அமெரிக்காவின் 45வது அதிபராக டொனால்ட் டிரம்ப் 20.01.2017 அன்று பதவியேற்றார். ஒரு அதிபர் பதவியேற்றபோது, அதை எதிர்த்து நாடு தழுவிய அளவில் மிகப்பெரிய போராட்டம் நடந்திருப்பது அமெரிக்க வரலாற்றிலேயே இது தான் முதல் முறை.
பதவியேற்ற ஒரு வாரத்திலேயே 7 நாடுகளைச் சேர்ந்த குடியுரிமை பெற்ற இசுலாமியர்கள் தங்கள் நாட்டுக்குள் நுழையக்கூடாது என்று திமிர்த்தனமான அறிவிப்பையும், கூடவே 120 நாட்களுக்கு எந்த அகதிகளும் அமெரிக்காவில் நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள் என்ற அறிவிப்பையும் வெளியிட்டு ஐரோப்பா உள்ளிட்ட ஒட்டுமொத்த நாடுகளின் எதிர்ப்பையும் விலையில்லாமலேயே வாங்கிக் கட்டிக்கொண்டார். போதாத குறைக்கு அந்த நாட்டு உச்ச நீதிமன்றம் டிரம்பின் அறிவிப்புக்குத் தடைவிதித்து விட்டது.
இதுகுறித்த கேலிச்சித்திரங்கள்….
இசுலாமியருக்கெதிரான அமெரிக்க அதிபர் டிரம்பின் இனவெறி அறிவிப்பால் தலைதாழ்ந்து நிற்கும் சுதந்திரதேவி சிலை.
நான் நல்லவனாக இருக்க முயற்சிக்கிறேன் – ஒரு மிருகத்தின் வாக்குமூலம்
சாகச வீரன் சூப்பர்மேன், டிரம்பிடமிருந்து சுதந்திர தேவியைக் காக்க முயல்கிறார்
சுதந்திர தேவியின் சிலையை, தன்னுடைய ஆசான் ஹிட்லர் போன்று மாற்ற முயற்சிக்கும் டிரம்ப்
அமெரிக்க ஒருமைப்பாடு குறித்து சொந்த மக்களையே அச்சுறுத்தும் டிரம்ப்
இசுலாமியர் வெறுப்பைத் தூண்டுவது, எங்கள் அமைப்பை வளர்க்க மிக்க உதவி செய்யும் என டிரம்பிற்கு நன்றி கூறும் ஐ.எஸ்.ஐ.எஸ் உறுப்பினர்.
இனவெறி, மதவெறியின் ஊற்று டிரம்ப் என்பதை விளக்கும் டவர்
ஹிட்லர் வேறு வடிவில் வந்துவிட்டான் டிரம்பாக…..
டிரம்ப் டவர்..இங்கே இசுலாமியர்களுக்கு அனுமதி கிடையாது
இசுலாமியருக்கு இங்கே பாதுகாப்பில்லை…எனவே தான் இந்த அறிவிப்பு…
இணையுங்கள்: