Thursday, May 1, 2025
முகப்புபுதிய ஜனநாயகம்புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2017 மின்னிதழ்

புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2017 மின்னிதழ்

-

புதிய ஜனநாயகம் ஏப்ரல் 2017 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இந்த இதழில் வெளியான கட்டுரைகள்

1. உச்ச நீதிமன்றத்தில் இரண்டு குமாரசாமிகள் !
நாலும் மூணும் எட்டு என்று கணக்கு போட்டு ஜெயலலிதாவை விடுதலை செய்த நீதிபதி குமாரசாமியின் கணக்கையும் தீர்ப்பையும் பார்த்து நாடே கைகொட்டிச் சிரித்தது. மேல் முறையீட்டை விசாரித்த உச்ச நீதிமன்றமோ 4+3= 0 என்று தீர்ப்பளித்து ஜெயாவை விடுவித்திருக்கிறது.

2. தேர்தலை மற ! மக்கள் அதிகாரத்தை நினை !!
மக்களுடைய ஜனநாயக உரிமைகளை ரத்து செய்வதையே நோக்கமாக கொண்ட இந்த அரசமைப்பின் நிறுவனங்கள், தமக்கான நியாயவுரிமையை மக்களிடமிருந்தே தருவிக்கின்ற சூதுதான் தேர்தல்கள்.

3. மக்களாட்சியா, சாராய முதலாளிகளின் ஆட்சியா ?
நெடுஞ்சாலை ஓரத்திலுள்ள மதுக்கடைகளை அகற்றச் சொன்ன உச்ச நீதிமன்ற உத்தரவை, மைய அரசும், மாநில அரசுகளும் குறுக்கு வழியைப் பயன்படுத்தி முறியடிக்கின்றன.

4. வங்கிக் கடன் : நிலத்தை விற்றால் யோக்கியன் ! இல்லையென்றால் நாணயமற்றவன் !!
வங்கிக் கடனையும், பயிர்க் காப்பீடையும் விவசாயப் பிரச்சினைகளின் சர்வரோக நிவாரணியாகக் காட்டுகிறது, அரசு. ஆனால், விவசாயிகளை நிலத்தைவிட்டு அப்புறப்படுத்தும் கருவியாகத்தான் பயன்படுகிறது வங்கிக் கடன்.

5. தமிழக வறட்சி : பிணந்தின்னி பா.ஜ.க.! பணந்தின்னி அ.தி.மு.க.!!
தமிழக வறட்சிக்குப் பிச்சை போடுவதைப் போல நிவாரண நிதி அளிக்கிறது, பா.ஜ.க. குடிமராமத்து என்ற பெயரில் கொள்ளையை நடத்துகிறது, அ.தி.மு.க.

6. கருத்துச் சுதந்திரம் பயங்கரவாதக் குற்றமாம் !
கருத்துரீதியாக மாவோயிஸ்டுகளை ஆதரிக்கிறார்கள் என்ற ஒரே காரணத்துக்காக பேராசிரியர் சாய்பாபாவுக்கும் அவரது தோழர்களுக்கும் ஆயுள் தண்டனை அளித்திருக்கிறது, நீதிமன்றம்.

7. இந்திய நீதிமன்றம் அந்நிய முதலீட்டாளர்களின் கைக்கூலிப்படையா ?
ஜப்பானிய நிறுவனமான சுசுகியைத் திருப்திபடுத்துவதற்காகவும், தொழிலாளி வர்க்கத்தை எச்சரிப்பதற்காகவுமே மாருதி தொழிலாளர் வழக்கில் 13 தொழிலாளர்களுக்கு ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டிருக்கிறது.

8. கிரானைட் கொள்ளை : இந்த அமைப்புமுறை தோற்றுப் போய்விட்டது !
இது மக்கள் அதிகாரத்தின் பரப்புரை அல்ல. கிரானைட் கொள்ளை குறித்து விசாரணை நடத்திய சட்ட ஆணையர் சகாயம், தனது அறிக்கையில் கூறியிருக்கும் ஒப்புதல் வாக்குமூலம்.

9. எங்கம்மா சாணி தட்டி வித்திச்சி ! நாங்கள் எச்சி பாட்டில் கழுவிப் பொழைக்கிறோம் !!
நெசவுத் தொழில் அழிந்து, பாலாற்று மணல் கொள்ளையால் விவசாயமும் அழிந்து, டாஸ்மாக்கினால் குடும்பங்களும் அழிந்த நிலையில், அ.தி.மு.க. ஆட்சி பெண்களுக்கு வழங்கியிருக்கும் வேலைவாய்ப்புதான் எச்சில் சாராய பாட்டில் கழுவும் தொழில்.

10. இந்திய இராணுவத்தின் அறவொழுக்கம் : ஊழலைப் பார்க்காதே, கேட்காதே, பேசாதே !
இந்திய இராணுவத்தில் நடந்துவரும் ஊழல், முறைகேடுகளை அம்பலப்படுத்தத் துணியும் சிப்பாய்களும் அதிகாரிகளும் பைத்தியக்காரப் பட்டம் கட்டப்பட்டு துரத்தப்படுகிறார்கள்.

11. சேவைக் கட்டணம் என்றொரு முகமூடி !
அரசு நிறுவனங்களை நேரடியாகத் தனியாருக்குத் தாரை வார்ப்பதைவிட, கட்டணக் கொள்ளை என்ற குறுக்கு வழியில் அவற்றை கார்ப்பரேட் நிறுவனங்களாக மாற்றிவிட முயலுகிறது, மைய அரசு.

புதிய ஜனநாயகம் ஏப்ரல் 2017 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 2 MB இருப்பதால் தரவிறக்கம் செய்ய நேரம் ஆகும். கிளிக் செய்து காத்திருக்கவும்.

புதிய ஜனநாயகம் மாத இதழின் ஆண்டுச் சந்தா : உள்நாடு ரூ.180

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம்,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.ஃகே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க