privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புதலைப்புச் செய்திபாரி சாலன் - ஹீலர் பாஸ்கர் : பெரியார் ஒரு இலுமினாட்டி என்று ஏன் நம்புகிறார்கள்...

பாரி சாலன் – ஹீலர் பாஸ்கர் : பெரியார் ஒரு இலுமினாட்டி என்று ஏன் நம்புகிறார்கள் ?

சதிக் கோட்பாடுகளை நம்புபவர்களின் மனநிலை என்னவாக இருக்கிறது. அப்படி ஒருவர் சதிக்கோட்பாடுகளை தீவிரமாக நம்ப ஆரம்பிப்பாராயின் அவரை எப்படி மீட்டெடுக்க முடியும்?

-

பாரி சாலன் இலுமினாட்டிகளை எப்படி கண்டு பிடிக்கிறார் ? பாகம் 2

ஒருவர் வதந்திகளை பரப்புவராக/நம்புவராக, கிசுகிசுக்களை நம்புவராக/பரப்புபவராக, புரணி பேசுபவராக/கேட்பவராக இருக்கும் பட்சத்தில் மற்றவரும் தங்களை போன்றே இயல்புள்ளர்கள் என்று நம்ப/கருதத் தோன்றும்.

ம்மில் சிலர் கூட சில சதியாலோசனை கோட்பாடுகளை நம்பக் கூடியவர்களாக இருப்போம். அல்லது ஒரு வேளை அது உண்மையாக இருக்குமோ என்கின்ற அளவிலாவது சிலவற்றை நம்புவோம். சதியாலோசனை கோட்பாடுகளை நாம் நம்ப விரும்புவதற்கு/நம்ப தொடங்குவதற்கு நமக்கென்று சில தர்க்கங்கள் இருக்கும்.

கடற்புலிகள், வான் புலிகள், கரும்புலிகள் என்று ஒரு ராணுவத்தை கட்டி 20 ஆண்டு காலத்துக்குமேல் சிம்ம சொப்பனமாக இருந்த புலிகளின் தலைமை மிக சாதாரணமாக ஒரு நேரடி சண்டையில் சுட்டு கொல்லப்பட்டார் என்ற தகவல் புலிகளின் ஆதரவாளர்களால் ஜீரணிக்க முடியாத தகவல். அப்பொழுது நக்கீரனில் வந்த ஒரு சிறுபிள்ளைத்தனமான கட்டுரையை நானும்கூட நம்பினேன் அல்லது நம்ப விரும்பினேன்.

Prabhakaranஏன் என்றால் தர்க்கரீதியாக அவ்வளவு சாதுர்யமான, புத்திசாலித்தனமான, வலிமையான, அனுபவமிக்க ஒரு போராளி இயக்கத்தின் தலைவர் 2 ஆண்டுகளுக்கு மேல் நடந்த சண்டையின் முடிவில் தப்பி செல்லவோ அல்லது குறைந்த பட்சம் தனது சடலம் கிடைக்காத வகையிலோ கூட செயல்படமுடியாமல் போனார் என்னும் நிகழ்வை என்னால் அப்பொழுது தர்க்கரீதியாக ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

இது போல நாம் சதியாலோசனைக் கோட்பாடுகளை நம்பத் தொடங்குவதற்கு பின்னணியில் சில தர்க்கங்கள் இயங்குகின்றன. அந்த தர்க்கங்கள் எல்லா நேரங்களிலும் உண்மைகளை அடிப்படையாகக் கொண்டவை அல்ல. சில நேரங்களில் நமது தர்க்கங்கள் நமது உணர்வுகளால் உந்தப்படுபவை. மனவியல் நிபுணர்கள் அதை மூன்று முக்கிய வகைமைகளாக பிரிக்கிறார்கள்.

  • 1) விகிதசமன் சாய்வு (proportionality bias)
  • 2) உறுதியூட்டு சாய்வு (confirmation bias)
  • 3) முன்னிறுத்து சாய்வு (projection bias)

ஒரு கிளாசிக் example…(ஒரு செவ்வியல் சான்று)

உலகத்தின் சக்தி வாய்ந்த நாடு அமெரிக்கா. உலகத்தின் சக்தி வாய்ந்த மனிதர் அமெரிக்க ஜனாதிபதி. உலகத்தின் சக்தி வாய்ந்த இராணுவம் அமெரிக்க இராணுவம். உலகத்தின் சக்தி வாய்ந்த உளவு அமைப்பு அமெரிக்க உளவு நிறுவனம். அமெரிக்க இராணுவமும் உளவு அமைப்பும் தங்களது ஜனாதிபதிக்கென்று பிரத்யேக பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளன.

மிக மிக பாதுகாக்கப்பட்ட அமெரிக்க ஜனதிபதியை சுட்டு கொன்றவன் ஒரு மனநலம் பாதிக்கப்பட்டவன். ஆனால் சதியாலோசனை கோட்பாடுகளை நம்புவர்களால் இதைத்தான் ஏற்றுக்கொள்ள முடிவதேயில்லை.

உலகிலேயே மிகவும் பாதுகாக்கப்பட்ட மனிதர் அமெரிக்க ஜனாதிபதிதான். இப்படி பட்ட அமெரிக்க ஐனாதிபதி தனது மனைவியோடு தெருவில் காரில் சென்று கொண்டிருக்கும் போது மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் 6-வது மாடியிலிருந்து 100 மீட்டர் தொலைவில் நகரும் காரில் சென்று கொண்டிருந்த கென்னடியை சரியாக இரண்டே தோட்டாக்களில் சுட்டு வீழ்த்தினார் என்பது proportionate ஆக இல்லை இல்லையா? அதாவது ஒரு நம்பமுடியாத ஆச்சர்யமான அதிர்ச்சியான சம்பவத்திற்கு காரணம் மிக மிக எளிமையான ஒன்றாக இருக்க முடியாது என்பது நமது மனதின் சாய்வு(bias).

இந்நிலையில் இந்த சதி செயலின் பின்னணியில் KGP, CIA (்சோவியத் ரசிய, அமெரிக்க உளவு நிறுவனங்கள்) எல்லாம் சம்மந்தப்பட்டிருக்கிறது என்னும் ரீதியில் உலவும் சதியாலோசனை கோட்பாடுகளில் ஒரு தர்க்கம் இருப்பதாய் நாம் உணரத் தொடங்குகிறோம். இதுதான் proportionate bias (விகிதப்படியான சாய்வு).

இரண்டாவது நமக்கு பரிச்சயமான ஒன்று. நாம் தினம் தினம் கடைபிடிக்கும் ஒன்று. திருமாவளவன் பாட்டாளி மக்கள் கட்சியை விமர்சித்து ஒரு மேடையில் பேசுகிறார். அவருடைய ஆதரவாளர்கள் அண்ணன் weight (கெத்து) காமிச்சுட்டாரு என்னும் ரீதியில் மகிழ்ச்சி அடைவார்கள்.

பெரியாரின் கொள்கைகளால் மண்டை காய்ந்து போய் உள்ளவர்கள் பெரியார் இலுமினாட்டி என்னும் சதியாலோசனை கோட்பாடுகளை இயல்பாக நம்புவார்கள். ஏனென்றால் அவர்களுக்கு ஏற்கனவே பெரியாருக்கு எதிரான சாய்வு இருக்கிறது.

அதற்கு பதில் சொல்லும் விதமாக ராமதாஸ் ஒரு மேடையில் பேசுகிறார். உடனே அவருடைய ஆதரவாளர்கள் பார்த்தில்ல…ஐயா ஐயாதான் என்பார்கள். அதவாது இரண்டு தரப்பு ஆதரவாளர்களுமே அவர்களுக்கு ஏற்கனவே இருக்கும் நம்பிக்கையை/ஆசையை/ சார்பை மேலும் பற்றிக்கொள்கிறார்கள். இதுதான் confirmation bias (உறுதியடைந்த சாய்வு).

தலைவர் பிரபாகரன் மரணச்செய்தியை தினமலர் மனமகிழ்வோடு சந்தேகத்துக்கு இடமின்றி நம்பி முதல் பக்க செய்தியாக்கிய போது அதன் ஆதரவாளர்கள் அதை முழுவதுமாக நம்பி ஏற்றுக் கொண்டார்கள். ஏனென்றால் அவர்கள் அது நிகழ வேண்டும் என்று பல வருடங்களாக காத்திருந்தவர்கள்.

ஆனால் நாம் அவர் தப்பி முக்கிய தளபதிகளோடு வேறு நாட்டில் நலமாக இருக்கிறார் என்பதையொத்த conspiracy theory-(சதிக் கோட்பாடு)களை நம்ப தொடங்கும் நிலையிலிருந்தோம். ஏனென்றால் அவர் தப்பித்திருக்க வேண்டும் என்று விரும்பினோம்.

பெரியாரின் கொள்கைகளால் மண்டை காய்ந்து போய் உள்ளவர்கள் பெரியார் இலுமினாட்டி என்னும் சதியாலோசனை கோட்பாடுகளை இயல்பாக நம்புவார்கள். ஏனென்றால் அவர்களுக்கு ஏற்கனவே பெரியாருக்கு எதிரான சாய்வு இருக்கிறது.

அறிவியல் முறைகளை அறிந்திருக்காதவர்கள், அறிந்துகொள்ளும் திறனோ/வாய்ப்போ இல்லாதவர்கள் தடுப்பூசி தேவையில்லை என்பதை நம்புவார்கள். ஏனென்றால் அவர்களுக்கு ஏற்கனவே அறிவியலுக்கு எதிரான ஒரு சாய்வு இருக்கிறது. அந்த சாய்வை ஊக்கப்படுத்தும் / உறுதிப்படுத்தும் எல்லா தகவல்களும் அவர்களுக்கு உண்மையாக தெரியும். பெரியார் தமிழர் விரோதி என்னும் உண்மையை சீமான் உற்று பார்த்து கண்டுபிடிப்பது இந்த பின்னணியில்தான்.

இறுதியாக projection bias (முன்துருத்தும் சாய்வு). நாம் நினைப்பதைத்தான் எல்லோரும் நினைத்து கொண்டிருக்கிறார்கள் அல்லது நான் நம்புவதைத்தான் எல்லோரும் நம்புகிறார்கள் அல்லது நான் செய்வதைத்தான் எல்லாரும் செய்கிறார்கள் என்று இருக்கும் ஒரு சாய்வு நிலை.

ஒருவர் வதந்திகளை பரப்புபவராக/நம்புபவராக, கிசுகிசுக்களை நம்புவராக/பரப்புபவராக, புரணி பேசுபவராக/கேட்பவராக இருக்கும் பட்சத்தில் மற்றவரும் தங்களைப் போன்றே இயல்புள்ளவர்கள் என்று நம்ப/கருதத் தோன்றும்.

இதன் காரணமாக அவர்களுக்கு தாங்கள் நம்பும் சதியாலோசனை கோட்பாடுகளை மொத்த உலகமும் நம்புவதாக, மொத்த உலகமும் அதன் மேல் ஆர்வம் கொண்டுள்ளதாக, மொத்த உலகமும் அதனை பற்றி விவாதித்து கொண்டுள்ளதாக நினைத்துக் கொள்வார்கள். இதன் விளைவாக அவர்கள் நம்பும் சதியாலோசனை கோட்பாடுகளை அவர்கள் தீர்க்கமாக நம்புவார்கள்.

why-people-believe-in-conspiracy-theories jpg
ஒருவர் வதந்திகளை பரப்புவராக/நம்புவராக, கிசுகிசுக்களை நம்புவராக/பரப்புபவராக, புரணி பேசுபவராக/கேட்பவராக இருக்கும் பட்சத்தில் மற்றவரும் தங்களை போன்றே இயல்புள்ளர்கள் என்று நம்ப/கருத தோன்றும்.

எளிமையாக சொன்னால் conspiracy theories are for losers (தோல்வியடைந்தவர்களுக்குத்தான் சதிக் கோட்பாடுகள்) என்று மனவியல் நிபுணர்கள் சொல்கிறார்கள். தேர்தலில் தோற்கும் எல்லா கட்சியினரும் எல்லா நேரத்திலும் ஒரு சதியாலோசனை கோட்பாட்டை முன்வைக்கிறார்கள். வென்றவர்கள் ஜனநாயகம் வென்றது என்கிறார்கள்.

விளையாட்டில் எந்த நாடு தோற்கிறதோ அந்த நாட்டின் ரசிகர்கள் மேட்ச் பிக்சிங் என்று சந்தேகிக்கிறார்கள். வென்ற நாட்டின் ரசிகர்கள் சூப்பரப்பு என்கிறார்கள். நாம் எப்பொழுது பலவீனமாக, தனிமையாக, குழப்பமாக, விரக்தியாக, தோல்வியுற்று நிற்கிறோமே அப்பொழுது தான் நாம் ஒரு சதியாலோசனை கோட்பாடை பற்றி கொள்கிறோம்.

14-ம் நூற்றாண்டை சேர்ந்த தத்துவ அறிஞர் வில்லியம் முன்வைத்த கோட்பாட்டின் பெயர் Occam’s razor principle. இந்த கோட்பாட்டின் படி எல்லா சிக்கலான கேள்விகளுக்கும் பெரும்பாலான சமயங்களில் மிக மிக எளிமையான பதிலே சரியான விடையாகியிருக்கும் என்பதே.

உதாரணத்திற்கு மிக மிக பாதுகாக்கப்பட்ட அமெரிக்க ஜனாதிபதியை சுட்டுக் கொன்றவன் ஒரு மனநலம் பாதிக்கப்பட்டவன் என்ற மிக சாதாரணமான சுவாரஸ்யமற்ற பதிலே சரியாக இருக்க வாய்ப்புகள் மிக அதிகம். ஆனால் சதியாலோசனைக் கோட்பாடுகளை நம்புபவர்களால் இதைத்தான் ஏற்றுக்கொள்ள முடிவதேயில்லை.

எளிமையாக சொன்னால் conspiracy theories are for losers (தோல்வியடைந்தவர்களுக்குத்தான் சதிக் கோட்பாடுகள்) என்று மனவியல் நிபுணர்கள் சொல்கிறார்கள்.

பொதுவாக பல்வேறு சோதனைகளின் மூலம் அடிப்படையான கணிதம், தர்க்கம், அறிவியல் கோட்பாடுகள் போன்றவற்றில் இளம்பிராயத்திலேயே பயிற்றுவிக்கப்பட்டர்வர்கள் சதியாலோசனை கோட்பாடுகளை பெரும்பாலும் நம்புவதில்லை என்று மனவியல் ஆய்வுகள் நிறுவுகின்றன.

அதே நேரத்தில் மெத்த படித்த மேதாவிகள் பலரும் சதியாலோசனைக் கோட்பாடுகளை நம்புகிறவர்களாகவும் இருக்கிறார்கள். ஆனாலும் கல்வியறிவு பெற்றவர்கள் சதவிகித அடிப்படையில் சதியாலோசனைக் கோட்பாடுகளை குறைவாகவே நம்புகிறார்கள்.

குழந்தை பருவத்தில் ஏற்படும் மனரீதியான பாதிப்புக்குள்ளானவர்கள், புறக்கணிப்புக்குள்ளானவர்கள், தனித்து விடப்பட்டவர்கள் மத்தியிலும் சதியாலோசனை கோட்பாடுகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. மேல் சொன்னவைகள் எல்லாம் ஏன் சிலருக்கு அல்லது நமக்கு சில நேரங்களில் நாம் ஏன் சில சதியாலோசனை கோட்பாடுகளில் ஒரு தர்க்கம் இருப்பதாய் உணர்கிறோம் என்பதை புரிந்து கொள்ள உதவியிருக்கும்.

எல்லா சதியாலோசனைக் கோட்பாடுகளும் பொய் என்று ஒதுக்குவது சரியா?
பாரிசாலனுக்கு ஏன் எளிமையான உண்மைகள் கூட புரிவதில்லை?

எப்பொழுதும் எல்லா பேட்டிகளிலும் பாரிசாலன் சொல்வதே சரி என்பது போன்ற தோற்றம் ஏன் ஏற்படுகின்றது?

ப. ஜெயசீலன், சமூக-அரசியல் விமர்சகர்.
நன்றி : தி டைம்ஸ் தமிழ்

முந்தைய பாகம் :
பாரிசாலன் – ஹீலர் பாஸ்கர்கள் இலுமினாட்டிகளை எப்படி சமைக்கிறார்கள் ?