privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்ஊழல்வருகிறது மோடியின் டிஜிட்டல் பாசிசம் !

வருகிறது மோடியின் டிஜிட்டல் பாசிசம் !

-

மோடியின் நோக்கம் கருப்புப் பண ஒழிப்பு  அல்ல – தோழர் மருதையன் உரை – பாகம் 4 (இறுதி)

ட்டாய வரி விதிப்பு, கண்காணிப்பு என்பது மட்டுமல்ல மக்களுடைய சேமிப்பு, சம்பளம், சிறு வணிகர்களிடம் புழங்கும் பணம் ஆகிய அனைத்தையும்  வங்கிக்குள் கொண்டுவருவதுதான் இவர்களது நோக்கம். பணப் பொருளாதாரத்திலிருந்து வங்கிப் பொருளாதாரத்துக்கு மாற்றுவதன் மூலம் மக்களுடைய பணம் வங்கிக்கு செல்கிறது. அப்புறம், வங்கிப் பணம் மல்லையாக்களின் பணமாகிவிடும்.

மல்லையாவை மட்டும்தான் உங்களுக்குத் தெரியும். 2013 க்கும் 15 க்கும் இடையில் மட்டும் 29 அரசு வங்கிகள் 1,20,000 கோடி வாராக்கடனை தள்ளுபடி செய்திருக்கின்றன. அதானி, அம்பானி போன்ற முதலாளிகள் கடனுக்கு வட்டி கூடக் கட்டுவதில்லை. தொடர்ந்து வட்டி கட்டவில்லை என்றால் அதை வாராக் கடன் என்று கருத வேண்டும். அதனை தவிர்ப்பதற்காக, மீண்டும் அதே முதலாளிக்கு மேலும் கடன் கொடுத்து, அந்த கடன் தொகையிலிருந்தே வட்டியை வரவு வைத்திருக்கின்றன அரசுடைமை வங்கிகள்.

இப்படி வாராக்கடனை வரப்போகிற கடன் போல பொய்க்கணக்கு காட்டுகிறார்கள் வங்கி அதிகாரிகள். நீங்கள் பன்றிக்கு லிப்ஸ்டிக் போட்டுவிட்டால் அது இளவரசி ஆகிவிடுமா என்று அரசு வங்கிகளின் தலைவர்களைக் கேட்டார் ரகுராம் ராஜன் இப்படித்தான் 2015 ஆம் ஆண்டு இறுதியில் வாராக்கடன் 4 இலட்சம் கோடி என்று வங்கிகள் பொய்க்கணக்கு காட்டினார்கள் அதனைத் துருவி ஆராய்ந்தவுடன், மூன்றே மாதங்களில் வாராக்கடன் 6 இலட்சம் கோடி என்ற கணக்கு வெளியே வந்தது.

பி.என்.பி பாரிபாஸ் என்ற நிதித்துறை ஆய்வு நிறுவனத்தின் அறிக்கை கடந்த ஏப்ரல் மாதம் எகனாமிக் டைம்ஸ் இல் வெளிவந்திருக்கிறது. இந்திய கார்ப்பரேட் முதலாளிகளுக்கு அரசு வங்கிகள் கொடுத்திருக்கும் கடன் 75 இலட்சம் கோடி. அவற்றில் 12 இலட்சம் கோடி கோவிந்தா, வாராக்கடன் என்கிறது அந்த அறிக்கை.

இதில் இந்தியாதான் ஆசியாவிலேயே முதலிடம். வாராக்கடன் கொரியாவில் 5.8, சீனா 6.66%, தாய்லாந்து 2.4%, இந்தியா 16.1%. அனில் அம்பானிக்கு வங்கிகள் கொடுத்திருக்கும் கடன் 1,21,000 கோடி. அதற்கு ஆண்டு வட்டி 8299 கோடி. ஆனால் அனில் அம்பானியுடைய நிறுவனங்களின் ஒரு ஆண்டுக்கான விற்றுமுதலே வெறும் 9848 கோடிதான். இப்படி ஒரு சிறு தொழிலதிபரோ வியாபாரியோ கடன் வாங்க முடியுமா? விவசாயிக்கு கடன் கிடைக்குமா? ஒரு பத்தாயிரம் ரூபாய் வங்கிக் கடன் வாங்க நாம் என்ன பாடு படவேண்டும்? வாராக்கடன் என்ற பெயரில் பொதுத்துறை வங்கிகளை கொள்ளையடித்த முதலாளிகளின் பெயரைக்கூட வெளியிட முடியாது என்று சொல்லும் மோடிதான் கருப்பு பண முதலைகளை ஒழிக்கப்போகிறாராம்.

பணப்பரிவர்த்தனையை நிறுத்துங்கள், வங்கிப் பரிவர்த்தனைக்கு வாருங்கள் என்ற அழைப்பின் பொருள், உங்கள் பணத்தை அம்பானி, அதானியிடம் கொடுத்து வையுங்கள், பத்திரமாக இருக்கும் என்பதுதான். இதோ, கீழே கிடக்கிற பணம் உங்களுடையதா பாருங்க என்று சொல்லி உங்களைக் குனிய வைத்து பிக் பாக்கெட் அடிப்பார்கள் திருச்சி ராம்ஜி நகர் திருடர்கள். இதோ, உங்களுக்கு சேரவேண்டிய கருப்பு பணத்தை மீட்டுக் கொடுக்கப் போகிறேன் என்று உங்களுக்கு ஆசை காட்டி உங்கள் பணத்தை பிடுங்கி பனியா முதலாளிகளிடம் கொடுக்கிறார் மோடி.இதுதான் உண்மை.

பாகிஸ்தான் புழக்கத்தில் விட்டிருக்கும் கள்ள நோட்டுகளின் மதிப்பு 400 கோடி ரூபாய் என்கிறது ரிசர்வ் வங்கி. 2500 கோடி என்கிறது இன்டெலிஜென்ஸ் பீரோ கார்ப்பரேட் முதலாளிகள் வங்கிகளுக்கு போட்டிருக்கும் நாமத்தின் மதிப்போ– 12 லட்சம் கோடி. 400 கோடிக்காக தேசத்தையே தெருவில் நிறுத்தியிருக்கும் மோடி 12 லட்சம் கோடிக்காக அம்பானிகளை தெருவில் நிறுத்தி விசாரிப்பாரா?

இந்த உண்மையை எல்லாம் இருட்டடிப்பு செய்து விட்டு மோடிக்கு வக்காலத்து வாங்குகிறார்கள் மோடியின் அறிவுத்துறை கூலிப்படையான ஊடகங்கள் மோடியால் கருப்பு பணத்தை முற்றிலுமாக ஒழிக்க முடியாமல் போகலாம் கருப்பு பண பேர்வழிகளுக்கு கொஞ்சமாவது நெருக்கடி வந்திருக்கிறதா இல்லையா என்று சாமர்த்தியமாக கேள்வி எழுப்புகிறார்கள்.

ink cartoon post
ஓவியம் : முகிலன்

ஐயா, கொசு உற்பத்தியாகும் பண்ணை  – கூவம் ஆறு கருப்பு பணம் உற்பத்தியாகும் இடம் கார்ப்பரேட் முதலாளி வர்க்கம், ஊழல் அதிகாரவர்க்கம் அந்த கூவத்தை பாதுகாக்கும் மோடி, வீதி வீதியாக கொசுவுக்கு புகை போடுகிறார் இந்த மோசடியை அம்பலப்படுத்துவதா, அல்லது நாலைந்து கொசு செத்தாலும் நல்லதுதானே என்று பாராட்டுவதா?
பேராசிரியர். பிரபாத் பட்நாயக் ஒரு கேள்வி எழுப்பியிருக்கிறார் ஊரில் ஒரு குற்றம் நடந்தால் போலீசார் குற்றத்தை புலனாய்வு செய்து குற்றவாளியை கண்டுபிடிக்க வேண்டுமா? அல்லது தெருவில் உள்ள மக்களையெல்லாம் ஸ்டேசனில் வைத்து அடித்து விசாரிக்க வேண்டுமா? எது கருப்பு பண குற்றவாளிகளை கண்டு பிடிக்க வேண்டிய அணுகுமுறை என்று கேட்கிறார்.

ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள், வருமான வரித்துறை, விற்பனை வரித்துறை, ஆர்.டி.ஓ ஆபீஸ் அதிகாரிகள், சுங்கத்துறை, கலால் துறை அதிகாரிகள், தனியார் கல்வி நிறுவனங்கள், கார்ப்பரேட் மருத்துவமனைகள் – எங்கெல்லாம் கருப்பு பணம் இருக்கும் என்று நமக்கு தெரிகிறது. ஆனால் பிரதமருக்கு தெரியவில்லையாம். நம்ப முடிகிறதா? போகட்டும். திருப்பூர் கன்டெயினர் பிடிபட்டதே அந்தப் பணத்தின் கதை என்ன ? அன்புநாதன் கோடவுனில் கைப்பற்றப்பட்ட பணமென்ன உஜாலா வெள்ளையா? போலி மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி அளித்து 2500 கோடி பணத்தை கூரை வரை அடுக்கி வைத்திருந்த கேதன் தேசாய் என்பவன், அவன் மீது போடப்பட்ட வழக்கு இன்னமும் நிலுவையில் இருக்கிறது. அந்த உத்தமனை உலக மருத்துவ கவுன்சில் தலைவராக சிபாரிசு செய்யவில்லையா திருவாளர் மோடியின் குஜராத் அரசு. இந்த நாட்டில் கருப்பு பண பேர்வழிகளுக்காகவே ஒரு கட்சி உண்டென்றால் அது black money janata party தான். சேட்டுகளின் தாய்கழகமல்லவா பாரதிய ஜனதா சேட்டு என்றாலே, நம்பர் 2 வணிகம் என்பது நாடறிந்த உண்மையல்லவா?

பணப்பொருளாதாரம் வேண்டாம். வங்கிக்கு வா, வங்கிக்கு வா ன்னு கூப்பிட்டும் மக்கள் வரவில்லை. அவர்களை வரவழைப்பது எப்படி? ஆயிரம், ஐநூறு செல்லாது என்று அறிவித்தால் வங்கியின் வாசலில் வந்து நின்றுதானே ஆகவேண்டும்? அதைத்தான் செய்திருக்கிறார் மோடி. இதோ, சொந்தப் பணத்தை மாற்றுவதற்கு பிச்சைக்காரர்களைப் போல வங்கிகளின் வாசலில் காத்து நிற்கிறார்கள் மக்கள். தொழில்கள் அழிகின்றன. சிறு வணிகம் அழிகிறது. நோயாளிகள் சாகிறார்கள். நாடே நிலைகுலைந்திருக்கிறது. இது நிர்வாகத் திறமையின்மை என்று சிலர் மோடி அரசை விமரிசிக்கிறார்கள்.

இது நிர்வாகத் திறமையின்மையா, திட்டமிட்ட சதியா? முட்டாள்தனமா, முட்டாள்தனம் போலத் தெரிகின்ற அயோக்கியத்தனமா? புழக்கத்தில் இருக்கின்ற பணத்தில் 85% ஐ செல்லாது என்று அறிவித்தால் நாட்டில் என்ன நடக்கும் என்பதை நிர்வாகம் தெரியாத அடி முட்டாள் கூடப் புரிந்து கொள்ள முடியும். முகேஷ் அம்பானியின் முன்னாள் ஊழியரான ரிசர்வு வங்கி கவர்னருக்கும், அதானியின் இந்நாள் ஊழியரான மோடிக்கும் இது புரியாமலா இருக்கும்? எதற்காக வரிசையில் நின்று அல்லல் படுகிறீர்கள்? டெபிட் கார்டு, கிரெடிட் கார்டுக்கு மாறிக்கொள்ளுங்கள் என்று மக்களுக்கு அறிவுரை சொல்கிறது ரிசர்வ் வங்கி. ஏ.டி.எம் இல்லையென்றால் என்ன, பேடிஎம் (paytm)-முக்கு மாறிக் கொள்ளுங்கள் என்கிறது பேடிஎம் கம்பெனியின் விளம்பரம்.

 நந்தன் நிலேகனி, Unique identification authority of india என்ற ஆதார் அட்டை திட்டத்தின் தலைவர். unified payment interface என்ற திறன்பேசி மூலம் வங்கி பரிவர்த்தனை நடத்தும் செயலி (App – ஐ) உருவாக்குவதில் பங்காற்றியவர். மக்கள் படும் துன்பத்தைப் பற்றி அவர் என்ன சொல்கிறார் கேளுங்கள்.

“people will need to figure things out over the next few weeks because the dislocation that will happen  when people will not have their notes and the retailer will not accept notes, they will realize that cash was thought of as such a friction-free thing. Now, they will suddenly find that it’s a nuisance.  I think this will push people towards digital transactions.”

“அடுத்த சில வாரங்களில் மக்கள் முடிவு செய்தாகவேண்டும். கையில் ரூபாய் நோட்டுகள் இல்லையென்றால் என்ன ஆகும் என்பதை அவர்கள் புரிந்து கொள்வார்கள். கடைக்காரர்கள் பணத்தை வாங்க மாட்டார்கள். கையில் பணமாக வைத்துக் கொண்டு செலவிடுவதுதான் தொந்தரவு இல்லாத வழி என்று மக்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். பணமாக கையில் வைத்திருப்பதுதான் தொந்தரவு என்று இப்போது புரிந்து கொள்வார்கள்.” இந்த சூழ்நிலை டிஜிட்டல் பரிவர்த்தனையை நோக்கி (வங்கி – கடன் அட்டை) மக்களை நெட்டித் தள்ளும்.

மக்களுக்கு நேர்ந்த அசவுகரியத்துக்கு வருந்துவதாக மோடி சொல்கிறாரே அது உண்மையா, நிலேகனி சொல்வது உண்மையா? இது நிர்வாகத்திறமையின்மையா சதித்திட்டமா? நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

மக்களை வங்கிக் கணக்கு என்ற வலையில் சிக்கவைத்து அவர்களுடைய சேமிப்பு பணத்தை அபகரித்து தரகு முதலாளிகளுக்கு வாரி வழங்குவது பெரு முதலாளிகளுக்கு வரி விலக்கு, சிறு வணிகர்கள் முதல் சுய தொழில் செய்வோர் வரை அனைவருக்கும் வரி விதிப்பு, இதிலிருந்து தப்பிக்க முடியாமல் சிக்க வைக்க வங்கிக் கணக்கு. ஆதார் அட்டையையும் வங்கிக் கணக்கையும் இணைத்து மானிய வெட்டு. பணப் பரிவர்த்தனையிலிருந்து கடன் அட்டை பரிவர்த்தனைக்கு மாற்றுவதன் மூலம் சிறுவணிகத்தை மெல்ல அழிப்பது 4ஜி ஆண்டிராய்டு போன், ஆதார் அட்டை, கடன் அட்டை அனைத்தையும் இணைப்பதன் மூலம் குடிமக்களின் எல்லா நடவடிக்கைகளையும் அம்பானியின் கண்காணிப்புக்கும் அரசின் கண்காணிப்புக்கும் உட்படுத்துவது இதுதான் நந்தன் நிலேகனியின் டிஜிடல் இந்தியா, ரிலையன்ஸ் ஜியோ வின் டிஜிடல் இந்தியா, மோடியின் டிஜிடல் இந்தியா அல்லது டிஜிட்டல் பாசிசம்.அர்ஜென்டினாவில் இத்தகைய வங்கி நெருக்கடி வந்தபோது அதன் அதிபர் மக்கள் எழுச்சிக்கு பயந்து தப்பி ஓடினார். கிரீசில் மக்கள் போராட்டம் வெடித்தது. சேமநல நிதியை (PF) முடக்குவதாக மோடி கூறியவுடன் பெங்களூரூ நகரத்தை முடக்கியது படிப்பறிவு இல்லாத எளிய ஆயத்த ஆடை தொழிலாளர்களின் எழுச்சி. அடுத்த கணமே பின்வாங்கியது மோடி அரசு.ஏமாந்தது போதும். கேள்வி எழுப்புங்கள், இல்லையேல், 2002 இல் குஜராத் முஸ்லிம்களுக்கு நேர்ந்த கதி நம் அனைவருக்கும் நேரும்.

கேள்வி எழுப்புங்கள்…, போராடுங்கள். உங்களை வீதிக்கு வரவழைத்து விட்டார் மோடி !
வீதியில்தான் இதற்கு விடை காண வேண்டும் ! கேள்வி எழுப்புங்கள் !! போராடுங்கள் !!!

__________________________________________

ஆடியோ : ஆடியோவை தரவிறக்கம் செய்ய சுட்டியில் வலது பொத்தானை அழுத்தி சேவ அஸ் ஆப்சனை தெரிவு செய்யவும்.

பிற பாகங்களுக்கு :

  1. மோடியின் செல்லா நோட்டு திட்டத்துக்கு ஏற்படப்போகின்ற நாட்டின் பேரழிவுகளை பொருளாதார பின்னணியில் மட்டுமே சிந்தித்து கொண்டு வாடி வதங்கிக்கொண்டு இருந்த எனக்கு நம் நாட்டை பற்றி வரும் செய்திகள் அதனையும் விட மிகவும் பெரிய கொடுரங்கள் நிகழ்ந்து கொண்டு இருப்பதனைபடம் போட்டு காட்டுகின்றன…

    மக்கள் மன நல பாதிப்புக்கு உள்ளாகின்றார்கள்… என்ற செய்தி இந்த மோடி அறிவிப்பின் பின்னணியில் ஏற்படும் பல்வேறு விளைவுகளில் ஒன்றாக இருக்கிறது. சிறு வியாபாரிகள் தங்களின் பண முடக்கத்தை வெளிக்காட்ட இயலாமல் மன அழுத்தத்தில் உள்ளார்கள். மக்களிடம் அவர்கள் தங்கள் உணர்வுகளை காட்டவும் இயலாத நிலையில் உள்ளார்கள்.

    மன பதட்டத்தில் பணம் கிடைக்குமா இல்லையா என்ற பயத்தில் atmகளில் இளைஞர்கள் ஒருவருடன் ஒருவர் அடித்திக்கொண்டு சண்டை போடுவதனையும் காண முடிகின்றது.
    திட்டமிட்டு மக்கள் பணத்தை கொள்ளையடித்து நீலிக்கண்ணீர் வடிக்கும் கயவர்களை என்ன செய்யப்போகின்றோம் நாம்?

  2. மோடியின் செல்லா திட்டமும் தள்ளாடும் இந்திய பொருளாதாரமும் :
    ———————————————————————-

    மோடியின் செல்லா திட்டம் மூலம் வங்கிகளில் டெபொசிட் செய்யபடும் பணம் வரா கடன்களுடன் நிற்கும் பெரு முதலாளிகளின் லாக்கருக்கு மீண்டும் குறைந்த வட்டியில் கடன் என்ற முறையில் தான் செல்லப்போகின்றன. அவற்றால் எந்த பயனும் இந்திய பொருளாதரத்துக்கு ஏற்படப்போவது இல்லை. பெரு முதலாளிகள் பெரும் கடன் பணத்தை மேலும் தொழில் முதலீடுகளில் அவர்கள் செய்யும் அளவுக்கு பொருட்ட்களுகான தேவை இருக்காது.(மக்களிடம் வாங்க காசு இருந்தால் தானே !) பண புழக்கம் மிகவும் குறைவாகும் நிலையில் பொருள் உற்பத்தியும் மிகவும் குறையும்.

    இந்த பொருளாதார ஆண்டில் இன்னும் இரண்டு காலாண்டுகள் மீதம் உள்ள நிலையில் ( oct-dec மற்றும் jan-mar ) இந்தியாவின் GDP-ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி மிகவும் தாழ்ந்து சென்று நிற்கும். GDP குறையும் என்பற்கு மக்களிடம் பணம் புழக்கம் இல்லாத இன்றைய நிலையே சாட்சியாக இருக்கிறது. நடுத்தர மக்கள் பொருட்களை வாங்காத நிலையில் பொருட்களின் உற்பத்தியும் குறைந்து அது GDPயில் குறைவையும் காட்டும்.

    தொழிற்சாலைகளில் உற்பத்தி குறைவு ஏற்பட்டு அது தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலைக்கு போய் செல்லும். ஒப்பந்த தொழிலாளர்கள் பெரும்பானையினர் வேலை இழப்பை சந்திக்க நேரும். இந்த கணிப்புகள் எல்லாம் ஆழ்ந்த கணிப்புகள் இல்லை என்றாலும் இந்திய பொருளாதாரத்தை சிறிது அறிந்த எனக்கு தோன்றும் கருத்துக்களாக அமைகின்றன.

    முதலாளித்துவ பொருளாதரத்தை நோக்கிய இந்திய பயணம் மோடியின் செல்லா நோட்டு அறிவிப்பால் தள்ளாடிக் கொண்டு உள்ளது. இந்திய பொருளாதாரத்தின் வீழ்ச்சியை பங்கு சந்தைகளின் வீழ்ச்சியில் இருந்து காணமுடிகின்றது. சென்செக்ஸ் மற்றும் நிப்டி ஆகிய பங்கு சந்தை குறியீடுகள் கடந்த ஆறு மாதத்திலேயே இன்று குறைவாக உள்ளது. TCS பங்குகளின் விலை கடந்த இரண்டு ஆண்டுகளிலேயே மிக குறைவாக ரூ 2125 என்ற நிலைக்கு தள்ளபட்டு உள்ளன… இரண்டு ஆண்டுகளுக்கு முத்தைய அதே நிலைக்கு சென்செக்ஸ் மற்றும் நிப்டி குறியீடுகள் கிழ் இறங்கி செல்லும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

  3. மோடி கற்றுக்கொடுத்த இந்த செல்லா நோட்டு பாடத்தின் மூலம் நேர்மையான மக்கள் கூட கருப்பு பணத்தை பற்றிய அறிவை பெறுவார்கள் என்பது திண்ணம். இனி ஏழை எளிய, நடுத்தர மக்கள் , உயர் நடுத்தர மக்கள் பணமாக தங்கள் சேமிப்பை வைக்கப்போவது இல்லை. அவற்றை தங்கமாகத்தான் மாற்றப்போகின்றார்கள்… என்பது திண்ணம்.

    • ஆமாம் இனி மக்கள் வங்கியில் பணம் சேமிப்பதன் முக்கியத்துவத்தை உணர்ந்து இருப்பார்கள்… வரி காட்டாமல் கருப்பு பணம் தவறு என்று புரிந்து கொண்டு இருப்பார்கள்.

      • மணிகண்டன்…, அடிப்படை முதலாளிதுவ பொருளாதார அறிவு இன்றி பேசிக்கொண்டு உள்ளீர்கள். மக்கள் வங்கியில் சேமிக்கும் பணத்துக்கு உரிய பலன் கிடைக்கவில்லை எனில் அவர்கள் எப்படி வங்கியில் சேமிப்பார்கள்? இதுவரையில் மக்களின் சேமிப்பு இந்திய பெருமுதலாளிகளுக்கு 75 இலட்சம் கோடி அளவுக்கு கொடுக்கபட்டு உள்ளது. அதில் இலட்சம் கோடி வாராக்கடன். 2013 க்கும் 15 க்கும் இடையில் மட்டும் 29 அரசு வங்கிகள் 1,20,000 கோடி வாராக்கடனை தள்ளுபடி செய்திருக்கின்றன. அதானி, அம்பானி போன்ற முதலாளிகள் கடனுக்கு வட்டி கூடக் கட்டுவதில்லை. தொடர்ந்து வட்டி கட்டவில்லை என்றால் அதை வாராக் கடன் என்று கருத வேண்டும். அதனை தவிர்ப்பதற்காக, மீண்டும் அதே முதலாளிக்கு மேலும் கடன் கொடுத்து, அந்த கடன் தொகையிலிருந்தே வட்டியை வரவு வைத்திருக்கின்றன அரசுடைமை வங்கிகள். நிலமை இப்படி இருக்க வங்கிகளின் பொருளாதார நிலை மிகவும் தாழ்ந்து போய் உள்ளது. மேலும் மேலும் மக்களிடம் இருந்து பணத்தை கொள்ளையடிக்கும் முயற்சியின் முதல் கட்டம் தான் மோடியின் செல்லா நோட்டு திட்டம்..

        அருண் ஜேட்லியின் வாக்கு மூலத்தையும் இதற்கு முன் கொடுத்து உள்ளேன். வங்கிகளுக்கு பணம் மேலும் மேலும் தேவை என்கின்றார் அவர். மக்களின் பணம் எதற்காக பெருமுதலாளிகளுக்கு செல்லவேண்டும் மணிகண்டன்….?

      • ஏழைகள், விவசாயிகள் எல்லோரும் வீணாக செலவு செய்கிறார்களா?சிறுக சிறுக வீட்டுலேயே சேமித்த பணத்திற்கு அவர்கள் ஏன் வரிகட்ட வேண்டும்.அண்ணன் எப்போ சாவான் திண்ணை எப்போ காலியாகும் என்ற கதையாக உள்ளது மணிகண்டர் கூறுவது

  4. மிக நுட்பமான விபரங்களையும் எளிமையாக சொல்லுகின்ற ஆற்றல் தோழர் மருதையனது உரைக்கு உண்டு.அது இங்கும் வெளிப்பட்டிருக்கிறது.இந்த பகுதியின் முதல் பகுதியில் ”தொலைக்காட்சி நிறுவனங்கள் இவரை விவாத நிகச்சிகளுக்கு அழைத்து பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று ஒரு வாசகர் கோரிக்கை வைத்திருந்தார்.அவரது நல்லெண்ணத்தில் பிழையில்லை.ஆனால் ஏதோ மக்களுக்கு தெளிவாக ஊடகங்கள் சொல்ல விரும்புவதைப் போலவும் அதற்கு நல்ல ஆட்கள் இல்லை என்பது போன்றும் புரிந்து கொண்டிருக்கிறார்.அந்த சந்தை கடைக்கு போக வேண்டிய அவசியமே இல்லை.எல்லா உரைகளும் நன்கு பகிரப்படுகின்றன.பரவலாக பலரையும் சென்றடைகின்றன.வழக்கமாக எல்லா கட்சிகளும் ஒரு அடையாள எதிர்ப்பையே காட்டுகின்றன.வினவில் ஒரு வாசகர் பகிர்ந்து கொண்ட அனுபவத்தைப்போல ரயில்வே,பேருந்து என அரசு போக்குவரத்து சாதனங்களை மக்கள் கட்டணமில்லாமல் பயன்படுத்தும் நிலை வரப்போகிறது.சில்லறை தட்டுப்பாடு காரணமாக மத்திய அரசே சுங்க சாவடி கட்டண வசூலை நிறுத்தி வைத்திருக்கிறதே?அந்த அதிகாரத்தை மக்களே இலவச பயணங்கள் செய்வதன் மூலமாக தனது கையில் எடுக்கும் நிலை வரலாம்.உச்ச நீதிமன்றம் கலவரம் வரும் என்று அரசை எச்சரிப்பது இதைப்போல கூட ஆரம்பமாகலாம்.ரேஷன் பொருட்களை மக்களே பகிர்ந்து கொண்டதை ஒரு விதிவிலக்காக எடுத்துக் கொள்ள முடியுமா அல்லது இது போலத்தான் இனி பரவலாக நடக்க போகிறதா என்பது அரசு பின்வாங்காவிட்டால் மக்கள் தீர்மானிப்பார்கள் என புரிந்து கொள்ள முடிகிறது.

    • கடந்த 10 நாட்களாக பார்க்கும் மக்களிடம், நடுத்தர வர்க்க நபர்களிடம் எல்லாம் மோடியின் கபட நாடகத்தை அம்பலப்படுத்தி சொல்லி வருகிறேன். அதற்கு தோழர் மருதையனின் உரைகள் மிகுந்த உதவிகரமாக இருந்தன.

      மோடி பக்த்ஸ் தொல்லை தாங்க முடியவில்லை. அவர்கள் தான் இப்படியென்றால், அதை படித்துவிட்டு சிறிதும் சிந்தித்துப் பார்க்காமல் அதை மற்றவர்களிடம் பகிர்பவர்களால் இதை பேசிப் பேசியே எனக்கு (மன அழுத்தம் வந்துவிடுமளவிற்கு) அயற்சியாகிவிட்டது.
      என்ன செய்வது, ஆனாலும் பேசித்தானே ஆகவேண்டும்.

    • மக்கள் தாங்களே அதிகாரத்தை எடுத்துக் கொள்வதை சிலர் அராஜகவாதம் என்கிறார்களே? இவ்வாதத்தை எப்படி எதிர்கொள்வது?

  5. ஹிந்து அமைப்பில் இருந்து ஒருவர் இந்திய பிரதமராக வந்து இருக்கிறார் என்பதற்காக மோடி மீது எவ்வுளவு வஞ்சத்தோடு இவர்கள் நடந்துகொள்கிறார்கள்… இந்த மாதிரியான ஒரு புகைப்படத்தை எந்த ஒரு ஜனநாயக நாட்டிலும் எந்த அரசியல் அமைப்பும் செய்து இருக்க மாட்டார்கள்,_____________

Leave a Reply to ராம்சங்கர் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க