privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கல்விவெற்றிக்கொடி கட்டிய வேலிப் பூக்கள் !

வெற்றிக்கொடி கட்டிய வேலிப் பூக்கள் !

-

ப்ளஸ் டூ தேர்ச்சி : மண் பூரிக்கும் மலர்கள் – அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள்!

  • துத்திப் பூக்களின்
    எளிமையும், ஈர்ப்பும்
    எங்கள் மாநகராட்சி
    அரசுப்பள்ளி மாணவர்கள்
    பாதைகள் மறிக்கும்
    முட்களைத் தாண்டி
    வெற்றிக்கொடி கட்டிய
    வேலிப் பூக்கள்!
  • புலர் பொழுதின் ஊக்கம்
    விடிவானின் அமைதிப் பேரழுகு
    எங்கள்
    அரசுப்பள்ளி ஆசிரியர்கள்.
    வசதிகள் குறைவு
    எனினும், நூலாம் படைகள் தாண்டி
    ஓட்டை, உடைசல்களுக்கிடையே
    மங்கியத் தாழ்வாரங்களை
    ஒளிபூசி உயிர்ப்பிக்கும்
    சூரிய மலர்கள்
    எங்கள் அரசுப்பள்ளி ஆசிரியர்கள்!
  • பிளஸ் டூ ரிசல்ட்மினுக்கும் கவர்ச்சி இல்லை…
    மீடியாக்களின் பீற்றல் ஒளி இல்லை…
    ஆடம்பர விளம்பரமில்லை…
    அருகிய ஈரத்தில்
    இறுகிய மண்பசையில்
    கிடைத்த வாய்ப்பில்
    முளைத்த விதைகளாய்
    எழுந்த மணிகளே…
    அரசுப்பள்ளி மாணவர்களே!
    உங்கள் தேர்ச்சியில்
    உவக்கும் கிழக்கும்!
  • கட்டாய நன்கொடை இல்லாமல்,
    களவாட பல ட்யூசன் இல்லாமல்,
    உறவாடும் உழைப்பின் தரத்தால்
    கல்வித் தரத்தை களத்தில் மலர்வித்த
    அரசுப்பள்ளி ஆசிரியர்களே…
    உங்கள் மகத்தான சாதனைக்கு
    மக்களின் மனதினிய வாழ்த்துக்கள்!

– துரை.சண்முகம்