Friday, May 2, 2025
முகப்புகளச்செய்திகள்மக்கள் அதிகாரம்முல்லை பெரியாறு - திருவாரூர் களச் செய்திகள்

முல்லை பெரியாறு – திருவாரூர் களச் செய்திகள்

-

கத்சிங், சுகதேவ், ராஜகுரு ஆகியோரின் நினைவு நாளான மார்ச் 23, 2017 அன்று மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக தேனி லோயர்கேம்பில் ஜான் பென்னிகுயிக் மணி மண்டபத்தில் தொடர் முழக்க போராட்டம் நடைபெற்றது.

ஐந்து மாவட்ட மாவட்ட விவசாயிகளின் நீர் ஆதாரமான முல்லை பெரியறு அணையில் கேரள அரசு நயவஞ்சகமாக நீர் தேக்க பகுதியில் கார் நிறுத்துமிடம் அமைத்துள்ளது. இது அணையின் மொத்த கொள்ளளவான 152-அடி நீரை தேக்க விடாமல் செய்வதற்கான சதி செயலின் ஒரு துவக்கம்தான். இந்த செயல்பாடு நீர் தேக்க பகுதியில் பல்வேறு காரணங்களைக் காட்டி நடத்தப்படும் ஆக்கிரமிப்பு ஆகும்.

கேரள அரசானது தொடர்ச்சியாக தமிழகத்திற்கு பல்வேறு வகையில் முல்லைப் பெரியாறு விசயத்தில் துரோகம் செய்து வருகிறது. இதனை தடுத்து நிறுத்துவதற்கு மத்திய அரசோ, மாநில அரசோ எதுவும் செய்யவில்லை. இவற்றை கண்டித்து ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளிகள் பகத்சிங், சுகதேவ், ராஜகுரு ஆகியோரின் நினைவு நாளில் தொடர் முழக்க போராட்டத்தை மக்கள் அதிகாரம் அமைப்பினர் துவக்கினர்.
(படங்கலைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் :
மக்கள் அதிகாரம்.
தேனி மாவட்டம்.
_____
டாஸ்மாக் கடையை திறந்து மக்களின் தாலியை அறுக்காதே !
டாஸ்மாக் நிர்வாகமே !
68, காவனூர் ஊராட்சி, கருப்பூர் குடியிருப்பு பகுதியில்
டாஸ்மாக் கடையை திறக்கும் திட்டத்தை உடனே கைவிடு !
பொதுமக்களே !
ஏழை, எளிய மக்களின் வாழ்வை சூறையாடும் டாஸ்மாக்கை தடுத்து நிறுத்துவோம் !
தகவல் :
மக்கள் அதிகாரம்.
திருவாரூர் – 96263 52829.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க