privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகலைகவிதைகையில் வீணை வாயில் கீதை நெஞ்சில் அணுகுண்டு...

கையில் வீணை வாயில் கீதை நெஞ்சில் அணுகுண்டு…

-

cartoon_abdul_kalamஅழுது முடித்த கண்களுக்கு..!

றப்பின் துயரம்
புரிந்து கொள்ளக் கூடியதுதான்,
ஆனால்
சாவின் விளம்பரம்
சகிக்க முடியவில்லை.

கண்களை பிழிந்தெடுத்தன
காட்சி ஊடகங்கள்
காதுகளில்
சோகத்தை காய்ச்சி ஊற்றின
பண்பலைகள்

சீரியலுக்காக
செதுக்கப்பட்ட காட்சிகளாய்
ஒரு மரணத்தை மாற்றமுடியும்
என்று
சாதித்துக் காட்டினார்கள்
ஊடக முதலாளிகள்.

அறிவியல் எம்.ஜி. ஆரின்
இருப்பை மட்டுமல்ல
இறப்பை வழங்கும் நிகழ்ச்சியின்
இலாபமும்
உடைய வர்க்கத்துக்கே உரித்தானது.

கேள்விக்கிடமின்றி
எல்லோரும் இடறப்படும்போது
மொத்த சிந்தனையும்
கலாம் போதையால்
நிரப்பப்படும் போது
மத்த போதை எதற்கு?
மதுக்கடைகளை ஒரு நாள்
துணிந்து மூடியது அரசு.
சோகத்தின் இலக்கை
அடுத்த நாள் எட்டலாம்,
குடிப்பவன் உடம்பு ( பாடி )
(முன்னாள் ) குடியரசு தலைவருக்காக
ஒரு நாள் தாங்காதா என்ன?
சாதாரண இழப்பா இது!

அம்பானிக்கும், அதானிக்கும்
அம்பானியால் சிறுவணிகம் இழந்த
இராமேசுவரம் மளிகைக் கடைக்காரருக்கும்
அதானியால் நிலத்தை இழந்த
குஜராத் விவசாயிக்கும்,

எல்லோருக்கும் நல்லவர்
இறந்துவிட்டார்
!

அமித்ஷாவுக்கும், மோடிக்கும்
ஆர்.எஸ். எஸ். கொலைவெறி மோகன்பகவத்துக்கும்
திரிசூலத்தால் குதறப்பட்ட
அப்பாவி முஸ்லீம்களுக்கும்

எல்லோருக்கும் நல்லவர்
இறந்து விட்டார்
!

மலைக்கள்வர்களுக்கும்
மணல் கொள்ளையர்க்கும்
ஏரிகளை விழுங்கிய
ரியல் எஸ்டேட் மாபியாக்களுக்கும்
இவர்களால் வாழ்வாதாரம் இழந்து
மண்ணை விட்டு விரட்டப்படும் மக்களுக்கும்

AKALAMஎல்லோருக்கும் நல்லவர்
இறந்து விட்டார்
!

கண்ட கனவில்
கல்லா பிதுங்கும்
கல்விக் கொள்ளையர்க்கும்
கல்விக் கண்ணை
காசுக்கு விற்றுவிட்டு
கனவும் கானும் மாணவர்களுக்கும்

எல்லோருக்கும் நல்லவர்
இறந்துவிட்டார்
!

பெருந்தகையின் கனவை உள்வாங்கி
பெருந்தொகையில் முன்னேறிய
ஜெயலலிதாவும், தளபதியும்
ஜி.கே. வாசனும், விஜயகாந்தும்
அன்புமனியும், எடியூரப்பாவும்
ஏக்கத்தில் துவள

எல்லோருக்கும் நல்லவர்
இறந்துவிட்டார்
!

மதங்களைக் கடந்த மாமனிதர்
கையில் வீணை
வாயில் கீதை
நெஞ்சில் அணுகுண்டு…
என
பக்காவான
பார்ப்பன வல்லரசு கனவு நாயகனாகி
ஆர்.எஸ்.எஸ் குருமூர்த்தியே
பாராட்டுமளவுக்கு
அப்துல்கலாம் மெய்யாலுமே
மதங்களைக் கடந்த மாமனிதர்தான்!

செத்தவரெல்லாம்
உத்தமரென்றால் – அவர்
செய்தது என்ன
கேட்கலாம் தானே?

அப்துல்கலாமின் பங்களிப்பு
நாட்டைக் காப்பற்ற
அணுகுண்டு சோதனை
அடுத்தடுத்து ஏவுகணை! – என
அடுத்தவனை மிரட்டும் அறிவியலில்
அடைந்தது என்ன நாடு?

மீனவரைக் காப்பாற்ற
ஒரு ‘மிசைல்’ உண்டா?
மாணவரின் கழுத்தறுக்கும்
‘அட்மிசன்’ கொள்ளையைய் தகர்க்க
ஒரு அணுகுண்டு உண்டா?
பழங்குடிகளின் காடுகளைப் பிடுங்கும்
வேதாந்தாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக
ஒரு ஏவுகனை உண்டா?
‘அப்ரைசல்’ எறிகனைக்கு எதிராக
கனவு கானும்
ஐ.டி. ஊழியர்களை காப்பாற்ற
கலாமிடம் ஒரு கருவி உண்டா?

நிலங்களையும், வயல்களையும்
பிடுங்கும்
கார்ப்பரேட் எதிரிகளைத் தாக்க
ஏதேனும் உண்டா கலாமின் கண்டுபிடிப்புகளில்!
இயற்கை வளங்களை கண்டறியும்
செயற்கை கோள்களை தயாரித்து
சுரண்டும் முதலாளிக்கு வழங்கும்
நாட்டை அழிக்கும் வேலைக்கு எதிராக
நடையைக் கட்டியதுண்டா கலாமின் எளிமை!

பச்சை பிள்ளைகளிடம் போய்
மதிப்பீடுகள் பேசிய மாமனிதர்
பாராளுமன்ற உறுப்பினர்களை
கூட்டிவைத்து
‘லஞ்சம் வாங்க மாட்டோம்’ என்று
உறுதிமொழி ஏற்க வைத்ததுண்டா?

விண்ணுக்கு ஏவுகணை வீசிய
வெற்றி வீரர்
கண்ணுக்கு எதிரே இருக்கும்
ஜெயலலிதாவிடம்
கள்ளுண்ணாமை பற்றி பேசி
டாஸ்மாக்கை வீசச் சொன்ன
பேச்சு உண்டா!

தனியார் பள்ளி
மாணவர்களிடம்
உழைப்பு, நேர்மை என
வகுப்பெடுத்த அணுவாளர்
தாளாளரிடம் போய்
கட்டணக் கொள்ளைக்கு எதிராக
கொதித்தெழுந்த காலம் உண்டா!
ஏழ்மையில் பிறந்து
தமிழ்வழி பயின்று
அரசுப்பள்ளியில் படித்துவந்த
அப்துல் கலாம்,
எங்கெனும்
தாய்மொழியில் அரசுப்பள்ளி திறக்கச்சொல்லி
தப்பித்தவறி பேசியதுண்டா?

ஏழையாய் பிறந்தார்
தமிழராய் இறந்தார்
என்பதற்காய் மட்டும்
ஆளும் வர்க்க சேவை நாயகனை
ஏழை வர்க்கத்தினர் முன்னுதாரணமாக
ஏற்க முடியாது,
அவர் என்னவாய் இருந்தார்
யாருக்காய் உழைத்தார்!
என்பதிலிருந்தே அறிதல் வேண்டும்!
இருபத்தியோரு உழைப்பாளிகள்
ஆந்திரக்காட்டில் கரிக்கட்டயாய் கிடந்தபோது
ஓடி வராத கூட்டமெல்லாம்
கலாம் உடலை தேடி வந்த
வர்க்கத்திலிருந்தே
இவர் யாருக்காக வாழ்ந்தார்! புரியவேண்டும்!

உப்புக்காற்றில் பிறந்தவர்
கார்ப்பரேட் கப்புக் காற்றில் கரைந்தார்…
மீன்தோல் தழுவிய நாவினார்
பார்ப்பன பூணுலின்
மான்தோலாக மாறினார்…
ஈழப்படுகொலை, குஜராத் படுகொலை,தலித்துகள் படுகொலை,
எதர்க்கும் வாய் திறவாமல் நாறினார்
ஒடுக்கும் ஆளும் வர்க்க வீணைநரம்பின் சுரமாய் ஏறினார்!

பளிச்சென தெரியும்AbdulKalam
முதலாளி வர்க்க எதிரிகளை விடவும்,
ஆபத்தானவர்கள்
அவர்களை மூடி மறைக்கும்
அப்துல் கலாம்கள்!

புரிந்து கொள் உழைக்கும் வர்க்கமே!
எதர்க்காக உழைக்க வேண்டும்
என்பது மட்டுமல்ல
எதற்க்காக அழ வேண்டும்
என்பதும் நமக்கு தெரிந்திருக்க வேண்டும்

கண்ணீர்
அன்பின் ஈரமாக
சுரக்க வேண்டுமே ஒழிய,
அறியாமையின்
கோரமாக வழியக் கூடாது!

துரை.சண்முகம்

  1. எல்லாவற்றையும் பரிகசித்து விமர்சனம் எழுதியே பழக்கப்பட்டவர் எழுதிய விமர்சனம் என்பதா? அல்லது அறியாமை என்னும் இருளால் சூழப்பட்ட ஒருவர் எழுதிய விமர்சனம் என்பதா? எப்படி வேண்டுமானாலும் கூறலாம். அய்யா கட்டுரையாளரே அப்துல் கலாம் ஒரு விஞ்ஞானி அவ்வளவுதான். அவர் தனது தள்ளாத வயது வரை தான் பிறந்த நாட்டுக்கு எவ்வளவு சேவை செய்ய இயலுமோ அதைச் செய்துவிட்டு, வயதான பிறகு தானுண்டு தன்னுடைய ஆராய்ச்சி உண்டு என இருந்தவரைப் பிடித்து ஜனாதிபதியாக ஆகுங்கள் என வாஜ்பாய் அழைத்த காரணத்தால் ஜனாதிபதி ஆனவர். பிரதிபா பட்டேல், பிரணாப் ஆய்யோருடன் அப்துல் கலாமை ஒப்பிடுங்கள். மரண தண்டனையின் மீதான கருணை மனுக்கள் எதிலும் கையொப்பமிட மறுத்த தீரர். பார்லிமெண்ட் நிறைவேற்றி அனுப்பிய சட்ட மசோதாவை திருப்பி அனுப்பிய வீரர். ராக்கெட் டெக்னாலஜியில் அவரது தலைமையில் இந்தியா பெரும் முன்னேற்றம் கண்டது. அதன் காரணமாக நாம் அனுப்பிய செயற்கைக் கோளால் பெரும் புயற் காற்று எந்தத் திசையில் எந்த இடத்தைத் தாக்கும் என துல்லியமாகத் தெரிந்த காரணத்தால் பல்லாயிரம் மக்கள் உயிரிழக்காமல் காப்பாற்றப்பட்டனர். இந்தக் கட்டுரை எழுதியவர் இறக்கும் போது ஏன் எந்தக் கண்டுபிடிப்பும் கண்டுபிடித்து மனித குலத்துக்கு எந்த சேவையும் ஆற்றவில்லை என இகழ்ந்து கூறுதல் எவ்வளவு அறிவீனமோ அது போலத்தான ஒரு விஞ்ஞானியைப் பார்த்து அவர் ஏன் சமூகப் போராளியாகப் போராடவில்லை எனக் கேட்பது. அப்துல் கலாமின் விஞ்ஞானம் எதிர் எதிர் சிந்தணை கொண்ட யாவருக்கும் பயன் தந்த காரணத்தால்தான் அவர் எல்லோருக்கும் நல்லவர். உயர்ந்தவன், தாழ்ந்தவன், ஏழை, பணக்காரன் என வித்தியாசம் விஞ்ஞானிகளுக்குக் கிடையாது அவர்களின் கண்டுபிடிப்புகளின் விளைவுகள் எல்லோருக்கும் பயன்படும். எனவே எல்லோரும் அவரைப் புகழ்கின்றார்கள்.

    • அதிக வல்லமையுள்ள ஜனாதிபதி பதவிக்கு `கொண்டுவரப்பட்ட’ விஞ்ஞானி கலாம் அவர்கள் தனது பதவிகாலத்தில் குறைந்த பட்ச அதிகாரத்தை காட்டியிருந்தால் கூட சில நன்னமைகள் கிடைத்திருக்கலாம்.தான் பிறந்த ஊரின் மீனவர்கள் இலங்கை ராணுவத்தால் தொடர்ந்து படுகொலை செய்வதை தடுத்திருக்கலாம். குஜராத்தில் இஸ்லாமிய இனப்படு கொலையை தடுத்திருக்கலாம்… கல்விக்கட்டண கொள்ளையை கண்டித்திருக்கலாம்… தாதுமணல் கொள்ளைக்கு கண்டனம் தெரிவித்திருக்கலாம்…

      இன்னும் எத்தனை எத்தனையோ செய்திருக்கலாம்…எந்த நன்னைமையும் செய்யாமல் இத்தனை விளம்பரம் எதற்கு? போகட்டும் கலாமைத்தவிர வேறு விஞ்ஞானிகளே இல்லையை? இந்தியத்திருநாட்டில்.

      ஆளும் வர்க்கத்துக்கு அடிபணியாமல் எத்தனை எத்தனை விஞ்ஞானிகள் உலகம்முழுவதும் கொல்லபட்டருக்கிறர்கள்.வரலாரை ஊன்றிபடியுங்கள் அன்பர்களே. நாம் சுனாமி எனும் பேரழிவை அனுபவிக்கும்போது இந்த விஞ்ஞானி ஜனாதிபதி மாளிகையில் என்ன செய்தார் தெரியுமா? அறிவுசார் கண்டுபிடிப்புக்காண இந்திய சட்டத்தை பன்னாட்டுநிறுவனங்களுக்கு சாதமான திருத்திற்கு ஒப்புதல் வழங்கும் ஆணையில் கையொழித்திட்டார்….இன்னும் எத்தனை எத்தனை துரோகங்கள் விளைந்துகிடக்கிறது.ஆளும் வர்க்கத்தின் மென்மையான முகமூடிதான் கலாம் அவர்கள்.

      அமெரிக்கா அணுகுண்டு ஆய்வு செய்யும்போது அதற்க்கு எதிராக ஆல்பிரட் ஐன்ஸ்ட்டின் உட்ப்பட நூற்றுக்கும் மேற்ப்பட்ட விஞ்ஞானிகள் தங்களது சமூக அக்கறையை பதிவு செய்தனர்.

      விஞ்ஞானியாக மட்டுமிருந்துதிருந்தால் நமக்கு கவலையில்லை ஆனால் இவர்மட்டும்தான் விஞ்ஞானி என்று விளம்பரதாரர் நிகழ்ச்சியாவதால்தான் விமர்சிக்க வேண்டியுள்ளது. அந்த வகையில் கவிஞரின் “பரிகாசிப்பு” தொடர வாழ்த்துக்கள். இரணியன்

  2. தண்ணீர் குடம் வீடு வரை தூக்க
    வர வில்லை கலாம்

    பைக் பஞ்சர் ஆனபோது
    பஞ்சர் போட வராதவர் கலாம்

    ஏழை பாட்டிக்கு வைத்தியம்
    பார்க்காதவர் கலாம்

    சுண்டல் விற்கும் சிறுவர்களின்
    வாழ்கையை சீரமைக்காத கலாம்

    டி விற்ற கணேசன் மாண்டபின்
    தவித்தவர்களுக்கு டி போட்டு தராதவர் கலாம்

    ஏழைகளின் உடையாம் வேட்டி
    போடாதவர் கலாம்

    எதுகை மோனையாக கவிதை
    எழுதாதவர் கலாம்

    உலகின் அணைத்து பிரச்சினைகளையும்
    தீர்காதவர் தான் இந்த கலாம்

    • அன்று மக்கள் முதல்வரை
      விடுவிக்க
      குமாரசாமிக்குள்ளும்
      ஒரு இராமன் இருந்தார்!

      இன்று மக்கள் சனாதிபதியை
      விடுவிக்க
      இராமனுக்குள்ளும்
      ஒரு குமாரசாமி இருக்கிறார்!

      தண்ணீர் குடம்
      பைக் பஞ்சர்
      ஏழைபாட்டி
      சுண்டல் விற்கும் சிறுவன்
      டீ விற்கும் கணேசன்
      வேட்டி போடாத கலாம்
      என்று பாவடை சிங்காம்
      பவனி சிங்கும்
      தோற்றுப் போக வாதாடி
      பிராதுகளை நீற்றுப்போகச்
      செய்கிறாராம் இராமன்!

      Face Valueவை
      இழந்துவிட்டு
      Facebookகிள்
      நம்மவர்கள் இப்படி கூவுகிறார்களே!

      டாடி எனக்கு
      இன்னொரு டவுட்டு!

      கயர்லாஞ்சியில்
      சுரேகாவின் முலை அறுத்து
      பிறப்புறுப்பில் கல் திணித்த
      சாதிய வன்மத்தை
      கலாம் கண்டித்தாரா?
      என்று
      ஒரு வேளை கேட்டால்

      இதே இராமன்,
      கலாம், சுரேகாவிற்கு
      ஜாக்கெட்டா வாங்கித் தரமுடியும்
      என்று வாதிடுவாரோ?

      • முட்டாள்தனமான வாதம் தென்றல்.

        உலகில் நடக்கும் அத்தனை அநியாயங்களுக்கும் அப்துல் கலாம் அவர்கள் பதில் அளிக்க வேண்டும், போராட வேண்டும் என்று நீங்கள் நினைத்தீர்களானால் பின் அந்த குற்றச்சாட்டு உங்களுக்கும் எனக்கும் அனைவருக்கும் பொருந்தும் இல்லையா. அனைத்து பிரச்சினைகளுக்கும் நாம் தெருவில் இறங்கி போராடுகிறோமா. நீங்களே கூட இசுலாமியர்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் மட்டும் கிளர்ந்தேழுகிறீர்கள் ஆனால் அதே ஒரு பார்ப்பனர் கொல்லப்படும் போது சாகட்டும் என்ற ரீதியில் பதிவிடுகிறீர்கள்.

        மீனுக்கு நீந்த தெரியும், பறவைக்கு வானில் பறக்க தெரியும். பறவை ஏன் நீரில் நீந்தவில்லை, மீன் ஏன் வானில் பறக்கவில்லை என்று வியாக்கியானம் செய்து கொண்டிருப்பீர்களா. மீண்டும் சொல்கிறேன். அப்துல் கலாம் ஒரு விஞ்ஞானி, அரசியல்வாதி அல்ல, சமூக போராளி அல்ல, அவரை ஊரில் உள்ள எல்லா பிரச்சினைக்கும் கருத்து சொல்ல வேண்டும் என்று ஒற்றை காலில் தாங்கள் நிற்பது சரியல்ல.

        நீங்கள் ஒரு சமூக போராளி என்று வைத்து கொள்ளலாம். உங்களிடம் ஒருவர் நீங்கள் அறிவியலில் என்ன சாதித்தீர்கள் என்று வாதாடினால் நீங்கள் என்ன பதில் சொல்வீர்கள்?

        உங்களால் என்ன முடியுமோ, அதை நீங்கள் செய்கிறீர்கள். அவ்வளவு தான்.

        சுரேகா அவர்களுக்காக உருப்படியாக நீங்கள் செய்தது என்ன,
        இலங்கை தமிழர்கள் நல்வாழ்வுக்காக நீங்கள் செய்தது என்ன,
        குஜராத் கலவரத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்காக நீங்கள் செய்தது என்ன,
        டெல்லி, பஞ்சாப் கலவரத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்காக நீங்கள் செய்தது என்ன,

        சும்மா, நான் போராடினேன், கொடி பிடித்தேன் என்று சொல்லாதீர்கள். இதனால் அந்த குடும்பங்களுக்கு உருப்படியான ஒரு நன்மையையும் நிகழவில்லை. குறை சொல்வது மிக மிக எளிது. இது போன்று குறை சொல்வதை விட்டு விட்டு தங்களது மக்கள் பணியை தொடருங்கள்.

        நீங்கள் என்னை கேட்டீர்கள் என்றால் நான் ஒத்துக்கொள்வேன், மக்களுக்கு பயன்படும் வகையாக நான் பெரிதாக ஒன்றும் செய்யவில்லை தான். ஏதோ என்னால் ஆன வரை சில சிறிய சேவைகள், உதவிகள் செய்து கொண்டு போகிறேன். பெரிய அளவில் மக்களுக்கு என்னால் இதுவரை உதவ முடியவில்லை. நானாவது எனது இயலாமையை ஒத்துக்கொள்கிறேன். ஆனால் தாங்கள்???

        உலகில் உள்ள அனைவரையும் குறை சொல்லும் நீங்கள் உருப்படியாக மக்களுக்கு என்ன செய்தீர்கள்?

        • திருவாளர் கற்றது கையளவு,

          கேவலம் உங்கள் பகுதியில் இருக்கும் நூலகம் இயங்குகிறதா என்று பார்ப்பதற்கு போராடக் கூப்பிட்ட பொழுதே திருப்பிக்கொண்டு ஓடியவர் தாங்கள். போராட்டத்தின் பலன் என்னவென்ற தெரியாத கருவறுக்கும் கைக்கூலியாக இருந்துவிட்டு, இங்கு போராடி கொடிபிடிப்பதால் குடும்பங்களுக்கு ஒரு நன்மையும் விளைவதில்லை என்று புளுகுவது ஏன்?

          உங்களைப்போன்ற மோசடிக்காரர்கள் தான் போராடிய சசிபெருமாள் செல்போன் டவரில் ஏறி உயிர்விட்ட பொழுது வன்முறையாளன் என்று மோசடி செய்தது.

          ஆனால் இதே கலாம் கைக்கூலியாக இருந்துவிட்டு மக்களுக்கிழைத்த துரோகத்தை பட்டியலிட்டால் ஆளும் வர்க்கத்தின் ஏவல் விலங்காக கேவலமாக கதறிக்கொண்டிருக்கிறீர்கள்!

          உங்களது மோசடி எந்தளவுக்கு என்பதை பட்டியலிடுகிறேன். துணிவிருந்தால் பதில் சொல்லுங்கள்.
          அப்துல் கலாம் அறிவாளி, சமூகப்போராளியல்ல என்பது இருக்கட்டும்.

          கீழ்க்கண்ட துரோகங்களுக்கு என்ன பதில்?

          1. விவசாயி விதை நெல்வைத்திருப்பது கஞ்சா வைத்திருப்பதற்கு ஈடான குற்றம் என்றது மான்செண்டோவை ஆதரிக்கும் சட்டம் சொல்லியது. இந்த சட்டத்தில் கையெழுத்திட்டவர் யார்? விவசாயி செத்தா உம்மா மாதிரியான ஆள்களுக்கு என்ன தெரியும் அருமை? உமது நிலைப்பாடு கேவலமாக இல்லை? தெரிந்தே ஒரு துரோகத்தை எப்படி ஐயா உம்மால் மறைக்க முடிகிறது? போறவன் வர்றவனெல்லாம் மக்கள் சனாதிபதின்னு சொல்றாய்ங்க, நெஞ்சில் நேர்மையிருந்தால் இந்த கேள்விக்கு பதில் சொல்லுய்யா? அப்துல் கலாம் இதுல கையெழுத்துப்போடாமல் இருக்க நான் செய்து இருக்க முடியும்? இந்த அரசை வீழ்த்துவதைத் தவிர! ஒரு விவசாயியை என்ன செய்ய சொல்றீரு?

          2. தமிழக மீனவர்களை நாயைப்போல் சிங்களக் காடையர்கள் சுட்டுத்தள்ளுகிற பொழுது பாரம்பரியமாக மீன் பிடிக்கும் எல்லையை காவு கொடுக்கும் பன்னாட்டு கடல் எல்லைச் சட்டத்தில் கைச்சாத்திட்டவர் யார்? நீர் பாட்டுக்கும் லும்பனாக உக்ரைன், சீனாவென்று சுற்றிவிட்டு திரிவீர்! ஆனால் மீனவனின் வாழ்வாதரத்தை அழிக்கிற ஒரு செயலைச் செய்தவரை என்ன செய்ய சொல்கிறீர்? பதில் சொல்வீரா?

          3. மணிப்பூரிகளின் தாய் மார்கள் இந்திய ராணுவத்தால் சிறப்பு ஆயுதப்படை சட்டத்தால் வண்புணர்விற்கு உள்ளாக்கப்பட்ட பொழுது, இராணுவத்தின் தலைவரான கலாம் என்ன செய்தார்? என் தாயும் உன் தாயும் அம்மணமாக நின்றிருந்தால் கலாமைப் புகழ்வீரா?

          மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு. அது உங்களைப்போன்ற நடுத்தரவர்க்க கோமான்களுக்கு சுட்டுப்போட்டாலும் வராது.

          இதையெல்லாம் தாண்டி ஏதோ கலாம் மன எழுச்சியை உருவாக்கினார் என்று சொல்கிறீரே! மேற்கண்ட மூன்று விசயத்தில் நியாய உணர்ச்சியே இல்லாதவருக்கு மனம் என்ற ஒன்று இருக்கிறதா? மன எழுச்சி மானக்கேடில்லையா?

          • தென்றல்,

            எப்போது என்னை நூலகம் திறக்க போராட அழைத்தீர்கள்?
            எந்த தேதியில் அழைத்தீர்கள்?

            சசிபெருமாள் அவர்களை வன்முறையாளர் என்று நான் கூறுவதாக மோசடியாக நீங்கள் ஏன் அவதூறு பரப்புகிறீர்கள்? முதலில் அபாண்டமாக பழி கூறுவதை தவிர்க்க பாருங்கள். உங்கள் அனுபவத்திற்கு அது அழகல்ல. குடிக்கும் பழக்கம் இல்லாத நான் சசிபெருமாள் அவர்களுக்கு எதிராக ஏன் கருத்து பதிவிட போகிறேன்?

            விவசாயிகள் விதை நெல்லை வைத்திருப்பது கஞ்சா வைத்திருப்பதற்கு ஈடான குற்றம் என்று யார் சொன்னதாக கூறுகிறீர்கள்? ஏன் இந்த HYPERBOLE? மான்செண்டோவின் பி.டி. பருத்திகள் அப்துல் கலாம் காலத்தில் அல்ல, அதற்கு முன்பிருந்தே இந்தியாவில் பயிரடப்பட்டு வந்துள்ளது. முதலில் 1998 இல் பிடி பருத்தி இந்தியாவில் பயிரடப்பட்டது. அந்த பருத்தி வகைகளின் இலைகளை உண்ணும் பூச்சிகள் இறந்து போகும் வகையில் அதன் மரபணுவில் மாற்றம் செய்யப்பட்டு விற்கப்பட்டது. பிடி பருத்தியை பரவலாக அறிமுகப்படுத்த அரசு முன்வந்தது மார்ச் 2௦௦2. அப்போது அப்துல் கலாம் அவர்கள் ஜனாதிபதியாக இல்லை. அவர் பதவியேற்றது ஜூலை 2௦௦2 ஆம் ஆண்டு. அதற்கு முன்பே இந்திய அரசின் இயற்கை வள அமைச்சகமும் மரபணு கமிட்டியும் பிடி பருத்திக்கு பச்சை கொடி காட்டி விட்டனர். இன்று வரை பிடி பருத்திக்கு ஆதரவு ஒரு பக்கமும், எதிர்ப்பு இன்னொரு பக்கமும் இருக்க தான் செய்கிறது. இதில் கலாம் அவர்களை ஏன் குற்றம் சாட்டுகிறீர்கள்? அவர் ஜனாதிபதியாக பதவியேற்பதற்கு முன்பிருந்தே பயிரிடப்பட்ட போது பரவாயில்லை. கலாம் ஜனாதிபதியாக பதவியேற்ற சமயம் பயிரடப்பட்டால் தவறு என்று ஏன் அவரை தனித்து குற்றம் சாட்டுகிறீர்கள்? பிடி பருத்தியினால் ஆபத்தில்லை என்று ஆய்வு செய்து அறிவித்த குழுவில் அப்துல் கலாம் இல்லை என்பதையும் உங்களுக்கு தெளிவுபடுத்தி விடுகிறேன்.

            இலங்கை கடல் எல்லை விடயத்தில் கச்சத்தீவு பகுதி பல ஆண்டுகளாக இந்தியா, இலங்கை, இரு நாடுகளுக்கும் அங்கு உரிமை இருப்பதாக கருதப்பட்டது. ஏன் என்றால் சுதந்திரத்திற்கு முன்பு பிரிட்டிஷ் அரசு அதை இரு நாடுகளுக்கும் பொதுவாகவே வைத்திருந்தது. 1974ஆம் ஆண்டு மற்றும் 1976 ஆண்டுகளில் இந்தியா, இலங்கை இரு நாடுகளும் கச்சத்தீவு பகுதியை இலங்கைக்கு சொந்தமானதாக ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் அங்கு இருக்கும் சர்ச்சுக்கு போவதற்கும் மீன்களை பிடிப்பதற்கும் இந்திய மீனவர்களுக்கு அனுமதி இருந்தது. இன்று வரை கச்சத்தீவு குறித்த சர்ச்சை ஓயவில்லை. இலங்கை அரசு முடிவில் இந்திய மீனவர்கள் யாழ்ப்பான கோடு வரை இந்திய மீனவர்கள் மீன் பிடித்து கொள்ளலாம் என்று அறிவித்தது. இதில் கலாம் எங்கு வந்தார்? இலங்கை கடற்படையின் அட்டூழியங்கள் இன்று நேற்றல்ல, பல ஆண்டுகளாகவே இருந்தது. இலங்கையில் அப்போது விடுதலை புலிகள் இருந்த காலத்தில் யாழ் பகுதியில் பெரிதாக கோலோச்சவில்லை. ஆனால் தற்போதைய நிலவரத்தில் அவர்கள் கை அங்கு மேலோங்கி உள்ளது. இலங்கை கடற்படை அப்பாவி தமிழக மீனவர்களை சுடுவதற்கு கலாம் காரணம் என்று தாங்கள் சொல்வது தவறு. இன்று இலங்கை இராணுவம் இந்திய மீனவர்களை சுட்டால் அதற்கு இந்திய ஜனாதிபதியான பிரணாப் முகர்ஜி தான் காரணம் என்று சொல்வீர்களா? என் கருத்தினில் தவறிருந்தால் கூறுங்கள். இலங்கை கடற்படையினர் கலாம் ஜனாதிபதியாக ஆன பின்னர் தான் நம் மீனவர்களை சுட்டார்களா? அதற்கு முன்னும் பின்னும் சுடவே இல்லையா? ஏன் கலாம் அவர்களை இந்த விடயத்தில் தனிமை படுத்தி குற்றம் சாட்டுகிறீர்கள்?

            மணிப்பூரில் இந்திய இராணுவம் மாலோம் பகுதியில் AFSPA சட்டத்தை தவறாக பயன்படுத்தி 1௦ அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்ட சம்பவத்தை எதிர்த்து இரோம் சர்மிளா அவர்கள் 2௦௦௦ ஆண்டில் இருந்து உண்ணாவிரதம் இருக்கிறார். அப்போது அப்துல் கலாம் ஜனாதிபதியாக இல்லை. வெறும் விஞ்ஞானியாகவே இருந்தார். AFSPA சட்டம் முதலில் 1958 ஆம் வருடத்தில் இருந்து வடகிழக்கு மாநிலங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 1990 ஆம் ஆண்டில் AFSPA சட்டம் ஜம்மு காஷ்மீரில் கொண்டு வரப்பட்டது. இதில் அப்துல் கலாம் எங்கே வந்தார்? நாகாலாத்துக்கு தனிநாடு கேட்டு போராடிய NNCக்கு எதிராக கொண்டுவரப்பட்டது தான் இந்த சட்டம். 2012 ஆண்டில் திருபுராவில் இந்த சட்டம் விலக்கி கொள்ளப்பட்டது. இன்று வரை AFSPA சட்டம் நாலாலாந்தில் உள்ளது. இந்த சட்டத்தில் தீவிரவாதிகளையும் ஒடுக்குவதற்காக கொண்டுவரப்பட்டபோது அதனை பயன்படுத்தி அப்பாவி பெண்களை வன்புணர்வு செய்த இராணுவத்தினரின் மேல் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதில் இருவேறு கருத்துகள் இல்லை. இன்று வரை நாகாலாந்தில் அரசுக்கு இணையான ஒரு நிழல் அரசாங்கம் தீவிரவாதிகளால் நடத்தப்பட்டு வருகிறது. அங்கு செல்லும் வண்டிகள், வியாபாரம் செய்யும் நபர்கள், கொள்முதல் செய்பவர்கள், உற்பத்தி செய்பவர்கள் என்று பல்வேறு வகைகளில் அறிவிக்கப்படாத வரியாக தீவிரவாதிகள் இன்றும் வசூலிக்கிறார்கள். அரசு வேலை செய்பவர்கள் 27 சதவீதம் அளவுக்கு தீவிரவாதிகளுக்கு வரி தரவேண்டும் என்று எழுதப்படாத சட்டம் அங்கு உள்ளது. இந்த நிலையில் தீவிரவாதிகளை ஒடுக்குவதற்கு அந்த சட்டம் தேவை என்று இந்திய அரசு கருதுகிறது. இந்தியாவின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விடயங்களில் ஜனாதிபதி பதவியில் இருப்பவர் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று அப்படி எளிதாக செயல்பட முடியாது தென்றல். விளைவுகளை ஆராய்ந்து தான் முடிவு எடுக்க முடியும்.

            ஆக நீங்கள் கூறிய பிரச்சினைகள் கலாம் ஜனாதிபதியாவதற்கு முன்பிருந்தும் இருந்து வருகிறது. கலாம் அவர்கள் ஜனாதிபதி பதவியில் இருந்து இறங்கிய பின்பும் இருந்து தொடர்கிறது. இப்போது கலாம் அவர்கள் இறந்த பின்னும் தொடர்கிரது. இதில் கலாம் அவர்களை மட்டும் நீங்கள் குற்றவாளியாக காட்ட முனைவது சரியல்ல என்பது என் கருத்து. எல்லா பிரச்சினைகளுக்கும் அப்துல் கலாம் அவர்களே காரணம் என்று நீங்கள் அவதூறு பரப்பியதால் இத்தனை நீண்ட விளக்கம் அளிக்க வேண்டியதாக போய் விட்டது.

            தனிப்பட்ட முறையில் என் கருத்து தீவிரவாதம் என்பது ஆயுதம் மூலம் அழிக்கப்படக்கூடியது அல்ல. மக்களுக்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு, கல்வி, பாதுகாப்பு வசதிகள் செய்து கொடுத்து, ஊழலற்ற ஆட்சி அமைத்தால் தானாக அவர்கள் நேர்வழிக்கு வந்து விடுவார்கள்.

            • திருவாளர் கற்றது கையளவு,

              கடைசில் கலாமின் ரசிககுஞ்சுமணிகள் இந்தளவு அறியாப்பிள்ளைகள் மட்டுமல்ல அயோக்கியர்கள் என்பதையும் உங்களது விளக்கம் தருகிறது. நான் சுட்டிக்காட்டிய துரோகங்களுக்கு இவைகள் பதில் அல்ல.

              உங்களைப்போன்ற ஆட்களுக்கெல்லாம் நிலைமையே தெரியவில்லையென்றால் கலாம் கனவு காணச் சொன்னது எந்தளவுக்கு போயிருக்கிறது பார்த்தீர்களா?

              முதலில் உங்களது பித்தலாட்டம் பார்வைக்கு:

              “எப்போது என்னை நூலகம் திறக்க போராட அழைத்தீர்கள்?
              எந்த தேதியில் அழைத்தீர்கள்?”

              மே பதினாறு 2015, பிற்பகல் 12.51 மணிக்கு நூலகம் திறக்க போராட அழைத்தேன். அதுகுறித்த சுட்டி இதோ,
              https://www.vinavu.com/2015/04/22/cyproplaxaxin/#comment-416000

              \\சசிபெருமாள் அவர்களை வன்முறையாளர் என்று நான் கூறுவதாக மோசடியாக நீங்கள் ஏன் அவதூறு பரப்புகிறீர்கள்?\\

              பதிலை மீண்டும் படித்தால் உங்களுக்கு காணக்கிடைப்பது இதுவன்றி வேறல்ல; “உங்களைப்போன்ற மோசடிக்காரர்கள் தான் போராடிய சசிபெருமாள் செல்போன் டவரில் ஏறி உயிர்விட்ட பொழுது வன்முறையாளன் என்று மோசடி செய்தது.”

              இது ஏன் என்பதையும் தாங்களும் மோசடியாளர் தான் என்பதை இங்கு வலியுறுத்திக்கூறுகிறேன்.

              அந்தவகையில் இது அவதூறு அல்ல. ஏனெனில் சனநாயகத்தில் நம்பிக்கைவத்து டவர் ஏறி இந்த அரசை அம்பலப்படுத்தி சனநாயகத்தையும் அம்பலப்படுத்துகிற சசி பெருமாள் வகை. இரண்டாவது வாய்ச்சவடால் அடித்த கலாம் வகை. இந்தக் கூட்டம் மக்கள் போராட்டங்களை எந்தளவுக்கு கொச்சைப்படுத்துகிறது என்பதற்கு தங்கள் வாயிலிருந்தே வந்த வாசகத்தை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.

              “சும்மா, நான் போராடினேன், கொடி பிடித்தேன் என்று சொல்லாதீர்கள். இதனால் அந்த குடும்பங்களுக்கு உருப்படியான ஒரு நன்மையையும் நிகழவில்லை.”

              இப்பொழுது சொல்லுங்கள்; சசிபெருமாளை வன்முறையாளன் என்று சொல்லுகிற கூட்டம் தான் தாங்கள் என்பதை மேற்கொண்ட வாசகம் ஆணித்தரமாக நிரூபிக்கிறதா?

            • மூன்று துரோகங்களுக்கு மூன்று எடுத்துக்காட்டுகள்;

              1. விவசாயிகள் விதை நெல் வைத்திருப்பது கஞ்சாவிற்கு இணையான குற்றம் என்பது மிகைப்படுத்தல் அல்ல. விதைச் சட்டம் 2004 கூறுகிறது. இது பாராளுமன்ற நிலைக்குழுவில் வசம் இருந்து இப்பொழுது மீண்டும் கொண்டுவரப்படுகிறது. ஆனால் இங்கு அதுவல்ல விசயம். பிடிபருத்திக்கு முதன் முதலில் லைசென்சு வழங்கியது 2002வாக்கில்.

              குடியரசுத்தலைவராக பதவியேற்ற அப்துல் கலாம் தனது முதல் தலைமை உரையில் மான்செண்டோவின் முகவராக அறிக்கை வெளியிட்டவர்.

              பிறகு பிடிபருத்தியால் பல தற்கொலைகள் நடந்த பொழுது, மான்செண்டோ தனது தரப்பை நியாயமாக்க பயன்ப்படுத்திய முகவர் வேறு யாருமல்ல; அப்துல் கலாம் தான்.

              விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளவில்லை என்பதற்கு அப்துல் கலாமை மேற்கோள் காட்டி மான்செண்டோ வெளியிட்ட அறிக்கை இங்கு இருக்கிறது. யோக்கியம் இருந்தால் பதில் சொல்லலாம்.

              Monsanto response to article linking farmers’ suicides in India to its genetically modified seeds

              http://business-humanrights.org/en/india-activist-vandana-shiva-links-monsantos-genetically-modified-seeds-to-farmers-suicides

              ஆதாரம் இரண்டு:

              விதர்பாவில் விவசாயிகள் தற்கொலையை முன்னிட்டு கலாம் மேற்பார்வையிட்ட பொழுது, அவர் முன் வைத்த கோரிக்கைகள் என்ன?

              Vidarbha farmers’ widows meet President, urge for blanket ban on BT cottonseeds sale
              By Pervez Bari, TwoCircles.net June 16th 2007 http://www.indianmuslims.info/news/2007/jun/16/vidarbha_farmers_widows_meet_president_urge_blanket_ban_bt_cottonseeds_sale.html

              ஆதாரம் மூன்று:

              பிடிபருத்திக்கு தடைவிதிக்க வேண்டும் என்று சொல்லப்பட்ட குறிக்கோளை எங்குமே கவனத்திற்கு கொண்டுவராத அப்துல் கலாம், பத்திரிக்கையாளர் நிகழ்வின் போது விதர்பா தற்கொலைகளுக்கு நீர் மேலாண்மைதான் காரணம் என்று சொல்லிவிட்டு பிடிபருத்தி பற்றி வாயே திறக்கவில்லை.

              http://www.abdulkalam.nic.in/abdulkalam/sllatest1.jsp?id=1067

              “Dear Journalist friends, quite often I have seen the media reports on the typical problems of farmers, particularly agricultural farmers in certain regions of the nation including Vidarbha. Based on my visit to Vidarbha last month, I would like to share certain experiences with you, so that you can focus on the problems faced by the farmers indicating possible solutions as a news item. I personally believe while we flash the problem, there has to be a team in the media group of a particular newspaper to understand the problem after spot study and either frame an editorial or an extended news item, highlighting the possible long term and short term solutions. Hence, I am spending a few minutes on two important societal aspects which I came across last month, so that the journalists assembled here can assimilate and respond.
              I have been in discussion with farmers, agricultural scientists, administrators, journalists and public concerned with the national development, particularly the present situation of agriculture. During my visit to the drought affected area of Vidarbha district, Maharashtra on 15th June 2007, I met the farmers at Yavatmal. They reiterated the situation that the cotton farmers have not been able to realize reasonable revenue from their farming operations. The output has been low and in some cases there has been total loss due to frequent droughts. In some cases, the farmers have been supplied with Bt cotton seeds expecting better yield. However, the better yield from Bt cotton can come only when there is no shortage of water. After discussions with the farmers and specialists, I found that there is a need to take an overall view of the cotton farming operation in the region. This should include provision of quality input, training the farmers on improved methods of farming or cultivation, marketing of the produce and action to be taken when there is failure of rain. For preventing severe drought, there is a need to create large number of water bodies to harvest rain water which will be useful during the period of drought. In addition, there is a need for local textile industry to work with the farmer and provide them marketing support for their produce without going through the process of middlemen. Also, the banking system should reach every village in the Vidarbha district so that the farmers are not exploited by the money lenders. In this connection, I would like to recall the e-Choupal system established by ITC Ltd. in various areas where farmers have been able to enhance their productivity and realize better value for their products. In this regard, I would also like to mention that there is a model available in Gheri Buttar, Punjab where a collaborative work among farmers, industry, research institution and academic institution has resulted in doubling the seed cotton productivity. I am of the view that relief and programme packages have to be combined with a plan of implementation and targets, and an organizational structure and accountability for implementation. The journalists, particularly the editorial team of the journal working in the Vidarbha area may like to study the problem in detail and suggest methodologies to help the State Government for finding lasting solution to the satisfaction of the farmers. Now, I would like to talk on another important area namely dealing with various forms of medical emergencies which requires media attention.”

              பிடி பருத்திக்கு ஒரு தேர்ந்த அரசு அதிகாரி போன்று சொம்படிக்கு வாசகங்கள் அவை. இதைப் படித்து விட்டு, அதே அப்துல் கலாம் சந்தித்த அதே நிகழ்வை முன்னிட்டு பி. சாய்நாத் எழுதிய கட்டுரை இங்கு,

              In Yavatmal, life goes on
              https://ruralindiaonline.org/articles/in-yavatmal-life-goes-on/

              சில துளிகள் “As Mr. Tiwari’s letter to President Kalam also says: “We strongly feel that it all is not well in Vidharbha and therefore, it’s not the right time for any cultural or dancing session inauguration …We would be highly obliged if you could spare a few minutes to meet the unfortunate widows.”

              நம் கேள்வி: கலாம் ரசிகக்குஞ்சுகுளுவான்கள் இதற்கு என்ன பதில் சொல்வார்கள்? “என்ன மயித்துக்குடா மக்கள் சனாதிபன்னு சொல்றீங்க?” என்று யாராவது கேட்டால் கற்றது கையளவு தற்குறி இராமனும் என்ன பதில் சொல்வார்கள்.

              திருவாளர் கற்றது கையளவு அவர்களே, ஒரு மான்செண்டோவிற்கே மூச்சு முட்டுதே, உணவுப் பாதுகாப்பு சட்டம் 2005இல் கையெழுத்தானது, இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறீர்கள்,

              குறிப்பு: இங்கு ஒரு போட்டி நிகழ்வதாக எமக்குப் படுகிறது. அது துரோகத்தில் விஞ்சி நிற்பது கலாமா, கலாம் ரசிகர்களா?

              • திருவாளர் கற்றது கையளவு,

                இரண்டாவது துரோகத்தில் இங்கு கச்சத்தீவை பற்றி பேசவில்லை. நீர் வேறு பாயிண்டு எடுத்துக்கொடுக்காதீர். அப்துல் கலாம் காலத்தில் தான் மெர்சண்ட் சிப் சட்டம் மற்றும் உள்நாட்டு படகுகள் சட்டம் திருத்தி அமலுக்கு வந்தது. இதன்படி மீனவரின் வாழ்வாதரங்களைப் பறிப்பதற்கு என்ன பதில் சொல்லப்போகிறீர்?

                உள்நாட்டிற்குள்ளேயே மீனவர்கள் தங்களது மீன்பிடி எல்லைகளை இழந்துவிட்டு நிற்கிறார்கள்! ஏதாவது மீனவரிடத்தில் போய் பேசிபாருங்கள். பன்னாட்டு மீன் பிடிக்கம்பெனிகளால் தங்கள் வாழ்வை இழந்திவிட்டு நிற்பது தெரியும்.

                கலாமை உருவாக்கியது மீனவ சமுதாயம் தானே! இது அவருக்குத் தெரியாதா? ரிசார்ட்டுக்கு நோ, ஆனால் குப்பங்கள் காலியாகிடவேண்டுமென்று சொல்கிறார்களே! இது எதன் அடிப்படையில்? மேதகு இராமன் மற்றும் உங்களைப்போன்ற கனவான்களும் சுத்த வெஜிடேரியன் கலாம் போன்ற மவுண்ட் ரோடு மகாவிஷ்ணுக்களுக்கும் காற்றுவாங்க கருவாடு நாறுகிறதோ?!

            • மூன்றாவது துரோகத்தில் மணிப்பூர் உருவான நேரத்தில் இருந்தே அம்மக்கள் இராணுவ ஏதேச்சதிகாரத்திற்கு எதிராக போராடித்தான் வருகிறார்கள். மற்ற சனாதிபதிகள் எல்லாம் அயோக்கியர்கள் என்று தாங்கள் ஒப்புக்கொண்ட பிறகு கலாமிற்கு மட்டும் சலுகை ஏன்?

              ஏன் சலுகை என்றால் அங்கு எனது அம்மாவும் உங்களது அம்மாவும் இராமனின் அம்மாவும் அம்மணமாக நிற்கவில்லை என்பதன்றி வேறன்ன இருக்கிறது? உங்களுக்கு வாழ்க்கை லும்பனாக ஓடுகிறது. ஆகையால் சகபாடிகளின் கோரிக்கைகளை புறக்கணித்துவிட்டு நாட்டு பாதுகாப்பு என்று சொல்லி இராணுவத்தின் வெறிநாய்த்தனத்தை நியாயப்படுத்திக்கொண்டிருக்கிறீர்கள்!

              ————————————————

              அப்துல் கலாமிடம் இந்தக்கேள்வியை வலுவாக வைப்பதற்கு இன்னொரு காரணுமும் உண்டு;
              ரசியாவில் இருந்துகொண்டே, பீகாரில் இராணுவ ஆட்சியை ஒரு பேக்ஸ் கையெழுத்து மூலம் அமல்படுத்தத் தெரிகிற கலாமிற்கு, இம்மக்களுக்கு ஆதரவாக ஓர் அறிக்கைகூடவா விடமுடியாது?

              மனுசன் இருந்தா கொஞ்சமாவது நெஞ்சல ஈரம் இருக்கணும் சார். இதே ஜெகஜீவன் அறிக்கை மணிப்பூரில் சிறப்பு ஆயுத இராணுவ சட்டம் சனநாயகம் மற்றும் சட்டத்திற்கு புறம்பானது என்று சமர்பிக்கவில்லை.

              வெளிய சொன்ன வெட்கக்கேடு! காறித்துப்புனா அது எச்சிக்குத்தான் அசிங்கம்!

      • சந்தடி சாக்கில் ஊழல் செயலலிதாவும் , அப்துல் கலாமும் ஒன்று எனபது போல ஒரே தராசில் வைத்து அளக்கிறீர்கள் . உங்கள் நியாய தராசின் யோக்கியதை அதிலே அம்பலப்பட்டு நிற்கிறது

        • அட இராமா, சந்தடி சாக்கில் மான்சோண்டா சட்டத்தில் கையெழுத்திட்டு விவசாயிகளைக் கொன்றவரை, பன்னாட்டு கடல் எல்லை சட்டத்தில் கையெழுத்திட்டு தன்னை உருவாக்கிய மீனவ சமுதாயத்தைக் கொன்றவரை சுண்டல் விற்கும் பையன், தண்ணீர் தூக்கவில்லை என்று ஒப்பிட்டு அளந்தீரே!

          ஒரு வேளை உமது நியாய தராசின் யோக்கியதை உமது சாடிச குணம்தானோ? என்ன செய்றது? உங்களமாதிரி ஆளுகளுக்கெல்லாம் மூனு வேளை சோறு கிடைச்சிறது! கோகோ கோலா பெப்சின்னு வாழ்க்கை போகுது,

          தண்ணிக்கும், நிலத்துக்கும் போராடற மக்கள் எல்லாம் உங்களுக்கு கிள்ளு கீரையாதான் தெரியும்.

          கலாம நினைச்சு கணவு காங்கிறதுக்கு, சேலம் சிவராஜ் வைத்தியர்கிட்ட பெசல் செட்டு SSS பத்தாயிரத்துக்கு கிடைக்குதாம். வாங்கி முழுங்குகப்பு, அதுவிட்டுபுட்டு பவானி சிங் வேலை உமக்கு எதுக்குப்பா?

          கடைசியில இந்த நடுத்தர வர்க்கத்தோட மனநிலை நாப்பீய விட கேவலமாக நாறுதுடே!!!

          • சூரியன்,

            அந்த 3 கேள்விகள் தென்றல் என்னையும் கேட்டார்.
            எனது பதில்கள். 2.1.1.1.1 இல் உள்ளது.

  3. அப்துல் கலாம் மீதான அல்டாப் மாயைகளை உடைக்கும் மிக அற்ப்புதமான கவிதை. ஒரு உண்மையான விஞ்ஞானியாக விளங்குபவர் தான் சார்ந்த அறிவியல் துறையில் மட்டுமல்லாமல், தான் சார்ந்த சமுகத்தையும் பகுத்து ஆராய்ச்சி செய்ய தெரிந்தவராக இருக்க வேண்டும். அப்படி அவர் உண்மையிலேயே ஆராய்ச்சி செய்திருந்தால் இந்நேரம் கடுகளவும் பயன் இல்லாத வெற்று மித வாத பேச்சுக்களை தூக்கி எறிந்து விட்டு, இந்த சமுகம் பற்றியும் சமுகத்தில் நிலவும் பல்வேறு சீர்க்கேடுகள் பற்றியும் அதற்க்கு காரணமாக இருக்கும் உண்மையான காரணிகளையும் எப்பொழுதோ மக்களிடம் கொண்டு சேர்த்திருக்க வேண்டும். தன்னுடைய உப்புக்கும் பயனில்லாத மித வாத பேச்சுக்களாலும், அறிவுரைகளாலும் ஒரு தலைமுறையை மொன்னையாக்கிய “அட்டு” பெருமை மட்டுமே இவரை சாரும்.

    • ரெபேக்கா மேரி அவர்களே,

      அந்த காரியத்தை நீங்கள் இத்தனை காலம் ஏன் செய்யவில்லை.

      நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள் என்று எனக்கு தெரியாது. அப்துல் கலாம் ஒரு அறிவியல் விஞ்ஞானி. அவராக ஜனாதிபதியாக போய் நிற்கவில்லை. அவர் உண்டு, அவர் வேலை உண்டு என்று இருந்தவர். பொதுவாகவே விஞ்ஞானிகள் சமூகத்துடன் ஒன்றிணைந்து போராட்டங்களில் கலந்து கொள்வதில்லை. இவ்வளவு பேசும் நீங்கள் இந்த நாட்டுக்கு செய்த நன்மைகள் என்ன என்று பட்டியலிட முடியுமா? அடுத்தவரை குறை சொல்லும் முன் நாம் என்ன செய்தோம் என்று சற்று நினைத்து பாருங்கள் ரெபெக்கா மேரி.

      • ஐயா கற்றது கையளவு அவர்களே…

        அப்துல் கலாம் போன்றவர்கள் போராட வரவில்லை என்றாலும் பரவாயில்லை. ஆனால், இல்லாத ஊருக்கு வழி சொல்லும் மடமையை செய்யாமல் இருந்தாலே போதும். அன்றாட வாழ்க்கை நெருக்கடியை நினைத்து தூக்கத்தையே தொலைத்து கொண்டிருக்கும் பெரும்பான்மை மக்களை கொண்ட சமுகத்தில், “கனவு காணு”, “நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம் ஆனால் இறப்பு சரித்திரமாக இருக்க வேண்டும்” என்பன போன்ற மக்கள் அறிவை பஞ்சராக்கும் பஞ்ச் வசனங்களை கூறாமல் இருந்தாலே போதும்,அவர்களுக்கான முன்னேற்றத்தை அவர்களே தேடிக் கொள்வார்கள். மக்களை அறியாமையில் ஆழ்த்தி ஆளும் வர்க்கத்தை கட்டிக் காக்கும் சுய முன்னேற்ற குப்பை தத்துவங்களுக்கு இந்நாட்டில் பஞ்சமில்லை. திருக்குறள் காலம் தொடங்கி இன்று இருக்கும் “மொக்கச்சாமி” இறையன்பு வரை ஏக பட்ட வசனங்கள் கொட்டிக் கிடக்கின்றன. இதில் புதிதாக இவர் வேறு இந்தியா 2020, அக்னி சிறகுகள் என்று. இந்த சுய முன்னேற்ற கருவேல மரங்களை அப்புற படுத்தினாலே போதும் சமுகம் தானாக முன்னேற்றம் கண்டு செழுமை அடைந்து விடும்.

        அது என்ன, இங்கு அப்துல் காலாமிற்கு எதிராக மறுமொழி போட்டவர்கள் அனைவரிடமும் “நீ எதை செய்தாய், நீ எதை கிழித்தாய்” என்று பொறிந்து தள்ளி இருக்கிறீர்கள். காசு இருந்தால் தான் கல்வி முதல் சுடுகாடு வரை அனைத்தும் தரமாக கிடைக்கும் என்கிற நிலையில் இருக்கும் ஒரு சமுகத்தில் இவ்வளவு தூரம் நாங்கள் வாழ்வதே ஒரு பெரிய சாதனை இல்லையா. இவருடைய பயனற்ற மித வாத அறிவுரைகளை பற்றி விமர்சனம் செய்ய நாங்கள் ஒன்றும் பெரிய சமுக சேவகராக தான் இருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. நான் இந்த சமுகத்திற்கு பெரிதாக ஒன்றும் செய்திடவில்லை தான், எனக்கு வயது 24 ஆகிறது இன்னும் சில மாதங்களில் கால் நூற்றாண்டை தொட்டு விடும். சென்னையில் உள்ள பிரபலமான கிறித்துவ கல்லூரி ஒன்றில் கணிதம் தொடர்பான முதுகலை படிப்பை வரும் 2016ஆம் ஆண்டோடு நிறைவு செய்ய போகிறேன். நான் செய்யும் சமுக தொண்டுகளை எல்லாம் என்னால் இங்கு பட்டியலிட முடியாது. அது எனக்கு தேவையுமல்ல. ஆனால் எந்தவொரு புது விஞ்ஞான கோட்பாட்டையோ அல்லது சமுகத்திற்கு பயன்படும் வகையில் புதுமையான கண்டுபிடிப்பையோ நிகழ்த்தாமல் நிச்சயம் எதிர்க்காலத்தில் “விஞ்ஞானி” என்கிற அடைமொழியோடு உலவ மாட்டேன் என்பதை மட்டும் உறுதி அளிக்கிறேன்..

        • ரெபேக்கா அவர்களே,

          புரிந்தும் புரியாதது போல நடிக்கும் உங்களை என்ன சொல்ல….

          // “கனவு காணு”, “நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம் ஆனால் இறப்பு சரித்திரமாக இருக்க வேண்டும்” என்பன போன்ற மக்கள் அறிவை பஞ்சராக்கும் பஞ்ச் வசனங்களை கூறாமல் இருந்தாலே போதும்//

          மேற்கண்ட கலாமின் கருத்தில் மக்களை எழுச்சியடைய, முன்னேற வைக்கும் வசனமாக தான் என் கண்ணுக்கு தெரிகிறது. நீங்கள் வேறு ஒரு நிற கண்ணாடியை அணிந்து பார்க்கிறீர்கள். கண்ணாடியை கழட்டி விட்டு படியுங்கள். இதில் என்ன அறிவை பஞ்சராக்கும் வசனம் உள்ளது?

          நாட்டில் அவனவன் ஒரு போதைக்கு அடிமையாக இருக்குறான். அவரது கனவு பற்றிய கருத்து உங்களுக்கும் பொருந்தும், எனக்கும் பொருந்தும். ஏன் நம் கம்மியுனிச நண்பர்கள் புரட்சி வரும் என்று கனவு காணவில்லையா. அந்த கனவு நனவாக போராடவில்லையா. தூக்கம் வரவிடாமல் செய்யக்கூடிய கனவு காண வேண்டும் என்றார். புரட்சி வருவதற்காக அத்தனை தீவிரமாக நம் தோழர்கள் போராடி இருந்தால் ஓரளவு மக்களிடம் உங்கள் கருத்துக்கள் போய் சேர்ந்திருக்கும். ஆனால் அந்தோ பரிதாபம், நம் கம்மியுனிச நண்பர்கள் அவர்களது உழைப்பு அனைத்தையும் அடுத்தவரை இழிவுபடுத்துவதிலும், அவதூறு பரப்புவதிலுமே காலம் கடத்தியதால் அவர்களது கனவு நிறைவேறாமல் இருக்கிறது.

          எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு.

          அப்துல் கலாம் சொன்னாலும் சரி, அப்துல் காதர் சொன்னாலும் சரி, தென்றல் சொன்னாலும் சரி, கற்றது கையளவு சொன்னாலும் சரி, ஜோசப் சொன்னாலும் சரி, திப்பு சொன்னாலும் சரி, தமிழ் சொன்னாலும் சரி, மெய்ப்பொருள் அறிந்து பின் தாங்கள் கருத்திடுங்கள். மற்றவர்கள் சொன்னார்கள் என்பதற்காக கண்ணை மூடிக்கொண்டு நாமும் மேலும் சில அவதூறுகளை பரப்புவோம் என்று பறக்காதீர்கள்.

          புரிந்தால் சரி.

          • ரெபெக்கா அவர்களே,

            தங்களது வயது 24 என்பது உண்மையான பதில் என்ற பட்சத்தில் அப்துல் கலாம் அவர்களை பற்றிய தங்களது கருத்துக்கள் முதிர்ச்சியின்மையின் விளைவு என்று கருத வேண்டியுள்ளது.

            இந்த வயதில் உங்களுக்கு அனுபவசாலிகள் எல்லோரும் பெரிசுகள், அட்வைஸ் சொல்ல வந்து விட்டார்கள், அட்டு மனிதர்கள் என்றே தோன்றும். திருவள்ளுவரும் உங்கள் விமர்சனத்தில் இருந்து தப்பவில்லை. 🙂

            வாழ்க்கை நமக்கு பல சமயங்களில் பல பாடங்களை தரும்.
            அப்போது சில சமயம் நமக்கு தோன்றும்… அட, இந்த விடயத்தை அப்போதே நம்ம தாடிக்கார தாத்தா திருவள்ளுவர் அழகாக, எளிமையாக சொல்லி விட்டாரே என்று தோன்றும்.

            அனுபவங்கள் நமக்கு பாடங்களை கற்றுக்கொடுக்கும். காத்திருங்கள்.

            • திரு. கற்றது கையளவு..

              //மேற்கண்ட கலாமின் கருத்தில் மக்களை எழுச்சியடைய, முன்னேற வைக்கும் வசனமாக தான் என் கண்ணுக்கு தெரிகிறது.//

              அப்படியா… இந்தியாவின் எந்த பகுதி மக்கள் அதனால் எழுச்சி அடைந்து விட்டார்கள் என்பதை நாங்கள் தெரிந்துக் கொள்ளலாமா. இதுப் போன்ற தக்கையான பொன் மொழிகளை யார் வேண்டுமானாலும் கூறலாம். ஆனால் வழி. மைக்கை பிடித்து எழுச்சியுரை ஆற்றுவதை யார் வேண்டுமானாலும் செய்யலாம். நீயா நானா கோபி நாத போன்ற கோமாளிகள் கூட இதனை செவ்வனே செய்து விட்டார்கள். ஆனால் பலன். இந்தியா முன்னேற வேண்டுமானால் 2020 குள் இந்நாட்டின் கல்வி நிலை 100% என்கிற இலக்கை அடைய வேண்டும் என்பதை சொல்ல ஒரு விஞ்ஞானி தேவை இல்லை. பவர் ஸ்டாரே போதும் இதற்கு.

              சரி 100 விழுக்காடு கல்வி என்கிற நிலையை அடைந்தால் இந்தியா முன்னேறிய நாடக மாறி அமெரிக்கா, லண்டன், ஸ்விஸ், ஜப்பான் மற்றுமுள்ள நாடுகள் பிறகு ப்ளுடோ, நெப்டியூன், யுரேனஸ் போன்ற கிரகங்களில் வாழும் உயிர்களுக்கு கூட சாவல் விடும் அளவிற்கு பெரிய வல்லரசு ஆகி விடும் என்றே வைத்துக் கொள்வோம். அந்த 100 விழுக்காடு கல்வி தேர்ச்சி என்கிற இலக்கை அடைய உருப்படியாக என்ன வழியை கூறி இருக்கிறார். லட்ச லட்சமாக காசு கொடுத்தால் தான் தரமான கல்வியை பெற முடியும் என்கிற நிலையில் நம் நாடு இருக்கிறது. இதனை முறியடிக்காமல் அனைவருக்கும் கல்வி என்பது எப்படி சாத்தியம் ஆகும். கல்விக் கொள்ளையை முறியடிக்க என்ன வழி முறையை கூறி இருக்கிறார் இந்த கோமாளி. இப்படித் தான் தன்னுடைய இந்தியா 2020 என்னும் நூலில் மருத்துவம் பொது சுகாதாரம், சுற்றுப்புற சுழல் போன்ற அனைத்திலும் வழியை கூறாமல் இலக்கை மட்டும் கூறி சென்றிருக்கிறார். இதை வைத்துக் கொண்டு என்ன செய்ய அந்த புத்தகத்தை கடைசியில் நான் குப்பையில் தான் தூக்கி எறிந்தேன். சேவை துறைகள் அனைத்தையும் லாபத்திற்காக மூலதனத்தின் கால்களில் அடகு வைத்து விட்டு, அனைத்திலும் நிறைவான வல்லரசு என்கிற மோசடியான கனவை கூறுவது யாரை ஏமாற்ற?

              சமுகத்தின் நிலை இப்படி இருக்கும் பொழுது அப்துல் கலாம் போன்ற கோமாளிகளின் தத்துவங்களை வைத்துக் கொண்டு நான் என்ன செய்ய… அவைகளால் என்போன்ற பெரும்பான்மை மக்களுக்கு என்ன பயன். சமுகம் இப்படித் தான் இருக்கும் அதை ஒன்றும் செய்ய முடியாது, உன் நிலையை(பொருளாதார) நீ உயர்த்திக் கொள் என்பவை தான் என்போன்ற மக்களுக்கு இவர்கள் தரும் வெட்டி தர்ம உபதேசங்கள். இதுப் போன்ற பல உபதேசங்கள் பைபிளில் நிறைய கொட்டிக் கிடைக்கின்றன. அவை அப்துல் கலாம் கூறுவதை விட இன்னும் மனதிற்கு ஆறுதல் தரும் வகையில் ஆன்மீக போதையுடன் கலந்து வரும். ஆனால் அதனால் என் பசி தீர்ந்து விடுமா, என்னை பிடித்த நோய் ஓடிப்போய் விடுமா. விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது நின்று விடுமா.எங்களுக்கு தேவை உபதேசங்கள் அல்ல உரிமைகள் தான். அதை போராடி தான் வென்றெடுக்க முடியும். அதை நிச்சயம் அப்துல் கலாமோ அல்லது நான் அன்றாடும் வழிப்படும் ஆண்டவரோ எனக்கு பெற்று தர மாட்டார்கள்.

              தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள் நமக்கு தேவை மகாத்மாக்களின் உபதேசங்களோ அல்லது கலாம்களின் உதய மூர்த்திகளின், இறையன்புகளின் சமுகத்தை கண்டுக் கொள்ளாத சுய முன்னேற்ற சுயநலன்களோ அல்ல. இப்போதைய சமுகத்தின் உடனடி தேவையெல்லாம் லெனின் போன்ற ஒருவர் தான். சமுக மாற்றம் ஒன்றினால் மட்டுமே நம் இலக்குகளை தன்னிறைவோடு அடைய இயலும்.

              • இப்போது புரிகிறது ரெபெக்கா,

                உபதேசங்கள், அறிவுரைகள் உங்களுக்கு பிடிக்கவில்லை. பெற்றோரின், பெரியவர்களின் அறிவுரைகளையும் இப்படி தான் எடுத்தேறிவீர்களோ தெரியவில்லை.

                சாலையில் போகும்போது ஒரு பெரியவர் பார்த்து போப்பா, அங்கே போகிற வழியில் பள்ளம் இருக்கு என்று சொன்னால், நீ போ பெரிசு, எல்லாம் எனக்கு தெரியும் என்று சொல்லிக்கொண்டே அந்த பள்ளத்தில் விழும் இளைஞனின் மனநிலையில் உள்ளீர்கள்.

                காதை இறுக மூடிக்கொண்டால் எதுவும் கேட்காது. பின் எதற்கு அந்த காது.

                கலாம் பணக்கார தனியார் கல்லூரிகளுக்கு மட்டும் சென்று சென்று மாணவர்களை சந்தித்து அந்த தனியார் கல்லூரிக்கு அதிக பிசினெஸ் ஈட்ட மறைமுகமாக உதவுகிறார் என்ற தவறான ஒரு கருத்து இங்கு பதிவிடும் பல நண்பர்களுக்கு உள்ளது. அந்த கருத்து எதை வைத்து உருவாக்கப்பட்டது, யார் அதனை முதலில் பரப்பினார்களோ தெரியவில்லை.

                கலாம் அவரை அழைக்கும் பெரும்பாலான கல்லூரிகளுக்கு, பல்கலைகழகங்களுக்கு சென்று மாணவர்களை சந்தித்து பேசித்தான் வருகிறார். அந்த கல்லூரிகளில் தனியாரும் உண்டு, அரசு கல்லூரிகளும் உண்டு.

                கலாம் அடிக்கடி சென்று வரும் அண்ணா பல்கலைகழகம், பனாரஸ் இந்து பல்கலை கழகம், ஐ.ஐ.எம். ஷில்லாங், ஐ.ஐ.எம்.அகமதாபாத், ஐ.ஐ.எம்.இந்தோர், ஐ.ஐ.எஸ்.டி திருவனந்தபுரம் இங்கெல்லாம் அவர் சிறப்பு பேராசிரியராக இருக்கிறார். இவை எல்லாம் தனியாருக்கு சொந்தமானதல்ல. எந்த கல்லூரி அழைத்தாலும் அவருக்கு நேரம் கிடைக்கும் பட்சத்தில் அவர் போய் தான் வருகிறார். இதற்கு கோபிநாத் போல கட்டணம் வசூலிப்பவர் அவரல்ல, இறையன்பு போல மதமாற்றம் செய்பவர் அவரல்ல.

                கலாம் அறிவாளி, அறிவியலாளர், விஞ்ஞானி என்பதால் மட்டும் அவரிடம் அனைவரும் அன்பு காட்டவில்லை.

                எளிமையான, நல்ல மனிதர், கோடிக்கோடியாக சொத்துக்கள் இல்லை அவரிடம். ஜனாதிபதி மாளிகையை விட்டு செல்லும்போது லாரி லாரியாக பொருட்களை ஏற்றி செல்லும் ஜனாதிபதிகள் இருக்கும்போது இவர் இரெண்டே பெட்டிகளுடன் நடையை கட்டியவர். இறந்தபோதும் மாணவர்களுடன் உரையாடியபடியே இறந்தார். தனக்காக ஒரு காவலர் வண்டியில் பயணம் முழுக்க நிற்கிறார் என்பதையே தாங்க முடியாத நல்ல குணம் கொண்டவர். அவரது இறப்பையே இப்படி கிண்டலடிக்கும் நபர்கள் பின் இந்த உலகில் எவரையும் விட்டு வைக்கப்போவதில்லை. நடத்துங்கள்.

                அவரை இழிவுபடுத்த வேண்டும் என்ற ஒற்றை நோக்குடன் செயல்படுபவர்களை ஒன்றும் சொல்வதற்கு இல்லை. ஒருவர் இறக்கும் போது, அப்பா, ஒழிந்தானடா என்று எத்தனை பேர் சொல்கிறார்கள், எத்தனை பேர் கண்ணீர் வடிக்கிறார்கள் இதனை கொண்டு அவரது வாழ்க்கை எப்படிப்பட்டது என்று கணக்கிடலாம். ஒரு நாடே கண்ணீர் வடிக்கும் போது நிச்சயம் கலாம் அனைவரது மனத்திலும் ஒரு தாக்கத்தை உண்டாக்கி உள்ளார் என்பதில் சந்தேகமே இல்லை.

                இந்த சில்வண்டுகள் அவரை பற்றி இழிவாக பேசுவதை பெரிதாக எடுத்து கொள்ள தேவையில்லை.

                • சரியான திசையில் ,மிக சரியான சிந்தனை போக்கில் பயணிக்கும் ஒரு கல்லூரி மாணவியை நோக்கி கற்றது அவர்களால் பாடப்படும் வசை பாடல்கள் தான் இவை. கற்றது அவர்களின் பின்னுட்டத்தில் அந்த மாணவி இங்கு எடுத்து வைத்து உள்ள கருத்துகள் பற்றிய பதில்கள் சிறிதும் இல்லை ஆனால் அவரை பற்றிய அவதூறுகளும், கலாமை பற்றிய அரைந்த மாவையே மீண்டும் அரைக்கும் புகழ் பாடல்களும் மட்டுமே மிஞ்சுகின்றன. கலாம் அவர்கள் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர் என்ற கருத்தே கற்றது அவ்ர்களின் கருத்துகளில் மிஞ்சி நிற்கிறான.

                  //இந்த சில்வண்டுகள் அவரை பற்றி இழிவாக பேசுவதை பெரிதாக எடுத்து கொள்ள தேவையில்லை.//

        • //காசு இருந்தால் தான் கல்வி முதல் சுடுகாடு வரை அனைத்தும் தரமாக கிடைக்கும் என்கிற நிலையில் இருக்கும் ஒரு சமுகத்தில் இவ்வளவு தூரம் நாங்கள் வாழ்வதே ஒரு பெரிய சாதனை இல்லையா. //

          அடுத்தவர்களின் உழைப்பை இலவசமாக எதிர்பார்கிறீர்கள் ?

          //ணிதம் தொடர்பான முதுகலை//

          நல்லது . வங்கியில் பணியாற்றி ரிடையர் ஆனவருக்கே புரிவதில்லை , நீங்கள் உலகம் புரியாமல் உங்கள் கருத்தை கூறலாம்

          சாரிடி தொடர்பாக கணிதத்தில் 200/200 மதிப்பெண் பெற்ற மாணவனுடன் உரையாடினேன் . sinX என்றால் என்ன யதற்காக கண்டுபிடிக்கப்பட்டது , எப்படி உதவுகிறது என்று தெரியவில்லை . முதுகலையில் படிக்கும் உங்களுக்கு தெரியுமா? முதுகளியிலாவது புரியும்படி சொல்லி தருகிறார்களா?

          • திரு.ராமன்…………..

            //அடுத்தவர்களின் உழைப்பை இலவசமாக எதிர்பார்கிறீர்கள் ?//

            அமெரிக்காவிற்கும் இங்கு இருக்கும் தரகு கோஷ்டிகளுக்கும் சொம்படிப்பதை தவிர உருப்படியாக வேறொன்றும் தெரியாது என்பதை தங்களின் மேற்சொன்ன பொன்னான்ன வாக்கியத்தின் மூலம் சுய அம்பலபடுத்தியமைக்கு நன்றி. என்னுடைய அடிப்படை தேவைகளை, எனக்கு கிடைக்கவேண்டிய அடிப்படை உரிமைகளை கேட்டால் அடுத்தவரின் உழைப்பை இலவசமாக எதிர்ப்பார்பதாக அர்த்தமா!!!!!!!!!!.

            இதற்க்கு முன்பு கூட சாவேஸ் பற்றிய கட்டுரையில் எழுப்பிய கேள்விக்கே நீங்கள் இன்னும் விடை அளிக்க வில்லை. ஒருவேளை எனக்கு புற்றுநோய் போன்ற கொடும்நோய் ஏற்ப்பட்டால் நான் உயிர் வாழ வேண்டுமானால் பணம் இருப்பவர்களை மட்டுமே வாழ வைக்கும் அபோல்லோ போன்ற மருத்துவ கொள்ளையர்களை தான் நான் நாட வேண்டும். அதற்க்கு 1 கோடி முதல் 2 கோடி வரை நான் செலவு செய்ய வேண்டும் அப்படி என்னிடம் பணம் இல்லாத பட்சத்தில் நான் சாவதை தவிர வேறு வழி இல்லை இந்நிலையில் நான் என்ன செய்ய வேண்டும் என்று எழுப்பிய கேள்விக்கு இன்று வரை உங்களிடம் இருந்து ஒரு உருப்படியான, நாணயமான, மனிதாபிமானமுள்ள எந்த பதிலும் இல்லை. இந்த லட்சணத்தில் sinx பற்றி கேள்வி வேறு. ஜ்யாமெட்ரிக் ப்ராக்ரஷனில் பரிணாமம் அடைந்து வரும் சமுகத்தின் சீர்கேடுகளை எப்படி களையலாம் என்பதற்கு தங்களிடமோ கலாமிடமோ ஒரு மண்ணும் தீர்வு இல்லை. இதில் அடுத்தவரை நய்யாண்டி செய்வதில் ஒன்றும் குறையில்லை. முதலில் மனிதாபிமானம் என்றால் என்ன? என்பதை பற்றி தெரிந்துக் கொண்டு வாருங்கள். உங்கள் ஒவ்வொரு பதிவிலும் மனிதாபிமானத்தின் மீதான வறட்சி அதிகமாக தொனிக்கிறது. ஆகவே முதலில் மனித நேயம் என்றால் என்ன என்பதை கற்றுக் கொண்டு வாருங்கள் பிறகு sinx , cosx என்று அனைத்தையும் பற்றி தெரிந்துக் கொள்ளலாம். பிணத்திற்கு பட்டு குஞ்சம் ஒன்று தான் கேடு.

            பி.கு:- கட்டுரை அப்துல் கலாமை பற்றியது இதில் தேவை இல்லாத விவதாங்களை கொண்டு வந்த மடை மாற்றம் செய்யும் மலினமான வேலை வேண்டாம். அது அறிவு நாணயம் உள்ளவர்களுக்கு அழகல்ல..

            • //என்னுடைய அடிப்படை தேவைகளை, எனக்கு கிடைக்கவேண்டிய அடிப்படை உரிமைகளை கேட்டால் அடுத்தவரின் உழைப்பை இலவசமாக எதிர்ப்பார்பதாக அர்த்தமா!!!!!!!!!!.//

              உங்கள் அடிப்படை தேவைகளுக்கு உங்கள் உழைப்பில் தான் அடைய வேண்டும் .
              அடுத்தவர் உழைப்பில் அல்ல !

              //ஒருவேளை எனக்கு புற்றுநோய் போன்ற கொடும்நோய் ஏற்ப்பட்டால் நான் உயிர் வாழ வேண்டுமானால் பணம் இருப்பவர்களை மட்டுமே வாழ வைக்கும் அபோல்லோ போன்ற மருத்துவ கொள்ளையர்களை தான் நான் நாட வேண்டும். அதற்க்கு 1 கோடி முதல் 2 கோடி வரை நான் செலவு செய்ய வேண்டும் அப்படி என்னிடம் பணம் இல்லாத பட்சத்தில் நான் சாவதை தவிர வேறு வழி இல்லை //

              ஆப்பில் நிருவனரே புற்று நோயில் இறந்தார் .

              அடுத்து உங்கள் வசதிக்காக டாக்டர்கள் மூன்று வேலை இலவச சாப்பாடு சாப்பிட்டு விட்டு இலவசமாக மருத்துவம் செய்ய வேண்டும்
              உங்கள் வசதிக்காக ஆராய்ச்சி நிறுவனங்கள் மூன்று வேலை இலவச சாப்பாடு சாப்பிட்டு விட்டு ஆராயிச்சி செய்ய வேண்டும்
              உங்கள் வசதிக்காக மருந்து நிறுவனங்கள் மூன்று வேலை இலவச சாப்பாடு சாப்பிட்டு விட்டு மருந்து செய்ய வேண்டும்

              நீங்கள் பூமியில் அவதரித்து விட்டதால் உங்களை காக்கும் பொறுப்பு சமூகத்திற்கு .அடடா …

              அப்புறம் BMW மாதிரி கார் கம்பெனிகள் தனியார் இருக்கலாமாம் . உங்க லச்சுரி நுகர்வுக்கு , என்கிநியர்கள் பாவம் பிழைத்து போகட்டும் என்று கருணை காட்டினீர்கள் . அடடா அடடா என்னே ஒரு கருணை , மனிதாபிமானம்

              எப்படி பாவம் புண்ணியம் என்று பேசி மதவாதி ஏமாற்று கிறானோ , மனிதாபிமானம் பேசி கம்மிகள் ஏமாற்றுவார்கள் .வெனிசூலாவில் இலவச மருத்துவம் எப்படி நடக்கிறது என்று ஒரு நடை பொய் பார்த்துவிட்டு வரவும் .

              sinX பற்றி உங்களுக்கு தெரியாது எனபது தெரிந்துவிட்டது . கலாம் அவர்களை விஞ்ஞானி அல்ல என்று கூறும் உமது திறமை என்ன என்பதை தெரிந்து கொள்ளவே அந்த கேள்வி . நீங்கள் கணிதம் இளங்கலை பட்டம் பேருக்கு பின்னல் போடவேண்டாம்

              • @ ராமன்….

                இது போன்ற ஒரு பதில் உங்களிடம் இருந்து எதிர்பார்த்த ஒன்றுதான். நீங்கள் இவ்வளவு குருரமான முட்டாளாக இருப்பீர்கள் என்று நான் எதிர்ப் பார்க்கவில்லை…சத்தியமாக உங்கள் பதிவை படிக்கும் பொழுது வரும் சிரிப்பை கட்டுப் படுத்த முடியவில்லை…

                //உங்கள் அடிப்படை தேவைகளுக்கு உங்கள் உழைப்பில் தான் அடைய வேண்டும் .
                அடுத்தவர் உழைப்பில் அல்ல !//

                அட அறிவிலியே… அடிப்படை தேவை என்ன என்பதுக் கூட தெரியாத நீங்கள் அப்துல் கலாம் போன்ற கோமாளிகளை வியந்து பேசுவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. அது சரி பாம்பின் கால் பாம்பறியும் என்பதுப் போல. ஒரு லும்பனுக்கு தானே இன்னொரு லும்பனை பற்றி தெரியும். அடிப்படை தேவை என்பது உணவு மருத்துவம் மட்டுமல்ல தரமான குடிநீரும் கூட. அந்தக் குடிநீரை கூட அரசு வழங்காது நீ தான் தண்ணீர் கொள்ளையரிடம் காசு கொடுத்து வாங்கி கொள்ள வேண்டும் என்றும் கூறும் உங்களின் கருத்தில் பொதிந்துள்ள பிழைப்பு வாத பொறிக்கித்தனம் தான் கேவலத்தின் உச்சம்.

                மார்க்சிய,லெனினியம் என்றால் என்ன வென்று ஒரு எழவும் தெரியாது, இதில் வெனிசுலாவை பார் , க்யுபாவின் லட்சணத்தை பார் என்று பேத்தல்களுக்கு ஒன்றும் குறைவில்லை. நான் ஏன் தொழில்நுட்ப துறையில் விஞ்ஞானத்தில் அரசு தலையீடு இருக்க கூடாது என்று கூறினேன் என்பது ஒரு சிறு குழந்தைக்கும் தெரியும். உங்களை போன்ற மண்டுகங்களுக்கு புரியவில்லை என்றால் அதில் ஆச்சர்ய படுவதர்ற்கு ஒன்றுமில்லை.

                சரி, எனக்கு கணிதத்தை பற்றி ஒன்று தெரியவில்லை என்றால்,அதனால் சமுகத்திற்கு ஒன்றும் நஷ்டமில்லை. திறமை இருந்தால் இந்த சமுகம் என்னை பயன்படுத்திக் கொள்ளும், இல்லை என்றால் அது என் கஷ்டம். அதை நான் பார்த்துக் கொள்கிறேன். இந்த சமுகத்தின் மீதான அக்கறை என்ன என்பதை கற்றது கையளவிடமோ, கணிதத்தின் மீதான என் திறமையை உங்களிடமோ நிருபிக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை. இன்னும் சொல்ல போனால் பெயருக்கு பினால் வரிசையாக பட்டம் சூட்டிக் கொள்வதை நான் என்றுமே பெருமையாக நினைத்ததில்லை. பெயருக்கு பின்னால் உள்ள பட்டங்கள் தான் ஒரு மனிதன் இந்த உலகில் வாழ தகுதி உள்ளவனா என்பதை முடிவு செய்யும் என்பதில் எனக்கு எப்போதுமே உடன்பாடில்லை. என் பேருக்கு பின்னால் நான் பட்டம் போட்டு கொள்ளலாமா வேண்டாமா என்பதை பிறகு பார்க்கலாம். ஒரு சிறு வேண்டுகோள், தயவு செய்து உங்களை ஒரு மனிதர் என்று கூறிக் கொள்ளாதீர்கள். அது மிக அவமானமான ஒன்று , அதற்காக உங்களை நாய்,புனை,குரங்கு போன்றவற்றுடனும் உங்களை ஒப்பிட்டுக் கொள்ளாதீர்கள், அது அந்த பிராணிகளுக்கு அவமானத்தை ஏற்படுத்தும் ஒன்றும். அவைகள் எல்லாம் இரக்கமுள்ள திம்மிகள்.

          • The man who has retired from the bank have served in the rural/semi-urban/urban/metropolitan branches in TN and Mumbai.All along his long service of 37 years,moved closely with all types of customers,mostly from poor background,farmers,landless labourers,artisans,vegetable vendors,fruit vendors,Tiny sector and SSI sector people and provided them utmost financial assistance.Even after retirement,in the current assignment in a Finance company also, financing lower middle class people daily.Hence,well aware of the problems faced by these people and what could be the solutions to their problems.Naturally,he has empathy with these people.He will never behave like a sadist and just call all Tamilians as good for cooking idlies only.He is proud of Tamil literature and culture.He will not say that Tamil poetry should be removed from school syllabus.Some people think that they are economic experts and ALL IN ALL ALAGURAJAS.But when their faulty thinking is exposed,they call others as less knowledgeable persons.

    • நீங்கள் வணங்கும் இறைவன் ரோமானியர்களுக்கு எதிராக கண்டன அறிக்கை விட்டாரா ? எதிர்த்து போராடினாரா ? செயின்ட் பால் என்று நினைக்கிறன் , அவர்தான் இயேசுவின் இறப்பை ரோமானியர்களுக்கு எதிராக பயன்படுத்தலாம் என்று திட்டம் வகுத்து , ஏன் இறந்தார் என்பதற்கு ,உங்கள் பாவங்களுக்காக என்று ஒரு பதிலை கண்டு பிடித்து ,ரோம ராஜ்ஜியம் முழுதும் பயணம் செய்து ,ரோமர்களின் எதிர்ப்பை ஒன்று திரட்டினார் .அவர் இயசுவை பார்த்தது கூட இல்லை .

      • செயிண்ட் பால் எல்லாம் போகுறது இருக்கட்டும் இராமன். இதே திணமணி வைத்தி அப்துல் கலாம் பிணத்தைவைத்து, சுத்த சைவம் சாப்பிடுறவன் எல்லாம் சூப்பரா வருவான்னு சைவ அரசியல் பேசுனாரே எங்கடே போயிருந்தீக!

        அந்த பிணஅரசியல் கண்டிக்க துப்பில்ல! இங்க வந்து செயிண் பால்லுன்னு கதை அளக்கீரு! சேம் சேம் பப்பி சேம்!!

        • நான் வன்மையாக கண்டிக்கிறேன் .
          உணவு பழக்கத்தை வைத்து நல்லவனா கெட்டவனா என்று எழுதிய தினமணி வைத்தியை ,
          பார்பனனா என்று ஜாதி பார்த்து அவன் செயலை எடை போட்ட வினவை கண்டிக்கிறேன் .

  4. he should have hold Quran instead of GITA….Vinavu would have spared him….poor Kalam sir… he don’t know(want) this kind of cheap acting to get advertisement by speaking about minority….

  5. கலாமின் “உயர்ந்த மனிதர்” பிம்பத்தை அவர் கட்டியமைத்துக் கொண்டாரா அல்லது அவரது பேச்சும் செயலும் கல்வித்தந்தைகள் முதல் வாஜ்பாய் மற்றும் ஆர் எஸ் எஸ் கும்பல் வரையிலான அனைவரின் நோக்கங்களுக்கும் இயற்கையாகவே பொருந்தி போனதா என்பது ஆய்வுக்குரியது.இப்போது கலாம் என்பது உங்கள் கவிதையே சொல்வது போல அனைவருக்கும் நல்லவரான ஒரு நவீன மகாத்மா.அதை உடைத்து புரிய வைக்க ஒரு கேலிசித்திரமோ,எவ்வளவு தான் ஆழமான வரிகள் நிறைந்ததாக இருப்பினும் ஒரு கவிதையோ போதுமானதா என்பதை என்னால் நிச்சயமாக சொல்ல இயலவில்லை.இப்படி எழுதுவதால் இந்த கவிதையை நான் குறைத்து மதிப்பிடுவதாக ஆகாது.நான் வாசித்தவரை மே 17 இயக்க திருமுருகனது முகனூல் பதிவு தெளிவாக இருந்தது.அதனை விட விரிவாகவும் ஆழத்துடனும் வினவில் ஒரு பதிவு வரும் என நம்புகிறேன்.”சத்துணவு தந்த சரித்திர நாயகன்”,’மீனவநண்பன்”, “வள்ளல்” என்றெல்லாம் புகழப்பட்ட எம்ஜிஆர் அப்படியல்ல அவர் ஒரு சாடிஸ்ட் என்பதற்கு சென்னை மீனவர்கள் மீது நிகழ்த்தப்பட்ட துப்பாக்கி சூடு முதல் வடாற்காடு போலிமோதல் கொலைகள்,திரைத்துறையிலேயே அவரது அடாவடியான பழிவாங்கல்கள் வரை ஏராளமான தரவுகளை தந்து நிறுவ முடிகின்ற அளவிற்கு கலாமின் ‘ஆளுமையை’ உடைத்து உள்ளிருப்பதை காட்டுவது எளிமையானதல்ல. ஆனால் சாத்தியமற்றதும் அல்ல.

  6. ஆந்திரக்காட்டில் கரிக்கட்டயாய் கிடந்த இருபத்தியோரு உழைப்பாளிகள் == அவர்கள் செய்த
    உழைப்பு என்ன? யாருக்காக உழைத்தார்கள்? அவர்கள் உழைப்பினால் நாட்டுக்கு என்ன பலன்?

  7. First Man then only scientist,Modi was killed so many muslims at gujarat,why didnot asked questions to them and why he accept president post,our govt was done genoside at srilanga many tamils murdered ,why didnot asked questions to govt and rulars.Albert Einstein asked questions against to bad government and ruler.so kalaam very brilliant criminal future history will not be accepted.
    Selva,Chennai

    • இவ்வளவு பேசும் செல்வா அவர்களே,

      அந்த குஜராத் கலவரம் நடந்த பொது நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?
      இலங்கையில் இறுதி போரில் தமிழர்கள் கொல்லப்படும்போது நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? இரண்டு நிகழ்வுகள் நடந்த போதும் அவர் ஜனாதிபதியாக இல்லை, உங்களையும் என்னையும் போன்ற சாதாரண பிரஜை தான்.

      சும்மா, வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று பேசிக்கொண்டிருக்காமல் உருப்படியாக ஏதாவது செய்யுங்கள்.

        • நீங்கள் போராடினீர்களா?

          இங்கு தமிழகத்திலிருந்தே குஜராத்தில் இருந்த குடும்பங்களை எப்படி போராடி காப்பாற்றினீர்கள்?
          எத்தனை குடும்பங்களுக்கு என்ன என்ன உதவிகள் செய்தீர்கள்?

          நீங்கள் கண்டித்தீர்களா?
          மோடி உங்கள் கண்டிப்புக்கு பயந்து கலவரத்தை நிறுத்தி விட்டாரா?

          பெரிய ஆள் ஐயா நீங்கள்.

          அப்படியே தஞ்சாவூர் கல்வெட்டில் எழுதி வைத்து கொண்டு பக்கத்திலேயே உட்கார்ந்து கொள்ளுங்கள். பின்னர் வரக்கூடிய சந்ததிகள் நீங்கள் குஜராத் கலவரத்தை கண்டித்தீர்கள், அதனால் மோடி நிறுத்தி விட்டார் என்று படித்து தெளிந்து கொள்வார்கள்.

          பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு துரும்பு கூட இழைக்காதவர்கள் பேச வந்து விட்டார்கள்.

  8. //வயதான பிறகு தானுண்டு தன்னுடைய ஆராய்ச்சி உண்டு என இருந்தவரைப் பிடித்து ஜனாதிபதியாக ஆகுங்கள் என வாஜ்பாய் அழைத்த காரணத்தால் ஜனாதிபதி ஆனவர்.

    அய்யா அவருக்கு ஆராய்ச்சியின் மீது அளவு கடந்த ஆர்வம் இருந்தால் ,ஜனாதிபதி ஒரு வெட்டி வேலை என்னை உட்டுடுங்க சொல்லிருக்க வேண்டியதுதானே …..வாஜ்பாய் என்ன டெம்போ வச்சா கடத்திட்டா போனாரு
    இரண்டாவது ரவுண்டு வாயிப்பு கிடைக்குமானு பாத்துட்டு ,அதுக்கு வாயிபே இல்லையின்னு முடிவான கடைசியா மூட்டையை கட்டுனவர் .,திரும்பி வந்தும் ஒண்ணும் சீரியஸ் ஆராய்ச்சியில் செயல்பட்டமாதிரி தெரியவில்லை ,சீனியர் கோபிநாத் போல காலேஜ் ,பல்கலைகலகம்னு போய் பசங்ககிட்ட ,அம்பி ஒழுங்கா படி எவன் எக்கேடு போனாலும் நம்ம நல்ல படிச்சி முன்னுக்கு வந்தா போதும் என்ற சமுகத்தை உள்வாங்காத தனிமனித எழுச்சியை பரப்பிவந்தார் ,மக்களை மந்தபடுத்தும் நவீன கார்ப்பரேட் சாமியார்களின் வேலையை தான் செய்தார்

    //பிரதிபா பட்டேல், பிரணாப் ஆய்யோருடன் அப்துல் கலாமை ஒப்பிடுங்கள்.

    இவங்களோட ஒப்பிடுற மாதிரி ஒப்பிட்டு காந்தி (விமர்சனம் இருந்த போதும் ) ,அம்பேத்கர் போன்ற வரலாற்று ஆளுமைகளில் கொண்டு போய் கலாமை திணிக்க முயற்சி நடப்பதை நாம் அவர் அந்த அளவுக்கு வொர்த் இல்லன்னு சொல்லுறோம் .

    // மரண தண்டனையின் மீதான கருணை மனுக்கள் எதிலும் கையொப்பமிட மறுத்த தீரர்.

    இதான் இவரின் வெற்றி பூனைக்கு தோழன் பாம்புக்கு காவல்,மக்களோட மக்கள் இருப்பாரு அவங்க முன்னேற்றம் பத்தி பேசுவாரு ,ஆனா மூல சமூக பிரச்னையை பத்தி வாயை ட்கொரக்கமட்டரு அதே சமயம் ஆளும் கும்பல்கு ஒரு கஷ்டமான ஐர்ல ஜம்ப் அடிச்சி வந்து ,தெரியுதோ இல்லையோ போக்ஹ்ரன் வெற்றி ,fடி நல்லது ,பத்து நிமிஷம் ரவுண்டு அடிச்சிட்டு கூடன்குளத்துக்கு தரச்சான்று கொடுப்பாரு

    • சுந்தர்,

      அப்துல் கலாம் மாணவர்களை ஒழுங்காக படி என்று தான் சொன்னார்.
      எவர் எக்கேடு கெட்டாலும் படி என்று நீங்கள் குறுக்கு சால் ஓட்ட வேண்டாம்.

      சமூக பிரச்சினைகள் பற்றி திருவாளர் சுந்தர் பேசி பேசி சாதித்தது என்ன என்று அடியேன் அறிந்து கொள்ளலாமா? எத்தனை சமூக பிரச்சினைகள் திருவாளர் சுந்தர் அவர்கள் தீர்த்து வைத்தார் என்று அறிந்து கொள்ளலாமா?

      பேச்சு, பேச்சு ஒன்று தான் நம்மிடம் இருக்கிறது. செயலில்..
      அப்துல் கலாமை விமர்சிக்க தெரியும் சுந்தர் மக்கள் நலனுக்காக இது வரை செய்த அரும்பெரும் காரியங்களை பட்டியலிட முடியுமா? சும்மா, பேச வந்து விட்டார்கள்….

      • கற்றது கையளவுஅவர்களே, நம்ம ஊரில் ஒரு பண்பு, ஒன்றை விமர்சித்தால் ,நீ யர்ரு ஒனக்கு என்ன யோகிதை என்று வாயயை அடைப்பது .அப்படிஎன்றால் விமர்சன துறை என்ற தனி ஒரு கலை எதற்கு .டாஸ்மாக்க மூடுனா நீ யோக்கியமா ,பஹுபலி குப்பைனா , நீ என்ன படம் எடுத்து இருக்கே .

        அமரர் கலாம் அவர்களின் தனிப்பட்ட எளிய சுபாவம் ,அடிமட்டத்தில் இருந்து அவர் வளர்ச்சி ,உயர் நிலை அடைந்த உடன் எந்த சக்திகள் ,சமூக அமைப்புகள் அவருக்கு தடைகற்களை இட்டு இருக்குமோ இருந்திருக்குமோ அவற்றோடு சித்தாந்தரீதியில் சங்கமித்தல் , அரசு பாதுகாப்பு பொதுதுறை நிறுவனத்தில் அவர் பங்கு (குறிபிட்ட காலத்திற்கு பின்னல் அவர் பங்களிப்பு தொழிநுட்ப நிர்வாகம் அதிகமாக அறியபடுகிறது ),போக்ஹ்ரன்(அவர் அணு விஞ்ஞானி அல்ல ) ,திடீர் என்று ஒரு U டர்ன் , அரசயில் பதவி அதுவும் அலங்கார பதவி அதில் அவர் பங்களிப்பு , பின்பு 27 ஜூலை வரை.

        ஒருவரிரின் மரணத்திற்கு பிறகு யாராக இருப்பினும் நமது இரங்கலை தெரிவித்து விட்டு ,முதலில் அவர் வாழ்கை திறனாய்வுக்கு எத்தவரா என்று பார்கிறோம் ,நான் எல்லாம் அங்கயே அவுட்டு .

        அதனால் அவரை பற்றி முழுமையான ஆய்வை மேற்கொண்டு ,அவர்க்கு சரிதரித்தில் சரியான இடத்த கொடுங்கள் .அரசும் ,முதலித்துவ ஊடங்களும் உண்டாக்கும்….திணிக்கும் பொதுகருத்தை கொண்டு உருவாகப்படும் பிம்பங்கள் ,காலபோக்கில் அவர்களக்கு கொடுக்கப்படும் புனிதர்கள் பட்டம் ,இவற்றின் உள்ள அபத்தைதான் நான் பேசுகிறேன் .

        • மிக சரியான நடுநிலையான விமர்சனம் உங்களுடையது சுந்தர் . நன்றி

      • பாவம் செய்யாதவர்கள் கல்லேரியுங்கள் என்று சொன்ன அடுத்த கணமே , கூட்டம் கலைந்து விட்டதாம். இப்ப இல்ல சார் ,ரெண்டாயிரம் வருஷம் முன்னாடியே அப்படிதான் .

        • மக்கள் தான் அயோக்கியன்னு நீங்க மட்டும் இல்ல சார், உங்கள ஏவிவிடுகிற ஆளும் வர்க்கம் அரசு ஆரம்பித்ததில் இருந்து சொல்லிக்கிட்டுதான் இருக்காய்ங்க! என்ன ஒரு வித்தியாசம்! இந்த இராமன், கற்றது கையளவு போன்ற ஆள்கள் எல்லாம் விவாசயிகள் செத்தா அதுக்கு காரணம் மான்செண்டோ சட்டம் கிடையாது கலாம் கிடையாது; ஆனா காதல் தோல்வின்னு பேசுவாக!

  9. What type of an idiotic view expressed by the author of this horribly written poem with out any style or beauty. Vinavu should abandon its horrible anti brahmin venom one finds almost in each and every article. While I commend that many articles in Vinavu , are truly discussing important issues. the blatant anti brahmin statements are highly objectionable. Can Vinavu site even a single case of a Brahmin either breaking laws, practising or even speaking in favour of untouchability, spreading caste based venoms etc? Vinavu has not even reported the murder of Kabisthalam Brahmin priest by PMK workers leave alone condemning such attacks.

  10. உங்கள் கண்ணெதிரே அநீதி நடக்கும்போது
    அவற்றை கையால் தடுங்கள்,இயலாதபோது
    நாவினால் தடுங்கள் என்கிறது திருக்குரான்.
    இவர்???? வேறொன்றும் சொல்வதற்கில்லை.

    • ஐயா பஷீர்,

      அடுத்தவரை சொல்வதற்கு முன் நீங்கள் கையால், வாயால் தடுக்க வேண்டியது தானே? பாபர் மசூதி இடிக்கும் போதும், குஜராத் கலவரத்தின் போதும், இந்திராகாந்தி படுகொலை நடந்தபோது நடந்த சீக்கிய நண்பர்களின் படுகொலையின் போதும், சமீபத்தில் இலங்கையில் இறுதிப்போர் சமயம் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்படும்போதும் நீங்கள் வேறு கிரகத்தில் இருந்தீர்களா? நீங்கள் உங்கள் கையால், வாயால் என்ன தடுத்தீர்கள்?

      சும்மா, வியாக்கியானம் பேசிக்கொண்டிருக்காதீர்கள் நண்பரே.
      அடுத்தவரை பற்றி பேசும் முன் நாம் என்ன செய்தோம் என்று கொஞ்சம் நினைத்து பார்ப்பது நல்லது.

  11. சமீபகாலமாக அப்துல் கலாம் அவர்களை பற்றி மிகவும் இழிவாக சித்தரிக்கும் வண்ணம் கட்டுரைகளும் பின்னூட்டங்களும் பதிவிடப்படுவதை கண்டு வருந்துகிறேன்.

    ஐயா, அவர் அரசியல்வாதி அல்ல, வெளிய கோஷம் போட்டுக்கொண்டு பின் மறைவாக கையூட்டு வாங்கும் நபர் அவரில்லை. அவர் தெருவில் இறங்கி போராடவில்லை என்று நீங்கள் கூறினால் நாட்டில் 99 விழுக்காடு மக்களும் அந்த வகையினை சேர்ந்தவர்களாக தான் இருப்பார்கள். அனைவரையும் திட்டி தீர்த்து விடுங்கள்.

    ஐடியல் மனிதர், என்று உலகில் எவரும் இல்லை. இருக்கும் மனிதர்களில் மற்றவர்களுடன் ஒப்பிட்டு பார்க்கையில் ஒருவர் எப்படி தேறுகிறார் என்பதை பொறுத்து ஒருவரை நல்லவர் என்றும் கெட்டவர் என்றும் கொள்கிறோம்.

    இந்தியாவில் ஜனாதிபதியாக 13 நபர்கள் இருந்திருக்கிறார்கள். இவர்களோடு ஒப்பிட்டு பார்க்கையில் என்னை பொறுத்தவரை இவரே மேலானவர் என்றே தோன்றுகிறது. பழைய ஜனாதிபதிகளின் காலத்தில் நான் வாழவில்லை. ஆகவே அவர்களை பற்றி சொல்ல முடியவில்லை. சமீப காலத்தில் ஜனாதிபதியாக இருந்த ஜெயில் சிங், வெங்கட்ராமன், கே.ஆர்.நாராயணன், பிரதீபா பாட்டில், தற்போதைய பிரணாப் முகர்ஜி, இவர்களோடு ஒப்பிட்டால் கலாம் எவ்வளவோ தேவலை. ஜனாதிபதி மாளிகையை விட்டு செல்லும்போது லாரி லாரியாக பரிசுப்பொருட்களை அள்ளிச்சென்ற முன்னாள் ஜனாதிபதிகளுடன் ஒப்பிடுகையில் இரண்டே சூட்கேசுகளோடு வெளியே வந்த அப்துல் கலாம் மேல் தான்.

    அப்துல் கலாம் குறித்து வினவில் கூறும் குற்றச்சாட்டுகளின் படி பார்த்தால் நாட்டில் ஒருவர் கூட அதில் தேற மாட்டார்கள். வினவில் கட்டுரை எழுதும் நண்பரில் இருந்து, அதில் பின்னூட்டம் இடும் நண்பர்கள் அனைவரும் தான். ஒருவரும் 1௦௦ சதவீதம் இல்லை. எல்லோரிடமும் சில நிறை குறை இருக்க தான் செய்கிறது.

    நாட்டில் நடக்கும் அநியாங்கள்,அனைத்துக்கும் அனைவரும் தெருவில் இறங்கி போராடுகிறோமா?

    பாஜக ஆதரவால், காங்கிரஸ் ஆதரவால் அவர் ஜனாதிபதி ஆனார். இருக்கட்டுமே. தற்போது பெரும்பானையான மக்கள் பாஜக ஆட்சிக்கு வாக்களித்தனரே.மிச்சம் இருப்போர் காங்கிரஸ், போலி கம்மியுநிஸ்ட்களுக்கும், மாயாவதி, முலாயம், லாலு, ஜெயலலிதா, கருணாநிதி, ராமதாஸ், வைகோ போன்றோருக்கு வாக்களித்தனரே, அவர்கள் அனைவரையும் என்ன செய்ய போகிறீர்கள்?
    அனைவரையும் சுட்டு கொன்று விடலாமா? இல்லை ஒவ்வொரு மனிதர் இறக்கும் போதும் அவர்களை பற்றி கேவலமாக இழிவாக கட்டுரைகள், பின்னூட்டம் இட்டுக்கொண்டிருக்கலாமா?

    அவர் என்ன சொந்தபந்தங்களுக்கேல்லாம் கோடி கோடியாக சொத்து சேர்த்தாரா?அவர் மற்றவர்கள் போல சொகுசு வாழ்க்கையிலா இறந்து போனார்? ஐயா, இறக்கும் போதும் மாணவர்களுடன் உரையாடிக்கொண்டு தானே இருந்தார்.

    இலங்கை படுகொலை நடந்த போது அவர் ஜனாதிபதியாக இல்லை. அப்போது உங்களுக்கும், எனக்கும் இருந்த அதே நிலை தான் அவருக்கும். கையாலாகாத நிலை. நீங்களும் நானும் துப்பாக்கி ஏந்தி கொண்டு ராஜபக்சேவை ஏன் எதிர்த்து செல்லவில்லை. அதே நிலை தான் அவருக்கும். நிச்சயம் தமிழர்கள் படுகொலை அவருக்கு வருத்தம் அளித்திருக்கும். அதில் வேறு கருத்தே இல்லை. ஆனால் எல்லா விடயங்களுக்கும் தற்போதைய டிவிட்டர் பேஸ்புக் இளைஞர்கள் போல கருத்து கந்தசாமியாக கருத்து சொல்ல அவர் அரசியல்வாதி இல்லை. தனிப்பட்ட முறையில் நாட்டில் நடக்கும் எல்லா விடயங்களுக்கும் அவருடைய விருப்பு வெறுப்புகள் அனைத்தும் நமக்கு தெரியாத பட்சத்தில் அவர் கருத்து சொல்லவில்லை என்பதாலேயே அவரை எதிரியாக பாவிப்பது தவறு. இலங்கை விடயத்தில் அவர் வெளிப்படையாக சொல்லவில்லை என்றாலும், தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு தண்டனை நிறைவேற்ற அனைத்து சந்தர்ப்பமும் இருந்தும் அவர் அதை செயல்படுத்தவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள் நண்பர்களே. இதிலிருந்து அவர் உள்மனதை பற்றி ஓரளவு நீங்கள் புரிந்து கொள்ளலாம்.

    ஒருவர் இறந்த பிறகு அவரை பற்றி இழிவாக பேசுவதை நாம் தவிர்ப்பது எதற்கு? நாம் அவ்வாறு பேசினால் அதனை மறுத்து கருத்து சொல்வதற்கு இறந்தவருக்கு ஒரு வாய்ப்பு இல்லை. அப்துல் கலாம் நல்லவர், எளிய மனிதர், ஊரை அடித்து உலையில் போடாதவர், என்னை பொறுத்தவரை அவர் ஒரு சிறந்த மனிதர். எத்தனயோ இளைஞர்களுக்கு உள்ளுக்குள் ஒரு எழுச்சியை உண்டாக்கியவர். அவரை பற்றி குறை கூறும் முன் நாம் அவரை குறை கூறும் அளவுக்கு அவரை மிஞ்சி விட்டோமா என்று ஆராய்ந்து பார்ப்போம் நண்பர்களே.

    உலகில் உள்ள எல்லோரை பற்றியும் கருத்து சொல்லும் கந்தசாமிகள் கொஞ்சம் நம்மை பற்றியும் நாம் சமுதாயத்துக்கு என்ன பயன் செய்தோம் என்றும் யோசித்து பார்த்தால் நல்லது.

    • அண்ணன் கக அப்துல் கலாம் நல்லவரா கெட்டவரா தெரியவில்லை இருந்தாலும் அவர் காசு பிடிங்கி பல்கலைக்கழகம் ,பொறியியல் கல்லூரிகளுக்கு எல்லம் சென்று உரையாற்றியது அவர்களின் பிஸினசை டெவலப்பன்னி விட்டது எல்லாம் எதுக்குனு விளக்குங்களேன் ,தனியார் மயமாக்கப்ப்டும் கல்வித்துறைக்கு எதிராக குரல் குடுக்க வேண்டாம் அட்லீஸ்ட் தனியார் கல்லூரிகளின் பிஸினஸ் டெவலப்மென்ட்டுக்கு உதவி செய்யாமலே இருந்திருக்கலாம் இல்லயா…

      • ஜோசப், நீங்களுமா?

        அப்துல் கலாம் அவர்களுக்கு மாணவர்களுடன் உரையாடுவது பிடிக்கும். அவரை விரும்பி அழைத்த கல்லூரிகளுக்கு அவர் சென்றுள்ளார். இதில் பிசினஸ் டெவெலப்மென்ட் என்ன உள்ளது. அப்துல் கலாம் இல்லை என்றால் வேறு ஒரு முக்கிய பிரமுகரை அந்த கல்லூரிகள் அழைத்திருக்க போகின்றன. அரசு கல்லூரிகளில் அவரை உரையாற்ற என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. அரசு கல்லூரிகள் அவரை அழைத்து அவர் அதனை மறுத்த உதாரணங்கள் எங்காவது காட்ட முடியுமா?

        தவறு செய்தால் தட்டிக்கேளுங்கள். ஆனால் பொய்யான அவதூறுகளை வீசாதீர்கள் ஜோசப்.

        அவர் வருவதால் அந்த கல்லூரிக்கு பிசினஸ் கோடிக்கணக்காக குவியும் என்றால் அந்த கல்லூரிகள் கலாமிற்கு இந்நேரம் கோடிக்கோடியாக பணம் அளித்து அவர் கோடீஸ்வரர் ஆகி இருப்பார்.

        இறப்பதற்கு சிறிது நேரம் முன்பு கூட ஒரு பாதுகாப்பு அதிகாரிக்காக அவர் மனம் வருந்தியதை படித்திருப்பீர்கள். சாகும்போது அவர் கோடீஸ்வராராக சாகவில்லை. மாணவர்களுடன் உரையாற்றியபடியே இறந்தார்.

        தவறான வழிநடத்தப்பட்டு உள்ளீர்கள் ஜோசப்.

        • திரு.கற்றது கையளவு.. நீங்கள் மற்றவர்களின் கருத்துக்களுடன் ஜோசப் கருத்தை புரிந்து கொள்ள வேண்டாம் .. அப்துல் கலாம் பெயரில் முஸ்லீம் அடையாளம் உள்ளதே அதற்காக மட்டுமே வீசப்பட்ட விச அம்பு அது .. வேறு எந்த நல்ல நோக்கமும் கிடையாது ..

        • அண்ணன் ககை அப்துல் கலாம் போன்ற ஆராய்ச்சியாளர்கள் நம் நாட்டுக்கு செய்த ஆயுத கண்டுபிடிப்புகள் நம்க்கு பயன் தருபவை அதில் சந்தேகம் இல்லை எனக்கு, நமது மக்களின் பாதுகாப்பு முக்கியம் ஏவுகணைகள் மற்றும் ராக்கெட் ஆராய்ச்சியில் கலாம் அவரது சக விஞ்ஞானிகளின் கண்டு பிடிப்புகள் அவசியம், ஏனென்றால் இதே வினவில் பாகிஸ்தான் காரன் அனு குண்டு வச்சுறுக்கான் அவனிடம் வாய் சவுடால் விடும் அமைச்சர் என்ற ரீதியில் கட்டுரை படித்தாக நியாபகம் அதனால் நம் மக்களின் பாதுகாப்பை உருதி செய்ய ஆயுத ஆராய்ச்சி மட்டும் டெவலப்மென்ட் அவசியம் அதுக்காக் உழைத்த அப்துல் கலாமை பாராட்டலாம் ஜனாதிபதியாக்கி அழகு பர்த்தது எல்லாம் சரிதான் //இதில் பிசினஸ் டெவெலப்மென்ட் என்ன உள்ளது. அப்துல் கலாம் இல்லை என்றால் வேறு ஒரு முக்கிய பிரமுகரை அந்த கல்லூரிகள் அழைத்திருக்க போகின்றன.//தனது பிரபபல்ய்த்தை ஒரு சினிமாக்காரன் போல மற்றவர்கள் அதிலும் குறிப்பாக தனியார் கல்லூரிகளை பயன்படுதிக்கொள்ளவும் அதன் மூலம் அவர்கள் கொள்ளை அடிக்கவும் வழி வகை செய்தது மாணவர்களின் மேல் உள்ள அன்பினாலா இல்லை தனது பிரபல்யத்தை பயன் படுத்தி அவர்களும் காசு சம்பாதிக்கட்டும் நமக்கும் விளம்பரம் மட்டும் பொழுது போக்கு என்ற நப்பாசையா என்பதை அப்துல் கலாம் அரிந்தாறோ இல்லையோ நீங்கள் அறிந்து இருந்தால் சொல்லுங்களேன்…

  12. நான் இதற்கு முன்பு”அப்துல் கலாமின் உதடுகள் பேச மறந்தவை”…என்ற கேலிசித்திரத்திற்கு இட்ட பதிவினை மீன்டும் பதிவு செய்ய விரும்புகிறேன்.
    அதனை நிறைய தோழர்கள் கவனிக்கவில்லை.

    //அப்துல் கலாம் இந்தியாவின் ஆரம்பகால விஞ்ஞானி.
    சுதந்திர இந்தியாவின் முதற்கட்டமைப்பின் தலைவர்கள்,விஞ்ஞானிகள்.
    இவர்கள் அவர்கள் துறையின் தலைவர்களாக(Departmental Head,Project Directors etc)பொறுப்பாளர்களாக பதவியில் அமர்த்தப்பட்டனர்.
    இவர்களின் அப்போதைய தகுதி என்பது ஒரளவுக்கு இயற்பியல் சார்ந்த பட்டப்படிப்புடன் அப்போதைக்கு சீனீயர் என்ற முறையிலும்தான்.
    மற்றபடி இவர்கள் புதிய கண்டுபிடிப்புகளில்(Inventor or discoverer) வல்லவர் என்றோ நியமிக்கப்படவில்லை.
    இவர்களில் மிகுதியானவர்கள்(சத்திஷ்தாவன் போன்ற ஒரு சிலர் தவிர)
    அமெரிக்க உளவு மற்றும் விஞ்ஞாண,வின்வெளி நிறுவணங்களில் தொடர்பு ஏற்ப்படுத்திக்கொண்டு அவர்களுக்கு கொடுக்கப்பட்ட PROJECTS மற்றும் பனிகளை முடிந்தவரை நாசம்(FAILURE) அல்லது தாமதப்படுத்தீனார்கள்.
    திரு.அப்துல் கலாமும் இவர்களில் முக்கியமானவர் என்று இந்திய விஞ்ஞான உலகில் பரவலகா பேசப்பட்ட உண்மை.
    அதனாலயே அவரை ஜனாதிபதி பதவிக்கு முன்னெடுத்து செல்ல 1990 களில் எல்லா உயரிய பத்ம விருதுகளும் அளித்து தயார் செய்யப்பட்டார்.//

    • அளவுக்கு மீறிய அவதூறுகள்.

      இப்படிப்பட்ட அவதூறுகள் வீசும்போது அதற்கான ஆதாரங்களையும் சேர்த்து அளிக்க வேண்டும். சண்முகம் அவர்கள் ராஜபக்சேவுக்கு மாமா வேலை பார்த்தார் (ஒரு உதாரணத்திற்கு தான் சொல்கிறேன், தனிபட்ட முறையில் உங்களுக்கும் எனக்கும் எந்த ஒரு பகையும் முன்விரோதமும் இல்லை) என்று நான் அவதூறு கூறினால் அதற்கான தெளிவான ஆதாரத்தை நான் அளிக்க வேண்டும். அதை விடுத்து வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று பேசினால் எந்த ஒரு பிரயோசனமும் இல்லை.

      அவருக்கு கொடுக்கப்பட்ட பணிகளை முடிந்தவரை நாசம் செய்தாரா???????????????

      அவர் நினைத்திருந்தால் அவரது அணு ஏவுகணை அறிவை இரானுக்கோ, வடகொரியாவிற்கோ விற்றிருந்தால் பெரும் பணக்காரராக இருந்திருப்பார். பாகிஸ்தானின் அணுகுண்டு தந்தை செய்ததை தாங்கள் அறிவீர்கள் என்று நம்புகிறேன்.

      அவதூறுக்கும் ஒரு அளவு உண்டு. அதனை நீங்கள் மீறி விட்டீர்கள்.

      • குறைந்தபட்சம் அவருடைய ‘அக்னி சிறகுகள்’ படித்திரிக்கின்றீர்களா?

    • இது உங்களின் தவறான முன் முடிவு . இந்தியாவின் ஏவுகணை திட்டத்தை பொறுத்தவரையில் அது 100% வெற்றி . இதனை விரிவாக கூற வினவு இடம் அளிக்குமா என்று தெரியவில்லை.முயன்று பார்கின்றேன். கலாம் அவர்கள் படித்த பதிப்பு MIT யில் Aeronautical Engineering பற்றியது. அவர் அதில் Aerodynamics,Material Science என்று விமானம் தொடர்பான பல்வேறு பாடங்களையும் கற்றார். வேளையில் சேர்ந்த உடன் மிக எளிய செயற்கை கோள்களை வின்னிற்கு அனுப்பும் ராகெட்களை வடிவமைப்பதில் தேர்சி பெற்றார். பின்பு தான் அவர் இராணுவ ஏவுகணை திட்டத்துக்கு மார்றப்ட்ட்டார்.

  13. When Kalam was president he should have given Bharatha Rathna to Karunanidhi, T.R.Balu. Thirumavalavan, Krishnasamy AND Stalin. So we can not accept him as a good human being.

  14. கற்றது கையளவு அவர்களே
    எல்லாரையும் நீங்க என்ன செஞ்சீஞ்ங்கனு கேக்குறீங்களே… நாங்க என்ன ஜனாதிபதி பதவியிலயா இருந்தோம்?.. நாங்க செய்யுறதுக்கு..!அவர் விஞ்ஞானியா மட்டும் இருந்திருந்தா இந்தக் கேள்வியே எழுந்திருக்காது. பொது வாழ்க்கையில் ஈடுபட்டு ஜனாதிபதி பதவியில இருந்து அதிகாரத்த அனுபவிச்சதுனாலதான் அவருக்கு அந்த தார்மீக கடமை இருக்குன்னு சொல்றோம். இதுக்கு நீங்க பதில் சொல்லியே ஆகணும். அதவிட்டுட்டு சும்மா “நீ என்ன செஞ்ச”னு சொன்னதையே திரும்ப சொல்லி சப்பக்கட்டு கட்டக் கூடாது. நாங்க என்ன ஜனாதிபதி பதவியவா அனுபவிச்சோம்? நாங்க செய்யுறதுக்கு? நாட்டோட முதல் குடிமகன் அவர்தான். அதனால கட்டுரையாளர் சொன்ன பிரச்சினைகள் குறித்து முதல்ல அவர் என்ன செஞ்சார்?
    இன்னொரு விஷயம்.. ஜனாதிபதி பதவியை தேடிப்போய் குடுத்தாங்களாம். . இது உண்மையானு முலாயம் சிங் யாதவ கேட்டா தெரியும்னு வட இந்திய ஊடகங்கள் சொல்கின்றன.

    • அவர் ஜனாதிபதியாக இருந்தபோது மற்ற ஜனாதிபதிகள் என்ன செய்தார்களோ அவர்களை விட இவர் நன்றாகவே செய்தார். ஆனால் அவர் ஜனாதிபதியாக இல்லாத காலத்தில் நடைபெற்ற நிகழ்வுகளுக்கெல்லாம் அவரை பொறுப்பேற்க வைக்க நினைப்பதை என்ன வென்று சொல்ல.

      முதலில் எல்லா விடயங்களுக்கும் கலாம் அவர்களின் கருத்து என்ன என்று தெரிந்து கொள்ள ஏன் இத்தனை பிரயத்தனப்படுகிரீர்கள்.அவர் அடிப்படையில் ஒரு விஞ்ஞானி. அரசியல்வாதி அல்ல. எல்லா விடயங்களுக்கும் கருத்து கந்தசாமியாக கருத்து சொல்வதற்கு ஏகப்பட்ட அரசியல்வாதிகள் உள்ளனர். அவர்களிடம் நீங்கள் போய் கேளுங்கள். கலாம் மேலே போய் விட்டார். இதற்கு மேலும் இதற்கு அவர் கருத்து தெரிவிக்கவில்லை, அதற்கு அவர் மெளனமாக இருந்தார் என்று சொல்வது சரியல்ல. இன்னும் சொல்லப்போனால் அவர் மெளனமாக இருந்ததால் தான் இன்று மூன்று தமிழர்கள் தூக்கில் தொங்காமல் இருக்கிறார்கள். புரிந்தவர்களுக்கு புரிந்தால் சரி.

  15. கற்றது கையளவு அவர்களே,

    எல்லோருடைய வாதத்திற்கும் ஆயத்த ஆடை போல் ஒரு விடை சொல்கிறீர்கள்.ஈழத்தமிழர்கள் இனக்கொலை,குசராத் படுகொலைகள்,மீனவர் கொலை,கல்விக்கொள்ளையர் கொள்ளை,என எதற்கும் கலாம் சுண்டு விரலையும் அசைத்தாரில்லை என விமர்சிப்பவர்களை ”நீ என்ன கிழித்தாய்’ என்ற ஒரே பதிலில் வாயடைக்க பார்க்கிறீர்கள்.ஆக கலாம் மக்கள் நலனுக்காக இன்னின்ன கிழித்தார் என்று உங்களால் சொல்ல முடியவில்லை.[யாராலும் முடியாது,எதையாச்சும் கிழிச்சுருந்தாதானே சொல்றதுக்கு ] .ஒன்றும் கிழிக்கவில்லை என்று மறைமுகமாக ஒப்புக்கொள்கிறீர்கள்.

    சரி.இப்போது உங்க கேள்விக்கு வருவோம்.கலாமை விமர்சிக்கும் யாரும் நான் உட்பட இறந்து போகும்போது இத்தனை ”அனுதாப அலை ” பெருக்கெடுக்க போவதில்லை.இப்போது ஆளும் கும்பலும் அதன் ஊதுகுழல்களான ஊடகங்களும் அடிக்கும் வேப்பிலையில் அப்பாவி மக்கள் மயங்கி போய் சாமியாடுகிறார்களே,அத்தனை அனுதாபத்திற்கு உரியவர்தானா கலாம் என்பதுதான் கேள்வி.கலாமின் இறப்பு ஈடு செய்ய முடியாத இழப்பு என்று சொல்கிறார்களே அது எந்த வகையில் மக்களுக்கு ஏற்பட்ட இழப்பு என விளக்க முடியுமா.அவர் வாழ்வுதான் மக்களுக்கு எந்த வகையில் பயனுள்ளதாக இருந்தது என்று சொல்ல முடியுமா.

    [தயவு செஞ்சு மாணவர்கள்ட்ட அன்பா பேசுனாரு,இளைஞர்களை கனவு காண சொன்னாரு 2020 ல் இந்தியா வல்லரசாகும்ன்னு ஆருடம் சொன்னாருன்னு நீங்களும் சொல்லிராதீங்க.கேட்டு கேட்டு காதுல குருதி வடியுது]

    கலாமின் இறப்பில் எனக்கும் ஒரு வருத்தமுண்டு.அவர் 2020 வரையாவது வாழ்ந்திருக்க வேண்டும்.அவரது வல்லரசு உளறலின் அபத்தத்தை ஓரளவுக்காவது மக்கள் புரிந்து கொள்ள வாய்ப்பாயிருந்திருக்கும்.

    • கலாம் ஒன்றுமே செய்யவில்லை என்று ஒரே போடாக போட்டு விட்டீர்கள்.

      கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருண்டு உள்ளது என்போரை என்ன செய்ய முடியும்.

      2௦2௦ இல் இந்தியா வல்லரசாக ஆக வேண்டும் என்பது அவரது விருப்பம்.

      கலாமின் 2020 கனவை கிண்டல் அடிக்கிறீர்களே திப்பு, 1980 முதல் புரட்சி வரும், இதோ இனி வரும், நாளை வரும், என்று இயேசு பெருமான் விரைவில் பூமியில் தோன்ற போகிறார் என்று நமது கிருத்துவ போதகர்கள் சொல்வது போல புரட்சி வரப்போகிறது என்று கூறும் உங்களது கனவை யாராவது கிண்டல் அடித்தால் உங்களுக்கு எப்படி இருக்கும்?

      அவரது ஆசை அது, உங்களது ஆசை இது.
      அவரது ஆசை நிறைவரலாம், நிறைவேறாமல் போகலாம்.

      தங்களது ஆசையும் நிறைவேறலாம், நிறைவேறாமலும் போகலாம்.
      அதனால் கனவே காண கூடாது, ஆசையே பட கூடாது என்று அனைவரும் சும்மா இருந்து விட முடியுமா நண்பரே?

      • கண்ணை மூடிக்கொண்டு இருட்டு என்பவர்கள் மீது உங்கள் ஞான ஒளியை கொஞ்சம் பாய்ச்சுங்களேன். இன்னின்ன வகையில் மக்களுக்கு பயனாக இருந்தது அவரது வாழ்க்கை என்று கொஞ்சமாவது சொல்ல முடியாததால் சாமர்த்தியமாக சமாளிக்க பாக்குறீங்க.சும்மா கலாம் அவரால முடிஞ்சத செஞ்சாருன்னும் ,குடியரசுத்தலைவர் பதவிக்கு உரிய வரம்புகள் பற்றியெல்லாம் வகுப்பு எடுக்குறீங்களே கண்டி சாதனைன்னு எதுவும் சொல்ல முடியல உங்களால.அப்படியானால் கே.ஆர்.நாராயணனும் S.D.சர்மாவும் இறந்த போது இல்லாத அழுகையும் கதறலும் கலாமுக்கு மட்டும் ஏன்.காரணம் பிறிதொரு பின்னூட்டத்தில் சொன்னதுதான்.காரணம் ஆளும் கும்பலின் நம்பகமான கையாள் கலாம்.நாற்றமெடுக்கும் இந்திய வல்லாதிக்க அரசு கொள்கைகளின் மீது பூசப்பட்ட மலிவான நறுமண திரவம் கலாம்.

        முடிஞ்சத செஞ்ச குடியரசுத்தலைவருக்கு,அரசு ஏவுன வேலையை செஞ்ச ஒரு ISRO பணியாளருக்கு உரிய மரியாதையை கொடுத்தால் போதும்.இம்மாந் தொலவு அழுது ஆர்ப்பாட்டம் எல்லாம் தேவையில்லை.

        • உண்மை தான் திப்பு . AK 47 ஐ வடிவமைத்து இரண்டாம் உலகப்போரில் ஹிட்லர் படையிடம் இருந்து காத்த ருஷ்ய வீரன் மிக்ஹைல் கலாஷ்நிகோவ் அவர்களுக்கு கொடுக்கப்படும் மரியாதையை நானும் இந்திய பாதுகாப்புக்காக அங்கினியை வடிவமைத்த ஒரு தமிழனுக்கு ,கலாமுக்கு கொடுக்கலாம் அல்லவா ?

          //முடிஞ்சத செஞ்ச குடியரசுத்தலைவருக்கு,அரசு ஏவுன வேலையை செஞ்ச ஒரு ISRO பணியாளருக்கு உரிய மரியாதையை கொடுத்தால் போதும்.இம்மாந் தொலவு அழுது ஆர்ப்பாட்டம் எல்லாம் தேவையில்லை.//

    • இது எல்லாம் கொஞ்சம் அதிகமான விமர்சம் திப்பு .! அவரின் மத்திய அரசு பணிகாலத்தில்[in ISRO and DRDO ] அவர் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட விண்வெளி , இராணுவம் ,சார்ந்த ஆய்வுகள் ,அதன் முடிவுகள் , அதன் இன்றைய பயன்பாடுகள் பற்றி வல்லரசு நாடுகளே[சீனா மற்றும் அமெரிக்கா ] இந்தியாவை பார்த்து அச்சம் கொள்கின்றன திப்பு . அவரின் குழுவின் முயற்சியில் உருவாக்கபட்ட அக்னி ஏவுகணை பீஜிங் வரை செல்லும் ஆற்றல் உடையது ,எதிரிக்கு அச்சம் அளிக்க கூடியது என்பதை எப்படி மறந்திர்கள் திப்பு பாய் ?

      கலாம் அரசு வேளையில் இருந்து ஓய்வு பெற்றதும் அவர் விரும்பியபடியே பள்ளிக்கூடம் தொடங்கிஇருக்கலாம் . அதனை விடுத்து பாதுகாப்பு ஆலோசகர் ,ஜனாதிபதி என்று ஓய்வு கால வாழக்கையில் அவர் பயணித்தது தேவையற்ற செயல். அவரிடம் இருந்த குணத்தையும் ,குறையையும் நாடி பாருங்களேன் திப்பு பாய் ! எடுத்தோம் கவிழ்த்தோம் என்ற விமர்சனம் எதற்கு ?

      //அவர் வாழ்வுதான் மக்களுக்கு எந்த வகையில் பயனுள்ளதாக இருந்தது என்று சொல்ல முடியுமா.//

      • \\அவரின் குழுவின் முயற்சியில் உருவாக்கபட்ட அக்னி ஏவுகணை பீஜிங் வரை செல்லும் ஆற்றல் உடையது ,எதிரிக்கு அச்சம் அளிக்க கூடியது //

        அண்டை நாடுகளை அச்சுறுத்தித்தான் ஒரு நாடு தனது பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் என்று நம்புகிறீர்கள்.அப்பாவித்தனமாக ஆளும் வர்க்கத்தின் கள்ளப்பரப்புரைகளை நம்புகின்ற உங்களைப்போன்றோர் இரக்கப்பட வேண்டியவர்கள்.

        கலாம் கும்பலின் ஏவுகணைகளும் அணுகுண்டு வெடிப்புகளும் அண்டை நாடுகளுடன் ஆயுத போட்டியை கடுமையாக்கியதுதான் கண்ட பலன்.நாட்டின் முன்னேற்றத்துக்கு செலவிடப்பட்டிருக்கக் கூடிய பல இலட்சம் கோடி ரூபாய்களை இராணுவத்துக்கும் ஆயுத கொள்முதலுக்கும் வாரியிரைத்த [அதில் அடித்த கமிஷன் கொள்ளைகள் ஒரு புறம் இருக்கட்டும்] ஊதாரி கும்பலின் நம்பகமான கையாள்தான் கலாம்.நாற்றமெடுக்கும் இந்திய வல்லாதிக்க அரசு கொள்கைகளின் மீது பூசப்பட்ட மலிவான நறுமண திரவம்தான் கலாம்.

        • அண்டை நாடு என்று நீங்கள் அழைக்கும் சினா ஒன்றும் இந்தியாவின் நட்பு நாடு அல்லவென்பதை நீங்கள் அறிந்து ,இந்தோ-சினா போர் வரலாற்றை படித்து புரிந்து கொண்டு இருப்பிர்கள் என்று நம்புகிறேன். இந்தியாவின் பகை நாடான சீனா அணு ஆயுத ,கண்டம் விட்டு கண்டம் தாண்டும் ஏவுகணை உற்பத்தியில் இந்தியாவிற்கு முப்பே தேர்சி பெற்ற நாடாக தான் உள்ளது. இத்தகைய சூழலில் இந்தியாவின் பாதுகாப்புக்கு அனுஆயுதமும் ,கண்டம் விட்டு கண்டம் அக்கினி ஏவுகணையும் அவசியமாகின்றது என்பதை நண்பர் திப்பு ஏன் உணர தவறுகின்றிர்கள் ?

          மேலும் இது வர்க்கம் சார்ந்த விடயம் அல்ல. தேசத்தின் பாதுகாப்பு பற்றியது. இந்தியாவில் எந்த வர்க்கம் ஆச்சியில் இருந்தாலும் இந்தியாவிற்கு அணு ஆயுதமும் , கண்டம் விட்டு கண்டம் தாண்டும் ஏவுகணையும் இந்தியாவிற்கு அதன் தேச பாதுகாப்புக்கு மிகவும் அவசியம் திப்பு பாய் .

          //அண்டை நாடுகளை அச்சுறுத்தித்தான் ஒரு நாடு தனது பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் என்று நம்புகிறீர்கள்//

          • தற்போதைய காலகட்டத்தில் இயேசுநாதர் பாணியில் நீ ஒரு கன்னத்தில் அடித்தால் இன்னொரு கன்னத்தை காட்டினால் அதிலும் அடிப்பார்கள் திப்பு.

            கையில் ஆயுதம் இருக்கிறதென்று தெரிந்தால் அடிக்க வருபவன் சற்று யோசிப்பான்.

            இது உலக நியதி. இது உங்களுக்கு விளங்கவில்லை என்றால் என்ன சொல்ல…

            அஜ்மல் கசாப் துப்பாக்கியோடு அப்பாவி மக்களை கண்டபடி சுட்டபோது அவனிடம் அகிம்சை மொழியில் பேசி பயனில்லை என்பதை அறிவீர்கள் என்று நம்புகிறேன்.

            உங்கள் உண்மை எண்ணம் தான் என்ன? சீனா இந்தியாவை கொஞ்சம் கொஞ்சமாக முழுக்க ஆக்கிரமித்து இந்தியா சீனாவின் ஒரு பகுதி ஆக வேண்டும் என்பதா?

            பிலிப்பைன்ஸ் நாட்டில் கடற்பகுதியில் ஒரு பெரும்பகுதியை சீனன் ஆக்கிரமித்து விட்டான், தெரியுமா, தெரியாதா?

            • \\கையில் ஆயுதம் இருக்கிறதென்று தெரிந்தால் அடிக்க வருபவன் சற்று யோசிப்பான்.
              இது உலக நியதி. இது உங்களுக்கு விளங்கவில்லை என்றால் என்ன சொல்ல…//
              ஒப்பீட்டளவில் இந்தியா பாகிசுதானை விட இராணுவ வலிமையில் மிகைத்த நாடு.ஆனாலும் அவன் அத்துமீறி வந்து கார்கில் குன்றுகளை ஆக்ரமித்தானே அதுவும் நீங்க பொக்ரான்ல அணுகுண்டு வெடிச்ச ஆறுமாசத்துக்குள்ளார .உங்கள் ஆயுத வலிமை அவனை தடுக்கவில்லை.
              அப்புறம் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் இருந்த நாடு சிக்கிம்.அந்த நாட்டை இராணுவ வலிமையில் இந்தியாவை மிகைத்த சீனா ஆக்கிரமித்து விடவில்லை.நீங்கதான் அந்த நாட்டையே ஆட்டைய போட்ருக்கீங்க.
              ஆகவே ஆயுத வலிமையே பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் என்ற உங்களது புரிதல் தவறானது.நாட்டின் பாதுகாப்பு உண்மையில் அரசின் கொள்கைகளிலும் அரச தந்திரத்திலும் தங்கியிருக்கிறது.புரிந்து கொள்ளுங்கள்.
              கத்தி எடுத்தவனுக்கு கத்திலதா சாவு ன்னு ஒரு பழமொழி உண்டு.இது தனி மனிதர்களுக்கு மட்டுமல்ல நாடுகளுக்கும் பொருந்தும்.

              • \\சீனா இந்தியாவை கொஞ்சம் கொஞ்சமாக முழுக்க ஆக்கிரமித்து இந்தியா சீனாவின் ஒரு பகுதி ஆக வேண்டும் என்பதா?//

                மாவோவின் மக்கள் சீன குடியரசு ஆட்சிக்கு வந்தவுடன் எல்லைகள் குறித்த அனைத்து வெளிநாட்டு ஒப்பந்தங்களையும் ரத்து செய்தது.ஏனெனில் அவையெல்லாம் அநியாயமாக வலுவீனமாக இருந்த அந்நாட்டின் மீது திணிக்கப்பட்டவை.சீனாவுக்கு பதினான்கு நாடுகளுடன் எல்லை உள்ளது, தனது அத்தனை அண்டைநாடுகளுடனும் எல்லையை வரையறுத்துக் கொண்டுவிட்டது மக்கள் சீனம்.அவர்களுக்கு எல்லை பிரச்னை உள்ள ஒரே நாடு இந்தியாதான்.இதன்னியில் தெற்கு சீன கடல் பகுதியில் வியட்நாமுடன் பிரச்னை உள்ளது.
                நிற்க.

                மக்கள் சீனம் உருவான அதே கால கட்டத்தில் போலி விடுதலை அடைந்த இந்தியாவுக்கு ஏழு நாடுகளுடன் எல்லை உள்ளது,இந்தியாவுக்கு எல்லைப்பிரச்சனை இல்லாத அண்டை நாடே கிடையாது.அப்படியானால் யார் சரியான முறையில் நடந்து கொள்கிறார்கள் என்று புரிகிறதா.

                பி.கு.

                வியட்நாம் -சீனா சண்டையிலயும் இந்தியா மூக்கை நுழைக்கிறது.தெற்கு சீன கடல் பகுதியில் பெட்ரோல் எடுக்க துரப்பண பணிகள் மேற்கொள்ள வியட்நாமுடன் இந்தியா ஒப்பந்தம் போட்டுள்ளது.ஆக யார் வம்பு சண்டைக்கு அலையுறாங்கன்னு புரிகிறதா.

                • திப்பு,

                  அநியாயத்துக்கு சீனாவுக்கு சொம்படிக்கிறீங்க. சீனாவுடன் இந்தியாவுக்கு மட்டும் தான் எல்லை பிரச்சினை உண்டா, மற்ற நாடுகளுடன் சீனாவுக்கு எல்லை பிரச்சினையே இலையா?

                  வடகொரியா – சீனா : பைக்டு மலைப்பகுதி
                  பூடான் – சீனா : செர்கிப் கோம்பா, தோ, துங்க்மார், கேசூர், கெசான், இத்சே கோம்பா, கொச்சார், நையான்ரி, ரிங்குங், சன்மார், தார்சேன், ஜூதுள்புக் பகுதிகள்
                  இந்தியா – சீனா : அக்சாய் சீன் (China Occupied Kashmir), அருணாச்சல் பிரதேசம்
                  வடகொரியா, தென்கொரியா – சீனா : ஜியண்டோ பகுதி
                  வியட்நாம், தைவான் – சீனா : மக்கல்ச்பீல்டு படுகை பகுதி, பாராசெல் தீவு, ஸ்ப்ராட்லி தீவு,
                  பிலிப்பைன்ஸ் – சீனா : ஸ்கார்பொரோ பகுதி
                  ஜப்பான் – சீனா : சென்காகு தீவு
                  பாகிஸ்தான் – சீனா : கில்சித் பல்திஸ்தான்
                  ரசியா – சீனா : போல்ஷாய் தீவு
                  பர்மா – சீனா : கச்சின் மாநிலம்

                  சீனா அமைதியை விரும்புகிறதா????

                  நான் தற்போது பிலிப்பைன்ஸ் நாட்டில் தான் உள்ளேன். உள்ளூர் மக்கள் சீனாவின் அட்டூழியங்களை கண்டு கொந்தளித்து வருகிறார்கள். அவர்களது மீனவர்களை சீன கடற்படை சுடுகிறது. பிலிப்பைன்ஸ் எல்லைக்குள் மண்ணை கொட்டி ஒரு செயற்கை தீவை உருவாக்கி அங்கு சீன கடற்படை தளம் அமைத்துள்ளது.

                  கொஞ்சம் கம்மிகளின் செய்திகளை தாண்டி உலக விடயங்களையும் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

                  காவிகளும் சரி, கம்மிகளும் சரி, அவர்களுக்கு வேண்டிய செய்திகளை மட்டுமே படித்து கொண்டு உலகம் அப்படித்தான் என்று நினைத்து கொள்கிறார்கள்.

                  உலகம் மிகப்பெரிது. கொஞ்சம் கண்ணையும் மனதையும் திறந்து பாருங்கள்.

                  • நமது பக்கத்து ஈழத்து நாட்டிலும் தான் அமெரிக்காகாரனும் சீனாக்காரனும் சேர்ந்து கொண்டு சண்டை போட்டான். அதை கலாம் முதற்கொண்டு கலாம் ரசிகர்களும் சேர்ந்தே ரசித்தார்கள். தற்போதுவரை இந்த துரோகத்திற்கு பதில் சொல்லதுப்பில்லை. ஆனால் சீனா எல்லைச் சண்டை என்று பிலிப்பைன்சை எல்லாம் எடுத்துக்காட்டி வாதிடுகிறார்கள். இது அவர்களை அம்பலப்படுத்த போதுமானது.

                    அதே சமயம், நாப்பாம் குண்டுகளை வீசி தான் ஒரு வெறி நாய் என்று காட்டிக்கொண்ட அமெரிக்காகாரனை விட்டுவிட்டு வியட்நாம் என்று கதறுவது அசிங்கம்.

                    காரணம் என்னவென்றால் இந்தப்பித்துக்குளிகளுக்கு சீன, அமெரிக்க, ரசிய, சப்பானிய ஏகாதிபத்தியங்களின் கொடூரங்கள் தெரியாது. ஆனால் அப்படிக்காட்டிக்கொண்டே, பெய்ஜிங்கிற்கு பொறுக்கித்தின்ன போய்விடுவார்கள். மணிலாக்காரனுக்கு தெரிந்தால் துடைப்பக்கட்டையால் அடித்து விரட்டுவார்கள் கற்றது கையளவை.

                    பிசினஸ் பாக்கப்போறவனுக்கு வாழ்க்கையிலும் விழுமியங்களும் கிடையாது மதிப்பீடுகளும் கிடையாது. இதில் பெய்ஜிங் போகிற கற்றது கையளவிற்கு பட்டியல் ஒரு கேடா? இதில் கம்மிகள் காவிகள் என்று கவி வேறு. அசிம் பிரேம்ஜி ஆர் எஸ் எஸ்ஸுக்கு படியளந்துவிட்டு தேசப்பக்தி வேசம்போட்டதைப்போல் உள்ளது. பார்த்து வாலிபரே! நாறப்போகிறது!

                    • No Substance. வெறும் பிதற்றல்.

                      அதே மணிலா காரனும் தான் சீனாவுக்கு பணி நிமித்தமாக செல்கிறான். ஐயா தென்றல் சீனா பிலிப்பைன்சில் அடாவடித்தனமாக ஆக்கிரமிப்பு செய்வதை மறைத்து விட்டு அமெரிக்காவிற்கும் ஈழத்திற்கும் வியட்நாம்ர்கும் தாவுகிறீர்கள். நடத்துங்கள். சரக்கு தீர்ந்து விட்டது தெரிந்து விட்டது.

                      அடாவடித்தனம் செய்வது சீன இராணுவம், சீன அரசு இவற்றுக்கு நீங்கள் ஆதரவு தெரிவிப்பீர்கள், ஆனால் எங்களை போல சீன மக்களுடன் இனைந்து பணியாற்றுபவர்களை பொறுக்கித்தின்னி என்று கூறக்கூடிய திமிர் உங்களுக்கு இருக்கிறது. ஆமாம், ஒசித்தின்னிகளுக்கு உழைத்து தின்பவர்களை கண்டால் பொறுக்கித்தின்னி என்று தான் திமிர் தனமாக பேச தோன்றும்.

                      திப்பு சீனாவுக்கும் இந்தியாவுக்கும் மட்டும் தான் பிரச்சினை என்றார். அதற்கு சீனாவுடன் மற்ற நாடுகளுக்கு இருக்கும் எல்லை பிரச்சினைகள் எல்லாவற்றையும் தெளிவாக பட்டியலிட்டேன். பின் மேஜர், மைனர் பிரச்சினை என்று டெக்னிகல் சந்து பொந்துக்குள் அவர் ஒளிய பார்த்தார். பின் பிலிப்பைன்ஸ் நாட்டில் தற்போது மேஜராக ஒரு அடாவடித்தனத்தை சீனா நிகழ்த்தியதையும் விளக்கினேன். இப்போது அவரிடம் இருந்து பதில் வருவதற்கு முன் நீங்கள் வம்படியாக நானும் ரவுடி தான் என்று கூறிக்கொண்டே நான் கூறிய கருத்தினை திசை திருப்பி பாஜக, ஆர்எஸ்எஸ் என்று மடை மாற்றுகிறீர்கள். ஸ்டார்ட் மியுசிக்….

              • கத்தி எடுத்தவனுக்கு கத்தியல் தான் சாவு.
                ஆனால் பாதுகாப்புக்காக உறைக்குள் கத்தியை வைத்திருப்பவனுக்கு அது பாதுகாப்பு.

                ஒரு கன்னத்தில் அடித்தவனுக்கு மறு கன்னத்தை காட்டும் காலம் மலையேறிவிட்டது.

                அணு ஆயுதத்தை இந்தியா முதலில் பயன்படுத்தாது என்று தெளிவாக விளக்கிய பின் உங்கள் விமர்சனம் தேவையில்லாதது.

                • அணு ஆயுதத்தை இந்தியா முதலில் பயன்படுத்தாதாம். சரணடைந்தவனை தூக்கில் போட்ட தொடை நடுங்கி இந்திய அரசாங்கம், அப்சல் குருவை நசுக்கிவிட்டு அசீமானந்தாவை சாமீனில் விட்ட இந்திய ஆளும் வர்க்கம், அணுகுண்டு என்று பீதியிட்டுகிறதாம். பாத்துங்கப்பு. பத்திரமா வைச்சுங்க. அப்புறம் பாகிஸ்தான் நாய்கள் மோண்டுவிட்டு அணுகுண்டு நமத்துப்போச்சுன்னு அத்வானி தலைமையிலே மதச்சண்டைய கிளறாதீக! அது சரி இதெல்லாம் பொறுக்கித்தின்னிகளுக்கு தெரியுமா க.கை?

                  • தென்றல்,

                    ஊர் ஊராக சுற்றுகிறேன். இல்லை என்று மறுக்கவில்லை. ஆனால் அதே சமயம் என் உழைப்பில் நான் உண்கிறேன். நான் உண்ணும் ஒவ்வொரு பருக்கை சோறிலும் என் உழைப்பு உள்ளது. இன்னொருவரின் நன்கொடையில் என் வாழ்வு ஓடவில்லை. உங்கள் மனசாட்சியை கேளுங்கள், உண்மையான பொறுக்கிதின்னி யார் என்பது உங்களுக்கே தெரியும். நான் விளக்க வேண்டிய அவசியமே இல்லை. இனியும் நீங்கள் என்னை பொறுக்கித்தின்னி என்று அவதூறு பரப்பினால் நானும் உங்களை “ஓசி தின்னி” என்று கூற வேண்டியதிருக்கும். நான் எப்போதும் இது போன்ற பேசுவதில்லை, ஆனால் பொறுமைக்கும் எல்லை உண்டு. நீங்கள் பேச வைக்கிறீர்கள் தென்றல். வாழ்த்துக்கள். உங்கள் அளவுக்கு என்னை தரம் தாழ்த்தி பேசுவதில் வென்று விட்டீர்கள்.

                  • \\பாதுகாப்புக்காக உறைக்குள் கத்தியை வைத்திருப்பவனுக்கு அது பாதுகாப்பு.//

                    வாதத்திற்கு பதில் சொல்லாத போங்காட்டம் இது.இந்தியாவிடம் அணுகுண்டு இருப்பது தெரிந்தும்,பொக்ரான் 2 அணுகுண்டு சோதனைக்கு பின் ஆறே மாதத்தில் பாக்.அத்துமீறி வந்து கார்கில் குன்றுகளை ஆக்ரமித்து ஒரு போருக்கு வித்திட்டதை,அதாவது ஆளும் வர்க்கங்களும் அதன் ஏவல் எடுபிடிகளும் பீற்றிக்கொள்வது போல அணுகுண்டு தடுப்பரணாக [deterrent] இருக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டி இருக்கிறேன்.அப்புறமும் உறை கத்தி பாதுகாப்பு என பம்மாத்து காட்ட வேண்டாம்.அது துப்புகெட்டதனம்.உங்களுக்கு வக்கு இருந்தால் இந்திய அளவிலாகட்டும்,அல்லது உலகளவிலாகட்டும் அணுகுண்டு ஆக சிறந்த தடுப்பரணாக செயல்பட்டிருக்கிறது என்று எடுத்துக்காட்டு தந்து விளக்குங்கள் பார்ப்போம்.

                    உங்கள் அணுகுண்டுகளும் நீங்கள் மலை மலையாக குவித்து வைத்துள்ள ஆயுதங்களும் இந்திய பாக். எல்லையில் அமைதியை கொண்டு வர முடியவில்லை என்பது தெளிவாகி விட்டது.கார்கில்களும் ,இந்திய -பாக்.போர்களும் தொடர்கதையாகாமல் இருக்கவும்,இந்திய பாக். எல்லையில் நிரந்தரமாக அமைதி நிலவவும் நான் ஒரு வழி சொல்கிறேன்.இன்னொரு முறை துரோகி என நீங்கள் பாய்ந்து குதறினாலும் பரவாயில்லை.எம் நாட்டு மக்கள் நலனில் அக்கறை இருப்பதால் இதை சொல்லித்தான் ஆக வேண்டும்.

                    காசுமீர் குறித்த ஐ.நா.தீர்மானம் சொல்கிறபடி காசுமீரிலிருந்து இந்தியா படைகளை விலக்கி கொள்ள முன் வர வேண்டும். பாகிசுதானும் படைகளை விலக்கிக் கொள்ள பன்னாட்டு சமூகம் மூலம் அழுத்தம் தர வேண்டும்.ஐ.நா.பார்வையாளர்கள் கண்காணிப்பில் இரு நாட்டு படைகளும் ஒரே சமயத்தில் காசுமீரிலிருந்து விலகி கொண்ட.பின் துப்பாக்கியின் நிழல் படியாத காசுமீரில் அமைதியான சூழலில் ஐ.நா.மேற்பார்வையில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.இந்தியாவுடன் சேர்வதா,பாக்குடன் சேர்வதா,தனிநாடாக போவதா என்பதை அந்த மக்கள் முடிவு செய்யட்டும்.

                    இதுதான் இந்தியாவின் மேற்கு எல்லையில் அமைதி நிலவுவதற்கான வழி.கட்டுச்சோத்துல பெருச்சாளிய வச்சு கட்டுன கதையா இருக்கு காசுமீர் பிரச்னையை தீர்க்காம இழுத்துக்கிட்டு கிடக்குறது.

                    • எதிராளி முழு ஆயுத பலத்துடன் இருக்கும்போது நாம் நிராயுதபாணியாக இருப்பது அவ்வளவு உசிதமான செயல் அல்ல. அதுவும் பாகிஸ்தான் சீனா போன்ற அண்டை நாடுகளை வைத்துக்கொண்டு இந்தியா அமைதிப்புறாவாக இருப்பதாக காட்டிக்கொண்டால் அது பேராபத்தில் தான் முடியும். ஆயுதம் இருக்கும்போதே இத்தனை ஆட்டம் போடும் பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ., ஆயுதம் ஏந்தாத நாடு இந்தியா என்று தெரிந்தால் இன்னும் என்னென்ன வேலைகள் செய்யும்? யோசியுங்கள்.

                      உலக நாடுகள் கேட்டுக்கொண்டால் பாகிஸ்தான் அடங்கி ஒடுங்கி விடுமா?
                      என்ன காமெடி செய்கிறீர்கள் திப்பு.

                      பின் லாடன் பாகிஸ்தானில் இல்லவே இல்லை. தாவூத் இப்ராகிம் இந்த பக்கம் தலை வைத்து கூட படுக்கவில்லை. மும்பையில் நடந்த குண்டுவெடிப்பில் பிடிபட்ட அஜ்மல் கசாப் பாகிஸ்தானிலிருந்து செல்லவில்லை. ஹபீஸ் சையதிற்கும் மும்பாய் குண்டுவெடிப்புக்கும் சம்பந்தமே இல்லை. இதெல்லாம் தங்களது பாசத்துக்குரிய பாகிஸ்தான் நாட்டு அரசு கூறிய கருத்துக்கள்.

                      உலகை ஏமாற்ற பாகிஸ்தானின் அரசு (இராணுவம் & ஐ.எஸ்.ஐ) உலக நாடுகளின் கட்டளைக்கு அடிபணிந்து அமைதியான சூழலில் காஷ்மீர் இருக்க உதவிடுமா என்ன?

                    • \\நிராயுதபாணியாக இருப்பது//

                      நீங்க தண்டாயுதபாணியாவே இருந்துக்கங்க.ஆனால் ஆயுதங்களும் அணுகுண்டுகளும் அமைதியை கொண்டு வர முடியவில்லையே .அதுக்கு என்ன சொல்றீங்க.தண்டாயுதத்தை தூக்கிட்டே திரிஞ்சு எப்படி அமைதியை கொண்டு வர போறீங்க. அதை சொல்லுங்க நாங்களும் தெரிஞ்சுக்கிறோம்.

                      \\உலக நாடுகள் கேட்டுக்கொண்டால் பாகிஸ்தான் அடங்கி ஒடுங்கி விடுமா?//உலகை ஏமாற்ற பாகிஸ்தானின் அரசு (இராணுவம் & ஐ.எஸ்.ஐ) உலக நாடுகளின் கட்டளைக்கு அடிபணிந்து அமைதியான சூழலில் காஷ்மீர் இருக்க உதவிடுமா என்ன?//

                      கார்கில் போர் எப்படி முடிவுக்கு வந்ததுன்னு சொல்ல முடியுமா.இதை படிச்சுப்பாருங்க.

                      .http://www.telegraphindia.com/1140922/jsp/frontpage/story_18859867.jsp#.VdIo3rKqqko

                      அடி தாங்க முடியாம அமெரிக்க எசமான்ட்ட உங்களவா ஓடிப்போய் பாக்.ராணுவத்தை விலக சொல்லுமாறு கெஞ்சி கூத்தாடியதெல்லாம் வெளி வந்து நாறுவது உங்களுக்கு தெரியாதா.அதுவும் 56 அங்குல மார்பு கொண்ட வீரரே ”என் கால்கட்டை மட்டும் அவிழ்த்து விட்டுப்பார்,உன் காலில் விழுந்து கெஞ்சுவேனடா ”என்ற 23 ஆம் புலிகேசியை எல்லாம் விஞ்சும் வண்ணம் அமெரிக்க அம்பிகளை எசமானுக்கு கடிதம் போட்டு கெஞ்ச சொன்னதெல்லாம் உங்களுக்கு தெரியாதா..

                      இப்படி ஒரு அரசியல் தற்குறியாய் இருந்துகிட்டு காமடி பண்றேன்னு என்னை கிண்டல் பண்றீங்களாக்கும்.

                      அப்புறம் பின் லாடன்,தாவூத் இப்ராகிம் ,பாகிசுதான் யோக்கியதை எல்லாம் தெரிந்ததுதான்.ஆனாலும் அவனுடன் எப்படி அமைதிப் பேச்சு நடத்துறீங்க.இரு தரப்பு ஒப்பந்தங்கள் போடுறீங்க.Most favoured state status கேட்டு அவனிடம் குழைந்து கொஞ்சிக்கிடப்பது ஏன்.குழாயடி சண்டை மாதிரி,வரப்பு தகராறு மாதிரி நாடுகளுக்கிடையேயான உறவையும் பகையையும் நெனைக்கிறீங்க போல இருக்கு..பன்னாட்டு உறவுகளில் நாடுகள் எப்படி நடந்து கொள்கின்றன என்று கொஞ்சம் விவரம் தெரிஞ்சுகிட்டு வாங்க.

                    • சுட்டியில் எழுத்துப்பிழை ஏற்பட்டு வேலை செய்யவில்லை.சரியான சுட்டி.

                      http://www.telegraphindia.com/1140922/jsp/frontpage/story_18859867.jsp#.VdKha7Kqqkq

                      கார்கிலிலிருந்து பாக்.படைகளை விலக செய்ய பன்னாட்டு சமூகத்தால் முடியும்போது அதே வழியில் காசுமீரை விட்டு விலக வைக்க ஏன் முடியாது.அதற்கு இரு தரப்பும் இறங்கி வர வேண்டும்.ஒருவர் பொறை இருவர் நட்பு.

        • சுயசார்பு உள்ள, சொந்த தொழில் நுட்பத்தில் நம் சொந்த முதலீட்டில் உற்பத்தி செய்யபடும் ஏவுகணைகளுக்கும் அதனை ஆய்வு செய்து கண்டுபிடித்த கலாமுக்கும் சலாம் போடுவதை விடுத்து பன்னாட்டு ஆயுத உற்பத்தி நிறுவனங்களில் இருந்து ஆயதங்களை இறக்குமதி செய்யும் இன்றைய ,நேற்றைய காங்கிரஸ் ,பிஜேபி அரசுகளின் நடவடிக்கைகளுக்கு கலாம் எப்படி பொறுப்பாக முடியும் திப்பு பாய் ? கற்றது கையளவு வலது முனையில் இருந்து கலாமை கண் மூடி தனமாக ஆதரிக்கின்றார். அதே நேரத்தில் நீங்கள் இடது மூலையில் இருந்து கலாமை வரட்டு தனமாக எதிர்கின்றிர்கள்.

          //நாட்டின் முன்னேற்றத்துக்கு செலவிடப்பட்டிருக்கக் கூடிய பல இலட்சம் கோடி ரூபாய்களை இராணுவத்துக்கும் ஆயுத கொள்முதலுக்கும் வாரியிரைத்த…..

        • ஒரு பக்கம் ஆயுத கொள்முதலை எதிர்கின்றிர்கள் . மறுபக்கம் சுயசார்புடன் ,சுய தொழில் நுட்பத்தில் உருவாக்க பட்ட ஏவுகணைகளையும் எதிர்கின்றிகள்.100 கோடி மக்களுக்கு மேல் வாழும் இந்தியாவில் அதனை எந்த வர்க்கம் ஆண்டு கொண்டு இருந்தாலும் ,தேசத்தின் பாதுகாப்புக்கு சுயசார்புடன் ,சுய தொழில் நுட்பத்தில் உருவாக்க பட்ட ஏவுகணைகள் வேண்டாமா ?

    • //ஆக கலாம் மக்கள் நலனுக்காக இன்னின்ன கிழித்தார் என்று உங்களால் சொல்ல முடியவில்லை.[யாராலும் முடியாது,எதையாச்சும் கிழிச்சுருந்தாதானே சொல்றதுக்கு ] .ஒன்றும் கிழிக்கவில்லை என்று மறைமுகமாக ஒப்புக்கொள்கிறீர்கள்.//

      நாட்டிற்கு அவருடைய பங்களிப்பு என்ன ய்ந்பது க்கூடபுரியாமல் உளறுகிறார்கள் .

      ஒரு சினிமாவிலாவது அவர் நடித்து இருந்தால் ஒரு வேலை இதுகளுக்கு புரிந்து இருக்குமோ

  16. \\தனிப்பட்ட முறையில் நாட்டில் நடக்கும் எல்லா விடயங்களுக்கும் அவருடைய விருப்பு வெறுப்புகள் அனைத்தும் நமக்கு தெரியாத பட்சத்தில் அவர் கருத்து சொல்லவில்லை என்பதாலேயே அவரை எதிரியாக பாவிப்பது தவறு//

    அரசுப்பணியாளராக இருந்தவரை வேண்டுமானால் அவருக்கு தனிப்பட்ட முறையில் கருத்து கொண்டிருக்க உரிமை இருக்கின்றது.ஏனென்றால் அரசின் கொள்கை முடிவுகளை எடுப்பதில் ஒரு பணியாளர் செல்வாக்கு செலுத்த முடியாது.

    ஆனால் கலாம் பாதுகாப்பு,துறையில் விண்வெளி ஆய்வு துறையில் கொள்கை முடிவுகளை எடுக்கும் உயர் அதிகாரியாக ஆன பின்,பொது வாழ்வுக்கு வந்து விட்ட பின்,அரசுத்தலைவராக வந்த பின் ,தனிப்பட்ட கருத்து கொண்டிருப்பதாக சொல்வதே மோசடி.அரசின் முடிவுகள் அத்தனையையும் அமுல் படுத்தும் ஒருவர் அதற்கு எதிராக கருத்து கொண்டிருக்க கூடும் என்று காதில் பூ சுற்ற வேண்டாம்.

    • திப்பு,

      பாதுகாப்பு துறை, விண்வெளி ஆய்வுத்துறையில் கொள்கை முடிவுகளை எடுக்கும் உயர் அதிகாரியாக ஆனா பின் அவர் அந்த துறை சம்பந்தப்பட்ட விடயங்களில் அரசின் வழி நடப்பது இயல்பு. இதனாலேயே தனிப்பட்ட அளவில் அவர் எல்லா அரசு விடயங்களுக்கும் தார்மீக ரீதியாக ஆதரவு கொடுக்கிறார் என்று எப்படி நீங்கள் கருத்தில் கொள்ளலாம். தனிப்பட்ட அளவில் அவர் எந்த ஒரு கட்சிக்கும் ஆதரவு அளித்ததாக எனக்கு தெரியவில்லை.

      ஜனாதிபதியாக அவர் இருந்த காலத்தில் எடுக்கப்பட்ட அரசு முடிவுகளில், அவர் கையொப்பமிட்ட சட்டங்கள் அனைத்திற்கும் அவர் பொறுப்பேற்க முடியும்.

      ஆனால் ஜனாதிபதியாக பதவி ஏற்பதற்கு முன்பும், பதவியில் இருந்து விலகிய பின்னும் எடுக்கப்பட்ட எந்த ஒரு அரசு முடிவுக்கும் அவர் பொறுப்பாக முடியாது.

      தனிப்பட்ட முறையில் எந்த ஒரு கட்சிக்கும் ஆதரவாகவோ, எதிராகவோ அவர் நடந்து கொள்ளவே இல்லை. அவர் மறைவிற்கு அனைத்து வர்க்கத்தினரும் வருத்தம் தெரிவித்தது அவரது அரசியல் ஆதரவினால் அல்ல, அவர் மேல் இருக்கும் அன்பினால்.

      • Ref : தென்றலின் கருத்து எண் 2.1.1.1

        கீழ்க்கண்ட [கலாம்] துரோகங்களுக்கு என்ன பதில்? -தென்றல்

        என்ற தலைப்பில் இதை தானே வலியுறித்தி கூறுகின்றது . இதற்கு கலாம் சார்பாக உங்கள் பதில் என்ன கற்றது கையளவு ?

        //ஜனாதிபதியாக அவர் இருந்த காலத்தில் எடுக்கப்பட்ட அரசு முடிவுகளில், அவர் கையொப்பமிட்ட சட்டங்கள் அனைத்திற்கும் அவர் பொறுப்பேற்க முடியும்.//

        • //ஜனாதிபதியாக அவர் இருந்த காலத்தில் எடுக்கப்பட்ட அரசு முடிவுகளில், அவர் கையொப்பமிட்ட சட்டங்கள் அனைத்திற்கும் அவர் பொறுப்பேற்க முடியும்//

          ஜனாதிபதி பதவி என்பதன் அர்த்தத்தை புரிந்து கொள்ள முயற்சிக்கவும் . கவுசிலர் பதவி போல நினது கொண்டு உளர் வேண்டாம் . அரசியல் அமைப்பு பற்றி படியுங்கள்

      • \\பாதுகாப்பு துறை, விண்வெளி ஆய்வுத்துறையில் கொள்கை முடிவுகளை எடுக்கும் உயர் அதிகாரி……………….தனிப்பட்ட அளவில் அவர் எந்த ஒரு கட்சிக்கும் ஆதரவு அளித்ததாக எனக்கு தெரியவில்லை.//

        கட்சியையும் ஆட்சியையும் ஒன்னாப்போட்டு குழப்புறீங்க.முதலாளித்துவ அரசமைப்பில் ஆளுகின்ற கட்சிகள் மாறி மாறி வரலாம்.அரசு என்பது நிலையானது.அதன் கொள்கைகளும் நிலையானது..அவை கட்சிக்கு ஏற்ப மாறுவதில்லை.காங்கிரசும் பா.ச.க.வும் கடந்த கால் நூற்றாண்டு காலம் மாறி மாறி ஆண்டாலும் இடையில் ஓரிரு ஆண்டுகள் உதிரிகட்சிகள் ஆண்டாலும் தாரளமயமாக்கல் நிற்கவில்லை.காசுமீரையும் வட கிழக்கு மாநிலங்களையும் ஆக்கிரமிக்கும் மூர்க்கம் எள்ளளவும் மாறவில்லை.அவர்களுக்கிடையே நடைபெறும் மோதல்கள் மேம்போக்கானவை. ஆளும் வர்க்கத்துக்கு யார் சேவை செய்வது அதில் யார் அதிகமாக பொறுக்கி தின்பது என்ற போட்டியே அவர்களுக்கிடையே நடைபெறுகிறது.இதை அப்படியே கலாமுக்கு பொருத்தி பாருங்கள்.

        அரசின் ஆக்கிரமிப்பு கொள்கை முடிவுகள் ,வெட்டி இராணுவ செலவுகள்,மேலாதிக்க வெறியில் அணு ஆயுத உற்பத்தி,,அவற்றை தாங்கி செல்லும் ஏவுகணை உற்பத்தி என ஆளும் கும்பலின் அயோக்கியத்தனங்கள் அத்தனையையும் வல்லரசு போதையூட்டி மறைக்க பயன்பட்ட முகமூடி அவர்.அதுனாலதான் அனைத்துக்கட்சி யோக்கியர்களும் இராமேசுவரத்துக்கு வந்து ஒப்பாரி வக்கிறாங்க. இதில் அவுரு அரசுத்தலைவர் ஆகு முன்,ஆன பின் என்றெல்லாம் பிரித்து பார்ப்பது பொருளற்றது.

        • திப்பு ,

          வர்க்கம் தான் ஒரு தேசத்தின் இராணுவ தளவாட உற்பத்தியை முடிவு செய்யவேண்டும் என்ற உங்கள் முடிவு மிகவும் ஆபத்தானது திப்பு. இந்தியாவில் இன்று ஆட்சியில் அமர்ந்து உள்ள முதலாளிகளின் அரசுக்கு நாட்டின் பாதுகாப்புக்காக இராணுவ ஆய்வுகளையும் , அதன் மூலம் நவீன ஆயுதங்களையும் உற்பத்தி செய்ய அருகதை இல்லை என்ற உங்கள் முடிவு மிகவும் ஆபத்தானது. தேசம் என்ற ஒன்று இருந்தால் மட்டுமே அதன் உள் வர்க்க போராட்டத்தை தொழிலாளர்கள் நடத்த முடியும் அல்லவா ? இந்திய அரசு கசுமீரையும் வட கிழக்கு மாநிலங்களையும் ஆக்கரிமிப்பு செய்து உள்ளது உண்மை தான் . அதே நேரத்தில் புதிய ஜனநாயக குடியரசை தொழிலாளர் வர்க்கம் உருவாக்கும் வரையில் நாட்டின் பாதுகாப்பை முதலாளிகளின் அரசு தானே உறுதி செய்யவேண்டியுள்ளது ? நாம் விருபினாலும் விரும்ம்பாவிட்டாளும் நாட்டின் எல்லைகளை பாதுகாக்கவேண்டிய கடமையை இந்த முதலாளிகளின் அரசு தானே செய்யவேண்டியுள்ளது ?

          கலாமின் ஏவுகணை ஆய்வுகள் அதன் பயன்பாடுகள் தொழிலாளர்கள் அமைக்க போகும் புதிய ஜனநாயக குடியரசுக்கு எந்த விதத்திலும் பயனற்றது என்று கூற வருகின்றிர்க்லா ?

          கலாமின் விண்வெளி ஆய்வுகள் மற்றும் அதன் பயன்பாடுகளை தொழிலாளர்கள் அமைக்க போகும் புதிய ஜனநாயக குடியரசு முற்றிலும் புறக்கணித்து விடமுடியுமா ?

          மேலும் சிந்திப்போம் …….

        • 2050ல் தொழிலாளர் வர்க்கம் ஆட்சியில் அமருவதாக வைத்து கொள்வோம். அதுவரையில் முதலாளிகளின் அரசுக்கு கீழ் வேலை செய்யும் அறிவியலாளர்களின் கண்டுபிடிப்புகளை தொழிலாளர் வர்க்க அரசு புறக்கணித்து விடமுடியுமா திப்பு ?

  17. கலாமை பற்றி பேசும் போது அதிகமாகவே உணர்சி வ்யப்டுகின்றிர்கள் கற்றது கையளவு . அவர் கூடங்கூலம் அணு மின் உற்பத்தியை ஆதரித்து, அந்த மக்களின் போராடத்தினை மழுங்க அடித்ததையும் நினைத்து பாருங்கள்

    • கூடங்குளம் அணுமின் உற்பத்தி ஆபத்தில்லை என்பது அவர் அறிவியல் ரீதியாக புரிந்து கொண்டு சொன்ன கருத்து. அதில் அரசியல் இல்லை. எல்லோரும் கருத்து சொல்லுங்கள், கருத்து சொல்லுங்கள் என்றால் அவருக்கு சரி என்று பட்ட கருத்தினை அவர் கூறினார். அவ்வளவே.

      ஒரு அணு மின் உலை ஆரம்பிக்கும் போது அதனை எதிர்க்காமல் அது முடிக்கப்பட்டு உற்பத்தி ஆரம்பிக்கும் வேளையில் போராட்டம் நடத்தினால் என்ன செய்வது. அந்த அணு உலை திடீரென ஒரே நாளில் முளைத்து விடவில்லை. உற்பத்தி ஆரம்பிக்கப்படும் வேளையில் இருந்த வேகம் அந்த திட்டம் பல பல ஆண்டுகளுக்கு முன்பு வடிவமைக்கப்பட்ட போது இந்த போராளிகளுக்கு எங்கே போனது?

      ஒரு அணு மின் உலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் எவ்வண்ணம் உள்ளது என்று அறிவியல் ரீதியாக அவரை பொறுத்தவரை அது பாதுகாப்பாக இருந்தது என்று அவர் கருத்தை கூறுகிறார். அறிவியல் ரீதியாக அதில் தவறிருந்தால் அப்போதே அவருக்கு அந்த ஆதாரங்களை போராளிகள் காட்டி இருக்க வேண்டும். அதனை காட்டாமல் உணர்ச்சிவசப்பட்டு மக்களை கொந்தளிக்க வைத்தால் யாருக்கும் இலாபம் இல்லை.

      உலகில் பொதுவாக இருக்கும் அனைத்து அணு உலைகளுக்கு இருக்கும் அதே அளவு பாதுகாப்பு தான் கூடங்குளத்திலும் கொடுக்கப்பட்டுள்ளது என்று அந்த அணு உலையினை நிர்மாணித்தவர்கள் ஆதாரங்களை அளிக்கும் போது அந்த ஆதாரங்களை பார்த்து தான் அவர் கூற முடியும். அதற்கு எதிர் ஆதாரம் இருந்தால் அவருக்கு நாம் காட்டி இருக்க வேண்டும். மேலும் இந்த ஒரு பிரச்சினையில் ஒட்டு மொத்தமாக அப்துல் கலாம் அவர்களை வில்லனாக ஆக்குவதற்கு பதில் அந்த அணு உலை ஆரம்பிக்க ஆரம்பித்த காலத்தில் இருந்து சும்மா இருந்த அனைவரின் மேலும் பழி சுமத்தலாமே?

      • நம் தலையிலேயே மண்ணை வாரி கொட்டிக்கொண்டு உள்ளீர்கள் கற்றது கையளவு. இதற்கு பெயர் தான் கண் மூடித்னமான கலாம் ஆதரவு என்பது. கலாமை ஆத்ரிப்த்ர்ர்காக, கூடங்க்கூலம் மக்கள் மீது ஆசிட் ஊர்ருகின்றிர்கள்.அனூஉலை திட்டம் தொடங்கபட்ட போதே அந்த மக்கள் அதற்கு எதிராக போராடி உயிர் தியாகம் செய்து உள்ளனர். மேலும் அணு மின்உலைகள் பாதுகாப்பானது என்று அரசும் ,கலாமும் கூருவத்ர்ற்கு என்ன அறிவியல் சார் தரவுகள் உள்ளன ? கூறுங்கள் பார்போம் .

      • \\அறிவியல் ரீதியாக அதில் தவறிருந்தால் அப்போதே அவருக்கு அந்த ஆதாரங்களை போராளிகள் காட்டி இருக்க வேண்டும்//

        கூடங்குளம் குறித்த கலாமின் எத்துவாளித்தனத்தை அறிவியல் ரீதியாக அம்பலப்படுத்தி ஏராளமான கட்டுரைகள் இணைய வெளியெங்கும் கொட்டிக்கிடக்கின்றன.இராமருக்கு பாலம் கட்ட உதவிய அணில் உவமைக்கு ஏற்றாற்போல நான் கூட ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன்.எனது பெயரின் மீது சொடுக்கினால் அந்த கட்டுரையை காணலாம்.

      • கூடங்குளம் குறித்த உங்கள் அறியாமையை வெளிச்சம் போட்டு காட்டுகிறீர்கள்.

        1989-ல் காவல்துறை துப்பாக்கி சூட்டில் மீனவர் ஒருவர் உயிர்த்தியாகம் செய்த.ஒன்பது பேர் படுகாயமடைந்த போராட்ட வரலாறு எல்லாம் நீங்கள் அறிய மாட்டீர்கள் போலும்.கால் நூற்றாண்டு தாண்டியும் தொடரும் போராட்ட வரலாற்றை சிறிதளவேனும் அறிந்து கொள்ள இந்த சுட்டிகளை படிக்கலாம்.

        http://twocircles.net/2011oct22/fishing_village_shook_indian_establishment.html#.VceLdHGqqko

        http://www.downtoearth.org.in/coverage/kudankulam-meltdown–37876

  18. கலாமின் ஏவுகனைக்கான உழைப்பை , விண்வெளி ஆய்வுகளை அதன் மூலம் உருவாக்கபட்ட தேச பாதுகாப்பை எந்த கொம்பனாலும் மறுக்க முடியாது. அதே நேரத்தில் அவர் பிஜேபியுடன் பல விடையங்களில் உதாரணமாக குஜராத் முஸ்லீம் படுகொலையில் சமரசம் செய்து கொண்டதையும் ,அதே பிஜேபியின் ஆதரவுடன் ஜனாதிபதி ஆனதையும் எந்த கொம்பனாலும் மறுக்க முடியாது.

    • எலி,

      அவர் பாஜகவுக்கு ஆதரவு அளிக்கவில்லை. பாஜக தான் அவருக்கு ஆதரவு தந்தது.
      குஜராத் படுகொலை சம்பந்தமாக அவர் பாஜகவுக்கோ அல்லது மோடிக்கோ ஆதரவாக எந்த ஒரு கருத்தை கூறினார் என்று தெளிவுபடுத்துகிரீர்களா? மவுனம் எப்போதும் சம்மதம் என்று அர்த்தம் இல்லை. அவர் ஜனாதிபதி ஆவதற்கு பாஜக மட்டும் அப்போது ஆதரவு தெரிவிக்கவில்லை. காங்கிரஸ், திமுக, அதிமுக மற்றும் பல கட்சிகள் அவருக்கு ஆதரவு தெரிவித்து பெரும்பான்மையான ஆதரவில் அவர் ஜனாதிபதி ஆனார்.

      வரலாற்றை பாருங்கள், அவருக்கு யார் யார் வாக்களித்தார்கள், அவருக்கு எதிராக நின்ற லட்சுமி சேகலுக்கு யார் யார் வாக்களித்தார்கள். பாஜக ஆதரவு அளித்ததால் அவர் பாசிசவாதி, காங்கிரஸ் ஆதரித்ததால் அவர் ஊழல் வாதி, என்ன லாஜிக் இது?

      அரசியல் ரீதியாக கலாம் அவர்கள் பாஜகவுக்கோ, அல்லது காங்கிரசுக்கோ கட்சி ரீதியாக ஆதரித்ததாக எனக்கு படவில்லை. எங்கேயாவது ஏதாவது ஒரு அரசியல் கட்சிக்கு அவர் தார்மீக ரீதியாகவோ, நேரடியாகவோ ஆதரித்து வாக்கு கேட்டாரா? ஒரு ஜனாதிபதி என்ற அளவில் அப்போது இருந்த அரசுடன் ஒத்துழைத்தார். அது அந்த கட்சியின் அனைத்து தவறுகளுக்கும் அவரை பொறுப்பாளராக ஆக்க முடியாது.

      பாஜகவுக்கு ஆதரவு அளித்த பெரும்பான்மை வாக்காளர்களை

      • டெக்நிக்ளாக பேசுவதாக நினைத்துக்கொண்டு கலாமின் தவறான முடிவுகளுக்கு எசப்பாட்டு பாடுறிங்க கற்றது கையளவு. கலாம் ஜனாதிபதியாக ஆவதற்கு முன்பே பிஜேபியும் அதன் வாணர பட்டளங்க்ளும் பல்வேறு மத கலவரங்களை நிகழ்த்தியுள்ளது. அதன் மூலம் பல ஆயிரகணக்கான சிறுபான்மை மக்கள் உயிர் – உடமைகளை இழந்து உள்ளனர். இது எல்லாம் காலமுக்கு உங்களையும் என்னையும் விட நன்றாகவே தெரியும் . தெரிந்தும் அவர் பிஜேபியின் ஆதரவை பெற்று ஜனாதிபதியாகிவுள்ளார்.
        //மவுனம் எப்போதும் சம்மதம் என்று அர்த்தம் இல்லை//

        • அடுத்து சொல்லுங்களேன், சீக்கிய படுகொலை நடத்திய காங்கிரஸ் ஆதரவு கொடுத்தபோது கலாம் ஏன் மறுக்கவில்லை, தலித் மக்களை சாதிவெறி படுகொலை நடத்திய பாமக ஆதரவு கொடுத்தபோது கலாம் ஏன் மறுக்கவில்லை, மூன்று அப்பாவி மாணவிகளை பஸ்ஸில் தீ வைத்து கொன்ற அதிமுக கட்சி தலைவி ஜெயலலிதா ஆதரவு கொடுத்தபோது ஏன் கலாம் மறுக்கவில்லை, மாஞ்சோலை துப்பாக்கி சூட்டின் நிழல் திமுகவின் மேல் உள்ளது. இப்படியே நாட்டில் உள்ள எல்லா கட்சிகளின் மேலும் இரத்த கறை உள்ளது.

          நீங்கள் சொல்வதன் படி பார்த்தால் நாட்டில் ஒருவரும் ஜனாதிபதி ஆக முடியாது. ஏன் என்றால் இந்த அரசியல் கட்சிகள் ஆதரவு இல்லாமல் ஒருவர் ஜனாதிபதி ஆகவே முடியாது.

          • அதனை தானே நானும் கூறுகின்றேன் கற்றது கையளவு ! ரத்தகறை படிந்த கொலை கரங்களின் ஆதரவுடன் கலாம் அவர்கள் ஜனாதிபதி ஆனதை தவிர்த்து அவர் ஓய்வுக்கு பின் தொடங்க ஆசை பட்ட பள்ளிகூடத்தை தொடங்கிஇருக்கலாம்

            //அடுத்து சொல்லுங்களேன், சீக்கிய படுகொலை ……………

            • தற்போதைய அனைத்து அரசியல் கட்சிகள் மேலும் இரத்தக்கறை உள்ளதால் எலி அவர்களின் கூற்றுப்படி இனி இந்தியாவில் ஜனாதிபதி பதவியை யாருமே ஏற்கக்கூடாது.

              • கற்றது கையளவு ,வாதத்துக்கு மருந்துண்டு ஆனால் உங்கள் விதாண்டா வாதத்துக்கு ?

                • எதுங்க விதண்டாவாதம்?

                  இரத்தக்கறை இல்லாத அரசியல் கட்சியின் ஆதரவு கொண்டு தான் ஒருவர் ஜனாதிபதி ஆக முடியும் என்றால் இந்தியா ஜனாதிபதி இல்லாமல் தான் இருக்கும் என்றேன். உண்மை தானே. ஒவ்வொரு கட்சியின் மேலும் இரத்தக்கறை உள்ளதை நீங்கள் மறுக்க முடியுமா?

                  அது சரி, பாஜக ஆதரித்ததால் அப்துல் கலாம் ஜனாதிபதி பதவியை ஏற்கக்கூடாது என்றீர்கள். மற்ற கட்சிகளும் அவரை ஆதரித்ததை பற்றி என்ன சொல்ல வருகிறீர்கள்?

                  பாஜக ஆதரவு தந்ததால் கலாம் தங்கள் அனைவருக்கும் எதிரி ஆகிவிட்டார் என்றால் பாஜக கூட்டணிக்கு ஒட்டு போட்ட 31 சதவீத மக்களை என்ன செய்வதாக உத்தேசம்?

                  • கற்றது கையளவு, என் பின்னுட்டம் 19.1.1.1.1 இதை மீண்டும் ஒரு முறை படியுங்கள்
                    //அது சரி, பாஜக ஆதரித்ததால் அப்துல் கலாம் ஜனாதிபதி பதவியை ஏற்கக்கூடாது என்றீர்கள். மற்ற கட்சிகளும் அவரை ஆதரித்ததை பற்றி என்ன சொல்ல வருகிறீர்கள்?//

    • //கலாமின் ஏவுகனைக்கான உழைப்பை , விண்வெளி ஆய்வுகளை அதன் மூலம் உருவாக்கபட்ட தேச பாதுகாப்பை எந்த கொம்பனாலும் மறுக்க முடியாது//

      கலாம் அப்படி என்ன கண்டுபுடிச்சி கிழிச்சிட்டார் என்று நினைக்கிறீர்கள்.
      அவரும் அவருடைய டீமூம் கண்டுபுடிச்சி கிழிச்சதை,
      அவர்கள் கண்டுபிடித்த(LATE ஆக)காலகட்டத்தில் ரூபாய்க்கு ஐந்து என்று வெளி மார்கெட்டில் கூவி கூவி விற்கப்பட்ட ஏவுகனை, விண்வெளி ஆய்வுகள்தான்

      • பிரச்சனை தாமதமான கண்டுபிடிப்பு அல்ல . சுயசார்புள்ள நாடு என்று சொல்லிகொள்ளும் இந்தியா அதன் இராணுவ பயன்பாட்டுக்கு தேவையான ஏவுகணைகளை உற்பத்தி செய்ய தேவையான ஆய்வுகள் அவசியமானவை. gatt மற்றும் imf இடம் வர்த்தக ,பொருளாதார நலன்களை முழுவதும் அடமானம் வைத்த இன்தியாவிற்கு சுயசார்புள்ள இராணுவ தளவாடங்களை உற்பத்தி செய்வது என்பது மிகவும் வியப்பை அளிக்க கூடியதாக தான் உள்ளது. 1980களில் இந்தியா இன்றையது போன்று gatt மற்றும் imf இடம் தலை வணங்கி நிற்கவில்லை. அன்றைய குறைந்த பட்ச சுய சார்புள்ள அரசியல் ,பொருளாதார சூழலில் இந்திரா மற்றும் வெங்கட் ராமன் அவர்களீன் முன் முயற்சியில் 20 ஆண்டுகளுக்கான ஏவுகணை திட்டம் வடிவமைக்க பட்டது. அதன் ஊடாக தான் அங்கினி , நாக் ….போன்ற பல்வேறு தேவைகளுக்கான பல்வேறு பட்ட ஏவுகணைகள் ஆய்வுகள் ,ஆராச்சிகள் மூலம் வடிவமைக்க பட்டன. அதன் இன்றைய நவீன ஏவுகணை ஒலியின் வேகத்தைவிட 7 மடங்கு வேகத்தில் பயணிக்கு பிரமாஸ் ஏவுகணையாகும் . அது இந்திய -ரஷ்ய கூட்டு முயற்சியாகும். லேட்டா தொடங்கினாலும் ,வந்தாலும் இந்தியா இன்று லேட்டஸ்ட்டான எவுகனையை சுயசார்புடன் உற்பத்தி செய்யும் நிலைக்கு வந்துடிச்சி

        //அவர்கள் கண்டுபிடித்த(LATE ஆக)காலகட்டத்தில்……………….

        • //பிரச்சனை தாமதமான கண்டுபிடிப்பு அல்ல// என்பது உண்மைதான்

          ஆனால்,VESTED INTEREST PEOPLES தாமதப்படுத்தியதுதான் வேதனைக்குறியது

      • அப்படின்னா ஸ்ரீ லங்கா கூட யஎவுகனை வைதிர்க்குமே , உங்களை போன்ற ஐந்து பைசாவுக்கு பிரயோஜனமில்லாதவர்கள் எல்லாம் அவருடைய உழைப்பை எள்ளி நகையாடுகிரீர்கள் .

        ___________

        • சண்முகம் அளவுக்கு மீறி பேசுகிறார்.
          இத்தனை அகங்காரம் ஆணவம் உடம்புக்கு ஆகாதுங்க. பார்த்துக்குங்க.

          சண்முகம், உங்கள் வாழ்நாள் முழுதும் கிழிப்பதற்கு உங்களுக்கு வாய்ப்புள்ளது.
          நீங்கள் கிழி கிழி என்று என்னத்தை கிழிக்கிறீர்கள் என்று பார்க்கலாம்.
          இதுவரை நீங்கள் கிழித்த கிழிப்பினால் எத்தனை குடும்பங்கள் இன்னலில் இருந்து விடுபட்டு ஆனந்த கண்ணீர் வடிக்கின்றன என்று கொஞ்சம் கிழியுங்கள், சரி, சொல்லுங்கள் சண்முகம்.

          • கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையையும் பனைமரத்தின் உச்சியில் பொருத்தப்பட்ட சிறு ராக்கெட் லாஞ்சருக்கும் வித்தியாசம் தெரியாதவர் எல்லாம் அப்துல் கலாம் பற்றி விமர்சிக்கிறார்கள். நேரக்கொடுமை.

            அது சரி, சண்முகம், நீங்கள் மக்களுக்கு செய்த மாபெரும் சேவைகளை (சாரி, கிழித்த கிழிப்புகளை) பட்டியலிட சொல்லி கேட்டேன். அதற்கு பதிலை காணோமே?

  19. மேலுள்ள என் கருத்தை திருக்குறள் பின் வருமாறு கூறுகின்றது :

    குணநாடிக் குற்றமு நாடி யவற்றுண்

    மிகைநாடி மிக்க கொளல்

    • எலியை எல்லாம் விரட்ட முடியாது தென்றல் . அது எங்கும் ,எப்போதும் ,வினவிலும் இருக்கும்

  20. சீனாவை பகை பாராட்டும் அரக்கன் என்றும் இந்தியா ஒரு அமைதி புறா என்றும் நம்பும் அப்பாவிகள் கவனத்திற்கு .

    இந்திய -சீன யுத்தத்தை October 9, 1962 அன்று துவக்கியது இந்தியாதான் என்பதும் சீனா October 20, 1962 அன்று கடும் எதிர்த்தாக்குதலை தொடுத்து இந்திய இராணுவத்தை விரட்டியடித்தது என்பதும் உங்களுக்கு தெரியுமா இந்த சுட்டிகளை படிச்சு பாத்துட்டு வாங்க.மேற்கொண்டு பேசுவோம்.

    http://www.rediff.com/news/slide-show/slide-show-1-how-pakistan-helped-india-during-1962-war-with-china-kuldip-nayar-book-excerpt/20120706.htm#1

    http://www.du.edu/korbel/jais/journal/volume1/volume1_abitbol.pdf

    சுட்டிகளில்ருந்து.

    On November 21, 1962 the PRC declared a unilateral ceasefire, and withdrew 20 km behind the line of actual control represented in Figure 1. Afterwards, no further military engagements ensued.

    வம்பு சண்டைக்கு போனவன் நல்லவனா.போரில் வெற்றி பெற்றுக் கொண்டிருக்கும்போதும் போரை தன்னிச்சையாக நிறுத்திவிட்டு பிடித்த பகுதிகளை விட்டு பின் வாங்கி சென்றவன் நல்லவனா.

    • Dear friend Tipu ,

      In past Both China and India have emotional, cultural and religious relations and affections together. A conflict in boundary line so called macmillan line , between China and India at north east and north west part of India and subsequently Nehru’s “…forward policy…” to clean up chines post and his order to fight against China with out preparation in Army crate a big failure in that war to India.

      But Thiru Mao leader of China predict India’s actions and his people Liberation Army PLA was well prepared for their self defence.

      I regret for my mistake of understanding wrongly about INdi-china war.

      But still my mind supports atomic bombs and missiles for our India’s self defence against USA.

    • அதாவது சீனா ரவுடி இந்தியாவில் குடிசை போட்டு விட்டது , நேரு அதை எடுக்கலாம் என்கிறார் . அனால் தைரியம் இல்லை. கொஞ்ச நாள் கழித்து ரவுடியிடம் நைசாக பேசி , அடிக்கரமாதிரி வாங்க , நான் போய்விடுகிறேன் என்று ரவுடி சொன்னதாக நேருவிடம் சொல்கிறார்கள் . பேட்டை ரவுடியை துரத்தி குடிசையை அகற்றி நல்ல பேர் வாங்கலாம் என்று ரவுடியின் வாக்குரிதிஅய் நம்பி சண்டைக்கு போகிறார்கள் . அடி வாங்கினார்கள் .

      இப்போது திப்பு , குடிசை அகற்ற சொல்லி முதலில் அடாவடித்தனம் செய்கிறது இந்தியா என்று ஒரே போடாக போட்டு விட்டார் . குடிசை போட்ட மாவோ நல்லவர் என்று ஏதோதோ புள்ளிவிவரம் கொடுக்கிறார் .

      இதில் யார் நல்லவர் கேட்டவர் எனபது கூட்டிற்கு எந்தப்பக்கம் வாழ்பவர் என்பதை பொருத்தது . அனால் திப்பு போன்றவர்கள் மனதளவில் இன்னமும் சீனாவிற்கு ஜல்லி அடிக்கிறார் . இது புதிது அல்ல . மாவி படையெடுத்து வந்த போதே, வரு வருக என்று போர்டு வைத்து காத்திருந்தார்கள் . இவர்களுக்கு கலாம் போன்றவர்கள் இந்தியாவிற்கு ஆயுதங்கள் தயாரிக்கும் தற்காப்பை சொலி கொடுத்தால் எரிச்சல் வரத்தான் செய்யும்

      • நேஹ்ருவின் forward policy என்னவென்று அறியாமல் வழமையான கம்யுனிச எதிர்ப்பு பல்லவியை பாடக்கூடாது. McMahon கோட்டுக்கு வடக்கால இருக்கும் சினாவில் மூன்னேரும் இராணுவ கொள்கையை வைத்துகொண்டு இந்திய இராணுவம் posting அடிக்கும் போது சீனா காரனும் அதே மாதிரி McMahon கோட்டுக்கு தெக்கால இந்தியாவுக்கு வந்து posting அடித்தான். பேசி தீக்க வேண்டிய எல்லை பிரச்சனையை கோவாவை போர்சிக்ளில் இருந்து மீட்டது போன்று சீனாவுக்கும் பதிலடி கொடுப்போம் என்று ஊதார் விட்டது ஆட்சியில் இருந்த காங்கிரஸ் பெருந்தலைகள் தான். oct 10,1962 ல் போர் என்று அறிக்கை விட்டது யாரு ? நேரு . சரி சண்டைக்கு தான் போனாங்க …. கூடவே தேவையான தளவாடங்களை ஆயத்தம் செய்யாம சண்டைக்கு வாங்க என்று சீனா காரனா , மாஒ வா wireless மெசேஜ் அனுப்பினாங்க ? அல்லது அப்படி வாங்க என்று இந்தியாவுடன் ஒப்பந்தம் தான் சீனா காரங்க போட்டங்களா ?

        பேசி தீக்க வேண்டிய எல்லை பிரச்னையை சண்டையா மாற்றி அதிலும் தோல்வி அடைந்த காங்கிரஸ் காரனுக்கு துளிகூட வெக்கம் இல்லை [வெக்கம் இருந்தா நேரு பதவி விலகி இருக்க வேண்டுமே ?] ஆனா அவுசாசி தனமா எதுக்கு கம்முநிச்டுகளை குறை செல்லனும் இராமன் நீங்க?

      • அடுத்தவன் இடத்துல குடிசை போடுறது ரவுடித்தனம்தான்.யாருக்கும் மறுப்பிருக்காது.ஆனால் அந்த காலித்தனத்தை செய்த ரவுடி சீனாவல்ல.அமைதிபுர்ர்றா இந்தியாதான்.நேருவின் Forward Policy பற்றி தேடி படித்து பார்க்கவும்.

        இந்த கொள்கையின்படி இந்தியா தனது எல்லை என சொல்லும் மக்மோகன் கோட்டையும் தாண்டிச்சென்று அதாவது கோட்டின் வடபகுதியில் பல காவல் சாவடிகளை அமைத்தது.இந்த அத்துமீறலுக்கு தனது எதிர்ப்பை காட்டும் வண்ணம் சீனா அந்த சாவடிகளில் ஒன்றான தோலா சாவடியை September

        8,1962 அன்று தாக்கியது.உடனே ”throw back’ the aggressors”.என்று இந்திய

        இராணுவத்துக்கு உத்தவிட்டார் நேரு.போர் வெடித்தது.மீதி வரலாறு ஆனது.

        இதற்கு முன்னரும் ரோந்து

        குழுக்களிடையும் இது போன்ற மோதல்கள் நடந்துள்ளன.இதுவரை

        [locally ] உள்ளூர் அளவில் நடந்து வந்த மோதல்களை முழு அளவிலான

        போராக மாற்றியது நேருவின் உத்தரவு.

        பி.கு.விவாதிக்க வருவதாக இருந்தால் பேசு பொருள் பற்றி கொஞ்சமாவது

        விவரம் தெரிந்து கொண்டு வரணும்.ஏடாகூடமா வாயை கொடுத்து மூக்கை

        உடச்சுக்க கூடாது.

        • வரலாற்றில் உங்களுக்கு வசதியாக பாதி சொன்னால் எப்படி ?

          மேற்கே அக்சாய் சின் இல் சீனா படலை தள்ளி வைத்து விட்டது .
          கிழக்கே பதிலுக்கு நேரு காலியாக இருந்த இடத்தில படலை தள்ளி வச்சு வீரத்தை காட்டினாரு.

          என்ன பண்ண சொல்றீங்க ? உலகம் முழுவதும் நேர்மையாக இருப்பது போலவும் , இந்தியா தவறிவிட்டது எனபது போலவும் அல்லவா பேசுறீங்க ?

          போர் நடந்து அடி வாங்கியது தவறில்லை . தன்னிலை அறிதல் என்பதற்கு அது முக்கியம். இல்லை என்றால் சீனாவை நண்பனாக கருதி இந்தியா செய்து வந்த முட்டாள்தனங்கள் நின்று இருக்காது .

          அமெரிக்காவை ஏகாதிபத்தியம் சொல்றவங்க , திபெத் பத்தி பேசும் பொது , மதவாதிகளிடம் இருந்து சீனா விடுதலை அளித்தது அப்படி மாதி பேசுவீங்க

        • திப்பு,

          Forward Policy பற்றி சொன்னீர்கள். சரி. அந்த முடிவை ஏன் எடுக்க நேரிட்டது என்று அதே வரலாற்றை சற்று பின்னோக்கி பாருங்கள். மக்மோகன் கோடு தான் இந்திய சீன எல்லைக்கோடு என்று தெரிந்தும் கோட்டுக்கு தெற்கே முதலில் ஆக்கிரமித்தது யார்?

          இந்தியா சீனா போரில் இந்தியா தோற்றது. மறுக்கவில்லை. ஆனால் வென்றவன் பக்கம் தான் நியாயம் உள்ளது என்று அர்த்தம் இல்லையே.

          1956 இல் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் எந்த எல்லைப்பிரச்சினையும் இல்லை என்று கூறிக்கொண்டே சீன அதிபர் சோவ் என்லாய் நமது எல்லைக்குள் சாலை அமைத்தது ஏனோ?

          அப்புறம் என்ன சொன்னீர்கள், வியட்நாம் சீனா இடையில் இந்தியா மூக்கை நுழைக்கிறதா?
          அப்போது இந்தியா பாகிஸ்தானுக்கு இடையில் சீனா என்ன செய்து கொண்டிருக்கிறது என்று நினைத்து கொண்டிருக்கிறீர்கள்? இன்று வரையிலும் பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் சப்ளை நடந்து கொண்டு தான் இருக்கிறது.

          ஆனாலும் திப்பு, இது உலகமகா சொம்பு!!!
          சொந்த நாட்டுக்கு எதிராக அந்நிய நாட்டு ஆக்கிரமிப்பை ஆதரிக்கும் நீங்கள் எல்லாம் ஏன் திப்பு சுல்தான் பெயரை வைத்திருக்கிறீர்கள். நாட்டை காட்டிக்கொடுக்கும் வேலைக்கு திப்பு பெயர் தேவை தானா?

          நீங்கள் போற்றும் ரசியாவே இந்திய-சீன பிரச்சினையில் இந்தியாவின் பக்கம் நியாயம் உள்ளது என்று சொல்கிறதே. மறந்து விட்டீர்களா…

          • நேருவின் முட்டாள் தனமான, சினாவுடனான போர் பிரகடனத்துக்கு ஆதரவு கொடுக்கும் நிலைக்கு வந்து உள்ளீர்கள் கற்றது. மக்மோகன் எல்லை கோடு பற்றிய சிக்கலை தீர்க்க பேச்சு வார்த்தை நடத்தாமல் பெரும் சண்டைக்கு சென்றதே நேரு தான்.

            • நேரு செய்த முதல் தவறு இந்தி-சீனி பாய் பாய் என்று சீனாவை கண்ணை மூடிக்கொண்டு நம்பியது. அவர் செய்த இரண்டாம் தவறு, சீனாவின் தில்லுமுல்லுகள் தெரிய வந்த பின் அதனை பக்குவமாக கையாளாமல் நம் இராணுவத்தை சரியானபடி பலப்படுத்தாமல் போரில் ஈடுபட்டது.

              நேருவின் வியூகங்களில் தவரிருப்பதாலேயே சீனா தவறே செய்யவில்லை என்று ஒரே போடாக திப்புவை (அந்நிய நாட்டுக்காரனுக்கு எதிராக போராடிய திப்பு சுல்தான் பெயரை இவருக்கு ஏன் தான் வைத்தார்களோ…) போல நீங்களும் எட்டப்பன் ஆகாதீர்கள் எலி.

              சீனாவுடன் இந்தியாவுக்கு மட்டும் தான் எல்லை பிரச்சினை உள்ளது, மற்ற நாடுகள் அனைத்துடனும் சீனா மிகுந்த நட்புறவுடன் எந்த எல்லை பிரச்சினையும் இல்லாமல் உள்ளது என்று ஒரே போடாக திப்பு சொன்னதற்கு எதிராக சீனாவுடன் எந்தெந்த நாடுகளுடன் எந்தெந்த நிலப்பகுதிகளில், கடற்பகுதிகளில் எல்லை பிரச்சினை உள்ளது என்று தெளிவாக குறிப்பிட்டிருக்கிறேன். இது வரை அதற்கு பதிலை காணோம் நம் எட்டப்ப நண்பரிடம் இருந்து.

              • இதில் யார் எட்டப்பர்? கற்றது கையளவு போன்ற ஒரு பச்சையான எட்டப்பரை ஆர் எஸ் எஸ் பிஜேபியில் பார்க்கலாம். இங்கு தேசபக்தி என்று ஊளைச்சவுண்டு விட்டுவிட்டு சீனா பெய்ஜிங்கில் பிசினஸ் பார்க்கப்போனவர் தான் இந்த கற்றது கையளவு. எதிரிவீட்டில் கைநனைத்துவிட்டு இங்கே வந்து தேசவெறிக்கூச்சல் போடுகிற அயோக்கியரும் எட்டப்பரையும் வேறு எங்காவது கண்டதுண்டா?

                ஏன் இல்லை? இதே க.கையைப் போன்று தான் உழைக்கும் மக்களிடம் தேசிய வெறியைக் கிளப்பிவிட்டு சீனாவுடன் கார்ப்பரேட் ஒப்பந்தம் போட்டார் விபச்சாரி மோடி. நிதின் கட் காரிக்கோ பாகிஸ்தானில் பூண்டு சர்க்கரை வியாபாரம் ஓகோ வென்று ஓடிக்கொண்டிருக்கிறது. கடைசியில் வெறிவிலங்காக மாற்றப்பட்டவர்கள் ஜோசப்பு, இதில் திப்பு எட்டப்பர்; ஐயா கற்றது கையளவுப் பெய்ஜிங்கிற்கு பொறுக்கித் தின்னப்போனீர்களே அந்த வரலாற்றை மக்களுக்கு விளக்குவீரா? எட்டபர் என்று நாகூசாமல் கூறுகிறீரே! உமது உடம்பில் ஓடும் சந்தர்ப்பவாத சாக்கடையின் வீச்சம் உமக்குத் தெரிகிறதா? இப்பொழுது தெரிகிறதா உம்மைப்போன்றவர்கள் தான் நாட்டிலே மதக்கலவரங்கள் உருவாவதற்கு மூலகாரணிகள் என்று!

                • இது என்ன பிதற்றலாக இருக்கிறது. இந்தியாவில் பிறந்தவன் வெளிநாட்டுக்கு பணி நிமித்தமாக செல்லவே கூடாதா? சீனா மட்டும் அல்ல நண்பரே, உலகம் முழுதும் சுற்றிக்கொண்டு தான் இருக்கிறேன். அதற்காக அடுத்த நாட்டு இராணுவம் என் நாட்டுக்குள் நுழைவதை கை தட்டி வரவேற்கும் திப்பு போன்ற எட்டப்ப வேலை செய்யவில்லை.

                  உங்கள் கம்மி நண்பர்கள் ரசியாவுக்கும் சீனாவுக்கும் சென்றதே இல்லையா.

                  பணி நிமித்தமாக சென்றேன். பொறுக்கித்தின்ன போகவில்லை. உட்கார்ந்து ஓசி சாப்பாடு சாப்பிடவில்லை. நானாவது என் ஒவ்வொரு பருக்கை உணவுக்கும் என் உழைப்பில், என் சம்பாத்தியத்தில் வாங்கி சாப்பிடுகிறேன். தாங்கள் எப்படியோ?

                  கோபம் வருகையில் தென்றல் உளற ஆரம்பித்து விடுவார். மதிமயங்கி பொருக்கி, சாக்கடை விபச்சாரி என்று பேச ஆரம்பித்து விடுவார், அப்போதே நமக்கு தெரிந்து விடும், அண்ணனுக்கு வாதம் செய்ய சரக்கு தீர்ந்து விட்டது, இனி சாக்கடை மட்டும் தான் அவர் வாயில் இருந்து வெளிவரும் என்று. நீங்க நடத்துங்க தென்றல், நானும் பல விவாதங்களில் பார்த்துக்கொண்டு தானே இருக்கிறேன்.

                  அது சரி, நீங்க அப்போ உங்கள் எதிரியாக நினைக்கும் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட, அமெரிக்க உதவியுடன் தயாரிக்கப்பட்ட எந்த ஒரு பொருளையும் தொட மாட்டீர்கள் என்று அர்த்தம் கொள்ளலாமா? சும்மா, கேட்டு தெரிஞ்சுக்கலாம்னு தான்.

                  நீங்கள் பயன்படுத்தும் கணினி, செல்பேசி அனைத்தும் நூறு சதம் இந்தியாவில் இருந்தே செய்யப்பட்டதா?

                  • விவாதங்கள் தறிகெட்டு ,முறையற்று ,தனிநபர் தாக்குதலோடு சென்று கொண்டு உள்ளதால் தற்சமையம் நான் விவாதத்தில் இருந்து விலகிக்கொள்கிறேன் . எலி~~~~~~ எக்ஸ்கேப் !

                  • \\அடுத்த நாட்டு இராணுவம் என் நாட்டுக்குள் நுழைவதை கை தட்டி வரவேற்கும் திப்பு //

                    இது அபாண்டமான புளுகு.சீனாவுடன் வம்பு சண்டைக்கு போன நேருவின் கொள்கைகளை கண்டித்திருக்கிறேன்.போரில் வெற்றி பெற்றுக் கொண்டிருந்த நிலையிலும் சீனா தன் முனைப்பாக போர் நிறுத்தம் அறிவித்து கைப்பற்றிய பகுதிகளிலிருந்து படைகளை விலக்கி கொண்டதை பாராட்டி இருக்கிறேன்.இதில் அந்நிய இராணுவம் நுழைவதற்கு எங்கே வரவேற்பு உள்ளது.

                    எழுதிய பின்னூட்டங்கள் கண் முன்னால் உள்ளன.க.கை.க்கு அறிவு நாணயம் இருந்தால் அவர் சொன்ன சொல்லுக்கு பொறுப்பேற்கும் யோக்கியராக இருந்தால் அந்நிய இராணுவம் நுழைவதை நான் வரவேற்பதாக நான் எழுதியிருப்பதாக எடுத்துக்காட்ட வேண்டும்.

                    \\இந்தியாவில் பிறந்தவன் வெளிநாட்டுக்கு பணி நிமித்தமாக செல்லவே கூடாதா? //

                    தாராளமாக செல்லலாம்.அங்கு போய் என்ன செய்கிறான் என்பதை பொறுத்து விமரிக்கப்படுகிறான் அல்லது பாராட்டப்படுகிறான்.வளைகுடா நாட்டு பாலைவனங்களிலும் மேலை நாடுகளின் விறைக்க வைக்கும் குளிரிலும் உழைத்து பொருளீட்டி இந்தியாவுக்கு அன்னிய செலாவணியை அனுப்பும் மக்கள் பாராட்டுக்கும் நன்றிக்கும் உரியவர்கள்.

                    ஆனால் இந்திய மக்களின் வாழ்வை சூறையாடி கொள்ளையிடும் சீனனுக்கு கைக்கூலி வேலைபார்க்கும் க.கை.வை விமரிசித்துதான் ஆக வேண்டும்.தென்றல் நன்றாக சொன்னார்.காவி கும்பல் ஒரு பக்கம் ஆக்ரோசமாக பாக்.எதிர்ப்பு பேசிக்கொண்டே அந்த நாட்டோட சர்க்கரை,பூண்டு,வெங்காயம் வணிகம் பண்ணுறாங்க.அதே போலத்தான் சீனாக்காரனுக்கு எம் நாட்டை கொள்ளையடிக்க காட்டிக்கொடுக்கும் க,கை,இங்கு சீன எதிர்ப்பு சவடால் அடிக்கிறார்.எட்டப்பன் கூட பிரிட்டிசார் உடன் வெளிப்படையாக கூட்டு சேர்ந்து கட்டபொம்மனை காட்டிக்கொடுத்தான்.க,கையோ சீனாவை எதிர்ப்பது போல் பம்மாத்து காட்டுகிறார்.எதார்த்தத்தில் சீனாக்காரன் எம் நாட்டை கொள்ளையிட துணையாய் இருந்து அதில் பொறுக்கித்தின்று வயிறு வளர்க்கிறார்.ஒரிஜினல் எட்டப்பன் உயிரோடு இருந்து க,கையை பார்த்தால் நிச்சயம் பொறாமை படுவான்.அட ஒரு பக்கம் தேச பக்தி வேடம் போட்டுக்கிட்டே உள்ளுக்குள்ள துரோகம் செய்யும் வித்தை நமக்கு தெரியாமல் போய் விட்டதே என்று.

                    எட்டப்பனை காட்டிலும் கேடு கெட்ட எட்டப்பன் இந்த க,கை.

                    • சீனாவுக்கு போனால் சீனனுக்கு கைக்கூலி என்று அர்த்தமா?
                      என் வேலையினால் எந்த ஒரு இந்தியனின் வாழ்வும் பறிபோகவில்லை, எந்த ஒரு சீனனின் வாழ்வும் பறிபோகவில்லை. அது சரி, தங்கள் வருமானத்திற்கு என்ன செய்கிறீர்கள்? யாரிடம் இருந்து உங்கள் வருமானத்தை பெறுகிறீர்கள் _______?

                    • \\சீனாவுக்கு போனால் சீனனுக்கு கைக்கூலி என்று அர்த்தமா?//

                      இல்லை.சீனாவுக்கு போவதால் மட்டும் ஒரு மனிதன் கைக்கூலி ஆகி விட மாட்டான்.அங்கு போய் என்ன செய்கிறான் என்பதை வைத்துத்தான் அதை முடிவு பண்ண வேண்டும்.

                      \\என் வேலையினால் எந்த ஒரு இந்தியனின் வாழ்வும் பறிபோகவில்லை,//

                      அதை கண்ணாடியை பார்த்துக்கொண்டு நீங்களாக சொல்லிக்கொள்ளலாம்.நம்புவதற்கு ஒரு ஆள் கிடைக்கும்.சீன ஏகாதிபத்தியத்துடன் கை கோர்த்துக்கொண்டு கைக்கூலிகள் எப்படி இந்திய மக்களை கொள்ளையிடுகிறார்கள் என்று பின்னூட்டம் எண்.22.2.4.2.1.1.1 சொல்லியிருக்கிறேன்.மேலும் சுட்டியாக கொடுத்துள்ள பழைய பின்னூட்டத்திலும் சீனப்பொருட்களால் இந்திய மக்கள் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள் என்பதை சொல்லியிருக்கிறேன்.சுட்டி.

                      https://www.vinavu.com/2015/02/02/north-indian-workers-as-modern-bonded-labour-in-ranipet/#comment-392338

                      இவை யாதொன்றுக்கும் எந்தவொரு பதிலும் சொல்ல முடியாமல் ”என்னால் எந்த ஒரு இந்தியனின் வாழ்வும் பறிபோகவில்லை”என்று பினாத்துறீங்க.பதில் இல்லன்னா சும்மா இருங்க.இப்படி பெனாத்தாதீங்க.பாக்குற எங்களுக்கே பாவமா இருக்கு.

                    • திப்ப அவர்களின் பின்னூட்டம் 22.2.2.2.1.1.1.1.2.2 க்கு பதில் இங்கே.

                      சீனாவுக்கு செல்வது சீனனின் பொருட்களை இங்கு விற்கத்தான் என்று நீங்கள் தவறாக நினைத்துக்கொண்டால் அதற்கு நான் பொறுப்பாக முடியாது.

                      சீனாவில் விற்பனை செய்தால் அதனால் இந்தியாவுக்கு என்ன பாதிப்பு வந்து விட போகிறது?

                      வெளிநாட்டிலிருந்து எந்த பொருளும் இறக்குமதி செய்யக்கூடாது.
                      உள்நாட்டிலிருந்தும் எந்த பொருளும் வெளிநாடு போகக்கூடாது.
                      வெளிநாட்டவர் இங்கே வரக்கூடாது.
                      இங்கே இருப்பவர்கள் வெளிநாடு போகக்கூடாது.
                      அடுத்து என்ன செய்யலாம் திப்பு,

                      அது சரி, பொத்தாம் பொதுவாக உழைக்கிறேன், இந்தியர்கள் காசு தருகிறார்கள் என்கிறீர்கள்? அப்படி என்ன உழைக்கிறீர்கள்?

              • அவசரப்பட வேண்டாம்.க,கை,உங்கள் பின்னூட்டம் நேற்று இரவு 11 மணி வரை பிரசுரமாகவில்லை.இன்றுதான் வெளியாகியுள்ளது.நேரம் கிடைப்பதை பொறுத்து பதிலளிக்கிறேன்.அதற்குள் எட்டப்பன் என ஏகடியம் தேவையில்லை.இதற்கு பதில் எழுதாமல் வேறு பின்னூட்டம் போட்டிருந்தால் பதிலில்லை என முடிவு செய்திருக்கலாம்.நீங்களாகவே நாம பெரிய அப்பாடக்கர் ,நம்ம கம்பு சுத்துனா எவனும் கிட்ட நிக்க முடியாதுன்னு ஆடாதீங்க.மத்தவாளுக்கு ஆணவம் கூடாதுன்னு அறிவுரை சொல்றீங்க.நீங்களே இவ்வளவு ஆடுறீங்களே.

          • க.கை.
            முதலில் ஒன்றை மனதில் வையுங்கள்.நாம் இணையத்தில் கிடைக்கும் விவரங்களை வைத்துத்தான் விவாதிக்கிறோம்.இது ஒரு கருத்துப்பரிமாற்றம்.ராமனுக்கு எழுதிய பின்னூட்டம் ஒன்றில் தவறு இருந்தால் சுட்டிக்காட்டலாம் என்று சொல்லியிருக்கிறேன்.தவறு இருந்தால் திருத்திக்கொள்ள அணியமாயிருக்கிறேன் என்பது அதன் பொருள்.

            நான் படித்த ஒரு கட்டுரையின் சுட்டி.

            http://www.globalsecurity.org/military/world/war/india-china_conflicts.htm

            சுட்டியிலிருந்து ஒரு சொற்றொடர்.

            The Sino-India border remains the only major territorial dispute, other than South China Sea disputes, that China has not resolved.

            இதில் உள்ள major என்ற சொல்லை ஊன்றிக்கவனிக்காததால் சீனாவுக்கு இந்தியா,தென்சீன கடல் தவிர்த்து வேறு எல்லை பிரச்னை இல்லை என்று சொல்லி விட்டேன்.கவனக்குறைவால் விளைந்த தவறு.அதற்கு சுய விமரிசனம் ஏற்கிறேன்.இது ஒரு விவரப்பிழை.அவ்வளவுதான்.இதனால் நாம் விவாதித்து கொண்டிருக்கும் பொருளான இந்திய சீன போரில் இந்தியாவின் பக்கம் நியாயம் உள்ளது என்றாகி விடாது.

            அடுத்து உங்கள் அவதூறு.எட்டப்பன்.யார் எட்டப்பன் யார் மக்கள் துரோகி பார்க்கலாமா.

            ஏதோ இப்போதும் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் சண்டை நடப்பது போலவும் இந்திய ராணுவ ரகசியங்களை நான் சீனாவுக்கு கடத்துவது போலவும் அபாண்டமாக பேசுகிறீர்கள்.அது சரி,உருப்படியாக எதிர்வாதம் வைக்க முடியாத கையாலாகாத்தனம் உங்களை இப்படி பேச வைக்கிறது.ஆம்.இந்திய சீன போரில் இந்தியாவின் பக்கம் நியாயம் இல்லை என்று ஆதாரங்களோடு சொல்கிறேன்.ஆதாரங்களை மறுக்க முடியாமல் அவதூறு சொல்லி வாயடைக்க பார்க்கிறீர்கள்.

            சொந்த நாட்டின் தவறுகளை எடுத்து சொன்னால் அது எட்டப்பன் வேலையாகாது.நேரு காலம் முதல் இன்றளவும் இந்தியாவின் ராணுவ,வெளியுறவு கொள்கையில்,எல்லைப்பிரச்னையை அணுகும் முறைகளில் எந்த மாற்றமும் இல்லை.ஆட்சியாளர்களின் தவறான கொள்கைகளுக்கு எதிராக மக்களின் கருத்தை திரட்டுவதுதான் நாட்டையும் மக்களையும் நேசிப்பவர்களுக்கு கடமை.அதைத்தான் நான் செய்கிறேன்.உங்களைப்போன்ற ஆளும் வர்க்கத்தின் அல்லக்கைகள் ஆளும் கும்பலின் அடாவடிகளுக்கு ஒத்தூதிக் கொண்டு திரிகிறீர்கள்.ஏனென்றால் அதுதான் உங்களுக்கு பொறுக்கி தின்ன வசதியாக இருக்கிறது.[நீங்கள் எப்படிப்பட்ட பொறுக்கித்தின்னிகள் என்பதை கடைசியாக சொல்கிறேன்].

            ஆயுதப்போட்டி வேண்டாம்,அணுகுண்டுகளில் காசை பாழாக்காமல் நாட்டு முன்னேற்றத்துக்கு செலவிட வேண்டும்,எல்லை பிரச்னைகளை சுமுகமாக தீர்த்து நாட்டு மக்களுக்கு அமைதியான வாழ்வை உத்தரவாதப்படுத்த வேண்டும் என்று சொல்பவன் துரோகியா. இல்லை.இல்லவே இல்லை.அணுகுண்டு, ஏவுகணை,எல்லையில் பதட்டத்தை கொண்டு வரும் கொள்கை என அயோக்கியத்தனங்களை ஆதரிக்கும் போர்வெறி கொண்டலையும் நீங்கள்தான் உண்மையில் மக்களுக்கு துரோகம் செய்யும் துரோகிகள்.

            \\மக்மோகன் கோடு தான் இந்திய சீன எல்லைக்கோடு என்று தெரிந்தும்//

            இப்படி ஒரு முட்டாளாக இருப்பீர்கள் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை.மக்மோகன் கோட்டை எல்லை என சீனா ஒரு போதும் ஏற்றதில்லை.சீனாவை பொறுத்தவரை அது சர்ச்சைக்குரிய பகுதி.மக்மோகன் கோட்டுக்கு தெற்கேயும் அது உரிமை கோரும் பகுதிகள் உள்ளன.ஆனால் இந்தியா மக்மோகன் கோட்டை எல்லை என சொல்கிறது.அதன்படி மக்மோகன் கோட்டுக்கு வடக்கே உள்ள பகுதிகள் இந்தியா உரிமை கோருபவை அல்ல.ஆனாலும் மக்மோகன் கோட்டுக்கு வடக்கே ராணுவ சாவடிகளை அமைப்பது ஆத்திரமூட்டி சண்டைக்கு இழுக்கும் செயல் இல்லையா.இதை சொன்னால் ஆத்திரத்தில் அறிவை இழந்து துரோகி என பட்டம் தர்றீங்க.

            தொடரும்.

            • திப்பு அவர்களே,

              தற்போது பிலிப்பைன்ஸ் நாட்டில் தான் உள்ளேன். அங்கு இருக்கும் மக்களிடம் தங்களது கடல் எல்லைக்குள் வம்புக்கு ஒரு செயற்கை தீவை உருவாக்கி அங்கு தங்களது கடற்படை தளம் அமைத்த சீனாவை எதிர்த்து அவர்கள் அனைவரும் கொந்தளிக்கின்றனர். வலியவன் சீனா என்ன வேண்டுமானாலும் செய்தால் அதை நாம் பொறுத்துக்கொள்ள வேண்டுமா என்று அவர்கள் குமுறுகிறார்கள். இது உங்கள் மொழியில் மைனரா, இல்லை மேஜரா?

              சொந்த நாட்டின் தவறுகளை சுட்டிக்காட்டுவது தவறில்லை. நானு தான் நேரு செய்த தவற்றை இந்த கட்டுரையின் வேறொரு பின்னூட்டத்தில் சொல்லி இருக்கிறேன். ஆனால் சொந்த நாட்டின் எல்லைக்குள் அந்நிய நாடு ஆக்கிரமித்ததை ஒரு போதும் நான் ஆதரித்ததில்லை. அதை நீங்கள் ஆதரிக்கிறீர்கள். வித்தியாசம் உள்ளது.

              //சீனாவுக்கு பதினான்கு நாடுகளுடன் எல்லை உள்ளது, தனது அத்தனை அண்டைநாடுகளுடனும் எல்லையை வரையறுத்துக் கொண்டுவிட்டது மக்கள் சீனம்.அவர்களுக்கு எல்லை பிரச்னை உள்ள ஒரே நாடு இந்தியாதான்.இதன்னியில் தெற்கு சீன கடல் பகுதியில் வியட்நாமுடன் பிரச்னை உள்ளது.//
              இந்தியா, வியட்நாமுடன் மட்டும் தான் சீனாவுக்கு பிரச்சினை, அதிலும் முதல் வரியில் சீனாவுடன் எல்லை பிரச்சினை இருக்கும் ஒரே நாடு இந்தியா தான் என்று கூறிவிட்டு போகிற போக்கில், ஆமாம் வியட்நாமுடனும் பிரச்சினை உள்ளது என்று போட்டு விட்டு போகிறீர்கள். பிலிப்பைன்ஸ் பிரச்சினையை பற்றி தொடவே இல்லை. மற்ற நாடுகளோடு சீனாவுக்கு இருக்கும் பிரச்சினைகள் அனைத்தையும் தெளிவாக பட்டியலிட்ட பின், மேஜர் பிரச்சினை, மைனர் பிரச்சினை என்ற டெக்னிகல் சந்து பொந்துக்குள், இண்டு இடுக்கிற்குள் ஒளிந்து கொள்கிறீர்கள். இதிலிருந்தே தெரிகிறது உங்களின் நேர்மை எந்த அளவில் உள்ளது என்று.

              மேலும் தங்களுக்கு ஆக்கபூர்வமாக விவாதிக்க சரக்கு தீரும்போது இத்தகைய “பொருக்கி தின்னி” போன்ற அவதூறு வார்த்தைகள் உங்களிடம் இருந்து வருகிறது. 22.2.4.2.1.1 இல் இவ்வாறு அவதூறு பரப்புபவர்கள் அனைவருக்கும் பொதுவான ஒரு பதிலை அளித்திருக்கிறேன். படித்து கொள்ளுங்கள்.

              • \\ அந்நிய நாடு ஆக்கிரமித்ததை ஒரு போதும் நான் ஆதரித்ததில்லை. அதை நீங்கள் ஆதரிக்கிறீர்கள்//

                மீண்டும் மீண்டும் அவதூறாக புளுகுகிறீர்கள்.இந்திய-சீன போரில் இந்தியாதான் சீன பகுதியில் ஆக்கிரமித்து போருக்கு வித்திட்டதென்றுதான் சொல்லியிருக்கிறேன்.சீனா ஆக்கிரமிப்பு செய்து போருக்கு வித்திடவில்லை என்றுதான் சொல்லியிருக்கிறேன்.கைப்பற்றிய பகுதிகளை கூட சீனா விட்டுகொடுத்து விலகி சென்றது என ஆதாரத்தோடு சொல்லியிருக்கிறேன்.ஆனாலும் சீன ஆக்கிரமிப்பை நான் ஆதரிப்பதாக மீண்டும் மீண்டும் பொய் சொல்கிறீர்கள்.பின்னூட்டங்கள் கண் முன்னால் உள்ளன.பொய் சொல்வதற்கு கொஞ்சமாவது வெட்கப்படுங்கள்.

                \\தங்களுக்கு ஆக்கபூர்வமாக விவாதிக்க சரக்கு தீரும்போது //

                உங்களிடம்தான் சரக்கு இல்லை.அதை உணர்ந்து கொள்ளும் நேர்மையும் இல்லை.பாருங்கள் நீங்கள் பதில் சொல்கிறீர்களே எனது பின்னூட்டம்.அதில் மக்மோகன் கோடு பற்றியும் அதற்கு வடக்கே ராணுவ சாவடிகளை அமைத்து ஆத்திரமூட்டி சண்டைக்கு இழுத்தது பற்றி ஒன்றுமே சொல்லாமல் கள்ள மவுனம் சாதிக்குறீங்க.

                • பாதியில் இருந்து வரலாற்றை படித்தாலும், கம்மியு புத்தகங்களை மட்டும் படித்து வளர்ந்தாலும் இப்படி தான் பதிவிட தோன்றும் நண்பரே.

                  நான் கேட்டது என்ன, நேரு ராணுவ சாவடி அமைத்தது தவறு என்றால் அதற்கு முன் சீனா செய்த அடாவடி செயலை என்னவென்று சொல்வீர்கள்? சீனா வம்புக்கு வந்ததால் தான் நேரு FORWARD POLICY மேற்கொண்டார். அது சரியான பாதை அல்ல. அதை நானும் ஒத்துக்கொள்கிறேன். நேரு இந்த விடயத்தை இன்னும் சரியாக அணுகி இருக்கலாம் என்பதே என் கருத்தும். அதே சமயம் நேருவின் கோபத்துக்கு காரணமான சீன அடாவடித்தனத்தை கள்ளத்தனமாக மறைத்து பாதியில் இருந்து வரலாற்றை பேசுகிறீர்கள் தென்றல். அது சரியல்ல.

                  • மன்னிக்கவும், மேற்கண்ட பின்னூட்டம் 22.2.2.2.2.1.1.1 திப்பு அவர்களுக்கு அளித்த பதிலில் தென்றல் அவர்களின் பெயரை எழுதி விட்டேன். அதை மாற்றி திப்பு என்று படித்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

                  • \\நான் கேட்டது என்ன, நேரு ராணுவ சாவடி அமைத்தது தவறு என்றால் அதற்கு முன் சீனா செய்த அடாவடி செயலை என்னவென்று சொல்வீர்கள்? //

                    அது என்ன அடாவடி செயல்னு சொல்றீங்களா.

                    இதுக்கு முன்னால நீங்க கேட்டது இது.

                    \\Forward Policy பற்றி சொன்னீர்கள். சரி. அந்த முடிவை ஏன் எடுக்க நேரிட்டது என்று அதே வரலாற்றை சற்று பின்னோக்கி பாருங்கள். மக்மோகன் கோடு தான் இந்திய சீன எல்லைக்கோடு என்று தெரிந்தும் கோட்டுக்கு தெற்கே முதலில் ஆக்கிரமித்தது யார்?//

                    மக்மோகன் கோட்டுக்கு தெற்கே சீனா என்ன அடாவடி செய்ததுன்னு கொஞ்சம் ஆதாரத்தோட சொல்றீங்களா.Forward Policy முடிவை ஏன் எடுக்க நேரிட்டது என்று நீங்களே சொல்லுங்களேன்.வாதம்னு வந்தா நாமதான் ஆதாரங்களை கொடுக்கணும்.எனக்கான ஆதாரங்களை,வாதங்களை நீயே வரலாற்றை பின்னோக்கி பாத்துக்கன்னு சொல்றது சரி கிடையாது.

                    ”அடிச்சுக்கூட கேப்பாக,அப்பையும் சொல்லிராதீய,எதையுமே சொல்லிராதீய,”என்ற வடிவேலு நகைச்சுவையை போல சீனாக்காரன் அடாவடி,சீனாக்காரன் ஆக்ரமிப்புன்னு திரும்ப திரும்ப சொல்றீங்களே தவிர அது என்ன ஏதுன்னு சொல்ல மாட்டேன்றீங்க.கொஞ்சம் விளக்குறீங்களா மேற்கொண்டு பேசலாம்.

                    • அக்சாய் சீன் பகுதி இந்தியாவுக்கு சொந்தமான பகுதி. இதில் மறுபேச்சுக்கே இடமில்லை. அது சீனனுக்கு தான் சொந்தம் என்று நீங்கள் சொல்கிறீர்கள்.
                      அப்படியென்றால் 1917 முதல் 1933 வரையிலான சீன அரசின் போஸ்டல் அட்லஸ் அப் சீனாவில் அக்சாய் சீன் பகுதியை இந்தியாவுக்குள் இருக்கிறதென்று ஏன் குறிப்பிட்டுள்ளார்கள்? 1925 பீகிங் பல்கலைகழக அட்லாஸ் இல் அக்சாய் சீன் பகுதி ஏன் இந்தியாவில் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது?

                      அக்சாய் சீன் பகுதியில் சீனா ரோடு போட்டதை பெருமையாக சொல்கிறீர்களே, அடுத்தவன் நாட்டுக்குள் ரோடு போடுவது தான் உங்கள் மொழியில் அடாவடி இல்லை என்கிறீர்களா? அக்சாய் சீன் பகுதியை அடைவதற்கு இந்தியா காரகோரம் மலையின் கடுமையான பகுதியை தாண்டி செல்ல வேண்டும். அதே சமயம் சீனாவுக்கு அக்சாய் சீன் பகுதியை அடைவதற்கு எளிதான வழி உண்டு. பக்கத்து நாட்டுக்குள் செல்வதற்கு வழி எளிதில் இருந்தால் ஆட்டையை போட்டுவிடலாமா திப்பு? என்ன லாஜிக் இது?

                      கார்கில் போரில் பாகிஸ்தானை பின்வாங்கச்செய்ய மோடி மூலமாக அமெரிக்காவுக்கு தகவல் சென்று அமேரிக்கா பாகிஸ்தானை வற்புறுத்தி பின்வாங்க செய்ததாக கூறுகிறீர்கள்? முதலில் இந்த செய்தி எந்த அளவுக்கு உண்மை என்று யாருக்கும் தெரியாது. உண்மையே என்று வைத்து கொண்டாலும் அதனால் என்ன நண்பரே? நீண்ட போர் என்று மூண்டால் இருபக்கமும் பெரும் நட்டம் உண்டாகும். அதற்கு டிப்லோமாடிக் வகையில் நாடுகள் போரை தவிர்க்க முயல்வதில் தவறிருப்பதாக எனக்கு தெரியவில்லை. மற்றொன்று, அணு ஆயுதம் இருப்பதால் தற்போது இரு நாடுகளும் முழு அளவு போர் செய்வதற்கு தயங்கவே செய்யும். ஹிரோஷிமா நாகசாகிக்கு பின்னர் எத்தனை நாடுகள் அணுகுண்டுகளை பிரயோகப்படுத்தின என்று சற்று பட்டியலிட முடியுமா உங்களால்? அணு ஆயுதங்களை முதலில் வைத்து கொண்டுள்ள அமேரிக்கா, சீனா, ரசியாவை எப்படி மற்ற உலக நாடுகள் அணு ஆயுதங்களை செயழிலக்க செய்ய எப்படி வழி உள்ளது என்று சொல்லுங்கள். அப்படி உலக நாடுகள் சொன்னால் அமெரிக்கா, சீனா, ரசியா உடனே அனைத்து அணு ஆயுதங்களையும் உண்மையிலேயே அழித்து விடுமா? அவ்வளவு நேர்மையான நாடுகளா அவை? கொஞ்சம் யோசித்து பாருங்கள்.

                      தற்போதுள்ள நிலையில் அணு ஆயுதங்களை இந்தியா அழித்தால் அது இந்தியாவின் எதிரிகளுக்கு என்ன சிக்னல் கொடுக்கும்? இளிச்சாவாய் நாடு என்று கூறி ஆக்கிரமிக்க முயலுவார்களா? அல்லது இந்தியா அணு ஆயுதங்களை அழித்து விட்டது. அதனால் இனி நாமும் அனைத்து அணு ஆயுதங்களையும் அழித்து விடுவோம் என்று சபதம் ஏற்பார்களா? பிலிப்பைன்ஸ் நாட்டில் மக்கள் பொதுவாக எந்த வம்புக்கும் போகாதவர்கள். அவர்களை ஸ்பானியர்கள் மிக எளிதாக 400 ஆண்டு வந்துள்ளனர், எந்த வித பிரச்சினையும் அவர்களுக்கு ஏற்படவில்லை. ஏன் என்றால் மக்கள் ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்து ஒன்றும் குரல் கொடுக்கவில்லை. அமைதியாக அடங்கி போனார்கள். அது ஆக்கிரமிப்பாளர்களுக்கு மிகவும் வசதியாக போய் விட்டது. ச்பாநியர்களில் ஆரம்பித்து, பிரிட்டிஷ், பிரெஞ்ச், ஜப்பான், அமேரிக்கா என்று சகட்டு மேனிக்கு ஆளாளுக்கு கொஞ்ச நாள் ஆண்டு கொண்டிருந்தார்கள். ஏன், மக்கள் எதிர்த்து போராடவில்லை, எதிர்த்து குரல் கொடுக்கவில்லை. அடங்கி போனார்கள். இந்தியா அடங்கி போனாலும் இதே நிலை தான் நமக்கும் வந்திருக்கும். தாங்கள் கொடுத்துள்ள சுட்டியில் மோடியை புகழ்ந்து பாடுகிறார்கள். தேவையா உங்களுக்கு இது. மோடியே ஒரு விளம்பர விரும்பி, நீங்கள் வேறு அதற்கு விளம்பரம் தருகிறீர்கள்.

                      சீனனுக்கு சொம்பு தூக்குவதில் திப்புவுக்கு டாக்டர் பட்டமே தரலாம். மாய்ந்து மாய்ந்து லிங்குகளை தேடி தேடி கண்டுபிடித்து தருவதும், அதிலுள்ள குறைகளை சுட்டிக்காட்டினால் ஓடி மறைந்து கொள்வதுமே அவருக்கு வேலையாய் இருக்கிறது.

                      முதலில் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு சோறு போட வழி என்ன என்று யோசியுங்கள், மாற்றான் தோட்டத்து மல்லிகை எங்கும் போய் விடாது.

                    • அட்லஸ் மேப்புக்கும் அபிசியல் மேப்புக்கும் வேறுபாடு தெரியாத நீங்களெல்லாம் எல்லைப்பிரச்னை பத்தி பேச வந்துட்டீங்க.அக்சாய் சின் பகுதியில் இந்திய-சீன எல்லை ஒரு போதும் வரையறுக்கப்பட்டதில்லை.மேலும் அந்த ஆளரவமற்ற,புல் ,பூண்டு கூட முளைக்காத பாலைவனத்தை .யாருக்கு சொந்தம்னு தீர்மானிக்கப்படாத அதை போரின்போது இந்தியாவிடமிருந்து சீனா அடித்துப்பிடுங்கி விட்டதாக கதை விட வேண்டாம்.அது ஒரு சர்ச்சைக்குரிய பகுதி என ஒப்புக்கொள்ளும் நேருவின் வாக்குமூலத்தை பிரண்ட்லைன் ஏட்டில் A.G நூரானி பதிவு செய்துள்ளார்.

                      http://www.frontline.in/static/html/fl2923/stories/20121130292300400.htm

                      August 28, 1959: “The Aksai Chin area, that is an area about some parts of which, if I may say so, it is not quite clear what the position is. It is not at all that particular area. About other area [NEFA] the position is quite clear.”

                      August 31, 1959: “It is Indian territory and we claim it so because we think that the weight of evidence is in our favour, maps, etc., but the Chinese produce their own maps, equally old, which are in their favour. And the territory is sterile. It has been described as a barren, uninhabited region without a vestige of grass, and seventeen thousand feet high.”

                      September 4, 1959: “So far as the corner of the Aksai Chin area is concerned, that has been claimed by the Chinese as their territory and I believe in their maps too, not the new maps, but the old maps, that is shown as their territory. That is disputed and there are two viewpoints about that.… it is at an average of sixteen thousand to seventeen thousand feet altitude and treeless, grassless, almost or hardly of any kind without any living thing there.”

                      September 4, 1959, in the Lok Sabha: “But the broad McMahon Line has to be accepted and so far as we are concerned it is there and we accept it. The position about Ladakh is somewhat different. The McMahon Line does not go there… the actual boundary of Ladakh with Tibet was not very carefully defined. It was defined to some extent by British officers who went there, but I rather doubt if they did any careful survey.”

                      September 10, 1959: “We have always looked upon the Ladakh area as a different area, if I may say so, some vaguer area so far as the frontier is concerned because the exact line of the frontier is not at all clear as in the case of McMahon Line… it is a territory where not even a blade of grass grows, about seventeen thousand feet high. Nothing can be more amazing folly than for two great countries like India and China to go into a major conflict and war for the possession of a few mountain peaks, however beautiful the mountain peaks might be, or some area which is more or less uninhabited.”

                      September 17, 1959: “This place Aksai Chin area is in our maps undoubtedly. But, I distinguish it completely from other areas. It is a matter for argument as to what part of it belongs to somebody else. It is not at all a dead clear matter. It is not clear. I cannot go about doing these things in a manner which has been challenged to [ sic] the ownership of this strip of territory. This has nothing to do with the McMahon Line. It has nothing to do with anything else. That particular area stands by itself. It has been in challenge all the time.” In short, the Aksai Chin was disputed territory.

                    • அட்லஸ் மேப்புக்கும் அபிசியல் மேப்புக்கும் வேறுபாடு தெரியாத நீங்களெல்லாம் எல்லைப்பிரச்னை பத்தி பேச வந்துட்டீங்க.அக்சாய் சின் பகுதியில் இந்திய-சீன எல்லை ஒரு போதும் வரையறுக்கப்பட்டதில்லை.மேலும் அந்த ஆளரவமற்ற,புல் ,பூண்டு கூட முளைக்காத பாலைவனத்தை .யாருக்கு சொந்தம்னு தீர்மானிக்கப்படாத அதை போரின்போது இந்தியாவிடமிருந்து சீனா அடித்துப்பிடுங்கி விட்டதாக கதை விட வேண்டாம்.அது ஒரு சர்ச்சைக்குரிய பகுதி என ஒப்புக்கொள்ளும் நேருவின் வாக்குமூலத்தை பிரண்ட்லைன் ஏட்டில் A.G நூரானி பதிவு செய்துள்ளார்.

                      http://www.frontline.in/static/html/fl2923/stories/20121130292300400.htm

                      August 28, 1959: “The Aksai Chin area, that is an area about some parts of which, if I may say so, it is not quite clear what the position is. It is not at all that particular area. About other area [NEFA] the position is quite clear.”

                      August 31, 1959: “It is Indian territory and we claim it so because we think that the weight of evidence is in our favour, maps, etc., but the Chinese produce their own maps, equally old, which are in their favour. And the territory is sterile. It has been described as a barren, uninhabited region without a vestige of grass, and seventeen thousand feet high.”

                      September 4, 1959: “So far as the corner of the Aksai Chin area is concerned, that has been claimed by the Chinese as their territory and I believe in their maps too, not the new maps, but the old maps, that is shown as their territory. That is disputed and there are two viewpoints about that.… it is at an average of sixteen thousand to seventeen thousand feet altitude and treeless, grassless, almost or hardly of any kind without any living thing there.”

                      September 4, 1959, in the Lok Sabha: “But the broad McMahon Line has to be accepted and so far as we are concerned it is there and we accept it. The position about Ladakh is somewhat different. The McMahon Line does not go there… the actual boundary of Ladakh with Tibet was not very carefully defined. It was defined to some extent by British officers who went there, but I rather doubt if they did any careful survey.”

                      September 10, 1959: “We have always looked upon the Ladakh area as a different area, if I may say so, some vaguer area so far as the frontier is concerned because the exact line of the frontier is not at all clear as in the case of McMahon Line… it is a territory where not even a blade of grass grows, about seventeen thousand feet high. Nothing can be more amazing folly than for two great countries like India and China to go into a major conflict and war for the possession of a few mountain peaks, however beautiful the mountain peaks might be, or some area which is more or less uninhabited.”

                      September 17, 1959: “This place Aksai Chin area is in our maps undoubtedly. But, I distinguish it completely from other areas. It is a matter for argument as to what part of it belongs to somebody else. It is not at all a dead clear matter. It is not clear. I cannot go about doing these things in a manner which has been challenged to [ sic] the ownership of this strip of territory. This has nothing to do with the McMahon Line. It has nothing to do with anything else. That particular area stands by itself. It has been in challenge all the time.” In short, the Aksai Chin was disputed territory.

                      \\அக்சாய் சீன் பகுதி இந்தியாவுக்கு சொந்தமான பகுதி. இதில் மறுபேச்சுக்கே இடமில்லை. //

                      சொல்லிட்டாருப்பா நாட்டாமை.சீன அதிகாரி எவனாவது பேச்சு நடத்தன்னு வந்தா நாட்டாமை.தீர்ப்பை சொல்லிட்டு போயிட்டார்.திரும்ப வந்தா வெத்தலை எச்சிய உம்மூஞ்சில துப்பிரூவாரு.அவரு வாரத்துக்குள்ள ஓடிப்போயிருன்னு அனுப்பிருங்க.

                    • \\அக்சாய் சீன் பகுதி இந்தியாவுக்கு சொந்தமான பகுதி. இதில் மறுபேச்சுக்கே இடமில்லை. //

                      சொல்லிட்டாருப்பா நாட்டாமை.சீன அதிகாரி எவனாவது பேச்சு நடத்தன்னு வந்தா நாட்டாமை.தீர்ப்பை சொல்லிட்டு போயிட்டார்.திரும்ப வந்தா வெத்தலை எச்சிய உம்மூஞ்சில துப்பிரூவாரு.அவரு வாரத்துக்குள்ள ஓடிப்போயிருன்னு அனுப்பிருங்க.

                      \\அது சீனனுக்கு தான் சொந்தம் என்று நீங்கள் சொல்கிறீர்கள்.//

                      பொய் சொல்ல கொஞ்சமாவது வெட்கப்படுங்கள்.நான் அப்படி எழுதியதாக மெய்ப்பித்தால் இந்த கட்டுரை தொடர்பாக மேலும் பின்னூட்டம் போடுவதையெ நிறுத்திக்கொள்கிறேன்

                      எப்படி இவ்வளவு அசிங்கமா சூடு சொரணை இல்லாம இருக்குறீங்க.அதுசரி அப்படி இருப்பதால்தானே சீனாக்காரனுக்கு வணிகம் செய்ய நாட்டையும் மக்களையும் காட்டிக்கொடுக்க முடியும்.மான,ரோசம் உள்ளவன் செய்வானா.
                      மீண்டும் மீண்டும் பொய் சொல்லாதீங்க ன்னு சொல்ல எனக்கு சங்கடமா இருக்கு.ஆனா இப்படி வெட்கமே இல்லாம புளுகுரீன்களே உங்களுக்கு எப்படி இருக்கு.

                      .[”அவன் கைவசம் உள்ள அக்சாய் சின் ”என்றுதான் சொல்லி இருக்கிறேன்.கைவசம் உள்ளது என்பதற்கும் [possession] சொந்தமானது என்பதற்கும் [ownership] வேறுபாடு அறியாத தற்குறியா நீங்கள்.]

                      காசுமீர்,அணு ஆயுதம் பற்றி நாளை பேசலாம்.

              • \\ இது உங்கள் மொழியில் மைனரா, இல்லை மேஜரா?//

                எனது தவறை ஒப்புக்கொண்டிருக்கிறேன்.அப்புறமும் அதையே பிடித்து தொங்கி என்ன சாதிக்க போகிறீர்கள்.

                \\வம்பு சண்டைக்கு போனவன் நல்லவனா.போரில் வெற்றி பெற்றுக் கொண்டிருக்கும்போதும் போரை தன்னிச்சையாக நிறுத்திவிட்டு பிடித்த பகுதிகளை விட்டு பின் வாங்கி சென்றவன் நல்லவனா.//

                என்று இந்தியா சீனா போரை பொறுத்தவரையிலும் இரு நாடுகளையும் ஒப்பிட்டு எழுதியிருக்கிறேனேயன்றி சீனாக்காரன் பண்ணும் அட்டூழியத்துக்கு எல்லாம் வக்காலத்து வாங்குவது என் வேலை அல்ல.அதனை சீனாக்காரனை அண்டிப்பிழைத்துக்கொண்டே சீன எதிர்ப்பு சவடால் அடிக்கும் நீங்கள் வேண்டுமானால் செய்யலாம். மக்களை நேசிப்பதால் சீனாக்காரனின் கொள்ளையை எதிர்க்கும் என்னிடம் எதிர்பார்க்க வேண்டாம்.

                • பிடித்த பகுதிகளை விட வேண்டுமென்றால் மொத்த காஷ்மீரில் கிழக்கு பகுதியை முழுக்க ஆக்கிரமித்திருக்கும் சீனா விலகி இருக்க வேண்டும்.

                  உங்கள் தவறை பாதி தான் ஒப்புக்கொண்டிருக்கிறீர்கள்.
                  உங்கள் முதல் கருத்தான “சீனாவுக்கும் இந்தியாவுக்கும் மட்டும் தான் எல்லை பிரச்சினை உள்ளது” என்ற கருத்தினை தவறு என்று ஒப்புக்கொண்டீர்கள்.
                  அதில் உள்ள தவறை சுட்டிக்காட்டிய பின், “சீனாவுக்கும் இந்தியாவுக்கும் தான் மேஜர் பிரச்சினை” என்று கூறினீர்கள்.
                  அந்த கருத்தினையும் தவறு என்று நான் பிலிப்பைன்ஸ் உதாரணத்தை கொடுத்ததற்கு நீங்கள் இன்னும் தவறை ஒத்துக்கொள்ளவில்லை.

                  அதுசரி, மேஜர், மைனர் பிரச்சினை என்று எதை கொண்டு பிரிக்கிறீர்கள்?

                  இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இருப்பது மேஜர் பிரச்சினை.
                  மற்ற நாடுகளுக்கும் சீனாவுக்கும் இருப்பது மைனர் பிரச்சினை என்று எதை கொண்டு முடிவு செய்கிறீர்கள் திப்பு?

                  • தவறு எப்படி நேர்ந்தது என்று சொல்வதற்காகத்தான் இந்த சொற்றொடரை எடுத்துக்காட்டினேன்.

                    The Sino-India border remains the only major territorial dispute, other than South China Sea disputes, that China has not resolved.

                    இந்திய எல்லை பிரச்னை,தென் சீன கடல் பிரச்னை தவிர்த்து சீனாவுக்கு வேறு major எல்லைப்பிரச்சனை இல்லை கட்டுரையாளர் சொல்வதை ”வேறு எல்லை பிரச்னையே இல்லை என தவறாக விளங்கி கொண்டேன். தென் சீன கடலில் வியட்நாம் தவிர்த்து பிலிப்பைன்சு நாட்டுடனும் பிரச்னை உண்டு இன்னும் பல நாடுகளுடனும் எல்லை பிரச்னை உண்டு என நீங்கள் சொல்வதை ஏற்று கொண்டிருக்கிறேன்.அப்புறமும் இதில் பாதி தவறு மீதி தவறு என்ற வாதம் அர்த்தமற்றது.

                  • \\பிடித்த பகுதிகளை விட வேண்டுமென்றால் மொத்த காஷ்மீரில் கிழக்கு பகுதியை முழுக்க ஆக்கிரமித்திருக்கும் சீனா விலகி இருக்க வேண்டும்.//

                    ஐயா,போரில் கைப்பற்றிய பகுதிகளை விட்டு சீனா விலகியதைத்தான் பாராட்டுக்குரியது என்கிறேன்.மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் நல்ல மணமுண்டு என்பதை ஏற்க நியாய உணர்வு வேண்டும்.நீங்களோ போரில் கைப்பற்றப்படாத,போருக்கு முன்பு ஏற்கனவே அவன் கைவசம் உள்ள அக்சாய் சின் [காசுமீர் கிழக்கு என்று அதைத்தான் சொல்றீங்கன்னு நினைக்கிறேன்]பகுதியையும் விட்டு விலகி இருக்கணும்னு சொல்றீங்க.இது இல்லாத ஊர்ருக்கு போகாத வழி.போருக்கு முன் அவன் அந்த பகுதியில் சாலை அமைத்ததே ஓரிரு ஆண்டுகள் இந்தியாவுக்கு தெரியாது.அந்த அளவுக்குத்தான் இந்தியாவின் கட்டுப்பாடு இருந்திருக்கிறது.

                    பேசணும்னுகிரதுக்காக எதையாவது உளறி வைக்காதீங்க.

                    • அக்சாய் சீன் பகுதி சீனனுக்கு சொந்தம் என்று நீங்களும் சீனனும் சொன்னால் அதனை உலக நாடுகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ள வேண்டுமா? போங்க சார்…

                      1962ல் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் நடந்த போரின் போது 1834 தொடக்கம் இந்தியா வசமிருந்த அக்சாய் சீன்(Aksai Chin) என்ற 37,250 சதுர கி.மீ நிலப்பரப்பை சீனா கைப்பற்றியது. அதைச் சீனா தனது நாட்டோடு நிரந்தரமாக இணைத்துள்ளது.

                      முதலில் சீனா பிடித்து வைத்த பகுதிகளை இந்தியாவுக்கு திருப்பி கொடுக்க சொல்லுங்கள்.

                    • மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு மணம் உண்டு. சரி, மாற்றான் நம்ம வீட்டுக்குள் ஒவ்வொரு அடியாக ஆக்கிரமித்தாலும் அதே உவமையை தான் கூறுவீர்களோ?
                      இப்படியே விட்டால் பின் நம்ம வீட்டு மல்லிகையும் கூட வருங்காலத்தில் மாற்றான் தோட்டத்து மல்லிகை என்று நீங்கள் புகழ் பாட வேண்டியதிருக்கும்.

                    • \\தங்கள் வருமானத்திற்கு என்ன செய்கிறீர்கள்? யாரிடம் இருந்து உங்கள் வருமானத்தை பெறுகிறீர்கள் _______?//

                      .உழைக்கிறேன்.என் உழைப்புக்கு வெகுமதியாக தமிழக மக்களிடமிருந்துதான் என் வருமானத்தை பெறுகிறேன்.

                      நம்ம வீட்டு மல்லிகையை கூட மாற்றான் தோட்டத்து மல்லிகை என ”புகழ்”பாட கூடிய குணநலன் உங்களிடம்தான் உள்ளது.அதனால்தான் சீனனுடைய பொருட்களை இங்கு கொண்டு வந்து விற்பதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்து கொண்டு அந்த இழிசெயலை செய்வத மறைக்க சீன எதிர்ப்பு சவடால் அடிக்கிறீங்க.சீனா உளிட்ட அந்நிய பொருட்களை தடை செய்து உள்நாட்டிலேயே அவற்றை தயாரிக்க வேண்டும் சொல்கின்ற என்னிடம் அந்த இழிகுணத்தை எதிர்பார்க்க முடியாது.

                    • திப்புவின் பின்னூட்டம் 22.2.2.2.2.1.2.1.2.3 க்கு பதில் இங்கு அளிக்கிறேன்:

                      //உழைக்கிறேன்.என் உழைப்புக்கு வெகுமதியாக தமிழக மக்களிடமிருந்துதான் என் வருமானத்தை பெறுகிறேன்.//
                      ஆகா, அற்புதம். அப்புறம். என்ன உழைக்கிறீர்கள் என்று தானே கேட்கிறேன்?

                      //நம்ம வீட்டு மல்லிகையை கூட மாற்றான் தோட்டத்து மல்லிகை என ”புகழ்”பாட கூடிய குணநலன் உங்களிடம்தான் உள்ளது.//
                      அது மிகச்சரியாக உங்களுக்கு தான் பொருந்துகிறது. அவன் நம் நாட்டின் பகுதிகளை ஆக்கிரமிப்பதை ஆமோதிக்கும் நபர் தானே நீங்கள்?

                      //அதனால்தான் சீனனுடைய பொருட்களை இங்கு கொண்டு வந்து விற்பதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்து கொண்டு அந்த இழிசெயலை செய்வத மறைக்க சீன எதிர்ப்பு சவடால் அடிக்கிறீங்க.//

                      சீனாவுக்கு செல்வது சீனனின் பொருட்களை இங்கு கொணர அல்ல. சீனாவுக்கும், மற்ற ஏனைய உலக நாடுகளுக்கும் என் கம்பெனி பொருட்களை விற்க செல்கிறேன்.

                      //சீனா உளிட்ட அந்நிய பொருட்களை தடை செய்து உள்நாட்டிலேயே அவற்றை தயாரிக்க வேண்டும் சொல்கின்ற என்னிடம் அந்த இழிகுணத்தை எதிர்பார்க்க முடியாது.//
                      தாராளமாக தடை செய்யுங்கள்.
                      அப்புறம், உங்கள் கணினி, கைபேசி இவையெல்லாம் எங்கிருந்து வாங்குகிறீர்கள்?

                    • நான் ஒரு சிறு வணிகன்.முழுக்க முழுக்க இந்த நாட்டில் உற்பத்தியாகும் பொருட்களை வாங்கி விற்று அதில் உழைத்து பிழைப்பவன்.நான் வணிகம் செய்யும் பொருட்களுக்கு போட்டியாக சீனாவிலிருந்தும் பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டு மொத்த விற்பனை சந்தையில் கிடைக்கின்றன.அவை விலை மலிவுதான்.ஆனாலும் அவற்றை நான் வாங்கி விற்பதில்லை.உள்நாட்டு உற்பத்திக்கு நம்மாலான சிறு நலன் என்று உள்நாட்டு பொருட்களை விற்பதிலும்,சீன பொருட்களை புறக்கணிப்பதிலும் நான் பெருமை கொள்கிறேன்.

                      இதில் க.கை.க்கு ஐயம் இருக்குமானால் அடுத்த முறை தமிழகத்துக்கு வரும்போது தாராளமாக எனது கடைக்கு வந்து எனது உழைப்பையும் வணிகத்தையும்,வணிகபொருட்களையும் நேரில் பார்த்து உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.மின்னஞ்சல் முகவரி கொடுத்துத்தான் வினவில் பின்னூட்டமிட முடியும்.எனது மின்னஞ்சல் முகவரியை வினவு நிர்வாகிகளிடம் கேட்டு பெற்றுக்கொண்டு அதில் க.கை தொடர்பு கொண்டால் அவரை அழைத்து செல்ல அணியமாக இருக்கிறேன்.எனது மின்னஞ்சல் முகவரியை க.கை.க்கு வினவு தளத்தார் அளிக்க இதன் மூலம் எனது ஒப்புதலை தெரிவிக்கிறேன்.

                      ஒரே ஒரு நிபந்தனை.எனது செலவில் அல்லது அவரவர் செலவில்.க.கை யை அரசு பேருந்தில்தான் அழைத்து செல்வேன்.உலகம் சுற்றும் வாலிபராச்சேன்னு குளிர் மகிழ்வுந்து எல்லாம் வைத்து கூட்டி செல்ல முடியாது.

                      \\அவன் நம் நாட்டின் பகுதிகளை ஆக்கிரமிப்பதை ஆமோதிக்கும் நபர் //

                      மீண்டும் மீண்டும் பொய்.ஏய்யா உங்களுக்கெல்லாம் கொஞ்சம் கூட வெட்கமே கிடையாதா.இந்திய-சீன போருக்கு வித்திடும் வகையில் இந்தியா தான் உரிமை கோராத பகுதிகளில் காவல் சாவடிகளை அமைத்தது ஆக்கிரமிப்பு என குற்றம் சாட்டியுள்ளேன்.சீன இராணுவமோ தனது நாடு உரிமை கோரும் பகுதிகளில் நிலை கொண்டிருந்தது .அது ஆக்கிரமிப்பு அல்ல என்கிறேன்.அது சர்ச்சைக்குரிய பகுதியாக இருக்கலாம்.அது இந்தியாவும் உரிமை கோரும் பகுதியாக இருக்கலாம்.நடுநிலைமை என்று அடிக்கடி சொல்லிக்கொல்வீர்களே அந்த நிலையிலிருந்து பார்த்தால இது ஆக்கிரமிப்பு என சொல்ல முடியுமா.இது எப்படி அந்நிய ஆக்கிரமிப்பை ஆமோதிப்பதாகும்.

                      உண்மையில் இந்தியாவின் நிலப்பகுதி என்று சீனா ஏற்றுக்கொண்ட பகுதிகளில் சீன இராணுவம் நிலை கொண்டிருந்தால் எடுத்துக்காட்டுங்கள்.எனது அறியாமையை ஒப்புக்கொண்டு தவறை திருத்திக்கொள்கிறேன்.

                      \\மல்லிகை//

                      இந்திய-சீன போரில் நியாயம் சீனாவின் பக்கமே இருந்தது என சொல்லும் நான் நாட்டு நலன் என்று வரும்போது சீன பொருட்களை புறக்கணிகிறேன்.அதனால் தனிப்பட்ட முறையில் வருமான இழப்பு ஏற்பட்டாலும் நாட்டுக்காக,எனக்கு வாழ்வளிக்கும் மக்கள் நலனுக்காக அதனை ஏற்றுக்கொள்கிறேன்.

                      க.கை.என்ற நீங்களோ சீனா என் நாட்டின் நிலப்பகுதிகளை ஆக்கிரமித்து வைத்துள்ள ஆக்கிரமிப்பாளன் என குற்றம் சாட்டிக்கொண்டே அந்த நாட்டுடன் உங்கள் முதலாளி வணிக உறவு கொள்ள ஏற்பாடு செய்து கொடுத்து அதில் காசு பார்த்து வயிறு வளக்குறீங்க.

                      ஆளும் வர்க்கங்களின் நலனுக்கு உகந்தது என்பதால் தாராளமயமாக்கல் கொள்கைகள் அமுலாக்கப்படுகின்றன.அதை நான் ஏற்க மறுக்கிறேன்.அதனால் வருமானம் குறைந்தாலும் பரவாயில்லை என அந்த அநியாய செயலில் பங்கேற்க மறுக்கிறேன்.இப்படிப்பட்ட என்னிடம் இந்த நாட்டு மல்லிகையை சீனனின் மல்லிகை என சொல்லும் இழிகுணம் வரவே வராது.

                      நீங்களோ தாராளமயமாக்கல் கொள்கைகளை மனமார ஏற்றுக்கொண்டு அதில் காசு பாக்குறீங்க.அதனால் மக்களுக்கு தீங்கு நேர்கிறது என்பதை உங்களால் மறுக்க முடியாமல்தான் சீனாவுக்கு ஏற்றுமதி செய்யுறேன்,இறக்குமதி செய்யலன்னு சொல்றீங்க.நாளைக்கே ஆளும் கும்பலின் நலனுக்கு உகந்ததாக இருந்து அக்சாய் சின் பகுதியை சீனாவுக்கு விட்டுக்கொடுத்தால்,[இப்போது வங்காள தேசத்துக்கு நிலப்பகுதிகளை விட்டுக்கொடுத்தது போல]அதில் உங்களுக்கு காசு பாக்கும் வாய்ப்பிருந்தால் அதையும் ஏற்றுக்கொள்வீர்கள்.

                      அதனால்தான் சொல்கிறேன்.இந்த நாட்டு மல்லிகையை சீனனின் மல்லிகை என சொல்லும் இழிகுணம் உங்களிடம் குடி கொண்டுள்ளது தெளிவாக தெரிகிறது.

                      பி.கு.சீனாவுக்கு ஏற்றுமதி என்பதும் கூட்டுக்கொள்ளையில் பங்கேற்பதுதான்.அதை தனியாக எழுதுகிறேன்.

                    • இந்தியாவிலிருந்து சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் பெரும்பாலும் இரும்புத்தாது,பருத்தி,ஆர்கானிக் கெமிக்கல்ஸ்,செம்மரம் முதலான மூலப்பொருட்களாகவே உள்ளன.அவற்றை கொண்டு பொருட்கள் செய்து நம்மிடமே அவற்றை விற்பதன் மூலம் சீனாகாரன் இந்திய சிறு,குறு உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை பறிக்கிறான்.

                      .பிரிட்டிசு ஏகாதிபத்தியமும் இதைத்தான் செய்தது.அவனுக்காவது இந்தியாவை கொள்ளையிட சண்டை போட்டு தம்மில் பலரை காவு கொடுத்து நாடு பிடித்து காலனி ஆட்சியை நிறுவி பராமரிக்க வேண்டிய தேவை இருந்தது.சீன ஏகாதிபத்தியத்திற்கோ அதே கொள்ளையை நடத்த தாராள மயமாக்கலும் கற்றது கையளவு போன்றவர்களின் கைக்கூலித்தனமுமே போதுமானதாக உள்ளது.

                      இந்த லட்சணத்துல நாட்டை காட்டிக்கொடுக்கும் க.கை இறக்குமதி பண்ணல ஏற்றுமதி பண்றேன்னு மயிர் பிளக்கும் வாதம் புரிகிறார்.

                    • அந்நிய நாட்டு ,அந்நிய நிறுவன பொருட்களை நீங்கள் பயன்படுத்துவதில்லையா என க.கை கேட்பது குதர்க்கம்.உள்நாட்டு உற்பத்தியை திட்டமிட்டு அழித்து வருகிறது ஏகாதிபத்திய அடிமைகளான தரகு முதலாளித்துவ ஆளும் கும்பல்.இப்போது ஒரு தொலைக்காட்சி பெட்டி வாங்க வேண்டுமானால் உள்நாட்டு தயாரிப்பு என எதுவும் சந்தையில் கிடையாது.தாராளமய மாக்கலுக்கு முன் தொலைக்காட்சி பெட்டிகள் தயாரித்து வந்த சாலிடர்,டயனோரா போன்ற நிறுவனங்கள் அழிந்தது ஏன்.இப்படியாக ஊரையே கொளுத்தி சாம்பலாக்கிய ஆளும் வர்க்கத்திற்கு கைக்கூலி வேலைபார்க்கும் க.கை வரிசையாக எரியும் குடிசைகளுக்கு நடுவில் எங்கள் குடிசைகள் மட்டும் எரியாமல் இருக்க வேண்டும் என்கிறார்.

                      என்ன ஒரு பித்தலாட்டம்.

                  • திரு.கற்றது கையளவு ……..

                    என்ன செய்வது எல்லாம் கலிக்காலம். அதென்ன சீன ஆக்கிரமிப்பு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு,. இந்தியாவும் தான் காஷ்மீரத்தை ஆக்கிரமித்து வைத்துள்ளது. சீனாவும், பாகிஸ்தானும் குறைந்த அளவிலான நிலப் பகுதியை ஆக்கிரமித்து வைத்துள்ளன என்றால் இந்திய பெரிய அளவிலான நிலப் பகுதியை தன்னகத்தே வைத்துக் கொண்டு, ராணுவத்தை ஏவி அங்குள்ள அப்பாவி கஷ்மீரிகள் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டுக் கொண்டிருக்கிறது. காஷ்மீர் என்கிற அந்த அழகிய பூமி, குரங்கிடம் மாட்டிய அப்பத்தின் கதையாக தான் மாறி விட்டது. தனி நாடாக பிரிந்து போவதற்கான அனைத்து அமசங்களும் அவர்களுக்கு இருந்தும், இன்னும் இந்திய போலி இறையாண்மையுடன் போராடி கொண்டிருக்கிறார்கள். இதில் ஆக்கிரமிப்பு என்கிற அங்கலாய்ப்பு வேறு…

                    • //காஷ்மீர் என்கிற அந்த அழகிய பூமி, குரங்கிடம் மாட்டிய அப்பத்தின் கதையாக தான் மாறி விட்டது. தனி நாடாக பிரிந்து போவதற்கான அனைத்து அமசங்களும் அவர்களுக்கு இருந்தும்//

                      அந்த அம்சம் தமிழ் நாட்டிற்கு இல்லையா ?
                      நாகலாந்துக்கு இல்லையா ?

                      எங்களுக்கு புரிய வையுங்கள் அம்மையே

                    • எதை வைத்து ஆக்கிரமிப்பு என்கிறீர்கள்? ஹரிசிங் ஜம்மு காஷ்மீரின் மன்னர். அவர் இந்தியாவுடன் இணைவதாக தானே எழுதி கொடுத்துள்ளார்? இதில் என்ன ஆக்கிரமிப்பு உள்ளது. ஏன் பாகிஸ்தானுடன் இணைவதாக எழுதி வாங்க வேண்டியது தானே, ஏன் முடியவில்லை?

                      அப்பாவி காஷ்மீரிகள் மீது அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்படுவதாக சொல்லும் நீங்கள் காஷ்மீர் பண்டிட்கள் பற்றி ஏதும் பேச மறுக்கிறீர்களே? அவர்களும் காஷ்மீர் மண்ணின் மைந்தர்கள் தானே. அவர்கள் காலாகாலமாக அங்கேயே தானே இருந்தார்கள். அவர்கள் புகலிடத்தை தீவிரவாதிகள் காலி செய்வதை கண்டிக்க வேண்டியது தானே. அப்போது எங்கு போனது தங்களின் மனிதாபிமானம்?

                      அங்கே இரத்தம், இங்கே தக்காளி சூசா?

                      காஷ்மீரை இந்தியா ஆக்கிரமித்தது என்று கூறுக ரெபெக்கா அவர்களே, சற்று கீழே உள்ள சுட்டியை படியுங்கள்:

                      http://timesofindia.indiatimes.com/india/Just-2-of-people-in-JK-want-to-join-Pak-Survey/articleshow/5982710.cms

                      இந்தியாவில் உள்ள 2 சதவீதம் காஷ்மீர் மக்களே பாகிஸ்தானுடன் இணைய விரும்புகின்றனர். அதே சமயம் பாகிஸ்தான் பிடியில் இருக்கும் காஷ்மீரில் தனி நாடு தான் வேண்டும் என்கின்றனர்.

                      இசுலாமிய மக்கள் மெஜாரிடியாக இருப்பதால் அது பாகிஸ்தானுக்கு கொடுக்க வேண்டும் என்றால் ஐதராபாத், ஆம்பூர், ஆற்காடு பகுதிகளையும் பாகிஸ்தானுக்கு கொடுத்து விடலாமா? மக்கள் இந்தியாவுடன் இணைய கூடாது என்ற முடிவில் இருந்திருந்தால் ஏன் தேர்தல் சமயங்களில் தீவிரவாதிகளின் அச்சுரத்தலை மீறி வாக்களிக்க குவிகிறார்கள்? யோசியுங்கள்.

                      http://www.firstpost.com/politics/jammu-kashmir-elections-76-percent-voting-highest-25-years-1974253.html

                      இதுவரை இல்லாதவண்ணம் கடந்த 25 வருடங்களில் நடைபெற்ற தேர்தலை விட கடந்த 2௦14 இல் நடந்த தேர்தலில் பெருவாரியாக மக்கள் வந்து ஒட்டு போட என்ன காரணம்?

                      காஷ்மீரிகள் இந்தியாவை விட்டு பிரிய ஆசைபட்டிருந்தால் இந்திய அரசாங்கம் நடத்தும் தேர்தலை புறக்கநித்திருப்பார்களே? யோசியுங்கள்.

                      ரெபெக்கா மேரி அவர்களே, சற்று கண் திறந்து உலகில் நடப்பவற்றை சுற்றிப்பாருங்கள்.

                    • ஜம்மு காஷ்மீரில் உள்ள 2 சதவீதம் காஷ்மீர் மக்களே பாகிஸ்தானுடன் இணைய விரும்புகின்றனர் என்று கூறுவதற்கு பதில் இந்தியாவில் உள்ள 2 சதவீதம் என்று தவறுதலாக குறிப்பிட்டுள்ளேன். மன்னிக்கவும்.

                    • //தனி நாடாக பிரிந்து போவதற்கான அனைத்து அமசங்களும் அவர்களுக்கு இருந்தும்//காஸ்மீர் தனி நாடா போனா என்ன ஆகும் இன்னொரு இசுலாமிய மொக்கை தெசம் உருவாகும் இதுக்குதான் ஆசைப்படுறீகளா…

                    • //அப்புறம், உங்கள் கணினி, கைபேசி இவையெல்லாம் எங்கிருந்து வாங்குகிறீர்கள்?//

                      இதிலென்ன சந்தேகம் கடையில் இருந்து தான்………. 🙂

          • மேற்கொண்டு விவாதத்தை தொடர்வதற்கு முன் இந்த இரண்டு சுட்டிகளில் உள்ள எனது பின்னூட்டங்களை படிக்கவும்.சீனாவுடனான எல்லைப்பிரச்னையை சுமுகமாக தீர்க்க கோரும் நான் நாட்டுப்பற்றாளனா.சண்டைக்கு முண்டா தட்டும் க.கை.க்கள் நாட்டுப்பற்றாளர்களா.

            https://www.vinavu.com/2015/02/02/north-indian-workers-as-modern-bonded-labour-in-ranipet/#comment-392338

            https://www.vinavu.com/2015/02/02/north-indian-workers-as-modern-bonded-labour-in-ranipet/#comment-391143

            அன்னிய,சீனப்பொருட்கள் இந்தியாவில் கொட்டப்படுவதை எதிர்க்கும் நான் நாட்டுப்பற்றாளனா.சீனாவுக்கு ஓடி ஓடிப்போய் வணிகம் செய்து அதில் பொறுக்கி தின்னும் க.கை நாட்டுப்பற்றாளரா.சீனாவிலிருந்து இறக்குமதியாகும் ஒவ்வொரு பெட்டகமும் இங்கு ஒரு குடும்பத்தின் வாழ்வாதாரத்தை பறிக்கிறது. சீனாவுக்கு இயற்கை வளங்களை ஏற்றுமதி செய்யும் கும்பலோ நம் எதிர்கால சந்ததியினரின் வாழ்வையே நிர்மூலமாக்குகிறது.சீனாவுடன் வணிக தொடர்பு என்பதே ஊர்தாலி அறுப்பதுதான்.அந்த வணிகம் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வை சூறையாடி வருகிறது.அதை செய்யும் பொறுக்கிதின்னிகள் தங்கள் அயோக்கியதனத்தை மறைக்க தேச பக்த வேடம் கட்டி ஆடுகிறார்கள்.

            • //சீனாவிலிருந்து இறக்குமதியாகும் ஒவ்வொரு பெட்டகமும் இங்கு ஒரு குடும்பத்தின் வாழ்வாதாரத்தை பறிக்கிறது//

              இதையே அமெரிக்கா பண்ணுனா உங்கள் வீட்டில் அடுப்பு எரியுமா ?

              ஸாஃப்ட்வரு என்ஜினீர்கள் எல்லாம் பிச்சை எடுக்கனௌம் . அப்போ கம்மியூநிச அரசாங்கத்தில் அதிகாரியாய் இருக்கும் நீங்கள் ஜோராக அதிகாரம் செலுத்தி மகிழலாம்

              • \\இதையே அமெரிக்கா பண்ணுனா உங்கள் வீட்டில் அடுப்பு எரியுமா ?//

                இதென்ன லூசுத்தனமான கேள்வியா இருக்கு.தாராளமயமாக்கல் காரணமாக அந்நிய நாட்டு பொருட்கள் இந்திய சந்தையில் கொட்டப்படுவதால் இந்த நாட்டின் சிறு,குறு உற்பத்தியாளர்கள் வாழ்விழக்கிறார்கள்.ஆகவே இந்திய அரசு தாரளமயமாக்கலை கைவிட்டு உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க வேண்டும் என்று சொன்னால் சீனக்கொள்ளையனுக்கு பதிலாக அமெரிக்ககொள்ளையனை கூட்டிட்டு வரவான்னு கேக்குறார் ராமன்.எரியுற கொள்ளில எது நல்ல கொள்ளி.

            • திப்பு அவர்களே,

              அந்நிய பொருட்கள் நம் நாட்டுக்கு வரக்கூடாது.
              நம் நாட்டுக்காரர்கள் அந்நிய நாட்டுக்கு பணி நிமித்தமாக கூட செல்லக்கூடாது.
              எந்த நாட்டுடனும் வணிக தொடர்பு இருக்கவே கூடாது.

              அப்புறம்….
              ஆனாலும் கோபம் வரும் வகையில் காமெடி செய்வதில் திப்புவுக்கு நிகர் எவருமில்லை.

              சொந்த நாட்டுக்கு எதிராக அந்நிய நாட்டுக்காரன் ஊடுருவியதை ஆதரிக்கும் திப்பு அவர்களின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பது தேசபக்த வேடம் அல்ல.

              • கற்றது கையளவின் வணிகத் தொடர்பும் ரத்தன் டாடாவின் கஞ்சா தொடர்பும் மறுகாலனியாக்கக் கொள்கைகளுக்கு பிறந்தவை என்கிற பொழுது நாட்டுடன் வணிகத் தொடர்பு வேறு தேசபக்தி வேறு என்று பாலிஷ் போடுகிறார்கள்.

                ஆனால் உண்மையென்ன? கடந்த அக்டோபரில் விபச்சாரி மோடி சீன அதிபர் ச்சீபிங்கிற்கு 300 கார்ப்பரேட்டுகளை ஒன்று கூட்டி விருந்துபடைத்தார். “நீங்க சொல்ற படியே விவசாய நிலத்தையும் தொழில் விருத்தியையும் கூட்டிக்கொடுக்கிறேன் எசமான் என்று சொன்ன கூட்டத்தில் கைநனைத்தவர்கள் அதானி, டாடா, அம்பானி, ஜிண்டால்.

                கற்றது கையளவு, இராமன் போன்ற தற்குறிகளுக்கு அப்பொழுது தெரியவில்லையா இந்திய தேசபக்தி!

                ஏனென்றால் இவர்களின் நிலமா பறிபோகிறது?
                இவர்களின் தொழிலா பறிபோகிறது?

                ஆறு மண்ணும் தீர்ந்து போனால் கேதே பசிபிக் விமானத்தில் சில்வர்லைன் கார்டை தேய்த்து ஹாங்காங் வழியாக சியாட்டில் பறந்துபோகும் ச்சீ ச்சீ கூட்டத்திற்கு இந்தியாவெல்லாம் ஒரு பொருட்டா?

                மண்ணும் தண்ணியும் பறிபோவது காதல் தோல்வியில் சாகிற விவசாயினுடையது அல்லவா?
                அப்படியானால் இந்தக் கூட்டத்தின் தேசபக்தி என்பது எத்துணை பெரிய கருத்துவிபச்சாரம்.

                எதிர்த்து கேள்வி கேட்டால் நம்மிடம் கேட்கிறார்கள் அமெரிக்கா பொருளை நீ பயன்படுத்தவில்லையா என்று!

                ஏதோ ஒரு படத்தில் காகா ராதாகிருஷ்ணன் வடிவேலுக்கு ஐடியா தருவாரே! “நீ கோவை சரளாவ அடையுனும்னா, கற்பழிச்சுட்டு தாலியக் கட்டு” என்று. அதுபோல நாட்டின் வளங்களை தனியார்மய, மறுகாலனியாக்கக் கொள்கைகளுக்கு விற்றுவிட்டு, பாரதமாதாவை கதறக் கதறக் கற்பழித்துவிட்டு இன்றைக்கு பொருட்களை மக்களிடம் திணித்தது மட்டுமில்லாமல் கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருசன் என்று பன்னாட்டுகம்பெனிகளுக்கு உத்தமபத்தினியாக பாய்விரிக்கச் சொல்கிறார்கள்! அப்படிச் சொல்லிவிட்டு பின்வாசலில் போய் நீ மட்டும் பத்தினியா என்கிறார்கள்.

                அட அயோக்கியர்களே உழுபவனுக்கு நிலம். உழைப்பவனுக்கு அதிகாரம் என்பது இந்தியக் காரனுக்கு மட்டுமல்ல; அமெரிக்கா பாட்டாளி வர்க்கத்திற்கும் தான்.

                ஆனால் 3000கோடி டைமண்ட் பிசினஸ் செய்கிற மார்வாடி மராத்தி, குஜராத்தி பனியாக்கள் இன்று ஜோசப் போன்றவர்களின் கையில் மதவெறியையும் கல்லையும் கொடுத்துவிட்டு அவர்கள் மட்டும் வைரக்கல் வியாபாரம் பார்க்கிறார்கள். உலகம் சுற்றும் வாலிபர்கள் காமெடி என்று மணிலாவில் மல்லாக்க படுத்துக்கொண்டு சிரித்துக்கொண்டிருக்கிறார்கள்.

                • தென்றலின் டிக் பாயிண்ட்டுகள்:

                  கஞ்சா தொடர்பு, விபச்சாரி, கற்பழிப்பு, அயோக்கியர்கள், கருத்து விபச்சாரம், மதவெறி, பாய்விரிப்பது, இன்னும் ஒன்றிரண்டு பாக்கி இருக்கிறதே தென்றல், அவற்றை ஏன் விட்டு விட்டீர்கள்?

                  எந்த ஊர் சென்றாலும் என் கூடு இந்தியாவில் தான் உள்ளது. என் நாட்டை விட்டு எங்கும் ஓடிவிட மாட்டேன். கவலைப்படாதீர்கள்.

                  மோடியின் ஆன்லைன் காவி ஆர்மிகள் ஒரு துருவத்தில் இருந்து அனைத்து ஊடகங்களிலும் கமென்ட் என்ற பெயரில் நாறடிக்கிறார்கள். மோடிக்கு எதிராக பேசினால் உடனே பாகிஸ்தானுக்கு ஓடிப்போ என்கிறார்கள். நீங்கள் அதன் எதிர் துருவத்தில் இருந்து கொண்டு உங்களால் முடிந்த வரை நாறடித்து கொண்டே உங்களை எதிர்த்து கருத்து தெரிவிப்போரை நாடு கடத்துகிறீர்கள்.

                  உருப்படியாக ஏதாவது வேலை செய்யுங்களேன் நண்பரே…

      • \\இதில் யார் நல்லவர் கேட்டவர் எனபது கூட்டிற்கு எந்தப்பக்கம் வாழ்பவர் என்பதை பொருத்தது//

        எல்லைக்கோட்டிற்கு எந்தப்பக்கம் இருக்கிறோம் என்பதற்கு தகுந்தாற்போல் பேசுவது நியாய உணர்வு கொண்ட மனிதனுக்கு அழகல்ல.நியாயத்தின் பக்கம் நின்று பேசுவதுதான் அழகு.தமது நாடேயாயினும் ஆட்சியாளர்களின் தவறுகளை எதிர்த்து பேசித்தான் ஆகவேண்டும்.வள்ளுவரும் இதைத்தான் செய்ய சொல்கிறார்.

        இடிப்பார் இல்லா ஏமரா மன்னன் குடி
        கெடுப்பார் இலானும் கெடும்.

        மன்னனும் [ஆட்சியாளர்கள்]அவன் குடிமக்களும் அழிந்து படாமல் காக்க வேண்டுமானால் அவனது தவறுகளை எதிர்த்து பேசித்தான் ஆகவேண்டும்.

        நான் சொல்லும் விவரங்கள் பொய்யாக இருந்தாலோ,வாதங்கள் தவறாக இருந்தாலோ,எடுத்துக்காட்டலாம்.அதை விடுத்து சீனாவுக்கு ஜல்லி அடிப்பதாக அவதூறு சொல்வது ராமனின் ஓட்டாண்டித்தனத்தை காட்டுகிறது.இராமனுக்கு வக்கு இருந்தால் உருப்படியான எதிர்வாதங்களை வைக்கலாம்.

      • \\இவர்களுக்கு கலாம் போன்றவர்கள் ………எரிச்சல் வரத்தான் செய்யும்//

        ஆம்,எரிச்சல்தான் எங்க ஊர்ல எங்க தெருவுல குடிக்க தண்ணி கிடைக்காம ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் அலைமோதி திரியும்போது வக்கிரம் பிடித்த கலாம் வகை கிறுக்கன்கள் கோடிகளை கொட்டி செவ்வாய் கோளில் தண்ணீர் இருக்கானு தேடுவதும்,ராக்கெட் விடுறோம் வல்லரசு ஆவுறோம்னு அதற்கு ஜல்லி அடிக்கும் முட்டாள்களையும் பார்க்கும்போது எரிச்சல் வரத்தான் செய்கிறது.

        மற்றபடி அணுகுண்டுகளும் அவற்றை ஏந்தி சென்று தாக்கவல்ல ஏவுகணைகளும்தற்காப்புக்கானவை என்று நம்புவது முட்டாள்தனம்.அவை ஆயுதப்போட்டியின் ஒரு அம்சம் அவ்வளவே.போர்களில் பயன்படுத்த முடியாத நாய் பெற்ற தெங்கம்பழங்கள் அவை. இரண்டாம் உலகப்போருக்கு பின் எத்தனையோ போர்கள் நடந்துள்ளன.ஆனால் எதிலும் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்படவில்லை.இனி வரும் காலங்களில் பயன்படுத்தவும் மனித சமூகம் அனுமதிக்காது.அந்த தெங்கம்பழங்களை செய்து குவிக்க மக்களின் வரிப்பணத்தை பாழாக்குவது கண்டு எரிச்சல் வரத்தான் செய்கிறது.

        உண்மையில் மக்களை,மனித சமூகத்தை நேசிப்பவர்கள் வல்லாதிக்க நாடுகள் ஏற்கனவே செய்து குவித்துள்ள அணுஆயுதங்களை அழிக்க கோரி போராடவேண்டும்.வல்லரசு போதையில் அணு ஆயுதங்களை செய்து குவிக்க ஆதரவு அளிக்க முடியாது.கூடாது.

        • நண்பர் திப்பு பாய் ,

          இராணுவ ஆயுத தளவாடங்களின் மீதான வெறுப்பை , அதற்கு கொட்டப்படும் மக்கள் வரிபணத்தை மாற்றி நல திட்டங்களுக்கு பயன்படுத்தலாம் என்ற உங்கள் நல் உணர்வை என்னால் புரிந்து கொள்ள முடிகின்றது. தார்மிக அடிப்படையில் நான் உங்கள் கருத்தை ஆதரிக்கின்றேன். அதே நேரத்தில்,எதார்த்தத்தில் இந்தியா போன்ற ஒரு முதலாளிகளின் அரசாங்க நாடு இராணுவத்துக்காக எவ்வளவு பணம் அதன் பட்ஜெட்டில் இருந்து செலவு செய்யலாம் என்று உங்களால் வரையரை செய்ய முடியுமா திப்பு ?

          மேலும் என் பின்னுட்டம் 17.1.2.1 ஐயும் பதில் அளிக்கும் போது நினைவில் கொள்ளுங்கள் . நன்றி . It’s extract is given below.

          கலாமின் ஏவுகணை ஆய்வுகள் அதன் பயன்பாடுகள் தொழிலாளர்கள் அமைக்க போகும் புதிய ஜனநாயக குடியரசுக்கு எந்த விதத்திலும் பயனற்றது என்று கூற வருகின்றிர்க்லா ? கலாமின் விண்வெளி ஆய்வுகள் மற்றும் அதன் பயன்பாடுகளை தொழிலாளர்கள் அமைக்க போகும் புதிய ஜனநாயக குடியரசு முற்றிலும் புறக்கணித்து விடமுடியுமா ?

          • நல்ல கேள்வி.இது பற்றிய உங்கள் முந்தைய பின்னூட்டத்தை இப்போதுதான் பார்க்கிறேன்.சற்று அவகாசம் கொடுங்கள்.பேசுவோம்.

            நண்பரே மீண்டும் உங்களுடன் உரையாடுவதில் மிக்க மகிழ்ச்சி.

        • திப்பு,

          நல்லா தம் கட்டி பேசறீங்க. உங்க நட்பு நாடான சீனாவை அணு ஆயுதங்களை அழிக்க சொல்லி கோருங்களேன்?

          • “””உண்மையில் மக்களை,மனித சமூகத்தை நேசிப்பவர்கள் வல்லாதிக்க நாடுகள் ஏற்கனவே செய்து குவித்துள்ள அணுஆயுதங்களை அழிக்க கோரி போராடவேண்டும்.வல்லரசு போதையில் அணு ஆயுதங்களை செய்து குவிக்க ஆதரவு அளிக்க முடியாது.கூடாது.”””

            –திப்பு

            திப்புவின் அணு ஆயுத அழிப்பு கருத்தில் வல்லரசுகளான சீனா ,அமெரிக்காவும் அடங்கும் அல்லவா கற்றது ? அப்படி இருக்க ஏன் இந்த குதர்க்கமான பின்னுட்டம் ? சீனா இந்தியாவின் நட்பு நாடாக இல்லாத பட்சத்தில் எதற்காக இந்திய அரசு சீனாவுடன் உறவுகளை மேம்படுத்திகொள்ள முயன்று கொண்டு உள்ளது ? பின்பு ஏன் பொருளாதார ,வர்த்தக உறவுகளை செழுமையாக்கிக்கொள்ள முயலுகின்றது ?

            • முதலில் அத்தைக்கு மீசை முளைக்கட்டும். அதற்கு பின் சித்தப்பா என்று கூப்பிடுவதா என்று விவாதிக்கலாம். சீனா, பாகிஸ்தான் இவர்களெல்லாம் அணு ஆயுதங்களை முழுக்க முழுக்க அழித்த பின்னர் இந்தியா அணு ஆயுதங்களை அழிப்பதை பற்றி பேசுவோம்.

              சொந்த நாட்டுக்கு எதிராக அந்நிய நாடு ஆக்கிரமித்ததை திப்பு அவர்கள் ஆதரிப்பதும், அந்நிய நாட்டுக்கு வேலை நிமித்தம் சென்று வருவதும் ஒன்றா? சீனாவுக்கு மட்டும் தான் செல்கிறேனா? உலகம் முழுக்க தான் ஐயா சென்று வருகிறேன். கம்மியுனிசம், ஜனநாயகம், மன்னராட்சி, மக்களாட்சி, என்று அனைத்து வகை ஆட்சி நடத்தும் நாடுகளுக்கும் சென்று வருகிறேன்.அந்த நாட்டு மக்களோடு உரையாடி அவர்களின் வாழ்க்கை முறை, அந்த நாடுகளின் ஆட்சிமுறை பற்றி தெரிந்து வருகிறேன். வெறும் கம்மியு புத்தகங்களை மட்டும் படித்து உலகம் இப்படித்தான் என்று புரிந்து கொள்பவர்களை விட அந்தந்த நாட்டு மக்களோடு நேரடியாக உரையாடும் எனக்கு உண்மை நிலவரம் தெளிவாகவே தெரிகிறது.

              பல்வேறு பின்னூட்டங்களில் நான் வெளிநாடுகளுக்கு பணி நிமித்தமாக சென்று வருவதை “பொருக்கி தின்ன” செல்வதாக அவதூறு பரப்பும் நண்பர்களுக்கு ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். நான் என் சொந்த உழைப்பில் கிடைத்த சோற்றை உண்கிறேன். பொருக்கி தின்னவில்லை. அடுத்தவரின் நன்கொடையில் நான் வாழவில்லை.நான் உண்ணும் சோற்றுக்கு என் வியர்வை காரணம், அடுத்தவரின் நன்கொடை அல்ல. இதற்கு மேலும் அவதூறு பேசினால் பின் உங்கள் வருமானத்தின் ஆதாரங்களை முதலில் எனக்கு தெரியப்படுத்தி விட்டு பேசுங்கள்.

              • \\நான் உண்ணும் சோற்றுக்கு என் வியர்வை காரணம்//

                கன்னக்கோல் திருடன் கூட வியர்வை வர உழைக்கிறான்.அதற்காக அவன் உண்ணும் சோறு நேர்மையாக வந்தது என சொல்ல முடியுமா.நீங்கள் செய்யும் வேலை,அதனால் மக்களுக்கு ஏற்படும் நன்மை,தீமைகளை வைத்தே அது நேர்மையான வருமானமா,அநீதியான வருமானமா,என்பதை முடிவு செய்ய முடியும்.

                தாரளமயமாக்கலுக்கு பின் ஏகாதிபத்திய நாடுகளின் நிறுவனங்கள் தங்கள் பொருட்களை இந்தியாவில் கொட்டி வருகின்றன.அதனால் இந்திய மக்களில் கணிசமான பகுதியினர் வாழ்வாதாரத்தை இழக்கிறார்கள்.அதில் சீன ஏகாதிபத்தியம் முன்னிலை வகிக்கிறது.நீங்கள் சீனாவுடன் வணிகம் செய்கிறீர்கள் எனும்போது நீங்களும் அந்த அநியாயத்தில் பங்கு கொள்கிறீர்கள்..எம் மக்களின் வாழ்வை சூறையாடி சொத்து சேர்த்து வாழும் உங்களை நேர்மையான வருமானத்துக்கு சொந்தக்காரர் என எப்படி சொல்ல முடியும்.நீங்கள் சோற்றில் கை வைக்குமுன் கை கழுவிக் கொள்வது தண்ணீரில் அல்ல.மக்களின் குருதியில்.

                சீனாக்காரன் கொள்ளைக்கு நாட்டையும் மக்களையும் காட்டிக்கொடுத்து கொழுக்கும் அற்பவாதிகள் ,நடத்தும் பிழைப்பு பொறுக்கி தின்பதுதான்

                • திப்பு,

                  நான் செய்யும் வேலையால் யாருக்கு வாழ்வாதாரம் பறிபோனது என்று நினைக்கிறீர்கள்?

                  முதலில் நீங்கள் செய்யும் வேலை என்ன?

                  உங்கள் வீட்டில், நீங்கள் பயன்படுத்தும் பொருட்களில் மென்பொருட்கள் அனைத்தும் சுவதேசி பொருட்களா? அமெரிக்கா, சீனா நாடுகளின் எந்த வித பாதிப்பும் இல்லாமல் நீங்கள் நூறு சதவீதம் இந்திய பொருட்களை உபயோகிக்கிறீர்களா?

                  நீங்கள் பயன்படுத்தும் கணினி, தொலைகாட்சி, தொலைபேசி இவற்றின் உள்ளிருக்கும் காபோநேன்ட்கள் அனைத்தும் இந்தியாவில் இருந்தே செய்யப்பட்டதா? உங்கள் கருத்துப்படி நூறு சதவீதம் வெளிநாட்டு பொருட்களை உபயோகப்படுத்தாதவன் உண்மையான தேசபக்தன். சரி, நீங்கள் அதில் எத்தனை சதவீதம் தேருகிரீர்கள்?

                  நீங்கள் பயன்படுத்தும் கணினி, தொலைக்காட்சி, தொலைபேசிகளின் பிராண்ட்கள் பெயர் என்ன?

              • உலகம் சுற்றும் வாலிபன் கற்றது கையளவு உண்ணும் சோற்றுக்கு, அவரது வியர்வைதான் காரணமாம். ஏன் அவர் செல்லும் பிசினஸ் கிளாஸ் பிளைட்டில் ஏசி பேனோ கிடையாதோ?
                இந்த தரகு முதலாளி உழைப்பாளி போல் வேசம் போடுவது வெட்கக்கேடு! இவர் வாயாலேயே, தொழிலாளிகளிடம் நயந்து பேசி வேலை வாங்கி கம்பெனியின் இலாபத்தை அதிகரித்தாராம்! இதழ் புன்னகை ஓரம் தொழிலாளிகளின் நிணத்தை வடியவிட்டு நிற்கிற இந்த தரகர் திரை கடல் ஓடியும் திரவியம் தேடுகிறாராம்!

                அப்படிப்பார்த்தால்

                1. டாடா கூடத்தான் சீனாவில் கஞ்சா விற்று வியர்வை சிந்தி உழைத்தார்

                2. பாஜக நிதின் கட்காரி பாகிஸ்தானுக்கு பூண்டு, சர்க்கரை தொழில்களில் ஈடுபட்டார்!

                3. பாபர் மசூதி இடிப்பில் ராமஜென்ம பூமி இயக்கம் என்ற பெயரில் அமெரிக்க இந்துத்துவ கூட்டம் காணிக்கை செங்கக் கட்டி என்ற பெயரில் 3000 கோடி வழங்கியது.

                4. அசோதாம சத்கமய என்று சொன்ன ஜெயமோகன் கூட்டம் அமெரிக்க சுதர்சன கிரியா பற்றி வகுப்பெடுக்கின்றனவாம்.

                5. கனடா வாய்ப்பு கிடைக்கவில்லையென்று கதறிய சில்லுண்டி இராமன், விவசாயிகள் தண்ணீருக்காக கோககோலாவை எதிர்த்தபோது விவசாயிகளை சோம்பேறியென்றும் அருண்ஜெட்லி போன்றவர்கள் விவசாயிகள் தற்கொலை செய்தால் காதல் தோல்வி என்றும் தூற்றினார்கள். அதையும் தாண்டித்தான் இராமன் போன்றவர்கள் மேலும் சொன்னார்கள், சாப்ட்வேர் இஞ்சினியரெல்லாம் பிச்சையா எடுக்க வேண்டும் என்று! விவசாயிகளை மறந்த இந்தக் கூட்டம் தேசபக்தி கூட்டமாம்.

                6. அமெரிக்கக் காரன் ஆடை உருவிய அம்மணமாக்கிய கலாம் கூட சொன்னார்; அறிவிலி மக்களே 123 அணுசக்தி ஒப்பந்தம் பற்றி இதுகளுக்கெல்லாம் என்ன தெரியுமென்று!

                சும்மாவா சொன்னார் சாமுவேல் ஜான்சன்; “தேசபக்தி அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம் Patriotism is a last refuge of a scoundrel ” என்று !

                ஆனால் அவுங்காரபாத் போகக்கூட வக்கில்லாத ஜோசப்பிற்கு மூலதனமே மதவெறி!
                ஏமாளி திப்புவிற்கு கிடைத்ததோ தேசத்துரோகி பட்டம்!
                ஆனால் பொறுக்கித்தின்னி கற்றது கையளவுகள் தேசபக்தர்கள்!

                • அடுத்த நாட்டுக்காரன் நம் நாட்டுக்குள் அடாவடியாக ஆக்கிரமிப்பதை ஆதரிப்பவர்கள் நம்மை பார்த்து தேசப்பற்று என்று கிண்டல் அடிக்கிறார்கள்.

                  பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி அவர்களின் வேலையை செம்மையாக செய்ய வைத்தேன் என்று தான் அப்போது கூறினேன். நீங்கள் அதை நயவஞ்சகமாக திரித்து கூற வேண்டாம்.

                  இப்போது வேறு ஒரு பணியில் உள்ளேன். இந்த பணியில் வேலை நிமித்தமாக பல நாடுகளுக்கு சென்று வரும் நிலையில் இருக்கிறேன். எங்கு சென்றாலும் எங்கு உண்டாலும் அந்த உணவை உண்பதற்கு என் உழைப்பையே நம்பி இருக்கிறேன். அடுத்தவர் நன்கொடையை அல்ல.

                  டாடா சீனாவில் கஞ்சா விற்றார் என்று நீங்கள் உவமானம் கூறுவது என்னமோ சீனாவுக்கு வேலை நிமித்தமாக செல்லும் அனைவரும் கஞ்சா விற்கிறார்கள் என்ற பொருள் வரும்படி உள்ளது. அவதூறு பரப்புவதை ஒரு முழுநேர வேலையாகவே செய்கிறீர்கள். நடத்துங்கள்…

          • \\உங்க நட்பு நாடான சீனாவை அணு ஆயுதங்களை அழிக்க சொல்லி கோருங்களேன்?\\

            கலாம் ரசிகரே! இது முட்டாள் தனமான கேள்வி. சப்பானின் புகுசிமா அணுஉலை விபத்து சென்னை மழையிலும் தெரிகிற பொழுது, எவர் ஒருவரும் எந்த நாட்டையும் எதிரி நாடு நட்பு நாடு என்பதன் அடிப்படையில் அணு ஆயுதங்களை ஆதரிக்க மாட்டார். அதனால் ஆபத்து அனைவருக்கும் தான் என்கிற பொழுது சீனாவை வைத்து கம்யுனிச எதிர்ப்பு அரிப்பு சொரிந்து கொள்ளும் சில்லறைத்தனம் எதற்கு க.கை?

            சீனாக்காரன் அணுஆயும் பயன்படுத்தினால் அழியப்போவது அண்டார்டிகா கெண்டை மீனும் தான். அதைவிடுத்து இராமனைப்போன்று வடிகட்டிய முட்டாளாக இருப்பது எதற்காக?

            • எது முட்டாள் தனமான கேள்வி தென்றல்,

              நம்மை சுற்றி இருக்கிறவங்க அணு ஆயுதம் வைத்து கொண்டு நம்மை பயமுறுத்தலாம். நாம் பாதுகாப்புக்கு ஒன்று வைத்து கொண்டால் என்ன தப்பு?

              இந்த விவாதத்தில் சீனாவை நுழைத்தது நண்பர் திப்பு அவர்கள் தான். சீனா அமைதியை விரும்பும், எந்த ஒரு வம்பு தும்புக்கும் போகாத அமைதியான ஒரு உத்தம நாடு என்ற திப்பு கூறியதால் அவருக்கு பதிலளித்தேன்.

              இந்தியா அணு ஆயுதம் வைத்திருப்பது தவறு என்றால் சீனா வைத்திருப்பதும் தவறு தானே. உலகம் முழக்க இருக்கும் அனைத்து நாடுகளும் அவரவர் நாடுகளில் இருக்கும் அணு ஆயுதங்களை அழித்தால் இந்தியாவுக்கும் அணு ஆயுதத்தின் தேவை இருந்திருக்காது. அமெரிகாவிடமும் சீனாவிடமும் உள்ளது. தற்போது பாகிஸ்தானிலும் உள்ளது. என்ன செய்யலாம் சொல்லுங்கள். எல்லோரும் வாருங்கள், இந்தியாவில் அணுகுண்டு போட்டு கொன்று மகிழுங்கள், நாங்கள் அமைதிப்புறாக்கள், பதிலுக்கு எங்களிடம் இருந்து ஒரு மத்தாப்பு கூட வெடிக்காது, தாராளமாக வாருங்கள், வந்து குண்டு போட்டு மகிழுங்கள் என்று சொல்லலாமா????????????

              வாதம் விதண்டாவாதமாகிறது என்று எலி சொன்னதன் அர்த்தம் தென்றலின் பதில்களை படித்தால் தெளிவாக விளங்கும். எங்கு விதண்டாவாதம் ஆரம்பிக்கறது என்று.

              தற்போதைய நிலையில், அண்டை நாடுகளின் பலத்தினை கருத்தில் கொண்டு இந்தியா அணு ஆயுதம் வைத்திருப்பதில் தவறே இல்லை என்பது என் கருத்து.

              • தென்றல் மற்றும் திப்புவின் அணு ஆயுதம்-ஏவுகணை எதிர்ப்பு கருத்துகள் ஜோசப் மற்றும் கற்றது போன்றவர்களால் இந்தியா மட்டும் அணு ஆயுதம்-ஏவுகணை வைத்துகொள்ள கூடாது ஆனால் சீனா ,பாக் அணு ஆயுதம்-ஏவுகணை வைத்து கொள்ளலாம் என்ற பொருளில் உள்நோக்கத்துடன் திரிக்க படுகின்றது. எனவே இந்த விவாதம் ஆரோக்கியமான ,அறிவு பூர்வமான நிலையில் இருந்து ஜோசப் மற்றும் கற்றது போன்றவர்களால் உள்நோக்கம் உள்ள அறிவற்ற விவாதமாக மாற்றபடும் நிலைக்கு தள்ள படுகின்றது.

                ஒட்டு மொத்தமாக உலக நாடுகள் அணு ஆயுதம்-ஏவுகணைகளை அழிக்க வேண்டும் என்ற நல் உணர்வுடன் தென்றல் மற்றும் திப்புவால் கூறப்படும் கருத்துகளை ஏதோ இந்தியா மட்டும் அவற்றை வைத்து கொள்ள கூடாது என்ற பொருளில் ஜோசப் மற்றும் கற்றது போன்றவர்கள் புரிந்து கொள்கின்றார்கள்.

              • திருவாளர் கற்றது கையளவு,

                மறுபடியும் முட்டாள்தனமாக பிதற்றுகிறீர்! அண்டை நாடுகள் அணு ஆயுதம் வைத்திருந்தால் இந்தியாவும் அணு ஆயுதம் வைத்திருப்பது எப்படி எந்த விசயத்தில் பாதுகாப்பு என்று கொஞ்சம் விளக்குங்களேன்.

                உங்கிட்ட லெட்சுமி வெடி இருக்கு, ஆனா எங்கிட்ட அதவிட ஆபத்தான அவுட்டு வெச்சிருக்கேன் என்று விளையாடும் விசயமல்ல அணு ஆயுதம். இரண்டு தரப்புல எவன் போட்டாலும் பிரச்சனை இரண்டு பேருக்கும் தான்.

                செர்னோபில் அணு உலை விபத்து 1200 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள குழந்தையை ஊனமாக்கியது. இது புரியாம லூசு மாதிரி அணு ஆயுதம் தற்காப்பு பாதுகாப்புன்னு யார் சொல்வா? ஆர் எஸ் எஸ் காரன் சொல்லிக்கிட்டு திரியுறான்.

                பாகிஸ்தான் மேலே அணுகுண்டு போட்டாலும் அதனால் வரும் பாதிப்பு பாகிஸ்தானை விட இந்தியாவிற்குத்தான் அதிகம். பூகோள ரீதியாக தாழ்வான பகுதியில் இருந்துவிட்டு அணு ஆயுதம் வைத்திருப்பது மல்லாக்க படுத்துக்கொண்டு எச்சி துப்புதவதற்கு சமம்! தெற்கு நோக்கி வீசுகிற வடக்கத்தி காற்று, அண்டார்டிகாவை கூட விட்டுவைக்காதுன்னு சொன்ன பிறகு அர்னால்ட் படத்துல பொம்ம டுப்பாக்கிய வைச்சு சீன்போடற மாதிரி கலாம் ரசிகர்கள் ஏன் இம்புட்டு அலும்பக் கூட்டுறீக?

                • தென்றல்,

                  புரியாத மாதிரி நடிக்கிரவரிடம் எப்படி விளக்கினாலும் விதண்டாவாதமாக தான் பேசுவார்கள்.

                  நம்மிடம் அணுகுண்டு இருக்கிறதென்றால் அடுத்த நாட்டுக்காரன் நம் மீது அனாவசியமாக போர் தொடுப்பதற்கு யோசிப்பான். அணுகுண்டு வைத்திருப்பது எடுத்த உடனே எதிரி நாட்டு மேல் வீசி அழிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அல்ல, எதிரி நாட்டுக்காரன் நம் மீது அணுகுண்டு வீசினால் எங்கே நம் நாட்டு மக்களின் மேல் அவன் அணுகுண்டு வீசி விடுவானோ என்று ஒரு பயத்தை உண்டாக்குவதற்கு தான்.

                  இதுவும் உங்களுக்கு புரியவில்லை என்றால் நீங்கள் பொய் சொல்கிறீர்கள் என்று அர்த்தம்.

                  அணுகுண்டு என்று இல்லை தென்றல், இராணுவம், படை, பாதுகாப்பு என்று எல்லாமே அடுத்த நாட்டுக்காரனை சும்மாவாச்சுக்கு வம்புக்கு இழுப்பதற்காக இல்லை. அடுத்த நாட்டுக்காரன் நம் மீது சும்மாவாச்சுக்கும் வம்புக்கு வராமல் இருப்பதற்கு தான்.

                  //பாகிஸ்தான் மேலே அணுகுண்டு போட்டாலும் அதனால் வரும் பாதிப்பு பாகிஸ்தானை விட இந்தியாவிற்குத்தான் அதிகம். பூகோள ரீதியாக தாழ்வான பகுதியில் இருந்துவிட்டு அணு ஆயுதம் வைத்திருப்பது மல்லாக்க படுத்துக்கொண்டு எச்சி துப்புதவதற்கு சமம்! //

                  அண்ணனுக்கு எண்ணே அறிவு… அப்பப்பா, புல்லரிக்குதுங்கோ!!!!!

        • //ஆம்,எரிச்சல்தான் எங்க ஊர்ல எங்க தெருவுல குடிக்க தண்ணி கிடைக்காம ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் அலைமோதி திரியும்போது வக்கிரம் பிடித்த கலாம் வகை கிறுக்கன்கள் கோடிகளை கொட்டி செவ்வாய் கோளில் தண்ணீர் இருக்கானு தேடுவதும்,ராக்கெட் விடுறோம் வல்லரசு ஆவுறோம்னு அதற்கு ஜல்லி அடிக்கும் முட்டாள்களையும் பார்க்கும்போது எரிச்சல் வரத்தான் செய்கிறது.
          //

          ரெண்டு பசங்களை படிக்க வைக்குறீங்க . ஒருத்தன் கொடுத்த பணத்தில் புக் வாங்கி நல்லா படிச்சு பர்ஸ்ட் மார்க் வாங்கறான் . இன்னொருத்தன் கொடுத்த பணத்தில் ஜாலியாக சினிமா பார்த்து விட்டு எழுத் படிக்க முடியாமல் திணறுகிறான் . இப்போ தம்பிக்கு எழுதவே தெரில உனக்கு எதுக்குடா காலேஜ் டிக்ரீ ? அப்படி சொல்ல்வீன்களா ?

          தண்ணி பிரச்சினைக்கும் பணம் ஒதுக்கப்டுகிறது அறிவியலுக்கும் ஒதுக்கபடுகிறது .
          தன்னடிபடை தேவைக்காக கொடுக்கப்படும் பணத்தை சரியான வழியில் செலவழிக்கும் ஆட்களை தேர்வு செய்யாமல், ஊதாரிகளை தேர்ந்தெடுத்து விட்டு , அய்யோ அப்பா என்று ஊளை இடுவது அழகல்ல

      • திப்பு போன்ற___________ சீனாவுக்கு சப்போர்ட் பன்றதும் வினவு, தென்றல் போன்ற ___________ பாகிஸ்தான் போன்ற இசுலாமிய நாடுகளுக்கு சப்போர்ட் பன்றதும் ஏன் என்ரு தெரியவில்லை பாகிஸ்தானோ இல்லை சீனாவோ ஏவு கனைகளை செனெனையை நோக்கி அனுப்பினால் அழியப்போவது அப்பாவி மக்கள் தான் ,அவர்களும் உழைக்கும் மக்கள்தான் என்பதை கம்மூனிச _____ இசுலாமிய ________ அறிந்து கொள்வார்களா…

        • ஜோசப், இந்தியா மட்டும் அணு ஆயுதம் மற்றும் ஏவுகணைகளை வைத்து கொள்ள கூடாது ,ஆனால் பாக் மற்றும் சீனா அவற்றை வைத்துகொள்ளலாம் என்று தென்றல் மற்றும் திப்பு கூறியது போல ஜோசப் அவர்கள் உண்மைக்கு மாறாக பின்னுட்டம் அளித்துள்ளார். உலகம் முழுவதும் அணு ஆயுத-ஏவுகணை பரவலை தானே இவர்கள் இருவரும் வேண்டாம் என்கின்றார்கள். தார்மிக ரீதியில் நல்ல விசயம் தானே ஜோசப் ? பின்பு ஏன் இவர்கள் இருவரையும் நட்புணர்வு இன்றி சமுக தீ ஆயுதமான மதவாத பெற்ரோல்-தீ கொன்டு தாக்குகின்றிர்கள் ஜோசப் ?

        • நீங்க சரியான டியுப்லைட் ஜோசப். இது ரொம்ப லேட்…இப்போதாவது புரிந்ததே….

          என்ன, இவங்க எழுதியதை அப்படியே நம்பி நீங்களும் அப்துல் கலாம் அவர்களின் மேல் சேற்றை வீசி விட்டீர்கள். சரி விடுங்கள், தவறு செய்வது மனித இயல்பு தானே. அதை புரிந்து கொண்டு திருத்தி கொண்டால் சரி.

          • கற்றது கையளவு நீங்க தான் சரியான non electric chock டியுப்லைட்! ஜோசப் அவர்கள் கலாம் மீது வைத்த முற்ற சாட்டுகளை எங்கே மாற்றிக்கொண்டார் என்று கூறுங்கள் பார்ப்போம் ?

            பின்னுட்டம் 11.1 ல் ஜோசப் கூறிய கீழ் உள்ள கருத்தை எங்கே மாற்றிக்கொண்டார் என்று கூறுங்கள் பார்ப்போம் ?

            “”அண்ணன் கக அப்துல் கலாம் நல்லவரா கெட்டவரா தெரியவில்லை இருந்தாலும் அவர் காசு பிடிங்கி பல்கலைக்கழகம் ,பொறியியல் கல்லூரிகளுக்கு எல்லம் சென்று உரையாற்றியது அவர்களின் பிஸினசை டெவலப்பன்னி விட்டது எல்லாம் எதுக்குனு விளக்குங்களேன் ,தனியார் மயமாக்கப்ப்டும் கல்வித்துறைக்கு எதிராக குரல் குடுக்க வேண்டாம் அட்லீஸ்ட் தனியார் கல்லூரிகளின் பிஸினஸ் டெவலப்மென்ட்டுக்கு உதவி செய்யாமலே இருந்திருக்கலாம் இல்லயா…””

            • ஜோசப் முதலில் அப்போது பதிவிட்டபோது வினவின் கட்டுரைகளையும் அதன் பின்னூட்டங்களையும் படித்து குழம்பி பதிவிட்டார். இப்போது தெளிவாகி இருப்பார்.

              முதலில் அப்துல் கலாம் தனியார் கல்லோரிகளுக்கு மட்டும் சென்றார் என்ற மாயையான ஒரு பொய்யான ஒரு பிம்பத்தை வினவில் வந்த சில கட்டுரைகளை அப்படியே உண்மை என்று நம்பி அவர்களும் அதற்கேற்றாற்போல் பின்னூட்டங்களை பதிவிட்டார்கள். சற்று வினவை தாண்டி மற்ற செய்திகளையும் படித்தால் அப்துல் கலாம் எந்த கல்லூரிகளுக்கெல்லாம் சென்று உரையாற்றினார் என்று தெரியவரும்.

              இது குறித்து பின்னூட்டம் 3.1.1.1.1.1.1 ரெபெக்கா மேரி அவர்களுக்கு அளித்த பதிலில் தெளிவாக விளக்கி இருக்கிறேன். அப்துல் கலாம் அவர்களை பொறுத்தவறை யார் அழைத்தாலும், அவருக்கு நேரம் இருக்கும் பட்சத்தில் போகத்தான் செய்கிறார். இதில் பணக்கார, ஏழை கல்லூரி, அரசு, தனியார் கல்லூரி என்று அவர் பிரித்து பார்க்கவில்லை. இங்கு வினவில் தான் சிலர் விஷமமாக சிண்டு முடிகிறார்கள்.

              • //ஜோசப் முதலில் அப்போது பதிவிட்டபோது வினவின் கட்டுரைகளையும் அதன் பின்னூட்டங்களையும் படித்து குழம்பி பதிவிட்டார். இப்போது தெளிவாகி இருப்பார். //
                நான் தெளிவாத்தேன் இருக்கேன் அண்ணன் ககை நீங்கதான் குழப்புறீக அதுவுன் நான் என் கருத்தை மாற்றிக் கொண்டதாக புளகாங்கிதம் வேறு அடைகிறீர் இப்ப எங்க மாவட்டத்துலயே சரியான லேப் வசதி புரபஸர்கள் கூட இல்லாத ஒரு கல்லூரிக்கு அப்துல் கலாம் வந்துட்டு போனாரு அதனால அந்த மாணவர்களுக்கு என்ன லாபம் அப்துல் கலாம நேருல பாத்து கைகுலுக்குனத தவிர,இன்னும் அந்த காலேஜ் அப்பிடித்தான் இயங்கிட்டு இருக்கு என்ன அவிங்க புராஸ்பெக்டஸ்ல அப்துல் கலாம் போட்டாவ போட்டு மாணவர்களை மேலும் ஏமாத்துராங்க,அப்துல் கலாம் போட்டாவ பாத்தே இது ரெம்ப நல்ல காலேஜ் அப்பிடினு அப்பாவியா நம்புறாக காலேஜ் நடத்துறவனுக்கு அட்மிஸன் மற்றும் பிஸினஸ் டெவலப்மென்ட் அவ்வளவுதான் இதுல எங்கயா மாணவர் நலம் இருக்குது

                • மறுபடியும் முதலில் இருந்தா ஜோசப்,

                  சரியான லேப் வசதி இல்லாத கல்லூரிகள் அப்துல் கலாம் அவர்களை அழைத்து அவர் வராமல் இருந்தாரா, இல்லை லேப் வசதி கூட செய்ய அக்கறை இல்லாத கல்லூரி நிர்வாகம் அப்துல் கலாமை அழைப்பதற்கு மெனக்கேட்டிருப்பார்கள் என்று நீங்கள் நம்புகிறீர்களா?

                  அப்ரஹாம் லிங்கன், அப்துல் கலாம் இவர்கள் எல்லாம் எங்களை போன்ற எளியோரும் நாட்டின் ஜனாதபதி ஆக முடியும் என்பதற்கு ஒரு உதாரணம். உங்களுக்கு வேண்டுமானால் அவரை பற்றி அபிப்பிராயம் இல்லாமல் இருக்கலாம். நாட்டில் என்னற்றவர்களுக்கு அவர் இனியவர், எளியவர், நல்லவர், ஊழல் செய்யாதவர். உங்களை பற்றி எனக்கு தெரியாது. என்னை பொறுத்தவரை அவருக்கு முன்னும் பின்னும் ஜனாதபதியாக வாழ்ந்தவர்களோடு ஒப்பிடும்போது இவரை நேரில் பார்ப்பதும், கை குலுக்குவதும் நல்ல விடயங்கள் தான். சச்சின் டெண்டுல்கர், ரஜினிகாந்த் இவர்களை நேரில் பார்ப்பதற்கு, கை குலுக்குவதற்கு ஒரு பெரும் கூட்டமே காத்திருக்கிறது. அப்துல் கலாம் அவர்களை நேரில் பார்க்க விரும்பிய மாணவர்களின் ஆசை ஒன்றும் தவறில்லையே.

                  கல்லூரிகள் அவரது படத்தை ப்ராச்பெக்டசில் போடுவதற்கு அப்துல் கலாம் அவர்கள் எந்த விதத்திலும் பொறுப்பாக முடியாது. அவர் மாணவர்களோடு உரையாடுவதற்கு மட்டும் வருகிறார். கல்லூரியின் பணம் அவரை அண்டவில்லை நண்பரே.

                  • “கலாம் மாணவர்களிடம் உரையாட மட்டுமே வருகிறாராம். தனியார் நிறுவனங்களின் பணம் அவரை அண்டவில்லையாம்” இது உலகம் சுற்றும் வாலிபனின் கருத்து!
                    ஆம். உண்மைதான். சினிமாவில் கூட நடிகை சிலுக்கு அவர்களின் சதையை தயாரிப்பாளர்கள் தான் படம்பிடித்து காசு சம்பாரித்து கோடிக்கணக்கில் புரண்டார்கள். எப்படி சினிமாவிற்கு சிலுக்கு அவர்களின் கவர்ச்சி அவசியமோ அதோ போன்று அரசியல் கவர்ச்சிக்கு கலாம்! இதில் கனவு கண்டு சுயஇன்பம் காணவேண்டியது அவரவர்களின் வர்க்க நலன் தராதரம் பொறுத்தது.

                    எப்படி சிலுக்கு அவர்களை பொது நலம் சார்ந்து நடிக்கவில்லையென்று நாம் கேட்க முடியாதோ கலாமையும் கேட்காதீர்கள் என்கிறார் உலகம் சுற்றும் வாலிபன்.

                    தனியாரும் தயாரிப்பாளரும் ஒன்று!
                    கலாம் சொல்வது படி கனவு காண்பது நன்று!

                    என்று சொல்கிற பிலிப்பைன்ஸ் உல்லாச பயணியின் தார்மீக கருத்தை ஜோசப் போன்றவர் புரிந்துகொள்ளாமல் மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்கிறார்கள்.

                    வேண்டுமானால் ஜோசப் அவர்களே, உலகம் சுற்றும் வாலிபனின் உக்ரைன் அனுபவத்தை கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். உக்ரைன்காரன் கற்றது கையளவிடம் கை கட்டி, மண்டியிட்டு வாய்பொத்தி கம்யுனிசம் பற்றி கதறியிருக்கிறான். அதவிட்டுபுட்டு அண்ணாத்தைய டயர்டாக்காதீக!

                    • தென்றல் அவர்களே,
                      மீண்டும் சொல்கிறேன், உலகம் சுற்றுவது ஊதாரித்தனம் செய்வதற்கும் உல்லாச பயணத்துக்கும் அல்ல. பணி நிமித்தமாக செல்ல வேண்டிய நிர்பந்தம். சென்று வருகிறேன். உல்லாசப்பயணி என்று திசைதிருப்பும் உங்களின் அடாவடி கருத்தினை வன்மையாக எதிர்க்கிறேன்.

                      பணி நிமித்தமாக ஒரு நாட்டுக்கு செல்லும்போது அங்கிருக்கும் பொதுமக்களுடன், நண்பர்களுடன் நேரம் கிடைக்கும்போது அவர்களின் நாடு, கலாச்சாரம், ஆட்சிமுறை பற்றி கேட்டு தெரிந்து கொள்கிறேன். அவ்வாறு கேட்டதில் அவர்களிடம் இருந்து எனக்கு கிடைத்த தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அவ்வளவு தான். இதில் என்ன தவறு உள்ளது?

                      கலாம் அவர்கள் பணம் வாங்கிக்கொண்டு மாணவர்களுடன் உரையாற்றினாரா என்ற கேள்விக்கு சிலுக்கு, சதை, சுய இன்பம் என்று பிதற்றுகிறீர்கள். எந்த ஒரு கருத்துக்கும் அவதூறு பரப்பாமல் நேரடியாக பதில் சொல்லும் நியாய உணர்வு உங்களிடம் இல்லையா தென்றல்?

                  • //சரியான லேப் வசதி இல்லாத கல்லூரிகள் அப்துல் கலாம் அவர்களை அழைத்து அவர் வராமல் இருந்தாரா, இல்லை லேப் வசதி கூட செய்ய அக்கறை இல்லாத கல்லூரி நிர்வாகம் அப்துல் கலாமை அழைப்பதற்கு மெனக்கேட்டிருப்பார்கள் என்று நீங்கள் நம்புகிறீர்களா?//என்ன ஆச்சு ககை உளரது மாரி தெரியுது சரியா செயல் படாத கல்லூரிகள் தங்களின் பிஸினசை டெவலப் பன்னுறதுக்கு அப்துல் கலாமை ஒரு விளம்பர மாடலாகத்தான் பயன் படுத்தினார்கள் அதுக்கு அந்த கல்லூரி நடத்துறவங்க மெனக்கிட்டுதான் இருப்பாக இது அவுக பிஸினஸ் டெவலெப்மென்ட் .ஆனா அப்துல் கலாம் விளம்பர மாடல போறதுக்கு காசு வாங்கல அதுனால அவரு நல்லவருதான் அப்பிடி சொன்னா எங்கயோ இடிக்கிதே…

          • அப்துல் கலாமின் மீது சேற்றை வீசிவிட்டார்களாம். கலாமின் சட்டையை உருவி அம்மணமாக்கிய அமெரிக்க விபச்சாரத்திற்கு விளக்கு பிடித்த கையளவு போன்ற நடுத்தரவர்க்க கூட்டம் இன்றைக்கு நீலிக்கண்ணீர் வடிக்கிறார்கள். இயேசுவை காட்டிக்கொடுத்த யூதாசு, இசுலாமியர்களை மற்றும் உழைக்கும் மக்களைக் காட்டிக்கொடுத்த கலாம் இவர்கள் வரிசையில் பாலத்துக்கு அடியில் அமர்ந்துகொண்டு பாய்மார்களை நினைத்து பல்லைக் கடித்திருக்கொண்டிருக்கும் ஜோசப், இதில் ஆதாயம் தேடும் கற்றது கையளவு முதலாளித்துவ இராமன்கள் என பாசிஸ்டு பரந்தாமனின் சக்கர வீயுகத்திற்குள் சுற்றிச் சுழல்கிறார்கள். கனவு காணும் களவாணிக்கும்பல் இது! ஜோசப் போன்றவர்கள் தெரிந்துகொண்டு தெளியுங்கள்! எதிரியாக இருப்பதற்கு வரலாற்றில் மதிப்பு உண்டு. ஆனால் மதவெறிக்கும்பலின் கைக்கூலியாக தெரிந்தோ தெரியாமாலோ பலியாவதற்கு எந்த மதிப்பும் கிடையாது. ஒரு கலாம் போதாது என்றால் இன்னொரு ஜோசப்பா!

            • அமெரிக்காவில் அப்துல் கலாம் அவர்களை ஆடையை உருவி சோதித்ததை இங்கு யார் ஆதரித்தார்கள்? யார் விளக்கு பிடித்தார்கள்?

              தென்றல் அவர்கள் உளற ஆரம்”பித்து” விட்டார். இனி பித்து பிடித்ததை போல சாக்கடை, நரகல், விபச்சாரம், என்று அடுத்தடுத்து வார்த்தைகள் சரளமாக உபயோகப்படுத்துவார்.
              சரக்கு தீர்ந்தவுடன் அடுத்து அது தானே செய்வார் நமது தென்றல்…

        • //ஜோசப், இந்தியா மட்டும் அணு ஆயுதம் மற்றும் ஏவுகணைகளை வைத்து கொள்ள கூடாது ,ஆனால் பாக் மற்றும் சீனா அவற்றை வைத்துகொள்ளலாம் என்று தென்றல் மற்றும் திப்பு கூறியது போல ஜோசப் அவர்கள் உண்மைக்கு மாறாக பின்னுட்டம் அளித்துள்ளார். //நான் சொல்லாத கருத்தை என் மீது திணிக்கும் வேலை வேண்டாம் எலி வினவுல பாகிஸ்தானுக்கு ஆதரவாக அவன் அணு குண்டு வச்சுருக்கான் அவிங்கட்ட வாய் சவுடால் பேசுறாரு மத்திய அமைச்சர் அப்பிடினு கட்டுரை வந்தது பாக்கலியா திப்பு சீனாவுக்கு சப்போர்ட் பன்னி யுத்தத்த பத்தி பேசுனத மட்டும் சுட்டி காட்டினேன் அவ்வளவுதான் அணு ஆயுதம் எல்லாம் என் பேச்சுல நீங்களா க்ண்டு பிடிச்சது அப்புறம் என்னை பொருத்த வரையில் மத வெறி கருத்தை வைத்து இருக்கும் யாரக இருந்தாலும் மத வெறி மொக்கைதான் அவன் கம்மூனிஸம் பேசுனாலும் காங்கிரஸ பேசுனாலும் எனக்கு கவலை இல்லை ,பேருக்கு கம்மூனிஸம் பேசிட்டு மதம் அப்பிடீனு வரும் போது குல்லா மாட்டி தாடி வைக்கிறவன விட நான் மத வெறியந்தான் அப்பிடினு வெளிப்படையா ஒத்துக்கிட்டு போறவன் நல்லவன்

  21. முன் வைத்த துரோகங்களுக்கு பதில் சொல்லாமல் எளிமை கோடி கோடியாக சொத்துக்கள் இல்லை என்று கதைவிடுகிறார்கள் கற்றது கையளவுகள்.

    ஹிட்லர், கோயபல்சிடம் இல்லாத நேர்மையும் எளிமையுமா கலாமிடம் உள்ளது ? ஏனெனில் எளிமைக்காக நாம் ஒருவரை பாராட்ட வேண்டுமெனில் அது இவர்களைத்தானே முதலில் பாராட்ட வேண்டும்?! ஆனால் மனிதரை அளவிடும் அதுவல்ல.

    பாதிக்கப்பட்டவர்களுக்காக இயலாதவர்களுக்காக ஒடுக்கப்பட்டவர்களுக்காக நிற்பது தான் ஒரு மனிதனை அளவிடும் கருவியாக இருக்க முடியும். காலம் காலமாக வரலாறு மனிதர்களை இப்படித்தான் மதிப்பிட்டு வருகிறது.

    பெயக்கண்டும் நஞ்சுண்டமைவர் என்று சொல்கிற குறளும், அரசில் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் என்று சொல்கிற சிலம்பும் இதைத்தான் சொல்கின்றன.

    இதில் கலாம் பிடி பருத்தி விசயத்தில் அறிவியலாளனாக நின்றதில்லை! அங்கே அவர் அரசியல் பேசினார்.

    கூடங்குளம் அணு உலைப் பிரச்சனையில் அறிவியலைப்பேசாமல் ஏகாதிபத்திய அரசியலைப்பேசினார்!

    குஜராத், ஈழப்படுகொலையில் கலாம் அறிவியலும் பேசவில்லை; அரசியலும் பேசவில்லை. மெளனமே பதிலாக இருந்தது.

    பள்ளி மாணவர்களிடம் கலாம் பேசினார் என்கிறார்கள். அதுவும் ஐஐஎம், அண்ணா பல்கலைக்கழகம் போன்ற அரசு உறுப்புகளாம்! கடோட்கர் கமிட்டி இங்கெல்லாம் கல்வியை கடைச்சரக்காக்கி ஐஐஎம்மில் மூன்றிலிருந்து பதினைந்து இலட்சமும், ஐஐடிக்களில் மூன்று இலட்சமும் அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒரு இலட்சமும் கட்டும் படி சத்தமில்லாமில் காயடித்தார்கள்.

    கனவு காணுங்கள் என்று புருடா விட்ட காலத்தில் ஒவ்வொரு மாணவின் கல்விக்கடனும் மலை போல் ஏறியது. பாரத ஸ்டேட் வங்கிகள் கல்விக்கடன் கட்டவில்லை என்று மாணவர்கள் படத்தை போஸ்டர் அடித்து அசிங்கப்படுத்திய நாட்டில் தான் மல்லையாவிற்கு கடன் தள்ளுபடி, இதில் எம்புருசனும் சண்டைக்குப்போனான் என்ற கதையாக கனவு காணச் சொல்கிற மனவக்கிரம் வேறு.

    சமூகத்தின் விசயங்கள் எதையுமே தன்னைப் பாதிக்காத, எந்தக்கட்டைக்கும் வேகாத நடுத்தரவர்க்கத்தின் நெஞ்சுக்கு வேண்டுமானால் கலாம் எழுச்சியாக இருக்கலாம். ஆனால் எங்களுக்கு அப்படியல்ல.

    சொல் ஒன்றாக செயல் ஒன்றாக கலாம் போன்றவர்கள் இருக்கிற பொழுது, மாஞ்சிக் கிழவன் இருபத்தைந்து வருடம் மலையைப் பிளந்து பாதை அமைத்த கதை இங்கே இருக்கிறது. ஆனால் சீந்துவாரில்லை.

    கிரைண்டர் காசை திருப்பிக்கொடுத்தார் கலாம் என்று பத்திரிக்கைகள் புகழ்ந்த பொழுது, நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் தலையிலும் 4000 கடன் இருக்கிறது என்று சொன்ன பொழுது, தன் சார்பில் 4000 குடியரசுத்தலைவருக்கு அன்றைக்கு அனுப்பி வைத்த கோயம்பேடு மூட்டை தூக்கும் தொழிலாளி கேனப்பயன், அவனது வாழ்க்கை இங்கு பேசப்படவில்லை.

    சசிபெருமாளை வன்முறையாளன் என்றழைத்த இதே சமூகம் இதே ஆளும் வர்க்கத்தை கொஞ்சிய கலாமை போற்றி போற்றி என்றது!

    ஆக இறுதியாக நாம் இப்படி முடிக்கலாம்;

    கலாமையே அமெரிக்க ஏகாதிபத்தியம் ஆடை உருவி சோதனை செய்த பொழுது கலாமின் ரசிகர்கள் என்ன எதிர்வினையாற்றினார்கள். ஒன்றுக்கும் உதவாத மானங்கெட்ட நடுத்தரவர்க்கம், கலாமைக் கூட ஆதரிக்க முடியாத உதித்த கூட்டம் என்று சொன்னால் அது மிகையல்ல. எங்களுடைய கிராமத்தில் மதிப்பீடுகளும் விழுமியங்களும் அற்ற இத்தகையவர்களை வெறும்பய என்றும் உதுத்துவன் என்றும் அழைப்பர். இங்கு அது எத்துணை பொருந்திப்போகிறது!

    நாய் பெற்ற தெங்கம் பழமாய் தன் உணர்ச்சியற்ற பிண்டத்தை சரியென்று சொல்வதற்கு இதே நடுத்தரவர்க்கம் கலாமை கண்டுகொள்ளாது என்பதுதான் நிதர்சனம். ஆக இங்கு இவன் தான் அயோக்கியன் என்று பிரித்தறிய முடியாதபடி கலாமும் கலாம் ரசிகர்களும் இருக்கிறார்கள் என்பதுதான் வெள்ளிடை மலை!

    • கற்றது கையளவின் பின்னுட்டம் 19.1.1.1 ஐ கவனியுங்கள் !ரத்தகறை படிந்த கொலை கரங்களின் ஆதரவுடன் கலாம் அவர்கள் ஜனாதிபதி ஆனதை எப்படி எல்லாம் இவர் ஆதரிக்கின்றார் !. இவரா கலாமின் மக்கள் துரோகத்துக்கு பதில் கூற போகின்றார்.?

      • இந்தியாவில் ஒருவர் ஜனாதிபதி ஆக வேண்டும் என்றால் நேரடியாக மக்களா தேர்ந்தெடுக்கின்றனர்?
        மக்கள் தேர்ந்தெடுத்த கட்சி பிரதிநிதிகள் தானே தேர்ந்தெடுக்க வேண்டும்? அது தானே நடைமுறை.

        தற்போது ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க ஓட்டுரிமை உள்ள கட்சிகள் யாவை?
        காங்கிரஸ், பாஜக, இந்திய கம்மியுநிஸ்ட், மார்க்சிய கம்மியுநிஸ்ட், ஜனதாதள், திமுக, அதிமுக, தெலுங்கு தேச கட்சி, முலாயம், லாலு, கட்சிகள், இவை போன்ற எண்ணற்ற கட்சிகள்.

        இரத்தக்கறை இல்லாத கட்சிகளின் ஆதரவை பெற்று தான் ஒருவர் ஜனாதிபதி ஆக வேண்டும் என்றால் எந்த கட்சியின் ஆதரவை தேட வேண்டும்?

        அப்படி ஒரு கட்சி இருந்ததென்றால் பின் பெரும்பான்மை வாக்குகள் எப்படி கிடைக்கும், எப்படி ஒருவர் ஜனாதிபதி ஆவார்?

        நான் கேட்ட கேள்வியில் தவறென்ன? நீங்கள் சொல்வது படி பார்த்தால் ஒருவரும் ஜனாதிபதி பதவி அடைய முடியாது.

        அது சரி, தென்றல் கேட்ட மூன்று கேள்விகளுக்கு என்னிடம் இருந்து பதில் வந்து விட்டது.
        நான் தென்றலிடம் கேட்ட கேள்விக்கு அவரிடம் இருந்து பதில் வரவில்லையே.

        இது நாள் வரை தென்றலார் மக்களுக்கு செய்த நன்மைகள் என்ன, அவரால் மக்களுக்கு என்ன பயன் கிடைத்தது, எத்தனை குடும்பங்கள் அவரது சேவையால் முன்னேறினார்கள்? குஜராத் கலவரம், சீக்கிய கலவரம், ஈழப்படுகொலைகள், இவைகளில் பாதிப்படைந்த குடும்பங்கள் எத்தனை குடும்பங்களுக்கு நீங்கள் உதவினீர்கள்?

        அதற்கு பதில் சொல்லுங்கள் தென்றல்?

        • சுத்தி வளைக்காமல் நேரடியாகவே விசயத்துக்கு வாங்க கற்றது கையளவு ! இங்கு நாம் பேசிக்கொண்டு இருப்பது நீங்கள் கன்மூடித்னமாக போற்றிக்கொண்டு இருக்கும் ,உங்கள் மனதில் உன்னத மனிதராக காட்சி அளிக்கும் கலாமை பற்றி என்பதை நினைவில் கொள்ளுங்கள். பிரணாப் ,சங்கர் தயால் சர்மா ,பிரதிபா பாட்டில் போன்றவர்கள் ஜனாதிபதி ஆவதை பற்றிய விவாதம் அல்ல இது. ஏன் என்றால் அவர்கள் எல்லாம் உங்களாலும் உங்களை போன்றவ்ர்க்லாளும் சிறப்பான மனிதர்களாக கருதப்படவில்லை. ரத்த கறை படிந்த கொலை கரங்களின் ஆதரவுடன் உங்களின் உன்னத மனிததர் கலாம் ஜனாதிபதி ஆகலாமா என்பதே இங்கு கேள்வி ? அப்படி அவர்[கலாம் ] முஸ்லிம் மத மக்களின் உடலின் ரத்தம் படிந்த பிஜேபி கைகளின் ஆதரவுடன் , சீக்கிய மத மக்களின் உடலின் ரத்தம் படிந்த காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் ஜனாதிபதியாகும் தருணத்தில் அவர் தனது உன்னத தன்மையை இழந்து , தலைக்கு பின் உள்ள ஒளிவட்டத்தை இழந்து பிற முன்னாள்,இந்நாள் ஜனதிபடிகளை போன்றே வெகு சாதாரண மனிதராக ,அலசிய படுத்துவத்ர்ற்கு உரிய மனிதர் தான் என்பதை நிருபணம் செய்கின்றார் . அப்படிபட்டவருக்கு ஏன் இந்த கண் மூடிதனமான ,அறிவை மழுகடித்துவிட்டு துதி பாடல்கள் . ?

          தென்றல் குஜராத் கலவரம், சீக்கிய கலவரம், ஈழப்படுகொலைகள், இவைகளில் பாதிப்படைந்த குடும்பங்களுக்கு உதவவில்லை என்பது உண்மையாகவே இருக்கட்டும் …, ஆனால் தென்றல் கலாமை போன்று ,ஆம் சிறுமையான மனிதர் கலாமை போன்று குஜராத் கலவரம், சீக்கிய கலவரம், ஈழப்படுகொலைகள் நடத்திய கொலை வெறியர்களான பிஜேபி ,மற்றும் காங்கிரஸ் காரன்களின் ஆதரவுக்காக அவர்களை அண்டி பிழைக்க வில்லையே !

        • திருவாளர் கற்றது கையளவு,

          அப்துல் கலாமின் பச்சையான துரோகங்களுக்கு தாங்கள் சொன்னவை பதில்கள் அல்ல. தாங்கள் முன்வைத்த புரளிகளுக்கு பதில் சொல்லி மூன்று நாட்கள் ஆகிவிட்டன. இன்னும் பதில் வரவில்லை. பிடி பருத்தி விசயத்தில் கலாம் மான்சோண்டோவின் முகவராக செயல்பட்டது, கடல் எல்லை, படகுகள் சட்டம், மணிப்பூரி விசயத்திற்கு விரிவான விளக்கங்களை முன்வைத்திருக்கிறேன். நேர்மைத் திறம் இருந்தால் பதில் சொல்லவும்.

          அறிவு நாணயமின்றி சனாதிபதி பதவி குறித்து விவாதிப்பதற்கு கலாம் சனாதிபதியாக இருந்து என்ன செய்தார் என்பதற்கு பதில் சொல்லும் யோக்கியவானே?

          கேள்வியும் நேரிடையாக கேட்டாயிற்று; பீகாரில் இராணுவ ஆட்சியை ரசியாவில் இருந்துகொண்டே பேக்ஸ் கையெழுத்து மூலமாக போடத்தெரிகிற கலாம், ஜெகன் ஜீவன் அறிக்கை உட்பட எத்தனையோ நீதிமன்ற விசாரணைக்க் கமிசன்கள் மணிப்பூர் குறித்து தாக்கல் செய்த விசாரணைகளுக்கு என்ன பதில் இருத்தார்? அவரது நிலைப்பாடு என்ன? இதுக்கு பதில் சொல்ல துப்பில்லாம கட்சி, சனாதிபதி முறை என்று வாய்பந்தல் போடுவது ஏன்?

          ————————————

          நான் மக்களுக்கு என்ன செய்தேன்? மக்களுக்கு என்ன பயன் கிடைத்தது என்று நான் மட்டுமல்ல எந்த போராட்டக்காரனும் கணக்குப் பார்த்து போராடிக்கொண்டிருக்க மாட்டார். அப்படி செய்வதற்கு இது உங்களைப்போன்ற மேட்டுக்குடிகள் அயன்பாக்ஸ் வழங்கிவிட்டு சுரண்டிக்கொழுக்கும் லயன்ஸ் கிளப், மனமகிழ் மன்றமல்ல. உடமை பறித்தவனை உடமை நீக்கும் செய்கிற போராட்டம் இது. இங்கே சட்டையில் ரோஜாப்பூ, கைக்கூலி கலாம் போன்ற கனவு காணச் சொல்லும் களவாணித்தனத்திற்கு எல்லாம் வேலையில்லை.

          குஜராத் கலவரம், சீக்கிய கலவரம், ஈழப்படுகொலைகள் மட்டுமல்ல; எந்த ஒரு நிலைப்பாட்டிலும் ஒரு மனிதனின் விழுமியங்களும் மதிப்பீடுகளும் கணக்கு வழக்காக வெறும் நார்னிசமாக நிற்பதில்லை; மாறாக எமது தோழர் சுட்டிக்காட்டுவது போன்று

          “ஒரு மனிதன் ஆளும் வர்க்கத்திற்காக பெரும்பான்மையான மக்களை ஒடுக்கினானா இல்லை ஆளும் வர்க்கம் கொடுத்த அழுத்தம், கையூட்டு, இலஞ்சம், சலுகை, நெருக்கடி, தண்டனை, சித்திரவதை, கொலை என வண்ணப்பட்டியின் (band) எந்நிலையை அனுபவித்தாலும் சற்றும் இளகாமல் மக்கள் விரோத சதித்தனங்களை உறுதியோடு எதிர்த்தவனா, அடிபணிய மறுத்தவனா?” என்பதில் தான் இருக்கிறது.

          இதில் கலாமோ, கையளவோ இல்லை என்கிற பொழுது சமீன்தார் வீட்டு கொழுத்த நாய் கணக்காக அடுத்தவர்களை ஏவுவது ஏன்?

  22. What is your contribution to the people of India vinavu? With little knowledge about the nation and with zero knowledge about science don’t talk non-sence just because you have a paper to write . Who are you to judge whether APJ Kalam is great or not ? It is laughable persons like you writing about a legend like Kalam . Do you know what he said about the work which gave immense pleasure and satisfaction to him in his carreer ,the low weight material designed for rockets can be used for designing low weight walking equipment for handicapped . What you have done to the society ? Do you think all great minded people without any sense condoled his death emotionally ? Stop writing bull-shits in the name of poem when you dont have to do anything in life . IF YOU ARE A VERY GREAT INTELLECT DO SOMETHING TO THE SOCIETY RATHER WRITING SENSELESS ARTICLES.

  23. சில உண்மைகள் சின-இந்திய போர் : I [அக்சேய் சைன் பகுதி]

    பிரிட்டிஷ் இந்தியாவிற்கும் , 1950க்கு முந்தைய சைனாவிற்கும் இடையே எல்லை பிரச்சனை தொடர்ந்து இருந்து கொண்டு தான் உள்ளது. இந்தியாவின் வடமேற்கு பகுதியான அக்சேய் சைன் என்ற இடமும் ,வட கிழக்கு பகுதியான அருணாசலபிரதேசத்திலும் தொடர்ந்து இருந்து கொண்டு தான் உள்ளது. அக்சேய் சைன் பகுதியானது இந்தியாவின் லடாக் பகுதிக்கு உட்பட்டது என்று 1 July 1954 அன்று அறிவிக்கின்றார். சீனர்கள் அந்த பகுதியை சின்சிஆங் பகுதிக்கு உட்பட்டது என்று அறிவிக்கின்றார்கள். இந்தகைய தருணத்தில் சீனர்கள் பிரச்னைக்கு உரிய பகுதியான அக்சேய் சைன் இடத்தில் 1956களில் சாலை அமைத்து சின்சிஆங் மற்றும் திபெத் பகுதிகளை இணைகின்றார்கள் .எனவே கற்றது கூறுவது போன்று இந்தியாவிற்கும்-சினாவிற்கும் இடையே எல்லை பிரச்சனையே இல்லை என்று கூறுவது அப்பட்டமான பித்தலாட்டம். சுவிசர்லாந்து அலவிலான லாடக் அருகில் உள்ள அக்சேய் சைன் பகுதி இன்றைய இந்தியா மற்றும் சீனவிற்கு முநதைய 1980களில் இருந்தே பிரச்சனைக்கு உரியதான கடல்மட்டத்தில் இருந்து 5000 மீட்டர் உயரத்தில் உள்ள உப்பு படிமங்கள் படிந்து உள்ள மக்கள் வாழ தகுதியற்ற இடமாகும்.

    இந்தியாவும் ,சீனாவும் பேசி பங்கிட்டு தீர்க்க வேண்டிய அக்சேய் சைன் பகுதியை தன் இறுமாப்புடன் பெரும் போர் அறிவித்து , செய்து அதன் இறுதியில் மூக்கு உடைபட்டு ,மனம் வெதும்பி நோய் பட்டு இறந்த நேருவின் சுய தோல்வியே அல்லாமல் இந்தியாவின் தோல்வியாக பார்க்க வேண்டிய அவசியம் சிறிதும் இல்லை

    தொடரும் …..

    • correction:

      # நேரு அக்சேய் சைன் பகுதியானது இந்தியாவின் லடாக் பகுதிக்கு உட்பட்டது என்று 1 July 1954 அன்று அறிவிக்கின்றார்.

      # இந்தியா மற்றும் சீனவிற்கு முநதைய 1880களில் இருந்தே….

    • //இந்தகைய தருணத்தில் சீனர்கள் பிரச்னைக்கு உரிய பகுதியான அக்சேய் சைன் இடத்தில் 1956களில் சாலை அமைத்து சின்சிஆங் மற்றும் திபெத் பகுதிகளை இணைகின்றார்கள் .//

      அவர்கள் இந்தியாவுடன் பேச்சு நடத்திய பின்னர்தான் ரோடு போட்டார்களா ? வலிமையானவன் என்பதால் போட்டான் . அவர்களுக்கு எது வேண்டுமோ எடுத்து கொள்வார்கள் , அப்படி எடுத்து கொண்ட பிறகு பேச்சு நடத்துவார்கள் .

      புலி தலைவர் பிரபாகரன் கூறியதை நினவு படுத்துகிறேன்.
      நாம் என்ன ஆயுதம் எடுக்க வேண்டும் என்பதை எதிரி தான் தீர்மானிக்கிறான் .
      இது மாபெரும் உண்மை .

      நேரு செய்ததில் தவறு இருக்கலாம் . ஆனால் அது சீனாவிற்கு இந்தியாவை ஆக்கிரமித்தால் போர் செய்ய வேண்டி வரும் என்கின்ற செய்தியை நினைவூட்டும். இல்லை என்றால் அருணாச்சல் பிரதேசத்தை எப்போதோ எடுத்திருப்பான் .

  24. சில உண்மைகள் சின-இந்திய போர் :I I [தவாங் பகுதி]

    இந்தியாவின் வட கிழக்கு பகுதியில் உள்ள தவாங் நகர பகுதி அரசியல் மற்றும் கலாச்சார நிலைகளில் திபெத் உடன் சேர்ந்த பகுதியாகும் . இரண்டாம் உலகப்போர் வரையில் தவாங் நகரை திபெத் அரசாங்கம் தான் நிர்வாகம் செய்து கொண்டு இருந்தது. எனவே அது திபெத்துக்கு உட்பட பகுதி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 2003 வரையில் தலாய் லாமா அவர்கள் கூறிய கருத்தான ” அருணாசலபிரதேசம் முழுவதும் திபெத்தை நேர்ந்தது என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டியுள்ளது. இந்திய விடுதலைக்கு முந்தைய பிரிட்டிஷ் அரசு அருணாசலபிரதேசத்தை ஆக்கிரிமிப்பு செய்து உள்ளது. இந்திய விடுதலைக்கு பிந்தைய அருணாசலபிரதேசத்தின் சில பகுதிகளை சீனா இந்தியாவிடம் இருந்து 1962ல் மீட்டு திபெத் உடன் சேர்ந்து கொண்டு உள்ளது.

    இந்தியாவின் வட மேற்கே தன்னாட்சி செய்ய படவேண்டிய ஜம்மு-காஷ்மீர் எப்படி இந்தியா மற்றும் பாக் நாடுகளால் சூரையாட பட்டதோ அதுபோன்று ஒருங்கினைந்த திபெத் [அருணாசலபிரதேசம் முழுவதும் உட்பட ] சீனா மற்றும் இந்தியாவால் சூரையாடபட்டு உள்ளதே நிதர்சனம்.

    தொடரும் …..

  25. @திப்பு

    //ஆயுதப்போட்டி வேண்டாம்,அணுகுண்டுகளில் காசை பாழாக்காமல் நாட்டு முன்னேற்றத்துக்கு செலவிட வேண்டும்,எல்லை பிரச்னைகளை சுமுகமாக தீர்த்து நாட்டு மக்களுக்கு அமைதியான வாழ்வை உத்தரவாதப்படுத்த வேண்டும் என்று சொல்பவன் //

    இப்படி சொல்பவர் நல்லவர் தான் ஆனால் ரொம்ப நல்லவர் இல்லை . இராணுவமே வேண்டாம் , எல்லையில் அண்டை நாட்டாரோடு பரிசு பொருள் கொடுத்து இன்முகத்தோடு கை கூப்புவோம் என்று நான் சொல்கிறேன்.
    ஏகாதிபத்தியங்கள் ஏமாற்றி கற்று கொடுத்து இருக்கும் துப்பாக்கி போன்ற மனிதனை மனிதன் அழிக்கும் கொலை கருவிகளே கூடாது என்கிறேன்.

    அது மட்டும் அல்ல , ராணுவத்திற்கு ஆகும் செலவினை திப்பு போன்ற பல மக்களின் தண்ணி பிரச்சினையை தீர்க்கலாம் என்கிறேன் . உலகமே ஒரு கிராமம் , யாது ஊரே யாவரும் கேளிர் என்று தமிழனின் கலாசாரத்தை உலகம் எல்லாம் பரப்பலாம் வாருங்கள் என்கிறேன்

    இப்ப சொல்லுங்க திப்பு சார் , நான் உங்களை விட நல்லவன் தானே 🙂

  26. நாம் என்ன ஆயுதம் எடுக்க வேண்டும் என்பதை எதிரிதான் தீர்மானிக்கிறான்:தம்பி பிரபா…

    நன்றி ராமன்….

    தமிழ் நாட்டில் முக்கால் வாசி பேரின் கையில் உள்ளது மிகவும் “வலுவானது”

    ஜெஜெ,கருனா வின் பையை கனக்கச் செய்யும் சக்தி வாய்ந்தது

  27. அனைத்து வினவு நண்பர்களுக்கும் இந்திய சுதந்திர தின வாழ்த்துக்கள்.

    பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரம் என்ற அளவிலாவது ஓரளவு இருக்கிறது. ஆனால் முழுமையான சுதந்திரம் அடைய இன்னும் நாம் முன்னேற வேண்டும், மாற்றங்கள் வேண்டும். அதே சமயம் இருக்கும் சுதந்திரத்தை போலி தேசியவாதிகள், கபடதாரிகளிடம் பறிகொடுக்காமல் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

  28. @திப்பு

    இந்தியா அணுகுண்டு வைத்து இருந்ததால் தான் , கார்கில் போர் என்பதில் பாகிஸ்தான் நேரடியாக ஈடுபட்டது போல காட்டி கொள்ளாமல் , நான் ஸ்டேட் ஆக்டர்கள் செயல்பட்டார்கள் , எங்களுக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்று நரித்தனம் காட்டியது.

    அலெக்சாண்டர் காலத்தில் , உடல் கவசம் இல்லை
    பாபர் காலத்தில் , பீரங்கி இல்லை
    கிளைவ் காலத்தில் , துப்பாக்கி இல்லை
    மாவோ காலத்தில் , ஏவுகணை இல்லை

    என்ன ஆயிற்று என்று சிந்திக்கும் திறன் இருந்தால் , சிந்தியுங்கள்.
    இதெல்லாமே எந்த ஒரு உய்ரினதுக்கும் இருக்க வேண்டிய காமன் சென்ஸ் . இல்லாதவை இயற்கை தேர்வு கோட்பாட்டின்படி அழிந்துவிடும் . சி அனிமோன் கூட கோடு போட்டு பாதுகாக்கும் அறிவு உள்ளவை என்னும்போது உங்களுக்கு சிந்திக்க சொல்லி தர வேண்டியது இல்லை

    எஜிப்தியர்களிடம் மாட்டுவண்டி தவிர்த்து , போருக்கு என்று இலகுவாக ரதம் தயாரித்தார்கள. அவர்களை நீண்ட காலம் வெல்ல முடியவில்லை . ஆயிரம் ஆண்டுகள் களைத்து ஹிடைடிஸ் என்கின்ற குழு இரண்டு பேர் நிற்கும் வகையில் ரதத்தை மாற்றி அமைத்து தயாரித்த பின்னர்தான் போரில் சமமாக போரிட முடிந்தது.

    இன்கா மக்களிடம் எக்கு வாள் இல்லை . ஸ்பானிஸ் மக்களிடம் உயிரை விட்டார்கள்

    செவ்விந்தியர்களிடம் துப்பாக்கி இல்லை , வெள்ளையனிடம் நிலத்தை இழந்தார்கள் .

    லேட்டஸ்ட் டேச்னாலாஜி இல்லாதவர்களை பற்றி வரலாற்று பாடத்தில் மட்டும் தான் படிக்க வேண்டி வரும்.இயற்கை தேர்வில் நியாயம் அநியாயம் என்பதில் வரையறை இல்லை . வல்லமை படைத்தது பல்கி பெருகி வாழும் . வெள்ளையர்கள் அமேரிக்கா ,தென் அமேரிக்கா ,ஆஸ்திரேலியா என்று எடுத்துகொண்டு விட்டார்கள்.

    ஏவுகணை தயாரித்த திப்பு வின் பெயரை வைத்து கொண்டு , ஏவுகணை வேண்டாம் அணுகுண்டு வேண்டாம் என்று எப்படி சிந்திக்கிறார்கள் ?

  29. அடுத்த நாட்டுக்காரன் வம்புக்கு சண்டை இழுத்தாலும் நட்புறவுடன் சுமூகமாக போக சொல்லும் திப்பு அவர்களே.
    இதே கோரிக்கையை நம் உள்நாட்டிலுள்ள நக்சலைட்டுகளிடம் இதே கோரிக்கையை விடுக்கலாம் அல்லவா. இந்திய அரசுடனும், இராணுவத்துடனும் நட்புறவுடன் சுமூகமாக போக சொல்லலாம் அல்லவா? ஏன் அப்போது மட்டும் ஆயுதம் ஏந்திய போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கிறீர்கள். அப்போது உயிர்பலி பற்றி ஏன் யோசிக்க மாட்டேன் என்கிறீர்கள்.

  30. எட்டப்பர் க.கை போகிற போக்கில் இந்திய சுதந்திரத்தின் பொடனியில் அடித்து அம்பலப்படுத்துகிறார். அவரது கருத்துப்படி “எதை வைத்து ஆக்கிரமிப்பு என்கிறீர்கள்? ஹரிசிங் ஜம்மு காஷ்மீரின் மன்னர். அவர் இந்தியாவுடன் இணைவதாக தானே எழுதி கொடுத்துள்ளார்? இதில் என்ன ஆக்கிரமிப்பு உள்ளது.” மன்னன் எழுதிக் கொடுத்துவிட்டால் அது இந்தியாவுடன் இணைந்ததாக அர்த்தமாம்.
    பொதுவாக மக்களாட்சி என்பது மன்னராட்சியை வீழ்த்தி குடியரசை பிரகடனம் செய்வார்கள். இங்கோ செயின் பறிப்பதைப்போன்று மன்னன் எழுதிக்கொடுத்துவிட்டால் இந்தியா என்ற நாடு என்று வந்துவிடுமாம்.

    க. கை போன்ற எட்டப்பர்கள் எம்மாம் பெரிய உண்மையை போகிற போக்கில் சொல்லிவிட்டார்கள் பார்த்தீர்களா?

    அது சரி. மன்னர் சொல்லிவிட்டால் சரியா மாமா என்று கேட்க வேண்டும்? ஏனெனில் பார்ப்பனியத்தை அமல்படுத்திய நிலப்பிரபுத்துவ மன்னர்கள் கடல் கடந்து சம்பாரிப்பது தோசம் என்றார்களாம்.

    ஆனால் இந்தியாவை ஆளும் குஜராத் பனியாக்களும், கற்றது கையளவுகளும் கடல் கடந்து பொருள் பொறுக்க மன்னனின் கட்டளையையே மீறிவிட்டுச் செல்வார்களாம். அடுத்தவன் மட்டும் தேசபக்தி என்று இவர்களின் பொறுக்கித்தின்னும் வாழ்விற்கு ரத்தம் சிந்தி சாகவேண்டுமாம்.

    என்ன ஒரு உதாரு!

    காஷ்மீர் பண்டிட்டுகளின் நிலை என்ன? என்று சமயம் கிடைக்கும்பொழுது அப்படியே ஆர் எஸ் எஸ் முகத்தை உரித்துக்காட்டி நீலிக்கண்ணீர் வடிக்கிறார். காஷ்மீர் பண்டிட்டுகள் அம்மண்ணின் மைந்தர்கள் தான். கேள்வி காஷ்மீர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கிறாயா என்பது தான். இதை மறைத்துவிட்டு பண்டிட்டுகள் முசுலீம்கள் என்று கடைந்தெடுத்த இந்துத்துவ காலிபோல் பிரச்சனையை திசை திருப்புவது கற்றது கையளவு போன்ற பிசனஸ்மேன்களின் பொறுக்கித்தனம் வெளியே தெரியக்கூடாது என்பதன்றி வேறென்ன இருக்கிறது?

    டைம்ஸ் இந்தியா கருத்துப்படி காஷ்மீரிகள் இந்தியாவுடன் இணைய விரும்புகின்றனராம். இது சரியென்றால் தைரியம் இருந்தால் பொதுவாக்கெடுப்பு நடத்தி பிரச்சனைய முடிக்கவேண்டியதுதானே! அதவிட்டுப்புட்டு ஏன் வெறிநாய் கணக்காக ஐஸ்கட்டி மலைக்கு சண்ட போடுற. முதலாளித்து குளிர்காய்வதற்கு முதலாளித்துவ பொறுக்கிகளுக்கு இந்து-முசுலீம் சண்டை அவசியம். அப்பொழுதுதானே எல்லையில் ஆட்களை சண்டையிடவைத்துவிட்டு க.கை போன்றவர்கள் சீனாவில் பொருள் பொறுக்க முடியும்?

    • தென்றல்,

      மீண்டும் அவதூறா, என்னை பொறுக்கித்தின்னி என்று சொல்லத்துணியும் நாக்கிற்கு தங்களது வருமானத்தை எங்கிருந்து பெறுகிறீர்கள் என்ற கேள்விக்கு பதிலை காணோம்.

      நான் பிசினஸ்மேன் என்று எப்படி சொல்கிறீர்கள். இன்றும் மாத சம்பளத்திற்கு தான் வேலை செய்கிறேன் நண்பரே.

      இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் தேர்தல் நடத்தி தான் முதலில் இந்தியாவில் சேர்த்தார்களா? தமிழகம் கூட தான் சேர, சோழ, பாண்டிய பல்லவ மன்னர்கள் ஆட்சியில் முன்னர் இருந்தது. இப்போது இந்திய அரசின் ஒரு மாநிலமாக இருக்கிறது. இந்தியாவில் சேருவதா வேண்டாமா என்று தமிழகத்தில் எப்போது தேர்தல் நடத்தினார்கள்?

      //ஆனால் இந்தியாவை ஆளும் குஜராத் பனியாக்களும், கற்றது கையளவுகளும் கடல் கடந்து பொருள் பொறுக்க மன்னனின் கட்டளையையே மீறிவிட்டுச் செல்வார்களாம்.//
      கடல் கடந்து நான் போவதற்கு மன்னனின் கட்டளையை மீறினேனா? என்ன உளறுகிறீர்கள். கொஞ்சம் புரியும்படியாக உளறினால் நன்றாக இருக்கும்.

      காஷ்மீர் என்று பேசும்போது காஷ்மீரின் பூர்விக குடிமக்களை மட்டும் விலக்கி விட்டு எப்படி பேச சொல்கிறீர்கள்? காஷ்மீர் பண்டிட்களும் காஷ்மீரிகளே. காஷ்மீர் பண்டிட்கள் பற்றி பேச இந்துத்துவா காலிகளாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. நடுநிலையாக இருந்தாலே போதும்.
      ஏன் ஆர்.எஸ்.எஸ். ஆக இருந்தால் தான் காஷ்மீர் பண்டிட்கள் பற்றி பேச வேண்டுமா? ஏன் உங்களுக்கு காஷ்மீர் பண்டிட்கள் மேல் அக்கறை இல்லையா?
      இசுலாமியர்களும் காஷ்மீர் பண்டிட்களும் அங்கு ஒன்றாக இருக்க அவர்களுக்கு உரிமை உள்ளது. அதில் ஒரு பகுதியினரை மட்டும் வெளியேற்றி விடுவதை சர்வசாதாரணமாக விட்டு விட சொல்கிறீர்கள்?

      நான் கேட்ட கேள்விக்கு பதிலைகாணோமே? காஷ்மீரின் சென்ற வருட தேர்தலில் நடந்த வாக்கெடுப்பு விகிதத்தை கொஞ்சம் மறுபடியும் எடுத்து பாருங்கள். இந்திய அரசின் மேல் நம்பிக்கை இல்லாத மக்கள் ஏன் பெருவாரியாக இந்திய அரசாங்கம் நடத்தும் தேர்தலில் பங்கெடுக்க வேண்டும்? இந்திய தேர்தலில் நம்பிக்கை இல்லை என்றால் அவர்கள் குறைந்த பட்சம் நோட்டாவில் பதிவு செய்து இனி இந்திய அரசாங்கம் தேர்தல் என்று எங்களிடம் வர வேண்டாம் என்று கூற வேண்டியது தானே? ஏன் அப்படி நடக்கவில்லை?

      தீவிரவாதிகளின் எச்சரிக்கையை மீறி, பிரிவினைவாதிகளின் வற்புறுத்தலை மீறி மக்கள் பெருவாரியாக இந்திய அரசாங்கம் நடத்திய தேர்தலில் ஒட்டு போட்டுள்ளனர். இதற்கு மேலும் நீங்கள் காஷ்மீரை தனி நாடாகவோ பாகிஸ்தானுக்கு தானமாக கொடுக்க வேண்டும் என்றோ சொல்வீர்களோ?

      • திருவாளர் க.கை !

        \\இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் தேர்தல் நடத்தி தான் முதலில் இந்தியாவில் சேர்த்தார்களா?\\

        எந்த மாநிலத்திலும் இல்லை என்பதால் தான் இந்தியா ஒரு சனநாயக நாடு அல்ல என்றும் அது ஓர் அரை காலனிய அரை நிலப்புரத்துவ நாடு என்கிறோம். சமஸ்தானங்களை இணைத்து ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் பார்ப்பன பனியா தரகுமுதலாளி கும்பலேயன்றி இங்கு எந்த மாநிலமும் சனநாயகத்தின் கீழ் ஒன்றிணைக்கப்படவில்லை. இதில் ஹரிசிங் மன்னர் இந்தியாவுடன் போவதாக எழுதிக்கொடுத்தார் என்று சொகுசு காணும் வர்க்கம் தான் சனநாயகம் என்று பேசும். தாங்கள் பேசுவதைப் பார்த்தால் ஹரிசிங்கிற்கு மதுவை ஊற்றிக்கொடுத்து கைநாட்டு வாங்கிய எட்டப்பர் போல் உள்ளது.

        2. கடல் கடந்து போவது தோசம் என்று சொன்ன பார்ப்பனியத்தின் மன்னராட்சி க.கைக்கு எப்படி புரியும்? புரிந்தால் குட்டு உடைந்துவிடாதா; இந்திய தேசம் பொறுக்கித் தின்னும் தரகுவர்க்க முதலாளிகளுடையது என்பது!

        3. காஷ்மீர் பண்டிட் மட்டுமல்ல காஷ்மீரிகள். அங்குள்ள கழுதை, பூனை, குதிரையெல்லாம் தான். நான் கேட்பது காஷ்மீரிகளின் சுயநிர்ணய உரிமையைப் பற்றி! இதைவிட்டுவிட்டு காஷ்மீர் பண்டிட் என்று இந்துத்துவ காலிகளும் பொறுக்கிகளும் பேசுகிற பொழுது அந்தப்பக்கம் முல்லாக்கள் என்று பாகிஸ்தான் பேசுவதும் எதற்காக என்பதுதான் கேள்வி. தெள்ளவாரிகளின் நைச்சியம் புரிகிறதா க.கை? ஏன் ஐஸ் கட்டி மலையை வைத்து சண்டை என்றால் அப்பொழுதுதான் இங்குள்ள முதலாளித்துவ வர்க்கம் பிசினஸ் ஆகோ ஓகோ என்று செய்ய முடியும். இத்துணை வருடங்களாக அமெரிக்கா மத்தயஸ்தன் என்பதில் இருந்து தெரியவில்லையா? உண்டவீட்டுக்கு இரண்டகம் செய்த துரோகிகளும் எதிரி வீட்டில் பிசினஸ் செய்த பாஜக, சீன ஏகாதிபத்திய கைக்கூலிகளும்! ஆனால் அவர்கள் தான் தேசபக்தி வேசம் போடுகிறார்கள் க.கை!

        ஆனாலும் ஷும்மா சொல்லப்படாது. பேஷா ஆர் எஸ் எஸ் காலியவிட காஷ்மீர் விசயத்தில் அவுத்துபோட்டு ஆடுறேள்! பின்ன முதலாளித்துவம்னா ஷும்மாவோ? இத்தாலி ஜெர்மனியில் முதலாளித்துவம் முறையே பாசிச நாசிசமாக இருக்கிறதென்றால் இந்தியாவைப் பொறுத்தவரை பார்ப்பனியமாக இருக்கிறது.

      • காஷ்மீரின் சென்ற வருட தேர்தலை கற்றது கையளவு பார்க்கச் சொல்வது ராஜபக்சே கைக்கூலி இந்து ராம் பேசுவதைப்போல் உள்ளது. அத்துணை இலட்சம் ஈழத்தமிழர்களைக் கொன்றுவிட்டு, தமிழ் தேசிய கூட்டமைப்பு ஈழத்தில் வெற்றி பெற்றிருப்பது மைத்ரி பால சீறிசேனாவை ஆதரிப்பதற்கு அர்த்தம் என்று எழுதினார்கள்! அதுபோல காஷ்மீரில் தேர்தல் நடத்துவதற்கு உரிமையே இல்லாத இந்திய அரசைக் காட்டி, தேர்தலில் மக்கள் இந்திய பக்கம் என்று சொல்லி தரகு வேலை பார்க்கிறார் கற்றது கையளவு.

        நாம் இந்த எட்டப்பட்ட தனத்தை எப்படி அம்பலப்படுத்துகிறோம் என்றால் உலக நாடுகளை முன் வைத்து பொதுவாக்கெடுப்பு நடத்தி ஈழ மக்களுக்கும் காஷ்மீர் மக்களுக்கும் தங்கள் அரசியலை நிர்ணயித்துக்கொள்ள வேண்டும் என்பது தானே! இதற்கு மூச்சுவிடாமல் மைத்ரி சூப்பர், பாஜக மோடியின் இந்திய அரசு சூப்பர் அவர்களுக்கே ஆதரவு என்று க.கை எழுதுவது எத்துணை பெரிய கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்!

        • முதலில் ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள் தென்றல்.

          1. நான் பாஜக ஆதரவாளன் அல்ல. வாழ்நாளில் இதுவரை பாஜகவுக்கு ஒட்டு போட்டது கூட இல்லை. காஷ்மீர் பண்டிட்கள் பற்றி பேசினாலே நான் ஆர்.எஸ்.எஸ். கைக்கூலி என்று அழைப்பீர்கள் ஆனால் உங்களை நான் ஐ.எஸ்.ஐ.எஸ். கைக்கூலி என்று அழைக்கலாமா?
          நேர்மையாக பேசுங்கள்.
          2. நான் பார்ப்பனனும் அல்ல. எதற்கு வெளிநாடு செல்லத்தடை பற்றி என்னிடம் பேசுகிறீர்கள், புரியவில்லை. எங்காவது நான் பார்ப்பனன் என்று கூறியுள்ளேனா?

          ஈழப்பிரச்சினையில் என் கருத்து இது தான். ரணில் விக்கிரமசிங்கே பேச்சுவார்த்தைக்கு அழைத்தபோது அப்போதே சுமூகமாக ஒரு முடிவுக்கு வந்து இலங்கை என்ற நாட்டில் ஈழம் என்பது தனி சுயாட்சி பகுதியாக அறிவிக்க முயற்சி எடுத்திருக்கலாம். பல இலட்சக்கணக்கான உயிர்பலியை தடுத்திருக்கலாம். ஆனால் அவர்கள் பேச்சுவார்த்தை வேண்டாம், ஆயுதம் கொண்டே முடிவு செய்யவேண்டும் என்று கருதி அப்போது நடந்த தேர்தலில் தமிழர்கள் தேர்தலை புறக்கணிக்க செய்து, புலிகளுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறிய இராஜபக்சே அதிபராவதற்கு வழி வகுத்தார்கள். புலிகள் தவறியது இந்த தருணத்தில் தான். இராஜபக்சே ஆதரவாளனாக என்னை உவமானம் செய்து அவதூறு பரப்புவதை முதலில் நிறுத்துங்கள். அடுத்தவர் இப்படித்தான் இருப்பார் என்று ஒட்டுமொத்தமாக ஸ்டீரியோடைப் செய்வது தான் தென்றல் அவர்களின் மிகப்பெரும் குறை. இதனையும் குறை சொல்வதாக எடுத்து கொள்ளாமல் ஒரு நண்பரின் கருத்தாக கொண்டு பரிசீலியுங்கள்.

  31. \அந்த அம்சம் தமிழ் நாட்டிற்கு இல்லையா ? நாகலாந்துக்கு இல்லையா ? எங்களுக்கு புரிய வையுங்கள் அம்மையே\\

    இது கோமாளி இராமன் அவர்களின் கேள்வி. Sinx பற்றி கணிதப் பட்டதாரிகள் தெரிந்துகொள்ளவேண்டுமாம். ஆனால் தேசத்தின் வரையறைப் பற்றி முதலாளித்துவாதிகளுக்குத் தெரியாதாம்! அவர்களுக்கு விளக்கி விட வேண்டுமாம்!

    இந்தியா தேசிய இனங்களின் சிறைக்கூடம் என்பது காஷ்மீரிகளுக்கு மட்டுமல்ல; நாகாலாந்து, தமிழ்நாடு என அனைத்துமாநிலங்களுக்கும் பொருந்தும். யுனியன் ஆப் இந்தியான்னுதான் சொல்றாய்ங்க. எங்கே சுயநிர்ணய உரிமை கொடுத்துவிட்டால் அது சோவியத் பயங்கரவாதம் ஆகிவிடும்! அப்பொழுது இதே இராமன்கள் சுதந்திரம், சனநாயகம் அப்பொழுது மட்டும் அபயக்குரல் எழுப்புவார்கள். ஆனால் இங்கோ நாகலாந்தும், காஷ்மீரும், தமிழ்நாடும் இந்தியாவின் பகுதிகளாக இருந்திவிட வேண்டும். இவர்மட்டும் கனடாவில் கீரின் கார்டு வாங்கிக்கொண்டு, எல்லைகளை மறைந்து சல்லாபம் புரிவார்!

    • சோவியத் உடைந்ததை போல இந்தியாவை துண்டு துண்டாக வெட்டினால் தான் நம் தென்றல் மகிழ்ச்சி அடைவார் போலிருக்கிறது.

      தமிழ்நாடு தனிநாடு கோரிக்கை என்றோ முடிந்து போன கதை.

      சரி, ஒரு பேச்சுக்கு காஷ்மீர், நாகாலாந்து, தமிழ்நாடு, காலிஸ்தான் என்று கேட்டவர்களுக்கெல்லாம் தனிநாடு கொடுத்து விட்டால் எல்லா பிரச்சினையும் முடிந்து விடும் என்று நினைக்கிறீர்களா?

      போகிற போக்கை பார்த்தால் தென்றல் போன்றவர்கள் சென்னைக்கும் திருச்சிக்கும் பாஸ்போர்ட் எடுத்து செல்லும் லெவலுக்கு கொண்டு சென்று விடுவார்கள். 🙂

    • //நாகாலாந்து, தமிழ்நாடு என அனைத்துமாநிலங்களுக்கும் பொருந்தும்//

      நன்றி ஐய்யா! இந்தியா என்னும் நாடு உங்கள் நாட்டை பிடித்து வைத்துள்ளதை பற்றி கூறினீர்கள் . அவர்கள் என்ன என்ன கொடுமை செய்கிறார்கள் என்பதை பற்றி எனக்கு புரிய வையுங்கள் ஐயா!

      நன்றி ஐய்யா ? இந்தியா என்னும் நாடு உங்கள் நாட்டை பிடித்து வைத்துள்ளதை பற்றி கூறினீர்கள் . அவர்கள் என்ன என்ன கொடுமை செய்கிறார்கள் என்பதை பற்றி எனக்கு புரிய வையுங்கள் ஐயா

      தனியாக உங்கள் நாட்டிற்கு சுதந்திரம் கொடுத்து இருந்தால் என்ன என்ன செய்திருப்பீர்கள் ( இட்லிக்கு தக்காளி சட்னி போன்ற புதுமைகள் ) என்று விளக்குங்கள் ஐயன்மீர்!

      • \\நன்றி ஐய்யா! இந்தியா என்னும் நாடு உங்கள் நாட்டை பிடித்து வைத்துள்ளதை பற்றி கூறினீர்கள் . அவர்கள் என்ன என்ன கொடுமை செய்கிறார்கள் என்பதை பற்றி எனக்கு புரிய வையுங்கள் ஐயா! \\

        இராமன் அவர்களே! முதலில் தேசத்தின் வரையறை தெரிந்துகொள்ளுங்கள். நிலப்புரத்துவத்தை அழித்து மேலேறிவருகிற முதலாளித்துவம் தேசத்தை எப்படி வரையறுத்தது என்று தெரியாமல் தாங்கள் ஒரு முதலீட்டுவாதியாக இருப்பதைவிட இழிவான ஒன்று இருக்க இயலாது. இது தெரிந்த முதலாளித்துவாதி யாரும் இந்தியாவை தேசம் என்று சொல்வதில்லை. சமஸ்தானங்களை இணைப்பதற்கு பெயர் இந்திய தேசம் என்றால் பிஸ்மார்க் ஜெர்மனியில் செய்ததற்கு என்ன பெயர்?

        தோழர் கலையரசன் சமீபத்திய பதிவில் அழகாக எடுத்துக்காட்டினார்.

        1. முதலீட்டுவாதிகளுக்கு லிபரலிசம் குறித்து தெரியாது. 2. பிரெஞ்சுப் புரட்சிக்கு பிறகு எத்துணை லிபரல் நாடுகளை முதலாளித்துவம் கொண்டுவந்தது என்றால் தெரியாது. 3. சுயநிர்ணய உரிமை குறித்து தெரியாது.

        இது எதுவும் தெரியாமல் இந்தியா ஒரு தேசமாம்! இதில் சுயநிர்ணய உரிமை பற்றித் தெரியாமல் அர்னால்டு படம் போன்று தமிழ்நாட்டிற்கு சுதந்திரம் கொடுத்தால் என்ன செய்திருப்பீர்கள் என்று ஊசிப்போன சாம்பாராட்டம் ஒரு கேள்வி வேறு! இதில் இந்த பழைமைவாதிகள் இட்லி, சட்னி புதுமைகளைப்பற்றிக்கதைக்கிறார்கள். போய் வரலாறு படிங்க சார் முதல்ல. தேசம்ன்னா என்னான்னு முதல்ல தெரிஞ்சுங்குங்க?!!!

  32. திருவாளர் கற்றது கையளவின் நிலைப்பாட்டை சற்று ஆராய்வோம்.

    \\“நான் உண்ணும் ஒவ்வொரு பருக்கை சோறிலும் என் உழைப்பு உள்ளது. இன்னொருவரின் நன்கொடையில் என் வாழ்வு ஓடவில்லை. உங்கள் மனசாட்சியை கேளுங்கள், உண்மையான பொறுக்கிதின்னி யார் என்பது உங்களுக்கே தெரியும். நான் விளக்க வேண்டிய அவசியமே இல்லை. இனியும் நீங்கள் என்னை பொறுக்கித்தின்னி என்று அவதூறு பரப்பினால் நானும் உங்களை “ஓசி தின்னி” என்று கூற வேண்டியதிருக்கும்.”\\

    ஐயா திருடனும் பிச்சைக்காரனும் ஒன்றல்லர். நாங்கள் முதலாளித்துவத்தை ஒழிக்கிறோம் என்று சொல்லி மக்களை அணிதிரட்டி நன்கொடை வாங்குகிறோம். இது தாங்கள் சொல்வதுபடியே வாங்கிய நன்கொடையை வைத்து முதலாளித்துவத்தை ஒழிக்காமல் வயிறு வளர்க்கிறோம் என்றால் அதை மக்கள் முன்பாக சொல்ல வரவேண்டும். மக்களும் எங்களைப்பார்த்து முதலாளித்துவத்தை அழிக்கிறேன் என்று சொல்லிவிட்டு தரகுமுதலாளி, பன்னாட்டு கம்பெனிகளுக்கு பாரதமாதாவைக் கூட்டிக்கொடுத்தவன் போல் வயிறுவளர்க்கிறாயாமே? என்று கண்டித்தால் அதைவிட பேறு என்ன இருக்கிறது? கம்யுனிஸ்டுக்கு முக்கியம் முதலாளித்துவ பயங்கரவாதத்தை ஒழிப்பதுதான். ஓசி தின்னி என்ற பெயரோ தியாகி என்ற புகழோ அல்ல. அதேபோன்று மறுகாலனியாக்க கொள்கைகளால் நாட்டைசுரண்டி பொருள் சேர்த்து வாழ்வதுதான் இயல்பேயன்றி பொறுக்கித்தின்னி என்றழைப்பதல்ல என்று தாங்கள் பிரகடனம் செய்யுங்களேன். பொறுக்கித்தின்னி என்பதை விட்டுவிடுகிறேன். சரியா எட்டப்பரே?

    • எட்டப்பர், பொருக்கிதின்னி,வக்கு இல்ல மத வெறி போன்ற வார்த்தைகளை தவிர்ப்பது நல்லது காஸ்மீர் பிரிவினைவாதிகளின் பின்னால் மதம் தவிர வேற என்ன இருக்குது,//இது சரியென்றால் தைரியம் இருந்தால் பொதுவாக்கெடுப்பு நடத்தி பிரச்சனைய முடிக்கவேண்டியதுதானே//கம்மூனிஸ்டுகளுக்குதான் போலிச்சனநாயத்துல நம்பிக்க இல்லயே

  33. தென்றல்,

    மக்கள் என்று யாரை சொல்கிறீர்கள். அந்த மக்களில் நானும் ஒருவன் தான். ஒருகாலத்தில் நானும் ம.க.இ.க.வுக்கு கல்லூரி நாட்களில் நன்கொடை அளித்தவன் தான். ஒருவிதத்தில் என் பணத்தை நீங்கள் உபயோகித்திருக்கிறீர்கள். அதனால் என் கேள்விக்கு நீங்கள் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்.

    ஆக, நோகாமல் மற்றவர்கள் உழைத்து கொடுத்த காசை அவர்கள் கொடுத்த காசுக்கு எந்த பயனும் இல்லாமல் உண்டு செரிக்கிறீர்கள் என்று அர்த்தம் கொள்ளலாமா தென்றல்?

    இதுவரை வாங்கிய காசுக்கு எத்தனை இடங்களில் முதலாளித்துவத்தை அழித்தீர்கள்?

    இனியும் பொறுக்கித்தின்னி போன்ற அவதூறுகளை பரப்பினால் நானும் மேலே சொன்ன கருத்தினை மீண்டும் மீண்டும் பதிவிடுவேன்.

    மீண்டும் முதலிலிருந்து பொறுமையாகவே கேட்கிறேன்?

    முதலாளித்துவம் கொடுமையானது, அதற்கு மாற்று சோசலிசம், கம்மியுனிசம் என்கிறீர்கள். முதலாளித்துவத்தில் உள்ள குறைகளை மட்டும் சொன்னால் பற்றாது. சோசலிசத்தின் நிறைகளை பற்றி மக்களிடம் இதுவரை தெளிவாக எடுத்துரைத்தீர்களா?

    பெரிதாக வேண்டாம், உங்கள் நண்பர்கள் நடத்தும் ஏதாவது ஒரு தொழிற்சாலையை ஒரு மாடலாக எடுத்து ஒரு சோஷலிச தொழிற்சாலையை நிறுவலாம் அல்லவா? எங்களை போன்ற பொதுமக்களுக்கும் ஓகோ, சோசலிசம் மூலம் ஒரு பொருள் குறைந்த விலைக்கு, தரமாக கிடைக்கிறது, அந்த தொழிற்சாலையில் வேலை செய்யும் அனைவரும் மன நிறைவுடன் உள்ளனர் என்ற திருப்தியும் கிடைக்கும். அதற்கு முதல் முயற்சி எடுங்களேன்?

    உங்கள் முயற்சி வெற்றி அடைய வேண்டும் என்றால் முதலில் அடுத்தவனை குறை கூறுவதை முதலில் நிறுத்துங்கள். முதலில் உங்களிடம் உள்ள நிறைகளை மக்களுக்கு தெளிவாக எடுத்துரையுங்கள். எல்லோரிடமும் கற்பதற்கு சில விடயங்கள் உள்ளன. உங்களிடமிருந்தும் எத்தனையோ விடயங்களை நானும் தெரிந்து கொண்டிருக்கிறேன். அதில் தவறில்லை. அதே போல அடுத்தவர் சொல்லும் கருத்து, உங்கள் கருத்துக்கு ஒத்துபோகாமல் இருந்தாலும், அந்த கருத்தினை பற்றி சற்று சிந்தித்து பார்ப்பதில் தவறில்லை.

    தற்போதைய தேர்தல்முறை ஜனநாயகம் நூறு சதவீதம் அப்பழுக்கற்றது என்று இங்கு யாரும் சொல்லவில்லை. அதற்கு மாற்றாக தாங்கள் கூற வரும் சோஷலிச வழிமுறையை பற்றி முழுதாக எங்களை போன்ற பொதுமக்களுக்கு விளக்க வேண்டும் என்றால் வெறும் எட்டு சுரக்காயில் கறி சமைக்க முடியாது, வாயிலேயே வடை சுட்டுக்கொண்டிருக்காமல் தெளிவாக தங்கள் ஆட்சிமுறையில் மக்களுக்கு எப்படி நன்மை கிடைக்கும் என்பதற்கு ஒரு மாடலை, ஒரு மாதிரியை மக்களுக்கு தாங்கள் நடைமுறையில் காட்டி நிரூபிக்க வேண்டும்.

    நீங்கள் சொல்லும் வழிமுறை தவறு என்றோ, அது தோல்வியை தழுவும் என்றோ நான் கூறவில்லை. ஆனால் நீங்கள் கூறும் வழிமுறையை நடைமுறையில் சாத்தியப்படுத்த வழிவகை செய்யுங்கள் என்று நான் பலமுறை கூறும்போதும் அப்போதெல்லாம் தனிமனித இழிவு வார்த்தைகளை பயன்படுத்தி என் பேச்சை மட்டுறத்த முயற்சி செய்கிறீர்களே ஒழிய ஆக்கபூர்வமாக ஒரு வழிமுறையை பற்றி யோசிக்க மறுக்கிறீர்கள்.

    கற்றது கையளவு என்ற ஒரு ஒரு தனி நபருக்கு பதிலளிக்காமல் நாட்டில் பெரும்பாலானவர்கள் கற்றது கையளவு போல தான் இருக்கிறார்கள் என்று புரிந்து கொண்டு, பொதுமக்களின் கேள்வியாக இதை கருதி நீங்கள் பதிலளிக்க வேண்டுகிறேன்.

    • திருவாளர் கற்றது கையளவு,

      \\ மக்கள் என்று யாரை சொல்கிறீர்கள். அந்த மக்களில் நானும் ஒருவன் தான். ஒருகாலத்தில் நானும் ம.க.இ.க.வுக்கு கல்லூரி நாட்களில் நன்கொடை அளித்தவன் தான். ஒருவிதத்தில் என் பணத்தை நீங்கள் உபயோகித்திருக்கிறீர்கள். அதனால் என் கேள்விக்கு நீங்கள் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும். ஆக, நோகாமல் மற்றவர்கள் உழைத்து கொடுத்த காசை அவர்கள் கொடுத்த காசுக்கு எந்த பயனும் இல்லாமல் உண்டு செரிக்கிறீர்கள் என்று அர்த்தம் கொள்ளலாமா தென்றல்?\\

      ஐயா புரட்சிகர இயக்கங்களுக்கு தாங்கள் நன்கொடை அளித்தாகவும் தங்களது பணத்தை புரட்சிகர இயக்கங்கள் பயன்படுத்தியதாகவும் அதற்கு எந்த பயனும் இல்லாமல் உண்டு செரித்ததாக அர்த்தம் கொள்ளலாமா என்று கேட்கிறீர்கள்.

      எனது நிலைப்பாட்டை நான் கூறிவிடுகிறேன். நன்கொடை கொடுத்த மக்கள் யாரும் இதுவரை போராடாமல் இருந்ததில்லை. மாறாக, நானோ நூலக விசயத்தில் தங்களைப் போராடக் கூப்பிட்டும் தாங்கள் திருப்பிக்கொண்டு ஓடியவர் என்பது இங்குள்ள அனைவருக்கும் தெரியும். ஆக, போராடக் கூப்பிட்டும் திருப்பிக்கொண்டு ஓடியவர்கள் தருவதாகச் சொல்லப்படும் நன்கொடை, ஒறுத்தல் தொகையேயன்றி என் அறிவுக்கு எட்டியவரை அது நன் கொடையாக கருதப்படாது. இதைத்தாங்கள் செலுத்தவேண்டியது தங்களது கடமை. சான்றாக ஹூனான் விவசாயிகள் கிளர்ச்சியின் போது, போராடாத பெரும் தனக்காரர்கள் மீது எமது தோழர்கள் ஒறுத்தல் தொகையை அறவிட்டனர். மற்றபடி போராடும் மக்கள் யாரும் நன் கொடை கணக்கு எல்லாம் கேட்கவில்லை. ஏனெனில் இது அவர்களுடைய போராட்டம். மாறாக ரசியாவில் குலாக்குகள் அதாவது பணக்கார லும்பன்களும் கம்யுனிஸ்டுகளுக்கு நன்கொடைதருவதாக காட்டிக்கொண்டு கோதுமையை பதுக்கி கள்ளச்சந்தையில் ஈடுபட்டனர். வரலாற்றில் நிகழந்த அந்தத் தவறை எந்த நாட்டு புரட்சிகர இயக்கங்களும் அனுமதித்ததில்லை. அதே சமயம் லேவாதேவிக்காரர்களிடம் ஒறுத்தல் தொகையெல்லாம் கேட்டுக்கொண்டு நிற்கவில்லை. ஏனெனில் அவர்களின் சொத்து, திருடப்பட்ட ஒன்று. அதை நாங்கள் பறித்துக்கொண்டோம். பறித்துக்கொள்வோம். ஆக இங்கு மூன்றே தரப்பு தான் உண்டு. உங்களைப் போராடும் மக்கள் தரப்பில் சேர்ப்பதா? லேவாதேவிக்காரர்கள் தரப்பில் சேர்ப்பதா? அல்லது ஒறுத்தல் தொகையைக் கொடுத்துவிட்டு மனம் திருந்தி சோசலிச உழைப்பு முறையை வாழப்பழகிக்கொள்ளும் பணக்கார வர்க்கத்தில் சேர்ப்பதா? எது என்று முடிவு பண்ணி சொல்லுங்கள். அதைவிடுத்து இந்த வேசம் மிகவும் மேற்கொண்டு செல்லுபடியாகாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

      வேண்டுமானால் பறிக்கப்பட்ட உடமையின் ஒரு பகுதியை பிடுங்கிக்கொண்டோம் என்று சொல்லுங்கள். அதுதான் சோசலிசம் என்பது மக்களுக்கு தெரியட்டும்.

    • திருவாளர் கற்றது கையளவு,

      \\ சோசலிசத்தின் நிறைகளை பற்றி மக்களிடம் இதுவரை தெளிவாக எடுத்துரைத்தீர்களா? பெரிதாக வேண்டாம், உங்கள் நண்பர்கள் நடத்தும் ஏதாவது ஒரு தொழிற்சாலையை ஒரு மாடலாக எடுத்து ஒரு சோஷலிச தொழிற்சாலையை நிறுவலாம் அல்லவா? \\

      ஐயா சோசலிச தொழிற்சாலையை நடத்துவதற்கு சோசலிசம் வேண்டும். அதற்கு முதலில் சோசலிச மாடலையும் சோசலிசம் என்றால் என்ன என்பதையும் தெரிந்துகொள்ளவேண்டும்.

      சோசலிசம் என்பது உடமை பறித்தவனை உடமை நீக்கம் செய்வது. வர்க்கங்களை ஒழிப்பது.

      இதற்கு மாடல் நக்சல்பாரி எழுச்சி, தெலுங்கானா போராட்டம், மக்கள் அதிகாரத்தின் டாஸ்மாக் கடை அழிப்பு, வெள்ளாற்றை மக்கள் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவது போன்றன என நிறையச் சொல்லலாம்.

      இதையெல்லாம் மக்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் அவர்கள் தான் இதைக் கற்றுத்தருகிறார்கள்.

      இதைத் தெரிந்தும் தெரியாமல் தொழிற்சாலை என்று பம்மாத்த்து காட்டுவது பணக்காரர்களை விட்டுவிட்டு தங்களைப்போன்றவர்கள் பல்குத்திக்கொண்டே சோசலிச தொழிற்சாலை முடியுமா என்று கேட்கிற ஒருவகை களவாணித்தனமின்றி வேறில்லை.

      இனிமேலாவது சோசலிச மாடல் தரமுடியுமா என்று கேளுங்கள். அதற்கு சோசலிசம் என்றால் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள். இங்கே இராமன் எனும் வாசகர் நேருவை சோசலிஸ்டு என்றும் இலவசங்கள் வழங்குவதை சோசலிசம் என்று கதைக்கிற சில்லறைத்தனம் தான் உங்களிடமும் இருப்பது. இதை ஏதோ தாங்கள் அறியாதவர் என்றும் தாங்கள் விளங்கிக்கொண்டால் விளங்கிவிடும் என்றும் அடுத்தவர்கள் நினைக்கலாம். ஆனால் தாங்கள் ஒரு நச்சுப்பாம்பு என்பது நம்மிருவருக்குத்தானே தெரியும்!

  34. திப்பு அவர்களின் பின்னூட்டம் 22.2.2.2.2.1.1.1.2.2க்கு மற்றும் பல்வேறு பின்னூட்டங்களுக்கு பதில் இங்கே:

    நீங்கள் நூராணி அவர்களின் கட்டுரையை சுட்டிக்காட்டுகிறீர்கள்.
    ஆனால் நூராணி அவர்கள் உண்மையிலேயே நடுநிலையாளரா?

    பிரிட்டிஷ் அரசாங்கத்தின் பிரித்தாளும் சூழ்ச்சியினால் வங்காளமும் பஞ்சாபும் மத அடிப்படையில் பிரித்ததற்கும், இந்தியாவை மத அடிப்படையில் பிரிக்க வேண்டும் என்ற முசுலீம் லீகின் 1940 லாகூர் தீர்மானத்தை மனப்பூர்வமாக ஆதரித்தவர் திரு.நூராணி அவர்கள். சுதந்திரத்துக்கு முற்பட்ட ஒன்றிணைந்த இந்தியாவில் உள்ள முசுலீம் பெரும்பான்மை உள்ள அத்தனை மாநிலங்களையும், முசுலீம் ஆட்சியில் உள்ள பகுதிகளையும் ஒன்றிணைத்து தனியாக ஒரு நாடு உருவாவதற்கு ஆதரவு அளித்தவர். மதத்தின் அடிப்படையில் ஒரு நாட்டை இரு கூறாக்குவது பிரிட்டிஷ் அரசாங்கத்தின் சூழ்ச்சி. ஜின்னாவும் பதவி ஆசையில் அதற்கு துணை போனார். நூராணி அவர்கள் இதற்கெல்லாம் ஆதரவு தெரிவித்தவர்.

    நூராணி அவர்களது கருத்துக்களை நடுநிலையான கருத்தாக ஏற்றுக்கொள்ள முடியாது.

    அடுத்து நீங்கள் சொன்ன அக்சாய் சீன் பற்றிய விவரங்களுக்கு வருவோம்.
    நூராணி அவர்கள் கட்டுரையில் நீங்கள் சுட்டிக்காட்டிய பகுதியில் இருந்தே பார்க்கலாம். அக்சாய் சீன் பகுதி முழுக்க பிரச்சினைக்குரிய பகுதி இல்லை, அதில் ஒரு சில பகுதிகளில் இரு நாடுகளுக்கும் கருத்து வேறுபாடு உள்ளதாக நேரு சொன்னதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் தற்போதுள்ள நிலை என்ன, அக்சாய் சீன் பகுதியில் எத்தனை சதவீதம் சீனா ஆக்கிரமித்துள்ளது?

    அடுத்து மேப் மேட்டருக்கு வருவோம். அபிசியல் மேப், அட்லஸ் மேப் என்று சந்து பொந்துக்குள் ஒளியும் திப்புவுக்கு 1920 ஆண்டுக்கு முன்னர் அக்சாய் சீன் பகுதி சீனாவில் இருப்பதாக கூறப்பட்டுள்ள அபிசியல் மேப் ஏதாவது உள்ளதா என்று தெரியப்படுத்தினால் நல்லது.

    இன்னொரு முக்கியமான விடயம்.
    நம் நாட்டை அந்நிய நாடு ஆக்கிரமிப்பதை எதிர்ப்பதற்கும், அடுத்த நாட்டுக்கு பணி நிமித்தமாக சென்று வருவதும் இரு வேறு விடயங்கள். சீனா மட்டும் அல்ல, ஆசியாவின் பல்வேறு நாடுகளுக்கும் பணி நிமித்தமாக செல்கிறேன். என்னமோ சீனாவுக்கு மட்டுமே நான் செல்வதாக ஒரு தவறான பிம்பத்தை உருவாக்க வேண்டாம்.

    • கற்றது கையளவு இந்த திருத்தம் சரியானதாக இருக்கும் என்று உணருகின்றேன் :

      “நம் நாட்டை அந்நிய நாடு ஆக்கிரமிப்பதை எதிர்ப்பதற்கும், அந்த அந்நிய நாடுக்கு பணி நிமித்தமாக சென்று வருவதும் இரு வேறு விடயங்கள். சீனா மட்டும் அல்ல, ஆசியாவின் பல்வேறு நாடுகளுக்கும் பணி நிமித்தமாக செல்கிறேன்.”

      //நம் நாட்டை அந்நிய நாடு ஆக்கிரமிப்பதை எதிர்ப்பதற்கும், அடுத்த நாட்டுக்கு பணி நிமித்தமாக சென்று வருவதும் இரு வேறு விடயங்கள். சீனா மட்டும் அல்ல, ஆசியாவின் பல்வேறு நாடுகளுக்கும் பணி நிமித்தமாக செல்கிறேன். //

    • ஒரு நாடு[ சீனா] நமக்கு எதிரி நாடு என்றால் அதனை இராணுவ ,எல்லை பிரசனைகளுக்காக எதிர்த்துக்கொண்டே அந்த நாட்டுக்கு வர்த்தக ,பொருளாதார ,வேலை காரணங்களுக்காக சென்றுவருவதும் மகா பெரிய தேச துரோகம் தான் கற்றது கையளவு

    • சீனா இந்தியாவின் எல்லை பகுதிகளை ஆக்கரிமிப்பு செய்து உள்ளதை நன்கு அறிந்த நீங்கள் அந்த ஆக்கிரிமிப்பு செய்த சீன நாட்டுக்கு பணி நிமித்தமாக சென்று வருவது என்பது இந்தியாவின் மக்களை அவமரியாதை செய்யும் செயல் மட்டும் அன்று ,இந்தியாவிற்கு எதிராக அதன் நலன்களை அடமானம் வைக்கும் அவமானமான கொடும் செயலாகவே நான் பார்கின்றேன். இது போன்றே நல்ல வரூமானம் கிடைக்கும் என்றால் இலங்கைக்கும் சென்று அதன் அரசுக்காகவோ அல்லது அந்த நாட்டின் முத்லாளிகளுக்காகவோ வேலை செய்ய உங்களால் இயலுமா நண்பரே ?

      //நம் நாட்டை அந்நிய நாடு ஆக்கிரமிப்பதை எதிர்ப்பதற்கும், அடுத்த நாட்டுக்கு பணி நிமித்தமாக சென்று வருவதும் இரு வேறு விடயங்கள்//

      • அமெரிக்காவில் வெனிசுலா பெட்ரோல் விற்கிறது
        வெனிசுலாவில் அமேரிக்கா கார் விற்கிறது.

        வெனிசுலாவின் பெற்றோல்போடுபவனை அமெரிக்காவின் எதிரி ,
        போர்டு கார் வாங்குபவன் வெனிசுலாவின் எதிரி என்று அர்த்தம் ஆகாது

        அதை புரிந்து கொள்ள பூலோகத்திற்கு தாங்கள் வரவேண்டும் , உங்கள் தத்துவ கற்பனை கிணற்றில் இருந்தால் புரியாது .

        அமெரிக்க மென்பொருள் இல்லாத செல்போன் தானே பயன்படுத்துகிறீர் ?
        உங்க கல்யாணத்துக்கு பத்திரிக்கை கூட அடிக்க முடியாது , கையிலே எழுத வேண்டியது தான் .

        சீனா நல்லவன்னு சொல்றீங்க ! அந்த நல்லவன் திபத் மக்களை ய்காதிபதியத்தில் இருந்து காப்பாற்றியதை போல இந்தியாவையும் காப்பான் என்கின்ற நப்பாசை தானே ? நானும் கம்யூன்ச்டு நானும் கம்யூன்ச்டு என்று கூறி ஒரு அரசு வேலை வாங்கி அதிகாரம் செலுத்தலாம் என்கின்ற பேராசை தானே உங்களை இப்படி பேச வைக்கிறது …

        பல நாடுகள் சுற்றி பலதரப்பட்ட மக்களை கண்டு உண்மையை உணர்ந்து பேசுகிறார் ஒருத்தர் , கிணற்றில் இருந்து கொண்டு வியாக்கியானம் பேசுகிறார் இவர்

      • இனியன் அவர்களே,

        மீண்டும் கேட்கிறேன். பதில் சொல்லுங்கள்.
        நீங்கள் பயன்படுத்தும் கணினி, தொலைபேசி, தொலைகாட்சி போன்ற உபகரணங்கள் முழுதாகவோ, அல்லது அதன் உள்ளுக்குள் இருக்கும் ஆயிரக்கணக்கான பாகங்களோ முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டுள்ளதா என்று தங்களுக்கு தெரியுமா? மேற்கண்ட உபகரணங்களை திறந்து பார்த்து உள்ளே சீனா, அமெரிக்க, மற்றும் பல வெளிநாடுகளின் பாகங்கள் இருந்தால் அந்த பொருட்கள் அனைத்தையும் இந்த நிமிடமே உடைத்து விட நீங்கள் தயாராக இருக்கிறீர்களா? சொல்லுங்கள்?

        இதில், அடமானம், அவமானம் என்று பேச்சு வேறு.

    • \\1920 ஆண்டுக்கு முன்னர் அக்சாய் சீன் பகுதி சீனாவில் இருப்பதாக கூறப்பட்டுள்ள அபிசியல் மேப் ஏதாவது உள்ளதா //

      இந்தியாவுக்கு சொந்தமா சீனாவுக்கு சொந்தமா என்று இழுபறி நடக்குது என்றுதான் சொல்கிறேன். யாருக்கு சொந்தம்னு பேச்சு நடத்தி சுமூகமா தீத்துக்கணும்னு சொல்றேன்.எந்த ஒரு தரப்புக்கும் ஆதரவாகவோ எதிராகவோ ஆதாரம் தேட வேண்டிய வேலை எனக்கு எதற்கு .அதை சீனாவோடு வணிக உறவு வைத்துக்கொண்டே இந்தியாவுக்காக போலியாக கூவும் நீங்கள்தான் தேட வேண்டும்.இருந்தாலும் நீங்கள் கேட்டதற்காக இணையத்திலிருந்து சில தகவல்கள்.

      (Pre-Independence of India)

      Johnson’s Line

      In 1865, W.H. Johnson proposed what is known as the Kuen Lun Line or the Johnson’s Line as the north-east border of the British Raj in India, which placed Aksai Chin as part of Kashmir (i.e. under Indian control). At this time, China was undergoing the Dungan revolt in Xinjiang (region in North-East China that borders Aksai Chin) and were not in full control of Xinjiang, thus the Johnson’s Line was never presented to them – which is why they never accepted it as the official border between India and China. It is to be noted that the British first deemed the Johnson’s Map inaccurate due to cartographical errors. Sir Jon Ardagh, Director of Military Intelligence, supported the improved version of Johnson’s Map, an improved version of the Johnson’s Line, and it was thereafter termed the Johnson’s-Ardagh Proposal.

      McCartney-McDonald Line

      In 1893, a Chinese official at Kashgar handed over the map of the boundary proposed by China to the British consul-General, George McCartney: a border of division along the Laksang Range that placed the majority of Aksai Chin in Chinese territory. The British supported this Line, known as the McCartney-McDonald Line, and Sir Claude McDonald sent it back by note to the Qing government in China i.e. the British formally proposed the McCartney-McDonald Line to the Chinese in 1899. The Chinese did not reply and the British took this as the Chinese agreeing to the McCartney-McDonald Line, therefore abandoning the Johnson’s Line in favour of the new Line. The McCartney-McDonald Line was used by the British until 1908. However, following the Xinhai Revolution in China in 1911, the British used the original Johnson’s Line until the end of World War 1. However, it is also to be noted that this was all on paper and the British never actually consolidated the border on ground or set up outposts along either of the proposed borders.

      Post Indian Independence (1947)

      There was no clear demarcation of the border at the time of India’s independence that was accepted by both China and India and neither of these boundaries was considered legally binding bilaterally. After its independence in 1947, the Indian Government adopted the Johnson’s Line as its official border with China while the Chinese continued using the McCartney-McDonald Line.

      Sino-India War of 1962

      The expansionist policy of China in the 1950s led to the PLA (People’s Liberation Army) annexing Xinjiang and Tibet, following which a road, Highway 219, was ordered to be built between these two regions. This road ran through Aksai Chin, and thus Beijing started taking effective control of this area. After India detected the building of this road in 1957, Jawaharlal Nehru rejected the proposal by Zhou Enlai to bilaterally solve the question of effective control in Arunachal Pradesh and Aksai Chin.

      It is notable that in his 1954 visit to China, the prime minister of India Jawaharlal Nehru displayed the new political map of India to Zhou Enlai, the first Premier of the People’s Republic of China. The new political map of India was the first to depict the Johnson’s Line and the McMahon Line as the firm, concrete borders of India. Zhou Enlai did not confirm or deny these demarcations as the official IndoChina borders. Tensions between the two countries only rose when India offered asylum to the Dalai Lama in 1959 and lit the powder-keg, ultimately resulting in the Sino-Indian War of 1962. India was defeated in the border war and the McDonald Line (which places Aksai Chin under Chinese control) has been internationally considered as the de facto border between India and China since then i.e. Aksai Chin has effectively been under Chinese administration since 1962.

      • திப்பு,

        மீண்டும் மீண்டும் உங்களுக்கு விளக்க வேண்டும் போலிருக்கிறது.

        சீனாவுக்கு பணி நிமித்தமாக சென்று வந்தால் எனக்கு தேசத்துரோகி பட்டம் கொடுக்கிறீர்கள்.

        சீனாவுக்கு மட்டுமே நான் சென்று வருகிறேனா? அனைத்து ஆசியாவுக்கும் தான் சென்று வருகிறேன். இலங்கைக்கும் நான் செல்கிறேன். அதனால் என்னை ஈழ எதிர்ப்பாளன் என்று கூறுவீர்களோ? நான் பயணித்த ஏனைய நாடுகள் அனைத்தும் இருக்கும்போது சீனாவை மட்டும் நீங்கள் குறிப்பிடுவதை என்னவென்று சொல்ல.

        நெஞ்சை தொட்டு சொல்லுங்கள். நீங்கள் பயன்படுத்தும் அனைத்து கருவிகளும் மென்பொருட்களும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டதா?

        வெளியே மேட் இன் இந்தியா ஸ்டிக்கர் ஒட்டி உள்ளுக்குள் அனைத்தும் சீன உபகரணங்கள் இருக்கும் கருவிகள் பற்றி எனக்கு தெரியும். உங்களுக்கு தெரியுமா?

        உங்கள் அலைபேசி, தொலைகாட்சி, கணினியின் பாகங்கள் எங்கிருந்து வருகின்றன தெரியுமா?
        நீங்கள் வீட்டில் பயன்படுத்தும் பொருட்களின் உள்ளுக்குள் இருக்கும் ஆயிரக்கணக்கான சிறு பாகங்கள் எந்தெந்த நாட்டில் இருந்து வருகிறது என்று உங்களுக்கு தெரியுமா?
        உங்கள் வீட்டில் பயன்படுத்தும் அலைபேசி, தொலைகாட்சி, கணினி இவை அனைத்தையும் இந்த நிமிடமே உடைத்து போட்டு விடுவீர்களா? சொல்லுங்கள்? அடுத்த நாட்டில் உருவான பொருளை உபயோகிப்பதால் நீங்கள் தேசத்துரோகி ஆகிவிட்டீர்கள் என்று நான் கூறலாமா? சொல்லுங்கள்.

        உங்கள் உறவினரை ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கிறீர்கள் என்று வைத்து கொள்வோம். (அப்படி நடக்க கூடாது, ஒரு பேச்சுக்கு தான் சொல்கிறேன்). அப்போது அங்கு அவரது உயிரை பாதுகாக்கும் கருவிகள் அனைத்தும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டதா என்று ஆராய்ந்து கொண்டிருப்பீர்களா?

        உள்நாட்டிலேயே தொழில்நுட்பம் வளர வேண்டும் என்ற எண்ணம் மிகச்சரியே.
        வெளிநாட்டு பொருட்களை விட உள்நாட்டு பொருட்களின் பயன்பாடு அதிகம் இருக்க வேண்டும் என்று நினைப்பதும் சரியே. ஆனால் வெளிநாட்டுக்கு பணி நிமித்தமாக ஒருவன் போவதாலேயே அவனை தேசத்துரோகி பட்டம் கொடுக்கிறீர்களே இது நியாயமா?

        இவ்வளவு ஏன் திப்பு, பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு வெங்காயமும் சக்கரையும் கூட தான் வருகிறது. அதை தின்ற பொதுமக்கள் அனைவரும் தேசவிரோதி ஆகிவிடுவார்களா?

        நான் வெளிநாட்டு மோகத்தில் செல்லவில்லை. அங்கு என் நிறுவனம் போக நியமித்ததால் போகிறேன். திரைகடல் தேடி திரவியம் தேடினாலும் என் கூடு இங்கு தான் இருக்கிறது. எங்கும் போய் நிரந்தரமாக தங்கி விட மாட்டேன்.

    • நூரானியின் கட்டுரையை சுட்டிக்காட்டுவது அக்சாய் சின் சர்ச்சைக்குரிய பகுதி என நேருவே ஒப்புக்கொண்டுள்ளதை நிறுவுவதற்குத்தான் .நூரானி .நடுநிலையாளரா.இல்லையா என விவாதத்தை திசை திருப்புவது மலிவான உத்தி.பிரண்ட்லைன் போன்ற ஏடுகளில் நேரு சொன்னதாக யாரும் ஆதாரமின்றி இட்டுக்கட்டி எழுத முடியாது.ஆகவே நேரு அக்சாய் சின் சர்ச்சைக்குரிய பகுதி என ஒப்புக்கொண்டுள்ளது உறுதிப்படுகிறது.

      • சர்ச்சைக்குரிய பகுதி என்று நீங்கள் சொல்லும்போது அந்த பகுதியை இரு நாடுகளும் தங்களுக்கு சொந்தம் என்று கருதுகையில், என் நாட்டு பக்கம் இருக்கு நியாயத்தை நான் பேசுகிறேன். நீங்கள் அடுத்த நாட்டுக்காரன் பக்கம் பேசுகிறீர்கள். அவ்வளவு தான்.

        சர்ச்சைக்குரிய பகுதி என்றால் இரு அரசுகளும் பேசி தீர்த்து கொள்ளட்டும். அவ்வாறு பேசி தீர்க்கப்பட்டால் நான் மகிழ்ச்சியே அடைவேன். ஆனால் பேசிக்கொண்டிருக்கும்போதே சர்ச்சைக்குரிய பகுதியில் ரோடு போடுவதை நீங்கள் ஆதரிக்கிறீர்கள், நான் எதிர்க்கிறேன், அவ்வளவு தான்.

        அபிசியல் மேப், அட்லஸ் மேப் என்று கிண்டல் அடிக்க தெரிந்த திப்பு அவர்களுக்கு 192௦ க்கு முன்னர் இருந்த அபிசியல் மேப் கொஞ்சம் எடுத்து காட்டுங்கள் என்று சொன்னேன், பதிலில்லை.

        சீனாவுக்கு இந்தியாவுடன் மாட்டும் தான் எல்லை பிரச்சினை உள்ளது என்றீர்கள். அப்படியில்லை, எல்லா நாடுகளுடனும் சீனாவுக்கு இருக்கும் பிரச்சினைகளை முழுதாக எடுத்துரைத்தேன். பின் மேஜர், மைனர் பிரச்சினை என்று திசை திருப்பிநீர்கள். மேஜர், மைனர் என்று எந்த வரையறையை வைத்து முடிவு செய்கிறீர்கள் என்று கேட்டேன், பதிலில்லை.

        சீனா எந்த நாட்டுடனும் வம்பு சண்டைக்கு போனதில்லை என்றீர்கள். தற்காலத்து பிலிப்பைன்ஸ் செயற்கை தீவு விவகாரத்தை எடுத்துக்காட்டினேன். அதற்கு பதிலில்லை.

        இந்தியா வியட்நாமுடன் பெட்ரோல் தூர ஒப்பந்தம் போட்டது சீனாவுக்கும் வியட்நாமுக்கும் உள்ள பிரச்சினையில் இந்தியா மூக்கை நுழைப்பதாக சொன்னீர்கள். அப்போது சீனா இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கு நடுவே எந்தவகை நிலைபாட்டை எடுத்துள்ளது என்று கொஞ்சம் சொல்வீர்களா என்று கேட்டேன், பதிலில்லை.

        இந்திய சீன பிரச்சினையை நீங்கள் பார்வர்டு பாலிசியில் இருந்து ஆரம்பித்தீர்கள். நான் அப்படி இல்லை, அதையும் தாண்டி பின்னோக்கி பாருங்கள் என்ற பின் இப்போது தான் பழைய விவரங்களுக்கு சென்று பார்த்து இப்போது பதிவிடுகிறீர்கள். சரியான பாதைக்கு இப்போது தான் வந்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

      • //நேரு அக்சாய் சின் சர்ச்சைக்குரிய பகுதி என ஒப்புக்கொண்டுள்ளது உறுதிப்படுகிறது.//

        சரிங்க சார் அப்படியே இருக்கட்டும் . அக்சாய் சின் பிரச்சினைக்கு உரிய பகுதி . அப்போ சீனாகாரன் உங்களிடம் பேசி பிரச்சினையை தீர்த்து , அதற்கு அப்புறம் ரோடு போட்டானா ? ஆனாலும் அவன் நல்லவன்.

        மொன்ன கத்தியோட உக்காந்து இருந்தா , பொதி தர்மன் ராஜாவை பிடித்து தமிழ் நாட்டை , சீனாவோடு வைத்து இருந்தோம் , இப்போது இந்தியா எடுத்து கொண்டது , தமிழ் நாடு பிரச்சினைக்கு உரிய பகுதி அப்படின்னு சொல்லுவான் . சாரி எடுதுக்குவான் . அப்புறம் திப்பு என்கின்ற புனை பெயரை மாவோ என்று மாற்றி கொள்ள வேண்டியது தான்

    • \\ பல்வேறு பின்னூட்டங்களுக்கு பதில் இங்கே://

      22.2.2.2.2.1.1.1.2.4 ல் எழுதியுள்ளதற்கு ஒரு பதிலும் இல்லையா

      \\அது சீனனுக்கு தான் சொந்தம் என்று நீங்கள் சொல்கிறீர்கள்.//

      பொய் சொல்ல கொஞ்சமாவது வெட்கப்படுங்கள்.நான் அப்படி எழுதியதாக மெய்ப்பித்தால் இந்த கட்டுரை தொடர்பாக மேலும் பின்னூட்டம் போடுவதையெ நிறுத்திக்கொள்கிறேன்.

      அதாவது அக்சாய் சின் சீனனுக்கு தான் சொந்தம் என்று நான் சொல்வதாக வெட்கமின்றி பொய் சொல்லி விட்டு ”பல்வேறு பின்னூட்டங்களுக்கு பதில்”என பந்தா என்ன வேண்டிக்கிடக்கு.

      • அக்சாய் சீன் பகுதி இந்தியாவுக்கு சொந்தமான பகுதி என்பது எனது நிலைப்பாடு.

        அந்த கருத்தினை பல்வேறு பின்னூட்டங்களில் நீங்கள் எப்படி அணுகி உள்ளீர்கள், பார்ப்போமா?
        16.2.1.1.1.1.1:
        //மாவோவின் மக்கள் சீன குடியரசு ஆட்சிக்கு வந்தவுடன் எல்லைகள் குறித்த அனைத்து வெளிநாட்டு ஒப்பந்தங்களையும் ரத்து செய்தது.ஏனெனில் அவையெல்லாம் அநியாயமாக வலுவீனமாக இருந்த அந்நாட்டின் மீது திணிக்கப்பட்டவை.//
        திப்பு அவர்களே, வெளிநாட்டு ஒப்பந்தங்களை ரத்து செய்வது என்பது இரு நாடுகள் கூடி சேர்ந்து எடுக்க கூடிய முடிவு. இவர்களாக ஒப்பந்தங்களை ரத்து செய்வதாக அறிவித்து விட்டால் அக்சாய் சீன் பகுதியை நாம் சீனாவுக்கு கொடுத்து விட வேண்டுமா?

        22.2.2.2.2.1.1.1.2.2
        //அட்லஸ் மேப்புக்கும் அபிசியல் மேப்புக்கும் வேறுபாடு தெரியாத நீங்களெல்லாம் எல்லைப்பிரச்னை பத்தி பேச வந்துட்டீங்க.அக்சாய் சின் பகுதியில் இந்திய-சீன எல்லை ஒரு போதும் வரையறுக்கப்பட்டதில்லை.// அந்த அபிசியல் மேப் எப்போதிருந்து அபிசியல் ஆனது என்று குறிப்பிட்டால் நல்லது. 192௦ முன் எனக்கு தெரிந்து எந்த சீன அபிசியல் மேப்பிலும் அக்சாய் சீன் இருந்ததற்கான ஆதாரம் இல்லை.

        22.2.2.2.2.1.1.1.2.4
        //.[”அவன் கைவசம் உள்ள அக்சாய் சின் ”என்றுதான் சொல்லி இருக்கிறேன்.கைவசம் உள்ளது என்பதற்கும் [possession] சொந்தமானது என்பதற்கும் [ownership] வேறுபாடு அறியாத தற்குறியா நீங்கள்.]//
        1962 போருக்கு முன்னர் அக்சாய் சீன் பகுதியின் எத்தனை விழுக்காடு சீனனின் கையில் இருந்தது, போருக்கு பின் எத்தனை விழுக்காடு இருந்தது? கொஞ்சம் தெளிவு படுத்துங்களேன்? போரில் கைப்பற்றிய அனைத்து பகுதிகளையும் சீனா திருப்பி கொடுத்து விட்டதாக சொல்கிறீர்களே, அது உண்மை தானா? நீங்களே மறுபடி வரலாற்றை படியுங்கள்?

        22.2.2.2.2.1.2.1.2
        //ஐயா,போரில் கைப்பற்றிய பகுதிகளை விட்டு சீனா விலகியதைத்தான் பாராட்டுக்குரியது என்கிறேன்.மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் நல்ல மணமுண்டு என்பதை ஏற்க நியாய உணர்வு வேண்டும். போரில் கைப்பற்றப்படாத,போருக்கு முன்பு ஏற்கனவே அவன் கைவசம் உள்ள அக்சாய் சின் [காசுமீர் கிழக்கு என்று அதைத்தான் சொல்றீங்கன்னு நினைக்கிறேன்]பகுதியையும் விட்டு விலகி இருக்கணும்னு சொல்றீங்க.இது இல்லாத ஊர்ருக்கு போகாத வழி.போருக்கு முன் அவன் அந்த பகுதியில் சாலை அமைத்ததே ஓரிரு ஆண்டுகள் இந்தியாவுக்கு தெரியாது.//
        போருக்கு முன் அக்சாய் சீன் பகுதியின் எந்த ஒரு பகுதியும் இந்தியாவின் வசம் இல்லவே இல்லை என்று மறுக்கிறீர்கள் என்று கொள்ளலாமா?

        22.2.2.2.2.1.2.1.2.5
        //இந்த நாட்டு மல்லிகையை சீனனின் மல்லிகை என சொல்லும் இழிகுணம் உங்களிடம் குடி கொண்டுள்ளது// இவ்வாறு என் மேல் அவதூறு பரப்புகிறீர்கள். ஆனால் அதனை விளக்கவில்லை.
        என் நாட்டுக்கு சொந்தமான ஒரு பொருளை நான் எப்போது சீனாவின் மல்லிகை என்று சொன்னேன்? விளக்கமுடியுமா? அதே சமயம் போரில் சீனாவின் செயல்பாட்டை பாராட்டி மாற்றான் தோட்டத்து மல்லிகை என்று கூறியது நீங்கள் தான் என்பதை தாங்கள் மறந்து விட்டீர்கள்.

  35. இனியன் அவர்களே,

    நீங்கள் புதிதாக களத்தில் இறங்கி இருப்பதால் நான் முதலில் இருந்து சொல்கிறேன்.

    சீனா மட்டுமல்ல, சீனா, கசகிஸ்தான், உக்ரைன், மற்றும் ஏனைய தெற்காசிய நாடுகளான இந்தியா, பங்களாதேஷ், இலங்கை, பர்மா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர், கம்போடியா, வியட்நாம், இந்தோனேசியா, ஆகிய நாடுகளுக்கு சுற்றி வருகிறேன். சீனாவுக்கு செல்ல முடியாது என்று என் கம்பெனியில் தனியாக சொல்ல முடியாது. உங்களுக்கே தெரியும். அதுவும் சீனாவின் அரசுக்கும், சீன இராணுவத்துக்கும் சீன அரசியல்வாதிகளுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எல்லா நாடுகளுக்கும் தொழில்நுட்ப ரீதியாக சில இயந்திரங்களை விற்க செல்கிறேன். அவ்வளவு தான். இதில் இந்தியர்களின் வாழ்வாதாரத்தை நான் பறித்ததாக ஏன் தவறாக பழி சொல்கிறார்கள் நம் தோழர்கள் என்று புரியவில்லை.

    அதே சமயம் சீனா 1962 இல் நம் நாட்டுக்குள் ஆக்கிரமித்ததை நியாயம் தான் என்று நம் நண்பர் திப்பு சொல்வதை நீங்கள் எளிதில் விட்டு விடுகிறீர்களே, இது நியாயமா? அதையும் என் பணி நிமித்தம் நான் சென்று வருவதையும் ஒன்றிணைத்து பேசுவது மோசடியல்லவா?

    வெளிநாடுகளுடன் சகவாசமே கூடாது என்று சொல்ல வருகிறீர்களா?
    அவர்களும் நம் நாட்டுக்கு வரக்கூடாது, நாமும் அங்கு போகக்கூடாது என்று சொல்ல வருகிறீர்களா?
    உங்கள் கம்மியுநிஸ்ட் தோழர்கள் யாரும் சீனாவுக்கோ ரசியாவுக்கோ சென்றதே இல்லையா?
    எல்லோரிடம் கேட்கும் அதே கேள்வியை உங்களிடமும் கேட்கிறேன்?
    நீங்கள் பயன்படுத்தும் கணினி, தொலைபேசிகள் எல்லாம் உள்ளூரில் செய்யப்பட்டதா?
    எந்த நாட்டு போனை பயன்படுத்துகிறீர்கள்?

    நீங்கள் வெளிநாட்டு போனை பயன்படுத்தலாம், நீங்கள் வெளிநாட்டு பொருட்களை கொண்டு வெளிநாட்டு மென்பொருட்களை கொண்டு உருவாக்கிய கணினியை பயன்படுத்தலாம். ஆனால் நாங்கள் யாரும் வெளிநாடு செல்லக்கூடாது என்று கூறுவீர்கள். இது என்ன நியாயம்?

  36. திப்புவின் மீது மட்டும் தனிநபர் தாக்குதல்கள் அதிகமாக இருக்க காரணம் என்னவாக இருக்க முடியும் ? அவரின் கருத்துகளை எதிர் கொள்ள இயலாத அறிவற்ற எதிராளிகளின் நிலையா ? அல்லது திப்புவின் பெயரில் இருக்கும் மதமா ? அல்லது இரண்டுமேவா ? அந்த அளவுக்காக தமிழ் சமுகம் பக்குவம் அற்று இருக்கிறது ? வியாசன் ,கற்றது கையளவு ,இராமன் என்று பலரும் அவரின் கருத்துகளை தவிர்த்து அவர் மீதே தனிநபர் தாக்குதலை செலுத்துகின்றார்கள். மிகவும் வருத்தமாக இருக்கின்றது.

    • திப்புவின் மீது தனி நபர் தாக்குதலை நான் நடத்தினேனா?
      நல்ல வேடிக்கை பாவெல்.

      கொஞ்சம் தயவு செய்து இந்த பின்னூட்டதில் உள்ள 241 பின்னூடங்களையும் சற்று நிறுத்தி நிதானமாக படித்த பின் மீண்டும் என்னிடம் தெரிவிக்கவும். குறிப்பாக தென்றலார், திப்பு அவர்கள் என்னுடன் நடத்திய கருத்து பரிமாற்றங்களை மீண்டும் படிக்குமாறு கேட்டு கொள்கிறேன்.

      எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு.

      மேலேந்தவாரியாக படித்தால் எப்படி, முழு பின்னூட்டங்களையும் படித்து விட்டு சொல்லுங்களேன்.

    • தவறான கருத்து.

      திப்பு அவர்களை கருத்தியல் ரீதியாக தான் எதிர்த்து பின்னூட்டமிடுகிறேன். மத ரீதியாக இல்லை. தயவு செய்து மதப்பிரச்சினையை இங்கே கொண்டு வர வேண்டாம்.

    • தனி நபர் தாக்குதல் எங்கே நடத்தி இருக்கிறேன் என்று சுட்டி காட்டுங்கள் , பொதுவாக பேச வேண்டாம்.

  37. திப்புவின் பின்னூட்டம் 22.2.2.2.2.1.2.1.2.5 க்கு என் பதில்:

    நீண்ட விளக்கம் அளித்துள்ளீர்கள். நன்றி.
    நீங்கள் சிறு வணிகர் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். எனக்கு நீங்கள் யார் என்று அறிந்து கொள்ள கேட்கவில்லை. என்ன பொருளை வணிகம் செய்கிறீர்கள் என்று தான் கேட்கிறேன்.

    நீங்கள் மின்னணு சாதனங்களை (இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட சாதனமாக இருந்தாலும், அதற்கு உள்ளே இருக்கும் பாகங்கள் அனைத்தும் நூற்றுக்கு நூறு இந்தியாவிலேயே உருவாக்கப்பட்டது என்று அடித்து சொல்ல முடியுமா? அந்நிய நாட்டு உபகரணங்கள் இல்லாமல் எந்த மின்னணு சாதனங்கள் உள்ளன ஐயா?

    உதாரணத்திற்கு சொல்கிறேன். L&T கம்பெனி மைசூரில் இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட மருத்துவ மின்னணு உபகரணங்களை விற்கிறது என்று சொல்லிக்கொண்டே சீனாவில் இருந்து அனைத்து பகுதிகளையும் கண்டெய்னரில் வரவைத்து இங்கே இந்தியாவில் டப்பா மட்டும் செய்து பின் அழகாக மேட் இன் இந்தியா என்ற ஒரு ஸ்டிக்கரை ஒட்டி விடுகிறார்கள். கேபினட்டை மட்டும் இந்தியாவில் செய்து மற்ற 99 விழுக்காடு பொருட்களை சீனாவிடம் இருந்து தான் கொண்டு வருகிறார்கள். பிபிஎல், கேரளா கம்பெனி பற்று கேள்விப்பட்டிருப்பீர்கள். அவர்களும் அவர்களது மருத்துவ உபகரண பிரிவில் இதே வேலையை தான் செய்கிறார்கள். அந்த மருத்துவ உபகரணங்களை அப்படியே முழுதாக கொண்டு வந்தால் சுங்க வரி பெரும் அளவில் செலுத்த வேண்டும். ஆனால் மூலப்பொருட்களை உயிர்காக்கும் உபகரனத்திர்கான பொருள் என்ற போர்வையில் முழு பூசணிக்காயை மறைத்து கொண்டு வந்து பின் இங்கே டப்பா செய்து இந்திய பொருள் இந்திய பொருள் என்று பீற்றிக்கொள்வார்கள்.

    அதனால் தான் எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் நான் சற்று ஆராய்ந்து மெய்ப்பொருள் காண முயற்சிக்கிறேன். மீண்டும் மீண்டும் என்ன பொருட்களை விற்கிறீர்கள் என்று கேட்பது அதனால் தான்.

    சரி நீங்கள் விற்கும் பொருட்களை விடுங்கள். அது முழுக்க முழுக்க இந்தியாவில் செய்யப்பட்ட பொருளாக இருந்தால் எமக்கு மகிழ்ச்சியே. வாழ்த்துக்கள். அதே சமயம் உங்கள் வாழ்வில், தொழிலில் பயன்படுத்தும் அனைத்து பொருட்களும், அனைத்து மென்பொருட்களும் இந்தியாவிலேயே உருவாக்கப்பட்டது என்று உங்களால் அடித்து சொல்ல இயலுமா?
    அலைபேசி, தொலைகாட்சி, கணினி இவை அனைத்தும் உள்ளூரிலேயே உருவாக்கப்பட்டது என்று உங்களால் உறுதியாக சொல்ல முடியுமா? செல்போனில் பேசுகிறீர்கள். அந்த தொழில்நுட்பத்தை இந்தியாவில் தான் கண்டுபிடித்தார்களா? அலைபேசி டவர் உபகரணங்கள் அனைத்தும் உள்ளூரில் தான் உருவாக்கப்படுகிறதா? உங்களுக்கு தேவையான பொருட்களை வெளிநாட்டுகாரன் உதவியோடு பயன்படுத்துவதற்கு நீங்கள் அஞ்சவில்லை. ஆனால் அடுத்த நாட்டுக்கு மற்றவர் போவதை தடுப்பீர்கள். என்ன நியாயம் திப்பு.

    நம் நாட்டிலேயே ஒரு பொருள் கிடைக்கும்போது அதே பொருளை அந்நிய நாட்டில் இருந்து கொண்டு வந்து விற்பது உள்ளூர் பொருள் விற்பவரின் வாழ்வாதாரத்தை குலைக்கும் செயல் என்பதை ஒத்துக்கொள்கிறேன். ஆனால் நம் ஊரில் இல்லாத ஒரு பொருளை, ஒரு தொழில்நுட்பத்தை முதன்முதலில் பயன்படுத்தும்போது அப்பொருளை அப்படியே வாங்கி விற்பது இயல்பு. பின்னர் அப்பொருளை இந்தியர்கள் உருவாக்கும்போது இந்தியாவில் உருவான தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் தவறில்லை.

    //இந்திய-சீன போருக்கு வித்திடும் வகையில் இந்தியா தான் உரிமை கோராத பகுதிகளில் காவல் சாவடிகளை அமைத்தது ஆக்கிரமிப்பு என குற்றம் சாட்டியுள்ளேன்.சீன இராணுவமோ தனது நாடு உரிமை கோரும் பகுதிகளில் நிலை கொண்டிருந்தது .அது ஆக்கிரமிப்பு அல்ல என்கிறேன்.அது சர்ச்சைக்குரிய பகுதியாக இருக்கலாம்.அது இந்தியாவும் உரிமை கோரும் பகுதியாக இருக்கலாம்.//

    நீங்கள் எழுதியதை ஒரு முறை நீங்களே மறுபடி படித்து பாருங்கள்.
    சர்ச்சைக்குரிய பகுதியாக இருக்கலாம் என்று சொல்கிறீர்கள். அந்த பகுதி இந்தியா உரிமை கோரும் பகுதியாக இருக்கலாம் என்கிறீர்கள். பின் அந்த இடங்களில் ஆக்கிரமித்த சீனாவை ஒன்றும் சொல்ல மாட்டேன் என்கிறீர்கள். இந்தியா செய்தால் மட்டும் ஆக்கிரமிப்பு என்கிறீர்கள். இது எப்படி நியாயம்?
    சர்ச்சைக்குரிய பகுதியை இருநாட்டவரும் தன் பகுதியாக கோருகின்றனர். இந்தியா அதன் பகுதியாக கருதும் இடத்தில் சீனர்கள் ஆக்கிரமித்துள்ளதால் அவர்களை அவ்விடத்திலிருந்து வெளியேற பல முறை அறிவுறுத்தியும் அவர்கள் செய்யாததால் தான் 1962 இல் போர் மூண்டது.

    இந்திய சீனப்போரை நீங்கள் ஏன் 1962 இல் இருந்து ஆரம்பிக்கிறீர்கள்? அதற்கு முன்னாலும் சென்று பாருங்கள் என்று தான் சொல்கிறேன்.

    அக்சாய் சீன் பகுதி சீனாவுக்கு உட்பட்ட பகுதி என்று 192௦ க்கு முன் இருக்கும் மேப் ஏதாவது இருக்கிறதா?

    //வருமானம் குறைந்தாலும் பரவாயில்லை என அந்த அநியாய செயலில் பங்கேற்க மறுக்கிறேன்.இப்படிப்பட்ட என்னிடம் இந்த நாட்டு மல்லிகையை சீனனின் மல்லிகை என சொல்லும் இழிகுணம் வரவே வராது.//
    பின்னூட்டம் 22.2.2.2.2.1.2.1.2 நீங்கள் கூறியவற்றை உங்களுக்காக மீண்டும் பதிவிடுகிறேன்:
    “”ஐயா,போரில் கைப்பற்றிய பகுதிகளை விட்டு சீனா விலகியதைத்தான் பாராட்டுக்குரியது என்கிறேன்.மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் நல்ல மணமுண்டு என்பதை ஏற்க நியாய உணர்வு வேண்டும்.””
    சீனா இந்திய பகுதிகளை ஆக்கிரமித்துள்ள பகுதிகளை மிக இலாவகமாக சர்ச்சைக்குரிய பகுதி என்று கூறி தட்டி விடுவீர்கள். அதற்கு மாற்றான் தொட்டது மல்லிகை என்று உவமானம் கூறுவீர்கள். சீனா 1962 போருக்கு முன் இருந்த நிலைக்கு தான் திரும்ப சென்றதா? கொஞ்சம் வரலாற்றை திரும்ப படியுங்கள் திப்பு. ஆனாலும் இவ்வளவு சொம்பாக இருப்பீர்கள் என்று நான் நினைக்கவில்லை.

    //உண்மையில் இந்தியாவின் நிலப்பகுதி என்று சீனா ஏற்றுக்கொண்ட பகுதிகளில் சீன இராணுவம் நிலை கொண்டிருந்தால் எடுத்துக்காட்டுங்கள்.எனது அறியாமையை ஒப்புக்கொண்டு தவறை திருத்திக்கொள்கிறேன்.//

    இந்தியாவின் நிலப்பகுதி என்று இந்தியா கூறும் பகுதிகளில் ஏன் சீனா ஆக்கிரமித்துள்ளது என்று கேட்டால் இந்தியாவின் நிலப்பகுதி என்று சீனா ஏற்றுக்கொண்ட பகுதிகளில் என்று திசை திருப்புகிறீர்கள். ஜிங் ஜாக், ஜிங் ஜாக்… நடத்துங்கள். இதற்கு மேலும் உங்களின் இரட்டை வேடத்தை பற்றி பேச வேண்டுமா?

    இந்தியா தன் பகுதியாக கோரும் அக்சாய் சீன் பகுதியை நீங்களே அது சர்ச்சைக்குரிய பகுதி என்றும் சீனா அந்த பகுதிகளை இந்திய பகுதிகளாக கருதவில்லை என்று சீனாவின் கருத்துநிலையினை தானே சொல்கிறீர்கள். இந்தியாவின் கருத்து இதில் என்ன, யோசியுங்கள்?

    //நாளைக்கே ஆளும் கும்பலின் நலனுக்கு உகந்ததாக இருந்து அக்சாய் சின் பகுதியை சீனாவுக்கு விட்டுக்கொடுத்தால்,[இப்போது வங்காள தேசத்துக்கு நிலப்பகுதிகளை விட்டுக்கொடுத்தது போல]அதில் உங்களுக்கு காசு பாக்கும் வாய்ப்பிருந்தால் அதையும் ஏற்றுக்கொள்வீர்கள்.//
    நீங்கள் அனுமானத்தின் பேரில் அவதூறு பரப்புவதற்கு எல்லாம் நான் எப்படி பொறுப்பாக முடியும்?

    சீனாவுக்கு ஆதரவாக திப்பு அவர்களின் பொன்மொழிகள் இங்கே மறுபடி வெளியிடப்படுகிறது:

    16.2 இல் எலி அவர்கள் அக்னி ஏவுகணை பீஜிங் வரை போகக்கூடிய திறன் உள்ளது என்று கூறியபோது நீங்கள் என்ன சொன்னீர்கள், அண்டை நாடுகளை அச்சுறுத்தித்தான் ஒரு நாடு தனது பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் என்று நம்புகிறீர்களா என்கிறீர்கள். அண்டை நாடு நமக்கு முன்னரே அணுகுண்டு ஏவுகணை வலிமையுடன் இருப்பதை விட்டு விட்டு நம் பாதுகாப்பிற்காக ஏவுகணை அணுகுண்டு வைத்திருந்தால் அதை தவறு என்று வாதிடுவீர்கள்?
    நீங்கள் கூறிய கருத்தை உங்கள் நண்பர் எலி கூட தவறு என்று மறுத்திருக்கிறார்.

    அப்துல் கலாம் அவர்கள் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை உருவாக்கியதை கத்தியை எடுத்தவனுக்கு கத்தியில் தான் சாவு என்று எதிர்க்கிறீர்கள். ஆனால் அடுத்த நாட்டுக்காரன் அதே கத்தியை வைத்திருக்கும்போது பாதுகாப்புக்கு நாம் வைத்திருப்பது தவறு என்கிறீர்கள்.
    ஒவ்வொரு நாடும் அன்பு மழை பொழியும் நிலை இருக்கும்போது நீங்கள் சொல்லும்படி இந்தியா அத்தனை ஏவுகணைகளையும் அணுகுண்டுகளையும் அழித்து விடலாம், தவறில்லை, ஆனால் நிஜத்தில் அப்படி இல்லையே, என்ன செய்வது?

    16.2.1.1.1.1.1 இல் சீனாவுடன் எல்லை பகுதி இருக்கும் பதினான்கு நாடுகளில் இந்தியாவுக்கு மட்டும் தான் பிரச்சினை உள்ளது என்று நா கூசாமல் கூறிவிட்டு, சீனாவின் மற்ற நாட்டு பிரச்சினைகள் அனைத்தையும் பட்டியலிட்ட பின் மேஜர், மைனர் என்று ஒளிந்து கொள்கிறீர்கள், மேஜர், மைனர் என்று எப்படி வரையறுக்கிறீர்கள் என்று கேட்டதற்கு இன்னும் பதில் அளிக்கவில்லை. உங்கள் கருத்துப்படி இந்தியாவுடன் இருப்பது மட்டும் தான் மேஜர் பிரச்சினை என்று கூறும்போது பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள மேஜர் பிரச்சினையை பற்றி உங்களுக்கு உணர்த்தினால் அதற்கு பதிலை காணோம்.

    16.2.1.1.1.1.1 இல் வியட்நாமுடன் பெட்ரோல் எடுக்க இந்தியா முயலுவதை வியட்நாம்-சீனா பிரச்சினையில் மூக்கை நுழைப்பதாக சொல்கிறீர்கள். அப்போது இந்தியா, பாகிஸ்தானுக்குள் நடக்கும் பிரச்சினையில் சீனா நடுநிலை வகித்து கொண்டிருக்கிறதா? இங்கே இரத்தம், அங்கே தக்காளி சூஸ்.

    சீனா எந்த வம்பு தும்பிற்கும் போகாத நாடு என்று கூறும் நீங்கள் பிலிப்பைன்ஸ் நாட்டு எல்லைக்குள் ஆக்கிரமித்து செயற்கை தீவு உருவாக்கி அங்கு கடற்படை தளம் அமைத்த சீனாவின் செயலை கண்டிக்காதது ஏனோ?

    பின்னூட்டம் 22இல் இந்தியா தான் 1962 போரை துவங்கியது என்று வரலாற்றை பாதியில் இருந்து வசதியாக துவக்குகிறீர்கள். அதற்கு முன்னர் சீனா கொஞ்சம் கொஞ்சமாக செய்த ஆக்கிரமிப்புகளை மறைக்கிறீர்கள். இங்கே இரத்தம், அங்கே தக்காளி சூஸ்.

    22.2.2.2.1.1.1.1.2 இல் சீனாவுக்கு எதிராக நேரு பார்வார்டு பாலிசி என்று வம்பு சண்டைக்கு போனதாக கூறியுள்ளீர்கள். ஆனால் பார்வார்டு பாலிசி எதற்காக எடுக்கப்பட்டது என்று சற்று பின்னால் சென்று பாருங்கள் என்று பார்க்க மறுக்கிறீர்கள். இந்தியா தன பகுதி என்று கருதும் இடங்களில் சீனா ஆக்கிரமித்துள்ளதாக இந்தியா கருவதால் தான் பிரச்சினை முதலில் பேசி தீர்க்க முயலப்பட்டது. ஆனால் சீன இந்தியாவின் எல்லைக்குட்பட்ட பகுதியில் ரோடு போட்டு பிரச்சினையை தீவிரப்படுத்தி விட்டது. ஆனால் அது சீனாவுக்குட்பட்ட பகுதி என்ற சீனாவுக்கு சொம்படிக்கிரீர்கள்.

    • வரலாற்றை பின்னோக்கி பார்க்க சொல்லும் க.கை.அக்சாய் சின் பகுதியில் சாலை அமைத்து பிரச்னையை தீவிரமாக்கி விட்டது.அக்சாய் சின் பகுதியிலிருந்து வெளியேற சொல்லியும் சீனா கேட்காததால் போர் மூண்டது என்கிறார்.போர் எப்படி மூண்டது.இந்தியா உரிமை கோரும் பகுதியில் சீனா ஆக்ரமித்துள்ளது என்று கூறி தான் உரிமை கோராத பகுதிகளை ஆக்கிரமித்தது இந்தியா.போர் மூண்டது.

      இந்தியாவின் தவறை எந்த வகையிலும் க.கை.க்கள் நியாயப்படுத்த முடியாமல் இந்திய பகுதிகளை சீனா ஆக்கிரமித்துள்ளது என்று திரும்ப திரும்ப கிளிப்பிள்ளை மாதிரி சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.இந்திய குடிமக்கள் அனைவரும் நியாய அநியாயங்களை சீர் தூக்கி பார்க்காமல் இந்திய அரசின் நிலையையே ஆதரிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்.

      அக்சாய் சின் யாருக்கு சொந்தம் என்று தீர்மானிக்கப்படவில்லை ,அது சர்ச்சைக்குரிய பகுதியல்லவா,சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள அதில் சீன ராணுவம் நிலை கொண்டிருப்பதை ஆக்கிரமிப்பு என்று சொல்லி சண்டைக்கு வம்பிழுப்பது சரியில்லையே ,அதை பேசித்தான் தீர்த்திருக்க வேண்டும் என்று சொன்னால் சீனாவின் கருத்து நிலையை பேசுவதாக குத்தம் சொல்றாரு க.கை.உரிமை கோராத பகுதிகளை இந்தியா ஆக்கிரமித்ததை நியாயப்படுத்துகிறார்.சீனாவும் இந்தியாவும் உரிமை கோரும் பகுதி என்பதால் அக்சாய் சின் சர்ச்சைக்குரிய பகுதி அதை பேசித்தான் தீர்க்க வேண்டும் என்று சொல்வது சீனாவின் கருத்து நிலையை ஆதரிப்பது ஆகுமா.

      சீனா அக்சாய் சின் பகுதியில் சாலை அமைத்து பிரச்னையை தீவிரமாக்கி விட்டதாம்.என்ன லாஜிக் இது.அதயே இப்படி கேக்குறேன்.க.கை.தனது விதண்டாவாதத்தை உணரட்டும்.

      அருணாச்சல் பிரதேச தவாங் மாவட்டத்தை சீனா உரிமை கோருகிறது.அது இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ளது.அங்கு இந்தியா சாலை அமைக்கிறது என்று சொல்லி சீனா அசாமில் நுழைந்து ஆக்கிரமித்தால் ஏற்றுக்கொள்வீர்களா.

      \\வியட்நாம்-சீனா பிரச்சினையில் மூக்கை நுழைப்பதாக சொல்கிறீர்கள். அப்போது இந்தியா, பாகிஸ்தானுக்குள் நடக்கும் பிரச்சினையில் சீனா நடுநிலை வகித்து கொண்டிருக்கிறதா? //

      சீனாவின் அக்கிரமங்கள் அனைத்தையும் நியாயப்படுத்த வேண்டும் என்று நான் சபதம் செய்திருப்பது போல நீங்களாக நினைத்துக்கொண்டால் நான் பொறுப்பல்ல.பல இடங்களில் சீனாவை ஏகாதிபத்திய நாடு என்று வரையறுத்து அது இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளை வணிகம் என்ற பெயரில் கொள்ளையிடுகிறது என்று சொல்லியிருக்கிறேன்.பாகிசுத்தான் கிறுக்கன்களை வணிகப்பொருட்கள் மட்டுமல்லாது ஆயுதம் விற்றும் சீனா கொள்ளையிடுகிறது .இதை நியாயப்படுத்த வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.

      ஆனால் வியட்நாமுடன் பெட்ரோல் எடுக்க இந்தியா போட்டுள்ள ஒப்பந்தத்தை நீங்கள் நியாயப்படுத்துகிறீர்கள்.வியட்நாம்-சீனா நாடுகளுக்கிடையே பிரச்னை உள்ளது.அவ்வப்போது பதட்டமும் எழுகிறது.அதில் மூக்கை நுழைப்பது பகைமை வளர்க்கும் செயல்.

      வியட்நாமுக்கும் சீனாவுக்கும் போர் மூளக்கூடிய அளவுக்கு பகைமை உள்ளது.பகைமைக்கு காரணமாக உள்ள பிரச்னைக்குரிய பகுதியிலேயே இந்தியா தலையிடுகிறது.ஒருவேளை இந்தியா பிரச்னைக்குரிய பகுதியில் எண்ணெய் கிணறுகள் அமைத்தபின் வியட்நாம்-சீனா போர் வெடித்து அந்த கிணறுகளும் சீன தாக்குதலுக்கு உள்ளாகலாம்.அது இந்திய சீன எல்லையில் பதட்டத்தையும் கெட்ட வாய்ப்பாக போரையும் கொண்டு வரலாம்.மக்களை நேசிப்பவர்கள் இப்படி ஒரு அபாயத்தில் நாட்டை தள்ளுவதை ஏற்க முடியாது.

      இதுல இன்னொரு கயவாளித்தனம் உள்ளது.உள்நாட்டுல பாதுகாப்பா எண்ணெய் தோண்டும் வாய்ப்புள்ள கிருசுணா கோதாவரி படுகையை அம்பானிக்கு குடுத்துட்டு போடும் முதலுக்கு ஆபத்து மிகுந்த வியட்நாம் கிணறுகளை ONGC தொண்டப்போகுது..இதையெல்லாம் உணராமல் இந்திய ஆளும் கும்பலிக்கு ஒத்தூதிக்கிட்டு திரியிறீங்க..

      \\மேஜர் பிரச்சினை//

      பின்னூட்டங்கள் எண் .22.2.2.2.2 மற்றும் 22.2.2.2.2.1.2 மற்றும்
      22.2.2.2.2.1.2.1.1ஆகியவற்றில் இது குறித்து விளக்கிய பின்னும் இதை வுட்டா நமக்கு சாதகமா வேறுபாயிண்ட் இல்லன்னு இதையே புடிச்சு தொங்குறீங்க.

      மற்றவை குறித்து பின்னர்.

    • \\ஏவுகணை அணுகுண்டு //

      எலியுடன் நடத்திய விவாதத்தை காட்டி குத்தம் கண்டுபுடிக்கிறாராம் க.கை.அதற்கு அந்த விவாதம் எப்படி துவங்கியது என பார்க்க வேண்டும்.முன்னாள் அரசவை கோமாளி கலாம் செய்த சாதனைகளாக ஏவுகணைகளும் அணுகுண்டுகளும் சுட்டிக்காட்டப்பட்டன.இல்லை,அவற்றால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை ,அவற்றால் அண்டை நாடுகளுடன் ஆயுதப்போட்டி தீவிரமானதுதான் கண்ட பலன்,போர்களில் பயன்படுத்த முடியாத அவை நாய் பெற்ற தெங்கம் பழங்கள் ,மக்கள் நலனில் அக்கறையுள்ளோர் வல்லாதிக்க நாடுகள் ஏற்கனவே செய்து குவித்துள்ள அணு ஆயுதங்களை அழிக்க கோரி போராட வேண்டும் என வாதிட்டேன்.மொத்ததுல அணு ஆயுதங்களே கூடாது என்று சொன்னால் இந்தியா மட்டும் அணு ஆயுதங்களை அழித்து விட வேண்டும் என நான் சொன்னதாக பித்தலாட்டமா பேசுறாரு க.கை. அப்பட்டமான பொய் இது.வாதங்கள் கண் முன்னால் உள்ளன. யார் வேண்டுமானாலும் சரி பார்த்துக்கொள்ளலாம்.

      கலாமின் சாதனையையும் கொஞ்சம் விரிவா பாத்துரலாம்.இந்தியா ஏற்கனவே 74-ல் அணு குண்டு வெடித்து நானும் அணுஆயுத நாடுதான் ,பொக்ரான்ல அணு குண்டு வெடிச்சுருக்கேன் பாத்துக்க பாத்துக்க னு அதாவது ஜெயிலுக்கு போறேன்,ஜெயிலுக்கு போறேன்,நானும் ரவுடிதான்னு ஓடிப்போய் ஈப்புல ஏறிருச்சு.அதான் ரவுடின்னு form ஆயாச்சுல்ல அப்புறம் மறுபடியும் 98-ல வெடிக்கணும்னு யார் அழுதா.98-ல கலாம் வெடிச்ச ஒடனே பாகிசுதானும் அணு குண்டு வெடித்து ஈப்புல வாண்டடா ஓடிப்போய் எரிக்கிட்டான்.சும்மா கிடந்த பாக்.சங்கை ஊதி கெடுத்ததுதான் கலாம் செய்த சாதனை.அதனால் ஆயுதப்போட்டி மேலும் வலுத்து இன்னைக்கு உலகத்துலேயே ஆயுத இறக்குமதியில் முதல் மூன்று இடங்களை முறையே இந்தியா,சீனா பாகிசுதான் நாடுகள் .பிடித்துள்ளன.இப்படி பெரும் காட்டுத்தீயை பத்த வச்ச கலாமை எப்படி கொண்டாட முடியும்.

      பி.கு.
      பொய் சொல்லி வாதிடுவதை விட்டு தொலைங்கய்யா .அதை மீண்டும் மீண்டும் மறுப்பதற்கே எனக்கு கேவலமா இருக்கு.இவ்வளவு கேவலமா நடந்து கொள்பவர்களுடனா விவாதிக்கிறோம் என்று கேவலமா இருக்கு.ஆனா கூச்சமே படாம பொய்களை அவுத்து விடுறது உங்களுக்கு கேவலமா தெரியலையா .

    • \\அது சீனாவுக்குட்பட்ட பகுதி என்ற சீனாவுக்கு சொம்படிக்கிரீர்கள்.//

      ரெம்ப சாமர்த்தியம்னு நெனப்போ.முதலில் அக்சாய் சின் சீனாவுக்கு சொந்தம்னு நான் சொல்வதா பொய் சொன்நீம்க.நிர்ரூபிக்க சொல்லி கேட்டதற்கு பின்னூட்டம் 38.6.1-ல் எதையோ உளறி சமாளிக்க பாத்தீங்க.சீனாவுக்கு சொந்தம்னு நான் சொல்வதாக ஒரு வரி கூட காட்ட முடியாம கேவலப்பட்டு நிக்கிறீங்க,இதுல ” சீனாவுக்குட்பட்ட பகுதி ”என சொல்வதாக நாற வாய் தொரக்கிறீங்க.பின்ன பொய் சொல்ற வாய் நாற வாய்தானே.

  38. நான் ஏற்கனவே அறுதியிட்டதுபடி கற்றது கையளவும் காகா ராதாகிருஷ்ணனும் ஒன்று. அவர்கள் தான் வடிவேலுவிடம் கோவை சரளாவை வன்புணர்வு செய்யச் சொல்லி கழுத்தில் தாலிகட்டச் சொன்னது. யாராவது எதிர்த்து கேட்டால் தாலி கட்டியவன் கணவன் என்று மட்டும் சொல்வதில்லை உன் கழுத்தில் அவன் தாலிதானே தொங்குகிறது என்று கதைக்கிறார்கள் தரகர்கள். இங்கு தாலிக்குப் பதிலாக செல்போன் மற்றும் இன்ன பிற வெளிநாட்டு உதிரி பாகங்கள்.

    ஆக எதிர்த்து வாதாடுபவரின் கையில் வெளிநாட்டு பொருட்கள் இருப்பதை உறுதிப்படுத்திவிட்டால் கற்றது கையளவுகளின் களவாணித்தனம் நியாயமாகிவிடும் என்று எட்டப்ப கணக்கு போடுகிறார்கள்.
    ஆனால் மறுகாலனியாதிக்கத்தால் மஞ்ச குளிப்பதும் மக்களின் கைகளில் வெளிநாட்டு பொருட்கள் தவழ்வதும் ஒன்றல்ல.

    கற்றது கையளவின் தெள்ளவாரித்தனத்தை அம்பலப்படுத்த ஓர் எடுத்துக்காட்டு.

    ஆப்ரிக்காவின் விவசாய நிலங்கள் அனைத்தும் உணவு பயிரிட ஏகாதிபத்தியங்களால் அனுமதிக்கப்படுவதில்லை. அங்கே கோகோவும், காப்பியும் பயிடப்படுகின்றன. அதே சமயம், குவைத், சீனா, தென் கொரியா, அமெரிக்கா போன்ற நாடுகள் அங்கே விவசாய நிலங்களை ஆக்ரமித்துக்கொண்டு உணவுப் பொருட்களை தங்கள் நாட்டிற்கு ஏற்றுமதி செய்கின்றன. இதில் ஆப்பிரிக்காவிற்கு வருடந்தோறும் அமெரிக்கா 1பில்லியன் உணவு மானியம் வழங்குகிறது. ஆனால் வழங்குகிற தொகையில் 70% அமெரிக்க கம்பெனிகளிடம் மட்டும் தான் ஆப்ரிக்க வாங்கிக்கொள்ள வேண்டும்.

    இப்பொழுது கற்றது கையளவு போன்ற களவாணிகள் என்ன சொல்கிறார்கள் என்றால் ஒவ்வொரு ஆப்பிரிக்கனின் இரத்தத்திலும் அமெரிக்கா உள்ளது என்கிறார். இப்படிச் சொல்லிவிட்டு தரகராக ஆப்ரிக்க நிலங்களை இவர் போன்ற பணக்காரர்கள் கூட்டி விட்டு சம்பாரிக்கிறார்கள். இதைத்தான் “மக்களும் இவரும் ஒன்று. உன்னால் வெளிநாட்டு பொருளை பிரித்தறிய முடியாது” என்று எசப்பாட்டு பாடுகிறார். இது கற்றது கையளவின் களவாணி முகமூடியாகும்.

    இப்பொழுது இந்தியாவிற்கு வருவோம். இந்தியாவிலும் இதே தரகு முதலாளிகள் ரிலையன்ஸ் ரீடைல்ஸில் ஒட்டுமொத்த இந்திய வணிகத்தையும் வாரிச் சுருட்டுகிறார்கள். ஒரு விவசாயி இதிலிருந்து தப்பிக்க முடியாது. இதே தொழில் புரிவோர் என்றால் சிறு வணிகத்தை அழித்து சீன அமெரிக்க ஏகாதிபத்தியம் பாய்விரிக்கிறது. இங்கே ஒரு இந்தியர் விடிந்து எழுந்தால் இவர்களைத்தாண்டி வாழ்ந்துவிடமுடியாது. ஆனால் இப்படி சிறுவணிகத்தை இழந்துவிட்டு, தொழிற்சாலைகளை அப்புறப்ப்படுத்திவிட்டு ஏதிலியாக மக்கள் வெளிநாட்டு பொருட்களை பாவனை செய்கிற பொழுது இதில் எந்த துன்பத்தையும் அனுபவித்திராத கற்றது கையளவுகள் பறந்து பறந்து இலாபம் பொறுக்கிவிட்டு மறுகாலனியாதிக்க கொள்கைகள் எதிர்த்து போராடுபவர்களிடம் கேட்கிறார்கள் உன்னிடம் செல்போன் இல்லையா என்று?

    என்ன காகா? திறந்த விட்ட புலிகேசியையும் ஒண்ட வந்த பிடாரியையும் அடையாளம் காணமுடியாமல் இருக்க மக்கள் ஒன்றும் மடையர்கள் அல்லர். இருந்தும் அவர்களின் அறியாமைதான் கற்றது கையளவுகளின் தொழில் மூலதனம். வெத்தலப் பொட்டிய கக்கத்தில் இருக்கமாக வைத்துக்கொள்ளவும் க.கை.

    • இங்கே, பாவெல் என்ற நண்பர் பதிவிட்டார், நானும் இராமன் அவர்களும் தனிநபர் தாக்குதலில் ஈடுபடுகிறார்கள் என்று.

      ” களவாணித்தனம், தெள்ளவாரித்தனம், வன்புணர்வு, எட்டப்ப கணக்கு, கூட்டிவிட்டு சம்பாதிக்கிறார்கள், பாய் விரிக்கிறது, ஒண்ட வந்த பிடரி, திறந்து விட்ட புலிகேசி, எசப்பாட்டு, களவாணி முகமூடி, இலாபம் பொறுக்கி”

      இதெல்லாம் தென்றலார் அவர்களின் ஒரே ஒரு பின்னூட்டத்தில் இருந்து கொட்டப்பட்ட வார்த்தைகள். பாவெல் அவர்களே, எங்கிருந்தாலும் வரவும்… 🙂

      சரி, இனி தென்றலாரின் பதிவுக்கு வருவோம். அவரது அவதூறு வார்த்தைகள், தனிமனித தாக்குதல்கள் ஆகியவற்றை ஒதுக்கி விட்டு அவரது பதிவின் சாரத்தை ஆய்வோம்.

      எனக்கும் திப்பு அவர்களுக்கும் நடந்த விவாதத்தில் நான் வெளிநாடு செல்வது குறித்து திப்பு மிக கேவலமாக பேசினார். அவர் விற்கும் எல்லா பொருளும் இந்தியாவிலேயே தயாராவதாகவும் கூறினார். வெளிநாட்டு பொருட்கள் இந்தியாவுக்குள் விற்க கூடாது, இந்தியர்கள் வெளிநாடு போக கூடாது என்று கூறிக்கொண்டே போனார். அதற்கு அவரிடம் ஒரு கேள்வி கேட்டேன். வெளிநாட்டு பொருட்களை உள்ளூரில் விற்க கூடாது, வெளிநாட்டு பொருட்களை பயன்படுத்த கூடாது என்ற உயர்ந்த கோட்பாடுடைய திப்பு அவர்கள் பயன்படுத்தும் செல்போன், கணினி, மென்பொருட்கள் எந்த நாட்டில் இருந்து வருகிறது என்று கேட்டேன். அதற்கு இன்னும் எனக்கு பதில் வரவில்லை.

      அடுத்து, இதில் நீங்கள் இறங்கி இருக்கிறீர்கள். சரி.
      //மறுகாலனியாதிக்கத்தால் மஞ்ச குளிப்பதும் மக்களின் கைகளில் வெளிநாட்டு பொருட்கள் தவழ்வதும் ஒன்றல்ல.//
      முடிந்தவரை உள்ளூர் பொருட்களை பயன்படுத்த நினைப்பது தவறே இல்லை. அதை நானும் தான் வரவேற்கிறேன். ஆனால் எல்லா பொருட்களும் உள்ளூரில் கிடைப்பதில்லை. நான் செல்போன், மின்னணுவியல் சாதனங்களை பற்றி உதாரணம் கூறியது அதற்கு தான். நீங்கள் வெளிநாட்டில் தயாரான செல்போனை பயன்படுத்துகிறீர்கள். காரணம் அது உள்ளூரில் இல்லை. இருந்திருந்தால் பயன்படுத்தி இருப்பீர்கள். உங்களுக்கு இருக்கும் அதே நியாயம் மற்றவர்களுக்கும் இருக்கும் இல்லையா? வெளிநாட்டுக்கு நாங்கள் ஊதாரித்தனமாக சுற்றவும், அங்கு கிடைக்கும் பொருட்களை இந்தியாவிற்கு கொண்டு வந்து விற்று இந்திய தயாரிப்பாளர்களின் வயிற்றில் மண்ணை அள்ளி போடுவதாக ஒரு தவறான பிம்பத்தை, ஒரு ஸ்டீரியோடைப்பிக் கண்ணோட்டத்தை நீங்கள் என் மீது கொண்டுள்ளது தான் தவறு என்று சொல்ல வருகிறேன். மீண்டும் மீண்டும் சொல்கிறேன். நான் சீனா சென்றது சீன பொருட்களை இந்தியாவுக்கு விற்க அல்ல, சீனாவுக்கு என் கம்பெனி இயந்திரங்களை விற்பது சம்பந்தமாக தான் போனேன். இரண்டாவது, சீனா என்ற ஒரு நாட்டுக்கு மட்டும் நான் போகவில்லை. உலகம் முழுக்க தான் சுற்றுகிறேன்.

      வேறொரு பின்னூட்டத்தில் நீங்கள் நான் பிசினஸ் கிளாசில் பயணிக்கும் ஏசி சொகுசுவாதி என்று கூறினீர்கள். பணி நிமித்தமாக செல்கிறேன். எப்போதும் எகானமி பயணம் தான். ஏசி இல்லாத பிளைட்டுகள் உலகில் பயன்படுத்தப்படவில்லை. அதனால் நீங்கள் எதை குறிவைத்து சொல்கிறீர்கள் என்று புரியவில்லை.

      உள்ளூரில் உருவாக்கப்படும் தொழில்நுட்பத்தினை நான் பல்வேறு பின்னூட்டங்களில் வரவேற்கவே செய்கிறேன். ஆனால் உள்ளூரில் உருவாக்கப்பட்டது என்று போலியாக கூறியபடியே வெளிநாட்டு உட்பாகங்களுக்கு டப்பா, கேபினெட் பட்டும் உள்ளூரில் செய்து, மேட் இன் இந்தியா ஸ்டிக்கர் ஓட்டுவதை தான் நான் தவறு என்று குறிப்பிட்டுள்ளேன். L&T, BPL இந்த கம்பெனிகளின் மருத்துவ பிரிவில் எப்படி இவ்வாறு மேட் இன் இந்தியா என்று கூறி உள்ளுக்குள் முழுக்க முழுக்க சீன பொருட்களை விற்கிறார்கள் என்று பல தருணங்களில் வினவில் சுட்டிக்காட்டியுள்ளேன்.
      தவிர்க்க முடியாத தருணங்களில், உள்ளூரில் ஒரு தொழில்நுட்பம் வரவில்லை என்ற பட்சத்தில், உள்ளூரில் அந்த தொழில்நுட்பம் காலூன்றும் வரைக்கும் அத்தகைய தொழில்நுட்பத்தினை வெளிநாட்டில் இருந்து வரவைப்பதில் தவறில்லை என்பதே என் கருத்து. இதற்கு நீங்கள் அவதூறாக பல உவமானங்களை கூறினாலும் எனக்கு கவலை இல்லை. உங்கள் அளவு தெரிந்தே தான் உங்களுடன் உரையாடுகிறேன்.

      இப்போது ஆப்பிரிக்கா உதாரணத்திற்கு செல்வோம். நீங்களாகவே ஆப்பிரிக்கா விவகாரத்தை இங்கே கொண்டு வந்து விட்டு, இந்த கற்றது கையளவு களவாணிகள் எல்லாம் இப்படி தான் நடந்து கொள்வார்கள், இப்படி தான் பேசுவார்கள் என்று நீங்களாகவே ஒரு முடிவுக்கு வந்து நீங்களாகவே எம்மை குற்றவாளியாக்குவது தான் கம்மியுனிசம் உங்களுக்கு கற்று தந்ததா?

      ரிலையன்ஸ் நிறுவனம் ஒட்டுமொத்தமாக அனைத்து சிறுவணிகர்களின் வாழ்வையும் கபளீகரம் செய்வதற்கு எந்த விதத்தில் கற்றது கையளவு ஆதரவு தெரிவிக்கிறான் என்று நீங்கள் கருதுகிறீர்களோ தெரியவில்லை. ஏதாவது ஒரு பதிவில் ரிலையன்ஸிற்கு ஆதரவாக ஏதேனும் பதிவிட்டதாக தங்களுக்கு நியாபகம் உள்ளதா? இது தான் ஸ்டீரியோடைப்பிங் என்பது. இவர் இப்படித்தான் என்று மனதுக்குள் நீங்கள் என்னை பற்றி உருவாக்கிய பிம்பத்தை நிஜம் என்று நீங்கள் நினைக்க ஆரம்பித்து அதனை அப்படியே இங்கே கொட்டிவிடுகிரீர்கள்.

      //கடல் கடந்து போவது தோசம் என்று சொன்ன பார்ப்பனியத்தின் மன்னராட்சி க.கைக்கு எப்படி புரியும்;// என்று கூறி என்னை பார்ப்பனராக நீங்கள் ஒரு பிம்பத்தை உருவாக்குகிறீர்கள்.

      //ஆனாலும் ஷும்மா சொல்லப்படாது. பேஷா ஆர் எஸ் எஸ் காலியவிட காஷ்மீர் விசயத்தில் அவுத்துபோட்டு ஆடுறேள்! பின்ன முதலாளித்துவம்னா ஷும்மாவோ? // காஷ்மீர் = இந்தியா சீனா பிரச்சினையில் அக்சாய் சீன் பகுதி இந்தியாவுக்கு சொந்தமான பகுதி என்று எனது நிலைப்பாட்டை சொன்னதற்கும், காஷ்மீர் பகுதியில் காஷ்மீர் பண்டிட்டுகளுக்கும் உரிமை இருக்கிறது என்று சொன்னதற்கு என்னை ஆர்.எஸ்.எஸ்., பாஜக ஆளாக நீங்கள் ஸ்டீரியோடைப் செய்கிறீர்கள்.

      காஷ்மீர் விவகாரத்தை பற்றி தெளிவாகவே அதன் வரலாற்றுடன் விளக்கிய பின் அதற்கு சரியான பதில் சொல்லாமல் ஹரிசிங்கிற்கு நான் ஊற்றிக்கொடுத்து கைநாட்டு வாங்கினேனா என்று கூறுகிறீர்கள். உங்களது பின்னூட்டங்களில் இருந்து ஒன்றை தெரிந்து கொண்டேன். விவாதத்தை ஒரு அளவுக்கு மேல் கொண்டு செல்ல இயலவில்லை என்ற நிலை வரும்போது நீங்கள் அடுத்தவரை மிக மிக கேவலமாக அவதூறு கூறி கோபப்பட வைத்து ஓட வைத்து விடலாம் என்று நினைக்கிறீர்கள். வியாசன் போன்ற சிலர் உங்களது அவதூறுகளை தாங்காமல் ஓடியே போனார். அடுத்த இன்னொரு ஆயுதம் விவாதத்திற்கு சம்பந்தமே இல்லாமல் டாட்டா சீனாவில் கஞ்சா விற்றார், கற்றது கையளவு அவரை போன்றவர். இராஜபக்சே ஈழமக்களை கொன்றார், கற்றது கையளவு அவரை போன்றவர், ஆப்பிரிக்காவில் குவைத் சீனா அமேரிக்கா கொரியா நாடுகள் செய்யம் செயலுக்கு எல்லாம் கற்றது கையளவையும் கூட்டு களவாணியாக்கி மகிழ்கிறீர்கள்.

      சில நேரங்களில் உங்கள் அவதூறுகளை பொருட்படுத்தாமல் இருக்கிறேன். சில நேரம் என்னையும் மீறி, கோபம் வந்து விடுகிறது. அப்படி என்னை பேச வைப்பதற்கு உங்களது தூண்டுதலே காரணம்.

      நேர்மையாக விவாதித்து பழகுங்கள். எல்லோருக்கும் எல்லாமும் எப்போதும் தெரிந்து விடுவதில்லை. எல்லாம் எமக்கு தெரியும் என்ற மமதையில் இருந்தீர்கள் என்றால் பின் உங்களால் புதிய விடயங்களை கற்று கொள்ள இயலாமல் போய் விடும்.

      கண்களை கொஞ்சம் திறந்து பாருங்கள் நண்பரே. உலகம் என்பது கம்மியுனிச புத்தகங்களுக்குள் மட்டும் ஒளிந்து கொள்வதில்லை.

      • \\இந்தியர்கள் வெளிநாடு போக கூடாது என்று கூறிக்கொண்டே போனார். //

        பொய் .வெட்கங்கெட்டதுகளின் பொய்க்கு எல்லையே இல்லையா .

        க.கை.கும் எனக்குமான விவாதத்தில் முதலில் தனிநபர் தாக்குதலில் இறங்கியது இந்த வெட்கங்கெட்ட க.கைதான்.எட்டப்பன் என்று ஆரம்பித்தார்.பதிலுக்கு நானும் எழுதினேன்.பொறுக்கி தின்னி என்று.அதற்கான காரண கரியங்களை விளக்கி விட்டு சொன்னேன்.இவரோ பல பொய்களை சொல்லி அவதூறு பரப்பி வருகிறார்.இதோ இந்தியர்கள் வெளிநாடு போக கூடாது என நான் சொன்னதாக போய்யுரைக்கிறார்.இந்த யோக்கியர் அதை மெய்ப்பிக்க வேண்டும்.

        • திப்பு,

          முதலில் ஒன்றை சொல்லி விடுகிறேன். எட்டப்பன் என்று உங்களை உவமானம் கூறியது உங்களை மிகவும் பாதித்தது என்றால் அதற்காக மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.

          எதற்க்காக அவ்வாறு கூறினேன் என்று விளக்குகிறேன். கட்டுரையின் சாராம்சம் அப்துல் கலாம் அவர்களின் இறப்புக்கு இந்திய மக்கள் ஒருமித்தமாக வருந்தியதை கிண்டல் அடித்து போடப்பட்டதால் கட்டுரையாளர் மேல் கடும் கோபத்தில் இருந்தேன். பின்னூட்டம் இடுபவர்கள் சகட்டுமேனிக்கு அவர் என்ன கிழித்தார் என்றும், கண்டம் விட்டு கண்டம் பாயும் அவரது ஏவுகணையை உள்ளூர் ராக்கெட் லாஞ்சருடன் ஒப்பிட்டு கிண்டல் அடித்ததும் இந்த கட்டுரையில் பின்னூட்டமிட ஆரம்பித்தேன். இந்த கட்டுரைக்கு சம்பந்தம் இல்லாமல் திப்பு அவர்கள் இந்தியா-சீனா போர் குறித்து எழுதிய பதிவுகள், இந்தியா-சீனா போரில் சீனாவை பாராட்டியதும், சீனாவுடன் இந்தியாவுக்கு மட்டும் தான் பிரச்சினை, மற்ற நாடுகளுடன் சீனாவுக்கு பிரச்சினையே இல்லை என்றும் கூறியதும், போர் மூள இந்தியா தான் காரணம் என்றும், சீனா பக்கம் நியாயம் இருப்பதாகவும், போரில் சீனா பிடித்து வைத்த பகுதிகள் அனைத்தையும் விட்டு கொடுத்தது போலவும் ஒரு பொய்யான பிம்பத்தை கொடுத்தார். இந்த காரணத்தினால் தான் திப்பு அவர்களை எட்டப்பனின் வேலையோடு உவமானிக்க வேண்டியதாயிற்று. நண்பர் திப்பு என்னுடைய அந்த ஒரு வார்த்தையால் பாதிக்கப்பட்டார் என்றால் அதற்காக மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.

          இந்த இந்தியா-சீனா விவாதத்தில் என் நிலை இது தான்:
          1. இந்தியா சீனா போர் 1962 இல் திடீரென முளைக்கவில்லை. அதற்கான விதை பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தொடங்கியது.
          2. நேருவின் பார்வார்டு பாலிசி என்பது ACTION அல்ல, REACTION. சீனா (திப்புவின் வாதப்பாடி) சர்ச்சைக்குரிய பகுதியில் இந்தியாவுக்கு தெரியாமல் ரோடு போட்டது தான் நேருவை அந்த முடிவு எடுக்க வைத்தது.
          3. நேரு எடுத்த நடவடிக்கைகளின் செயல்முறையில், வியூகங்களில், தவறு இருப்பதை ஒப்புக்கொள்கிறேன். இன்னும் கொஞ்சம் டிப்லோமேடிக்காக இந்த பிரச்சினையை அணுகி இருக்கலாம் என்பதே எனது கருத்தும்.
          4. நேரு சீன அதிபர் சௌ அவர்களை அதீதமாக நம்பியதும் அவரது தவறு. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் எந்த எல்லை பிரச்சினையும் இல்லை, சீன மேப்பில் இந்திய பகுதிகள் இருப்பதை இந்தியா சுட்டிக்காட்டிய போது, பழைய கியோமிண்டாங் காலத்து மேப்புகளை சீர்திருத்த நேரமில்லாததால் அவ்வாறு இருக்கிறது என்றும் நேருவை ஏமாற்றினார். சௌ வை நம்ப வேண்டாம் என்று பர்மா பிரதமர் அப்போது நேருவுக்கு எழுதிய கடிதத்தை கூட நேரு நிராகரித்து சௌ அவர்கள் நம்பகமானவர் என்று கூறினார்.
          5. ஆனால் போரில் வென்ற ஒரே காரணத்தால் ஜெயித்தவன் பக்கம் நியாயம் இருக்கும் என்று அவசியம் இல்லை.
          6. காரகோரம் மலையை தாண்டி அக்சாய் சின் செல்ல வேண்டியதனால் இந்திய இராணுவத்திற்கு அக்சாய் சீன் பகுதியை அடைவது கடினம். ஆனால் அதே சமயம், அங்கு இந்தியாவுக்கு தெரியாமல் ரோடு போட்டது சீனாவின் தவறு.

          http://timesofindia.indiatimes.com/world/us/Chinese-deception-Nehrus-naivete-led-to-62-war-CIA-papers/articleshow/2155130.cms?referral=PM
          மாற்றான் தோட்டத்து மல்லிகை மணக்கிறது என்று முகர்ந்து மகிழும் திப்பு அவர்களே, மேலே இருக்கும் சுட்டியை கவனமாக படிக்கவும். நேரு சௌ அவர்களால் எப்படி ஏமாற்றப்பட்டார் என்பது புரியும். இந்த ஏமாற்றத்தின் கோபம் தான் 1962.

          பொறுக்கி தின்னி என்று தாங்கள் முதலில் அழைக்கவில்லை. அதனை ஆரம்பித்தது நம் நண்பர் தென்றல் அவர்கள். அதனையும் ஒத்துக்கொள்கிறேன். பலமுறை அவ்வார்த்தையை திரும்ப திரும்ப அவர் பயன்படுத்தி அதனையே நீங்களும் தொடர்ந்து பயன்படுத்தும்போது கோபம் வருகிறது. தெளிவாக என் நிலையை எடுத்துரைத்தும் அதனை எதுவும் காதில் வாங்காமல் பொறுக்கி தின்னி, பொறுக்கி தின்னி என்று கிளிப்பிள்ளை போல தென்றல் கூறியதால் அவரை ஓசி தின்னி என்று கூறினேன். எனது பல்வேறு பின்னூட்டங்களை படித்திருப்பீர்கள். சாதாரணமாக அவ்வளவு எளிதாக வார்த்தைகளை விட மாட்டேன். ஆனால் அதிகபட்ச நிந்தனைக்கு உள்ளாகும்போது என்னையும் மீறி சில சமயம் அதிகமாக கோபப்பட்டு விடுவேன்.
          பெரும்பாலும் எனது கோபம் என்பது ACTION அல்ல, REACTION தான்.

          நான் எந்தெந்த நாடுகளுக்கு போகிறேன், அங்கு என்னவெல்லாம் செய்கிறேன் என்று எதுவும் தெரியாமலேயே என்னை பொருக்கி தின்னி என்று நீங்களும் தென்றல் அவர்களும் அழைப்பதற்கு என்ன காரணம்? பணி நிமித்தம் வெளிநாடு செல்ல வேண்டிய நிலையில் உள்ளேன். அதற்கு டாடா சீனாவில் கஞ்சா விற்றார், கற்றது கையளவும் அதே போல தான் என்று தென்றல் கூறுகிறார். வெளிநாடு போகிறவர்கள் கஞ்சா விற்க தான் போகிறார்களா? இல்லை உள்நாட்டு தொழில் செய்வோரின் வயிற்றில் மண்ணை அள்ளி போடுவதற்காக தான் வெளிநாடு போகிறேனா? என்னை பற்றி எதுவும்ம் தெரியாமலேயே நீங்களும் தென்றலும் அனுமானத்தில் சொல்வதற்கெல்லாம் நான் எப்படி பொறுப்பாக முடியும்?

          • நாட்டு நலன் என்று வருகிறபோது தனிமனித உணர்ச்சிகள் அங்கு பெரிதில்லை.எட்டப்பன் வசைகளோ இப்போது நீங்கள் தெரிவிக்கும் வருத்தமோ [மன்னிப்பு என்ற சொல்லை நீங்கள் தவிர்க்கலாம்]இரண்டுமே எனக்குள் வருத்தத்தையோ மகிழ்ச்சியையோ ஏற்படுத்தி விடாது.ஆனால் அதற்கான எதிர்வினைகள் நிச்சயம் உண்டு.

            \\என்னை பற்றி எதுவும்ம் தெரியாமலேயே நீங்களும் தென்றலும் அனுமானத்தில் சொல்வதற்கெல்லாம் நான் எப்படி பொறுப்பாக முடியும்?//

            நீங்கள் சொல்லும் விவரங்களை வைத்துத்தான் குற்றச்சாட்டுகளை சொல்கிறோம்.இப்போது இயந்திரம் விற்க சீனாவுக்கு போவதாக சொல்லிருக்கீங்க.அதுவும் சீனனின் கொள்ளை நடவடிக்கைகளுக்கு துணை போவதுதான்.அதையும் ஏற்றுமதி,இறக்குமதியே கூடாதா என்ற உங்கள் கேள்வி குறித்தும் நேரம் கிடைப்பதை பொறுத்து ஓரிடு நாட்களில் எழுதுகிறேன்.

          • க.கை.அவர்களே,

            இன்றைய தாராளமயமாக்கப்பட்ட உலகில் சீனா தன்னை ”உலகின் தொழிற்சாலை”என்று அழைத்துக்கொள்கிறது.உங்களைப்போன்றவர்களின் கைங்கரியத்தால் அது பகுதியளவு உண்மையாகவே இருக்கிறது.பெருந்திரள் உற்பத்தியின் மூலமாக குறைந்த விலையில் உலக நாடுகள் பலவற்றுக்கும் தனது உற்பத்தி பொருட்களை விற்பனை செய்கிறது.இதனால் வளரும் நாடுகள் பலவும் ஏற்கனவே அரைகுறையாக கட்டமைத்திருந்த சுதேசி பொருளாதாரம் கிட்டத்தட்ட அழிந்துபட்டு சாதாரண பயன்பாட்டு பொருட்களுக்கு கூட சீனாவை சார்ந்து இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

            இந்தியாவை எடுத்துக்கொண்டால் செருப்பு,குடை,மின்விளக்குகள் ,மின்னணு பொருட்கள்,பிளாஸ்டிக் சாமான்கள்,பெல்டு,பக்ல் ,விளையாட்டு பொம்மைகள்,இரும்பாலான கட்டில்கள்,பீரோ,நாற்காலிகள்,மரத்தாலான கட்டில்கள்,நாற்காலிகள்,சோபா செட்டுகள்.கத்திரிக்கொல்கள் ,திருப்புளி,ஸ்பானர்,போன்ற தொழிற்கருவிகள்,இன்னும் எண்ணி மாளாத பொருட்களை செய்து இங்கு கொண்டு வந்து கொட்டுகிறது சீனா. தாராளமயமாக்கலுக்கு முன்பு அவையெல்லாம் இங்கு சிறு,குறு உற்பத்தியாளர்களால் செய்யப்பட்டு வந்தன.அவர்கள் எல்லாம் இன்று தொழிலில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு உள்ளனர்.

            சீனா ”உலகின் தொழிற்சாலை”என்றால் அதன் பொருள் என்ன.பிற நாடுகளின் மக்கள் அனைவரையும் பொருள் உற்பத்தி ஏதும் செய்யாத வெறும் நுகர்வோராக மட்டுமே இருத்தும் கயமை என்று பொருள் கொள்ளலாம்.நமக்கு வேண்டிய பொருட்களை முடிந்த அளவுக்கு நாமே செய்வதுதான் நாட்டின் பொருளாதாரம் வளர்வதற்கும்,நாட்டு மக்கள் அனைவருக்கும் வேலை மற்றும் வாழ்வாதாரத்தை ஏற்படுத்தி கொடுக்கவும் தேவை.அந்த வாய்ப்பை உலக நாடுகளுக்கு மறுத்து தனது நாட்டு பொருட்களை மலிவான விலைக்கு அனுப்புவதன் மூலம் உலக நாடுகளை கொள்ளையிடுகிறது சீனா.நிற்க.

            இந்த பின்னணியில் உங்கள் இயந்திர ஏற்றுமதியை பரிசீலித்து பாருங்கள்.தனது பெருந்திரள் உற்பத்தியை சாத்தியமாக்குவதற்கு சீனாவுக்கு பெரும் எண்ணிக்கையில் இயந்திரங்கள் தேவை.அவர்களும் இயந்திர உற்பத்தியில் சளைத்தவர்களில்லை.ஆனாலும் விலை,தொழில்நுட்பம்,தேவையான எண்ணிக்கையில் சொந்தமாக செய்ய இயலாமை,குறித்த காலத்தில் இயந்திரங்கள் உற்பத்திக்கு ஆயத்தமாவது போன்ற காரணங்களால் வெளிநாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்கிறார்கள்.அதாவது குறுகிய காலத்தில் பெருவாரியாக உற்பத்தி செய்து உலகெங்கும் பொருட்களை அனுப்புவதற்காக உங்களிடம் இயந்திரங்கள் வாங்குகிறார்கள்.

            சற்றே எண்ணிப்பாருங்கள்,நீங்களே சொல்லியிருக்கிறீர்கள்.உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யக்கூடிய பொருட்களை இறக்குமதி செய்வது அந்த உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் செயல் என்று நீங்களே சொல்லியிருக்கிறீர்கள்..உலகெங்கும் சரக்கு அனுப்பி வணிகம் செய்யும் வாய்ப்பு சீனாக்கரனுக்கு இல்லையென்றால் இவ்வளவு உற்பத்தி அங்கு நடக்குமா.இவ்வளவு உற்பத்தி அங்கு நடக்காவிட்டால் அவனுக்கு உங்களிடம் இயந்திரங்கள் வாங்கும் தேவை இருக்குமா.ஆக மொத்தம்,சீனாக்காரனது கொள்ளைக்கு நீங்களும் துணை போகிறீர்கள்.கொலைகாரனுக்கு கத்தி தீட்டி கொடுக்கும் செயலுக்கு ஒப்பானது உங்களின் வேலை.

            அடுத்து ஏற்றுமதி-இறக்குமதி

            ஏற்றுமதி-இறக்குமதி,இன்றி ஒரு நாட்டின் பொருளாதாரம் இயங்க முடியாது.என்னென்ன ஏற்றுமதி செய்வது,இறக்குமதி செய்வது,என்பதை அந்தந்த நாடுகளின் வளங்களை பொறுத்து முடிவு செய்ய வேண்டும்.இந்தியாவை எடுத்துக்கொண்டால் இது ஒரு விவசாய நாடு.இன்றளவும் நாட்டின் ஆகப்பெரும்பான்மையான மக்களுக்கு வேலை வாய்ப்பை அளிப்பது விவசாய துறைதான்.உணவு உற்பத்தியில் தன்னிறைவை எட்டும் வகையில் திட்டங்கள் வகுத்து செயல்படுவதுடன் ஏற்றுமதியையும் கருத்தில் கொண்டு திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும்.விவசாய விளை பொருட்கள் மட்டுமல்லாது அதன் பக்க விளை பொருட்கள் ஆடு.மாடு,இறைச்சி,பால் பொருட்கள்,கோழி,முட்டை,தோல்,தோல் பொருட்கள் ,பழங்கள்,பழக்கூழ்கள் போன்றவற்றின் ஏற்றுமதியை பெருக்க வேண்டும்.அவ்வப்போது ஏடுகளில் செய்தி வருகிறது.விலை கிடைக்காமல் விவசாயிகள் தக்காளியை சாலையில் கொட்டிவிட்டு செல்கிறார்கள்.முறையான குளிர்பதன வசதிகளும்,தக்காளி சாஸ் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்வதற்கான ஏற்பாடுகளையும் அரசு செய்திருந்தால் இந்த அவலம் நடக்காது.இது போன்ற ஏற்றுமதிகளை விடுத்து காடுகளையும் மலைகளையும் அழித்து கனிம வளங்களையும்,தாதுப்பொருட்களையும் ஏற்றுமதி செய்வது நாட்டையே பாலைவனமாக்கும் கொடுஞ்செயலாகும்.

            இறக்குமதி .இது பற்றி அதிகம் சொல்ல வேண்டியதில்லை.நம்மிடம் என்ன இல்லையோ,அவற்றை இறக்குமதி செய்ய வேண்டியதுதான்.அதற்காக மக்கள் வம்பாடு பட்டு சேர்க்கும் அந்நியசெலாவணியை BMW ,ஆடி கார்களையும் ஆயுதங்கள் வாங்கியும் வீணடிக்கக்கூடாது.

          • \\சுட்டியை கவனமாக படிக்கவும். நேரு சௌ அவர்களால் எப்படி ஏமாற்றப்பட்டார் என்பது புரியும்//

            அந்த கட்டுரை முழுக்க முழுக்க அமெரிக்க சி.ஐ.ஏ அளிக்கும் தகவல்களை சொல்கிறது.நடுநிலை திலகமான நீங்கள் சி.ஐ.ஏ .தகவல்கள் நடுநிலையாநவை,உள்நோக்கமற்றவை,பொய் கலப்பில்லாதவை என நம்புறீங்களா.யுத்தம் நடந்து இத்தனை ஆண்டுகளுக்கு பின் இந்த விவரங்களை சி.ஐ.ஏ வெளியிடுவதன் நோக்கம் என்ன.

            நான் இன்னொரு தகவல் சொல்றேன். இந்திய சீன போர் பற்றி விசாரித்த ஹெண்டர்சன் ப்ரூக்ஸ் ஆணைய அறிக்கையை இன்று வரை இந்திய அரசு வெளியிடவில்லை.அது குறித்த இந்த சுட்டியை பார்க்கவும்.

            http://timesofindia.indiatimes.com/india/In-U-turn-Modi-govt-rules-out-release-of-Henderson-Brooks-report/articleshow/38024666.cms

      • திருவாளர் கற்றது கையளவு,

        தங்களின் நைச்சியமும் அதாவது களவாணித்தனமும் அதிகரித்துக் கொண்டே போகிறது. ஆகையால் விவாத அணுகுமுறை, அதில் ஏற்படும் நெருடல்கள், தேர்ந்தெடுத்த விவாதம் எப்படி இருக்கலாம் என்பதற்கு எனது பார்வையை வைத்துவிடுகிறேன்.

        தமிழ்நாட்டில் வருடம் ஒன்றிற்கு 30ஆயிரம் கோடி ரூபாய் டாஸ்மாக்கில் சம்பாரிக்கும் பாசிசக் கும்பலை நடுத்தரவர்க்கமும் ஜெயாவின் ஏவல் விலங்குகளும் நியாயப்படுத்துகிற பொழுது ஒரு வாதம் ஒன்றை வழமையாக வைத்தார்கள். அதாவது இந்தப் பணத்தில் தான் நலத்திட்ட உதவிகள் செய்யப்படுகிறது என்று சொன்னார்கள் (ஆதாரம் சஞ்சீவ் குமார், தமிழ் ஹிந்து).

        இப்பொழுது சஞ்சீவ் குமாரிடம் நான் முன் வைக்கிற கேள்வி என்னவென்றால் “பெற்ற மகளைக் கூட்டிக்கொடுத்து தகப்பன் சம்பாரிப்பதற்கு காரணம் அவளுக்கு திருமணம் நடத்தி வைக்க வேண்டும் என்கிற நல்நோக்கம் தான் என்று ஒரு தந்தை சொன்னால் அது சரி என்று சொல்வீர்களா?” கைக்கூலி சஞ்சீவ் குமார் அவர்களே என்று கேட்கிறேன்

        என் கேள்வி எந்தவிதத்தில் தனிநபர் தாக்குதலாகவும் தாங்கள் சொல்கிற ஆபாசமாகவும் உங்களது பார்வையில் உள்ளது என்று சொல்வீர்களா? ஏனெனில் உங்களது களவாணித்தனத்தையும் இதன் அடிப்படையில் தான் விமர்சித்திருக்கிறேன். ஆனால் தாங்களோ வெட்டி ஒட்டி வேடிக்கைகாட்டும் சில்லறைத்தனத்தை அரங்கேற்றுகிறீர்கள். அதை தனியாக பார்ப்போம்.

        இப்பொழுது தாங்கள் அனுபவிப்பதாக சொல்லும் மனம் புண்படல்; கோபம் வருதல் போன்றவற்றை உங்களைப்போன்ற சஞ்சீவ் குமார் அனுபவிக்கிறார்!!!! இதைப்பார்க்கிற ஜெயமோகன்கள் ஆர் எஸ் எஸ் அரவிந்த நீலகண்டன்கள் ரசிய செம்புரட்சியை முன்வைத்து பலபக்க அறிக்கைகளை முன் வைக்கிறார்கள். தேர்ந்த களவாணியாக இருக்கும் தாங்கள் கூட கம்யுனிச புத்தகங்கள் படிப்பதை மட்டும் விட்டுவிட்டு உலகத்தைப் பாருங்கள் என ஓர் அறிவுரையை நல்கியுள்ளீர்கள்!

        ஊத்திக் கொடுக்கும் அம்மாவையும் தரகு வேலை பார்க்கும் சஞ்சீவ் குமாரையும் வேறு எப்படி விமர்சிக்கலாம்? உங்களின் நடிப்பை நான் இவ்விதம் கோடிட்டு காட்ட விரும்புகிறேன்.

        இதில் தாங்கள் சொல்லும் ஒரு ஸ்டீரியோடைப் உள்ளதைக் கவனித்தீர்களா! அதாவது கலாம் பற்றி விவாதிக்கிற இந்தப் பதிவில் கற்றது கையளவின் செயல்களை விமர்சிப்பதற்கு க.கையை ஏன் சஞ்சீவ் குமாருடன் ஒப்பிட வேண்டும்? ஜெயலலிதாவை தூக்கி நிறுத்தும் சஞ்சீவ் குமாரின் நிலைப்பாடும் க.கையின் நிலைப்பாடும் ஒன்றா என்ற கேள்வி வருகிறது இல்லையா? நான் ஆம் என்கிறேன். இதற்கு நான் ஓர் உதாரணம் தரவிழைகிறேன்.

        அக்சாய் சீன் பற்றி தாங்கள் மயிர் பிளக்கும் தேசாபிமான கருத்தை முன்வைத்து சீனாவை எதிர்ப்பதாகக் காட்டிக்கொண்டீர்கள். பிலிப்பைன்சும் கூட விவாதத்தில் வந்தது. ஆனால் ஈழம் வரவில்லையே ஏன்? அங்கு சீன, அமெரிக்க ஏகாதிபத்தியம் ஹம்பன் தோட்டாவில் துறைமுகம் அமைப்பதற்கும் ஆசியாவில் வல்லரசாக இருப்பதற்கும் ஒரு நாய்ச்சண்டை நிகழ்த்தினார்கள் என்பது தெரியும். பல இலட்சம் பேரைக் கொன்றார்கள் என்று தெரியும். இங்கு சீனாவைப் பற்றி வாய்திறக்காதற்கு என்ன காரணம்? நாளை ஹம்பன் தோட்டாவில் துறைமுகம் அமைந்தால் இந்திய வேட்கைகொண்ட தாங்கள் இப்பொழுது சீனா சென்று பொறுக்குவது போலவே நாளை அங்கும் செல்லலாம். அங்கு உங்களது தேசபக்தி வணிகம் என்று வருகிற பொழுது பொதுப்புத்தியாக உன் கையில் கால்குலேட்டர் இல்லையா என்று கேட்கும்? கனிணி இல்லையா என்று கேட்கும்? உங்களையே தொழிலாளி என்று வேசைத்தனமாக விவாதிப்பீர்கள். உங்களுக்குள் ஓர் சஞ்சீவ் குமார் இல்லையா?

        ஆக இப்படி வெள்ளிடைமலையாக காணக்கிடைக்கிற ஓர் உண்மை எப்படி ஸ்டீரியோடைப்பாக நிற்க முடியும்? மேளும் உங்களது கம்பெனி பொருளை விற்று அன்னியசெலவாணி ஈட்டுகிற உங்களை இராமன் ஏகடியம் செய்வதாகச் சொல்கிறார்.

        ஆனால் இதே இராமன், சீனாவின் ஹம்பன் தோட்ட துறைமுகத்திட்டத்தால் நாளை பொறுக்கித்தின்னப்போகும் உங்களைப்போன்ற உழைப்பாளிகளை!!! பற்றி வாய்திறப்பதற்குப் பதிலாக திபெத் தலாய்லாமா, சீன அத்துமீறல் என்று குடிகாரன் போல் பேசுகிறார். ஈழம் பற்றி பேசினால் தமிழின வெறியன்! திபெத் பற்றி பேசினால் சுதந்திர வேட்கை கொண்டவனா? இதை எப்படி விளங்கிக்கொள்வது?

    • //சொல்லி கழுத்தில் தாலிகட்டச் சொன்னது. யாராவது எதிர்த்து கேட்டால் தாலி கட்டியவன் கணவன் என்று மட்டும் சொல்வதில்லை உன் கழுத்தில் அவன் தாலிதானே தொங்குகிறது என்று கதைக்கிறார்கள் தரகர்கள். இங்கு தாலிக்குப் பதிலாக செல்போன் மற்றும் இன்ன பிற வெளிநாட்டு உதிரி பாகங்கள்.///

      அடேங்கப்பா! வன்முறை செய்து , கணினி செல்போன் எல்லாம் உங்கள் கையில் திணித்து விட்டார்கள் ?
      என்ன கொடுமை சரவணன் இது ? அமெரிக்காகாரன் உணமையிலேயே வன்முறையாளன் தான் .

      ஆரோவில்லின் பாச்சர் மனதில் என்ன ஓடுகிறது எனபது யாருக்கு தெரியும் ?
      கிளிப்பிள்ளை மாதிரி திரும்ப திரும்ப உலகம் புரியாமல் உளறுவது அவருக்கு புதிதா என்ன ?

      உள்ளூர் பொருளை வாங்கி உள்ளூரிலே விற்கும் திப்பு பெருமை கொள்கிறார் . உள்ளூர் பொருளை எதிரி நாட்டில் விற்று அந்நிய செலாவணி ஈட்டும் கற்றது கையலவுவை ஏகடியம் செய்கிறார் .

      அடடே அடடே என்று கைதட்டுகிறார் பாவெல் . இவர்களுக்கு எல்லாம் சொல்லி புரிய வைக்க முடியாது .
      ____________________________________

      ஆகவே விவாதத்தை இதோடு முடித்து கொள்கிறேன்.

  39. தேசாபிமானம் குறித்து தந்தை பெரியார் என்ன சொல்கிறார்?

    பாஜகா பாகிஸ்தான் வெறியை கிளப்பிக்கொண்டே பாகிஸ்தானில் பூண்டு சர்க்கரை கஞ்சா வியாபாரம் செய்வது, மோடி கார்ப்பரேட்டுகளின் நலன் காக்க இந்தியாவை சீனாவிற்கு தாரைவார்க்கிற பொழுது, கற்றது கையளவுகள் இங்கு வந்து தேசபக்தி சீன் போடுகிறார்கள்.

    கற்றது கையளவு போன்றவர்களின் தேசாபிமானம் குறித்து தந்தை பெரியார் என்ன சொல்கிறார்? இதோ சில துளிகள்;

    “எப்படி இருந்தாலும் மனிதன் மனித சுதந்திரம்- அதாவது தெருவில் நடப்பது குளத்தில் தண்ணீர் மொள்ளுவது-மனிதனுக்கு மனிதன் தொடுவது முதலிய சுதந்திரங்கள் கொடுப்பதற்கு தன் நாட்டினனாலேயே தடைப்பட்டிருக்கும் பொழுது, வேறு நாட்டினிடம் அரசாட்சி சுதந்திரம் கேட்பது வேடிக்கையாக இல்லையா?

    தோலைக்கடித்து துருத்தியைக் கடித்து வேட்டை நாய் ஆகிவிட்டது என்பது போல் தேசியமானது ஒருபக்கம் அரசியல் சுதந்திரம் கேட்டுக்கொண்டும் மற்றொரு பக்கம் வருணாசிரம் சுயராஜ்ஜிய பெற முயற்சிகள் நடைபெறுகின்றன. இந்த விழிப்பாசை மயக்கத்தில் கூட சாதி வித்தியாசம் இருக்க வேண்டும்; பறையர் இருக்க வேண்டும்; மனுதர்மம் வேண்டும் என்று மாநாடுகள் கூடி பேசப்படுகின்றது” (பெரியார் களஞ்சியம் தொகுதி-ஒன்று பக்கம் 59.)

    “எந்தக் கட்சியிலும் நீங்கள் சேரக்கூடாது என்று சொல்ல வேண்டியவனாய் இருக்கிறேன். உங்களுக்குள் தேசாபிமானம் என்ற யோக்கியமற்ற சூழ்ச்சிக்கு நீங்கள் ஆளாகக் கூடாது. அது சோம்பேறிகள், காலிகள் ஆகியவர்கள் பிழைப்பிற்கு ஏற்படுத்தப்பட்ட மோட்சம், நகரம் போன்ற மூடநம்பிக்கையாகும். உங்களுக்கு இன்று சுயமரியாதை அபிமானந்தான் உண்மையாய் வேண்டும். காந்தியாருடைய தேசாபிமானத்தைப் பார்த்தால் மற்றவர்களின் தேசாபிமானத்தின் யோக்கியதையை புரிந்துகொள்ளலாம்.” (பெரியார்களஞ்சியம் தொகுதி-1, பக்கம்-68)

    இதைச் சொன்னதற்காக பெரியாரை தேசவிரோதி என்று ஆர் எஸ் எஸ் அரவிந்த நீலகண்டன்கள் ஒப்பாரி வைக்கிறார்கள். இதே ஜால்ராவை பிழைப்புக்காக வயிறு ரொப்பும் கற்றது கையளவுகள் திப்புவை தேசவிரோதி என்றும் எட்டப்பர் என்றும் கூவுகிறார்கள்.

    மற்றொரு முறை சாமுவேல் ஜான்சனை நினைவு கூர்வோம். “Patriotism is last refuge of a scoundrel”

  40. \\நீங்கள் யார் என்று அறிந்து கொள்ள கேட்கவில்லை. என்ன பொருளை வணிகம் செய்கிறீர்கள்//

    அவை இந்தியப்பொருட்கள்தான்.ஐயமிருந்தால் நேரிலேயே வரலாம் என சொல்லியிருக்கிறேன்.அப்புறமும் உள்ளே,வெளியே என வெட்டி வியாக்கியானம் என்ன வேண்டியிருக்கு.. நீங்கள் வேலை செய்யும் நிறுவனத்தின் பெயரையோ,ஊரையோ,என்ன இயந்திரம் விற்கிறீர்கள் என்பதையோ வெளியிடவில்லை.அதை நாங்களும் கேட்கவில்லை.இணைய விவாதங்களில் பங்கேற்போர் அவர்களாகவே முன் வந்து தரும் விவரங்களுக்கு மேல் கூடுதல் விவரங்கள் கேட்பதில்லை.இது ஒரு குறைந்த பட்ச நாகரீகம்.

    \\சர்ச்சைக்குரிய பகுதியாக இருக்கலாம் என்று சொல்கிறீர்கள். அந்த பகுதி இந்தியா உரிமை கோரும் பகுதியாக இருக்கலாம் என்கிறீர்கள். பின் அந்த இடங்களில் ஆக்கிரமித்த சீனாவை ஒன்றும் சொல்ல மாட்டேன் என்கிறீர்கள். இந்தியா செய்தால் மட்டும் ஆக்கிரமிப்பு என்கிறீர்கள். //

    நடிக்கிறீர்களா,அல்லது உண்மையிலேயே மண்டையில் ஏறவில்லையா.இந்தியா உரிமை கோராத பகுதிகளில் காவல் சாவடிகளை அமைத்தது.சீனா இந்திய பிரதமரே சர்ச்சைக்குரிய பகுதியாக ஒப்புக்கொள்ளும் பகுதியை கைவசம் வைத்துள்ளது.இரண்டும் ஒன்றாகுமா.

    \அக்சாய் சீன் பகுதி சீனாவுக்கு உட்பட்ட பகுதி என்று 192௦ க்கு முன் இருக்கும் மேப் ஏதாவது இருக்கிறதா?//

    எதிராளி ஏதேனும் விவரம் அளித்தால் அதை பற்றி கொஞ்சமாவது எண்ணிப்பாக்கணும்.

    பின்னூட்டம் 38.4-ல் McCartney-McDonald Line பத்தி சொல்லியிருக்கேன்.அது பற்றி விக்கிபீடியா விலிருந்து

    In 1893, Hung Ta-chen, a senior Chinese official at Kashgar, handed a map of the boundary proposed by China to George Macartney, the British consul-general at Kashgar.[13] This boundary placed the Lingzi Tang plains, which are south of the Laktsang range, in India, and Aksai Chin proper, which is north of the Laktsang range, in China. Macartney agreed with the proposal and forwarded it to the British Indian government. This border, along the Karakoram Mountains, was proposed and supported by British officials for a number of reasons. The Karakoram Mountains formed a natural boundary, which would set the British borders up to the Indus River watershed while leaving the Tarim River watershed in Chinese control, and Chinese control of this tract would present a further obstacle to Russian advance in Central Asia.[9] The British presented this line, known as theMacartney–MacDonald Line, to the Chinese in 1899 in a note by Sir Claude MacDonald. The Qing government did not respond to the note, and the British took that as Chinese acquiescence.[7]Although no official boundary had ever been negotiated, China believed that this had been the accepted boundary

    \\இந்தியாவின் நிலப்பகுதி என்று இந்தியா கூறும் பகுதிகளில் ஏன் சீனா ஆக்கிரமித்துள்ளது என்று கேட்டால் இந்தியாவின் நிலப்பகுதி என்று சீனா ஏற்றுக்கொண்ட பகுதிகளில் என்று திசை திருப்புகிறீர்கள்.//

    எத்தன வாட்டி சொல்றது விதண்டாவாதியே,தனது பகுதி என்று இந்தியாவும் சீனாவும் சொல்வதால் அதில் சீனாவின் இருப்பு ஆக்கிரமிப்பா இல்லையா என்பதை பேசித்தான் தீர்க்க வேண்டும்.ஆனால் இந்தியா உரிமை கோராத பகுதிகளில் காவல் சாவடிகளை அமைத்தது அப்பட்டமான ஆக்கிரமிப்பு என்று தெரிகிறது.அது போன்ற அப்பட்டமான ஆக்கிரமிப்பை சீனா செய்திருந்தால் காட்டுங்க என்று சொன்னால் அதை சொல்ல துப்பு கெட்டுப்போய் திசை திருப்பல் என தப்பிக்கிறீங்க.\

    \\அக்சாய் சீன் பகுதி இந்தியாவுக்கு சொந்தமான பகுதி என்பது எனது நிலைப்பாடு.//

    கேட்ட கேள்வி என்ன.நீங்க உளறுவது என்ன.அக்சாய் சின் சீனனுக்கு தான் சொந்தம் என்று நான் சொல்வதாக வெட்கமின்றி பொய் சொல்லி இருக்கிறீர்கள்.அதை மெய்ப்பிக்க கோருகிறேன்.சுத்தி வளைச்சு இப்படி உளறி வைத்தால் மெய்ப்பிப்பதாக ஆகி விடுமா.உங்களை பாத்தா எனக்கே பாவமா இருக்கு.

    \\இவர்களாக ஒப்பந்தங்களை ரத்து செய்வதாக அறிவித்து விட்டால் அக்சாய் சீன் பகுதியை நாம் சீனாவுக்கு கொடுத்து விட வேண்டுமா?//

    அக்சாய் சீன் தொடர்பாக இந்தியாவுக்கும் சீனாவுக்கும் எந்த ஒப்பந்தமும் கிடையாது அறிவாலியே.

    \\192௦ முன் எனக்கு தெரிந்து எந்த சீன அபிசியல் மேப்பிலும் அக்சாய் சீன் இருந்ததற்கான ஆதாரம் இல்லை//

    McCartney-McDonald Line

    \\1962 போருக்கு முன்னர் …………………. அக்சாய் சீன் பகுதியின் எந்த ஒரு பகுதியும் இந்தியாவின் வசம் இல்லவே இல்லை என்று மறுக்கிறீர்கள் என்று கொள்ளலாமா?//

    நீங்கள் மேற்கோள் காட்டும் எனது எழுத்திலேயே தகுந்த விளக்கம் உள்ளது.விதண்டாவாதம் ஏன்.மக்மோகன் கோட்டையும் தாண்டி போரில் கைப்பற்றிய பகுதிகளை விட்டு விலகி கொண்டது சீனா.போரில் வெற்றி பெற்று கொண்டிருக்கும்போதே தானே முன் வந்து போர் நிறுத்தம் அறிவித்தது சீனா.இதனை பாராட்டுக்குரியது என்று சொல்லி மாற்றான் தோட்டத்து மல்லிகை க்கும் மணமுண்டு என்று உவமையோடு சொன்னேன்.அதற்கு

    \\மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு மணம் உண்டு. சரி, மாற்றான் நம்ம வீட்டுக்குள் ஒவ்வொரு அடியாக ஆக்கிரமித்தாலும் அதே உவமையை தான் கூறுவீர்களோ?
    இப்படியே விட்டால் பின் நம்ம வீட்டு மல்லிகையும் கூட வருங்காலத்தில் மாற்றான் தோட்டத்து மல்லிகை என்று நீங்கள் புகழ் பாட வேண்டியதிருக்கும்.//

    என்று அபாண்டமாக கேக்குறீங்க.அதற்குத்தான் உச்சந்தலையில் ஆணி அடித்தாற் போல் சொல்லியிருக்கிறேன்.வாங்குன அடியில் மூளை மரத்துப்போய் விட்டது போலும்.விளக்கவில்லை என்று முனங்குறீங்க.மீண்டும் பதிவு பண்ணுறேன் படிச்சுக்கங்க,

    \\நம்ம வீட்டு மல்லிகையை கூட மாற்றான் தோட்டத்து மல்லிகை என ”புகழ்”பாட கூடிய குணநலன் உங்களிடம்தான் உள்ளது.அதனால்தான் சீனனுடைய பொருட்களை இங்கு கொண்டு வந்து விற்பதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்து கொண்டு அந்த இழிசெயலை செய்வத மறைக்க சீன எதிர்ப்பு சவடால் அடிக்கிறீங்க.சீனா உளிட்ட அந்நிய பொருட்களை தடை செய்து உள்நாட்டிலேயே அவற்றை தயாரிக்க வேண்டும் சொல்கின்ற என்னிடம் அந்த இழிகுணத்தை எதிர்பார்க்க முடியாது.//

    \\இந்திய-சீன போரில் நியாயம் சீனாவின் பக்கமே இருந்தது என சொல்லும் நான் நாட்டு நலன் என்று வரும்போது சீன பொருட்களை புறக்கணிகிறேன்.அதனால் தனிப்பட்ட முறையில் வருமான இழப்பு ஏற்பட்டாலும் நாட்டுக்காக,எனக்கு வாழ்வளிக்கும் மக்கள் நலனுக்காக அதனை ஏற்றுக்கொள்கிறேன்.
    க.கை.என்ற நீங்களோ சீனா என் நாட்டின் நிலப்பகுதிகளை ஆக்கிரமித்து வைத்துள்ள ஆக்கிரமிப்பாளன் என குற்றம் சாட்டிக்கொண்டே அந்த நாட்டுடன் உங்கள் முதலாளி வணிக உறவு கொள்ள ஏற்பாடு செய்து கொடுத்து அதில் காசு பார்த்து வயிறு வளக்குறீங்க.

    ஆளும் வர்க்கங்களின் நலனுக்கு உகந்தது என்பதால் தாராளமயமாக்கல் கொள்கைகள் அமுலாக்கப்படுகின்றன.அதை நான் ஏற்க மறுக்கிறேன்.அதனால் வருமானம் குறைந்தாலும் பரவாயில்லை என அந்த அநியாய செயலில் பங்கேற்க மறுக்கிறேன்.இப்படிப்பட்ட என்னிடம் இந்த நாட்டு மல்லிகையை சீனனின் மல்லிகை என சொல்லும் இழிகுணம் வரவே வராது.

    நீங்களோ தாராளமயமாக்கல் கொள்கைகளை மனமார ஏற்றுக்கொண்டு அதில் காசு பாக்குறீங்க.அதனால் மக்களுக்கு தீங்கு நேர்கிறது என்பதை உங்களால் மறுக்க முடியாமல்தான் சீனாவுக்கு ஏற்றுமதி செய்யுறேன்,இறக்குமதி செய்யலன்னு சொல்றீங்க.நாளைக்கே ஆளும் கும்பலின் நலனுக்கு உகந்ததாக இருந்து அக்சாய் சின் பகுதியை சீனாவுக்கு விட்டுக்கொடுத்தால்,[இப்போது வங்காள தேசத்துக்கு நிலப்பகுதிகளை விட்டுக்கொடுத்தது போல]அதில் உங்களுக்கு காசு பாக்கும் வாய்ப்பிருந்தால் அதையும் ஏற்றுக்கொள்வீர்கள்.

    அதனால்தான் சொல்கிறேன்.இந்த நாட்டு மல்லிகையை சீனனின் மல்லிகை என சொல்லும் இழிகுணம் உங்களிடம் குடி கொண்டுள்ளது தெளிவாக தெரிகிறது.

    சீனாவுக்கு ஏற்றுமதி என்பதும் கூட்டுக்கொள்ளையில் பங்கேற்பதுதான்.அதை தனியாக எழுதுகிறேன்.

    இந்தியாவிலிருந்து சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் பெரும்பாலும் இரும்புத்தாது,பருத்தி,ஆர்கானிக் கெமிக்கல்ஸ்,செம்மரம் முதலான மூலப்பொருட்களாகவே உள்ளன.அவற்றை கொண்டு பொருட்கள் செய்து நம்மிடமே அவற்றை விற்பதன் மூலம் சீனாகாரன் இந்திய சிறு,குறு உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை பறிக்கிறான்.

    .பிரிட்டிசு ஏகாதிபத்தியமும் இதைத்தான் செய்தது.அவனுக்காவது இந்தியாவை கொள்ளையிட சண்டை போட்டு தம்மில் பலரை காவு கொடுத்து நாடு பிடித்து காலனி ஆட்சியை நிறுவி பராமரிக்க வேண்டிய தேவை இருந்தது.சீன ஏகாதிபத்தியத்திற்கோ அதே கொள்ளையை நடத்த தாராள மயமாக்கலும் கற்றது கையளவு போன்றவர்களின் கைக்கூலித்தனமுமே போதுமானதாக உள்ளது.

    இந்த லட்சணத்துல நாட்டை காட்டிக்கொடுக்கும் க.கை இறக்குமதி பண்ணல ஏற்றுமதி பண்றேன்னு மயிர் பிளக்கும் வாதம் புரிகிறார்.

  41. திப்பு,

    இந்திய பிரதமரே சர்ச்சைக்குரிய பகுதி என ஒத்துக்கொள்கிறார் என்று கூறுகிறீர்கள்.
    அந்த வகையில் சீன அதிபர் சௌ கூட தான் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் எந்த எல்லை பிரச்சினையும் இல்லை என்று நேருவிடம் கூறினார். மேப்பில் சில இடங்களில் இந்தியாவுக்கு சொந்தமான பகுதிகள் உள்ளதை நேரு சுட்டிக்காட்டிய போது, புதிய கம்மியுனிச அரசு இப்போது தான் உருவாக்கி இருக்கிறது. அது பழைய மேப், அதை மாற்ற கூட நேரமில்லை என்று கதை விட்டார். அதையும் நேரு நம்பி ஏமாந்தார்.

    சீனா உள்ளிட்ட அந்நிய நாட்டு பொருட்களை தவிர்த்து உள்நாட்டு பொருட்களையே பயன்படுத்த வேண்டும் என்று சொல்லும் திப்பு அவர்கள், தாராளமயமாக்கலை எதிர்க்கும் திப்பு அவர்கள் தான் எந்த நாட்டு செல்போன் பயன்படுத்துகிறார் என்று கூற மறுக்கிறார்.

    நான் சீனாவுக்கு பணி நிமித்தம் செல்கிறேன் என்று தான் சொன்னேன். இங்கிருந்து இரும்புத்தாது, பருத்தி, ஆர்கானிக் கெமிக்கல்ஸ், செம்மரம் போன்றவற்றை அனுப்புகிறேன் என்றோ, சீனாவின் கைக்கூலியாக இருக்கிறேன் என்றோ எப்போது சொன்னேன்? நீங்களாகவே ஒரு முடிவுக்கு வந்து விட்டால் அதற்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்?

    பணி நிமித்தமாக சீனா மட்டும் அல்ல, பல்வேறு நாடுகளுக்கும் தான் செல்கிறேன். அதனால் அனைத்து நாட்டுக்கும் கைக்கூலி என்று கூறுவீரோ?

    ஏற்றுமதியும் கூடாது, இறக்குமதியும் கூடாது என்றால் அண்டை நாடுகளுக்குள் எந்த வித கொடுக்கல் வாங்கலும் இருக்க கூடாது என்று சொல்ல வருகிறீர்களா?

    இந்தியா, சீனா இரு நாடுகளும் தங்களுக்குள் பேச்சு வார்த்தை நடத்தி ஒரு முடிவுக்கு வந்து, அக்சாய் சீன் பகுதியை அவர்களுக்குள் பிரித்து கொண்டால் அதற்கு எனக்கு சம்மதமே. இந்தியாவுக்கு தெரியாமல், இந்தியாவின் சம்மதம் இல்லாமல் அவர்களாகவே இந்திய பகுதிகளை ஆக்கிரமித்து எடுத்து கொல்வது தவறு என்று தான் கூறுகிறேன்.

    • டாக்டர் அப்பாட்டக்கர் அவர்களை பற்றிய பதிவு இது. ஆரம்பத்தில் இருபிரிவில் இருந்து சரிவர அடித்துக்கொண்டவர்கள் பின்னர் பாக்கிசுதான், சீனா, வடதுருவம், புளுடோ கிரகம் என்று ஊர்மேய்ந்து குழாயடி சண்டையாக்கி விட்டீர்கள். ஒருத்தர் கழுத்தை அடுத்தவர் மாற்றி மாற்றி கடித்துக்கொண்டதில் ரத்தம் பீறிட்டது, பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. இப்போது அந்த சுருதி குறைந்து விட்டது. இந்த இரு காரணங்களுக்காகவும் எனது கடுமையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன். பார்வையாளனுக்கு மகிழ்ச்சியை கொடுக்காமல் என்ன சண்டை போடுகிறீர்கள்? மீண்டும் சரியானநிலைக்கு சண்டையை கொண்டு செல்லவும். சட்ட டவுசரெல்லாம் கிழிந்து தொங்கவும் ஆவன செய்யவும்.

      மீண்டும் அப்பாட்டக்கரில் இருந்து ஆரம்பிக்கவும். என்னாலான முயற்சி, சிறு திரியை கொளுத்திப் போடுகிறேன். க கை, ஈரமான் வகையினருக்கு:

      1. அப்பாட்டக்கரின் ஐ கியூ என்ன?
      2. டாக்டர் பட்டம் எந்த பாத்திரக்கடையில் வாங்கினார்?
      3. அணுகுண்டை மட்டும் செய்தாரா, அல்லது திரியை சேர்த்து செய்தாரா?
      4. அணுகுண்டு கண்டுபிடிப்பிற்கு நோபுள் பரிசுக்கு தகுதியானவரா?
      5. வேறு கடையில் வாங்கிய நமுத்துப் போன வெடிகளை வைத்து ராக்கெட் செய்தார் என்று ஒரு குற்றச்சாட்டுநிலவுகிறதே, உங்கள் கருத்து என்ன?

      எல்லாவற்றுக்கும் மேலான வதந்தி:

      27ல் செத்தது கனவாளர், குறி சொல்லியே இல்லை, ராக்கெட் ‘விஞ்சானி’வைகுண்டம் போயி ஒரு வாரம் ஆகி விட்டது.நல்ல முசுலிம், கெட்ட முசுலிம் கதையைநாட்டு மக்களுக்கு காட்ட வேண்டியே 30 வரைக்கும் பிணத்துக்கு பேன் பார்த்தனர்.

      ஆரம்பிக்கட்டும் அடிதடிகள் மீண்டும், கிழிந்து தொங்கட்டும் கிண்டி கோவணங்களெல்லாம்.

  42. சிறு நினைவூட்டல்

    கற்றது கையளவு கட்டுரையாளர் கலாம் மீது அவதூறு பூசுவதாக அள்ளிவிடுகிறார். ஆனால் கலாமின் துரோகங்களுக்கு இதுவரை இவர்கள் பதிலளிக்கவில்லை. அது குறித்த பாயிண்டுகள்.

    1. கலாம் மான்செண்டோவின் முகவராக இருந்து அறிக்கைவிட்டது பின்னூட்டத்தில் இருக்கிறது. மான்செண்டோ கலாமின் அறிக்கையைக் காட்டி விவசாயிகள் தற்கொலைக்கு, பிடி பருத்தி காரணம் அல்ல என்று கூறிய ஆதாரம் இங்கு உள்ளது. யோக்கியவான்கள் நெஞ்சில் துணிவுள்ளவர்கள் இதை மறுக்க வேண்டும். கலாம் ஓர் அறிவியல் அறிஞர் என்று கதைவிட்டவர்கள் பிடிபருத்தி விசயத்தில் பிடிபருத்தியின் அறிவியலைக் கூட பேசியிருக்கலாம். ஆனால் அங்கே தேர்ந்தெடுத்த அரசியல் தரகராக தண்ணீர் தான் பிரச்சனை என்றும் பஞ்சாபில் செழித்து வளருவதைத் தான் கண்ணாரக் கண்டதாகவும் விவசாயிகளுக்கு அப்பட்டமான துரோகம் இழைத்தார். இந்தியாவில் பருத்தி ரகங்கள் வறட்சியை தாங்கி குறைந்த உற்பத்தியைத் தருகிற நிதர்சனத்தை மறைத்து பன்னாட்டு கம்பெனியின் பிடிபருத்திக்கு சொம்படித்ததன் மூலமாக விவசாயிகளின் இரத்தத்தில் கைநனைத்த துரோகம் கலாமுடையது. இதை மறைக்கிற சுகவாசி கற்றது கையளவுகள், தெரிந்தே துரோகத்தை புதைக்கிறார்கள். இவர்கள் வீட்டில் விவசாயி செத்தால் தான் இவர்களுக்கு வலிதெரியுமோ? இந்த ஈன பிழைப்பை நியாயப்படுத்தி கலாம் சிங்கி வேறு.

    2. கலாமின் இதே நிலைப்பாட்டு தொடர்ச்சி தான் உணவு பாதுகாப்புத் திட்டத்திலும்.

    3. அமெரிக்காகாரன் கலாமை அம்மணமாக்கி அழகு பார்த்த பொழுது கண்டனம் தெரிவிக்க இயலாத கலாம் ரசிக குஞ்சுமணிகள் உழைக்கும் வர்க்கத்திற்கு கலாம் இழைத்த துரோகங்களைச் சுட்டிக்காட்டியவுடன் குதியாய் குதிக்கிறார்கள். இது கலாம் ரசிகர்களின் நக்கத்தனத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு.

    4. மீனவர்கள் படுகொலையில் கற்றது கையளவுகள் கச்சத் தீவைக் காட்டி இங்கு யாரும் யோக்கியமில்லை என்று தான் வாதிட்டார்களே தவிர, கலாம் காலத்தில் உருவாக்கப்பட்ட பன்னாட்டு கடல் எல்லைச் சட்டங்களுக்காகவோ, ரிசார்ட்டுகளின் கொள்ளைகளுக்கு ஆதரவு அளிக்கும் சட்டங்கள் குறித்து கலாமின் மவுனங்கள் குறித்தும் வாய் திறவா கோழைகளாக இருக்கிறார்கள்!

    5. ஈழப்படுகொலையும், குஜராத் படுகொலையும் கண்டிப்பதற்கு ஒரு மனிதனுக்கு மனசாட்சி இருந்தாலே போதும் என்கிற பொழுது கலாமின் சதித்தனத்தை மறைப்பதற்கு அவர் ஓர் அறிவியல் அறிஞர் அவருக்கு அதற்கெல்லாம் நேரம் கிடையாது என்று விளக்குப் பிடிக்கிறார்கள்.

    6.பீகாரில் பேக்ஸ் மூலம் ஆட்சியை கலைக்கத் தெரிகிற கலாமிற்கு மணிப்பூரின் ஜெகன் ஜீவன் ராம் அறிக்கையோ இன்னபிற சமூகக் குழுக்களின் குரல்களோ தெரியவில்லை என முத்திரை தருகிறார்கள் காலிகள்!

    இதற்குப் பதிலளிக்கிற பொழுது கற்றது கையளவுகள் தங்களது நிலைப்பாடும் கலாம் நிலைப்பாடும் ஒன்று தான் வாதிட்டு காட்டியது கலாமை உச்சி முகர்கிற மேட்டிமை நடுத்தரவர்க்க ஆளும்வர்க்க கைக்கூலிக் கும்பல்களை வெளிச்சம் போட்டுக்காட்டியது என்று சொன்னால் அது மிகையல்ல.

  43. கற்றது கையளவு !!! நீங்கள் கேட்கின்ற வழிமுறை சோசலிச ரஷ்யாவில் இருந்தது. முதலாளித்துவம் கிராம்வெல் காலத்தில் இங்கிலாந்தில் வந்தபோது, அதற்கு முன்பு ஏதாவது ரோல்மாடல் இருந்ததா? வரைமுறையற்ற முடியாட்சியும், நிலபிரபுத்துவ உற்பத்திமுறையும் தான் இருந்தது. ரஷ்யாவிலும் சோசலிசம் வருவதற்கு முன்பு எதுவும் ரோல்மாடல் இல்லை. இந்த எளிய உண்மையையே நீங்கள் புரியாததுமாதிரி விதண்டாவாதம் புரிகீறீர்கள். தென்றல் போன்ற போராளிகளின் பணி, மக்களை திரட்டுவதும், அரசியல்மயபடுத்தி, ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவதுதான். ஏதுமற்ற மக்கள் கூட்டத்திடம், ஒரு அரசுக்குரிய வேலைத்திட்டத்தை (தொழிற்சாலை மாடலாக நிறுவி) வைக்க சொல்கின்றீர்கள். அதுதான் லெனினும், ஸ்டாலினும் செய்துகாட்டினார்களே !!. ஏன் சென்னையில், ஜெனரல் மோட்டார்ஸ் நடத்த தொழிலாளி வர்க்கம் முனைந்தபோது, ஸ்பிக் மூலம் இரத்தவெள்ளத்தில் மூழ்கடித்தார்களே !! அது என்ன ?. போகிற போக்கில் மார்க்ஸும், ஏங்கெல்சும் அவர்கள் சொன்ன சித்தாந்தத்திற்கு ஒரு மாடலாக ஒரு கடை கூட நடத்தவில்லை அதனால் அது வீண் என்று சொன்னாலும் சொல்வீர்கள். இப்படிப்பட்ட அறிவாளியான் உங்களிடம் மனித நாகரிகத்தில் முதலில் பொதுவுடைமைதான் நிறைந்து இருந்தது என்பதை சொன்னால் என்ன கேள்விகள் கேட்பீர்களே என்பதை நினைக்கும் போதே பயமாகவும் அதேசமயம் பரிதாபமாகவும் உள்ளது.

  44. ஆதவன்,

    நமது கம்மியுனிச நண்பர்கள் சொல்லும் அதே பழைய பல்லவிக்கு செல்கிறீர்கள்.
    நான் நடைமுறை மாடல் என்று கேட்பது நிகழ்காலத்தில்.

    பாஜக கூட தான் ராமராஜ்யம் என்பது சிறந்த ஆட்சி என்று கூறுகிறார்கள். சொல்வது சுலபம். நடைமுறையில் ஒரு சிறிய அளவில், கம்மியுனிசம் மேல் ஈடுபாடு உடையோர் ஒரு மாதிரி தொழிற்சாலை அமைத்தது அதை வெற்றிகரமாக நடத்தி காட்டினால் மக்களுக்கும் கம்மியுனிசம் என்பது நிகழ்காலத்தில் சாத்தியம் என்ற நம்பிக்கை ஏற்படும். மீண்டும், மீண்டும் நீங்கள் லெனினின் ரசியா, மாவோவின் சீனாவுக்கு சென்றால் பின் காமராஜர் ஆட்சி தருவோம் என்று கூறும் காங்கிரஸ்காரர்களுக்கும், ராமராஜ்ஜியம் வழங்கப்போவதாக கூறும் பாஜகவினருக்கும் உங்களுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய் விடும்.

    பேச்சு யார் வேண்டுமானாலும் பேசலாம். நிகழ்காலத்தில் ஒரு சிறந்த கம்மியுனிச மாடலை ஒரு சிறு அளவிலாவது நிகழ்த்தி காட்டினால் தான் பொதுமக்களுக்கு ஒரு நம்பிக்கை வரும். அதில்லாமல் பழைய பல்லவி பாடிக்கொண்டிருந்தால் இருநூறு வருடம் ஆனாலும் தங்கள் கனவுகள் பலிக்காது.

    கம்மியுனிசம் என்பது சிறந்த மாடல் என்றால் மக்கள் அந்த மாடலை உலகம் முழுதும் ஏன் நிராகரித்து வருகிறார்கள்? மீண்டும் மீண்டும் முதலாளிகளின் சூழ்ச்சியினால் கம்மியுனிசம் சீனாவிலும், ரசியாவிலும் தோற்றது என்று ஒரு பிம்பத்தை உருவாக்க வேண்டாம். அப்படி முதலாளிகள் சூழ்ச்சி செய்ததானால் தான் கம்மியுனிசம் தோற்றது என்றால் இந்நேரம் அந்த நாடுகளில் பெரும் புரட்சி ஏற்பட்டிருக்கும். ஆனால் நடைமுறையில் நடப்பது என்ன, கம்மியுனிசம் தோற்ற நாடுகளில் மக்கள் கம்மியுனிசம் தோற்றது குறித்து எந்த கவலையும் படுவதாக தெரியவில்லை. பெயருக்கு கம்மியுனிசம் என்று இருக்கும் நாடுகளிலும் உண்மையில் நடப்பது முதலாளித்துவம் என்று வினவு நண்பர்களே தெரிவிக்கிறார்கள்.

    கம்மியுனிசம் ஏன் மக்களிடம் செல்வாக்கு இழந்தது? முதலாளித்துவம்/ஜனநாயகத்தில் உள்ள குறைகள் என்ன?
    ஒரு குழந்தையை வளர்ப்பதை வைத்து உவமானம் கொள்வோம். குழந்தையை அதன் தந்தை முழு சுதந்திரத்துடன் என்ன வேண்டுமானாலும் செய்து கொள் என்று கண்டு கொள்ளாமல் விட்டால் என்ன ஆகும்? அந்த குழந்தை தறிகெட்டு போகும். முழுக்க முழுக்க எந்த வித கட்டுப்பாடும் இல்லாத முதலாளித்துவத்தின் மிகப்பெரிய குறை இது.

    அதே சமயம் அந்த குழந்தையின் எல்லா வித நடவடிக்கைகளிலும் பெற்றோர்கள் இந்த உடையை தான் அணிய வேண்டும், இப்படித்தான் நடக்க வேண்டும், இப்படி தான் சிரிக்க வேண்டும், இப்படி தான் பேச வேண்டும் என்று எல்லைக்கு மீறிய கட்டுபாடுகள் விதித்தால் அந்த குழந்தைக்கு அந்த பெற்றோர் மேல் பாசம் வருவதில்லை, மாறாக வெறுப்பு தான் வரும். கம்மியுனிசம் ரசியா, சீனாவில் தோற்றதற்கு இந்த அதீத கட்டுப்பபாடுகள் தான் காரணம். ஒரு கிளிக்கு கூண்டில் அடிபட்டால் நீங்கள் அதற்கு வேளாவேளைக்கு நல்ல உணவு கொடுத்தாலும் அந்த கிளிக்கு சுதந்திரமாக வெளியே திரியும் வாழ்க்கை தான் பிடிக்கும். கட்டுப்பாடுகள் என்பது ஒரு கட்டுக்குள் இருக்கும் வரை பிரச்சினை இல்லை. எல்லாவற்றிற்கும் கட்டுப்பாடு விதித்தால் மக்கள் அந்த கட்டுப்பாடுகளை உடைக்க என்ன வழி என்று தான் யோசிப்பார்கள்.

  45. திரு. கற்றது கையளவு……

    //அதே சமயம் அந்த குழந்தையின் எல்லா வித நடவடிக்கைகளிலும் பெற்றோர்கள் இந்த உடையை தான் அணிய வேண்டும், இப்படித்தான் நடக்க வேண்டும், இப்படி தான் சிரிக்க வேண்டும், இப்படி தான் பேச வேண்டும் என்று எல்லைக்கு மீறிய கட்டுபாடுகள் விதித்தால் அந்த குழந்தைக்கு அந்த பெற்றோர் மேல் பாசம் வருவதில்லை, மாறாக வெறுப்பு தான் வரும்.//

    இதை நீங்கள் ஆதரப் பூர்வமாக கூறினால் நன்றாக இருக்கும்.. சோஷலிச ரஷ்யாவில் கட்டுப்பாடுகள் இருந்தது உண்மை தான். அனால், அந்த கட்டுபாடுகள் யாருக்கானது என்பது தான் இங்கு தலையாய கேள்வி? உழைக்கும் மக்களுக்கா அல்லது டாடா, அம்பானி, மணல் கொள்ளையன் வைக்குண்ட ராஜன் மருத்துவ கொள்ளையன் அபோல்லோ பிரதாப் ரெட்டி போன்று மக்களையும், இந்நாட்டின் இயற்க்கை வளங்களையும் உறிஞ்சி கொழுக்கும் சமுக விரோதிகளுக்கா? யாருக்கு இருந்தன கட்டுப்பாடுகள்? யாருக்கு இருந்தன ஜனநாயகம்? என்பதை தெரிந்து வைத்துக் கொண்டு அதன் அடிப்படையில் ஆதாரப் பூர்வமாக பேசவும். மேற்குலக முதலாளித்துவ அறிவு ஜீவிகள் அள்ளி தெளித்துள்ள அவதூறுகளின் அடிப்படையில் பேசினால் துர்லபம் தான். எல்லோருக்கும் ஜனநாயகம் என்பது சாத்தியமில்லாத ஒன்று.

  46. ரெபெக்கா மேரி,

    தாங்கள் புத்தகங்களை படித்து விட்டு பேசுகிறீர்கள்.
    நான் அந்நாட்டு மக்களுடன் கலந்துரையாடி, விவாதித்து பின் பதிவிடுகிறேன்.

    கம்மியுனிசம் இனி அவர்களுக்கு தேவையில்லை, தற்கால நடைமுறையில் அது சாத்தியம் இல்லை என்பதே அவர்களின் நிலைப்பாடாக உள்ளது.

  47. நல்லா கருத்தா பேசுறாப்ல கற்றது கையளவு தம்பி,அவுரு கேக்குறதுல என்ன தப்பு.நல்ல சோசியலிச மாடல் ஒன்னு செஞ்சு காமிங்க தோழர்களே.நீங்க எல்லாரும் சின்னப்புள்ளங்களா இருக்குறதுனால பழைய வரலாறு தெரியாம பேசுறீங்க.வெள்ளைக்காரன் கிட்ட காந்தி தாத்தா சொதந்திரம் கேட்டப்ப அவனும் இந்திய மாடல் ஒன்னு காமிக்க சொன்னான். ஒன்னே காந்தி தாத்தாவும் நேருவும் டிருப்ளிகான் பைகிராப்ட்ஸ் ரோட்ல ஒரு வீட்டை புட்சு இந்து,முஸ்லிம்.கிர்ச்டின்,சிங்கு,தமிழ்.தெலுங்கு,இந்தி ன்னு எல்லா பாசையும் பேசுறவங்கள அங்க குட்த்தனம் வச்சாங்க.அந்த வீடு இன்னிக்கும் அங்கேதா இருக்கு.அதுக்கு பேரு காந்தி பீக்.போய் பாக்கலாம் நீங்க.அங்க எல்லாரும் ஒத்துமையா குடித்தனம் பண்ணுறத மவுண்ட் பட்டனையும் அவுரு சம்சாரத்தையும் இட்னு வந்து நேரு காமிச்சாப்புல.அதுக்கப்புறம்தான் வெள்ளைக்காரனுக்கு நம்ம மேல நம்பிக்கை வந்து சொதந்திரம் குட்தானாம். அதைத்தான் பின்னால சிவாஜி கணேசன் பாரத விலாஸ்ன்னு படமா எடுத்தாரு ..நா சொல்றத நம்பாதவங்க அந்த படத்தை பாருங்க.தன்னால நம்புவீங்க.

  48. இடது சாரிகள்: இடது கையில் கழுவி இடது கையில் சாப்பிடுபவர்கள் என்று நினைக்கத் தோன்றுகிறது. எதையும் எதிர்மறையாக எண்ணியே பழக்கப்பட்டுவிட்டீர்கள்.

    இறந்த காலத்தைத் தீர்மானிக்க முடியாது. எதிர்காலத்தை தீர்மானிக்க முடியும். கலாம் அதைத்தான் முயற்சி செய்தார். தன் கருத்துக்களை இளைஞர்களிடமும், குழந்தைகளிடமும் முடிந்த அளவு கொண்டு சேர்த்தார். ஊழலில் திழைத்த தெள்ளவாரிகளை திருத்த நினைப்பது நேர விரயம் தானே தவிர ஒரு பிரயோஜனமும் கிடையாது என்பதை நன்கு தெரிந்தவர் கலாம்.

    நீங்களும் எதிர்மறை எண்ணத்தைத் தவிர்த்து உங்கள் கருத்துக்களை குழந்தைகளிடம் பகிருங்கள்.

  49. அப்துல் கலாம் மனித குலத்திற்கு ஆக்கபூர்வர்வமாக எதையும் செய்யவில்லை மாறாரக வெடிகுண்டு செய்தார் அதை எடுத்து செல்லும் வாகனம் தயாரித்தார் பயங்கரவாதிகளும் இதைதான் செய்கின்றனர் வித்தியாசம் இவர் அரசு சார்பில் செய்தார் அவ்வளவே. கலாம் விமர்சனம் செய்யப்படுவதற்கு காரணம் அவர் ஆயுதம் செய்ததோ அல்லது அதை சுமந்து செல்லும் வாகனம் தயாரித்ததோ அல்ல மாறார அவர் குடியரசு தலைவராக செயல்பாடுகள் பற்றியே கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. மனிட குலத்தில் அழிவுக்கான கருவியையும் ஆயுதத்தையும் செய்ய பணிக்கப்பட்ட ஒருவரிடம் மானிட குலம் அழிவை பற்றி கவலைப்படவேண்டிய பொறுப்பு ஒப்படைக்கப்பட்டதால் அவர் அந்த பணியை செய்ய வேண்டியது செய்யாத காரணத்திற்ககாக விமர்சனம் செய்யப்படுகிறர். கேள்வி கேட்க வேண்டிய இடத்தில் இருந்து கொண்டு வாளாதிருந்தது மனித தன்மையாற்ற செயல்.

  50. நம் நினைவு இறக்கும்வரை கலாம் ஐயா நம்முடன் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார்.

Leave a Reply to தென்றல் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க