Saturday, May 10, 2025
முகப்புமறுகாலனியாக்கம்தொழிலாளர்கள்மாருதி தீர்ப்பை கண்டித்தும் விவசாயிகளை ஆதரித்தும் BHEL PPPU தொழிற்சங்கம் போராட்டம் !

மாருதி தீர்ப்பை கண்டித்தும் விவசாயிகளை ஆதரித்தும் BHEL PPPU தொழிற்சங்கம் போராட்டம் !

-

ப்பொழுதும் போல் பருவமழை பொய்த்ததாலும் வழக்கம் போல் காவிரி நீர் திறக்க கர்நாடகம் மறுத்தாலும் தமிழ்நாட்டில் கடுமையான வறட்சி நிலவுகிறது. இதனால்  வாங்கிய கடன்களை கட்ட முடியாமல் பல விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். இதை எல்லாம் மத்திய, மாநில அரசுகள் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது. இதை கண்டித்து விவசாயிகள் தலைநகர் தில்லியில் பல நாட்களாக போராடியும் கண்டுகொள்ளவில்லை. நாட்டுக்கே உணவு கொடுத்தவர்களை உடையின்றி நிர்வாணமாக போராடவிட்டது இந்த அரசு.

இதே போல் மாருதி மனேசர் தொழிலாளர்களின் மீது தொடுக்கப்பட்ட அநீதியை கண்டித்தும் , சேலம் உருக்காலையை தனியாருக்கு விற்பதை கண்டித்தும் திருமயம் BHEL PPPU தொழிற்சங்கம் சார்பாக  12.04.17 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தது.

கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு PPPU தொழிலாளர் சங்கத்தின் பொது செயலாளர் திரு. இளங்கோவன் தலைமை வகித்தார் சிறப்பு அழைப்பார்களாக நெடுவாசலை சேர்ந்த மாவட்ட விவசாய சங்க அமைப்பாளர் திரு.சுந்தராசனும் மாவட்ட விவசாய சங்க பிரதிநிதி  தோழர் . தர்மராஜனும் கலந்து கொண்டனர்.

மனேசர் மாருதி தொழிலாளர்களுக்கு கொடுக்கப்பட்ட தீர்ப்பு முற்றிலும் அநீதியானது என்றும், தொடர்ந்து மத்திய அரசு  தொழிலாளர் விரோத போக்கை கடைபிடித்து வருவது கண்டிக்க தக்கது என்றும், சேலம் உருக்காலையை  தனியாருக்கு விற்க அரசு ஏன் ஆர்வமாக உள்ளது என்பது பற்றியும் தொழிலாளர்களிடம் விளக்கினார் அமைப்பு செயலாளர் தோழர் வெங்கட்ராமன். தொடர்ந்து பேசிய பொதுச்செயலாளர் இளங்கோவன் அரசுகளின் உண்மை முகத்தை தோலுரித்ததும். இது தொடர்ந்தால் இந்தியா முழுவதும் மீண்டும் ஒரு புரட்சி வெடிக்கும் என தனது உரையில் கூறினார்.

தோழர் தர்மராஜன் பேசும்போது “பொதுத்துறை நிறுவனம் மட்டும் இல்லை தனியார் நிறுவனங்களில் நடைபெறும் அநீதிகளை இந்த அரசுகள் கைகட்டி வேடிக்கை பார்க்கின்றது. இதை தொழிலாளர்கள் கடுமையான போராட்டம் மூலம் மாற்ற வேண்டும் என்றார்.”

மத்தியில் ஆளும் அனைத்து அரசுகளும் தொடர்ந்து விவசாயிகளுக்கு எதிராக தான் இருந்து வருகிறது மீத்தேன் என்றும் அதற்கு எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து பெயரை மாற்றி ஹைட்ரோகார்பன் என்றும் மக்களை ஏமாற்ற பார்க்கிறது. இதனை தடுக்க இளைஞர்கள் ஒன்று சேர்ந்து போராடினால் மட்டுமே விடிவு கிடைக்கும்.” என்று  பேசினார். செயலாளர் சரவணன்  கண்டன கோஷங்கள் எழுப்பினார். இறுதியாக துணைத்தலைவர் தோழர் இராஜ்குமார் நன்றியுரை கூறினார். ஆர்ப்பாட்டத்தில் PPPU தொழிற்சங்கத்தின் உறுப்பினர்கள் திருமயம் விவசாயிகள் என 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தகவல் :
BHEL PPPU தொழிலாளர் சங்கம்.
திருமயம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க