இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் கோவிந்த் பன்சாரே சுட்டுக் கொல்லப்பட்டார். மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூர் மாவட்டத்தை சேர்ந்த பன்சாரே 82 வயதானவர். பிப்ரவரி 16-ம் தேதி தனது மனைவியுடன் காலை நடைப்பயிற்சி முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்த போது அவரது வீட்டின் அருகாமையில் வைத்து சுடப்பட்டார் பன்சாரே. பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் 20-ம் தேதி உரிரிழந்தார். அவரது மனைவி உமா பன்சாரே காயங்களுடன் உயிர் பிழைத்துள்ளார்.
கோவிந்த் பன்சாரே கொல்லப்படுவதற்கு ஒரு மாதம் முன்பு சிவாஜி பல்கலைக்கழகத்தில் கோட்சேவின் ஆர்.எஸ்.எஸ். பின்னணியை குறிப்பிட்டு, “கோட்சேயை புகழும் மனநிலை ஆபத்தானது” என்று பேசியிருந்தார். சிவசேனை மற்றும் பா.ஜ.க.வை சேர்ந்த எம்.பி.க்கள் போட்டி போட்டுக் கொண்டு கோட்சேவை புகழ்வது மகாராஷ்டிரத்தில் அன்றாட செய்திகள். “சனாதன் சன்ஸ்தா என்ற இந்துத்துவ பயங்கரவாத அமைப்பின் நடவடிக்கைகளை காவல்துறை கண்காணிக்க வேண்டும்” என்று எழுதியதற்காக பன்சாரே ஒரு முறை மிரட்டப்பட்டார்.
மராட்டியம் அறிந்த பகுத்தறிவாளர் நரேந்திர தபோல்கர் சுட்டுக் கொல்லப்பட்ட போது, பன்சாரேவுக்கு ஒரு கடிதம் வந்தது. அதில் “அடுத்தது நீங்கள்?” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. “சிவாஜி யார்?” என்ற பன்சாரேவின் புத்தகம் சிவாஜியை இந்துத்துவ பேராண்மையின் சின்னமாக திரிக்கும் சிவசேனை-ஆர்.எஸ்.எஸ் முயற்சிக்கு எதிரானது. பன்சாரேவும், தபோல்கரும் இந்து விரோதிகள் என்று ஹெச். ராஜாவின் மொழியில் மதவெறி பிரச்சாரம் சிவசேனை-ஆர்.எஸ்.எஸ் கும்பலால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டது.
கோவிந்த் பன்சாரே கொலைக்கு இன்னொரு கோணமும் இருக்கிறது. பெருமாள் முருகனை முடக்க இந்துத்துவ-சாதிய சக்திகளுக்கு நாமக்கல் தனியார் பள்ளி முதலைகள் கைகொடுத்ததை போன்றது அது. ‘பன்சாரே எதிர்த்து வந்த சாலை மேம்பாட்டு நிறுவனத்தின் கரங்கள் அவரது கொலைக்கு பின்னால் இருக்கக்கூடும்’ என்ற சந்தேகத்தை பலரும் எழுப்புகின்றனர். சாலைகள் தனியார்மயத்துக்கு எதிராக தொடர்ந்து போராடி வந்தார் பன்சாரே.
சிவசேனை-பா.ஜ.க கூட்டணி 1990-ல் ஆட்சியை பிடித்த போது சாலைகள் தனியார்மயத்தை பெருமளவுக்கு ஊக்குவித்தது. ஐ.ஆர்.பி (Ideal Road Builders) என்ற நிறுவனம் மராட்டியம் முழுவதும் பல சாலைகளை போட்டு, சுங்கச் சாவடி அமைத்து பெரும் வசூல் கொள்ளையில் இறங்கியது. ஐ.ஆர்.பி.யின் நிலப்பறிப்புக்கு எதிராக தகவல் பெறும் உரிமை சட்டப்பட்டி சில விபரங்களை கோரிய சதீஷ் செட்டி என்பவர் 2010-ம் ஆண்டு கொல்லப்பட்டார். அதன் பிறகு கோவிந்த் பன்சாரே ஐ.ஆர்.பி.க்கு எதிராக உக்கிரமான போராட்டங்களை முன்னெடுத்தார். பன்சாரே கொல்லப்பட்ட பிப்ரவரி 16-ம் தேதி ஐ.ஆர்.பிக்கு எதிரான வழக்கு சி.பி.ஐ-க்கு கைமாறியது குறிப்பிடத்தக்கது.
மராட்டியத்தில் 2005-லிருந்து 2013 வரை பன்சாரே கொலை சம்பவம் போன்று 53 தாக்குதல் சம்பவங்கள் சமூக ஆர்வலர்களுக்கு எதிராக பதிவாகியுள்ளன. 9 பேர் உயிரிழந்துள்ளனர். மற்றவர்கள் கொடுரமாக அங்ககீனப்படுத்தப்பட்டுள்ளனர். அந்த கொலைகளுக்கு எதிரான வழக்குகள் நகராமல் இருக்கின்றன. 2013-ம் வருடம் நரேந்திர தபோல்கர் கொல்லப்பட்ட போது மகாராஷ்டிராவின் முதலமைச்சராக அப்போது இருந்த பிரிதிவ்ராஜ் சவான் ‘மகாத்மா காந்தியை கொலை செய்த மனஅமைப்பு தாபோல்கரின் கொலைக்கு பின்னால் இருக்கிறது’ என்று கருத்து தெரிவித்தார். குற்றவாளிகளின் பின்னணி தெரிந்திருந்தும் முதலமைச்சராக செயல்பட்ட எஞ்சியிருந்த காலத்தில் கொலையாளிகளை பிடிக்க பிரிதிவ்ராஜ் சவானால் இயலவில்லை.
“தாஜ் ஹோட்டல் தாக்குதல் குற்றவாளி அஜ்மல் கசப்பை பிடிக்க முடிந்தவர்களால் தாபோல்கர் மற்றும் பன்சாரேவின் உயிர்களை காவு வாங்கிய கயவர்களை பிடிக்க முடியாதது ஏன்” என்ற கேள்வி முக்கியமானது. இந்துத்துவம் இந்த சமூக உடலின் ஆபத்தான எச்சதசையாக வளர்ந்து இருக்கிறது. வெட்டி எறியும் அறுவை சிகிச்சைக்கு அந்த எச்சதசை காத்திருக்கிறது.
பன்சாரேவின் இறுதி ஊர்வலத்தில் இலட்சக்கணக்கான மக்கள் திரண்டு அவருக்கு அஞ்சலி செலுத்தியது, சமூக நலனுக்காக உழைக்கும் கம்யூனிஸ்ட்கள் மீது சாதாரண மக்கள் வைத்திருக்கும் மதிப்பையும், நம்பிக்கையையும் காட்டியது.
இது தொடர்பான செய்தி
– சம்புகன்
காம்ரேட் பன்சாரேவுக்கு எனது வீரவணக்கம்.
(இந்துத்வ எச்சதசைக்கு Univerbuddy யின் உரையாடல் உரமூட்டுவதாக அமைந்திருந்ததை அறிந்தே இருந்தேன். இந்திய சூழ்நிலையில் இந்த உரையாடலுக்கு குறிப்பான எந்த அவசரமும் இல்லை என்று காம்ரேட்டின் படுகொலையின் மூலம் உணர்கிறேன். Univerbuddy இனி எங்கும் பின்னூட்டமிடமாட்டான். தான் வினவில் பங்கெடுத்திருக்கும் சில விவாதங்களை விரைவில் முடித்துக்கொள்வான்.)
முதலில் தோழர் கோவிந்த் பன்சாரேவுக்கு எனது செவ்வணக்கம்.
நாட்டின் ஒற்றுமைக்கும் வளர்ச்சிக்கும் இசுலாமிய தீவிர அடிப்படைவாதிகள் மற்றும் கடுங்கோட்பாட்டுவாதிகள் கண்டிப்பாக கேடு விளைவிப்பார்கள் என்பது சரி தான். ஆனால் இதற்க்கு அடிப்படையாக நடுநிலையாளர்களும்,ஹிந்துத்வா அமைப்புகளும் சொல்லும் காரணிகள் என்ன? இசுலாமியர்கள் அவர்களது மதத்தையும்,கலாசாரத்தையும் கடுமையாக பின்பற்றுகிறார்கள் பிற சமய மக்கள் மீது போர் திடுக்கிரார்கள் குண்டு வைக்கிறார்கள் என்று. ஆனால் உலகம் முழுதும் நிகழும் ஏகாதிபத்திய நிகழ்ச்சி போக்கில் அவர்களும் ஒரு கண்ணியாக தான் , கருவியாக தான் உள்ளனர். இதற்க்கு எடுத்துகாட்டாய் தலிபான்களும் இன்னும் பிற இசுலாமிய பயங்கரவாத அமைப்புகளும் உள்ளன. இந்திய அளவில் ஹிந்துத்வா பிற்போக்கு சக்திகளையும் இசுலாமிய பிற்போக்கு சக்திகளையும் ஒரே தராசில் வைத்து எடை போட முடியாது என்பதை நாம் சிறும்பான்மை மக்களுக்கு எதிராக நிகழும் போக்குகளை வைத்து அறிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினை உண்டு என்ற அளவில் தான் இன்றளவிலும் இசுலாமிய தீவிரவாதம் இங்கே உள்ளது.ஆனால் அந்த எதிர்வினைக்கு பெரும்பாலும் அவர்களே பலியாகிறார்கள் என்பதை ஏழை எளிய இசுலாமிய மக்கள் உணரும் போது(ஏற்கனவே பொருளாதார அளவில் உணர்ந்து தான் உள்ளார்கள்) அந்த எதிர்வினை ஏகாதிபத்தியத்திற்கு எதிராக திரும்பும். இசுலாமிய தீவிரவாதத்தை காரணம் காட்டி ஹிந்துத்வா சக்திகளை ஆதரிப்பதோ அல்லது கண்டு கொள்ளாமல் விடுவதோ பேராபத்தை விளைவிக்கும் என்பதை நாம் உணர வேண்டும்.
ஏனெனில் எங்கெல்லாம் இன ஒடுக்குமுறை மற்றும் மத அடிப்படைவாதம் இருக்கிறது அங்கெல்லாம் அதை எதிர்த்து அந்த மக்களில் இருந்தே புரட்சியாளர்கள் தோன்றுகிறார்கள். இசுலாமிய சமூகத்திலும் நாத்திகர்களும் தீவிரவாதத்தை எதிர்ப்பவர்களும் உண்டு.
சமூக பொருளாதாரம் தான் அனைத்தையும் தீர்மானிக்கும் சக்தி என்று தன்னளிவிலோ அல்லது புற விசைகளினாலோ உணரும் பொழுது அந்த இசுலாமிய சமூகத்திலும் ஒரு பாரிய மாற்றம் வரும் என்றே நான் நினைக்கிறன்.
நண்பர் யுனிவர்படி,
தங்களது புரிதலுக்கு நன்றி. இந்த புரிதல் வரும் சமயத்தில் தொடர்ந்து விவாதத்தில் பங்கேற்பது தான் சிறந்தது என்று நினைக்கிறன். தாங்கள் தொடர்ந்து விவாதத்தில் பங்கேற்று இந்து மற்றும் இசுலாமிய தீவிரவாத சக்திகளுக்கு எதிராகவும், ஏகாதிபத்தியதிற்க்கும், தரகு முதலளித்துவத்திர்க்கும் எதிராகவும் தொடர்ந்து வினையாற்ற வேண்டும் என்று விரும்புகிறேன்.
நன்றி.
நண்பர் சிவப்பு,
உங்கள் ஆலோசனைக்கும் அழைப்புக்கும் மிக்க நன்றி.
எனது ப்ளாகுகளை அழித்துவிட்டேன்.
நண்பர்களை விட்டு வினவை விட்டு நான் எங்கே போய்விடப்போகிறேன். ஒரு புதிய பெயரில் வருகிறேன். 🙂
The total indian system is collapsed and expired. The killing of Pansare and Dabholkar actually announces the death of Indian System. If still anyone says democracy, constitution they must be either fools or criminals. The thin line differentiating the middle line is fast vanishing, you have to be either this side or that side is what the reactionaries are dictating. The strongest condemn to this killing is to hit the reactionaries, Hindudva terrorist elements with even more punch and venom.
blog என்பது block board மாதிரி உணிவேர் . தவறானவற்றை அழித்து விட்டு சரியானவற்றை எழுதலாமே. நீங்கள் எந்த பெயரில் வந்தாலும் நாங்கள் உங்களை உங்களின் தனிசிறப்பான எழுத்து ஓட்டத்தை வைத்து கண்டு உணர்ந்து கொள்வோமே நண்பா !
நண்பர் தமிழ்,
//உங்களின் தனிசிறப்பான எழுத்து//
உணிவேருக்கு ஒரு ஞாயம் உங்களுக்கு ஒரு ஞாயமா நல்லாயிருக்கே உங்க ஞாயம் 🙂
வாங்க உணிவேர் …, மன்னிக்கவும் pk … உங்கள் புதிய பெயர் நன்று !
இஸ்லாமிய மக்கள் மீதான இந்திய அரசின் அநீதியான செயல்பாடுகளின் விளைவாக எம்மைப் போன்ற இளைஞர்கள் இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளின் பின்னே செல்லாமலிருப்பதற்கு தோழர் பன்சாரே போன்றவர்களின் செயல்பாடுகளும் மற்றும் மக்கள் கலை இலக்கிய தோழர்களின் அணுகுமுறையும் மிக முக்கிய காரணிகள் என்பது மிகையல்ல. தமிழக முஸ்லிம் மக்கள் பெரியாருக்கு மட்டுமல்ல மக்கள் கலை இலக்கிய தோழர்களுக்கும் மிகுந்த கடமைப்பட்டுள்ளார்கள். எம்மைப் போன்ற இளைஞர்கள் செம்புரட்சிக்கு உறுதியுடன் துணைநிற்போம்.
தோழர்.பன்சாரேவுக்கு செவ்வணக்கம்.
வினவுத் தோழர்களுக்கு நன்றிகள் பல.
காம்ரேட் பன்சாரேவுக்கு எனது செவ்வணக்கம்.
pk
இணையத்தில் ஒலிக்கத்துவங்கும் ஒரு புரட்சிக்குரல்.
ஒரு சிகப்பு பூ உதிரும் போது
ஆயிரம் பூக்கள் மலரும்…
தோழர் பன்சாரேவுக்கு செவ்வணக்கம்…
இந்து மத வெறியர்களையும் அவர்களின் செய்கைகளையும் கண்டு ஏன் கிறித்தவர்கள் கூட பயப்படுகிறார்கள் என்று தெரியவில்லை. இந்த உலகில் இருக்கும் நூற்றைம்பதுக்கும் மேலான எண்ணிக்கை கொண்ட நாடுகளில் இந்துக்கள் மெஜாரிட்டியாக இருக்கும் நாடுகள் என்று சொல்லப்படுபவை வெறும் இரண்டு நாடுகள் தான் (இந்தியா மற்றும் நேப்பாளம்). இந்த இரண்டு நாடுகளின் நிலப்பரப்பு உலக நிலப்பரப்பில் வெறும் 2.4 சதம் தான். இந்த உலகமே ஆபிரகாமிய மதங்களால்(குறிப்பாக கிறித்தவத்தால்), இவற்றின் ஆதிக்கத்தால், நிரம்பியது. அப்படி இருக்கும் போது இந்தியாவெங்கிலும் அரசின் மறைமுக ஆதரவோடு கிறித்தவ தேவாலயங்கள் தாக்கப்படும் போது ஏன் இந்த பாதிரிகள் மோடியை சந்தித்து கெஞ்சுகிறார்கள் என்று தெரியவில்லை. அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் இந்து கோவில்கள் இல்லையா? இங்கிருக்கும் இந்து மதவெறி அமைப்புக்களுக்கு அங்கிருந்து நிதி வருவதில்லையா? இல்லை அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் பண்டார பரதேசி பார்ப்பண குஞ்சுகள் வேலை செய்வதில்லையா? குடியிருப்பதில்லையா? இந்தியாவில் நடப்பதற்கு பதிலடியாக உலகம் தழுவிய அளவில் கோவில்களையும் பண்டார பரதேசி பார்ப்பண குஞ்சுககளையும் அடித்து நொறுக்க வேண்டியது தானே? இந்தியாவில் இருக்கும் மக்களில் பெரும்பாண்மையினர் இந்த பண்டார பரதேசி பார்ப்பண குஞ்சுகளால் ஒடுக்கப்படுபவர்களே. ஆகையால் இவர்கள் யாரும் இதை பற்றி பெரிதும் அலட்டிக்கொள்ள மாட்டார்கள். எதற்காக இந்த பாதிரிகள் (பொதுவுடைமைவாதிகளும் தான்) இந்து மத வெறிக்கும்பலிடம் பலமில்லாதவர்கள் போல் புலம்பிக்கொண்டு நிற்கிறார்கள் என்று தெரியவில்லை. ஒரு முறை உலகளாவிய அளவில் இவர்களின் பாணியிலேயே இவர்களுக்கு பதிலடி கடுமையாக கிடைத்தால் பிற்பாடு அசோக் சிங்கால் முதல் நம்ம ஊர் ராம கோபாலன் வரை குசு விட கூட அஞ்சுவார்கள்.