தனியார் நிறுவனங்கள் லஞ்ச, ஊழலில் ஈடுபடுவதில்லை என்று நம்பும் அப்பாவிகளின் கவனத்திற்கு:
இஸ்ரேலிய கோடீஸ்வரர் Dan Gertler நடத்தும் Fleurette Group என்ற நிறுவனம், ஆப்பிரிக்க நாடான கொங்கோவில் வைரக் கல் ஏற்றுமதி செய்து வருகின்றது. அந்தத் துறையில் ஏகபோக உரிமை பெறுவதற்காக, அந்நாட்டு சர்வாதிகாரி கபிலாவுக்கு 20 மில்லியன் டாலர் லஞ்சம் கொடுத்துள்ளது. ஆனால், வைரக் கல் ஏற்றுமதியால் அந்த நிறுவனத்திற்கு கிடைக்கும் வருடாந்த இலாபம்
600 மில்லியன் டாலர்கள்!
நெதர்லாந்து நிதி அமைச்சில் பணியாற்றிய முன்னாள் அரச ஊழியரான Rob Drieduite யும் இந்த லஞ்ச, ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ளார். இவர் முன்பு அரச வரித் திணைக்கள அதிகாரியாக பணிபுரிந்த இவர், அப்போது பெரிய நிறுவனங்களின் நிதி அறிக்கைகளை மேற்பார்வை செய்து வந்தார்.
***
பிரித்தானியாவின் ஆதி மனிதர்கள் கறுப்பர்களே! சூரிய ஒளியில் இருந்து விட்டமின் D தயாரிப்பதற்காக பிற்காலத்தில் அவர்களது தோலின் நிறம் வெள்ளையாக மாறியிருக்கலாம். ஆதி மனிதர்கள் மத்திய கிழக்கில் இருந்து ஐரோப்பா ஊடாக பிரித்தானியாவை வந்தடைந்திருக்கலாம்.
https://inews.co.uk/news/science/scientists-discover-that-the-first-modern-briton-had-dark-skin/
***
இது தான் பிரித்தானிய முதலாளித்துவம்!
ஆண், பெண் தொழிலாளர்களுக்கு கிடைக்கும் சம்பளத்தில் பாகுபாடு!!
Tesco equal pay claim could cost supermarket up to £4bn
பிரித்தானியாவின் பெரிய சூப்பர் மார்க்கட் நிறுவனங்களில் ஒன்றான டெஸ்கோ (Tesco) தனது ஊழியர்களுக்கு சமமான சம்பளம் வழங்குவதில்லை. இப்போதும் ஆண் – பெண் பாகுபாடு காட்டப் படுகின்றது. அங்கு வேலை செய்யும் பெண் தொழிலாளர்கள், சக ஆண் தொழிலாளர்களை விட மணித்தியாலத்திற்கு £3 பவுன்கள் குறைவாக சம்பாதிக்கின்றனர்.
களஞ்சிய அறையில் வேலை செய்யும் பெண் தொழிலாளர்கள் சம்பளப் பாகுபாடு காரணமாக வழக்குத் தொடுத்தனர். Leigh Day எனும் சட்ட நிறுவனம், சுமார் இருநூறு தொழிலாளர்களின் பெயரில் வழக்குத் தொடுத்தது. நீதிமன்றத்தில் தீர்ப்பு வந்தால், டெஸ்கோ நிறுவனம் நான்கு பில்லியன் பவுன்கள் நஷ்டஈடு கட்ட வேண்டியிருக்கும். அதாவது, அங்கு வேலை செய்யும் 200.000 பெண் தொழிலாளர்களின் குறைக்கப் பட்ட சம்பளத் தொகையை செலுத்த வேண்டும்.
பிரித்தானியாவில் தற்போது ஆண் – பெண் சம்பளப் பாகுபாடு தொடர்பான வழக்குகள் அதிகரித்துள்ளன. இதே மாதிரியான இன்னொரு வழக்கு Asda என்ற இன்னொரு சூப்பர் மார்க்கெட் நிறுவனம் மீது தொடுக்கப் பட்டுள்ளது. 2014 ம் ஆண்டு, பேர்மிங்ஹாம் நகர சபை நிர்வாகம் பத்தாயிரம் பெண் தொழிலாளர்களுக்கு ஒரு பில்லியன் நஷ்ட ஈடு செலுத்த வேண்டி இருந்தது. அங்கு சுகாதரத் துறையிலும், துப்பரவுப் பணியாளர்களாகவும் வேலை செய்து வந்த பெண் தொழிலாளர்களுக்கு குறைந்த சம்பளம் கொடுக்கப் பட்டு வந்தது.
ஆண் – பெண் சம்பளப் பாகுபாடு பல மேற்கைரோப்பிய நாடுகளில் இருந்து வருகின்றது. இதை நியாயப் படுத்துவோர், “வெவ்வேறு தொழில்களுக்கு வித்தியாசமான சம்பளம் நிர்ணயிக்கப் படுவதாக” காரணம் கூறுகின்றனர். அதாவது, “ஆண்கள் செய்யும் வேலை”, “பெண்கள் செய்யும் வேலை” என்று தொழில்களை வகைப் படுத்துகின்றனர்.
இங்கே குறிப்பிடப் பட்டுள்ள டெஸ்கோ விடயத்தை எடுத்தால், களஞ்சிய அறையில் பெரும்பாலும் ஆண் தொழிலாளர்களே உள்ளனர். அதே போன்று, கடைகளில் பெண் தொழிலாளர்களை போடுகின்றனர். “பாரமான வேலையை” ஆண்களும், “இலகுவான வேலையை” பெண்களும் செய்வதாக நியாயம் கற்பிக்கின்றனர்.
மேலதிக தகவல்களுக்கு:
https://
***
கறுப்பர்களே பிரித்தானியாவின் பூர்வ குடிகள்! வெள்ளையர்களே வெளியேறுங்கள்!!
(பிரிட்டிஷ்- ஆங்கிலேய நிறவெறியர்களுக்கு பதிலடி)
***
மேற்கு ஐரோப்பாவில் கருத்துச் சுதந்திரம் இருப்பதாக சொன்னவங்க யாரு?
நெதர்லாந்து மன்னரை அல்லது அரச குடும்பத்தை அவமதித்தால், அதிக பட்சம் ஐந்தாண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப் படலாம்! அரச குடும்பத்தினரை “F**K” என்று திட்டுவதோ, அல்லது நிர்வாணமாக கார்ட்டூன் வரைவதோ தண்டனைக்குரிய குற்றமாகும்.
அரச குடும்பத்தை அவமானப் படுத்திய குற்றம் சிறிதாக இருந்தால் சில நூறு யூரோக்களும், பெரிதாக இருந்தால் இருபதாயிரம் யூரோவும் தண்டமாகக் கட்ட வேண்டி இருக்கும். இன்று கூடும் நாடாளுமன்றக் கூட்டத்தில் அதிக பட்சத் தண்டனையான ஐந்தாண்டு சிறைத் தண்டனையை இரத்து செய்வது குறித்து விவாதிக்கிறார்கள்.
(தற்போது தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பத்துமணி செய்தியான Netwerk இல் சொல்லப் பட்ட தகவல்.)
***
குர்திஸ்தான் கம்யூனிஸ்ட் கட்சி
Kurdistan Communist Party
***
சோஷலிசப் புரட்சிக்கு முந்திய சீனாவில், குறிப்பாக முப்பதுகளில், கிராமங்களில் உள்ள மதில் சுவர்களில் கம்யூனிஸ்டுகள் இரவிரவாக கோஷங்களை எழுதி விட்டுச் செல்வார்கள். அவற்றில் ஒன்று “சோவியத் வாழ்க!”
பெரும்பாலான கிராமிய மக்களுக்கு சோவியத் என்றால் என்னவென்று தெரியாது. கிராமங்களை ஆட்டிப் படைத்த உள்ளூர் யுத்த பிரபுவுக்கும் குழப்பமாக இருந்தது.
என்ன இருந்தாலும் இந்த சோவியத்தை சும்மா விடக் கூடாது என்று நினைத்த யுத்த பிரபு, ஒரு துண்டுப்பிரசுரம் அடித்து கிராம மதில்களில் ஒட்டுவித்தார். அதில் பின்வருமாறு எழுதி இருந்தது:
“திருவாளர் சோவியத்தை உயிரோடோ அல்லது பிணமாகவோ பிடித்துத் தருபவருக்கு தகுந்த சன்மானம் வழங்கப் படும்!”
(Source: The Long March, Sun Shuyun)
***
ஜெகோவாவின் சாட்சியங்கள் மதப் பிரிவில் நடக்கும் பாலியல் துஸ்பிரயோகங்கள் வெளியே வராத வண்ணம் மூடி மறைக்கப் படுகின்றன. அவர்களுக்கென தனியான நீதிமன்றங்கள் இயங்குகின்றன. தேவாலய உறுப்பினர்கள் செய்யும் குற்றங்கள் அங்கு தான் விசாரிக்கப் பட வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது.
ஜெகோவாவின் சாட்சியங்கள் சபைகளில் உறுப்பினராக இருப்பவர்கள், தமக்கு எந்தக் குற்றம் இழைக்கப் பட்டாலும் வெளியே சென்று போலீசில் முறைப்பாடு செய்யக் கூடாது என்ற சட்டம் உள்ளது. அதனால், பாலியல் துஸ்பிரயோகம் சம்பந்தமாக இதுவரை எந்த முறைப்பாடும் வரவில்லை. தேவாலயங்களும் இது தொடர்பான கோப்புகளை பொலிசுக்கு காட்டாமல் மறைத்து வைக்கின்றன.
(நெதர்லாந்தில் மேற்குறிப்பிட்ட கிறிஸ்தவ சபைக்குள் நடக்கும் பாலியல் துஸ்பிரயோகங்கள் பற்றி RTL4 தொலைக்காட்சி வழங்கிய தகவல்.)
***
“அரசுத் தலைவரை f**k என்று சொல்லித் திட்டும் சுதந்திரம் வேண்டும்!” – கருத்துச் சுதந்திரம் தொடர்பான மேற்குலகின் இரட்டை வேடம்.
சில வருடங்களுக்கு முன்னர் வட கொரிய அதிபரின் படத்தை அவமானப் படுத்திய குற்றத்திற்காக ஒரு அமெரிக்கருக்கு சிறைத் தண்டனை விதிக்கப் பட்டது. மேற்குலகில் உடனே அது கருத்துச் சுதந்திர மறுப்பாக பிரச்சாரம் செய்யப்பட்டது.
பத்து வருடங்களுக்கு முன்னர், லண்டனில் நடந்த ஒரு ஆர்ப்பாட்டத்தில் “காலனிய இனப்படுகொலையாளி” முன்னாள் பிரதமர் சர்ச்சிலின் சிலைக்கு சிவப்பு பெயின்ட் பூசினார்கள். அதே மாதிரி புரசெல்ஸ் நகரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், இன்னொரு “காலனிய இனப்படுகொலையாளி” முன்னாள் பெல்ஜிய மன்னர் லெயோபால்ட் சிலைக்கு சிவப்பு பெயின்ட் பூசினார்கள்.
பிரித்தானியாவிலும், பெல்ஜியத்திலும் இன்னமும் இனப்படுகொலையாளிகள் தேசிய நாயகர்களாக போற்றப் படுகின்றனர். அதை விமர்சிப்பது கூட குற்றமாகும். அப்போதெல்லாம் “அரசுத் தலைவர்களை அவமானப் படுத்திய குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும்” என்று பாராளுமன்றத்திலும், ஊடகங்களிலும் பேசப் பட்டது. யாரும் அதை கருத்துச் சுதந்திரம் தானே என்று நியாயப் படுத்தவில்லை. கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று வாதிட்டார்கள்.
நெதர்லாந்தில் ஒரு தடவை மன்னரை “f**k” என்று சொன்னவரை பிடித்து சிறையில் அடைத்தனர். இப்போதும் அந் நாட்டு சட்டப் படி அரச குடும்பத்தை அவமானப் படுத்தினால் அதிக பட்சம் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கலாம். இதுவே சாதாரண மனிதர் என்றால் 3 மாதங்கள், அரச அதிகாரி என்றால் 5 மாதங்கள், அவமதிப்புக் குற்றத்திற்காக சிறைத் தண்டனை விதிக்கலாம்.
முன்னாள் சோஷலிச நாடுகளில் “அரசுத் தலைவரை f**k என்று சொல்லித் திட்ட முடியாது. கைது செய்து சிறையில் போட்டு விடுவார்கள். அதனால் அங்கு கருத்துச் சுதந்திரம் கிடையாது” என்று பிரச்சாரம் செய்தனர். அங்கிருந்த நடுத்தர வர்க்க அறிவுஜீவிகளும் அது மட்டுமே தமது பிரச்சினை என்றார்கள்.
அந் நாடுகளில் முதலாளித்துவ ஜனநாயகம் வந்ததும் அவர்கள் சொல்லி மகிழ்ந்த “சுதந்திரமும்” இது தான். அதாவது, “இப்போது எமது அரசுத் தலைவரை f**k என்று திட்டினாலும் ஒன்றும் நடக்காது….” இதே மாதிரி, “கியூபாவிலும், வட கொரியாவிலும் அரசுத் தலைவரை f**k என்று சொல்லித் திட்டும் சுதந்திரம் இன்னும் இல்லையே!” என்று மேற்கத்திய ஊடகங்களில் புலம்புகிறார்கள்.
பல மேற்கத்திய நாடுகளில் மன்னர் குடும்பங்களை நிரந்தரமான அரசுத் தலைவர்களாக வைத்திருக்கிறார்கள். அதனால் தான் பிரதமரை கேலி செய்து நிர்வாணக் கோலத்துடன் கார்ட்டூன் போட்டாலும் மன்னரை அப்படி வரைய முடியாது. பிடித்து ஜெயிலுக்குள் போட்டு விடுவார்கள்.
இதற்குத் தான் தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள். “மாமியார் உடைத்தால் மண் குடம், மருமகள் உடைத்தால் பொன் குடம்.” நவீன காலத்தில் இப்படியும் சொல்வார்கள் “தனக்கு வந்தால் இரத்தம் மற்றவனுக்கு வந்தால் தக்காளி சட்னி.”
***
இஸ்ரேலில் எத்தியோப்பியாவில் இருந்து வந்து குடியேறிய கறுப்பின யூதர்கள், குழந்தை பெறுவதை தடுக்கும் நோக்கில் கட்டாய கருத்தடை ஊசி போடப் பட்டுள்ளது. சுகாதார அமைச்சு அதை இப்போது ஒத்துக் கொள்கிறது.
யூதர் என்பது இனம் அல்ல. அது ஒரு மதத்தை பின்பற்றுவோரைக் குறிக்கும். இஸ்ரேலில் ஒரே யூத மதத்தை சேர்ந்தவர்களுக்குள்ளே கூட இனப் பாகுபாடு காட்டப் படுகின்றது. இதிலே அதிகமாக பாதிக்கப் படுபவர்கள், கறுப்புத் தோல் நிறம் கொண்ட எத்தியோப்பிய யூதர்கள் தான்.
http://
***
இது தான் முதாலாளித்துவ ஜனநாயகத்தின் யதார்த்தம். வலதுசாரிக் கட்சிகளுக்கு ஓட்டுப் போடும் வாக்காளர்கள் குடிசைகளில் வாழும் பொழுது, அந்த மக்களால் தெரிவு செய்யப் பட்ட வலதுசாரிகள் மாளிகைகளில் வாழ்கிறார்கள்.
இங்கு “வலதுசாரிகள்” என்பது, தமிழ்த் தேசியவாதக் கட்சிகள், திராவிடக் கட்சிகள், சிங்களப் பேரினவாதக் கட்சிகள், இந்துத்துவா கட்சிகள் எல்லாவற்றையும் குறிக்கும். இவர்கள் எல்லாம் வலதுசாரிகள் தான். இது உங்களுக்கு புரியாவிட்டால், உங்களுக்கு எதுவுமே புரியாது.
***
ஒரே பார்வையில் முதலாளித்துவத்தின் மூலதன சுரண்டல்
***
“மெக்காவிலும் பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல்கள் நடக்கின்றன.” – பாதிக்கப்பட்ட பாகிஸ்தானிய ஹஜ் யாத்ரீகர் Sabica Khan
***
இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவத்தில் பணியாற்ற மறுத்து சிறைக்கு செல்லும் இளம் கம்யூனிஸ்ட் தோழர்.
Comrade Saar from the Young Communist League of Israel is going to jail for refusing to serve in the occupation army.
Saar just entered the Israeli military base to be jailed for army-refusal. The Young Communist League escorted him to the base with the YCLI drum-orchestra, sang revolutionary Palestinian communist songs and chanted slogans.
***
உலகிற்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் அமெரிக்காவா அல்லது வட கொரியாவா?
வட கொரியா அணு குண்டு போடவில்லை. எந்த நாட்டின் மீதும் படையெடுத்து கொள்ளையடிக்கவில்லை. சதிப்புரட்சிகளை நடத்தவில்லை. ட்ரோன் குண்டு போடவில்லை. உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான மக்களைக் கொல்லவில்லை. சர்வதேச பயங்கரவாதத்தை ஆதரிக்கவில்லை. அமெரிக்காவால் உலகிற்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் என்று எப்போது சொல்லி இருக்கிறீர்கள்?
***
புட்டினின் ரஷ்ய விஸ்தரிப்பு பற்றி பொய் சொல்லி மாட்டிக் கொண்ட நெதர்லாந்து வெளிவிவகார அமைச்சர் ஹல்பெ சைஸ்திரா உண்மையை ஒத்துக் கொண்டார். 2006ம் ஆண்டு பொதுக் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய சைல்ஸ்திரா, “புட்டின் அகண்ட ரஷ்யாவை உருவாக்கும் திட்டம் பற்றி பேசியதை” தான் நேரில் கேட்டதாக கூறினார். ஆனால், புட்டினது பேச்சைக் கேட்டதாக சொன்ன கூட்டத்திற்கு டச்சு அமைச்சர் சென்றிருக்கவில்லை என்று இப்போது தெரிய வந்துள்ளது. இது தெரிய வந்ததும் தான் பொய் சொன்னதாக அமைச்சர் ஒத்துக் கொண்டார். மேற்குலக நாடுகளில் ரஷ்யாவை காட்டிப் பயமுறுத்தி பனிப்போர் கால சூழ்நிலை உருவாக்கப் பட்டுள்ளது. அமைச்சரும் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி புளுகுக் கதைகளை அவிழ்த்து விட்டுள்ளார்.