Saturday, May 10, 2025
முகப்புகளச்செய்திகள்மக்கள் அதிகாரம்விழுப்புரத்தில் மக்கள் அதிகாரம் வெள்ள நிவாரணம்

விழுப்புரத்தில் மக்கள் அதிகாரம் வெள்ள நிவாரணம்

-

விழுப்புரம் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை இங்குள்ள அரசு நிர்வாகம் திட்டமிட்டே மூடி மறைக்கின்றனர். இங்கு எந்த பாதிப்பும் இல்லை என்றே அப்பட்டமாக நடிக்கிறார்கள்.

grp street (11)மக்கள் அதிகாரம் அமைப்பின் தோழர்கள் பல பகுதிகளில் குவிந்து ஆய்வு செய்தனர். விழுப்புரம் நகரை சுற்றியுள்ள பல பகுதிகளில் மக்களுக்கு ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு, அதனால் அவர்கள் படும் துயரங்களை தொகுத்து குறைந்த பட்ச அடிப்படை தேவைகளை கூட அவர்களால் பூர்த்தி செய்துகொள்ள முடியாமல் இருப்பதை உணர்ந்து நிவாரணப் பணிகளை செய்ய ஆரம்பித்துள்ளனர்.

மக்களுக்கு விநியோகம் செய்வதற்கு தேவையான அனைத்து நிவாரணப் பொருட்களையும் கோத்தகிரி, கோவை, ஈரோடு, பகுதி தோழர்கள் அங்குள்ள உழைக்கும் மக்கள், சமூக ஆர்வலர்களிடம் சேகரித்து தந்தார்கள்.

1. தாமரைக்குளம், ஊரல்கரைமேடு

விழுப்புரம் நகரின் ஒரு முனையில் உள்ள தாமரைக்குளம், ஊரல்கரைமேடு பகுதிகளில் பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட மக்கள் வசிக்கிறார்கள். இவர்களுக்கு மிக அருகிலேயே அ.தி.மு.க எம்.பி லக்ஷ்மணன் வசிக்கிறார். அனால் எந்த உதவியும் இல்லை. மக்களால் இன்னும் சரியாக வீடுகளுக்கு வரமுடியவில்லை. பலரது வீடுகளில் முட்டியளவு தண்ணீர் தேங்கி உள்ளது. இதுவரை அரசின் எனது ஒரு உறுப்பும் அவர்களுக்கு எந்த வித அடிப்படை வசதிகளையும் செய்து தர முன்வரவில்லை.

Jpeg

இங்கு வசிக்கக்கூடிய மக்களில் மிக அதிகம் பாதிக்கப்பட்ட 55 குடும்பங்களை தேர்வு செய்து 08-12-2015 செவ்வாய் அன்று காலை பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான போர்வை, நைட்டி, துண்டு, புடவை, சிறுவர்களுக்கான ஆடைகள், அரிசி, பருப்பு, தண்ணீர், சர்க்கரை, எண்ணெய், பிரட், பிஸ்கட், நாப்கின், காய்கறிகள், குழந்தைகளுக்கு தேவையான பால்புட்டி, பால் பவுடர், ஹக்கீஸ், இவை அனைத்தையும் உள்ளடக்கி மக்கள் அதிகாரம் தோழர்கள் மக்களிடம் வீடு வீடாகச் சென்று அவர்களிடம் விநியோகித்தனர். இவர்களுடன் நகரில் செயல்படும் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி தோழர்களும் இணைந்து நிவாரணப்பணிகளில் ஈடுபட்டனர்.

நம்முடைய விநியோகத்திற்கு பிறகு மக்கள் சொன்னது…

stalin nagar- indira nagar (7)“முதல் முறையாக எங்களுக்கு உதவி செய்தது நீங்கள்தான். அதுவும் மிகச்சரியாக மக்களுக்குள் சண்டை வராமல் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் வீடு வீடாக சென்று சேர்த்தீர்கள். இதே இந்த பொருள அரசாங்கம் குடுத்திருந்தா இங்க சண்டைதான் நடந்திருக்கும். பொருளெல்லாம் வீணாப்போயிருக்கும். இதுல பாதிய அதிகாரிங்க, அரசியல்வாதிங்க திருடி இருப்பானுங்க. வயசுல சின்னப் பசங்களா இருந்தாலும் கரெக்டா செஞ்சீங்க. உங்கள மாதிரி போராடுற கட்சி தான் எங்களுக்கு வேணும். இவனுங்கலாம் வேஸ்ட் பா.. உங்க அமைப்புல எங்களையும் சேத்துக்குங்க. எங்க புள்ளைங்களுக்கு நல்லதா சொல்லிகொடுங்க”

2. ஸ்டாலின் நகர், இந்திரா நகர்.

விழுப்புரம் நகரின் இன்னொரு திசையில் மாம்பழப்பட்டு-திருக்கோவிலூர் சாலையில் அமைந்துள்ள இந்த பகுதியில் இருநூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கிறார்கள். சாலை வசதி உள்ளிட்ட எந்த வித அடிப்படை வசதிகளும் அந்த மக்களுக்கு இல்லை. இவர்கள் சில வருடங்களுக்கு முன்பு நகரின் மையப்பகுதியில் வசித்தவர்கள். மாவட்ட மருத்துவமனையின் விரிவாக்கதிற்காக நகரின் வெளியில் நயவஞ்சகமாக தூக்கி எறியப்பட்ட ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்கள் இப்போது மழை வெள்ள துயரத்தில் தத்தளிக்கிறார்கள்.

இங்கு நூற்று அறுபது வீடுகளுக்கு மழை வெள்ள பாதிப்பு இருப்பதை கண்டறிந்து இவர்கள் அனைவருக்கும் வீடு வீடாக சென்று மேலே பட்டியிலப்பட்ட பொருட்களை 08-12-2015 செவ்வாய் அன்று மாலை விநியோகித்தோம். அந்த பகுதியில் இருந்த மாணவர்களும், இளைஞர்களும் கணக்கெடுத்ததில் இருந்து இறுதி வரை நம்முடன் இருந்து ஒத்துழைத்தனர். தேநீர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Jpeg

“இது வரைக்கும் ஒரு நாய் கூட இந்த பக்கம் வந்து எட்டி பாக்கலப்பா. நல்ல வேள நீங்களாச்சும் வந்தீங்களே. மனுசங்க மேல உள்ள பற்றே இல்லாம போச்சோன்னு நெனச்சுட்டோம்பா” என்று ஆதங்கப்பட்ட மக்கள்… அரசாங்கம் என்று நாம முடிப்பதற்குள் கடுங்கோபத்தில் அச்சிட முடியாத வார்த்தைகளால் ஜெயலலிதாவையும், மற்ற ஒட்டுக் கட்சி தலைவர்களையும், அதிகாரிகளையும் வறுத்தெடுத்தனர். “இனிமே எவனாவது ஒட்டு கேட்டு இந்த பக்கம் வரட்டும் பீயையும், சாணியையும் கரைச்சு தொடப்பத்துல முக்கி அடிக்கறோம். எவன் இந்த பக்கம் வரான்னு பார்ப்போம்” என்று திட்டி தீர்த்தார்கள்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

3. ஜி.ஆர் .பி தெரு

grp street (4)நகரின் மையப்பகுதியில் உள்ள இந்த பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் நூறு வீடுகளை தேர்வு செய்து மேலே பட்டியிலப்பட்ட பொருட்களை 09-12-2015 புதன் அன்று மதியம் பகுதி இளைஞர்கள் துணையோடு விநியோகித்தோம்.

இடையில் குறுக்கிட்ட அந்த பகுதியை சேர்ந்த அமைப்பின் மேல் வெறுப்பில் இருக்கும் பா.ஜ.க நபர் ஒருவர் அனைத்து பகுதியிலும் கொடுக்க வேண்டியது தானே என்று ‘அரசியல்’ செய்யப் பார்த்தார். பதிலடியாக நம் தோழர்கள் “நீங்க தானே இந்தியாவ ஆள்றீங்க. நீங்க மொதல்ல களத்துல எறங்கி செய்ங்க” என்று அம்பலப்படுத்தியதும் சட்டென்று கிளம்பிவிட்டார்.

“காலையில் தான் இந்த புள்ளைங்க கணக்கெடுத்தாங்க.. எங்களால இத நம்பவே முடியல. மத்யானமே பொருள கொண்டாந்து கொடுக்குறாங்க. அரசாங்கம் தெண்ட கருமாந்திரத்திற்கு இருக்கு. இதுவரையிலும் ஒருத்தவன் கூட வந்து செத்தோம இருக்கோமான்னு கூட பாக்கல” என்று கோபத்துடன் சொன்னார்கள்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

இவண்.

மக்கள் அதிகாரம்,
விழுப்புரம்.
தொடர்புக்கு: 99441 17320.

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க