான்.ஆமா நாங்க என்ன தப்பு செஞ்சோம்னு வாயில பீய கரைச்சு ஊத்துரானுங்கனு தெர்யுமா .அத சொல்லு முதல்ல. சொந்த நாட்டுல நின்னு போராட துப்பு கெட்ட பரதேசிக்கு லொள்ள பாரு எகத்தாளத்த பாரு.//
            இப்படிப் பேசுவதைத் தான் “சாதிப்புத்தியைக் காட்டுகிறான்” என்பார்கள் யாழ்ப்பாணத்தில்.. 🙂

            • யாழ்ப்பாண வெள்ளாள வெறி புட்ச கனடாவுக்கு பஞ்சம் பொழைக்க போன பரதேசி viyasan,

              துப்பிருந்தால் பஞ்சம் பிழைக்க போன பரதேசிகளிடம் காசு வாங்கியவர்கள் பேர செல்லு!

              வைகோ ,நெடு,சீமான் இவர்களா ?

              //“பஞ்சம் பிழைக்க போன பரதேசி” ஈழத்தமிழர்ககளிடம் (அதில் பெரும்பான்மை யாழ்ப்பாண வெள்ளாளர்) நிதி கேட்டு நக்கும் பல பேர் தமிழ்நாட்டில் (தலித்துகள் உட்பட) உள்ளார்கள்//

              • //துப்பிருந்தால் பஞ்சம் பிழைக்க போன பரதேசிகளிடம் காசு வாங்கியவர்கள் பேர செல்லு!//

                ஒரு சீட்டுக்காக ‘அன்னை’ சோனியாவின் காலில் விழும் வரை, திருமாவளவன் தானே ஈழத்தமிழர்களின் ஆருயிர் ‘அண்ணனாக’ திகழ்ந்தார், அடிக்கடி கனடாவுக்கும், லண்டனுக்கும்,ஜேர்மனிக்கும், சுவிசுக்கும் பறந்து திரிந்தார், தாய் பிள்ளை போல் பழகினார், ஈழத்தமிழர்களின் வீடுகளில் தங்கினார். எப்ப தொடக்கம் அவர் தலித் அல்லாதவராக மாறினார். சும்மா தேவையில்லாமல் யாரோ உளறுகிறான் என்பதற்காக, நான் உதவி செய்த நண்பர்களின் விபரங்களை இணையத்தளத்தில் கொடுக்குமளவுக்கு நான் ஒன்றும் Weirdo இல்லை. 🙂

                • இந்த இரு dialogஐ யும் விட்ட பொரம்போக்கு யாரு?
                  துப்பிருந்தால் காசு வாங்கியவர்கள் பேர செல்லு!

                  viyasan://“பஞ்சம் பிழைக்க போன பரதேசி” ஈழத்தமிழர்ககளிடம் (அதில் பெரும்பான்மை யாழ்ப்பாண வெள்ளாளர்) நிதி கேட்டு நக்கும் பல பேர் தமிழ்நாட்டில் (தலித்துகள் உட்பட) உள்ளார்கள்//

                  viyasan://சும்மா தேவையில்லாமல் யாரோ “””உளறுகிறான்”””[vinavu note this] என்பதற்காக, நான் உதவி செய்த நண்பர்களின் விபரங்களை இணையத்தளத்தில் கொடுக்குமளவுக்கு நான் ஒன்றும் Weirdo இல்லை. :)//

                • யாழ்பான மொக்கை வியாசன்,

                  சொன்னது என்ன ?

                  வியாசன் said :[1]தமிழ்நாட்டில் உள்ள தமிழ்ர்கள் (தலித்துகள் உட்பட) ஈழத்தமிழர்ககளிடம் நிதி கேட்டு நக்குகின்றனர் !

                  வியாசன் said :[2]உதவி செய்த நண்பர்களின் விபரங்களை இணையத்தளத்தில் கொடுக்குமளவுக்கு நான் ஒன்றும் Weirdo இல்லை!

                  எனவே ” தமிழ்நாட்டு நண்பர்கள் ஈழத்தமிழர்ககளிடம் நிதி கேட்டு நக்குகின்றனர் என்பது தானே பொருள் !

                  வியாசன் said :[3]திருமாவளவன் ஈழத்தமிழர்களின் வீடுகளில் தங்கினார்.திருமாவளவன் தானே ஈழத்தமிழர்களின் ஆருயிர் ‘அண்ணனாக’ திகழ்ந்தார்.

                  அடப்பாவி வியாசா ! தமிழர் விருந்து உபச்சாரம் பற்றி கூட தெரியாமல் இருக்கியே ! வீட்டுக்கு வரும் விருந்தினரை விருந்து உபச்சாரம் செய்வது எமது தமிழர் பண்பாட்டு. சரி மேட்டருக்கு வா !

                  [a ]துப்பிருந்தால் “பஞ்சம் பிழைக்க போன பரதேசிகளிடம்”[ யாழ்ப்பாண வெள்ளாளர் இடம் ] காசு வாங்கியவர்கள் பேர செல்லு!

                  [b ] என்ன “டீலிங்” காக யாழ்ப்பாண வெள்ளாளர் காசு கொடுத்தாங்க ? !

                  [c ] யாழ்ப்பாண வெள்ளாளர் இடம் காசு வாங்கிய தமிழ் நாட்டுகாரர்கள் என்ன உதவி [கூலிக்கு மார் அடிக்கும் வேலை ] செய்தார்கள்.?

                  viyasan://“பஞ்சம் பிழைக்க போன பரதேசி” ஈழத்தமிழர்ககளிடம் (அதில் பெரும்பான்மை யாழ்ப்பாண வெள்ளாளர்) நிதி கேட்டு நக்கும் பல பேர் தமிழ்நாட்டில் (தலித்துகள் உட்பட) உள்ளார்கள்//

                  viyasan://சும்மா தேவையில்லாமல் யாரோ “””உளறுகிறான்”””[vinavu note this] என்பதற்காக, நான் உதவி செய்த நண்பர்களின் விபரங்களை இணையத்தளத்தில் கொடுக்குமளவுக்கு நான் ஒன்றும் Weirdo இல்லை

                  • ஈழத்தமிழர்களிடம் காசு வாங்கியவர்கள் தமிழ் நாட்டில் பலரும் இருக்க ….ஈழத்தமிழர்களுடன் விருந்தினராய் ,அண்ணனாக “மட்டும் ” ப்ழகீய “திருமாவை ” மட்டும் வியாசன் தாக்கும் மர்மம் என்ன ?

                    viyasan://”திருமாவளவன் தானே ஈழத்தமிழர்களின் ஆருயிர் ‘அண்ணனாக’ திகழ்ந்தார், அடிக்கடி கனடாவுக்கும், லண்டனுக்கும்,ஜேர்மனிக்கும், சுவிசுக்கும் பறந்து திரிந்தார், தாய் பிள்ளை போல் பழகினார், ஈழத்தமிழர்களின் வீடுகளில் தங்கினார். எப்ப தொடக்கம் அவர் தலித் அல்லாதவராக மாறினார்”//

            • வியாசன் வாழைப்பழத்தில் “விசம் கலந்த ஊசி” ஏற்றுவது போல பரப்பும் சாதி வெறிக்கு எதிராக அவரை உலுக்குவது போல கேள்வி கேட்கும் என் கருத்துக்களை வினவு ஏன் தடை செய்கின்றது?. 🙂

              • ‘நினைப்புத் தான் பிழைப்பைக் கெடுக்கும்’ என்பார்கள், எந்த உளறலும் என்னை உலுக்கவுமில்லை, உலுக்கவும் முடியாது. சாதியொழிப்பு என்ற விடயத்தில், பல தமிழ்நாட்டுச் சாதியோழிப்பு போராளிகள் என்று சொல்லிக் கொள்வோரை விட, நான் உறுதியாக இருக்கின்றேன். சாதியைப் பற்றி பேசும் எந்த பெரியாரிஸ்டோ அல்லது முற்போக்கு வீரர்களோ, தமது சாதிச்சான்றிதழ்களை கிழித்தெறிந்து விட்டு, நான் சாதியை வெறுக்கிறேன், சாதி அடிப்படையில் தமிழர்களை பிரிப்பதை எதிர்க்கிறேன் என்று காட்ட, சாதியடிப்படையில் கொடுக்கப்படும் சலுகைகளை மறுத்ததாக நான் அறியவில்லை. மாறாக சாதியடிப்படைய்ல் மேலும், மேலும் பிரிவுகளையும், பிளவுகளையும், கட்சிகளையும் ஏற்படுத்துவதிலும், தமிழர்களின் வரலாற்றைக் கொச்சைப்படுத்துவதிலும், தமிழ் அரசர்களுக்கும் சாதிச் சாயம் பூசுவதிலும் தான் முன்னணியில் நிற்கிறார்கள். அதனால், தமிழ்நாட்டின் தாழ்த்தபப்ட்ட சாதி வெறி Weirdo க்கள் என்னைப் பார்த்து சாதிவெறியன் என்பதைப் பார்க்க பார்த்தால் எனக்கு உண்மையில் சிரிப்புத் தான் வருகிறது.

                • ஒரு புரம் பார்பனர் ,பார்பன- எச்சங்கள் பிரதிநிதி வியாசன் , மறுபுரம் பிற்பட்ட , மிகவும் பிற்பட்ட, தலித்தியர் மக்களீன் பிரதிநிதியாக நானும் இருக்கும் போது ,
                  “பார்பன-தேவதாசி கலப்பு எச்ச” வியாசன் தலித்தியர் மக்களை “மட்டும்” இழிவாக பேசும் மர்மம் என்ன ?

                  இதற்கு பெயர் தான் “பார்பன-தேவதாசி கலப்பு எச்ச”[“யாழ்ப்பாண வெள்ளாள வெறி”] வியாசனின் நரிதனம் என்பது !

                  வியாசனின் பார்பான ,பார்பன-தேவதாசி கலப்பு எச்ச வால்கள் இங்கு பிற்பட்ட , மிகவும் பிற்பட்ட, தலித்தியர் மக்களால் வெட்டப்படும் !

                  //அதனால், தமிழ்நாட்டின் தாழ்த்தபப்ட்ட சாதி வெறி Weirdo க்கள் என்னைப் பார்த்து சாதிவெறியன் என்பதைப் பார்க்க பார்த்தால் எனக்கு உண்மையில் சிரிப்புத் தான் வருகிறது.//

              • //அவரை உலுக்குவது போல கேள்வி கேட்கும் என் கருத்துக்களை…..///

                ‘நினைப்புத் தான் பிழைப்பைக் கெடுக்கும்’ என்பார்கள், யாருடைய எந்த உளறலும் என்னை உலுக்கவில்லை, உலுக்கவும் முடியாது. “பனங்காட்டு(யாழ்ப்பாணம்) நரி சலசலப்புக்கு அஞ்சாது.” 🙂

                சாதியடிப்படையில் எந்தச் செயலையும் நான் எனது வாழ்க்கையில் செய்ததில்லை, சாதிப்பாகுபாடு என்றால் என்னவென்றே எனக்குத் தெரியாது. அதில் எனக்கு எந்தக் குழப்பமுமில்லை. ஆனால் தமிழ்நாட்டில் பெரியாரிஸ்\டுகளும், ஏனைய சாதியொழிப்பு வீரர்களும் தமது சாதிச் சான்றிதழைக் கிழித்தெறிந்து விட்டு, நான் சாதியை எதிர்க்கிறேன், சாதியடிப்படையில் எனக்கு எந்த சலுகையும் வேண்டாம் என்று ஆர்ப்பாட்டம் செய்ததாக நான் கேள்விப்படவில்லை. சாதிச் சான்றிதழை எப்பொழுதும் பத்திரமாக பையில் வைத்துக் கொண்டு மற்றவர்களை சாதி வெறியர் எனும் கேலிக்கூத்தைப் பார்த்து சிரிப்பதா, அழுவதா என்று தெரியவில்லை. தமிழ்நாட்டில் ஒவ்வொரு தாழ்த்தப்பட்ட சாதியொழிப்பு வீரனும், சாதியை ஒழிப்பதற்குப் பதிலாக, மேலும், பிரிவுகளை, பிளவுகளை தமிழர்கள் மத்தியில் ஏற்படுத்துவது மட்டுமன்றி, தமிழரக்ளின் வரலாற்றைக் கொச்சைப்படுத்தி, தமிழரசரக்ளுக்கும் சாதிச் சாயம் பூசி மேலும் சாதியய வளர்க்கின்றனர். இந்த லட்சணத்தில் எல்லோரும், கூட்டுச் சேர்ந்து ‘கும்பல்ல கோவிந்தா’ போடுவதைப் பார்க்க வேடிக்கையாக இருக்கிறது. 🙂

                • . 🙂
                  viyasan:ராஜ ராஜ சோழனின் தந்தை சுந்தரசோழனின் தாய் தான் ஒரு தெலுங்குப் பெண் அல்லது கலிங்கப் பெண்ணாக இருக்கலாம் என சில கூறுவார். தந்தை தமிழன் தான், ராஜ ராஜ சோழனின் தாய் தமிழ் வேளிர் குலப்பெண்ணாகிய வானவன் மாதேவி.
                  feedback 19 in
                  https://www.vinavu.com/2013/12/04/chidambaram-temple-rights-request-for-support/#respond

                  viyasan://தமிழரக்ளின் வரலாற்றைக் கொச்சைப்படுத்தி, தமிழரசரக்ளுக்கும் சாதிச் சாயம் பூசி மேலும் சாதியய வளர்க்கின்றனர். இந்த லட்சணத்தில் எல்லோரும், கூட்டுச் சேர்ந்து ‘கும்பல்ல கோவிந்தா’ போடுவதைப் பார்க்க வேடிக்கையாக இருக்கிறது//

            • \\கொடுத்ததைச் சொல்லிக் காட்டும் வழக்கம் என்னிடம் கிடையாது. அனால் தலித்துக்கள் பழிவாங்கத் தான் அலைகிறார்கள் என்பதையறியாமல் கொடுத்து விட்டேனா என்பது தான் என்னுடைய கவலை. //

              சொல்லிக்காட்டும் ஈனப்புத்தி உம்மிடம் இருக்கு.அதா ஆதரவு கொடுத்தேன்னு மட்டும் சொன்னாலே போதுமே அதுல தார்மீகம்,நிதி,அத்தனை ஆதரவும் வந்துருமே.தனியா நிதி கொடுத்தேன்னு சொல்றது அல்பம்.

              \\அவர்களை கலைச்செல்வனுக்குத் தெரியாதிருக்கும் என்று நான் நம்பவில்லை//

              அல்பையோ அல்பை.ஒன்னு செய்யும்.இந்த விவாதத்தோட லிங்கை அந்த நண்பர்களுக்கு அனுப்பி உம்மோட கவலையை தெரிவியும்.உம் மூஞ்சியில் உன் காசை விட்டெறிவார்கள்.

              \\இப்படிப் பேசுவதைத் தான் “சாதிப்புத்தியைக் காட்டுகிறான்” என்பார்கள் யாழ்ப்பாணத்தில்//

              ஒரு சாதிக்கு என்று தனியா யூனிபார்மா புத்தி கிடையாதுன்னு இந்த முட்டாளுக்கு தெரியவில்லை.வெள்ளைக்காரனிடம் மண்டியிட மறுத்து உயிரையே தியாகம் செய்த எங்கள் மான மறவன் மருதுவும் தேவர் சாதி..ஜெயாவின் காலில் விழுந்து வணங்கி அடிமையாக பொழைக்கும் ஓ .பா வும் தேவர் சாதி.உம்மை மாதிரியே யாழ்ப்பாண வெள்ளாளர் எல்லோரும் சாதி வெறி பிடித்தவர்களா என்ன.
              எண்ணிப் பாரும்.

              வினவு என் கமண்டை மாடெரட் பண்ணாம போடுங்க.சாதிப்புத்தின்னு சொல்லி என்னை மட்டுமல்ல மொத்த தலித்களையும் கேவலப்படுத்துது இந்த சாதி வெறி _______.

              • கலைச்செல்வன்,
                வினவு அவ்வப்போது நமது கருத்துகளை sensor செய்யும் ! ஆனா நீங்க அதை பற்றி கவலை படாமல் “சாதி வெறி –களை” கல்லால அடிக்கும் வேலையை விடாம செய்யுங்கள்.

                //வினவு என் கமண்டை மாடெரட் பண்ணாம போடுங்க.சாதிப்புத்தின்னு சொல்லி என்னை மட்டுமல்ல மொத்த தலித்களையும் கேவலப்படுத்துது இந்த சாதி வெறி _______.//

              • என்னுடைய நண்பர்கள் உம்மைப் போன்றவர்களின் உளறல்களை கணக்கிலெடுக்க வேண்டாம் என்று மட்டுமல்ல, உங்களைப் போன்றவர்களுடன் இங்கு பேசுவதையே தவிர்க்கச் சொல்கிறார்கள். 🙂

                • அந்த நண்பர்கள் உம்மை போன்ற மேல் சாதி வெறியர்களாக இருப்பார்கள்.தலித் நண்பர்கள் இருப்பதாக சொல்றீரே அவுங்களாண்ட காட்டிப் பாரும்.உம்ம யோக்கியதையை அவர்களும் தெரிந்து கொள்ளட்டும்.

                  • //தலித் நண்பர்கள் இருப்பதாக சொல்றீரே அவுங்களாண்ட காட்டிப் பாரும்//

                    அவர்கள் தான் வினவில் உம்மைப் போன்றவர்களுடன் நேரத்தை வீணாக்க வேண்டுமென்று கூறுகிறார்கள். 🙂

                    • வியாசன்.நீர் ஒரு டுபாக்கூர் ன்னு நல்லா தெரியுது.

                      \\//பள்ளு பறஎல்லாம் திமிரா இருக்கானுவ பழி வாங்க அலையுறாங்க அதுனாலதா அடி வாங்குரானுவ அப்டீங்கறீங்க.ஏய்யா எந்த ஊர்லயா தலித் மேல்சாதிக்காரன அட்சிருக்கான்.ஆமா நாங்க என்ன தப்பு செஞ்சோம்னு வாயில பீய கரைச்சு ஊத்துரானுங்கனு தெர்யுமா .அத சொல்லு முதல்ல. சொந்த நாட்டுல நின்னு போராட துப்பு கெட்ட பரதேசிக்கு லொள்ள பாரு எகத்தாளத்த பாரு.//

                      என்று நான் சொன்னதுக்கு நீர் என்ன பதில் சொல்லிருக்கீறு.

                      \\இப்படிப் பேசுவதைத் தான் “சாதிப்புத்தியைக் காட்டுகிறான்” என்பார்கள் யாழ்ப்பாணத்தில்//

                      அதாவது தாழ்த்தப்பட்ட சாதிக்குன்னு ஒரு இழிவான புத்தி இருக்கறதாவும் அத நான் காட்டுறதாவும் சொல்றீரு.இப்படி மொத்தமா தாழ்த்தப்பட்ட சாதியை இழிவு படுத்தற கருத்தை சொல்லிக்கீறேன்னு ஒரு தலித் கிட்ட நீர் சொல்லி அவரும் அதை பத்தி ஒன்னும் சொல்லாம என்னைத்தான் குறை சொல்றாரா.யாராண்ட கதை வுடுரீறு.இதெல்லாம் அந்து போன ரீலு.இதையெல்லாம் ஓட்டி படம் காட்டாதீரும்.

                      ஒன்னு சொல்றேன்..அடுத்தவாட்டி சென்னை பக்கம் வரும்போது இந்த மாதிரி பொது இடங்கள்ள பேசும்போது யார் காதிலும் வுழுவுற மாதிரி ஒளரிட்டு இருக்காதீரும்.அப்புறம் கனடாவுக்கு முழுசா திரும்பி போக மாட்டீரு.அரைகுறயாதான் போவ வேண்டியிருக்கும்.ஒழுங்கா மரியாதையா வாயை பேணிக்கிட்டு பெத்தவங்களுக்கு புள்ளையா முழுசா போய்ச்சேரும்.

                      \\அவர்கள் தான் வினவில் உம்மைப் போன்றவர்களுடன் நேரத்தை வீணாக்க வேண்டுமென்று கூறுகிறார்கள்//

                      தப்பு தப்பா டைப் அடிக்குது டுபாக்கூர்.வீணாக்க வேண்டாமென்று என்று இருக்க வேண்டியதை வீணாக்க வேண்டுமென்று டைப் அடிக்குது.இந்த புத்திசாலிதான் நாங்க சாதி சான்றிதழ் என்ற ஒரே தகுதியை வைத்து படிக்க போறதா சொல்லுது.மர மண்டை.

                  • கலைச்செல்வன்,

                    நீங்க ஏதோ இயக்கத்தில் பணிசெய்கின்றீர் போல் உள்ளது. நன்று.

                    வியாசன் மாதிரியான மனிதர்கள் சமுகத்தில் அதிகம். பார்த்து பழகுங்க!

                    இம் மனிதர்களீன் நேக்கமும் ,சமுக இயக்கத்தின் நேக்கமும் ஏதோ ஒரு புள்ளியில் இணையும் போது அவர்கள் ஆதரவு தருவது இயல்பு தான். ஆனால் “சாதி வெறிக்கு “,”மத வெறிக்கு” எதிரா களம் மாறும் போது இவர்கள் மக்கள் எதிரிகள் தான் ! நாம தான் கவனமாக இருக்க வேண்டும் !

                    kaliselvan Said to Viyasan://பொது வாழ்வுக்கு தம் சொந்த வாழ்வை ஈடாக கொடுத்தவர்கள் மக்களை சார்ந்துதான் வாழ்கிறார்கள்.ஆகவே அவர்களது தேவைகளை மக்களே நிறைவேற்றி தர்றாங்க.அவர்களது தேவைகளும் மக்களின் நலனுக்காக பாடுபடுவதால் ஏற்படுவதுதான்.அதற்கு நக்குறாங்கன்னு பேர் வக்கிறீரே நீரெல்லாம் என்னய்யா மனுஷன்//

                • ஊக்கம் தரும் நண்பர் செந்தில்குமரனுக்கு நன்றி.பாருங்க செந்தில்குமரன் என்ன மாதிரி ஆளுங்களோட பேசவே வேணாம்னு அவ்ரோட நண்பர்கள் சொல்றதா சொல்லிட்டு ஓடுது பாருங்க சாதி வெறி பிடித்த கொடை வள்ளல்.பெர்யவுங்க சும்மாவா சொன்னாங்க,
                  மனிதனை மனிதன் அறிவான் மட நாயை தடிக்கம்புதான் அறியும்.

                  • கலைச்செல்வன்,

                    வியாசன் ஒரு சரியான மொக்கை !

                    அந்த மொக்கையை வைத்து வினவு பரபரப்பை ஏற்படுத்த பார்கின்றது !

                    வியாசன் மொக்கைக்கு ரோமன் லெட்டர் I க்கும் V க்கும் கூட வித்தியாசம் தெரியாது !

                    //தப்பு தப்பா டைப் அடிக்குது டுபாக்கூர்.வீணாக்க வேண்டாமென்று என்று இருக்க வேண்டியதை வீணாக்க வேண்டுமென்று டைப் அடிக்குது.இந்த புத்திசாலிதான் நாங்க சாதி சான்றிதழ் என்ற ஒரே தகுதியை வைத்து படிக்க போறதா சொல்லுது.மர மண்டை.//

                    • அய்யா செந்தில்குமார்,
                      வியாசன் போடுகிற கமெண்டையாவது படிக்க முடிகிறது, ஆனா நீங்க இருக்கீங்களே தெய்வமே உங்க கொடுமையை என்னால் தாங்க முடியவில்லை தெய்வமே. வினவு ஏன் உங்களைப் போன்ற உலகமகா கொடூர மொக்கைகளை எல்லாம் மட்டுறுத்தாமல் அனுமதித்துக்கொண்டிருக்கிறது என்று தெரியவில்லை. இந்த இலட்சணத்தில் வியாசானை வைத்து வினவு பரபரப்பை ஏற்படுத்தப்பார்க்கிறது என்று இவர் வினவு மீதே பாய்கிறார்.

                      வியாசனின் கருத்துக்களில் எனக்கு துளியும் உடன்பாடு இல்லை, ஆனாலும் அவருடைய பின்னூட்டங்களை என்னால் கொஞ்மாவது சகித்துக்கொள்ள முடிகிறது. ஆனால் நீங்கள் இருக்கீங்களே தெய்வமே நீங்க சுப்பிரமணியசாமியை விட கொடூரம் தெய்வமே. சுப்பிரமணியசாமியை விட நாராயணசாமி கொஞ்சம் பரவாயில்லை அல்லவா. வியாசன் நாராயணசாமி என்றால் நீங்கள் சுனா சாமி கூட இல்லை அதைவிட கொடூரம்.

                    • செந்தில்குமரன் ,இன்னுமாங்க பேசிட்டு இருக்கீங்க… போய் வேலைய பாருங்க…..ஆனா இந்த இவங்களோட வெள்ளாள சாதி வெறியை வெளியே கொண்டு வந்துட்டீங்க..

                    • கைபுள்ள,

                      வியாசன் மாதிரியே பேசுறிங்கலே ! எப்படிங்க உங்களால மட்டும் முடியுது !

                      கைபுள்ளsaid://”வியாசனின் கருத்துக்களில் எனக்கு துளியும் உடன்பாடு இல்லை, ஆனாலும் அவருடைய பின்னூட்டங்களை என்னால் கொஞ்மாவது சகித்துக்கொள்ள முடிகிறது.”//

                      Are these the comments you are tolerating from Viyasan?:

                      Viyasan Said the following comments :

                      [1]ஊர் இரண்டுபட்டால் முசல்மான்களுக்குக் கொண்ட்டாட்டம் போல் தெரிகிறது. இலங்கையிலும் முஸ்லீம்கள் இதைத் தான் செய்தார்கள். மண்ணின் மைந்தர்களாகிய சிங்களவர்களும், தமிழர்களும் தேவையில்லாமல் ஆளுக்காள் அடித்துக் கொள்ள, முஸ்லீம்கள் தொப்பியைப் பிரட்டி ஆதாயம் தேடிக் கொண்டார்கள்

                      [2]இப்படிப் பேசுவதைத் தான் “சாதிப்புத்தியைக் காட்டுகிறான்” என்பார்கள் யாழ்ப்பாணத்தில்

                      [3]தமிழ்நாட்டில் உள்ள தமிழ்ர்கள் (தலித்துகள் உட்பட) ஈழத்தமிழர்ககளிடம் நிதி கேட்டு நக்குகின்றனர் !

                      [4]தமிழ்நாட்டில் உயர்ந்த சாதியினர் இந்த 21ம் நூற்றாண்டிலும், தலித்துக்களை ஏன் இப்படி வெறுக்கிறார்கள், குடிசைகளை எரிக்கிறார்கள், காதலர்களைப் பிரிக்கிறார்கள், மலம் கூடத் தீற்றுகிறார்கள் என்று நான் வியந்ததுண்டு.அதற்கான காரணம் இப்பொழுது தான் எனக்குத் தெரிகிறது. தமிழ்நாட்டில் நடக்கும் சாதிக் கொடுமைகளுக்கு, ஆதிக்க சாதிகளை மட்டும் குறை கூறுவது எவ்வளவு முட்டாள்தனமென்று புரிகிறது. உண்மையான நிலை தெரியாமல், அதாவது தலித்துக்களும் சாதி வெறியில் சளைத்தவர்கள் அல்ல, அவர்களும் சாதியொழிய வேண்டுமென்பதை விட சாதி வெறியுடன் மற்றவர்களைப் பழி வாங்கத் தான் அலைகிறார்கள் என்று தெரியாமல், பார்ப்பனர்களை எதிர்த்தும், தலித்துக்களின் அமைப்புகளுக்கு, நிதி மற்றும் ஆதரவு வழங்கியது தவறு போன்ற உணர்வு ஏற்படுகிறது

                      கைபுள்ள,

                      வியாசன் இக் கருத்துக்களை நல்லா தான் சகித்துக் கொண்டிர்கள் போல !

                      தினமலர் தினமும் படித்து மூளையை fresh ஆ வைத்து உள்ளீர்கள் போல !

                    • கைபுள்ள,

                      நான் தான் சும்மா லோக்கலா[சுப்பிரமணியசாமி and நாராயணசாமி] range க்கு பேசுரேன் !
                      சரி நீங்கலாவது Bill gates rangeக்கு “கருத்து கந்தசாமியா” பேசுங்கலேன் ! … 🙂

                    • வினவு மற்றும் வினவு வாசகர்களுக்கு நன்றி. தேவை கருதியே அதிக அளவு பின்னூட்டங்களும் , repeated பின்னூட்டங்களும் இட வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டேன். இருப்பீனும் எம்மை மன்னிக்கவும். வியாசன் போன்ற சாதி, மத வெறியர்கள் மீண்டும் வந்தால் நானும் வருவேன் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி

                    • கைபுள்ள,

                      வியாசனின் சாதி வெறி ,மத வெறி கருத்துக்களுக்கு எதிராக நீங்கலும் போசாம “தோமேனு பசு மாடு” மாதிரி இருக்கிங்க! ஆனால் பேசுர என்னையும் பக்கா லோக்கல்[சுப்பிரமணியசாமியை and நாராயணசாமி ] என்று சொல்லுரீங்க! கருத்து கந்தசாமீயான நீங்கள் உங்கள் கருத்துக்களையும் “Steve_Jobs range”க்கு சொல்லலாமே !
                      … 🙂

                    • நீங்க இப்ப விவாதிச்சு என்ன சாதிக்கப்போறீங்க செந்தில். வியாசனாவது ஒரு விடுதலைப்புலியாக இருக்கிறார்(அந்த புலியிடம் கொஞ்சமும் ஜனநாயகம் இல்லை, அது சைவ வேளாள புலி, பாசிச புலி, இந்திய மேலாதிக்கத்திடம் வாலாட்டாத புலி, ஈழத்தமிழரை பற்றி சிறிதும் அக்கரையற்று ஐரோப்பாவில் தஞ்சமடைந்துள்ள புலி என்றாலும்)ஆனால் நீங்களோ வைகோவை விட குட்டி பூனையாக அள்ளவா இருக்கிறீர்கள். வைகோ போன்ற கருப்பு பூனை (சு.சாமி வாய்சில்) புலியை போல கர்சித்துக்கொண்டு கத்துவதை (பேசுவதை) கேட்க சகிக்குமா செந்தில் அண்ணே, கொஞ்சம் மனசு வைக்கக்கூடாதா?

                • யார் உன் நண்பர்கள் ? நீ காசு கொடுத்த mafia gang ஆ ?

                  //என்னுடைய நண்பர்கள் உம்மைப் போன்றவர்களின் உளறல்களை கணக்கிலெடுக்க வேண்டாம் என்று மட்டுமல்ல, உங்களைப் போன்றவர்களுடன் இங்கு பேசுவதையே தவிர்க்கச் சொல்கிறார்கள்.//

                  • //நீ காசு கொடுத்த mafia gang ஆ ?//

                    செந்திகுமரன் வினவில் ஒரு நிர்வாகியா. அவர் மட்டும் மற்றவர்க்ளை நீ என்று ஒருமையிலும் அவருக்கே உரித்தான வேறு பல Weird வார்த்தைகளையும் இங்கு எழுத அனுமதிக்கிறீர்கள். அது என்ன நியாயம்? செந்தில் அதற்கும் ஏதாவது ஸ்பெசல் சான்றிதழ் வைத்திருக்கிறாரா? … 🙂

                    • யாழ்பான மொக்கை வியாசன்,

                      நீ சொன்னது என்ன ?

                      தமிழ்நாட்டு நண்பர்கள் ஈழத்தமிழர்ககளிடம் நிதி கேட்டு “—நக்குகின்றனர்—” என்பது தானே பொருள் !

                      தமிழர்களை கேவலமாக பேசும் உனக்கு எதற்க்கு மரியதை கொடுக்க வேண்டும் ?

                      வியாசன் said::[1]தமிழ்நாட்டில் உள்ள தமிழ்ர்கள் (தலித்துகள் உட்பட) ஈழத்தமிழர்ககளிடம் நிதி கேட்டு நக்குகின்றனர் !

                      வியாசன் said :[2]உதவி செய்த நண்பர்களின் விபரங்களை இணையத்தளத்தில் கொடுக்குமளவுக்கு நான் ஒன்றும் Wஎஇர்டொ இல்லை!

                      வியாசன் said ://செந்திகுமரன் வினவில் ஒரு நிர்வாகியா. அவர் மட்டும் மற்றவர்க்ளை நீ என்று ஒருமையிலும் அவருக்கே//

                      துப்பிருந்தால் “பஞ்சம் பிழைக்க போன பரதேசிகளிடம்”[ யாழ்ப்பாண வெள்ளாளர் இடம் ] காசு வாங்கியவர்கள் பேர செல்லு!

                    • “காசு வாங்கியவர்கள் ” பெயரை கூறாமல் ,என் கருத்துக்களை தடை செய்ய கோரி “வினவிடம்” “வியாசன் ” கெஞ்சுவதும், பம்முவதும் ஏன் ?

                      //செந்திகுமரன் வினவில் ஒரு நிர்வாகியா. அவர் மட்டும் மற்றவர்க்ளை நீ என்று ஒருமையிலும் அவருக்கே உரித்தான வேறு பல Weird வார்த்தைகளையும் இங்கு எழுத அனுமதிக்கிறீர்கள். அது என்ன நியாயம்? செந்தில் அதற்கும் ஏதாவது ஸ்பெசல் சான்றிதழ் வைத்திருக்கிறாரா? //

                    • ஈழத்தமிழர்களிடம் காசு வாங்கியவர்கள் தமிழ் நாட்டில் பலரும் இருக்க ….ஈழத்தமிழர்களுடன் விருந்தினராய் ,அண்ணனாக “மட்டும் ” ப்ழகீய “திருமாவை ” மட்டும் வியாசன் தாக்கும் மர்மம் என்ன ?

                      ஒரு புரம் பார்பனர் ,பார்பன- எச்சங்கள் பிரதிநிதி வியாசன் , மறுபுரம் பிற்பட்ட , மிகவும் பிற்பட்ட, தலித்தியர் மக்களீன் பிரதிநிதியாக நானும் இருக்கும் போது ,
                      “பார்பன எச்ச” வியாசன் தலித்தியர் மக்களை “மட்டும்” இழிவாக பேசும் மர்மம் என்ன ?

                  • அவர்களுக்கு பிடித்துக் கொண்டுள்ள பழி வாங்கும் சாதிவெறிப் பைத்தியம் தான் மற்றவர்களுக்கும் பிடித்துக் கொண்டிருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கும் Weirdoக்களின் எல்லா வகையான உளறல்களுக்கும், பதிலளித்துக் கொண்டிருக்க எனக்கு நேரமில்லை. அதை நான் எங்கேயோ போய் விட்டதாக நினைத்துக் கொண்டு சிலதுகள் தமக்குத் தாமே முதுகில் தட்டிக் கொடுக்கின்றன. 🙂

                    • மொக்க வியாசன் ,
                      —– Weirdoக்களின் எல்லா வகையான உளறல்களுக்கும் ______ பதில் சொல்லனும்!
                      தமிழ்நாட்டில் உள்ள தமிழ்ர்கள் யார் ஈழத்தமிழர்ககளிடம் நிதி கேட்டு நக்குகின்றனர் !?

                      வியாசன் said :// தமிழ்நாட்டில் உள்ள தமிழ்ர்கள் (தலித்துகள் உட்பட) ஈழத்தமிழர்ககளிடம் நிதி கேட்டு நக்குகின்றனர் !

                    • வியாசன் ,

                      ஓடிப் போன பெருசாளி மீண்டும் வந்தால் கட்டையால் அடிக்க தானே செய்வோம்! . 🙂

                      viyasan://…அதை நான் எங்கேயோ போய் விட்டதாக நினைத்துக் கொண்டு….

                    • \\அவர்களுக்கு பிடித்துக் கொண்டுள்ள பழி வாங்கும் சாதிவெறிப் பைத்தியம் தான் மற்றவர்களுக்கும் பிடித்துக் கொண்டிருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கும் Weirdo//

                      உமக்குத்தானய்யா சாதிவெறிப் பைத்தியம் புடிச்சுருக்கு.”அ [ட ] ப்பாவி” வியாசனை நாங்களா முதலில் சாதியை சொல்லி விமர்சித்தோம்.நீர்தானய்யா சாதி சான்றிதழ் மட்டுமே தகுதியாக வச்சுகிட்டு நாங்க படிக்கிறதா அவதூறு சொன்னீர்.

                      நாங்களா வெள்ளாள சாதி எல்லாருமே சாதி வெறியர்னு திட்டுனோம்.நீர்தானய்யா தலித் களுக்கு பூரா இழிந்த சாதிப்புத்தி இருக்கறதா இழிவுபடுத்துற.

                      நீர்தா சாதிவெறிப் பைத்தியம்.

                      அது மட்டுமா.மொத்த தமிழ்நாட்டு தமிழர்களையும் இழிவு படுத்துற.

                      \\தமிழ்நாட்டில் உள்ள தமிழ்ர்கள் (தலித்துகள் உட்பட) ஈழத்தமிழர்ககளிடம் நிதி கேட்டு நக்குகின்றனர் !//

                      இப்படி கமண்டு போடுறீரே.இதுல கொஞ்சமாவது நாகரீகம் இருக்கா.இதெல்லாம் என்ன பேச்சு.தனிப்பட்ட முறையில் நான் எந்த ஈழத்தமிழர்களிடமும் நிதி வசூல் என்று போனதில்லை.ஆனாலும் இதை படிக்கும்போதே கடுமையா ஆத்திரம் வருது.பொது வாழ்வுக்கு தம் சொந்த வாழ்வை ஈடாக கொடுத்தவர்கள் மக்களை சார்ந்துதான் வாழ்கிறார்கள்.ஆகவே அவர்களது தேவைகளை மக்களே நிறைவேற்றி தர்றாங்க.அவர்களது தேவைகளும் மக்களின் நலனுக்காக பாடுபடுவதால் ஏற்படுவதுதான்.அதற்கு நக்குறாங்கன்னு பேர் வக்கிறீரே நீரெல்லாம் என்னய்யா மனுஷன்.மக்கள் போராட்டங்களுக்காக நிதி வசூலிக்கிரதுக்கே நக்குரதுன்னு சொன்னா நீர் உமது சொந்த தேவைகளுக்கு கனடா மக்களையும் அரசையும் சார்ந்து இருக்கிறீரே அதுக்கு என்ன பேர் வைக்கலாம்.நீர் வாங்குற அகதி பென்சனுக்கு என்ன பேர் வைக்கலாம்.

                      இந்த மாதிரி ஈழத்தமிழர்கள் கூடி இருக்குற இடத்துல தமிழ்நாட்டில் உள்ள தமிழ்ர்கள் (தலித்துகள் உட்பட) ஈழத்தமிழர்ககளிடம் நிதி கேட்டு நக்குறாங்கன்னு பெசிப்பாரேன்.யார்ரா இவன் பைத்தியக்காரன்னு உம்மை அவர்களே கல்லால் அட்ச்சு தொரத்துவாங்க.

                      உமக்கு ஏன் ஆத்திரம் ஆத்திரமா வருது,இவனுங்களோட பேச மாட்டேன்னு ஓடுறன்னு எங்களுக்கு நல்லாவே தெரியுது.ஒரு பறப்பய நமக்கு சமமா பேசுறானே,போமய்யா ,வாருமய்யா ன்னு நம்மள சாதாரண ஆளா நடத்துரானேன்னு கோவம் கோவமா வரது.அதானே.இது ஒன்னும் பழைய காலம் இல்ல.இது யாழ்ப்பாணமும் இல்லை.இங்கல்லாம் உங்க பப்பு வேகாது.

                • வியாசன் என்ற “பனங்காட்டு(யாழ்ப்பாணம்) நரி” “காசு வாங்கியவர்கள்” பேர சொல்லாமல் பயந்து ஓடுது !. 🙂

                  viyasan said://‘நினைப்புத் தான் பிழைப்பைக் கெடுக்கும்’ என்பார்கள், யாருடைய எந்த உளறலும் என்னை உலுக்கவில்லை, உலுக்கவும் முடியாது. “பனங்காட்டு(யாழ்ப்பாணம்) நரி சலசலப்புக்கு அஞ்சாது.”//

        • வியாசா மீண்டும் மொக்கையடிக்க தொடங்கிட்டியா?

          வியாசன் ரோமன் எழுத்து I க்கும் V க்கும் வித்தியாசம் தெரியாம புத்தகத்தீன் தொகுபபை[vol ] மாற்றி மாற்றி படித்து விட்டு வந்து இங்கு வந்து கழியுது !

          வியாசன் போன்ற பார்பன-தேவதாசி கலப்பு எச்சங்களுக்கு கல்வி-வேலை வாய்ப்பில் இட ஒதுகீட்டை பெற்று முன்னேறும் பிற்பட்ட , மிகவும் பிற்பட்ட, தலித்தியர் மக்களை பார்த்தால் பொறாமையாகவும் , வேதனையாகவும் இருப்பது இயல்பு தானே!

        • ஒரு புரம் பார்பனர் ,பார்பன-தேவதாசி கலப்பு எச்சங்கள் பிரதிநிதி வியாசன் ,

          மறுபுரம் பிற்பட்ட , மிகவும் பிற்பட்ட, தலித்தியர் மக்களீன் பிரதிநிதியாக நானும் இருக்கும் போது ,

          “பார்பன-தேவதாசி கலப்பு எச்ச” வியாசன் தலித்தியர் மக்களை “மட்டும்” இழிவாக பேசும் மர்மம் என்ன ?

          இதற்கு பெயர் தான் “பார்பன-தேவதாசி கலப்பு எச்ச”[“யாழ்ப்பாண வெள்ளாள வெறி”] வியாசனின் நரிதனம் என்பது !

          வியாசனின் பார்பான ,பார்பன-தேவதாசி கலப்பு எச்ச வால்கள் இங்கு பிற்பட்ட , மிகவும் பிற்பட்ட, தலித்தியர் மக்களால் வெட்டப்படும் !

      • Is this the way to eliminate cast based society ?

        All these FOLLOWING dialog are spoken by VIASAN AND HIS COMPANY PEOPLE!

        “நீங்கள் எப்படி எப்போதும் கையில் கள்ளு பானையுடன் தீண்டாசேரியில் மொக்கை கவிதைகளை பாடிக் கொண்டு புலையர்களுடன் ஆடி கொண்டிருப்பீரோ… யாம் அறியோம் பராபரமே”

        “கல்லூரியில் இறுதித் தேர்வில் குறைந்த புள்ளிகள் எடுத்திருந்தும், ஒருவேளை சாதிச்சான்றிதழின் அடிப்படையில் சட்டக் கல்லூரிக்கு இவர் தெரிவு செய்யப்பட்டது அதற்கு காரணமாக இருக்கலாம்”

        “அறிவில் சிறந்த பார்பனர்,வெள்ளாளர் ஆகிய இருவரும் தான் அந்நாளில் நீதி துறை, நிர்வாக துறை(Civil departments) இரண்டையும் கவனித்து கொண்டார்கள்”

        //செந்தில் மட்டுமல்ல இன்னும் பலர் இந்நிலையிலேயே உள்ளனர். இவர்கள் எடுக்கும் நிலைபாடுகளும் பெரும்பாலும் சாதியை சார்ந்தே உள்ளது. பிறகெப்படி சாதி ஒழியும்? வினவு மற்றுமொரு சாதிக்கட்சி என்பதில் சந்தேகமேயில்லை.//

    • //சாதியை ஒழிக்கிறேன் என்ற பெயரில் தலித்துக்களிடம் அவர்களின் “தமிழ்ச் சகோதரர்களையே” வெறுக்குமளவுக்கும்//

      🙂 🙂 🙂

  139. இட ஒதுக்கீடு கூடாது என கூச்சல் போடும் மொக்கைகளே;கவனியுங்கள்.

    இட ஒதுக்கீடு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் சலுகையல்ல.அது அவர்களின் உரிமை,அது மட்டுமல்ல நாடு முன்னேறுவதற்கு அவசியமானதும் கூட.

    ஒரு நாட்டின் முன்னேற்றம் அந்நாட்டின் அனைத்து தரப்பு மக்களும் முன்னேறினால் மட்டுமே சாத்தியமாகும்.வெறுமனே உற்பத்தியை பெருக்குவதால் மட்டுமே பொருளாதாரம் முன்னேறி விடாது.உற்பத்தியான பொருட்கள் நுகரப்பட வேண்டும்.அதற்கு மக்களிடம் வாங்கும் ஆற்றல் இருக்க வேண்டும்.பெரும்பகுதி மக்கள் வறுமையின் பிடியில் சிக்கித்தவிக்கும் மக்கள் வாழும் நாட்டில் பொருளாதார முன்னேற்றம் என்பது குதிரை கொம்புதான்.அப்படி பின்தங்கிய மக்களை முன்னேற்ற பாதையில் அழைத்து வரும் பணியில் இட ஒதுக்கீடு கணிசமான பங்களிப்பு செய்கிறது.அப்பன் செய்த தொழிலையே பிள்ளையும் செய்து கொண்டிருந்தால் ஒரு நாளும் முன்னேற்றம் சாத்தியமில்லை. வெள்ளையன் எந்த நிலையில் விட்டு சென்றானோ அப்படியே இருக்க வேண்டியதுதான்.

    கல்வியில் இட ஒதுக்கீடு கொடுப்பதால் தரம் தாழ்கிறது என்பதும் ஒரு மோசடியான வாதம். கல்லூரியில் நுழைவதற்கு மட்டுமே இட ஒதுக்கீடு தரப்படுகிறது. பாடத்திட்டம் எல்லோருக்கும் ஒன்றுதான்.தேர்வு முறையும் ஒன்றுதான்.பிறகு எப்படி தரம் தாழும். அப்படி தரம் இல்லை என்றால் அதற்கு பாடத்திட்டமும் தேர்வுமுறையும்தான் காரணமாக இருக்க முடியுமேயன்றி மாணவர்களை குற்றம் சொல்லமுடியாது.

    இட ஒதுக்கீட்டின் கீழ் ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கு தகுதி மதிப்பெண்கள் குறைவாக நிர்ணயம் செய்யப்படுவதும் குறையாக சொல்லப்படுகிறது.தகுதிதேர்வுகளிலும் நுழைவு தேர்வுகளிலும் முன்னேறிய,நகர்ப்புற மாணவர்கள் எப்படி கூடுதல் மதிப்பெண் பெறுகிறார்கள்.பல லட்சம் உருவாக்கள் செலவில் தனிப்பயிற்சி பெற்றுதான் அந்த மதிப்பெண்களை ”ஈட்டுகிறார்கள்”.யாருக்கு வாய்ப்பு என்பதை மதிப்பெண்களே தீர்மானிக்கட்டும் என்று விட்டு விட்டால் ”காசுக்காரனுக்கு இட ஒதுக்கீடு” என்பதுதானே அதன் பொருள்.

    மேலும் கல்விக்காக அரசு செலவிடுவதும்,அரசு ஊழியர்கர்களுக்கு ஊதியமாக வழங்கப்படுவதும் யாருடைய பணம்.அது மக்களின் வரிப்பணமல்லவா.அந்த வரியை செலுத்தும் மக்கள் அந்த நிறுவனங்களில் இடம் பெற முடியாதென்றால் அது அநீதியல்லவா.

    ஆகவே கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் இட ஒதுக்கீடு அவசியமானது..அது ஒன்றும் சலுகையல்ல.ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை.

  140. ஜனாப்,

    நான் கேட்ட ஒரு கேள்விக்கு பதில் கூறாமல் மலிவான உத்தி,விவாதத்தை திசை திருப்புகிறேன்,சிறுபிள்ளைதனம்,திரியை கொளுத்தி போட்டுவிட்டேன்,வெடிகுண்டு வைத்துவிட்டேன் என்றெல்லாம் கூறி புலப்பி திரிகிறார் திப்பு.

    எனவே அது குறித்து விளக்குவது அவசியம்.

    ஒருவர் விவாதத்தில் ஒரு கருத்தை முன்வைத்தால் தான் முழுமையாக நம்பும் ஏற்கும் கருத்தைதான் முன்வைக்க வேண்டும்.அதுதான் விவாத நேர்மை.

    //இந்த உலகில் மனிதர்கள் வருவதற்கு முன்னரே பல பத்து லட்சம் ஆண்டுகள் பாடு……உருவாக்கியிருக்கிறாள்//-மறுமொழி 107.

    இது ஜனாப்பின் மறுமொழிதான்.ஜனாப்போ குரான் அல்லாவால் நபிகள்[ஸல்] மூலம் பூமியில் இறக்கப்பட்டதாக நம்புபவர்[அப்படி இல்லை என்றால் மறுக்கலாம்]

    குரானின் படைப்புவாதமும்,ஜனாப்பின் கருத்தும் முரன்பாடாக உள்ளது.எனவே அவர் எதை முழுமையாக நம்புகிறார் என கேட்டேன்.இதில் என்ன தவறு என்று புரியவில்லை.இதற்கு பதில் கூறட்டும்.பிறகு பேசலாம்.

    • \\இந்த உலகில் மனிதர்கள் வருவதற்கு முன்னரே பல பத்து லட்சம் ஆண்டுகள் பாடு……உருவாக்கியிருக்கிறாள்//-மறுமொழி 107.
      இது ஜனாப்பின் மறுமொழிதான்.ஜனாப்போ குரான் அல்லாவால் நபிகள்[ஸல்] மூலம் பூமியில் இறக்கப்பட்டதாக நம்புபவர்[அப்படி இல்லை என்றால் மறுக்கலாம்]

      குரானின் படைப்புவாதமும்,ஜனாப்பின் கருத்தும் முரன்பாடாக உள்ளது//

      ஒரு முரண்பாடும் இல்லை தேவரீர்.மனிதனை படைப்பதற்கு முன்பே இந்த மண்ணுலகம் படைக்கப்பட்டு மனிதர்கள் வாழ தகுதியானதாக ஆயத்தப்படுத்தப் பட்டிருந்தது என்றுதான் குரானும் கூறுகிறது.
      பார்க்க;http://www.iris.org.nz/creation_adam.php

  141. நான் இந்த கட்டுரையை முழுவதும் ஏற்றுகொள்கிரேன்.முழு உண்மை.

  142. இட ஒதுக்கீட்டைத் தடை செய்ய வேண்டுமென்று யாரும் இங்கு கூறவில்லை. அது கூடப் புரியாமல் சும்மா முட்டாள்தனமாக உளறுகிறார்கள் சில முசல்மான்கள். ஆத்தாதவன் தான் school yard fight போல உளறுவார்கள்.

    இலங்கையில் ஈழத்தமிழ் இளைஞர்கள் ஆயுதமேந்திப் போராட உந்தப்பட்டமைக்கு முதல் காரணம் இன அடிப்படையிலான இட ஒதுக்கீடு தான். இலங்கையில் இன அடிப்படையிலான தரப்படுத்தல் நடைமுறைப்படுத்தாமல், திறமையின் அடிப்படையில் மட்டும், பல்கலைக்கழக அனுமதி அளிக்கப்பட்ட போது, இலங்கைப் பல்கலைக்கழகங்களில் தமிழர்களின் எண்ணிக்கை அவர்களின் சனத்தொகை வீதாசாரத்தை விட அதிகமாகவும், மருத்துவம், பொறியியல் போன்ற பீடங்களில் 50 வீதமாகவும் ருந்தது. அந்த நிலையை மாற்றுவதற்காகத் தான் இலங்கை அரசு இன அடிப்படையிலான இட ஒதுக்கீடு அல்லது தரப்படுத்தலைக் கொண்டு வந்தது. இலங்கையில் கல்வித்திறமையின் அடிப்படையில் மட்டும் பல்கலைக்கழ அனுமதி கொடுக்கப்பட வேண்டும் என்பது தான் ஈழத்தமிழர்களின் கோரிக்கையாக இருந்தது. அதற்காகத் தான் போராட்டங்கள் நடந்தப்பட்டன என்பதை, ஈழவிடுதலைப் போராட்டத்தின் வளர்ச்சியைப் படித்துப் பார்த்தால் தெரியும். அந்த நிலையில் ஈழத்தமிழர்கள் எப்படி இட ஒதுக்கீட்டை, அதுவும் சாதியடிப்படையிலான இட ஒதுக்கீட்டை தமிழ்நாட்டில் ஆதரிக்க முடியும். சாதியடிப்படையில் இட ஒதுக்கீது அளிப்பது போதாதென்று, மத அடிப்படையிலும் இட ஒதுக்கீடு கேட்கிறார்கள் சிலர். 🙂

    தமிழ்நாட்டில் வறுமையினால் வாடுகிறவர்களுக்கு பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு அளிக்கப்படுவது நியாயமானதாக இருக்க முடியுமே தவிர சாதியடிப்படையில் இட ஒதுக்கீடு அளிப்பது என்பது சாதித் திமிர் பிடித்த பணக்காரத் தலித்துகள் கூடப் படிக்காமல் பல்கலைக்கழகம் போக உதவும் அதே வேளையில், கஷ்டப்பட்டுப் படித்த ஒரு மாணவன், பொருளாதார வசதி இல்லாது விட்டாலும் அவன் உயர்ந்த சாதியில் பிறந்த காரணத்தால், கல்லூரி அனுமதி கிடைக்காமல் போகலாம். அது எந்த விதத்தில் நியாயமாகும்.

    இது எல்லாவற்றையும் விட, சாதியொழிப்பு, பெரியார் சொன்னார் , சிறியார் செய்தார் என்று உளறிக்கொண்டே, ஆளுக்கொரு சாதிச்சான்றிதழை சட்டைப் பைக்குள் வைத்துக் கொண்டு, சாதியடிப்படையில் சலுகைகளைப் பெற்றுக் கொண்டு, சாதியை ஒழி என்றால் அது எப்படி ஒழியும் என்பதைத் தான் நான் குறிப்பிட்டேன்.

    உதாரணமாக இலங்கையில் தமிழர்களிடமும், சிங்களவர்களிடமும் சாதிப் பிளவுகள் இருந்தாலும் அங்கு தமிழ்நாடு போன்று சாதிக்கொடுமைகள் இல்லாதிருப்பதன் காரணம், இலங்கையில் சாதியடிப்படையில் எந்த சலுகையும் கிடைப்பதில்லை, அத்துடன் யாரிடமும் சாதிச்சான்றிதழும் கிடையாது. இலங்கையில் இன்றும் பின்தங்கிய மாவட்டங்களுக்கான, கிராமப்புற மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு மட்டும் நடைமுறையில் உண்டு. அதாவது தரமான பாடசாலைகள் இல்லாத, அல்லது கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணம் போன்ற நகரங்களில் போன்று வசதிகள் இல்லாத மாவட்டங்களில் வாழும் மாணவர்களுக்கான தரப்படுத்தல்/இட ஒதுக்கீடு நடைமுறையில் உண்டு, அதனால் சாதி வேறுபாடின்றி வசதி குறைந்த மாவட்டங்களிலுள்ள ஏழை மாணவர்கள் பல்கலைக்கழத்துக்குச் செல்கின்றனர். இது கூட கூடியளவில் சிங்கள மாணவர்களை பலகலைக்கழகத்துக்கு அனுப்புவதற்கு ஏதுவாக போடப்பட்ட திட்டமாக இருந்தாலும் கூட, இலங்கையில் சாதியடிப்படையில் இட ஒதுக்கீடு கிடையாது. முன்பு பின்தங்கிய மாவட்டங்களாகக் கருதப்பட்ட பல சிங்கள மாவட்டங்களில் தரமான பாடசாலைகளை, அரசாங்கம் கட்டி, எல்லோருக்கும் இலவசக் கல்வியைக் கொடுப்பதால், நாளடைவில் அந்த மாவட்டங்களிலும் இட ஒதுக்கீடு வழங்கப்பட மாட்டாது. அங்குள்ளவர்கள் திறமை அடிப்படையில் மட்டும் தான் பல்கலைக்கழகம் போகலாம்.

    சாதியடிப்படையில் அல்லது ஏழைகள் என்ற காரணத்துக்காக மட்டும் இட ஒதுக்கீடு வழங்காமல், இலங்கையைப் போல் எல்லோருக்கும் இலவசக் கல்வி வசதியை ஏற்படுத்தினால், திறமையான மாணவர்கள் பாதிக்கப்படுவது தவிர்க்கப்படும். இது தமிழ்நாட்டிலும் நடைமுறையில் சாத்தியமாகுமா என்பது எனக்குத் தெரியாது. ஆனால், சாதியடிப்படையிலான இட ஒதுக்கீட்டால் சாதியொழியாது என்பது தான் எனது கருத்தே தவிர இட ஒதுக்கீடே கூடாது என்பதல்ல.

    “In 1971, a system of standardisation of marks was introduced for admissions to the universities, obviously directed against Tamil-medium students (referred to earlier). K.M. de Silva describes it as follows:

    ‘The qualifying mark for admission to the medical faculties was 250 (out of 400) for Tamil students, whereas it was only 229 for the Sinhalese. Worse still, this same pattern of a lower qualifying mark applied even when Sinhalese and Tamil students sat for the examination in English. In short, students sitting for examinations in the same language, but belonging to two ethnic groups, had different qualifying marks.’

    He observes that by doing this in such an obviously discriminatory way, ‘the United Front Government of the 1970s caused enormous harm to ethnic relations.’

    This was not the end; in 1972 the ‘district quota system’ was introduced, again to the detriment of the Ceylon Tamils. The (Sinhalese) historian C.R. de Silva wrote:
    ‘By 1977 the issue of university admissions had become a focal point of the conflict between the government and Tamil leaders. Tamil youth, embittered by what they considered discrimination against them, formed the radical wing of the Tamil United Liberation Front. Many advocated the use of violence to establish a separate Tamil state of Eelam. It was an object lesson of how inept policy measures and insensitivity to minority interests can exacerbate ethnic tensions .’

    (A.Jayaratnam Wilson, The Break up of Sri Lanka, C.Hurst & Company, London, Orient Longman Limited, 1988)

    “One of the major points of tension among many Tamil youth has been the implicit racial quota under present university admission policies which has barred many competent youths from pursuing higher education.” – Virginia Leary: Ethnic Conflict and Violence in Sri Lanka” – Report of a Mission to Sri Lanka on behalf of the International Commission of Jurists, July/August 1981

    “…Nothing aroused deeper despair among Tamils than the feeling that they are being systematically squeezed out of higher education. They have complained particularly of the system of ‘standardisation’ in force after 1972, in which marks obtained by candidates for university admission are weighted by giving advantage to certain linguistic groups and/or certain districts…” – Walter Schwarz: Tamils of Sri Lanka – Minority Rights Group Report, 1983

    Until 1970 university admissions were determined solely by academic qualifications. Because of the generally higher educational standards of Tamils, their percentage of university enrollments substantially exceeded their percentage of the general population. In 1969 for example, 50 percent of the students in the country’s faculties of medicine and 48 percent of all engineering students were Tamil. During the 1970s, however, the government implemented a preferential admissions system known as the “policy of standardization.” This was a geographically based criterion, but because the two ethnic communities tended to be regionally segregated, such a policy increased Sinhalese enrollments. The scheme established quotas for 70 percent of university places on the basis of revenue districts; this included a special allotment of 15 percent of all openings reserved for educationally underprivileged districts, which were predominantly Sinhalese. Only 30 percent of openings were allotted nationwide on merit considerations alone. By the early 1980s, the policy had proven a statistical success: in 1983 only 22 percent of medical students and 28 percent of engineering students were Tamils.

    ஆனால் ஈழத்தமிழர்கள் இன்றும் திறமையின் அடிப்படையில் மட்டும் பல்கலைக்கழக அனுமதி அளிக்கப்பட வேண்டுமென்கிறார்களே தவிர, இன, சாதி, மத அடிப்படையில் இட ஒதுக்கீட்டைக் கேட்கவில்லை. 🙂

    • யார் முட்டாள்தனமாக பேசுவது பார்க்கலாமா வியாசன்,

      சாதி சான்றிதழ் மூலமாக பல்கலை கழகத்திற்கு படிக்க போகிறார்கள் என்றும் இட ஒதுக்கீடு ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை என்பதை மறைத்து சலுகை சலுகை என்று மீண்டும் மீண்டும் சொல்வது இட ஒதுக்கீடு வேண்டும் என்று கேட்பதாகுமா .இட ஒதுக்கீடு கூடாது என்ற கள்ளப்பரப்புரையின் ஒரு பகுதிதான் இது.அதை தோலுரித்து இட ஒதுக்கீடு கூடாது என்கிறார்கள் என சுட்டிக்காட்டினால் ஆத்திரம் தலைக்கேறி முட்டாள்தனம் என தூற்றுவதா.

      சாதி சான்றிதழ் மூலமாக பல்கலை கழகத்திற்கு படிக்க போகிறார்கள் என்ற அவதூறை எதிர்த்து செந்தில் கேள்வி எழுப்பியவுடன் ”இல்லை இல்ல நான் வேடிக்கைக்காக சொன்னேன்” என்பது பித்தலாட்டம்,அயோக்கியத்தனம். எதில் வேடிக்கை காண்பது என்ற குறைந்த பட்ச நாகரீகம் வேண்டாமா.காப்பி அடித்து தேர்வு பெற்றாயா என கேட்டிருந்தால் அது வேடிக்கை.ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரமான ஒன்றை வேடிக்கை என்ற பெயரில் கிண்டல் செய்வது அப்பட்டமான மேல்சாதி திமிர்.வேடிக்கை என்ற பெயரில் இட ஒதுக்கீட்டிற்கு எதிராக நஞ்சு கக்குவது.இப்படியான கள்ளப்பரப்புரைகள் இட ஒதுக்கீட்டை நாளடைவில் ஒழித்துக் கட்டுவதற்கான சதியின் ஒரு பகுதியே.

      அடுத்து இட ஒதுக்கீடு என்று வரும்போது மட்டும் சாதி ஒழிப்பு பற்றி பேசுவது அயோக்கியத்தனம்..வகுப்புவாரி பிரதிநிதித்துவம் என்ற அடிப்படையில்தான் இட ஒதுக்கீடு கோரப்படுகிறது.அதில் பெரியார் தெளிவாகவே இருந்தார்.அவரது விடாபிடியான போராட்டத்தால் இந்திய அரசியல் சட்டம் 50-களின் துவக்கத்தில் முதன்முறையாக திருத்தப்பட்டதே வகுப்புவாரி பிரதிநிதித்துவத்திற்காகத்தான்.

      இட ஒதுக்கீடுக்கு எதிரான கருத்து கொண்டிருக்கும் கனவான்களே .நான் சொல்வதை குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.

      ”சாதி இருக்கும் வரை இட ஒதுக்கீடு இருக்கும்.தலைகீழாக நின்றாலும் மோடியே பிரதமர் ஆனாலும் உங்களால் அதை ரத்து செய்ய முடியாது”

  143. “அவதூறு பொறுக்கி” கம்யுனிஸ்ட் செந்திலு…..

    இதுக்கு பேரு தான் இட ஒதுக்கீட்டு அறிவுனு சொல்லுவாங்க … என்னமோ பெரிய அராய்ச்சி செஞ்சு சொல்லுவேன்னு பாத்தா இன்னும் அதல பாதாளத்துல இறங்கிட்டியே… வேளாளர்களின் சாதிக்குரிய பிள்ளை பட்டம் போட்டு கொண்டு நிறைய பேர் வாழ்கிறார்கள் என்று எமக்கு தெரியும் .. அது பல நூற்றாண்டுகளா நடந்திக்கிட்டு தான் இருக்கு.. இன்னிக்கும் கூட சென்னைல தாழ்த்த பட்ட சாதியை சேர்ந்த (பறையர்) நிறைய பேர் முதலி என்கிற சாதி பெயரோடு தான் வலம் வருகிறார்கள் அதற்க்கு என்ன சொல்வது ……

    போயும் போயும்.. Edgar Thurston என்பவரின் “Castes and Tribes of Southern India ” என்கிற புத்தகம் தான் உமக்கு ஆராய்ச்சி செய்ய கிடைத்ததா.. இந்த நூலை பத்து ஆண்டுகளுக்கு முன்பே “எழும்பூர் ஆவன காப்பகத்தில்” நான் படித்து முடித்துவிட்டேன்.. நான் மட்டும் இல்லை,இந்நூலை பற்றி அனைவருக்குமே தெரியும்..இது ஒரு வரலாற்று நூலெல்லாம் கிடையாது .. பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு சமர்பிக்க வேண்டிய ஒரு சாதாரண ஆய்வறிக்கை என்பது படித்த உடனே யாருக்கும் புலனாகும்.

    வேளாளர்களின் வரலாறு தெரியாதளவுக்கு மூடனாக நீ இருப்பாய் என்று கொஞ்சமும் நான் நினைக்கவில்லை… வேளாளர்களின் காலம் என்ன.. தேவரடியார்களின் கலாசாரம் எப்போது தமிழ்நாட்டிற்க்குள் வந்தது என்பது ஏதும் தெரியமால் மறுமொழி போடும் உன் போன்ற மொன்னைகளை என்ன சொல்வது ..

    வேளிர் எனப்படும் வேளாளர் குலம் சங்க இலக்கியத்தின் காலம் முதற் கொண்டே இருக்கிறது என்பதற்கு பல சான்றுகள் காண கிடைகின்றன.. பாரி என்பவனை தெரியுமா?…. இப்படி கேட்டால் யாருக்கு தான் தெரியும். முல்லைக்கு தேர் கொடுத்த பாரிவள்ளல் யாரென்று தெரியுமா.. இப்போது தெரியும் என்று நினைக்கிறன்.. கடையெழு வள்ளல்களில் ஒருவன்.. பறம்பு நாட்டின் மன்னன் அவன் தான் வேள் பாரி.. வேளாண் குலத்தை சேர்ந்த குறுநில மன்னன்… பாரி மட்டும் அல்ல கடையெழு வள்ளல்கள் என்று கூறப்படும் வேள் பாரி, மலையமான் திருமுடிக்காரி,ஓரி,அதியமான், பேகன், நல்லி, அண்டிரன் போன்ற அனைவருமே வேளாளர் குலத்தை சேர்ந்தவர்கள் தான்.. வாய்மையும் வள்ளன்மையும் எப்போதுமே வேளாளர்களின் ஆக சிறந்த குணம். இதன் பொருட்டே. தேவாரத்தில் ஞானசம்பந்த பெருமான்

    “வேளாளன் என்றவர்கள் வள்ளன்மையான் மிக்கிருக்குந்
    தாளாளர் ஆக்கூரிற் தான்தோன்றி மாடமே”.

    என்று சிறப்பித்துள்ளார்.

    மேலும் கி.பி இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்த சங்க இலக்கிய புலவர் நக்கீரனார் வேளாண் குலத்தை சேர்ந்தவரே ஆவார் .. “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று பாடிய கணியன் பூங்குன்றனாரும் வேளாளர்தான். இவர் கணியன் எனப்படும் கணக்கு பிள்ளை அல்லது கணக்காயனார் குலத்தை சேர்ந்தவர்.. மேலும் அந்நாளில் அரசவையில் முக்கிய அமைச்சராகவும், மன்னனின் ஆலோசகராகவும், படை தலைவராகவும் ஆதற்குரிய தகுதி பெற்றவர்கள் வேளாண் குலத்தோரே ஆவார்கள் .. இதற்க்கு சிறந்த உதாரணம் பெரிய புராணம் அளித்த சேக்கிழார் பெருமான் மற்றும் திருமாளிகை தேவர் ஆகியோரே..

    ஊர் கணக்கர்களாகவும் அரசாங்க நிதி நிலையை கவனித்து கொண்டதும் வேளாளர்களே. அதனால் தான் அவர்களுக்கு கணக்கு பிள்ளை என்றொரு பெயரும் உண்டு.. நீங்கள் கூறுவது போல் வேளாளர்கள் சூத்திரர்களாக இருந்தால் இந்நேரம் இந்த துறைகளை மன்னர்கள் இவர்களிடம் வழங்கியிருக்க மாட்டார்கள் . எந்த வரலாறிலும் இவ்விரு துறைகளும் முதல் மூன்று வர்ணதார்க்கு குற்றவேல் தொழில் புரியும் சூத்திரர்களுக்கு(பறையர்கள், பாணர்கள், பஞ்சமர்கள்)இது வரை வழங்க பட்டதாக சரித்திரமே இல்லை. நீதியும், நிர்வாகமும் பார்பனர் வேளாளர் இருவரிடமும் தான் அந்நாளில் இருந்தது. அதனால் தான், இருவருக்கும் சமுதாயத்தில் மிக உயர்ந்த இடம் கொடுக்க பட்டது.. அவர்களுக்கு வரி விலக்கும் அளிக்க பட்டது… இது கட்டுக்கதை அல்ல .. இது நிஜ வரலாறு.. தமிழ் வரலாற்றில் இதை எங்கும் காணலாம்.. . இதை மேல்நாட்டு சரித்திர ஆய்வாளர்களான கால்டுவெல், ஈராஸ், ஜி.யு .போப் ஆகியோர் இதை உறுதி படுத்தி உள்ளனர்.. மேலும் தமிழ் தாய் வாழ்த்து பாடிய மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களின் மாணவர் தான் தமிழ் தாத்தா என்று அன்போடு அழைக்கப்படும் ஊ.வே.சா. ஊ.வே.சா ஒரு பார்பனர், அவர் மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் வீட்டிற்க்கு சென்று இளமையில் தங்கி உண்டு கல்வி கற்றார்.. வேளாளர்கள் சூத்திரர்களாக இருந்திருந்தால் இந்நேரம் ஊ.வே.சா அவர் இல்லத்திற்கு சென்று கல்வி கற்று இருக்க மாட்டார்.. மேலும் சைவ சமைய ஆதீனங்கள் அனைத்திற்கும் இன்று வரை தலைமை சந்நிதானமாக பொறுப்பேற்று இருப்பவர்கள் ஞானசம்ம்பந்தர் காலம் முதல் இன்று வரை வேளாளர்களே ஆவர்.. வேளாளரின் பெருமைகளை பற்றி கூறி கொண்டே போனால் நீளும் என்பதால் இதோடு முடிக்கிறேன். மேலும் இங்கு வேளாளர்களின் பிலாக்கணம் படுவதற்காக நான் இங்கு வரவில்லை.

    மேலும், தேவரடியார்கள் என்போர் 10ஆம் நூற்றாண்டிற்கு பிறகு ராஜ ராஜ சோழனால் கொணரப்பட்ட ஒரு பண்பாடு.. ஆனால் வேளாளர்களின் நாகரிகம் என்பது சங்க காலத்திற்கும் முதற் கொண்டே இருந்து வருகிறது.. தேவதாசிகளின் வழி வந்தவர்கள் தங்களை இசை வேளாளர்கள் என்று கூறி கொண்டார்கள்.. மேலும் நெசவாளர்கள் தங்களை முதலி என்கிற சாதியில் இணைத்து கொண்டார்கள்.. இதெல்லாம் தங்களின் அடையாளத்தை மறைப்பதற்காக அன்று பிரிட்டிஷ் ஆட்சியில் அவர்கள் கூறி கொண்டது..(ஏன் என்பது பற்றி நான் விரிவாக பேச விரும்பவில்லை). நிஜத்தில் இவர்களுக்கும் பாரம்பரியமிக்க சைவ, கார்காத்த வேளாளர்களுக்கும் மற்றும் அதனை சார்ந்த 8 பிரிவுகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. திருநெல்வேலி, யாழ்பாணம் போன்ற ஊர்களில் சென்று இவ்வாறு கூறினால் செருப்பால் தான் அடிப்பார்கள்..

    Edgar Thruston என்பவர் சென்னை அருங்காட்சியகத்தில் மேலதிகாரியாக பணி புரிந்தவர் .. தென் இந்தியாவின் பழங்குடிகளையும், சாதிகளையும் கணகெடுத்து ஆராய்ச்சி செய்ய அன்றைய பிரிட்டிஷ் அரசால் நியமிக்க பட்டார்.. அவர் நூல்களில் இருக்கும் செய்திகள் அனைத்துமே அந்தந்த சாதி, இன மக்களிடம் பழகி அவர்களின் பழக்கங்களை நேரில் பார்த்து கேட்டு அறிந்துகொண்டு அந்த நூலை வடிவமைத்தார்.. மற்றபடி அவருக்கு இந்திய வரலாறு பற்றியோ தமிழக வரலாறு பற்றியோ எதுவும் தெரியாது.. தேவதாசிகள் என்னும் ஆடல் மகளிர் எந்த காலகட்டத்தில் இங்கு வந்தார்கள் என்பதெல்லாம் அவருக்கு தெரிந்திருக்கவில்லை .. மற்றபடி அந்த நூலில் கூறப்பட்டிருக்கும் தகவல்களில் பல விஷயங்கள் சந்தேகத்திற்கு இடம் உள்ளவை அவரின் பல ஆய்வுகள் மறுபரிசீலனைக்கு உட்பட்டவை….. அதனால் தான் எந்த வரலாற்று ஆய்வாளரும் அவரின் இந்த நூலை இது வரை மேற்கோள் காட்டுவதற்கு கூட பயன்படுத்தவில்லை.. ஏனென்றால், வெள்ளையா இருக்கறவன் பொய் சொல்ல மாடன் என்று கண்ணை மூடி நம்புவதற்கு அவர்கள் யாரும் செந்திலை போன்று தரம் தாழ்ந்த அறிவுள்ளவர்கள் கிடையாது…

    அவருக்கு பின்பு வந்த தெற்காசியாவின் வரலாற்று ஆய்வாளரான “Crispin Bates” என்பவர் கூறும்போது.. தர்ஸ்டனின் தென்னிந்திய ஆய்வு என்பது நகைப்பிற்குரிய ஒன்றாகும் என்று கூறுகிறார்.. மேலும் அவர் கூறும்போது ” தர்ஸ்டன் பணி செய்யும் அருங்காட்சியகத்தில் தான் சேமிக்கும் வண்ணத்து பூச்சி மற்றும் பல்வேறு செடி கொடி மலர்களை பாதுகாத்து அதற்க்கு பெயர் வைப்பதை போன்றே தன்னுடைய ஆராய்ச்சியை செய்துள்ளார்” என்று காரி உமிழ்கிறார்..

    “One of the most ludicrous was Thurston’s study of southern India. Thurston was the curator of the government museum in Madras, and clearly saw the study of racial types among the Indians as an extension of his daily routine of labelling and pinning butterflies and of collecting and categorising the varieties of plants.”
    ஆதாரம்:http://en.wikipedia.org/wiki/Castes_and_Tribes_of_Southern_India

    ஆகவே செந்தில் , உமக்கு இருப்பது தரம்தாழ்ந்த அறிவு.. ஒரு வார்த்தை கிடைத்தாலே அவதூறை கிளப்பும் நீ இந்த புத்தகத்தில் இருப்பது உன் கண்ணில் பட்டதும் சும்மாவா இருப்பாய்.. இப்போதும் சொல்கிறேன் உனக்கு ஆராய்ச்சி செய்யும் அளவிற்க்கெல்லாம் எந்த தகுதிபாடும் கிடையாது. வரலாற்று ஆய்வுகள் அனைத்தையும் “அறிவில் சிறந்தவர்கள்” பார்த்து கொள்வார்கள். மீறி செய்ய நினைத்தால் இப்படி தான் கேவலமாக இருக்கும். எதையும் ஆராய்ச்சி செய்து பார்க்க வேண்டும் என்கிற ஆழமான அறிவெல்லாம் உமக்கு கிடையாது.. திரு. வியாசன் கூறியது போன்று “ஆதிக்கசாதி தமிழர்களைப் பழிவாங்க வேண்டும், அவர்களை இழிவு படுத்த வேண்டும் என்கிற வெறி தான் உனக்கு அதிகமாக உள்ளது”. இதை வைத்கொண்டு நீ ஒரு ஆணியும் புடுங்க முடியாது.. உன்னுடைய தரம் என்ன என்பது உமது எழுத்துகளிலேயே நன்றாக தெரிகிறது.. குலத்தளவே ஆகுமாம் குணம் என்பது ஆன்றோர் வாக்கு.. ஒருவனின் நடத்தை என்பது அவனின் குடிபிறப்பை சார்ந்து தான் இருக்குமென்பது பேச்சிலேயே தெரியும் என்பார்கள்.. நீ யாரின் எச்சமாக இருப்பாய் என்பது தெளிவாக உனது பேச்சிலேயே தெரிகின்றது.. என்னை பொறுத்தவரை இசை வேளாளர்கள், முதலிகள் அனைவரும் எம் சொந்தங்களே யாரையும் ஒறுத்து ஒதுக்கும் எண்ணம் எனக்கு கிடையாது.. அப்படி நான் இது வரை எங்கும் கூறியதும் இல்லை .. உன் போன்ற அற்ப ஜென்மங்களிடம் பேசினால் இப்படி தான் பேச்சு திசை மாறி பாசிச தன்மையாகி போகும் என்பதை இப்போது உணர்ந்து கொண்டேன் இனியும் உன்னுடன் வரலாற்றை பற்றி விவாதித்தால் நான் தான் ஈனன் ஆவேன்.. இதை படித்து முடித்ததும் நிச்சயம் இரண்டிலொன்று செய்வாய் 1. உன் ஈன புத்தியை மாற்றி கொள்ள முயற்சி செய்வாய் அல்லது 2. என்னை பற்றி ஒரு அறுவருக்கும் விதத்தில் ஒரு மொக்க கவிதை அல்லது சொல்லாடல் புரிவாய்.. நீ எதை செய்தாலும் போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் வினவிர்க்கே

    • சாதி வெறி மொக்கை தாயுமானவன்,

      “The title Mudali is used chiefly by the offspring of Dēva-dāsis (dancing-girls”)! 🙂

      http://www.gutenberg.org/files/42995/42995-h/42995-h.htm

      “Castes and Tribes of Southern India” was written by Edgar Thurston, C.I.E.,
      Superintendent, Madras Government Museum assisted by an Indian K,Rangachari of the Madras Gov Museum based on the cast wise census taken during 1900′s.

    • சாதி வெறி மொக்கை தாயுமானவன்,

      தமிழுக்கும் , தமிழ் நாட்டுக்காகவும் போராடிய மாபொசி அவர்களை

      அவர் உங்க சாதி இல்லை என்று தெரிந்தும் உங்க சாதி வெறியர்கள்

      அவரையும் உங்க சாதியில் சேர்த்து பெருமை பட்டுக்கொள்ளும்

      பொரம்போக்கு,பொறுக்கி தனத்தை கீழே பாருங்கள் !

      http://www.flickr.com/photos/77996448@N07/7001356636/in/photostream/

    • சாதி வெறி மொக்கை தாயுமானவன்,

      எந்த ——— இத உன் கிட்ட சொல்லுச்சி ! அதை வினவில் வந்து கழியுர !

      //குலத்தளவே ஆகுமாம் குணம் என்பது ஆன்றோர் வாக்கு.. ஒருவனின் நடத்தை என்பது அவனின் குடிபிறப்பை சார்ந்து தான் இருக்குமென்பது பேச்சிலேயே தெரியும் என்பார்கள்..//

      • குசும்புகார வினவு. ! 🙂

        நான் எழுதிய வார்த்தையை எடுத்தது மூலம் வாசகரின் சிந்தனைக்கு ஏற்ப அவர்கள் எந்த வார்த்தையையும் கோடு இட்ட இடத்தில் போட வாசகருக்கு அனுமதி அளிக்கின்றது !

        இக் “கோடு இட்ட இடத்தை நிரப்ப ” “________ ” போன்ற வார்த்தைகளை தவிர்க்கும் படி வாசகர்களை வேண்டுகின்றேன் !

    • சாதி வெறி மொக்கை தாயுமானவன்,
      Yes It is true!! 🙂
      முதலியார், பிள்ளை [இவை சாதிப் பெயர்கள் அல்ல அம்பி ] முதலான பட்டப் பெயர்களையும் இவர்களும்[தேவதாசி மக்கள்] பயன்படுத்திக் கொண்டனர்.

      //என்னை பொறுத்தவரை இசை வேளாளர்கள், முதலிகள் அனைவரும் எம் சொந்தங்களே யாரையும் ஒறுத்து ஒதுக்கும் எண்ணம் எனக்கு கிடையாது.. அப்படி நான் இது வரை எங்கும் கூறியதும் இல்லை//

    • நான் பிற்பட்ட , மிகவும் பிற்பட்ட, தலித்தியர் மக்களுக்கு ஆதரவாகவும் ,

      நான் தேவதாசி பற்றிய வரலாற்று உண்மைகளை ஆதாரத்துடன் கூறும் போது ,

      அதை மறுக்க வார்த்தை இன்றி இந்த இரு சாதி வெறி மொக்கைகளும் [வியாசன், தாயுமா]

      தலித்தியர் மக்களை மட்டும் குறி வைத்து தாக்கும்

      மர்மம் என்ன ?

      //இதுக்கு பேரு தான் இட ஒதுக்கீட்டு அறிவுனு சொல்லுவாங்க … என்னமோ பெரிய அராய்ச்சி செஞ்சு சொல்லுவேன்னு பாத்தா இன்னும் அதல பாதாளத்துல இறங்கிட்டியே… வேளாளர்களின் சாதிக்குரிய பிள்ளை பட்டம் போட்டு கொண்டு நிறைய பேர் வாழ்கிறார்கள் என்று எமக்கு தெரியும் .. அது பல நூற்றாண்டுகளா நடந்திக்கிட்டு தான் இருக்கு.. இன்னிக்கும் கூட சென்னைல தாழ்த்த பட்ட சாதியை சேர்ந்த (பறையர்) நிறைய பேர் முதலி என்கிற சாதி பெயரோடு தான் வலம் வருகிறார்கள் அதற்க்கு என்ன சொல்வது ……//

      • சாதி வெறி “பொறுக்கி” மொக்கை தாயு…,

        எம் தலித்தியர் மக்கள் உன் பார்பன-இந்து மத சாதி கொடுமைகளில் இருந்து விடுபட “மதத்தை” வேண்டுமானல் மாற்றுவார்களே தவிர “சாதி பெயரை” மாற்றும் பழக்கம் உன்னை போல அவர்களுக்கு இல்லை

        தமிழுக்கும் , தமிழ் நாட்டுக்காகவும் போராடிய மாபொசி அவர்களை அவர் உங்க சாதி இல்லை என்று தெரிந்தும் உன் சாதி வெறியர்கள் அவரையும் உன் சாதியில் சேர்த்து பெருமை பட்டுக்கொள்ளும் பொரம்போக்கு,பொறுக்கி தனத்தை கீழே பாரு !

        http://www.flickr.com/photos/77996448@N07/7001356636/in/photostream/

        தாயு said://இதுக்கு பேரு தான் இட ஒதுக்கீட்டு அறிவுனு சொல்லுவாங்க … என்னமோ பெரிய அராய்ச்சி செஞ்சு சொல்லுவேன்னு பாத்தா இன்னும் அதல பாதாளத்துல இறங்கிட்டியே… வேளாளர்களின் சாதிக்குரிய பிள்ளை பட்டம் போட்டு கொண்டு நிறைய பேர் வாழ்கிறார்கள் என்று எமக்கு தெரியும் .. அது பல நூற்றாண்டுகளா நடந்திக்கிட்டு தான் இருக்கு.. இன்னிக்கும் கூட சென்னைல தாழ்த்த பட்ட சாதியை சேர்ந்த (பறையர்) நிறைய பேர் முதலி என்கிற சாதி பெயரோடு தான் வலம் வருகிறார்கள் அதற்க்கு என்ன சொல்வது ……//

        தாயு said://“அவதூறு பொறுக்கி” கம்யுனிஸ்ட்

  144. Mr. Viyasan,

    You belittled Senthil and others by writing about புள்ளிகள் and சாதிச்சான்றிதழ். When Senthil retaliates, you write //சாதியொழிப்பைப் பற்றி பேசும் எந்த தமிழனும், சாதியின் அடிப்படையில் சக தமிழர்களை இப்படி இழிவு படுத்துவான் என நான் இதுவரை எதிர்பார்த்ததில்லை.// You say you wrote so for fun. Why don’t you allow that liberty to Senthil? Since then, you have repeated your fun so many times and in addition you have written so many unkind statements.

    //குறைந்த புள்ளிகள் எடுத்திருந்தும்//

    I think you know about private colleges where it is enough to have minimum marks to get admission. Let’s take medical colleges. Some people are getting admission and becoming doctors, with just minimum marks, way below the cut-off of SC, on paying 50-100 lakhs. Don’t these students affect the quality and merit?

    //அவன் “சாதிப்புத்தியைக் காட்டுகிறான்” *** தனது இனத்தை இழிவு படுத்துகிறவன், காட்டிக் கொடுப்பவன் தான் இழிந்த சாதியைச் சேர்ந்தவன். //

    I don’t know if you wrote this fully understanding what you wrote. There are people in all castes who belittle and betray their people. In this context what is the meaning of ‘சாதிப்புத்தியைக் காட்டுகிறான்’?

    • Mr.Univerbuddy,

      //You belittled Senthil and others by writing about புள்ளிகள் and சாதிச்சான்றிதழ். ///

      இதற்கு நான் முன்பே பதிலளித்து விட்டேன். நகைச்சுவையும், Sarcasm உம் கலந்த அவரது ‘நீதிமன்ற தீர்ப்பு’ பதிலுக்கு நானும் நகைச்சுவையுடன் தான் அந்தப் பதிலை எழுதினேன், அப்பொழுது அவரைச் சிறுமைப்படுத்த வேண்டும் அல்லது சாதியடிப்படையில் அவமானப்படுத்த வேண்டுமென்று நான் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. Dr. செந்திலுக்கு பகிடி, வெற்றி தெரியவில்லை அவ்வளவு தான். 🙂

      //When Senthil retaliates, you write //சாதியொழிப்பைப் பற்றி பேசும் எந்த தமிழனும், சாதியின் அடிப்படையில் சக தமிழர்களை இப்படி இழிவு படுத்துவான் என நான் இதுவரை எதிர்பார்த்ததில்லை.///

      அது உண்மை. நான் சும்மா ஜோக்கடிப்பதற்காகத் தான் சாதிச் சான்றிதள், குறைந்த புள்ளிகள், முட்டாள்தனமான வழக்கறிஞர், Passport ஐ பறிமுதல் செய்ய வேண்டும் என்றெல்லாம் எழுதினேன். அவர் அதை உணராமல், என்னவோ உணர்ச்சிவசப்பட்டு உளறத் தொடங்கி விட்டார்.

      //You say you wrote so for fun. Why don’t you allow that liberty to Senthil? ///

      Dr. Senthil never said that he was making fun, but he still kept repeating the same thing like a senile old man.

      //Since then, you have repeated your fun so many times and in addition you have written so many unkind statements.///

      I have no intention to hurt or insult anyone online or in real life. But I treat others the same way they treat me. My replies depend on how others are replying to me.

      //Let’s take medical colleges. Some people are getting admission and becoming doctors, with just minimum marks, way below the cut-off of SC, on paying 50-100 lakhs. Don’t these students affect the quality and merit?///

      I think they do. It is another form of stealing and fraud. That practice is most prevalent in third world countries. That’s why it is scary to trust the doctors who got medical college admissions via quota systems or by bribing the politicians.

      //அவன் “சாதிப்புத்தியைக் காட்டுகிறான்” *** தனது இனத்தை இழிவு படுத்துகிறவன், காட்டிக் கொடுப்பவன் தான் இழிந்த சாதியைச் சேர்ந்தவன். /I don’t know if you wrote this fully understanding what you wrote. There are people in all castes who belittle and betray their people. In this context what is the meaning of ‘சாதிப்புத்தியைக் காட்டுகிறான்’?///

      யார் தனது இனத்தை இழிவு படுத்துகிறானோ அல்லது காட்டிக் கொடுக்கிறானோ அவன் தான் இழிந்த சாதி என்பது என்னுடைய கருத்து. தமிழினத்தின் நாடற்ற, நாதியற்ற இழிநிலைக்குக் காரணம் தமிழர்களின் Legendary சகோதர யுத்தம் தான். அதனால் தான் மற்றவர்கள் நம்மை பிரித்தாளுகிறார்கள். அதனால் தனது சாதியைக் காரணம் காட்டி, சக தமிழர்களை இழிவு படுத்துகிறவன், காட்டிக் கொடுப்பவன், பழிவாங்கத் துடிப்பவன் தனது ‘சாதிப்புத்தியை’ அதாவது இழிந்த குணத்தைக் காட்டுகிறான் என்பது தான் நான் “சாதிப்புத்தியைக் காட்டுகிறான்” என்று யாழ்ப்பாணத்தில் கூறுவார்கள் என்பதன் கருத்து.

  145. Hi Senthilkumaran,

    Please keep your comments short and don’t repeat what you have already said, as far as possible, so that the debate takes place smoothly and post remains usable (this post has become too big to load and scroll).

  146. Mr. Ambi

    //வெள்ளையம்மா மூவேந்தர் காலத்து தேவரடியார் அல்ல//

    I am not sure. If you want I can withdraw her as an example.

    //மூவேந்தர் காலத்து தேவரடியார்கள் பரத்தையர் அல்ல, அவர்கள் மணம் புரிந்து குழந்தைகளும் பெற்றிருக்கிறார்கள்//

    It is debatable. But, since, this debate has become too big to load and scroll; it is better we stop here.

  147. திரு திப்பு…

    //அடுத்து இட ஒதுக்கீடு என்று வரும்போது மட்டும் சாதி ஒழிப்பு பற்றி பேசுவது அயோக்கியத்தனம்..வகுப்புவாரி பிரதிநிதித்துவம் என்ற அடிப்படையில்தான் இட ஒதுக்கீடு கோரப்படுகிறது.அதில் பெரியார் தெளிவாகவே இருந்தார்.அவரது விடாபிடியான போராட்டத்தால் இந்திய அரசியல் சட்டம் 50-களின் துவக்கத்தில் முதன்முறையாக திருத்தப்பட்டதே வகுப்புவாரி பிரதிநிதித்துவத்திற்காகத்தான்.//

    இது எப்படி அயோக்கியதனமாகும் என்று எனக்கு விளங்கவில்லை…. சாதியின் அடி கட்டுமானமே இடஒதுக்கீட்டில் தான் அடங்கி இருக்கிறது . இன்று சாதியை காட்டிலும் போதிய நிதி வசதி இன்றி தங்களுக்கு பிடித்த படிப்பை தொடர முடியாமல் போனவர்கள் தான் ஏராளம்… காசு உள்ளவன் பணம் கொடுத்தாவது தான் விரும்பிய கல்வியை வாங்கி விடுகிறான் .. அது இல்லாதவன் சாதியை வைத்து உள்ளே நுழைந்து விடுகிறான்.. இது இரண்டிற்குமே வழி இல்லாதவர்கள் தான் பாவம் நடுவில் மாட்டி கொண்டு அல்லல்படுவது.. இவர்களை கடைதேற்ற உங்களிடம் ஏதாவது வழி இருக்கிறதா..(வங்கிக்கு சென்று கல்வி கடன் வாங்குவதை தவிர)

    மேலும் இட ஒதுக்கீட்டின் மூலமாக கல்வியின் தரம் தான் பாதிக்க படும்… இதற்கொரு சிறந்த ஒரு எடுத்துகாட்டு இப்போது இருக்கும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் அவல நிலையே ஆகும்.. நீங்கள் சென்னையில் இருக்கும் எந்த அரசு கல்லூரியை வேண்டுமானாலும் போய் பாருங்கள் தரமான ஆசிரியர்கள் மாணவர்கள் ஆகிய இருவருக்குமே அங்கு பற்றாக்குறை இருக்கும்.. இன்று எந்த அரசு கல்லூரி ஆசிரியரும் ஒழுங்காக பாடம் நடத்துவது கிடையாது.. பணிக்கு வந்து Register இல் கையெழுத்து போடுவதோடு சரி.. ஒழுங்காக பாடம் எடுப்பது, மாணவர்களுக்கு தேவையான நோட்ஸ் கொடுப்பது, அவர்களுக்கு பாடத்தில் ஏற்படும் சந்தேகங்களை போக்குவது, என்னென்ன மேர்கல்விகள் பயிலலாம் போன்றவற்றிற்கு அக்கறையாக ஆலோசனை வழங்குவது போன்ற எந்த ஆசிரிய விழுமியங்களுமே அரசு கல்லூரி ஆசிரியர்களுக்கு இருப்பதில்லை .. காரணம், பணிக்கு அமர்த்தப்பட்ட ஆசிரியர்களும் இட ஒதுக்கீட்டின் மூலமாக வந்தவர்களே.. அவர்கள் சம்ம்பந்தபட்ட துறைகளில் அவர்களுக்கே போதுமான அறிவு இருப்பதில்லை.. எந்த மாணவனாவது சந்தேகம் கேட்க சென்றால் கோபமான பார்வை தன் ஆசிரியர்களிடம் இருந்து வருகிறது..

    25 ஆண்டுகளுக்கு முன்பு வரை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர நினைக்கும் மாணவர்கள் அரசு கல்லூரியை தான் தேர்ந்தேடுபார்கள்.. அப்படி அங்கு கிடைக்கவில்லை என்றால் தான் லயோலா, MCC,ஸ்டெல்லா மேரிஸ் போன்ற தனியார் கல்லூரிகளை பற்றி யோசிப்பார்கள்.. ஆனால் இன்று நிலை இப்படி தலைகீழ் ஆகி விட்டதே அதற்க்கு என்ன காரணம்.. எனக்கு தெரிந்து மாதம் 80,000 ஊதியம் பெறும் ஒரு அரசு கலை கல்லூரி ஆசிரியர் தன் பிள்ளையை சென்னையில் ஒரு பெயர் பெற்ற தனியார் கலை கல்லூரியில் தான் படிக்க வைத்துகொண்டு இருக்கிறார்.. அவர் மட்டும் அல்ல அவரை போன்று அனைத்து ஆசிரியர்களுமே அப்படி தான்..

    மேலும், அரசு கல்லூரிகளில் படித்தவர்களுக்கு தனியார் நிறுவனங்களில் யாரும் முன்னுரிமை கொடுப்பதில்லை.. அவர்கள் படிக்கும் கல்லூரியில் எந்த Corporate நிறுவனங்களும் இது வரை “Campus Interview” என்று பெயருக்கு கூட வந்தது கிடையாது.. ஏனென்றால் அரசு கல்லூரியில் படித்து வந்தவர்களின் அறிவு என்ன நிலையில் இருக்கும் என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும்..

    நான் கூறியதில் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் நீங்கள் தமிழ்நாட்டிலுள்ள எந்த கல்லூரியை வேண்டுமானாலும் போய் ஆய்வு செய்து பாருங்கள் அப்போது தெரியும் இந்த உண்மை …

    இதற்கெல்லாம்.. முக்கியமான காரணம் ஒன்றுதான் ” கல்வியை பெறுவதில் வேலைவாய்ப்பை அளிப்பதில் கடைப்பிடிக்க படும் சாதி ரீதியிலான இட ஒதுக்கீட்டு முறை தான்.. சாதின் மூலமாக இட ஒதுக்கீட்டை ஒழித்து விட்டு, நன்கு படிக்கும் பொருளாதார ரீதியாக பின் தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும்.. அப்போது தான் கல்வி சிறந்து வளரும்… இதன் மூலமாக தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்தவர்களுக்கு கல்வி கற்கும் வாய்ப்புகள் மேலும் அதிகரிக்கும்.. சமுதாயத்திலும் அறிவின் தேக்க நிலை மாறும்.. சாதியும் ஒழியும்…

    //”சாதி இருக்கும் வரை இட ஒதுக்கீடு இருக்கும்.தலைகீழாக நின்றாலும் மோடியே பிரதமர் ஆனாலும் உங்களால் அதை ரத்து செய்ய முடியாது”//

    இட ஒதுக்கீடு இருந்த கொண்டிருக்கும் வரை சாதி இருந்து கொண்டே இருக்கும் … சாதிய அவலங்கள் இந்த நாட்டில் பெருகி கொண்டே போகும்.. இது தான் எதார்த்த உண்மையும் கூட..

    • திரு.தாயுமானவன் பிள்ளை அவர்களே:

      தாயுமானவன் என்ற அழகான தமிழ் பெயருடன் ஏன் நீங்கள் தங்கள் சாதி பெயரை சேர்த்து கொள்கிறீர்கள்? சாதி அடையாளம் இந்த சமயத்தில் தேவையில்லையே.

      சாதிய கொடுமைகள் இன்னும் தமிழகத்தில் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. மறுக்க இயலாத உண்மை இது. இன்னும் சில காலம் இட ஒதுக்கிட்டுக்கான தேவை உள்ளது. பின்னர் படிப்படியாக அதை விலக்கி கொள்ளலாம். இதில் பிரச்சினை எங்கு வருகிறதென்றால், சாதி தீயை மூட்டி அந்த சூட்டினில் அரசியல்வாதிகள் குளிர்காய்கிறார்கள். தீயை மூட்டிய அரசியல்வாதிகள் வசதியாக எந்த பிரச்சினையும் இல்லாமல் நிம்மதியாக வாழ்கிறார்கள். ஆனால் நாமோ நம் இனத்தவரோடு சாதிப்பகை பாராட்டி ஒருவரை ஒருவர் அழித்து கொள்கிறோம்.

      ஆக்கபூர்வமாக மக்கள் யோசித்து பழகினால் அனைவருக்கும் நன்மையே.
      இருவேறு சாதிகளுக்கிடையே புரிந்துணர்வு இல்லாதிருப்பதும் இந்த பிரச்சினைக்கு காரணம்.
      எனக்கு இரு பிரிவினரிலும் நண்பர்கள் உள்ளனர். தாழ்த்தப்பட்ட சாதியினர் உயர்வகுப்பினர் இருக்கும் இடத்தில் புல்லட் வண்டியில் சென்றாலோ, இல்லை கூலிங்கிளாஸ் அணிந்து சென்றாலோ, அதை உயர்சாதியினர் கேவலமாக பார்த்து அவர்களுக்குள் கிண்டல் செய்வதை பார்த்திருக்கிறேன். “இவனுக்கு வந்த வாழ்வை பார்த்தியா?, என்ன திமிரா போறான் பாரு, நம்ம முன்னாடி இடுப்புல துண்டை கட்டிக்கிட்டு கூனி குறுகி நின்ன பசங்க இப்போ பாரு என்ன ஆட்டம் போடுறாங்க” என்ற ரீதியில் அவர்களுக்குள் பேசிக்கொள்வதை கண்கூடாக பார்த்திருக்கிறேன். அதே சமயம் அதே போல புல்லட்டில் அவர்கள் சாதிக்காரன் சென்றால் அதை ஒரு பொருட்டாக அவர்கள் சொல்வதில்லை.
      தாழ்த்தப்பட்ட சாதியினருக்கும், உயர்சாதியினர் நிறைந்த இடத்துக்கு செல்லும்போது ஒரு வித பய உணர்ச்சி, Insecure feeling ஏற்படுகிறது. அதனை மறைக்க தான் அவர்கள் மிடுக்கான ஒரு தோரனையை காட்டுகிறார்கள். இதில் தவறில்லை.
      சுனாமி, பூகம்பம் போன்ற பேரழிவு சமயங்களில் ஒருவருக்கொருவர் உதவி செய்ய நாம் சாதி வித்தியாசம் பார்த்துக்கொண்டிருப்போமா? இல்லை, விபத்து சமயங்களில் இன்ன சாதியினருடைய இரத்தம் மட்டும் தான் ஏற்ற வேண்டும் என்று அடம் பிடிப்பீர்களா?

    • \\இது எப்படி அயோக்கியதனமாகும் என்று எனக்கு விளங்கவில்லை…. சாதியின் அடி கட்டுமானமே இடஒதுக்கீட்டில் தான் அடங்கி இருக்கிறது//

      தவறு.சாதி பற்றி அதன் அடிக்கட்டுமானம்,அது நீடித்திருப்பதற்கான காரணங்கள் பற்றி தெரிந்து கொள்ள அம்பேத்கரின் ”சூத்திரர் யார்” நூலை படித்து பாருங்கள்.இட ஒதுக்கீடு சாதியால் ஒடுக்கப்பட்டு பின் தங்கிய மக்களுக்கான ஒரு நிவாரணமே அன்றி வேறொன்றுமில்லை.

      சாதி வாரி இட ஒதுக்கீட்டுக்கு எதிராக பேசுவோர் அத்தனை பேருமே சாதி ஒழிப்புக்காக துரும்பை கூட கிள்ளி போடாதவர்கள்.அவர்கள் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக பேசும்போது மட்டும் சாதி ஒழிப்பு போராளிகளாக வேடம் போடுவது அயோக்கியத்தனம் அன்றி வேறென்ன.

      இட ஒதுக்கீடு காரணமாக தரம் தாழ்கிறது என்பதும் உண்மையல்ல.இட ஒதுக்கீடு மூலம் இடங்கள் நிரப்பப்படும் அரசு பொறியியல் கல்லூரிகளும் அரசு மருத்துவ கல்லூரிகளும் தரத்தில் முன்னணி வகிக்கின்றன என்பதை நினைத்து பார்க்க வேண்டும்.மற்றபடி அரசு கலை கல்லூரிகளின் ஆசிரியர்கள் ஒழுங்காக வேலை செய்யவில்லை என்றால் வேலை வாங்க தெரியாத அரசின் குற்றம் அது.இட ஒதுக்கீட்டின் குற்றமல்ல.

      \\இட ஒதுக்கீடு இருந்த கொண்டிருக்கும் வரை சாதி இருந்து கொண்டே இருக்கும் … சாதிய அவலங்கள் இந்த நாட்டில் பெருகி கொண்டே போகும்.. இது தான் எதார்த்த உண்மையும் கூட//

      இட ஒதுக்கீடு இல்லாத காலத்தில் சாதி அடக்குமுறை இல்லாமல் இருந்ததா.சொல்லப்போனால் கூடுதலாக இருந்தது.உண்மையில் இட ஒதுக்கீடு சாதி அடக்குமுறையை எதிர் கொள்ள கிடைத்த பல ஆயுதங்களில் ஒன்று.

    • UGC NET, SLET Exams முடித்து தான் யாரும் அரசு கல்லூரியில் ஆசிரியர் ஆக முடியும் என்ற அடிப்படை கூட தெரியாத “மூடனாக” இருக்குது சாதி வெறி மொக்கை தாயுமானவன்

      //காரணம், பணிக்கு அமர்த்தப்பட்ட ஆசிரியர்களும் இட ஒதுக்கீட்டின் மூலமாக வந்தவர்களே.. அவர்கள் சம்ம்பந்தபட்ட துறைகளில் அவர்களுக்கே போதுமான அறிவு இருப்பதில்லை.. //

    • சாதி வெறி மொக்கை தாயுமானவன்,

      முன்னுக்கு பின் முரணாக பெனத்துகின்றது . 🙂

      //காரணம் ஒன்றுதான் ” கல்வியை பெறுவதில் வேலைவாய்ப்பை அளிப்பதில் கடைப்பிடிக்க படும் சாதி ரீதியிலான இட ஒதுக்கீட்டு முறை தான்.. சாதின் மூலமாக இட ஒதுக்கீட்டை ஒழித்து விட்டு, நன்கு படிக்கும் பொருளாதார ரீதியாக பின் தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும்.. அப்போது தான் கல்வி சிறந்து வளரும்… இதன் மூலமாக தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்தவர்களுக்கு கல்வி கற்கும் வாய்ப்புகள் மேலும் அதிகரிக்கும்.. சமுதாயத்திலும் அறிவின் தேக்க நிலை மாறும்.. சாதியும் ஒழியும்…//

      • It is a fact that SC children are amongst the sincere ones in education but they get superceded by quota students of cities.

        By having quota,you are not able to have a real gauge of performance.

  148. ஐயா,

    இதில் மட்டுமா நழுவினார் ! ராஜ ராஜனின் அண்ணனை கொன்றது யார் என்ற விடயத்திலும் தானே ராசமாணிக்கனார் நழுவினார் !

    “வீமன் குந்தவையார் கீழைச்சாளுக்கிய வீமன் மகள் “[பக்கம் 172.]

  149. Mr.Buddy….

    // “மாணவர்களுக்கு தினமும் அரை வேலை தான் படிப்பு. மீதி அரை நேரம்,எதாவது கைத்தொழில் கற்க வேண்டும்”//

    Does a child have to learn a job at 5 years itself? Don’t you think it is too early?

    First of all, These Ideologies are uttered by rajagopalachari when he was C.M of Madras presidency by the year 1953.. so we have to take this fact as per the timeline of rajaji.. Rajaji Never mentioned the age.. But, by the time of 50s most of the jobs carried out in the society was caste based.( potters,cobbler,barber,dobby n even for agricultural works). so,their parents unwittingly avoided their child from going to schools for the purpose to help them for carrying out their jobs in quick process of time.. To make an end for this tragedy rajaji announced “New Education Scheme”. In that scheme school will be functioning half a day in two shifts morning and evening. A student can choose anyone based on their convienience .. and in remaining other half day he/she can help their parents(only if their parents wishes)working along with them.. it wasn’t an compulsion.. As a result of that they don’t need to quit their schools so the their education will never get stagnated..

    // தந்தை செய்யும் தொழிலுக்கு மகன் உதவியாக இருந்து அந்த தொழிலை கற்று கொள்ளலாம்//

    If father is a doctor, can a child of 5 years, help his father? If father is a driver, can a child of 5, help his father? Consider also other jobs like, teacher, nurse, miner, fitter, founder, smith, etc.//

    What you are saying seems too be an absurdity … Read the word carefully.. rajaji mentioned the word “கைத்தொழில்”.which means handicraft works like weaving, spinning, stitching,agricuture etc.. And medical course(doctor) isn’t coming under handicraft.. it was a professional course all the time.. And by the way, practising a medical science was a dream even in todays situation. then think about in 1950s. only the peoples who descends from royal and rich family can think about medical science.. why they gonna send their childrens for any labour work. and they are minority in population.. whom rajaji is talking about was majority working class people based on their caste based work.. As he was very much concerned on their education..

    // பிள்ளைகளை படிக்க வைக்க முடியமால் வேலைக்கு அனுப்பி குடும்பத்தை காப்பாற்றும் சூழ்நிலை அன்று அதிகம்//

    Can a 5 year old earn and support its family? Is this how a Country needs to tackle its poverty? What about those families which can support the education of its children? Will they have full time school?//

    See buddy.. only by that time india has attained her freedom from british empire.. In that time majority of people were suffering from poverty. Not only the citizens but the whole country was suffering from lack of funds and capital for constructing new educational institutions. There was no enough educational institutions to give proper school education for all the childrens.. so, rajaji came with a plan of “New educational scheme” offering only half a day in 2 shifts.. morning and afternoon..till the situation gets normal.. This will create opportunity for lot more childrens to attain their basic education without any obstacle.. educational scheme will be uniform for all class peoples.. there is no separate education for upperclass and working class.. school time will be the same for all.. no discrimiations

    Mr.buddy, am not justifying or supporting rajaji.. what am saying is the political fact. And their is proper evidence for that. Rajaji never introduced this scheme in fascist vision. It was dravidian organizations who painted MANU-SMRITI for the scheme unnecessarily to capture the reign.

  150. Hi கற்றது கையளவு,

    //***சாதியினர் நிறைந்த இடத்துக்கு செல்லும்போது//,

    இந்த வரியிலும் மற்ற எல்லா இடங்களிலும் சாதிக்கு அடைமொழியாக உயர் தாழ் போன்ற வார்த்தைகளை சேர்ப்பது மனிதர்களுள் சமத்துவம் வேண்டுவோர்க்கு அழகல்ல. புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
    தேவையான இடங்களில் ஆதிக்க, ஒடுக்கப்பட்ட போன்ற அடைமொழிகளைப் பயன்படுத்தி உங்கள் கருத்தை வெளியிடுவதே சிறந்தது.

    • தமிழில் பதிவிட்டுள்ளீர்கள். நன்றி.
      நீங்கள் கூறியது சரி தான். திருத்திக்கொள்கிறேன்.

  151. Hi தாயுமானவன்,

    // am not justifying or supporting rajaji//

    You spoke very high about Rajaji and his educational scheme. But now you back track.

    You know what.

    அந்த திட்டம் அதிகாரத்தில் உள்ள மக்களின் எண்ணங்களில் உள்ள சிறுமையையும் வறுமையையும் காட்டுகிறது. அந்த திட்டத்தைப்பற்றிய மற்றும் அந்த திட்டத்தை அறிமுகப்படுத்திய மனிதரைப் பற்றிய உங்கள் எழுத்துக்களும் பின்வாங்கல்களும் உங்கள் எண்ணங்களின் சிறுமையையும் வறுமையையும் காட்டுகின்றன.

  152. திரு. கற்றது கையளவு…

    //தாயுமானவன் என்ற அழகான தமிழ் பெயருடன் ஏன் நீங்கள் தங்கள் சாதி பெயரை சேர்த்து கொள்கிறீர்கள்? சாதி அடையாளம் இந்த சமயத்தில் தேவையில்லையே.//

    மிக்க நன்றி.. நான் பிள்ளை என்று போட்டு கொண்டது சாதி வெறியினால் அல்ல.. எனக்கு பிடித்து இருந்தது அதனால் போட்டு கொண்டேன் . இருந்தாலும் தாங்கள் கூறியதையும் பரிசீலிக்கிறேன்…

    //சாதிய கொடுமைகள் இன்னும் தமிழகத்தில் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. மறுக்க இயலாத உண்மை இது. இன்னும் சில காலம் இட ஒதுக்கிட்டுக்கான தேவை உள்ளது. பின்னர் படிப்படியாக அதை விலக்கி கொள்ளலாம். இதில் பிரச்சினை எங்கு வருகிறதென்றால், சாதி தீயை மூட்டி அந்த சூட்டினில் அரசியல்வாதிகள் குளிர்காய்கிறார்கள். தீயை மூட்டிய அரசியல்வாதிகள் வசதியாக எந்த பிரச்சினையும் இல்லாமல் நிம்மதியாக வாழ்கிறார்கள். ஆனால் நாமோ நம் இனத்தவரோடு சாதிப்பகை பாராட்டி ஒருவரை ஒருவர் அழித்து கொள்கிறோம்.//

    அன்பரே, இப்போது தான் நீங்கள் சரியான இடத்திற்கு வந்திருக்கிறீர்கள்… சாதி என ஒன்று இருப்பதால் தான் அதில் தீ மூட்டி குளிர் காய பார்க்கிறார்கள்.. அதற்கு தான் சாதியை ஒழித்தால் இது போன்ற கேடுகள் ஏற்படாது என்று கூறுகிறேன்.. அதை பள்ளிகூடத்தில் இருந்து தொடங்க வேண்டும்.. சாதியின் அடிப்படையில் இடஒதுக்கீடு அளிப்பதை ரத்து செய்து.. வருமானத்தின் அடிப்படையில் என்று மாற்றினால்.. நன்றாங்க கவனியுங்கள் அறிவின் அடிப்படையில் என்று நான் கூறவில்லை.. ஏழ்மையின் அடிப்படையில் என்கிற ரீதியில் வாய்ப்பளித்தால்.. இப்போது இருப்பதை விட தாழ்த்தபட்டவர்களுக்கு மேலும் அதிகமாக கல்வி பயிலும் வாய்ப்பு கிட்டும்.. ஏனென்றால் பொருளாதார ரீதியாக மிகவும் பின் தங்கிய நிலையில் அதிகமாக இருப்பவர்கள் அவர்கள் தான்.. கூலி வேலை பார்த்து கஷ்டபடுபவர்கள் ஏராளமானோர் இருகிறார்கள்.. அவர்கள் அனைவருக்கு சாதி அடிப்படையில் கல்வி வேலைவாய்பு சம்மந்தப்பட்ட அணைத்து சலுகைகளும் கிடைத்து விடுவதில்லை… என்னதான் தாழ்த்தப்பட்டவர்கள் என்றாலும் அனைவருக்கும் “Posting Allotment ” குறிப்பிட்ட அளவிற்கே கிடைக்கிறது …

    //ஆக்கபூர்வமாக மக்கள் யோசித்து பழகினால் அனைவருக்கும் நன்மையே.//

    எது ஆக்கபூர்வமானது.. பள்ளியில் 6ஆம் வகுப்பு படிக்கும் பிள்ளையிடம் வகுப்பாசிரியர் நாளை வரும்போது மறக்காமல் “Community Certificate ” கொண்டுவா என்கிறார்.. சாதி என்றால் என்னவென்றே தெரியாது ஒரு குழந்தைக்கு அப்போதுதான் ஜாதி என்கிற பெயர் மனதில் பதிகின்றது.. வீடிற்கு சென்று பெற்றோரிடம் கேட்கும்போது இன்னும் ஆழமாக பதிகின்றது.. சாதி என்பதை ஒழித்தால் அப்போது ஏன் இதெல்லாம் நடக்க போகின்றது..

    //தாழ்த்தப்பட்ட சாதியினர் உயர்வகுப்பினர் இருக்கும் இடத்தில் புல்லட் வண்டியில் சென்றாலோ, இல்லை கூலிங்கிளாஸ் அணிந்து சென்றாலோ, அதை உயர்சாதியினர் கேவலமாக பார்த்து அவர்களுக்குள் கிண்டல் செய்வதை பார்த்திருக்கிறேன். “இவனுக்கு வந்த வாழ்வை பார்த்தியா?, என்ன திமிரா போறான் பாரு, நம்ம முன்னாடி இடுப்புல துண்டை கட்டிக்கிட்டு கூனி குறுகி நின்ன பசங்க இப்போ பாரு என்ன ஆட்டம் போடுறாங்க” என்ற ரீதியில் அவர்களுக்குள் பேசிக்கொள்வதை கண்கூடாக பார்த்திருக்கிறேன். அதே சமயம் அதே போல புல்லட்டில் அவர்கள் சாதிக்காரன் சென்றால் அதை ஒரு பொருட்டாக அவர்கள் சொல்வதில்லை.//

    கண்டிப்பாக இந்த ஆதிக்க சாதி மனோபாவத்தை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க தான் வேண்டும்.. நான் இதற்கெல்லாம் ஆதரவாக பேசவில்லையே.. ஒடுக்கப்பட்டவர்களுக்கு நிச்சயம் தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும். அவர்களுக்கான உரிமைகளை மீட்டு கொடுக்க தான் வேண்டும்.. ஆனால், அது எப்படி… நிச்சயம் இட ஒதுக்கீட்டினால் முடியாது. சாதி என்பதை பிறப்பு, இறப்பு, கல்வி சான்றிதழ்களில் என்று தலையில் சுமந்து கொண்டு இருக்கும் வரை இதற்க்கு சாத்தியம் இல்லை.. சாதியை பற்றிய என் கருத்து இதுதான்..

    //இல்லை, விபத்து சமயங்களில் இன்ன சாதியினருடைய இரத்தம் மட்டும் தான் ஏற்ற வேண்டும் என்று அடம் பிடிப்பீர்களா?//

    நான் செந்திலுக்கு கூறும் மறுமொழிகளை வைத்து நீங்கள் என்னை சாதி வெறியன் என்று எடை போடுகிறீர்கள் என்று நினைக்கிறன்..

    திரு. கற்றது கையளவு.. நான் பாசிஸ்ட் கிடையாது.. ஆனால் தமிழ் தேசியத்தை, தமிழர்களின் வரலாற்றை நேசிக்கிறேன்.. தமிழ் தேசியம் என்பது வேளாளர்கள் கையில் இல்லை அனைத்து சாதி தமிழ் மக்களின் ஒற்றுமையில் தான் அது சாத்தியம் ஆகும்..

    • ஆங்கிலத்தில் jingoism என்று சொல்வார்கள்.
      நாட்டுபற்று இருக்கலாம், அது வெறியாக மாறி மற்ற நாட்டவரை சிறுமைப்படுத்துவதை தான் அப்படி சொல்வார்கள்.
      அதே போல தான் இங்கு எல்லோருக்கும் தங்கள் சாதி, தங்கள் மதம், தங்கள் இனம், தங்கள் மொழி, தங்கள் நாடு என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் ஜிங்கோயிஸ்ட் ஆக இருக்கிறோம்.

      கொஞ்சம் பின்னோக்கி பார்த்தோமென்றால் நாம் அனைவரும் தூசியிலிருந்து தான் உருவானோம். இதில் சாதி என்ன, மதம் என்ன, இனம் என்ன, மொழி என்ன, நாடு என்ன???
      இந்த சிறிய வட்டங்களிலிருந்து தாண்டி நாம் யோசித்தால் என்ன???

    • Respected Thayumanavan Pillai,

      This incident happened much before independence and before anybody thought about reservations and community certificates.The year was 1924.A Gurukulam was run by Va.Ve.Su.Aiyar,a great scholar and freedom fighter that too belonging to the extremist block of Congress leaders at Cheranmahadevi.Only children of Congressmen and those who want to have an education with Indian cultural values were studying.One among the students was the son of Omandur Ramasamy Reddiar,who became CM of Tamilnadu in 1948 and gave a clean government.After the Half Yearly examination,his son came home for holidays.Reddiyar was inquiring his son about his education and his hostel life.After narrating everything,his son told him that he would not return to the Gurukulam after the holidays.When Reddiar wanted to know his reasons,his son asked him,”what is the meaning of “THEETTU”Reddiar was perplexed.He must be studying only in First Standard at that time because he had the following nasty experience for the first time in his life.On Reddiar”s prodding,the boy narrated the following.”One day,after the Gardening class,I was thirsty.I saw a pot with water.I drank a cup of water.Before I could drink the water,I was slapped by a Brahmin teacher.Not only that, that teacher was muttering with anger,the following words;-“How`dare a Suudhra boy drink water from a pot meant for Brahmins?Your “THEETTU”has stuck on this pot”Naina,not only this,we a group of students are fed meals at a different place.Another group of students(I came to know that they are Brahmins were provided meals in yet another place.They were given Vadai,Payasam during Amavasai,Pournami and Kaarthigai days.Our group never get those special items on any day.Those boys will not join us in gardening.They will assist in the kitchen only.There also,our group would be engaged in washing the vessels and never allowed to assist in cooking.Once I asked a teacher,”Can I assist in cooking?”That techer stared at me angrily and never gave any reply.I do not like this hostel.I will not go there”

      Reddiar was very angry.He never expected this type of treatment in a Gurukulam run by a patriot.Periyar was the Secretary of Congress Committee then.He sent his son to Erode and asked him to narrate the events to Periyar.Periyar was naturally angry.The Congress party assured a donation of Rs10000/- that year to the Gurukulam.Already,Rs 5000 was paid and the party has to release another Rs5000/- in Jan,1925.Periyar convened emergency EC meeting on 17th Jan,1925 to discuss about this matter.On inquiry,it was learned that a “VIP”donor to the Gurukulam gave the donation with a condition that his Brahmin children should be fed only with other Brahmin children only.Aiyar,after accepting the condition,made the suggested condition as a practice.In the EC meeting,it was decided not to release the remaining Rs5000/-till a decision is arrived.But,without the knowledge of Periyar,Aiyar got Rs 5000/- through another Secretary.Thiruvika was mediating saying that this method of feeding children in different groups should be stopped at least in the ensuing academic year.But Aiyar branded Thiruvika as a tool of the persons creating trouble.The matter was discussed in the next EC meeting on 25th April,1825 again.Rajaji advised Aiyar to stop the practice.But told that the public (including Congress party)interfering in the affairs of the Gurukulam.He also told that there is nothing wrong in such method of feeding as happening in many other educational institutions and temples.T.S.S.Rajan supported Rajaji.When he heard about this problem,Gandhi also advised Aiyar to give an undertaking to him to stop the practice,so that he could persuade Dr Varadarajulu Naidu,the President and EVR,the secretary to drop the matter.But Aiyar was not listening to even Gandhi in the matter.Mr S.Ramanathan brought an amendment to the resolution to enforce new procedure of feeding children by appointing a monitoring committee consisting of (1).Devakottai V.Thiagaraja Chettiar (2)S.Ramanathan and (3)EVR.When the resolution was put to vote 19 out of 26 supported and 7 opposed.But,after the meeting,for prominent members resigned from the EC.They were (1)Rajaji,(2)Dr T.S.S.Rajan,(3)K.Santhanam (who released another 5000 without the knowledge of Periyar), and(4)Dr T.V.Swaminathan.Aiyar,subsequently closed the Gurukulam saying that he would not comply with the resolution.

      This is not my figment of imagination.Read the book,”Gurukula Porattam” by Naara.Nachiappan,Published by Arulbharathi Pahippagam in 2009.K.Veeramani also wrote a book with the same topic.Lot of details are available in the websites if you click “Cheranmahadevi Gurukulam”

      Now,tell me Thayumanavan Pillai whether reservation and community certificate were necessary to make the little son of Omandhuraar to understand “THEETTU”and “Suudraas”?

  153. திரு. திப்பு…

    //சாதி வாரி இட ஒதுக்கீட்டுக்கு எதிராக பேசுவோர் அத்தனை பேருமே சாதி ஒழிப்புக்காக துரும்பை கூட கிள்ளி போடாதவர்கள்.அவர்கள் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக பேசும்போது மட்டும் சாதி ஒழிப்பு போராளிகளாக வேடம் போடுவது அயோக்கியத்தனம் அன்றி வேறென்ன.//

    சாதி என்பது சொல்லளவிலாவது இருக்கும் வரை இப்படி பட்ட முரண்பாடுகள் தான் நீட்டிக்கும்.. அரசியல் சாசனத்தில் இருந்து சாதி என்னும் சொல்லை மற்றும் சாதிய சலுகைகளை.. (அது பார்பனர் மட்டுமே கோவில்களில் அர்ச்சகர் ஆகும் சலுகையாக கூட இருக்கட்டுமே) நீக்கினால் மட்டும் தான் இந்த முரண்பாடுகள் அனைத்திற்கும் ஒரு முடிவு கிடைக்கும் … அப்போது சமுகத்தின் அனைத்து துறைகளிலும் சாதி வெறி என்பது இல்லாமல் போகும்..
    அனைத்து சாதியினரும் அர்ச்சகராக மூத்த வழக்கறிஞர்களுக்கு இப்படி லட்சகணக்கில் பணத்தை கொட்டி கொடுத்து போராட வேண்டிய அவசியம் அங்கே இருக்காது…

    //தவறு.சாதி பற்றி அதன் அடிக்கட்டுமானம்,அது நீடித்திருப்பதற்கான காரணங்கள் பற்றி தெரிந்து கொள்ள அம்பேத்கரின் ”சூத்திரர் யார்” நூலை படித்து பாருங்கள்.இட ஒதுக்கீடு சாதியால் ஒடுக்கப்பட்டு பின் தங்கிய மக்களுக்கான ஒரு நிவாரணமே அன்றி வேறொன்றுமில்லை.//

    ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் இட ஒதுக்கீடு என்பது தாழ்த்த பட்ட மக்களுக்கான நிரந்தர நிவாரணம் அல்ல .. அதன்மூலம் சாதி என்கிற பாறை மேலும் கெட்டியாகுமே தவிர.. உலராது .. காரணம் சாதிய இட ஒதுக்கீடு என்பது சாதியை ஒழிக்க ஒரு புரட்சிகரமான தீர்வெல்லாம் கிடையாது.. அது ஒரு பம்மாத்து.. புரியும்படி சொல்லவேண்டுமானால் அது ஒரு சீர்திருத்த நடவடிக்கையே தவிர வேறொன்றுமல்ல.. சீர்திருத்தம் என்றாலே மக்களை ஏமாற்றுவதற்காக என்று பொருள்.. இட ஒதுக்கீட்டு முறை என்பதே கம்யுனிச கோட்பாட்டிற்கு எதிரானது அதை எப்படி தங்களை போன்ற கம்யுனிஸ்டுகள் ஏற்கிறார்கள் என்று தெரியவில்லை.. இதை பற்றி தெரிந்து கொள்ள லெனினின் ” மார்க்சியமும் சீர்திருதவாதமும்” என்ற நூலினை படித்து பாருங்கள்… அதில் லெனின் சீர்திருத்தம் பற்றி கூறுவது இது தான்.

    “முதலாளித்துவ வர்கத்தின் தரப்புக்கு, நாம் வாழும் இச்சகாப்தத்தின் அடிமையான கூலி உழைப்பாளனை பார்த்து “அடிமை என்கிற அளவில் உன்னுடைய நிலைமையை மேம்படுத்தி கொள்ள போராடு, ஆனால் அடிமை முறையை வீழ்த்துவதென்ற எண்ணத்தை தீங்கிழைக்கும் கற்பனையாய்க் கருது” என்ற மிதவாதியின் தரப்புக்கு சென்றுவிடுவதாகவே அர்த்தம்

    லெனின் தெளிவாக இதை கூறி விட்டார், இதை அப்படியே சாதியத்திற்கு பொருத்தி பாருங்கள்..முதலாளித்துவ என்கிற இடத்தில ஆதிக்க என்றும்.. அடிமை என்கிற சொல்லை நீக்கிவிட்டு தலித் என்ற சொல்லையும் அந்த இடத்தில் வைத்து படித்து பாருங்கள் புரியும் .. என்னளவில் ராமசாமி ஒரு சீர்திருத்தவாதி மட்டுமே, அவர் புரட்சியாளர் எல்லாம் கிடையாது.. என்ன வினவு சரி தானே.. மேலும்,

    தலித்துகள் அனைவருக்கும் எல்லாம் சலுகைகள் கிடைத்து விடுவதில்லை.. யார் மதம் மாறாமல் இந்து மதத்திலேயே இருக்கிறாரோ அவருக்கு மட்டும் தான் இந்த சலுகைகள்.. இதை பற்றி வினவில் வெளியான “கண்ணை மறைக்கும் காவி புழுதி” என்னும் தொடரில் கண்டுகொள்ளலாம்.. இந்து மதத்தில் இருந்து கொண்டு தன்னை தாழ்த்தபட்டவன் என்பதை ஒப்பு கொண்டால் மட்டும் தான் சலுகைகள்.. (இதற்காக நான் இந்து மதத்தை வெறுப்பதாக எடுத்துகொள்ள வேண்டாம்)

    //அரசு கலை கல்லூரிகளின் ஆசிரியர்கள் ஒழுங்காக வேலை செய்யவில்லை என்றால் வேலை வாங்க தெரியாத அரசின் குற்றம் அது.இட ஒதுக்கீட்டின் குற்றமல்ல.//

    இதற்கான பதிலை முன்பே கூறி விட்டேன்.. ஒழுங்காக வேலை செய்யவில்லை என்பதல்ல பேச்சு.. அவர்கள் யாருக்குமே ஒழுங்காக பாடம் கூட நடத்த தெரியவில்லை.. ஆசிரிய தகுதி தேர்வில் தேர்வாகி வந்து விட்டால் அவர்கள் அறிவாளிகள் என்று அர்த்தமல்ல.. அதை தாண்டி “Field Knowledge” என்பது தான் முக்கியம்.. அது கொஞ்சமும் கிடையாது அவர்களுக்கு.. இந்தியாவிலேயே மிக கடினமான தேர்வு இந்திய ஆட்சி பணியர் தேர்வு தான்.. அனால் அதிலும் தேர்வாகி பலர் வருகிறார்கள். அதனால் அவர்கள் அனைவருமே நிர்வாக திறன் படைத்த புத்திசாலிகள் என்று பொருள் அல்ல.. யாரோ இறையன்பு, சாகயம் போன்ற சிலர் இருக்கலாம்.. மற்றபடி பெரும்பான்மையோர் ஆளும் வர்கத்தின் கூஜாதுக்கிகளே..

    //இட ஒதுக்கீடு இல்லாத காலத்தில் சாதி அடக்குமுறை இல்லாமல் இருந்ததா.சொல்லப்போனால் கூடுதலாக இருந்தது.உண்மையில் இட ஒதுக்கீடு சாதி அடக்குமுறையை எதிர் கொள்ள கிடைத்த பல ஆயுதங்களில் ஒன்று.//

    அப்படியா .. அப்போ .. தர்மபுரியில் வன்னியர்கள் போட்ட வெறியாட்டத்தின் பெயரென்ன. தேவரின் குரு பூஜையில் பள்ளர்கள் கொடூரமாக தாக்கப்படார்களே அதன் பெயர் என்னவாம்.. மாமல்லபுரம் போகும் வழியில் மரக்காணத்தில் தாழ்த்தபட்டவர்களின் வீடுகள் மீது பாட்டாளி மக்கள் கட்சியினர் நடத்திய தாகுதலின் பெயரென்ன… இப்போது ஓரளவு சாதி மோதல் கட்டுக்குள் இருக்கிறது என்றால் அதற்க்கு காரணம் இட ஒதுக்கீடு அல்லவே அல்ல.. தற்போது இருக்கும் சாதிய வன்கொடுமை சட்டம் என ஒன்று இருப்பதால் மட்டுமே தான்.. மேலும் உலகமயமாக்கலும் ஓரளவிற்கு சாதிய உணர்வுகளை மழுங்கடித்து வருகிறது என்பது தான் நிதர்சன உண்மை …

    நான் தலித்திய எதிராளியோ அல்லது போராளியோ அல்ல .. எனக்கு தெரிந்த உண்மைகளை கூறிவிட்டேன்.. எடுத்து கொள்வதாம் எடுத்து கொள்ளாமல் போவதும் அவரவர்களின் இஷ்டம்…

    • சாதி வெறி மொக்கை தாயுமானவன்,

      UGC NET, SLET are the basic qualification for Asst.professor jobs in all over India.

      You do not now this basic!

      But u start blabbering about education system.

      //இதற்கான பதிலை முன்பே கூறி விட்டேன்.. ஒழுங்காக வேலை செய்யவில்லை என்பதல்ல பேச்சு.. அவர்கள் யாருக்குமே ஒழுங்காக பாடம் கூட நடத்த தெரியவில்லை.. ஆசிரிய தகுதி தேர்வில் தேர்வாகி வந்து விட்டால் அவர்கள் அறிவாளிகள் என்று அர்த்தமல்ல//

    • \\இட ஒதுக்கீடு என்பது தாழ்த்த பட்ட மக்களுக்கான நிரந்தர நிவாரணம் அல்ல .. அதன்மூலம் சாதி என்கிற பாறை மேலும் கெட்டியாகுமே தவிர.. உலராது //

      இட ஒதுக்கீடு மட்டுமே சாதீய இழிவை போக்கிவிடும் என்று சமூக நீதி ஆர்வலர்களும் சொல்லவில்லை.இட ஒதுக்கீடு இல்லாவிட்டால் மட்டும் சாதி உலர்ந்து உதிர்ந்து விடுமா.இப்படியெல்லாம் சுற்றி வளைத்து பேசுவது இட ஒதுக்கீட்டை ஒழித்துக் காட்டுவதற்குத்தான்.பெரும் போராட்டங்களின் ஊடாக மக்களின் மனதில் மாற்றங்களை கொண்டு வராதவரை இட ஒதுக்கீடு இருந்தாலும் சாதி ஒழியாது.இல்லாவிட்டாலும் ஒழியாது. அப்புறமென்ன இட ஒதுக்கீடு இருக்கட்டுமே.எளிய மக்களில் சிலர் அதனால் பயனடைவது உங்களை போன்றோருக்கு பொறுக்கவில்லையா.

      \\அவர்கள் யாருக்குமே ஒழுங்காக பாடம் கூட நடத்த தெரியவில்லை.. ஆசிரிய தகுதி தேர்வில் தேர்வாகி வந்து விட்டால் அவர்கள் அறிவாளிகள் என்று அர்த்தமல்ல.. அதை தாண்டி “Field Knowledge” என்பது தான் முக்கியம்.. அது கொஞ்சமும் கிடையாது //

      அந்த ஆசிரியர்கள் அரசு நிர்ணயிக்கும் கல்வி மற்றும் ஆராய்ச்சி தகுதிகளை அரசும் அதன் பல்கலைகழகங்களும் நடத்தும் தேர்வு முறைகளை சந்தித்து பெற்ற பின்னர்தான் பணியில் அமர்த்தப்படுகிறார்கள்.அப்படியும் தகுதி இல்லை என்றால் அதற்கு யார் பொறுப்பு.அரசு அல்லவா.நண்பரே,ஒரு உண்மை உங்களுக்கும்,எனக்கும்,ஏன் அனைவருக்கும் தெரியும்.இந்த கதையெல்லாம் இட ஒதுக்கீட்டை ஒழிப்பதை நோக்கமாக கொண்ட கள்ளப்பரப்புரையே அன்றி வேறல்ல.ஆசிரியர்களிடம் குறை இருப்பின் அவற்றை களைவதற்கான வழிவகைகளைத்தான் தேடவேண்டும்.அவலை நினைத்து உரலை இடிக்க கூடாது.

      இந்த இடத்தில் உங்களிடம் ஒரு கேள்வி.

      இதே மைய மாநில அரசுகள் நடத்தும் MIIT-கிண்டி பொறியியல் கல்லூரி போன்ற பொறியியல் கல்லூரிகளில், மருத்துவ கல்லூரிகளில் IIT- IIM-ல் NIIT- IISc-AIIMS-ல் கேந்திரிய வித்யா,நவோதயா பள்ளிகளில் மட்டும் தரமான ஆசிரியர்கள் எப்படி இருக்கிறார்கள்.அதே போன்று அனைத்து கல்வி நிறுவனங்களையும் இந்த அரசுகள் ஏன் நடத்துவதில்லை.

  154. வியாசன், தாயுமானவன், செந்தில்குமரன்: தமிழர்கள் என்ற அளவில் நீங்கள் அனைவரும் ஒரே இனம் தான். ஏன் தங்களுக்குள் சாதி அவதூறுகளை பரப்பிக்கொண்டிருக்கிறீர்கள்?

    ஆகிற வேலையை பாருங்கள் நண்பர்களே. தங்களது சாதிய சண்டை சமயத்தில் எல்லை மீறி தனி மனித தாக்குதலாகி விடுகிறது. வேண்டாமே.

    விவாதம் என்றால் அதனால் ஏதாவது பயன் இருக்க வேண்டும். இல்லையென்றால் விவாதித்து பயனில்லை. விட்டுத்தள்ளுங்கள். உருப்படியாக ஏதாவது விவாதிக்கலாம். தேவையில்லாத விதண்டாவாத விவாதங்களால் யாருக்கும் எந்த பயனும் இல்லை.

    • கற்றது கையளவு,

      தாயுமா,வியாசன் இங்கு பேசட்டும் .

      அப்போது தான் இந்த சாதி வெறி – – களின் உண்மை முகம் மற்றவருக்கும் அம்பலம் ஆகும்.

      • Well said Senthilkumaran.By making them to interact with you,you have forced them to betray their thinking laced with manu dharma concept.Alas,not only kings,governments and courts (including the present ones)are steeped in manu dharma concept,these well placed individuals are also pouring venom on fellow citizens.In one comment,Thayumanavan Pillai says that he has no animosity towards Isai Vellalars.But in yet another comment,he says that these Isai Vellalars will be beaten with chappals if they say they are Vellalas in places like Tirunelveli or Yazhppaanam.
        Viyaasan and Thayumanava Pillai justified the acts of Rajarajan saying that the king acted as per the caste based social set up of that period.And,Thayumanava Pillai proudly states that the financial and revenue administration were entrusted to Vellalars since they were not Sudhras.But these people should know that Emperor Ashoka ruled before Rajarajan.Since he followed Buddhism,he never encouraged caste based set up.His grandson was murdered by his own minister Pushya Mithra Sungan,a brahmin.Pushymithran became the king.He was instrumental for crushing Buddhism.At his insistence only,Manu Dharma Shastra was modified to provide for milder punishments to brahmins even for their heinous crimes.May be because of these milder provisions in manu dharma,Rajarajan has not punished those brahmins who killed Aadhittha Karikalan.
        Sathyamurthy was vehemently opposing the abolition of Devadasi System in the Assembly when it was mooted by Muthulakshmi Reddy.After a hard hitting speech by Muthulakshmi Reddy against Sathyamurthy only,the Act was passed.
        Viyaasan was telling that Rajaji introduced “Kulakalvi Thittam”only because of lack of resources to have enough schools.Why Rajaji closed 6000 existing schools that too in rural areas.The first generation of students who got opportunity of school education after independence were asked to attend half day school.A community which was denied education for centuries were again affected.If lack of resources was the reason,how could Kamaraj reopen 6000 schools closed by Rajaji and also open 6000 new schools?
        Ashoka realised the futility of wars and embraced Buddhism.Thaymanavan Pillai even now is proud of conquests of Rajarajan in many wars.He is also philosophical stating that any life born will perish one day.A person who always worship Shiva does not understand the concept of “Anbe Sivam”He never had compassion for millions of soldiers perished in these wars.He does not have the same compassion towards his fellow citizens right now also.He ridicules them by citing their caste.
        After reading many comments of these individuals,I feel the necessity of birth of another Periyar.

  155. Hi தாயுமானவன்,

    //சாதி என்பது சொல்லளவிலாவது இருக்கும் வரை *** (அது பார்பனர் மட்டுமே கோவில்களில் அர்ச்சகர் ஆகும் சலுகையாக கூட இருக்கட்டுமே) நீக்கினால் மட்டும் தான் இந்த முரண்பாடுகள் அனைத்திற்கும் ஒரு முடிவு கிடைக்கும்//

    சரி தான்.

    Let you lose Pillai in the pseudo name used in this debate.
    Let the real estate be redistributed so that no family/person goes without a minimum value of real estate.
    Let the cap of 50% in SHARE abolished.
    Let every caste groupings get their SHARE as per their numbers, in all institutions and jobs, both private and public, including Temples and other cultish institutions.
    Let this new system be in force for 20 years without any major violations.
    Then, only then, let the SHARE as per caste groupings be abolished.
    Till then India would remain a country of slum-cities, slum-towns and slum-villages, in short, one big slum-sprawl of continental proportion and the condition would worsen day by day.

  156. Hi Sweet buddy ……..

    //You spoke very high about Rajaji and his educational scheme. But now you back track.//

    well.. when i say i don’t justify rajaji it doesn’t means that i oppose him…Am not liable for all your mind voices.. am telling about what aachariyaar quoted towards “New educational scheme” as it was..

    //அந்த திட்டம் அதிகாரத்தில் உள்ள மக்களின் எண்ணங்களில் உள்ள சிறுமையையும் வறுமையையும் காட்டுகிறது. அந்த திட்டத்தைப்பற்றிய மற்றும் அந்த திட்டத்தை அறிமுகப்படுத்திய மனிதரைப் பற்றிய உங்கள் எழுத்துக்களும் பின்வாங்கல்களும் உங்கள் எண்ணங்களின் சிறுமையையும் வறுமையையும் காட்டுகின்றன.//

    நான் கூறியது அனைத்தும் என்னுடைய சொந்த கருத்தல்ல.. இவை எல்லாம் புது கல்வி திட்டம் தொடர்பாக ராஜாஜி அவர்கள் அன்று பத்திரிக்கைக்கு அளித்த பேட்டி.. அதை இது வரை யாரும் கூறவில்லை.. அவர்கள் கூறாமல் விட்டதை நான் கூறினேன்.. இதற்கான ஆதாரம் சுப்பு அவர்கள் எழுதிய திராவிட மாயை என்னும் நூலில் தகுந்த பத்திரிக்கை ஆதாரங்களுடன் இருக்கிறது அதில் கண்டுகொள்ளலாம் ..

    buddy ..

    It wasn’t kamaraj or dravidian parties but rajaji who announced 8% reservation for adi dravidas and increased their age limit up to 27 for government jobs for the first time …. These are untold facts till today about rajaji..still there is lot more things are left untold.. And moreover am not a crazy hypocrite periyaarist to oppose rajaji like blind stupid dravidian organizational leaders do .

    • சாதி வெறி மொக்கை தாயுமானவன்,

      தமிழுக்கும் , தமிழ் நாட்டுக்காகவும் போராடிய மாபொசி அவர்களை அவர் உங்க சாதி இல்லை என்று தெரிந்தும் உங்க சாதி வெறியர்கள் அவரையும் உங்க சாதியில் சேர்த்து பெருமை பட்டுக்கொள்ளும்
      பொரம்போக்கு,பொறுக்கி தனத்தை கீழே பாருங்கள் !

      http://www.flickr.com/photos/77996448@N07/7001356636/in/photostream/

  157. Mr.வியாசன் இடம் “அவர் தமிழ்நாட்டு நண்பர்கள்” யார் காசு வாங்கியது ?
    ————————————————————————————–
    [1]Mr. Viyasan’s confessions are listed below! But he is not willing to indicate the person/organization who got money from him.

    [2]Based on these confessions ,Can we find out the person/organization who got monitory benefit from this Mr.Viyasan?

    viyasan://உண்மையான நிலை தெரியாமல், அதாவது தலித்துக்களும் சாதி வெறியில் சளைத்தவர்கள் அல்ல, அவர்களும் சாதியொழிய வேண்டுமென்பதை விட சாதி வெறியுடன் மற்றவர்களைப் பழி வாங்கத் தான் அலைகிறார்கள் என்று தெரியாமல், பார்ப்பனர்களை எதிர்த்தும், தலித்துக்களின் அமைப்புகளுக்கு, நிதி மற்றும் ஆதரவு வழங்கியது தவறு போன்ற உணர்வு ஏற்படுகிறது//

    viyasan://கொடுத்ததைச் சொல்லிக் காட்டும் வழக்கம் என்னிடம் கிடையாது. அனால் தலித்துக்கள் பழிவாங்கத் தான் அலைகிறார்கள் என்பதையறியாமல் கொடுத்து விட்டேனா என்பது தான் என்னுடைய கவலை. எனக்கும் பல தலித் நண்பர்கள் தமிழ்நாட்டில் உள்ளனர். அதில் ஒரு சிலர் தலித் அரசியலில் தீவிர ஈடுபாடும், தொடர்புமுள்ளவர்கள். எந்த வித எதிர்பார்ப்புமின்றி அவர்களுக்குப் பல வழிகளில் நான் பொருளாதரா ரீதியில் உதவியிருக்கின்றேன் அதற்குக் காரணம் தலித்துக்கள் ஈழத்தமிழர்களிடம் காட்டும் சகோதர உணர்வும் நட்பும், அதே வேளையில் அவர்கள் பொருளாதார ரீதியில் உயர்ந்தால், சாதியொழியும் என்ற நல்லெண்ணமும் தான். ஆனால் அவர்களில் எவரும் இப்படி தமது சாதிவெறி, பழிவாங்கும் முகத்தை இதுவரை காட்டவில்லை.//

    viyasan://“பஞ்சம் பிழைக்க போன பரதேசி” ஈழத்தமிழர்ககளிடம் (அதில் பெரும்பான்மை யாழ்ப்பாண வெள்ளாளர்) நிதி கேட்டு நக்கும் பல பேர் தமிழ்நாட்டில் (தலித்துகள் உட்பட) உள்ளார்கள். அவர்களை கலைச்செல்வனுக்குத் தெரியாதிருக்கும் என்று நான் நம்பவில்லை//

    viyasan//ஒரு சீட்டுக்காக ‘அன்னை’ சோனியாவின் காலில் விழும் வரை, திருமாவளவன் தானே ஈழத்தமிழர்களின் ஆருயிர் ‘அண்ணனாக’ திகழ்ந்தார், அடிக்கடி கனடாவுக்கும், லண்டனுக்கும்,ஜேர்மனிக்கும், சுவிசுக்கும் பறந்து திரிந்தார், தாய் பிள்ளை போல் பழகினார், ஈழத்தமிழர்களின் வீடுகளில் தங்கினார். எப்ப தொடக்கம் அவர் தலித் அல்லாதவராக மாறினார். சும்மா தேவையில்லாமல் யாரோ உளறுகிறான் என்பதற்காக, நான் உதவி செய்த நண்பர்களின் விபரங்களை இணையத்தளத்தில் கொடுக்குமளவுக்கு நான் ஒன்றும் Weirdo இல்லை//

    • From Viyasan’s Confession We can easily understand that he is doing blackmailing against some one who got monitory benefit for some purpose !

      [1] What is the reason for some one getting monitory benefit?

      [2] Who have got the monitory benefit for some purpose ?

      [3] When did this monitory benefit happened?

      [4] And much more we can find out very soon!

    • வியாசன் முதலீல் அவரிடம் “காசு வாங்கியவர்களை ” அசிங்கமான” வார்த்தை யில் திட்டினார் !

      நாம் “காசு வாங்கியவர்கள் ” பெயரை கேட்ட போது அதே நண்பர்களுடன் தொடர்பு கொண்டாராம்!

      இவரிடம் காசும் ,கேவலமான திட்டும் வாங்கியவர்கள் இவருடன் மீண்டும் பேசினார்களாம்!

      கதை கதையாக கதைக்கின்றார் !

  158. Thayumanavan Pillai,Ref-your comment no-166-Even before independence,in 1924,young son of Omandur Ramasamy Reddiar,(who became CM of Tamilnadu in 1948),studying most probably in 1st Std in Cheranmahadevi Gurukulam,(run by freedom fighter Va.Ve.Su.Aiyar)refused to return to the Gurukulam after Half Yearly holidays stating that he did not like the differential treatment meted to Brahmin students and Shudra students.He was asking his father what was the meaning of “THEETTU” and “Shudra”. Before Gurukulam closed for the holidays,he was brutally slapped by a Brahmin teacher
    for the sin of drinking water from a pot meant for Brahmin students.He was also disappointed since he could not get Vadai,Payasam on Amavasai,Pournami and Kaarthigai days like Brahmin students who were fed in a different place.He was not having the luxury of exemption from gardening work like Brahmin students.In the kitchen,he was asked to wash utensils only and was not allowed even to cut vegetables like Brahmin students.This Gurukulam received donation from Congress Committe.Reddiyar sent the boy to Erode to meet EVR who was then one of the Secretaries of Congress committee.Periyar stopped payment of remaining Rs5000 donation from out of Rs10000.But Aiyar managed to get the money from the other Secretary without the knowledge of EVR.The matter was discussed in the Emergency EC meeting of the Congress on 17-1-1925 and again on 27-4-1925.Aiyar explained that he just fed children from a Brahmin family in a different place since the parents of those students made feeding their children only with Brahmin students while releasing donation.A resolution was passed in the second EC meeting to stop the practice and appointed a monitoring committee consisting 3 leaders including EVR to oversee the Gurukulam.It was passed with 19 supporting out of 26 members.But,after the meeting,4 prominent leaders including Rajaji resigned from the EC protesting the resolution.This is not my figment of imagination.Read the book,”Gurukula Porattam” by Naara.Nachiyappan-published by Arulbharathi Padhippagam-Avadi.K.Veeramani also wrote a book with the same title.

    Now,tell me whether community certificate or reservation only made young children to understand about caste to which they belong?

    • ஓமந்தூரார் மகனுக்கே இந்த கதியா?? இது எனக்கு புதிய தகவல். நன்றி நண்பர் சூரியன். தமிழில் நீங்கள் தட்டச்சு செய்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்

  159. Mr. Sooryan…

    First of all, castes in which ever form it exists has to be abolished in every aspect of indian society. What happened in cheranmadevi is unforgivable and surely cannot be justified.. if we go through the actual reason behind this incident, The problem occurred because of the british administrators who ignored this misery for their political self and for their religious conversions…

    //Now,tell me whether community certificate or reservation only made young children to understand about caste to which they belong?//

    Definitely, by the time india was under british rule.. britisher never took even a single step to eradicate caste system.. because, they considered caste system was more convenient for them .. and gave them a way to divide and rule this society very easily .. Instead of abolishing caste they gave a concessions for the downtrodens and dalits in the name of reformation..

    Even,after independence our politicians are continuing the same protocol what britisher did before 1947..because only if this so called caste confromation exists they can avail their political power as long as they live… my point was so simple abolish the both (caste,caste based concessions).. only by this we can find a remedy for this grotesque social method.
    Every citizen of this country should be provided with equal opportunity to expose their talent.. one must get placement for higher education by exposing their individual proficiency and hard work not through any other awkward means viz,…(bribes,capitation,recommendation from highly influenced and last but not least reservation quota).

    Dr.abdul kalaam and babasaheb ambedkar earned their spot, their life time achievement thought their greater efficiency in knowledge and not through the above disgusting means. Ambedkar spent 18 hours a day in studying that uplifted his position as first law minister of independent india.

    Finally, the above said are the way to exterminate all the social injustice happening around the indian society especially casteism. And by not fighting with said “upper caste” peoples.

    • Since certain communities were denied education and equal treatment for centuries together,they are not having level playing field to fight for their opportunities with the privileged classes.Virtually,this boy may the first one to go to school or college.His parents are uneducated.They themselves do not know the value of education.What sort of support or guidance he will get from his parents?His parents may not have enough income to educate him also.For these communities,till such time they reach a stage of equal competition,reservation is must.

  160. இத்தனைநாலாக வினவு ஒருநடுநிலமை உடகம் என்ரு நினைத்தென் ஆனால் இந்த ஒரு கட்டுரையின் முலம் பொய் வினவு என்ருநிருபிது விட்டது….

  161. வினவு மிகவும் கேவலமான ஒரு வலை தளமாக மாறி வருகிறது. மத அரசியலை நாடுப்பற்றோடு ஒப்பிட்டு கேவலமான கட்டுரை எழுதுகிறது. பிரிவினை வாதிகளுடன் கூடு சதி செய்து புரளி பரப்பும் ஊடகமாக மாறி வருகிறது. நீங்க என்ன தான் முக்கு முக்கினாலும் சீனா இங்கே கழகம் ஏற்படுத்த உங்களுக்கு தரும் பணத்தின் அளவு அதிகரிக்க போவதில்லை. மீண்டும் முயற்சிக்கவும்.

Leave a Reply to viyasan பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க