பாரி சாலன் இலுமினாட்டிகளை எப்படி கண்டு பிடிக்கிறார் ? பாகம் 1

தங்களது புரிதலுக்கு அப்பாற்பட்ட, தங்களது அறிவிற்கு அப்பாற்பட்ட, தங்களது நம்பிக்கைகளுக்கு எதிரான ஒரு தரவையோ, ஆதாரத்தையோ, சம்பவத்தையோ எதிர்கொள்ளும் போது அவர்களது மனம் தங்களுக்கு தெரிந்த தகவல்களை வைத்து ஒரு படிவத்தை உருவாக்கிக்கொள்கிறது. அதாவது மலைபாம்பு சந்திரனை விழுங்கிவிடுகிறது.

ங்களிடம் வந்து உலகம் உண்மையில் உருண்டையானது அல்ல. மாறாக அது தட்டையானது. இந்த உண்மையை உலகில் உள்ள எல்லா அரசாங்கங்களும் சேர்ந்து நம்மிடமிருந்து மறைக்கிறார்கள் என்று ஒருவர் மிக சீரியசாக சொன்னால் நீங்கள் அவர் சொல்வதை நம்புவீர்களா?. சரி இது பரவாயில்லை.

இரண்டாம் உலகப்போரின் முடிவில் ஹிட்லர் உள்ளிட்ட முக்கிய நாஜி தலைவர்கள் தப்பி நிலவுக்கு சென்று விட்டார்கள். அவர்கள் இன்னமும் நிலவில் வசித்து வருகிறார்கள் என்று ஒருவர் உங்களிடம் வந்து சொன்னால் அவர் சொல்வதை நம்புவீர்களா? சரி வெளிநாடுகளை விடுங்கள்.

நேதாஜி விமானா விபத்தில் சாகவேயில்லை. அவர் ரஷ்யா சிறையில் அடைத்து வைக்கப்பட்டு அங்கேயே இறந்தார். நேரு உள்ளிட்ட இந்திய தலைவர்களுக்கு இது தெரியும் என்று ஒருவர் பல ஆதாரங்களை காட்டி சொன்னால் நீங்கள் நம்புவீர்களா?

“நேதாஜி விமானா விபத்தில் சாகவேயில்லை. அவர் ரஷ்யா சிறையில் அடைத்து வைக்கப்பட்டு அங்கேயே இறந்தார். நேரு உள்ளிட்ட இந்திய தலைவர்களுக்கு இது தெரியும் என்று ஒருவர் பல ஆதாரங்களை காட்டி சொன்னால் நீங்கள் நம்புவீர்களா?”

சரி தமிழக அளவில் வருவோம். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவிக்கப்பட்ட நாட்களுக்கு முன்பே இறந்துவிட்டார். அவரது கால்கள் வெட்டி எடுக்கப்பட்ட நிலையில்தான் அவர் புதைக்கப்பட்டார் என்று ஒருவர் பல ஆதாரங்களோடு சொன்னால் அவர் சொல்வதை நம்புவீர்களா?

சிலர் மேல் சொன்ன எல்லாவற்றையும் நம்புவார்கள். சிலர் ஒன்றிரண்டை, சிலர் எதையுமே நம்பமாட்டார்கள். மேல் சொன்னவை எல்லாம் சதி ஆலோசனை கோட்பாடுகள்(conspiracy theories) என்று சொல்லப்படும் மறைக்கப்பட்ட/திரிக்கப்பட்ட ரகசிய உண்மைகள் என்று பலராலும் நம்பப்படும்/பரப்பப்படும் கோட்பாடுகளுக்கான உதாரணங்கள்.

இவையில்லாமல் பல்லி வம்ச அரசாட்சி. வேற்றுகிரக வாசிகளின் வந்து போவது, ஸ்டான்லி குப்பிரிக் நிலவு கால்பதிப்பு என்று எண்ணற்ற அதிரி புதிரியான சதியாலோசனை கோட்பாடுகள் காற்றில் உலவுகின்றன.

மற்ற விலங்குகளை விட மனிதர்கள் பலவகையிலும் மேம்பட்ட அறிவுத்திறனை பெற்றிருக்கிறார்கள். இந்த மேம்பட்ட அறிவுத்திறனே, நம்மை உணவு சங்கிலியில் உயரத்தில் வைத்து மற்ற எல்லா ஜீவராசிகளையும் கட்டுப்படுத்தும் ஆற்றலை தந்திருக்கிறது.

மனிதர்களின் அறிவுத்திறன் பல்வேறு தளங்களில், பல்வேறு நிலைகளில் இயங்குகிறது. அதில் நமக்கிருக்கும் ஒரு முக்கியமான திறன் நமக்கு கிடைக்கும் எக்கச்சக்கமான தரவுகளை, தகவல்களை பெற்று, பகுத்து, சேமித்து பின்பு தேவையான நேரங்களில் அதை பயன்படுத்திக்கொள்ளும் சாமர்த்தியம். நாம் ஒவ்வொரு நாளும் ஏராளமான தரவுகளை, அனுபவங்களை, உணர்வுகளை சேமிக்கிறோம். இவையெல்லாவற்றையும் மூளை பெற்று, பகுத்து, சேமிக்க, பின்பு அதை விரைவாக தேவையான பொழுது எடுத்து பயன்படுத்த, நாம் பரிணாமத்தில் ஒரு திறனை(skill) வளர்த்து கொண்டிருக்கிறோம்.

கணினி எப்படி எல்லா தரவுகளையும் 0 மற்றும் 1 என்று சேமித்து வைத்து பயன்படுத்துகிறதோ அதே போல நமது மூளையும் எல்லா தகவல்களையும் பெற்று ஒரு படிவமமாக(pattern) சேமித்து வைத்துக் கொள்கிறது. நாம் எல்லா தகவல்களையும் படிமமாகவே பெறுகிறோம், படிவமாகவே சேமித்து வைக்கிறோம். ஒரு படிவமாக இருக்கும் எல்லாமும் நமக்கு இனிமையாக ரசனைக்குரியதாக இருக்கிறது.

உதாரணத்திற்கு ஏராளமான மரங்களுக்கிடையில் நீங்கள் சம்மந்தமில்லாமல் எங்கோ நின்று கொண்டிருக்கும் ஒரு புகைப்படமும், புகைப்படத்தின் ஒரு ஓரத்தில் நீங்கள் நிற்க உங்களுக்கு பின் வரிசையாக மரங்களிருக்கும் வகையில் படம் பிடிக்கப்பட்ட ஒரு புகைப்படமும் இருந்தால் உங்களுக்கு எது பிடிக்கும்? இரண்டாவதுதான் இல்லையா? ஏனென்றால் இரண்டாவதில் ஒரு pattern இருக்கிறது.

இரண்டாவதை உங்கள் மூளை அணுகுவது எளிதாகவும், இனிமையாகவும் இருக்கிறது. அதனால் உங்களுக்கு அது பிடித்து போகிறது. நீங்கள் கிட்டார் எடுத்து வாசித்தால் உங்களுக்கே மூளை வெடித்து சிதறுவதை போல கொடூரமாக உள்ளது. ஆனால் கிட்டார் தெரிந்தவர் வாசித்தால் இனிமையாக இருக்கிறது. ஏனென்றால் அவரது மீட்டலில் ஒரு pattern இருக்கிறது. ஒருவகையில் எல்லா கலை வடிவங்களும் செயற்கையாக படிவங்களை உருவாக்குபவையே.

இந்நிலையில் நிஜவாழ்வில், நிஜ உலகில் நடப்பவை எல்லாம் நமது மூளையின் புரிதலுக்கு உட்பட்டேதான் நடக்குமா? நம்மால் எல்லா தரவுகளையும், தகவல்களையும் ஒரு படிவமாக்க முடியுமா? ஒரு படிவத்திற்குள் அடங்காத ஒரு தகவலை, ஒரு நிகழ்வை, ஒரு உணர்ச்சியை நமது மூளை எப்படி அணுகும்?

தெரியாத விஷயங்களை அறிவியல் ‘x’ என்று பெயரிட்டு தனக்கு தெரியாது என்று அறிவித்து விடுகிறது. ஆனால் அதுபோன்ற இயல்பு நமது மூளைக்கு கிடையாது.

நிஜவாழ்வில், நிஜ உலகில் நடப்பவை எல்லாம் நமது மூளையின் புரிதலுக்கு உட்பட்டேதான் நடக்குமா? நம்மால் எல்லா தரவுகளையும், தகவல்களையும் ஒரு படிவமாக்க முடியுமா? ஒரு படிவத்திற்குள் அடங்காத ஒரு தகவலை, ஒரு நிகழ்வை, ஒரு உணர்ச்சியை நமது மூளை எப்படி அணுகும்?

வானில் அது பாட்டுக்கு போய் கொண்டிருக்கும் மேகங்களை பார்த்து ஆடு மாடுகளை வரைய கூடியது நமது மனம்/மூளை. அதாவது படிவமற்ற மேகங்களை நமக்கு தெரிந்த உருவங்கள் மூலமாக ஒரு படிவமாக்கி உள்வாங்கி கொள்ளும் திறன்/இயல்பு நமக்கிருக்கிறது. இதன் மூலமாகவே நாம் கருணையற்ற சமரசமற்ற காலத்தின் போக்கை நாம் கொஞ்சமாவது தைரியத்தோடு அணுகுகிறோம். அதாவது எல்லாமும் எனது கட்டுப்பாட்டில், எனது புரிதலுக்குள் தான் இருக்கிறது என்னும் நம்பிக்கையில்.

இந்த நம்பிக்கை சவாலுக்கு உள்ளாகும்போது, இந்த நம்பிக்கை சோதனைக்கு உட்படும்போது என்னாகும்? நமது மூளை செயற்கையான படிவங்களை உருவாக்கி அந்த நம்பிக்கையை தற்காத்துக் கொள்ளும்.

சூரியகிரகணம் என்பது மலைபாம்பு சூரியனை விழுங்குவது என்னும் புரிதலை முன்வைத்து ஆதி கால மனிதர்கள் கிரகணத்தை குறித்து ஒரு படிவத்தை உருவாக்கியது இதன் அடிப்படையிலேயே. சதியாலோசனை கோட்பாடுகளை நம்புவர்களை இதன் பின்னணியிதான் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

எம்.ஜி.ஆர் தங்கம் பஸ்பம் சாப்பிடுவாப்ல. அதுலதான் எதோ கோளாறாகி செத்தாப்ல என்னும் ரீதியில் பேசும் சதியாலோசனை கோட்பாளர்களிடம் அப்படியா ஜி கேக்கவே அதிர்ச்சியா இருக்கு..டீக்கு காசு குடுத்துடுங்க கிளம்பலாம் என்று அவர்களை கையாளலாம். அவர்கள் குழந்தைகள். சுவாரஸ்யமானவர்கள்.

தங்களது புரிதலுக்கு அப்பாற்பட்ட, தங்களது அறிவிற்கு அப்பாற்பட்ட, தங்களது நம்பிக்கைகளுக்கு எதிரான ஒரு தரவையோ, ஆதாரத்தையோ, சம்பவத்தையோ எதிர்கொள்ளும் போது அவர்களது மனம் தங்களுக்கு தெரிந்த தகவல்களை வைத்து ஒரு படிவத்தை உருவாக்கிக் கொள்கிறது. அதாவது மலைபாம்பு சந்திரனை விழுங்கி விடுகிறது.

சரி. கழுதை மேய்க்கிற பையனுக்கு இவளோ அறிவா என்று பொறாமை படாமல் நாம் விலகி செல்லலாம் என்றால் அதில் ஒரு சிக்கலிருக்கிறது. அதாவது எம்.ஜி.ஆர் தங்கம் பஸ்பம் சாப்பிடுவாப்ல. அவரு அதுலதான் எதோ கோளாறாகி செத்தாப்ல என்னும் ரீதியில் பேசும் சதியாலோசனை கோட்பாளர்களிடம் அப்படியா ஜி கேக்கவே அதிர்ச்சியா இருக்கு..டீக்கு காசு குடுத்துடுங்க கிளம்பலாம் என்று அவர்களை கையாளலாம். அவர்கள் குழந்தைகள். சுவாரஸ்யமானவர்கள்.

ஆனால் காலநிலை மாற்றம் – climate change என்பது பொய், நோய் தடுப்பூசி போடவே கூடாது, actually (உண்மையில்) பெரியாரே ஒரு இலுமினாட்டி guy (ஆள்) என்னும் ரீதியில் conspiracy theory – (சதிக்கோட்பாடு)ஐ நம்பும், பரப்பும் ஆட்களிடம் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

ஏன் என்றால் அவர்களால் உயிரிழப்புகள் தொடங்கி சமூக குழப்பம் முதல் பல ஆபத்தான சிக்கல்கள் உருவாகும். இந்நிலையில்தான் நாம் அவர்களை புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.

சதி ஆலோசனை கோட்பாளர்களை பற்றி மனநல நிபுணர்கள் உலகம் முழுவதும் தீவிரமான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். பாரி சாலன் என்பவர் தனி ஆள் கிடையாது. தோப்பு.

தொடர்புடைய கட்டுரைகள்:

திருப்பூர் கிருத்திகா மரணம் : ஹீலர் பாஸ்கரையும் பாரி சாலனையும் கைது செய் !

பிரசவகால மரணங்கள் : இலுமினாட்டி பைத்தியங்களுக்கு பதில் !

*****

110010001111

ந்த எண்களில் உங்களால் ஒரு pattern (படிவம்) இருப்பதை கவனிக்கமுடிகிறதா? கவனித்து வையுங்கள்…

அமெரிக்க மக்கள் தொகையில் பாதிக்கு மேற்பட்டவர்கள் ஏதாவது ஒரு சதியாலோசனை கோட்பாடுகளை நம்புகிறவர்களாக இருக்கிறார்கள் என்று ஆய்வு முடிவுகள் சொல்லுகின்றன.

1890 முதல் 2010 வரை New York times (நியூயார்க்  டைம்ஸ்) மற்றும் Chicago tribune (சிகாகோ டிரிபியூன்) பத்திரிகைகளுக்கு வந்த 100,000-க்கு மேற்பட்ட கடிதங்களை ஆய்வுக்கு உட்படுத்தியபோது ஒன்று அல்லது அதற்கு மேலான சதி ஆலோசனை கோட்பாடுகளை வலியுறுத்திய கடிதங்களின் சதவிகிதம் மிகவும் consistent -ஆக (தொடர்ச்சியாக) எல்லா காலங்களிலும் இருந்திருப்பதை கண்டுபிடித்திருக்கிறார்கள்.

உலகளவில் முன்னணியில் உள்ள சதிக் கோட்பாடுகள்……!

அதாவது எல்லா காலங்களிலும் சதியாலோசனை கோட்பாடுகளில் மனிதர்களின் மனங்கள் ஈர்ப்பு கொண்டே இருந்திருக்கிறது. சதியாலோசனை கோட்பாடுகளை நம்புகிறவர்களை வடிகட்டிய முட்டாள்கள், கோமாளிகள் என்று அறிவியலாளர்கள் ஏளனம் செய்து ஒதுக்கிவிட்டு கடந்து சென்ற காலம் முடிவுக்கு வந்திருக்கிறது.

அமெரிக்க மக்கள் தொகையில் பாதிக்கு மேற்பட்டவர்கள் ஏதாவது ஒரு சதியாலோசனை கோட்பாடுகளை நம்புகிறவர்களாக இருக்கிறார்கள் என்று ஆய்வு முடிவுகள் சொல்லுகின்றன.

தகவல் தொழில்நுட்பம் நினைத்து பார்க்கமுடியாத வளர்ச்சியை அடைந்திருக்கும் இந்த காலத்தில் நல்லவையோ, கெட்டவையோ, உண்மையோ, பொய்யோ தகவல் நினைத்துப் பார்க்க முடியாத வேகத்தில் பரவுகிறது. இது சதியாலோசனை கோட்பாடுகளை நம்புகிறவர்களுக்கும், பரப்புவர்களுக்கும் முன்னெப்போதும் இல்லாத வலிமையை அளித்திருக்கிறது.

அதாவது தடுப்பூசிகள் உண்மையில் நோயை தடுக்க போடப்படுபவை அல்ல மாறாக அவை நோயை பரப்பவே போடப்படுகின்றன என்கின்ற சதியாலோசனை கோட்பாளர்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த தகவலை அவர்களிடம் இருக்கும் குதர்க்கமான கோமாளித்தனமான தரவுகளை வைத்து விளக்கி, ஊடகங்களில் பரப்பி ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படுவதை தடுத்து பின்னாட்களில் அந்த குழந்தைகளை நோயில் தள்ளி வெற்றிகரமாக சாகடிக்க முடியும்.

இதன் பின்னணியில்தான் மனநல நிபுணர்களும், மூளை நிபுணர்களும் இந்த சதி ஆலோசனை கோட்பாடுகளை நம்புகிறவர்களை குறித்தும், அதை பரப்புகிறவர்கள் குறித்தும் தீவிரமான ஆய்வில் ஈடுபட்டிருக்கிறார்கள். சதி ஆலோசனை கோட்பாடுகள் எதனால் உருவாகின்றன? அல்லது சதியாலோசனை கோட்பாடுகளை ஏன் உருவாக்குகிறார்கள்? மனிதர்களுக்கு சில இயல்பான psychological (உளவியல்) தேவையும், அவசியமும் உள்ளன. அவற்றில் சில முக்கியமான தேவைகளாக கீழ் உள்ளவைகளை மனோதத்துவ நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள்.

1) எல்லாவற்றையும் புரிந்துகொள்ளவும், தீர்க்கமான விடையை அடையவும் ஏற்படும் முனைப்பு (Desire for understanding and certainty)
2) எல்லாவற்றையும் கட்டுக்குள் வைக்கவும், பாதுகாப்பாக உணரவும் ஏற்படும் முனைப்பு (Desire to control and security)
3) சமூகத்தில் சிறப்பு அந்தஸ்தை கோரும் / பெறும் முனைப்பு (Desire to maintain a self image)

இந்தத் தேவையை ஒவ்வொருவரும் ஒவ்வொரு முறையில் அடைய முயற்சிக்கிறார்கள்.

அறிவியல் சார்பு, இறையியல் சார்பு, மதம் சார்பு, சாதி சார்பு, தத்துவ நிலைப்பாடுகள் சார்பு, கலைகள் சார்பு என்று பலவகையான சார்புகளை கொண்டு நாம் நமது மனதின் அடிப்படை தேவைகளை அணுகுகிறோம். அதில் ஒரு சார்புதான் சதியாலோசனை கோட்பாடுகள் மீதான நம்பிக்கை சார்ந்த சார்பு.

உலகில் நடக்கின்ற எல்லா நிகழ்வுகளையும் நம்மால் புரிந்து கொள்ள முடியாது. உதாரணத்திற்கு நீங்கள் ஒவ்வொரு முறை பிரியாணி செய்யும் போதும் அடிபிடித்து விடுகிறது. தொடர்ந்து 10 முறை இதுவே நடக்கிறது. உடனே உங்கள் மனம் அதற்கான காரணத்தை கண்டுபிடிக்கத் துடிக்கும் இல்லையா?

நீங்கள் தர்க்கபூர்வமானவர் என்றால் இனிமேல் இந்த பாத்திரத்தில் இனி பிரியாணியே செய்யக் கூடாது. இதில் செய்தாலே அடிபிடிக்கிறது என்று ஒரு காரணத்தை கண்டுபிடித்தவுடன் உங்கள் மனம் அமைதி அடையும்.

நீங்கள் மத நம்பிக்கையுள்ளவர் என்றால் கோவிலுக்கு போய் மாசக்கணக்கில் ஆகிறது. மொதல்ல வெள்ளிக்கிழமை கோவிலுக்கு போகணும். மனசே சரியில்ல. எப்ப பிரியாணி செஞ்சாலும் அடிபிடிக்கிறது என்று ஒரு விடையை அடைவீர்கள்.

கோமாளி ரஜினியின் பாபா முத்திரையை மாபெரும் இலுமினாட்டி சதியாக கப்சா விடும் நாம் தமிழர் சீமான்!

சீமானின் தம்பி என்றால் நம்ம பெரும்பாட்டனும் பெரும்பாட்டியும் நல்லா கருப்படிச்ச மண்பானையில் பிரியாணி செஞ்சு சாப்டாங்க. பிரியாணி அடிபிடிக்காம வந்துச்சு. உடம்பும் நல்லா இருந்துச்சு. எப்போ தமிழன் திராவிடத்திடம் மண்டியிட்டானோ அப்பவே அலுமினியம் டபரா வெள்ளையா இருக்குனு மண்சட்டிய கைவிட்டுட்டான். இப்போ பிரியாணி முரட்டுத்தனமா அடிபிடிக்குது என்று ஒரு விடையை கண்டுபிடிப்பார்கள்.

இதுவே பாரிசாலன் வீட்டில் பிரியாணி கருகியிருந்தால் அலுமினிய டபராவை இரண்டாம் உலகப்போரில் sausage வேக வைக்க ஜெர்மனிய சிப்பாய்கள் பயன்படுத்தியதைப் பார்த்த இலுமினாட்டிகள் இப்படியே போனால் எவர் சில்வர் வியாபாரம் படுத்துவிடும் என்று பிளான் பண்ணி நல்லவர் ஹிட்லரை வீழ்த்தி அலுமினியம் டபரா தொழில்நுட்பத்தையும் திருடி உலகம் முழுவதும் விற்று லாபம் பார்த்தார்கள் என்றும் இதற்கு இலுமினாட்டி பெரியாரும் உடந்தை. அதற்கு சாட்சிதான் பெரியாருடைய அலுமினிய மூத்திர சட்டி என்று தனது வீட்டில் பிரியாணி கருகியதற்கான விடையை கண்டுபிடித்திருப்பார்.

பிரியாணி அடிபிடித்தாலும் பாரிசாலனிடம் அதற்கொரு இலுமினாட்டி விளக்கம் உண்டு!

உண்மையில் அந்த பிரியாணி கருகியதற்கு மேல் சொன்ன எந்த காரணமுமே இல்லாமல் வேறொரு காரணம் இருந்திருக்கலாம். அல்லது காரணமே இல்லாத ஒரு random occurrence (தற்செயலான நிகழ்வு)ஆக இருந்திருக்கலாம்.

ஆனால் அதை நம் மனம் ஏற்காது. ஒரு நிகழ்வின்/சம்பவத்தின் காரண காரியத்தை புரிந்துகொள்வதின்/விடைகாண்பதின் மூலமே நமக்கு ஒரு நிலைத்தன்மை கிடைக்கிறது. அதனால் தான் நாம் அடுத்த பத்து ஆண்டுகளில் நாம் செய்ய வேண்டியதை திட்டமிட முடிகிறது.

நமது புரிதலுக்கு அப்பாற்பட்ட ஒரு சம்பவம் நடக்கும் பொழுது உதாரணத்திற்கு மலேஷியா விமானம் காணாமல் போனதை போன்ற ஒரு சம்பவம் நடக்கையில், தங்களுக்கு அதற்கான விடை தெரியவில்லை அல்லது அது தங்களுது புரிதலுக்கு அப்பாற்பட்ட விஷயம் என்ற உண்மையை ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள், அந்த உண்மையை சந்திக்கும் தைரியம் இல்லாதவர்கள் பாரிசலானின் பிரியாணி டபரா தியரி போன்ற கோமாளித்தனமான கோட்பாடுகளை உருவாக்குகிறார்கள் அல்லது நம்பத் தொடங்கிக்கிறார்கள்.

தொடர்புடைய கட்டுரைகள்:

பாட்டி வைத்தியத்திற்கும் பாதுகாப்பான மகப்பேற்றிற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை !

   ஹீலர் பாஸ்கர் கைது – மற்ற மூடர்களை என்ன செய்யலாம் ?

நாம் எல்லாமும் நமது கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது என்னும் நம்பிக்கையில்தான் ஒரு சமூக ஒழுங்கோடு வாழ்ந்து கொண்டிருக்கிறோம். செல்லூர் ராஜு தெர்மாகோல் அறிவியலை அடுத்த எலேக்‌ஷன் வரைதான் முன்னெடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளதால்தான் நம்மால் நிம்மதியாக தூங்க போக முடிகிறது. ஏனென்றால் தேர்தல் ஓட்டு என்னும் கட்டுப்பாடு(control) நம்மிடம் உள்ளது.

செல்லூர் ராஜு நிரந்தர மந்திரி. நம்மால் அவரை ஒன்றுமே செய்யமுடியாது என்ற நிலையில் நம் சமூகத்தில் ஏற்பட்டிருக்கும் அதிர்ச்சியையும், கையறு நிலையையும், பயத்தையும் யோசித்து பாருங்கள்.

அதிகாரம்/கட்டுப்பாடு(control) நமக்கு தைரியத்தையும் நம்பிக்கையும் சமூக ஒழுங்கையும் அளிக்கிறது. control இல்லாத போது நாம் பயம் கொள்கிறோம். இந்த பயம் நம்மை பீடித்து கொள்ளும் போது நாம் ஒரு சதியாலோசனை கோட்பாடுகளை நம்ப தொடங்குகிறோம்.

அதாவது அதிகாரம்/கட்டுப்பாடு(control) நமக்கு தைரியத்தையும் நம்பிக்கையும் சமூக ஒழுங்கையும் அளிக்கிறது. control இல்லாத போது நாம் பயம் கொள்கிறோம். இந்த பயம் நம்மை பீடித்து கொள்ளும் போது நாம் ஒரு சதியாலோசனை கோட்பாடுகளை நம்ப தொடங்குகிறோம்.

உதாரணத்திற்கு ஒருவர் பிறப்பு தொட்டு சாதியை பயின்று வருகிறார். தான் ஒரு மிகவும் கண்ணியமான, கம்பீரமான, கலாச்சாரமிக்க உயர் சாதி பார்ப்பன இந்து என்று தன்னை கருதி கொள்கிறார். திடீரென்று ஒரு பெரியவர் வந்து அவரை ஓத்தா ஒம்ம ஒய்யால என்று திட்டி அவரது நம்பிக்கையை கழட்டி தோரணம் கட்டுகிறார்.

அதுவரை அந்த உயர் சாதி இந்து தனது கட்டுப்பாட்டில் இருப்பதாய் நினைத்து கொண்டிருந்த அவரது நம்பிக்கைகள், வாழ்வுமுறை எல்லாவற்றையும் அடித்து நொறுக்கின்றார். இந்நிலையில் அந்த சாதி ஹிந்துவிடம் ஜி மேட்டர் தெரியுமா அந்த கிழவன் இலுமினாட்டி ஜி என்று ஒருவர் வந்து சொன்னால் அவர் உடனடியாக அதை நம்ப தொடங்குவதோடு தான் இழந்த கட்டுப்பாட்டை திரும்ப மீட்டுக் கொள்வார்.

அதாவது தனக்கு ஒரு சிக்கல் நேரும்போது, ஒரு குழப்பம் ஏற்படும்போது, பயம் தோன்றும்போது, வெற்றிடம் ஏற்படும்போது மனிதர்கள் சாதியாலோசனை கோட்பாடுகளுக்கு ஆளாகிறார்கள். For some people conspiracy theories act as a defensive mechanisms against their insecurities and limitations.

பெரியாரை இழிவுபடுத்துவதையும் பாரிசாலனின் இலுமினாட்டி உடான்ஸ் கிரமமே செய்கிறது!

இறுதியாக, கிளு கிளுப்பு சம்மந்தப்பட்டது. பிறருக்கு தெரியாத விஷயம் எனக்கு தெரியும் என்பது ஒரு கிளுகிளுப்பான விஷயம். இதற்கு ஆட்படாத மனிதர்களே கிடையாது நான் உட்பட. இதன் அடிப்படையில்தான் கவிஞர் மனுஷ்யபுத்திரன் ஸ்டீபன் ஹூக்கிங்சின் பின்னணியே தெரியாமல் எனக்கு அவரை ரொம்ப நல்லா தெரியும் என்னும் தோரணையில் அவருக்கு இரங்கல் கவிதை எழுதினார்.

பாய்ஸ் படத்தில் செந்தில் பேசுவதாய் சுஜாதா ஒரு வசனம் எழுதி இருப்பார். “data is knowledge” (தகவல்தான் அறிவு). சதியாலோசனை கோட்பாடுகளை பரப்புவர்களை கவனித்தால் பேசும்பொழுது “உங்களுக்கு இது தெரியுமா” என்று தொடர்ந்து கேட்டு ஒரு வரி தகவல்களாக சொல்லி கொண்டே இருப்பார்கள்.

தனக்கு ஒரு சிக்கல் நேரும்போது, ஒரு குழப்பம் ஏற்படும்போது, பயம் தோன்றும்போது, வெற்றிடம் ஏற்படும்போது மனிதர்கள் சாதியாலோசனை கோட்பாடுகளுக்கு ஆளாகிறார்கள்.

அதன் பொருள் உனக்கு தெரியாத தகவல் எனக்கு தெரிந்திருக்கிறது அதனால் நான்தான் லபுக்குதாஸ் என்னும் தோரணை மற்றும் உனக்கு தெரியாததை நான் தெரிந்து வைத்திருக்கிறேன் எனவே தயவு செய்து என்னை மதித்து ஏற்று கொள்ளுங்கள் என்ற ஏக்கம், இவையிரண்டையும் நீங்கள் கவனிக்கலாம்.

சில மனநல ஆய்வுகள் narcissism – சுயமோகி( a person who has an excessive interest in or admiration of themselves – எவரொருவர் தம்மைப் பற்றி அபரிதமான அக்கறை அல்லது பெருமிதங்களை கொண்டுள்ளாரோ) என்னும் மன நோய்க்கும் சதியாலோசனை கோட்பாடுகளை பரப்புவர்களுக்கும், நம்புவர்களுக்கும் இருக்கும் தொடர்பை குறித்து நிறுவுகின்றன.

தங்களை மற்றவர்கள் கவனிக்க வேண்டும், தாங்கள் மற்றவர்களுக்கு தெரியாத தகவல்களை கண்டடைந்து வைத்திருக்கிறோம், தாங்கள் அறிவிலிகளை வழி நடத்தும் பொறுப்பிலிருக்கிறோம், உலகில் நடக்கும் எல்லா நிகழ்வுகளையும் முழுவதுமாய் புரிந்து கொள்ளும் ஆற்றலோடு இருக்கிறோம், தான் தன்னை போன்றே சதியாலோசனை கோட்பாடுகளை நம்புவர்களோடு ஒரு குழுவாகிருக்கிறோம் என்கின்ற மிக ஆழமான விருப்பமும், ஏக்கமுமே அவர்களை சதியாலோசனை கோட்பாடுகளை நோக்கி தள்ளுகிறது.

மனித மனங்களுக்கு சதியாலோசனை கோட்பாடுகள் ஏன் தேவைப்படுகிறது என்பதை பற்றி நமக்கு இப்பொழுது ஒரு புரிதலிருக்கும். சதியாலோசனை கோட்பாடுகள் எப்படி தர்க்கரீதியான வலிமையை பெறுகிறது? சதியாலோசனை கோட்பாடுகளை நம்பவேண்டிய நிலை ஏன் நம்மில் சிலருக்கு ஏற்படுகிறது? என்பதை பற்றியும் பாரிசலானையும் ஹீலர் பாஸ்கரையும் எப்படி டீல் செய்யவேண்டும் என்பதையும் அடுத்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

( தொடரும் )

ப. ஜெயசீலன், சமூக-அரசியல் விமர்சகர்.
நன்றி : தி டைம்ஸ் தமிழ்