privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஐரோப்பாஅவர்களுக்குத் தேவை அடிமைகள் !

அவர்களுக்குத் தேவை அடிமைகள் !

-

இங்கிலாந்தில் வாழும் இசுலாமியர்களில் 5 ல் ஒருவர் ஜிகாதிகள் மீது அனுதாபம் கொண்டுள்ளனர்
இங்கிலாந்தில் வாழும் இசுலாமியர்களில் 5 ல் ஒருவர் ஜிகாதிகள் மீது அனுதாபம் கொண்டுள்ளனர்

அகதிகள் வருகையினால் தீவிரவாத அச்சுறுத்தல் அதிகரிப்பதாகவும், தங்களுடைய வேலைகளை பறிப்பதால் பொருளாதாரச்சுமை ஏற்படுவதாகவும் ஐரோப்பியர்கள் கருதுகிறார்களாம். இப்படி ஒரு கருத்துக் கணிப்பு கூறுகிறது. பெரும்பான்மையான ஐரோப்பிய நாடுகளில் 50 விழுக்காட்டிற்கும் அதிகமான மக்கள் அகதிகளுடைய வருகையால்  தீவிரவாத சாத்தியக்கூறுகள் அதிகரித்து இருப்பதாகவும் அதில் கூறியுள்ளனர்.

ஸ்ழழாத்வெஜ்(Szazadveg ) என்ற நிறுவனம் நடத்திய புராஜெக்ட் 28  என்ற மற்றொரு கருத்துக்கணிப்பு அடுத்தைந்து ஆண்டுகளில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் ஐரோப்பாவிற்கு கடுமையான அச்சுறுத்தலாக இருப்பார்கள் என 91 விழுக்காடு ஐரோப்பிய மக்கள் கருதுவதாக கூறுகிறது.

இங்கிலாந்தின் சன் பத்திரிக்கை 2015 ம் ஆண்டு நவம்பரில் தனது முதல் பக்கத்தில் “இங்கிலாந்தில் வாழும் இசுலாமியர்களில் 5 ல் ஒருவர் ஜிகாதிகள் மீது அனுதாபம் கொண்டுள்ளனர்” என்று செய்தி வெளியிட்டு இருந்தது.

அகதிகளுக்கு எதிராக கருத்துக்கள் இப்படி வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் அதற்கு நேர்மாறாக ஐரோப்பிய முதலாளித்துவம் தீவிரமாக அகதிகளை வரவேற்கிறது. இதற்கு காரணம் அகதிகள் மீதான அன்பு அல்ல மாறாக அகதிகளைக் கொண்டு ஐரோப்பாவின் உழைப்புச் சந்தைக்கான பற்றாக்குறையைத் தீர்ப்பதுதான்.

மூப்படைதல் 21 ம் நூற்றாண்டு ஐரோப்பாவின் ஒரு மிகப்பெரிய சமூகப்பொருளாதார சாவாலாகும் என்று ஐரோப்பிய ஆணைக்குழு தன்னுடைய இணையப்பக்கத்தில் கூறியிருக்கிறது. கடைசியாக வெளிவந்த ஐரோப்பிய நாட்டுமக்களின் வயதைப் பற்றிய ஒருப் புள்ளிவிவர அறிக்கை, 2013-ம் ஆண்டு 813 இலட்சமாக இருந்த ஜெர்மனியின் மக்கள்தொகை 2060- ல் 708 இலட்சமாக குறைந்துவிடுமென்று எச்சரித்து இருக்கிறது.

 ஒட்டுமொத்தமாக அகதிகளை அங்கீகரிப்பதில் காலத்தாமதம் செய்துகொண்டிருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று எச்சரிக்கையும் விடுத்திருந்தன.
ஒட்டுமொத்தமாக அகதிகளை அங்கீகரிப்பதில் காலத்தாமதம் செய்துகொண்டிருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று எச்சரிக்கையும் விடுத்திருந்தன.

2025 ஆண்டிற்குள் 20 விழுக்காடுகளுக்கும் அதிகமான ஐரோப்பிய மக்கள் 65 வயதை கடந்து இருப்பார்கள். இதன் காரணமாக துப்புரவு மற்றும் சமூகசேவைகளில் ஈடுபடும் ஐரோப்பியத் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைந்துவிடும். இதை எப்படி ஈடுகட்டுவது?

அடுத்தடுத்த ஆண்டுகளில் 5 லட்சம் அகதிகளை வரவேற்கத் தயாராக இருப்பதாக ஜெர்மனியின் துணையதிபர் சிக்மார் காப்ரியேல்(Sigmar Gabriel) 2015-ல் கூறியிருந்தார். 2014-ல் 2 லட்சம் அகதிகளை மட்டுமே எதிர்பார்த்து இருந்த ஜேர்மனி 2015-ல் கிட்டத்தட்ட 8 லட்சம் அகதிகளை வரவேற்கத் தயாராக இருந்தது.

அகதிகளின் வருகை, ஜெர்மனி மக்களுக்கான நிதி மற்றும் சமூகநலன்களில் தற்காலிகமாக சிலப்பிரச்சினைகளைத் தோற்றுவித்தாலும் நீண்டகால நோக்கில் ஜெர்மனியின் பொருளாதாரத்திற்கு நன்மையையே விளைவிக்கும் என்று சிக்மார் காப்ரியேல் வலியுறுத்தி இருந்தார்.

ஜெர்மனியின் மிகப்பெரிய நிறுவனங்களான டாய்ச்சி அஞ்சல் மற்றும் டைம்லேர்(Automobile) உடனடியாக அகதிகளை உழைப்புச்சந்தைக்கு அனுப்ப தொழிலாளர் சட்டங்கள் அனுமதிக்கவேண்டும் என வலியுறுத்தியிருந்தன.

chart2ஜெர்மன் மொழியை கற்றுக்கொள்வதற்காக கிட்டத்தட்ட 2.3 பில்லியன் டாலர்கள் நிதியொதுக்க ஜெர்மன் அரசு திட்டமிட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட அகதிகளை விரைவாக உழைப்புச்சந்தைக்கு அனுப்பி மொழி மற்றும் திறன் பயிற்சியில் ஈடுபடுத்த வேண்டும் என்றும் ஜெர்மானிய முதலாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு(BDA) தங்களது அறிக்கையில் கூறியிருக்கிறது. ஒட்டுமொத்தமாக அகதிகளை அங்கீகரிப்பதில் காலத்தாமதம் செய்துகொண்டிருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று எச்சரிக்கையும் விடுத்திருந்தன.

அகதிகள் ஒரு பொருளாதாரச் சுமையல்ல மாறாக அவர்கள் ஒரு மனிதவளம் மற்றும் ஐரோப்பாவிற்கு அகதிகள் தேவைப்படுகிறார்கள் என்று கருத்து தெரிவித்து இருக்கிறார் பொருளாதார மற்றும் நிதி விவகாரங்களுக்கான ஐரோப்பிய ஆணையரான பியர் மாஸ்கோவிசி (Pierre Moscovici).

அகதிகளின் வருகை தங்களது பொருளாதாரத்திற்கு ஒரு நல்வாய்ப்பாக இருக்கும் என்று ஐரோப்பிய முதலாளிகள் கருதும் அதேவேளையில் ஐரோப்பிய மக்களின் கருத்து அகதிகளின் வருகையால் ஏற்படும் சமூகபொருளாதார மற்றும் கலாச்சார சவால்களை எதிர்நோக்குவது என்ற அடிப்படையில் பிரிந்து இருக்கிறது. வேறு வகையில் சொன்னால் ஐரோப்பிய மக்கள் கணிசமான அளவில் இனவெறி, நிறவெறி செல்வாக்கில் இருக்கின்றனர். இதன் அடிப்படையில் தான் மேற்சொன்ன கருத்துகணிப்புகளும் செய்திகளும் வெளியிடப்பட்டுள்ளன.

ஒருபுறம் முதலாளிகள் தமது உழைப்புச்சந்தைக்கு மலிவான கூலியில் ஆள் கிடைப்பதால் தமது லாபத்தை அதிகரிக்கலாம் என்று அகதிகளை ஆதரிக்கின்றனர். மறுபுறம் ஊடகங்கள்  தமது சமூகப் பொருளாதாரம் மற்றும் கலாச்சார அடையாளங்கள் அகதிகளால் பாதிக்கப்படும் என்று தமது மக்களை பயபீதியில் ஆழ்த்துகின்றன.

அகதிகள் ஒரு பொருளாதாரச் சுமையல்ல மாறாக அவர்கள் ஒரு மனிதவளம்
அகதிகள் ஒரு பொருளாதாரச் சுமையல்ல மாறாக அவர்கள் ஒரு மனிதவளம்

சிரியா, ஈரான், லிபியா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த அகதிகள் தங்களுடைய பொருளாதாரத் தேவைகளுக்காக ஐரோப்பிய கண்டத்திற்கு புலம்பெயருவதில்லை. அந்நாடுகளில் அமரிக்க-ஐரோப்பிய வல்லாதிக்கங்கள் செய்யும் ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சிகள் மற்றும் அதன் உடனடி விளைவுகளான உள்நாட்டுப்போர்கள் மற்றும் கலவரங்கள், தீவிரவாத அமைப்புகள் மற்றும் இவற்றின் தொடர்விளைவுகளான சமூகப்பொருளாதாரப் பிரச்சினைகளின் பொருட்டே தூரத்தேசங்களுக்குத் தூக்கி எறியப்படுகின்றனர்.

ஐ.எஸ் மற்றும் அல்கொய்தா தீவிரவாத அமைப்புகள் அமெரிக்கா ஈன்றெடுத்தப் பிள்ளைகள்தான் என்று இன்று அமெரிக்கர்களே மறுக்க முடியாது. சதாம் உசேன் காலத்தில் அமெரிக்காவிற்கு அச்சுறுத்தலாக இல்லாமலிருந்தும் பொய் பேசி சதி செய்து ஈராக்கை அமெரிக்கா ஆக்கிரமித்தது. அதற்கு ஐரோப்பிய வல்லரசுகளும் துணைநின்றன.

வளைகுடாப் பகுதியில் இருக்கும் அளப்பரிய எண்ணெய் வளத்திற்காகவும் அப்பகுதியில் தமது வல்லாதிக்கத்தை நிலைநாட்டவும் அந்நாட்டை அமெரிக்கா ஆக்கிரமித்தது முதல் அதன் தொடர் விளைவுகளை ஈராக்கிய மக்கள் இன்றும் அனுபவிதித்து வருகிறார்கள்.

தீவிரவாதத்திற்கு எதிரான போர் என்று ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்தது, ஈரான் மற்றும் சிரிய நாடுகளின் அரசுகளை கவிழ்க்க அங்கிருக்கும் தீவிரவாத குழுக்களுக்கு சவூதி அரேபியா வழியாக அமெரிக்கா பணம் மற்றும் ஆயுத பட்டுவாடா செய்வதும் அம்பலபடுத்தப்பட்ட உண்மையாகும்.

இதனால் அழித்தொழிக்கப்பட்ட மக்களில் எஞ்சியவர்கள் அகதிகளாக புலம்பெயருவதை தவிர வேறுவழியில்லை. இத்தொடர் விளைவுகளை தான் ஊடகங்கள் உள்நாட்டுப்பிரச்சினை என்று சடுதியில் முடித்துக்கொள்கின்றன. சவூதி அரேபியா உள்ளிட்ட பணக்கார வளைகுடாநாடுகள் தமது சொந்த இசுலாமிய மக்கள் ஒருவரைக் கூட அகதியாக ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறிவிட்டது குறிப்பிடத்தக்கது.

அழித்தொழிக்கப்பட்ட மக்களில் எஞ்சியவர்கள் அகதிகளாக புலம்பெயருவதை தவிர வேறுவழியில்லை.
அழித்தொழிக்கப்பட்ட மக்களில் எஞ்சியவர்கள் அகதிகளாக புலம்பெயருவதை தவிர வேறுவழியில்லை.

இதன் காரணமாக அகதிகளின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கடுமையான அளவிற்கு கூடியுள்ளதாக ஐ.நாவின் அகதிகள் நிறுவனம் (UNHCR) கூறியுள்ளது. ஏகாதிபத்தியங்களால் உலகஅமைதிக்காக 1950-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்நிறுவனத்தின் வரலாற்றில் முதன்முறையாக 2015-ம் ஆண்டில் 6 கோடி மக்கள் அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளார்கள்.

இப்படி தாய்நாட்டில் இருந்து வேறுநாடுகளுக்குத் துரத்தியடிக்கப்பட்ட மக்களில் கணிசமானோர் மத்தியதரைக் கடலின் ஆழத்தில் புதைக்கப்பட்டுள்ளனர். எஞ்சியவர்களில் ஒருபகுதியினர் உணவு, உடை, உறைவிடம், மருந்து கிடைக்காமல் மாண்டுபோயுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

இந்தியாவில் வடமாநிலங்களில் மறுகாலனியாக்கம் மற்றும் பார்ப்பனியக் கொடுங்கோன்மையால் துரத்தப்படும் மக்கள், காட்டுவேட்டையினால் நசுக்கப்படும் பழங்குடிமக்கள், வடகிழக்கு மாநிலங்களில் இந்திய இராணுவத்தால் நிற்கதிக்கு ஆளாகும் மக்கள் என பல்லாயிரக்கணக்கான இந்திய மக்கள் உள்நாட்டு அகதிகளாகச் சிதறிக் குறைந்தகூலிக்கு உடலுழைப்பு வேலைகளில் ஈடுபடுவதை முதலாளித்துவம் இன்முகத்துடன் வரவேற்கிறது.

இனவெறியர்களோ வடஇந்தியர்கள் தமிழனின் வேலைவாய்ப்பை பறிக்கிறார்கள் என்றும் அவர்களின் வருகைக்கு பின்தான் கொலை, கொள்ளை, கற்பழிப்பு அதிகமாக நடக்கிறது என்றும் இனவெறியைத் தூண்டுகிறார்கள்.

அகதிகள் பிறப்பதில்லை உருவாக்கப்படுகிறார்கள். தீவிரவாதிகளும் அப்படிதான். இருவரும் ஏகாதிபத்தியங்களின் ஒடுக்குமுறையால் பிறக்கிறார்கள். முதலாளித்துவத்தின் உச்சநிலை ஏகாதிபத்தியம் என்றார் தோழர் லெனின். ஏகாதிபத்தியத்தின் உச்ச நிலை இது வரை மனிதகுலம் கண்டறியா கேட்டறியா எண்ணிக்கையில் அகதிகளை உருவாக்கியுள்ளது எனில் மனிதகுலம் தன் விடுதலையை அடைய ஏகாதிபத்தியத்தை அழிப்பதைத் தவிர வேறுவழியில்லை.

– சுந்தரம்

மேலும் படிக்க:
Over half of Europeans link terrorism to refugee influx – PEW survey
91% of EU citizens believe ISIS will pose threat to Europe in next 5yrs – poll
Does the Sun’s claim about UK Muslims’ sympathy for jihadis stack up?
Migrants could help solve Europe’s aging problem
Germany Works to Get Migrants Jobs
SAUDI ARABIA REFUSES TO TAKE EVEN A SINGLE SYRIAN REFUGEE
Global forced displacement hits record high
UNHCR: 2,500 refugees drowned on way to Europe in 2016