privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திசென்னையில் கால்டுவெல் 200-ம் ஆண்டு கருத்தரங்கம் !

சென்னையில் கால்டுவெல் 200-ம் ஆண்டு கருத்தரங்கம் !

-

ந்தியத் துணைக் கண்டத்தின்
பல்தேசிய இன – மொழி – பண்பாட்டில்
திராவிட இயலை, தமிழ் மரபை
உழைத்துக் கண்டறிந்து
தமிழ் மண்ணில்
தன் குடும்பத்தையே கரைத்துக் கொண்டார்
தமிழறிஞர் கால்டுவெல்.

அவரது இருநூறாம் ஆண்டு விழா
வெற்றுச் சடங்கல்ல,
போர்முழக்கம்!

ந்தியத் துணைக் கண்டத்தின்
ஆயிரம் மொழிகளிலே
திராவிடத் தமிழ்மொழி
உயர்தனிச் செம்மொழி
என்ற உண்மையை
உலகறியச் செய்தவர் கால்டுவெல்!

மொழி, பண்பாடு, மக்கள் வாழ்க்கை,
‘பார்ப்பன மேலாண்மை’
சாதி மேலாதிக்க முரண்கள் என்று
திராவிட இயலை விரிவாக ஆய்ந்து
உள்ளூர் சாதி மயக்கங்களைத் தள்ளி
“பறையர்களே பூர்வீகத் தமிழர்கள்”
என்று நிறுவினார் கால்டுவெல்.
அச்சமற்ற கால்டுவெல்லின்
ஆய்வுத் தடங்களை உயர்த்திப் பிடிப்போம்!

மோடி அரசின்
இந்தி – சமஸ்கிருதத் திணிப்பு
இந்து – இந்தி – இந்தியா என்ற
இந்து ராட்டிரத் திணிப்பே!

பார்ப்பன இந்து மதவெறிப் பாசிசத்துக்கெதிரான
இன்றைய போரில்
தமிழ் மரபைக் களத்தில் நிறுத்தும்
போர்வாளே கால்டுவெல்!

“உலக மொழிக்கெல்லாம்
தாய் மொழி சமஸ்கிருதம்” என்று
பொய் நெல்லைக் குத்திப்
பொங்குகிறார் மோடி.

மறுகாலனியாக்கக் கொள்ளையை
பார்ப்பனப் பாசிச வழியில்
உறுதிப்படுத்தும் பிரதம மோடி,
‘கடவுள் மொழி சமஸ்கிருதத்’தின்
ஆர்.எஸ்.எஸ். புத்திரனே
என்று புரிந்துகொள்வோம்!

நூறாண்டு முன்பே
பார்ப்பனப் பொய்களைச் சுட்டெரித்து
சமஸ்கிருதத்திலிருந்து
முற்றாக வேறுபட்ட
தனி மூல மொழி திராவிடத் தமிழ் என்று
முழங்கினார் கால்டுவெல்.

கால்டுவெல்லின் ஆய்வுத் தீ பரவட்டும்,
மோடிப் பொய்கள் தூசாகக் கருகட்டும்!

பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்பை
எதிர்த்து முறியடிப்போம் – அந்தப்
போருக்கு ஏற்ற வாளாகக்
கால்டுவெல்லை உயர்த்திப் பிடிப்போம்!

மோடி அரசின் சமஸ்கிருதத் திணிப்பு,
தேசிய இன அடையாளங்களை அழிக்கும்
பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்பே.

களம் புகுவோம்,
தமிழறிஞர் கால்டுவெல் என்ற வாள் உயர்த்தி
உழைக்கும் மக்களின் தமிழ் மரபைக் காப்போம்!

கால்டுவெல் 200 ஆம் ஆண்டு கருத்தரங்கம்

நாள் : 16.08.2014
நேரம் : மாலை 5 மணி
இடம் :
வெங்கடேஸ்வரா திருமண மண்டபம்
(பனகல் பார்க் அருகில்) தியாகராய நகர், சென்னை –17

தலைமை
தோழர் வே.வெங்கடேசன். செயலர்,
மக்கள் கலை இலக்கியக் கழகம் சென்னை

முதல் உரை
இன்றைய அரசியல் சூழலில் கால்டுவெல்லின் தேவை
தோழர் சீ.வாசுதேவன்,
ம.க.இ.க. சென்னை

சிறப்புரை
கால்டுவெல்லும் நூறாண்டு திராவிடக் கருத்தியலும்
பேராசிரியர் வீ.அரசு,
முன்னாள் தமிழ்த் துறைத் தலைவர்,
சென்னைப் பல்கலைக்கழகம்

உணர்வுடன் ஒன்று கூடுவோம் !

கால்டுவெல் கருத்தரங்கம், சென்னை

இவண்
மக்கள் கலை இலக்கியக் கழகம்

சென்னை
தொடர்புக்கு 95518 69588

  1. Hi Brothers,

    Do you have a word in tamil to point the human organ called HEART?

    (Note: – do not say NENJAM,since it is not equal to the word HEART)

    Correct ans is IDAYAM -which came from HRUDAYAM – sanskrit.
    HRUD+AYAM

    Regards,
    Ganesh

      • திரு திப்பு, Heart[செப்பம் அல்லது நெஞ்சாங்குலை] என்னும் சொல் பிங்கல நிகண்டில் குறிபிடப்படும் சொல் (சிவப்பாக செப்பு போல் இருப்பதாலும், லப்-டப் என்று ஒலிப்பதாலும், செப்புவதாலும், செப்பம் எனப் பெயர் பெற்றிருக்கலாம்). நெஞ்சாங்குலையைப் பற்றிச் சொல்லும் பொழுது தமிழில் உள்ள கலைச்சொல்லாகிய Heart beat[தேளை] என்பதைப் பற்றிச் சொல்ல வேண்டும். தேளை என்றால் லப்-டப் என்று ஒலிக்கும் செஞ்சாத்துடிப்பை (இதயத் துடிப்பை)க் குறிக்கும். தேளை என்பது விட்டு விட்டு ஒலிக்கும் இதயத்துடிப்பைச் சுட்டும் அருமையான சுருக்கமான கலைச்சொல். எடுத்தாள வேண்டியது நம்து கடமை.
        நன்றி திரு செல்வா [கூகிள் குரூப்]

        திருக்குறள் 119: சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா
        உட்கோட்டம் இன்மை பெறின்.
        கலைஞர் உரை:
        நேர்மையும் நெஞ்சுறுதியும் ஒருவர்க்கு இருந்தால் அவரது சொல்லில் நீதியும் நியாயமும் இருக்கும். அதற்குப் பெயர்தான் நடுவுநிலைமை.

      • Dear Brother,

        I too know that there are several nikandu in tamil and Amara kaavya (sanskrit etymology).

        What i meant here is ,please read the book – PHANTOMS in THE BRAIN.

        Dr. V.S.Ramachandran is a leading neurologist.An ISI Atheist.
        But for all his questions and findings there are answers in sanskrit books. Not in tamil.

        Regards,
        Ganesh

  2. கணேஷ்,

    உங்களுக்கு தமிழ் தெரியுமா?
    ஹ்ருத் என்ற சமத்கிருத சொல்லுக்கு என்ன பொருள்?
    அயம் என்ற சமத்கிருத சொல்லுக்கு என்ன பொருள்?

    நன்றி

      • கணேஷ்,

        எனக்கு தெரிந்து ஹ்ருத் என்றால் நடு(center) என்றும், அயம் என்றால் இந்த(this) என்றும் படித்த மாதிரி ஞாபகம். இது human organ heart க்கு இணையான சொல்லா? இப்படியே சொல்லிட்டு இருக்க வேண்டியது தான். ஒரு மொழி வாழ அதுக்கு ஒரு சமூகம் இருக்கணும். அல்லது அந்த மொழிய நாலு பேருக்கு சொல்லியாவது குடுத்து இருக்கணும். அப்படி இருந்தா இப்படி நீங்க லோலோன்னும் அலைய வேண்டியது இல்ல.

        ஒருவேளை எங்கத் தமிழ் மொழியில அந்த உறுப்பை குறிப்பிட சொல் இல்லையென்றாலும் , புதிய சொல் ஒன்றை உருவாக்கி பயன்படுத்த ஒரு சமூகம் உள்ளது. செத்த மொழிக்கு என்ன உள்ளது?அப்படி எத்தன பேருயா அந்த மொழிய பேசுறீங்க?. உழைப்பு,உற்பத்தி,பரிவர்த்தனையில் இல்லாத உங்க மொழி தங்கம் தங்கமா இருக்கட்டுமே அத வச்சு என்ன பண்ண?

        அது செத்துப் போனது போனது தான். உங்கள நெனச்சா எனக்கு துக்கம் துக்கமா வருது.

        • not every single word whether in sanskrit/thamizh or any other language,need to be a combination of two other words,this is like what kids used to say that History is actually His+Story,sounds very believable but need not necessarily be true.

          • உங்கள் கருத்துப்படி சமஸ்கிருதத்திற்கு பகுபத உறுப்பிலக்கணம் கிடையாதா?

            தமிழ்மொழியில் பகுபதங்கள் பகாபதங்கள் என்று தெளிவாக எந்த சொல்லையும் பிரிக்க இயலும். இதுதவிர ஓர் அசைச்சொற்கள் தமிழில் நிறைய உண்டு. பிரிக்கமுடியாவிட்டால் ஹிருதயம் என்பதற்கு என்ன அர்த்தம் என்று ஓடி ஒளியாமல் பதில் சொல்லவும். உங்கள் பதில் கணேசு சொல்கிற பதிலிற்கு முரணாக இருக்கிறது. அவர் இருவார்த்தைகளாக பிரித்துக்காட்டுகிறார்.

            இதுதவிர, கணேசின் வரையறைப்படி அயம் என்பதற்கு அவன் என்று பொருள் கூறுகிறார். அப்படிப்பார்த்தால் சமஸ்கிருத மொழிப்படி ஆம்பிளைகளுக்கு மட்டும்தான் இதயம் உண்டா?

            • எனக்கு சம்ஸ்கிருதம் தெரியாது,ருதயம் என்ற சொல் இரு சொற்களின் கூட்ட அல்லது ஒரே சொல்லா என்றும் எனக்கு தெரியாது.

              நான் கூறுவது இது தான்,எல்லா சொற்களும் இரண்டு சொற்களின் கூட்டாக இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்பது தான்.

              என்னால் உங்களால் பிரிக்க முடியும் என்பதால் பிரித்து பார்க்க வேண்டும் என்ற தேவை இல்லை.

              இலக்கணம் என்ற சொல்லை இலக்கு + கணம் என்று பிரிக்க முடியும், ஆனால் அப்படி பார்த்தால் பொருள் வேறு மாதிரி வருகிறது.

  3. ஹிருதயம் உள்ள கணேஷ்; ஹிருதயம் திறந்து இதற்கு பதில் சொல்வாரா?

    செத்த மொழியில் உள்ள சுட்டுப் பெயர்கள் தமிழிலிருந்து திருடப்பட்டவை.

    இதுதவிர ஆண் பால், பெண் பால், பலர்பால், பலவின் பால், ஒன்றன் பால் என்று பால் வகைகளை பிரித்துச் சொல்கிற இலக்கணம் செத்தமொழியில் எவ்வாறு இருக்கின்றன என்று எடுத்துக்காட்டுவாரா பிள்ளையாரு?

    • Dear Brother,

      Anpaal- Pullinga – SAHA(avan),ESHAHA(ivan),etc
      PenPaal- Strilingam- SAA(aval),IYAM,(ival)ESHAA,etc
      Palarpaal- TE(avargal-aanpaal)
      TAA(avargal-penpaal)

    • Dear Brother,
      SAHA- avan
      ESHAHA-ivan
      SAA-aval
      ESHAA-ival
      TE- avargal(aanpaal)
      TAAH(avargal-penpaal)
      TAT(adu)
      ETAT(idu)
      TAANI(avai)
      ETAANI(ivai)
      Apart from this ,
      in tamil there is no words for DUAL words like
      2 girls – BALIKE
      2 boys – BALAKAU
      2 elephants-GAJAU

      Regards,
      Ganesh

      • @கணேசு

        பால்களை குறிக்கும் சுட்டுப்பெயர்களை பட்டியலிட்டமை அரைகுறையாக இருக்கிறது. சமஸ்கிருதத்தில் இன்னும் நிறைய உண்டு. பாதிரியார் கால்டுவெல் அவர்கள் அவற்றை திராவிட மொழிகளோடு அக்குவேறு ஆணிவேறாக ஆராய்ந்திருக்கிறார். 1875இல் வெளிவந்த இரண்டாம் பதிப்பான திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் எனும் நூலில் ஐந்தாவது தொகுதியைப் படித்துவிட்டு உங்களது சமஸ்கிருத மொழிச்சிறப்பின் அருகதையை அவிழ்த்துவிடவும்.

        தற்பொழுது சிலபார்வைகளை வைப்போம்;

        ஆண் பாலுக்கு ஹ ஹா விகுதியும் பெண்பாலுக்கு அ, ஹா விகுதியும் போட்டு ஒருவரை அழையுங்கள் என்றால் எச்சமாக விட்டுவைத்திருக்கிறீர்கள். எட்டாம் வகுப்பு மாணவன் இதைப் படித்தால் இதை ‘ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்’ என்று எடுத்த எடுப்பில் சொல்லிவிடுவான்.

        பலர்பாலையும் மரியாதையோடு விளிக்காமல் எல்லோரையும் எச்சப்படுத்தி அழைப்பதுதான் சமஸ்கிருதத்தின் சிறப்போ? இதை விதண்டாவாதத்திற்காக சொல்லவில்லை.
        அவன் என்பது அவர் என்றும் அவர்கள் என்றும் தமிழ் மொழியால் எழுத இயலும். மேலும் கள் விகுதி சேர்கிற பொழுது அவர்கள் என்று பலர்பாலை சிறப்புடன் குறிக்க இயலும். இது மற்றொரு இலக்கணத்திற்கும் நம்மை இட்டுச் செல்லும். அது தன்வினை மற்றும் பிறவினை என்பதாகும்.

        கற்றார் என்பது தன்வினை. கற்பித்தார்கள் என்பது பிறவினை. இதைத் தன்மை முன்னிலை படர்க்கை என்று மூன்று நிலைகளிலும் சிறப்பாக தமிழில் கையாள இயலும். சான்றாக தன்மையில் கற்றேன்; கற்பித்தேன். இதுபோன்ற தன்வினை பிறவினைகள் சமஸ்கிருதத்தில் உண்டா? உண்டு எனில் அவை எவ்விதம் இயங்குகின்றன?

        தமிழில் உள்ள இந்த இலக்கணச் சிறப்பு மனிதர்களால் மட்டுமே படைக்கப்பட்டவை. ஆகையால் இவற்றில் சிறப்புகளும் மாற்றங்களும் காலத்திற்கேற்ப நடைபெற்று வந்திருக்கின்றன.

        ஆனால் சிவனின் உடுக்கையில் இருந்து வந்த ஒலி ஹர ஒலிகள் என்று பானினி குறிப்பிடுகிறார். இவைதான் சுட்டுபெயர்களுக்கு சுருதியாக இருக்கின்றன. ஆக சமஸ்கிருதம் இவ்விதம் தேவபாசையாக கருதப்படுவதால் தான் பானினியின் இலக்கணம் இன்னும் சவளைப்பிள்ளையாக நோஞ்சானாகவே காலத்திற்கு ஒவ்வாததாக இருக்கிறது. சுட்டுப்பெயர்களில் சமஸ்கிருத சொற்கள் திரிபு பெற்றவை. கடன்வாங்கப்பட்டவை. தமிழைப் போன்று முழுமையானவை அல்ல என்பது தெளிவு.
        ————————————————–

        இரண்டாவது வாதத்திற்கு வருவோம்.

        இரட்டைச் சொற்கள் தமிழில் இல்லை என்பது உங்கள் வாதம். உங்கள் வாதப்படியே வந்தாலும் சமஸ்கிருதம் ஏன் அழிந்தது என்பதைச் சொல்ல முடியும்.

        தமிழில் அடிப்படையில் ஒருமையில் ஒன்றைச் சொல்லிவிட்டு பன்மையில் சொல்லவருகிற பொழுது எண்களையே சேர்த்துவிளக்குவது எளிமையானது மட்டுமல்ல; இலக்கண அமைதியும் ஒழுங்கும் கொண்டதும் கூட. சான்றாக ஒரு பந்து, இரண்டு பந்துகள் என்று சொல்கிற பொழுது தனித்தனி வார்த்தைகளை பயன்படுத்த தேவையில்லை. ஆக மனனம் செய்யவேண்டிய அவசியம் இல்லை. ஆனால் சமஸ்கிருதத்தில் ஒவ்வொன்றையும் மனனம் செய்யவேண்டும். 13வது வாய்ப்பாடு மனனம் செய்யத் தெரியாதவன் மனனக் கணிதத்தில் தோல்வியடைவான் என்ற குருட்டுத் தேர்வுமுறைகளைப் போல இரட்டைச்சொற்களான சமஸ்கிருதச் சொற்களைத் தெரியாதவன் சமூகத்தில் முதலில் பேச்சை இழக்கிறான். ஒருகட்டத்தில் மொழியையே இழக்கிறான். சமஸ்கிருதம் இவ்விதம் தான் அழிந்தது என்று சொல்லலாம் இல்லையா?

        இதுதவிர தமிழில் தனிச்சிறப்பாக எண்ணுப்பெயர்களும். ஆகுபெயர்களில் ஒருவகையாக எண்ணாகுபெயரும் மக்களின் வழக்காடுமொழிகளில் நீக்கமற நிறைந்திருக்கின்றன. இவை மொழியை இன்றுவரை வாழ்வாங்கு வாழவைத்திருக்கின்றன என்பதை இலக்கியங்களை நாடாமலேயே வெறும் வழக்குச் சொற்களை வைத்தே ஐயம்திரிபற விளக்க இயலும். இச்சிறப்பு சமஸ்கிருதத்திற்கு கிடையாது.

        • Dear Brother,

          I never said/challenged that I did a PhD or DLitt in Sanskritor a learned scholar.I am a 6th std student(in sanskrit). For all your questions ,there are reference books .Sanskrit has vyakrana books -1.Panini(Ashtadhyayi) ,2.Patanjali(Maha Bhashyam),3.Bhattoji Dikshita(Siddhanta Kaumudi. like in our tamil we have 1.Nanool,2.Veera Sozhiyam,3.Tolkappiyam,4.Agathiyam,etc.
          For words ,like tamil(bagu padam,paga padam) sanksrit has words.
          AS we have dozends of Nikandu ,they too have dozens of Niruktam books.
          For every words there are 100s of synonyms in both the language.

          To learn/critisize a language ,we need to learn it properly .Do not learn it from caldwell or others critisisms.
          In tamilnadu for tamil B.A.,M.A.,M.Phil,Ph.D and D.lit courses are there.
          Whereas in Bangalore there are 17 streams/verticals for all the (BA,MA,PHd,Dlit)

          Reference : http://www.ksu.ac.in/en/academics/courses/b-a/.

        • Hi Brother.
          Eru ketta Edir marai peyarecham -example TERAA MANNA(silapadikaram) ,EMARAA MANNAN(kural),etc.It is for a sotrodar and not for a single word. Do not get confused with words and sentense.

          TAN VINAI(from ur terminology) PIRA VINAI
          ——————————————
          PASYATI – paarkiraan . DRUSYATI – parkapadugiran
          PATATI – Padikkiran . PATYATI – padikka seikiraan
          LIKHATI – Ezhudugiraan. LIKHYATI- ezhuda padugiraan.

          More over : –
          Tvam – NEE(munnilai orumai)
          Bhavaan – Neengal(mariyaadai-periyavargalukku)
          Bhavatee-Neengal(penpaal- mariyaadai)

          Te-(avargal : padarkai orumai -aanpaal)
          Taa -(avargal : padarkai orumai -penpaal)
          Taani(padarkai -palavin paal)

          First of all ,we didnt get a chance to learn other languages except English.
          Without knowing ,we should not comment/abuse on other lanugages/ persons/places/objects.
          These vinai-mutru ,vinai-thogai,uvamai-thogai,panbu-thogai,vina-echam are commly used in all languages.
          Vinaiyaal anaiyum peryar — Paarthavan, Padithaval,pesiyavan,etc…
          Paarthavan- Drustavaan
          Padithaval- Patitavathi
          Pesiyavan- Uktavaan.

          Vinaimutru – Drsutva- paarthu
          Apahrutya – abagarithu.etc….
          (Again i never claim that i am a scholar in sanskrit or tamil).
          Regards,
          ganesh

          • அய்யா கணேஷு,
            உங்களுக்கு தமிழ் தெரியும்ல, ஏன்யா இப்படி கொல்றீங்க. கொஞ்சம் தமிழ்ல தட்டச்சு பண்ண முயற்சி பண்ணுங்க.

            • என்ன இப்படி கேட்டுட்டீங்க? இணையத்துல _______ என்னைக்கு தமிழ்ல தட்டச்சு செஞ்சுருக்கானுங்க.? நீச மொழி தமிழ்ல எழுதுனுமா, தமிழில் நடந்து கொண்டிருக்கும் விவாதத்தில் ஆங்கிலத்தில் பதில் அளித்து நம்ம மேதாவித்தனத்தை மேலாண்மையை காட்டி கொள்வோம் எதிரா எண்ணம்.

              • வினவு, பாப்பான்னு சொன்னதுக்கு டேஷா….. பாப்பான பாப்பான்னு சொல்லாம பிராமணான்னு சொல்லனும்னு எதிர்பாக்கறீங்களோ.?

                • ஒரு விதத்தில் நாம் இந்த கணேசுக்கு நன்றி சொல்ல வேண்டும்.
                  நான், நீங்கள், தென்றல், சிவப்பு, இன்னும் பலரை ஒரே கோட்டில் இணைத்த பெருமை அவருக்கே சேருகிறது.

                  • எதிர்கருத்துக்களின்(இங்க பார்ப்பன கும்பல் உளறுவது கருத்து கூட இல்லை, வன்மம்) பலனே அதுதான் நண்பர்.

          • \\To learn/critisize a language ,we need to learn it properly .Do not learn it from caldwell or others critisisms.\\

            \\First of all ,we didnt get a chance to learn other languages except English.
            Without knowing ,we should not comment/abuse on other lanugages/ persons/places/objects.\\

            தாங்கள் தான் மொழியைக் கசடறக் கற்றறிந்தவர் போல் இதெல்லாம் தமிழ் மொழியில் உண்டா என்று சனாதனத் திமிரோடு பதிவிட்டீர்கள். உங்களது ஆரம்பமே இதயம் என்பது இருக்கா? சமஸ்கிருதத்தில் இது இருக்கு; தமிழில் இது இல்லையே என்பதாக இருந்தது. செத்த மொழியின் தயவின்றி தமிழ் மொழி தனித்தியங்கும் என்பதை இங்கு பல நண்பர்கள் சுட்டிக்காட்டவும் செய்தனர். ஆனால் உண்மையில் சமஸ்கிருதத்தில் தான் இல்லாத விசயங்கள், திருடிய விசயங்கள் நிறைய உண்டு. அவற்றுள் சுட்டுப்பெயர்களுக்கான இலக்கணத்திலிருந்து மெய்யொலிகள் வரை சான்றுடன் எடுத்துக்காட்ட இயலும். இவை எல்லாம் ஒப்பியல் இலக்கணத்திலும் மொழியியல் துறையிலும் பல ஆய்வுகள் மூலமாக அறிவியல் பூர்வமாக எடுத்துக்காட்டப்பட்டிருக்கின்றன.

            இரண்டாவதாக, கால்டுவெல் மொழியியல் துறைக்கு மகத்தான பங்களிப்பை வழங்கியவர். எந்தவொரு மொழியியல் ஆய்வாளரும் இவரது பங்களிப்பை புறக்கணிக்க இயலாது. ஏனெனில் சமஸ்கிருதம் உட்பட 18மொழிகளை தனது ஆய்விற்கு அடிப்படையாக கொண்டவர். இதைப் புறக்கணித்துவிட்டு உங்களைப் போன்ற ஆட்கள் பகவத் கீதையை மொழியியல் ஆய்விற்கு ஒரு சான்றாக முன்வைக்கிறீர்கள். இது அறிவு நாணயமான செயலும் அல்ல. உங்களுக்கு இருப்பது மொழிப்பற்றும் அல்ல.

            வெறும் இந்துத்துவ கண்ணோட்டம் இருப்பதால் தான் “சதுர்வர்ணம் மாயா சிருஷ்டம்” என்பதை “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்பதோடு நாதாரித்தனமாக ஒப்பிடுகிறீர்கள். இது சமஸ்கிருதப்பற்று அல்ல; மாறாக சனாதனத் திமிராகும். இந்த ஒன்றே உங்களது சுயமுகத்தை விளங்கிக்கொள்ள போதுமானது.

            மேலும் உங்களுக்கு சமஸ்கிருத மொழிப் பற்று இருக்கிறது என்று வைத்துக்கொண்டாலும் கூட மீமாம்சம் போன்ற தரினசக்கோட்பாடுகள் வேத எதிர்ப்பை முன்வைத்து எழுதப்பட்டவை என்பதை எடுத்துக்காட்டியிருக்க முடியும். ஆனால் சனாதினிகள் தான் இத்தகைய குறைந்தபட்ச நூல்களையும் வேதமரபை தூக்கிபிடிக்கும் பொருட்டு இருட்டடிப்பு செய்தவர்கள். மேலும் பல்வேறு நூல்களையும் அழித்தவர்கள். ஆனால் இங்கு வந்து ஆர் எஸ் எஸ் காலிகளைப் போன்று வெட்கமற்ற முறையில் அணுக்கொள்கை, கீதா, தர்க்கம் பற்றி கதைக்கிறீர்கள்.

            மேலும் பானினியைப் படி, பதஞ்சலியை வாசி என்று பரிந்துரைக்கிறீர்கள். ஒரு மொழி மனிதர்களால் வளம்பெற்று சமூகத்தில் உயிராக இயங்குகிற பொழுது பானினி சிவனின் உடுக்கையில் இருந்து பிறந்ததாக கதைக்கிற ஹர ஒலிகளை எந்தவொரு மொழிப்பற்று உள்ளவரும் மறுக்கவே செய்வார். இதைப்பற்றிய நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தாமல் ஒரு மொழியை தேவபாசையாக கருதிக்கொள்வதும் அதனடிப்படையில் பிறமொழிகளை விமர்சிப்பதும் நேர்மையற்ற செயலாகும். இது இந்துத்துவக்காலிகளின் வழமையான அடவாடித்தனமாகும்.

            • Dear Brother,

              6 orthodox systems(nyaya,vaiseshika,yoga,mimamsa & vedanta)- who accept the authority of vedas.
              6 heterodox systems(carvaka,jaina,srautrantika,madhyamika,yogacara,vaibhashika)-who reject the vedas.

              For linguistic research ,please read the commentary of SENAAVARAIYAR on THOLKAPPIYAM.

              Again I request you do not blame other languages without knowing them and just by reading Caldwel’s comments- “comparative study”.

              Neither Sanskrit/Nor tamil stolen words among them.And they are public assets. They can not be owned by socalled Brahmana Rakshasas(who claim themselves as brahmins just by birth.

              Also read the meaning of Pirappokkum ella vuyirkum .Do not read karunanidhis commentary.Read parimelazhagar commentary.
              Regads,
              ganesh

              Regards,
              Ganesh

              • Dear Thendral,

                It is a discussion forum and I never hurt anybody here.
                As your younger/elder brother I personally invite you to my home,bangalore.
                Any time if you get a chance,kindly pay a visit.

                Also let me know is there a tamil version of comparative study by Caldwell.
                Regards,
                Ganesh

              • எத்தனை முறை சொன்னாலும் கணேசின் ஆட்டு மூளையில் ஏற மாட்டேன் என்கிறது.பதினாறு வயதினிலே கமல் மாதிரி சொன்னதையே சொல்கிறார்.

                “இந்தியாவின் மரபு எனக் கறாராக வரையறுக்கப்படக்கூடிய தத்துவத்தை விருப்பு வெறுப்பின்றி ஆராய்கிற போது கடவுளுக்கு அங்கே இடம் தேடுவது வேண்டாத வேலையே என்பது தெளிவாகும்.இந்தியாவின் தத்துவங்களில் இரண்டே இரண்டை மட்டுமே ஆத்திகம் சார்ந்தவை என மிகுந்த தயக்கத்துடன் கூறலாம்…”

                “நமது முக்கியமான தத்துவங்களுக்குள் வேதாந்தமும்[அதுவும் கூட ஒரளவுக்கே எனலாம்]நியாய-வைசேசிகமும் குறிப்பாகப் பிற்கால நியாய-வைசேசிசமும் மட்டுமே ஆத்திகம் சார்ந்தவை…”
                இந்திய நாத்திகம்.-தேவிபிரசாத் சட்டோபாத்யாயா-தமிழில் சாமி-பாரதி புத்தகாலயம்.

                ஆத்திகம் என்பது வேதத்தை ஏற்பது.நாத்திகம் என்பது வேத மறுப்பு.

                • Dear Brother,
                  Sheep’s/Goat’s Brain morphology resembles human brain and biology students use it in their lab for studies.
                  Iniya Ulavaaga Innatha Kooral Kani
                  iruppa Kaai kavarthatru. (Moorkaha Nindati.)
                  Please do not blame/abuse others first.We are tamilans and more culturally advanced than foreigners.

                  Like AIAADMK emerged from DMK ,all these root 6 darsanas are orthodox systems which accept authority of vedas.
                  But later the atheistic Sankhya came from theistic sankhya system.
                  Mimamsa accepts only the BRAHMANA,ARANYAKA and SAMHITA of vedas.It never accept UPANISHADS.
                  Vedanta accepts Upanishads and is a bridge between the 4 parts of vedas.
                  Again the brahmana rakshasas can not claim the ownership of the VEDAS .They are knowledge and global assets.
                  There are 100 of Commentary for Thirukkural .But Parimelazhagar vurai is hte best.
                  Similarly for any books there will be authentic commentaries and study them.
                  People will laugh if we read karunanidhi(DMK) or kalimuthu(AIADMK) commentary for thirukkural.

                  If you want to do comparative study of Grammar(tamil vs sanskrit) go and read SENAAVARAIYAR commentary and not CALDWELL’s books.

                  Regards,

                  Ganesh

                  • குறளுக்கு எழுதிய உரைகளிலேயே சாதிவெறி பிடித்ததும் தவறான உரையானதும் பரிமேலழகருடையது தான்.

                    சான்றாக இரண்டு;

                    1. அறமாவது மனு முதலிய நூல்களில் விதித்தன செய்தலும் விலக்கியன ஒழிதலுமாம்.

                    2. ஒழுக்கமாவது அந்தணர் முதலிய வருணத்தார் தத்தமக்கு விதிக்கப்பட்ட பிரமசரிய நிலைகளினின்று, அவ்வவற்றிற்கோதிய அறங்களின் வழுவாதொழுகுதல்.

                    பரிமேலழகரின் வெறியை குறளுக்கு எழுதிய சிறப்பான உரை என்று இந்துத்துவ காலிகள் மட்டுமே வியந்தோதுவர். கணேஷ் சுட்டிக்காட்டும் பரிமேலகழர் உரையை பரிசீலிப்பது மட்டமானதும் அவமானகரமானதும் ஆகும். இத்தகைய உரைகளை புறந்தள்ளுவதற்கு ஒருவர் தத்துவங்களை சார்ந்து இயங்க வேண்டிய அவசியமில்லை. அடிப்படை மனிதமாண்புகள் இருந்தாலே போதுமானது.

                    • Dear Brother,
                      I heard that tamil Nikandu -“ANDANAR 6 THOZHIL PURIVOR”.
                      1)Vedam katral ,2) Vedam karpithal
                      3)Velvi vettal ,4)Velvi purivithal
                      5) Daanam vaanguthal and 6) Daanam koduthalu maam.
                      They can not accrue food or money for even the very next day.
                      1000 years back they were vazhakozhindanar(almost)
                      99.9999% brahmin today is a paraiyan like me.

                      In Brahma sutra ,1st pada 4th adhyaya ApaSoodradhi karan is a topic of discussion.
                      It says that -who run behind money,who are selfish,who can not control their senses are called Sudras. They are not fit for brahma upasana.

                      Hence I am fit for brahma upasana.(Atleast I call myself as paraiyan and I ask for apologize for whatever mistakes I did in past and future.)

                      But kanchi sankara and other matadhipadis and followers are paraiyans and they are unfit to chant vedas,do Homas and Give/take Daanam.
                      These rakshasas interpreted all the sastras and become oppressor of others.

                      What I conclude to say is MANU SMRUTI is great.Its interpretation by these idiots is cruel.
                      Hence I still say that Parimelazhagar commentary is great.
                      Karunanidhi —— who ruined our tamilnadu by ruling it for decades.
                      He is a fool like other matadhipadis. Making his son his political heir and all.

                      I still do not how a learned person like you can even think about karunanidhi and refer his understandings brother.
                      Without Parimelazhar ,Thirukural cant have given commentary.
                      The karunanidhi cant even write commentary on 1 kural without his ancesters commentaries.

                      Regards,
                      Ganesh

                  • \\ If you want to do comparative study of Grammar(tamil vs sanskrit) go and read SENAAVARAIYAR commentary and not CALDWELL’s books.\\

                    ஒப்பிலக்கணம் எனும் துறை கால்டுவெல்லுக்கு பிற்பாடே உலகெங்கிலும் முறையான வளர்ச்சி பெற்றது. Linguistics துறையில் Philology பிரிவில் (மொழியை வரலாற்று தரவுகளின் பின்னணியில் ஆராய்வது) இந்தியாவில் ஆராய்ச்சிகள் ஆங்கிலேயேர்களால் தான் அறிமுகப்படுத்தப்பட்டது. கொல்கத்தாவின் ஆசியவியல் பல்கலைக்கழகம் இந்தோ-ஆரிய மொழிக் குடும்பங்கள் குறித்த ஆய்வுகளை சமஸ்கிருதத்தை ஒட்டியே தான் நிகழ்த்தியிருக்கின்றன.

                    ஆனால் கால்டுவெல்லின் பங்களிப்பு, 10க்கும் மேற்பட்ட திராவிட மொழிகளை இந்தோ-ஆரிய மொழிகளோடு விரிவாக ஒப்பிட்டு ஆராய்ந்தன. இதனையொட்டியே பிற்காலத்தில் எலமைட்-மொழிக்குடும்பங்கள் திராவிட மொழிக்குடும்பங்களோடு விரிவான முறையில் ஆராயப்பட்டன.

                    இப்படி எந்த ஒரு பின்புலமும் ஆராய்ச்சி அடிப்படையும் வரலாற்று தகவல்களும் இல்லாமல் சேனவராயரின் தொல்காப்பிய உரையைப் படிப்பதால் ஒப்பிலக்கணத்தை பற்றி எப்படி அறியமுடியும் என்பதை கணேஷ் அவர்கள் விளக்குவாரா? வெறும் இந்துத்துவ வெறியை பிராதனமாக கொண்டு பின்னூட்டங்களை எழுதுவது அழகல்ல.

                    நரம்பியல், ஒளியியல், உயிர்-தொழிநுட்பம் (ஸ்டெம் செல் வேற இருக்கு), போன்ற துறைகளுக்கு சமஸ்கிருத நூல்களை மேற்கோள் காட்டியது போதாது என்று இப்பொழுது மொழியியல் துறைக்கு சரடுவிடுகிறார். பரிமேலழகரின் சனாதன வேட்டி பெரியாரின் காலத்திலேயே கிழிக்கப்பட்டிருக்கிறது. இதில் சேனவராயர் வேறு!

                    • Dear Brother ,
                      I downloaded Caldwells book read the preface.He is refering to more than 2 dozens of books which are about comparative study of languages.Hence he is not the first person as you lie.
                      If you want to eat coconut somebody has to climb the tall coconut tree.
                      Yadi Tvam Narikelapalam(iru peryarottu panbu thogai) ichati chet,naarikela vrukshe(7 aam vetrumai urubu) utaritva(vinaithogai), phalam graheetva(vinaithogai) khaaditavaan(Vinaiyaal Anaiyum peyar) bhavatu(Ann paal orumai nigazhkaal vinai mutru).
                      OR
                      If you want to eat panasa phalam(palaa pazham), you should face the difficulty of cutting it.
                      OR
                      Rose flower has thorns on it.

                      Muyarchi / viyarvai illaamal eduvum kidaikaathu sir.
                      You sacrifice to gain something.(study)

                      As a non-brahmin(I belong to velaalar community) ,people call us as paraiyan.
                      I faced lots of humilitations. But still I am learning the lore.
                      Kanchi sankarachari born from brahmin but still he is a paraiyan(because of deeds and attitude.)
                      I am born of paraiyan but a noble man because of deeds and attitude.
                      Who runs behind money ,who is selfish is paraiyan(All brahmins who run behind mony are paraiyans.)
                      If you work for welfare of society ,you are an aryan(pan pattavan).
                      Hence I love MA.KA.YE.KA because you guys serve the society genuinely.
                      Anthanar enbar aravor eyyuyikum senthanmai
                      poondu ozhuga laan.

                      Again I like to know out of 1330 verses or Thirukural,how many kurals are used to praise the ACHARYAN(GURU)? I will be thankful if your greatness explain me.
                      1) Acharyaat padamodatte paadam svamedhaya.
                      Paadam sabrahmacharibhya paadam kalakramena ca.
                      A pupil learns only one fourth from his teacher.learns another quarter from his intelligence.receives another quarter from classmates and gets the remained quarter by course of time.
                      2)Guru brahma Guru Vishnu Guru devomaheswara.
                      In the entire world ,the only religion which praises teacher a step more than god is our religion.
                      Again i do not have rage or racism on other religion or people.My best brothers that i achieved in this world are my broadminded muslims and christians.

                      First read Senavaraiyar’s commentary and then come to conclusion.
                      In any universities ,for tamil B.A.,M.A.,M.Phil,Ph.D and D.lit courses are there.
                      In Bangalore there are 17 streams/verticals for all the sanskrit stuides(BA,MA,PHd,Dlit)

                      Reference : http://www.ksu.ac.in/en/academics/courses/b-a/.
                      It has more branches than Engineering in india.

                      Finally sanskrit is not language of conversation between maayandi(my birthname) and munuswamy as you and the british think.
                      It is always a tool for phylosophy(A science which deals with Things which are imperceivable) and further research.

                      Chumma chumma vinaithogai panbuthogai nu peela vida koodathu.
                      Again I am not a scholar in tamil or sanskrit.I am a student or idiot.I will study till my death.
                      Kshanasa kanasa ca eva vidyamartham ca sadhayeth(every moment one should learn.)

                      Hence forth I proved that sankrit and tamil are not mundane/mortal language like(kannada,parsi,english,french)
                      Regards,
                      ganesh

                  • என்னால முடியல கபாலிகான்!

                    1.முதலில் இந்தியவியல்[இன்டோலஜி] என்ற அறிவுதுறை உண்டு என்பதை வீடல பெரியவங்ககிட்ட கேட்டு தெரிஞ்சுகங்க கான்.

                    2.தேவி பிரசாத் சட்டோபாத்யாயா மிக முக்கியமான இந்தியவியலார்.ராகுல சாங்கிருத்தியாயன்,டி.டி.கோசாம்பி,தாஸ்குப்தா முதலியோருடன் ஒப்பிடதக்கவர்

                    3.நான் மேற்கோள் காட்டியது சட்டோபாத்யாயாவின் நூலின் தமிழ் மொழி பெயர்ப்பில் இருந்து.

                    4.அது காளிமுத்து உரையை போன்றது என்ற உங்க கருத்தை என்னன்னு சொல்கிறது?

                    5.அப்புறம் ஒரு முக்கிய கேள்வி நாங்க என்ன மயித்துக்கு கால்டுவல் புத்தகத்தை படிக்க கூடாது?

                    6.அப்புறம் ஐயா ரொம்ப கஷ்டபட்டு தமிழ்பற்று இருக்குற மாதிரி வேசம் போட வேண்டாம்.சூது என்னன்னு எங்களுக்கும் தெரியும்.

                    7.ஆர்.எஸ்.எஸ் அரை டவுசர்கள் சொல்றதுதான் உண்மை என்று இங்கு வந்து உளராமல் உருப்படியாக படித்துவிட்டு வந்து பதிவிடுங்கள்.

                    8.கானுக்கு தமிழ் மொழிமீது என்ன வெறுப்பு? தமிழில் பின்னுட்டமிட்டால் என்ன குறைந்துவிடும்?.

                    • Dear Brother,
                      Yaadum oore yaavarum kelir.(I born to different parents at difference places on different births. Hence all are my relatives.ALl places are my vaazhiyidangal)
                      by kaniyan(mathematician -astrologer) Poonkunran(Irupeyarottu panbuthogai,anmozhithogai,etc- sorry if i am wrong).

                      In my office,we didnt have admin previleges to install thenmozhi fonts.Please let me know any other KARANAM(vazhi) to type in tamil.

                      I didnt belong to DMK/AIADMK hence when I critisized karunanidhi ,its my duty to citisize the other party man Kaalimuthu or (Pulamaipithan) to avoid your Irrational reasoning (vitanda).

                      India is the name coined by persians or somebody who cant pronounce the name SINDHU.Please understand that first.

                      T.T.KOSAMBI ,etc think in narrow angle sir.
                      For ex,Saariraka sastra commentary was written by Nilakanda dikshita.
                      But it is quite 100% different from Adisankara’s commentary.

                      Regards,
                      Ganesh

                    • Dear brother,

                      Paattu ezhudi per vangubavargal ullanar.
                      Paattil kutram kandupidithe per vangubavargal ullanar.
                      Idil T.T.Kodambi enda jadi enru neengale sollungal.
                      Thivilaiyadal movie Nagesh dialogue.
                      But their interpretation of indian phylosophy is wrong
                      They look though max muller eyes.
                      MOODAH PARA PRATYAYANEYA BUDHI.(A fool is guided by others understandings.)

                      Regards,
                      Ganesh

                  • Of late an half boiled gentleman goes on writing as if he is the authority on everything.What qualification he has got to comment about Thirukkural-Kalaignar Urai?He thinks every Vinavu reader is a half-boiled like him.Does he know that Pulavar Kuzhandhai wrote a book on the false things/non-existent “values” highlighted by Parimelazhagar in the garb of writing Urai for Thirukkural?

                  • தமிழே வரலையே 🙂
                    உங்களுக்கு தமிழார்வம் இருக்குன்னு நாங்க நம்பனுமா ?

        • Dear Brother,
          I have a question.Please do not take it personally.I request you and treat me as your beloved student .

          THENDRAL is a name of a wind.(Vonran paal)
          But i think your linga is Aan paal I guess(One of my frnd from meachanical Dept was thenral who used to travel in same bus with me).
          E=MC2
          MLT-2 = (M * LT-1)**2
          Physiscs dimensional equation which is used in both tamil and sanskrit vyakaranams.
          How a Vonran paal name is given to Annpaal person.
          (Katham bhavaan Napumsaka linga namaat vartati sma?

          Regards,
          Ganesh

          • Dear Ganesh,

            What do you mean by Vonran paal? Are you meaning Ondran paal – ஒன்றன் பால்
            அது, இது = ஒன்றன்பால். அவை, இவை = பலவின்பால்.

            Then there is Aan paal, Pen paal.
            அவன், இவன் = ஆண்பால். அவள் இவள் = பெண்பால்.

            Why do you drag e=mc2 in to the discussion unnecessarily when discussing about thendral’s name? Are you having some sort of ADHD problem?

            Why can’t we call a person by the name of a wind. What is wrong in it? You can call people by the name of sun, moon, mountain, river, land, fire, then why not wind?

            And, what are you trying to say by this:
            //Katham bhavaan Napumsaka linga namaat vartati sma?//
            Please dont act smart. It is disrespectful to talk to a person in a language he cannot understand. If you are trying to say some slokas, you should also provide the meaning for that. If I start speaking to you in Chinese or Japanese, would you appreciate it?

            FYI, Thendral is the name of the wind coming from south direction which is a nice breeze.
            Vaadai is the name of the wind coming from north direction which used to be very cold.

            • அன்புள்ள உடன்பிறப்பே,

              1) தென்றல் என்பது அஃறினை பெயர். ஒரு நபரின் பெயராக வந்தால் அது ஆகுபெயர்களில் ஒரு வகை.
              இதைத்தான் நான் கேட்டது. என் கேள்வி அறிவினா. அது அறியாவினா அன்று. பிறகு நானாகவே தெரிந்துகொண்டேன்.
              அதற்கு ஏன் இவ்வாறு வெகுண்டீர் ஐயா. வெகுளாமை அதிகாரம் படியுங்கள்.

              2)இதே கேள்வியினை நான் வடமொழியில் எழுதியது தாங்களுக்கு ஸ்லோகம் போன்று தெரிகிறதா.
              பின் எவ்வாறு வடமொழி செத்த மொழி என்று பொய் உரைக்கின்றீர்?

              அன்புடன் கணேஷ்

  4. //செத்த மொழியில் உள்ள சுட்டுப் பெயர்கள் தமிழிலிருந்து திருடப்பட்டவை.//

    Interesting argument. Is there anywhere I can refer/get more details.

    • If sanskrit is claimed as a dead language,then why there are universities and students…
      1) http://www.ksu.ac.in/en/academics/courses/b-a/ – Bangalore
      2) http://www.bangaloreuniversity.ac.in/faculties/art_dept_sanskrit.aspx – Bangalore
      3) http://www.unom.ac.in/index.php?route=department/department/deptpage&deptid=64 -Madras
      4) http://rsvidyapeetha.ac.in/ – Tirupati
      5) http://www.keralauniversity.ac.in/affiliatedcolleges/affiliate_college/10.html – Trivandrum
      6) http://madrassanskritcollege.com/ – Madras. similarly there are 100 of universities and 1000 of colleges .I can list here.In Gemmany and USA there are universities to teach them.
      There are lots of monthly magazines.

      Regards,
      ganesh

      • கணபதி அய்யர், சாரி கணேஷ் அய்யர்,

        டைனாசர் ஆராய்ச்சி நடைபெறுவதால் டைனாசர் இப்போதும் உயிருடன் இருக்கிறது என்று சொல்வது போல இருக்கிறது நீங்கள் சொல்வது.

        செத்த கல்லூரியில் (மியுசியம்) எலும்புகள் இருப்பதாலேயே அந்த உயிரினம் இன்றும் உயிருடன் இருப்பதாக அர்த்தம் இல்லை.

        மேலும் தனக்கென ஒரு தனித்தன்மையான எழுத்து வடிவம் சமக்கிருததிற்கு இப்போது இருக்கிறதா, நீங்களே சொல்லுங்கள்.

        • Dear Brother,
          I belong to velaalar group by birth and a brahmin doctor adopted me after my parents death ,since my childhood.But I am more orthodox than his 2 sons.
          Hence I am not a brahmin by birth.
          The england postal stamps never bear the country name,Since they were the first.
          Sanskrit is not the name of a language.Vadamozhi is the original name similar to Thenmozhi tamil.
          In those days ,the knowledge was preached from Asaan to Maanavan by Sruti(sound) and Smruti(memory).Their memory and grasping power were extreme because of life style.
          But later it got vari vadivam(south people use Nagari Akshara and north people use Deva-nagari-hindi akshara.)
          And moreover we can not weigh a language by akshara.
          After coming to bangalore ,I learn both telugu and kannada aksharas.I can speak telugu frequently but not Kannada(Because they hate us -cauvery issue.) .
          Still from my view point Kannada Akshara is most beautiful than Tamil.
          But that doesnt mean that kannada is better than my mother tongue tamil in any aspects.
          In games we should honour the rules. Or else we will get Yellow or Red cards(fowl game.).
          Similarly while debating ,let us honour the rules and do not use Unfair reply (chala) or Wrangling (jalpa).I am not afraid about defeat .I am still learning from you people-My brothers.Lets discuss genuinely. And I am not a scholar on any subject.
          Every moment one should learn(kshanasa Kanasas cha eva Vidyamartham cha sashayeth.)

          Regards,
          Ganesh

  5. தமிழில் ‘பொன்’ என்ற சொல் Gold அதாவது தங்கத்தை மட்டுமன்றி வேறு உலோகங்களைக் குறிக்கவும் பயன்படும்.

    செம் பொன் > செம்பு – சிவப்பு உலோகம் = Copper

    வெண் பொன் > வெள்ளி > வெள்ளை உலோகம் = Silver

    இரும் பொன் > இரும்பு > கருப்பு உலோகம் = Iron

    கா அல்லது K யில் ஆரம்பமாகும் பல தமிழ்ச் சொற்கள் திரிபடைந்து நாளடைவில் உச்ச்சரிப்பில் மென்மையடைந்து, ஹ ஒலியுடன் உச்சரிக்கப்பட்டு நாளடைவில் அதன் மூல ஒலியாகிய ‘க’ வை இழப்பது இயல்பு. இது தமிழ்நாட்டில் மிகவும் பொதுவாக காணப்படுகிறது.

    குரு என்ற சொல்லுக்கு தமிழில் சிவப்பு என்ற பொருளும் உண்டு.

    குரு = சிவப்பு

    குருதி = இரத்தம் (சிவப்பு நிறமானது)

    குருதியம் = இரத்தம் அல்லது குருதியைக் கையாளும் உறுப்பு (organ handling blood)

    குருதியம் > குருதயம் >ஹிருதயம்.

    (நன்றி: இராமகி )

    சமக்கிருதம் தமிழிலிருந்து இரவல் வாங்கிய சொல்லாகிய குருதியம், தமிழுக்கு மீண்டும் ஹிருதயமாக அறிமுகப்படுத்தப் பட்டு, மேலும் திரிபடைந்து ‘இதயம்’ ஆகியது. பல தமிழ் வேர்ச்சொற்களை சமக்கிருதம் இரவல் வாங்கியுள்ளது, அதில் இதுவுமொன்று.

    • Dear Brother,
      We can not just like that conclude origin of words like this.
      GOLD – HEMAM,JAATARUPAM,HIRANYAM,etc…
      SILVER-RAJATAM

      I need to check NIRUKTAM(nikandu in tamil) to check the words.
      There are millions of words both in sanskrit and tamil.
      We can refer to nikandu ,Amaram or niruktam for etymology studies.

      But there is no word like HRUDAYAM in tamil.
      All the indian languages get it from sanskrit.
      Regards,
      Ganesh

    • Dear Brother vyasan,
      Romba comedy ya irukkunga Anna/Thambi.
      Please refer to any nikandu and check your answers.
      Likewise sanskrit too has many Thesaurus books (Amara kosam)
      Regards,
      Ganesh

  6. இதயம் தமிழ்ச்சொல்லே என்பதற்கு இன்னுமொரு ஆதாரம்:

    “அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார்
    மடக்கொடி யாரொடு மந்தணங் கொண்டார்
    இடப்பக்கமே இறை நொந்தது என்றார்
    கிடக்கப் படுத்தார் கிடந்தொழிந் தாரே.”

    (திருமந்திரம்:::1 :யாக்கைநிலையாமை:பாடல்148)

    “இப்பதான் வந்தாரு, நல்லா சாப்பிட்டுவிட்டு எல்லாத்துக்கிட்டேயும் நல்லா பேசிக்கிட்டிருந்தாரு, இலேசா நெஞ்சை வலிக்குதுன்னாரு – படுத்தாருஅப்படியே போய்ட்டாரு” என்று நாம் அடிக்கடி கேள்விப்படுகிற நிகழ்வைச் சொல்கிற பாடல் இது.

    இதில் “இடப்பக்கமே இறை நொந்தது” என்ற சொற்கள் கவனிக்கப் படவேண்டியவை. இறைவன் எல்லா உயிர்களிலும் இருக்கிறான். இறைவனே உயிர்களின் இயக்கம். அந்த இயக்கம் நடைபெறுவது இறையத்தில். அந்த இறையம் நின்றால்அதாவது இறைவன் வெளியேறினால் அது வெறும் உடலாகி விடுகிறது.

    இறைவன் எங்கு குடியிருக்கிறான் என்றால் எல்லோரும் “நெஞ்சில் குடியிருக்கிறான் என்று தான் சொல்வார்கள்.

    இன்னொரு பொருளும் இதற்கு ஏதுவாகவே இருக்கிறது. இறைத்தல் என்றால் நீரை அள்ளிஅல்லது முகந்து இறைப்பது/வீசுவது.

    இறை என்ற கருவி செய்யும் வேலையும் அதே. குருதியை இழுத்து/அள்ளி பல இடங்களுக்கும் தள்ளி/வீசி விடுவதே அதன் தொழில்.

    ஆகவே, இறை யோடு, அம் விகுதி சேர்ந்து இறையம் ஆகிறது.

    இறை + அம் = இறையம்

    இறை என்றால் முக்கியமான, உயர்ந்த என்ற பொருள்களும் உண்டு. உடலுறுப்புகளில் இறை என்பது ஒரு அடிப்படை முக்கியத்துவம் வாய்ந்த உயர்ந்த உறுப்பு.

    ஆகவே திருமூலர் சொல்லே மிகச் சரியாக இருக்கிறது . இதயம் என்பது நமது சொல்.
    இதன் மருவலை நீக்கி இறையம் என்று புழங்க வேண்டும். வடமொழிக்கு தமிழ் தந்த கொடைகளில் இதுவும் ஒன்று.

    (நன்றி: நாக. இளங்கோவன்)

    • சமக்கிருதம் தமிழிலிருந்து எவ்வளவோ சொற்களை இரவல் வாங்கியுள்ளது, ஆனால் அதை மறுப்பவர்கள் எவருமே எப்படி அந்தச் சொற்கள் சமக்கிருதத்தில் உருவாகின என்பதைக் காட்டும் சமக்கிருத வேர்ச்சொற்களைக் காட்டுவதேயில்லை. அதே போல் தான் ஹிருதயம் என்ற சொல்லுக்கும், சமக்கிருதத்தில் அதன் வேர்ச்சொல்லைத் தர மறுக்கிறார் திரு. கணேஷ் அவர்கள். 🙂

      • Chandogya Upanisha Chapter 4 Section 3.
        ——————————————
        Sa va esa atma hrdi, tasyaitad-eva niruktam hrdyayam
        iti, tasmad-hrdayam, ahar ahar va evam-vit
        svargam lokam eti.

        There is a peculiar etymological derivation of the
        meaning of the word hridaya, which usually means heart.
        The Upanishads are very fond of these kinds of etymological
        extractions of meanings for certain words giving the
        significance of the words. As I said, hridaya means heart. It is
        a Sanskrit word and the Upanishad now explains why the
        231
        heart is called hridaya. “Here inside is He.”

        In sanskrit Atma is a AAN Paal. Pen Paal illai.
        If it is feminine then it will be HRDU+IYAM.

        If you want to see the words for organ heart ,there are dozens of words and pls refer to nirukta /Amaram books.

        Regards,

        Ganesh

  7. ருதயம் என்ற சம்ஸ்கிருத சொல் தான் உண்மையான வேர்சோல்.

    மக்கள் இந்த சொல்லை உச்சரிக்கும் பொழுது idhayam என்று கூறுவர்,ஆனால் தமிழில் உச்சரித்தால் அது ithayam என்று உச்சரிக்க படும்.

  8. //ருதயம் என்ற சம்ஸ்கிருத சொல் தான் உண்மையான வேர்சோல்.//

    ருதயம் என்ற சொல்லின் மூலம் என்ன? அது எப்படி உருவானது. ருதயம் என்பதன் கருத்து என்ன? அதை முதலில் விளக்கவும். நன்றி.

  9. சம்ஸ்கிருத்த்தில் hruday என்றால் அது இதயத்தை குறிக்கிறது.

    நான் கூறுவது, dh என்ற phonetic தமிழில் இல்லை,th தான் உள்ளது.

    ஆனால் தமிழ் நாட்டில் வசிக்கும் மக்கள் dh என்று தான் இதயத்தை உச்சரிக்கின்றனர்.

    அதனால் அது தூய தமிழ் சொல்லாக இருக்க வாய்ப்பு இல்லை.

    இல்லை நீங்கள் வாதாடுவது போல், இதயம் என்ற தமிழ் சொல்லை எடுத்து ஒரு ரு சேர்த்து ருதயம் ஆக்கி விட்டனர்.

    ஆனால் இந்த யூகம் நம்புவதார்க்கு கடினமாக உள்ளது.

    • //சம்ஸ்கிருத்த்தில் hruday என்றால் அது இதயத்தை குறிக்கிறது.நான் கூறுவது, dh என்ற phonetic தமிழில் இல்லை,th தான் உள்ளது. ஆனால் தமிழ் நாட்டில் வசிக்கும் மக்கள் dh என்று தான் இதயத்தை உச்சரிக்கின்றனர்.//

      உங்களால் இதயம் என்ற சொல்லுக்கு சமக்கிருதத்தில் வேர்ச்சொல்லைக் காட்ட முடியவில்லை. அதாவது இதயம் என்ற சொல்லின் வேர்கள் சமக்கிருதத்தில் தான் உண்டு, அது யாரிடமுமிருந்து இரவல் வாங்கப்பட்டதல்ல என உங்களால நிரூபிக்க முடியவில்லை. அதனால் சும்மா சப்பைக்கட்டுக் கட்டுகிறீர்கள்.

      தமிழ்நாட்டில் வசிக்கும் மக்கள் அதிலும் குறிப்பாக சென்னைவாசிகளின் பேச்சுவழக்கின் அடிப்படையில் தமிழராய்ச்சி செய்தால், தமிழ் ஆங்கிலத்திலிருந்து உருவாகியது, தெலுங்கிலிருந்து உருவாகியது என்று கூட வாதாடலாம். அது உருப்படாத வேலை.

      தமிழ்நாட்டில் இதயத்தை இDHAயம் என தமிழர்கள் யாரும் உச்ச்சரித்ததை நான் கேள்விப்பட்டதில்லை, ஆனால் க வை ஹ வாக, ப வை ba வாக, வீ யை vee போல உச்சரிப்பதும், தமிழெழுத்துக்களை soft ஆக உச்சரித்தால், அது style ஆகப் பேசுவதாக நினைத்துக் கொண்டோ என்னவோ அப்படி உச்சரிக்கும் வழக்கத்தை தமிழ்நாட்டுத் தமிழர்களிடம் நான் அவதானித்திருக்கிறேன். அது தமிழரல்லாத சினிமா நடிக, நடிகைகளின் உச்சரிப்பையும், மேட்டுக்குடிப் பார்ப்பனர்களின் உச்சரிப்பையும், தமிழரல்லாத வந்தேறிகள் பேசுவதையும் பார்த்துக் காப்பியடித்ததால் வந்த விளைவு என்று தான் நான் நம்புகிறேன்.

      உதாரணமாக: வீட்டில் (Weedu) என்பதை வீட்ல (soft vee)
      பயம் (Payam) என்பதை bayam என்றும் (baயம்மா இருக்கு) 🙂

      //அதனால் அது தூய தமிழ் சொல்லாக இருக்க வாய்ப்பு இல்லை.///

      திருமூலரை ஆதாரம் காட்டியபின்பும் உங்களால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றால் உங்களின் சமஸ்கிருதபாசம் உங்களின் கண்களை மறைக்கிறது. அதற்கு நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது. 🙂

      தமிழ்ச் சொற்களை வெளிப்படியாக பார்த்து விட்டு, இது சமக்கிருததத்திலிருந்து இரவல் வாங்கியது என்று பலரும் நம்பியதால் தான் இந்தப் பிரச்சனை எல்லாம். இதைத் தான் “மொழிப்பொருள் காரணம் விழிப்பத் தோன்றா” என்கிறார் தொல்காப்பியர். தமிழ்ச் சொல்லை மேலோட்டமாகப் பார்ப்பதால் அதன் மொழிப்பொருள் தெரியாது அதை பிரித்து, ஆராய்ந்து பார்த்தால், அந்த தமிழ்ச் சொல்லின் வேரையும், மொழிப்பொருளையும் காணலாம். ஏனென்றால் தமிழ் இயற்கையான பழமையான, மொழி. பழந்தமிழர்களின் அன்றாட வாழ்க்கையிலிருந்து, அவர்களின் பழக்க வழக்கங்களிலிருந்து, அதன வேர்களிலிருந்து உருவாகியவை தமிழ்ச் சொற்கள்.

      //ஆனால் இந்த யூகம் நம்புவதற்கு கடினமாக உள்ளது.///

      சமக்கிருதவாதிகள் சமக்கிருதத்தைப் பற்றிப் பீற்றிக் கொள்ளும் பல விடயங்கள் எனக்கும் கூட நம்புவதற்கு கடினமாக உள்ளது. 🙂

  10. அய்யா வியாசன்

    நான் இதயத்தில் இருந்து ருதயம் வந்தது என்றோ அல்லது வைஸ் வெரசாவோ என்று கூறவில்லை.

    இரண்டு சொற்களில் இருந்து என் மனதிற்க்கு புலப்பட்டத்தை மட்டும் தான் நான் சொன்னேன்.

    எனக்கு சம்ஸ்கிருத்த்தின் மீது பெரிய பாசம் எல்லாம் இல்லை,அது என் தாய் மொழி மலையாளத்திர்க்கு மட்டும் தான்.

    எனக்கு எல்லா மொழிகளின் மீதும் குறிப்பாக நல்ல தமிழ் மீதும்,சம்ஸ்கிருதம் மீதும் அளவு கடந்த மரியாதை உண்டு.

    அதனால் உங்கள் பிராமணர் vs பிள்ளைமார் அல்லது வேளாளர் ஈகோ யுத்த்தில் என்னை பலிக்கடா ஆக்க வேண்டாம்.

    திருமூலர் திருமந்திரத்ிர்க்கு முன்னாலே ருதயம் இதயம் ஆகி இருக்கலாம்.

    தமிழும் சம்ஸ்கிருதமும் இன்று நடக்கும் ஈகோ யூத்தங்களுக்கு பல ஆயிரம் ஆண்டுகள் முன்னாலே கலந்தவை.

    அதுவும் பரிணாமாமாக கலந்தவை,அதை பிரித்து பார்ப்பது ஒரு வெட்டி வேலை,அது அரசியல் ஆதயங்களை பெற உதவுமே ஒழிய வேறு எந்த பயனும் இல்லை.

    நீங்கள் கூறிய திரைப்பட கலாசாரம் மற்றும் வட தமிழ்நாட்டில் வாழும் பார்ப்பனர் மொழி போன்றவை th ஐ dh ஆக்கி இருக்கலாம்,ஆனால் முன்பு நீங்கள் கூறியது போல தெலுங்கு மற்றும் கன்னட சாதிகள் பார்ப்பனர் உட்பட தமிழ் நாட்டில் குறிப்பாக வட மற்றும் மேற்கு தமிழ் நாட்டில் பரவலாக உண்டு,இவர்களுக்கு dh இயல்பாக வரும் சொல்.

    இது விஜயனகார ஆட்சி மட்டும் அல்லாமல் முன்பு இருந்த பல்லவ கலப்பிற ஆட்சி மூர்கொண்டே இருக்கும் ஒரு விஷயம்.

    முன்பு இருந்த decentralized ஆட்சி அமைப்பு முறைகளில் சமஸ்தானங்களோ அரசோ nation ஸ்டேட் முறையில் அல்லாமல் fiefdom போன்று இருந்தவை.

    இந்தியா முழுக்க இதே கதை தான்.

    மேலும் நீங்கள் கூறியது போல் தேன் தமிழ்நாட்டில் குறிப்பாக குமரி நெல்லை ராம்னாத் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் th தான் ch தான்.

  11. //நான் இதயத்தில் இருந்து ருதயம் வந்தது என்றோ அல்லது வைஸ் வெரசாவோ என்று கூறவில்லை//

    இந்த ஒப்புதல் ஒன்றே போதும், உங்களின் மறுமொழியின் மீதியெல்லாம் வெறும் பேச்சு. 🙂

  12. நீங்கள் தமிழராக இருந்தாலும்,யாழ்ப்பாணத்தின் பூர்வ குடியாக இருந்தாலும்,பாக் ஜலாசந்தி ஒருவரால் நீந்தி கடக்கும் அளவு சிறியதாக இருந்தாலும், இந்தியாவில் நடந்த பல விஷயங்கள் உங்களுக்கு தொடற்பில்லாதவை தான்.

    அதனால் உங்கள் ஈகொ யுத்தததிர்க்கு சரியான ஆள் நான் அல்ல.

    நான் உண்மையாய் எந்த பந்த பாசமும் அல்லாமல் உணர முயற்சிக்கும் நபர்.

    இந்த அரசியல் சதுரங்கத்தில் எனக்கு வேலை இல்லை.

  13. இந்தியாவில் நடந்த மட்டுமல்ல, நடக்கும் பல விடயங்களில் கூட எங்களுக்குத் தொடர்பில்லை என்பது மட்டுமல்ல, எங்களுக்கு அதில் அக்கறையுமில்லை என்பது தான் சரியானது. ஆனால் தமிழ், தமிழர், தமிழ்நாடு சம்பந்தமான விடயங்களில் எங்களுக்கு மலையாளிகளை விடக் கூடிய தொடர்பு மட்டுமல்ல, தமிழர் என்ற வகையில் அதைப்பற்றி பேச, விமர்சிக்க, அத்துடன் ஒரு மலையாளி தமிழை இழிவுபடுத்தும்போது, அல்லது தமிழைச் செத்துப்போன மொழியாகிய சமக்கிருத்துடனோ அல்லது கொச்சைத்தமிழாகிய மலையாளத்துடனோ ஒப்பிடும் போது அதைத் தட்டிக்கேட்க உரிமையும் உண்டு. 🙂

  14. இப்போ புரிஞ்சுகிட்டேன்,நீங்க இங்க கருத்து பதிவு செய்ய சரியான ஆள் தான் என்பது.

  15. ஹிருதயம் என்பதை தமிழ் சமக்கிருதத்திலிருந்து இரவல் வாங்கியது என்பதை ஆதாரத்துடன் உறுதிப்படுத்துமாறு கேட்டால் என்னவோ உளறுகிறார் கணேசையர். இந்தச் சொல், உண்மையிலேயே செயற்கையான மொழியாகிய சமக்கிருத்தில் ‘இயற்கையாக’ உருவான சொல்லாக இருந்தால், அந்தச் சொல்லைப் பிரித்து, அதன் வேர்ச்சொல்லை அல்லது அதன் சுட்டொலியை எடுத்துக் காட்டலாம். அதை விட்டு, வேறு என்னவோ எல்லாம் சம்பந்தா சம்பந்தமில்லாமல் கூறிக் கொண்டிருக்கிறார் கணேசையர்.

    கனேசையருக்கு மட்டுமல்ல, எல்லாப் பார்ப்பனர்களுக்கும் உள்ள பிரச்சனை என்னவென்றால், செத்துப்போன மொழியாகிய சமக்கிருதத்தை தமிழை விட உயர்ந்த மொழியென்று தமிழர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். சமக்கிருதம் அவர்களின் மொழி என அவர்கள் நம்புவதால், அந்த மொழி தமிழை விட உயர்ந்தது என நிரூபிக்க அரும்பாடு படுகிறார்கள். என்னைப் போன்ற தமிழர்கள் சமக்கிருதத்தை எதிர்ப்பதற்குக் காரணமே இப்படியான பார்ப்பனர்கள் தான்.

    சமக்கிருதம் உலகில் பல பல்கலைக்கழகங்களில் கற்பிக்கப்படுவதால் அது செத்த மொழியல்ல என்ற வாதத்தைப் பார்த்தால் சிரிப்புத் தான் வருகிறது. எகிப்தின் மம்மிகளைப் பற்றியும் தான் பல உலகப் பல்கலைக்கழகங்களில் கற்கிறார்கள், அதனால் அந்த மம்மிகள் சாகவில்லை, அவற்றுக்கு உயிர் உண்டென்று வாதாடினால் அது எப்படியோ அப்படியானது தான் கணேசையரின் வாதமும். ஏனென்றால் சமக்கிருதம் ஒருபோதுமே பேச்சு மொழியாக இருந்ததில்லை, இந்தியாவில் சமக்கிருதத்தை இன்றும் பேசுவதாகக் கூறும் ஒரு சில நூறுபேர் கூட தூய சமக்கிருதத்தை மட்டும் பேசவில்லை, பல மொழிகளுடன் சமக்கிருதச் சொற்களை அதிகளவில் கலந்து பேசுகிறார்கள். ஒரு காலத்தில் ஐரோப்பியர்களால் அறிவியல் சம்பந்தமான விடயங்கள் எல்லாவற்றுக்கும் பயன்படுத்தப்பட்ட இலத்தீன் மொழி, எப்படி இன்று ஒரு செத்த மொழியோ அதே போல் சமக்கிருதமும் செத்த மொழி தான், எத்தனையாயிரம் தமிழ்ப்பார்ப்பனர்கள் (மலையாளிகள் உட்பட) அதைச் சுற்றி நின்று மாரடித்து ஒப்பாரி வைத்தாலும் செத்த சமக்கிருதம் உயிர்த்தெழப் போவதில்லை. செத்த மொழியாகிய சமக்கிருதம் செத்தது தான். 🙂

    ///In sanskrit Atma is a AAN Paal. Pen Paal illai.
    If it is feminine then it will be HRDU+IYAM.//

    சமக்கிருதத்தில் Hrdu + iyam என்ற இரண்டு சொற்களினதும் கருத்து என்ன?

    தமிழில் இயம் என்ற வேர்ச்சொல்லின் அடிப்படையில் தமிழில் பல சொற்கள் உள்ளன.

    இயம் > இயங்குவது > எடுத்துக்காட்டாக ஒன்று+ இயம் = ஒன்றியம் – ஒன்றுபட்டு இயங்கும் அமைப்பி அல்லது அங்கம்

    இயம் > இயம்புவது > காப்பு +இயம் = காப்பியம் – காத்து இயம்புவது என்று பொருள்

    இலக்கு + இயம் = இலக்கியம்

    இலக்கு— நோக்கம், கொள்கை, குறிக்கோள், இலட்சியம்

    இயம் > இயம்புவது, கூறுவது, வெளிப்படுத்துவது

    • Dear brother,
      For heart there are dozens of words like DAHARAM,PUNDARIKAM,HRUDAYAM,ANAHATAM,etc…
      I need to buy a sanskrit nikandu or Amarakosam.
      In order to write poems /kavya you need to be thorough with NIKANDU for both tamil and sanskrit.
      Do you think that Mahabharatha- one lakh verses(the largest epic in the world),18 puranas-(4 lakh verses totally) were written without nikandu knowledge ?
      My teacher says that in his days to get a admission in a school one should know nikandu byheart in tamil.It applies to vadamozhi too.

      Regards,
      Ganesh

  16. Hold on Brothers,

    I know that there are bunches of NIKANDU books in both thenmozhi and vadamozhi.
    Without which KAVYAM cant be written.
    What I really meant was -“Neurologists found that the feelings about SELF or EGO are near the 3 lobe of brain -TEMPORAL LOBE which is wrong.
    But still they didnt know which is the area of pleassure in our body.
    The organ which is the master ,the pleassure zone is HRUDAYAM= HRUD+AYAM.(This organ where the so called SOUL or Plessure giver resides)
    Coined in Chandogya Upanishad of SAMA VEDA. I want to say do not abuse/blame any languages.
    Meanwhile some PAAVAANAR like silly explantaions(KURUDIYAM) was given.

    I really enjoyed how tough Mr.PAAVANAR might have struggled to coin such words and giving unauthorized explanations.

    Regards,

    Ganesh

  17. To Mr.Ganesh

    \\ 1)Vedam katral ,2) Vedam karpithal
    3)Velvi vettal ,4)Velvi purivithal
    5) Daanam vaanguthal and 6) Daanam koduthalu maam.\\

    இந்த ஆறும் தொழில்கள் அல்ல. வேதம் கற்றலும் வேதம் கற்பித்தலும் வெட்டி வேலை. தொழிலாளிகள் சுட்டெரிக்கும் வெயிலில் உழைக்கிற பொழுது வேதம் கற்கிறேன் என்ற பெயரில் ஆபாச கருத்துக்களில் மூழ்கித்திளைப்பதற்கு பெயர் தொழில் அல்ல.

    வேள்வி மீட்டுதல் பெருங்கொள்ளையாகும். மூடநம்பிக்கைகளை மக்களிடையே விதைத்து மக்களை மாக்களாக நடத்துகின்றன வேள்விகள். அசுவமேத யாகம் சொல்வதற்கே நா கூசும். “அசுவமேதயாகத்தின் ஆபாசங்கள் கொடூரங்கள்”
    http://thathachariyar.blogspot.com/2010/10/3.html#more

    தானம் வாங்குதலும் தானம் கொடுத்தலும் சுரண்டலின் அவிர்பாகங்கள் என்றால் அது மிகையல்ல. பசு தானம், பொன் தானம், கிராம தானம் போன்றவையெல்லாம் பள்ளர்களும் பறையர்களும் பெறவில்லை. எதையுமே உழைத்துப் பெறாத கூட்டம் செய்துவைத்த செட்டப் தான் தானம். அவர்களுக்குத் தான் இது விழுமியமாக அறமாகத் தெரியும்;

    தானம் கொடுப்பது என்பது இரண்டாவது சுரண்டல். உழைப்பவனுக்கு ஊதியத்தைக் கொடு! யாருக்கு வேண்டும் உன் எச்சில் தானம்?

    இந்த ஆறுதொழில் வரையறை வெறும் பார்ப்பனத் திமிர் மட்டுமே. எனவே இந்துத்துவ வெறியர்களின் இத்தைகய நைச்சிய வரையறைகள் குறளுக்கான விளக்கங்களாக கொள்ளப்படமாட்டா.

    • அன்புள்ள உடன்பிறப்பே ,
      ஜெயமோகன் – (இவரை எனக்கும் பிடிக்காது). குஜராத் முதல் ராஜஸ்தானம் மற்றும் பஞ்ஜாப் வரை தொல்பொருள் ஸம்பந்தமான இடங்களுக்கு சென்று வந்துள்ளார். நீங்களும் செல்லலாம். 5000 க்கும் மேற்பட்ட இடங்கள். 10000 வருடங்கள் பழமையானவை.(ரேடியோ கார்பன் டேடிங் ப்ரூப்) இங்கெல்லாம் வீடுகள் பெரும்பாலனவை – சுட்ட செங்கற்களால் கட்டப்பட்டவை. மற்றவை கருங்கற்களால் கட்டப்பட்டவை. இந்த ஆரியர் பண்பாடு பற்றிய பல கட்டுக் கதைகள் பொய்யென நிரூபிக்கப்பட்டுள்ளன. -கிராம நாகரிகம் (நகரஙகள் உண்டு), இரும்பின் உபயோகம் தெரியாது(பின் எவ்வாறு கருங்கற்களால் கட்டப்பட்டன?), இராக்,ஜெர்மனியிலிருந்து வந்தவர்கள்(இன்றைய ஜெர்மானியர் மொழி,உடல் அங்கங்கள்,பண்பாடு,நிறம்,அறிவு வளம் எனப் பல வெற்றுமை கள் உண்டு.(டீயேஜோஸப்.காம்), ரிக் வேதமே முதல் இலக்கியம்(செவ்வியல் தன்மை இல்லை,ஆடு-மாடு மேய்த்தவர்கள்(உலகினில் இவர்களைத் தவிர வேறு யாருமே மாட்டுப்பாலே குடிப்பதில்லை போலும்) .

      ஐயா எது படிக்க/அறிய/செய்ய வேண்டினும் முதலில் தேவை ச்ரத்தை- நம்பிக்கை.
      நான் முதலில் அமெரிக்கா சென்ற போது ,என் 2 பெட்டிகளும் எவ்வாறு 3 விமானங்கள் மாறி மாறி வரும் என்று குழம்பினேன். ஆனால் சரியாக ஆஸ்டின்-டெக்ஸாஸ் வந்து அடைந்தன.

      வள்ளுவர்,டார்வின்,கார்ல் மார்க்ஸ்,எடிமாலஜி,நியூராலஜி,தத்துவம்,கால்டுவெல் என எதற்கும் நம்பிக்கை தெவை ஐயா.
      நீஙகள் உங்கள் வழியில் நானோ எதிர் வழியில். ஆனால் பொய் உரை ,ஏமாற்றுதல், பிடிவாதம், ஆணவம், தேவை இல்லை.

      நான் சாகும்வரை ஒரு மாணவன். ஒரு சார்வாகனோ, இந்துவோ, க்ருஸ்துவரோ,முஸ்லீமோ ,பௌத்தரோ, சிறுவனோ, இளைஞனோ, முதியவனோ யாரிடமும் எனக்கு படிக்க/அறிய/கற்க விஷயங்கள் உண்டு என திண்ணமாக நம்புகிறேன். ஒரு மாணவனாக எனக்கு எல்லாம் தெரியும் என்னும் அஹம்காரம் இல்லாத வரையில் நான் கற்றுக்கொன்டெ இருப்பேன்.
      எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு.

      அன்புடன் கணேஷ்

      • கணேஷ்,

        ஜெயமோகனின் இந்த கட்டுரை எதில் எழுதி உள்ளார்? அதற்கான தலைப்பு தரமுடியுமா? சிந்து சமவெளி எழுத்துகள் இதுவரை படிக்க படவில்லை என்பது தெரியுமா? வேதநாகரிகமும் சிந்து சமவெளி நாகரிகமும் ஒன்று என்று எந்த முட்டாள் உங்களிடம் சொன்னது?

  18. கணேஷ் சொல்கிற அந்தணன்-பறையன் விளக்கம் சகிக்கவொண்ணா அருவெறுக்கத்தக்க மோசடியாகும். சாதித்தீண்டாமை என்ற கொடூரம் போதாது என்று பறையர்கள் என்றால் கெட்டவர்கள் என்ற பொருள் தருகிறார். இவர்கள் இதற்காகத்தான் சமஸ்கிருதம் கற்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது.

    முதலில் அவர் தன்னை வேளாளர் குலத்தில் பிறந்தவர் என்கிறார். இந்துத்துவத்தின் கொடூரமே இதுதான். பிறப்பின் அடிப்படையில் தன்னை இழிவாகக் கருதிவிட்டு செயல்களின் அடிப்படையில் தான் பிராமணன் ஆகிறேன் என்று தெள்ளவாரித்தனமாக பேசுகிறார்.

    நெஞ்சில் நேர்மை இருக்கிறவன் எதற்காக முதலில் தன்னை பிறப்பின் அடிப்படையில் வேளாளர் என்றும் அவரை வளர்த்தெடுத்த குடும்பம் பிராமணக்குடும்பம் என்றும் சொல்ல வேண்டும்?

    நற்செயல்களின் அடிப்படையிலா கணேசின் குடும்பம் பறையன் என்றும் அவரை எடுத்துவளர்த்தவர்கள் பிராமணர்கள் என்றும் அழைக்கப்பட்டார்கள்? இந்த விளக்கம் முதலில் எங்கிருந்து யாரால் வந்தது? இதற்கு பதில் சொல்லாதவர் நற்செயல்களே ஒருவரை பிராமணர் என்றும் பறையன் என்றும் வரையறுக்கிறது என்று சொல்வது எத்துணை பெரிய அயோக்கித்தனம்?

    ஸ்மிருதிகள் வேசிமகன்கள் என்றும் சண்டாளர்கள் என்றும் நம்மை மட்டுமல்ல நமது முன்னோர்களையும் சேர்த்துசொல்கிற இப்படிப்பட்ட இந்துத்துவம் கணேசிற்கு மணக்கிறது.

    இந்த இலட்சணத்தில் தான் மனுஸ்மிருதி கிரேட் என்கிறார்.

  19. கணேஷ் அவர்களின் முத்தாய்ப்பான முடிவுரை

    \\What I conclude to say is MANU SMRUTI is great.\\

    ஆர் எஸ் எஸ் காலிகளுக்கு அடுத்து மனு கிரேட் என்று சொன்னவர் தாங்கள் தான். இப்படிச்சொல்வதன் மூலமாக அரவிந்தன் நீலகண்டன் (அநீ) ஜடாயு, ஜெயமோகன் போன்றவர்களின் இந்துத்துவப் பிழைப்பை கேள்விக்குறியாக்குகிறீர்கள். ஏனெனில் இவர்களெல்லாம் மனு இல்லாமல் இந்துத்துவத்தை விற்க முடியுமா என்று கடைவிரித்தவர்கள். இதில் அநீ, மநு புஸ்யமித்ர் காலத்திற்கு பின்புவருவதால் இந்துத்துவத்திற்கு இதை ஆதாரமாக கொள்ளமுடியாது என்று அழிச்சாட்டியம் செய்தவர். ஆனால் நீங்கள் இப்படி தீடிரென்று மநுவை தாங்கிப்பிடித்தால் இவர்களுக்கு சங்கடமா இருக்காது?!!!!

    இப்பொழுது மநுவிற்குள் சற்று நுழைவோம்.

    “மாஸி மாஸி ரஜஸ்தஸ்யஹா
    பிதா பிபதி கோனிதம்…” – மனுஸ்மிருதி

    ராமானுஜ தத்தாச்சாரியாரின் விளக்கவுரை: “இந்த ஸ்மிருதி விதியை எழுதுவதற்கு என் பேனா கூசுகிறது. இப்படிப்பட்ட ஒரு கருத்தை சுமந்து கொண்டிருப்பதற்காக சமஸ்கிருத பாஷையே கூச்சப்பட வேண்டும். அந்த விதியின் விளக்கத்தை உங்களுக்கு தமிழில் நான் சொல்லும்போது… தமிழின் தரம் கெட்டுவிடக் கூடாதே என நான் பயப்படுகிறேன்.

    அது என்னவென்றால்…அடே கையாலாகாத அப்பா… உன் பெண்ணை எட்டு வயதிலேயே இன்னொருவனுக்கு நீ பிடித்துக் கொடுக்கவேண்டும். தவறிவிட்டாய். அவள் இப்போது ருதுவாகி விட்டாள்.

    ருதுவான பின் மூன்று வருஷத்துக்குள் நீ அவளுக்கு மணமுடிக்கவில்லையென்றால்… அவளாகவே சுயம்வரம் நடத்தி தன் கணவனை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். ஆனாலும், ருதுவாகும் வரை நீ அவளை உன் வீட்டிலேயே வைத்திருப்பது எப்படிச் சரியாகும்?

    அதனால் உனக்கு இதோ தண்டனை. ருதுவாகி கல்யாணமாகாமல் அவள் இருக்கும் காலம் வரை… உன் பெண்ணுடைய பஹிஷ்டை காலத்தில் அதாவது மாதவிலக்கு காலத்தில் வெளியேற்றப்படுமே கழிவு அதை அப்பாவாகிய நீ வீணாக்காமல் அருந்த வேண்டும். இப்படியொரு தண்டனையை பெறுகிறோமே என நீ வருந்த வேண்டும். அதற்காகத்தான் இந்த தண்டனை.”

    —————————
    ““சிதா வாரோஹணம் பிரம்மச்சர்யம்…”
    “கணவனை இழந்த பெண் என்றால்… அவளை அவனது சிதையிலேயே வைத்து தீர்த்துக்கட்டு என உத்தரவிடுகிறது மநு ஸ்மிருதி”
    ———————-
    “ஸ்த்ரீனாந்த சூத்ர ஜாதினாம்…’’
    `நஸ்த்ரீ சூத்ர வேத மத்யதாம்…’
    “மநு-ப்படி பெண்கள் எல்லாருமே சூத்ர ஜாதிதான். பிராமணப் பெண்கள், வைஸியப் பெண்கள், க்ஷத்ரியப் பெண்கள், சூத்திரப் பெண்கள் என்றெல்லாம் பேதம் கிடையாது. அதனால்… சூத்ரன் வெளியே உழைப்பதைப்போல சூத்ரச்சியான பெண்கள் வீட்டுக்குள்ளேயே உழைக்க வேண்டும்”
    —-

    தத்தாச்சாரியாரின் விளக்கவுரைகள் சரியானவையா? இல்லை மநு சொல்கிற கருத்துக்கள் சரியானவையா கணேஷ்? எதையாவது ஒன்றைத் தொட்டு விளக்குங்கள். மேலும் மநு எப்படி கிரேட் என்று சொல்லுங்கள்? சமஸ்கிருதப் பற்று என்று சொல்வதெல்லாம் எவ்வளவு பெரிய துரோகம்?

    —-

  20. To Mr. Ganesh

    \\ Again I like to know out of 1330 verses or Thirukural,how many kurals are used to praise the ACHARYAN(GURU)? I will be thankful if your greatness explain me.\\

    குரு-சிஷ்யன் என்கிற குருகுல கல்விதான் உலகம் இதுவரை கண்ட கல்விமுறைகளிலேயே இழிவானதும் அடக்குமுறையை பயன்படுத்துவதும் குறிப்பிட்ட சாதிகளுக்கு மட்டும் தான் கல்வி என்று சொன்னதும் ஆகும். இந்துத்துவத்தால் இதைத் தாண்டி சிந்திக்க இயலாது. உங்களுடைய வாதத்தில் இருந்தே இதற்கு ஒரு சான்று வைக்கமுடியும்.

    “A pupil learns only one fourth from his teacher.learns another quarter from his intelligence.receives another quarter from classmates and gets the remained quarter by course of time.” என்று உங்கள் விளக்கம் போகிறது.

    அப்படியானால் நான்கில் ஒரு பங்கை மட்டுமே ஆசிரியினிடத்தில் பெறுகிற ஏகலைவன் போன்ற மாணவர்களிடம் எதற்காக கட்டைவிரலையே காணிக்கையாக கேட்டது இந்து சமூகம்? அது தற்பொழுதைய தனியார்மய கொள்ளையைப் போல வாழ்வாதரத்தையே கல்விக்கு காவுகொடுப்பதைப்போல வில்லுக்கு ஆதாரமான கட்டைவிரலையே விற்றுதானே துரோணாச்சாரியாருக்கு கப்பம் கட்டவேண்டியிருந்த்து? இது என்ன வகையான நீதி? எந்த நியாய உணர்ச்சியின் அடிப்படையில் ஆசிரியரைப் பற்றி சமஸ்கிருதம் பேசுகிறது?

    மேலும் மாணவனோ ஆசிரியரோ ஏதாவது பெண் நிபுணர்களைக் காட்ட முடியுமா? பெண் வேதங்களைக் கேட்க கூடாது என்று சொல்கிறது இந்துத்துவம். கலைமகளே கல்வி கற்றதாக எந்தக் குறிப்புகளும் இல்லை. இதில் மாணவனே சாத்தியம் இல்லை என்கிற பொழுது ஆசிரியர் எப்படி சாத்தியம்? ஆத்மா என்பதே ஆண்பால் என்கிற பொழுது அது பெண்களிடம் எப்படி இருக்கும்? சரிதானே! அவ்வளவுதான் உங்களது இந்துத்துவ சமஸ்கிருத இலட்சணம்.

    எனவே கல்வி பற்றி பேசுவதற்கு மாணவனை ஆசிரியனைப் பற்றி பேசுவதற்கு இந்துத்துவத்திற்கும் சமஸ்கிருதத்திற்கும் எந்த அருகதையும் கிடையாது.

    ————————

    இப்பொழுது குறளுக்கு வருவோம்.

    குருவையும் சிஷ்யனையும் குறளில் தேடுவது அறிவுடமை அல்ல. ஏனெனில் குறள் சமண இலக்கியம் சார்ந்தது. குறளின் தத்துவம் சாங்கியத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட ஒன்று. இது வேத மரபை மறுக்கிறது. குருகுலக்கல்வி என்ற அசிங்கமும் கிடையாது.
    இதுதவிர பள்ளி, மாணவர், மாணக்கியர் என்பது சமணர்கள் வழங்கிய கொடைகளாகும்.

    கல்வி பொதுவானது என்பதால் தான்

    “இணரூழ்த்து நாறா மலரனையர் கற்ற
    துணர விரித்துரையா தார்”

    என்று பரந்த மனப்பான்மையோடு பேசுகிறது.

    மேலும் Teaching is not a learned experience; It is a learning experience என்பதால் தான்

    “தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்கு
    கற்றனைத் தூறும் அறிவு” என்கிறது குறள்.

    இதுபோன்ற எண்ணற்ற விழுமியங்களை கல்வி சார்ந்து சுட்டிக்காட்ட இயலும். எனவே குருவையும் குரு வணக்கத்தையும் நீங்கள் கும்பகோணத்தில் தான் தேட வேண்டும். குறளில் அல்ல.

    • அன்புள்ள உடன்பிறப்பே தென்றல்!,
      1. //பெண் வேதங்களைக் கேட்க கூடாது என்று சொல்கிறது இந்துத்துவம். கலைமகளே கல்வி கற்றதாக எந்தக் குறிப்புகளும் இல்லை//
      மைத்ரேயி , கார்க்கி பொன்ற பெண்களும் வேதம் பயின்றவர்களே. இவர்களின் ப்ரஸ்தாவம் யஜுர் வேதம் – ப்ருஹதாரண்யக உபனிஷத்தில்- மீண்டும் மீண்டும் காண கிடைக்கிறது.(நமது காக்கைப்பாடினியாரைப் போல)

      மைத்ரேயி -யாஞ்ஞவல்க்யர் ஸம்ஹிதை படியுங்கள்.

      2.// ராமானுஜ தத்தாச்சாரியாரின் விளக்கவுரை://
      ஐயா ! எஞ்ஜினீயர் கல்வி பயில நல்ல கல்லூரிகள் ஐ ஐ டி ,என் ஐ டி பொன்றவை தான். இல்லை நான் ராணிப்பெட்டை கல்லூரியில் தான் பயிலுவேனெனில் அது உங்கள் விருப்பம்.

      மனு ஸ்ம்ருதியின் உண்மை பயில நல்ல உரை நூல்களுண்டு. ஓரு ராமானுஜ தத்தாச்சாரியரிடம்( தான் செல்வேனென்றால் அது உங்கள் விருப்பம்.(12 நாமம் போட்டவன் வைஷ்ணவன்னு எவன் சொன்னான்?)

      என் வளர்ப்பு தந்தை வீட்டில் ஒரு முதலியார் வாழ்ந்து வந்தார். கடைசிவரை என் கையால் ஒரு நீர்கூட அருந்தியது இல்லை. ஆனால் என் வளர்ப்பு தந்தை என்னிடம் இப்படி வேற்றுமை பாராட்டியதில்லை.
      நான் பிறப்பால் வேறு சாதி. ஆனாலும் என்னால் மனு தர்மத்தினை உங்களைப்போல தவறாக நினைக்கவில்லை. உங்களை விட பல மடங்கு சாதி கொடுமைகளை அனுபவித்திருக்கிறேன்.என் வளர்ப்பு தந்தை வீட்டில் அத்துணை நபர்களாலும் அலைக்கழிக்கப்பட்டுள்ளேன்.

      முதலில் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் ,அந்தணர் என்பர் அறவோர்- குறள்களுக்கு சரியான விளக்கம் தெடுங்கள்.

      பிறகு நீங்கள் மெற்கோள் காட்டியுள்ள ஸ்லோகங்களுக்கு விடை காணலாம்.
      3. // மநு-ப்படி பெண்கள் எல்லாருமே சூத்ர ஜாதிதான்//
      பின்னர் எவ்வாறு கார்க்கியும் ,மைத்ரேயியும் வேதம் பயின்றனர்?

      4. // ஏனெனில் குறள் சமண இலக்கியம் சார்ந்தது.//
      அப்படியாயின் ரிஷபதேவர் யார்?

      அவருக்கு ஏன் இத்தனை கோயில்கள் மற்றும் விக்ரஹங்கள்? ஸமணர்கள் குரு இல்லாமல் எப்படி பயின்றனர்?

      நீஙகள் MIRROR NEURONS மற்றும் ACOUSTIC NEURONS பற்றிக் கேட்டதுண்டா?
      உங்களை ஒரு ஆளே இல்லாத தீவினில் 25 ஆண்டுகள் வளர்த்தால் உங்களுக்கு எப்படி பண்பாடு ,மொழி பற்றித் தெரியும்?
      Mirror neuron துணையோடு பண்பாடு வளரும். ACOUSTIC NEURONS துணையோடு மொழி வளரும்.(somebody correct me if I am wrong)

      தாயே முதல் குரு.தந்தை இரண்டாமவர்.
      தாயிற் சிறந்த கோயிலுமில்லை. தந்தை சொல்மிக்க மந்திரமில்லை.-மறந்து போயிற்றா?

      அன்புடன் கணேஷ்

      • \\ மனு ஸ்ம்ருதியின் உண்மை பயில நல்ல உரை நூல்களுண்டு. ஓரு ராமானுஜ தத்தாச்சாரியரிடம்( தான் செல்வேனென்றால் அது உங்கள் விருப்பம்.(12 நாமம் போட்டவன் வைஷ்ணவன்னு எவன் சொன்னான்?)\\

        பன்றிக்கு எதற்கு தங்கத்தில் மூக்குத்தி? பாசிசம் என்பதற்கான வரையறையே மனுதான். அதிலென்ன நல்ல உரை? தண்ணீரை விற்பவனும் தாயைப்புணர்பவனும் மனுவைப் புகழ்பவனும் ஒன்றுதான். அடிப்படையில் இவர்கள் மனிதர்கள் அல்லர்.

        மேலும் “நாமம் போட்டவன் வைஷ்ணவன்னு எவன் சொன்னான்?” என்று சொல்கிறீர். இப்பொழுது வைஷ்ணவன் எங்கிருந்துவந்தான்? நல்லவன் என்றால் பார்ப்பான்; கெட்டவன் என்றால் பறையன் என்று சொல்லிவிட்டபிறகு அது என்ன வைஷ்ணவன்? இதற்கு என்ன அர்த்தம்?
        வடகலையும் தென்கலையும் சிவகோத்திர பார்ப்பானைவிட உசந்த சாதி என்று சொல்லவருகிறதோ வைஷ்ணவன் என்ற சொல்? சிவகோத்திர பார்ப்பானைவிட வைஷ்ணவன் பூண்டு வெங்காயம் பெருங்காயம் எல்லாம் சேர்ப்பதில்லை என்பதனால் தான் வைஷ்ணவன் என்று சிறப்பாக குறிப்பிட்டீரோ? என்னவாக இருந்தாலும் உமது அடிமைத்தனம் பார்ப்பனீயத்தை நாவால் நக்குகிற விலங்காக இருக்கிறது என்பதுதான் உமது வரையறையிலிருந்து தெரிகிறது.

        • ஐயா தென்றல்,
          இது ஏது குழாயடி சண்டையாய் விரிகிறதே..
          முதலில் வாத ப்ரதி வாதங்கள் எப்படி இருக்க வேண்டும் எனக் கற்று வாருங்கள்.நான் தோல்வி பயமின்றி இருக்கிறேன்.
          1) முதலில் செத்த மொழி என்றீர். =வடமொழியில் பேசினேன்.
          2) வடமொழி மீது ஏதேதோ குறை கூறினீர். => விளக்கம் அளித்தேன். இந்த வெப்சைட்டில் EXCEL sheet,jpg upload facilities இல்லை.i give all the details or in person when we meet, I can talk in Sanskrit.
          3) என்னமோ தென்மொழியில்தான் வார்த்தைகள் உண்டு என்ரீர். வடமொழி நிகண்டு பல பற்றி சொன்னேன்.
          4) தமிழில் டைப் செய்ய சொன்னீர்கள்=> செய்கிறேன்.
          5. என்னை பார்ப்பான் என்றீர்=> விளக்கம் சொன்னேன்.
          6. திருக்குறள் -கீதை விளக்கம் காட்டினால் ஏற்க மறுக்கிறீர்.
          7.சார் !!! குறள் விளக்கம் எப்படி இருக்கவேண்டும் என சொல்கிறேன் கேண்மின்.(முதலில் அது என்ன அதிகாரம்? சொல்ல வந்தது என்ன? முன்னின்ற குரள் என்ன சொன்னது? பின்வரும் குரள் என்ன சொல்கிறது ? இவற்றை ஆராய்ந்து சொல்லவும். கருணாநிதி மற்றும் காளிமுத்துவை மணமேடை யில் மணமக்களை வாழ்த்த் பேச சொன்னால் இவர்கள் தன் கருத்தினை ஏற்றி பேசுவர். _______
          நான் தோல்வியை ஒப்புக்கொள்கிறேன். நீங்கதான் ராஜா. நான் உங்க கூஜா. போதுமா நண்பா.
          அன்புடன்,
          கெணேசு

          • ஐயன்மீர் கணேஷ்,

            1)தாங்கள் வடமொழியில் யாரிடமையா பேசிக்கொண்டிருந்தீர்? எங்களிடமா? நாங்கள் இவ்வளவுப் பேர் தமிழில் பின்னூட்டமிட்டுக் கொண்டிருந்த பொது, தாங்கள் சமத்கிருததில் எதுக்கையா பேசிக்கொண்டிருக்கிறீர்? நாங்கள் சமத்கிருதம் மட்டுமா செத்த மொழி என்கிறோம். இணையத்தில் தேடிப் பார்க்கவும். உலகில் ஏராளமான மொழிகள் அழிந்துப போய் உள்ளன. செத்த மொழி என்பதன் பொருள் உங்களுக்கு புரியவில்லையெனில் நாங்கள் என்ன செய்வது?

            2) உங்கள் மொழியானது மக்களுடைய பொது பயன்பாட்டிற்கு உகந்ததாக இல்லை. ஒருவேளை இருந்தாலும், அதைப் பேச ஒரு மக்கள் கூட்டம் வேண்டும். எவ்ளோ பேர் பேசறாங்க? எங்க பேசறாங்க? எந்த எழுத்துமுறையை கொண்டு எழுதறாங்க? அன்றாடப் பிரச்சினையைப் பற்றிய ஒரு கண்ணோட்டம் அந்த மொழியிடம் உள்ளத? அல்லது ஒவ்வொரு நாளும் நிகழும் நிகழ்வுகள் பற்றி ஏதாவது குறிப்புகள், கட்டுரைகள், உரைகள், கருத்துக்கள், கதைகள், கவிதைகள், இலக்கியங்கள்,செய்திகள், படங்கள், நாடகங்கள், போராட்டங்கள் உள்ளனவா? இன்றைய அறிவியல் குறிந்த புரிதலை பொதுமக்களுக்குக் கொண்டு செல்ல முடியுமா? மளிகைக் கடைகளில் பேசிப் பொருட்களை வாங்கத் தான் முடியுமா? இவைப் பற்றி ஏதும் பேசாமல், வெறும் அறிவு சார்ந்த,தத்துவம் சார்ந்த விவாதங்களுக்கு தான் உங்கள் மொழியென்றால் அது செத்த மொழி தான். எங்கள் மொழி தமிழ் மொழி இன்றும் வாழும் மொழி தான்.

            3) இங்கே யாரும் தமிழில் உள்ள சொற்கள் சமத்கிருததில் இல்லை என்று வாதிடவில்லை. தமிழுக்கு சமத்கிருததின் தேவையேதும் இல்லை அவ்வளவே. மொழியின் வளர்ச்சி என்பது சமூக சூழ்நிலை மற்றும் அறிவியல் வளர்ச்சின் போக்கில் மாறுபடும். அதன் அடிப்படையில் தமிழ் சமூக சூழலில், தமிழ் மக்களுக்குத் தேவைப்பட்ட/தேவைபடுகிற புதிய சொற்களை கண்டுபிடித்து பயன்படுத்தலாம். அதற்கானத் தேவையும் இருக்கிறது. அதைத் தாய்மொழியாய் பேசும் மக்களும் இருக்கிறார்கள். அப்படி சத்கிருததிற்க்கு தேவைப்படும் புதிய சொக்களை யார் உருவாக்குவார்கள்? யார் அவர்கள்?

            4)வினவு ஒரு தமிழ் இணையத்தளம் என்பதால் தாங்கள் தமிழில் தட்டச்சு செய்வது தான் சரியானது. முறையானது. நன்றி.

            5)பார்ப்பானுக்கு புதியப் பொழிப்புரையைத் தாங்கள் கொடுக்க வேண்டாம். அது ஏற்கனவே பலபேரால் கொடுக்கப்பட்டுவிட்டது.

            6)திருக்குறள் தமிழில் எழுதப்பட்டது. கீதை சமத்கிருததில் எழுதப்பட்டது. குறளுக்கு விளக்கம் குடுத்த யாரும் அதை மனித சமூகத்தின் விரோதமென கூறவில்லை. ஆனால் கீதைக்கு பார்பனர்கள் ஒரு விளக்கமும், பார்ப்பன அடிவருடிகள் ஒரு விளக்கமும், பார்ப்பனியத்தை எதிர்ப்பவர்கள் ஒரு விளக்கமும் கொடுக்கிறார்கள். நடுநிலையாளர்களும் ஒரு விளக்கத்தை குடுக்கிறார்கள். எங்கள் சமூக சூழ்நிலையை வைத்து எந்த விளக்கம் சரியானது என்று நாங்கள் புரிந்து கொண்டுள்ளோம்.

            7)யாரும் இங்கே, கருணாநிதி , காளிமுத்துவிடம் பாடம் கற்கவில்லை.

            நன்றி.

            • கேவலம், எங்கள் தாய்மொழித் தமிழ்மொழியில் கல்விக் கற்க போராடினால் தம் கட்டி எதிர்க்கும் கூட்டம் எங்கே? இங்கே ஒருவர் எல்லாமே சமத்கிருததில் இருக்கிறது, அது அறிவாளிகளுக்ககான மொழி, தத்துவத்திர்க்கான மொழியென்று வேத வியாக்கானமெல்லாம் பேசிகொண்டிருக்கிறார். இராமன் போன்றவர்கள் இதை கண்டும் காணாமல் இருப்பதைக் கண்டு சற்று வருத்தமாக தான் இருக்கிறது. ஒருமுறை சரவணன், தமிழின் பெருமைப் பற்றி சற்று தான் பேசினார். ஆனால் பாருங்க இராமன் போன்றவர்கள் அதை கேலி செய்தனர். தமிழிற்கு அந்த தகுதி இல்லைஎன்றனர். ஆனால் இன்று அவர்கள் அனைத்தையும் பொத்திக் கொண்டு கம்முன்னு இருக்கிறார்கள்.

              அதுமட்டுமல்லாமல் பறையன் என்றால் ஈனப் பிறவிகள் , பாப்பானுவ உயர்ந்த பிறவிகள் என்றும் பிதற்றிக் கொண்டு திரிகிறார். அதைக் கண்டும் காணாமல் திரியும் சிலர், தமிழ் என்றால் பொங்கி வருகிறார்கள். இது ஒன்றே போதும், அவர்களின் யோக்கியதையை பறை சாற்ற.

              நன்றி.

            • // யாரும் இங்கே, கருணாநிதி , காளிமுத்துவிடம் பாடம் கற்கவில்லை.//
              முத்தமிழறிஞர் திரு.மு.கருணாநிதி மற்றும் முன்னாள் அமைச்சர் அவைத்தலைவர் மாண்புமிகு காலம்சென்ற காளிமுத்து இவர்கள் மீது அடியேன் தனிநபர் தாக்குதல் தொடுக்கவில்லை. குறளுக்கு விளக்கம் பலர் எழுதி உள்ளார்கள். வ.உ.சி, மு.வ போன்றோர். ஆனால் யாருக்குமே பரிமேலழகர் உரையே மூலம்.(ஐன்ஸ்டைனுக்கு கலிலியோ/ந்யூட்டன் போல.).SORRY

              // தாங்கள் வடமொழியில் யாரிடமையா பேசிக்கொண்டிருந்தீர்? எங்களிடமா?//
              வடமொழி இறந்த மொழி என்ற வாதத்துக்கு வடமொழியில் பேசிதான் மறுப்பு சொல்ல இயலும்.SORRY.

              // பார்ப்பானுக்கு புதியப் பொழிப்புரையைத் தாங்கள் கொடுக்க வேண்டாம்.//
              இஸ்கான் இயக்கம் 50 தேசங்களில் 108 கோயில்களுக்கு மேலாக ப்ரபுபாதாவால் நிர்மாணிக்கப் பட்டது. மேற்படி எல்லா கோயில்களிலும் நம்மைப் போன்ற,கீழ்சாதியில் பிறந்த பிறப்பால் ப்ராம்மனரில்லாதார் தான் அர்ச்சகர். யார் வேண்டுமாயினும் 2 வருடங்கள் பயின்று அர்ச்சகர் ஆகலாம்.

              எனவே பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்….மன உணர்வே (அ) குணமே முக்கியம். பிறப்பு அன்று. இதைத்தான் கீதையில் சாதுர்வர்ண்யம் மயாஸ்ருஷ்டம் எனப்பட்டது. தென்றல் அண்ணே ….வேணாம்….வேணாம்…வலிக்கிது…..அப்புறம்…அழுதுருவேன்… முடியல… ஐயா இந்தப் பொடியேன் பார்ப்பார் இல்லீங்ங்ணா….நான் பூணூல் போட்லீங்ங்ணா

              • இஸ்கான் ____ கணேசா , உன் நக்கல், கிண்டல் எல்லாவற்றையும் உன் பாப்பானுடன் வைத்து கொள். ஒடுக்க பட்ட மக்களை இழிவு செய்தால் உனக்கு விழும் செருப்படி.நீ என்ன நாட்டியம் ஆடும் விலைமகளுக்கும் , பாப்பானுக்கும் பிறந்தவனா ? ஒடுக்க பட்ட மக்களை இழிவு செய்தால் உனக்கு விழும் தொடப்ப கட்டை அடி. அது என்ன__வார்த்தை பயன்பாடு கீழ்சாதி? பாப்பான் என்ன தங்க யோனியிலும் , ஒடுக்கபட்டவன் என்ன பித்தளை யோனியிலுமா பிறக்கிறான் ? கோவிலில் “ஊர் சேவை” செய்யும் தேவாரடியாருக்கும் ,ஊரை சாமி பெயரை கூறி கொள்ளைஅடிக்கும் பாப்பானுக்கும் பிறந்த உன்னை போன்ற நாதாரிகள் மட்டும் தான் இப்படி இழிவாக பேசுங்க

                //மேற்படி எல்லா கோயில்களிலும் நம்மைப் போன்ற,கீழ்சாதியில் பிறந்த பிறப்பால் ப்ராம்மனரில்லாதார் தான் அர்ச்சகர்//

              • ///யாருக்குமே பரிமேலழகர் உரையே மூலம்///

                இந்த கணேஷுக்கு சொல் புத்தியும் கிடையாது சொந்த புத்தியும் கிடையாது போல.

                தருமர் மணக்குடவர் தாமத்தர் நச்சர்
                பரிதி பரிமேலழகர்-திருமலையார்
                மல்லர் பரிப்பெருமாள் காலிங்கர் வள்ளுவர்நூற்கு
                எல்லையுரை செய்தார் இவர்.

                இது குறளுக்கு உரை செய்தவர்களை பற்றிய பழம் பாடல்.இதில் குறிப்பிடப்பட்டவர்களில் மணக்குடவர்,பரிதியார்,காலிங்கர்,பரிமேலழகர் ஆகியோரின் உரை இப்போதும் கிடைக்கிறது.இவர்களில் பரிமேலழகரே காலத்தால் பிற்ப்பட்டவர்.

                பரிமேலழகர் உரைதான் எல்லாவற்றிற்கும் மூலம் என்று எதை வைத்து சொல்கிறீர்?.அவர் பூணூல் அணிந்தவர் என்பதை வைத்தா?.மீண்டும் சொல்கிறேன் குத்து மதிப்பாக உளருவதை நிறுத்திவிட்டு உருப்படியாக பின்னுட்டமிட பாருங்கள்.

              • தோழர்களே/நண்பர்களே,

                கணேஷின் உடலில் திரேதாயுகத்தில் வாழ்ந்த ஒரு பாப்பானின் ஆவிப் புகுந்து விட்டது என்று நினைக்கிறேன். அதான் இப்படிப் ஒரு வாழ்ந்துக் கெட்டப் பண்ணையாரைப் போலப் புலம்பித் திரிகிறார். அவரைப் போல கலியுக உடலும் த்ரெதயுக ஆவியும் கொண்ட பிறவிகள் அரிது. ஆதலால் தயைக் கூர்ந்து பொறுத்துக் கொள்ளுங்கள். அவர் பேசிக் களைப்படையும் வரை பேசட்டும்.

                நன்றி.

              • //குறளுக்கு விளக்கம் பலர் எழுதி உள்ளார்கள். வ.உ.சி, மு.வ போன்றோர். ஆனால் யாருக்குமே பரிமேலழகர் உரையே மூலம்.(ஐன்ஸ்டைனுக்கு கலிலியோ/ந்யூட்டன் போல..//

                இதில் நான் மாறுபடுகிறேன். குறிப்பாக வ ஊ சி தனி உரை எழுதியுள்ளார்! 1934-ல் வெளியிடபட்டது. மணக்குடவர் உரையுடன் 1917-ல் வெளியிட்டுள்ளார்!

                பொதுவாக பார்பனர்கள் தமிழுக்கு உரையெழுதும்பொது தங்கள் மொழிபற்றை காட்ட மணிப்பிரவாள சொற்களையே பயன்படுத்துவர் ! அவர்களின் அடியொட்டியே சைவ,வைணவ தமிழர்களும் தமிழை சிதைத்தனர்!

          • @கணேஷ்

            \\முதலில் செத்த மொழி என்றீர். =வடமொழியில் பேசினேன்.\\

            வாழ்கின்ற எந்த ஒரு மொழியும் கற்றலின் நான்கு நிலைகளைக் கொண்டிருக்க வேண்டும். அவை முறையே பேசுதல், படித்தல், எழுதுதல் மற்றும் புரிந்துகொள்ளுதல் ஆகிய நான்கும் ஆகும். புரிந்துகொள்ளுதல் என்ற வகையில் சமஸ்கிருதம் ஒரு மொழியாக வராது. இதற்கு உங்களிடமிருந்தே ஒரு ஆதாரத்தை வைக்கமுடியும்.

            பின்னூட்டம் 3.2.1.2.2.1.2.1.2.1இல் மாயாண்டியாகிய உங்களுக்கும் முனிசாமிக்கும் இடையிலான பரிமாற்ற மொழி சமஸ்கிருதம் அல்ல என்றும் அது ஆராய்ச்சிக்கு உரிய தத்துவ மொழி என்றும் சொல்லியிருக்கிறீர்கள். கற்றலின் முக்கியமான நிலையையே கொண்டிருக்காததால் தான் சமஸ்கிருதம் செத்தமொழியாயிற்று. அதை ஆர் எஸ் எஸ் காலிகள் தான் தூக்கிச் சுமக்கின்றனர்.

            மாறாக தமிழ் சாமானியர்களுக்கானது. பரந்துபட்ட மக்களே கட்டற்ற கலைக்களஞ்சியத்திற்கு இன்றியமையாத பங்களிப்பை நல்குகிறார்கள். சான்றாக காரடி என்ற வார்த்தை தமிழ் சொல்லாகவே நிற்கிறது. (பஸ்ஸை கார் என்று சொல்லும் கிராம மக்கள்; அதாவது முனுசாமி போன்ற பட்டிக்காட்டான்கள், தேரடி என்ற வார்த்தையை கார் நிற்கும் இடத்திற்கும் பயன்படுத்துவதால் காரடி என்பது சர்வ சாதாரணமாக புழக்கத்தில் இருக்கிறது. கார் + அடி என்று பிரித்து “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” என்று வேற்றுமொழிச் சொற்களுக்கு புணர்ச்சி விதியும் தரமுடியும். கறாராக சொன்னால் தமிழின் உன்னதம் குறள் கூட அல்ல; குரல் ஆகும்; அது மக்கள் குரல் ஆகும்.

            எனவே முனுசாமியும் மாயாண்டியும் பேசாத மொழி இறந்தே போகும் என்பது தெளிவாகும். சமஸ்கிருதத்திற்கும் அதுதான் நேர்ந்தது. ஆகையால் சமஸ்கிருதம் செத்தமொழி என்பது எளிதில் புலனாகும்.

          • @கணேஷ்

            \\ 2) வடமொழி மீது ஏதேதோ குறை கூறினீர். => விளக்கம் அளித்தேன்.\\

            சமஸ்கிருத இலக்கணத்திற்கான அடிப்படை எது என்பதுதான் வாதம். சுட்டுபெயர்களில், தன்வினை, பிறவினையில், நரம்பொலி மெய்களில் சமஸ்கிருதம் எவ்விதமான கட்டமைப்பைப் பெற்றிருக்கிறது என்பதற்கு எந்தப்பதிலும் சொல்லவில்லை. சான்றாக சுட்டுப்பெயர்களை விளக்குகிற பொழுது ஹ, ஹா விகுதிகளைப் பயன்படுத்தி இருந்தீர். ஹ ஒலிகள் சமஸ்கிருதத்திற்கு எவ்விதம் வந்தன என்று கேட்டால் உங்களிடம் பதில் இல்லை. பானினி சிவனின் உடுக்கையில் இருந்து ஹர ஒலிகள் பிறந்தன என்று சொல்வது ஒரு மொழிக்கு அழகல்ல. இதை ஏற்காதவன் வீட்டு மனைவியெல்லாம் பத்தினி இல்லை என்ற அழிச்சாட்டியத்தில் தேவபாசை என்று கொஞ்சமும் கூச்ச நாச்ச இல்லாமல் வியக்கிற நக்கத்தனம் சமஸ்கிருதவாதிகளுக்கு மட்டுமே உண்டு.

            சின்ன பிள்ளைகளிடத்தில் பிடுங்கித் தின்பதைப்போன்று ‘கோண்டு’ மொழியில் இருந்தும் சமஸ்கிருதம் பல ஒலிகளைத் திருடிவிட்டு தேவபாசை என்று மினுக்குவது பாசிசக்கோமாளிகளின் வழமையான வாழ்வியல் போக்காகவே இன்றுவரை இருந்துவருகிறது.

            சுருக்கமாக சொல்வதென்றால் சமஸ்கிருதம் மூலமொழியல்ல. It is not a proto-language. பிறகு இலக்கணம் எங்கிருந்துவரும்? உடுக்கையில் இருந்துதான் வரும்!!!

            • தன்வினை – பிறவினை
              படதி- படித்தான்(active). பட்யதே – படிக்கப்பட்டான்.(passive)
              க்ஷிபதி- வீசினான்(active). க்ஷிப்யதே – வீசப்பட்டான்(passive).
              ஈக்ஷதே – விரும்பினான்(active). ஈக்ஷ்யதே – விரும்பப்பட்டான்(passive).
              க்ருஹ்ணாதி- பிடித்தான்(active). க்ருஹ்யதே – பிடிக்கப்பட்டான்(passive).

              • சாதி வெறி கனேஷ்,உமக்கு உண்மையில் சமஸ்கிருத மொழி மீது பற்று இருந்தால் மேலே உள்ள உம் கழிசடைகளை உன் கழிசடை சமஸ்கிருத மொழியிலேயே எழுத வேண்டியது தானே இப்படி :

                पटऍ -> படித்தான்

                உனக்கு உண்மையாகவே உன் சமஸ்கிருத மொழி மீது பாசம் இருந்தால் உம் கருத்துகளை எல்லாம் சமஸ்கிருத மொழியிலேயே தட்டு அச்சு செய்ய வேண்டியது தானே ?உன் மொழியை பயன் படுத்த விடாமல் உம்மை தடுப்பது எது ?சமஸ்கிருத மொழி மக்களிடம் பயன்பாட்டில் இல்லாத செத்துப்போன பிணம் என்ற காரணம் தானே ?

                • //எழுத வேண்டியது தானே இப்படி :

                  पटऍ -> படித்தான்.//

                  அன்பரே …நானும் எவ்வளவோ …பதிவுகளை எழுதிவிட்டேன் …எல்லாமே வினவினால் கழிக்கப் படுகின்றன. என்னால் அவ்வளவு முடியுமோ அவ்வளவு திருத்தியே தருகிறேன். எங்கே வடமொழியில் எழுதினால் கழிப்பரோ என்ற பயமே காரணம்.

                  • சாதிவெறி கணேசா ,செத்து போன பிணமான உன் வட மொழியில் எழுதித்தான் பாரும் உம் பின்னுட்டங்களை. அப்போது தெரியும் உன் செத்து போன சமஸ்கிருத பின்னூட்டதுக்கும் எத்துனை பதில்கள் வரும் என்று !நீ செத்த சமஸ்கிருத மொழியில் பின்னூட்டம் எழுதினால் குறைந்தது வினவு வாசகர்களான வியாசன் ,தென்றல், சிகப்பு ,நான் போன்றவர்களின் நேர விரையம் ஆவதாவது மட்டு படும்.

            • //பானினி சிவனின் உடுக்கையில் இருந்து ஹர ஒலிகள் பிறந்தன என்று சொல்வது ஒரு மொழிக்கு அழகல்ல.//

              பாணினி தனது அஷ்டாத்த்யாயீ என்ற இலக்கண நூலினை அரங்கேற்றிய போது ,அன்னூல் முழுதும் கடவுள் வாழ்த்து இல்லை என நிராகரித்தனர்.
              [[[[திருக்குறளிலாவது 10 பாக்கள் கடவுள் வாழ்த்து உண்டு.]]]]
              அப்பொழுது பாணினி சொன்னார்(இந்த நூலை அகாரம் கொண்டே தொடங்கினேன்.) அகார வாச்யம் காக்கும் கடவுளை குறிக்கும். எனவே தனியாக கடவுள் வாழ்த்து தேவை இல்லை என்றார். இப்படி இருக்கையில் என்னமோ உடுக்கையாம் / கிடுக்கையாம் …..உடன்பிறப்பே வலிக்குது …அழுதுருவேன்.

              • vRddhirAdaic வென ஆரம்பித்து a a iti என முடிதல் வரை அகரம் அசுடாதியாயியில் இல்லை.

                “விருத்தி எனப்படுவது அ ஐ ஒள ஆகும்.”

                “இதன்பின் அ அ ஆகும்.”

                பாணினி ஒலிக்கூறுகள் என்பதாகவே 14 சூத்திரங்களை அமைத்தார். அவை சிவனின் உடுக்கையிலிருந்து வந்தவையென்று பின்வந்தோர் கூறினர், பாணினி கூறவில்லை.

                அகரத்தில் ஆரம்பித்தது என்று அடித்து விடக்கூடாது.

                • மன்னிக்கவும்.

                  விருத்தி எனப்படுவது ஆ ஐ ஒள ஆகும்

                  என்று இருந்திருக்க வேண்டும்.

                  அகரத்தை கடைசியாக பாணினி வைத்தார். வேதங்கள் டயனோசார் காலத்தவை, அவற்றை அவற்றின் இலக்கணத்தை பெரிதாக பொருட்படுத்த வேண்டியதில்லை என்று பலமுறை கூறியுள்ளார்.

            • ________
              பூச்சியையுண்ணும் தாவரங்களைப்பற்றி சார்லஸ் டார்வின் பின்வருமாறு குறிப்பிடுகிறார்…..
              “அவற்றில் தூசு, மழைத்துளி மற்றும் பிற உயிரற்ற பொருட்கள் விழும்பொழுதினில் அது தன் வாயை மூடுவதில்லை. அது பூச்சிகளை நன்றாக உணர்கிறது. அதற்கு மெமோரி உண்டு. பூச்சி விழுந்தால் மட்டுமே பொறியினை மூடும். இரு முறை தொடப்பட்டால் மட்டுமே மூடும்”. —-என் கிறார்.
              ஐயா மொழியியல் வல்லுநர்களே …….
              ஒரு பூச்சிக்கே ..இது.நான்…..இது .என் உடல் என்றும் …உணர்ச்சியுண்டாம்(தன்மை).
              இது உயிரற்ற பொருள்…..இது மழைத்துளி,….இது தூசு என்றும் …உணர்ச்சியுண்டாம்(படர்க்கை).
              இது பூச்சி…….நகர்கின்றது…..இது நமது உணவு (முன்னிலை)….பெயர்) ……என்றும் …உணர்ச்சியுண்டாம்(முன்னிலை).
              இது ஓரறிவு உயிரி(தொடுதல் மட்டும்) அப்படியாயின் ….
              ஈரறிவு உயிரிக்கு-?,மூன்றறிவு உயிரிக்கு-?, ,நான் கறிவு உயிரிக்கு-?,,ஐந்தறிவு உயிரிக்கு-?,..ஆறறிவு மனிதனுக்கு…அவன் படைத்த மொழிக்கு(English/French)….? அவனைப்படைத்த தென்/வடமொழிகளுக்கு ?

              அன்புடன்.
              கணேஷ்

              • கணேசு,

                பூச்சியையும், புழுவையும் உண்கிறன தாவரங்கள் சைவமா? அசைவமா?
                தாவரங்களுக்கும் உயிரும், உணர்ச்சியும் உண்டெனில் அவற்றை உண்பது சைவத்தில் சேருமா?

                உங்கள் சமஸ்கிருதத்தில்- வேதத்தில் சொல்லப்பட்டதை மேற்கோள் காட்டாமல் டார்வின் சொன்னதை மேற்கோள் காட்டுவது எதற்காக?
                டார்வினின் பரிணாம கொள்கை, உங்கள் வேதங்களில் 2000 வருடங்களுக்கு முன்பே சொல்லப்படவில்லையோ? அவ்வேதங்கள் எழுதப்பட்ட சமஸ்கிருதம் மேன்மையானதில்லையோ, அதனால் அவற்றை மேற்கோள் காட்டி பேசலாமே..

          • @கணேஷ்

            \\ 3) என்னமோ தென்மொழியில்தான் வார்த்தைகள் உண்டு என்ரீர். வடமொழி நிகண்டு பல பற்றி சொன்னேன்.\\

            திராவிட மொழிகளின் அகராதிகளையே எடுத்துக்கொள்ளுங்கள். சமணர் காலத்து அகராதிகளில் மக்கள் புழங்கும் வார்த்தைகளும் இடம்பெற்றிருக்கின்றன. சமஸ்கிருதம் மக்களால் பேசப்பட்டால் தானே மக்கள் மொழி பற்றி நிகண்டுகளில் கூறமுடியும்? ஆக எந்த மொழிக்கு வார்த்தைகள் உண்டு என்பதும் அதன் மூலமும் வெள்ளிடை மலையாய் விளங்குமே!

            \\ 4) தமிழில் டைப் செய்ய சொன்னீர்கள்=> செய்கிறேன்.\\

            இதுவும் உங்களிடம் சும்மா வந்துவிடவில்லை. உமது பின்னூட்டத்தை மறுபடி வாசித்தீர் என்றால் தென்மொழிகளுக்கான வர்கா எப்படிக்கிடைக்கும் என்று மேட்டிமைத்தனத்தோடு கேட்டிருந்தீர். அதென்ன வர்கா? வாயிலேயே சாத்தினால் தான் சரிப்படுவீர்கள்.

            எழுத்தறிவித்ததே தமிழ்தான் என்கிற பொழுது வழிவழியாக வேதம் ஓதிய செத்த மொழிக்கு பல்லக்கு தூக்கும் நீர் தமிழ் வர்கா எப்படிக் கிடைக்கும் என்றால் உமது மனநிலை எவ்வளவு வக்கிரம் நிறைந்ததாக இருக்கும்?

            • //அதென்ன வர்கா? வாயிலேயே சாத்தினால் தான் சரிப்படுவீர்கள்.//

              ஆசானே …என்னை எதிரியாய் பார்த்த நீங்கள் -” வாயில் சாத்துவேன்” என்ற அளவாவது என் மீது உரிமை எடுத்துக்கொண்டது எனக்குப் பிடித்தமானது.

              இந்தப் பொடியேன் எங்கும் வர்கா என்று எழுதியதாய் தெரியவில்லை. சரியாக சுட்டிக் காட்டுவீர்….

              //சமஸ்கிருத இலக்கணத்திற்கான அடிப்படை எது என்பதுதான் வாதம்.//
              (1)பாணினீ -அஷ்டாத்யாயீ… (2)பதஞ்ஜலி -மஹா பாஷ்யம்…(3)பட்டோஜி தீக்ஷிதர் —- சித்தாந்த கௌமுதி….

              இவை மூன்றும் மூல நூல் கிடையா…
              வேதத்தின் உபாங்கமான வ்யாகரணமே மூலம்.(சப்த வடிவம் தான்)
              (நமது தொல்காப்பியம்,நன்னூல்,வீரசோழியம் போல===>மூலநூல் அகத்தியமாம்)

              • சாதிவெறி ,தமிழ் மொழி எதிர்ப்பு கணேசா,

                உன் சுடுகாட்டுக்கு போன சமஸ்கிருத மொழியின் “ஆபாச இலக்கணத்தை” உன் சமஸ்கிருத மொழியிலேயே எழுத வேண்டியது தானே சாதிவெறி ,தமிழ் எதிர்ப்பு கணேசா ? இதுக்கு மட்டும் எம் தமிழ் மொழி உமக்கு தேவையா ?ஒரு விசயத்தை[சமஸ்கிருத இலக்கணத்தை] விளக்க கூட வக்கு ,திறன் அற்ற உன் நாசகர கலப்பு மொழியை உன் ஆத்தா மொழியாக வைத்து கொண்டு தமிழரிடம் வந்து ஏன் என்-தமிழ் மொழியில் பேசுகின்றாய் ?

                //(//1)பாணினீ -அஷ்டாத்யாயீ… (2)பதஞ்ஜலி -மஹா பாஷ்யம்…(3)பட்டோஜி தீக்ஷிதர் —- சித்தாந்த கௌமுதி….//

          • @கணேஷ்

            \\ 5. என்னை பார்ப்பான் என்றீர்=> விளக்கம் சொன்னேன்.\\

            பார்ப்பான் என்பது தவறு. பார்ப்பனியக் கைக்கூலி என்பதுதான் சரி.

            \\ 6. திருக்குறள் -கீதை விளக்கம் காட்டினால் ஏற்க மறுக்கிறீர்.\\

            குறளுக்கு ஒருபோதும் கீதை விளக்கம் ஆகாது. கீதை சனநாயகத்திற்கு எதிரான ஒன்று. பெருந்திரளான மக்கள் தாய்தெய்வ வழிபாடும் சாங்கிய முறையிலான வழிபாடும் உடையவர்கள். எங்களுக்கு ஒருபோதும் கீதை வாழ்வியல் விழுமியமாக இருக்கமுடியாது. வேதங்களையும் கீதையும் அடிப்படையாகக் கொண்ட பார்ப்பனிய மதம் ஒருபோதும் மக்கள் திரளுக்கானதல்ல. மேலும் கீதை வருணத்தை அடிப்படையாகக் கொண்டது. பாசிசத்தின் வேர்கள் தான் இதன் அடிப்படை. எனவே கீதை விவாதத்திற்கு அருகதையான ஒன்றல்ல.

            • //ஒருபோதும் கீதை வாழ்வியல் விழுமியமாக இருக்கமுடியாது.//

              ஆசானே பெருவெடிப்பு,மூடிய ப்ரபஞ்சம், தெர்மோ டைனமிக் 2ஆம் விதி ,ஸ்டான்ர்ட் அணு மாதிரி பொன்ற பல வித்தைகளுக்கு கீதையில் விடை உண்டு. அது பொது சொத்து. எவனோ ஜெயேந்திரன் கோஷ்டியை சேர்ந்ததல்ல. [இஸ்கான் க்கு ஜெயேந்த்ரன் வர மாட்டான். அங்கே சாதி பாகுபாடு இல்லை. எல்லாரும் சமம்.சாதி இருந்தாதானே தலைவன் வேண்டும். சொம்பேறியாக சுற்றலாம். அவன் பருப்பு அங்கே வேகாது. உலகின் எந்த எந்த மூலையிலும் இருப்போர் அங்கு அர்ச்சகர்கள். குலம் கோத்திரம் இல்லை. யாரும் ஊரே யாவரும் கேளிர். பிரப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.

              • இஸ்கான் புடுங்கி கணேசா ,
                இஸ்கான் பெங்களூர் அமைப்பின் தலைவரான மது பண்டிட் தாஸ் செய்த ஊழல்,பண கையாடல் எல்லாம் ஊர் அறியுமே !அக்ஷய பாத்திரம் என்ற மதிய இலவச உணவுத் திட்டத்தை நடத்தி அவன் அடித்த கொள்ளைக்கு அளவு உண்டா ?அதில் உனக்கும் பங்கு இருக்கா ?ரியல் எஸ்டேட், சொத்துக் குவிப்பு ேபான்றவற்றில் உன் தலைவன் மது பண்டிட் தாஸ் ஈடுபட்டது தெரியாது என்று நினைக்றாயா ?

                • நண்பர் ராஜன்,

                  கடினமான சொற்கள் பயன்படுத்துவதைக் குறைத்துக் கொள்ளுங்கள். அது கடைசியில் நம் மீதே திரும்பும்.

                  நன்றி.

                • உடன்பிறப்பே,
                  //20.1.1.1.5.1.1// and //20.1.1.1.5.1.2//
                  தேனீக்கள் கொட்டும் என்பமைக்காக தேன் சுவைக்காத மானுடர் உண்டோ? இலக்கியம் தானுண்டோ?
                  முள் குத்தும் என்றிருப்பினும் ரோஜாவை சூடாத மாதர் உண்டோ?
                  ஒரு மது பண்டிட் தாஸ் செய்த ஊழலுக்காக இஸ்கானை ஏன் வைகிரீர்.
                  இந்த தேசத்தின் தந்தை என்னும் கொடுங்கோலர் காந்திக்குக் கொடுக்கும் பட்டத்தினைப் பிடுங்கி எம் தந்தை ஈ.வே.ரா.பெரியாருக்குத் தருவீர். மஹாத்மாவாம், ரூபாய் நோட்டிலே படமாம். இவர் இங்கிலாந்து தேசம் செல்லுமுன் தன் தாயிடம் கூறியது 4 வெஞ்சினங்கள்.
                  1) புலால்,2) மது ,3) மாது , 4) புகை நுகரேன் எனவுமாம். நடுங்கினார் அங்கே. பல போரட்டங்களுக்குப் பிறகு,
                  அதன்படியே நடந்து திரும்ப வீட்டிற்கு மீண்டார்.
                  அனால் திரு ப்ரபுபாதா அவர்களும்தான் சென்றார். இவரைக் கண்டு இங்கிலாந்து தேசம் நடுங்கியது. இவர் நம் தேசத்து இளைஞரைக் கெடுக்கிறாராம். புலால்,மது,மாது,புகை ஆகியன கேடு என்றாராம். கொடுத்தனர் பிராதுகள் பல இவர்மீது. பல மக்களைத் திருத்தினார் புத்தர் போலே. எதிலுமே வாகை சூடி மீண்டார். கூறுவிர் நீவிர் ,இவ்விருவரில் யார் பெரியார் என்று .

                  • அய்யன்மீர்,

                    இதே கதையைத் தான், இந்து ஆன்மிக கண்காட்சியில் இஸ்கான் டுபாக்கூர்ஸ் கதைத்தார்கள் என வினவில் படித்தேன். தாங்கள் திருவாய் மலர்ந்த கதை தான். பயண சீட்டுக் கிடைக்காமல், யாரோ ஒரு ஏமாளியிடம் இருந்த கப்பல் பயணச்சீட்டை அலேக்ககாக அமுக்கி அமெரிக்க சென்றாராம். அங்கு அமெரிக்கர்கள் குடிக் கூத்து கும்மாளம் என்று இகலோக இன்பங்களில் களித்தனராம். நம் பரலோக பரமபிதாவின் ஏஜெண்டான பிரபுபாதா அவர்களை இல்வாழ்வை சீரமைத்து வைகுண்டத்தை அடைய பாதையை காட்டினாராம். அடடடா கேட்கவே புல்லரிக்குது. ஏனைய இங்கே இவ்வளவுப் பிரச்சினைகள் தலைவிரித்து ஆடிக் கொண்டிருந்த போது, இவர் இன்னாத்துக்கு அமெரிக்கா சென்று அந்த ஹிப்பிகளை திருத்தினார். இங்கே என்னமோ மக்கள் எல்லாருமே குடிக் கூத்து கும்மாளத்தில்(எல்லா மக்களும் குடி கூத்தில் ஈடுபடவில்லை. ஆண்ட பரம்பரைகள்,பார்பனர்கள் உள்ளிட்ட குறிப்பிட்ட மக்கள் மட்டுமே) இல்லாமல் இருந்ததைப் போன்று ஒரு மாயையை ஏனைய உருவாக்குகிறீர்.

                    நன்றி.

              • //
                பெருவெடிப்பு,மூடிய ப்ரபஞ்சம், தெர்மோ டைனமிக் 2ஆம் விதி ,ஸ்டான்ர்ட் அணு மாதிரி
                //

                கொக்கக்கோலா பெப்சிக்கோலாக்களின் ரகசியங்களுக்கும் கீதையில் விடை உண்டோ? (அருந்ததி ராய்)

                இசுக்கான் பிரபுபோத்தா ஒரு சிறார்விரும்பி, பீடொFஇல், அவனது கீதை விளக்கவுரை சாதி வெறி நிறைந்தது. மாட்டுசாணம் போன்றது. உங்களுக்கு வேண்டுமென்றால் சுட்டுதின்னுங்கள், இல்லை அப்படியே தின்னுங்கள், எங்களுக்கு வேண்டாம்.

        • தென்றல் அவர்களுக்கு,

          //தண்ணீரை விற்பவனும் தாயைப்புணர்பவனும் மனுவைப் புகழ்பவனும் ஒன்றுதான். அடிப்படையில் இவர்கள் மனிதர்கள் அல்லர்.//

          அருமையாக சொல்லியிருக்கிறீர்கள். கோடி பின்னூட்டங்களுக்கு இதில் பதில் இருக்கின்றது.

          நன்றி.

        • //அதிலென்ன நல்ல உரை? தண்ணீரை விற்பவனும் —- மனுவைப் புகழ்பவனும் ஒன்றுதான் //

          மாற்று கருத்து கொண்டவர்களை பொது சபையில் இவ்வளவு தரம் தாழ்ந்து திட்ட தேவை இல்லை

          தென்றல்? அல்ல வாடை காற்று!

          • இராமன், என்ன மனுவைப் புகழும் “மனு தர்ம ராஜாவின்” ஜால்ராவா ? இல்லை பிரம்மன் தலையில் பிறந்ததாக பிற்றிக்கொள்ளும் பார்பனனா? சாதி பைத்தியக்கார மனுவை இன்னும் எந்த கெட்ட வார்த்தைகளை கொண்டு வேண்டுமானாலும் திட்டலாம்.

          • அய்யா இராமரே,

            இங்கே கணேஷ் என்பவர் பறையரை இழிவானவர் என்றும் பார்பனரை உயர்ந்தவர் என்றும் பிதற்றிக் கொண்டுத் திரிந்த நேரம் தாங்கள் எங்கிருந்தீரோ? இப்போ மட்டும் தான் தாங்கள் உறக்கத்தில் எழுந்து வந்தவர் போல பேசுகிறீர்கள்.

            இங்கே யாரும் யாரையும் சபையில் மோசமாக விளிக்கவில்லை. மனுவைப் புகழ்பவன் மனிதனாக இருக்க முடியாது என்பதை அப்படித் தான் கூற முடியும். அந்த மனுவின் அடிப்படையில் தான் கணேஷின் நாவானது சுழன்று பார்ப்பன விசத்தைக் கக்கியது.அந்த நாவை ஓட்ட நறுக்கினால் தான் சரியாகும்.அதைத் தான் தோழர் தென்றல் செய்தார்.குறைந்தது நடுநிலையாவது இருக்க முயற்சி செய்யுங்கள்.

            நன்றி.

        • //இரண்டாவதாக பறையன் என்ற சொல்லுக்கு தீயவர் என்ற பொருள் தருகிறீர்.//
          நான் அப்படிச் சொல்லவே இல்லை. நானும் ஒரு கீழ் சாதி என்று தான் சொன்னேன். நான் சொன்னதாக நிரூபியுங்கள்.

          //தண்ணீரை விற்பவனும் தாயைப்புணர்பவனும் மனுவைப் புகழ்பவனும் ஒன்றுதான். அடிப்படையில் இவர்கள் மனிதர்கள் அல்லர்.//
          கலப்பு திருமணத்தை ஏன் எதிர்க்கின்றனர்?
          எல்லாருமே ஜாதி மாறி விட்டால் அப்புறம் சங்கம் ஏது? தலைவர் ஏது?
          ஆங்காங்கே ,!!! எங்கு நோக்கினும் சாதி சங்கம் -எதுக்கு இருக்கு ! !…
          சங்கம்னு இருந்தாதான் நாலு சண்டை பிறாதுக்கு வரும். நாட்டாமை செய்தால்தான் நாலு காசு வரும்.நாலு பேரை ஏமாற்றலாம். மரியாதை வரும். அப்ப பெரிய அளவில் கொள்ளை ,கொலை செய்யலாம். பயத்தில் யாரும் கேட்க மாட்டார்கள்.
          இல்லாவிட்டால் சோத்துக்கு எங்கே போவது? _____________
          வேதம் இருந்ததை இந்த பாவிகள் தம் சுயநலத்துக்கு கெடுத்தார்கள்.
          மற்றபடி பெரியார் தான் பெண் சுதந்திரத்திற்கு முழு காரணம். அந்த மனுஷன் போட்டோ தான் ரூபா நோட்ல வரணும் நு இந்த பொடியேன் கெட்டுக் கொள்கிறேன்.(இந்த ஒரு விஷயத்தில் நான் பெரியார்தாஸன் தான் எனபதினை கர்வத்துடன் கூறிக் கொள்கிறேன்.
          மனு தர்மம் திரித்தும் இட்டுக் கட்டியும் கெடுக்கப்பட்டது. பிறப்பாலும் ,வளர்ப்பாலும் கெட்ட பல ப்ராம்ஹண ___________ நாசமானது. அதற்கு விளக்கம் கேட்க அக்னிஹோத்ரி ஸ்ரீ ஸ்ரீ …ராமானுஜ தாதாச்சாரி பன்றிப்பயல் தானா கிடைத்தான்? என்னைப் பொறுத்து இந்த யுகத்தில் யாருமே ப்ராம்ஹனர் இல்லை. ஹோமம் செய்ய முடியாது. வேதம் உதவாது(நான் சொன்னது சம்ஹிதை,ஆரண்யகம் மற்றும் ப்ராம்மனம் மட்டும்). எனவே மனு நீதி பல பகுதிகள் இப்போது செல்லாது
          Yours lovingly,
          ganesh

          • கணேஷ்,

            //I am born of paraiyan but a noble man because of deeds and attitude.
            //99.9999% brahmin today is a paraiyan like me.
            //But kanchi sankara and other matadhipadis and followers are paraiyans and they are unfit to chant vedas,do Homas and Give/take Daanam.

            மேலே உள்ள இரண்டு வரிகளும் தங்கள் திருக்கரங்களால் தான் தட்டச்சு செய்தீர்கள். இதன் மூலமாக என்ன சொல்ல வருகிறீர்கள். எங்களைப் பொறுத்த வரையில் பிறப்பினாலோ அல்லது வளர்ப்பிநாளோ, வர்ணமோ சாதியோ மாறுவதில்லை. அது அப்படியே இன்று வரை நீடித்திருக்கிறது. எம் மக்களை பீடித்திருக்கும் கண்றாவி அது. உங்களைப் போன்றவர் எப்படி வேண்டுமானாலும் மனுவிலோ, கீதையிலோ உள்ளதை வெட்டியும் ஒட்டியும் திரித்தும் கூறலாம். ஆனால் சமூகத்தில் உள்ள பழக்கவழக்கங்கள்,யதார்த்தங்கள் தாங்கள் சொல்வது போல் இல்லை. உமக்கு வேண்டுமென்றால், தனி மனித வுரிமையை வடமொழி பயிலுங்கள், வேதம் ஓதுங்கள், கீதை படியுங்கள், மனுவையும் ஆராதியுங்கள். எங்களுக்கு அது தேவையில்லாதது.

            நாங்கள் அறிவியலை மட்டுமே நம்புகிறோம். ஒரு காட்டுமிராண்டிக் காலத்தில் எழுதப்பட்டதை அறிவியல் என்றும் , தத்துவம் என்றும் கூற உங்களுக்கு முழு உரிமை இருக்கிறது. ஆனால் பறையனை கேவலமானவன்( paraiyans and they are unfit to chant vedas /I am born of paraiyan but a noble man because of deeds and attitude) என்று சொல்ல உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை மற்றும் அது ஒரு ஈனத்தனமான விளித்தல். இரண்டு ஆண்டுகள் படித்தால் அர்ச்சகர் ஆகலாம் என்று நரித்தனமாக பேசும் உங்களால், ஏற்கனவே அர்ச்சகர் தகுதியில் உள்ள 200 மாணவர்களைப் பற்றித் தெரியாமலா போகும். அதற்க்கான போராட்டங்கள் பற்றி தெரியாமல் தான் போகுமா.

            நன்றி.

            • உடன்பிறந்தோரே,
              உங்களுக்கு என்ன மறுமுறை உரைப்பது.
              சாதிகள் இல்லையடி பாப்பா. குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொலல் பாவம்.
              அம்பேத்காரோ, பெரியாரோ இல்லை என்றால் நான்
              அ) ஒரு பொறியியலாளனாக படித்திருக்க முடியாது.
              ஆ) இன்று என்னால் இப்படி பெங்களூரில் வாழ்ந்திருக்க முடியாது.
              ஆ)நான் கற்ற தென்மொழி/வடமொழியும் எழுத்துக்களுக்கு அவர்களுக்கு மிகவும் கடன் பட்டவன்.
              இ) இன்று ஒரு வாடகை வீட்டிலாவது 3 வேளை சோறு கிடைக்கிறது என்றால் அது அவர்கள் பொன்றோர் பொட்ட பிச்சைதான். அவர்களது இட ஒதுக்கீடு கொள்கை, மகளிர் விடுதலை போன்ற சேவைகளால் இன்று நானும் ஒரு கவுரவ மனிதன்.(பண்பாட்டால் இன்னும் மிருகமே. வளர முயற்ச்சிக்கின்றேன்)
              1) ஒரு முடவரை பார்த்து அவரது உடல் ஊனத்தைப் பற்றி எள்ளினால் எனக்கும் அவ்வாறே முடமாகும் தருணம் வந்தே தீரும்.
              2) ஒரு எழையைப் பார்த்து அவரது வாழ்க்கைப் பற்றி எள்ளினால் நானும் அவ்வாறே ஏழையாகும் ஆகும் தருணம் வந்தே தீரும்.
              3) ஒரு கல்லாதவரை அவரது கல்விஅறியாமை பற்றி எள்ளினால் நானும் அவ்வாறே மூடனாகும் தருணம் வந்தே தீரும்.

              வினவு.காம் ல் பல பதிவர்கள் அந்த குறிப்பிட்ட சாதியைக் குறிக்கும் சொல்லை பயன்படுத்தியதை கண்டே நானும் பயன்படுத்தினேன்.
              நான் ஞாதா(அறிபவன்)/போக்தா(அநுபவிப்பவன்)/கர்தா(செய்பவன்) என்ற தர்சனத்தை சேர்ந்தவன்.
              ஐயா 3 மிக பயங்கர குறும்புகள் மனிதனிடம் உண்டு.
              1)தான் மிக உயர்ந்த குடியில் பிறந்தவன்(குல கர்வம்) –நான் அப்படி பிறக்கவில்லை
              2)தான் மிகப் படித்தவன்.(வித்யா கர்வம்) –நான் அப்படி ஒன்றும் மெத்தப் படித்தவனல்ல.
              3)தான் மிக பெரிய பணக்காரன்(தன கர்வம்) —எனக்கு வாடகை வீடுதான். எனக்கும் பைத்ருக தனம்(தகப்பன் சொத்து) இல்லை. உழைத்தால் தான் உண்டு.
              நான் யாரையும் இது வரையில் மனது, வாக்கு,உடலால் இந்த மேற்கூரிய 3 தரப்பட்ட அர்த்தங்களில் காயப்படுத்தியதில்லை.
              அப்படி மனதால் காயப்படுத்தி இருந்ததாக கருதினால் அவர்களிடம் மன்னிப்பு கேட்கிறேன். ஆண்டவனிடமும் மன்னிப்பு கேட்கிறேன். என்னைப் பொருத்தவரையில் ஜெயேந்திரன் ஒரு நீசமகன்.கீழ்மகன்.கொலைகாரன். மேலும் பார்ப்பான் என்ற போர்வையில் இவனைப் போன்று நடந்துகொள்வோரும் நீசர்களே.கீழ்மக்களே.
              என்னிடம் அந்த குறும்புகள் கிடையா. ஸமோஹம் சர்வ பூதேஷு ந மே த்வேஷோஸ்தி ந ப்ரிய:. (எல்லா உயிர்களையும் சமமாக மதிக்கிறேன்.). எல்லா இடத்திலும்/காலத்திலும்/பொருளிலும் இறைவனைக் காண்கிறேன்.
              மனம் புண்பட்ட என் சகோதரர்களிடம்,மன்னிப்பு கேட்கிறேன்.
              பணிவுடன்,
              கணேஷ்

              • ganash,
                உன்னை எவன் அந்த ஒரு குறிப்பிட்ட ஒடுக்கப்பட்ட சாதியை பார்த்து இழிவாக பேச சொன்னது ? அடுத்தவன் பீ தின்றால் நீயும் பீ தின்பியா ?
                //வினவு.காம் ல் பல பதிவர்கள் அந்த குறிப்பிட்ட சாதியைக் குறிக்கும் சொல்லை பயன்படுத்தியதை கண்டே நானும் பயன்படுத்தினேன்.//

          • கணேஷ்,
            அப்போ இந்த காலத்திர்கொப்பாத, அதாம்பா கலிகாலத்திற்கொப்பாத வேதம்,மனு,பார்ப்பனீயம் எல்லாம் எதுக்கு?

            • நண்பா,
              உபனிஷதம் என்ற நான் -காம் பகுதி உண்டு. ப்ரஸ்தானத்ரயம். அது என்றுமே செல்லும்.(நீங்கள் தப்பும் தகரமுமாக அக்னிஹோத்ரி ராமானுஜ தாதாச்சாரி யிடம் பயின்றால் (பூனூல் போட்ட பாவி) அதற்கு நான் பொறுப்பல்ல பாஸு.

      • அக்மார்க் அறிவாளி கணேஷ் அவர்களுக்கு,

        என் கேள்வி உமக்கு புரியவில்லையா? அல்லது புரியாதது போல் நடிக்கிறீரா?

        நற்செயல்களே ஒருவரை பிராமணன் ஆக்குகிறது என்றால் முதலியார், பறையன் எங்கிருந்து வந்தார்கள்? வார்த்தைக்கு வார்த்தை நான் பிறப்பால் பறையன் என்று சொல்லும்பொழுது எப்படி பிறப்பால் பறையனாக இருந்தீர்கள் எப்படி ஒருவர் முதலியாராக இருந்தார் என்று சொல்லவேண்டும் இல்லையா? அதுதானே அறிவு நாணயமும் நேர்மையும் ஆகும். இவைகள் உமக்கு துளியும் இல்லை போல் தெரிகிறதே!

        இரண்டாவதாக பறையன் என்ற சொல்லுக்கு தீயவர் என்ற பொருள் தருகிறீர். ஏற்கனவே இதைக் கண்டித்திருக்கிறேன். இது இந்துத்துவ காலிகளுக்கே உரிய சனாதனத் திமிராகும். இதில் ஒன்றும் நீர் புதிதாக சொல்லிவிடவில்லை. இந்துத்துவம் ஜனநாயகத்திற்கு விரோதமானது என்பதற்கு உமது கோமாளித்தனமும் சான்று பகிர்கிறது. அவ்வளவுதான்.

      • \\ உங்களை ஒரு ஆளே இல்லாத தீவினில் 25 ஆண்டுகள் வளர்த்தால் உங்களுக்கு எப்படி பண்பாடு ,மொழி பற்றித் தெரியும்?\\

        அதுதான் உமது நிலை. பண்பாடு பற்றியும் மொழி பற்றியும் தெரியாததால் தான் செத்தபிணத்திற்கு பேன்பார்த்துக்கொண்டிருக்கிறீர்.

        \\Mirror neuron துணையோடு பண்பாடு வளரும். ACOUSTIC NEURONS துணையோடு மொழி வளரும்.\\

        மனிதன் தோன்றிய காலத்திலிருந்தே தான் நீர் சுட்டிக்காட்டுகிற நீயுரான்கள் எல்லாம் இருந்தது. காட்டுமிராண்டிகள் எல்லாம் பண்பாடு மொழி அறிந்தவர்களா! ஒரு சமுதாயத்திற்கு மொழியும் பண்பாடும் உழைப்பினால் வருகிறது. உழைப்புதான் மனிதனை விலங்குகளிடத்திலிருந்து பிரிக்கிறது. எப்பொழுது ஒரு சமூகம் தன்னை உழைப்பில் இருந்து அன்னியப்படுத்திக்கொள்கிறதொ அந்த சமூகத்தின் பண்பாடும் மொழியும் அழிந்துதான் போகும். அதற்கு சிறந்த சான்று சமஸ்கிருதம் தான்.

        சமஸ்கிருதத்திற்கு துணைவருவது நியுரான்கள் அல்ல ஆர் எஸ் எஸ் ஆவர். நியுரான் களாவது நரம்பு செல்லின் அடிப்படை அலகுகள். ஆனால் ஆர் எஸ் எஸ்சோ முதுகெலும்பே இல்லாத பாசிச அலகுகள்.

      • சாதிவெறி கணேசா ,உன்னுடைய Mirror neuron துணையோடு பார்பன ,சாதிவெறி ,மனுதர்ம பண்பாடு ,கலாச்சாரத்தையும் உன்னுடைய ACOUSTIC NEURONS துணையோடு செத்த மொழியாகிய,பிணமாகிய,ஆபாச குப்பையாகிய சம்ஸ்கிருதத்தையும் வளர்த்துப்பா ? அப்படி தானே ?

        //Mirror neuron துணையோடு பண்பாடு வளரும். ACOUSTIC NEURONS துணையோடு மொழி வளரும்.(somebody correct me if I am wrong)//

    • அன்புள்ள உடன்பிறப்பே ,
      //ஆத்மா என்பதே ஆண்பால் என்கிற பொழுது அது பெண்களிடம் எப்படி இருக்கும்? சரிதானே! அவ்வளவுதான் உங்களது இந்துத்துவ சமஸ்கிருத இலட்சணம்.//

      ஸ ஏஷோந்தர் ஆதித்யோ ஹிரண்மய புருஷோ த்ருச்யதே! ஹிரண்ய ஸ்மஸ்ரு: ஹிரண்ய கேஸ: ! ஆப்ரநகாத் ஸர்வ ஏவ ஸுவர்ண: ! தஸ்ய யதா கப்யாஸம் புண்ட்ரீகமேவம் அக்ஷிணீ.

      இதில் வரும் ஸ:,புருஷோ,தஸ்ய -போன்ற சொற்கள் ஆண்பால்.

      மேலும் அவனுக்கு பொன்னிற மேனி .பொன்னாலான மீசை மற்றும் தாடி உண்டு. அவனே ஹ்ருதயாகாஸத்தில் உறைகிறான்.
      எனவே ஆத்மா ஆண்பால். (HRUD – this organ .AYAM – he resides)
      நீங்கள் 12 ஜோடி CRANIAL NERVES பற்றி படியுங்கள். (http://braininbrief.tumblr.com/post/6801674153/cranial-nerves-there-are-12-pairs-of-cranial). அதில் 10 ஆவது நரம்பு வேகஸ்(VAGUS). அப்படி என்றால் மூளையிலிருந்து இதயம் வரை செல்லும் மிக நீளமான நரம்பு.(லத்தீன்)

      நமது எல்லா உணர்ச்சிகளும் (5 புலன் களிலிருந்து) OPTIC – EYE(சக்ஷுஸ்) ,OLFACTORY-NOSE(க்ராணம்),SPINAL ACCESSORY – SKIN(த்வக்), HYPOGLOSSAL- TONGUE(ரஸணம்), TROCHLEAR- EAR(ஸ்ரோத்ரம்) THALAMUS –(an internal part of brain )ஐ அடைகின்றன. அங்கிருந்து
      பிறகு அவை லிம்பிக் ஸிஸ்டம் வழியாக ,மற்றும் ப்ரான்டல் லோப் அடைகின்றன. இது வரை அறிவியல் துணை வரும். இதன் பிறகு அவை வேகஸ் நரம்பு வழியே ஹ்ருதயத்தை அடைகின்றன. இந்த உருப்பில்தான் ஆத்மா உறைகிறான். இதயக்கோயில் இதுவே. எல்லா ஆத்மா வும் ஆண்பால். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும். யாதும் ஊரே யாவரும் கேளிர். இதில் ப்ராமணன்,க்ஷத்ரியன்,வைஸ்யன், ஸூத்ரந் என்பது அவரவர் குணங்களால்,செயல்களால் தானே ஒழிய பிறப்பினால் அன்று. எனவே வினவு.காம் அங்கத்தினர் ப்ராமணர்களே.நானுமே.

      அன்புடன் கணேஷ்

      • கணேசய்யர் வீ யெச் யாரோவின் முதன்மை மாணாக்கர் போலும். வேத நண்டு நரம்புத்துறையில் நிபுண்ணி. அய்யாவின் அகவாய் புறவாயிலிருந்து வேதம், நரம்பியல் எல்லாம் வயிற்றுப்போக்கு போல் பிடுங்கிக்கொண்டு ஓடுகிறது.

        உண்மை என்னவென்றால் முதல் தலை நரம்புகள்(olfactory nerve) மட்டும்தான் லிம்பிக் பகுதி வழியே ப்ரான்டல் லோப் அடைகின்றன. தொலி (trigeminal nerve) 5வது நரம்பின் முடிவுறுப்பு. spinal accessory nerve என்பது 11 தலை நரம்பு, 9 மற்றும் 10 வழியே தமது இயக்கத்தை நிகழ்த்துகின்றன. அவற்றுக்கும் தவக்களைக்கும் ஒட்டுறவில்லை. trochlear nerve 4வது நரம்பு. கண்ணின் ஒரு சதைக்கு மட்டுமான நரம்புகள். (cochleaவை troclea என்று முடிவு பண்ணி விட்டார் போலும். அது கூட தொலியைப்போல ஒரு கடையுறுப்புதான்) தாலமசுக்கும் பிறாண்டல் லோபுக்கும் புது உறவு கொடுக்கிறார். அநத வீ யெசு யாரோ தனது நோபுள் பரிசிலில் இவருக்கு பாதி வழங்க கடமைப்பட்டுள்ளார்.

        • நண்பா,
          உணர் நரம்பு(Sensory nerve )/( motor nerver) செயல் நரம்பு இலக்கத்தில் தவறு இதைப்பொய் பெருதுபடுத்தலாமோ?
          மேலும் இவ்விலக்கங்களை நானே தவறாக கூறினேன். மன்னிக்கவும்.
          (Accidental mistake)
          அன்புடன்,
          கணேஷ்

      • hypoglossal nerve (12) சுவையறிவுக்கும் உறவில்லை. அவை நாவை அசைக்கும்நரம்புகள். தசையியக்க நரம்பு. சுவை நாவிலிருந்து 5ம் நரம்பை பிடித்தும் நேராகவும் 7 மற்றும் 9 நரம்புகள் வழியே மூளைதண்டு மூளை என்று சேர்கிறது. ஒரு தசையியக்க நரம்பிற்கும் உணர்திறன் நரம்பிற்கும் வித்தியாசமறியாதநரம்பியல் நிபுண்ணி நமது கணேசய்யர். வீ எசு இராமசந்திறன் உமக்கு வேத நரம்பியல் கல்வி நன்றாகத்தான் புகட்டியுள்ளார்.

    • அன்புள்ள உடன்பிறப்பே ,
      அறவாழி அந்தணன் தாள் சேர்ந்தார்க் கல்லால் – இது புத்தரின் தர்ம சக்கரத்தைக் குறிக்கும். எனவே குறல் ஒரு பௌத்த நூல் என்பர். அறவாழி – இது விஷ்ணுவின் சக்கரத்தைக் குறிக்கும், எனவே குறள் ஒரு வைணவ நூல் என்பர். ஆனால் குறள் ஒரு பௌத்த நூல்தான். (மனிமேகலை,சிலப்பதிகாரம்,போன்றவை).
      நீங்கள் கூறியது போல ஸமண நூலன்று.
      அன்புடன் கணேஷ்

      • கணேசுக்கு,

        //(மணிமேகலை,சிலப்பதிகாரம்,போன்றவை)//

        சிலப்பதிகாரம் சமண நூல் என்று 8ம் வகுப்பு மாணவனுக்கும் தெரியும்.

        திருக்குறள் சமண நூலா? சைவ நூலா என்ற சர்ச்சைதான் நீண்டகாலமாக உள்ளதே தவிற அது பெளத்த நூல்தான் என்று எந்த தமிழ் அறிஞரும் சொன்னதில்லை.நம்ம அறிஞர்தான் சொல்கிறார்.

        அறவாழி அண்ணல் அருகனைதான்[சமணம்] குறிக்கும் என்பதற்கான இலக்கிய ஆதாரங்கள் சில.

        “ஆதியங் கட்விள் அறவாழி அந்தணன்
        அரியணைச் செல்வன் அருளாழி வேந்தன்”
        [திவாகரநிகண்டு].இது அருக துதியோடு துவங்கும் சமண இலக்கியம்]

        “அருகன் எண்குணன் நிச்சிந்தன்
        அறவாழி வேந்தன் வாமன்”–[சூடாமணி நிகண்டு]

        “அறவாழி வேந்தன் அரியணைச் செல்வன்”–[பிங்கல நிகண்டு][இதுவும் சமண இலக்கியம்]

        “களிசேர் கணையுடைய காமனையும் காய்ந்த
        அளிசேர் அறவாழி அண்ணல் இவன் என்பர்
        அளிசேர் அறவாழி அண்ணல் இவனேல்
        விளியக் குணத்துதி நாம் வித்தாவா றென்னே–[சீவக சிந்தாமணி-[1611]

        கணேஷின் அனேக கருத்துக்கள் ஆதாரமற்றது குத்து மதிப்பானது என்பதற்கு இது ஒரு நல்ல ஆதாரம்.

        • ஐயா ..
          அது எந்த மத நூல் என்று அந்த திருவள்ளுவரே நேரில் வந்தால் தான் உண்டு. குறல் வைணவ நூல் என்று பல புத்தகங்கள் நூலகங்களில் காணக் கிடைக்கின்றன.
          பௌத்த நூல் என்றும் வாதங்களுண்டு. சமணம் என்று கூறுவோரும் உளர். இந்த பொடியேன் தெரிந்து கொள்வதற்காக —-ஆசார்யனைப்பற்றி குறளில் ப்ரச்தாவம் உண்டா என்று கேட்டேன். பெண்ணுரிமை -எனக்கு ஈ.வே.ரா.பெரியாரே குரு.ஸ்டீபன் ஹாகின்ஸ் -தனக்கு குருவாக கலிலியோ கலிலீ,ஐஸக் ந்யூட்டன் பொன்றோரை குறிப்பிடுகிறார். அது போல குரு ப்ரஸ்தாவம் உண்டோ என வினா!!!…. சமணர்கள் ஆதிகுரு ரிஷபதேவர் மற்றும் பலர். அதுபோல………

          • கணேஷ் ஒரு சமாளிப்பு திலகம்!!!

            ///குறள் ஒரு பெளத்த நூல்தான்(மனிமேகலை,சிலப்பதிகாரம்,போன்றவை).நீங்கள் கூறியது போல ஸமன நூலன்று///

            இப்படி சொன்ன கணேஷின் வாய்தான்

            ///அது எந்த மத நூல் என்று அந்த திருவள்ளுவரே நேரில் வந்தால் தான் உண்டு///

            என்று சமாளிக்கிறது.ஒரு நாளுக்குள் இந்த பல்டி.

            ///பெளத்த நூல் என்றும் வாதங்களுண்டு///

            திருக்குறள் பெளத்த நூல் என்று சொல்லும் ஒரு நூலின் பெயரையோ,அறிஞர் பெயரையோ கூற முடியுமா?

            ஆணித்தரமாக அடித்து விட வேண்டியது.மாட்டிகொண்டவுடன் சமாளிக்க வேண்டியது.

      • திருக்குறள் சைவநூல், திருவள்ளுவர் தமிழ்க்கடவுளாகிய முருகனை வழிபட்டவர் என்றும் வாதாடலாம்.

        மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
        நிலமிசை நீடுவாழ் வார்.

        மலர் = மலர்க! = மகிழ்க!! (ஏவல்வினை, கட்டளைப்பொருளில்)

        மிசை = குன்றில் (அல்லது மலையில்), மிசை என்பதற்கு குன்று என்ற பொருளும் உளதாகையால்

        ஏகினான் = ஏறியவன் = முருகன்

        மாணடி சேர்ந்தார் = மாண்புமிக்க அடிகளைச் சேர்ந்தார்

        நிலமிசை – உலகில்

        நீடுவாழ்வார் = நெடிது (நோய் நொடியின்றி) வாழ்வார். என்றபடி

        மலர்மிசை = மலர்க்குன்று எனினும் ஆம்.

        கடம்ப மலர் அமர் செல்வன் = முருகன்

        முருகன் கடம்ப மலரில் அமர்ந்தவன் என்னும் பொருளில் பரிபாடலிலும் (“கடம்பமர் செல்வன்”) பொருநராற்றுப் படையிலும் (“கடம்பமர் நெடுவேள்”) என்று வருவதனால்., அவன் “மலர்மிசை ஏகினான்” என்று திருக்குறளில் குறிக்கப்படுகின்றான் என்பது ஒப்பு நோக்கின் தெளிவாகிறது.
        அமர்ந்தான் எனில் அது மேலிருந்தான் என்று பொருள்படுவதாம். இதற்குச் சூடினான் என்று பொருள் கூறுவது பொருத்தமாயின், “மிசை ஏகினான்” என்ற திருக்குறள் தொடருக்கும் “சூடினான்” என்று பொருளுரைத்தலில் இழுக்கொன்றுமில்லை.

        இப்போது சொல்லமைப்புக்கு வருவோம்.

        கடம்பு = கடம்பமலர்.

        கடம்பன் = முருகன்; கடம்பமலர் சூடியவன்; அல்லது அதில் ஏகியவன்.

        (நன்றி: சிவமாலா)

        • //உச்ச ஒலி > நிவந்த ஒலி = நிவதம் > நியதம் > நியாதம் > நிஷாதம் (சங்கீதம்)//
          // நிவதம் > நிவேதம் > நிவேத்யம் > நைவேத்யம்//
          இப்படியும் எழுதலாம்
          ஈறு ==> பேன் ==> பெருமாள்
          இவ்வாறான நையாண்டி கதம்பங்களை நூறு ஆயிரம் என நானும் கண்டுள்ளேன் . இவற்றை தொடங்கியவர் மீது வாலஸ் (அ) டார்வின்ஸ் ஆவி புகுந்திருக்கலாம் என ஐயுறுகின்றேன்.
          வடமொழியில் ககாரம்- 4 வகை ,சகாரம் – 4 வகை,டகாரம் – 4 வகை, தகாரம் – 4 வகை ,பகாரம் 4 வகை .மற்றும் ஷ,க்ஷ,ஸ,ஸ்ரீ என பல எழுத்துக்களும் உண்டு. நீர் எடுத்தாண்ட விளக்கம் கண்டு வியந்தேன்.
          1 கோழியிலிருந்து முட்டையா (அ) முட்டையிலிருந்து கோழியா?
          2 விண் மீதினில் ஏகிய பிறகு அங்கு திசைகள் கிடையா. அங்கே கிழக்கு, மேற்கு, வடக்கு,தெற்கு, மேல்,கீழ் என்பன நகைப்பிற்குரியன வே அன்றோ.
          //நிஷாதம்// எங்கே //உச்ச ஒலி// எங்கே?
          ஐயா உங்கள் மனம் புண்படுமாயின் மன்னிக்கவும் உவப்பத் தலைகூட உள்ளப் பிரிதல் அனைத்தும் புலவர் தொழில்.

  21. அன்புள்ள உடன்பிறப்பே ,

    எப்படி வள்ளுவர் அகர முதல ,என்று அகரத்தை முதலாக முதல் குறளில் வைத்து 1330 குறட்பாக்கள் இயற்றினாரோ , அதேபோல் பாணினியும் அகரத்தை வைத்தே அஷ்டாத்யாயீ என்னும் வடமொழி இலக்கணம் பாடினார். குறளிலோ கடவுள் வாழ்த்து என்று 10 பாக்கள் உண்டு. பாணினி ஒரு பாடல்கூட பாடவில்லை.

    அவரைப்பற்றிச் சொன்னால் ஏன் தவறாக எடுத்துக்கொள்கின்றீர்?
    அன்புடன் கணேஷ்

  22. தங்கையே ரெபக்கா மேரி !

    இப்பொழுதாவது வடமொழி பாடையில் போகவில்லை என ஒத்துக்கொள்ளுங்கள்.
    ஜாதஸ்ய ஹி த்ருவம் ம்ருத்யு:
    தாய் வயிற்றில் பிறந்தவன் பாடைக்குப் போவான் ! பிறப்பே இல்லாதவன் எப்படி போவான்?
    வடமொழி என்றும் சந்தஸ் என்றும் அதற்க்குப் பெயர்.
    கனபாடம் , சந்தம் , ஸீக்ஷா போன்றவற்றை ஒரு ஆசிரியரிடம் தான் கற்க முடியும். எனவே வேதம் ஒரு எழுதாக்கிளவி. ஸீக்ஷா ,வ்யாகரணம், சந்தஸ்,நிருக்தம் ,கல்பம், ஜ்யோதிஷம் என்பவை அதன் உட்கிளைகள். இவைகளின்றி மேக்ஸ் முல்லரோ ,ராமாநுஜ தாதாசாரியொ (அக்மார்க் மடையன்)
    புரிந்துகொள்ளமுடியாது.

  23. குறள் சமண மதம் சார்ந்து எழுதப்பட்டு உள்ளதா ?

    அறம் , பொருள் , இன்பம், வீடு என்று வாழ்க்கையை இந்து மதம் நான்காக பிரித்து வைத்து இருக்கிறது

    அறம் , தர்மா = பொது வாழ்க்கை
    பொருள் , அர்தா = குடும்ப வாழ்க்கை
    இன்பம் , காமா = தனி மனித வாழ்க்கை
    வீடு , மொக்ஷா = இறை அர்பணிப்பு

    திருக்குறள் இந்த மேற்கண்ட தத்துவத்தை ஒட்டி இருப்பதால் இந்து மதம் சார்ந்தது எனபது என் கணிப்பு . இதில் வீடு பேரு என்பதை கற்பனை என்று வள்ளுவர் ஒதுக்கி இருக்கலாம் அல்லது புத்தர் போதனை படி நல்லவராக இருந்தால் போதும் , இறைவன் இருப்பதை பற்றி கவலை பட தேவை இல்லை , ஒரு வேளை இருந்தால் சொர்க்கம் , இல்லை என்றால் நஷ்டப்பட ஏதும் இல்லை

    மாற்று கருத்து இருந்தால் தெரியபடுத்துங்கள் . நன்றி

  24. புத்த மதம் சைவத்தை வலியுறுத்த வில்லை . சமணமும் இந்து மதமும்தான் சைவத்தை வலியுறுத்தின . சமணர்களை பார்த்துதான் இந்து மதத்திலும் சைவம் சேர்ந்தது என்று வரலாற்று ஆய்வுகள் கூறுகின்றன .

    சமண மதத்தில் இன்பம் ( காமா ) என்பதை பற்றி நிலைப்பாடு பற்றி அதிகம் தகவல்கள் கிடைக்கவில்லை .

    ஆனால் தர்மா கர்மா மொக்ஷா போன்றவை அதிலும் இருகின்றன .

    அதெல்லாம் சரி, திருவள்ளுவர் தாமசை பார்த்து பேசி கற்று கொண்டு தான் திருக்குறள் எழுதினார் என்று கூட கிருத்துவ அமைப்புகளில் ஒன்று நிலைப்பாடு எடுத்து அதை படமாகவும் எடுக்க முற்பட்டார்கள் என்று கேள்விபட்டேன் . எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை

  25. ________கணேசா, ஊருல இருக்கும் எல்லா பொறுக்கி, _______ பசங்களுக்கு ஏதாவது பேர் வைக்கணும் என்று __________ நீ ஆசை பட்டா அய்யர்,அய்யங்கார்,நம்பூதிரி என்று வை. எதுக்கு_ சமுக,பொருளாதார ரீதியில் ஒடுக்கபட்ட மக்களின் பபெயரை வைத்து அழைகிற??

    //Kanchi sankarachari born from brahmin but still he is a paraiyan(because of deeds and attitude.)
    //

    • ஐயா ..
      நானும் தாழ்த்தப் பட்ட சாதிதானுங்க. ஜெயேந்திரன் கொலைகார்ன் ….பண்பாடு அறியாதவன் …ஹிட்லர் என்று சொல்ல வந்தேன்……தவறாக இருந்தால் மன்னிக்கவும்.

      • இஸ்கான் ____ கணேசா ,

        எந்த ஒடுக்கபட்டவரும் தன்னையே உண் போல இழிவாகாக பேசமாட்டார். முதலில் காஞ்சி சங்கராசாரியை ஒடுக்கவருடன் இணைத்து பேசினாய்.[1.] இப்போது காஞ்சி சங்கராசாரியை கொலைகார்ன் ….பண்பாடு அறியாதவன் …ஹிட்லர் என்று கூறுகின்றாய்.[2.] ___________ பிறந்த கணேசா , முதலில் நீ கூறிய முதல் வாக்கியத்தை[1.] வாபஸ் வாங்கி ஒடுக்க பட்ட மக்களிடம் மன்னிப்பு கேள்.

        1.//Kanchi sankarachari born from brahmin but still he is a paraiyan(because of deeds and attitude.)
        //

        2.//நானும் தாழ்த்தப் பட்ட சாதிதானுங்க. ஜெயேந்திரன் கொலைகார்ன் ….பண்பாடு அறியாதவன் …ஹிட்லர் என்று சொல்ல வந்தேன்……தவறாக இருந்தால் மன்னிக்கவும்.//

  26. ஐயா தென்றல்,
    ஒரு பேட்மிட்டன் விளையாட்டு(எதோ ஒன்று) எடுத்துக் கொள்ளுங்கள். அதற்கென சில விதிமுறைகள் ,சட்டங்கள் உள்ளன. அதை மீருவோரிடம் எப்படி விளையாட முடியும். நீங்கள் 5 சர்வீஸ் போட்டால் எனக்கும் 5 சர்வீஸ் கொடுக்கப் படட்டும். நீங்க 8 முறை வென்றால் நானும் ஒரு 2 முறை வெல்லலாம். ஒரு வினா கேட்கப்பட்டால் அதற்கு விடை கொடுக்கப் பட வேண்டும். தனி மனித தாக்குதல், வசை எதற்கு? ஒரு நூல்/கருத்து பற்றி தெரியவில்லையெனில் நான் உங்களை கேட்கலாம் (அ) நீங்கள் என்னைக் கேளுங்கள் .ஒரு சகோதரனாக/விருந்தினனாக உங்களை மதிக்கிரேன். ஆனால் உங்களிடமே கற்று உங்களையே திருப்பி வாதாடவும் செய்வேன்.அது வேறு இது வேறு.
    அன்புடன்,
    கெணேசு

  27. உடன்பிறப்பே,

    இன்றியமையாது என்ற சொல்லினை – ஐயா தேவநேய பாவாணர் கண்டார் என அறிகிறேன். இதற்கு நியதம் என்று சுருங்க சொல்லலாம். (please correct if i am wrong) .ந்யாய பாஷையில் ஒரு கதை. என்னைப் போன்ற ஒரு தற்குறி ,துணி நெய்தல் என்ற தொழில் கற்க விழைந்தான். ஒரு துணி நெய்யும் சகோதரன் இல்லம் அடைந்தான். அங்கே நூல் ,தறி/அதன் உபகரணங்கள் கண்டான். அங்கே ஒரு கழுதையும் இருந்தது. ஒஹோ துணி என்ற ஒரு பொருளுக்கு நூல் நியத காரணம் என அறிந்தான். தறி உபகரணம். நெய்பவர் நிமித்த காரணம். அங்கு போனவன் நானேயன்றோ !!! எனவே கழுதையும் ஒரு நியதம் என்று தவறாக அறிந்தேன். பிறகு அவர் திருத்தினார்.

    இதில் வரும் நியதம் என்ற சொல்லிற்கு இணையான சொல்லினை என் தாய்மொழியில் கற்க விழைகிறேன். இதில் எந்த உள் குத்தும் இல்லை. பிச்சை புகினும் கற்கை நன்றே அன்றோ !!!அன்பு கூர்ந்து அருள் செய்வீர்….
    பணிவுடன் ஒரு ஆசானைத்தேடும்,
    கெணேசு

    • *பார்ப்பனமகனே!

      //இன்றியமையாது என்ற சொல்லினை – ஐயா தேவநேய பாவாணர் கண்டார் என அறிகிறேன். இதற்கு நியதம் என்று சுருங்க சொல்லலாம். (please correct if i am wrong) ///

      நியதி = சட்டம், விதி அல்லது விதிமுறை/செய்முறை)

      நியதி > நியதம் (ஒரு பொருளை உருவாக்க தேவையான நியதிகள் அதாவது இன்றியமையாதவற்றை, நியதம் எனவும் கொள்ளலாம்)

      இவ்வாறு தமிழில் பல சொற்கள் உண்டு.

      நிவத்தல் = உயர்த்தல்

      நிவதம் > நிவேதம் > நிவேத்யம் > நைவேத்யம் = உயர்த்திக் காண்பிக்கும் படையல்

      உச்ச ஒலி > நிவந்த ஒலி = நிவதம் > நியதம் > நியாதம் > நிஷாதம் (சங்கீதம்)

      நியதம் என்பதற்கு தமிழில் அடக்கம், எப்பொழுதும், நிச்சயம் என்ற கருத்துக்களும் உண்டு.

      தேவநேயப்பாவாணர் நியதம் என்ற சொல்லை, இன்றியமையாதது என்ற கருத்தில் பாவித்தார் என்பது உங்களுக்கே சரியாகத் தெரியாத போது, இப்படி உளறி, உங்களின் நேரத்தையும், மற்றவர்களின் நேரத்தையும் வீணாக்குவதேன்? அல்லது நியதம் என்பது சமக்கிருதச் சொல் என்ற உங்களின் ஆழ்ந்த நம்பிக்கையும் அல்லது சமக்கிருதம் தமிழை விட உயர்ந்தது என்ற உங்களின் சமக்கிருதப்பற்றும் தான் உங்களின் இந்த பிதற்றல்களுக்கெல்லாம் காரணமென்றால் அதை நீங்கள் ஒப்புக் கொள்ள முன்பே இங்கு எல்லோருக்கும் தெரியும். 🙂

      துணி நெய்யும் தொழிலைக் கற்கப் போனவன், அங்குள்ள எல்லாவற்றையும் ‘நியதம்’ என்று தவறாக புரிந்து கொண்டான் என்றால் அவன் தற்குறி மட்டுமல்ல, சரியான கேணையன், அவன் கணேசனின் நண்பனோ அல்லது உண்மையிலேயே கணேசன் தன்னுடைய அனுபவத்தைத் தான் கூறுகிறாரோ என்னவோ யார் கண்டது. 🙂

      * சங்கத்தமிழ்

      • இந்த சமக்கிருதவெறிப் “பார்ப்பனமகனின்” தமிழை இழிவுபடுத்தும் உளறல்கள் சகிக்க முடியாதளவுக்கு தொடர்ந்து கொண்டே போகிறது. தமிழர்களுக்குத் தெரியாத, தேவைப்படாத சமக்கிருதச் சொற்களில் உளறினால், தன்னை அதிபுத்திசாலியாகக் காட்டிக் கொள்ளலாம், என்றோ அல்லது இங்குள்ள தமிழர்களை முட்டாள்களாக்குவதாக நினைத்துக் கொண்டு, குரங்கு கொப்புக் கொப்பாக தாவுவது போல், தானே ஆரம்பிக்கும் விடயங்களை விளக்காமல், வெவ்வேறு விடயங்களுக்குத் தாவிக் கொண்டிருக்கிறார். இவருக்குத் தமிழும் தெரியாது, இவருக்கு சமக்கிருதம் தெரிந்தாலும், அதைப்பற்றி அலட்டிக் கொள்ள வேண்டிய தேவையோ அல்லது கட்டாயமோ தமிழர்களுக்குக் கிடையாது.

        இவர் தனது முன்பின் முரணான புளுகுகளால் எப்படித் தான் தனது அடையாளத்தை மறைக்க முயன்றாலும், இவருடைய பதில்களில் காணப்படும் நக்கல், நளினம், தேவையற்ற உடன்பிறப்பே போன்ற சொற்கள், அதில் மறைந்துள்ள ஏளனம், எல்லாம் இவர் ஒரு சமக்கிருதவெறி பிடித்த (சு.சாமி போன்ற) தமிழெதிரிப் பார்ப்பான் என்பதைக் காட்டிக் கொடுத்து விடுகிறது, ஆனால் இவர் என்னடாவென்றால், தமிழர்களை முட்டாள்களாக்கி, ஏதோ வெற்றிகரமாக தமிழர்கள் மத்தியில் புகுந்து விளையாடுவதாக நினைத்துக் கொண்டு தொடர்ந்து பிதற்றுகிறார். எதற்கெடுத்தாலும் மற்றவர்களின் கருத்துக்களை மட்டுறுத்தல் செய்வது மட்டுமன்றி, அவர்களை இங்கு வராமலே செய்து விடும் வினவு நிர்வாகம் இவரது உளறல்களை மட்டும் அப்படியே வெளியிட்டு, ஊக்கமளித்து வேண்டுமென்றே தமிழர்களுக்கு எரிச்சலையூட்டுகின்றனர் போல் தெரிகிறது.

        • ஆம் வினவு, சென்னையில் கால்டுவெல் 200-ம் ஆண்டு கருத்தரங்கம் நடத்தும் அதே சமயத்தில், கணேசு பேன்ற கஞ்சா குடிகாரர்களின் மனகழிசடைகளையும் மட்டுறுத்தல் செய்யாமல் வெளியிட்டு, வினவு வாசகர்கள்/பின்னுட்ட பதிவர்கள் நேரத்தையும் வீண் அடிக்கின்றது. சாதிவெறி கணேசு இதுவரை 100க்கும் மேலான கழிசடை பின்னுட்ட பதிவுகளை வெளியிட்ட போதும்,அவற்றில் சில ஒடுக்க பட்ட மக்களை இழிவு செய்யும் அளவுக்கு இருக்கின்ற போதும் ,வினவு அட்மின் அவற்றை கண்டும் காணாமலும் உள்ளது. மேலும் வினவு தம்மை ம க இ க என்ற முற்போக்கு அமைப்பின் ஆதரவாளன் என்று கூறிக்கொள்ளும் நிலையில் வினவின் இத்தகைய தவறான போக்கு தமிழர்க்கு கண்டிப்பாக மன வருத்தத்தை அளிக்கத்தான் செய்யும்.

          //எதற்கெடுத்தாலும் மற்றவர்களின் கருத்துக்களை மட்டுறுத்தல் செய்வது மட்டுமன்றி, அவர்களை இங்கு வராமலே செய்து விடும் வினவு நிர்வாகம் இவரது உளறல்களை மட்டும் அப்படியே வெளியிட்டு, ஊக்கமளித்து வேண்டுமென்றே தமிழர்களுக்கு எரிச்சலையூட்டுகின்றனர் போல் தெரிகிறது.//

        • //பெரியாழ்வார் அருளிச்செய்த திருப்பல்லாண்டு
          முதற்பத்து
          நெய்யிடைநல்லதோர்சோறும் நியதமும்அத்தாணிச்சேவகமும் 27.1.3.1//

          எம்மீது கொண்ட வெம்சினத்தாலே உணர்ச்சி மிகுந்து —“நெய்யிட நல்லதோர் சோறும்”— திருப்பல்லாண்டு முதற்பத்து என்றீர்.
          பெரியாழ்வார் இயற்றியது 2 நூல்கள். அவையாவன (1) திருப்பல்லாண்டு மற்றும் (2) பெரியாழ்வார் திருமொழி. இதில் நெய்யிடைநல்லதோர்சோறும் நியதமும்அத்தாணிச்சேவகமும் என்னும் பா திருப்பல்லாண்டினை சேர்ந்தது. இது வெறும் 12 பாக்கள் கொண்ட நூலிலே 8வது பாசுரம். நீர் எழுதியது போலே முதற்பத்து என்றால் –“வண்ண மாடங்க்கள் சூழ்”– என்று தொடங்கும் பெரியாழ்வார் திருமொழி. இது 5 பத்துகளுடன் 461 பாக்களும் கொண்டதாகும். 12 பாக்கள் கொண்ட நூலிலே பத்து என்ற எண்ணீக்கை கிடையா.
          http://www.dravidaveda.org/index.php?option=com_content&view=article&id=46&Itemid=61
          சரியாகவும் பொறுமையாகவும் பின்னூட்டம் இடவும். திருக்குறல் படித்தால் மட்டும் போதாது. (கற்க கசடற கற்பவை கற்ற பின் நிற்க அதற்க்குத் தக. /சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி…….அன்பரே …நான் உம்முடைய சகோதரன் .எதிரி அன்று. நினைவில் நிறுத்தும்.

        • கணேசா,

          அய்யா உங்க அலும்பு தாங்க முடியலய்யா. இன்றியமையா என்ற சொல்லை பிரித்தால், இன்றியமையா —> இன்றி + அமையா

          நீரின்றியமையா உலகு — நீர் + இன்றி + அமையா உலகு.

          இது பல நூறாண்டுகளுக்கு முன்பே வள்ளுவன் எழுதிய வாக்கு. இதுல எங்க உங்க சமத்கிருத கட்ட வண்டிய நுழைக்க பாக்குறீங்க.

          ஒருவேளை பாவாணர் அல்ல வள்ளுவனே இந்த சொல்லை திருடியிருப்பரோ?

          நன்றி

        • அன்புள்ள உடன்பிறப்பே !!!
          http://www.scribd.com/doc/111740974/Tarka-Bhasha-of-Keshava-Mishra-Tr-by-S-R-Iyer
          கேஸவ மிஸ்ரர் என்பவர் வடமொழியில் எழுதிய தர்கபாஷை என்னும் நூலின் ஆங்கில மொழி பெயர்ப்பினை (மொழி ஆக்கம் S.R IYER) படிக்கப் பெற்றேன்(ENGLISH). அதன்கண் கொடுக்கப்பட்ட பல அறிவியல் சம்மந்தமான விஷயங்களை எம் மக்கள் கற்கும்படியாக அதனை மொழிபெயர்க்கவும் விழைந்தேன்.
          அந்நூலில் 40 பக்கம்(pdf page no 83) ………” இந்த தேற்றங்களை (a language other than Sanskrit) வேறு மொழியில் மொழிபெயர்ப்பது சுலபமன்று” என வடமொழியிலேயே /அப்படியே வடித்திருந்தார். அதனால் ஆர்வம் கொண்ட யாம் அந்நூலினை எப்படியும் எம் தாய் மொழியாம் தமிழில் மொழி பெயர்த்தே தீருவது என தணியாத ஆர்வம் கொண்டோம்.
          அதில் கூறியிருந்த சில சொற்களை மொழி பெயர்ப்பிலே உதவ யாரேனும் தமிழ் ஆர்வலர் உண்டோ என தேடினேன். [Please check my update on point ….27 again.]
          மனசாட்சியிருந்தால் 27 எண் கொண்ட பின்னூட்டத்தில் என்ன எழுதினேன் என்று பார்க்கவும் …..

          • கணேஷ்,

            தாங்கள் மொழிபெயர்ப்பில் ஈடுபடுவதுக் குறித்து நான் ஏதும் தவறாக கூறவில்லை.
            எனது மறுமொழியானது தங்களுடைய விசமத்தனமான ஊகத்திற்கு.
            //அநந்யதாஸித்தி என்ற சொல்லே இன்றியமையாது என்று ஆனதோ…//

            நன்றி,

            • நண்பா,

              சுட்டு எண் // 27.1.3.1.2// ஐக் காண்பீர்.
              நியதம் – வடசொல்லே என நிரூபித்தாகி விட்டது.
              இதற்கு நேரான தாய்மொழிச் சொல் என்ன?
              அன்புடன்,
              கணேஷ்

      • //நிவதம் > நிவேதம் > நிவேத்யம் > நைவேத்யம் = உயர்த்திக் காண்பிக்கும் படையல்

        உச்ச ஒலி > நிவந்த ஒலி = நிவதம் > நியதம் > நியாதம் > நிஷாதம் (சங்கீதம்)//

        எனக்கு கலிலியோ,ஐன்ச்டைன் பிடிக்கும்.ஆனால் நேரில் காணும் வாய்ப்பில்லை. நான் வாழும் காலத்திலே வாழ்கிறீர். நேரிலும் காணக் கிடைப்பீர்.

        ஆனால் நான் தேடிய வாலஸ் நீவிரே ஆகுக. டார்வின்ஸ் நீவிரே ஆகுக.

        நான் வாழும் காலத்திலே வாழ்கிறீர். நேரிலும் காணக் கிடைப்பீர்.

        குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான். சிம்பன்ஸியின் டீ.என்.யே 90% மனிதனை ஒத்துளது. [[அப்ப ஏங்க பேச முடியலை]].. ஆனால் கிளி சிலசில வார்த்தைகளையாவது சொல்கின்றதே.??]]]. ஒரு சிம்பன்ஸிக்கு அதன் சிறு வயது முதல் கற்பித்தால்— எவ்வளவு கடினமான வாக்கியத்தையும் ,எந்த மொழியிலும் புரிந்து கொள்ள இயலும்.[[A BRAIN STORY – BBC]] பேச மட்டும் முடியாது… கிளியினால் அர்த்தம் புரிந்து கொள்ள முடியாது.
        ஐயா டார்வின்ஸ்/வாலஸ்,
        குரங்கிலிருந்து மனிதன் பிறக்கவில்லை. குரங்கு,புலி,பறவை,தாவரம்,மீன்,ஆகிய இவ்வெல்லா ஜீவர்களுக்கும் தந்தை காச்யபர் என்னும் ரிஷியே. இதை வ்யாசராகிய நீரே புராணங்களிலே எழுதிநீர். எனவே டார்வின்ஸ்/வாலஸ் கொள்கை சரியே …ஆனால் கொஞ்சம் தவறு….அதாவது மனிதனுக்கும், எல்லா உயிர்களுக்கும் ஒரு மூதாதையே.

        சரி விட்ட இடத்திற்கு வருவோம்.

        பாவாணர் வடமொழி ,தென்மொழி இரண்டையும் பயின்றிருப்பர். அங்கிருக்கும் சில சொற்கள் இங்கிருந்து சில சொற்களை (வடிவம் ,ஒளியில் ஒத்த வெறும் சில)எடுத்து இதிலிருந்தே இது வந்தது என்று எழுதி இருப்பர்.

        ஆனால் ஆதாரம் எங்கே?

        அதாவது குரங்கிலிருந்து மனிதனா —-தவறு.[[ ஆனால் கிட்டத்தட்ட சரியவே தோன்றும் DNA research]]
        ரிஷியிலிருந்து (அவர் மனிதனல்ல)மனிதனும், குரங்கும் – சரி.

        • //ஆனால் ஆதாரம் எங்கே?//

          கணேசு,

          எனக்கும் நாகேசின் கோமாளித்தனம் பிடிக்கும் ஆனால் நேரில் காணும் வாய்ப்புக் கிடைக்க முதலே போய்ச் சேர்ந்து விட்டார். என்றாலும் நாகேசின் வடிவில் கனேசுவை நான் காண்கிறேன். ஏனென்றால் உம்மைப்போலவே நாகேசுக்கும் கேள்வி கேட்கமட்டும் தான் தெரியும். நீர் சமக்கிருத வார்த்தைகளென உளறிய எதற்குமே இதுவரைக்கும் எப்படி உருவாகியது என்பதைக் காட்டும் வேர்ச்சொல்லை/ஆதாரத்தை தந்ததில்லை. வெறும் சப்பைக்கட்டுக் கட்டிக் கொண்டே, இந்த இணையதளத்தில் எத்தனையோ பக்கங்களை வீணாக்கி விட்டீர். இரவல் வாங்கிய சொற்கள் எதற்கும் எந்த மொழியிலுமே வேர்ச்சொற்கள் இருக்காது என்பதைத் தெரியாதளவுக்கு முட்டாளல்ல நீர் அல்லவா? 🙂

          சமக்கிருதம் தமிழிலிருந்து இரவல் வாங்கிய ஆயிரக்கணக்கான சொற்களில் நியதமும் ஒன்று.

          நி என்ற வேர்ச்சொல்லிலிருந்து உருவாகியது நியதி > நியதம்

          சுட்டொலி – நி, நிம், நின் – உயர்ந்த, மேலான, Lofty,

          த+ நி >தனி = உயர்ந்து நிற்பவர் = கடவுள் > அவனை வணங்கும் விதிமுறை > நியதி

          நியதி> நியதம் = நித்தம் அல்லது அடக்கம் (நித்தமும் கடவுளை பணிவோடு வணங்கும் நியதி)

          பெரியாழ்வார் அருளிச்செய்த திருப்பல்லாண்டு
          முதற்பத்து

          நெய்யிடைநல்லதோர்சோறும் நியதமும்அத்தாணிச்சேவகமும்
          கையடைக்காயும்கழுத்துக்குப்பூணொடு காதுக்குக்குண்டலமும்
          மெய்யிடநல்லதோர்சாந்தமும்தந்து என்னைவெள்ளுயிராக்கவல்ல
          பையுடைநாகப்பகைக்கொடியானுக்குப் பல்லாண்டுகூறுவனே

          மெய் உயிர் இயைவு: = நியதம்

          ந்+இ = நி

          ய்+அ = ய

          த்+அ = த

          ம் = ம்

          • அன்புள்ள உடன்பிறப்பே !!!
            http://www.scribd.com/doc/111740974/Tarka-Bhasha-of-Keshava-Mishra-Tr-by-S-R-Iyer
            கேஸவ மிஸ்ரர் என்பவர் வடமொழியில் எழுதிய தர்கபாஷை என்னும் நூலின் ஆங்கில மொழி பெயர்ப்பினை (மொழி ஆக்கம் S.R IYER) படிக்கப் பெற்றேன்(ENGLISH). அதன்கண் கொடுக்கப்பட்ட பல அறிவியல் சம்மந்தமான விஷயங்களை எம் மக்கள் கற்கும்படியாக அதனை மொழிபெயர்க்கவும் விழைந்தேன்.
            அந்நூலில் 40 பக்கம்(pdf page no 83) ………” இந்த தேற்றங்களை (a language other than Sanskrit) வேறு மொழியில் மொழிபெயர்ப்பது சுலபமன்று” என வடமொழியிலேயே /அப்படியே வடித்திருந்தார். அதனால் ஆர்வம் கொண்ட யாம் அந்நூலினை எப்படியும் எம் தாய் மொழியாம் தமிழில் மொழி பெயர்த்தே தீருவது என தணியாத ஆர்வம் கொண்டோம்.
            அதில் கூறியிருந்த சில சொற்களை மொழி பெயர்ப்பிலே உதவ யாரேனும் தமிழ் ஆர்வலர் உண்டோ என தேடினேன். Please check my update on point ….27 again

          • உடன்பிறப்பே,
            நண்பரே வீயாசானே !!
            கீழ்காணும் சுட்டியைக் பாரும்!! ..
            http://dravidaveda.org/index.php?option=com_content&view=article&id=46&Itemid=61
            நெய்யிடை நல்லதோர் சோறும் “//நியதமும்//” அத்தாணிச் சேவகமும
            கையடைக் காயும் கழுத்துக்குப் பூணொடு காதுக்குக் “//குண்டலமும//”
            மெய்யிட நல்லதோர் சாந்தமும் தந்துஎன்னை வெள்ளுயி ராக்கவல்
            பையுடை “//நாகப்//” பகைக்கொடி யானுக்குப் பல்லாண்டு கூறுவன
            நியதம், குண்டலம், நாகம் – வடசொற்கள்.

            ஆசான் என்பவன் ப்ரமம்(தவறான் அறிவு),ப்ரமாதம்(விபத்து-கவனக்குறைவு) ,விப்ரலிப்சை(உண்மையை விடுத்துத் தன் கருத்து மேலேற்றிச் சொல்லல்) இன்றி கற்பிப்பவன்.
            ஆனால் நீரோ இம்மூன்று குற்றமும் கொண்டீர். நீர் ஒரு புலவர்…..ஹ்ம்.!!!!
            ஆசான் என்பவன் ப்ரமம்(தவறான் அறிவு),ப்ரமாதம்(விபத்து-கவனக்குறைவு) ,விப்ரலிப்சை(உண்மையை விடுத்துத் தன் கருத்து மேலேற்றிச் சொல்லல்) இன்றி கற்பிப்பவன்.
            ஆனால் நீரோ இம்மூன்று குற்றமும் கொண்டீர். நீரெல்லாம் ஒரு புலவர்…..ஹ்ம்.!!!!
            முதலில் தமிழை நன்றாகப் பயின்மின். பின்னர் தொல்காப்பியம், சேனாவரையர் ஒப்பிலக்கணம் பயிலலாம்.
            நீவிர் வீயாசானுமல்லீர்…நீவிர் ஒரு பொய்யாசானே!!!
            அன்புடன்,
            கணேஷ்

            • இது சமக்கிருதவெறிப் பார்ப்பன இணையத்தளம். விளக்க உரை கூட, சகிக்க முடியாத சமக்கிருத தமிழில் தமிழ்கொலையுடன் உள்ளது. இங்கு பேசப்படும் பிரச்சனையே அதுதான். இந்த லட்சணத்தில் அவாளோட இணையத்தளத்தை ஆதாரம் காட்டும் உங்களுக்கு அறளை, கிறளை பெயர்ந்து விடவில்லையே? 🙂

            • பார்ப்பனமகனே!:)

              குண்டலம் ‘குல்’ என்ற தமிழ் வேர்ச்சொல்லிருந்து உருவாகிய தமிழ்ச் சொல். சங்கதம் தமிழிலிருந்து இரவல் வாங்கிய சொற்களில் ஒன்று.

              குல் > குண் > குண்டு = உருண்டை, உருட்சி, திரட்சி. குண்டம் > குண்டலம் =குண்டான காதணி (வட்டம், சுண்ணம்)

              குல் என்பது வளைவுப் பொருள் தரும் ஒரு வேர்ச்சொல். அதனின்று, வளைவு, கோணல், வட்டம், வளையம், உருட்சி, திரட்சி, குழற்சி, சுழற்சி, சுற்றல், சூழல் முதலிய பல உறவியற் கருத்துள்ள பற்பல சொற்கள் தொடர்ந்து கிளைத்துள்ளன.

              அவை வருமாறு :-

              குல் – குலா – குலவு – குலாவு. குலவுதல் = வளைதல்.

              குல் – குர் – குர – குரம் = வட்டமான குதிரைக்குளம்பு. குரல் = வளைந்த தினைக்கதிர்.

              குரகம் = வளைந்த கழுத்துள்ள நீர்ப்பறவை. குரங்கு = வளைவு கொக்கி குரங்குதல் = வளைதல், குரவை = வட்டமாக நின்றாடுங் கூத்து. குரங்கு – குறங்கு = கொக்கி. குறங்கு – கறங்கு, கறங்குதல் = சுழலுதல், கறங்கு = காற்றாடி. கறங்கல் = வளைதடி, உ – அ, திரிபு, ஒப்புநோக்க: முடங்கு – மடங்கு, குடும்பு – கடும்பு, குறகு = வளைந்த கழுத்துள்ள கருவி.

              குல் – குன் – குன்னா. குன்னாத்தல் = உடம்பு கூனிப்போதல். குனி, குனிதல் = வளைதல், வணங்குதல். குனிப்பு = வளைந்தாடுங் கூத்து. குனுகு, குனுகுதல் = கடுஞ் சிரிப்பில் உடம்பு வளைதல். கூனல் = வளைவு, முதுகு வளைவு. கூனி = வளைந்த சிற்றிறால், கூனை = கூனுள்ள தோற்சால்.

              குல் – குளை – குளவி – கொடுக்குள்ள தேனீ. குளிகை = மருந் துருண்டை, வளைதடி, திரட்சி. குழல், குழலுதல்-சுருள்தல்.

              குல் – குண் – குண்டு = உருண்டை, உருட்சி, திரட்சி. குண்டம் = உருண்டு திரண்ட பன்றி,

              குண்டன் = உருண்டு திரண்டவன், வளைந்தது. குண்டுசட்டி = உருண்ட சட்டி. குண்டா = குண்டுசட்டி. குண்டை = உருண்டு திரண்ட காளை, குண்டுசட்டி. குண்டலம் = வட்டம், சுன்னம், குண்டான காதணி.

              குண் – குண – குணகு. குணகுதல் = வளைதல், குணங்கு. குணங்குதல் = வளைதல். குணக்கு = வளைவு. குணலை = உடல்வளைவு, வளைந்தாடுங் கூத்து குணி = முடமானது. குணுக்கு = காதிலணியும் உலோக வளையம். குணுக்குதல் = வளைத்தல்.

              நியதம், குண்டலம், நாகம் போன்ற சொற்களை வடமொழி தமிழிலிருந்து இரவல் வாங்கவில்லை, அவை வடமொழிச் சொற்கள் என்பதற்கு சமக்கிருதத்தில் அவற்றின் வேர்ச்சொல்லைக் காட்டவும். 🙂

              • Dear Brother,
                vinavu never allows me to update my perspectives.
                Hundreds of items being discarded/rejected.
                Kindly wait till they update mine.

                I apologize for spelling mistakes ,my dear loving brother.

                Regards,
                Ganesh

              • உடன்பிறப்பே,
                நம் நண்பருக்கு சாதி பார்ப்பானாய்ப் பிறக்க மிகவும் அவா போலும். எனவேதான் என்னைப் பார்ப்பனமகனே எனப் பலவாக விளிக்கின்றார் போலும். ஐயா, நான் எத்தனைஜென்மம் எடுத்தாலும் எம் தந்தை ஈ.வே.ரா.பெரியாரின் மகனாகவே இருக்க விருப்பம். அண்ணல் அம்பேத்கர்,அவதாரபுருஷன் புத்தன்,ஸ்ரீமத்ராமானுஜர் ,தேவனின் மகன் யேசுபிரான் பொன்றோரின் தொண்டருக்குத் தொண்டு புரியவே எமக்கு அவா.எம் மக்கள் தொண்டே போதும்.
                எமக்கு செருக்கு தரவல்ல பதவியோ,புகழோ,பித்துப்பிடிக்கும் அளவு/அடிமையாக்கும் செல்வமோ ,பிறரை அவமதிக்கச் செய்யும் தவறான கல்வியோ வேண்டாமே !!
                1)அன்பிலார் எல்லாம் தமக்குரியர்.
                2)அந்தணர் என்பர் அறவோர்
                3)கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக.
                எமக்கு கல்விச்செருக்கு, குலச்செருக்கு,செல்வச்செருக்கு மீது மிகவும் வெறுப்பு.
                வெறுப்பு என்னும் கேடானது , செருக்கிடம் காட்டிடின் குணமாம்.
                அன்புடன்,
                கணேஷ்

      • அன்புள்ள உடன்பிறப்புக்களே !!!

        புத்தன் பிறந்தும் திருத்த முடியாத சாதி வெறி பிடித்த, இந்த நாட்டிலே பிறந்து அவரால் முடியாத செயலாம் சமூகநீதியை கொணர்ந்தவர் மற்றும் இன்னாட்டு அரசியல் அமைப்புச் சட்டத்தின் தந்தையாம் பாரத்ரத்னா. டாக்டர். பீ.ஆர்.அம்பேத்கர். இந்த நாட்டிலே அவருடைய பெயராலே விளங்கும் ஒரே மாவட்டம் எமது வடாற்காடு அம்பேத்கர் மாவட்டம் ஆகும். அண்ணார் பிறந்த மாகாணமாம் மத்திய பிரதேசத்துக்கும் இல்லாத சிறப்பு கொண்ட இப்பார்புகழ் மாவட்டத்தில் பிறந்து அவர் தந்த கொடையால் இன்று ஒரு பொறியாளனாக இருக்கிறேன் என்பதில் முதற்கண் பெருமை கொள்கிறேன்.
        இன்று இந்நாட்டில் எம் சகோதரிகள் இன்று கல்வியில்(60% பெண்டிரெல்லோரும் முதுநிலைப் பட்டதாரிகளே), தொழிலில், அரசியலில், வணிகத்தில் என்று ஆணைவிட பெண்ணே உயர்ந்தவர் என்று உயரும்படி மீப்பெரும் சேவை புரிந்தவர் எம் தந்தை ஈ.வே.ரா பெரியார் ஆவர். அவரை 96 அகவை அளவுக்கு பூர்ண ஆயுளுக்கும் நோய் நொடியற்று வாழும்படி அணுக்கத் தொண்டாற்றிய அம்மை எங்கள் மணியம்மை. அந்த எம் எம்மையை இந்நாட்டுக்குத் தந்த மாநகரம் எமது வேலூர் மாநகரம்.(எம் மாவட்ட ஆட்சியர் அலுவகத்தின் பெயர்ப் பலகையும் எம் அம்மையின் பெயரில் வணங்கா நிற்பதனைப் பாரீர்.
        இங்கு வ்யாசன் என்ற பெயரிலே எம்மீது வெம்சினம் கொண்டார் ஒருவர். அவருக்கும் சொல்வேன். நண்பா!! , உமது பெயரிலே அமர்ந்துரையும் அந்த வ்யாசர்– வடமொழியில் எழுதியது இந்நாட்டு தர்சனங்களில் ஒன்றும், உலக ப்ரசித்தி பெற்றதும், சாரீரக சாஸ்த்ரம் என்றும் ப்ரம்ம சூத்ரம் என்று பெயருடையதும், 4 பாதங்கள்,156 அத்யாயங்கள் ,545 சூத்ரங்கள் கொண்டதுமான க்ரந்தம். அவர் இன்னூலினை இயற்ற முழுதுமாக,(ஒரு சிறு பகுதியும்/சொல்லும் விடாதபடி) மூலனூலாய் விளங்குவது எம் தாய் மொழியாம் அமிழ்தினும் இனிய தமிழிமொழியிலமைந்ததும் 1102 பாக்கள் கொண்ட திருவாய்மொழி என்னும் நூல். இன்னூலினை அருளிச்செய்தவர் சடகோபர் என்றும் காரிமாறன் என்றும் நம்மாழ்வார் என்ற பெருமகனார். அவர் பிறந்த ப்ராம்மனர் அல்லாத குலத்தில் பிறந்தவன் என்று இந்தப் பொடியேனை அறியலாம். எனவே யாம் பார்பனன் அன்று.

        // *பார்ப்பனமகனே! 27.1 //
        பின்பு ஏன் அந்த வடமொழிக்குப் பல்லக்கு தூக்குகின்றீர் என நீவிர் வினவுவது புரிகின்றது மேலும் கேண்மின்.

        • திரு. கணேசு,

          நான் “பார்ப்பனமகனே” என உங்களை விளித்தது தவறு என நீங்கள் நினைத்தால், அது தவறு. சமக்கிருதவெறி பிடித்த, தமிழெதிதிரிப்பார்ப்பனர்களை (பார்ப்பனர்கள் எல்லோருமே தமிழுக்கும்/தமிழருக்கும் எதிரிகளென நான் நினைக்கவில்லை.) விட மோசமாக, தமிழைச் சமக்கிருதத்துடன் ஒப்பிட்டு நீங்கள் உளறிய உளறல்கள் பொறுக்கவே முடியாமல் போன பின்பும் கூட, நான் உங்களை எந்தக் கெட்ட வார்த்தையாலும் திட்டாமல், எமது முன்னோர்கள் எவ்வாறு பார்ப்பனர்களை விளித்தார்களோ அவ்வாறே அழைத்தேன். ஆகவே உங்கள் மீது எனக்கெந்த வெஞ்சினமும் கிடையாது என்பது தெரிகிறதல்லவா? உண்மையில் உங்களை நினைக்க எனக்குப் பாவமாக இருக்கிறது. தனது தாயைப் பக்கத்து வீட்டுக்காரியுடன் ஒப்பிட்டு, அவளைப் போல எனது தாய் ஏன் ஆடம்பரமாகவில்லை என்று ஏங்கிறவனை, அதற்காக தனது தாயை விமர்சிக்கிறவனை, எப்படி விளிக்கலாம் என்பதற்கு எத்தனையோ வார்த்தைகள் தமிழில் உண்டு, ஆனால் நானோ வெறும் ‘பார்ப்பனமகனே’ என்று மட்டும் தான் அழைத்தேன், அதற்காக நீங்கள் என்னைப் பாராட்ட வேண்டும். 🙂

          இந்தச் சங்கத்தமிழ்ப் பாட்டிலிருந்து தான் நான் இந்த “பார்ப்பனமகனே” அடியை எடுத்தேன். பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணனார் தனது குறுந்தொகைப் பாடலில் ஆரியப் பார்ப்பனரை எப்படி அழைக்கிறார் என்று பாருங்கள்.

          “பார்ப்பன மகனே பார்ப்பன மகனே
          செம்பூ முருக்கி னன்னார் களைந்து
          தண்டொடு பிடித்த தாழ்கமண் டலத்துப்
          படிவ உண்டிப் பார்ப்பன மகனே
          எழுதாக் கற்பி னின்சொல் உள்ளும்
          பிரிந்தோர்ப் புணர்க்கும் பண்பின்
          மருந்தும் உண்டோ மயலோ விதுவே.”

          ‘பார்ப்பன மகனே பார்ப்பன மகனே செம்பூ முருங்க மரத்தின் தடியில் கமண்டலத்தை பிடித்துக் கொண்டு உழைக்காமல் உண்ணும் வழக்கமுடைய பார்ப்பன மகனே, உங்களுடைய எழுத்து வடிவம் இல்லாத கல்வியாகிய வேதத்தில் (’எழுதாக் கற்பு’) உள்ள இனிய உரைகளில், பிரிந்து சென்ற தலைவன் தலைவியை மீண்டும் புணரச் செய்யும் மருந்து உள்ளதா?’

          திரு. கணேசு கூட சமக்கிருதத்தை எழுதாக்கிழவி என்று குறிப்பட்டார். இந்த குறுந்தொகைப்பாடலில் ஏனாதி நெடுங்கண்ணனார் “எழுதாக் கற்பி னின்சொல் உள்ளும்” என, ஆரியர்களின் நான்கு வேதங்களை(எழுதாக் கிழவியைக்) குறிப்பிடுவது தெளிவு படுத்துகிறது. “மயங்கா மரபின் எழுத்துமுறை காட்டி” என்று தொல்காப்பியம் கூறுவது போல் தமிழுக்கு எழுத்து வடிவம் தொல்காப்பிய காலத்திலேயே உண்டு. எழுத்து வடிவமேயில்லாத மொழி எப்படி தமிழுக்கு இணையாகும் என்பதை கணேசு சிந்தித்துப் பார்க்கவேண்டும். தமிழுணர்வுக்கு சாதி கிடையாது சாதியும் தேவையில்லை. நம்மாழ்வார் குலத்தில் பிறந்தாலென்ன நந்தனார் குலத்தில் பிறந்தாலென்ன தமிழன் தமிழன் தான். எந்த உண்மையான தமிழனும் உங்களைப் போல் தமிழைப் பழிக்க மாட்டான், நக்கலடிக்க மாட்டான்.

          பெரியாரின் மனைவி மணியம்மை பிறந்த வேலூரில் நீங்கள் பிறந்ததால், பெரியாரைப் போலவே நீங்களும் தமிழை இழிவுபடுத்தலாம் என்கிறீர்களா? உங்களின் பதிலில் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பது புரியவில்லை தயவு செய்து விளக்கவும், நன்றி. 🙂

          • உடன்பிறப்பே, // 27.1.4.1//
            மங்கையராய்ப் பிறத்தற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா!!
            பாரதியாரின் கனவினை நனவாக்கிய பெருமை என் தந்தை ஈ.வே.ரா. ஐயா அவர்களைச் சாரும்.
            இன்று இந்நாட்டில் எம் சகோதரிகள் இன்று கல்வியில்(60% பெண்டிரெல்லோரும் முதுநிலைப் பட்டதாரிகளே), தொழிலில், அரசியலில், வணிகத்தில் என்று ஆணைவிட பெண்ணே உயர்ந்தவர் என்று உயரும்படி மீப்பெரும் சேவை புரிந்தவர் எம் தந்தை ஈ.வே.ரா பெரியார் ஆவர்.
            இவ்வுலகிலின் அவதரித்த பெரியோராம் எம் மக்களின் அறிவுக்கண் திறந்த புத்தர், எம் மக்களை கோயிலில் நுழையக் கற்றுக் கொடுத்த ராமானுஜர் ,எம் மக்களுக்குக் கல்வி/தொழில் விடுதலை தந்த வள்ளல் அம்பேத்கார், எம் சகோதரிகள் தலை நிமிர்திட வைத்த ஈ.வே.ரா பெரியார் ,எம் மக்களுக்குச் சமாதானம்/புனர்வாழ்வு தந்த ஏசு பொன்றோருக்கு முக்குறும்பு இருந்ததில்லை. இவை காந்திஜி,நேரூஜீ க்கு உண்டு.
            சாதி பார்ப்பான் யார்?
            ஒரு ரியல் எஸ்டேட் சகோதரன் பெங்களூரிலே 1000 கோடி ஈட்டியதாகக் கருதுவோம்.என் அலுவலகத்திலும் எனக்கு இப்படி ஒரு நன்பர் உண்டு. அவர் வேலையை ராஜினாமா செய்துவிட்டார்]. அவருக்கு செல்வச் செருக்கு மிக மிக அதிகமானது. இப்பொது கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் தொழில் செய்கிறார். இவர் யாரையும் சமமாக மதித்தது கிடையாது. திடீரென செல்வந்தரானார். இது செல்வச்செருக்கு என்னும் நோய். இது யாருக்கும் வரலாம். இது இயற்கை. ஆனால் வந்த செல்வம் கடை வழியே ஒரு நாள் செலவு ஆகலாம்/களவும் போகலாம்.
            ஒருவர் டாக்டர் படித்து முடித்து அமெரிக்கா செல்கிறார் என வைப்போம். அங்கு M.S ,Ph.D படித்து முடித்தார் என்று வைப்பொம். இவருக்கு வரும் நோய் கல்விச்செருக்கு. மமதை மிகுந்தவர். இதுவும் இயற்கையே.
            தம் குலம் மிகவும் உயர் குலம் என்ற செருக்கு இவ்வினத்தார்க்கு உண்டு. இதுவே குலச்செருக்கு. இதுவும் இயற்கையே.
            மீண்டும் விட்ட இடத்துக்கே வருவோம். இதையே தமிழில் முக்குறும்பு என்பர்.
            “மொழியைக் கடக்கும் பெரும்புகழான் வஞ்ச முக்குறும்பாம் குழியைக் கடக்கும்”—
            எனவே எனக்கு பார்ப்பானாகவும் வெறுப்பு. தனவந்தனாகவும் வெறுப்பு. நானும் என் தந்தையைப் போலவே மற்றெல்லா உயிற்க்கு ச் சேவை செய்யவே ஆவல்.
            வித்யா வினய சம்பன்னே ப்ராம்மனே கவி ஹஸ்தினீ |
            சுனி சைவ ச்வபாகே ச பண்டிதா சம தர்சினஹா|| சம பார்வை வேண்டும். எனவே சாதி பார்ப்பானாய் பிறத்தல் இழுக்கேயாகுமன்றோ !!!
            Yours Lovingly,
            Ganesh

            • சாதி பார்ப்பானாய் பிறத்தல் இழுக்கு என்கிறீர்கள். பிறகு எதற்காக தத்தாத்சாரியாரை “பூணுல் போட்ட பாவி” என்றீர்கள்?

              பூணுலை புனிதம் என்றும் தத்தாச்சாரியாரை பாவி என்றும் சொல்வதன் மூலமாக பார்ப்பனர் என்றால் உயர்ந்தவர் என்றுதானே சொல்லவருகிறது உங்கள் ஹிருதயம்! எதற்காக இரட்டை வேடம் போடுகிறீர்கள்?

            • Ganesh,

              //சாதி பார்ப்பானாய் பிறத்தல் இழுக்கேயாகுமன்றோ// என்கிறீர்கள். இன்னுமா நீங்கள் திருந்தவில்லை. பிறப்பால் இழுக்கோ பெருமையோ இல்லை என்பதை எப்போது புரிந்து கொள்வீர்கள்.

              • //27.1.4.1.1.1//
                உடன்பிறப்பு தென்றலுக்கு,
                பூணூலணிந்தவன் – வினையாலனையும் பெயர்.
                ——————————————————————————————–
                இது பூணூலைக் குறிக்காமல் அதை அணிந்த மனிதனின் உடலைக் குறித்தது. உடைமையை அல்ல.
                இதில் நாம் உரிச்சொல்லை யாண்டும் பயன்படுத்திக் காண இயலாது.
                மேலும் பண்புத்தொகையோ ,உரிச்சொல்தொடரோ அங்கு இல்லை.
                ***************************************************************************
                பாவி – எதிர்மறைப் பெயர். படர்க்கை ஒருமை ஆண்பால்.
                மாறாக இது அவனது உடைமையை யும் , உடலையும் குறிக்கவில்லை . ஆனால் அவன் அறிவினை/உணர்வை/உயிரினை/பண்பினைக் குறித்தது.
                பூணுலை புனிதம் என்றும் – இத்தொடரில் பூணூலை என்ற சொல் – செயப்பாட்டு வினை. படர்க்கை ஒன்றன்பால் .ஆனால் கூர்ந்து நோக்காது போயின் இது 3 ஆம் வேற்றுமைத் தொடரைப் போலவே தொன்றும். ப்ரமம்(மன ப்ராந்தி).
                இது அவனது உடைமையை குறித்தது.

                ********************************************************************
                உடன்பிறப்பே , நீவிர் முதலில் இலக்கணம் நூல் வாசியும். ஒரு 10 வகுப்பு (பத்தாம்ம்ப்பு) மாணவன் வெறும் அறிவியல் மட்டும் படித்தால் பொதுமோ? எல்லாப் பாடத்திலும் தேர்ந்து தமிழில் தேறாவிட்டாலும் தோல்வியே கிட்டுமன்றோ…நீர் ஒரு புலவர்…உம்மை எல்லா சுட்டுப் பக்கத்திலும் அறிவியல் அறிஞர் அன்றே நானும் வியந்துள்ளேன்! நண்பா. LINGUISTICS எல்லாம் படித்திருக்கின்றீர். நீரே இப்படியெல்லாம் தவறு காணலாமா…..
                இலக்கணமே தர்கத்திற்கு அடிப்படை. அதுவன்றி மீமாம்சை பயில இயலாது.

                நான் கூற வந்ததியாதெனில்(முற்றியலிகரம்) காலஞ்சென்ற. அக்னிஹோத்ரி ராமானுஜ தாதாச்சாரி ஒரு குலச்செருக்கு கொண்டவ___ எந்த செருக்காயினும் அது கேடே. காஞ்சிபுரத்தில் யானைக்கு எந்த திருமண் இடலாமென்று இங்கிலாந்து ப்ரீமியர் நீதிமன்றம் வரையில் நம் நாட்டு மானத்தை கப்பல் ஏற்றிய பெரும்குலம் இவர் குலம்.[[குலச்செருக்கு கொண்ட எவரையும் இது குறிக்கும்.]]. பிறகு மேல்நாட்டான் நம்மை ஏன் அடிமை கொள்ள மாட்டான்?
                Yours Lovingly,
                Ganesh

          • \\ பெரியாரின் மனைவி மணியம்மை பிறந்த வேலூரில் நீங்கள் பிறந்ததால், பெரியாரைப் போலவே நீங்களும் தமிழை இழிவுபடுத்தலாம் என்கிறீர்களா?\\

            தமிழுக்கு பார்ப்பன எதிர்ப்பு என்று பெயர். இந்துத்துவ காலித்தனத்தை எதிர்த்த கலாச்சாரம் தமிழ்நாட்டு கலாச்சாரம். பெரியார் தமிழை இழிவுபடுத்தினார் என்ற சொல்கிறவர்கள் பெரியாருக்கு மூத்திரப்பையாக இருக்கக்கூட தகுதியற்றவர்கள். வேண்டுமானால் அப்படிச்சொல்கிறவர்கள் பிஞ்ச செருப்பில் சாணியைத் தடவி தங்களைத்தாங்களே அடித்துக்கொள்ளட்டும். அப்பொழுதாவது இதுபோன்ற தற்குறித்தனம் போகிறதா என்று பார்ப்போம்.

            • எல்லோருக்கும் தமது கருத்தைத் தெரிவிக்கும் எழுத்து, பேச்சுச் சுதந்திரம் உண்டு என்பதில் எனக்கு ஆழ்ந்த நம்பிக்கையுண்டு. என்ன பிரச்சனை என்றால், இதே பாணியில் நானும் பதிலெழுதினால், வினவு நிர்வாகம் எனது மறுமொழியை மட்டுறுத்தல் என்ற பெயரில் வெளியிட மாட்டார்கள். அதனால் யார், யாருடைய மூத்திரப்பை, செருப்பு, சாணி என்பவற்றுக்கெல்லாம் பதிலளிக்க முயற்சிக்கப் போவதேயில்லை. 🙂

            • Instead of now Discussing the Circumstances which leaded Mr.Periyar to tell that Tamil is a cannibal language,Thendral is simply using totally abusing words against Viyasan for his “wrong” comment.

              Thendral…., U keep racking ! Good luck! Go ahead!

      • உடன்பிறப்பே,
        • // * சங்கத்தமிழ் 27.1//

        http://viyaasan.blogspot.mx/
        என்னும் சுட்டியிலே படித்தது. வியாசன் = வி+ஆசான்.
        என்பதாக நண்பர் விளக்கி இருந்தார்.
        ஆனால் தமிழ் புனர்ச்சி விதிகலின் படி
        1) வி+ஆசான்=வீ+ஆசான்[[ஆதிநீடல்]]
        2) வீ+ஆசான் = வீ+ய்+ஆசான்[[உடம்படுமெய்- இ ஈ ஐ வழி யவ்வும்]]
        3)வீ+யாசான்=வீயாசான் [[உடல் மெல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே]]
        http://www.textbooksonline.tn.nic.in/Books/Std09/Std09-III-TamEng.pdf
        நண்பரே வீயாசானே !!
        நிவிர் முதலில் தமிழிலக்கணம் பயிலலாமே !!
        அன்புடன்,
        கணேஷ்

        • கோ + இல் = கோயில்

          கோ+ய்+இல் = கோயில்

          அவ்வாறே

          வீ + ய் + ஆசான்= வியாசான்

          வீ + ஆசான் = வியாசான்

          வீஆசான் (உயர்ந்த ஆசான்) நாளடைவில் திரிபடைந்து வியாசனாக மருவியது.

          • அன்பு நண்பா,
            நன்னூல் ஆசிரியர் மாண்புமிகு.பவணந்தி முனியும் ஒல்காப்புகழ் தொல்காப்பியருமே உம்மைத் திருத்தட்டும். முடியல….முடியல….
            இப்படியே மைன்டைன் பண்ணுங்க!!!

            நன்றி,
            கணேஷ்

  28. அன்பரே ,

    நாமும் ஒன்று சொல்லுவோம்.

    ஒரு மொழியென்றால் அதற்க்கும் எண்ணும் எழுத்தும்,அதன் கட்டுமானமான இலக்கணமும் அடிப்படை.மக்களுடைய உழைப்பு அவர்களின் பொருளாதரத்திற்கு மூலமாகும்.
    பொருளாதாரம் அவர்களின் வாழ்க்கைக்குப் இன்றியமையா. அவர்களது வாழ்கையை ஆணிவேராக வைத்து கருத்து,கதை,காவியம்,கட்டுரை,இலக்கியம் இன்னும் பிற எழுதுவது அந்த சமூகத்தின் அடிப்படை மாண்பு. சமத்கிருதம் இந்த அடிப்படைப் பண்புகளில் இருந்து நெறிப் பிறழ்ந்ததால் தான் அழிவுற்றது.

    ஒவ்வொரு மொழியும் அதற்க்கென ஒரு சொற்களஞ்சியத்தை வைத்துள்ளன. இது, ஒவ்வொரு சமூக மாற்றத்திற்கு உள்ளாகும் போதும்,காலந்தோறும் மாறக்கூடியது வளரக்கூடியது. அதுமட்டுமல்லாமல், இன்றைய அறிவியலின் வளர்ச்சியின் பயனாய் புதிய புதியக் கண்டுபிடிப்புகள் நிகழ்கின்றன.அதை நாம் தான் ஒவ்வொரு மொழிக்கும் அதன் இலக்கண கட்டமைப்பை பொருத்து புதிதாக உருவாக்கிக் கொள்ள வேண்டும். அதை விட்டு விட்டு எங்கிட்ட அது இருக்கு, இது இருக்கு , உன்கிட்ட அது இல்லை. அப்படி என்கிட்டே இருக்குன்னு சொன்னாலும், இல்லை அது என்கிட்டே இருந்து தான் நீ வாங்கிகிட்ட அப்படின்னு சொல்றது சரியான வாதம் அல்ல.

    எடுத்துக்கட்டாக, ஏலேக்ட்ரோன்,ப்ரோடான்,நெயுட்ரோன் போன்ற ஏரளாமான அறிவியல் சொற்கள் ஆங்கிலத்தில் உள்ளன. அதற்க்கு நிகரான சமத்கிருத சொற்களை உங்களால் காட்ட முடியுமா.
    தமிழிலும் அதற்க்கு பற்றாகுறை தான். ஆனால் ஒன்று, இங்கே அதற்க்கு இணையான சொற்கள் உருவாக்க சமூகக் காரணிகள் உண்டு. தாய்மொழிக் கல்வி அளிக்கப்படும் சூழலில் அதற்க்கான விடை காணாப்படும். ஆனால் சமத்கிருததிர்க்கு அந்த மாதிரியான சமூகசூழல் உள்ளதா அரசே வலுக்கட்டாயமாக திணிப்பதைத் தவிர?.

    தாங்கள் சமத்கிருதத்தை கற்றுக் கொள்வதிலோ, அதை ஆயக் கற்றறிந்தப் பின்னர் அதை பயன்படுத்தும் ஒரு சமூகத்திடமோ /அறிவாளிகளிடம் மட்டுமோ பேசி உறவாடுவதில் எமக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. அது மட்டுமில்லாமல், இது தமிழைக் கற்றுக் கொடுக்கும் இடமும் அல்ல.

    உங்களுக்கு எண்ணப் பிரச்சினை என்று புரியவில்லை. ஒவ்வொரு மொழிக்கும் சிலபல சிறப்பியல்புகள் உண்டு. அது சமத்கிருதமாகட்டும்,தமிழாகட்டும்,டோஹ்ரியாகட்டும் இல்லை ஆப்ரிக்க பழங்குடி மக்கள் பேசும் மொழிகலாகட்டும். முதலில் இதயம் என்ற சொல் சமத்கிருதம் தமிழிற்கு கொடுத்தது என்றீர்கள். பின்னர் அதன் அருமைப் பெருமைகளை மவுசுப் போன பண்ணையாரைப் போல பொலம்பித் தள்ளினீர்கள். பின் , நண்பர்கள் சிலர் தமிழுக்கென, இதயத்தைக் குறிக்க உள்ளன என்றும், தமிழில் இருந்து சுடப்பட்ட சொல் தான் இதயம் என்றும் சொன்னார்கள்.

    அப்புறம், ஒரு புல் சோமபானம் அருந்தியவர் போல சாத்விக(எலக்ட்ரோன்), தாமஸ(ப்ரோடான்,நியூட்ரான்), அஹம்காரத்தினை (க்வார்க்) , ராஜஸம்(க்லுவான், போட்டான், க்ராவிடான், போஸான்) என்று அளந்து விட்டீர்கள். அதற்க்கு அறிவியல் அடிப்படைக் கேட்டவுடன் பின் வாங்கி விட்டீர்கள்.

    இப்போ நியதம் என்ற சொல்லுக்கு நிகரானத் தமழ் சொல் இருக்கான்னு கேக்குறீங்க. என்னைப் பொறுத்த வரை அதற்க்கு நிகராக அடிப்படை,வேர்,மூலம்,இன்றியமையா என்ற சொற்களை தமிழில் பயன்படுத்தலாம்.

    நன்றி.

    • “”நி”” – இல்லாமல் என்ற பொருள் தரும் . இது ப்ர,பரா,அப,ஸம், அனு,அவ ,நிஸ்,நிர்,துஸ்,துர்,வி, ஆ,நி, அதி, அபி, அதி(adhi), ஸு, உத், அபி(abhi) ,ப்ரதி, பரி, உப ஆகிய உபஸர்கங்களில் 22 ல் ஒன்று.
      எ.கா.
      1) நிகில-ஒன்று விடாமல் -இது ,அது, உது என்ற இவை அனைத்தும். [எதிர்ச்ச்சொல் கில – சில மட்டும்]
      2) நியமம் – செய்யக்கூடாதது. விலக்கத்தக்கது[எதிர்ச்ச்சொல் – யமம்- செய்யத்தகுந்த]

      யத் – வடமொழியில் முதல் கணத்தை சேர்ந்த வேர்ச்சொல். தன்வினை (ACTIVE VOICE) பிரிவில் வரும் வேர்ச்சொல். இது முயற்சி என்று பொருள் தரும்.
      எ.கா.
      யததே – முயற்சிக்கிறான் / உழைக்கிறான்.
      எனவே – நி+யத ==> நியத ===> இது இல்லாமல் முடியாத/பிறக்காத/மாறாத என்று பொருள். / இன்றியமையாத.
      வேதாந்திகள் மொழியில் சொல்வதானால் உபாதானம்.

      Hundreds of my blogs are being rejected by vinavu admin.
      Hence if there are no answers, it doesnot mean that I do not know the answer.
      Yours Lovingly,
      Ganesh

  29. அன்பரே …

    சு .ஸ்வாமி என்னைப் போன்று 1)பிழையின்றி ஓரளவேணும் எழுத வல்லானோ?(தென்/வட மொழிகளில் எதேனுமொன்று)
    2) பிழையின்றி உச்சரிக்கக் கற்றானோ?
    3)தவறு செய்தால் மன்னிப்பு கேட்கும் அளவு மனநலம் உடையவனோ?
    4)முக்குறும்பறுத்த மனிதனோ?

    அவன் ஒரு நீசன்/ ஹிட்லர். பெயர் சொல்லி அழைக்கவும் தகாதவன். என்னை ஏன் அவனோடு ஒப்பிட்டீர் ஐயனே….கூறுவிர்…

    • //உச்ச ஒலி > நிவந்த ஒலி = நிவதம் > நியதம் > நியாதம் > நிஷாதம் (சங்கீதம்)//
      // நிவதம் > நிவேதம் > நிவேத்யம் > நைவேத்யம் 27.1//
      இப்படியும் எழுதலாம்
      ஈறு ==> பேன் ==> பெருமாள்

      வடமொழியில் ககாரம்- 4 வகை ,சகாரம் – 4 வகை,டகாரம் – 4 வகை, தகாரம் – 4 வகை ,பகாரம் 4 வகை .மற்றும் ஷ,க்ஷ,ஸ,ஸ்ரீ என பல எழுத்துக்களும் உண்டு. நீர் எடுத்தாண்ட விளக்கம் கண்டு வியந்தேன். (அ) கோழியிலிருந்து முட்டையா (அ) முட்டையிலிருந்து கோழியா?
      (ஆ) விண்மேதினில் சென்ற பிறகு அங்கு திசைகள் கிடையா. கிழக்கு, மேற்கு என்பது நகைப்பிற்குரியதே அன்றோ.
      நிஷாதம் எங்கே உச்ச ஒலி எங்கே?
      ஐயா உங்கள் மனம் புண்படுமாயின் மன்னிக்கவும் உவப்பத் தலைகூட உள்ளப் பிரிதல் அனைத்தும் புலவர் தொழில்.

  30. அய்யா வியாசரே,

    தமிழ்பற்றும் தமிழார்வமும் மிகுந்த எம்மை போன்றவர்களை தமிழரல்ல என்று இழிவுபடுத்தினீர். இப்போது தமிழருக்கு பிறந்ததாக பறைசாற்றிக்கொள்ளும் கணேசு போன்றவர்கள் சமக்கிருததிற்கு பல்லக்கு தூக்குகிறார்களே, இப்போதாவது தங்களுக்கு விளங்குகிறதா, பிறப்பை மட்டும் தகுதியாக பார்த்தால் கணேசு தமிழர், நான் தமிழரல்ல. இது தானே தங்களது வியாக்கியானம்?

    இனியாவது உண்மையான தமிழ்பற்று உள்ளவர்களை இழிவு படுத்தாதீர்கள்.

    • கற்றது கையளவு,வியாசன்…, கஞ்சா கருப்பு கனேஷ்ன் வார்த்தைகளை நம்பி அதனை தமிழ்ர் ஆக்காதீர். அது விச தன்மையுள்ள நஞ்சு.வெள்ளாளன் என்று கூறும், பார்பனனின் வளர்பு மகன் என்று கூறிக்கொள்ளும், தன்னை தாழ்த்தபட்டவன் என்றும் கூறிக்கொள்ளும்.யார் தமிழர் என்ற விவாதத்தை தயவு செய்து இங்கு தொடங்காதீர்.இங்கு நடக்கும் தமிழ் -சமஸ்கிருத மொழிகள் பற்றிய விவாதத்தில் தாங்கள் இருவரும் தொடர்ந்து பங்கு பெற்று மொழிப்கைவனை வேர் அறுக்க உதவுங்கள்

      //தமிழருக்கு பிறந்ததாக பறைசாற்றிக்கொள்ளும் கணேசு போன்றவர்கள் சமக்கிருததிற்கு பல்லக்கு தூக்குகிறார்களே//

  31. இந்தியாவில் திராவிட மொழிகள், ஹிந்தோ-ஐரோப்பிய மொழிகள் என்று இரு அடிப்படையான மொழிகள் உள்ளன எண்பது கூட அறியாமல் கனேஷ் என்ற அறிவிலி இங்கு வந்து புலம்பி கொண்டு உள்ளது.இமைய மலை ஒட்டிய சந்துபொந்துகள்[கைபர்-கொலன் கனவாய்] வழியே இந்தியா உள் நுழைந்த ஒரு நாடோடி மாடு மேய்க்கும் கூட்டம் தன்னுடன் கொண்டு வந்த ஒரு நாடோடி மொழியை வடமொழி-சமஸ்கிருதம் என்று பெயரிட்டுக்கொண்டு வாழ்ந்தது. சுறா பாணமும் சோம பாணமுன் குடித்து மதிமயங்கி திரிந்த இக் கூட்டம் உளறியவைகள் தான் இதுங்களின் வேதம். அதுங்களுக்கே அதன் பொருள் மிக ஆபாசமாக இருந்ததால் பிற மொழிகளில் வேதத்தை மொழி பெயர்த்தால் மானம் போகும் என்று உணர்ந்து ,அது[வேதம்] புனிதமானது என்று கூறி தன்னுள் மறைத்து கொண்டது. அதே சமையம் தன் உணவு,உடை,இருப்பிடத்துக்கு பிற இனத்தவரையும் சார்ந்து இருக்க வேண்டி இருந்ததால் மற்ற மொழிகளுடன் தன் நாடோடி மொழியாகிய வடமொழி-சமஸ்கிருதத்தை கலந்து ,தன் மொழியையும் அழித்து , பிற மொழிகளையும் நசிவுற செய்தது. [இன்னும் வரும் ]

  32. “நியதி” என்ற துய திராவிர வழி தமிழ் சொல்லுக்கு, பிற ஹிந்தோ-ஐரோப்பிய மொழிகளான ஆங்கிலத்தில் Canon என்றும் ,ஜேர்மன் மொழியில் Kanon என்றும், சமஸ்கிருத வழி மொழி ஹிந்தியில் Kainana[कैनन] என்றும், ஒரே உச்சரிப்பில் வார்த்தை உள்ள நிலையில் கனேஷ் ஏன் பொருத்தம் இல்லாமல் தமிழ் மொழியுடன் வந்து மோத வேண்டும் ?

    இதனை நான், கனேஷ்ன் பார்பன திமிர் என்று கூறினால் நண்பர் சிகப்பு என்னை பார்த்து கோபம் கொள்ளாதீர் என்கின்றார்.

  33. “செப்பம்”[ceppam] என்ற துய திராவிர வழி தமிழ் சொல்லுக்கு, பிற ஹிந்தோ-ஐரோப்பிய மொழிகளான ஆங்கிலத்தில் Heart என்றும் ,ஜேர்மன் மொழியில் Herz என்றும், சமஸ்கிருத வழி மொழி ஹிந்தியில் Hr̥daya[हृदय] என்றும், கிரேக்க மொழியில் Kardiá[ Καρδιά ] என்றும் ஒரே உச்சரிப்பில் [pronunciation] வார்த்தைகள் உள்ள நிலையில், கனேஷ் ஏன் பொருத்தம் இல்லாமல் தமிழ் மொழியுடன் வந்து மோத வேண்டும் ?

    இதற்கு பெயர் தானா ஆரிய நாடோடி கூட்டத்தின் நரித்தனமான மொழி கலப்பு செய்யும் முறைமை?

  34. மொழிச்சண்டை சாதிச்சண்டை என்பது வர்க்கயுத்தத்திலும் பார்க்க மேவிநிற்கிறது என்பது வினவுக்கு வரும் பின்நோட்டங்களில் இருந்து தெரிகிறது.

    தமிழ்மொழிப் பற்று லிட்டர் கணக்கில் உருகியோடும் போது இதற்கு பொறுப்பானவர்கள் அரை நுற்றாண்டுகாலம் யாராக இருந்திருப்பார்கள் என கணக்கு போட்டால் அவர் கஞைர் கருணாநிதியை விட வேறுயாரும் இருக்க முடியாது.

    செந்தமிழ்மொழி தமிழ்மொழி என சொல்லி விழா எடுத்தவர் அவரே! மொழிவாழ்தால் நாம் வாழ்வோம் என முகவுரை சூட்டியவர்ரும் அவரே. ஆகா என்னா அழகு!.

    மொழிக்கு சூட்டிய பெருமையை தனது இனத்துக்கு சூட்டவில்லையே என்பது தான் எமது ஆதங்கம்.

    ஐம்பது வருடஆட்சிக்காலத்தில் தமிழ் எப்படி வளர்ந்ததுஎன்றால் ஆட்டோகாரனுக்கும் மளிகைக்கடைகாரனுக்கும் பிச்சைக் காரனுக்கும் 3:2 என்கிற வீதத்தில் தான் தமிழ் இருக்கிறது.

    இதற்கு ஒரு உதாரணம் மட்டும் தருகிறேன். பொன்னி அரிசி வாங்க எனது மச்சாள் சொன்ன அனுபவகதை.

    அரிசை கேட்டேன் அரிசி இல்லை என்று சொல்லுகிறான். அந்த இருக்கே! ஏன் இல்லை என்று சொல்லுகிறாய். அதற்கு அவன் சொன்ன பதில்; இப்படி கேட்டால் எப்படி அம்மா நான் சொல்ல முடியும்; “ரயிஸ் என்று தமிழிலைகேளு” என்றான்.

    இப்படித்தான் இருக்கிறது தமிழ் வளர்ச்சி. ஒருமொழியையாரும் திட்டம் போட்டு வளர்க்கவும் முடியாது. அழிக்கவும் முடியாது. அது தன்யியல்புக் ஏற்ற தோன்றியும் மங்கியும் தன்நிலையை உருவகப்படுத்தும்.

    அடுத்து அடிமைமுறை இன்றும் நிலைத்து நிற்கிறது அதில் சாதிவேற்றுமை என்பது மாற்றுக் கருத்துக்கே இடம் இல்லை.

    ஆனால் இதை எப்படி அகற்ற முடியும் அல்லது விடுகிக்க முடியும் என்பதில் தான் நிறைய வேறுபாடுகள் உள்ளன.

    வினவும் வினவுவின் பெரும்பாலன வாசகர்களும் பிராமணியம் மீது குற்றம் சாட்டுகிறாரகள். இது கடைந்தெடுத்த கழிசடை தனம் என்பதே எமது விவாதம்.

    சாதியமைைப்பு முறையை விரட்டியடிக்க ஒழிக்க இந்தியா ரீதீயில் ஒரு புரட்சி தேவைப் படுகிறது.இதறகு பிராமணிய எதிர்ப்பு எதற்கும் பயன் படப்போவதில்லை மாறாக உங்கள் போராட்டம் அடக்கு முறையை இன்னும் பலப்படுத்துவதற்கே பயன் பயன்.

    இதுவே எனது தர்க்கம்.விவாதம்.

    இதற்கு வினவும் வினவின் வசகர்களும் பதில் சொல்வார்களாக இருந்தால -நீங்கள் சொல்கிற தலித்துக்களுக்கான விடுதலையை நான் அறிவிப்பேன்.

    • வர்க்க போர் என்று தனித்து ஏதும் கிடையாது Mr.Mao. சமுக அவலங்களை[பார்பன சாதி வெறி,வட மொழி ஆதிக்க திணிப்பு, மத வெறியும் ] நீக்க ஒரு உண்மையான கம்யூனிஸ்ட் கட்சி செய்யும் சிறு சிறு மோதல்களின் [battles] ஒட்டு மொத்த தொகுப்பே வக்க போர் என்பது. என்று பார்பன சாதி வெறியும், வட மொழி ஆதிக்க திணிப்பும்,மத வெறியும் ஆளும் வர்க்கத்தின் ஆயுதங்கலாக இருக்கும் போது ,எதிரி எந்த ஆயுதத்துடன் போர்க்களம் வருகின்றானோ அதே ஆயுதத்தை தான் ஒரு உண்மையான கம்யூனிஸ்ட் கட்சி வர்க்க போர் களம் புக வேண்டும் என்ற அடிப்படை கூட தெரியாமல் பார்பன பாசிசத்துக்கு நீர் கொடி பிடித்து கும்மாளம் அடிப்பது ஏன் ? ஆமாம் கனேஷ் என்பவர் இங்கு தமிழுக்கு எதிராகவும் , ஒடுக்கபட்ட மக்களுக்கு எதிராகவும் பேசி கொண்டு இருந்த சமையத்தில் தலையில் உள்ள வெள்ளை முடியை பிடுங்கிக்கொண்டு இருந்திறா நீர் ?

      //மொழிச்சண்டை சாதிச்சண்டை என்பது வர்க்கயுத்தத்திலும் பார்க்க மேவிநிற்கிறது என்பது வினவுக்கு வரும் பின்நோட்டங்களில் இருந்து தெரிகிறது.//

      • என்றும் அல்லது இன்று எது சரி திரு இராஜன் ?
        //***என்று பார்பன சாதி வெறியும், வட மொழி ஆதிக்க திணிப்பும்,மத வெறியும் ஆளும் வர்க்கத்தின் ஆயுதங்கலாக இருக்கும் போது //

        • மன்னிக்கவும் . தட்டச்சுப்பிழை ஏற்பட்டுவிட்டது. “இன்று” என்றிருக்க வேண்டும்.

          • அதாகப் பட்டது என்னனா.. மேல கமண்ட்டு போட்ட ராஜன் என்பவரும் கீழ இருக்குற டயானா என்கிற அக்காவும் வேற வேற தான் சத்தியமா ரெண்டு பெரும் சரவணன் அண்ண இல்லீங்க. பாருங்க ராஜன் தப்பா டைப் பண்ணத டயானா அக்க சுட்டிக் காட்டி இருக்காங்க பாருங்க. எனக்கு கூட ராஜன் அண்ணன் மேல நெறைய டௌட் வந்திச்சு ஆனா இப்போ இல்ல. மொத்ததுல என் மண்டையே கிரு கிறுன்னு சுத்துது. தோழர்கள் ஆணி, ராம், வெற்றிவேல் இவங்க தான் investigate பண்ணி என்னையும், வினவையும் மற்றும் வினவின் மற்ற வாசகர்களையும் இந்த அக்க போர்ல இருந்து எப்படியாச்சு காப்பாத்தனும்னு தாழ்மையா கேட்டுகிறேன்.

            • ராஜன் சரவணன் டயானா எலிசபெத் என்பது எல்லாம் டுப்புங்கா!

              வினவு இதை நம்புனா நாம் எல்லாம் நம்புனமென என்ன தலைவிதி இருக்கு சொல்லுங்கா..?.

    • Mr Mao !

      பார்ப்பனியத்துக்கு கொடி பிடித்த CPI[ M ] போலவே பேசும் நீர் ,உண்மையில் போலி கம்யூனிஸ்ட் என்பதை பல முறை உம் பின்னுட்டங்கள் மூலம் நிருபணம் செய்து உள்ளீர். இது எத்துனையாவது முறையிலான உமது போலி கம்யூனிஸ்ட் உளறல் என்பதை தென்றல்,சிகப்பு,சரவணன்,dayana போன்றோரை கேட்டால் தான் தெரியும்.வினவு இந்த கட்டுரையில் சென்னையில் கால்டுவெல் 200-ம் ஆண்டு கருத்தரங்கம் பற்றி எழுதியுள்ளது. அதை பற்றி உமக்கு என்ன குறை , உன் குற்ற ச்சாட்டு என்ன ? அதை கூற வக்கு அற்று ஏன் இங்கு வத்து வெத்து வேட்டு போன்று புலம்புகின்றீர் ?

      //வினவும் வினவுவின் பெரும்பாலன வாசகர்களும் பிராமணியம் மீது குற்றம் சாட்டுகிறாரகள். இது கடைந்தெடுத்த கழிசடை தனம் என்பதே எமது விவாதம்.//

  35. Mr.Mao,

    சாதிய அடுக்குகளை மேலிறிந்து கீழாகவும் , கீழ் இருந்தும் மேலாகவும் ஒட்டு மொத்தமாக வெட்டி எறியும் செயலை தான் உண்மையான கம்யூனிஸ்ட்டுகள் செய்வார்கள்.அரசியல் தளத்தில்,பண்பாட்டு தளத்தில் பார்பனிய பாசிசம்,பார்பன பண்பாடு கொண்டு உள்ள தாக்கத்தை அழிக்காமல் யாராலும் இந்தியாவின் முழுமையான புரட்சியை சாதிக்க முடியாது Mr Mao. பார்பனிய பாசிசம்,பார்பன பண்பாடு இவற்றை அழிப்பது என்பது சாதிய அடுக்குகளின் தலையை வெட்டுவதற்கு இணையானது ஆகும்.

    //சாதியமைைப்பு முறையை விரட்டியடிக்க ஒழிக்க இந்தியா ரீதீயில் ஒரு புரட்சி தேவைப் படுகிறது.இதறகு பிராமணிய எதிர்ப்பு எதற்கும் பயன் படப்போவதில்லை மாறாக உங்கள் போராட்டம் அடக்கு முறையை இன்னும் பலப்படுத்துவதற்கே பயன் பயன்.//

    • டயலாக் எல்லாம் ஒரேமாதிரி இருக்கே!

      ஏன் டயானா வேஷசத்தை களைந்துவிட்டீர்கள். ராஜன் என்பதை விட்டுவிட்டு எலிசபெத் கதரினா என போட்டிருக்கலாமே!

      அது தானே! உங்களுக்கு அழகு.

      கருத்துகளை மிரட்டியும் வேஷசம் போட்டும் சாதிக்க முயல்கிறீர்களே!

      மலையை மறித்து தண்ணீரை வயலுக்கு திருப்பவும் தமிழ்மொழியை ஆராய்ச்சி செய்யவும் ஒரு வெள்ளைகாரன் வருவான்-வந்தான் என்பதில் இருந்து நாம் எவ்வளவு பலவீனமான இடத்தில் இருக்கிறோம் என்பதை புரிந்து கொள்ள
      “டுப்பு” போடுகிற உங்களுக்கு எங்கே தெரியப்போகிறது?.

      இதை வினவும் கண்டும் காணாமல் இருக்கிறதே என்பது தான் வேதனையாக இருக்கிறது.

      • mao,

        பன்ச் டயலாக் பேச இது ஒன்றும் ரஜினி படமோ அல்லது முகத்தை மாற்ற இது ஒன்றும் கமலின் தசஅவதாரமோ இல்லை mao. மார்சியம் பேசும் வினவு என்ற இணைய தளம். உமது போலித்தனமான கம்யூனிஸ்ட் கருத்துகளை நீர் பார்ப்பனியத்துடன் இணைத்து பேசும் போது யார் வேண்டுமானாலும் உம்முடன் வாதாடுவார்கள்.

        ஏன் குப்பன் ,சுப்பன், டயானா என்று பரந்து பட்ட மக்களும் உம்மிடம் கேள்வி கேட்பது, பார்பனிய பண்பாட்டை ,செத்த சமஸ்கிருதத்தை ஆராதனை செய்யும் உமக்கு மேட்டுக்குடி சாதிய வலியை ஏற்படுத்துகின்றதா ? உம் போலித்தனமான கேள்விகளுக்கு நான் பதிலும் அளித்து, எதிர் கேள்வியும் கேட்டால் , அதற்கு பதில் செல்ல துப்பு இன்றி “எலிசபெத் கதரினா” என்றேல்லாம் கனவு காணும் நீர் உண்மையில் யார் ?

  36. திரு mao, என்ன திரு mao இப்படி ஒரேயடியாக பார்பான,பாசிச,அரசியல் பண்பாட்டு ஆட்டம் ஆடுறிங்க? தலித் மக்களின் விடுதலைக்கும் சேர்த்து தானே வர்க்க போர் என்பது ? இதில் நீங்க என்ன புதிதாக வந்து சொல்லி தர போறீங்க ?பார்ப்பனியத்துக்கு எதிரா போராடினா, மக்கள் போரடினா அரசு அடக்கு முறையை கையாளும் என்று நீங்கள் கூறும் போதே ,பார்ப்பனீயம் தான் மக்களின் முதன்மையான எதிரி என்பது உமக்கு தெரியவில்லையா ? எதிரி யார் என்று கூட தெரியாமல் வர்க்க போராட்டம் , வர்க்க போராட்டம் என்று நிங்கள் கூறுவது பொருள் தெரியாமல் கிளி பிள்ளை Mao Mao [மோ மோ] என்று உங்களை அழைப்பது போல் உள்ளது அல்லவா ?

  37. Sanskrit is an invented hybrid language, for liturgical purposes.

    Rigkrit differs basically from Sanskrit. The term Sanskrit is sometimes loosely applied to even language which pre-existed, e.g. Pali.

    There is no evidence that Rigkrit was ever in ordinary speech. It was used in chanting. It was therefore a manthavathis’ language. Sanskrit was also never in ordinary speech.

    Sanskrit does not have its own lexical base, as more than half of its words are from Dravidian. According to Dr M Lahavery, more than 1/3.

    It has also borrowed heavily from the Munda languages.

    Today we are able to trace even those words of doubtful origin to be from Dravidian.

    It is wrong to say that Sanskrit is Vadamozi or vadachol. Vadamozi or vadachol refers to vaduku. It can also mean “maraththadi ” language. It is said that it was developed in KeraLa and Karnataka.

    Vedavyasan was of fisherman descent. There is no evidence to claim that he lived before Tolkaapiyar.

    The Tamils spread Sanskrit in South East Asia.

    Sanskrit. as its name implies, is clearly an invented language.

    Rigkrit and Sanskrit had no writing system. All was borrowed from Dravidian.

  38. //உச்ச ஒலி > நிவந்த ஒலி = நிவதம் > நியதம் > நியாதம் > நிஷாதம் (சங்கீதம்)//
    // நிவதம் > நிவேதம் > நிவேத்யம் > நைவேத்யம்//
    இப்படியும் எழுதலாம்
    ஈறு ==> பேன் ==> பெருமாள்
    இவ்வாறான நையாண்டி கதம்பங்களை நூறு ஆயிரம் என நானும் கண்டுள்ளேன் . இவற்றை தொடங்கியவர் மீது வாலஸ் (அ) டார்வின்ஸ் ஆவி புகுந்திருக்கலாம் என ஐயுறுகின்றேன்.
    வடமொழியில் ககாரம்- 4 வகை ,சகாரம் – 4 வகை,டகாரம் – 4 வகை, தகாரம் – 4 வகை ,பகாரம் 4 வகை .மற்றும் ஷ,க்ஷ,ஸ,ஸ்ரீ என பல எழுத்துக்களும் உண்டு. நீர் எடுத்தாண்ட விளக்கம் கண்டு வியந்தேன்.
    (1) கோழியிலிருந்து முட்டையா (அ) முட்டையிலிருந்து கோழியா?
    (2) விண் மீதினில் ஏகிய பிறகு அங்கு திசைகள் கிடையா. அங்கே கிழக்கு, மேற்கு, வடக்கு,தெற்கு, மேல்,கீழ் என்பன நகைப்பிற்குரியனவே அன்றோ.
    (3).தாங்கள் 1 நைட்ரஜன் மூலக்கூரு + 3 ஹைட்ரஜன் மூலக்கூரு====> 2 அம்மோனியா மூலக்கூரு என்பதாக பூர்வபக்ஷம்(அதாவது வாதம்). ஆனால் 2 அம்மோனியா மூலக்கூரு ==> 1 நைட்ரஜன் மூலக்கூரு + 3 ஹைட்ரஜன் மூலக்கூரு தருமே என்பது ஸித்தாந்தம்(ப்ரதிவாதம்).These are “Reversible Chemical Reactions”.
    நீர் சொன்ன சொல்லாக்கம் உச்ச ஒலியில் தொடங்கி நிஷாதத்தில் முடிகிறது. இதையே திருப்பவும் இயலும்.நிஷாதத்தில் தொடங்கி உச்ச ஒலியில் முடிக்கலாம். ஆனால் எது சரி? யார் சொல்வது? இதுதான் தற்க வாதத்தின் குறைபாடு . இதனைக்கொண்டு இங்கு வெற்றி / தோல்வி (அ) சரி /தவறு என சொல்லி முடியாது.
    நிஷாதம் எங்கே உச்ச ஒலி எங்கே?
    ஐயா உங்கள் மனம் புண்படுமாயின் மன்னிக்கவும். உவப்பத் தலைகூட உள்ளப் பிரிதல் அனைத்தும் புலவர் தொழில்.

    • //நெய்யிடைநல்லதோர்சோறும் நியதமும்அத்தாணிச்சேவகமும் 27.1.3.1//
      இந்தப் பாசுரத்திற்கு இன்றைய உலகில் தீந்தமிழில் விளக்கம் அளிக்க வல்லார் ஒருவர். மாண்புமிகு திரு.தேவசகாயம் அந்தோணி ஜோஸப். M.A(tamil),M.A(Sanskrit), Ph.D(English), L.L.B அவர்கள். (www.dajoseph.com). யாமும் கேட்டுக் களித்துள்ளோம். இவர் பிறந்ததும் சடகோபர் அவதரித்த வேளாளர் குலமே. இவரைப் போல விளக்கம் அளிக்க சாதி பார்ப்பானர்களாலும் கூடுமோ? எங்கும் காணேன்!!! காலஞ்சென்ற. திரு. அக்னிஹோத்ரி ராமானுஜ தாதாசார்யரை புறமுதுகிட்டு ஓடச் செய்தவரும் இவரே. இவர் குலமே எம் குலம். இவர் காலஞ்சென்ற. மாண்புமிகு. நீதியரசர். திரு மாயூரம் வேத நாயகம் அவர்களின் திருப்பெயரரே ஆவார்.
      இவரது துணைவியார் பயின்றதும் எமது வேலூர் ஆக்ஸீலியம் கல்லூரியே.
      யாதும் ஊரே யாவரும் கேளிர். சாதிகள் இல்லையடி பாப்பா . குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொலல் பாவம்.

  39. //பெரியாழ்வார் அருளிச்செய்த திருப்பல்லாண்டு
    முதற்பத்து
    நெய்யிடைநல்லதோர்சோறும் நியதமும்அத்தாணிச்சேவகமும் 27.1.3.1//

    “நெய்யிட நல்லதோர் சோறும்”— திருப்பல்லாண்டு முதற்பத்து என்றீர்.
    பெரியாழ்வார் இயற்றியது 2 நூல்கள். அவையாவன (1) திருப்பல்லாண்டு மற்றும் (2) பெரியாழ்வார் திருமொழி. இதில் நெய்யிடைநல்லதோர்சோறும் நியதமும்அத்தாணிச்சேவகமும் என்னும் பா திருப்பல்லாண்டினை சேர்ந்தது. இது வெறும் 12 பாக்கள் கொண்ட நூலிலே 8வது பாசுரம். நீர் எழுதியது போலே முதற்பத்து என்றால் –“வண்ண மாடங்க்கள் சூழ்”– என்று தொடங்கும் பெரியாழ்வார் திருமொழி. இது 5 பத்துகளுடன் 461 பாக்களும் கொண்டதாகும். 12 பாக்கள் கொண்ட நூலிலே பத்து என்ற எண்ணீக்கை கிடையா.
    http://www.dravidaveda.org/index.php?option=com_content&view=article&id=46&Itemid=61
    சரியாகவும் பொறுமையாகவும் பின்னூட்டம் இடவும். திருக்குறல் படித்தால் மட்டும் போதாது. (கற்க கசடற கற்பவை கற்ற பின் நிற்க அதற்க்குத் தக. /சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி…….அன்பரே …நான் உம்முடைய சகோதரன் .எதிரி அன்று. நினைவில் நிறுத்தும்.
    இது போன்ற பிழைக்கு வடமொழியில் ப்ரமாதம்(ACCIDENT) என்று கூறுவர். எனக்கும் இது நடக்கும். உம்மைச் சுட்டியதற்கு வருந்துகின்றேன் மன்னிக்கவும் சகோதரரே !!!

    • “”நி”” – இல்லாமல் என்ற பொருள் தரும் . இது ப்ர,பரா,அப,ஸம், அனு,அவ ,நிஸ்,நிர்,துஸ்,துர்,வி, ஆ,நி, அதி, அபி, அதி(adhi), ஸு, உத், அபி(abhi) ,ப்ரதி, பரி, உப ஆகிய உபஸர்கங்களில் 22 ல் ஒன்று.
      எ.கா.
      1) நிகில-ஒன்று விடாமல் -இது ,அது, உது என்ற இவை அனைத்தும். [எதிர்ச்ச்சொல் கில – சில மட்டும்]
      2) நியமம் – செய்யக்கூடாதது. விலக்கத்தக்கது[எதிர்ச்ச்சொல் – யமம்- செய்யத்தகுந்த]

      யத் – வடமொழியில் முதல் கணத்தை சேர்ந்த வேர்ச்சொல். தன்வினை (ACTIVE VOICE) பிரிவில் வரும் வேர்ச்சொல். இது முயற்சி என்று பொருள் தரும்.
      எ.கா.
      யததே – முயற்சிக்கிறான் / உழைக்கிறான்.
      எனவே – நி+யத ==> நியத ===> இது இல்லாமல் முடியாத/பிறக்காத/மாறாத என்று பொருள். / இன்றியமையாத.
      வேதாந்திகள் மொழியில் சொல்வதானால் உபாதானம்.

  40. சர் வில்லியம் ஜோன்ஸ் 1786 இல் கல்கத்தாவில் நடந்த ஒரு கூட்டத்தில் சமஸ்கிருதம்,லத்தீன்,கிரேக்கம்,கோதிக்,செல்டிக்,பழம் பெர்சியன் என்னும் ஆறு மொழிகளும் ஒரே பொதுவான மூல மொழியில் இருந்து வந்து இருக்கலாம் என்ற தன் ஆய்வு முடிவுகளை வெளியிட்டார்.அந்த மூல மொழிக்கு இந்தோ அய்ரோப்பிய மொழி என்று பெயரிட்டார்.கவனிக்கவும் சமஸ்கிருதம் ஒரு மூல மொழி இல்லை இந்தோ அய்ரோப்பிய மூல மொழியில் இருந்து வந்த சகோதர மொழிகளில் ஒன்று அவ்வளவுதான்.மேலும் அதன் பூர்வீகம் இந்தியா இல்லை.

    மேலே உள்ள ஆறு மொழி குடும்பத்தில் இருந்து உருவான கிளை மொழிகளை பின்வறுமாறு விளக்கினார்.
    1.வட இந்தியா மற்றும் இலங்கையில் பயிலப்படும் இந்தோ ஆரிய மொழிகள்[சமஸ்கிருதத்தில் இருந்து உருவானது]

    2.பார்சி முதலான இரானிய மொழிகள்[பழம் பெர்சியனிலிருந்து உருவானது]

    3.பிரெஞ்சு,ஸ்பானிஷ்,இத்தாலி போன்ற ரொமான்ஸ் மொழிகள்[லத்தீனில் இருந்து உருவானது]

    4.கிரேக்க அல்லது ஹெல்லனிக் மொழிகள்[கிரேக்கத்தில் இருந்து உருவானது]

    5.ஆங்கிலம்,டச்சு,ஜெர்மன் முதலான ஜெர்மானிய மொழிகள்[கோதிக் மொழியில் இருந்து உருவானவை]

    6.ஜரிஷ் முதலிய செல்டிக் மொழிகள்[புராதான செல்டிக் மொழியிலிருந்து உருவானது]

    இன்று மொழியியல் ஆய்வு குறித்த துறை மிகுந்த வளர்ச்சி அடைந்துள்ளது.பிறகு வந்த ஆய்வுகள் அனைத்தும் வில்லியம் ஜோன்ஸின் ஆய்வுக்கு வலு சேர்த்ததே அன்றி அதை தவறு என்று நிறுவவில்லை.

    இதன் மூலம் ஆர்யர்களின் “தேவ பாஷா” புளுகு முடிவுக்கு வந்தது.

    [அ.மார்க்ஸின் “ஆரிய கூத்து”நூலில் இருந்து.எதிர் வெளியீடு]
    தொடரும்

    • ஹரப்பா மற்றும் மொகஞ்சதரோவில் அகழ்வாராய்ச்சி செய்த ஆர்.டி.பானர்ஜி மற்றும் சாஹ்னி புரியாத எழுத்துக்கள் பதிந்த முத்திரைகள் சிலவற்றை கண்டுபிடிக்கிறனர் தற்செயலாக. அவர்கள் அகழ்வுசெய்தது புத்த மடாலயங்களை.இதன் தொடர்ச்சியான ஆய்வுகள் மூலம் இந்தியாவுக்கு ஒரு வெண்கல நாகரிகம் இருப்பது கண்டுபிடிக்கப் படுகிறது.காலம் 1922-1923-1924.

      சிந்து சமவெளி நாகரிகம் கி.மு.7000ல் தொடங்கி கி.மு 2600 வாக்கில் முதிர்ச்சி அடைந்து இருக்கலாம் என்பது ஆய்வாளர்களின் கருத்து.அதாவது அது நகரநாகரிகமாக முதிர்ந்தது கி.மு.2600 ல் இருந்து கி.மு 2000க்குள்.இதை ரேடியோ கார்பன் ஆய்வுகள் இதை உறுதி அளிக்கின்றது.

      ரிக் வேத மொழி[பூர்வ ஆரியம்] பின்பு செம்மை படுத்தப் பட்ட சமஸ்கிருதத்தை விட பழமையானது.ஸரோஷ்ட்ரிய மத நூலான அவஸ்டாவின் மொழியுடன்[பழைய இரானி] ரிக் வேத மொழி ஒத்திருக்கிறது என்பதை மொழியியலாளர்கள் உறுதி செய்கின்றனர்.இரண்டும் ஒத்த மூலகங்களில் இருந்து வந்து இருக்கலாம் என்பது அவர்களின் கருத்து.

      அவஸ்டாவில் ஹோமா,தாஹ,ஹெப்தஹிந்து,ஹரஸ்வதி,ஹரயு என குறிக்கப்படுபவை ரிக் வேதத்தில் சோம[பானம்],தாஸ,சப்தசிந்து,ஸரஸ்வதி,ஸரயு என குறிக்கபடுகிறது.

      அவஸ்டாவின் காலம் கி.மு.7ம் நூற்றாண்டு என்பது ஆய்வு முடிவு.இது ரிக் வேதம் தொகுக்கப் பட்டதாக கணிக்கப் படும் கி.மு 8ம் நூற்றாண்டுடன் ஒத்து போகிறது.ரிக் வேத காலத்தை எவ்வளவு முன்னோக்கி கொண்டு சென்றாலும் கி.மு.1300க்கு முன் செல்ல மொழியியல் ஆய்வுகள் இடம் தருவதில்லை.

      முதிர்ச்சி அடைந்த சிந்து சமவெளி நாகரிகத்தின் காலம் கி.மு.2600
      ரிக் வேத காலம் கி.மு1300

      எனவே சிந்து சமவெளி நாகரிகம் முதிர்ந்து வீழ்ச்சி அடைந்த பிறகே ரிக் வேத மொழியினரின் இந்திய வருகையும் வேத கால நாகரிகமும் தொடங்குகிறதே அன்றி இரண்டும் ஒன்றல்ல.

  41. ஒரு பெயர்ப்பகுபதத்தை[வியாசன்] பகுத்து புணர்ச்சி விதிப்படி சேர்த்தால் புது பெயர்[வீயாசான்] வரும் என்று கூறும் இலக்கண மேதையை நான் முதன் முதலாக கணேசின் வடிவில்தான் காண்கிறேன்.இதற்கு ஆதாரமா கணேசு அண்ணாச்சி கொடுத்த 9ம்ப்பு தமிழ் மூன்றாம் பருவ புத்தகத்தை வாசித்து பார்த்துவிட்டேன்.அதுல ஆதிநீடல் வகையறாவே காணும்.குற்றுலுகர புணர்ச்சி பத்திதான் இருக்கு.பெறவு எதுக்கு அந்த சுட்டியை கொடுத்தாருன்னு தெரியல.

    அண்ணாச்சி உடம்புக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே? இதெல்லாம் ஆரம்பத்லயே கவனிச்சு பாக்கனுங்க.

Leave a Reply to ganesh பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க