Sunday, May 4, 2025
முகப்புகலைகவிதைகாட்டு தர்பார் நடத்திய நீட் தேர்வு !

காட்டு தர்பார் நடத்திய நீட் தேர்வு !

-

‘நீட்’ இந்தியா

தில்லியில்
ஆடை களைந்தான் விவசாயி.
தேர்வில்
ஆடை அவிழ்க்கப்பட்டார்கள்
மாணவர்கள்.

பர்தா களையப்பட்டது
துப்பட்டா விலக்கப்பட்டது
கூந்தல் கலைக்கப்பட்டது
உள்ளாடையும் உருவப்பட்டது
அதாகப்பட்டது,
மோடி அரசின் தூய்மையைக் காட்ட
ஆணுடலும், பெண்ணுடலும்
அசிங்கப்பட்டது.

பதஞ்சலியின் கோவணமும்
ஈசாவின் தலைப்பாகையும்
சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது,

படிக்கும் மாணவரின்
முழுக்கை சட்டையும்,
பைத்தியக்கார விதிகளால்
கிழிக்கப்பட்டது.
கழுத்தணியும், காதணியும்
பாதணியும் கூட
பறிக்கப்பட்டது.

எச்சரிக்கை விதிகளால்
எல்லா கயிறுகளும்
அறுக்கப்பட்டது.
ஆனால்,
பூணூல் கயிறு?

அன்று
கல்வி உரிமையே
மறுக்கப்பட்டது,
இன்று
சுயமரியாதையும்
பொசுக்கப்பட்டது!
இந்த காட்டு மிராண்டித்தனங்களுக்கு பெயர்
‘நீட்’!

  • துரை. சண்முகம்