privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபார்ப்பனிய பாசிசம்பார்ப்பன இந்து மதம்விஜயேந்திரனுக்கு என்ன தண்டனை ? மாணவர்களின் எச்சரிக்கை வீடியோ !

விஜயேந்திரனுக்கு என்ன தண்டனை ? மாணவர்களின் எச்சரிக்கை வீடியோ !

-

விஜயேந்திரனுக்கு மாணவர்கள் எச்சரிக்கை !

தமிழை அழித்து, இந்தியை திணித்து, செத்த மொழி சம்ஸ்கிருதத்திற்கு சிங்காரம் செய்து இப்படியாக இந்தியாவில் பார்ப்பனியம் தலைவிரித்தாடுகிறது. அப்படித்தான் எச்ச ராஜாவின் ‘பிதாஜி’ வெளியிட்ட தமிழ் – சமஸ்கிருத அகராதி வெளியிடும் விழாவில், தமிழ்த் தாய் வாழ்த்தின் போது சின்ன சங்கரன் தெனாவட்டாக உட்காந்திருந்தார். இதை ஒட்டு மொத்த தமிழகமும் கண்டித்து வருகிறது.

இந்த வீடியோவில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாணவர்கள் சங்கராச்சாரிகளையும், பார்ப்பனக் கூட்டத்தையும் நேருக்கு நேர் குற்றம் சாட்டுகிறார்கள்.

உரை:

மிழ்னா அவ்ளோ இளக்காரம்!
ம்……
தமிழ்த்தாய் வாழ்த்துன்னா உனக்கு உடம்பே எரியுது,

***********

ராஜாஜி ரெண்டு வாட்டி இந்தியை திணிக்க பாத்தாரு.
மொத வாட்டி தாளமுத்து, நடராஜன்னு ரெண்டு பேர் தியாகியானாங்க!
விருகம்பாக்கத்துல அந்த தியாகிங்க வீட்டுக்கு
போன வருசந்தான் நாங்க போனோம்!
அவரு வாரிசுங்க உன்னமாதிரி மாட மாளிகையில வாழலடா

அவங்கள ஏண்டா கொன்னீங்கன்னு அன்னைக்கு ராஜாஜிகிட்ட கேட்டா சட்டசபையில எகத்தாளமா சிரிச்சாரு

அந்த எகத்தாளம்தானே உனக்கும்?

அன்னைக்கு இந்தி திணிப்பை எதிர்த்து ஜீயரா போராடினான்?
தமிழுக்காக போராடுன தலைவருங்கள்ள ஒருத்தரு யாரு தெரியுமாடா?
எங்க மூவலூர் ராமாமிர்தம் அம்மாடா!
தேவதாசி குலத்தில் பொறந்து அதை ஒழிக்க பாடுபட்ட எங்க அம்மாடா!

எங்க பொம்பளைங்களை தேவதாசியாக்கினது யாரு? நீங்கதான்.

தாசிகங்க எங்க வீட்டு பெண்ணுங்கண்ணா தேவருங்க யாரு?
நீங்கதானே பூதேவர்கள்?
கோயில்ல உடைக்கிற தேங்காயும் உனக்குத்தான்,
தேவதாசியும் உனக்குத்தான்.

சத்தியமூர்த்தி அய்யரு அன்னைக்கு என்ன சொன்னாரு?
தேவசாசிய ஒழிச்சுட்டா
அப்புறம் கடவுளுக்கு யார் சேவை செய்வாங்கன்னு குதிச்சாரு!
ஏன் நாங்கதான் சேவை செய்யணுமா
உங்க அய்யரு குடும்பத்து பொண்ணுங்கள சேவை செய்ய அனுப்புன்னு
உங்க பூணூலைக் கோத்துப் புடிச்சி கேட்டது
எங்க முத்துலட்சுமி அம்மாடா!

தேவதாசி முறை வேணும்னு சொன்னவன் உங்களுக்கு பெரியவாளா?
ச்சீ த்தூ, வெக்கமாயில்ல?

தமிழ்நாட்டு பெண் குலத்தை உங்க கிட்டேயிருந்து காப்பாத்துனது
பெரியாரும், திராவிட இயக்கமும்தான், தெரியுமாடா?

ரெண்டாவது வாட்டி இந்தி திணிப்பு கொண்டு வந்தப்போ
கவர்ண்மென்டு கணக்குப்படியே 70 பேரைக் கொன்னீங்க!

இப்டியே செத்துகிட்டே இருப்போம்னு நெனச்சியா?
அதனாலதான நீயும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுன போது உக்காந்திருக்க!

“தமிழ்த்தாய் வாழ்த்துக்கு
ஏன் எந்திரிச்சு நிக்கலை” ன்னு கேட்டா – தியானமாம்

அதென்னடா தியானம்?
ஆ ஊன்னா தியானம் கிறாங்க
ஊரைக் கொள்ளையடிச்ச ஜெயலலிதா சமாதியில
மிச்சரு பன்னீரு குந்திக்கிணு தியானம்ங்குறாரு
சசிகலா பெங்களூரு ஜெயில்ல மவுன விரதமாம்! தியானமாம்!

உங்க ஜீயரு, பருப்புச் சோறை நெய்யில முக்கித் துண்ணுட்டு
பெருமாள் கோயில் வவ்வாலைப் பாத்துகினே குசு விட்டா
அதுக்குப் பேரு உண்ணாவிரதப் போராட்டமா?

இன்னாடா காமெடி பண்றீங்க?

*********

துல கதவத் தொற காத்து வரட்டும்னு தத்துவம் பேசுறான் ஒரு பாடு!
கதவைத் தொறந்தா காத்தா வருது? நாத்தமுல்ல வருது?
அவன் பேரு நித்தியானந்தாவாம்.

அவன் கம்பெனி பேரு சங்கர மடம்.
இவன் கம்பெனி பேரு நித்தியானந்தா தியான பீடமாம்!

நடிகையோட சாமியாருக்கு தனியா இன்னாடா வேலைன்னு கேட்டா,
அவனும் தியானம்கிறான்.

நித்தியானந்தா பெட்ரூம்ல தியானம் பண்றான்
விஜயேந்திரன் மேடையில தியானம் பண்றாராம்

ரஞ்சிதா மேட்டர்ல சிக்கினப்போ
நித்தியானந்தா என்ன சொன்னான் தெரியுமா?
ஆன்மீகவாதியை ஆன்மீகவாதிதான் விசாரிக்கணும்னான்

அதாவது இவரு பெட்ரூம்ல தியானம் பண்ணுனத
மடத்துல தியானம் செஞ்ச
தொழில் தெரிஞ்ச சாமியாருதான்
விசாரிக்கணுகுறான்.

ஒரு விதத்துல இதுவும் கரெக்டுதான்
பொம்பளை பொறுக்கிங்க, 420 ஃபிராடுங்க, கூலிக்கு கொல்றவங்கள
விசாரிக்கணும்மானா இன்னொரு ரவுடிதான செய்ய முடியும்?

பண்றதெல்லாம் பண்ணிபுட்டு சிக்காம தப்பிக்க தெரிஞ்சவன்தானே
பாஸ் ஆக  முடியும்.
அதுனாலதான் சங்கராச்சாரி பாஸ்.
அதுவும் லோகத்துக்கே கைடு பண்ற சூப்பர் பாஸ்

*********

நித்தியானந்தாவ பாரு

அந்தப்புரம் மாதிரி பொம்பள புள்ளைங்களா புடிச்சி போட்டிருக்கான்
எல்லாருக்கும் ஒரு காவித்துணியை சுத்தி விட்டு
சாமியாருங்கிறான்.
அவங்க வாயைத் தொறந்த வண்டை வண்டையா வருது
இதென்னடா புது டிரென்டா?

இனிமே பிராத்தல் நடத்துறவன் கூட
கஸ்டமருக்கெல்லாம் காவித்துணிய கட்டிவுட்டு
தியான பீடம்பான்.

கேள்வி கேட்டா,

எங்க இந்து மத உணர்வை புண்படுத்திட்டீங்க
பிராத்தல் வாசல்ல மண்டியிட்டு மன்னிப்பு கேள்னு
கேட்டாலும் கேப்பான்.

ஏன்னா, இது ஆன்மீக ஆட்சியாச்சே!

*******

க்தி, தியானம், சாமின்னா
இவங்களுக்கு அஜால், குஜால், கசமுசான்னு ஆயிப் போச்சு

சிவனடியார் ஆறுமுகசாமிய தெரியுமாடா?
அந்தத் தாத்தா முகம் இன்னும் கண்ணுக்குள்ளயே நிக்குது

சிதம்ரம் நடராஜர் கோவில்ல
உள்ள மேடையில ஏறி நின்னு தேவாரம், திருவாசகத்த பாடினாரு

உனக்கு பக்தி இருந்தா நீ இன்னா பண்ணியிருக்கணும்!

ஒரு வயசான சாமியாரு பாடுறார்னு, அவர மரியாதை செஞ்சிருக்கணும்
என்னடா பண்ணீங்க!

ஒரு நாயை இழுத்துப் போட்டு அடிக்கிற மாறி அடிச்சீங்க.
இன்னக்கி ஆண்டாளு நோண்டாளுன்னு குதிக்கிறீங்க

அன்னக்கி ஏண்டா எந்த நாயும் கேக்கல?
ஏன்னா ஆறுமுகசாமி சூத்திரன்.
கருவறைக்குள்ளே சூத்திரனும் நுழையக் கூடாது
சூத்திரனோட தமிழும் நுழையக் கூடாது

விஜயேந்திரன் பேசுறான் பாரு

நடராசப்பெருமான் உடுக்கு அடிச்சாராம்
அதிலேருந்து சமஸ்கிருதத்துக்கு இலக்கணம் வந்திச்சாம்
வரும் வரும்.

உடுக்கடிச்சா இலக்கணம் வரும்
தவில் அடிச்சா  தத்துவம் வரும்
சொம்படிச்சா பதவி வரும்.

ஆனா உனக்கு ஆப்படிச்சிச்சிதுல்ல தமிழ்த்தாய் வாழ்த்து?

**********

விஜயேந்திரன் ஏன் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு
எழுந்திரிச்சி நிக்கல தெரியுமா?

அந்தப் பாட்டிலயே இவனுக்கு இருக்குது ஆப்பு.
உங்க தேவ பாடை மாதிரி பாடையில போகாம
உயிரோட இருக்குற மொழிடா எங்க தமிழ்னு
ஒரு ஆப்பு வச்சிருக்காரு மனோன்மணியம் சுந்தரனார்

“ஆரியம்போல் உலக வழக்கொழிந்து சிதையா உன் சீரிளமைத்திறம் வியந்து”
-அந்த ஆப்பு சங்கராச்சாரி ஆசனவாய்ல ஏறிடிச்சி

அதான் அந்தாளால எந்திருக்க முடியல.
ரெண்டாவது ஆப்பு – திராவிடம்

“எக்கணமும் அதிற்சிறந்த திராவிட நற் திருநாடும்” –
இந்த வரி எச்சை ராசாவின் வாயிலயே வச்ச ஆப்பு.

சங்கராச்சாரி ஏன் எழுந்து நிக்கிலேன்றது
அவன் பேச்சிலய தெரியுது பாருங்க

தென்னாட்டுக்கு தமிழாம்
என்னாட்டுக்கும் சமஸ்கிருதமாம்

எந்த நாட்டில எவன்டா பேசுறான் சமஸ்கிருதம்?

வயசுப் பொண்ணை எவனாவது பொணத்துக்கு கட்டி வைப்பானாடா?
செத்த மொழிக்கு எதுக்குடா உயிருள்ள மொழியில அகராதி?
அத எவனாவது பேச முடியுமா?

மொழி மட்டுமா செத்த மொழி ?

“யமஹா, நமஹா, ஸ்வாகா” ன்னு அந்த மொழிய எவனாவது பேசினா
பேசுறவன் சீக்கிரமே ஆஸ்துமா வந்து இருமி
ரத்தம் கக்கியே செத்துருவான்!

தயவு செஞ்சு பிஜேபி காரனெல்லாம் சமஸ்கிருதம் கத்துகிட்டு  – அதுலயே பேசுங்க
எங்களுக்கு வேலை மிச்சம்.

மர்டர் கேசுல உள்ளே போன ஒரு அக்யூஸ்டை
மேடை போட்டு உட்கார வைக்கிறியே
ஏண்டா ஒங்களுக்கெல்லாம் வெக்கமானமே கிடையாதா?

அதென்னடா தனி மேடை? சாதித்திமிர்தானே?
தட்டுல காசு, பெட்டுல பொம்பள –
இது ரெண்டுக்கும் மட்டும் தீட்டு பாக்க மாட்டீங்க அப்படித்தானே?

“சாமியார்னு சொல்லிக்கிட்டு பொம்பளை பொறுக்காதீங்கடா”ன்னு
சங்கரராமன்னு ஒரு யோக்கியன் சொன்னாரு

சொன்னவரு அய்யருன்னாலும், லோககுருவ நாறடிச்சிட்டாருன்னு
அவரை வரதராஜ பெருமாள் கோயிலுக்குள்ளயே வச்சி கொன்னீங்க
இன்னக்கி ஆண்டாளு ஆண்டாளுன்னு அலப்பறை பண்றீங்க

இந்த ஸ்டாண்டு வச்ச நாமம், வெக்காத நாமமெல்லாம்
அன்னக்கி எங்கடா போனீங்க?

ஆண்டாளுக்கு குதிக்கிறியே
பெருமாள் கோயில்ல கொலையே பண்ணினானே
அங்கே செத்தவனும் ஐயிருதானடா
நீங்க கொலைகார ஐயிருக்குத்தான்டா சப்போர்ட் பண்ணினீங்க?

காசைக் கொடுத்து கோல்மால் பண்ணி
மொத்தப் பேரும் வெளியே வந்துட்டா
நீங்களெல்லாம் யோக்கியனாயிருவீங்களா?

அப்போ சங்கரராமனை கொலையை யாரு பண்ணுணா?
வரதராஜப் பெருமாளா?

கேட்டா ஜெகத்குருங்கிறான்
எப்புடி?  உலகத்துக்கே… குருவாம்
அதாவது அமெரிக்கா, ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா
டிரம்ப், புடின், எல்லாருக்கும் சேத்து
இவனுங்க ரெண்டு பேரும்தான் குருவாம்.

ஏண்டா, காஞ்சிபுரத்துல இருக்கிறது என்ன ஐ.நா சபையா?

டேய்….. நண்டு கொழுத்தா வளையில தங்காதுங்கிறது
எங்களுக்கும் தெரியும்

நேத்து டிவி விவாதத்துல ஒரு பாப்பான் கேக்குறான்
தேசிய கீதத்துக்கு எழுந்து நிக்கலைன்னா தண்டனைன்னு சட்டம் இருக்கு
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு நிக்கலைன்னா தண்டனைன்னு சட்டமா இருக்குன்னு கேக்குறான்

ஐயிரு கேக்குறாருல்ல சொல்லுங்கப்பா

சின்னவாளு, பெரியவாளு, எச்ச ராஜா
இவங்க ரவுடித்தனத்துக்கு
என்ன தண்டனை கொடுக்கலாம்?

செருப்பால அடிக்கலாமா?
சிறையில போடலாமா?
நாடு கடத்தலாமா?

சீக்கிரம் சொல்லுங்க!

தொடர்புக்கு:

அலைபேசி : +91 97100 82506, +91 99411 75876

மின்னஞ்சல் : vinavu@gmail.com