ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதாக தமிழக அரசு அரசாணை வழங்கியுள்ளது. அதைத் தொடர்ந்து ஆலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
இவற்றை வைத்து ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்திற்கு இறுதி வெற்றி கிடைத்துவிட்டதாக சிலர் சொல்கின்றனர். பல ஊடகங்களும் அதை வழிமொழிகின்றன.
உண்மையில் ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு எது இறுதி வெற்றியாக இருக்க முடியும்? காவிரி நியூஸ் விவாதத்தில் பதிலளிக்கிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் தோழர் கற்பகவிநாயகம்.
ஸ்டெர்லைஐட் ஆலையை மூடுமாறு எடப்பாடி அரசு போட்டிருக்கும் அரசாணை நாக்கு வழிக்க கூடாது என்பதை, அனைத்து சாதி அர்ச்சகர் ஆணையை சான்று காட்டி நிரூபிக்கிறார் கற்பகவிநாயகம். அதே போன்று போராடிய மக்களை தீய சக்தி என்று பேசும் அதிமுக சமரசத்தை கடுமையாக கண்டிக்கிறார். நடுநிலை பத்திரிகையாளர் என்று வேசம் போடும் கோசல்ராமை போலீசு ஆதரவு பத்திரிகையாளர் என்று போட்டுடைக்கிறார்.
பாருங்கள்.