privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபார்ப்பனிய பாசிசம்சிறுபான்மையினர்பொது இந்துச் சட்டமே இல்லை பிறகு எதற்கு பொது சிவில் சட்டம் ?

பொது இந்துச் சட்டமே இல்லை பிறகு எதற்கு பொது சிவில் சட்டம் ?

-

13-ம் ஆண்டில் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் ! மதுரை கருத்தரங்கம்

பொது சிவில் சட்டம்- கருப்புப் பணஒழிப்பு: இசுலாமியர்கள், சொந்த நாட்டு
மக்கள் மீதான மோடியின் துல்லியத் தாக்குதல் !

க்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், மதுரை மாவட்டக் கிளையின் 13-ம் ஆண்டு தொடக்க விழா கருத்தரங்கம் 18-12-2016 அன்று நடைபெற்றது. மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் வாஞ்சிநாதன் தலைமையேற்றார். கிளைச் செயலாளர் தோழர் லயனல் அந்தோணி ராஜ் அனைவரையும் வரவேற்றார்.

தோழர் வாஞ்சிநாதன் தலைமை உரையில் “பண மதிப்பு நீக்க நடவடிக்கையில் மோடி சட்ட ரீதியாகவே அரசியல் சட்டத்தை மீறியும், குற்றங்களையும் இழைத்துள்ளார். இந்திய அரசியல் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை யாரும் பறிக்க முடியாது. ஒரு அரசாணை மூலம் மோடி அதை மீறியுள்ளார். பண மதிப்பு நீக்க நடவடிக்கை பாராளுமன்ற சட்டம் மூலமே சாத்தியம் என்றே ரிசர்வ் வங்கி சட்டம் சொல்கிறது. இப்போது மோடி பாராளுமன்றத்தில் சட்டம் கொண்டு வரவில்லை.

தோழர். வாஞ்சிநாதன்
தோழர். வாஞ்சிநாதன்

ஒவ்வொரு குடிமகனுக்கும் வேலை மற்றும் தொழில் செய்யும் உரிமை அடிப்படை உரிமை {19(1)(g)} வழங்கப்பட்டுள்ளது. இன்று கோவையில் மட்டும் 50,000 நகைத் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். சென்னையில் கட்டுமானத் தொழிலில் 30,000 பேர் வேலை இழந்துள்ளனர். இன்னும் திருப்பூர் உள்ளிட்ட பல இடங்களில் லட்சக்கணக்கானோர் வேலை பறிபோய் வாழ முடியாமல் தவிக்கின்றனர். சிறு தொழில்கள் அனைத்தும் முடங்கியுள்ளன. இதேபோல் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடம் செல்லும் அடிப்படை உரிமையும் பறிக்கப்பட்டுள்ளது. மோடியின் அறிவிப்பால் 150-க்கும் மேலானோர் இறந்துள்ளனர். இது சரத்து21- வாழ்வுரிமையை மீறிய செயல்.

மேலும் நமது நேர்மையான உழைப்பில் கிடைத்த பணம் வங்கியில் முடங்கியுள்ளது. இது அரசியல் சட்டம் சரத்து 300-அ-ன் கீழ் நமது சொத்து. இச்சொத்தை மோடி எப்படி முடக்க முடியும்? நாம் வங்கியின் வாடிக்கையாளர்கள், நமக்கும் வங்கிக்குமான ஒப்பந்தமும் மீறப்பட்டுள்ளது. பணம் கொடுக்கும்போது ரிசர்வ் வங்கி நம்மிடம் அளித்துள்ள உறுதிமொழியும் ஒருதலைப்பட்சமாக மீறப்பட்டுள்ளது. இதற்கெல்லாம் நாம் நட்டஈடு கோர முடியும். தருவார்களா? யார் பொறுப்பு?” என்று காட்டமாகக் கேள்வி எழுப்பினார்.

”கருப்புப் பண ஒழிப்பு : சொந்த நாட்டு மக்கள் மீதான மோடியின் துல்லியத் தாக்குதல்“ பற்றி மதுரைக் காமராசர் பல்கலைக் கழக அரசியல் அறிவியல் துறைப் பேராசிரியர் பவணந்தி வேம்புலு சிறப்புரையாற்றினார்.

“ரூ.500,1000 செல்லாது என்று அறிவித்ததன் மூலம் கருப்புப் பணத்தை ஒழித்துவிடுவேன் என்று மோடி சொல்கிறார். கருப்புப் பணம் என்றால் என்ன? மக்கள் தாங்கள் சம்பாதிக்கும் பணத்திற்கு அரசாங்கத்திற்கு கணக்கு காட்ட வேண்டும். குறிப்பிட்ட வரம்பிற்கு மேல் பணம் சம்பாதிப்பவர்கள் அதற்கு வரி கட்ட வேண்டும். வணிகர்கள் விற்கும் பொருளுக்கு வரி கட்ட வேண்டும். இப்படி பல்வேறு வகைகளிலே அரசுக்கு செலுத்தவேண்டிய வரியைச் செலுத்தாமல் ஏய்ப்பதன் மூலம் கருப்புப் பணம் உருவாகிறது. இன்னும் லஞ்ச ஊழல் முறைகேடுகள் மூலம் கருப்புப் பணம் உருவாகிறது. இந்தப் பணம் நாட்டின் பொருளாதாரத்தைச் சீர் குலைக்கிறது. விலைவாசி ஏறுகிறது. இன்னும் பல சீர்கேடுகளை உருவாக்குகிறது. நம் நாட்டில் உருவாக்கப்பட்ட கருப்புப் பணம் 80 லட்சம் கோடி வெளி நாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ளது.

PRPC Madurai (3)
பேராசிரியர். பவணந்தி வேம்புலு

கொஞ்சம் காலம் முன்பாக நமது கிராமங்களிலே பண்டமாற்று முறை இருந்தது. ஒருவரிடம் இருக்கும் உற்பத்திப் பொருளை வேறு ஒருவரிடம் கொடுத்து அவரிடம் உள்ள பொருளை வாங்கிப் பயன்படுத்திக் கொள்வார்கள். இங்கே பணப் பரிவர்த்தனை இல்லை. பொருளைப் பதுக்கி வைத்தால் அது எல்லோருக்கும் தெரிந்துவிடும். எனவே அது கடினமானது. ஆனால் பணப் பரிவர்த்தனை வந்த பின்பு கரன்சியைப் பதுக்கிவைப்பது சுலபமாகிவிட்டது. பணப் பரிவர்த்தனையின் காரணமாகத்தான் கருப்புப் பணம் உருவானது. பண்டமாற்று முறை ஒழிந்து போய் ரூபாய் நோட்டு வந்த பின்பு அதுவே பொருளாதாரத்தின் அடிபடையாக மாறிவிட்டது.

மக்கள் அனைவரிடமும் பணத்தை தாராளமாகப் புழங்கவிட்டு திடீரென்று ஒரு சில மணி நேரத்தில் செல்லாது என்று அறிவித்தால் சாதாரண மக்கள் என்ன செய்வார்கள்? கிராமப்புறங்களில் படிப்பறிவு இல்லாத மக்கள் எப்படி இந்த மாற்றத்தை எதிர்கொள்வார்கள்? அவர்களது சிறுவாட்டுச் சேமிப்பு கருப்புப் பணமாகுமா? செல்லாத பணத்தை வைத்துக்கொண்டு அவர்கள் அல்லல் படுவதற்கு யார் காரணம்? இந்தியாவில் 40% கிராமங்களில் வங்கிகள் இல்லை. இருந்தாலும் படிக்காதவர்களுக்குப் பயன்படுத்தத் தெரியாது. இவர்களை மின்னணு பரிவர்த்தனைக்கு மாறச் சொன்னால் எவ்வாறு முடியும்? எளிய மக்களிடம் உள்ள சேமிப்பைக் குறிவைத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மோடி ஹிட்லரைப் போல செயல்படுகிறார். ஹிட்லர் ஜனநாயகப்பூர்வமாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சிக்கு வந்தார். மோடியும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு தான் பிரதமர் ஆகியுள்ளர். ஹிட்லர் உருவாகுவதற்கு வெய்மர் குடியரசு அடிப்படையாக இருந்ததைப் போல மோடியின் ஆட்சிக்கு மன்மோகனின் ஆட்சி அடிப்படையாக இருந்தது. மக்கள் நல அரசு என்ற அடிப்படையே
தகர்க்கப்பட்டுவிட்டது. கார்ப்பரேட்டுகளுக்கான அரசாகிவிட்டது.

மோடி இதைத் தன்னுடைய மிகப் பெரிய சாதனையாகப் பிரச்சாரம் செய்கிறார். ஆனால் இது மோடி தன் சொந்த நாட்டு மக்கள் மீது நடத்திய துல்லியமான அரசியல், பொருளாதாரத் தாக்குதல். இதை நாம் எதிர்க்க வேண்டும். இந்தியா ஒளிர்கிறது என்ற பிரச்சாரத்தை தோற்கடித்ததைப் போல இந்தக் கருப்புப் பண ஒழிப்பு நாடகத்தையும் தோற்கடிக்க வேண்டும் “ என்று பேராசிரியர் பவணந்தி வேம்புலு பேசினார்.

“பொது சிவில் சட்டம் : அனைத்து இந்துக்களுக்குமே பொதுவான சட்டம் சாத்தியமா ?” என்பது பற்றி தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் தலைமைக் குழு உறுப்பினர் தோழர் தியாகு சிறப்புரையற்றினார்.

“இரண்டு தலைப்புகளும் ஒன்றோடொன்று தொடர்புடையது தான். இட்லருடைய பொருளாதாரக் கொள்கைகளுக்கும் நம் நாட்டுக்கும் தொடர்பு உள்ளது. மோடி இட்லராக முயல்கிறார். நாம் அனுமதிக்கவில்லை. ஜெர்மனியின் துயரங்களுக்குக் காரணம் யூதர்கள் என்றார் இட்லர். ஐன்ஸ்டீன் ஜெர்மனியை விட்டு ஓடிப்போனார். இந்தியாவின் துயரம் முசுலீம்கள் என்கிறார் மோடி. இந்துக்கள் மனத்தில் இந்த எண்ணத்தைத் தோற்றுவிக்க முயற்சிக்கிறார் மோடி.

அம்பேத்கர் அவர்கள் ஒரே சிவில் சட்டம் வேண்டும் என்பதில் நம்பிக்கை கொண்டிருந்தார். சட்டம் அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும்  என்று விரும்பினார். எல்லா சட்டமும் இங்கே பொதுவானதாகத் தான் இருக்கிறது. ஆனால் தனி நபர் சட்டம் பற்றித் தான் இங்கே விவாதம். தனி நபர் சட்டம் மதத்துக்கு மதம் மட்டுமல்ல சாதிக்கு சாதி, வட்டாரத்துக்கு வட்டாரம் மாறுபடுகிறது. அரசியல் சட்டத்தின் உட்பிரிவாக வழிகாட்டு நெறிமுறைகள், பழக்க வழக்கங்கள், மரபுகள் என்று விதிவிலக்குகள் கூறப்பட்டுள்ளன. பல சட்டங்களிலே வழிகாட்டு நெறி முறைகள் வகுக்கப்படாமலும் எப்படி வேண்டுமானாலும் விளக்கம் சொல்லுகின்ற வகையிலும் உள்ளன. அரசியல் சட்டம் பிரிவு 44 அனைவருக்கும் கட்டாய இலவசக் கல்வி வழங்க வேண்டும் என்று கூறுகிறது. 45 –வது பிரிவு 14 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு என்று கால நிர்ணயம் செய்கிறது. ஆனால் ஆட்சி மாறி 66 ஆண்டுகளுக்குப் பின்பும் இதுவரை அமல் படுத்தப்படவில்லை. சர்க்கரைக் கிண்ணம் என்கிற கியூபா  நாட்டில் அனைவருக்கும் இலவசக் கல்வி வழங்கப்படுகிறது. மருத்துவம் இலவசமாக வழங்கப்படுகிறது. இங்கே தனியுடமை இயல்பாகவே உயர்வு தாழ்வை  உருவாக்கிவிடுகிறது.

தோழர் தியாகு
தோழர் தியாகு

இசுலாமியர்களுக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ். நடத்திய பல்வேறு கலவரங்களிலே முஸ்லீம்கள் பல ஆண்டுகள் சிறை வாசம் அனுபவித்து வருகின்றனர். ஆனால் ஆர்.எஸ்.எஸ்.காரன் ஒருவன்கூட சிறைக்குச் செல்லவில்லை. கிரிமினல் சட்டங்கள் எல்லோருக்கும் பொது. ஆனால் நடைமுறையில் அவ்வாறு இல்லை. அம்பேத்கர் இந்துக்களுக்கு பொது சிவில் சட்டம் (HINDU CODE BILL) கொண்டு வர முயற்சி செய்தார். ஆனால் அந்த முயற்சியை காந்தியார், படேல், திலகர், பாபு ராஜேந்திரப் பிரசாத் போன்றவர்கள் தடுத்து நிறுத்திவிட்டார்கள். முதலில் அதற்கு ஒப்புக்கொண்ட நேரு பின்னர் அமைதியாக இருந்துவிட்டார். அது போலத் தான் பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கும் சட்டத்தையும் தடுத்துவிட்டார்கள்.

அம்பேத்கர் அரசியல் சட்டத்தை விரும்பித் தலைமையேற்று எழுதவில்லை. எழுதவைக்கப்பட்டதாகச் சொன்னார். குறைந்தபட்சம் இடஒதுக்கீடு பாதுகாப்பு அம்சங்களைக் கருதிதான் எழுதினேன் என்று தெரிவித்தார். எனவே இந்துத்துவ தலைவர்கள் யாரை எவ்வாறு தங்கள் நோக்கத்தை நிறைவேற்றப் பயன்படுத்திக் கொள்ள முடியுமோ அவ்வாறு பயன்படுத்திக் கொண்டார்கள். காந்தியாரைக் கொலை செய்த கோட்சே ஏன் கொலை செய்தேன் என்று சொல்லும்போது காந்தி மக்களிடம் இருந்த சிறை அச்சத்தைப் போக்கிவிட்டார். மக்கள் கட்டுப்பாடுகளை மீறப் பழகிவிட்டனர். இது ஆபத்தான விளைவுகளை இந்து சமுதாயத்தில் உருவாக்கிவிடும். இது தேச துரோகம் என்று சொன்னான்.

தனி நபர் சட்டத்தில் மாற்றம் வேண்டும். சென்னை மாகாண சட்டசபையில் தேவதாசி ஒழிப்பு சட்டத்தை முத்து லட்சுமி ரெட்டி அம்மையார் முன்மொழிந்த போது அதை காங்கிரஸ் கட்சி சத்திய மூர்த்தி எதிர்த்தார். மத உரிமைகளில் அரசியல் தலையிட முடியாது என்றார். இதுவரை எங்கள் குலப் பெண்கள் இருந்துவிட்டார்கள். இனிமேல் வேண்டுமானால் உங்கள் குலப் பெண்களை தேவ தாசிகளாக இருக்கச் சொல்லுங்கள் என்று கடுமையாகச் சாடினார் ரெட்டி. சட்டம் நிறைவேறியது.

பிறப்பொக்கும் எல்ல உயிர்க்கும் என்றான் வள்ளுவன். ஆனால் இங்கே சாதிக்கு ஒரு நீதி, நடைமுறை உள்ளது. உச்ச நீதிமன்றமும் இதை ஏற்றுக்கொள்கிறது. பெண்ணுரிமை பிரச்சினையிலும் அவ்வாறுதான். எல்லா மதங்களும் பெண்களை ஒடுக்குவதை நியாயப்படுத்துகிறது. இசுலாமியர்களிடமும் அது உள்ளது. பெண்களுக்கான சம உரிமையும் சேர்ந்ததே சமூக நியதி. ஆணாதிக்கத்திற்கும் சாதிக்கும் தொடர்பு உள்ளது. ஆணவக் கொலைகளின் நோக்கம் என்ன? அக மண முறையைப் பாதுகாப்பதுதான். வரதட்சணைப் பழக்கம் எல்லா சாதிகளிடமும் கிடையாது. ஆனால் உயர் சாதிகளிடம் உள்ளது. இதைப் பார்த்து மற்ற சாதிகளும் பழகிக் கொள்கிறார்கள். இசுலாமிய சமூகத்தில் வரதட்சணை தடை செயப்பட்டுள்ளது. ஆனாலும் அங்கேயும் அது நடைமுறையில் உள்ளது. சிசுக்கொலை மேல் சாதிகளில் இல்லை. ஆனால் ஒடுக்கப்பட்ட சாதிகளிடம் இருக்கிறது. இடை நிலைச் சாதிகளிடம் இருக்கிறது. அகமண முறையைப் பாதுகாப்பதே இதன் நோக்கம். பல பெண் குழந்தைகள் பிறக்கும் போதே இந்தக் கொடுமை நிகழ்கிறது. இந்தப் பழக்க வழக்கங்கள் எல்லா சட்டங்களையும் மீறி நடக்கிறது.

பொது சிவில் சட்டம் என்று மோடி சொல்வது அப்பட்டமான நாடகம். அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டம் கொண்டு வருவதற்கு முன்பாக பொது இந்துச் சட்டம் கொண்டுவர வேண்டும். சாதிக்கு ஒரு மரபு இருப்பதை, பெண்ணுக்கு சொத்துரிமை மறுப்பதை முதலில் ஒழிக்க வேண்டும். முசுலீம்கள் சிறுபான்மை என்றால் இங்கே சிறுபான்மை என்று யாரும் இல்லை. ஆதிக்கச் சாதிகளில் பார்ப்பான் ஆகச் சிறுபான்மை. அவன் தான் சமூகவிதிகளை வகுத்துள்ளான். கருவறைக்குள் ஒரு சாதி. பிரகாரத்தில் ஒரு சாதி. வெளியே ஒரு சாதி என்று இந்துக்களையே இனம் பிரித்து வைத்தவன் யார்? இந்து என்று ஒரு மதமே இல்லை என்று வரலாறு மெய்ப்பிக்கிறது. அனைவரும் இந்து என்றால் அவர்கள் எல்லோருக்கும் ஒரே சட்டம் இருக்க வேண்டியது தானே முதல் தேவை? ஆனால் இசுலாமியர்களை ஒடுக்கும் நோக்கத்துடன் இசுலாமியர்களுக்கான தனி நபர் சட்டங்களைக் காட்டி பொது சிவில் சட்டம் என்று சங்கப் பரிவாரங்கள் கூப்பாடு போடுகின்றன.

இந்து சனாதனவாதிகளைப் போலவே முஸ்லீம் அடிப்படைவாதிகளும் உள்ளனர். பிற மதங்களிலும் இந்த பிற்போக்குத்தனங்கள் உள்ளன. அது கட்டாயம் களையப் பட வேண்டும். இசுலாமிய சமூகத்தில் பெண் கல்வி மறுக்கப்படுகிறது. அதை எதிர்த்துப் போராடுபவர்கள் மிரட்டப்படுகின்றனர், கொல்லப்படுகின்றனர். ஒடுக்கப்படுகின்றனர். இன்னொரு புறம் குர்தி இனப் பெண்கள் ஆயுதம் ஏந்திப் போராடி ஐ.எஸ்.தீவிரவாதிகளை விரட்டினர். இசுலாத்தின் சாரம் சமத்துவம், அதை அவர்கள் கொண்டுவரப் போராட வேண்டும். இசுலாத்தில் சாதி கிடையாது தீண்டாமை கிடையாது. எனவேதான் இந்துத்துவம் அதைக் குறி வைக்கிறது.

மோடி அரசு ஒடுக்கப்பட்ட இந்துக்களுக்கு எதிரானது. ஆகச் சிறுபான்மையினரான பார்ப்பன சனாதனங்களை மரபுகள், பழக்க வழக்கங்கள், வழிகாட்டு நெறிமுறைகளாக வைத்துக்கொண்டு அதைப் பெரும்பான்மை இந்துக்கள் என்ற பெயரில் அனைவர் மீதும் திணிக்க எத்தனிக்கிறது. மோடி அரசு தலித் மக்கள், பழங்குடிகளுக்கு எதிரானது. இசுலாமியர்களுக்கும் இன்னும் பல மதச் சிறுபான்மையினருக்கும் எதிரானது. இந்து ராஜ்யம் என்ற ஆர்.எஸ்.எஸ்.ன் கனவை நனவாக்க சனநாயகத்தின் பெயரில் மோடி பாசிசத்தைக் கொண்டு வரப் பார்க்கிறார். பொருளியல் நெருக்கடிகளை உழைக்கும் மக்கள் தலையில் சுமத்தப் பார்க்கிறார். இதை நாம் அனுமதிக்கக்கூடாது ஒன்றிணைந்து போராட வேண்டும்.

கிளைப் பொருளாளர் தோழர் சங்கையா நன்றி சொல்ல கருத்தரங்கம் நிறைவுற்றது. கீழைக்காற்று நூல்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. வாசிப்புத் தளம் கொண்டவர்களுக்குப் பயனுள்ளதாக இருந்தது.

பேராசிரியர்கள், வழக்கறிஞர்கள், மாணவர்கள், அரசுப் பணியாளர்கள், வங்கிப் பணியாளர்கள், பெண்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், இசுலாமியர்கள், வணிகர்கள், தோழமை அமைப்பினர் 400 பேர்வரை கலந்துகொண்டு இறுதிவரை இருந்து சிறப்பித்தனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல்:
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்.
மதுரை

  1. //இசுலாத்தின் சாரம் சமத்துவம், அதை அவர்கள் கொண்டுவரப் போராட வேண்டும். இசுலாத்தில் சாதி கிடையாது தீண்டாமை கிடையாது. எனவேதான் இந்துத்துவம் அதைக் குறி வைக்கிறது.//இல்லை அது இசுலாமிய சகோதர்த்துவம் உண்மை சம்த்துவத்துக்கும் இசுலாமிய சகோதரத்துவத்துக்கும் வித்தியாசம் தெரியவில்லை இசுலாத்தில் தீண்டாமை கிடையாது என்பது பொய் இசுலாமியனுக்கு இசுலாமியன் அல்லாதவன் தீண்டத்தகாதவனே ஆதாரம் மெக்கா பள்ளிவாசலை சுற்றி போகநான் முஸ்லீம் பைபாஸ் இருக்கு ஒரு வேளை இசுலாமியர்களுக்குள் சம்த்துவம் வேனும் அதுக்காக அவர்கள் போராட வேண்டும் என்றால் அதை பொது சிவில் சட்டத்தின் மூலம் ஏன் செய்யக்கூடாது எனென்றால் அத வெளியாள் செய்ய அனுமதி இசுலாத்தில் இல்லை கம்மூனிஸ்டுகள் மெத்த படித்த முட்டாள்கள் என்பதை அடிக்கடி இசுலாம் விசய்த்தில்நிரூபிக்கிறீர்கள்….

    • ஜோசப் சொல்லவந்த ஒரு முக்கியமான விசயத்தை மறந்து விட்டேன் பார்த்தீர்களா? கிருஸ்துவ நண்பர்கள் , கிருஸ்துவ கல்வி நிறுவனங்கள் என்று பல ஆண்டுகள் உறவாடிய எனக்கு நான் மாற்று மதத்தவன் என்பதால் RC கோவில்களில் “ அப்பம் “ ஒரு முறைகூட கொடுக்கபட்டது இல்லை… அதற்கான காரணத்தை சிறுவயதிலேயே நான் அறிந்ததால் அது எனக்கு பெரிய வலிகளை ஏற்படுத்தியது இல்லை. நான் கிருஸ்துவனாக இருந்து அப்பம் கொடுக்கப்படாமல் இருதால் தானே நான் அதனை தீண்டாமை என்று நினைத்துக்கொள்ள வேண்டியிருக்கும் … அது அவர்கள் மத கட்டுபாடு என்ற அளவில் எடுத்துகொள்ளும் பக்குவம் எனக்கு உண்டு … உங்களுக்கு?

  2. 1, இசுலாத்தில் தீண்டாமை கிடையாது என்பது பொய் இசுலாமியனுக்கு இசுலாமியன் அல்லாதவன் தீண்டத்தகாதவனே,

    இசுலாத்தில் தீண்டாமை கிடையாது உண்மை நான் வெளிநாட்டில் அதுவும் முஸ்லிம் நாட்டில்தன் வேலை பார்க்கிறேன் இங்கு எந்த முஸ்லிமும் யாரையும் தெட கூடாது ஒன்ன சாப்பிட கூடாது செல்லவில்லை இந்து மதத்தில் உள்ளது போல் இசுலாத்தில் தீண்டாமை

    2,ஆதாரம் மெக்கா பள்ளிவாசலை சுற்றி போகநான் முஸ்லீம் பைபாஸ் இருக்கு

    அவன் அல்லசாமியை கும்மிட போரன் அங்கு நமக்கு என்ன வேலை அவனுக்கு ஒரு ரோடு நம்க்கு தனி ரோடு ஏன் நம்ம ஊருலையும் தான் இருக்கு நம்ம எதவது வெளி ஊருக்கு போகும் போது பைபாஸ் வழியை யூஸ் பான்னுவேம் அப்ப நம்ம இந்திய அரசு அந்த ஊரை ஒதுக்கி வைச்சுருட்சா

    திலித் கிருத்தவன் ஒருவனான் மேல் ஜாதி கிருத்துவ கோவில் நூழைய முடியாது , நம்ம ஊரில் இன்னும் இருக்கு அனால் தலித் முஸ்லிம்க்கு அவர்கள் புனித சவுதி காபவுக்கு அருகில் நின்னு சாமி கும்மிடமுடியும்

    நான் தலித் முஸ்லிம் முன்னேற்றத்தை நேரில் பார்த்தவன் தலித் கிருத்தவன் அடைந்த துயரதையும் நேரில் பார்த்தவன் எனவே முஸ்லிம் மக்களிடம் தீண்டாமை இல்லை , இந்துவிடமும் அதைவிட அதிகம் கிருத்துவனிட்மும் இருக்கு ,

    • விளக்கத்திற்கு நன்றி தமிழ் அவர்களே .. அருமையாக சொன்னீர்கள் ..
      தலித் முஸ்லீம் என்பதை நீங்கள் (தலித்தாக இருந்து முஸ்லீமாக மாறியவர்) என்ற ஒரு புரிதலுக்காக பயன்படுத்தி உள்ளீர்கள் என்பதை அறிகிறேன்… மற்றபடி “தலித் முஸ்லீம்” என்றால் பதமே கிடையாது .. அவர் முஸ்லீம் மட்டும் தான் … நன்றி .

    • தலித் கிறிஸ்தவன் மேல ஜாதி கிறிஸ்தவன் சர்ச்சுகுள்ள நுழைய முடியாது தமிழ்நீ பாய்தான் என்பதை உன் வாக்கு மூலமேநிரூபிக்கிறது
      முதலில் தலித் பேராயர்(பிஸப்) எத்தனை பேர் இருக்காங்க தமிழ்நாட்டுல தெரியுமா எங்க ஊரு இருக்குற மதுரை ராமநாதபுரம் தென் இந்திய திருச்சபையின் பேராயர் தலித் இன கிறிஸ்த்தவர் என்றே சொல்லுகிறார்கள்….

      • ஜோசப் அவர்களே, கிருஸ்துவ தலித் எழுத்தாளர் பாமா அக்காவின் கருக்கு சுய சரிதை நாவலை படித்துவிட்டு வந்து இந்திய கிருஸ்துவத்தில் மேல் சாதியத்தின் மேலாண்மையை புரிந்துக்கொளுங்கள்! பாமா அக்காவை பற்றிய அறிமுகம் தேவையில்லை என்றாலும் உங்களுக்கு தெரியுமே இல்லையோ என்பதற்காக கூறுகின்றேன். பள்ளி ஆசிரியர்(யை), மடத்தில் இருந்து அங்கு இருக்கும் சாதிய பாகுபாடுகள் காரணமாகவும், அது எளியவர்களுக்கு சேவை செய்யவில்லை என்ற காரணத்தாலும் அதில் இருந்து விடுபட்டவர்… ஆனாலும் ஏசுவின் போதனைகளை தன் வாழ்வில் பின்பற்றுபவர்… அவரின் வார்த்தைகளில் கூறுவது என்றால் :

        “சொந்த மண்ணில் தலித்களுக்கு அவமானம் என்றில்லை…. ஆண்டவன் பிரதிநிதிகளிடமும் அதுதான் கதி…..இதில் இந்த மதம் அந்த மதம் என்ற வேறுபாடு இல்லை.இது தான் இன்றும் இருக்கும் கொடுமை..இந்தக் கொடுமைகளை எதிர்த்த போராட்டமே ‘கருக்கு” ஆக உருவெடுத்து உள்ளது.”

        • மிஸ்டர்செந்தில்குமரன்,கட்டுரைக்கு சற்றும் பொருத்தமில்லாமல் விவாதம் திரும்புகிறது.இந்த பி.ஜோசப்புக்கு இதுதான் வேலை.இதற்க்குத்தான் ஜெயலலிதா பற்றிய விவாதத்திலும் ரெபெக்காமேரியிடமும் குறிப்பிட்டிருந்தேன்.கிறிஸ்த்தவ மதத்தில் ஜாதி இருக்கிறதா?கிறிஸ்த்தவத்தில் ஜாதி இருக்கிறதா?கிறிஸ்தவத்தில் ஜாதி இல்லை.இந்திய தமிழ்க கிறிஸ்த்தவர்களிடம் ஜாதி இருக்கிறது.இது எங்கிருந்து தொற்றியது என்பதை உங்கள் சிந்தனைக்கே விட்டுவிடுகிறேன்.ஒரு நாவலை உதாரணமாய் காட்டுகிறீர்கள்.அந்த நாவல் தமிழக கிறிஸ்த்தவ சமூக அமைப்பில் புரையோடிப்போன ஜாதிய பாகுபாட்டின் எதார்த்தத்தை பேசலாம்.அதனால் கிறிஸ்த்தவம் ஜாதீயம் உள்ளது என்று ஆகாது.வெள்ளையர்களிடம் நிறவெறியும் நிற பாகுபாடும் உள்ளது.அவர்களில் பெரும்பாலோர் கிறிஸ்த்தவர்கள் என்பதால் கிறிஸ்த்தவம் நிற பாகுபாட்டை ஏற்றுக்கொண்டதாக ஆகவே ஆகாது.இதுதான் சாக்கு என்று எல்லா மதத்திலும் தலித்துகளுக்கு கொடுமைதான் என்று ஒரேயடி மட்டையடி அடிக்கிறீர்களே பெளத்தமும் சாதி உள்ளதா?சமணமும் சாதி உள்ளதா? உங்களுடைய மத நிராகரிப்பிற்க்கு கொள்ளைபுற வழியிலெல்லாம் வரக்கூடாது. முதலில் சாதி பாகுபாடு பற்றிய கட்டுரையா இது?இந்த ஜோசப்புக்கென்று எந்த கொள்கையும் கோட்பாடும் கிடையாது.காவிகளாவது அவர்களுக்கென்று உள்ள ஒரு பலவீனமான கொள்கையை வைத்தாவது அழுகிறார்கள்.இந்த ஜோசப்புக்கு இங்குமங்குமாக ஓடிதிரிவதும் சம்மந்தமில்லாமல் உளறிக்கொட்டுவதும்தான் வேலை.

        • கிறிஸ்துவர்களுக்குள் சாதி வேறு பாடு இல்லை என்று நான் சொல்ல மாட்டேன் செந்தில் ஆனா அதுக்காக தமிழ் போன்ற ஆளுகளின் அவதூறை அமோதிக்க முடியாது சின்ன தகவலே மத பிரச்சாரம் என்று தவறாக நினைக்க வேண்டாம் இசுலாமியர்களைப்போல வினவை மத பிரச்சார தளமாக ஆக்க கூடாது என்ற எச்சரிக்கை உணர்வுடனும் சொல்லுவ்து
          யேசு இறந்த போது எருசலேம் தேவாலயத்தின் திரைச்சீலை மேல் தொடங்கி கீழ் வரை இரண்டாய் கிழிந்தது என்று விவிலியம் கூறுகின்றது யேசு இறந்து ஏன் சம்பந்தம் இல்லாமல் அந்த திரையை கிழிக்க வேண்டும் எனென்றால் எருசலேம் கோவிலுக்குள்ள யூதர்கள் மட்டுமே போக முடியும் அதுவும் பூஸ பன்றது தூபம் காட்டுறதுன்ற வேலைக்கு யூத சாதிய்லயே ஆரோனின் வம்சத்தார் மட்டுமே போக முடிய்ம் மாற்று சாதியை சேர்ந்தவர்கள் சமாரியர் (விவிலய்த்தில் பழைய ஏற்ப்பாட்டின் படி கீழ் சாதி என்று சொல்லப்பட்டவர்)வெளியே முற்றத்தில் இருந்து தொழுது கொள்ள வேண்டும் .

          இந்த மூன்று பிரிவினர்களுக்கிடையே ஒருவரை ஒருவர் பார்க்காதபடி திரை இருந்தது யேசு இறந்தபோது கிழிந்தது அந்த திரைதான் கிறிஸ்துவர்கள் அந்த திரையை தங்கள் எண்ணத்தில் ஏற்றுக்கொண்டு விட்டார்கள்

          அனா நான் கேக்குறது என்னனா இசுலாம் தன்னை ஏற்றுக்கொண்டவர்களை மூமின் என்றும் ஏற்றுக்கொள்ளாதவர்களை காபிர்கள் என்றும் பிரிக்கிறது காபிகளை நண்பர்கள் ஆக்க கூடாது முடிந்தால் அவர்களிடம் ஜிகாத் செய்து அவர்களை கொன்று அவர்கள் மூமீன் ஆகும் வரை போரிடு என்று சொல்லும் மதம் எப்படி சம்த்துவத்தை போதிக்கும் மதம் என்று இந்த மெத்த படித்த கம்மூனிஸ அறிவாளி சொன்னார் என்பதே லாஜிக்கலி இடியாட்டிக் பேச்சாகவல்லவா இருக்கிறது….

          • சத்தியமா எதுக்கு இவற்றை எல்லாம் என்னுடைய பின்னுட்டத்துக்கு பதிலாக கொடுகின்றீர்கள் என்று சிறிதும் புரியவில்லை ஜோசப்! நான் பேசியது தமிழ் நாட்டில் தலித் கிறிஸ்துவர்களின் நிலையை பற்றி…. தலித் கிருஸ்துவர்களுக்கு என்று தனி தனி தேவாலையங்கள் இல்லை என்றா கூற வருகின்றீகள்!

            • அய்யா பேராசிரியரே நான் சொன்னது உண்மைல விளங்களயா இல்ல விளங்காத மாறி நடிக்கீறா தலித் தலித அல்லாதவர் வேறுபாறு கிறிஸ்தவத்துல இல்லைனு நான் எப்ப சொன்னேன் நான் கேக்குறது இசுலாம் சமத்துவத்தை போதிக்கின்ற மதம் என்று எப்படி ஒரு கம்மூனிஸ அறிவாளி சொன்னார் என்பதே ____________ ……

        • தமிழ் லுத்தரன் திருச்சபை இருக்கிறது வினவு தளம் கூட ஒரு கண் மருத்துவமனையின் அவலங்களை தோலுறித்து கட்டுரை எழுதியது அந்த லூக்கா கண் மருத்துவமனை அந்த திருச்சபையின் கீழ்தான் வருகிறது அந்த திருச்சபை தலித்துகளின் ஆதிக்கத்துக்கு உட்பட்ட திருச்சபையே தரங்கை பேராயர் என்று சொல்லிக்கொள்ளும் அவர்கள் எல்லோரும் தலித் இனத்தை சார்ந்தவர்களாகவே இருப்பார்கள் அவர்கள் ஆளுகையில் உள்ள திருச்சபைகளில் மாற்று சாதியினருக்கு என்ன மரியாதை என்பதையும் சேர்த்தே ஆய்வு செய்து எழுதுங்கள் இதில் எனக்கு எள்ளலவும் வருத்தம் இல்லை ஆனால் அதே நேரத்தில் திருச்சபைகள் கிறிஸ்தவர்களின் குறைகளை வைத்து இசுலாமிற்க்கு சமத்துவ மதம் என்ற சர்டிபிகேட் குடுப்பதன் உள் நோக்கம் என்னவாக இருக்கும் கிறிஸ்துவத்தில் தலித்துகள் ஒடுக்கப்படுகிறார்கள் இசுலாம் சமத்துவம் குடுக்கும் மதம் என்று பொய் சொல்லி இசுலாத்தை நோக்கி தலித்துகளை தள்ளி விடும் முயற்ச்சி என்று நான் சந்தேகம் கொள்ள்வது தவறில்லயே…

      • என் பெயர் கொண்ட நண்பன் திருசிக்கு அருகில் உள்ள லப்பைகுடிகாட்டில் வசிக்கின்றான். ஒரு இரு குடும்பங்களை தவிர அனைத்துமே இஸ்லாமிய குடும்பங்கள் தான். அவர்கள் வீட்டுக்கு புதுமனை புகு விழாவுக்கு நண்பர்கள் சென்று இருந்தோம்.வீட்டுக்கு பின் புறம் பள்ளிவாசல்.அங்கும் சென்றோம்…யாதொரு இடையூருகளும் இஸ்லாமியர்களிடம் இருந்து ஏற்படவில்லை. பள்ளி வாசல் உள் இந்து குழந்தைகளை கூட மந்திரிக்க இந்து பெண்கள் கூட அழைத்து செல்வதனை கண்டு இருகின்றேன்.

        அதே நேரத்தில் மாற்று மதத்தவருக்கு என்று கட்டுபாடுகள் அவர் அவர் மதத்தின் அடிப்படையில் நடைமுறையில் உள்ளது என்பதனை மறக்க இயலாது.வாழ்நாளில் கல்வி வரையில் பெரும் பகுதியை- (உண்மையில் mPHIL பதிப்பு தவிர ) கிருஸ்துவ கல்வி கல்வி நிறுவனங்களில் கழித்தவன் நான். கிருஸ்துவ கல்வி நிறுவங்களில் சாதியத்தின் செல்வாக்கை நன்கு அறிந்தவன் நான்… நான் பள்ளி பதிப்பு முடித்த தென்னாற்காடு மாவட்டத்தை பொறுத்தவரையில் வன்னிய கிறிஸ்துவர்களின் செல்வாக்கு கிருஸ்துவ மத நிறுவனங்களில் பெருமளவுக்கு இருப்பதனை யாருமே மறுக்க இயலாது. திருச்சியில் CSI ஆலயத்தின் கீழ் வரும் கல்வி நிறுவனங்களில் (பிஷப் கல்லுரி) நாடார்களின் பெரும்பான்மையையும் அந்த சாதியின் அடிப்படையில் அந்த சாதிக்காரர்கள் முதல்வர் பதவிகளை பெற்றதனையும் கண்டு உள்ளேன்.
        சாதி அடிப்படையில் அவர்கள் குழுக்களை அமைத்துக்கொண்டு அதிகாரத்தை பெறுவதற்காக ஒருவருடன் மற்றவர் நடத்துகின்ற நிழல் யுத்தங்கள் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நடந்ததை நீங்கள் கண்டு இருப்பீர்கள். அந்த கல்லூரியில் சீனியாரிட்டி அடிப்படையில் முதல்வர் பதவிக்கு வரவேண்டிய ஒரு பாதிரியாரை அவர் தலித் கிருஸ்துவர் என்ற காரணத்தால் மாற்று சமுகம் ஓரம் கட்டிய நிகழ்வுகளை எல்லாம் நான் கண்டு இருகின்றேன்.

        அந்த பாதிக்கப்பட்ட தலித் பாதிரியார் பிறிதொரு நாளில் எனக்கு நான் வேலை செய்த கொடைக்கானல் கிருஸ்துவ கல்லூரியில் முதல்வராக இருந்து இருக்கின்றார். ஒரு ஆண்டுகளில் அவரிடம் இருந்து நான் கற்றது அதிகம் என்றாலும் அவர் சாதி அடிப்படையில் அமெரிக்கன் கல் லூரயில் பட்ட துயரங்களை அவ்வவப்போது கூறுவார். எனவே முழு புசணிக்காயை சோற்றில் போட்டு மூடும் வேலையை செய்ய முயற்சிக்கவேண்டாம்.

        • பத்தி பத்தியா எழுதி தள்ளாம நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்க கிறிஸ்தவத்தவர்களில் சாதி வேறுபாடு இல்லனு நான் எப்ப சொன்னேன் நான் கேட்ட கேள்விக்கு இது பதில் இல்லயே மீண்டும் என்னுடய கேள்வி

          அனா நான் கேக்குறது என்னனா இசுலாம் தன்னை ஏற்றுக்கொண்டவர்களை மூமின் என்றும் ஏற்றுக்கொள்ளாதவர்களை காபிர்கள் என்றும் பிரிக்கிறது காபிகளை நண்பர்கள் ஆக்க கூடாது முடிந்தால் அவர்களிடம் ஜிகாத் செய்து அவர்களை கொன்று அவர்கள் மூமீன் ஆகும் வரை போரிடு என்று சொல்லும் மதம் எப்படி சம்த்துவத்தை போதிக்கும் மதம் என்று இந்த மெத்த படித்த கம்மூனிஸ அறிவாளி சொன்னார் என்பதே லாஜிக்கலி இடியாட்டிக் பேச்சாகவல்லவா இருக்கிறது….

          • ஜோசப் அவர்களே, நான் பத்தி பத்தியாக எழுதினாலும் ,உண்மையை மட்டுமே எழுதிக்கொண்டு இருகின்றேன் ஜோ…! அதனால் தான் பதில் சொல்ல இயலாமல் என்னை ஏசுகின்றீர்கள்… நன்றி… மிக்க நன்றி…. நான் எந்த மதத்திலும் சமத்துவம் இருபதாக உங்களுக்கு இங்கோ அல்லது இமெயில் அனுப்பியோ நான் கூறவில்லையே ஜோசப் ராசா…! (உங்கள் ஈமெயில் கிடைத்தது) அப்புறம் ஏன் கீழ் உள்ள கருத்துகளை என்னுடைய பின்னுட்டத்துக்கு எழுதி உளறி வைத்து உள்ளீர்கள் ஜோசப் ராசா! //மதம் எப்படி சம்த்துவத்தை போதிக்கும் மதம் என்று இந்த மெத்த படித்த கம்மூனிஸ அறிவாளி சொன்னார் என்பதே லாஜிக்கலி இடியாட்டிக் பேச்சாகவல்லவா இருக்கிறது….//

            நான் வைக்கும் வாதத்துக்கு உங்களால் பதில் அளிக்க இயலாத சூழல் வருமாயின் உடனே கண்டபடி உளறுவது என்பது எப்படி பொருத்தமான விவாத முறையாகும்? யோசியுங்கள் ஜோசப் அவர்களே!

            • செந்திகுமரன் உங்களின் மூலமாக சில கருத்துகளை வெளிப்படுத்தலாம் என நினைக்கிறேன்.ஜோசப்பின் பதிவுகளை வினவுக்கு நான் வந்த காலத்திலிருந்து அறிகிறேன்.இது ஏதோ அறியாமையினாலோ ஆர்வக்கோளாறினாலோ வந்து விழும் கருத்துகளல்ல.இது நீண்ட காலங்களாக ஏற்றப்பட்ட துர்போதனையால் வந்த விளைவு.அந்த துர்போதனைகளாலே அவர் மூளை துறுப்பிடித்திருக்கிறது.இஸ்லாம் என்ற வார்த்தையை கேட்டவுடனேயே அவருக்குள் ஒரு உஷ்ணம் பாய்வதை பார்க்க முடிகிறது.இது சாதாரண கிறிஸ்த்தவர்கள் ,சாதாரண இந்துக்கள் மற்றும் உள்ள சதாரண மக்களிடம் பார்க்க முடியாது.ஒரு சமூகத்தைப்பற்றி பிற சமூகத்திற்க்கு விமர்சனம் இருக்கலாம்.விமர்சிக்கவும் படலாம்.இது அந்த வகையில் சேர்ந்ததல்ல.இஸ்லாம் மிகப்பெரிய போட்டிக்குரியதாக,வெல்ல முடியாத சவால் நிறைந்ததாக தொடர்ந்து போதிக்கப்பட்டு ,வீழ்த்தியே தீரவேண்டிய வில்லனாக காட்டப்பட்டிருக்கிறது.நியாயமான விவாதங்களால் இவை சாத்தியமில்லை என்ற நிதர்சனம் அவர்களுக்கு தெரியும்.பிறகு எப்படி சந்திப்பது?அவதூறுகளை அள்ளித்தெளி.வலிந்து தவறான பொய்களை திரட்டி ஊற்று.எங்கேயோ போய் கொண்டிருக்கிற பேச்சை திசை மாற்றி,உனக்கு இருக்கும் அறிவை கொண்டு வெறுப்பின் பக்கமாய் கொண்டு வா..கூடுமானவரை வசைபாடு.இதன் மூலமாய் ஒருவன் கிடைத்தாலும் வெற்றி.இதுதான் காவிகளுக்கும் கோட்பாடு.தாழ்வுமனப்பான்மையால் வெந்து புழுங்கும் ஒவ்வொருவனும் இதைத்தான் செய்வான்.இங்கிருக்கும் பலர் ஜோசப் அடிக்கடி உதிர்க்கும் ஒரு கருத்தை கேட்டிருக்கலாம்..வினவு இஸ்லாத்திற்க்கு ஆதரவாக இருப்பதாக..அப்படி எந்த முகாந்திரமாவது இருக்கிறதா?சிறுபான்மையினருக்கு உறுதுனையாய் இருப்பது என்ற வகையில் முஸ்லிம்களுக்கு அரணாக ஆதரவாக சில அரசியல் பிரச்சினைகளில் கருத்து கொண்டிருக்கலாம்.அதற்க்காக இஸ்லாத்திற்க்கு ஆதரவாக வினவு என்பது எப்படிப்பட்ட புனைவு?நானே பலமுறை சித்தாந்தரீதியாக மோதி அதன் பதிவுகள் வெவ்வேறு பக்கங்களில் இருக்கிறது.ஆகவே ஜோசப்பை யோசிக்க சொல்வதெல்லாம் வீண் வேலை.அங்கு யோசிக்கும் அளவிற்க்கெல்லாம் வேலை செய்யாது.தூக்கி போட்டுவிட்டு சும்மா இருங்கள்.

            • அப்பிடி என்ன வாதத்தை வைத்து விட்டீர்கள் தமிழ்க்கு ஜால்ரா அடித்தீர் நான் உங்கட்ட கேள்வி கேக்கவே இல்லை நான் கேட்ட கேள்வி வினவுதளத்துக்கு அதுக்கு நீங்க பதில் சொல்லுறதா நினைத்துக்கொண்டு கிறிஸ்தவர்களின் குறைகளை பத்தி பத்தியாக எழுதீனீர்கள் நான் அதை மறுக்கவே இல்லை மீண்டும் எனது பின்னூட்டத்த பொருமையாக படியுங்கள் இசுலாம் சம்த்துவத்தை போதிக்கும் மதம் என்று துணிந்து ஒரு பொய்யை வலிந்து சொல்லுகிறார்கள் ஆனால் அப்பிடி இல்லை என்பதுதான் என் கருத்து இதுக்கு தேவையே இல்லாமல் கிறிஸ்தவர்களயும் கிறிஸ்தவ மதத்தையும் இழுத்தது நீங்களும் தமிழும்தான்

              • ஜோசப்,

                இந்திய கிருஸ்துவத்தில் உள்ள குறைகளை குறிப்பாக சாதியத்தை மறுக்கவில்லை என்று இப்போது கூறும் நீங்கள் தானே உங்கள் முந்தைய பின்னுட்டம் 2.2ல் கீழ் உள்ள கருத்துகளையும் கூருகிண்றீகள்!// தலித் கிறிஸ்தவன் மேல ஜாதி கிறிஸ்தவன் சர்ச்சுகுள்ள நுழைய முடியாது தமிழ்நீ பாய்தான் என்பதை உன் வாக்கு மூலமேநிரூபிக்கிறது
                முதலில் தலித் பேராயர்(பிஸப்) எத்தனை பேர் இருக்காங்க தமிழ்நாட்டுல தெரியுமா எங்க ஊரு இருக்குற மதுரை ராமநாதபுரம் தென் இந்திய திருச்சபையின் பேராயர் தலித் இன கிறிஸ்த்தவர் என்றே சொல்லுகிறார்கள்….// இந்த கருத்தை மறுக்கவே நான் விவாதத்தில் உள் நுழைந்தேன்… மற்றபடி மதத்தின் மீதான என் கருத்து என்னவென்றால் மதம் அது எதுவென்றாலும் மக்களை அதனுள் அடிமைபடுத்தி அவர்களை அறிவியல் ரீதியாக சிந்திக்க இயலாத நிலைக்கு தள்ளுவது தான் மதத்தின் கடமையாக இருக்கிறது.

                குறிப்பாக ஒரு விஷயம் : “”ஒரு மதத்தில் பிறக்கும் குழந்தை ஆனா ,பெண்ணா என்று தீர்மாணிபது கடவுள் தான் என்று உள்ளது….”” ஆனால் பிறக்கும் குழந்தையை ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ பிறக்கவைக்க சிசனிங் என்ற தொழில் நுட்பம் உள்ளது. அது இந்தியாவில் தடை செய்யபட்டு உள்ளது… ஆனால் பால் உற்பத்தியை பெருக்க பெண் மாடுகளை அதிக அளவில் உற்பத்தி செய்ய அந்த தோழில் நுட்பம் இந்தியாவில் பயன்பாட்டில் உள்ளது. பெண் கருமுட்டையில் உள்ள xx குரோமோ சோம்களை ஆண் விந்தணுவில் உள்ள XY குரோமோ சோம்களுடன் இணையும் தருணத்தில் XX என்றால் பெண் குழந்தையும் XY என்றால் ஆண் குழந்தையும் பிறக்கின்றன… இன்று எந்த பாலினம் வேண்டும் என்று நாமே ஆய்வகத்தில் முடிவு செய்யலாம். அது தான் சிசனிங் தொழில் நுட்பம்… அப்ப மனிதன் கடவுள் ஆகிவிட்டானா ஜோசப்?

                • அய்யா சரவனன் ஆதிதிராவிடர் சாதிய சார்ந்தவரே பேராயராக இருக்கும் போது எந்த திருச்சபையில் உங்களை உள்ளே நுழைய விட வில்லை என்று தமிழுக்கு ஜால்ரா அடிக்கும் நீங்கள் நிரூபிக்க வேண்டியது உங்கள் கடமை தலித்து சாதிய சார்ந்தவர்கள் பிஸப்பாவே இருக்கும் போது ஏன் இப்படி அவதூறை பரப்புகிறீர்கள் என்று தமிழுக்கு நான் அளித்த விளக்கத்தை தவறாக புரிந்து கொண்டீர்கள் ,சரி அதை விடுங்கள் xY விளக்கம் எல்லாம் தெரியாத முட்டாள் என்று நீங்களாகவே நினைத்துக்கொண்டு பதில் அளிக்கிறீர்கள் அய்யா அடியேன் நானும் 78 பேப்ப்ருல பாஸு பன்ன எம் டெக் பட்டதாரி என்று தாங்களும் தங்கள் சமூகமூம் அங்கீறத்து அருள் பாளிக்க வேண்டும்

                  • தலித் கிருஸ்துவராகிய திரு பாமா வின் ஒப்புதல் வாக்கு மூலமாக திகழும் கருக்கு சுய சரிதை நாவலில் அவரின் அனுபவங்களை, அவரின் தாழ்த்த பட்ட சாதிக்கென்று தனியாக தேவாலையம் அவரின் சொந்த ஊரில் இருப்பதனை தெளிவாகவே கூறுகின்றார் என்னும் நிலையில் அப்படி எல்லாம் இல்லை என்று முழு பூசனிகாயை சோற்றில் போட்டு மூட முயலாதீர்கள் ஜோசப்…..

                    • சொந்த ஊருல எஸ்ஸி தேவாலயம் சரி கம்மூனிஸ்ட்டுகளை சாதி அண்டவே இல்லயா எனக்கு தெரிந்து மூத்த கம்மூனிஸ்டு தா பாண்டியன் வெளிப்படையான தேவர் சாதி ஆதரவாளர் அப்புறம் சில மார்கிஸ்டு கம்மூனிஸ்டுகள் தங்கள் பேருக்கு பின்னடி சாதி போட்டு தங்கள அடயாளப்ப்டுத்தி கொள்கின்றனர் ,புத்தாண்டு நிதி வசுல் செஞ்ச மார்கிஸ்டு தோழர்கள் எஸ்ஸி தெருவுக்கு எஸ்ஸி தோழர்களும் பிஸி தெருவுக்கு பீஸி தோழர்கள் என்று பிரித்தே அனுப்புகிறார்கள் எஸ்ஸியா இருந்து கம்மூனிஸ்டா இருக்குறவங்க என்னதான் புடுங்குனாலும் ஒரு மாவட்ட செயலாளர் பதவி கூட சாதி பாத்து யாரு அந்த ஏரியா ல அதிகமுனு பாத்துதான் குடுப்பாங்க அனா கிறிஸ்தவ திருச்சபைல எஸ்ஸி அதிகமான விசவாசிகள் இருந்தா ஆட்டோமேட்டிக்கா அங்க எஸ்ஸிதான் பேராயர்

                      அண்னன் சொல்லுற அறிவுபூர்வமான கம்மூனிஸதுல தான் மார்கஸ் சொல்லுறாரு மதம் ஒரு அபின் அப்பிடினு இசுலாமிய மதம் அபினா சமத்துவத்தை போதிக்கும் மதமா இல்லை அபினா எனக்கு தெரிஞ்சு எங்க ஊரு முனியான்டி கோவிலுக்கு பின்னாடி உங்காந்து பள்ளன் பறயன் தேவர் நாடார்னு எல்லா சாதிக்கார கஞ்சா அடிக்கிறவன் எல்லாம் சமமா உக்காந்து கஞ்சா பீடிய ரவுண்டு கட்டி இழுப்பானுக அது போன்ற சமத்துவத்தைதான் இசுலாமிய மதம் போதிக்கின்றது என்று கம்மூனிஸ்டு தோழர்கள் சொன்னதாக எடுத்துக்கொள்ளலாமா ,

                      அப்புறம் கம்மூனிஸதுலயே மார்கிஸ்ட் லெலினிஸ்ட் இருக்கா மாறி
                      அய்யரிஸ்ட், எஸ்ஸியிஸ்ட்,பீஸியிஸ்ட்,லாம் இருக்கு எனக்கு என்னமோ மக இக இசுலாமிஸ்ட்நுதான் தோன்றது

                    • கிறிஸ்தவத்தில் சாதி இருகிறது என்று சொல்லி நான் கேட்ட கேள்வியை வினவுதள கட்டுரைக்கு ஆதரவாக திசை திருப்பிய செந்தில் பேராசிரியர் அவர்கள் யார் பூசனிக்காயை சோற்றில் மறைக்கிறார்கள் என்பதை தெளிவு படுத்த இசுலாம் எந்த வகையில் சமத்துவத்தை போதிக்கின்றது என்று விளக்கி அருளாமல் கிறிஸ்தவர்களை குறை சொல்லிக்கொன்டே இசுலாம் என்ற நாத்த பூசனிக்காயை சமத்துவ சோத்தில் ஏன் மறைப்பதற்க்கு துனையாக இருக்கிறீர்கள் உலகெங்கிலும் உள்ள் இசுலாமியர்களின் செயல் பாடுகளை கொண்டும் இசுலாமிய முத்தொகுப்பு நூலகளை கொண்டும் இசுலாம் என்பது மதம் என்ற போர்வையில் வந்த கம்மூனிஸ்டுகளுக்கு பிடித்தமான அரசியல் நாத்த பூசனிக்காய் என்று நிரூபிக்க முடியும் நீங்களும் முடிந்தால் இசுலாம் இஸ் இக்குவல்டு சமத்துவம் என்று நிருபிக்க வேண்டும் இல்லை என்றால் திருடனுக்கு தேள் கொட்டியது போல வினவு ஆளுக மாறி சும்மா இருக்கலாமே

                    • மணிகண்டன், எந்த மதத்திலும் கொள்கை அளவிலும் சரி , நடைமுறையிலும் சரி சமத்துவம் இல்லை என்ற கருத்தை நான் முன்பே கூறிய பிறகும் எதுக்காக மதங்களில் சமத்துவம் இருக்கிறது என்று நான் பொய்யாக முட்டுகொடுத்து உங்களிடம் வாதாடவேண்டும்?

                    • ஒரு வழியா எந்த மதத்துலும் கொள்கை அளவிலும் நடமுறயிலும் சமத்துவம் இல்லை என்று ஒப்புக்கொண்டதற்க்கு நன்றி அனா இசுலாமில் நடைமுறையில் சமத்துவம் இருப்பதாக ஒரு விர்ச்சுவல் ரியாலிட்டையை கம்மூனிஸ்டுகள் காட்டுகிறார்கள் இசுலாம் சமத்துவத்தை போதிக்கும் மதம் என்று.

                      இசுலாத்துல தலாக், பெண்களுக்கான சொத்துரிமை,குழந்தை திருமணம் ,ஆண்களுக்கு 4 கலியானம் என்ற மூடத்தனங்களை காட்டிதான் பொது சிவில் சட்டத்தை எதிர்க்கிறார்கள் பொது சிவில் சட்டம் வந்தால் மத முல்லாக்களின் மதிப்பு குறையும் இசுலாமிய கட்டமைப்பு சிதறி இசுலாமிய பெண்களிக்கு சுதந்திரம் கிடைக்கும் எனென்றால் மத்த மதங்களை விட இசுலாம் அதிகமாக பெண்களை ஒடுக்கும் தத்துவம் இந்த வகையில் பொது சிவில் சட்டத்தை வரவேற்க்கலாம்

                      மோடி நன்பக தன்மை அற்றவர் என்பதால் அவர் கொண்டு வரும் பொது சிவில் சட்டத்தை நம்ப முடியவில்லை என்றால் எப்பிடி பொது சிவில் சட்டம் இருந்தால் நல்லது என்று மக்களுக்கு விளக்கலாம் அதை விடுத்து பொது சிவில் சட்டமே தேவை இல்லைனு சொல்லுறது ஏன்னு தெரியல அதுவும் இல்லாம இசுலாம் சம்த்துவத்த போதிக்கும் மதமுனு இசுலாமுக்கு ஏன் ஜால்ரா வேற அடிக்கனும்

                    • ஒரு குரூப் செய்யுற தப்ப சுட்டிக்காட்டி இன்னொறு குரூப் செய்யுற தவ்றுக்கு நியாயம் கற்பிப்பது என்பது என்ன வகையான தத்துவமோ தெரியல

                    • joseph: இஸ்லாம் பற்றி நீங்கள் சொல்வது மிக சரி.

                      மோடி அல்லது காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் பொது சிவில் சட்டத்தை யார் கொண்டு வந்தாலும் இவர்கள் எதிர்ப்பார்கள் காரணம் இஸ்லாமிய அடிப்படைவாதம் கம்யூனிஸ்ட் கட்சியை பொறுத்தவரையில் இஸ்லாமிய அடிப்படைவாதமும் முற்போக்கு என்றே சொல்வார்கள் காரணம் இஸ்லாமிய அடிப்படை வாதம் அமெரிக்காவை எதிரியாக பார்க்கிறது, எதிரியின் எதிரி என் நண்பன் என்ற தத்துவத்தின் அடிப்படையில் கம்யூனிஸ்ட் கட்சியினர் இஸ்லாமிய அடிப்படை வாதத்தை ஆதரிக்கிறார்கள் (அல்லது எதிர்ப்பது இல்லை)

                      அதேபோல் மோடிக்கு கெட்ட பெயர் வரும் என்றால் இவர்கள் நம் நாட்டிற்கு இழிவை தேடி தரவும் தயங்க போவதில்லை.

                    • ஜோசப் , பொது சிவில் சட்டடத்தை எப்படி எல்லாம் ஹிந்துத்துவாக்கள் எதிர்கின்றார்கள் என்று அம்பலபடுத்தும் கட்டுரைகளை வினவு ஆறு பாகங்களாக வெளியிட்டு இருக்கிறது…. அதனையும் படியுங்கள்… மேலும் இந்த கட்டுரையில் மத சமத்துவத்தை பற்றி பேசிய நபர்…, நீங்கள் கம்யுனிஸ்டு என்று குறிப்பிடும் நபர் உண்மையில் கம்யுனிஸ்டு அல்ல அவர் தமிழ் இன வாத கொலகைகளில் முனைப்புடன் இருப்பவர் என்பதால் தான் வினவு உங்களுக்கு பதில் அளிக்காமல் மவுன புன்னகையையே பதிலாக அளித்துக்கொண்டு இருக்கின்றது என்ற உண்மையை உங்களால் இதுவரையில் புரிந்து கொள்ள முடியவில்லை ! வினவு தளத்திலோ அல்லது வினவின் அரசியல் சார்ந்த அமைப்புகளிலோ அப்ப்படி சமத்துவம் உள்ள மதம் உலகில் உள்ளது என்று கூறப்பட்டு இருக்குமாயின் அதற்கு முதல் எதிர்ப்பு குரல் என்னிடம் இருந்து தான் வந்து இருக்கும்! ஆனாலும் உங்களுக்கு அழுத்தமாக மீண்டும் கூறவ விரும்புகின்றேன்… உங்கள் மதம் அல்லது நான் சார்ந்த மதம் என்று இல்ல்லை… எந்த மதத்திலும் நடைமுறையில் சமத்துவம் இல்லை என்பதே உண்மை…. தொடருங்கள் உங்கள் விவாதத்தை…. அந்தஆறு கட்டுரைகளையும் படித்துவிட்டு வினவு சார்ந்த அமைப்புகளின் கருத்தை இந்த பொது சிவில் சட்டத்தை பற்றி அறிந்து கொள்ளுங்கள்… நன்றி…

                      https://www.vinavu.com/2014/09/23/common-civil-code-busting-the-myths-1/
                      https://www.vinavu.com/2014/10/09/common-civil-code-busting-the-myths-2/
                      https://www.vinavu.com/2014/10/29/common-civil-code-busting-the-myths-3/
                      https://www.vinavu.com/2014/11/25/common-civil-code-busting-the-myths-4/
                      https://www.vinavu.com/2015/01/02/common-civil-code-busting-the-myths-5/
                      https://www.vinavu.com/2015/02/06/common-civil-code-busting-the-myths-6/

                    • ஜோசப், நீங்கள் கம்யுனிஸ்ட்டாக நம்பும் அவர்-தியாகு அவர்கள் (மத சமத்துவம் பற்றி பேசியவர்) தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் தலைமைக் குழு உறுப்பினர் . எனவே அவரின் கருத்தை கம்யுனிஸ்டின் கருத்தாக நீங்கள் கருதும் போது அது உங்களின் புரிந்தலின் குற்றமே தவிர வினவின் குற்றம் அல்லவே !

                    • ஜோசப், கடந்த மூன்றாம் தேதியே என்னுடைய பின்னுட்டத்தில் (2.2.2.1.1.2.1) “மற்றபடி மதத்தின் மீதான என் கருத்து என்னவென்றால் மதம் அது எதுவென்றாலும் மக்களை அதனுள் அடிமைபடுத்தி அவர்களை அறிவியல் ரீதியாக சிந்திக்க இயலாத நிலைக்கு தள்ளுவது தான் மதத்தின் கடமையாக இருக்கிறது.”” என்று குறிப்பிட்டு உள்ளேன்…

                      மேலும்30 dec அன்றே என் பின்னுட்டத்தில் (2.2.1) மதங்கள் மீதான பாமாவின் கீழ் கண்ட கருத்தை உங்களுக்கு அளித்து மதங்களின் மீதான மாயை பற்றி கூறி இருந்தேன்.
                      “சொந்த மண்ணில் தலித்களுக்கு அவமானம் என்றில்லை…. ஆண்டவன் பிரதிநிதிகளிடமும் அதுதான் கதி…..இதில் இந்த மதம் அந்த மதம் என்ற வேறுபாடு இல்லை.இது தான் இன்றும் இருக்கும் கொடுமை..இந்தக் கொடுமைகளை எதிர்த்த போராட்டமே ‘கருக்கு” ஆக உருவெடுத்து உள்ளது.”

                      ஆனாலும் இவற்றை எல்லாம் படித்து உணராமல் நீங்கள் பொறுமை இன்றி பேசிக்கொண்டு இருபது உங்களின் ஆவேசத்தை மட்டுமே காட்டுகின்றேதே தவிர உங்கள் அறிவை வெளிகாட்டவில்லை…
                      Joseph said :/// ஒரு வழியா எந்த மதத்துலும் கொள்கை அளவிலும் நடமுறயிலும் சமத்துவம் இல்லை என்று ஒப்புக்கொண்டதற்க்கு நன்றி அனா இசுலாமில் நடைமுறையில் சமத்துவம் இருப்பதாக ஒரு விர்ச்சுவல் ரியாலிட்டையை கம்மூனிஸ்டுகள் காட்டுகிறார்கள் இசுலாம் சமத்துவத்தை போதிக்கும் மதம் என்று.///

        • செந்தில்குமரன்,கிறிஸ்தவத்தில் ஜாதி இல்லை.கிறிஸ்தவர்களிடம் ஜாதி தொற்றிக்கொண்டுவிட்டது உண்மை.இஸ்லாம் இயல்பிலேயே மிக வீரியமான எதிர்ப்பு மருந்தை கொண்டிருப்பதால் முஸ்லிம்களிடம் அவை தொற்றுவதற்க்கு வாய்ப்பேயில்லை.ஆனால் இந்த ஜோசப்பின் விவாதம் ஏதாவது அர்த்தத்தோடு இருக்கிறதா?முதலில் ஜாதியை பற்றிய விவாதமே இந்த கட்டுரைக்கு அர்த்தமற்றது.அதையும் தாண்டி முஸ்லிம்கள் முஸ்லிம் அல்லாதவர்களை காபிர்கள் என் கிறார்களாம்.இது ஜாதி சம்மந்தபட்டதா?தமிழனை தமிழன் என்று அழைப்போம்.தமிழன் அல்லாதவனை தமிழனல்ல என்றுதானே அழைப்போம்.கடவுளை கடவுளுக்கென்று ஒரு இலக்கனத்தை வகுத்து அந்த வரயறையோடு இஸ்லாம் நம்ப சொல்கிறது.அது அல்லாதவர்களை கடவுளை நம்பாதவர்கள் என் கிறது.இதன் அரபு பதம்தான் காபிர் என்ற வார்த்தை.உதாரணத்திற்க்கு என் பார்வையில் ஜோசப் காபிர் என்றால்,ஜோசப் பார்வையில் நான் காபிர்தான்.நான் டிரினிடி எனப்படுகிற முக்கடவுள் கொள்கையை நம்புவதில்லை.நான் கிறிஸ்தவன் இல்லை.கிறிஸ்தவர்களுக்கு நான் காபிர்.என்னுடைய ஏகத்துவ கொள்கையை,கடவுளுக்கு ஒருபோதும் மகன் தேவையில்லை என்ற கொள்கையை ஜோசப் ஏற்கவில்லை எனக்கு ஜோசப் காபிர்.இதில் எங்கே ஜாதி வந்தது?முஸ்லிம் அல்லாதவர்களை கொல்ல சொல்கிறது இஸ்லாம் என்பது, மணிகண்டன் கள் இன்னும் கொஞச நேரத்தில் ஆரம்பிக்க போவது,அதை இந்த ஜோசப் அழகாய் எடுத்து கொடுக்கிறது.இப்போது புரிகிறதா? இந்த ஜோசப்பை ஏன் கஞ்சி காய்ச்ச வேண்டும் என்று?ஜெயலலிதா சாவுக்கு பிரியாணி வைத்து கொண்டாடினேன் என்பதும் இது மாதிரியான சலம்பல்களில் ஒன்றுதானே தவிர நீங்கள் நினைப்பது போல் சமூக அக்கறையால் வந்த கொந்தளிப்பு கிடையாது.ஜோசப்பிற்க்கு இருக்கிற ஒரே தகுதி கையில் கணிணி இருப்பது மட்டும்தான்.அதை வைத்து கக்கூஸில் கிறுக்குபவன் கிறுக்குவதைப்போல கிறுக்குவது.பதில் சொல்ல எந்த தகுதியுமற்ற, ஆரோகியமான விவாதத்தை திசை திருப்ப மட்டுமே பயன்படுகிற ஒருவரின் வார்த்தைக்கு தயவு செய்து முக்கியம் கொடுத்து பதிலலிக்காதீர்கள்.

          • //ஜோசப் பார்வையில் நான் காபிர்தான்.நான் டிரினிடி எனப்படுகிற முக்கடவுள் கொள்கையை நம்புவதில்லை.நான் கிறிஸ்தவன் // அய்யா நான் மட்டுதான் காபீர் என்று உங்க மதம் சொல்லுது கிறிஸ்தவ மதத்துல முஸ்லீம்களை காபிர் என்றோ இல்லை வேறு எதும் பெயர் வைத்தோ அழைக்கவில்லை என்பதை தெரிந்து கொள்ளுங்கள் ஆத்திரம் அதிகமாகி அது இது என்றெல்லாம் பேச வேண்டாம் கிறிஸ்துவர்கள் உங்களை காபிர்கள் என்றோ கொல்லப்பட தகுதியான்வர்கள் என்றோ எங்கும் சொல்லவில்லை உங்க மத மூடத்தனதை ஏன் கிறிஸ்தவத்தோடு கோர்த்து விடுகிறீர் உங்க மத மூடத்தனத்துக்கு கம்மூனிஸ்டுகள் யோக்கிய சர்டிபிகேட் கொடுக்கலாம் ஆனா எல்லாரும் குடுத்தே ஆகனும்னு எதிர் பாக்க கூடாது என்ன பிரியுதா….

            • இதுதான் மூளை அவிந்த வாதம்.கிறிஸ்த்தவ மதம் முஸ்லிகளை காபிர் என்று சொல்லுமா?இஸ்லாம் ,கிறிஸ்த்தவத்தையும் இயேசுவையும் பார்க்கும் பார்வை தனி.முஸ்லிம்கள் எனப்படுவோர் கிறிஸ்த்தவத்திற்க்கு பிறகு வந்தவர்கள் என்பதுதானே வரலாற்று பார்வை.பிறகு எப்படி கிறிஸ்த்தவம் முஸ்லிகளை பற்றி பேசும்?இயேசுவை ஏற்க்காதவர்களை கிறித்தவம் என்ன சொல்கிறது?பாவிகள் என் கிறது.பாவிகளை இரட்ச்சிக்க வந்தவராக இயேசுவை சொல்கிறது.அவரை பரிசுத்த ஆவியாக ஏற்பவர்களே பரலோகராஜியத்தில் நுழைய முடியும் என் கிறது.இப்படி அனைவரையும் பரலோக ராஜியத்தில் பிரவேசிக்க வேண்டித்தானே தினகரன் பால்தினகரன் அவர் மனைவி மக்கள் இன்னும் மோகன்,சி லாசரஸ் போன்றவர்கள் அனுதினமும் எல்லா தொலைகாட்சிகளிலும் கூவி கூவி அழைப்பு விடுகிறார்கள்.நாங்கள் இதை எப்படி பார்க்கிறோம்? எங்களை பாவிகள் என்று அடையாளப்படுத்துவதில் எங்களுக்கு ஏதொரு வருத்தமும் இல்லை.ஐயோ பாவிகளா,”இப்படி கர்த்தரை மனித குடும்பமாய் கற்பனை செய்து மகன் என்றும் தாய் என்றும் கற்பனை செய்து இயேசு சொல்லாததை சொன்னதாக அவர் மீதே இட்டுகட்டி பொய்யை அவிழ்த்து விடுகிறீர்களே “என்று உங்களை பரிதாபமாகத்தான் பார்க்கிறோம்.நீங்கள் சொல்வது உண்மை என்று நம்பினால்தானே எங்களுக்கு ஆத்திரம் வருவதற்க்கு?”இறைவன் நீங்கள் கற்பனை செய்வதைவிட்டும் தூயவன்,அவன் யாரையும் பெறவில்லை யாராலும் பெறப்படவும் இல்லை.நீங்கள் வணங்குவது உங்கள் கற்பனைகளையே,நீங்கள் காபிர்களே “என்று எங்கள் நம்பிக்கையின் அடிப்படையில் நாங்கள் சொல்லும்பொழுது உங்களுக்கு கோபம் வந்தால் உங்கள் நம்பிக்கை பலவீனப்பட்டிருக்கிறது.ஒருவேளை அவன் சொல்வது உண்மையாக இருக்குமோ என்ற பயம் வருகிறது.அந்த பயம்தான் இப்படி பிதற்ற வைக்கிறது.ஜோசப்பே இயேசுவை உண்மையாய் விசுவாசியப்பா! விசுவாசம் உண்மையாயிருந்தால் காபிர் என்பதற்க்கு கோபம் வராது.”உளறுகிறான் துளுக்கன் “என்று போய்க்கொண்டே இருக்கலாம்.

              • ____என்ன தலிவா இன்னும் புரியவில்லயா நான் உங்கட்ட கேள்வியே கேக்க வில்லை இ ருந்தாலும் இன்னும் பொங்கலாமே ஆத்திரம் அதிகமாகி இப்படியெல்லாம் கத்தலாமா கம்மூனிஸ அறிவாளிகளே நான் கேட்டதுக்கு சும்மா இருக்கும் போது நீங்க ஏன் பொங்க வேண்டாமே…..யாயா அல்லா

                • பின் குறிப்பு கம்மூனிஸ்டுகளுக்கு யேசுவின் போதனைகளை பொலிட்டிகள் ரீதியா காப்பி அடிச்ச தத்துவமே கம்மூனிஸம் என்று சொல்லுகிறேன் இதை பொய் என்று நிரூபித்து கம்மூனிஸம் தனித்துவமானது யேசுவின் போதனைகளுக்கும் சம்பந்தம் இல்லை என்று நிரூபித்தால் நிருபிக்கிற மனுசனுக்கு நான் 2000 சன்மானம் தருகிறேன் அதை விடுத்து இசுலாம் சம்த்துவத்தை போதிக்கும் மதம் என்று கம்மூனிஸ்டுகள் நிரூபிக்க வேண்டும் அப்படி நிரூபித்தால் கூட 2000 சன்மானம் தருகிறேன் முடிந்த தோழர்கள் வரவும்நான் ஆவலோடி காத்து இருக்குறேன் ___________

                  • ஜோசப் அவர்களை அடுத்து வேறு ஒருவர் “வியர்வை சிந்தும் முன்னே தொழிலாளிக்கு கூலி கொட்டுகச்சொல்கின்றது எங்கள் மதம் அதனால் கம்யுனிசம் எங்கள் மதத்தில் இருந்து மரபு வாரியாக வந்தது ” என்று கூறிக்கொண்டு வருவார் என்றால் அவருக்கும் சேர்த்தே பதில் அளிக்கின்றேன்…!
                    மார்சியம்-லெனினியம் என்பது இந்த உலகின் பல ஆயிரம் ஆண்டுகள் உள்ள அதன் தெரிந்த வரலற்றின் அடிப்படையில் தான் தொகுக்கபட்ட ஒன்றாகும்… கற்பனையில் எல்லாம் எழுதபட்டது அல்ல….

                    • உழைப்பவ்ர் வியர்வை உலருமுன்னே அவர்க்கு ஊதியம் கொடுத்துட வேண்டும் என்று முகமது போதித்ததாக சொல்லப்படும் பொய்யை என்னிடமே சொல்லுகிறீர்கள் இசுலாமிய முத்தொகுப்பு நூல்களலான குரானுலோ இல்லை கதிஸுலோ இல்லை முகமதின் வாழ்க்கை வரலாறு என்ற சீராத்திலோ இந்த வாசகத்தை எடுத்து காண்பிக்க வேண்டும் அதை விடுத்து வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்ற ரீதியில் பேசுவது அறிவுடமை ஆகுமா ,மார்க்கிஸியமும் லெலினிசியமும் எதுக்கு இசுலாமுக்கு ஜால்ரா தட்டுது. ஏனோ இசுலாம் சம்த்துவத்தை போதிக்கின்றது என்று பொய்யை அவிழ்த்து விட வேண்டும் என்ன சமத்துவத்தை இசுலாத்தில் கண்டார்களாம் இந்த பொதுவுடமை வாதிகள் அந்த சம்த்துவத்தை போதிக்கும் போதனையை குரானிலிருந்து அவிழ்த்து விடலாமே நாங்க என்ன வேனாமுனா சொன்னோம்

                    • குராஎனிலிறுந்து இல்லை இசுலாமிய முத்தொகுப்பு நூல்களில் இருந்தோ எவனாவ்து உழைப்பவ்ர் வியர்வை உலருமுன்னே அவர்க்கு ஊதியம் குடுத்துட வேண்டும் என்று முகமது போதித்ததாக நிரூபிக்க முடியுமாநிரூபிக்க கம்மூனிஸ்டுகள் தயாராக இருக்கிறீர்களா

                    • “மார்சியம்-லெனினியம் என்பது இந்த உலகின் பல ஆயிரம் ஆண்டுகள் ” இப்பவே இப்படி கண்ண கட்டுதே ஏம்பா புருடா விடுவதற்கு ஒரு அளவு இல்லையப்பா… விட்டால் கல் தோன்றி மண் தோன்றா காலத்தில் இருந்தே மார்சியம்-லெனினியம் இருந்தது என்று சொல்லுவீங்க போல 🙂

                    • மார்சியம்-லெனினியம் என்ற கருத்தாக்கம் உலகின்…. ஏன் பிரபஞ்சத்தின் அனைத்து அறிவியல் சார்ந்த மனித கண்டுபிடிப்புகளையும் உள்ளடங்கியது என்ற நிலையில் அது மக்களை முடக்கும் மதங்களின் முட்டாள் தனங்களுக்கு எதிரானது… சமுகவியல், அரசியல் , பொருளாதாரம் , உலகின் வரலாறு என்று அனைத்தின் மீதும் தனக்கே உரிய தனித்துவ அறிவு பூர்வமான பார்வையை கொண்டது தான் மார்சியம்-லெனினியம்… உலகில் மதங்கள் தோன்றுவதற்கு முன்பே மனிதன் எப்படி பிற உயிரினங்களை விட அறிவு பெற்றான் என்று ஆராய தொடங்கிய மார்சிய-லெனினிய கோட்பாடுகள் அறிவியலின் அத்துனை விசயங்களையும் தன்னகத்தே கொண்டது….

                    • மனிகண்டன் எவ்வளவு எளிதாக கேலி செய்கிறீர்கள் மார்க்ஸுயத்தை உழைக்கும் மக்களே உன்மையில் முதலாளிகள் உழைப்பு தான் உன்மையான மூலதனம் என்பதை லாஜிக்கலாக நிருபிக்கும் தத்துவமே மார்க்ஸியம் அதுக்குகாக பொருளாதர மூலதனம் போட்டு தொழில் பன்ற முதலாளிகள் நில உடமையாளர்கள் இவாளுக்கெல்லாம் எப்பிடி பணம் நிலம் எல்லாம் சொந்தமாச்சுனு வரலற்று ரீதியா கல் தோன்றி மண் தோன்றிய காலமுதல் மனிதன் வரலாற்றை ஆராய்ந்து எழுதப்பட்டது என்றுதான் சொல்லுரார் அவர் மார்க்கிஸியம் கல் தோன்றி முன் தோன்றா காலத்திய தத்துவம்னு சொல்லவில்லை மார்க்கிஸியம் 18 ஆம் நூற்றாண்டு தத்துவம்னு வரலாற்று பேராசியருக்கு தெரியாத என்ன

                      மார்க்ஸியம்னு சொன்ன உடனே பொசுக்குனு சிலருக்கு கோவம் வர்ரது அது ஏன்னு தெரியல

    • நான் கேட்டது இசுலாமியர்களுக்கும் இசுலாமியர் அல்லாதவர்களும் சமம் என்று இசுலாம் போதிக்கின்றதா என்பதே அப்பிடி இல்லை பின்ன எப்பிடி இசுலாம் சம்த்துவத்தை போதிக்கும் மதம் என்று சொல்லுகிறார் இந்த மெத்த படித்த அறிவாளி என்பதே இது வினவு ஆளுகள்க்காக நான் கேட்டது ,இடைல புகுந்து உங்க பிட்ட இங்க ஓட்டாதிங்க பாய் அப்புறம் அரபி அரபி அல்லாதவன்ற வித்தியாசத்த அனுபவபூர்வமாய் அனுபவித்த ஆளுக நிறைய பேர் தங்கள் அனுபவங்களை வலை பக்கத்தில் எழுதிக்கொன்டு இருக்கிறார்கள் தீண்டாமைனா திங்கிறது தொடுறதுனு சொல்லிக்கிட்டு அப்பிடி பாத்த நான் தமிழகத்துல தீண்டாமை கொடுமையை அனுபவித்தது இல்லை அய்யரிலுருந்து அருந்ததியர் வரை எனக்கு நண்பர்கள் என்னையும் யாரும் விலக்கியதுமில்லை நானும் யாரையும் விலக்கியதில்லை …

      • இதற்கு சிறந்த உதாரணம் நம் மீரான் பாய், இந்தியாவில் சிறுபான்மையினருக்கு அனைத்து உரிமைகளும் உள்ளது என்று சொன்னால் உடனே அவருக்கு கோபம் வரும் நீ யார் எனக்கு உரிமைகளை கொடுக்க இது என் உரிமை என்பார் ஆனால் பாக்கிஸ்தான் மற்றும் இஸ்லாமிய நாடுகளில் ஏன் மற்ற மத சிறுபான்மையினருக்கு எந்த உரிமையும் கொடுக்காமல் இருக்கிறார்கள் என்று கேட்டால் பதில் சொல்லமாட்டார். பாகிஸ்தானிலோ அல்லது வேறு இஸ்லாமிய நாட்டிலோ மற்ற மத சிறுபான்மையினர் தங்கள் அடிப்படை உரிமைகளை பற்றி கூட பேச முடியாது ___________________

    • I accept some of your arguments but not everything. For me, there are caste differences within muslims, and low caste muslims are not treated equal. But better than other religions.

  3. பொது சிவில் சட்டம் என்பது அனைவருக்கும் பொதுவானது, அதில் ஹிந்துக்களும் அடங்குவார்கள் (அப்படி என்றால் அனைத்து ஜாதியினரையும் சேர்த்து தான்) இஸ்லாமியர்களுக்கு கிரிமினல் சட்டம் மட்டும் பொதுவாக வேண்டுமாம் ஆனால் சிவில் சட்டம் மட்டும் அவர்கள் மத அடிப்படையில் வேண்டுமாம் ஏன் இந்த போலித்தனம் ?

  4. அதான!அப்போதான் பாய்ங்க நாலு பேராச்சும் வினவு க்ரூப்பில் சேருவாங்களான்னு பாப்பம்

  5. // பொது இந்துச் சட்டமே இல்லை பிறகு எதற்கு பொது சிவில் சட்டம் ? //

    அந்த பொது இந்து சட்டத்தை கொண்டு வ்ருவதற்காக தான் 🙂

  6. / பொது இந்துச் சட்டமே இல்லை பிறகு எதற்கு பொது சிவில் சட்டம் ? // இது என்னாங்க நியாயம். இதை பேசுறதுக்கு ஒரு அறிவாளி வேண்டுமா. உருப்படியா எதாவது பேசுங்கய்யா.

  7. பொது சிவில் சட்டம் பற்றி: அது எப்படி இந்துக்களுக்கே பாரபச்சமானது என்று விளக்கி ஆறு கட்டுரைகள் வினவில் வந்து உள்ளது…. மணிகண்டன் மற்றும் இராமன் போன்றவர்கள் படித்து முடிந்தால் பதில் அளிக்கலாமே! இணைப்புகளை கீழ் கொடுக்கின்றேன்.

    https://www.vinavu.com/2014/09/23/common-civil-code-busting-the-myths-1/
    https://www.vinavu.com/2014/10/09/common-civil-code-busting-the-myths-2/
    https://www.vinavu.com/2014/10/29/common-civil-code-busting-the-myths-3/
    https://www.vinavu.com/2014/11/25/common-civil-code-busting-the-myths-4/
    https://www.vinavu.com/2015/01/02/common-civil-code-busting-the-myths-5/
    https://www.vinavu.com/2015/02/06/common-civil-code-busting-the-myths-6/

    • ___________

      சரி விஷயத்திற்கு வருவோம் இஸ்லாமியர்கள் தனிநபர் இஸ்லாமிய சட்டம் வேண்டும் என்று சொல்லும் போது ஏன் பொது கிரிமினல் சட்டம் வேண்டாம் அதிலும் எங்களுக்கு இஸ்லாமிய சட்டமே வேண்டும் என்று கேட்பது இல்லை ?

      தற்போதைய சட்டங்கள் பற்றி தவறான ஒரு பிம்பத்தை தான் வினவு கொடுத்து இருக்கிறது. பெண்களுக்கு சொத்தில் சம உரிமை உண்டு என்று எப்போதோ நீதிமன்றம் தீர்ப்பு கொடுத்து இருக்கிறது அதையும் மக்கள் ஏற்று கொண்டு நடைமுறை படுத்தியிருக்கிறார்கள்.

      http://www.thehindu.com/news/national/hindu-woman-entitled-to-equal-property-rights-supreme-court/article2534751.ece

      விவாகரத்து ஆன பெண்ணிற்கு ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும் என்பதும் எப்போதோ நடைமுறைக்கு வந்து இருக்கிறது.

      அடுத்தது ஹிந்துக்கள் எல்லோரும் என்னமோ வைப்பாட்டியோடு அலைவது போல் பேசுகிறார்கள், சட்டப்படி தவறு அப்படி செய்தால் பாதிக்கப்பட்ட பெண் நீதிமன்றத்தை நாடலாம்.

      • இந்த ஆறு கட்டுரைகளையும் முழுமையாக படியுங்கள் மணிகண்டன்….வினவின் இந்த கட்டுரைகள் இந்திய சுதந்திரம் அடைந்த நாட்களில் இருந்து பொது சிவில் சட்டம் இயற்ற இந்து மதவாதிகள் அம்பேத்கார் தலைமையிலான சட்ட குழுவுக்கு நாடாளுமன்றத்தின் உள்ளும் புறமும் எப்படி எல்லாம் தடை செய்தார்கள் என்ற விசயத்தை விவரிக்கின்றது. மீண்டும் அந்த கட்டுரைகளின் விவரங்களை நான் பின்னுட்ட பகுதியில் தொகுத்து அளிக்க நீங்கள் விரும்பினீர்கள் என்றாலும் அதனையும் செய்கின்றேன்….

  8. இசுலாமை பற்றி நன்றாக தெரிந்தவன் என்ற முறையில் இசுலாமிற்க்கு யோக்கிய சர்டிபிகேட் குடுக்கும் அயோக்கியத்தனத்தை எதிர்க்கிறேன் காபீர்கள் சிறு நீரைப்போன்று தீட்டானவர்கள் என்று சொல்லும் இசுலாமிய கருத்தாக்கத்தை முற்றிலிம் ஒழிக்க வேண்டும் என்பதே என் கொள்கை ,இசுலாமிற்க்கு உரமூட்டும் ஊக்கமூட்டம் செய்கையை யார் செய்தாலும் தவறே….

  9. மணிகண்டன், ஜோசப், மீரான்,
    இங்கு வினாவில் பொது சிவில் சட்டத்தை பற்றி பேசிக்கொண்டு இருபவர்கள் தம் தம் மதங்களில் உள்ள பாகுபாடுகளை பற்றி நியமாக கருத்தக்கங்க்களை வைக்காமல் அடுத்தவர் மதத்தின் குறைகளை சுட்டிக்காட்டி அதனை பொது சிவில் சட்டத்தின் மூலம் களைய வேண்டும் என்ற கருத்துடன் நிற்கின்றார்கள்…குறிப்பாக கூறுவது என்றால் மணிகண்டனின் பின்னுட்டம் 3 மற்றும் 8.1 ஆகியவை இத்தகைய கருத்து நிலையிலேயே தான் எழுதப்ட்ட்டு உள்ளது…. உண்மையில் எந்த மதத்தின் சட்டங்களும் மக்களிடையே சமுக சமத்துவத்தையும் , பாலின சமத்துவத்தையும் கொண்டதாக இருக்கவில்லை…. நான் உள்ள இந்து மதத்தில் சமுக சமத்துவத்தை பெற கோவில் நுழைவு போராட்டம், கருவறை நுழைவு போராட்டம், அனைவருக்கும் அர்சகர் ஆக உரிமை என்று நீண்ட நெடிய போராட்டத்தை ஜனநாயக பூர்வமாகவும் ,சட்டபூர்வமாகவும் தொடர்ந்து நந்தன் நாள் முதல் இன்றைய நாள் நடத்தவேண்டி தான் உள்ளது.

    [1]அதிலும் இன்றைய நிலையில் சமுகத்தில் அனைவரும் அர்ச்சகர் ஆகும் உரிமையை நீதிமன்றம் அனைத்து மக்களுக்கும் தம் தீர்ப்பின் மூலம் அளிக்கவில்லை… ஹிந்து மக்களின் கோவில்களில் மத தலைமை ஏற்பு உரிமையை (அர்சகர் ஆகும் உரிமையை ) பார்பனர் அல்லாதவர்களுக்கு தடை செய்கின்றது.
    [2] பிற மதங்களில் சமுக சமத்துவம் ஆண்களுக்கு அனைவரும் மத குருக்கள் ஆகும் விசயத்தில் இருந்தாலும் அதிலும் பாலின சமுத்துவம் இல்லை. பாலின ரீதியான வேறுபாடுகளுடன் தான் அந்த மதங்களில் பெண்கள் மத தலைமை ஏற்பு விசயங்களில் இரண்டாம் நிலையில் உள்ளார்கள்…சமுகத்தின் அனைத்து துறைகளிலும் பெண்கள் முன்னேறும் நிலையில் மத தலைமை ஏற்பு விசயங்களில் பெண்கள் இரண்டாம் நிலையில் தான் உள்ளார்கள்..

    மதங்களுக்கு உள்ளேயே முழுமையான சமத்துவம் இல்ல்லாத நிலையில் அத்தகைய முரண்பாடுகளை மதங்கள் தம்முள் கலையாமல் எப்படி முழுமையான பொது சிவில் சட்டத்தை அணைத்தது மதத்துக்குமானதாக இயற்றமுடியும்? எனவே முதல் கட்டமாக முதன்மையான விஷயமாக ஒவொரு மதத்தினுள்ளும் உள்ள சம்த்துவமினமைகள்(பாலின/சமுக ச்மக்த்துவமின்மைகள் ) முதலில் முழுமையாக களையப்படவேண்டும் . அடுத்து தான் அனைத்து மதத்துக்குமான பொது சிவில் சட்டத்தை பற்றியே நாம் சிந்திக்கவே முடியும்… எனக்கு தெரிந்து வரலாறில் இரு நாடுகள் அத்தகைய முயற்சியை மேற்கொண்டன… அன்றைய கம்யுனிச சோவியத் யுனியன் என்ற பல்வேறு நாடுகளின் கூட்டமைப்பு…. மற்றது இன்றைய முதலாளித்துவ பிரான்ஸ்… முதலாவது தன் முயற்சியில் முழுமையாகவும் , இரண்டாவது நாடு தன் முயர்சியில் பகுதி அளவுக்கும் வெற்றி பெற்று உள்ளளன.

    • திருசெந்தில்குமரன் பொதுசிவில் சட்டத்தை பற்றி ஆரோகியமாய் விவாதிக்க நிறைய உள்ளது.ஆனால் இந்த பி ஜோசப்பை வைத்துக்கொண்டு எந்த உருப்படியான விவாதமும் நடத்த முடியாது.இது நான் முன்னமே அறிந்தது.இதற்க்குத்தான் ஜெயலலிதா பற்றிய விவாதத்திலேயே நான் குறிப்பிட்டுருந்தேன்.நீங்கள் நான் ஏதோ தனிப்பட்ட முறையில் ஜோசப்பை தாக்குவதாக வேறு புலம்பி இருந்தீர்கள்.அவரும் தான் ஒரு சக்கிலிய சமூகத்தை சேர்ந்தவன் என்றெல்லாம் வேறு அடையாளமிட்டிருந்தார்.யார் சக்கிலியன் யார் சாணான் என்றெல்லாமா விவாதம் போனது?எதற்க்காக இந்த தேவையற்ற குறிப்பிடல்?அதுதான் இந்த ஜோசப்பின் குதர்க்க விளையாட்டு.முற்றிய நோய் உள்ள மனது இந்த ஜோசப்புக்கு.பல காலமாய் இந்த விளையாட்டை எந்த தலைப்பு விவாதத்திற்க்கும் விளையாடிக்கொண்டு திரிவது இந்த ஜோசப்புக்கு வாடிக்கை.இதை ஒரு விவாதமாக கருதி நீங்கள் பதிலுரைத்தால் அர்த்தமற்ற உளறலில்தான் நேரம் கரையும்.நாம் எங்கெங்கோ இருந்து எவ்வளவோ வேலைகளுக்கிடையில் ஒரு நல்ல சிந்தனைக்கு வேண்டி அவரவர் தரப்பிலிருந்து மெய்யான அக்கறையோடு விவாதிப்பதாகத்தான் நான் கருதுகிறேன்.நான் ஒரு வியாபாரி.இன்றைய காலத்தில் கழுத்தை நெறுக்கும் பிரச்சினைகளோடு அதை சமாளிப்பதையே பெரும் போராட்டத்தோடுதான் உங்க்ளோடும் விவாதித்து வருகிறேன். நீங்களும் பல்வேறு பொருப்போடும் போராட்டத்தோடுதான் என்னோடு விவாதிப்பீர்கள் என்று கருதுகிறேன்.விவாதத்தில் பங்கு பெறாவிடினும் அனைத்தையும் அமைதியாக கவனித்து கொண்டிருக்கிற பல்வேறு மக்களும் கூட நம்மோடு இருக்கிறார்கள் என்பதும் உண்மை.அனைத்தையும் உதாசீனப்படுத்தும் விதமாய் சம்மந்தமில்லாமல் சலம்பி கொண்டிருந்தால் விவாதத்தில் பங்கெடுக்க ஆர்வம் வருமா?பொதுசிவில் சட்டத்திற்க்கும் இஸ்லாம் கிறிஸ்த்தவத்தின் நம்பிக்கை சார்ந்த விஷயங்களுக்கும் ஏதாவது பொருள் இருக்கிறதா? இருந்தும் நான் அதற்க்கு விளக்கமும் கொடுத்து விட்டேன்.ஒரு கொள்கையை சார்ந்தவனை அந்த கொள்கை சார்ந்தவன் என்றுதான் அடையாளப்படுத்த முடியும்.அதை ஏற்க்காதவனை கொள்கை சாராதவன் என்றுதானே வகை படுத்த முடியும்?காபிர் என்ற பதம் அந்த வகையில்தான் பயன்படுத்த படுகிறது.காபிர்களை விரோதிகளாக கருதுங்கள் என்று இஸ்லாம் சொவதாக நீங்கள் கருதினால் அது பொய்.அல்லது இஸ்லாத்தின் மேல் சொல்லப்படுகிற அவதூறு. சக்காத என்பது நாங்கள் கட்டாயம் செய்தே தீரவேண்டிய கட்டாய கடமை.அதில் எட்டு பிரிவினருக்கு சக்காத்தை பிரித்து கொடுக்க சொல்கிறது.அதில் ஒரு பிரிவினர் மாற்று கொள்கையுடையோர்.அதை காரணம் கூறி இஸ்லாம் கொடுக்க சொல்கிறது.”மாற்று கொள்கையுள்ள மக்களுக்கு உங்கள் மேல் எந்த கசப்பும் வராமல் இருப்பதற்க்கும்,உங்களோடு எந்த வம்புக்கும் வராத மக்கள் மேல் நீங்கள் நேசம் பாராட்டுவதற்க்கும் அது காரணமாக அமையும்”என் கிறது.இவையெல்லாம் தலைப்பிற்க்குரிய விவாதமே அல்ல.இதுதான் ஜோசப்பை ஒரு பொருட்டாக கருதினால் இப்படி தடம் மாறி விவாதிக்க வேண்டி வரும்.அலட்ச்சியம் பண்ண வேண்டியவர்களை அலட்சியம் பண்ணித்தான் ஆகவேண்டும்.இல்லை என்றால் சம்மந்தா சம்மந்தமில்லாமல் பேசிக்கொண்டு திரிய வேண்டியதுதான்.

      • மீரா சாகிபு என்னை சக்கிலியர் என்று சொல்லுவதில் மிகவும் மகிழ்ச்சி நாங்கள் கிளின் செய்யும் சாக்கடையும் கக்கூஸிம் அடைபெடுக்கும் பாதாள சாக்கடையும் உடனடியாக கிளீன் ஆகி விடும் அப்புறம் நாங்கள் குளித்து விட்டால் எங்கள் உடலும் சுத்தமாகி விடும் அனால் உங்கள் மத வெறி என்ற அழுக்கு உன்னை விட்டு விலகாது ஆனா நான் என்னைக்கும் சுத்க்டமாகத்தான் இருப்பேன் அப்புறம் எங்கே சக்கிலியன் சானான் என்ற விவாதம் நடந்தது உங்க மதத்த சொன்ன கொஞம் உர்ர்ர்ர்ர்னு வர்ரது சகஜம் தான்

      • திரு மீரான் , பொது சிவில் சட்டத்தை பற்றிய விவாதமாகத்தான் இதனை நினைகின்றேன்….ஜோசப் மற்றும் மணிகண்டன் போன்றவர்கள் ஒரு குறிப்பிட்ட மதத்தை(இஸ்லாமை) தாக்கும் நோக்கத்துடன் இங்கு விவாதித்தாலும் அவற்றுக்கு பதில் அளிக்க வேண்டிய கடமை எனக்கு உள்ளதாகவே நினைகின்றேன்… மேலும் மோடி வடிவமைக்கும் பொது சிவில் சட்டம் எப்படி எல்லாம் பெரும்பான்மை மதத்தில் உள்ள சமுக ஏற்றத்தாழ்வுகளை களையாமல் சிறுபான்மை மதத்தை குறிவைக்கின்றது என்பதனையும் அம்பலபடுத்த வேண்டிய தேவையும் இந்த விவாதத்தில் தவிர்க்கவே இயலாமல் எழுகின்றது…வேற்று மதத்தவர்களை சுட்டுவதற்கு காபிர் என்ற வார்த்தைக்கு இணையான பதங்கள் கிருஸ்துவத்தில் பாவிகள் என்றும் ஹந்து மதத்தினுள் சூத்திரர்கள் , பஞ்சம்ர்கள் என்றும் இருக்க ஒரு குறிப்பிட்ட மதத்தின் வார்த்தையை மற்றும் ஜோசப் பிடித்துகொண்டு தொங்குவது ஏன் என்று தான் இங்கு கேள்வி எழுப்பிக்கொண்டு உள்ளேன்….!

        • செந்தில்குமரன்,கடவுளுக்கான இலக்கணத்தை மிக கச்சிதமாய் இஸ்லாம் வரையறுக்கிறது.அதை கொஞசமும் சமரசமில்லாமல் நம்பவும் பணிக்கிறது.எந்த நிலையிலும் கடவுளுக்கு இணைவைப்பதையோ கதை புனைவதையோ கண்ணால் காணவியலாத அவனுக்கு உருவம் கொடுப்பதையோ மிக கடுமையாய் தடை செய்கிறது.இதையே இறைநம்பிக்கை என்று சொல்கிறது.இது அல்லாத எந்த முறையும் இறைநம்பிக்கையும் ஆகாது.இறை வழிபாடும் ஆகாது.பொய்யாய் போலியாய் “எம்மதமும் சம்மதம் ,எல்லா நதியும் கடலில்தான் கலக்கிறது- எல்லா மதமும் ஒன்றைதான் போதிக்கிறது.”என்றெல்லாம் பசப்புவதில் இஸ்லாம் உடன்படுவதே இல்லை.கொள்கையளவில் இதை ஏற்றுக்கொண்டவர்கள் முஸ்லிகள்.இதை ஏற்காதவர்கள் முஸ்லிம் அல்லாதவர்கள்.அதாவது காபிர்கள்.இதில் ஏதாவது நிந்தனை இருக்கிறதா?கம்னியூசத்தை கொள்கையாக ஏற்றுக்கொண்டவன் கம்யூனிஸ்ட்.ஏற்காதவனை கம்யூனிஸ்ட் கிடையாது என்று சொல்வதில் என்ன பெரிய பிழை.முஸ்லிம் அல்லாதவன் என்று எதிர்மறையாக சொல்லாமல் அதற்க்கு காபிர் என்று நேர்மறை வார்த்தை பயன்படுத்த படுகிறதே தவிர அது ஒரு வசவோ சாபமோ கெட்ட வார்த்தையோ அல்ல.அதுபோலவே கிறிஸ்த்துவை நம்பாதவர்கள் பாவிகள் என்று கிறிஸ்த்துவம் சொல்கிறதென்றால் அது கிறிஸ்த்துவ நம்பிக்கை.அதற்க்கு நான் ஏன் வருந்த வேண்டும்?நம்பிக்கை இல்லாத எனக்கு அது கிறிஸ்த்துவர்களின் அறியாமை என்ற உணர்வுதான் வரவேண்டுமே தவிர வருத்தம் வரக்கூடாது.சூத்திர பஞ்சம பேதங்களை தயவு செய்து இதனோடு ஒப்பிடாதீர்கள்.ஒரு மதம் அந்த மதம் சார்ந்த மக்களையே தரம்பிரித்து ஒருவனை உயர்த்தவும் ஒருவனை ஒடுக்கவும் செய்வது இஸ்லாம் கிறித்தவம் வகையில் சேராது.ஜோசப் வெறி பிடித்து தொங்குவது ஏன் என்பதை பற்றி இந்த கட்டுரையின் முதல் பதிவிலேயே நான் விளக்கி விட்டேன். அதை மறுமுறை படியுங்கள்.

          • செந்தில்குமரன்,பொதுசிவில்சட்டம்தான் வேண்டும் என்று ஒற்றை காலில் நிற்பவர்கள் அதற்க்கான காரணத்தை முதலில் அறிவுப்பூர்வமாய் விளக்கவேண்டும்.முஸ்லிகளுக்கு என்றுள்ள தனிச்சட்டம் எந்த வகையில் முஸ்லிம் அல்லாத மக்களை பாதிக்கிறது?அல்லது நாட்டின் இறையான்மைக்கும் ஒற்றுமைக்கும் இது எந்த வகையில் உலை வைக்கிறது?முதலில் இஸ்லாமியர்களுக்கான தனிச்சட்டம் என்றால் என்ன? அது ஏதேனும் ஒரு வகையில் மற்ற மக்களைவிட பாகுபாடான முறையில் சிறப்பு சலுகையை உரிமையை அவர்களுக்கு தந்து பாரபட்சமாக இருக்கிறதா?இவையெல்லாம் நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரியும் வகையில் மிகப்பெரிய விவாதம் நடத்தப்பட வேண்டும்.”இந்த சட்டத்தால் பாவம் ,முஸ்லிம் பெண்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள்.கைவிடப்பட்ட கையறு நிலையில் தவிக்கிறார்கள் அதனால் தான் அனைவருக்குமான பொதுச்சட்டம் கொண்டுவரப்போகிறோம்” என்று மோடி கூட்டம் அழுதால் இது அக்கறை என்று யாராவது நம்புவார்களா? ஆட்டு குட்டி நனைந்தால் தாய் ஆடுதான் அக்கறை கொள்ளும்.ஓநாய் கூட்டம் ஒப்பாரி வைப்பதை அக்கறை என்று எந்த மடையனும் நம்பமாட்டான்.இந்திய அரசியல் சாஸனத்தில் பிழையும் தவறும் இருந்தால் இந்தியர்களாகிய நாம் தான் போராட வேண்டும்.ஒபாமா அமெரிக்க செனட்டில்,இந்திய சட்டத்தில் திருத்தம் கொண்டுவர தீர்மானம் நிறைவேற்ற முடியாது.முஸ்லிம் பெண்கள் இஸ்லாமிய சட்டம் தங்களுக்கு அநீதி இழைப்பதாக சாரைசாரையாக நீதி மன்றத்தை நாடினார்களா?மாறாக பொதுசிவில் சட்டத்திற்க்கு எதிராகத்தான் பல மாநிலங்களில் முஸ்லிம் பெண்கள் வீதியில் இறங்கி போராடினார்கள்.எத்தனையோ முஸ்லிம் பெண்கள் கணவர்களால் அநீதிக்கும் அநியாயத்திற்க்கும் உள்ளாக்கப்பட்டு கைவிடப்பட்டு குழந்தைகளோடு தவிப்பது நடக்கிறது.மறுக்கவில்லை.இது எல்லா சமூகத்திலும் பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளின் பொதுவான அம்சம்தான்.இதற்க்கும் பொதுசிவில் சட்டத்திற்க்கும் என்ன இருக்கிறது?பெண்களுக்கு எல்லா வகையிலும் பாதுகாப்பானதாகவும் கண்ணியமானதாகவுமே இஸ்லாமிய ஷரீயத சட்டம் இருக்கிறது.இதை அமல் படுத்துபவர்களின் கூறுகெட்டத்தனத்திற்க்கு சட்டம் என்ன செய்யும்? மார்க்க சட்டம் சரியான முறையில் அமல் படுத்த படுகிறதா என்பதை கண்காணித்து நடவடிக்கை எடுப்பது அரசின்,சட்டத்தின் வேலையா?இந்திய அரசியல் சாஸணம் மிக சிந்தித்து தந்த உரிமையை பறிப்பது அரசின் சட்டத்தின் வேலையா?மத ரீதியாய் ஒரு சமூக மக்கள் மீது இன்னொரு சமூகத்திற்க்கு வெறுப்பும் காழ்ப்பும் வர வேண்டி பல காரியங்களை ஆளும் பிஜேபி அரசாங்கம் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறது.அதன் ஒரு வடிவம் பொதுசிவில் சட்டம்.இதை வழக்கம் போலவே மணிகணடன் போன்ற ரசிக குஞ்சுகள் என்ன ஏது என்றே தெரியாமல் ஆதரிப்பதும் பீ ஜோசப் போன்ற எதிலும் சேராத வகையறாக்கள் கூட சேர்ந்து குளவி அடிப்பதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.இது நடக்க போவதில்லை என்பது மோடி கூட்டத்திற்க்கு தெரியும் நாட்டை எப்போதும் தொடர்ந்து ஒரு பதற்றத்தில் வைத்திருப்பதை ஒரு தந்திரமாகவே காவி கூட்டம் செய்து வருகிறது.அதற்க்கு பின் ஏதோ பல முற வாசல் வேலைகள் நடப்பதற்க்கு அவர்களுக்கு ஏதுவாக இருக்கிறது.

            • நீங்கள் சில கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும்,

              இந்தியா மதச்சார்பற்ற நாடு எனும் போது முஸ்லிம்களுக்கு மட்டும் தனியாக சிவில் சட்டம் இருப்பது சரியா ? அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டம் தானே மதசார்பற்ற நாட்டில் இருக்க முடியும் ? இஸ்லாமியர்களுக்கு மட்டும் தனி சட்டம் என்றால் இந்த நாடு எப்படி மதசார்பற்ற நாடு என்று சொல்ல முடியும் ?

              முஸ்லிம்களுக்குத் தனி சிவில் சட்டம் கேட்கும் நீங்கள் தனி இஸ்லாமிய கிரிமினல் சட்டத்தையும் கேட்கத் தயாரா? கிரிமினல் வழக்குகளிலும் இஸ்லாமிய சட்டம் தான் வேண்டும் என்று ஏன் நீங்கள் போராட்டம் நடத்தவில்லை ?

              • மணிகண்டன் , உங்கள் கேள்வியையே உங்களிடம் திரும்ப கேட்கின்றேன்@! பதில் அளியுங்கள்! ஹிந்து மதத்தில் பார்பனர்களுக்கு மட்டும் ஏன் கோவில்களில் தனியுரிமை? கருவறைக்குள் நுழையும் உரிமையை மற்றவர்களுக்கு ஹிந்து மதம் அளிக்காத காரணம் என்ன? ஹிந்து மதம் அணைந்து ஹிந்துக்களுக்கும் பொதுவானது எனில் அனைவரும் அர்சகர்கள் ஆக ஹிந்து மதத்துக்கு தடையாக இருக்கும் விசயம் எது? மோடியின் பொது சிவில் சட்டம் இந்த சமத்துவம் இன்மையை சரி செய்யுமா?

                • இந்த கேள்விக்கு பல முறை பதில் சொல்லியாகி விட்டது ஆனால் மீண்டும் மீண்டும் நீங்கள் கேட்பது ரொம்ப போர் அடிக்கிது… சரி உங்களுக்கு புரியும்படி சொல்கிறேன் (அல்லது நீங்கள் எதிர்பார்க்கும் பதிலை சொல்கிறேன்)

                  இன்று உண்மையான பிராமணர்கள் என்று யாரும் இல்லை, கோவில்கள் வியாபாரதலமாக மாறிவிட்டது அந்த வியாபாரத்தில் போட்டியாக மற்றவர்களை ஏற்கனவே இருப்பவர்கள் விடுவதில்லை.

                  ஆனால் விரைவில் இந்த நிலை மாறும் என்றே நினைக்கிறேன். விவசாயத்திற்கு எப்படி ஆட்கள் கிடைக்காமல் இருக்கிறதோ அதேபோல் கோவில் அர்ச்சனை செய்பவர்களும் குறைந்து கொண்டு இருக்கிறார்கள், வருவாய் குறைவாக இருக்கும் கோவில்களில் மற்ற ஜாதியினர் அர்ச்சகராக வரலாம் (எனக்கு தெரிந்தே சிலர் அவ்வாறு இருக்கிறார்கள்) ஆனால் வருவாய் குறைவாக இருக்கும் கோவில்களில் அர்ச்சனை செய்ய மற்ற ஜாதியினர் விரும்புவார்களா என்பது அடுத்த கேள்வி. மற்ற ஜாதியினராக இருந்தாலும் அவர்களும் அர்ச்சகர் ஆக வேண்டும் என்று நினைப்பது வருமானத்திற்காக மட்டும் தான்.

                  • மணிகண்டன் , உங்களுக்கு போர் அடித்தாலும் ஹிந்து மதத்தில் பார்பனர்களை தவிர்த்த மாற்றவர்களுக்கு கோவில்களில் கருவறை வரையில் நுழைந்து பூஜைகள் செய்ய உரிமை இன்னும் அளிக்கபடவில்லை என்பது தான் உண்மை….! இன்னும் தெளிவாக கூறுவது என்றால் அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற தமிழ் நாடு அரசின் அடிப்டையில் சமஸ்கிருதம் பயின்ற வர்கள் எல்லாம் கோவில்களில் பூசை செய்யும் உரிமை இன்றி தானே நிற்கின்றார்கள்…! நீதி மன்றமும் அவர்களுக்கு நீதி வழங்காமல் பார்பனர்களுக்கு சார்பாக தானே நீதி வழங்கியுள்ளது…! அப்படி இருக்க ஹிந்து மதத்தில் எங்கே சமுக சமத்துவம் நிலவுகின்றது ?

                • நான் கேட்ட கேள்விக்கு நீங்களும் மீரான் பாயும் பதில் சொல்லாமல் ஓடி ஒளிக்கிறீர்களே ஏன் ? மதசார்பற்ற நாட்டில் அனைவருக்கும் ஒரே சட்டம் என்பது தானே சரியாக இருக்கும் அது எப்படி இஸ்லாமியர்களுக்கு மட்டும் தனி இஸ்லாமிய சட்டம் என்று இருக்க முடியும், இந்தியாவின் மதசார்பின்மை கொள்கைக்கு எதிரானது தானே இது ?

                  • மணிகண்டன்…., அதே கேள்வியை தான் நானும் கேட்கின்றேன்….! ஹிந்து மதத்துக்குள் அனைவருக்கும் ஒரே மாதிரியான சட்டங்கள் மட்டும் தானே இருக்க முடியும்? உண்மையில் அப்படி இல்லையே! அப்புறம் ஏன் பார்பனர்களுக்கு கோவில்களில் கருவைரையில் நுழைந்து பூசை செய்யும் சிறப்பு உரிமை…? அதே நேரத்தில் பார்பனர்கள் அல்லாதவர்களுக்கு அந்த உரிமை மறுக்கப்படுவது ஏன்?

                  • நேற்று வெளியூர் பயணம் என்பதால் பலளிக்க முடியவில்லை.நான் ஓடி ஒளிவதற்க்கு எந்த தேவையும் இல்லை.மதச்சார்பற்ற நாட்டில் அனைவருக்கும் ஒரே சட்டம்தான் இருக்க வேண்டும்.ஒரே சட்டம்தான் இருக்கிறது.இஸ்லாமியர்களுக்கு அவர்களுக்குள் நடக்கிற ஒரு மூன்று நாஙுகு விஷயங்களுக்கு மட்டும் அவர்களின் மத வழிகாட்டுதலின் படி நடந்து கொள்வதற்க்கு இந்திய அரசியல் சாஸனம் அனுமதி வழங்கி இருக்கிறது.அது என்ன?நான் சம்பாதித்த சொத்தை நான் எப்படி பங்கு வைத்து கொள்வது..நான் விரும்பும் பெண்ணை நான் எப்படி மணம் செய்து கொள்வது..தம்பதியராகிய எங்களுக்குள் ஏதேனும் விவகாரம் வந்தால் அதை எப்படி தீர்த்துக்கொள்வது..அல்லது நாங்கள் எப்படி பிரிந்து விடுவது..இஸ்லாமியருக்கு சொந்தமான அற்க்கட்டளை சொத்துக்களை(வக்ப்)எஙகளுக்குள் நாங்கள் நிர்வகித்துக்கொள்வது…இதுதாய்யா இஸ்லாமிய தனியார் சட்டம்.இதில் யாருடைய உரிமையாவது பாதிப்பிற்க்குள்ளாகிறதா?இந்த நாட்டின் ஒற்றுமைக்கு இதனால் ஊறுநேர்கிறதா? இது முஸ்லிம்களுக்கு மட்டுமானதா?இந்துக்கள் கூட்டு குடும்பமாக இருந்தால் அவர்களுக்கு வருமான வரிச்ச்லுகை இருக்கிறதே தெரியுமா?சீக்கியர்கள் எந்த பதவியில் இருந்தாலும் அவர்கள் தாடியும் தலைப்பாகையும் வைக்கும் உரிமை இருக்கிறதே தெரியுமா?பொது இடத்தில் கூடுபவர்கள் எந்த ஒரு ஆயுதங்களையும் வைத்திருக்க கூடாது என்று பொதுச் சட்டம் இருக்கும் பொழுது சீக்கியர்கள் மட்டும் குருவாளோடு பெரும் திரளாய் குழுமவும் அனுமதி உண்டே தெரியுமா?அவ்வளவு ஏன் மகாவீர் ஜெயந்தி அன்று நாட்டில் உள்ள யாரும் கறி திண்ண முடியாதவாறு ஆட்டு தொட்டி எல்லாம் விடுமுறை விடப்படுவது தெரியுமா?மணிகண்டா இதிலாவது கறி உண்பவன் உரிமை மகாவீர்ஜெயந்தியால் ஒருநாள் பாதிக்கப்படுகிறது.எங்க்ளுடைய தனியார் சட்டத்தால் எந்த சமூகம் எந்த விதத்தில் எந்த வகையில் எவ்வளவு தூரம் பாதிக்கப்பட்டது என்று அரை டவுசர்(இப்போது முழு டவுசர்)கூட்டத்தை அணிதிரட்டி வைத்துக்கொண்டு கேட்டு விடையளிக்க வேண்டுகிறேன்.

              • “முஸ்லிகளுக்கு தனி சிவில சட்டம் கேட் கும் நீங்கள்” முதலில் நாங்கள் தனிச்சட்டம் கேட் கவில்லை.இந்த நாடு ஒரு இறையானமை மிக்க நாடாக மலரும்போதே சட்ட மேதைகளால் எஙகளின் நம்பிக்கை அறிந்து இந்த உரிமை தரப்பட்டு இவை நடைமுறையில் இருக்கிறது.சில கோடாரி காம்புகள்தான் இதை பிளக்குவதற்க்கு இப்போது ஆயுதம் தூக்கி அலைகிறது.சிவில் சட்டமாக இருந்தாலும் கிரிமினல் சட்டமாக இருந்தாலும் இதை அமல் படுத்துவது அரசாங்கத்தின் வேலை.ஒரு சமூகத்திற்க்கு மட்டுமான கிரிமினல் சட்டம் என்பது நடைமுறை சாத்தியமற்ற நிலை.பிறப்புமுதல் இறப்புவரை எங்களின் ஒவ்வொரு செயல்பாடும் திருகுரானால் கட்டுப்படுத்தப்பட்டு சட்டமாக தரப்பட்டிருக்கிறது.இவை முழுமையான இஸ்லாமிய ஆட்சிக்குபட்ட நாட்டில் சாத்தியம்.நாங்கள் கதம்பமான ஒரு ஜனநாயக நாட்டில் அந்த நாட்டின் சட்டதிட்டத்திற்க்கு உட்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.எதில் மற்ற மக்களுக்கு எங்களால் எங்கள் சட்டங்களால் பாதிப்பில்லையோ அதில் மட்டும்தான் சில உரிமைகளை கேட்டு அதன்படி வாழ்கிறோம்.உதாரணத்திற்க்கு வட்டி.வட்டி வாங்குவது கொடுப்பது சாட்சியாய் இருப்பது அதற்க்கு துணை போவது அனைத்தும் இஸ்லாமிய சட்டத்தின் படி மிகப்பெரிய குற்றம்.ஆனாலும் வட்டி சார்ந்த பொருளாதாரத்தில்தான் வாழ வேண்டியிருக்கிறது.தனிப்பட்ட முறையில் நான் வங்கியில் வைப்புநிதி வைப்பதில்லை.மருத்துவ காப்பீடு தவிர வேறு எந்த காப்பீட்டு திட்டத்திலும் முதலீடு செய்ததில்லை.இதுவரைக்கும் வங்கியில் கடன் வாங்கியதில்லை.என் வரையில் நான் பேணுதலாக இருந்து கொள்கிறேன்.அரசாங்கத்தில் இதுவரை எந்த முஸ்லிம் அமைப்பும் முஸ்லிகளுக்கு வங்கி கடனுக்கு வட்டியிலிருந்து விலக்கு தரவேண்டும் என்று கேட்டதுமில்லை.அது மாதிரி கோரிக்கை வைத்தால் அதனால் மற்ற மக்கள் பாதிக்க படுவார்கள்.என்னவோ இப்போது இஸ்லாமிய வங்கி முறை இந்தியாவில் வரப்போவதாக செய்தி படித்தேன் வந்தால் மகிழ்ச்சி.அதுபோலவே இஸ்லாமிய கிரிமினல் சட்டம் வந்தாலும் பல மடங்கு மகிழ்ச்சியே.”நான் ரவுடி நான் ஏழு கொலை செய்தவன் “என்பதையே பெருமையாக கெளரவமாக பெரிய தகுதியாக கூறிக்கொண்டு எவனும் திரியமாட்டான்.

            • இந்தியாவில் இருந்து கொண்டு தனி சிவில் சட்டம் எங்கள் உரிமை என்றெல்லாம் பேசுகிறீர்கள் சரி எங்கள் நாட்டின் பெருந்தன்மை இது என்று வைத்துக்கொள்வோம், இஸ்லாமிய நாடுகளில் சிறுபான்மை மக்களுக்கு அடிப்படை உரிமைகளை கூட கொடுக்காமல் இருக்கிறார்களே அதை எதிர்த்து என்றாவுது நீங்கள் பேசி இருக்கிறீர்களா ?

              இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் நாடுகளில் சிறுபான்மையினருக்கு எந்த அடிப்படை உரிமையும் கிடையாது, இஸ்லாமியர்கள் சிறுபான்மையாக வாழும் நாடுகளில் அவர்களுக்கு அதிக உரிமைகள் வேண்டும் என்று கோருவது எந்த வகையில் நியாயம் ?

              • மணிகண்டன் எதற்காக வெளிநாட்டுக்கு போகின்றீர்கள்! இந்தியாவிலேயே ஹிந்துக்களிடையே உள்ள சமுத்துவம் இன்மையை பற்றி பேசாமல் ஏன் கள்ள மவுனம் சாதிக்கிண்றீர்கள்! தமிழ் நாட்டில் தமிழ் மக்களால் கட்டபட்ட கோவில்களுக்கு தமிழில் வழிபடாமல் சமஸ்கிருதத்தில் வழிபடுவது ஏன் ?
                கோவில்களில் அனைவரும் அர்சகர் ஆகலாம் என்ற அரசின் அரசாணைக்கு எதிராக நீதிமன்றம் சென்று தடை வாங்கியவர்கள் ஏன் அப்ப்படி செய்தார்கள்?

                • ஹிந்து கோவில்களுக்கு நீங்கள் சென்று என்ன நடக்கிறது என்று கவனித்தது இல்லை என்று நினைக்கிறேன். ஒரு உதாரணம் சொல்கிறேன், திருப்பதியில் இன்றும் நடைமுறையில் உள்ளது, முதலில் சுப்ரபாதம் திருப்பள்ளியெழுச்சி திருப்பாவை சொல்லி தான் நாளை ஆரம்பிக்கிறார்கள். தமிழகத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் திவ்யப்ரபந்தம் சொன்ன பிறகு தான் வேதங்கள் வாசிக்கப்படுகின்றன. இந்த நடைமுறையை தமிழக கோவில்களில் கொண்டு வந்தவர் ஸ்ரீ ராமானுஜர்

                  • மணிகண்டன், வெறும் “சுக்லாம் ….”என்று தான் சமஸ்கிருதத்தில் தமிழ் நாட்டு கோவில்களில் புசைகளை பார்பனர்கள் தொடங்குகின்றார்கள்…! சமஸ்கிருத பூசை நடைமுறையை அன்று கொண்டு வந்தது யாராக வேண்டுமானாலும் இருகட்டும்….! இன்று தமிழ் மக்கள் சென்று வணங்கும் கோவில்களில் தமிழில் அர்சனை செய்து வழிபட பார்பனர்களின் சமஸ்கிருதம் தடையாக இருகின்றதே! அதனை தானே நான் இங்கு கேள்வி எழுப்புகின்றேன்…அதற்கு பதில் அளிக்காமல் ராமானுஜர் கூறிவிட்டார் என்று அவர் மீதே பழிபோட்டால் எப்படி மணிகண்டன்? தேவாரத்துக்கும் , திருவாசகத்துக்கும் இசையாத கடவுள் சமஸ்கிருதத்துக்கு இசைகின்றார் என்றால் அவருக்கு மொழி பிரச்சனை உள்ளது போல் உள்ளதே! சிவனுக்கே தேவாரம் பாடி வணங்கிய பெரியவரை அடித்து உதைத்த சிதம்பரம் நடராஜர் கோவில் நிகழ்வு எல்லாம் உங்களுக்கு மறந்து விட்டதா மணி?

                    • சரி உங்களுக்கு இன்னொரு கேள்வி ஹிந்து கோவில்களில் சமஸ்கிருதத்தில் மந்திரம் சொல்வதை எதிர்க்கும் உங்களை போன்றவர்கள் ஏன் மசூதிகளில் அரேபிய மொழியில் ஓதுவதை எதிர்ப்பது இல்லை கேள்வி கேட்பது இல்லை ? அரேபிய மொழிக்கும் தமிழ் நாட்டிற்கும் என்ன சம்பந்தம் ? உங்களால் இஸ்லாமியர்கள் அரேபிய மொழியில் வழிபடுவது, அவர்கள் உரிமை என்று விலகி இருக்க முடியும் போது ஏன் ஹிந்து கோவில்களில் பிரச்சனை செய்கிறீர்கள், ஹிந்துக்கள் என்றால் இளிச்சவாயர்கள் என்ன செய்தாலும் எப்படி அவமதித்தாலும் கேட்பதற்கு யாரும் இல்லை என்ற நினைப்பு.

                    • சரி தமிழக அரசு ஹிந்து கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யலாம் என்று சட்டம் இயற்றினார்கள், கோவில்களிலும் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்று போர்டு எல்லாம் வைத்தார்கள் ஆனால் ஹிந்துக்கள் எத்தனை பேர் தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்று கேட்டார்கள் ? நேர்மையாக பதில் சொல்ல முடியுமா உங்களால் ?

                    • மசூதிகளில் தமிழில் தான் வழிபட வேண்டும் என்று எப்போது போராட போகிறீர்கள் ? அப்படி நீங்கள் போராடினால் நான் ஒப்புக்கொள்கிறேன் நீங்கள் மதச்சார்பற்றவாதிகள் என்று இல்லையென்றால் நீங்கள் போலி மதச்சார்பற்றவாதிகள் என்பதை ஒப்பு கொள்ளுங்கள்.

                    • மணிகண்டன்,

                      ஹிந்து மதத்துக்குள் உள்ள சமுக சமுத்துவம் இன்மை பற்றி பேசும் நிலையில் நீங்கள் இஸ்லாமுக்கு ஓடுகின்றீர்கள்! மிக்க நன்றி மணிகண்டன்… நீங்கள் வைக்கும் விவாதத்தின் மூலம் same side goal அடிகின்றீகள்! …….

                      முதலாவதாக…ஹிந்து மதத்தில் உள்ள குறைகளை நான் சுட்டிக்காட்டும் போது, அவற்றை பொது சிவில் சட்டம் மூலம் களைய சொல்லும் போது நீங்கள் ஹிந்து மதத்தில் அனைத்து மக்களுக்கும் சமத்துவம் இல்லை என்ற விசயத்தை ஏற்கின்றீர்கள்….அதனால் தான் ஹிந்து மதத்தில் உள்ள ஏற்றதாழ்வுகளை நேரடியாக இஸ்லாமிய மதத்தில் உள்ள பிரச்சனைகளுடன் ஒப்புமை செய்து கொண்டு விவாதத்தில் இருந்து விலகி ஓடுகிண்றீகள்..!

                      இரண்டாவதாக இஸ்லாமில் உள்ள குறைகளை களைந்தால் தான் ஹிந்து மதத்தில் உள்ள சமுக ஏற்றதாழ்வுகளை பற்றி நான் பேசலாம் என்கின்றீகள் ! அப்துல் காதருக்கும் அம்மாவாசைக்கும் என்னங்க சம்மந்தம்….? என்னுடைய ஹிந்து மதத்தில் உள்ள குறைபாடுகளை நீக்க பொது சிவில் சட்டம் பயன் படுமாயின் நான் அதனால் மகிழ்ச்சி அடைவேன் அல்லவா? ஆனால் நீங்கள் அத்தகைய மாற்றங்களால் மகிழ்வதாக தெரியவில்லையே! அப்படி எனில் உங்கள் மோடியும் ஹிந்து மதத்தில் உள்ள குறைபாடுகளை நீக்காமல் தானே பொது சிவில் சட்டத்தை வடிவமைக்க போகின்றார்? ஹிந்து மதத்துள் உள்ள குறைபாடுகளை களையாமல் வடிவமைக்கப்படும் பொது சிவில் சட்டம் போலியானதாக தானே இருக்கும்?

                      அப்புறம் எப்படி நீங்கள் பொது சிவில் சட்டத்தை பேச அருகதை உடையவராக உள்ளீர்கள் என்று இனி நீங்கள் தான் விளக்கவேண்டும்….

                    • நான் கேட்கும் கேள்விகளுக்கு இது பதில் இல்லையே செந்தில்… நேர்மையாக பதில் சொல்ல முடியாமல் நீங்கள் தப்பிக்க பார்க்கிறீர்கள்.

                      ஹிந்து மதத்தை போல் சமத்துவம் உள்ள மதம் வேறு ஒன்றும் இல்லை, ஒருவரின் குணத்தின் அடிப்படையில் தான் அவரின் வர்ணம் நிர்ணயிக்கப்படுகிறது இதற்கு ஆதாரங்கள் பலவற்றை ஏற்கனவே இந்த தளத்தில் கொடுத்து இருக்கிறேன். யோசித்து பார்க்கும் போது இந்த வர்ணங்கள் சரி என்றே படுகிறது. இன்றைய நவீன உலகில் வேலைக்கு ஆட்கள் தேடும் போது Leadership quality வேண்டும் என்று விளம்பரம் செய்கிறார்கள். கம்பெனிகள் எதிர்பார்க்கும் leadership quality என்பதும் சத்திரிய குணமும் ஒன்று. அதேபோல் சூத்திரர்கள் என்பறவர்கள் அலுவலத்தில் கடைநிலை ஊழியர்களாக இருக்கிறார்கள் அவர்களிடம் எதிர்பார்க்கும் குணம் சொன்ன வேலையை செய்தால் போதும். நிறைய பேர் அப்படிப்பட்ட குணம் உள்ளவர்களாக தான் இருக்கிறார்கள்.

                      ஹிந்து மத பெரியவர்கள் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பாகவே மனிதர்களின் குண நலன்களின் அடிப்படையில் பிரித்து இருக்கிறார்கள், அது சரியாகவும் இருந்து இருக்கிறது.

                      அதேபோல் இன்று சூத்திரராக இருப்பவர் நாளை தனது குணத்தின் அடிப்படையில் (அல்லது திறமையை வளர்த்து கொண்டு) சத்ரியராகவும் வரலாம் அல்லது ப்ராமணராகவும் வரலாம். இது இன்றைய அலுவக சுழிநிலையில் சரியாக பொருந்தும், ஆபீஸ் பியூனாக இருப்பவர் தனது திறமையை வளர்த்து கொண்டு நாளை அதே ஆஃபிஸில் மனஜராகவும் வரலாம்.

                      ஹிந்து மதம் இந்த நவீன உலகில் நடப்பதை தான் வர்ணம்/ஜாதி என்று சொல்கிறது. ஒருவனின் குணத்தை வைத்து அவன் இந்த ஜாதி என்று நிர்ணயித்து அவனின் குண நலன்கள் மேம்பட ஹிந்து மதம் வழி செய்கிறது. இதை விட சிறந்த விஷயம் வேறு எந்த மாதத்தில் இருக்கிறது சார்.

                      மனிதர்கள் மேம்பட ஹிந்து (இந்த நாட்டின்) பெரியவர்கள் பல தவங்களை செய்து அதை வேதங்களாக கொடுத்து இருக்கிறார்கள், இந்த பெரியவர்களால் தான் இந்த நாட்டில் மகாத்மா காந்தி போன்ற ஒருவர் பிறந்து அகிம்சை வழியில் போராட்டம் நடத்தி வெற்றியும் பெற முடிந்து இருக்கிறது.

                      ஹிந்து மதத்தை குறை சொல்வதற்கு முன் முதலில் அதை சரியாக புரிந்து கொண்டு பேச வாருங்கள், சும்மா மேம்போக்காக யாரோ என்று அதை நம்பி பேச வராதீர்கள்.

                      உங்களை போன்ற ஆட்கள் முட்டாள்தனமாக, இந்த நாட்டின் பெரியவர்கள் கடும் தவம் இருந்து கொடுத்த பொக்கிஷங்களை சமஸ்கிரதம் என்று சொல்லி புறம் தள்ளி கொண்டு இருக்கிறீர்கள். இழப்பு உங்களை போன்றவர்களுக்கு அல்ல இந்த நாட்டின் வருங்கால சந்ததியினருக்கு தான்.

                    • மணிகண்டன் உங்கள் விவாதத்தின் அடிப்படையில் எளிதில் உணர்ந்து கொள்ள முடியும் செய்தி என்னவென்றால் நீங்கள் சாதியஹிந்து சமுகத்துக்காக வக்காலத்து வாங்குகின்றீர்கள்… வர்ணங்களின் அடிப்டையில் தான் சாதியம் உருவானது என்ற கருத்தையும் ஏற்கின்றீர்கள்… அப்படி ஆக இருக்கும் நிலையில் நீங்களும் மோடியும் வடிவமைக்கும் பொது சிவில் சட்டம் என்பது ஹிந்து மதத்துக்குள் உள்ள ஏற்ற தாழ்வுகளை கலையாமல் மேலும் மேலும் பார்பனர்களுக்கு ஆதரவாக வளர்க்கும் என்பதனை உணர முடிகின்றது. கோவில்களில் நுழையும் உரிமையை போன நூற்றாண்டு முதல் போராடி தான் பொரும்பான்மை ஹிந்து மக்கள் பெற்றார்கள்… இன்று கோவில்களில் உள்ள கருவறைகளுக்கு சென்று பூசை செய்யும் உரிமையையும் எங்களை போன்ற பார்பனர்கள் அல்லாத பிற பெரும்பான்மை ஹிந்து மக்கள் போராடி தான் பெறவேண்டும் என்ற கருத்தை நீங்கள் உங்கள் விவாதத்தின் மூலம் எங்களுக்கு உணர்த்திவிட்டீர்கள்… மிக்க நன்றி… பொது சிவில் சட்டம் எல்லாம் வேறு கண் துடைப்பு தான் அதனால் பார்பனர்களை தவிர்த்த பிற ஹிந்துக்களுக்கு யாதொரு பயனும் இல்லை…. போராட்டமே நாங்கள் எங்கள் ஹிந்து மதத்துக்குள் உள்ள ஏற்றதாழ்வுகளை கலைய சிறந்த வழி முறை என்பதனை நீங்கள் உங்கள் விவாதங்கள் மூலம் எங்களுக்கு செய்தியாக அளிகின் றீர்கள்… மிக்க நன்றி மணிகண்டன்…!

              • மணிகண்டா இந்தியாவில் இருந்து கொண்டுதான் எங்கள் உரிமையை நாங்கள் கேட் க முடியும்.இது எங்கள் நாடு.நாங்கள் உருவாக்கிய நாடு.இந்த நாட்டின் ஒவ்வொரு மண் துகளிலும் எங்களின் குருதியும் பங்களிப்பும் விரவி கிடக்கிறது.இந்த நாட்டின் வளத்தையும் நலத்தையும் எவனும் எங்களுக்கு பிச்சை போட முடியாது மணிகண்டா..எந்த இஸ்லாமிய நாட்டில் சிறுபான்மையினருக்கு அடிப்படை உரிமை இல்லையோ அங்கு சங்கபரிவார கூட்டத்தை கூட்டிப்போய் அடிப்படை உரிமையை நிலைநாட்டி கொண்டுவருவதில் எங்களுக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லை.நான் என் நாட்டில் எனக்கான உரிமையைத்தான் பேசுவேன்.

                • பொதுசிவில் சட்டத்தைப்பற்றி பேச வக்கற்று மொழி பூஜை தமிழ் என்று தடுமாற ஆரம்பித்தாகிவிட்டது.இதில் மசூதிகளில் தமிழில் வழிபட செந்திகுமரனை போராட சொல்கிறார் சங்கபரிவாரத்தின் கடைசி வரிசை ரசிகசிகாமணி மணிகண்டன்.இதெல்லாம் பதில் சொல்லி புளித்துப்போன பழைய சங்கதி.நாங்கள் ஒருபோதும் எந்த மொழிக்கும் தெய்வீக அந்தஸ்த்து கொடுக்கிற வர்க்கமல்ல.எந்த மொழியையும் இழித்து பேசுகிற கூட்டமுமல்ல.இஸ்லாமிய வழிபாட்டுமுறை என்பது எப்படி பட்டது என்பதை பள்ளிவாசலில் சென்று பார்க்கவேண்டும்.ஒருவரின் தலைமையில் குறிப்பிட்ட நேரத்தில் அணிவகுத்து நின்று செய்கிற முறையே இஸ்லாமிய வழிபாட்டு முறை.கிட்டத்தட்ட ஒரு ராணுவ அணிவகுப்பு முறையை போன்றது.இதற்க்கு ஒரு பொது மொழி தேவையாய் இருக்கிறது.அது அரபு மொழியை தாய் மொழியாக கொண்ட ஒரு மனிதரின் வாயிலாக இறக்கியருளப்பட்ட குரானின் மொழியாகிய அரபு தேர்ந்தெடுக்க பட்டிருக்கிறது.அந்த மொழிக்குரியவர் அவர் வாயாலேயே தன் மொழி எந்த வகையிலும் மற்ற மொழியைவிட உயர்ந்ததல்ல என்பதை தெளிவு படுத்துகிறார்.தொழுகை என்ற அந்த கூட்டு வழிபாட்டை தவிர மற்ற அனைத்தும் அவரவர் தாய் மொழியிலேயே நடைபெறுகிறது.தமிழ் நாட்டு முஸ்லிகளாகிய எங்களின் தமிழ் பற்றும் தமிழறிவும் இங்கு யாருக்கும் குறைந்ததல்ல.

                • இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் நாடுகளில் சிறுபான்மை மக்களுக்கு அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்படுகிறது அதே இஸ்லாமியர்கள் சிறுபான்மையாக வாழும் நாடுகளில் அதிக உரிமைகள் வேண்டும் அது எங்கள் உரிமை என்று சொல்கிறீர்கள் இது எந்த வகையில் நியாயம் ?

                  • அதுதான் அவர்களிம் மதம் போதிக்கும் இரட்டை நிலைப்பாடு இந்தியாவில் நாங்கள் சரியா சட்டத்தின் படி நடந்து கொள்ளுவதில் உங்களுக்கு என்ன பிரச்சனை என்பார்கள் ஆனால் இசுலாமியர்கள் அதிகம் வாழும் நாடுகளில் மற்றவர்கள் மத உணர்வுகளை கொஞ்சமும் மதிக்க மாட்டார்கள் அவர்களுக்கு இறக்கியருப்பட்ட குரான் தான் இப்படிப்பட்ட பாகுபாடுகளை செய்ய சொல்லுகிறது என்று மீரானுக்கோ கம்மூனிஸ்டுகளுக்கோ தெரியாத விசயம் என்றா நினைக்கிறீர்கள்

                    இசுலாமிய தொழுகையே ராணுவ அணி வகுப்பு போன்றது என்று மீரானே ஒத்துக்கொள்ளுவதால் அவர்களின் தொழுகை கூட போருக்கான அணி வகுப்பு போன்றே முகமது கற்றுக்கொடுத்து அதை திடீர் தாக்குதல் மூலம் அடுத்ட்வர்களை கொலை செய்ய முகமது பயன் படுத்தி இருக்கிறார்

                  • மணீகண்டா ஆட்டம்புழுக்கை அளவிற்க்கு மூளை உள்ளவனும் இப்படி ஒரு கேள்வியை கேட் க மாட்டான்.இந்தியா என்ற இந்த நாட்டின் உண்மை வரலாறு தெரிந்தவனுக்கும் இப்படி ஒரு கேள்வி உருவாகாது.இஸ்லாமியர் பெரும்பான்மையாக வாழும் நாடு அல்லது இஸ்லாமிய நாடாக அறிவித்துக்கொண்ட நாடு..இங்கே சிறுபானமயினர் உரிமை பாதிக்கப்பட்டால் அந்த நாட்டில் போய்தான் முட்ட வேண்டும்.இங்கிருக்கும் என்னிடம் ஏன் அழ வேண்டும்? நான் என்ன உலக இஸ்லாமிய நாடுகளுக்கு நல்லெண்ண தூதுவராகவா நியமிக்கப்பட்டுருக்கிறேன்.இங்கிருக்கும் கருப்பனை சுப்பனை போன்ற ஒருவன் நான். என் தேவைகளுக்கும் என் உரிமைகளுக்கும் என் நாட்டில் நான் போராடுவேன்.உரிமையை பெறுவேன்.இஸ்லாம் என்ற சித்தாந்தத்தைத்தானே நான் ஏற்றுக்கொண்டிருக்கிறேன்.உலக இஸ்லாமிய நாடுகளையா குத்தகைக்கு எடுத்துக்கொண்டிருக்கிறேன்!?எவ்வளவு மழுங்கடிக்கப்பட்டிருக்கிறது உங்களது மூளை என்று தெரிகிறதா?இப்படித்தான் காவிகளின் பள்ளிகூடம் பிஞ்சுகளுக்கு நஞ்சை ஏற்றுகிறது.இது ஒருபுறம் இருக்க.வளைகுடா நாடுகள் என்று சொல்லப்படுகிற இஸ்லாமிய நாடுகளில் இந்தியாவிலிருந்து வேலைக்காக செல்லும் முஸ்லிம்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் பெரிய படிப்போ தகுதியோ இல்லாமல் அங்கே கூலிகளாக கொத்தடிமைகளாகத்தான் குடும்பத்தையும் இங்கே விட்டு விட்டு வருட கணக்கில் பாலைவன வெய்லில் தகித்து தங்களின் வாழ்வாதாரத்திற்க்காக செத்து பிழைக்கிறார்கள்.அதே நேரத்தில் அங்கே ஒய்யாரமாய் உயர்ந்த பதவிகளில் ராஜ வாழ்க்கை வாழ்வது யார் தெரியுமா?உங்களை போன்ற குஞ்சுகளுக்கு நஞ்சை விதைக்கிற பூணூல் கூட்டம்தான்.இது கண்கண்ட ஆதாரம்.நான் தொழில் நிமித்தமாய் துபாய் ரியாத் பக்ரின் ஜித்தா போன்ற நாடுகளுக்கு அடிக்கடி போகிறவன்.எல்லா பெரிய வளைகுடா நிறுவனங்களிலும் பெரிய பொறுப்பில் இருப்பவர் “அவால்”கள்தான்.சொந்த நாட்டில் கூட இவ்வளவு சுகபோகமாய் உல்லாசமாய் இருக்க வாய்ப்பில்லை.மன்னராட்சி கொண்ட ஒரு இஸ்லாமிய நாட்டில் நம் நாட்டில் இருப்பது போன்ற எந்த வரியுமற்று மிக நிம்மதியாக வாழும் கூட்டம்தான் இஸ்லாமிய நாட்டில் சிறுபான்மையினர் உரிமையை பற்றி பேசுகிறது.இந்த புல்லுருவி கூட்டத்திற்க்கு புறம் பேசி திரிவதில்தான் திண்ண சோறு செரிக்கிறது.

                    • மணிகண்டா இன்னொன்றையும் இந்த நேரத்தில் நினைவுகூற வேண்டியிருக்கிறது.அடுத்தவன் ஊட்டை ஆட்டை போட்டுக்கொண்டு இங்குள்ள பூர்வீகர்களாகிய எங்களுக்கே தேசிய பாடம் நடத்துகிற நிலை மாற ஆரம்பித்து விட்டது.குடுமிகள் அனைவரும் பொட்டலத்தை கட்டிக்கொண்டு ஓட வேண்டியதுதான்.நேபாளத்திற்க்கு போவீர்களோ அல்லது வந்த வழியே போலான் கைபர் வழியாக கடலில் போய் விழுவீர்களோ உங்கள் விருப்பம்.இனி வந்தேமாதரம் பாரத்மாதாகீ ஜே என்ற வார்த்தையை கேட்டாலே தமிழன் கொதித்து,கொதிக்கிற கஞ்சியை காய்ச்சி மூஞ்சியிலே ஊற்றிவிடுவான் கவனம்.இது வெறும் ஜல்லிகட்டு என்பதற்க்கான தன்னெழுச்சி அல்ல.திரளும் கூட்டத்தின் 97 சதவீதத்திற்க்கு ஜல்லி கட்டு பற்றியெல்லாம் பெரிய அக்கறையில்லை.தமிழன் தன் அடையாளம் உணர்ந்து ஜாதி மத இன பேதம் மறந்து எழுச்சி பெற துவங்கி விட்டான்.மணிகண்டா மிகவும் அடக்கி வாசிக்க வேண்டும்.பூணூல் கோவணம் பத்திரம்

                  • ஜோசப் மற்றும் மணிகண்டன் அவர்களே…, இஸ்லாமிய நாடுகளில் மத, இன சிறுபான்மையினர் மக்களுக்கு உரிமைகள் இல்லை என்றால் அதற்காக போராடவேண்டியது சரியான முறையா அல்லது அதனையே காரணம் காட்டி பிற நாடுகளில் உள்ள மத, இன சிறுபான்மையினர் மக்களின் உரிமைகளை முடக்குவது சரியான முறையா?

                    • என்ன செந்தில் இஸ்லாமிய நாடுகளில் ரிமைகள் வேண்டும் என்று சிறுபான்மை மக்கள் போராட முடியும்மா ? அதன் பிறகு இஸ்லாமியர்கள் அவர்களை உயிரோடு விட்டு வைப்பார்களா ? அமைதியாகா இருக்கும் போதே சிறுபான்மை மக்களின் உயிருக்கு எந்த பாதுகாப்பும் இல்லை இந்த நிலையில் உரிமைகள் வேண்டும் என்று கேட்டு வீதியில் இறங்கினால் கேட்கவே வேண்டாம்… இஸ்லாமிய நாடுகளில் வாழும் சிறுபான்மை மக்களின் நிலைமையை பற்றி தெரிந்து கொண்டு பேசுங்கள்.

                    • என்ன மணிகண்டன்…., மீண்டும் மீண்டும் same சைடு goal அடிக்கின்றீர்கள்! அரேபிய நாடுகளில் சிறுபான்மை மக்கள் அவர்களின் உரிமைக்காக போராட முடியாது என்பதற்க்காக இந்தியாவில் உள்ள சிறுபான்மை மக்களும் அவர்கள் உரிமைக்காக போராடக்கூடாதா என்ன?

                  • ஜோசப் மற்றும் மணிகண்டன் அவர்களே…, அயர்லாந்தில் கிருஸ்துவ மத அடிப்படையில் கருகலைப்பு சட்டத்துக்கு புறம்பானது…. தாயின் உயிருக்கு ஆபத்து என்றால் கூட கருகலைப்பை அந்த நாடு கிருத்துவ மத நம்பிக்கைகளின் அடிபடையில் தடை செய்து உள்ள்ளது… அதன் காரணமாக இந்தியாவில் இருந்து அங்கு சென்று குடியேறிய ஒருஹந்து பெண் உயிர் இழந்து உள்ளார்…. இந்த நிலையில் அயர்லாந்தில் ஹிந்து பெண்ணுக்கு கருகலைப்பு தடை செய்யப்படதால் இந்தியாவில் உள்ள கிருந்துவ பெண்கள் கரு கலைக்க கூடாது என்று அவர்களின் உரிமைக்கு எதிராக நீங்கள் போராடுவீர்களா அல்லது கரு கலைப்பு பெண்களின் அடிப்படை உரிமை என்று குரல் கொடுப்பீர்களா? இந்த கேள்விக்கான பதிலுடன் உங்கள் வாதத்தை மணிகண்டன் நீங்கள் மீண்டும் மறு பரிசிலனை செய்யலாம்…!

                    • //அவர்களின் உரிமைக்கு எதிராக நீங்கள் போராடுவீர்களா அல்லது கரு கலைப்பு பெண்களின் அடிப்படை உரிமை என்று குரல் கொடுப்பீர்களா? இந்த கேள்விக்கான பதிலுடன் உங்கள் வாதத்தை //உரிமைக்கு குரல் குடுப்பது இருக்கட்டும் கிறிஸ்தவ நாட்டில் இந்து பெண்னுக்கு இழைக்கப்ப்ட்ட அநீதி குறித்து குரல் கொடுத்த முற்போக்காளர்கள் கிறிஸ்தவ நம்பிக்கை சார்ந்த விசயங்களையும் கிழி கிழி என கிழித்தார்கள் ஆனா இங்க வேற மாறி பேசிக்கிட்டு அலையுறார்கள் வினவு ஆளுக அதாவது இசுலாம் இஸ் ஈக்குவல்டு சமத்துவம் அப்புறம் ஜிகாத்துக்கு புதுசா குரானிலயே இல்லாத விளக்கமுனு சொல்லுறது,பிற்போக்குத்தனத்துக்கு இசுலாமும் விதி விலக்கு இல்லைனு சொல்லிக்கிட்டு அலைவதற்க்கு பதில் சொல்ல வேண்டாமா இசுலாம் தான் பிற்ப்போக்கில் முற்ப்போகானது என்று விளக்க வேண்டிய அவசியம் வருகிறது

                    • ஜோசப், வினவு காரர்கள் நீங்கள் கிளப்பும் அவதுறு கருத்துகளை எங்கு பேசியுள்ளார்கள் என்று ஆதாரத்துடன் கூறுங்கள் …., நானும் வந்து அவர்களுக்கு எதிராக போராடுகின்றேன்…. அதே நேரத்தில் தமிழ் தேசிய உணர்வாளர் தியாகு அவர்களின் கருத்தை வினவு கருத்தாக கூற மாட்டீர்கள் என்று நினைகின்றேன்…. !

                    • வினவு, நீங்கள் மவுனத்தை கலைத்து மத சமத்துவம் பற்றிய தியாகுவின் கருத்து வினவின் கருத்து அல்ல என்று விளக்கம் கொடுபீர்கள் என்று நினைகின்றேன்…

        • ஏற்றத்தாழ்வுகளுக்கு என்ன சிறுபான்மை பெரும்பான்மை இசுலாமியத்தில் பெண்களுக்கு கொஞமும் மதிப்பு இல்லை பெண்கள் உங்கள் விளை நிலங்களை போன்றது அங்கே உங்க இசுட்டபடி போங்கள் எஙிறது குரான் சொத்துரிமை விசயத்தில் ஆணிலிருந்து பாதிதான் பெண்னுக்கு ஒரு பெண் பருவமடைந்து விட்டாலே அவள் கல்யானத்துக்கு தகுதி பெருவதாக சொல்லுகிறது அரபு சேக்குகளுக்கு முஸ்லீம் சிருமிகளை திருமணம் செய்து வைக்கிறார்கள் இது மகமது காட்டிய வழிதான் 6 வயசு பெண்ண பார்த்தால் எப்பிடி ஆசை வரும் மனநலம் பாதிக்கப்ப்டவனை விட ,ஈஸியா தலாக் சொல்லி திருமன முறிவு செய்யலாம் ஆண்கள் 4 மனைவி வைத்துக்கொள்ள அனுமதி கருப்பு முக்காடு கண்ணியம்னா நம்ம பொண்னுக போடுற டெர்ஸ் கண்னியம் இல்லயா இந்த லூஸித்தனம் எல்லாம் களையப்ப்படனும்னா சரியா சட்டம் தூக்கி எறியப்பட்டு பொது சிவில் சட்டம் வரவேண்டும்….

          • சபாஸ் ஜோசப்.., அவா அவாவும் தன் மூகில் உள்ள அழுக்கை கிளின் செய்யாமல் அடுத்தவர் மூக்கை நோண்டுவது ஏன்? அடுத்தவர் மூக்கை நோண்டும் வேலையை நீங்களும் , மணிகண்டனும் அருமையாக செய்கின்றீர்கள்! கிருஸ்துவத்தில் பெண்களுக்கு சமத்துவம் இல்லை என்பதனை நான் நிருபித்தும் கூட அதனை சமன் செய்ய மதத்துக்குள் போராட துப்பின்றி, வெக்கம் இன்றி அடுத்தவர் மூக்கை நொண்டிக்கொண்டு உள்ளீர்கள் நீங்களும் மணிகண்டனும்….! வெக்கம் கேட்ட உங்களை போன்றவர்களின் வாதங்களுக்காகவே நானும் காத்து உள்ளேன்…

            • இதுல என்ன வெக்கம்கெட்டதனம் இருக்கு அப்பிடியே இருந்தாலும் அதைப்பற்றி கவலை இல்லை அரபு முகமது வாழ்ந்து காட்டிய படி அரபு நாட்டு சேக்குகளுக்கு சின்ன பெண்ணை திருமணம் செய்விக்கும் முல்லாக்களை அவர்களுக்கு விளக்கு பிடிக்க அடுத்த மதங்களையும் இழுத்து விட்டு எப்பிடியாது குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க அலைபவர்களை விட நானும் மணிகன்டனும் எந்த வகையிலும் வெக்கம் கெட்டவர்கள் இல்லை

              • ஜோசப் அவர்களே உங்கள் மதத்தில் உள்ள குறைபாடுகளை களையாமல் அடுத்த மதத்தில் உள்ள குறைபாடுகளை களைய முனைவது சரியா? இதே பாலியல் ரீதியான குற்றங்களை செய்கின்ற மனிதர்கள் பிறமதங்களில் இல்லையா என்ன? என்னமோ அரேபிய ஷேக்குகள் மட்டுமே பாலியல் குற்றங்களை செய்வது போலவும்…, கிளிண்டன்கள் எல்லாம் நல்ல பிள்ளைகளாக பாப்கான் உண்டுகொண்டு வேடிக்கை பார்ப்பது போலவும் அல்லவா பேசிக்கொண்டு உள்ளீர்கள்!

              • ஜோசப் பைபிளில் உள்ள பாலியல் சீரழுவுகளை பட்டியல் இட்டால் இந்த வினவு இணைய தளம் போதாது ! சில சாம்பிள்களை உங்களுக்கு அளிகின்றேன்… விளக்கங்களை நீங்களே உங்கள் சுய அறிவை பயன்படுத்தி புரிந்து கொள்ளுங்கள்…. முடியாவிட்டால் நான் பின்பு விளக்குகின்றேன் !

                தாவீது ராஜா உரியாவின் மனைவியாயிருந்தவளிடத்தில் சாலொமோனைப் பெற்றான். (மத்; 1:6)

                அவர்களுடைய உறுப்புகள் கழுதைகளின் உறுப்புகள் போலும், அவர்களுடைய இந்திரியம் குதிரைகளின் இந்திரியம் போலும் இருந்தன. இவ்வாறு எகிப்தியர்உன் இள மார்புகளைத் தொட்டு விளையாடி, உன் கன்னிக் கொங்கைகளை அமுக்கிய போது செய்த அதே வாலிப வயதின் வேசித்தனத்தை விரும்பினாய்… (எசக்கியேல் 23-ஆம் அதிகாரம்)

          • அரபு சேக்ககளுக்கு அவர் காட்டிய வழி என்றால் …., கிருஸ்துவ மத போதகர்களுக்கு சிறுவர் சிறுமிகளுடன் காம விளையாட்டு விளையாட யார் வழி காட்டியது ஜோசப்? ஹிந்து சாமியார்களுக்கு காம விளையாட்டுகளில் யார் வழிகாட்டியாக இருக்கின்றது?

            • அதுவும் முகமதாகவே இருக்கலாம் அல்லது அவர்களுக்கு வக்காலத்து வாங்கும் நீங்களாக கூட இருக்கலாம் யாரு கண்டா நீங்க யேசுதான் அதுக்கு வ்ழி காட்டினு சொல்ல வறீங்களா ஒன்னும் புரியல சாமியார்களுக்கு செக்ஸ் புக்கோ இல்லை அவர்களின் கடவுள் திரு விளையாடல்களாகவோ இருக்கலாம் யாரு கண்டா அவன் மனசுசுல என்ன ஓடுதுனு இன்னொரு விசயயமும் இதுல உண்டு சொல்லித்தோன்றுமோ மன்மதக்கலை என்பதையும் நினைத்து பார்த்தால் எவனுக்கும் இது சொல்லி வர்ரது இல்லை அதுனாலா அரபு சேக்கு களுக்கு சின்ன பிள்ளைகள் மேல ஆசை வந்து இருக்கலாம் அனா அது தப்புனு சொல்ல முடியாத அளவுக்கு முகமதின் செய்கை இருக்கிறது இதுக்கு என் மேல கோவிச்சு என்ன புன்னியம்

              • அவன் அவன் மனசுல என்ன ஓடுதுன்னு தெரியவில்லை உமக்கு! ஆனா ஷேக்குகள் மனசில் ஓடுவது மட்டும் கண்ணாடியில தெரியுதா உமக்கு? என்ன அவன் அவன் பாலியல் ரீதியாக பலாத்காரம் செய்யும் போது கூட இருந்து நீர் விளக்கு பிடித்தீரோ?

                //முல்லாக்களை அவர்களுக்கு விளக்கு பிடிக்க அடுத்த மதங்களையும் இழுத்து விட்டு எப்பிடியாது//

                • நான் ப்டிக்க வில்லை முகமது ப்டித்து இருக்கலாம் அதை அவர் கதீஸ் புத்தகங்காளில் இருந்து நீங்களே படித்து தெரிந்து கொள்ளலாம் கையில் உள்ள புண்ணுக்கு கண்ணாடி எதுக்கு, அப்புறம் விளக்கு பிடிக்கும் தொழிலின் ஆரிஜின் அதாவது துவக்கம் எங்கிறிந்து வந்தது என்று தெரிந்து கொண்டு பேசுங்கள் சும்மானாஷிலும் விளக்கு பிடித்தோம் என்று சொல்லக்கூடாது

                  • ஜோசப்…, மத ரீதியான பாலியல் சீரழிவுகள் இஸ்லாமுக்கு முன்பே கிருஸ்துவதுடன் தொடங்கிவிட்டது .., ஏன் அதற்கு முன்பே பழைய ஏற்பாட்டில் இருந்தே தொடங்கி விட்டது என்பதனை நான் என்னுடைய 10.1.2.2.1.1.2 பின்னுட்டத்தில் பட்டியல் இட்டு உள்ளேன்… ஆனாலும் நீங்கள் பாலியல் சிரழிவுகளை இஸ்லாமில் இருந்து மட்டுமே விவாதிப்பேன் என்று அடம் பிடிப்பதன் காரணம் என்ன ஜோசப்? புதிய மற்றும் பழைய ஏற்பாடுகளில் பட்டியல் இடப்பட்டு உள்ள பாலியல்சீரழிவுகளை நீங்கள் மனம் உவந்து ஏற்பதாக பொருள் கொள்ளலாமா ?

                  • ஜோசப்,
                    பைபிளை படிக்கும் போது எனக்கு கிடைத்த தகவல்கள் பல பாலியல் சீரழிவுகளை பட்டியல் இடுகின்றனவே! என்ன செய்யலாம்….?
                    1.ஆதியாகமம் 19:31-37 ல் தந்தையுடன் புணர்ந்த மகள்கள் பற்றிய செய்தி மிக விரிவாக உள்ளதே!
                    2. ஆதியாகமம் 38:14-19 ல் மாமனாரும் மருமகளும் புணர்ந்த கதை உள்ளதே!
                    3. இரண்டாம் சாமுவேல் 13:1-15 ல் அண்ணனும் தங்கையும் புணர்ந்த கதை உள்ளதே!
                    இன்னும் கூட பல ஆதாரங்களை பைபிளில் உள்ள பாலியல் சிரழிவுகளை என்னால் அளிக்க முடியும்.. இதுவே போதும் என்று நினைகின்றேன்… இப்பொது விவாதத்துக்கு வருகின்றேன்…. மேல் உள்ள விசயங்கள் கிருஸ்துவ மதத்தின் பாலியல் சிரழிவுகளா? அல்லது அன்றைய சமுகத்தின் உண்மையான வரலாறா? இவை எல்லாம் கிருஸ்துவத்தின் குறைகளா? அல்லது அன்றைய சமுகத்தின் குற்றமா?

                    • லூஸு மாறி உளருவதே உங்களுக்க்கு பிழைப்பாகி போய் விட்டது இந்த அசிங்கம் எல்லாம் காட்டி எந்த பாதிரியாது கிறிஸ்துவத்தில் இந்த அசிங்களுக்கெல்லாம் எங்களுக்கு மதத்தில் அனுமதி உண்டு என்று சொல்லி பொது சிவில் சட்டத்தை எதிர்த்தால் நீங்கள் பேசுவதை கருத்தில் கொள்ளலாம் அது வரை நீங்களாகவே வாள் வாள் என்று கத்திக்கொண்டு இருக்கலாம்

                    • ஜோசப் அவர்களே, உங்களுக்கு உள்ள மறதி நோய்க்காக நான் வருந்துகின்றேன்…இங்கே மதங்களில் உள்ள ஆபாசங்களை பற்றிய விவாதத்தை நான் தொடங்க வில்லை. அதனை தொடங்கியது நீங்கள் தான்…! உங்கள் பின்னுட்டம் 10.1.2.2ல் நீங்கள் சுட்டிகாட்டிய ஆபாசங்களுக்கு இணையாக கிருஸ்துவத்தில் பைபிளில் பட்டியல் இடப்பட்டு உள்ள ஆபாச பாலியல் வக்கிர செய்திகளை நான் உங்களுக்கு தொகுத்து அளித்து உள்ளேன் அவ்வளவு தான்.. அதிலும் உங்களிடம் நேர்மையாக கேள்விகளையும் எழுப்பி உள்ளேன்… இவைகள் எல்லாம் கிருஸ்துவத்தின் ஆபாசங்களா அல்லது அந்த கால சமுகத்தின் ஆபாசங்களா என்று நேர்மையாகவே கேள்வி எழுப்பியுள்ளேன். அதற்கு பதில் அளிக்க துப்பின்றி மீண்டும் மீண்டும் விவாதத்தை சீர்குலைகின்றீர்கள் நீங்கள்! ஒரு குறிப்பிட்ட மத நடைமுறைகளில் ஆபாசம் உள்ளது என்று தாக்கும் நீங்கள் அதற்கு முன்பே தொடங்கிய கிருஸ்துவத்தில் உள்ள ஆபாச நடைமுறைகளையும் அறிந்து கொள்ள வேண்டும் அல்லவா? அதற்காக தான் அவற்றை சுட்டிக்காட்டியுள்ளேன்…. வேறு எந்த நோக்கமும் எனக்கு இல்லை….

                    • இன்னும் கூட நான் உங்களுக்கு உங்களின்தவறான வாதங்களை நான் சுட்டிக்காட்ட முடியும் ஜோசப்…. இந்த பொது சிவில சட்டத்தை பற்றிய விவாதத்தில் காபிர்கள் என்று கூக்குரல் இட தொடங்கியது…, சேக்குகளின் ஆபாச பாலியல் வக்கிரங்களை மதத்துடன் இணைத்து பேசியது எல்லாம் நீங்கள் தான்… அப்படி எனில் கிருஸ்துவத்தில் உள்ள பாலியல் வக்கிரங்களுக்கு பைபிள் தான் செய்முறை வழிகாட்டியாக உள்ளதா என்ற எதிர் கேள்வியை தான் இங்கு உங்களிடம் எழுப்புகின்றேன்…. அதற்காக தான் பைபிளில் உள்ள ஆபாச பதிவுகளை நான் வெளியிட வேண்டியுள்ளது ஆகின்றது…. மேலும் கிருஸ்துவத்தில் உள்ள பாலியல் முறைகேடுகளுக்கு நானோ அல்லது முகமதோ எப்படி காரணமாக இருக்க முடியும் என்று கேள்வி எழுப்புகின்றேன்…. முகமதுக்கு சில நுர்ராண்டுகள் முன்பு தொடங்கிய கிருஸ்துவத்தில், எனக்கு முன் ௨௦ நுற்றாண்டுகள் முன் தொடங்கிய கிருஸ்துவத்தில் உள்ள பாலியல் சீர்குலைவுகளுக்கு முகமது அல்லது நான் எப்படி காரணமாக முடியும் ஜோசப்?

                    • ஜோசப் , உங்களின் உளறல்களையும் ,மாற்று மத வெறுப்பு கருத்துகளையும் நான் பொறுமையாக படித்து விட்டு அதன் பின்பு தான் தர்க்க ரீதியாக உங்களுக்கு பதில் அளித்துக்கொண்டு உள்ளேன் என்பதனை நான் உங்களுக்கு தெரிவித்துக்கொள்கின்றேன்….

                      மாற்று மதத்தவர்கள் மீது வெறுப்பு கூடாது என்ற என்னுடைய நோக்கத்தின் அடிப்படையில் தான் நான் உங்களுக்கு பதில் அளித்துக்கொண்டு உள்ளேன்…. நீங்கள் இந்த காபிர் மற்றும்ஒரு குறிப்பிட்ட மதத்தில் மட்டுமே ஆபாசம் உள்ள்ளது என்று ஓர வஞ்சனையுடன் போசும் நிலையில் மட்டுமே நான் மற்ற மதங்களிலும் அத்தகைய ஆபாச பேச்சுகள் உள்ளது என்பதனை பட்டியல் இடும் நிலைக்கு தள்ளப்பட்டேன்… ஹிந்து மதத்தில் உள்ள ஆபாச கருத்தாக்கங்களை பற்றியும் நீங்கள் அறிய விரும்பினால் அதனையும் பட்டியல் இட நான் தயாராகவே உள்ளேன்…

              • ஜோசப், கிருஸ்துவத்தின் தொடக்கத்துக்கு பின் சில நூற்றாண்டுகள் கழித்து தொடங்கிய இஸ்லாம் அல்லது இருபது நூற்றாண்டுகள் கழித்து பிறந்த நான் எப்படி கிருஸ்துவ மத பாலியல் சீரழிவுகளுக்கு காரணமாக இருக்க முடியும் ?

                //அதுவும் முகமதாகவே இருக்கலாம் அல்லது அவர்களுக்கு வக்காலத்து வாங்கும் நீங்களாக கூட இருக்கலாம் //

                • வ்ழி காட்டுதல் வேறு வரலாறு வேறு ,வெறும் வரலாற்று தகவலாகவே பாலியல் சீரழிவுகளை விவிலியம் குறிப்பிடுகிறது அவர்கள் செய்த தவறுக்கு அவர்கள் அடைந்த தண்டனையய்யும் சேர்த்தே குறிப்பிடுகிறது பாதிரிகளின் பாலியல் குற்றத்துக்கு பப்பான்டவரை கைது செய்யலாமா என்ற ரீதியில் வினவு பேசி வ்பிட்டது இன்னும் நீங்கள் பிஜை என்ற மத வெறி மொக்கையை போன்று இன்னும் பைபிளை புரட்டிக்கொண்டு இசுலாமிர்க்கு வக்காளத்து வாங்குகிறீர் அய்யோ உங்களை நினைத்து சிரிப்புதான் வருகிறது ,திருச்சபை மானம் காற்றில் பறந்து விடும் என்று பாதிரியின் பாலியல் குறறங்களை மறைப்பதக்கும் இசுலாமை பேசாதே என்று நீங்கள் எழுப்பும் எதிர் குரலுக்கும் அதிக வித்தியாசம் இல்லை மீண்டும் சொல்லிக்கொள்ளுவது நான் திருச்சபை விசுவாசி இல்லை இசுலாமிய எதிர்ப்பாளன் அவ்வளவே

                  • ஜோசப் உங்களுக்கு கோபம் தலைக்கு மேல் ஏறும் இந்த தருணத்தில் அறிவை இழந்து என்னை திட்ட தொடங்குகின்றீர்கள்! நன்றி…. எவ்வளவு வேண்டுமானாலும் திட்டுங்கள் அதனை பற்றி எனக்கு கவலை இல்லை… என்னுடைய பின்னுட்டங்க்ளிலேயே சில அடிப்டையான விசயங்களை குறிப்பிட்டு உள்ளேன். மீண்டும் படித்து தெளிவு பெறுங்கள்….. முடிந்தால் பதில் அளியுங்கள்…

                    ##இவைகள் எல்லாம் கிருஸ்துவத்தின் ஆபாசங்களா அல்லது அந்த கால சமுகத்தின் ஆபாசங்களா?

                    ## நீங்கள் சுட்டிகாட்டியது போனறு கிருஸ்துவத்தில் உள்ள பாலியல் முறைகேடுகளுக்கு நானோ அல்லது முகமதோ எப்படி காரணமாக இருக்க முடியும்?

                    ## PJ வின் அதே சாயலிலேயே நீங்கள் பேசும் போது p joseph அவர்களுக்கும் PJ வுக்கும் வேறு என்ன வேறுபாடு…

                    ##பைபிளில் பாலியல் சீரழிவுக்கு உள்ளானவர்ககளில் இறை தூதர்களும் அடங்குவார்கள் என்ற உண்மையாவது உங்களுக்கு தெரியுமா?

                  • ஜோசப் அவர்களே, உங்களுக்கு மாற்று மதங்களின் குறைகளை சுட்டிக்காட்ட உரிமை உள்ள போது அதே உரிமையும் ,சுதந்திரமும் எனக்கும் உள்ளது அல்லவா? அப்படி நான் கிருஸ்துவ மதத்து பைபிள் பட்டியல் இடும் பாலியல் ஆபாசங்களை வெளிக்கொண்டு வரும் போது ஒன்று நீங்கள் அந்த குறைகளை ஏற்க வேண்டும் அல்லது எதிர்க்க வேண்டும்! இரண்டான் கேட்டான் நிலையில் இருந்து கொண்டு பதட்டம் அடைவது ஏன்?

                    • இசுலாமில் குழந்தை திருமனத்திற்க்கு ஆதரவு இருப்பதை போல கிறிஸ்தவத்திலும் பாலியல் ஆபாசங்களுக்கு அனுமதி இருப்பது போல இரண்டையும் இனைத்து பேசுவது நீங்கள் இது பதில் சொல்ல லாயக்கற்ற கேள்வி என்றே தவிர்த்து இருக்கிறேன் பதட்டம் எல்லாம் அடைய வில்லை இதுக்கு அல்ரெடி பதில் சொல்லியாயிற்று திரும்ப திரும்ப போர் அடிக்காமல் பொது சிவில் சட்டம் பற்றி பேசுங்கள்

                    • ஜோசப் அவர்களே,கண்டிப்பாக கிருஸ்துவத்தில் அதன் ஏற்பாடுகளின் பின்னணியில் பாலியல் ஆபாசங்களுக்கு மிகுந்த அனுமதி உள்ளது ஜோசப்…..இல்லை என்றால் புதிய மற்றும் பழைய ஏற்பாடுகள் அவ்வளவு ரசனையுடன் அந்த கால பாலியல் ஆபாசங்களை பதிவு செய்து இருக்காது…. அதுவும் இறை தூதர்களே அத்தகைய பாலியல் ஆபாச நிகழ்வுகளுக்கு நடிகர்களாக இருந்து உளார்கள்… அதன் தொடர்ச்சியாக வந்த குர்ஆனில் நீங்கள் கூறுவது போன்று குறைபாடுகள் இருக்குமாயின் அது பைபிளின் தொடர்சி தானே தவிர குரானின் தனித்த விஷயம் அல்ல…. முஸ்லிம்களும் ,கிருஸ்துவர்களும் யார் அவர்களுக்கு உள்ள ரத்த உறவு முறைகளை நான் உங்களுக்கு விளக்கவேண்டுமா என்ன ஜோசப்?

                    • ஜோசப் அவர்களே, நீங்கள் கூறுவது போன்று குரான் குழந்தை திருமணத்தை ஆதரிப்பது உண்மை என்றால் அதற்கு இணையாக புதிய மற்றும் பழைய ஏற்பாடுகள் தந்தையுடன் புணர்ந்த மகள்கள் பற்றிய செய்திகளும் , மாமனாரும் மருமகளும் புணர்ந்த கதையும் , அண்ணனும் தங்கையும் புணர்ந்த கதையும் உள்ளனவே ! அதுவும் இறைதூதர்கள் அத்தகைய ஆபாசங்களில் ஈடுபட்டதும் பதிவாகி உள்ளனவே! கிருஸ்துவ இறை தூதர்களுக்கு என்று பாலியல் ஆபாசங்க்களில் ஈடுபட இறைவன் ஏதாவது தனிபட்ட சிறப்பு உரிமையை வழகி உள்ளாரா என்ன?

                    • அன்றைய யூதர்களின் சட்ட விதி முறைபடி (ஆணுக்கு திருமண வயது 13 மற்றும் பெண்ணுக்கு 12) என்று இருக்க மேரி அமையார் ஜோசப் ஐயா அவர்களை திருமணம் செய்யும் போது மேரிக்கு வயது 12 தானே? அப்படி இருக்க அந்த மேரி என்ற சிறுமியின் வயிற்றில் ஏசு என்ற குழந்தையை கருவடைய செய்த இறைவனுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் ஜோசப்?

                      //இசுலாமில் குழந்தை திருமனத்திற்க்கு ஆதரவு//

                    • ஜோசப், 12 வயதில் ஏழாம் வகுப்பு படிக்கும் ஒரு சிறுமிக்கு யாராவது திருமாணம் நடத்தி வைத்தால் இன்றைய இந்திய தண்டனை சட்டபடி ஜெயிலில் கம்பி எண்ணவேண்டி இருக்கும்! ஆனால் அன்று யூதர்களின் சட்டபடி 12 வயதே ஆனா மேரி என்ற சிறுமிக்கு ஜோசப் என்ற சிறுவனுடன் திருமணம் செய்து வைக்கிறார்கள்! அப்படி எனில் ஒருவேளை இஸ்லாம் சிறார் திருமணத்தை ஆதரிக்கின்றது எனில் அதற்கு வழிகாட்டியாக ஏசுவின் பெற்றோரின் திருமணம் இருந்ததாக கொள்ளலாம் அல்லவா?

                      //இசுலாமில் குழந்தை திருமனத்திற்க்கு ஆதரவு//

                  • Pஎர்மலிங் 10.1.2.2.2.1.2.1 இந்த பின்னூட்டத்தை திரும்பவும் படியுங்கள் பைபிள் பழைய ஏற்ப்பாட்ட மீண்டும் படியுங்கள் ஓரே விசயத்த சுத்தி சுத்தி பேசாதீர்கள்

                    • இணைச்சட்டம் என்ற உப ஆகமத்தில் ஆண் பெண் திருமண வயது வரம்பெல்லாம் குறிப்பிடப்பட வில்லை இதை பற்றி மேலும் அறிந்து கொள்ள விவிலியத்தின் இணைச்சட்ட (உப ஆகமத்தை) படிக்கலாம் நீங்க தான் பேராசிரியர் ஆயிற்றே

                    • ஜோசப், நீங்க குரானுக்குள்ள போயி பிரிச்சி மேயிரப்ப இல்லாத “அது பழமை” என்ற சொற் தொடர் உங்கள் மனதுக்குள் ஏற்படாமல் நான் பழைய மற்றும் புதிய ஏற்பாடுகளுக்குள் செல்லும் போது மட்டும் உங்களுக்கு “அது பழமை” ஏற்படுகின்றது என்றால் உங்கள் நேர்மையில் தான் சந்தேகம் கொள்ளவேண்டியுள்ளது… ஆண்டுக்கு 52 ஞாயிற்று கிழமைகள் கிருஸ்துவ மக்கள் கையில் கொண்டு செல்லும் பைபிளில் உள்ள பாலியல் ஆபாச செய்திகளை அதில் இருந்து கத்தரித்து நீக்க யார் கிருஸ்துவர்களுக்கு தடையாக உள்ளார்கள்? பைபிளில் தான் அந்த பாலியல் ஆபாச செய்திகள் உள்ளது அதனை நாங்கள் பின்பற்றவில்லை என்று கூறுவீர்கள் என்றால் அது யாரை ஏமாற்ற? பைபிள் கிறிஸ்துவர்களின் வாழ்க்கை வழிகாட்டி என்ற நிலையில் அந்த பாலியல் ஆபாச செய்திகளை நீக்க நீங்கள் கூட குரல் கொடுக்கவில்லை எனில் வேறு யார் குரல் கொடுக்க முடியும்? சிந்தியுங்கள் ஜோசப்……

                    • ஜோசப் நான் கூறிய யூதர்களின் திருமண வயது பற்றிய செய்தியை(ஆணுக்கு திருமண வயது 13 மற்றும் பெண்ணுக்கு 12) நீங்கள் மறுக்கவே முடியாது… ஏன் எனில் அது யூதர்களின் வரலாற்று செய்தி…வரலாற்றை நீங்கள் மாற்றிக்கூற விரும்புவீர்கள் எனில் ஏசுநாதர் யூதர் அல்ல என்றும் அவர் முதாதையர் யூதர்களே அல்லவென்றும் வேண்டுமானால் பொய்யாக கூறுங்கள்… அதன் மூலம் மேரி சிறுமியாக இருக்கும் போதே அவர் திருமணம் செய்தது கொண்டார் ஆனால் அவர் யூதர் இல்லை… என்று வேண்டுமானால் நிருபிக்க முயலுங்கள்…. மேலும் இஸ்லாம் கூறுவது என்னவென்றால் பெண்களுக்கான திருமண வயது 15 என்று கூறுகின்றது… அதனை இந்திய நீதி மன்றமும் தன் தீர்ப்புகள் மூலம் ஏற்கின்றது…. குஜராத் நீதி மன்றம் அத்தகைய தீர்ப்பை வழங்கியுள்ளது….(பொது சிவில் சட்டம் நேர்மையான முறையில் நிறைவேரறப்படும் எனில் இந்த விசயத்தில் அனைத்து மதத்து பெண்களுக்கும் திருமண வயது 18 ஆக மாற்ற சட்டம் இயற்றலாம். அது பெண்கள் குறைந்த பச்சம் 12 ஆம் வகுப்பு வரையாவது படிக்க உதவும்.சிறுவயதில் கரு திருப்பு தவிர்க்கப்படும்)

                    • ஜோசப் நீங்க கூறும் அத்துணை பிரச்சனைகளுக்கும் மூல காரணம் யூதர்களின் பழமையான சட்டமான Halakhah மற்றும் Talmud தான் என்பதனை நீங்கள் இன்னும் உணரவில்லை போலும்! இத பழமையான யூத திருமண சட்டங்கள் கூறுவது என்னவென்றால் பெண் குழந்தைகளுக்கு சிறுவயதில் திருமணம்(மூன்று வயதில் இருந்து 12 வயதுக்குள்) அதன் பின் தந்தையின் பாதுகாப்பில் குழந்தை பருவம் அடையும் வரையில் வாழ்வது…, பின்பு கணவனுடன் செல்வது…, ஆண்கள் பலதார திருமணம் செய்ய அனுமதி…, ஆண்கள் மனைவிகளை விவாகரத்து செய்ய எளிய வழிமுறைகள் என்று அத்துனை சமுக அவலங்களையும் யூத மத சட்டங்கள் வலியுறுத்துகின்றன….
                      மேலே நான் கூறிய யூத வரலாற்று அடிப்படையில் கிறிஸ்துவத்தையும் ,இஸலாமையும் ஆய்வுக்கு உட்படுத்தும் போது நாம் என்ன முடிவுக்கு வரமுடியும் என்றால் யூதர்களின் பழமையான சட்டமான Halakhah மற்றும் Talmud தான் இன்றைய கிருஸ்துவ மற்றும் இஸ்லாமிய வாழ்வியல் நெறிமுறைகளுக்கு அடிபடையாக உள்ளது என்று முடிவுக்கு வரமுடியும்…

          • செந்தில்குமரன் யாருக்கு யார் மெளனத்தை கலைக்க வேண்டும்.விளக்கம் கொடுக்கும் அளவிற்க்கு நீங்கள் குறிப்பிடும் நபர் தர்க்கரீதியாக வாதம் பண்ணுகிறவரா?அவர் உளறல்கள் உங்களுக்கு காணாதா? ஒரு கோமாளியாக கருதி புறக்கணிக்கப்படவேண்டிய நபரை நீங்கள் முக்கியத்துவம் கொடுத்து பதிலளிப்பது காணாது என்று வினவு வேறு விளக்கமளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுப்பது ரொம்ப ரொம்ப அதிகம்.

  10. பேராசிரியர் செந்தில் குமரன் பொது சிவில் சட்டம் பற்றிய கட்டுரைகளில் அரசியல் அமைப்பில் சர்வ சமய சார்பு சட்டம் அதனால இந்து மதத்துல ஒவ்வொறு சீர் திருத்தம் கொண்டு வர முயற்சி செய்த போதும் அதனை இந்துத்துவா வாதிகள் அரசியல் அமைப்பு சட்டத்தை காட்டி எதிர்த்தார்கள் என்று கட்டுரையில் சொல்லப்பட்டு இருக்கிறது அதாவது தேவதாசி ஒழிப்பு ,உடன் கட்டை ஒழிப்பு ,தீண்டாமை கோவில்நுழைவுனு ஒவ்வொன்ற்றிர்க்கும் பழமை வாதிகள் முட்டுக்கட்டை போட்டாலும் எதோ ஒரு வகையில் அவை இம்பிளிமன்ட் செய்யப்பட்டு இருக்கிறது என்பதையும் கவனிக்க வேண்டும் இது இந்து மதத்தின் நெகிழ்வு தன்மையை காட்டுகிறது அனால் இசுலாம் அப்பிடி இல்லை ,

    கிறிஸ்த்தவ மதத்துலயும் சீர்திருத்தங்களை கொண்டு வரலாம் தப்பு இல்லை பெண்களில் ஆயர்கள் இல்லை என்ற குறைய இப்ப கொஞ்சம் கிறிஸ்தவ மதம் கவனத்தில் கொண்டு உள்ளது தெனிந்திய திருச்சபைகளில் பெண் குருக்களை நியமித்துக்கொண்டு வருகிறது எனக்கு தெரிந்து 10 ஆண்டுகளுக்கு முன்பே பெரம்பூர் ரயில் நிலையம் அருகில் உள்ள ஒரு திருச்சபையில் பார்த்து இருக்கிறென் ஒரு பெண் ஆயர் அங்கி போட்டு பச்சை நிற கழுத்து பட்டியுடன் ஆராதனை நடத்தினார் இது கண் துடைப்பாக அல்லாம மேலும் விரிவு ப்டுத்தப்பட்டால் நன்றே ஆயர் பணி மட்டுமில்லாமல் உபத்தெசியர் என்ற பனியினை பெணகள் எனக்கு தெரிந்து முன்பே ஏற்று நடத்தி இருக்கிறார்கள் ,

    மத்த படி ஜோசப்னு பேரை பார்த்தவுடன் உன் மத்தை மட்டும் பேசு என்று கூறுவது மடத்தனம் நான் திருச்சபை விசுவாசி இல்லை ஒரு வேளை பொது சிவில் சட்டம் வந்து திருச்சபைகளை மோடி அரசு எடுத்துக்கொண்டால் மகிழ்ச்சியே எனென்றால் திருச்சபைகள் செய்யும் தொண்டூழியஙளை விட அட்டூழியங்கள் அதிகம் என்ன எஸ்ஸி ல நிறைய பேர் திருச்சபை பள்ளிகளில் ஆசிரியராக பனி புரிகிறார்கள் அவுக பாடுதான் கஸ்டம்

  11. அப்புறம் செந்தில் குமரன் தமிழன் என்பவர் கிறிஸ்தவர்கள் மீது எவ்வளவு வன்மம் கொண்டு உள்ளார் என்பதை அறியாமல் அதர பழசான டவுச்ர் சர்ச் கதையெல்லாம் பேசிக்கொண்டு இருக்க வேண்டாம் அதெல்லாம் புத்தகத்துல படிச்சிட்டு இப்பிடியெல்லாம் நிலைமை இருந்ததா என்று யோசிக்கும் அளவுக்கு திருச்சபைகள் வந்து விட்டன இசுலாம் சம்த்துவம் என்ற பொய்யை எங்கு யார் அவிழ்த்து விட்டாலும் எதிர்ப்பேன் தனி மனிதன் என்ற முறையில் என்னை காபிர் என்பதற்க்கும் அவன் தீட்டானவன் அவன் மீது போர் புரிந்து அவனை அடக்கு என்று சொல்லும் முகமதுவையும் அவரது ஸ்பிலிட் பெர்சுனாலிட்டி அல்லாவையும் விமர்சிக்கவு பூரண உரிமையும் சமத்துவ பொய்யை சுட்டிக்காடவும் உரிமை உள்ளது

    • இன்னும் கூட விளக்கமாக கூறமுடியும் ஜோசப்! ஹிந்து மதத்தை பொறுத்தவரையில் கோவில்களில் மத குருக்கள் பதவிக்கு தலைமை ஏற்பதில் சமுக சமத்துவமும் இல்லை…., பாலின சமத்துவமும் இல்லை…ஹிந்து மதத்தில் சமுக சமத்துவம் இல்லாத காரணத்தால் அது மற்ற மதங்களை விட மிகவும் பிற்போக்கு தனமானது மட்டும் அல்ல அது ஹிந்து மக்களுக்கே எதிரானது… பிற இரு மதங்களான கிறிஸ்துவம் மற்றும் இஸ்லாமை விட ஹிந்து மதம் தான் மிகவும் அதிக அளவில் மாற்றங்களுக்கு உட்படுத்தபட வேண்டியது. இவை எல்லாம் பொது சிவில் சட்டத்தின் மூலம் மோடி அவர்கள் சரி செய்வாரா என்ற கேள்வியை மணிகண்டன் போன்ற மோடி ரசிகர்களிடம் எழுப்பும் நிலையில் தான் நான் இருகின்றேன்….!

      அடுத்து எனக்கு சிறுவயதில் பள்ளிகளில் கல்வி அளித்த சிஸ்டர்கள் எல்லாம் மதர் என்ற அளவில் தான் உயர்த்தப்பட்டர்களே தவிர நீங்கள் கூறுவது போன்று ஆயர் அளவுக்கு எல்லாம் செல்லவில்லை… ஆனால் அவர்களை விட வயதில் அனுபவத்தில் குறைந்த பிரதர்ஸ் எல்லாம் இன்று மத விடயங்களில் மிக உயர்ந்த நிலையை அடைந்து இருப்தனை காணமுடிகின்றது. எனவே நீங்கள் கூறும் விசயம் (பெண் ஆயர்கள்) விதி விலக்கே தவிர அதுவே விதிகள் இல்லை….எனவே கிருந்துவதில் பெயரளவுக்கு தான் பாலின சமத்துவம் உள்ளது. (இஸ்லாமில் மத தலைமை ஏற்பு விசயத்தில் பாலின சமத்துவம் பெண்களுக்கு சிறிதும் பெயரளவுக்கு கூட இல்லை என்பது உண்மை )

      அடுத்து காபிர் என்ற சொல் எந்த சூழலில் முகமது நபி அவர்களால் பயன்படுத்தபட்டது என்பதனை பற்றி சிந்தியுங்கள்…. முகமது நபி அவர் வாழ்ந்தநாட்களில் ஹிந்துக்ளுடனும், கிருஸ்துவர்கள் உடனுமா போர்புரிந்துகொண்டு இருந்தார்? இல்லையே! (உடனே அவர் வாழ்வுக்கு பின் நடந்த சிலுவை போர்களுக்கு செல்லவேண்டாம்!) அவர் வாழ்ந்த ,போரிட்டு வென்று அரசாண்ட நிலப்பரப்பில் இருந்த எதிரிகளை தானே காபிர் என்று அழைத்தார்! இன்றைக்கு அந்த சொல்லை முஸ்லிம்களே பயன்படுத்தாத நிலையில் அதில் எதற்க்காக நாம் தொங்கிக்கொண்டு இருக்கவேண்டும்…?

      அது சரி….! மதங்களுக்குள் உள்ள உள் முரண்பாடுகளை, சமத்துவம் இன்மைகளை கலையாமல் நாம் எப்படி பொது சிவில் சட்டத்தை நோக்கு பயணிக்க முடியும் என்று விளக்குங்கள் ஜோசப்! அதுவும் ஹிந்துத்துவாகளின் ஆட்சியில் தலைமை பொறுப்பில் உள்ள மோடி போன்ற ஒரு தெளித்த சிந்தனை அற்ற ஒருவரின் ஆட்சி அதிகாரத்தின் கீழ் நாம் எப்படி முழுமையான பொது சிவில் சட்டத்தை எதிர்பார்க்க முடியும்?

    • ஜோசப் , இந்த “காபிர்” என்ற இஸ்லாமிய பதத்தை “பாவிகள்” என்ற கிருஸ்துவ பதத்துடன் ஒப்பிட்டு பாருங்கள் ஜோசப்…. இரண்டுக்கும் மிகுந்த அதிக வேறுபாடு ஏதும் இருக்காது… மாற்று மதத்தவர்களை இஸ்லாம் காபிர் என்று அழைக்கும் நிலையில் கிறிஸ்துவம் மாற்று மதத்தவர்களை(பரிசுத்த ஆவியை வணங்காதவர்களை) பாவிகள் என்று நேரடியாகவும், சில இடங்களில் மறைமுகமாகவும் அழைக்கின்றது… அதனால் வார்த்தைகளை வைத்துகொண்டு விவாதத்தில் விளையாடிக்கொண்டு இருப்தனை விட அந்த அந்த வார்த்தைகள் பயன்படுத்தப்ட்ட்ட இடம் ,பொருள் ,காலம் ஆகியவற்றையும் நாம் கருத்தில் எடுத்துகொள்ளவேண்டியுள்ளது… கிருஸ்துவமும் , இஸ்லாமும் தோன்றிய காலகட்டத்தில் அத்தகைய சொற்கள் (காபிர் மற்றும் பாவி)அந்த அந்த பிரதேசத்தில் மட்டுமே பயன்பட்டில் இருந்ததே தவிர உலகம் முழுமைக்கும் அது பயன்பாட்டில் இல்லை…

  12. இந்த காபிர் என்ற வார்தைக்கும் பாவி என்பதற்க்கும் சம்பந்தம் இல்லாமல் முடிச்சு போடிகிறீர் சரவணன் கிறிஸ்தவம் எல்லோரையும் பாவிகள் என்றுதான் சொல்லுகிறது இசுலாமை போன்று இல்லை எனபதை தெரிவித்துக்கொள்ளுகிறேன் எல்லா ஆர் சி சபையிலும் எனக்கு பழக்கம் உண்டு என்று சொல்லும் உங்களுக்கு வாரம் சன்டே அன்னிக்கு அவுங்க பாவ சங்கீர்தனம் செய்வது தெரியாதா உங்களுக்கு எதுக்கும் எதுக்கும் முடிச்சி போடுகிறீர்கள் என்பது எனக்கு விளங்கவே இல்லை

    • ஜோசப் , மத விடயங்களில் உள் நுழையக் கூடாது என்று இருந்தவனை உள் இழுத்துவிட்டீர்கள்! முழுக்க நனைந்த பின் குடை எதற்கு? சரி முழுமையாகவே விவாதிப்போம்….!

      கீழ் உள்ள பைபிள் வாசகத்தை சற்று உற்று நோக்குங்கள் :
      பாவஞ்செய்கிற எவனும் நியாயப்பிரமாணத்தை மீறுகிறான்; நியாயப்பிரமாணத்தை மீறுகிறதே பாவம். அவர் நம்முடைய பாவங்களைச் சுமந்து தீர்க்க வெளிப்பட்டாரென்று அறிவீர்கள்; அவரிடத்தில் பாவமில்லை (1 யோவான் 3:4-5).

      இங்கு நியாயப்பிரமாணம் என்பது நன்கு ஏற்பாடுசெய்யப்பட்ட சட்ட ஒழுங்குகள் (பழைய ஏற்பாடு –மோசஸ் ,புதிய ஏற்பாடு –ஏசு )மூலம் ஒரு சமுதாயத்தை ஆட்சிசெய்தலாகும். அப்படியானால் அந்த நியாயப்பிரமாணத்தை பின்பற்றாத என்னை போன்ற மாற்று மதத்தவர்களை பாவிகளாக தானே கிறிஸ்துவம் பார்கின்றது…?! கிருஸ்துவத்தை பின்பற்றாதவர்களை அது பாவிகளாக தானே பார்கின்றது? அல்லது ஏசுவின் அந்த நியாயப்பிரமாணம் இஸ்ரவேலுக்கு மட்டும் தான் பொருந்துமா? இஸ்ரவேலுக்கு மட்டும் தான் அந்த நியாயப்பிரமாணம் பொருந்தும் எனில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை..! ஒருவேளை அந்த நியாயப்பிரமாணம் உலக மக்களுக்கு அனைவருக்கும் பொருந்தும் எனில் அதனை பின்பற்றாத மாற்று மதத்தவர்கள் 1 யோவான் 3:4-5 கூற்றுப்படி பாவிகள் தானே? Is it Acceptable ?

      (Dear joe.., Really I do not like to do such discussions…. But You compelled me to do this….)

    • ஜோசப் “மனம் திரும்புங்கள்… தேவன் பாவிகளுக்கு சமீபமாயிருக்கிறார்” என்ற வசனம் உள்ள நோட்டிஸ்களை என்னிடம் கொடுத்த ஒருவரிடம் நான் பாவியா என்று கேட்டேன்….? அவரும் ஆம் என்றார் ! சிரித்து விட்டு சென்றுவிட்டேன்… நான் என்ன கிருஸ்துவனாக பிறக்காத குற்றத்தை தவிர வேறு என்ன பாவம் செய்தேன் ஜோசப்? இப்ப புரியுதா “பாவி” மற்றும் “காபிர்” ஆகிய இரு வார்த்தைகளுக்கும் இடையில் உள்ள ஒற்றுமை… இஸ்லாம் மாற்று மதத்தவர்களை விரோதிகளாக பார்கின்றது என்றால் கிறிஸ்துவம் மாற்று மதத்தவர்களை பாவிகளாக தானே பார்கின்றது?

    • ஜோசப்…, அடுத்ததாக பார்த்தீர்கள் என்றால்….
      “தம்மீது விசுவாசம் வைக்கிறவர்களுக்குப் பாவத்திலிருந்து விடுதலை அளிக்க இயேசு பூமிக்கு வந்தார்” (யோவான் 3:16)

      இதில் எங்கே அனைத்து மதத்தவர்களுக்கும் சமத்துவம் இருக்கிறது? விசுவாசிகளுக்கு மட்டுமே பாவத்தில் இருந்து விடுதலை என்றால் பைபிள் கூற்றுப்படி அதே இறைவனால் படைக்கப்பட்ட மற்றவர்ககளுக்கு பாவத்தில் இருந்து விடுத்தலை இல்லை என்று ஓர வஞ்சனை தானே செய்கின்றது கிறிஸ்துவம் ?

  13. ஜோசப் , இங்கு நான் வைக்கும் பதில்களின் அடிப்படையில் விவாதிப்பீர்கள் என்று நினைக்கின்றேன்…! அதனை விடுத்து இங்கு மவுனம் சாதித்துவிட்டு மீண்டும் வேறு ஒரு கட்டுரையின் காபிர்கள் என்ற பதத்துடன் மீண்டும் மீண்டும் மத வேற்றுமைகளை பற்றி நீங்கள் பேசுவீர்கள் என்றால் அது நியாயம் அற்ற செயல்…(அதனை தான் இரண்டு ஆண்டுகளாக வினவில் செய்கின்றீர்கள் ஜோசப் !

  14. நீங்கள் சொல்லுகிற படிதான் கிறிஸ்தவர்கள் நடக்கிறார்கள் என்று நீங்களாக நினைத்துக்கொண்டு எதயாவது உளரிக்கொண்டு இருந்தால் அதுக்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டு அலைய வேண்டும் என்று அவசியம் இல்லை

    • பதில் சொல்ல துப்பு இன்றி ஓடுகின்றீர்கள் ஜோசப்…. உமக்கு உமது ஏற்பாடுகளில் இருந்தே தான் பாவிகள் என்ற வார்த்தைக்கு உதாரணங்களை கொடுத்து இருகின்றேன்… ஏற்பாடுகளில் பாவிகள் என்ற சொல் குர்ஆனில் காபிர்கள் என்று மாறி யுள்ளது…. அவ்வளவு தான்….!

  15. Religion is nothing short of a monstrous scam to gain power,
    control the masses and pick the people’s pockets in the process.
    Common indoctrinating tactics: make the person feel they were “chosen”
    and are “special” among all others; offer great rewards like eternal life;
    label anything that contradicts the doctrine (including prove-able facts)
    as “evil” and of the “trickster”; explain any contradictions in the doctrine
    as “mysteries”; rely on popularity and peer pressure to legitimize the doctrine;
    state awful consequences for those who do not adhere to the doctrine; etc…
    All cults follow a basically the same techniques.

  16. மணிகண்டன் மற்றும் ஜோசப் போன்றவர்கள் ஆக்கப்பூர்வமான விவாதத்துக்கு வர மாட்டார்கள் ஆனால் அதே நேரத்தில் மாற்று மத வெறுப்புணர்வுகளை துண்டிகொண்டு வினாவை அதன் பின்னுட்ட பகுதியை misuse செய்வார்கள் என்பதனை இந்த விவாதத்தில் மிக உறுதியாக நிருபணம் செய்து கொண்டு உள்ளார்கள்…!

  17. என்ன மணி மாமா,
    சவுக்கியமா ?.

    சோலோவாவே கம்பு சுத்துவேள், இப்போ ஜோசப் அம்பியோட சேர்ந்து வெளுத்து வாங்குறேளே ..

    சரி .. கட்டுரைக்கு வர்றேன். பொது இந்துச் சட்டம் இல்லை என்பது நோக்குத் தெரியாதா என்ன ?.

    கோவால வாழ்கிற ஒரு பழங்குடி இன மக்களுக்கு உங்க திருமண சட்டம் செல்லாது,அவங்களும் ‘சோ-கால்டு’ இந்துக்கள் தான். நாயர் சாதியைச் சேர்ந்தவர்களுக்கு தனி திருமணச் சட்டம் உள்ளது,அவங்களும் ‘சோ-கால்டு’ இந்துக்கள் தான். இன்னும் பல சாதிகளுக்கு / இனங்களுக்குன்னு சொத்து பிரிக்கிறதுல இருந்து தனி தனி சட்டம் இருக்குன்னு நோக்கு தெரியாதோன்னோ … அசடு .. அசடு …

    சுப்பி மாமா கிட்ட கேட்டேள்னா சொல்லித்தரப் போறார். இங்க வந்து ஏன் கம்பு சுத்துறேள் ?. சுப்பி மாமா உங்கள மாதிரி ஆளுங்களை நம்பித் தான் தமிழ்நாட்டுல ஆட்சியைக் கலைப்பேன்னு சவுடால் விட்டிருக்கார். நீங்க இங்க வந்து கம்பு சுத்துனேள்னா .. அடி கிடி பட்டுடுச்சுன்னா, சுப்பி மாமாக்கு யார் பதில் சொல்றது ?.

    போங்கோ .. போய் ரெஸ்ட் எடுங்கோ .

    • இந்து திருமண சட்டத்துல குறிப்பிட பட்டுள்ள எந்தெந்த விசயங்கள் நீங்க குறிப்பிடும் சமூகங்களுக்கு செல்லாது என்று சொல்லாமே ஆணுக்கு 21 வயது பெண்களுக்கு 18 வயது 2 பேருக்கும் அல்ரெடி கல்யானம் ஆகி இருக்க கூடாது உறவு முறை ரீதியில் பொருந்த வேண்டும் , 2பேரும் முழு சம்மததோட இருக்கனும் மத சடங்குனு எது வேனா இருக்கலாம் ,

      கிறிஸ்தவ மத திருமன சட்டமும் இதயேதான் சொல்லுது அனா கல்யானம் மட்டும் பாதிரிகள் சொல்லும் மத சடங்கு

      ஆனால் இசுலாமிய திருமணம் அல்ல அது பெண் மற்றும் அவர்களின் குடும்பத்தாருடனான் ஒரு ஒப்பந்தம் என்று மட்டுமே சொல்லுகிறது

  18. ஜோசப் நீங்கள் கூறும் விஷயம் அதாங்க பெண்களுக்கு மதத்தில் சம உரிமை இல்லை என்ற விஷயம் இஸ்லாமுக்கு மட்டும் பொருந்தாது…,கிருஸ்துவதுக்கும் பொருந்தும். படிப்பறிவில் உச்சத்தில் உள்ள , முதாளித்துவ சமுகமாக வாழும் அயர்லாந்தில் கூட கிருஸ்துவ மத அடிப்படையில் தான் பெண்களுக்கான கரு கலைப்பு உரிமை மறுக்கபடுகின்றது… நிலைமை அப்படி இருக்க என்னமோ இஸ்லாம் மட்டும் தான் பெண்களுக்கு சம உரிமையை வழங்கவில்லை என்று கூறிக்கொண்டு வினவில் நீங்கள் திரியும் காரணம் என்ன? நான் எந்த மதத்தையும் உயர்த்தி பிடித்துக்கொண்டு உங்களிடம் கொம்பு எடுத்து போராடவேண்டிய அவசியம் எனக்கு இல்லை… அதே நேரத்தில் நீங்கள் ஒரு குறிப்பிட்ட மதத்தை மட்டும் தாக்குவதன் பின்னணியில் யார் இருக்காங்க என்று தெரிந்து கொள்ளலாமா? மேலும் நீங்கள் இங்கு வைக்கும் குற்றசாட்டுகளை நான் எந்த பின்னுட்டத்திலும் மறுக்கவோ , எதிர்த்து பேசவோ இல்லையே! அது போன்றே தான் கிருஸ்துவத்திலும் , ஹிந்துதுவாவிலும் பெண்களுக்கு சம உரிமை மறுக்கபடுகின்றது என்பதனை ஆதாரங்களுடன் ஆணித்தரமாக கூறிக்கொண்டு உள்ளேன்… அவற்றை மறுக்க துப்பு இன்றி என் மீதே நீங்கள் பாயும் போது உங்களின் கோபம் மட்டுமே வெளிப்படுகின்றது… உங்கள் அறிவு தூங்குகின்றது !

  19. பொது சிவில் சட்டத்தை பற்றி பேசுவது தான் என்னுடைய நோக்கமாக இருத்தது ஜோசப்… ஆனா பாருங்க…. காபிர்கள் என்று தொடங்கியது……, ஷேக்குகளின் பாலியல் ஆபாசங்களுக்கு ஓடி சென்றது என்று இந்தியாவின் பொது சிவில் சட்டத்தின் எல்லைகளை மீறி விசா இல்லாமல் பயணித்தது நீங்கள் தானே? கூட மணிகண்டனை வேறு அழைதுக்கொண்டு இஸ்லாமிய நாடுகளுக்கு எல்லாம் இந்த விவாதத்தின் எல்லைகளை மீறி பயணித்தவர்கள் நீங்கள் தானே? நீங்கள் இஸ்லாமிய நாடுகளுக்கு சென்ற போது எனக்கு இஸ்ரேலுக்கு பயணிக்கவேண்டிய தேவை ஏற்பட்டது… இப்ப பயணம் முடிந்ததுஎன்று நினைக்கின்றேன்… வாங்க பொது சிவில் சட்டம் பற்றி பேசலாம்! என்னுடைய வாதத்தை வைக்கின்றேன்…. பதில் அளிக்க முயலுங்கள் ஜோசப் !

    ##இந்தியாவில் உள்ள பெரும்பான்மை ஹிந்துக்ளுக்கே பொது சிவில் சட்டம் இல்லை…. நிலைமை அப்படி இருக்க அதானை , அந்த பிரச்சனையை தீர்காமல் சிறுபான்மை மக்களை எப்படி பொது சிவில் சட்டத்துக்கு கீழ் கொண்டு வரமுடியும் ஜோசப்?

  20. செந்தில்குமரன் ஒரு செய்தியை தெளிவாக விளங்கி கொள்ளுங்கள், ம்ணிகண்டன் உள்ளத்தில் இருப்பது இஸ்லாமிய நாடுகளில் வாழும் சிறுபான்மை மக்களுக்கான உரிமை அல்ல.அவர் எத்தனை இஸ்லாமிய நாடுகளில் போய் சிறுபான்மை மக்கள் படும் துயரத்தை பார்த்துவந்தார்?உலகில் எத்தனை இஸ்லாமிய நாடுகள் இருக்கிறது என்பதாவது இந்த மணிகண்டனுக்கு தெரியுமா?அந்த கூட்டத்திற்க்கு தெரிந்தது பாகிஸ்த்தான் என்ற ஒற்றை நாடுதான்.ம்லேசியா இருக்கிறது இந்தோநேசியா இருக்கிறது நான் சொன்ன வளைகுடா நாடுகளிலும் மன்னராட்சி நடந்தாலும் எந்த நாட்டானும் தன் பெயரில் சொத்துக்களோ தொழிலோ தொடங்க முடியாது என்றாலும் எந்த சிக்கலும் இல்லாமல் இந்தியாவின் மேட்டுக்குடி பூணூல் வர்க்கமும் சிந்திகளும் மார்வாடிகளும் எல்லா நலமும் வளமும் பெற்றுத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.மணிகண்டனின் அங்கலாய்ப்பு என்ன வென்றால் முஸ்லிகளாகிய நாங்கள் ஒரு அகதியாகத்தான் வாழவேண்டும்.குடிமக்களாக இருந்து அதிகாரம் பெற்றுவிடக்கூடாது…காவிகளின் இந்த சிந்த்னை மண்டையில் ஏற்றப்பட்டுத்தான் என்னிடம் வந்து இஸ்லாமிய நாடுகளின் சிறுபான்மை மக்கள் பற்றி என்னிடம் பேசவைக்கிறது.நான் இங்கே சிறுபான்மை என்றால் என்ன வகையில்? இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட இந்தியன் என்ற வகையில் மத சிறுபான்மையினன்.நம் நாட்டில் பல்வேறு இன மொழி மத மக்களால் கலந்து வாழும்போது அவரவரின் பிரதிநிதுத்துவத்திற்க்கு ஏற்ப உரிமைகளும் சலுகைகளும் தரப்படவேண்டும்.இது ஜனநாயகம் ஏற்றுக்கொண்ட பண்பு.இது முஸ்லிம்கள் மட்டுமல்ல சீக்கியர்கள் கிறித்துவர்கள் ஜைனர்கள் என்று அனைத்து பிரிவு மக்களுக்கும் உள்ள உரிமை.இப்படி இருக்க எனக்கான உரிமைக்கு என் தாய் நாட்டில் நான் போராடினால் இஸ்லாமிய நாட்டைப்பார் என்று என்னிடம் சொல்வதற்க்கு என்ன காரணம்?அடிப்படையே விளங்காத காவி கூட்டம் விதைத்த பால பாடம்தான்.இது அந்த கூட்டத்திற்க்கு எழுத்தில் சொன்னால் விளங்காது..விளக்குமாறை தூக்கினால்தான் விளங்கும் போல.

  21. ஜோசப் …, கிறிஸ்துவம் இளமை திருமணத்தை ஆதரிக்கின்றது என்பதற்கு பல சான்றுகள் உள்ளன. அவற்றை பற்றி ஆய்வு செய்யலாமா? கீழ் உள்ள பைபிள் வாசகங்களை பாருங்கள் :

    The Jewish Study Bible: Jewish Publication Society Tanakh Translation:

    6-7: God wills the abandoned infant to live. She lives and grows to puberty. ‘Live in spite of your blood’, may also be understood as ‘live because of your blood,’ and with this understanding these words are incorporated in the circumcision ceremony. 8: Upon reaching “”””puberty*””””, she is ready for marriage…

    Note: *Puberty is when a child’s body begins to develop and change as they become an adult. Girls develop breasts and start their periods, and boys develop a deeper voice and start to look like men. The average age for girls to begin puberty is 11, while for boys the average age is 12.

    இனியும் இஸ்லாம் மட்டும் பெண்களின் இளமை திருமணத்தை ஆதரிக்கின்றது என்று பொய்யாக பேசி வினவில் திரியமாட்டிர்கள் தானே ஜோசப்?

    Joseph : ////இசுலாமில் குழந்தை திருமனத்திற்க்கு ஆதரவு இருப்பதை போல……..

    • ஜோசப் உப்பு தின்ன நீங்க தண்ணீர் குடித்து தான் ஆகனும்…. மாற்று மதத்தின் மீது உங்கள் வெறுப்புகளை அமிலமாக கக்கும் நீங்கள் அதற்கு உரிய பதிலையும் அளித்து தான் ஆகவேண்டும்…. ezechiel என்ற இறை தூதர் கிருஸ்துவ , யூத , இலாமிய மதங்களால் அங்கிகரிக்கப்ட்டவர்… அவரின் கருத்துகளை தான் நான் மேலே கொடுத்து உள்ளேன்… அத்தகைய ஒரு கருத்தில் தான் “பருவம் அடைந்த பெண் திருமணத்துக்கு தயாராகின்றாள்” ( Upon reaching “”””puberty*””””, she is ready for marriage ) என்ற விசயமும் உள்ளது… சராசரியாக பெண்கள் பருவம் அடையும் வயது 12 என்றால் கூட அதுவென்ன திருமணத்துக்கான வயதா ஜோசப்? அப்புறம் எப்படி இஸ்லாம் மட்டும் இளமை திருமணத்தை ஆதரிக்கின்றது ஆனால் கிறிஸ்துவம் இளமை திருமணத்தை ஆதரிக்கவில்லை என்று கூறுவீர்கள்? இன்னும் கூட எவ்வளவு வேண்டுமானாலும் மாற்று மதத்தின் மீது உங்கள் வெறுப்பு அமிலத்தை உமிழுங்கள் எல்லாவறுக்கும் பதில் அளிக்க தயாராகவே உள்ளேன்… என் பதில்கள் தான் நீங்கள் வீசும் மாற்று மத வெறுப்பு அமிலத்தை உங்கள் முகத்தின் மீதே திருப்பி வீசும்

      • உப்பு தின்னுங்க தண்னி குடிங்க இதெல்லாம் என் கிட்ட ஏன் சொல்லுறீங்க யார் முகத்துல அமிலம் வீச போறிங்க ஒரு எழவும் புரியல

        • ஜோசப் இந்த விவாதத்தில் நீங்கள் தோல்வி அடைந்ததால் துவண்டு போகவேண்டிய அவசியம் இல்ல… மேலும் மேலும் மாற்று மத வெறுப்பு உணர்வு அமிலத்தை உங்கள் வாயில் இருந்து கக்குங்க ! அவற்றுக்கும் பதில் அளிக்க தயாராகத்தான் இருகின்றேன்…. அந்த பதில்கள் தான் உங்களை மீண்டும் அமிலமாக தாக்கும்!

      • இசுலாம் மதத்தை அம்பலப்படுத்த யாருடைய அனுமதியும் எனக்கு தேவை இல்லை நீங்கள் தொடந்து முக்கிக்கொண்டோ முழங்கிக்கொண்டோ இருக்கலாம்

        • ஜோசப் மாற்று மதத்தின் மீதான வெறுப்புகளை கக்குவதற்கு உங்களுக்கு உள்ள உரிமையை நான் மறுக்கவே இல்லை…. தொடர்ந்து செய்யுங்க… மாற்று மதத்தின் மீது நீங்கள் கூறும் ஒவ்வொரு குற்றசாட்டும் கிருஸ்துவ மதத்துக்கும் பொருந்தும் என்று நிருபணம் செய்துகிட்டு தான் இருக்கேன்… உங்களின் காபிர்கள் என்ற குற்றசாட்டுக்கு இணையான பாவிகள் என்ற சொற்பதம் பிற மதத்தவர்களை புண்படுத்தும் என்பதனை நிருபித்து இருக்கேன்…. மாற்று மதத்தின் மீதான இளமை திருமணங்கள் பற்றிய உங்கள் குற்றசாட்டுக்கு அடிபடையே கிறிஸ்துவம் ஏற்கின்ற ezechiel என்ற இறை தூதரின் கருத்துகள் தான் என்று நிருபித்து இருக்கேன்…. அரேபிய ஷேக்குகளுகளின் பாலியல் எல்லை மீறல்களுக்கு காரணம் குரான் என்றீர்கள்…. இல்ல்லை அதற்கு முந்தைய பழைய மற்றும் புதிய ஏற்பாடுகள் ரசித்து கூறும் பாலியல் வக்கிரங்கள் தான் காரணம் என்றும் நிருபித்து உள்ளேன்.மேலும் பழைய ஏற்பாட்டில் பாலியல் வக்கிரங்களில் ஈடுபட்டவர்களில் கிறிஸ்துவம் ஏற்கின்ற இறை தூதர்களும் உள்ளடங்குவார்கள் என்றும் ஆதாரங்களுடன் நிருபித்து உள்ளேன்….

          இவற்றுக்கு எல்லாம் பதில் அளிக்க இயலாத நீங்கள் மிகவும் வினவு பின்னுட்ட பகுதியில் மிக பலவீனமாக முக்கி முனறிக்கொண்டு உள்ளீர்கள் ஜோசப்…..!

          • அய்யா செந்தில் குமரன் உங்களுக்கு எத்தன வாட்டி சொன்னாலும் புரியாது போல இருக்கு விவிலியத்தில் மன்னர்கள் வேறு தீர்க்கர்கள் வேறு மன்னர்கள் செய்த பாலியல் குற்றங்களை தீர்க்கதரிசிகளின் குற்றங்களாக குரான் குறிப்பிடிகிறது இந்த குழப்பத்தை உங்களின் குழப்ப தத்துவத்தோடுநினைத்து பாமர கிறிஸ்துவன் கூட சிரிப்பான் இணைச்சட்டம் என்பதுதான் யூதர்களுக்கு வழி காட்டி
            தால்மூத் என்பது யூத ரபிகளின் போதனை அடங்கிய நூல் குழந்தை திருமணம் யூதர்களின் வழக்கமாய் இருந்தது என்று வரலாற்று ரீதியில் நீங்கதான் நிரூபிக்கனும் குழந்தை திருமணம் இப்ப வரைக்கும் உள்ள மூட பழக்கம் ,குழந்தை திருமணத்துக்கும் குழந்தையை கிழவன் திருமணம் செய்வதற்க்கும் வித்தியாசம் இருக்கு காந்தி கூட குழந்தை திருமணம் செய்தவர்தன்

            நீங்க சொல்லுறது எனக்கு ஆசிட் ஊத்துர மாறி எல்லாம் இல்லை உள்ளங்காலை சொறிஞ்சு விட்ட மாறி இருக்கு 6 வயசு பொண்ன 60 வயசு கிழவன் கல்யானம் பன்ன ஆசைப்பட்டால் அவன் மனநிலை பாதிக்க பட்டவனாகவே இருக்க முடியும் என்பது மனே தத்துவ நிபுனர்களின் கூற்று இதை எந்த வகையிலாவது நீயாப்படுத்த முனைவனை விளக்கு புடிப்பவன் என்று சொன்னால் தவறே இல்லை

            தொடந்து உங்களின் உலர்களுக்கு பதில் அளித்து கொண்டு இருந்தால் விவாதம் திசை மாறுகிறது எனவே பின்னூட்ட பெட்டியை மூடுகிறோம் என்று வினவு அறிவித்து விடுமோ என்ற அய்யம் உள்ளதே தவிற உங்களுக்கு பதில் சொல்ல தெம்பு இல்லாமல் இல்லை தோழரே மன்னிக்கவும் இனியும் இதை தொடர நான் விரும்பவில்லை

Leave a Reply to கி.செந்தில்குமரன் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க