privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகளச்செய்திகள்மக்கள் அதிகாரம்புதிய கட்டணத்தை செலுத்த மறுப்போம் ! தொடரும் போராட்டங்கள்

புதிய கட்டணத்தை செலுத்த மறுப்போம் ! தொடரும் போராட்டங்கள்

-

க்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் திருப்பூர் பகுதி முழுவதும் இபிஎஸ் – ஓபிஎஸ் கும்பலின் பிக்பாக்கெட் கொள்ளையான பஸ்கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி  பொதுமக்களிடம், “போக்குவரத்து துறை நஷ்டத்திற்கு காரணமான அமைச்சர்கள் -அதிகாரிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்து நட்டத்தை ஈடு கட்டு. முடியாவிட்டால் பதவியை விட்டு விலகு !” – என்று பிரச்சாரம் செய்யப்பட்டது.  இதன் தொடர்ச்சியாக 31-01-2018 அன்று புதிய பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டம் செய்ய அனுமதி கேட்டு திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் அனுமதி கடிதம் கொடுத்தோம்.

தற்போது மேலிடத்து உத்தரவு அனுமதி கிடையாது என கடிதம் கொடுத்தனர். ஆர்ப்பாட்டத்திற்கு தானே மறுப்பு மக்களை சந்திக்க எங்களுக்கு யாரும் அனுமதி கொடுக்க வேண்டியதில்லையே…மக்களிடம் பிரச்சாரம் தொடர்கிறது…

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

சென்ற இடங்களில் எல்லாம் பொதுமக்கள் நல்ல ஆதரவு கொடுத்ததுடன் தங்களால் எவ்வளவு அர்ச்சனை கொடுக்க முடியுமோ அவ்வளவு கொடுத்தனர் அதனை இபிஎஸ் – ஓபிஎஸ் கும்பலிடம் எப்படி கொண்டு சேர்ப்பதென்று தெரியவில்லை.

குறிப்பாக எம்ஜிஆர் விழாவிற்கு ஊதாரித்தனமாக செலவு செய்வதற்கும் ,எம்எல்ஏ -க்களுக்கு சம்பளம் உயர்த்தியதற்கும் மக்கள் சொன்ன வார்த்தைகளை நம்மால் எழுத முடியாத அளவுக்கு இருந்தது!

90 வயதுள்ள பாட்டியம்மா ஒருவர் கூறும் போது, “நானே தெருவோரம் அமர்ந்து வேஸ்டு பிரித்து வாழ்கிறேன். அந்த ஈனப்பயல்கள் நம்ம உழைச்ச காச அநியாயமா துன்றானுக” என பேச துவங்கி எம்ஜிஆர், ஜெயா, எடப்பாடி, தினகரன் வரை ஒருபிடிபிடித்தார்.

70 வயது மூதாட்டி “நான் 25வருட சத்துணவு ஆயாவாக வேலை பாத்து 40 பிள்ளைகளை பராமரித்தேன் எனக்கு பென்சன் 3,500 தான் ஆனா அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் நம்ம பணத்தை கொள்ளையடிச்சு கொழுக்கிறாங்க உங்க போராட்திற்கு நானும் வாரேன் நடக்க முடியாது வந்து கூப்பிட்டு போங்க” என்றார்.

மேலும் ஒரு பெண்மணி ஜெயலலிதாம்மா சேர்த்த பணத்தையெல்லாம் என்னா செஞ்சாங்க அதைக்கொண்டு இன்னும் 30 வருசத்திற்கு 7 கோடி தமிழக மக்களுக்கும்அம்மா உணவகத்தில் உணவு போடலாம் என்றார். எப்படிங்க போடமுடியும்? கேட்டோம் அதற்கு எங்க வீட்டுகாரர் அதிமுக தாங்க அவருதான் சொன்னாரு என்று கூறி 2018 காலண்டரை காண்பித்தார் அதில் ஜெயா சிரித்துக்கொண்டிருந்தார்.

மக்களின் பேச்சிலிருந்தே தெரிகிறது
இந்த அரசு மேல் மக்கள் கொண்டிருக்கும் கோபம்….

தகவல் :
மக்கள் அதிகாரம்,
திருப்பூர், தொடர்புக்கு : 99658 86810.

*****

கும்பக்கோணம் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் பேருந்து கட்டணத்தை திரும்ப பெறக்கோரி கடந்த ஐந்து நாட்களாக வகுப்புகளை புறக்கணித்து போராடி வருகின்றனர். ஆறாவது நாளான 30.1.2018 அன்று காலை மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்கள் கல்லூரியை விட்டு வெளியே வரவிடாமல், வாயிலை அடைத்து வைத்தது போலீசு.

புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியை சேர்ந்த 10 -க்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் போலீசின் தடைகளை தாண்டி சாலை மறியல் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட மாணவர்களை இழுத்து சென்று மண்டபத்தில் அடைத்தது போலீசு.

கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுவிக்க வேண்டும், இல்லையேல் எங்கள் அனைவரையும் கைதுசெய் என்று முழக்கமிட்டபடி கல்லூரியின் வாயிலில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்களை வெளியே வரவிடாதபடி வாயிலில் கையிற்றை கட்டியது போலீசு.

போலீசின் கையிறுகளையும் மீறி 50 -க்கும் மேற்பட்ட மாணவர்கள் வெளியேறினர். அவர்களையும் உடனே கைதுசெய்தது போலீசு.

போலீசின் கைது நடவடிக்கையால், கல்லூரி மாணவர்களுக்கும் போலீசுக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. கைதுசெய்யப்பட்ட மாணவர்கள் அனைவரையும் உடனே விடுவிக்க கோரி 40 -க்கும் மேற்பட்ட மாணவர்கள் மீண்டும் கல்லூரியில் இருந்து வெளியேறி சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களையும் கைதுசெய்து காவல்நிலையத்தில் வைத்து அடைத்து வைத்தது போலீசு.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
குடந்தை.

*****

பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து விருத்தாசலம் மக்கள் அதிகாரம் சார்பாக போலீஸ் தடையை மீறி 30.01.2018 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வட்டார ஒருங்கிணைப்பாளர் தோழர் முருகானந்தம் இதற்கு தலைமை தாங்கினார். இதில் 100 -க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். “புதிய கட்டணத்தை கொடுக்க மாட்டோம் ! பழைய கட்டணத்தில் பயணம் செய்வோம் !” போக்குவரத்து துறை நட்டத்திற்கு காரணமான அதிகாரிகள், அமைச்சர்களை கைது செய்து, செத்துக்களை பறிமுதல் செய்து சிறையிலடை! என ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

தடை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் போராட்டத்தில் ஈடுபட்ட தோழர்களை கைது செய்தது போலீசு.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
விருத்தாச்சலம்.

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க