Thursday, May 1, 2025
முகப்புமறுகாலனியாக்கம்தொழிலாளர்கள்பேருந்து தொழிலாளிகளை ஆதரித்தால் போலீசு சுட்டுத் தள்ளுமாம் !

பேருந்து தொழிலாளிகளை ஆதரித்தால் போலீசு சுட்டுத் தள்ளுமாம் !

-

தருமபுரி

“போக்குவரத்து தொழிலாளிகளின் போராட்டத்திற்கு கரம் கோர்ப்போம் ! தொழிலாளியிடம் திருடிய 7000 கோடியை உடனே வழங்கு !” என்ற தலைப்பின் கீழ் அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாக ரீதியாகவும், திவாலாகிப் போன மத்திய மாநில அரசுகள் ஆள அருகதை இல்லை என்பதை வலியுறுத்தி மக்கள் அதிகாரம் சார்பாக தருமபுரி பேருந்து நிலையத்தில் தடையை மீறி போக்குவரத்து தொழிலாளிக்கு ஆதரவாக 11.01.2018 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

மக்கள் சொத்தை பாதுகாப்போம் என்று முழங்கியவாறு ஆர்ப்பாட்டம் தொடங்கியது. இதில் மூன்று பெண்கள் குழந்தை உட்பட 19 பேர் கைது செய்யப்பட்டனர். போராட்டத்தில் கைதான மக்கள் அதிகாரம் தோழர்களை தருமபுரி B1 காவல் நிலையத்தில் வைத்திருந்தனர்.

அப்போது இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் “இன்னொரு நாளக்கி பர்மிஷன் கொடுக்காம ஆர்ப்பாட்டம் செஞ்சிங்கன்னா அள்ளிக்கிட்டு வந்து உள்ளத்தள்ளிருவன், சுட்டுத் தள்ளிருவேன்.” என்று வழக்கறிஞரையும், தோழர்களையும் மிரட்டியுள்ளார்.

மக்கள் போராட்டங்களையும், மக்களுக்காகப் போராடுபவர்களையும் சுட்டுக் கொல்ல விரும்புவது இன்ஸ்பெக்டர் மட்டுமல்ல இந்த மொத்த அரசுக்கட்டமைப்பும் தான். மக்களைக் கொல்லத் துடிக்கும் இந்த அரசு மக்களைப் பார்த்து பயப்படும் நாளை உருவாககுவோம். நாம் தூக்கியெறிவோம்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
தருமபுரி மண்டலம், தொடர்புக்கு – 81485 73417.

***

திருச்சி

“அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாக ரீதியாகவும், திவாலாகிப் போன மத்திய மாநில அரசுகள் ஆள அருகதை இல்லை ! தொழிலாளியிடம் திருடிய 7000 கோடியை உடனே வழங்கு !”
என்ற முழக்கத்தின் அடிப்படையில் திருச்சி பகுதி மக்கள் அதிகாரம் அமைப்பினர் 11.01.2018 அன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மக்கள் அதிகாரம் தோழர்கள், போக்குவரத்து தொழிற்சங்கப் பிரதிநிதிகள், மாற்றுக் கட்சி அமைப்பினர், ஜனநாயக சக்திகள், விவசாய சங்கப்பிரதிநிதிகள், மாணவர்கள் இளைஞர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
திருச்சி.

***

தஞ்சாவூர்

“போக்குவரத்துத் தொழிலாளர் போராட்டத்தை ஆதரிப்போம் ! அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் திவாலாகிப் போன அரசமைப்பை தூக்கியெறிவோம் !” என்ற முழக்கத்தின் கீழ் மக்கள் அதிகாரம் சார்பில் 11.01.2018 அன்று தஞ்சைப் பகுதி மக்கள் அதிகாரம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
தஞ்சை.

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க