privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்பா.ஜ.கதமிழக இளைஞர்களின் வழிகாட்டி தந்தை பெரியார்

தமிழக இளைஞர்களின் வழிகாட்டி தந்தை பெரியார்

-

1. புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, திருச்சி

பார்ப்பனிய எதிர்ப்புப் போராளி தந்தை பெரியாரின் 136-வது பிறந்தநாள் விழா!

rsyf-tricy-periyar-banner rsyf-tricy-periyar-sticker-1 rsyf-tricy-periyar-sticker-2 rsyf-tricy-periyar-sticker-3

பார்ப்பனிய எதிர்ப்புப் போராளி தந்தை பெரியார் அவர்களின் 136-வது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக 17-09-2014 அன்று புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி செயல்படும் பகுதிகளிலும், கல்லூரிகளிலும் தந்தை பெரியாரின் படத்திற்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

தந்தை பெரியார் வாழ்ந்த காலத்தில் பார்ப்பனியத்திற்கு எதிராகவும், மூடநம்பிக்கைக்கு எதிராகவும், சாதிப்பிரிவு, மதத்துவேசத்துக்கு எதிராகவும், சமஸ்கிருத இந்தித் திணிப்பிற்கு எதிராகவும் போராடியுள்ளார். கடவுள் நம்பிக்கைதான் மனிதனை முட்டாள் ஆக்குகிறது என்றும், பார்ப்பனியம் தான் சாதி, மத வேறுபாட்டிற்கு அடித்தளம் என்றும் தொடர்ச்சியான போராட்டம் நடத்தி பார்ப்பனியத்தை களையெடுக்க பாடுபட்டார். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் மாணவர்களை பங்கு கொள்ளச் செய்ய அவர் மேற்கொண்ட பிரச்சாரம் அளப்பரியது. பார்ப்பனிய எதிர்ப்புப் போராளி, பெண்ணுரிமை போராளி, பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் பிறந்த மண்ணில் இன்று பார்ப்பனிய கும்பலின் ஆதிக்கம் தலைவிரித்து ஆடுகிறது.

அகண்ட பாரத கனவோடு மோடி ஆட்சியமைந்தபின் ஆர்.எஸ்.எஸ், இந்து மதவெறி கும்பலுக்கு புது தெம்பும், உற்சாகமும் கிடைத்துள்ளது. இந்நிலையில் சமீபத்தில் சமஸ்கிருத வார கொண்டாட்டம், இந்தி மொழியை அலுவல் மொழியாக்கும் திட்டம், மத்திய பல்கலைகழகங்களில் இந்தி மொழியை விருப்ப மொழியாக்கும் திட்டம் என்ற பெயரில் தாய் மொழி தமிழை அழிக்கவும், தமிழ் மக்களை அழிக்கவும் அடுத்தடுத்து தன் பார்ப்பனிய இந்துத்துவா கொள்கைகளை கட்டவிழ்த்துவிட்டுக் கொண்டு இருக்கிறது மோடி அரசு.

இந்தச் சூழலில், பார்ப்பனிய கொள்கைக்கு எதிராக போராடிய பெரியாரின் பிறந்த நாளில், பார்ப்பனிய எதிர்ப்பு மரபை மீட்டு, பெரியார் போலவே மாணவர்களும் போராட வேண்டும் என்ற வகையில் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

பெரியார் ஈ.வெ.ரா கல்லூரியில் “பகுத்தறிவின்மை, மூடநம்பிக்கை, சாதிப்பிரிவு, மதத்துவேசம் முதலியவை தான் நமது தேசத்தின் பெரும் விரோதிகள்!” என்ற முழக்கங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் விநியோகித்து, மாணவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

பின்னர் பெரியார் கல்லூரியில் உள்ள இரண்டு பெரியார் சிலைகளுக்கும் புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணியின் மாவட்ட இணைச்செயலர் தோழர்.வசந்த் மாலை அணிவித்தார். அதைத் தொடர்ந்து “பெரியார் புகழ் ஓங்குக!” என்று மாணவர்கள் முழக்கமிட்டனர்.

தந்தை பெரியாரின் சிறப்பு பற்றியும், அவரின் போராட்டங்கள் பற்றியும் பேசி, சமஸ்கிருத வாரம், இந்தித் திணிப்பு போன்ற பார்ப்பனிய கொள்கைக்கு எதிராக மாணவர்கள், இளைஞர்கள் போராட வேண்டும். இதை தந்தை பெரியாரின் 136-வது பிறந்தநாளில் நாம் ஒவ்வொருவரும் உறுதியேற்போம் என்று புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் மாவட்ட பொருளாளர் தோழர் ஓவியா மாணவர்கள் மத்தியில் சிறப்புரையாற்றினார்.

அடுத்த நிகழ்வாக அரியமங்கலம் உக்கடை மற்றும் கல்லாங்காடு பகுதியில் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் பொதுக்குழு உறுப்பினர் தோழர். செழியன் தலைமையில் தந்தை பெரியாரின் படத்திறப்பு விழா நடைபெற்று, மாலை அணிவித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பகுதி இளைஞர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர். தந்தை பெரியாரின் பிறந்த நாளை நாம் ஏன் கொண்டாட வேண்டும் என்று பெரியாரின் கொள்கை பற்றி தோழர் செழியன் விளக்கி பேசினார். பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களும், இனிப்புகளும் வழங்கப்பட்டது.

ஏற்கனவே இப்பகுதிகளில் ஆர்.எஸ்.எஸ் ஷாகா பயிற்சிக்கு எதிராக நாம் போராடியது, அதைத் தொடர்ந்து பெரியாரின் பிறந்த நாளில் படத்திறப்பு விழா நடைபெற்றது பொதுமக்களிடமும், பகுதி இளைஞர்களிடமும் நல்ல ஆதரவை பெற்றுள்ளது.


[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

தகவல்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
திருச்சி

2. மக்கள் கலை இலக்கியக் கழகம், தஞ்சாவூர்

செய்தி :
மக்கள் கலை இலக்கியக் கழகம், தஞ்சாவூர்.

3. மக்கள் கலை இலக்கியக் கழகம், திருச்சி

ந்தை பெரியாரின் 136-வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சியில் 17.09.2014 காலை 9.30 மணியளவில் மக்கள் கலை இலக்கியக் கழகத் தோழர்கள் மத்திய பேருந்து நிலையத்திலுள்ள தந்தை பெரியாரின் உருவ சிலைக்கு மாலை அணிவிக்க சென்றனர். பெரியார் சிலை அருகே நின்று பறை ஓசை எழுப்பியவுடன் அங்கு சென்று கொண்டிருந்த மக்கள் அனைவரும் சற்று நின்று பெரியாரின் சிலையை நோக்கி பார்த்தனர். பெண் தோழர்கள் தந்தை பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பிறகு அங்கிருந்தே, “பார்ப்பன மத வெறிக்கும்பலான RSS, BJP கும்பல்களை விரட்டியடிப்போம்” என்ற விண்ணதிரும் முழக்கத்தை தோழர்கள் முழங்க அச்சத்தோடு அருகில் வந்த பெண் காவல்துறை அதிகாரி, “அனைத்து கட்சிகளுக்கும் மாலை போட மட்டுமே அனுமதி கொடுத்துள்ளோம் நீங்க ஏன் கோசம் போடரீங்க” என்று தடுக்க வர, உடனே ஒரு தோழர் “பெண்ணான நீங்கள் இந்த பதவியில் இருக்கின்றீர்கள் என்றால் அதற்கு பெண் உரிமைக்கு குரல் கொடுத்த பெரியார்தான் காரணம், சொல்லப்போனால் நீங்கள்தான் முன்னின்று இந்நிகழ்சியை செய்திருக்க வேண்டும்” என்று கூறியவுடன் அந்த பெண் காவல்துறை அதிகாரி மவுனமாக திரும்பிச்சென்றார்.

காலை நிகழ்வின் தொடர்ச்சியாக மாலை 7 மணியளவில் திருச்சி தில்லைநகர் காந்திபுரத்தில் தெருமுனைக்கூட்டம் நடைப்பெற்றது. குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கி இந்நிகழ்ச்சி இனிதே துவங்கியது. இத்தெருமுனைக்கூட்டத்தை ம.க.இ.க மாவட்ட செயலர் தோழர்.சரவணன் தலைமை தாங்கி நடத்தினார். அடுத்து பேசிய தோழர்.சத்தியா பெரியாரை பற்றி தெரியாத இளைய தலைமுறைகளை பற்றியும் பெரியாரை நாம் ஏன் பின் தொடர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

சிறப்புரையாற்றிய தோழர்.கோவன் அவர்கள் பெரியார் நடத்திய போரட்டங்கள் பற்றியும் BJP, RSS-ன் பார்ப்பன பயங்கரவாத செயல்களைப் பற்றியும் அதை தமிழகத்தில் வளரவிடாமல் முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும் எனவும் விளக்கிப்பேசினார்.

இடையிடையே கலைக்குழு தோழர்கள் மக்களை சிந்திக்க தூண்டும் வகையில் புரட்சிகர பாடல்கள் பாடி உற்சாகப்படுத்தினர். இறுதியாக ம.க.இ.க தோழர்.ஜீவா நன்றி தெரிவித்து கூட்டத்தினை முடித்து வைத்தார்.

இக்கூட்டத்தில் பகுதிவாழ் உழைக்கும் மக்களும் குழந்தைகளும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

செய்தி:
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
திருச்சி கிளை.

4. வேதாரண்யம்

குத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 136-வது பிறந்த நாளை முன்னிட்டு வேதாரண்யம் அண்ணா அரங்கம் அருகில் அமைந்துள்ள பெரியார் சிலைக்கு விவசாயிகள் விடுதலை முன்னணி மற்றும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பில் 17.09.2014 அன்று மாலை 6 மணி அளவில் மாலை அணிவித்து மோடி அரசின் இந்தித் திணிப்பு, சமஸ்கிருதத் திணிப்புக்கு எதிராகவும், கல்வியில் பயிற்று மொழியாகவும், அலுவலகத்தின் நிர்வாக மொழியாகவும், நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாகவும், தமிழ்மொழியை அறிவித்து ஆணையிடக் கோரியும், விண்ணதிரும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

விவசாயிகள் விடுதலை முன்னணி வேதாரண்யம் பகுதி வட்டார பொறுப்பாளர் தோழர் தனியரசு மற்றும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் வழக்குரைஞர் சரவணத் தமிழன் ஆகியோர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

தகவல்
விவசாயிகள் விடுதலை முன்னணி,
நாகை மாவட்டம்

  1. லுக் மிஸ்டர்ஸ்…

    நானும் தமிழக இளைஞன்தான்..

    ராமசாமி நாயக்கர் எந்த வகையிலும் எனக்கு வழிகாட்டி அல்ல.

    மனதில் கொள்ளுங்கள்.

    • தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து இளைஞர்களையும் தமிழக இளைஞன் என்னு செல்லமுடியாது பாப்பான்,மாற்று மாநில இளைஞனும் இருக்கன் தந்தை பெரியர் அனைத்து தமிழனுக்கும் வழிகாட்டிதன் மதவாதிகளை தவிர

  2. //ராமசாமி நாயக்கர் எந்த வகையிலும் எனக்கு வழிகாட்டி அல்ல.///
    சர் தான் சார்வாள்!… ராமசாமி நாயக்கரப்பத்தி யாரும் பேசல.. பெரியார், பெரியாரை பத்தி தானே பேசுறோம்!

    பெரியார் தமிழக இளைஞர்களுக்கு வழிகாட்டி தான். எனக்கும் வழிகாட்டி தான்.
    பெரியாரை புரிந்து கொண்டு வழிகாட்டியாக கொள்ளாதோர் இனி புரிந்து கொள்ள முயலவேண்டும், இனி வழிகாட்டியாக கொள்ள வேண்டும்.

    சம்பந்தமில்லாம உளறாதேள் சார்வாள்!

  3. //ராமசாமி நாயக்கர் எந்த வகையிலும் எனக்கு வழிகாட்டி அல்ல.//

    ஒரு சிலருக்கு கோட்சே தான் வழிகாட்டி என்றால் நாம் என்ன செய்வது?

  4. பெரியார் அனைவருக்குமே வழிகாட்டிதான், ஏனென்றால் அவரை கொனண்டாடுவதால் மட்டுமல்ல: விமர்சனம் செய்வதாலும்!

  5. செத்துப் போன ஒரு மனிதனுக்கு (மகா மனிதன் என்றாலும்)அவர் பிறந்த நாளன்று அவர் உருவச்சிலைக்கு மாலை போட்டு அவர் புகழுரைக்கும் பாட்டுக்கள் பாடி வணங்கி விட்டு ஏன் இன்னும் பலர் வரவில்லை என்று மருகுவது உருவக்கடவுள் வழிபாடு/நம்பிக்கை எல்லாம் முட்டாள்தனம் என்று சொன்ன அந்த மனிதனுக்கு நல்ல மரியாதையாகுமா ? ராமசாமி நாயக்கர் must be turning in his grave.

  6. கிறுக்கன் கருத்து சரியானதே! சிலை வழிபாடு உருவான வரலாறே இப்படித்தான்! வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்தானை சிலை வைத்து வணங்கப்போக, காத்திருந்த பார்ப்பான் புதிய புராணம் எழிக்கொண்டு வந்துவிடலாம்! எச்சரிக்கை!

    இஸ்லாமியருடன் இணைந்து கொள்ளையடித்த இந்து அரசன், அய்யப்ப அவதாரமாகி விடவில்லையா?

    • புதிய செய்தியாக இருக்கிறதே… இஸ்லாமியருடன் இணைந்து கொள்ளையடித்த இந்து அரசன் ஐயப்பன் அவதரமானது பற்றி ஏதேனும் link கிடைக்குமா?

  7. எம் மண்ணில் வாழ்ந்து, எம் மண்ணின் மைந்தர்களிடம் பெயர் வைப்பது முதல் விழாவிற்கு வருவது வரை ஏமாற்றி பணம் பறித்து, எம் மண்ணின் இளைஞர்களையே ஏமாற்றி தனது அடிமையாக்கிய ராமசாமி நாயக்கரை எந்த வகையில் எனது வழிகாட்டியாக கொள்ள வேண்டும் என வினவு விரும்புகிறது?

    மீண்டும் சொல்கிறோம் அழுத்தம் திருத்தமாக ”ராமசாமி நாயக்கர் எந்த வகையிலும் இந்த மறத் தமிழன் வழிகாட்டியாக” ஏற்றுக் கொள்ள மாட்டான்.

  8. எம் மண்ணில் வாழ்ந்து, எம் மண்ணின் மைந்தர்களிடம் பெயர் வைப்பது முதல், இறக்கும் வரையிலும், பின்னரும் பித்ரு திதி என்று கூறி ஏமாற்றி பணம் பறித்து, எம் மண்ணின் இளைஞர்களையே ஏமாற்றி தனது அடிமையாக்கிய பார்ப்பனரை எந்த வகையில் எனது வழிகாட்டியாக கொள்ள வேண்டும் என ராஜா விரும்புகிறார்?

    மீண்டும் சொல்கிறோம் அழுத்தம் திருத்தமாக இந்துத்வா பேசும் பார்ப்பனரை எந்த வகையிலும் இந்த மறத் தமிழன் வழிகாட்டியாக ஏற்றுக் கொள்ள மாட்டான் !

  9. /புதிய செய்தியாக இருக்கிறதே… இஸ்லாமியருடன் இணைந்து கொள்ளையடித்த இந்து அரசன் ஐயப்பன் அவதரமானது பற்றி ஏதேனும் லிங் கிடைக்குமா?/
    அய்யா மதுரைக்காரரே! அய்யப்பன் புத்திர பேறு அற்ற, பந்தள அரசனுக்கு, காட்டில் அனாமத்தாக கிடைத்த குழந்தை! பின்னர் பட்டத்து ராணியும் சூலெய்த, அய்யப்பன் வள்ர்ப்பு பெற்றோரால் கவனிக்கபடாமல் (தஙகள் சொந்த மகனுக்கு விரோதமாவான் என்ற பார்ப்பன அமைச்சர்களின் துர்போதனையால்), காட்டுக்கு அனுப்பபடுகிரான்! அங்கு வாவர் என்ற இசுலாமியநண்பரின் உதவியுடன் வேட்டுவ மக்களின் தலைவனாகி, அரச்ர் இறந்தபின், ஆணியின் படைகளை தோற்கடித்து தனே அரசனாகிரான்! இதுதான் புராண கலப்பிலாத கதை! பார்பனரின் பிழைப்புக்கு இந்தகதை போதுமா? எனவே புராணகதை புனையப்படும்போது அய்யப்பன், சிவனுக்கும், மோகினியான விஷ்னுவிற்கும் பிறந்த ‘கையப்பனாகிரான்’ ! அய்ம்பது ஆண்டுகளாக இந்த அய்யப்ப திந்தண்தொம் தெரிந்ததால், நான் எந்த லிங்கும் போடவில்லை, தேடவும் இல்லை!

  10. // பித்ரு திதி என்று கூறி ஏமாற்றி பணம் பறித்து // அடிமையாக்கிய பார்ப்பனரை //

    சகோ… அது பாப்பானுக்கும் எனக்கும் உள்ள பிரச்சினை. இடையில் புகுந்து மணியாட்ட ராமசாமியை அழைத்தது யார்?

    இதுதான் சாக்கு என்று உலகின் மூத்த மொழியான எம் தமிழ் மொழியை நீச மொழி என்றும், மூத்த குடி எம் தமிழ்குடியை காட்டுமிராண்டி என்றும் கூறி தனது தெலுங்கு மொழிக்கும் திருட்டு திராவிடத்துக்கும் என்றும் விசுவாசமாக இருந்த ராமசாமி நாயக்கரை திருட்டு திராவிடர்கள் நன்றி மறக்காமல் இருக்கலாம்.

    தமிழ்க்குடி எனக்கு அது அவசியமில்லை.

  11. //அது பாப்பானுக்கும் எனக்கும் உள்ள பிரச்சினை. இடையில் புகுந்து மணியாட்ட ராமசாமியை அழைத்தது யார்?// உம்து வீட்டில் நீர் பாட்டிற்கு மணியாட்டுமே! ராமசாமி உம்மை மணியாட்டகூடாது என்று சொல்லவில்லையே! உமது வீட்டிற்கு வந்து ராமசாமி தடுக்கவில்லையே! மணியாட்டி சுருட்டும் இந்த பார்ப்பானிடம் உஷார் என்றார், திருடிக்கொண்டு ஒடும் திருடனைப்பார்த்து திருடன் ஒடுகிரான் பிடி, பிடி என்பது போல!

    //இதுதான் சாக்கு என்று உலகின் மூத்த மொழியான எம் தமிழ் மொழியை நீச மொழி என்றும், மூத்த குடி எம் தமிழ்குடியை காட்டுமிராண்டி என்றும் கூறி தனது தெலுங்கு மொழிக்கும் திருட்டு திராவிடத்துக்கும் என்றும் விசுவாசமாக இருந்த ராமசாமி நாயக்கரை……….//

    தமிழை நீச மொழி என்றது சங்கராச்சாரியார் உள்ளிட்ட பிராமணர்களே!

    /மூத்த குடி எம் தமிழ்குடியை காட்டுமிராண்டி என்றும் கூறி…/

    இதற்கு பதில் ஏற்கெனவே கூறியாயிற்று! மனமிருந்தால் மீண்டும் படிக்கவும்!

    /தமிழ்க்குடி எனக்கு அது அவசியமில்லை./
    நோ பிராப்ளம்!

  12. /தனது தெலுங்கு மொழிக்கும் திருட்டு திராவிடத்துக்கும் என்றும் விசுவாசமாக இருந்த ராமசாமி நாயக்கரை………/

    தவறு அய்யனே! பெரியாரது தாய் மொழி கன்னடம்! திராவிடத்திலிருந்து திருடியது சமஸ்கிருதமே!திருட்டு திராவிடம் என்பது உமது உன்மத்தமே!

  13. // /மூத்த குடி எம் தமிழ்குடியை காட்டுமிராண்டி என்றும் கூறி…/

    இதற்கு பதில் ஏற்கெனவே கூறியாயிற்று! மனமிருந்தால் மீண்டும் படிக்கவும்! //

    பதில் எனக்குத் தெரியாது? லிங்க் சொல்லுங்கள். படித்து பார்ப்போம்.

    // தமிழை நீச மொழி என்றது சங்கராச்சாரியார் உள்ளிட்ட பிராமணர்களே! //

    சங்கராச்சாரி சொன்னாலும் ராமசாமி சொன்னாலும் தப்பு தப்புதான். பாப்பான் நீச மொழின்னு சொன்னான். உங்க ராமசாமி காட்டுமிராண்டி மொழின்னு சொன்னார்.

    // /தனது தெலுங்கு மொழிக்கும் திருட்டு திராவிடத்துக்கும் என்றும் விசுவாசமாக இருந்த ராமசாமி நாயக்கரை………/

    தவறு அய்யனே! பெரியாரது தாய் மொழி கன்னடம்! //

    நன்றி. பெரியார் கன்னடத்துக்கு ஒத்துாதினார் என்று ஒத்துக் கொண்டதற்கு.

  14. அய்யா ராசா!நும் தமிழ்ப்பற்று எம்மை புல்லரிக்க வைக்கிறது!
    /மூத்த குடி எம் தமிழ்குடியை காட்டுமிராண்டி என்றும் கூறி…/……. மூத்த குடி மனிதன் தோன்றி காட்டுமிராண்டியாய், காட்டிலே கண்டதற்கெல்லாம் பயந்து, பேய், பிசாசு, மரம், இடி, மின்னல், மழை,நெருப்பு இவற்றுக்கெல்லாம் தெண்டனிட்டு வாழ்ந்த கால பழக்கத்திலேயே இன்னும் உழல்வதால், தமிழன் காட்டுமிராண்டியாகவும், ஆரியபண்பாட்டிற்கு அடிமையாகி பக்தி புராணங்களைத்தவிர ஏனைய திருக்குறள் போன்ற நன்னெறிநூலகளை மறந்து கிடந்த தமிழை காட்டுமிராண்டிமொழியாகவும் கூறினார்!

    உங்களைபோன்ற வம்பர்களுக்கு , சவுக்கடி போல, ஆம் அய்யா, விஞ்ஞான பார்வையற்ற சமூகம், அறியல் வளர்ச்சிக்கு உதவாத மொழி என சாடினார்! அதனால் தான் அவர் பெரியார்! மனசாட்சியற்றோர் ஏற்றுக்கொள்ளாவிட்டால் எமக்கொன்றும் நட்டமில்லை!

  15. //நன்றி. பெரியார் கன்னடத்துக்கு ஒத்துாதினார் என்று ஒத்துக் கொண்டதற்கு.//
    நல்ல டாக்டரை உடனே சென்று பாரும்!

  16. // மூத்த குடி மனிதன் தோன்றி காட்டுமிராண்டியாய், காட்டிலே கண்டதற்கெல்லாம் பயந்து, பேய், பிசாசு, மரம், இடி, மின்னல், மழை,நெருப்பு இவற்றுக்கெல்லாம் தெண்டனிட்டு வாழ்ந்த கால பழக்கத்திலேயே இன்னும் உழல்வதால், தமிழன் காட்டுமிராண்டியாகவும், ஆரியபண்பாட்டிற்கு அடிமையாகி பக்தி புராணங்களைத்தவிர ஏனைய திருக்குறள் போன்ற நன்னெறிநூலகளை மறந்து கிடந்த தமிழை காட்டுமிராண்டிமொழியாகவும் கூறினார்! //

    இது எப்படி சரியான வழிகாட்டுதல் ஆகும் நண்பரே?

    ஒரு நீண்ட வரலாறும் கலாச்சார பெருமையும் கொண்ட ஒரு கூட்டம் தன் நிலை மறந்து அல்லது மறக்கடிக்கப்பட்டு ஆரிய மாயையில் சிக்கி அடிமைப்பட்டுக்கொண்டு வாழ்ந்து வரும் நிலையில் அவனை அடிமை நிலையில் இருந்து மீட்டெடுக்க என்ன செய்திருக்க வேண்டும்?

    ”டேய் தம்பி…. நீ வாழ்வது அடிமை வாழ்க்கையடா? உன்னை அறியாமலே அடிமையாக ஆரியனிடம் வாழ்ந்து கொண்டிருக்கிறாயே? உலகிற்கே சிலப்பதிகாரமும் திருக்குறளும் மணிமேகலையும் தந்து வாழ்வியலை போதித்த தமிழ்க்குடியான நீ இப்படி மூட நம்பிக்கைகளில் மூழ்கியிருப்பது எந்த வகையில் சரியடா? மீண்டெழுந்து வா?” என அவன் தோழில் தட்டிக்கொடுத்து தன்னம்பிக்கையளித்து மீட்டெடுக்க வேண்டியதே ஒரு மீட்பனின் கடமை?

    ஆனால் ராமசாமி _______ என்ன செய்தார்? தமிழிலக்கியங்கள் அனைத்தையும் பழித்தார். அதனை எழுதிய தமிழ்ப்புலவர்களையும் பழித்தார். அதன் மூலம் தன்னை அறிவாளியாகவும் இலக்கியங்களை படைத்த தமிழர்களை மூடநம்பிக்கையாளர்கள் என காட்டிக்கொள்ள முனைந்து தமிழன் ஆரிய அடிமை விலங்கினை உடைத்தெரிந்தாலும் தனக்கு அடிமையாக இருக்கும் ஒரு ஒரு வழிப்பாதையை உருவாக்கினார்.

    இது தமிழனை எந்த வகையிலும் நன்னெறிப்படுத்த உதவவில்லை. மாறாக ஆரிய மாயையில் மீண்ட தமிழன் மீண்டும் திராவிட மாயையில் வீழ்ந்து மறு அடிமைப்பிரவேசம் செய்யவே வழிவகுத்தது. இறுதியில் ராமசாமி _____ வென்றார்.ஆனால் இதுவே இறுதியானதல்ல.

  17. /ஆனால் ராமசாமி _______ என்ன செய்தார்? தமிழிலக்கியங்கள் அனைத்தையும் பழித்தார். அதனை எழுதிய தமிழ்ப்புலவர்களையும் பழித்தார். அதன் மூலம் தன்னை அறிவாளியாகவும் இலக்கியங்களை படைத்த தமிழர்களை மூடநம்பிக்கையாளர்கள் என காட்டிக்கொள்ள முனைந்து தமிழன் ஆரிய அடிமை விலங்கினை உடைத்தெரிந்தாலும் தனக்கு அடிமையாக இருக்கும் ஒரு ஒரு வழிப்பாதையை உருவாக்கினார்./

    உமக்கு என்ன அம்பிகளைபோல செலச்டிவ் அம்னீஷியாவா? பெரியார் எந்த இலக்கியத்தை பழித்தார்? ஆரியம் போற்றிய, பக்தி என்றபெயரில் மூளைசலவை செய்யும் நூல்களைத்தன் பழித்தார்! ராமாயணமும், கந்த புராணமும், பாரதமும் ஆரிய புளுகு மூட்டைகளை கோண்டு தமிழன் தலையில் பக்தி என்ற பெயரில் புகுத்தப்படுவதை எதிர்த்தார்! பார்பன ஆதிக்கத்தை என்றென்றும் தொடர, சாதி முறையை புகுத்திய வர்ணாசஸ்ரம மனுனீதிநூலை எதிர்த்தார்! உமக்கு என்ன அதில் நட்டம் அல்லது கஷ்டம்?
    /டேய் தம்பி…. நீ வாழ்வது அடிமை வாழ்க்கையடா? உன்னை அறியாமலே அடிமையாக ஆரியனிடம் வாழ்ந்து கொண்டிருக்கிறாயே? உலகிற்கே சிலப்பதிகாரமும் திருக்குறளும் மணிமேகலையும் தந்து வாழ்வியலை போதித்த தமிழ்க்குடியான நீ இப்படி மூட நம்பிக்கைகளில் மூழ்கியிருப்பது எந்த வகையில் சரியடா? மீண்டெழுந்து வா?” என அவன் தோழில் தட்டிக்கொடுத்து தன்னம்பிக்கையளித்து மீட்டெடுக்க வேண்டியதே ஒரு மீட்பனின் கடமை?/

    உஙகள் மீட்பனையே செய்யச்சொல்லுமே! எமக்கு அட்டியில்லை!

  18. கண்ணப்ப நாயனார் சிவனை கல்லால் அடித்து வழிபட்டாராம்.அது அவர் பக்தியை வெளிப்படுத்திய விதம் அப்படி. பெரியார் ராமனை செருப்பால் அடித்து ஆரிய அரவத்தை எதிர்த்து நின்றார்.இவை இரண்டும் வேறு வேறானவை. அதைப்போல பெரியார் தமிழை காட்டுமிராண்டி மொழி என்றதற்கும், ஆரிய கூட்டம் தமிழை நீச பாசை என்று கூறி பொது நிகழ்வுகளில் தீட்டு கழிப்பதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. தமிழ் மொழி மீதான பெரியாரின் ஆதங்கம்,தமிழ் இனத்தின் மீதான ஆதங்கத்திலிருந்து பிறந்தது.தமிழில் எழுத்துச் சீர்திருத்தம் கொண்டுவந்து தமிழுக்கு பெருமை சேர்த்தவர் அவர்.இன்றளவும் கோவில்களில் தமிழை மறுப்பது,தமிழ் மண்ணில் திருவையாறில் நடைபெற்று வரும் தியாகய்யர் விழாவில் தமிழில் பாட மறுப்பதும்,தமிழில் பாடினால் மேடையில் தீட்டு கழிப்பதும் பார்ப்பனக் கொழுப்பன்றி வேறல்ல.இவர்கள் பெரியாரின் தமிழ் மொழிப்பற்றை குறைகூறுவது சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது.

  19. பெரியார் பிறந்த நாள் விழா போன்ற வெகுமக்கள் தழுவிய மாற்று பண்பாட்டு நிகழ்வுகளை நாம் அடையாள காண வேண்டும். கம்யூனிஸ இயக்கங்கள், திராவிட இயக்கங்கள், மதச்சார்பற்ற சக்திகள், பொதுமக்கள் என அனைவருக்கும் பொதுவான ஐந்து விழாக்களை அடையாளம் கண்டு ஆண்டுதோறும் நாம் கொண்டாடுவது ஆர்.எஸ்.எஸின் வளர்ச்சியை தடுக்க உதவும்.

  20. அம்பிகளின் நூல் ஆண்வத்துடன் தெரியும்போது, எவருடைய தாடிதான் தெரிந்தாலென்ன? அம்பிகளுக்கு சரக்கில்லை ! அடுத்தவர் சரக்கில் வேக்காடு பார்க்கிரார்! அம்பி அவர்களே உங்கள் பின்னூட்டங்களில், உங்கள் அரிப்பை தீர்த்துக்கொள்ளும் வசவுகளே ஒழிய உருப்படியான கருத்தோ, விமர்சனமோ உண்டா?
    சற்று ஓய்வு எடுத்துக்கொள்ளுங்களேன்! எல்லோரையும் கடிக்க ஆரம்பித்து விட்டீர்களே, அதனால் சொல்கிறேன்!

  21. /கண்ணப்ப நாயனார் சிவனை கல்லால் அடித்து வழிபட்டாராம்.அது அவர் பக்தியை வெளிப்படுத்திய விதம் அப்படி../

    அது பக்தியை மட்டும் வெளிப்படுத்தவில்லை, பக்திமான் களின் மயக்கத்தையும், புத்தி தெளிவையும் வெளிப்படுத்த்வில்லையா? ஆரிய சமதர்ம மாவீரன் இராவணனை நீங்கள் இழிவு படுத்தி ராமலீலா கொண்டாடும்போது ராமனையும், ஸ்த்ரீலோலன் கிருஷ்ணனையும் (அவர்கள் தீயநடத்தைகளுக்காக) செருப்பால் அடிப்பது ஏற்புடையதே! ஆனால் பெரியார் அடிக்கவில்லை! பிள்ளையார் பொம்மை மட்டுமே உடைத்தார்!

Leave a Reply to Ajaathasathru பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க