Friday, May 2, 2025
முகப்புகளச்செய்திகள்மக்கள் அதிகாரம்உளுந்தூர் பேட்டையில் டெங்கு : போராட்டமில்லாமல் ஆரோக்கியம் வருமா ?

உளுந்தூர் பேட்டையில் டெங்கு : போராட்டமில்லாமல் ஆரோக்கியம் வருமா ?

-

உளுந்துர்பேட்டை பேருராட்சி ஆணையருக்கு மக்கள் அதிகாரம் எச்சரிக்கை !

மிழகத்தில் டெங்குகாய்ச்சலால்  பாதிக்கப்பட்ட பெண்கள் ஆண்கள் குழைந்தைகள் என 400-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளதாக பலவேறு ஊடக செய்திகள் கூறுகின்றன. அரசோ இந்த எண்ணிக்கையை குறைத்து காட்டுவதற்கு தீயாய் வேலை செய்கிறது.  சுகாதார சீர்கேட்டால் நோய் தீவிரமடைந்துள்ளது, தமிழக மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

மக்கள் அதிகாரம் சார்பில் உளுந்துர்பேட்டை, திருக்கோயிலூர், திருவெண்ணைநல்லூர் ஆகிய பகுதிகளில் மருத்துவமனை அதை சுற்றியுள்ள உட்பகுதி, நகரம் முழுவதும் டெங்குவின் பாதிப்பை விளக்கி 5,000 நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது. உளுந்துர்பேட்டை நகரை சுற்றியும் கழிவுக் கொட்டப்படுகிறது. அரசு மருத்துவமனை சுற்றியும் சிறுநீர் கழிப்பிடமாக மாறியுள்ளது. இந்திரா நகர் பகுதிகளில் சாக்கடை நீர் தெருக்களில் ஓடுகிறது, பேருந்து நிலையமும் பின்புறமும் மழை நீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.

சட்டமன்ற அலுவலகம் அருகாமையில் குளம்போல் தண்ணீர் தேங்கியுள்ளது. உளுந்துர்பேட்டை கள்ளக்குறிச்சி ரோட்டின் அருகில் நகரத்தின் கழிவுகள் கொட்டபடுகிறது. நகரத்தின் அருகாமையில் ஆதிதிராவிடர் மாணவர் விடுதி உள்ளது 180 மாணவர்கள் தங்கியுள்ளனர். விடுதியைச் சுற்றிலும் குளம்போல் நீர்தேங்கியுள்ளது. விடுதிஅருகாமையில் சாக்கடை ஓடுவதால் அம்மாணவர்களுக்கு நோய் தோற்றும் அபாயம் உள்ளது .

இந்த பதிப்பு அனைத்தையும் மனுவாக தயாரித்து   16-10-2017 அன்று காலை 12 மணியளவில்  மக்கள் அதிகாரம் உளுந்துர்பேட்டை வட்டார ஒருங்கிணைப்பாளர் தோழர் அரிகிருஷ்ணன் அவர்களின் தலைமையில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இருந்து முழக்கம் போட்டுகொண்டு பேருராட்சி அலுவலம் வரை ஊர்வலமாக சென்று பேருராட்சி ஆணையரிடம் மனு கொடுக்கப்பட்டது.

மனுவை ஏற்றுக்கொண்டு மனுவின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார், ஆணையர். நீங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இன்னும் அதிகபடியான மக்களை திரட்டி முற்றுகையிடுவோம் என்பதை மக்கள் அதிகாரம் சார்பாக  தெரிவிக்கப்பட்டது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்.
விழுப்புரம்.

_____________

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க