“பயங்கரவாத செயல்கள் தொடர்வது வரை பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தையே இல்லை” என்று தேர்தல் மேடைகளில் சவடால் அடித்து வந்த மோடி தனது பிரதமர் பதவி ஏற்பு விழாவுக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிஃபை அழைத்தற்கான காரணம் அமைதி இல்லை, அதானி என்பதை அம்பலப்படுத்துகிறது truthofgujarat இணைய தளத்தில் வெளியான கட்டுரை.
“மோடி பேசுவது எல்லாம் அவரது வாக்கு வங்கிக்கு இரை போடுவதற்காக, செய்வது எல்லாம் கார்ப்பரேட்டுகள் நமது நாட்டின் இயற்கை வளங்களை கொள்ளை அடிக்க வழி செய்து கொடுப்பது” என்பதை அதானியின் உதாரணத்துடன் அம்பலப்படுத்துகிறது இக்கட்டுரை.
தன் அரசியல் வாழ்க்கை முழுவதிலும், குறிப்பாக 2014 தேர்தல் பிரச்சாரத்தின் போது பாகிஸ்தானுக்கு எதிராக தொடர்ந்து வெறுப்பை கக்கி வந்த நரேந்திர மோடி, அவரது பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ளும்படி பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிஃபுக்கு அழைப்பு அனுப்பியதற்கு உண்மையான காரணம் அமைதி இல்லை, அதானி.
பாகிஸ்தானுக்கு மின்சாரம் ஏற்றுமதி செய்வதற்கு மோடி அரசின் ஒப்புதலை நாடுகிறது அதானி. குஜராத்தின் கட்ச் பகுதியில் 10,000 மெகாவாட் அனல் மின் நிலையம் ஒன்றை அமைக்க அதானி பவர் நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. அங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் பெரும்பகுதி பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளது. $8.7 பில்லியன் மதிப்புடைய அதானி குழுமத்தின் ஒரு பகுதியான அதானி பவர் நிறுவனம் 8,520 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்டுள்ளது; நாட்டின் முன்னணி தனியார் மின் உற்பத்தி நிறுவனமாக விளங்குகிறது. துறைமுகங்களிலிருந்து மின்உற்பத்தி வரை பல துறைகளில் கால் பதித்துள்ள இந்த குழுமம், இந்த நிதியாண்டில் 10,000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் அதிகரிப்புக்கு திட்டமிட்டுள்ளது.
சென்ற செப்டம்பர் மாதம் இந்திய பிரதமரை (மன்மோகன் சிங்) “தேஹாத்தி அவுரத் (பட்டிக்காட்டு பொம்பிளை)” என்று நவாஸ் ஷெரிஃப் குறிப்பிட்டதாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து அவர் “இந்திய நாட்டுக்கே மாபெரும் அவமானம் இழைத்து விட்டார்” என்றும், “நமது நாடு இதை சகித்துக் கொள்ளக் கூடாது” என்றும் அப்போது பா.ஜ.கவின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த மோடி, பாகிஸ்தான் மீது வெறுப்பை உமிழ்ந்தார்; இதற்கு தொலைக்காட்சிகளும் பத்திரிகைகளும் பக்க வாத்தியம் வாசித்தன.
“நவாஸ் ஷெரிஃப் நமது பிரதமரை கொச்சையாக பேசி அவமதிக்கும் போது இந்திய பத்திரிகையாளர்கள் அவர் கொடுக்கும் இனிப்புகளை விழுங்கிக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் அந்த இனிப்புகளை உதைத்துத் தள்ளி விட வேண்டும் என்று தேசம் எதிர்பார்க்கிறது. சுயமரியாதையும், கௌரவமும் உடைய நம் தேச மக்களுக்கு அவர்கள் பதில் சொல்ல கடமைப்பட்டவர்கள்” என்று முழங்கினார் மோடி.
தேர்தல் பிரச்சாரத்தின் போது மோடியை நேர்முகம் கண்ட டைம்ஸ்-நவ் தொலைக்காட்சியின் அர்ணாப் கோஸ்வாமி பாகிஸ்தான் குறித்த நரேந்திர மோடியின் நிலைப்பாடு குறித்து இப்படி சொன்னார்.
“பாகிஸ்தானைப் பொறுத்தவரை நரேந்திர மோடி மிகத் தெளிவாக உள்ளார். பயங்கரவாத செயல்கள் தொடர்வது வரை பேச்சுவார்த்தையே இல்லை என்பதை உறுதியாக கூறிய அவர், அதை ஒளிபரப்பும்படி சொன்னார். மோடி, நடுநிலையான வழியில் தனது நிலைப்பாட்டை மிதப்படுத்திக் கொள்வார் என்று சிலர் கூறினார்கள் ஆனால் இந்த நேர்முகத்தில் அவர் தனது நிலைப்பாட்டை மிகத் தெளிவாக முன் வைத்தார். இது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் நிலைப்பாட்டிலிருந்து பெருமளவு விலகிச் செல்வது”. (அதாவது ‘பயங்கரவாதி’களை கைது செய்து அனுப்புவது வரை நவாஸ் ஷெரிஃபின் முகத்திலேயே முழிக்கப் போவதில்லை என்று மோடி சார்பாக அர்ணாப் அம்பி சூளுரைத்தார்).
அர்ணாப் கோஸ்வாமியுடனான அந்த நேர்முகத்தில் இந்திய ராணுவ வீரர்களின் தலையை வெட்டிச் செல்பவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தும் அரசாங்கத்தை விமர்சித்த மோடி, “வெடிகுண்டு, துப்பாக்கி அல்லது கைத்துப்பாக்கியின் சத்தத்தில், பேச்சுவார்த்தை நடத்த முடியுமா, என்ன” என்று கேட்டிருந்தார். இப்போது தேர்தலில் பெரும்பான்மை பலத்தை பெற்று விட்ட பிறகு அவரது நிலைப்பாடு தலைகீழாக மாறியிருக்கிறது. அதற்கான உண்மையான காரணங்களை ஊடகங்கள் பேசுவதில்லை; தொலைக்காட்சிகள் பழைய சவடால் பேட்டிகளை போட்டுக் காண்பிப்பதில்லை. மாறாக, ‘புதிய இந்தியப் பிரதமரின் அழைப்பு அண்டை நாடுகளுடன் உறவை புதுப்பித்துக் கொள்வதற்கான தைரியமான நடவடிக்கை’ என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். (அதாவது, மோடி பரிமாறும் இனிப்புகளை விழுங்கிக் கொண்டிருக்கிறார்கள்)
அதானி பவர் கட்ச் மின் உற்பத்தி திட்டம் பற்றிய விபரங்களை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்துடன் விவாதித்து வந்தாலும் பெரிதாக பலன் எதுவும் இருக்கவில்லை. இப்போது தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின் போது இந்தத் திட்டத்தை பல கட்டங்களாக செயல்படுத்த முனைகிறது அந்நிறுவனம். நிலக்கரியிலிருந்து மின் உற்பத்தி திறனை முதல் கட்டத்தில் 3,300 மெகாவாட், அடுத்தடுத்த கட்டங்களில் 10,000 மெகாவாட் வரை உயர்த்துவது என திட்டமிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்கு ஆரம்ப கட்ட முதலீடு ரூ 13,000 கோடியாகவும் உற்பத்தித் திறனை 10,000 மெகாவாட் வரை அதிகரிப்பதற்கு சுமார் ரூ 40,000 கோடியும் தேவைப்படும். இந்த திட்டம் கட்ச் மின் உற்பத்தி நிறுவனம் (KPGCL) மூலம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக கட்ச் பகுதியில் உள்ள பத்ரேஸ்வரில் இந்நிறுவனம் நிலம் கையகப்படுத்தியிருக்கிறது.
மார்ச் 31, 2014-ல் முடிவடைந்த நான்காவது காலாண்டில் அதானி பவர் ரூ 2,529 நிகர லாபம் ஈட்டியிருக்கிறது. சென்ற நிதியாண்டில் இதே கால கட்டத்தில் ரூ 585.52 கோடி இழப்பை சந்தித்திருந்தது. 2013-14 நிதியாண்டில் நிறுவனத்தின் தொகுக்கப்பட்ட மொத்த லாபம் 322 சதவீதம் அதிகரித்து ரூ 4,859 கோடியை எட்டியிருக்கிறது.
மூலதன பொருட்கள் இறக்குமதியில் மதிப்பை செயற்கையாக கூட்டி காட்டியதற்கு விளக்கம் கேட்டு ரூ 5,500 கோடிக்கான நோட்டிசை வருவாய்த் துறை இயக்குனரகம் அதானி குழுமத்துக்கு சென்ற வாரம் அனுப்பியிருக்கிறது; அதானி குழுமமோ ஒரிசாவில் தம்ரா துறைமுகத்தை வாங்குவதாக அறிவித்தது.
எனவே, மோடி பேசுவது எல்லாம் அவரது வாக்கு வங்கிக்கு இரை போடுவதற்காக, மோடி செய்வது எல்லாம் அதானி போன்ற கார்ப்பரேட்டுகள் நமது நாட்டின் இயற்கை வளங்களை கொள்ளை அடிப்பதற்காக.
(அதனால்தான்) நரேந்திர மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செப்டம்பர் 13, 2013-க்குப் பிறகு முகேஷ் அம்பானியின் சொத்துக்கள் $6 பில்லியன் அதிகரித்திருக்கின்றன. கவுதம் அதானியின் சொத்து மதிப்பு $1.9 பில்லியனிலிருந்து நான்கு மடங்கு அதிகரித்து $7.6 பில்லியன் ஆக உயர்ந்தது. 80 கோடி மக்கள் ஒரு நாளைக்கு $2-க்கும் குறைவான செலவில் வாழும் நாட்டில் ஒரு நாளைக்கு $2.5 கோடி சம்பாதித்திருக்கிறார் அதானி. உண்மைதான், சிலருக்கு நல்ல நாட்கள் வந்து விட்டன.
(மோடி, சங்க பரிவாரம் மற்றும் ஊடக அம்பிக்களால்) பெருமளவு கொட்டி முழக்கப்பட்ட தேசத்தின் ‘இழந்த சுயமரியாதை’ அடுத்த தேர்தல்கள் வரை கிடப்பில் போடப்படும்.
நன்றி – This is why Modi has sent an invitation to Nawaz Sharif
தமிழாக்கம்: பண்பரசு
ஓ! இதான் அந்த ‘பகீர்’ தகவலா?
தேர்தல் பிரச்சாரத்தின் போது மோடியை நேர்முகம் கண்ட டைம்ஸ்-நவ் தொலைக்காட்சியின் அர்ணாப் கோஸ்வாமி பாகிஸ்தான் குறித்த நரேந்திர மோடியின் நிலைப்பாடு குறித்து இப்படி சொன்னார்.
“பாகிஸ்தானைப் பொறுத்தவரை நரேந்திர மோடி மிகத் தெளிவாக உள்ளார். பயங்கரவாத செயல்கள் தொடர்வது வரை பேச்சுவார்த்தையே இல்லை என்பதை உறுதியாக கூறிய அவர், அதை ஒளிபரப்பும்படி சொன்னார். மோடி, நடுநிலையான வழியில் தனது நிலைப்பாட்டை மிதப்படுத்திக் கொள்வார் என்று சிலர் கூறினார்கள் ஆனால் இந்த நேர்முகத்தில் அவர் தனது நிலைப்பாட்டை மிகத் தெளிவாக முன் வைத்தார். இது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் நிலைப்பாட்டிலிருந்து பெருமளவு விலகிச் செல்வது”. (அதாவது ‘பயங்கரவாதி’களை கைது செய்து அனுப்புவது வரை நவாஸ் ஷெரிஃபின் முகத்திலேயே முழிக்கப் போவதில்லை என்று மோடி சார்பாக அர்ணாப் அம்பி சூளுரைத்தார்).
அர்ணாப் கோஸ்வாமியுடனான அந்த நேர்முகத்தில் இந்திய ராணுவ வீரர்களின் தலையை வெட்டிச் செல்பவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தும் அரசாங்கத்தை விமர்சித்த மோடி, “வெடிகுண்டு, துப்பாக்கி அல்லது கைத்துப்பாக்கியின் சத்தத்தில், பேச்சுவார்த்தை நடத்த முடியுமா, என்ன” என்று கேட்டிருந்தார். இப்போது தேர்தலில் பெரும்பான்மை பலத்தை பெற்று விட்ட பிறகு அவரது நிலைப்பாடு தலைகீழாக மாறியிருக்கிறது. அதற்கான உண்மையான காரணங்களை ஊடகங்கள் பேசுவதில்லை; தொலைக்காட்சிகள் பழைய சவடால் பேட்டிகளை போட்டுக் காண்பிப்பதில்லை. மாறாக, ‘புதிய இந்தியப் பிரதமரின் அழைப்பு அண்டை நாடுகளுடன் உறவை புதுப்பித்துக் கொள்வதற்கான தைரியமான நடவடிக்கை’ என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். (அதாவது, மோடி பரிமாறும் இனிப்புகளை விழுங்கிக் கொண்டிருக்கிறார்கள்)
இது ரொம்ப சாதாரண தகவலாக கருதுகிறார் சீனு அம்பி. இது காங்கிரஸ் ஆட்சியில் நடந்திருந்தால் இது பகீர் தகவலாக தேச பற்று பொங்கி கிளம்பி இருக்கும் இந்த சீனு அம்பிக்கு.
மோடி தும்மினாலும், இருமினாலும் அதானியையொ ,அம்பானியையோ சம்பந்தமில்லாமல் இழுப்பது தான் அழகா? இப்படியே பொழுது பொழுது போகிறது. வாழ்க கம்யூனிசம். அடுத்த தேர்தலில் எட்டாகத் தேய்ந்து, அதற்கு அடுத்ததில் இல்லாமல் மறையுமோ என்று கவலையாக இருக்கிறது
கட்டுரையில் கீழே வரும் பத்தி தவறுதலாக விடுபட்டிருந்தது, தற்போது சேர்த்திருக்கிறோம். இதுதான் முக்கியமான பத்தி. இதன்றி இந்த தலைப்பு முழுமையடையாது. தவறுக்கு வருந்துகிறோம்.
//பாகிஸ்தானுக்கு மின்சாரம் ஏற்றுமதி செய்வதற்கு மோடி அரசின் ஒப்புதலை நாடுகிறது அதானி. குஜராத்தின் கட்ச் பகுதியில் 10,000 மெகாவாட் அனல் மின் நிலையம் ஒன்றை அமைக்க அதானி பவர் நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. அங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் பெரும்பகுதி பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளது. $8.7 பில்லியன் மதிப்புடைய அதானி குழுமத்தின் ஒரு பகுதியான அதானி பவர் நிறுவனம் 8,520 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்டுள்ளது; நாட்டின் முன்னணி தனியார் மின் உற்பத்தி நிறுவனமாக விளங்குகிறது. துறைமுகங்களிலிருந்து மின்உற்பத்தி வரை பல துறைகளில் கால் பதித்துள்ள இந்த குழுமம், இந்த நிதியாண்டில் 10,000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் அதிகரிப்புக்கு திட்டமிட்டுள்ளது.//
காய்த்த மரம்தான் கல்லடி படும் என்று மோடியின் அப்ரசண்டிகளுக்கு தெரியாதோ..என்னலாம் பேசுனீங்க எதிர்த்து ஒருத்தன் கேள்வி கேக்தான் செய்வான்,,அவனுக்கு பதில் சொல்ல வேண்டியதும் மோடி ஆதரவாளர்களின் கடமை..அதை விட்டு விட்டு ஏன்யா சும்மா மோடிய தொல்லை பண்றீங்கன்னு கூச்சல் போடா கூடாது..காங்கிரஸ் காரன் ட எவ்ளோ கேள்வி கேடிங்க..இப்ப இது உங்களின் ஆட்சி..உங்கள கேள்வி கேக்காம வேற யார்ட கேக்கறது..சும்மா குத்துதே குடையுதேன்னு சொன்னா எப்படி பாஸ்..இன்னும் எவ்ளோவோ பாக்க வேண்டியது இருக்கு.
அதென்னவோ போங்க தும்பி…கீழே விழுந்தாலும் _____ மண் ஒட்டல…இதெல்லாம் பாத்த முடியுமா….நீங்க எப்பவும் போல கலக்குங்க தும்பி.
மோடி தும்மினாலும் சாதனையாக எடுத்தியம்பும் எல்லா ஊடகங்களையும் இந்த கேள்வியை கேளுங்கள் முதலில்…
வாங்கின காசுக்கு மேல ஏன்டா கூவுரீங்கனு அவர்களுக்கு காசு கொடுத்த நீங்கதான் கேக்கணும்……இதையும் நாங்க தான் கேக்கணுமுன்னு சொன்ன எப்படி.
What a suprise no modi supporters are not commented yet? May be,They severely think, how to retaliate this article? 🙂
மோடி சார்க் நாடுகளின் தலைவர்களை அழைத்திருந்தார். நவாஸ் ஷெரீபை மட்டும் அழைக்கவில்லை. அழைத்த பிறகும் அவரிடமே நேரிடையாக அர்னப் கோஸ்வாமியிடம் சொன்னதையே சொல்லியிருக்கிறார்.
இந்தியாவில் இவ்வளவு மின் பற்றாக்குறை இருக்கும் போது பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டிய அவசியம் இருக்கிறதா?
வினவிற்கு மோடி ஜூரம் நன்றாகப் பிடித்திருக்கிறது. பாவம்! தானாகவே இறங்கினால்தான் உண்டு.மொத்தத்தில் இந்த பகீர் தகவலைப் படித்து ரொம்ப பயமாக இருந்தது.
மணவை சிவா,
[1]மூளையை கழட்டி வைத்து விட்டு வினவில் feedback செய்ய வரும் சிவாக்களுக்கு வினவிற்கு மோடி ஜூரம் இருப்பதாக தான் தெரியும் !
[2]சிவாவும் என்ன அதானி power க்கு பினாமியா ? ஏன் இப்படி கோபம் வருது ?
[3]வினவு கட்டுரைக்கு மறுப்பு தெரிவிக்க ஏதாவது point கிடைக்குமா என்று பாருங்கள் சிவா ! அதை விட்டு “ஜூரம் பகீர் பயம்” என்று ஏன் பெனாத்துகின்றீர் சிவா?
முதல் இரண்டு பத்தியில் பதில் இல்லையா? என்னுடைய பின்னூட்டத்தில் கோபம் எங்கே இருக்கிறது? பரிதாபம்தான் இருக்கிறது.
மணவை சிவா,
மோடியை பார்த்து அல்லவா நீங்கள் இக் கேள்வியை கேட்க வேண்டும் !
“இந்தியாவில் இவ்வளவு மின் பற்றாக்குறை இருக்கும் போது பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டிய அவசியம் இருக்கிறதா?”
“ஜூரம் பகீர் பயம்” என்று பெனாத்துகின்றீர் சிவா? so I asked ஏன் இப்படி கோபம் வருது ?
மின்சாரத்தை ஏற்றுமதி செய்வது குற்றமில்லை — அதாவது பாகிஸ்தானில் மின்சாரத் தட்டுப்பாடு மிக அதிகமாக இருந்து, அவர்கள் அதானி விற்கும் விலையில் (டாலரில்) வாங்கிக்கொள்ளட்டும் — ஆனால், அந்த அளவு விலை இந்தியாவில் ஒரு மாநிலமும் தரத்தயாரில்லை என்ற பட்சத்தில்
மணவை சிவா…
//இந்தியாவில் இவ்வளவு மின் பற்றாக்குறை இருக்கும் போது பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டிய அவசியம் இருக்கிறதா? //
இந்தியாவில் தண்ணி கூடத்தான் எல்லாருக்கும் கிடைப்பதில்லை அதுக்காக கோகோகோலா , பெப்புசி கம்பெனி காரனுங்களுக்கு சலுசாக் குடுக்கல .
இவனுங்களுக்கு தண்ணியோ,பண்ணியோ,மணலோ சணலோ , இரும்போ கரும்போ …எதுன்னாலும் மக்களுக்கு இல்லையென்றாலும் அந்த அப்படியே அள்ளிக் குடுத்துடுவானுங்க …… இங்க எவன் செத்தா என்ன ….
இந்தியாவோ பாகிஸ்தானோ , முதலாளிகளுக்கு கொண்டாட்டம் தான் .
சரி கட்டுரை சொன்ன விசயம் பொய்யீங்கறீங்களா ?
கட்டுரையில் சொல்லப்பட்ட விஷயத்திற்கு ஏதாவது ஆதாரம் இருந்தால் விவாதிக்கலாம். சும்மா குண்டக்க மண்டக்க எழுதினால் என்ன பதில் கொடுப்பது?
உலகின் பல்தேசிய நிறுனனங்களின் நெருங்கிய நண்பர்களான ராஜபக்ச மோடி போன்றோர் 21 ஆம் நூற்றாண்டின் நவீன அடிமைகளான உரிமைகள் பறிக்கப்பட்ட தொழிலாளர்களை உற்பத்திசெய்கின்றனர். புதிய உலக ஒழுங்கின் தெற்காசிய கர்த்தாக்களான இத்தொழிமுறைக் கொலையாளிகள் நவீன அடிமைகளை..
http://inioru.com/?p=40567
[…] -நன்றி வினவு […]
இந்த விசயத்தில் வினவு கொஞ்சம் லேட்தான்..! இந்த பகீரை ஏற்கனவே ட்ரூத் ஆஃப் குஜராத் என்கிற இணையம் வெட்டவெளிச்சத்திற்கு கொண்டு வந்துவிட்டது. இதனை தழுவி எழுதப்பட்ட கட்டுரை – மாற்று தளத்தில் படிக்க:
http://maattru.com/modi-sent-invitation-nawaz-sharif/ என்கிற சுட்டியை பார்க்கவும்.
மக்களுக்கு தேசபக்தி போதையேற்றி, பாகிஸ்தான் எதிரி நாடு, இஸ்லாமியர்கள் தீவிரவாதிகள் என்று பஞ்ச் டயலாக் பேசும் இவர்கள், தன்னை வழிநடத்தும் முதலாளிகளுக்கு சேவகம் செய்ய தேசம் கடந்து வாசல் திறந்துவிடுவதையும், தேசபக்தி என்பது மக்களை ஏய்க்கும் முதன்மை கருவியாக இருப்பதையும் இந்தச் சூழலில் அன்பர்களும், நண்பர்களும் புரிந்து கொள்ள வேண்டுமென்று உரிமையோடு கேட்டுக் கொள்கிறோம். மோடி வகையறாக்கள் ஆளும்வரை முதலாளிக்கான நல்ல நாள் வந்துவிட்டது என்று அந்த ஆளும் வர்க்க கும்பல் நம்பத்தான் செய்யும். ஆனால், நமக்கான நல்ல நாள் வர நாம்தான் கடுமையாக உழைத்தாக வேண்டும். இந்த முதலாளிகளின் ஆட்சியை வீழ்த்தியே ஆக வேண்டும்.
நீங்களும் இந்த ‘பகீர்’ தகவல்களுக்கு வந்து விட்டீர்களா? நல்ல சமாச்சாரம்… மாதம் மும்மாரி பொழிஞ்சு ஊரு வெளங்கும்…
What is shocking int it?
Corporation wants to produce and Govt helping to find new market.
Capitalism at work guys!
கட்டுரை அருமை… ஆனால் சொல்லவந்த விசயத்தில் காலூன்றி நின்று (தலைப்பில்) சொன்னதாக படவில்லை… பாக். இந்திய பேதமெல்லாம் முதலாளிக்கு இல்லை, அது இந்திய, பாக். வாழும் குடிமக்களை ஏமாற்றும் வேலை என்றளவு புரிதல் ஏற்படுத்துகிறது. ஆனால் கொடுக்கப்பட்ட புள்ளிவிவரங்கள் உண்மையில் அச்சத்தை ஏற்படுத்துகிறது…இந்தியாவின் ஒட்டு மொத்த மக்களின் செலவை ஒரு முதலாளி மட்டும் சம்பாதிக்கிறான் என்பதைவிட அவை நம் மக்களின் உழைப்பிலிருந்து அவர்களின் சொத்தான இயற்கை வளங்களையும் அவர்களிடமிருந்து அன்னியப்படுத்தப்பட்டு அவர்களின் ஒப்புதலோடு தாரை வார்க்கப்படுவது உண்மையாக நாட்டு பட்ட்ருள்ளவர்களை அச்சம் கொள்ளசெய்திருக்கிறது….
அய்யொ பாவம் வினவு, இன்ஜி ததின்ன கொரன்க பாம்பு காடிது விட்தது
தோடா , fuse ஆன BJP பல்ப ஓட்ட வைக்க வினவுக்கு வந்து உள்ளது back shot ________ !
நிர்மலா பெரியசாமி செய்தி வாசிப்பது போல் கட்டுரை தலைப்பை வாசிக்கவும்.
இந்துவாக இரு.இந்துக் கடைகளில் வாங்கு.முஸ்லிம் கடைகளில் வாங்காதே என இந்து முன்ணணியின் கொலுக்கட்டை கோபாலன் கூப்பாடு போடுகிறார்.பாக்கிஸ்தான் பாய்களோடு கிரிக்கெட் விளையாட சிவசேனா தடை போடுகிறது.இங்கே இந்துக்கள் எல்லாம் மின் தட்டுபாடினால் இருளில் தவிக்கும் போது அதானி மின்சாரத்தை பயங்கரவாதத்தை ஆதரிக்கும் முஸ்லிம் நாடான பாக்கிஸ்தானிற்கு விற்பனை செய்வதை இந்துக்கள் ஒரு போதும் சகித்து கொள்ளமாட்டார்கள்.இப்படிக்கு ஒரிஜினல் இந்து.
இதே பிஜேபி in பிரதமர் மோடி , வீர் சாவர்க்கரை விடுதலை போராட்ட வீரன் என்று சொல்லி அவனுக்கு மரியாதையும் செய்து அதனை ஊலகட்தின் வாயிலாகா ஊதியம் ஆகிவிட்டது.. உண்மையில் இந்த வீர் சாவர்க்கர் ஒரு ஆங்கிலேய பித்தன் , விடுதலைக்கும் இவனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது நாடறிந்த உண்மை ஆனால் நாடறிந்த விஷயத்தையே ஊடக உதவி கொண்டு வரலாற்று திரிப்பில் ஈடுபடுகிறார் என்றால் , இன்னும் என்ன என்ன வரலாற்றில் பொய் திணிப்புகள் இந்த 5 ஆண்டுகளில் நடைபெற போகிறதோ?