privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகலைகவிதைகைத்தடி ஒன்றை எடுத்துக் கொள் !

கைத்தடி ஒன்றை எடுத்துக் கொள் !

-

நிசப்தம். காற்றுக்கும் தொண்டை அடைத்துக் கொண்டது
பனஒலைகளுக்கும் பல்வலி.
சேரியில்-குடிக்க மறந்தனரா? முனக மறந்தனரா?
சுடுகாடு கிராமத்திற்குள் வந்துவிட்டதா?
நிசப்தம்.
’அவர்கள் வரப்போகிறார்கள்!’
பரட்டைத் தலைப் பூமியை-
யார் யார் ரத்தம் நனைக்கப் போகிறதோ?

**

stickசூரியன் கிழக்கே சிவந்தபோது
கிராமத்தில்
கதவுகள் உடைந்திருந்தன.
பள்ளிக்கூடத்திற்குச்செல்லும்
ஒன்றிரண்டு குழந்தைகளும்
கிழிந்திருந்தன.
சுடுகாடு மட்டும் வெளிச்சமாகவே இருந்தது.

**

அவள் கிழவி.
தலை, தலைமுறைகளைக் கண்டிருந்தது.
கன்னங்களில் இறுகிக் காய்ந்து வெடித்த களிமண் போல் சதை
கண்ணிரா? உழைப்பா? அனுபவமா? வன்முறை
எல்லாம்தான்.
அவளால் நடக்கமுடியாது!
அவள் ஏன் ஊருக்குள் இருக்கிறாள்?
’கைத்தடி’யைக் கொண்டுபோன பேரன்
திரும்பி நிச்சயம் வருவன் என்றுதான்.

**

அதே ஊர்தான்.
வீடுகள் தளிர்த்திருந்தன.
முன்னைவிட மக்கள் இருக்கிறார்கள்.
”கைத்தடி”யோடு பேரன்மார் நிறையபேர்.
அவர்கள் பேசிக் கொண்டார்கள்.
கண்ணுக்குத் தெரியவில்லை.
வேலைகள் மும்முரமாக நடந்தன.
கிழவி சொன்னாள் :
”அடேய் அவர்கள் எப்போதும் வரலாம்டா”

**

வரட்டும்.
கைகள் இறுகின.
சங்கிலிகள் இல்லாமலேயே பேரன்மார்கள்
கிராமத்தை இணைத்திருந்தனர்.
இரவு மலர்ந்தது – கனத்தது.
விளக்குகளில் ஒளி தவழ்ந்தது – பின்னிக் கொண்ட
’வேன்’ ஊளையிட்டது.
‘நரிப்பயல்கள்… வக்காளி… நரிப்பயல்கள்’.

**

சூரியன் கண்கசங்கினான்
சிதறினான் – வழிந்தோடியிருந்தான்.
கிராமத்துக்கு என்ன வந்தது?
நல்ல அறுவடையா?
பேரன்மார்கள் தழுவிக் கொண்டார்கள்.
பறித்த ஆயுதங்களைப் பத்திரப்படுத்தினார்கள்.
காயங்கள் இருக்கத்தான் செய்தன.
செய்திகள் பரவின – வந்தன.

**

கிழவி ஒருபக்கம் உற்சாகமாக இருந்தாள்.
பேரன்மார்கள்.
நிறைய பேரன்மார்கள்-தொடர்ந்து பேரன்மார்கள்
குழந்தைகள் பாடின.
” ‘கைத்தடி’ ஒன்றை எடுத்துக் கொள்
கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்”
ஆரவாரம்.

– அலகநந்தா

புதிய கலாச்சாரம், நவம்பர் 1987.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க