privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கல்விஅரசுக் கல்லூரியில் கல்விக் கொள்ளையர்கள் - விரட்டிய புமாஇமு

அரசுக் கல்லூரியில் கல்விக் கொள்ளையர்கள் – விரட்டிய புமாஇமு

-

விருத்தாசலம் திரு கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரியில் 25-6-2014 முதல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடைபெற்றது ஆர்வமாக விருத்தாசலம் அதை சுற்றி உள்ள கிராமப் புறங்களிலிருந்து காலை முதல் மாணவர்கள் வரத் தொடங்கினார்கள்.

kolanjiappar-entranceஅதே நேரத்தில் தனியார் கல்வி நிறுவனங்களும் வாகனங்களுடன் வந்து சேர் டேபிள் போட்டுக் கொண்டு மாணவர்களை அழைத்து, “எங்கள் கல்லூரி தரம் சிறந்த்து சிறந்த பேராசிரியர்கள் கொண்டு வகுப்பு நடத்துகிறோம். அனைத்து வசதிகளும் இருக்கிறது. இங்கு பேராசிரியர்கள் பற்றாக்குறை, போதுமான வசதிகள் இல்லை” என அரசு கல்லூரிகளில் உள்ள குறைகளை கூறி கிராமப் புற மாணவர்களை தங்களுடைய கல்லூரிக்கு ஆள் சேர்க்கும் வேலை செய்து வந்தார்கள்.

இதை அறிந்த நமது புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்கள் உடனே கல்லூரி வளாகத்துக்கு செல்லும் போது சி.எஸ்.எம் கலைக் கல்லூரி (எறுமனுர்) வாகனம் மூன்றும் பி.பி.ஜே கலைக் கல்லூரி (ஸ்ரீமுஷ்ணம்) வாகனம், ஜவஹர்லால் நேரு மகளிர் கலைக் கல்லூரி (உளுந்தூர்பேட்டை) வாகனம் அணிவகுத்து அரசு கல்லூரி வளாகத்துக்குள் நின்றன. அருகில் டேபிள் சேர் போட்டு கொண்டு மாணவர்களிடம் பேசிக் கொண்டு இருந்தனர். மேலும் கல்லூரிக்குள் டாக்டர் ராமதாஸ் கலைக் கல்லூரி (சின்னவடவாடி) மற்றும் திருவள்ளுவர் கலைக் கல்லூரி (குறிஞ்சிப்பாடி) ஆகிய கல்லூரிகள் அரசு கல்லூரி வளாகத்துக்குள்ளே அடமிஷன் போட்டுக் கொண்டு இருந்தார்கள்.

அனைத்தையும் தோழர்கள் படம் எடுத்து கொண்டு கல்லூரி முதல்வரை சந்திக்க சென்றோம். மதியம் உணவு நேரம் என்பதால் முதல்வரை சந்திக்க 30 நிமிடம் ஆகியது. முதல்வரை சந்திக்க அவர் இருக்கும் இடம் தேடிச் சென்றொம். கல்லூரி முதல்வரை அவருடைய அறைக்கு அழைத்து சென்று தனியார் கல்வி நிறுவனங்கள் செய்யும் வேலையை கூறி மனு ஒன்று கொடுத்தோம். உடனே, “நான் காலையிலேயே யாரும் வளாகத்துக்குள்ளே வரக் கூடாது என்று எச்சரித்தேன். வந்த சாமியானா போட்டவர்களை வெளியே போக சொன்னேன்” என்றார். உடனே தோழர்கள், “கல்லூரி வளாகத்துக்குள் 10-க்கும் மேற்பட்ட வாகனம் நிற்கின்றன, வந்து பாருங்கள்” என்று கூறினார்கள்.

“எங்களிடம் மேன் பவர் இல்லை, தனியார் கல்வி நிறுவனங்கள் செய்யும் அடாவடிக்கு என்ன செய்வது” என்று கேட்டார்.

“உடனே வளாகத்தை விட்டு தனியார் கல்வி நிறுவனங்கள் வெளியேற வேண்டும் ” என கூறியவுடன், “வாருங்கள் போகலாம்” என்று நமது தோழர்களையும் அழைத்து கொண்டு மற்ற பேராசிரியர்களையும் போன் செய்து அழைத்தார். வளாகத்துக்குள்ளே இருந்த ராமதாஸ் கலைக் கல்லூரி விண்ணப்ப படிவங்களை அவர்களிடமிருந்து கல்லூரி முதல்வர் கைப்பற்றி கொண்டார். கைப்பற்றி கொண்டு, “கல்லூரியை விட்டு வெளியே போய் விடுங்கள், இல்லை என்றால் நான் போலிசை கூப்பிட வேண்டிருக்கும்” என்று கூறினார்.

மற்ற பேராசிரியர்களும் அவர்களை விரட்டினார்கள். அவர்கள் தோழர்களை முறைத்து பார்த்து கொண்டே வெளியே சென்றார்கள். கல்லூரியை விட்டு வெளியே வந்து கேட்டில் நின்று கொண்டு, “இவர்களை யார் உள்ளே விட்டது. உடனே வாகனங்கள் மற்றும் சேர், டேபிள், பேனர் என அனைத்தையும் எடுத்து கொண்டு போய் விடுங்கள். இல்லை என்றால் போலிசை வரச்சொல்லட்டுமா” என்ற அதட்டி பேசினார். என்ன நடக்கிறது என தெரியாமல் தனியார் கல்வி நிறுவனங்களை சேர்ந்தவர்களை திக்கு முக்காட செய்தோம்.

kolanjiappar-frontசற்று நேரத்தில் நமது தோழர்கள் தான் இதற்கு காரணம் என்று புரிந்து கொண்ட தனியார் கல்லூரி ஆட்கள் நம்மை சூழ்ந்து கொண்டார்கள்.

“நாங்கள் கல்லூரியில் சேர்பவர்களையா தடுக்கிறோம். சீட் கிடைக்காத மாணவர்களை தான் சேர்க்கை நடத்துகிறோம்” என்று நம்மிடத்தில் ஆவேசமாக கேட்டார்கள்.

“நீங்கள் தான் ஊர் முழுக்க விளம்பரம் வைத்துள்ளீர்களே. அப்புறம் என்ன அரசு கல்லூரிக்கு வரும் மாணவர்களை அரசு கல்லூரி தரம் இல்லை என்று கூறி ஏமாற்றி சேர்க்க நினைக்கீறிர்கள்” என்று பேசியஉடன் தோழரை சுற்றி வளைத்து கொண்டனர். அச்சுறுத்தும் வண்ணம் அனைத்து கல்லூரிகளும் சேர்ந்து கொண்டு, “நாங்கள் கல்லூரிக்குள்ள வந்தா சேர்க்கிறோம். நீங்க யார்” என்று கேட்டார்கள். “நாங்கள் தனியார் மய கல்வியை ஒழிக்க வேண்டும் என்று பேராடக்கூடிய புரட்சி கர மாணவர் இளைஞர் முன்னணி அமைப்பை சேர்ந்தவர்கள். இது போன்று உங்கள் கல்லூரிக்குள் வந்தால் நீங்கள் அனுமதிப்பீர்களா” என்று கேட்டோம்.

“ஒருவர் எங்களுக்கும் குடும்பம் இருக்கிறது” என்று கூறினார்.

“அதற்கு என்ன? அரசு கல்லூரிக்கு வரும் மாணவர்களை காசு கொடுத்து படிக்க சொல்லுகிறீர்களா” என்று கேட்டோம்.

அதற்குள்ளே கல்லூரி முதல்வர், “இவர்களிடம் நீங்கள் பேசாதீர்கள்” என்று தோழர்களை அமைதிப்படுத்த முயன்றார்.

“எல்லா கல்லூரியும் வாகனங்களை எடுத்து கொண்டு வெளியெ போய்விடுங்கள். எனக்கு மேல் இடத்திலிருந்து பிரஷர் மேல் பிரஷர் வருகிறது. இல்லை என்றால் போலீசை கூப்பிடுற மாதிரி இருக்கும்” என்றார் முதல்வர்.

மேலும் சில பேராசிரியர்கள் நம்மிடத்தில் வந்து, “900-ம் பேர் சேர்க்க வேண்டும் ஆனால் 4100 விண்ணப்ப்கள் வந்துள்ளது. எப்படி இங்கே சேர்ப்பது” என்று கேட்டார்கள். அதற்கு, “நமது அரசு கல்லூரி உள்ளே வந்து தனியார் கல்வி நிறுவனம் மாணவர்கள சேர்ப்பதை அனுமதிக்க முடியுமா?  தனியார் முதலாளிகள் கல்வி கொள்ளை அடிப்பதை அனுமதிக்க முடியாது” என்று அவர்களிடம் விளக்கினோம்.

“அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களையும் அரசுடைமையாக்கு அனைவருக்கும் வேலை வழங்கு என்று போராடக் கூடிய புரட்சி கர மாணவர் இளைஞர் முன்னணி அரசு கல்லூரிக்கு வந்து தனியார் கல்வி நிறுவனங்கள் ஆள் சேர்ப்பதை அனுமதிக்க மாட்டோம்” என்று பகிரங்கமாக அறிவித்தோம். அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களும் தோழர்களையும் முறைத்து பார்த்து கொணடே வெளியேறினார்கள்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
விருத்தாசலம். கடலூர் மாவட்டம்.

  1. நீங்க யார்” என்று கேட்டார்கள். “நாங்கள் தனியார் மய கல்வியை ஒழிக்க வேண்டும் என்று பேராடக்கூடிய புரட்சி கர மாணவர் இளைஞர் முன்னணி அமைப்பை சேர்ந்தவர்கள்.

    அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களும் தோழர்களையும் முறைத்து பார்த்து கொணடே வெளியேறினார்கள்…

  2. // நீங்க யார்” என்று கேட்டார்கள். “நாங்கள் தனியார் மய கல்வியை ஒழிக்க வேண்டும் என்று பேராடக்கூடிய புரட்சி கர மாணவர் இளைஞர் முன்னணி அமைப்பை சேர்ந்தவர்கள்.

    அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களும் தோழர்களையும் முறைத்து பார்த்து கொணடே வெளியேறினார்கள்…//

    வாழ்த்துக்கள் தோழர்களுக்கு…

Leave a Reply to அசுரபாலகன் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க